Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 6.2 விதைத் திருவிழா Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 6.2 விதைத் திருவிழா

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
அனுமதி – இச்சொல் குறிக்கும் பொருள் ..adscanadian………
அ) கட்டளை
ஆ) இசைவு
இ) வழிவிடு
ஈ) உரிமை
Answer:
ஆ) இசைவு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 2.
விளம்பரத்தாள்கள் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) விளம்பர + தாள்கள்
ஆ) விளம்பரத்து + தாள்கள்
இ) விளம்பரம் + தாள்கள்
ஈ) விளம்பு + தாள்கள்
Answer:
இ) விளம்பரம் + தாள்கள்

Question 3.
ஆலோசித்தல் – இச்சொல்லுக்குரிய பொருள் ………………………
அ) பேசுதல்
ஆ) படித்தல்
இ) எழுதுதல்
ஈ) சிந்தித்தல்
Answer:
ஈ) சிந்தித்தல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 4.
தோட்டம் + கலை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………..
அ) தோட்டம்கலை
ஆ) தோட்டக்கலை
இ) தோட்டங்கலை
ஈ) தோட்டகலை
Answer:
ஆ) தோட்டக்கலை

Question 5.
பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் …………………….
அ) பழைய காலம்
ஆ) பிற்காலம்
இ) புதிய காலம்
ஈ) இடைக்காலம்
Answer:
இ) புதிய காலம்

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
அ) வழிபாடு + கூட்டம் = ……………………..
ஆ) வீடு + தோட்டம் = ……………………..
Answer:
அ) வழிபாடு + கூட்டம் – வழிபாட்டுக்கூட்டம்
ஆ) வீடு + தோட்டம் – வீட்டுத்தோட்டம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) அழைப்பிதழ்- …………. + ……………..
ஆ) விதைத்திருவிழா- …………. + ……………..
Answer:
அ) அழைப்பிதழ் – அழைப்பு + இதழ்
ஆ) விதைத்திருவிழா – விதை + திருவிழா

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

ஈ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை………..
Answer:
27

Question 2.
விதைகள் …………… ஆனவையாக இருத்தல் வேண்டும்.
Answer:
தரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 3.
கொண்டைக்கடலை என்பது ……………….. ஒன்று.
Answer:
நவதானியங்களுள்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர் கூறினார்?
Answer:
மாணவர்களை அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்வதாக தலைமையாசிரியர் கூறினார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 2.
ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் என்ன செய்தி இருந்தது?
Answer:
ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் இருந்த செய்தி விதைத்திருவிழா தொடர்பான செய்தி’ ஆகும்.

Question 3.
‘பாதிப்பு’ என்று எழுதப்பட்ட அரங்கத்தில் என்ன செய்தி சொல்லப்பட்டது?
Answer:
இரசாயன விதைகள், இரசாயனப் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைத்தாம் ‘பாதிப்பு’ என்று சொல்கிறார்கள். இதனால், மண்ணின் தன்மை கெடுகிறது. இதனைக் தடுக்கும் வகையில் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 4.
நவதானியங்களுள் ஐந்தின் பெயரை எழுதுக.
Answer:

  • கொண்டைக்கடலை
  • தட்டைப்பயறு
  • மொச்சை
  • பாசிப்பயறு
  • கோதுமை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

ஊ. சிந்தனை வினாக்கள்.

செயற்கை உரங்கள், மண்ணின் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம்?
Answer:
செயற்கை உரங்கள், மண்ணன் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் செய்ய வேண்டுவன:

  1. இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  2. மண்புழு வளர்த்தல்.
  3. கால்நடைகள் வளர்த்து அவற்றின் சாணங்களை எருவாக்குதல்.
  4. அவுரிச் செடிகளை வளர்த்து வயலுக்கு எருவாக்குதல்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

கற்பவை கற்றபின்

Question 1.
இயற்கை வேளாண்மையின் சிறப்புகளைப் பற்றி, வழிபாட்டுக்கூட்டத்தில் பேசுக.
Answer:
வணக்கம். வேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும். இம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.

பயனீட்டாளர்களுக்கும் உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது. விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் லாபத்தையும் பெறுகின்றனர். முக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையைத் தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம்.

Question 2.
இயற்கை உணவுப் பொருள்களின் படங்களைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 3.
‘இயற்கை உரம் பயன்படுத்துவோம், இனிமையாய் வாழ்வோம்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை :
வளர்ந்துவரும் நவீனயுகத்தில் நாம் அனைவரும் இயற்கையை மறந்து செயற்கையைப் போற்றியதால் பல தீமைகளை எதிர்கொள்கிறோம். இந்நிலையை மாற்றுவதே இயற்கை வேளாண்மை. அதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மாசடைந்த நிலங்கள் :
நல்ல விளைச்சல், பார்ப்பதற்குப் பெரிய பெரிய காய்கறிகள், கனிகள், குறுகிய காலத்தில் நிறைய இலாபம் இதனை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தினோம். அதனால் வளம் இழந்தது மண் மட்டுமா? நாமும்தான். நீர்வளம், நிலவளம் குறைந்தது போல நமக்கும் புதிய புதிய நோய்கள் வந்து வலுவிழந்துவிட்டோம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

இயற்கை உரங்கள் :
மண்புழுக்களை உற்பத்தி செய்து உரமாகப் பயன்படுத்துதல், கால்நடைகளின் சாணங்களை எருவாக்குதல், பண்ணையில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளின் கழிவுகளை உரமாக்குதல், ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பிண்ணாக்குகளை உரமாக்குதல். இவையனைத்தும் இயற்கை உரங்கள். இவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவோம்.

நன்மைகள் :
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் விளைநிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கைபெருகுகிறது. பயிர்கள் நோய் எதிர்ப்புத்திறனைப் பெறுகின்றன. பயிர்கள் சத்துகளை எளிதாக எடுத்துக் கொள்கின்றன. பயிர்கள் சீராக விளைகின்றன. தரமான விளைச்சல் கிடைக்கின்றது. மிகவும் இன்றியமையாத நன்மை எதுவெனில் சுற்றுப்புறச் சூழல் தூய்மை ஆகிறது. உழவர்கள் உரங்களைத் தாங்களே தயாரிப்பதால் செலவும் குறைகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

முடிவுரை :
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் நல்ல சத்தான உணவுகள் கிடைக்கின்றன. அதனை உண்பதனால் நாம் நோயின்றி வாழலாம். ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

Question 4.
உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள இயற்கை விதைப் பண்ணைகளுக்குச் சென்று, செய்தி திரட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 5.
உங்கள் பள்ளியில் நடைபெறும் ஏதேனும் ஒரு விழாவுக்கு மாதிரி அழைப்பிதழ்/துண்டு விளம்பரம் உருவாக்கி மகிழ்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா - 1

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.3 காவியம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.3 காவியம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.3 காவியம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.3 காவியம்

குறுவினா

Question 1.
காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?
Answer:
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் யாழ்வை எழுதிச் சென்றது.

சிறுவினாக்கள் – கூடுதல் வினாக்கள்

Question 1.
இறகு எழுதியது காவியமானதைப் பிரமிள் பார்வையில் விளக்குக.
Answer:

  • நிலத்துக்கும் வானுக்கும் இடையில், காற்றுட இடைவிடாது தழுவி, மண்ணில் விழாமல் காக்கிறது. அதனால், அந்த இறகு, பறவையின் வாழ்வை எழுதுவதுபோல் உள்ளது.
  • காவியங்களுள் பொதுவான பால் பொருள் வாழ்வுதானே! அதனால், பிரமிள் பார்வையில் சிறகின் இடையறாத இருப்பு நிரந்தர வாழ்வாகிறது.

Question 2.
பிரமிள் குறித்து நீ அறிவன வை?
Answer:
இலங்கையில் பிறந்த சிவராமலிங்கம், ‘பிரமிள் ‘ என்னும் பெயரில் எழுதினார். பானுசந்திரன், அரூப்சிவராம், தரமுசவராம் எனப் பல புனைபெயர்களில் எழுதிவந்தார்.

புதுக்கவிதை, விமாசனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளங்களில் இயங்கினார். ஓவியம், சிறடம் ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டினார்.

இவர் விதைகள் அனைத்தும், ‘பிரமிள் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுத்து வெளியிடப் பட்டேளது. ‘லங்காபுரி ராஜா’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும், ‘நக்ஷத்திரவாசி’ என்னும் நாடகமும், ‘வெயிலும் நிழலும்’ உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

பலவுள் தெரிக (கூடுதல்)

Question 1.
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது………………..
அ) சிறகு
1. அ சரி
ஆ) இறகு
2. ஆ சரி
இ) காற்று
3. இ சரி
ஈ) ஒரு பறவை
4. ஈ தவறு
Answer:
2. ஆ சரி

Question 2.
‘பிரமிள்’ என்னும் பெயரில் எழுதியவர்………………
அ) இராசேந்திரன்
ஆ) அரவிந்தன்
இ) சிவராமலிங்கம்
ஈ) விருத்தாசலம்
Answer:
இ) சிவராமலிங்கம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Students can Download 9th Tamil Chapter 9.2 அக்கறை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.2 அக்கறை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 1.
நிலா, மழை, காற்று, தண்ணீர் போன்றவை குறித்து புதுக்கவிதைகளைத் திரட்டி இலக்கிய மன்றத்தில் படித்துக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 1
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
அ) ஒரு சிறு இசை
ஆ) முன்பின்
இ) அந்நியமற்ற நதி
ஈ) உயரப் பறத்தல்
Answer:
அ) ஒரு சிறு இசை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

சிறுவினா

Question 1.
“பழங்களை விடவும் நசுங்கிப் போனது” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம்:
இக்கூற்று (இவ் அடி) கல்யாண்ஜி எழுதியுள்ள “அக்கறை” என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்:
மிதிவண்டி ஓட்டி வந்த தக்காளி வியாபாரி மிதிவண்டியில் இருந்து சாய்ந்து விழ. கூடையில் இருந்த தக்காளிப் பழங்கள் சிதறி விழுந்தன. தலைக்கு மேல் வேலை இருப்பதாய், அனைவரும் கடந்தும், நடந்தும் சென்றனர். எல்லாம் நசுங்கி வீணானது. பழங்களை விடவும் சக மனிதர்கள் மீது உள்ள நேயமும், அக்கறையும் நசுங்கிப் போனது.

Question 2.
மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோர் எந்த நாட்டு தத்துவஞானிகள்?
அ) எகிப்து
ஆ) கிரேக்கம்
இ) இத்தாலி
ஈ) இஸ்ரேல்
Answer:
ஆ) கிரேக்கம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 2.
கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் யாது?
அ) கல்யாணராமன்
ஆ) கல்யாணசுந்தரம்
இ) கலியுகராமன்
ஈ) கலியபெருமாள்
Answer:
ஆ) கல்யாணசுந்தரம்

Question 3.
கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?
அ) வாணிதாசன்
ஆ) வண்ண தாசன்
இ) தமிழ்தாசன்
ஈ) பிச்சை
Answer:
ஆ) வண்ண தாசன்

Question 4.
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
அ) 2014
ஆ) 2015
இ) 2016
ஈ) 2017
Answer:
இ) 2016

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 5.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?
அ) புலரி
ஆ) ஆதி
இ) உயரப்பறத்தல்
ஈ) ஒரு சிறு இசை
Answer:
ஈ) ஒரு சிறு இசை

Question 6.
பொருத்திக்காட்டுக:
அ) ஒளியிலே – கடிதத்தொகுப்பு
ஆ) சில சிறகுகள் சில பறவைகள் – கட்டுரைத் தொகுப்ப
இ) அந்நியமற்ற நதி – சிறுகதைத் தொகுப்பு
ஈ) அகமும் புறமும் – கவிதைத் தொகுப்பு
அ) 3, 1, 4, 2
ஆ) 1, 2, 4, 3
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2

குறுவினா

Question 1.
வண்ணதாசன் என்னும் புனை பெயரில் எழுதுபவர் யார்? அப்பெயரில் எவ்விலக்கியத்தில் பங்களித்து வருகிறார்?
Answer:

  • கல்யாண்ஜி
  • கதை இலக்கியத்தில் ‘வண்ணதாசன்’ என்னும் பெயரில் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

சிறுவினா

Question 1.
கல்யாண்ஜியின் கவிதை நூல்களை எழுதுக.
Answer:

  • புலரி
  • முன்பின்
  • ஆதி ஆகியவையாகும்.
  • மணல் உள்ள ஆறு
  • அந்நியமற்ற நதி

Question 2.
கல்யாண்ஜியின் சிறுகதை நூல்களை எழுதுக.
Answer:

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்.
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்.
  • உயரப் பறத்தல்.
  • ஒளியிலே தெரிவது போன்றவையாகும்.

TN Samacheer Kalvi 10th Books New Syllabus 2020 to 2021 Tamil Nadu Pdf Free Download

Tamilnadu Textbook Corporation is formed by the state government and It developed to ensure the quality of Old and New Syllabus 2020-2021-2022 SCERT Tamilnadu TN Samacheer Kalvi 10th Books for SSlC Class 10th Std Students of Tamil Medium and English Medium. Students can get the Tamilnadu Samacheer Kalvi 10th Text Book Solutions for Tamil and English medium schools according to the latest Tamil Nadu State Board New Syllabus 2020 2021-22.

Samacheer Kalvi 10th Std Books New Syllabus 2020-2021 Tamil Nadu Pdf Free Download

Here, we bring you the TN 10th Std New Syllabus Books 2020 to 2021 Tamil Nadu. The curriculum for TN Samacheer Kalvi 10th New and Old Books is set by Tamil Nadu State Council of Educational Research and Training (TN SCERT) and published by the Tamil Nadu Textbook and Educational Services Corporation, Department of School Education, Government of Tamil Nadu.

Tamilnadu Samacheer Kalvi 10th Std Books English Medium

Students can download the TN SCERT Tamilnadu Samacheer Kalvi Class 10th Books Pdf Free Download in English Medium of TN Samacheer Kalvi 10th Standard Tamil, English, Maths, Science, Social Science Book Pdf.

Tamilnadu Samacheer Kalvi 10th Std Books Tamil Medium

Students can download the TN SCERT Tamilnadu Samacheer Kalvi Class 10th Books Pdf Free Download in Tamil Medium of TN Samacheer Kalvi 10th Std Tamil, English, Maths, Science, Social Science Book Pdf.

We hope the given Old and New Syllabus 2020-2021-2022 SCERT Tamilnadu TN Samacheer Kalvi 10th Books for SSlC Class 10th Std Students of Tamil Medium and English Medium all subjects will help you get through your subjective questions in the exam.

Let us know If none of the Downloading links of TN 10th Standard New Syllabus Books 2020 to 2021 to 2022 Tamil Nadu found not working, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Additional Questions

Students can download 5th Maths Term 1 Chapter 6 Information Processing Additional Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing Additional Questions

I.

Question 1.
Can you spot the duplicate ?
ABC, BCA, CAB, CBA, CAB, ACB, BAC
Answer:
CAB

Question 2.
Can you find the mistake? Explain.
PQR, RPQ, QRP, QRR, PRQ, RQP
Answer:
QRR; Two letters are same.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Additional Questions

II. The following table shows the number of cricket balls produce in a factory between 2001 and 2006

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Additional Questions 1

Observe the pictograph and answer the following questions

Question 1.
In which year the ball manufacturing was maximum?
Answer:
2006

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Additional Questions

Question 2.
In which year the ball manufactured were equal?
Answer:
2001, 2003 and 2002, 2004

Question 3.
Find the ball production in 2006?
Answer:
500

Question 4.
Find the total quantity at bail manufactured in 2003, 2004 and 2005.
Answer:
900

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Additional Questions

III. The bar chart represents the number of students in different standard.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Additional Questions 2

Observe the bar chart and answer the following questions.
Question 1.
Which standard has more number of students?
Answer:
V

Question 2.
How many students are there in standard III?
Answer:
30

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Additional Questions

Question 3.
Which class has the least number of students?
Answer:
IIII

Question 4.
How many students are in standard V?
Answer:
50

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Students can Download 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.7 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 1.
புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக.

புதுக்கவிதை

தக்காளியையும் வெண்டைக்காயையும்
தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில்,
தள்ளி நிற்கும் பிள்ளை
அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை
எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும்….
“அத்தனைக் காய்களையும் விற்றால்தான்
மீதி ஐந்நூறாவது மிஞ்சும்; என்ன செய்ய…”
காய்கறி வாங்கியவர்
கவனக் குறைவாகக் கொடுத்த
இரண்டாயிரம் ரூபாயைக்
கூப்பிட்டுத் தந்துவிட்டுப்
பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம்.
என்பதை அடுத்தபடி யோசிக்கும் அவர் மனம்!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
Answer:
மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாது நீக்கிவிடவேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றிய தள்ளுவண்டிக்காரர், காய்கறி வாங்கியவர் கவனக் குறைவாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயைத் தான் வைத்துக்கொள்ளாமல் காய்கறி வாங்கியவரை கூப்பிட்டுக் கொடுத்துவிட்டார்.

தனக்குத் தேவை மிகுதியாய் இருப்பினும் தள்ளுவண்டிக்காரர் அறவழியில் செல்வம் ஈட்டுவதையே விரும்புகிற ஒரு நல்ல பண்பாளர்.

Question 2.
குறிப்புகள் உணர்த்தும் குறளின் கருத்துகள் குறித்துக் கலந்துரையாடுக.
அ) அவருக்கு அறிவும் அதிகம்; படிப்பும் அதிகம். யாராலும் அவருக்கெதிராகச் செயல்பட முடியாது.
Answer:
பாலா : அவருக்கு அறிவும் அதிகம்; படிப்பும் அதிகம். யாராலும் அவருக்கெதிராகச் செயல்பட முடியாது.
மாலா : குடிசெயல்வகை எனும் அதிகாரத்தில் 1022 வது குறளில் விடாமுயற்சி, சிறந்த
அறிவாற்றல் உடையவனின் குடி உயர்ந்து விளங்கும்.

ஆ) எச்சரிக்கையாக இரு. பழகுபவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டுபிடிப்பது கடினம்.
Answer:
பாலா : எச்சரிக்கையாக இரு. பழகுபவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று
கண்டுபிடிப்பது கடினம்.
மாலா : கூடாநட்பு எனும் அதிகாரத்தில் 828-ஆவது குறளில் பகைவர் நம்மை வணங்கி தொழும்போது கையில் கத்தியை மறைத்து வைத்திருப்பர்.

இ) அவர் குடும்பம் முன்னேறியிருப்பதற்குக் காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும்.
பாலா : அவர் குடும்பம் முன்னேறியிருப்பதற்குக் காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும்.
மாலா : ஊக்கமுடைமை எனும் அதிகாரத்தில் 594-ஆவது குறளில் தளராது ஊக்கத்தோடு உழைப்பவனிடம் தொடர்ந்து செல்வம் சேரும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

ஈ) வாழ்க்கையில் நன்றாகப் பொருளீட்டு. அதுதான் உன்னைத் தாழ்வாக நினைத்தவர்களின் வாயை அடைக்கும்.
Answer:
பாலா : வாழ்க்கையில் நன்றாகப் பொருளீட்டு. அதுதான் உன்னைத் தாழ்வாக
நினைத்தவர்களின் வாயை அடைக்கும்.
மாலா : பொருள் செயல்வகை எனும் அதிகாரத்தில் 759-ஆவது குறளில் பொருள் இல்லாரை எல்லாரும் இகழ்வர். பொருள் உள்ளவரை போற்றுவர்.

உ) அக்கம்பக்கத்தாரிடம் பழகாமல் ஒதுங்கியே இருந்தார்; துணைக்கும் யாரும் இல்லை. இப்போது உடம்பு சரியில்லாதபோது யாருமின்றித் திண்டாடுகிறார்.
Answer:
பாலா : அக்கம்பக்கத்தாரிடம் பழகாமல் ஒதுங்கியே இருந்தார்; துணைக்கும் யாரும் இல்லை.
இப்போது உடம்பு சரியில்லாதபோது யாருமின்றித் திண்டாடுகிறார்.
மாலா : அன்புடைமை எனும் அதிகாரத்தில் 80-ஆவதுகுறளில் பிறரிடம் அன்போடு வாழ்பவன் உயிருடன் கூடிய உடல். அன்பு இல்லாததால் உயிரற்ற எலும்புக்கூட்டுக்குச் சமம்.

குறுவினா

Question 1.
கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக.
Answer:
தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்.

Question 2.
தஞ்சம் எளியன் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 3.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
Answer:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

Question 4.
பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
Answer:
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

  • கூரான ஆயுதம்: உழைத்ததால் கிடைத்த ஊதியம்.
  • காரணம்: இதுவே அவனுடைய பகைவனை வெல்லும் கூரான ஆயுதம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

சிறுவினா

Question 1.
வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் - 2
தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயல்களைச் செய்தல் வேண்டும்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் - 3

மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைய வேண்டும்.

சூழ்ச்சிகள்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் - 4

இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.

நடைமுறைகளை எறிதல்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் - 5
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 2.
பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
Answer:
பகைவரின் வலிமை:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் - 6
சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் வலிமை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது.

பகைக்கு ஆட்படல்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் - 7
மனதில் துணிவு இல்லாதவராய் அறிய வேண்டியவற்றை அறியாதவராய் பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறருக்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

கருவியும் காலமும் – எண்ணும்மை
அருவினை – பண்புத்தொகை
வன்கண் – பண்புத்தொகை
வந்த பொருள் – பெயரெச்சம்
வாராப்பொருளாக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
செய்க – வியங்கோள் வினைமுற்று
நீள்வினை – வினைத்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் - 8

பலவுள் தெரிக

Question 1.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி.
அ) உவமையணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொல்பின்வருநிலை அணி
ஈ) சொற்பொருள் பின் வருநிலையணி
Answer:
ஈ) சொற்பொருள் பின் வருநிலையணி

Question 2.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று வரும் அணி.
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) வேற்றுமை அணி
ஈ) பிறிது மொழிதல் அணி
Answer:
அ) உவமையணி

Question 3.
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது – இக்குறளில் பயின்று வரும் அணி.
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி
இ) உவமையணி
ஈ) உருவக அணி
Answer:
ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 4.
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில். – இக்குறளில் பயின்று வரும் அணி.
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) வேற்றுமை அணி
ஈ) பிறிதுமொழிதல் அணி
Answer:
அ) உவமை அணி

Question 5.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழு கலான் – இக்குறளில் பயின்று வரும் அணி.
அ) தற்குறிப்பேற்ற அணி
ஆ) வஞ்சப்புகழ்ச்சி அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
ஆ) வஞ்சப்புகழ்ச்சி அணி

Question 6.
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வரும் அணி.
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
அ) உவமையணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 7.
சிறந்த அமைச்சருக்குரிய குண நலன்கள் ………………
அ) 4
ஆ) 5
இ) 3
ஈ) 6
Answer:
ஆ) 51

Question 8.
விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி………………
அ) உயர்ந்து விளங்கும்
ஆ) தாழ்ந்து நிற்கும்
இ) வாடிப் போகும்
ஈ) காணாமல் நீங்கும்
Answer:
அ) உயர்ந்து விளங்கும்

குறுவினா

Question 1.
எத்தகைய அரிய செயலைச் செய்பவர் அமைச்சர் ஆவார்?
Answer:
தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவர் அமைச்சர் ஆவார்.

Question 2.
அமைச்சருக்குரிய ஐந்து சிறப்புகள் யாவை?
Answer:
மனவலிமை, குடிகளைக் காத்தல், விடா முயற்சி, ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 3.
எத்தகைய அமைச்சர்களுக்கு முன் சூழ்ச்சியும் நிற்க இயலாது?
Answer:
இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றையுடைய அமைச்சர்களுக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது.

Question 4.
ஓர் அமைச்சன் எவற்றை அறிந்து செயல்பட வேண்டும்?
Answer:
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

Question 5.
அறத்தையும் இன்பத்தையும் தருவது எது?
Answer:
முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்ந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் தரும் இன்பத்தையும் தரும்.

Question 6.
எத்தகையப் பொருளை ஏற்காமல் நீக்கிவிட வேண்டும்?
Answer:
மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 7.
பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது எது? ஏன்?
Answer:

  • ஒரு பொருட்டாக மதிக்கத்தகாதவரையும் பிறர் மதிக்கும்படி செய்வது செல்வம்.
  • ஏனெனில் அதைவிட சிறந்த பொருள் உலகில் வேறு எதுவும் இல்லை.

Question 8.
ஒருவன் தன் கைப்பொருளைக் கொண்டு செய்யும் செயல் எதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது?
Answer:
ஒருவன் தன் கைப்பொருளைக் கொண்டு செய்யும் செயலானது, குன்றின் மேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பது போன்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 9.
கூடா நட்பு குறித்து வள்ளுவர் கூறும் செய்தி யாது?
Answer:
கொலைக் கருவி:
பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளேயும் கொலைக் கருவி மறைந்து இருக்கும்.

வஞ்சகம்:
பகைவரின் அழுத கண்ணீர் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும்.

Question 10.
யாரால் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது?
Answer:

  • சுற்றத்தாரிடம் அன்பு இன்மை
  • பொருந்திய துணை இன்மை
  • வலிமையின்மை
    இவற்றையுடையவன் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது.

Question 11.
ஒருவன் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடுவது எப்போது?
Answer:

  • மனதில் துணிவு இல்லாமை
  • அறியவேண்டியவற்றை அறியாமை
  • பொருந்தும் பண்பு இல்லாமை
  • பிறருக்குக் கொடுத்து உதவாமை
    மேற்கண்ட செயல்களை உடையவர் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 12.
ஒருவனது குடி எப்போது சிறந்து விளங்கும்?
Answer:
விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி சிறந்து விளங்கும்.

Question 13.
உலகத்தார் யாரை உறவாகக் கொண்டு போற்றுவார்?
Answer:

குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்.

Question 14.
வறுமையின் கொடுமை முழுவதும் கெடும் எப்போது?
Answer:
தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் கண்டால் வறுமையின் கொடுமை முழுவதும் கெடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 15.
யாருடைய உள்ளத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். எப்போது?
Answer:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

Question 16.
மக்கள், கயவர் குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது?
Answer:
கயவர் மக்களைப் போலவே இருப்பர், கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள ஒப்புமை தோற்றம் மட்டுமே வேறெந்த ஒப்புமையும் கிடையாது.

Question 17.
தேவர் கயவர் குறித்து வள்ளுவர் கூறியது யாது?
Answer:
தேவரும் கயவரும் ஒரே தன்மையர், தேவர்களைப் போலவே கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து வாழ்வர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 18.
சான்றோர் கயவர் குறித்து வள்ளுவர் கூறுவது யாது?
Answer:

  • ஒருவர் தம் குறையை சொல்வதைக் கேட்டவுடன் உதவி செய்பவர் சான்றோர்.
  • கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுபவர் கயவர்.

Question 19.
ஒரு செயலைச் செய்வதற்கு உலகியல் நடைமுறைகளும் அவசியம் என்பதை வலியுறுத்தும் திருக்குறளை எழுதுக.
Answer:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 20.
ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம் என்பதை எடுத்துரைக்கும் திருக்குறளை எழுதுக.
Answer:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.

Question 21.
மலைமேல் நின்றுகொண்டு யானைப் போரைக் காண்பதனை உவமையாகக் குறிப்பிடும் திருக்குறளை எழுதுக.
Answer:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 22.
குற்றமற்றுக் குடிப்பெருமையுடன் வாழ்பவரை உலகத்தார் போற்றுவர் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக.
Answer:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

Question 23.
வறுமையைப் போன்று துன்பம் தருவது வறுமையே என்று குறிப்பிடும் குறட்பாவினை எழுதுக.
Answer:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

சிறுவினா

Question 1.
‘குடிச்செயல் வகை என்னும் அதிகாரத்தில் குடி உயர்வு குறித்து வள்ளுவர் கூறும் கருத்து யாது?
Answer:
இடைவிடாமல் பின்பற்றுதல் :
விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.

குற்றம் இன்மை :
குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்.

Question 2.
‘கயமை’ என்னும் அதிகாரத்தில் கயவர் குறித்து வள்ளுவர் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
தோற்ற ஒப்புமை: கயவருக்கும் மக்களுக்கும் உள்ள ஒப்புமை தோற்றம் மட்டுமே. வேறெதிலும் ஒப்புமை இல்லை.

தேவரும் கயவரும்: தேவரும் கயவரும் ஒரே தன்மையர், தேவர்களைப் போலவே கயவர்களும் தீயவற்றைச் செய்து ஒழுகுவார்கள்

சான்றோர்-கயவர்: ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்ட உடனேயே உதவி செய்பவர் சான்றோர். கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர் கயவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 3.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் – இப்பாடலில் பயின்று வந்துள்ள அணியைக் கூறி விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி சொல் பின்வருநிலையணி.

அணி இலக்கணம்: ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வருநிலையணி ஆகும்.

விளக்கம் :
இக்குறட்பாவில் பொருள் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து பொருட்டு, செல்வம் ஆகிய வெவ்வேறு பொருளைத் தருகிறது. எனவே, இக்குறட்பாசொல் பின்வருநிலையணிக்குச் சான்றாகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 4.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியைக் கூறி விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி உவமை அணி.

அணி இலக்கணம்:
செய்யுளில் உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் மற்றொரு வாக்கியமாகவும், உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.
உவமை : மலைமேல் பாதுகாப்பாக நின்று யானைப் போரைக் காணுதல்.
உவமேயம் : தன் கைப்பொருளைக் கொண்டு செய்யும் செயல்.
உவம உருபு : அற்று (வெளிப்படை)

பொருத்தம்: தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பது போன்றது ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 5.
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியைக் கூறி விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி சொற்பொருள் பின்வருநிலையணி.

அணி இலக்கணம்:
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

பொருள் விளக்கம்: இக்குறட்பாவில் இன்மை என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வறுமை என்னும் ஒரே பொருளைத் தருகிறது. எனவே, இக்குறட்பா சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று.

Question 6.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான் – இக்குறட்பாவில் பயின்றுவந்துள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி வஞ்சப் புகழ்ச்சி அணி.
அணி இலக்கணம்:
பழிப்பது போலப் புகழ்வதும் புகழ்வது போலப் பழிப்பதும் வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும். இப்பாடல் புகழ்வது போலக் கூறி பழிக்கப்பட்டுள்ளது.

விளக்கம் :
புகழ்தல் – கயவர் தேவர்களுக்கு ஒப்பாவர்
பழித்தல் – கயவர் தம் மனம் போன போக்கில் தீய செயல்களைச் செய்வார்கள்.
தேவரும் கயவரும் ஒரு தன்மையர். தேவரைப் போல கயவரும் தாம் விரும்பியதைச் செய்வர் என்று புகழ்வது போல பழித்தலால், இஃது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆயிற்று.

Question 7.
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில் – இப்பாடலில் பயின்று வந்துள்ள அணியைக் கூறி விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி உவமை அணி ஆகும்.

அணி இலக்கணம்:
செய்யுளில் உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் மற்றொரு வாக்கியமாவும், உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

உவமை : கயவர் மக்களைப் போல் இருப்பர்.
உவமேயம் : தோற்ற ஒப்புமையைத் தவிர வேறெந்த ஒப்புமையும் இல்லை.
உவம உருபு : அன்ன (வெளிப்படை)

விளக்கம் : கயவர் மக்களைப் போலவே இருப்பர்; கயவருக்கும் மக்களுக்கும் உள்ள தோற்ற ஒப்புமையை வேறெதிலும் காண்பதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

நெடுவினா

Question 1.
பொருள் செயல்வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் வளமார்ந்த கருத்துக்களைக் கூறுக.
Answer:
சிறந்த பொருள் :
ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். செல்வத்தை அல்லாமல் சிறந்த பொருள் உலகில் வேறு எதுவும் இல்லை .

அறம், இன்பம்:
முறையறிந்து தீமையற்ற வழியில் ஒருவர் சேர்த்த செல்வம் அவருக்கு அறத்தையும் தரும், இன்பத்தையும் தரும்

நீக்கவேண்டிய பொருள்:
மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.

தன் கைப்பொருள்:
தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவன் செய்யும் செயலானது, குன்றின் மேலே பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பதற்குச் சமமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

கூர்மையான ஆயுதம்:
பொருளை ஈட்ட வேண்டும். பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் பொருளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை .