Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 1 Kingdoms of Rivers Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Social Science Solutions Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Samacheer Kalvi 4th Social Science Guide Kingdoms of Rivers Text Book Back Questions and Answers

Evalution

I. Choose the correct answer:

Question 1.
Cheras, Cholas and Pandyas were called _________ .
(a) Nayanmars
(b) Moovendargal
(c) Kuru nila mannargal
Answer:
(b) Moovendargal

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 2.
The efficient king among the Cheras was _________ .
(a) Karikalan
(b) Valvil Ori
(c) Cheran Senguttuvan
Answer:
(c) Cheran Senguttuvan

Question 3.
Port of Cholas was _________ .
(a) Kaveri poompattinam
(b) Chennai
(c) Thondi
Answer:
(a) Kaveri poornpattinam

Question 4.
The flag of Pandyas was _________ .
(a) Peacock
(b) Fish
(c) Tiger
Answer:
(b) Fish

Question 5.
The Vallal (Feudal lord) who gave his chariot to Mullai was _________ .
(a) Pari
(b) Pehan
(c) Adhiyaman
Answer:
(a) Pari

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

II. Match the following :

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 7
Answer:

  1. – (c)
  2. – (d)
  3. – (a)
  4. – (b)

III. Answer in short :

Question 1.
Who were the greatest kings among the Cheras?
Answer:
Imayavaramban Neduncheralathan and Senguttuvan were the greatest kings among the cheras.

Question 2.
Who were Kadai ezhu vallalgal?
Answer:

  • Pehan
  • Pari
  • Nedumudi kari
  • Aai
  • Athiyaman
  • Nalli
  • Valvil Ori.

Question 3.
Tell about the achievements of Karikalan.
Answer:

  • Karikalan became the king at a very early age and ruled efficiently.
  • Karikalan constructed dam kallanai across river cauvery.
  • He defeated both Cheras and Pandyas together.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 4.
Which was the capital and coastal town of Pallavas?
Answer:

  • Capital – Kancheepuram
  • Coastal town – Mahabalipuram

IV. Who Said?

Question 1.
‘Yano Arasan, Yanae kalvan’.
Answer:
Pandiyan Nedunchezhian said, “Yano Arasan, Yanae kalvan”. Because he wrongly prosecuted Kovalan and gave death sentence.

Try to answer

Question 1.
Who were the greatest kings of early Cheras?
Answer:
Imayavaramban Neduncheralathan and Senguttuvan.

Question 2.
Name the epic wrote by Ilangovadigal
Answer:
Silappathikaram.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 3.
Who was the greatest Chola king of the ancient period?
Answer:
Karikalacholan.

Question 4.
Name the capital and port of the Cholas.
Answer:
Uraiyur, Kaveripoompattinam.

Question 5.
Which Pandya mannan was mentioned in Silappathikaram?
Answer:
Pandyan Nedunchezhian.

Question 6.
Who wrote ’Madurai Kanchi’?
Answer:
Mangudi Maruthanar.

Question 7.
What is inscribed on the flag of Pandyas?
Answer:
Fish.

Question 8.
Which was the capital of Pallavas?
Answer:
Kancheepuram.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 9.
Where is Thondai mandalam in Tamil Nadu?
Answer:
North eastern part.

Question 10.
Who offered gooseberry to the poetess Avvai?
Answer:
Athiyaman.

Question 11.
Who put his shawl around the peacock?
Answer:
Pehan.

Question 12.
List out the festivals of Tamil people at present
Answer:
Pongal, Tamil New Year, Diwali etc.

InText Activity

Activity 1

Ancient Tamil Kingdoms (Moovendargal)
Fill in the blanks
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 2
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 1

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Activity 2

List out the territories of the Moovendargal in the present districts of Tamil Nadu.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 3
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 4

Samacheer Kalvi 4th Social Science Guide Kingdoms of Rivers  Additional Questions and Answers

I. Choose the correct answer:

Question 1.
Cheras capital city was _________ .
(a) Madurai
(b) Vanji
(c) Uraiyur
(d) Kancheepuram
Answer:
(b) Vanji

Question 2.
The flag of Chera is ________ .
(a) Bow and arrow
(b) Tiger
(c) Fish
(d) Nandi
Answer:
(a) Bow and arrow

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 3.
Port of Cheras was_______ .
(a) Kaveri poompattinam
(b) Chennai
(c) Thondi
(d) Korkai
Answer:
(c) Thondi

Question 4.
________ describes that Cholanadu is famous for rice
(a) patirruppattu
(b) pattinappalai
(C) Purananuru
(d) Agananuru
Answer:
(b) Pattinappalai

Question 5.
The capital of Cholas was ________
(a) Vanji
(b) Uraiyur
(c) Madurai
(d) Kancheepuram
Answer:
(b) Uraiyur

Question 6.
The world’s oldest dam still in use
(a) Mettur Dam
(b) Kolidam dan
(c) Kallanai
(d) Aliyar dam
Answer:
(c) Kallanai

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 7.
River flowing in Madurai
(a) Cauvery
(b) Pallaru
(c) Vaigai
(d) Thamirabarani
Answer:
(c) Vaigai

Question 8.
Paridiya country famous for _______
(a) Pearls
(b) Gems
(c) Coral
(d) Rice
Answer:
(a) Pearls

Question 9.
The third Tamil Sangam was held in________
(a) Madurai
(b) Chennai
(C) Trichy
(d) Kanniyakumari
Answer:
(a) Madurai

Question 10.
_______ describes hospitality as one of the important duties of the Tamils.
(a) Pura Nanooru
(b) Aga Nanooru
(c) Aathichoodi
(d) Pattinapalai
Answer:
(a) Pura Nanooru

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

II. Fill in the blanks :

Question 1.
_______ offered gooseberry to the poetess Avvai.
Answer:
Adihiyaman

III. Match the following

Question 1.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 9
Answer:

  1. – (c)
  2. – (a)
  3. – (b)

IV. Circle odd one:

Question 1.
Cheras, Maravar, Cholas, Pandiyas
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 5

Question 2.
cauvery, Uraiyur, Tiger flag, Musiri
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 6

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

V. Write True or False :

Question 1.
The Ancient people lived near river banks.
Answer:
False

Question 2.
The Kallanai dam was built at 12th BC century
Answer:
False

VI. Answer in short :

Question 1.
Name the epic wrote by Ilangovadigal.
Answer:
Silappathikaram.

Question 2.
Name the capital and port of the cholas.
Answer:
Uraiyur, Kaveri poompattinam.

Question 3.
Who erected the statue of Kannagi?
Answer:
Imayavaramban Neduncheralathan erected the statue of Kannagi.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 4.
Who got the title of Thalaiyalanganathu Seruvendra Pandiya?
Answer:
Pandiya Nedunchezhian.

Question 5.
who also called ‘Karikal Peruvalathan?
Answer:
Karikalan.

Question 6.
Who wrote Pattinappalai?
Answer:
Kadiyalur Uruthirangkannanar.

Question 7.
Who are the greatest kings in pallavas?
Answer:
Mahendravarman and Narasimhavarman are the greatest kings in pallavas.

Question 8.
Who were build Cave temples and Mondithic rathas?
Answer:
The Pallavas were Cave temples and Mondithic rathas.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 9.
How was Arasan called by his People?
Answer:
Ko, Kon, Venthan, Kotravan, Irai.

Question 10.
Write any two millets.
Answer:

  1. Varagu
  2. Thinai

Question 11.
Write the Important festivals of Sangam Age.
Answer:\

  • Karthikai
  • Thiruvaadhirai
  • Harvest festivals and
  • Indira Vizha.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

VII. Answer in detail :

Question 1.
Write a short note on Kallanai.
Answer:
Kallanai was constructed by the Chola king Karikalan in the 2nd century B.C.(B.C.E.). This is said to be the world’s oldest dam still in use. Stones and Lime mortar were used to construct it.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 23 கணினி உலகம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 23 கணினி உலகம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

வாங்க பேசலாம்

Question 1.
கணினியின் திரைபோன்று செய்து கணினியைப் பற்றிப் பேசுக.
Answer:
கணினி நம் உலகைச் சுருக்கி உள்ளங்கையில் கொடுத்துவிட்டது. கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது.

கணினியின் உள்ளீடு , வெளியீடு கருவிகள் உள்ளன. விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள். காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.
நாம் கணினிக்குக் கொடுக்கும் தகவல்தாம் தரவுகள் (Data). தரவுகள் பதிவு செய்வதைப் பதிவேற்றம் எனவும் தகவல் பெறுவதைப் பதிவிறக்கம் எனவும் அழைக்கிறோம்.

கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது. கணினிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மின்னஞ்சல் பயன்படுகிறது.

இப்போது புலனம், முகநூல் சுட்டுரை ஆகியவற்றின் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவற்றை நாம் ஆக்கப் பயன்களுக்கு மட்டும் செயல்படுத்துவோம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

சிந்திக்கலாமா?

அழகன், புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்கிறான்.
அவன் நண்பனோ கணினியிலும் படிக்கலாம் என்கிறான்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Answer:
அழகன் புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுவது தவறான கூற்றாகும். அவன் நண்பன் கணினியிலும் படிக்கலாம் என்று கூறுவது சரியானதாகும்.

புத்தகத்தில் படிக்கலாம், ஆனால் புத்தகத்தில் மட்டுமே படிக்கமுடியும் என்று கூறவியலாது. ஏனெனில் கணினியின் மூலமாகவும் படிக்கலாம்.

கணினி நமக்குத் தேவையான அனைத்து கருத்துகளையும் நொடியில் தேடித் தந்து விடுகிறது. அதனால் கணினியில் படிப்பதும் எளிதானது என்பது என் கருத்து.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி ……………………………
அ) தொலைக்காட்சி
ஆ) கணினி
இ) கைப்பேசி
ஈ) மடிக்கணினி
Answer:
ஆ) கணினி

Question 2.
இப்போதெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………
அ) இப்போது + எல்லாம்
ஆ) இப்போ + எல்லாம்
இ) இப்போதே + எல்லாம்
ஈ) இப்போ + வெல்லாம்
Answer:
அ) இப்போது + எல்லாம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 3.
நினைவகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை ……………………………
அ) நினை + வகம்
ஆ) நினை + அகம்
இ) நினைவு + வகம்
ஈ) நினைவு + அகம்
Answer:
ஈ) நினைவு + அகம்

Question 4.
மின் + அஞ்சல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………………
அ) மின் அஞ்சல்
ஆ) மின்னஞ்சல்
இ) மின் அஞ்சல்
ஈ) மினஞ்சல்
Answer:
ஆ) மின்னஞ்சல்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 5.
பதிவேற்றம் – இச்சொல்லின் பொருள் ……………………………
அ) தகவல் ஆராய்தல்
ஆ) தகவல் வரிசைப்படுத்துதல்
இ) தகவல் பதிவு செய்தல்
ஈ) தகவல் பெறுதல்
Answer:
ஈ) தகவல் பெறுதல்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் யாவை?
Answer:
அடுக்குமாடிக் கட்டங்கள், மிகப்பெரிய சாலை, மெரினா கடற்கரை, விமான நிலையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உயிர்க்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஆகியவ ைசென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் ஆகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 2.
கணினியின் முதன்மைப் பகுதிகளை எழுதுக.
Answer:
கணினியின் முதன்மைப் பகுதிகள் :

  1. மையச் செயல்பாட்டுப்பகுதி (CPU)
  2. கட்டுப்பாட்டகம் (Control Unit)
  3. நினைவகம் (Memory)
  4. உள்ளீ டு மற்றும் வெளியீடு (Input and output)

Question 3.
இணையம் என்றால் என்ன?
Answer:
கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது.

Question 4.
மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
கணினிகளுக்கு இடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே மின்னஞ்சல். இது தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுகிறது.

குறிப்புகளைப் படித்துச் சொற்களைத் தேர்ந்தெடுப்போமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 1
Asnwer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

மொழி விளையாட்டு

கை என்னும் சொல்லை முதலெழுத்தாகக் கொண்டு பல சொற்களை உருவாக்கலாமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 4

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிக் கடிதத்தை முழுமையாக்குவோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 5
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 6
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 7

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. தரமணியில் தொழில்நுட்பப் பூங்கா உள்ளது.
2. கணினியைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாப்பேஜ்.
3. CPU என்பதன் தமிழ் விரிவாக்கம் மையச் செயல்பாட்டுப் பகுதி.
4. Keyboard என்பதன் தமிழ்ச் சொல் விசைப்பலகை.
5. இணையம் மூலமாகக் கடிதமும் எழுதலாம்.
6. புலனம், முகநூல் போன்றவை வலைத்தளச் செயலிகள்.
7. இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றம் மின்னஞ்சல் எனப்படும்.
8. விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள்.
9. காட்சித்திரை, கணினி, அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.
10. எந்தவொரு நாட்டு நிகழ்வுகளையும் நாம் நேரடியாகக் காண உதவுவது இணையம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

விடையளி :

Question 1.
கணினி – குறிப்பு எழுதுக.
Answer:

  • கணினி என்பது நாம் தரும் உள்ளீடுகளைப் பெற்று அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ற வெளியீடுகளைத் தரும் ஒரு மின்னணு சாதனம்.
  • கணினியை சார்லஸ் பாப்பேஜ் கண்டுபிடித்தார்.
  • முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணினி அளவில் மிகப்பெரியது. அதனை எளிதாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்ல இயலாது.
  • ஆனால், இப்போதோ கையடக்க வடிவிலே கூடக் கணினிகள் உருவாக்கப்படுகின்றன.

Question 2.
கணினியின் அமைப்பினை எழுதுக.
Answer:

  • கணினியின் மையச் செயல்பாட்டுப் பகுதி என்பது செய்நிரல் அடிப்படையில் கணிதச்  செயல்பாடுகளை அமைக்கும்.
  • கட்டுப்பாட்டகம் என்பது செய்திகளைத் திரளாகச் சேமித்து வைத்திருக்கும். செய்திகள்/ தகவல்களை நிலையாகச் சேமித்து வைக்கும் இடம்தான் நினைவகம்.
  • மையச் செயலகம் ஒருங்கிணைந்த உள்ளீடு, வெளியீடு கருவிகளைத் தன்னுள் பெற்றிருக்கும்.

Question 3.
கணினியின் உள்ளீடு, வெளியீடு கருவிகள் பற்றி எழுதுக.
Answer:

  • விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள்.
  • காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 4.
தரவு, பதிவேற்றம், பதிவிறக்கம் – விளக்குக.
Answer:

  • கணினிக்குக் கொடுக்கும் தவல்கள் – தரவுகள்.
  • தரவுகள் பதிவு செய்வது – பதிவேற்றம்
  • தகவல் பெறுவது – பதிவிறக்கம்.

Question 5.
மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
கணினிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்கு மின்னஞ்சல் பயன்படுகிறது.

Question 6.
வலைத்தளச் செயலிகள் யாவை?
Answer:
வலைத்தளச் செயலிகள் ;

  • புலனம்
  • முகநூல்
  • சுட்டுரை.

Question 7.
வலைத்தளச் செயலிகளில் நம் கருத்துகளை எவ்வாறு பதிவிடலாம்?
Answer:
வலைத்தளச் செயலிகளைச் செயலி உருவாக்கம் சென்று நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உருவாக்கி நம் கருத்துகளைப் பதிவிடலாம் அல்லது பெறலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 8.
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்குக் கலைச்சொல் எழுதுக.
Answer:
1. CPU – மையச் செயல்பாட்டுப் பகுதி
2. Control Unit – கட்டுப்பாட்டகம்
3. Memroy – நினைவகம்
4. Input – உள்ளீடு
5. Output – வெளியீடு
6. Keyboard – விசைப்பலகை
7. Mouse – சுட்டி
8. Monitor – காட்சித்திரை
9. Printer – கணினி அச்சுப்பொறி
10. Data – தரவு
11. Download – பதிவிறக்கம்
12. Website – வலைத்தளம்
13. Email ID – மின்ன ஞ்சல்
14. Whatsapp – புலனம்
15. Facebook – முகநூல்
16. Twitter – சுட்டுரை
17. Webapps – வலைதளச்செயலிகள்
18. Play store – செயலி உருவாக்கம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

வாங்க பேசலாம்

Question 1.
நமது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து உமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்க.
Answer:
இந்திய நாட்டின் பெருமைகள் :

  • உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு.
  • பல்வேறு மக்கள் தொன்றுதொட்டு இன்றுவரை மகிழ்ச்சியுடன் வாழும் வளம் பெற்ற நாடு.
  • இயற்கை அரண்களான வடக்கே இமயமலை மூன்று பக்கம் நீராலும் சூழப்பட்ட நாடு.
  • பழமையான கலாச்சாரத்தைக் கொண்ட நாடு.
  • வேளாண் தொழிலில் சிறந்த நாடு.
  • விட்டுக்கொடுத்து வாழும் மிகப்பெரிய பண்பு கொண்ட நாடு.
  • காடுகளில் வாழும் கலாச்சாரத்திலும் புதிய நாகரிகம் கண்ட, வன்முறையில்லாத நாடு.
  • பல சாதி மத இனம் மொழி வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழும் நாடு.
  • விஞ்ஞானிகள் பலரையும் சான்றோர்கள் பலரையும் ஈன்றெடுத்த நாடு வீரம் பொதிந்த நாடு .
    இதனாலன்றோ பாரதியார்,
    பாருக்குள்ளே நல்ல நாடு
    நம் பாரத நாடு. – என்று பாடுகிறார்.

Question 2.
உங்கள் ஊரிலுள்ள சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி, உமது கருத்துகளை எடுத்துக் கூறுக.
Answer:
எங்கள் ஊர் திருவண்ணாமலை. இங்கு சிறப்பு வாய்ந்த இடங்களில் முதலிடம் பெறுவது அருணாச்சலேஸ்வரர் கோயில்தான். கார்த்திகை தீபம், கிரிவலம் இவையிரண்டும் திருவண்ணாமலையுடன் பிணைந்தது. இது சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்று இது அக்னி தலமாகும். கார்த்திகை மாதத்தில் இங்குள்ள மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றப்படும். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மலையைச் சுற்றிவருவர். அவ்வாறு சுற்றும்போது மூலிகைக் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று கூறுவர்.

அடுத்தது சாத்தனூர் அணை. பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இங்கு தொங்குபாலம் ஒன்று உள்ளது. சிறுவர்களுக்கான படகு சவாரியும் இரயில் வண்டியும் உள்ளன. ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், செஞ்சிக்கோட்டை இவையெல்லாம் திருவண்ணாமலைக்குப் பெருமை சேர்ப்பவை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்புடையது. செஞ்சிக்கோட்டையும் வரலாற்றுச் சிறப்புடைய கோட்டையாகும். விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலாவாசிகளால் அலங்கரிக்கப்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

சிந்திக்கலாமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 1

கண்ணைப் போல காக்க வேண்டும் எவ்வாறு?
Answer:

  • வனவிலங்குகள், பறவைகள் வாழும் இடங்களில் உள்ள தாவரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • வனவிலங்குகளை வேட்டையாடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவை ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.
  • அவை உள்ள இடங்களில் பெரிய நீர்த்தொட்டிகள் அமைத்துத் தண்ணீர் ஊற்றி வைக்கலாம்.
  • அவ்வப்போது, அவற்றிற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிப் போடலாம். அரசாங்கத்தின் உதவியுடன் வனத்துறையினர் மேலும் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய வேண்டும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘இன்னல்’ இச்சொல்லின் பொருள் …………………………
அ) மகிழ்ச்சி
ஆ) கன்னல்
இ) துன்பம்
ஈ) இன்பம்
Answer:
இ) துன்பம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Question 2.
கும்மியடி – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……………………
அ) கும்மி + யடி
ஆ) கும் + மியடி
இ) கும் + மடி
ஈ) கும்மி + அடி
Answer:
ஈ) கும்மி + அடி

Question 3.
ஆனந்தம் – இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………
அ) மகிழ்ச்சி
ஆ) வருத்தம்
இ) அன்பு
ஈ) கோபம்
Answer:
ஆ) வருத்தம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Question 4.
ஒரே ஓசையில் முடியாத சொற்கள் ……………………….
அ) தேசமடி – பூமியடி
ஆ) போற்றிட்டி – காத்திட்டி
இ) கும்மியடி – கோடி
ஈ) போனதடி – போற்றிடவே
Answer:
ஈ) போனதடி – போற்றிடவே

Question 5.
கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 2
Answer:
ஈ)

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

மொழியோடு விளையாடு

படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

பொருத்துக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 8

அறிந்து கொள்வோம்

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்படாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன.

செயல் திட்டம்

உமது ஊரில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு, எழுதி வருக.
Asnwer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 9

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. சுகம் கோடி விளைய வேண்டும்.
2. நமது இன்னல் போனது.
3. நமது தேசம் இந்தியா.
4. மண்ணைத் தாயாய்ப் போற்ற வேண்டும்.
5. நமது தேசத்தைக் கண்ணைப் போலக் காக்க வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

விடையளி :

Question 1.
கும்மியடி பாடல் மூலம் நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:

  • நம் நாடு விடுதலை பெற்றதும் கோடி இன்பங்கள் விளைந்தது. நமது துன்பங்கள் போனதென்று மனம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
  • நம் பாரத தேசம் கவிஞர்கள் புகழ்ந்து பாடும் பூமியாகும்.
  • மகிழ்ச்சி விளைந்திடும் பூமி. புகழ்ச்சிகள் கொண்ட நாடு.
  • அறிவு சிறந்த அறிஞர்கள் வாழும் பூமி.
  • உயர்வில் மலையைப் போன்றது. அதிக வளம் கொண்ட பூமி.
  • நமது தேசம் இந்தியா என்று எண்ணி அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.
  • நம் நாட்டைத் தாயைப்போல் போற்றுவோம்; கண்ணைப் போல் காப்போம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

வாங்க பேசலாம்

Question 1.
கதையில் நடுவர் மயிலக்கா கூறும் தீர்ப்பு சரியானதா? உம் கருத்தைச் சொந்த நடையில் கூறுக.
Answer:
கதையில் நடுவர் மயில் அக்கா கூறும் தீர்ப்பு சரியானது. காகம் பாடாது என்று அதனை கேலி பேசியவர் முன்னிலையில் தொடர்ந்து அரைமணி நேரம் பாடி அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த காகம்தான் பரிசு பெறுவதற்கு சரியான பறவை. காகம் தான் பாடியதோடு மட்டுமல்லாமல் மற்ற பறவைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தது. எனவே பாட்டு ராணி என்ற பட்டம் காகத்திற்குக் கிடைத்தது ஏற்புடைய ஒன்றாகும்.

Question 2.
உங்கள் பள்ளியில் நடைபெற்ற பாட்டுப்போட்டி நிகழ்வுகள் குறித்துப் பேசுக.
Answer:
வணக்கம்!
எங்கள் பள்ளியில் நவம்பர் பதினான்கு அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

அன்று பல போட்டிகள் நடைபெற்றது. நான் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலைப் பாடினர். ஒரு சிலர் நடனமாடியும் பாடல் பாடியும் மகிழ்ந்தனர். ஒரு சிலர் இசைக்கருவிகளை இசைத்தனர். என்னுடைய தோழி குறையொன்றுமில்லை ‘ என்ற எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைப் பாடினாள். அனைவரும் அப்பாடலை மெய்மறந்து கேட்டனர். ‘பாடலுக்கு அழகு கேட்டார் நன்று எனக் கூறல்’ என்ற சிறுபஞ்சமூலம் கூற்றின்படி அவளுடைய பாடலை அனைவரும் இரசித்தனர். இறுதியில் பரிசு அறிவிக்கப்பட்டது. என் தோழிக்குப் பரிசு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ந்தேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

சிந்திக்கலாமா?

போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையாதது என்று உன் தந்தை கூறுகிறார். ஏன் தெரியுமா?
Answer:
போட்டியில் பங்கேற்பதன் மூலம் அவரவர் ஆற்றல் வெளிப்படுகிறது. பலமுறை தோற்றாலும் ஒரு முறையாவது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.

போட்டியில் கலந்துகொள்ளும் போது தன்னால் என்ன முடியும், முடியாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
போட்டியில் தோற்றாலும் சரி என்று கலந்து கொள்ளும் போது அவர்களுக்குள் ஓர் உந்துதல் சக்தி உண்டாகிறது. அச்சக்தி அவர்களை முயற்சி செய்யத் தூண்டுகோலாய் அமைகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

போட்டிக்காக அவர்கள் செய்யும் பயிற்சியும் முயற்சியும் அவர்களைச் சுறுசுறுப்பாக்குகிறது. செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவுகிறது.

இக்காரணங்களால் போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையதாதது என்று தந்தை கூறுகிறார்.

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
காட்டில் நடந்த போட்டியின் பெயர் என்ன?
Answer:
காட்டில் நடந்த போட்டியின் பெயர் ‘பாட்டுப்போட்டி’ ஆகும்.

Question 2.
காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா என்ன கூறினார்?
Answer:
காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா “ஆகா…. என்ன சுருதி சுத்தம்; அற்புதம்!” என்று கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Question 3.
‘பாட்டு ராணி’ பட்டம் பெற்ற பறவை எது?
Answer:
‘பாட்டு ராணி’ பட்டம் பெற்ற பறவை காகம்.

புதிர்களைப் படிப்போம்! விடை காண்போம்! படத்துடன் பொருத்துவோம்!
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 2
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 3

மீண்டும் மீண்டும் சொல்வோம்

1. ஒரு குடம் எடுத்து அரைக்குடம் இறைத்துக் குறைகுடம் நிரப்பி நிறைகுடம் ஆக்கினான்.
2. துள்ளி எழுந்து பள்ளி சென்றாள் வள்ளி. அவளுடன் மெள்ள மெள்ள வந்து சேர்ந்து கொண்டாள் அல்லி.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

கலையும் கை வண்ணமும்

காகிதத்தில் கரடி செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 4

அறிந்து கொள்வோம்

  1. ஆண்மயிலுக்குதான் தோகை உண்டு.
  2. ஆண் சிங்கத்துக்குதான் பிடரிமயிர் உண்டு
  3. மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும்.
  4. புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.

செயல் திட்டம்

எவையேனும் ஐந்து பறவைகளின் படங்களை ஒட்டி அவற்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வருக.
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 5
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

கூடுதல் வினாக்கள்

நிரப்புக:

1. ‘சிரிப்பொலியொன்று’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது சிரிப்பு+ஒலி+ஒன்று.
2. மரக்கிளையில் குரங்கு ஒன்று உட்கார்ந்திருந்தது.
3. காட்டில் பறவைகளுக்கான பாட்டுப்போட்டி நடந்தது.
4. போட்டிக்கு வந்த பறவைகளின் பெயர்களை எழுதியது ஆந்தை.
5. போட்டிக்கு நடுவராக இருந்த பறவை மயில்,
6. மயில் ஒய்யாரமாகத் தோகை விரித்தபடி மேடையில் அமர்ந்தது.
7. முதலில் பாடிய பறவை மைனா.
8. இரண்டாவது போட்டியாளராக வந்த பறவை கிளி.
9. – கிளி பாடத் தொடங்கியதும் விலங்குகளின் விசில் சத்தம் விண்ணைத் தொட்டது.
10. வெட்கத்தோடு கீழே இறங்கிய பறவை சேவல்.
11. தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே பாடிய பறவை கழுகு.
12. கழுகு பாடிய பாட்டு காடெங்கும் எதிரொலித்தது.
13. கழுகின் பாட்டைக் கேட்டு பயந்தவை மான்குட்டிகள்.
14. “இம்புட்டுத்தான் என் பாட்டு” என்று சொன்ன பறவை கொக்கு.
15. நிறைய விலங்குகள் குயிலுக்கு இரசிகர்களாய் இருந்தன.
16. கடைசிப் போட்டியாளராக வந்த பறவை காகம்.

விடையளி:

Question 1.
சேவலும் குரங்கும் என்னப் பேசிக் கொண்டது.
Answer:
அமைதியாக இருந்த காட்டில் சேவல் அங்கு யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு மெலிதாய்க் குரல் எழுப்பிப் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென சிரிப்பொலி கேட்டதும் சேவல் பயந்துகொண்டே “யார் சிரித்தது?” என்று கேட்டது. மரத்தின் மேலேயிருந்த குரங்கு , “என்ன பாட்டு பலமா இருக்கு. என்ன விசேஷம்?” என்று குரங்கு கேட்டது. சேவலுக்கு வெட்கம் வந்துவிட்டது.
சேவல் “மறுநாள் பாட்டுப்போட்டி நடப்பதாகவும் அதற்குப் பயிற்சி எடுப்பதாகவும் கூறியது.
“போட்டியில் பாடு. வெற்றி பெற வாழ்த்துகள்!” என்று குரங்கு கூறியது. சேவல் ரொம்ப நன்றி என்று தலையாட்டியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Question 2.
குருவி ஒலிபெருக்கி முன்னே வந்து கூறியது யாது?
Answer:
குருவி, மற்ற பறவைகளிடம் “பாட்டுப்போட்டியில் நன்றாகவும் அதிக நேரமெடுத்தும் பாட வேண்டும். அனைவரும் இரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும். அப்படியான பாடலைப் பாடுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்” என்று கூறியது.

Question 3.
சேவல் பாடியபோது மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளின் நிலை என்ன?
Answer:
சேவல் “கொக்… கொக்… கொக்கரக்கோ … கோ….” என்று பாடியது.
தூங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு கரடிகளும் விழித்துக் கொண்டன. சேவலைப் பார்த்து, “தூங்கிறவங்களை எழுப்புறதே உன் பாட்டா இருக்கு. அருமையான பாட்டு. போதும்பா, நிப்பாட்டு!” என்று மற்ற பறவைகள் கத்தின. சேவல் வெட்கத்தோடு கீழே இறங்கியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Question 4.
கழுகு பாடியபோது என்ன நடந்தது?
Answer:
கழுகு தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே பாடியது. அப்பாட்டு காடெங்கும் எதிரொலித்தது. மான்குட்டிகள் பயந்து போய்விட்டன. சில பயத்தில் அழுதன. சில எழுந்து ஓடத் தொடங்கின. இதைப் பார்த்துச் சிரித்த யானைக்குக் கண்ணில் நீரே வந்து விட்டது.

Question 5.
குயில் மேடைக்கு வந்தபோது மற்ற பறவை, விலங்குகளின் செயல் யாது?
Answer:
குயில் மேடைக்கு வந்தபோது, பறவை, விலங்குகள் எல்லாமும் எழுந்து நின்று கைகளைத் தட்டின. குயிலுக்கு நிறைய விலங்குகள் இரசிகர்களாய் இருந்தன. ஒவ்வொன்றாய் எழுந்து நின்று குயில் குமாரிக்குப் பூங்கொத்துகளைக் கொடுத்தன.
வாழ்த்துக்களைச் சொல்லி அனுப்பி வைத்தன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Question 6.
காகம் எவ்வாறு பாடியது? மற்ற பறவை விலங்குகள் என்ன செய்தன?
Answer:
காகம் மெல்லியக் குரலில் முதலில் பாட ஆரம்பித்தது. விலங்குகள் ஆச்சரியத்தோடு கவனித்தன. ‘கா’ என்ற ஓர் எழுத்திலேயே புதுப்புது ஆலாபனைகள். சுருதி கூட்டிப் பாடிக்கொண்டே இருந்ததது. கேலி செய்த பறவைகளுக்கு என்னவோ போலாகிவிட்டது அவை அனைத்தும் எழுந்து பாட்டிற்கேற்ப ஆட்டம் போட்டது. புலி “பிரமாதம்” என்றது. சிங்கம் தலையாட்டி இரசித்தது.

Question 7.
நடுவர் மயிலக்காவின் தீர்ப்பு யாது?
Answer:
“பாருங்க. காக்கா பாட வர்றபோது கேலி செஞ்சீங்க. ஆனா, தயங்கி நிற்காம, விடாமுயற்சியோட பாடுச்சு. அது மட்டுமில்ல. நிறைய பயிற்சி எடுத்துப் புதுப்புது இராகத்தில் பாடியிருக்கு. எல்லாரும் கை தட்டி பாராட்டுற அளவுக்கு அரைமணி நேரம் பாடியிருக்கு. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எல்லாராலும் பாட முடியும்னு இந்தப் போட்டி மூலமா காக்கா நிரூபிச்சுக் காட்டியிருக்கு. மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது. இந்தப் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வழங்கிப் பாராட்டுகிறேன்!” என்று தீர்ப்பு வழங்கியது. ‘பாட்டுராணி’ என்ற பட்டத்தைக் காகத்தின் தலையில் கிரீடமாய்ச் சூட்டியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

வாங்க பேசலாம்

Question 1.
நீர் எதனால் மாசடைகிறது? நீர் மாசு ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம்? குழுவில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : இன்று விடுமுறைதானே? நீ என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டாய்?
மாணவன் 2 : இன்று விடுமுறைதான். எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர்க்
கால்வாயைச் சுத்தம் செய்கிறார்கள். அதற்கு என் அண்ணன் செல்வதற்காக விடியற்காலையில் எழுந்தான். நானும் அவனுடனேயே எழுந்துவிட்டேன்.

மாணவன் 1 : உன்னுடைய அண்ணன் கல்லூரியில் தானே படிக்கின்றார்? நீ…?
மாணவன் 2 : என் அண்ண னுடைய கல்லூரியில் ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றதாம். அதில் அவரவர்கள் வாழும் பகுதியில் உள்ள கால்வாய்களை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மாணவன் 1 : அட! இதுகூட நல்ல சிந்தனையாக உள்ளதே. இதெல்லாம் செய்து என்ன பயன்? தொழிற்சாலைக் கழிவுகளாலும் வீட்டுக் கழிவுகளாலும் தூயநீர் ஓடிய ஆறுகளில் இன்று கழிவுநீர் ஓடுகிறது.
மாணவன் 2 : நீ கூறுவது முற்றிலும் சரியே. தேவையற்ற வேதிக்கழிவுகளைச் சாக்கடையில் கலக்க விடுகிறோம். இந்நீரானது நேரே கடலில் சென்று கலந்துவிடுகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் அழிக்கப்படுகின்றன. கடல் வாழ் உயிரினமான மீன்களை மக்கள் விரும்பி உண்கின்றனர். அவர்களுக்கு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கழிவுநீர் கடலில் செல்லாமல் இருக்க ஆங்காங்கு மரங்களை நட்டு அவற்றிற்கு அந்நீர் போய் சேரும்படி செய்யலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

மாணவன் 1 : தொழிற்சாலைக் கழிவுகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளையும் வைத்து மழைநீர் வீணாகக் கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
மாணவன் 2 : ஆமாம். இவ்வாறு செய்தால் நீர்வளமும் பாதுகாக்கப்படும்.

சிந்திக்கலாமா?

உங்கள் பள்ளியில் நடைபெறப்போகும் அறிவியல் கண்காட்சிக்காக நீ புதுமையாகச் செய்ய விரும்புவது என்ன?
Answer:
என் பள்ளியில் நடைபெறப்போகும் அறிவியல் கண்காட்சிக்காக நான் புதுமையாகச் செய்ய விரும்புவது சத்தமின்றிச் செல்லும் போக்குவரத்துச் சாதனங்கள்.

நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலைப் பலவழிகளில் நாம் தூய்மையற்றதாக்கி விடுகின்றோம். அதில் ஒலி மாசும் ஒன்று. இம்மாசினால் பாதிக்கப்படுவோர் பலர். சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்லாமல் பயணம் செல்வதற்கும், ஒலி பெருக்கி இல்லாமல் இருப்பதற்கும் வழியைக் கண்டறிந்து அதற்கான ஒரு மாதிரி வாகனத்தைச் செய்வதற்குப் பரிந்துரை செய்யும் அளவிற்கு ஒரு புதுமையான வாகனமொன்றைச் செய்வேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘மாசு’ – என்னும் பொருள் தராத சொல்
அ) தூய்மை
ஆ) தூய்மையின்மை
இ) அழுக்கு
ஈ) கசடு
Answer:
அ) தூய்மை

Question 2.
‘மாசு + இல்லாத’ – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) மாசிலாத
ஆ) மாசில்லாத
இ) மாசி இல்லாத
ஈ) மாசு இல்லாத
Answer:
ஆ) மாசில்லாத

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Question 3.
‘அவ்வுருவம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது _
அ) அவ் + வுருவம்
ஆ) அந்த + உருவம்
இ) அ + உருவம்
ஈ) அவ் + உருவம்
Answer:
இ) அ + உருவம்

Question 4.
‘நெடிதுயர்ந்து’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
அ) நெடிது + உயர்ந்து
ஆ) நெடி + துயர்ந்து
இ) நெடிது + துயர்ந்து
ஈ) நெடிது + யர்ந்து
Answer:
அ) நெடிது + உயர்ந்து

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Question 5.
‘குறையாத’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் –
அ) நிறையாத
ஆ) குறைபாடுடைய
இ) குற்றமுடைய
ஈ) முடிக்கப்படாத
Answer:
அ) நிறையாத

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் என்ன செய்தி இருந்தது?.
Answer:
ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் ‘அறிவியல் திருவிழா’ பற்றிய செய்தி இருந்தது.

Question 2.
அறிவியல் விழாவில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை ஆசிரியர் எவ்வாறு ஊக்கப்படுத்தினார்?
Answer:
“வழக்கமான ஆய்வுகள் போல் அல்லாமல், புதுமையாக முயற்சி செய்யுங்கள். பரிசு பெறுவதனைவிட, உங்களுடைய மாறுபட்ட சிந்தனைக்கு முன்னுரிமை தாருங்கள். அதனையே செயல்படுத்துங்கள்” இவ்வாறு மாணவர்களை ஆசிரியர் ஊக்கப்படுத்தினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Question 3.
அறிவியல் விழாவில் காணப்பட்ட நெடிதுயர்ந்த உருவத்தை எப்படி உருவாக்கினர்?
Answer:

  • விழா அரங்கின் வாசலில் நெடிதுயர்ந்து நின்ற உருவம் முழுவதும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் செய்யப்பட்டிருந்தது.
  • பழுதான கணினிகளின் பகுதிப் பொருள்கள் ஓர் அரக்கனின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் மார்புப் பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது.
  • தோள்பட்டையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. அரக்கன் பேசுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது.

Question 4.
சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றன?
Answer:
ஒவ்வொரு நாளும் உங்களால் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் நிலத்தையும் சுற்றுச்சூழலையும் பெரிதும் சீர்கேட்டுக்கு உள்ளாக்குகின்றன.

Question 5.
நாம் பயன்படுத்திய மின்பொருள்களை என்ன செய்ய வேண்டும்?
Answer:

  • நாம் பயன்படுத்திய மின்னணுப் பொருள்களைத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.
  • கண்ட இடங்களில் தூக்கி எறிந்திடாமல் முறையாக மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

பாடுவோம் விடை கூறுவோம்
எது சரி? எது தவறு?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 2

தொடர் இரண்டு; விடை ஒன்று கண்டுபிடிப்போமா?

1. காலைக்குப் பின்னால் வரும்; கழுத்தில் வந்து விழும் ………………….
Answer:
மாலை

2. ஆடையுமாகும்; அறிவையும் தரும் ……………………
Answer:
நூல்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

மொழியோடு விளையாடு

ஒரு சொல்லுக்கு இரு பொருள் எழுதுக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 4

கலையும் கை வண்ணமும்

காகிதக் குவளை செய்வோமா!

செய்முறை : தேவையான பொருள் ; பயன்படுத்திய பொருள் ஒன்று.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 5

இயற்கையைக் காப்போம்

வாடி வதங்கிய மரங்கள்; வண்ணம் இழந்த இலைகள்; காய்ந்து கருகிய பூக்கள்; வறண்ட பூமி; வற்றிக் கிடக்கும் ஆறு; வெண்பஞ்சு மேகம்; பசுமை இழந்து பாளம் பளமாக வெடித்துக் கிடக்கும் வயல்வெளிகள்; என்னவாயிற்று? அவற்றின் அழகெல்லாம் எங்கே போயிற்று? அதோ, ஒரு வீட்டின் அருகே தண்ணீர்க் குழாய். அதில் சொட்டுச் சொட்டாக நீர். அதனை நிரப்பிக் கொள்ள எத்தனை குடங்கள் வரிசையாக வரிசையாக. அப்பப்பா! இந்தச் சொட்டு நீர் நாளையும் வருமா? வினாக்குறியுடன் சிறுமி.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

இந்த உரைப்பகுதிக்குப் பொருத்தமாக வாசகங்கள் எழுதுக.
நீரைச் சேமிப்போம்; நீடுழி வாழ்வோம்.
Answer:
நீரின்றி அமையாது இவ்வுலகம்.
மழை நீரை சேமிப்போம்!
நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம்!
மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்!

செயல் திட்டம்

உங்கள் பள்ளியில் நடைபெற உள்ள ஆண்டுவிழா, இலக்கிய மன்ற விழா போன்றவற்றுள் ஏதேனும் ஒரு விழாவுக்கு அழைப்பிதழ் உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியரது கைகளில் அழைப்பிதழ் இருந்தது.
2. அறிவியல் திருவிழா மாவட்டக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
3. முகிலன் அழைப்பிதழைப் படித்தபோது மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.
4. நெடிதுயர்ந்த ஓர் உருவம் விழா அரங்கின் வாசலில் நின்றது.
5. அரக்க வடிவில் இருந்த உருவத்தின் மார்பு பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது.
ஒலிபெருக்கி அரக்கனின் தோள் பட்டையில் அமைக்கப்பட்டிருந்தது.
7. மின்னணுப் பொருள்களைப் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
8. சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது முகிலனது பள்ளிக்கே கிடைத்தது.
9. முகிலனைப் பாராட்டியவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்.
10. அரங்கினுள் நுழைந்தவர்கள் அரக்க உருவத்தைப் பார்த்து வியந்தனர்.
Answer:
1. வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியரது கைகளில் அழைப்பிதழ் இருந்தது.
2. அறிவியல் திருவிழா மாவட்டக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
3. முகிலன் அழைப்பிதழைப் படித்தபோது மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.
4. நெடிதுயர்ந்த ஓர் உருவம் விழா அரங்கின் வாசலில் நின்றது.
5. அரக்க வடிவில் இருந்த உருவத்தின் மார்பு பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது.
ஒலிபெருக்கி அரக்கனின் தோள் பட்டையில் அமைக்கப்பட்டிருந்தது.
7. மின்னணுப் பொருள்களைப் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
8. சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது முகிலனது பள்ளிக்கே கிடைத்தது.
9. முகிலனைப் பாராட்டியவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்.
10. அரங்கினுள் நுழைந்தவர்கள் அரக்க உருவத்தைப் பார்த்து வியந்தனர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

விடையளி :

Question 1.
அழைப்பிதழில் இருந்த குறிப்பு யாது?
Answer:
ஆய்வுகள் மாணவர்தம் சொந்த முயற்சியாகவும் இதுவரை வெளிவராத புதிய முன்னெடுப்பாகவும் அமைதல் வேண்டும்.

Question 2.
அரக்க வடிவில் இருந்த உருவம் இறுதியாக என்ன பேசியது?
Answer:
“மாசில்லாத உலகம் படைப்போம்!
மகிழ்வான வாழ்வு பெறுவோம்”
என்று அரக்க வடிவில் இருந்த உருவம் இறுதியாகப் பேசியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Question 3.
முகிலனை எதற்காக அனைவரும் பாராட்டினர்?
Answer:
முகிலன் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுப் பொருள்களைப் பயன்படுத்தி நெடிதுயர்ந்த அரக்க வடிவில் ஓர் உருவத்தைப் படைத்தான். அது சுற்றுச்சூழல் மாசு அடைவது பற்றியும் அதற்கு மக்கள்தான் காரணம் என்றும் பேசுவது போல் அமைத்திருந்தான்.

இப்படைப்பினால், அந்த ஆண்டிற்கான சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது, முகிலனது பள்ளிக்குக் கிடைத்தது.
ஆதலால் மாணவர்களும், ஆசிரியர்களும், தலைமையாசிரியரும் முகிலனின் புதுமையான படைப்பைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

வாங்க பேசலாம்

Question 1.
பாடலை ஓசைநயத்துடன் பாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலை ஓசை நயத்துடன் பாட வேண்டும்.

Question 2.
செயற்கைக்கோள்களின் வகைகளை அறிந்து கொண்டு வந்து பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம் !
மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகச் செயற்கைக்கோள் இருக்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

செயற்கைக்கோள்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இராணுவக் கண்காணிப்பு, உளவு வேலைகள், பூமியைக் கண்காணிக்கும் வேலைகள், வானியல் பற்றிய பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், தகவல் பரிமாற்றம் ஆகிய எல்லாவற்றிற்கும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் வகைகள் :

  • தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்
  • புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள்
  • வானிலை செயற்கைக்கோள்கள்
  • பயோ செயற்கைக்கோள்கள்
  • சோதனை செயற்கைக்கோள்கள்
  • இடங்காட்டி செயற்கைக்கோள்கள்
  • அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு செயற்கைக்கோள்கள் போன்றவையாகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

சிந்திக்கலாமா?

செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?
Answer:

  • செயற்கைக்கோள் கண்டுபிடிக்காமல் இருந்தால் உலகில் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது.
  • தகவல் தொடர்பு இருந்திருக்காது.
  • பிற கோள்களைப் பற்றி அறிந்திருக்க இயலாது.
  • புயல் மழை வருவதை அறிந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.
  • காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாது.
  • மண்வ ளம் கனிம வளம் பற்றி அறிய முடியாது.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா!

Question 1.
மண்ணிலுள்ள – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மண்ணி + லுள்ள
ஆ) மண்ணில் + உள்ள
இ) மண் + உள்ள
ஈ) மண்ணில் + உள்ளே
Answer:
ஆ) மண்ணில் + உள்ள

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Question 2.
நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) நிழள் + படம்
ஆ) நிழை + படம்
இ) நிழல் + படம்
ஈ) நிலை + படம்
Answer:
இ) நிழல் + படம்

Question 3.
உண்மை என்ற சொல்லின் பொருள் ………………….
அ) பொய்
ஆ) தவறு
இ) சரி
ஈ) மெய்
Answer:
ஈ) மெய்

Question 4.
நற்பயன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நல்ல + பயன்
ஆ) நன்மை + பயன்
இ) நல் + பயன்
ஈ) நற் + பயன்
Answer:
ஆ) நன்மை + பயன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Question 5.
அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) பக்கத்தில்
ஆ) எதிரில்
இ) அண்மையில்
ஈ) தொலைவில்
Answer:
ஈ) தொலைவில்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
‘பறவைக் கப்பல்’ எனக் குறிப்பிடப்படுவது எது?
Answer:
பறவைக் கப்பல் எனக் குறிப்பிடப்படுவது செயற்கைக்கோள்கள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Question 2.
செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக் குறிப்பிடுக.
Answer:

  • மண்வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
  • ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து மனித உயிர்களைக் காக்கிறது.

இணைந்து செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

பாடலை நிறைவு செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 4

வண்ணம் தீட்டி மகிழ்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 5
மாணவர்கள் தாங்களாகவே வண்ணம் தீட்டி மகிழ வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

சொல் உருவாக்கலாமா!

கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால் செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 6
Answer:

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 7

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

அறிந்து கொள்வோம்

இந்தியா, வானில் செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் வானவியலும் கணிதவியலும் சிறந்து விளங்கியவர்கள்.

செயல் திட்டம்

நம் நாட்டில் இதுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் பெயர்களை எழுதி வருக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. செயற்கைக்கோள் உயர உயரப் பறந்து ……………………………………. தருகிறது.
2. செயற்கைக்கோள் ……………………………………. ஆய்வு செய்வதற்கு விண்ணில் சீறிப் பாயும்.
3. செயற்கைக்கோள் மண்ணிலுள்ள வளத்தை ……………………………………. சொல்லிடும்.
4. செயற்கைக்கோள் ……………………………………. இயங்கிடும்.
5. செயற்கைக்கோள் வானில் சுற்றும் கோள்களை ……………………………………. எடுத்திடும்.
Answer:
1. செயற்கைக்கோள் உயர உயரப் பறந்து நற்பயனைத் தருகிறது.
2. செயற்கைக்கோள் விண்வெளி ஆய்வு செய்வதற்கு விண்ணில் சீறிப் பாயும்.
3. செயற்கைக்கோள் மண்ணிலுள்ள வளத்தை உண்மையாகச் சொல்லிடும்.
4. செயற்கைக்கோள் தன்னிச்சையாக இயங்கிடும்.
5. செயற்கைக்கோள் வானில் சுற்றும் கோள்களை நிழற்படம் எடுத்திடும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

விடையளி:

Question 1.
செயற்கைக்கோளினால் விளையும் பயன்கள் யாவை?
Answer:

  • செயற்கைக்கோள் விண்வெளி ஆய்வு செய்கிறது.
  • மண்ணிலுள்ள வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
  • தகவல் தொடர்புக்கு உதவுகிறது.
  • வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.
  • வானில் சுழலும் கோள்களை நிழற்படம் எடுத்து, நமக்கு அனுப்புகிறது.
  • கனிம வளத்தையும் கடல் வளத்தையும் குறிப்பிடுவதோடு, ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து, மனித உயிர்களைக் காக்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 18 வேலைக்கேற்ற கூலி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

வாங்க பேசலாம்

Question 1.
கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
அழகாபுரி மன்னர் நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். அவரை எல்லோரும் புகழ்ந்து பேசுவர். இரத்தினபுரி மன்னர் இதனைக் கேள்விப்பட்டார். அவர் தன்னுடைய அமைச்சர்களிடம் “நானும் நன்றாக ஆட்சி புரிகிறேன். நம் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். ஆனால், என்னை யாரும் புகழவில்லையே” என்று கேட்டார்.

அமைச்சர் ஒருவர் கொஞ்சம் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் அழகாபுரி மன்னருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவர் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொண்டால் அதனை நாமும் பின்பற்றலாம்” என்று கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

அதன்படி இரத்தினபுரி மன்னர் அழகாபுரி நாட்டுச் சென்றார். இருமன்னர்களும் நலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு இருவரும் அரசவைக்குச் சென்றனர். அழகாபுரி மன்னர் தனக்குச் சமமான இருக்கையில் அம்மன்னரை அமரச் செய்தார்.

அப்போது விறகுவெட்டி ஒருவன் அரசவைக்கு வந்து தன் குறையைத் தீர்க்கும்படிக் கேட்டான். “ஐயா, விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்கிறேன்” என்றார் மன்னர்.

விறகுவெட்டி “தன்னைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும், மன்னரிடம் பணிபுரிபவருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினான். மன்னர் “இதுபோல் எக்குறையும் வரக்கூடாது என்பதில் நான் கவனமாகத்தான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், உங்கள் ஐயத்தைத் தீர்த்து வைக்கிறேன்” என்றார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

மன்னர் அமைச்சர்களுள் ஒருவரையும் விறகு வெட்டியையும் பார்த்து “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பார்த்துவிட்டு வாருங்கள்” என்று கூறினார். விறகுவெட்டி வெளியில் சென்று உடனே திரும்பி வந்து “ஒரு வண்டி செல்கிறது” என்று கூறினான்.

அந்த வண்டியில் என்ன இருக்கிறது? எந்த ஊரிலிருந்து வருகிறது? என்று மன்னர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் வெளியில் சென்று வந்து அவன் பதிலளித்தான். அப்போது அமைச்சர் உள்ளே நுழைந்தார். “நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று அமைச்சரிடம் மன்னர் கேட்டார்.

அமைச்சர் ஒரு கேள்விக்கு பல பதில்களைக் கூறி முடித்தார். விறகு வெட்டியோ மன்னர் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் வெளியே சென்று வந்து பதிலளித்தான். அமைச்சர் கூறியதைக் கேட்டு விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்தான்.
மன்னரிடம் விறகுவெட்டி, “அமைச்சரின் அறிவுக்கூர்மையையும் என்னுடைய அறியாமையையும் புரிந்து கொண்டேன். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இரத்தினபுரி மன்னரும் ‘இவருடைய புகழைக் கண்டு பொறாமை கொண்டோமே, உண்மையை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார். தம் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.

சிந்திக்கலாமா?

அமைச்சர் வண்டிக்காரரரிடம் எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு என்னென்ன கேள்விகளைக் கேட்டிருப்பார்? எழுதுங்கள்.
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
Answer:

  • வண்டியில் என்ன இருக்கிறது?
  • எந்த ஊரிலிருந்து வருகிறது?
  • வண்டியில் என்ன எடுத்துச் செல்கின்றார்?
  • வண்டியில் எத்தனை மூட்டைகள் உள்ளன?
  • வண்டியில் உள்ள மூட்டைகளில் என்ன இருக்கிறது?
  • வண்டி எங்கிருந்து எங்கு செல்கின்றது?
  • வண்டியில் யார்யார் பயணம் செய்கிறார்கள்?
  • வண்டி எப்போது திரும்பி வரும்?
  • வண்டி விரைந்து செல்வதற்கான காரணம் யாது?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
அழகாபுரி மன்னர் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தினார்?
Answer:
அழகாபுரி மன்னர், அமைச்சர், விறகு வெட்டி என்ற வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தினார்.

Question 2.
விறகுவெட்டி, மன்னரிடம் தம் மனக்குறையாக என்ன கூறினார்?
Answer:
‘மன்னர், விறகு வெட்டியான தனக்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும் அமைச்சருக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும் கொடுப்பதாகவும் அதுவே தம் மனக்குறை என்று விறகு வெட்டி மன்னரிடம் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Question 3.
மன்னர் அமைச்சரிடமும் விறகுவெட்டியிடமும் என்ன வேலை அளித்தார்?
Answer:
“அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா?” என்று பார்த்து வரும்படி மன்னர் அமைச்சரிடமும் விறகு வெட்டியிடமும் கூறினார். அதற்கு அமைச்சர் ஒருமுறையே வெளியே சென்று வந்து பல பதில்களைக் கூறினார். ஆனால் விறகு வெட்டியோ ஒவ்வொரு முறையும் சென்று வந்து மன்னரிடம் பதில் அளித்தான்.

படத்தைப் பார்ப்போம் வினாக்கள் உருவாக்குவோம்

எ.கா. படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன?
1. ………………………………………………………………………………………………………………..
2. ………………………………………………………………………………………………………………..
3. ………………………………………………………………………………………………………………..
4. ………………………………………………………………………………………………………………..
5. ………………………………………………………………………………………………………………..
6. ………………………………………………………………………………………………………………..
Answer:

  1. யானை என்ன செய்கிறது?
  2. வரிக்குதிரை ஏன் சோகமாக உள்ளது?
  3. சீறி பாயும் விலங்கு எது?
  4. புலி சண்டை போடுகிறதா?
  5. நடனமாடும் விலங்கு எது?
  6. படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

மொழியோடு விளையாடு

சொல் உருவாக்கப் புதிர்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 2

சொல் எழுதுக சொற்றொடர் அமைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி விடுகதைக்கு விடையைக் கண்டுபிடிக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 6

செயல் திட்டம்

பல்வேறு தொழில் செய்பவர்களின் படங்களை ஒட்டித் தொகுப்பு ஏடு தயாரித்து வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
இரத்தினபுரி மன்னர் ஆலோசனையின் போது அமைச்சர்களிடம் என்ன வினவினார்?
Answer:
“நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை ” என்று அமைச்சர்களிடம் வினவினார்.

Question 2.
இரத்தினபுரி மன்னருக்கு அமைச்சர் கூறிய பதில் என்ன?
Answer:
“நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். அழகாபுரி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்க வேண்டும். அவர் தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றார் என்று அறிந்து கொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா” என்று அமைச்சர் மன்னரிடம் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Question 3.
விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்த பிறகு மன்னரிடம் என்ன கூறினான்?
Answer:
“மன்னா, என் மனக்குறை நீங்கிவிட்டது. உங்களைப் பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். அமைச்சரின் அறிவுக் கூர்மையையும் அவருடைய திறமையையும் கண்டுவியக்கிறேன். அவருடன் ஒப்பிடும்போது என் அறியாமையையும் நான் உணர்ந்து கொண்டேன். நான், நான்தான். அமைச்சர், அமைச்சர்தாம். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான் அந்த விறகுவெட்டி.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

வாங்க பேசலாம்

Question 1.
நீங்கள் மனுநீதிச் சோழனாக இருந்தால், பசுவின் துயரத்தை எப்படிப் போக்குவீர்கள்?
Answer:
நான் மனுநீதிச் சோழனாக இருந்தால் கன்றை இழந்த பசுவை அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பேன். அப்பசு, கன்றை இழந்த கவலையின்றி இருக்க நிறைய பசுக்களையும் கன்றுகளையும் சேர்த்து வளர்ப்பேன்.

சிந்திக்கலாமா?

வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்?
Answer:
அவர்கள் செய்தது சரியன்று.
சிறுவர்களிடம் “நீங்கள் செய்யும் செயல் தவறானது. நாம் உயிர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்,” என்று கூறி அச்சிறுவர்கள் ஓணானைத் துன்புறுத்துவதைத் தடுப்பேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
இன்னல் – இச்சொல்லிற்குரிய பொருள் ……………….
அ) மகிழ்ச்சி
ஆ) நேர்மை
இ) துன்பம்
ஈ) இரக்கம்
Answer:
இ) துன்பம்

Question 2.
அரசவை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) அரச + அவை
ஆ) அர + அவை
இ) அரசு + அவை
ஈ) அரச + வை
Answer:
இ) அரசு + அவை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

Question 3.
மண்ணுயிர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) மண் + ணுயிர்
ஆ) மண் + உயிர்
இ) மண்ண + உயிர்
ஈ) மண்ணு + உயிர்
Answer:
ஆ) மண் + உயிர்

வினாவிற்கு விடையளிக்க

Question 1.
மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணியை அமைத்ததற்கான காரணம் என்ன?
Answer:
மனுநீதிச் சோழன் தனது ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தான். அதனால் ஆராய்ச்சி மணியை அமைத்தான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

Question 2.
பசு ஆராய்ச்சி மணியை அடித்தது ஏன்?
Answer:
அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும் போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்துவிட்டது. அதனால் துயருற்ற பசு ஆராய்ச்சி மணியை அடித்தது.

Question 3.
பசுவின் துயரை மன்னன் எவ்வாறு போக்கினான்?
Answer:
பசுவின் துயரைப் போக்க எண்ணிய மன்னன், தன் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைப் போக்கினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

1. ஆற்றொணா – தாங்க முடியாத
2. வியனுலகம் – பரந்த உலகம்
3. செவி சாய்த்தல் – கேட்க விரும்புதல்
4. கொடியோன் – துன்புறுத்துபவன்
5. பரம்பரை – தொன்றுதொட்டு

சொல்லக் கேட்டு எழுதுக

1. அரங்கம்
2. ஆராய்ச்சிமணி
3. மனக்குறை
4. நிலவுலகம்
5. வாழ்நாள்

சொல் உருவாக்குக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

கலையும், கைவண்ண மும்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி 3

அறிந்து கொள்வோம்

மாநகரம், மாமலை, மாமதுரை, மாமுனி, மாதவம் என்று ஒன்றை சிறப்பித்து கூறுவதற்கு மா என்ற சொல் வழக்கத்தில் உள்ளது.

செயல் திட்டம்

நீ வாழும் சூழலில் காணும் பறவைகள் விலங்குகள் பற்றிய செய்திகளைத் திரட்டிப் படத்தொகுப்பு ஒன்றை உருவாக்குக:
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மனுநீதிச் சோழன் பற்றி எழுதுக.
Answer:

  • மனுநீதிச் சோழன் சோழ மன்னர்களுள் ஒருவன்.
  • முறைமை தவறாது ஆட்சி புரிவதையே தன் நோக்கமாகக் கொண்டவன்.
  • அவனுடைய ஆட்சிக் காலத்தில் வாயில்லாப் பசுவுக்கு ஏற்பட்ட பேரிழப்பைத் தன் மகனைக் கொன்று சரிசெய்தவன். நீதியையே தன் பெயரில் வைத்துள்ளவன்.

Question 2.
மனுநீதிச் சோழன் ஆராய்ச்சிமணியைப் பற்றிக் கூறியது யாது?
Answer:
ஆராய்ச்சிமணியின் நோக்கம் உடனுக்குடன் நீதி வழங்குவது என்றும், குடிமக்கள் எப்போது ஆராய்ச்சி மணியை ஒலித்தாலும் அவர்கள் முன் தானே ஓடோடிச் சென்று, அவர்களின் மனக்குறையை உடனடியாகத் தீர்த்து வைப்பேன் என்றும் மனுநீதிச் சோழன் கூறினான்.

Question 3.
பசுவின் கன்று எவ்வாறு இறந்தது?
Answer:
அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று, எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 17 பசுவுக்குக் கிடைத்த நீதி

Question 4.
கன்றினை இழந்த பசுவின் எண்ணத்தை மன்னர் எவ்வாறு வெளிப்படுத்தினார்?
Answer:
“நீயும் ஒரு மன்னனா? உனக்கு மகன் எப்படியோ அப்படியே எனக்கு என் கன்று அல்லவா? அந்தச் சின்னஞ்சிறு கன்று என்ன பாவம் செய்தது? அதன் உயிரைப் போக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? கன்றை இழந்து தவிக்கும் எனக்கு யார் ஆறுதல் தருவார்? இனி என் வாழ்நாளெல்லாம் வீண்தானோ என்று கேட்பது போல் இருக்கிறது” என்று பசுவின் எண்ணத்தை மன்னர் வெளிப்படுத்தினார்.

 

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 16 திருக்குறள் கதைகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 16 திருக்குறள் கதைகள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

வாங்க பேசலாம்

Question 1.
நாவைக் காக்காவிட்டால் ஏற்படும் துன்பம் குறித்து பேசுக.
Answer:
பேச்சைக் குறைத்து, கேட்பதை அதிகரிக்க வேண்டும். தெரிந்ததைப் பேசு. தெளிவாகப் பேசாமல் இருந்தால் நல்லது’ என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. நுணல் என்றால் தவளை என்பது பொருள். பேச்சுத் தன்மை, பகுத்தறிவு இவை இரண்டும் இல்லாத ஜீவராசி தவளை. அது தன்னுடைய சப்தத்தினால், தன் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

தீயினால் சுட்ட புண் உடம்பில் தழும்பு இருந்தாலும், உள்ளத்தில் ஆறி விடும். நாவினால் தீயச் சொல் கூறிச் சுடும் புண், என்றுமே ஆறாது. சொல்லினால் ஆக்கமும், அழிவும் ஏற்படும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். நாவை அடக்காமல், சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும்.

இப்படி – நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும்கூட உருவாக்கலாம். விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு.

மனித சமூகம் நாவைக் காத்தல் வேண்டும். அதனைக் காக்காவிட்டால், குற்றமான சொற்களைச் சொல்லி துன்பம் அடைவர். கதையில் ஒன்றைத் தெரிவு செய்து நண்பர்களுடன் இணைந்து நாடகமாக நடித்துக் காட்டுக. மாணவர்களே தாங்களாகவே செய்ய வேண்டும்.

சிந்திக்கலாமா?

அனுவும், பானுவும் சாலையைக் கடக்க, நின்று கொண்டு இருந்தனர். அப்போது மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அனு சாலையைக் கடக்கத் தொடங்கினாள். பானு, பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே கடக்க வேண்டும். பொறுமையாக இரு என்றாள். எது சரியான செயல்?
Answer:
பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். பச்சை விளக்கு ஒளிரும்போது சாலையில் பிற திசைகளிலிருந்து வண்டிகள் வராது. ஆகையால் பானு கூறியதே சரியானது. சாலைவிதிகளைப் பின்பற்றுவதே சிறந்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘பொறை’ என்பதன் பொருள் ………………………
அ) முழுமை
ஆ) வளமை
இ) பொறுமை
ஈ) பெருமை
Answer:
இ) பொறுமை

Question 2.
நிறையுடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நிறை + யுடைமை
ஆ) நிறை + உடைமை
இ) நிறைய + உடைமை
ஈ) நிறையும் + உடைமை
Answer:
ஆ) நிறை + உடைமை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

Question 3.
‘மெய் + பொருள்’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………….
அ) மெய்பொருள்
ஆ) மெய்யானபொருள்
இ) மெய்ப்பொருள்
ஈ) மெய்யாய்ப்பொருள்
Answer:
இ) மெய்ப்பொருள்

Question 4.
வெகுளாமை – இச்சொல்லின் பொருள்…………………..
அ) அன்பு இல்லாமை
ஆ) பொறாமை கொள்ளாமை
இ) சினம் கொள்ளாமை
ஈ) பொறுமை இல்லாமை
Answer:
இ) சினம் கொள்ளாமை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

Question 5.
போற்றி ஒழுகப்படும் பண்பு…………………………..
அ) சினம்
ஆ) பொறையுடைமை
இ) அடக்கமில்லாமை
ஈ) அறிவில்லாமை
Answer:
ஆ) பொறையுடைமை

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
பொறையுடைமை எப்போது போற்றப்படும்?
Answer:
நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். அப்போது பொறையுடைமை போற்றப்படும்.

Question 2.
மெய்ப்பொருள் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறக் காரணம் என்ன?
Answer:
எப்பொருளையார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே, எடுத்துக் கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறுகிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

Question 3.
நாவைக் காக்காவிடில் ஏற்படும் துன்பம் என்ன?
Answer:
நாவைக் காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Question 4.
சினம் எப்போது ஒருவரை அழிக்கும்?
Answer:
ஒருவன் தன்னைத்தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு காத்துக் கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.

Question 5.
நீங்கள் படித்த திருக்குறள் கதைகளுள் உங்களுக்குப் பிடித்த கதை எது? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த கதை ‘பொறுமையும் பொறுப்பும்’.
இக்கதை மூலம் பொறுமையின் சிறப்பை உணர முடிகிறது. எடிசன் தன் பணியாளரிடம் பொறுமையாக செயல்பட்டு, பணியாளருக்குப் பொறுப்பாக இருப்பதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார். அதனால் இக்கதை எனக்குப் பிடிக்கும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

பொருத்துக

1. பொறை – சொல் குற்றம்
2. மெய்ப்பொருள் – துன்பப்படுவர்
3. காவாக்கால் – பொறுமை
4. சோகாப்பர் – காக்காவிட்டால்
5. சொல்லிழுக்கு – உண்மைப்பொருள்
Answer:
1. பொறை – பொறுமை
2. மெய்ப்பொருள் – உண்மைப்பொருள்
3. காவாக்கால் – காக்காவிட்டால்
4. சோகாப்பர் – துன்பப்படுவர்
5. சொல்லிழுக்கு – சொல்குற்றம்

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடரை நிரப்புக

1. ஆய்வகம் ……………………. இருந்தது. (மேல் தளத்தில்/ மேல் தலத்தில்)
Answer:
மேல் தளத்தில்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

2. வழியில் …………………… ஒன்று வந்தது. (குருக்குப்பாதை/ குறுக்குப்பாதை)
Answer:
குறுக்குப்பாதை

3. உனக்குக் காரணம் ……………. (புறியவில்லையா/ புரியவில்லையா)
Answer:
புரியவில்லையா

4. எடிசன் மின் …………….. உருவாக்கினார். (விளக்கு/ விலக்கு)
Answer:
விளக்கு

5. குற்றம் ……………. யாரிடம் இல்லை (குரை/ குறை)
Answer:
குறை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

சொல்லக் கேட்டு எழுதுக

1. மெய்ப்பொருள்
2. பொறையுடைமை
3. சோகாப்பர்
4. நிறையுடைமை

மொழியோடு விளையாடு

பொருத்தமான வினாச் சொல்லை எடுத்து வினாத் தொடரை முழுமையாக்குக.

1. உன்னுடைய ஊரின் பெயர் என்ன?
2. உனக்குப் பிடித்த வண்ணம் எது?
3. நீ பள்ளிக்கு எப்படி வருகிறாய்?
4. உன்னுடைய நண்பன் யார்?
5. கோடை விடுமுறைக்கு எங்கு சென்றாய்?
6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் யாது?
7. குறில் எழுத்துகள் யாவை?
8. சாருமதி யாருடைய வீட்டிற்குச் சென்றாள்?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள் 1
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

நமக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்போமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள் 2
1. அன்பு
2. அடக்கம்
3. ஒழுக்கம்
4. ஈகை
5. வாய்மை
6. செய்ந்நன்றி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

கலையும், கைவண்ண மும்

சூரியகாந்திக்கு வண்ணமிடுவோமா?

இதழ்களுக்கு மஞ்சள் தூள், விதைகளுக்கு உலர்ந்த தேயிலைத்தூள்,., பயன்படுத்தி அழகாக்குக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள் 4

அறிந்து கொள்வோம்

1. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
2. திருக்குறள் அகர எழுத்தில் தொடங்கி னகர எழுத்தில் முடிகிறது.
3. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

செயல் திட்டம்

நீங்கள் நன்கு அறிந்த திருக்குறளுக்கு உம் சொந்த நடையில் கதை எழுதி வருக.
Answer:

கல்வியே நமது செல்வம்

ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். சொந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கடினமாக உழைத்துச் செல்வந்தராக உயர்ந்தார். அவருக்குப் புகழினி, மதியழகன் என்ற இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவருக்கும் கல்விக்கு முதன்மை அளிக்காமல், தொழிலில் ஈடுபடுத்த எண்ணினார்.

ஆனால், தந்தையின் ஆலோசனையையும் மீறி கல்லூரி வரை இருவரும் படித்து முடித்தனர். முத்தனுக்குக் கல்வியின் மேல் பெரிய ஈடுபாடோ, விருப்பமோ கிடையாது. ஆகவே, சரியாகக் கல்வி கற்காத முத்தனை அவரது வியாபாரக் கூட்டாளிகள் ஏமாற்றி விட்டனர்.

இதனால் வீடு, வயல், ஆடு, மாடுகள் எனச் செல்வத்தை இழந்து ஒருவேளை உணவுக்கே துன்பப்படும் நிலைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் ஆளாகினர்.

முத்தனின் பிள்ளைகள் இருவரும் இனியும் தாமதிக்கக் கூடாது என எண்ணிப் பல நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தனர். உரிய கல்வித்தகுதி பெற்றிருந்ததால், இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது.

சில நாள்களிலேயே குடும்பத்தின் வறுமை நீங்கியது. முத்தன் கல்வியின் சிறப்பினை உணர்ந்து தமது கருத்தினை மாற்றிக்கொண்டார்.

குறள் : கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

விளக்கம் :
ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது அவர் கற்ற கல்வியே ஆகும். அதனைத் தவிர வேறு எந்த செல்வமும் நீடித்து இருக்காது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

வாங்க பேசலாம்

Question 1.
கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
மன்னர் ஒருவர் தம் நாட்டு மக்களின் நிலையை அறிய குதிரையில் பயணம் செய்தார். குதிரையும் மன்னரைப் போன்று இரக்கக் குணம் கொண்டது. அக்குதிரை சாலையை நோட்டமிட்டுக் கொண்டே சென்றது.

அப்போது காலில் அடிபட்ட நாய் ஒன்று நடக்க முடியாமல் நொண்டி நொண்டி வருவதைப் பார்த்தது. மன்னரின் அனுமதி பெற்று அந்த நாயை மன்னருக்கு முன் அமரச் செய்தது. மன்னர் முன்னே அமர்ந்து குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்த அந்த நாயானது மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

குதிரையின் மீது அமர்ந்து வரும் மன்னரைப் பார்த்து மக்கள் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். நாய், குதிரையையும் மன்னரையும் வணங்காமல் மக்கள் தன்னை வணங்குவதாக எண்ணி மகிழ்ச்சியில் தன்னை மறந்தது. தன் தலையைத் தூக்கியபடி ‘லொள் லொள்’ என்று குரைத்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

நாயின் இச்செயலைக் கண்ட குதிரை “நாயே, அமைதியாக இருந்து கொள்! நீE குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை. நாய், “மக்கள் என்னை வணங்குவது உனக்குப் பொறாமையாக உள்ளது. அதனால்தான் என்னை மட்டம் தட்டுகிறாய்” என்றது.

குதிரை, நாயிடம் “அவர்கள் மன்னருக்குத்தான் மரியாதை கொடுக்கின்றனர். உனக்கு இல்லை” என்று கூறியது. ஆனால் நாய் அதனை ஏற்கவில்லை. குதிரையின் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாமல் மேலும் சத்தமாகக் குரைத்தது.
மன்னரின் அருகில் வந்து கொண்டிருந்த காவலர்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினர். அங்கிருந்து சென்ற நாய் சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது. தான் இல்லாத போதும் மக்கள் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். இக்காட்சியைப் பார்த்தபோது நாய்க்கு உண்மை புரிந்தது. தன் தவற்றினை உணர்ந்தது. ஆராயாமல் முடிவு எடுத்ததை எண்ணி வருந்தியது.

Question 2.
ஆராய்ந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைக் கூறுக.
Answer:
நாம் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். அவையே நன்மைகளைத் தரும்.

  • நம்மால் ஆராய்ந்து செயல்படும்போது, பிழைகளைத் தவிர்க்க முடியும்.
  • நம்மால் துன்பத்திலிருந்து விடுபட இயலும்.
  • நாம் எல்லோராலும் பாராட்டப்படுவோம்.
  • பிறரைச் சார்ந்து இல்லாமல் தனித்துவமாக நம்மால் இயங்க முடியும்.
  • நல்லது கெட்டதைப் பகுத்தறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.
  • நாம் தலைமைத் தாங்கிச் செயலாற்ற முடியும்.
  • மன்னரைப் போன்று நமக்கு மரியாதை கிடைக்கும்.

சிந்திக்கலாமா?

நீ செய்யாத செயலுக்கு உனக்கு ஒருவர் நன்றி கூறினால் அல்லது பரிசு அளித்தால் அவ்வேளையில் நீ என்ன செய்வாய்?
Answer:
ஒருவர் எனக்கு நன்றி கூறியதற்கு எதிர் நன்றி கூறிவிட்டு நான் அச்செயலைச் செய்யவில்லை என்று அவரிடம் உண்மையைக் கூறுவேன். அவர் ஏதேனும் பரிசு அளித்தால் ‘பரவாயில்லை வேண்டாம்’ என்று சொல்லி விடுவேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
குதிரை ஏன் நாய்க்கு உதவி செய்ய நினைத்தது?
Answer:
காலில் அடிபட்டதால் நாய் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தது. அதனால் குதிரை நாய்க்கு உதவி செய்தது.

Question 2.
காவலர்கள், குதிரைமீது இருந்த நாயை ஏன் கீழே இறக்கிவிட்டனர்?
Answer:
நாய், குதிரையின் மேலே அமர்ந்துகொண்டு குதிரையிடம் விவாதம் செய்து கொண்டு சத்தமாகக் குரைத்தது. ஆதலால் காவலர்கள் நாயைக் கீழே இறக்கிவிட்டனர்.

சொல்லக் கேட்டு எழுதுக

குதிரை, இரக்கம், நிலைமை, பேராசை, குடிமக்கள்

நிறுத்தக் குறியிடுக

“அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.

ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக.

(எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது.

1. தத்தித் தத்தி = குழந்தை தத்தித் தத்தி நடந்தது.
2. எழுதி எழுதி = கந்தன் எழுதி எழுதி பார்த்தான்.
3. திரும்பித் திரும்பி = குழந்தை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றது.
4. குனிந்து குனிந்து = குனிந்து குனிந்து புத்தகத்தை எடுத்து அடுக்கியதால் முதுகு மிகவும் வலிக்கிறது என்றான் கந்தன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

குறிப்பைப் படி! விடையைக் கொடு!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 01

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

  1. போலி – ஒன்றைப்போல இருத்தல்
  2. பொறாமை – காழ்ப்பு
  3. சவாரி – பயணம்
  4. வருந்தியது – துன்படைந்தது
  5. மரியாதை – நேர்மையான ஒழுக்கம்

சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக

  1. மண்னர் – மன்னர்
  2. குதிறைச் சவாரி – குதிரைச் சவாரி
  3. உர்சாகம் – உற்சாகம்
  4. சிறந்தவண் – சிறந்தவன்
  5. மக்கலெள்ளாம் – மக்களெல்லாம்
  6. கனைப்பொளி – கனைப்பொலி
  7. இறக்கக் குணம் – இரக்கக் குணம்
  8. கிராமங்கல் – கிராமங்கள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

கலையும் கைவண்ணமும்

பயன்படுத்திய காகிதத்தில், உறை தயாரிக்கலாமா?
Answer:
தேவையான பொருள்கள்
பயன்படுத்திய தாள்கள், பசை
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 1

விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 2

Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 001

1. குதிரை கனைக்கும்
2. சிங்கம் முழங்கும்
3. நாய் குரைக்கும்
4. புலி உறுமும்
5. யானை பிளிறும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

அறிந்து கொள்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 3

செயல் திட்டம்

பிறர் பாராட்டுவதற்குரிய நல்ல செயல்கள் எவையெவை என உன் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதி வருக.
Answer:

  1. விடியற்காலையில் துயிலெழுதல்.
  2. தினமும் இறைவனை வழிபடுதல்
  3. பள்ளிக்கு நேரத்திற்குச் செல்லுதல்.
  4. வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல்.
  5. தலைமுடியைச் சீராக வெட்டுதல்.
  6. பிறருக்கு உதவி செய்தல்.
  7. அன்புடன் திகழுதல்.
  8. பெரியோரை மதித்தல்
  9. இனிமையாகப் பேசுதல்
  10. பணிவுடன் இருத்தல்.
  11. ஒழுக்கத்தைக் கடைபிடித்தல்.
  12. வாய்மையைப் போற்றுதல்.
  13. அடக்கமாக இருத்தல்.

முக்காலம் அறிவோமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 6
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் போல எழுதுக.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

அட்டவணையில் விடுபட்ட இடங்களை நிரப்புக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 10

படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 11
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 12

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மன்னர் எதற்காகக் குதிரையில் பயணம் மேற்கொண்டார்?
Answer:
கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டியும், மன்னர் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டார்.

Question 2.
குதிரை அரசரிடம் என்ன கேட்டது?
Answer:
ஒரு நாய் நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று நடந்து கொண்டிருந்தது. நாயை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது செல்ல வேண்டிய இடத்தில் விட்டுவிடலாமா என்று குதிரை அனுமதி கேட்டது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

Question 3.
குதிரையின் இரக்கக் குணத்தைப் பார்த்து மன்னர் என்ன கூறினார்?
Answer:
“குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது” என்று மன்னர் குதிரையிடம் கூறினார்.

Question 4.
நாயின் செயலைக் கண்டு குதிரை என்ன கூறியது?
Answer:
“நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

Question 5.
நாய் தன் தவறினை எப்போது உணர்ந்தது?
Answer:
“நாய்! குரைத்துக் கொண்டே வந்ததால் காவலர்கள் அதனை இறக்கிவிட்டனர். சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு நாய் திரும்பிப் பார்த்தது; தான் இல்லாதபோதும் குடிமக்கள் எல்லாரும் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்தார். இக்காட்சியைப் பார்த்த நாய்க்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. தன்னுடைய தவற்றினை நினைத்து வருந்தியது.