Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 1.
தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றி எழுதுக.
Answer:
தமிழ் இலக்கியங்கள் தோன்ற உதவிய வள்ளல்களைத் தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் எனலாம்.
(i) அதியன் (ஔவைக்கு உதவியவன்)
(ii) யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (ஐங்குறு நூறுதொகுப்பித்தவன்)
(iii) பூரிக்கோ (குநற்தொகையைத் தொகுப்பித்தவன்)
(iv) பன்னாடு தந்த மாறன் வழுதி (நற்றிணையைத் தொகுப்பித்தவன்)
(v) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி (அகநானூறு தொகுப்பித்தவன்)
(vi) சடையப்ப வள்ளல் (கம்பராமாயணம் எழுத உதவியவர்)
(vii) சீதக்காதி, அபுல் காசிம் (சீறாப்புராணம் எழுத உதவியவர்)
(viii) சந்திரன் சுவர்க்கி (நளவெண்பா எழுத உதவியவர்)

Question 2.
தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
1. கீழ்க்க ணக்கு
2. மேல்கணக்கு
3. அறஇலக்கியம்
4. பெருங்காப்பியம்
5. சிறு காப்பியம்
6. சிறுகதை
7. மரபுக்கவிதை
8. புதுக்கவிதை
9. புதினம்
10. நாட்டுப்புற இலக்கியம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ……………
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி
Answer:
இ) பரணி

Question 2.
வானில் ……………….._கூட்டம் திரண்டால் மழை பொழியும்
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
Answer:
ஆ) முகில்

Question 3.
‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பார்த்து எழுதக்கிடைப்பது ………………
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
Answer:
ஈ) இரண்டு + அல்ல

Question 4.
‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பார்த்து எழுதக்கிடைப்பது ……………..
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
Answer:
அ) தந்து + உதவும்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 5.
ஒப்புமை+ இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்புஇல்லாத
Answer:
இ) ஒப்புமையில்லாத

குறுவினா

Question 1.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:

  1. தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.
  2. சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.
  3. தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

Question 2.
‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
Answer:
(i) முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
(ii) புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

சிறுவினா

Question 1.
தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
(i) பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
(ii) பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகக் காரணம் யாது?
Answer:

  1. சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.
  2. கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின.
  3.  தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.
  4. குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.
  5. எனவே, தமிழில் அறஇலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
ஆ) பரணி

Question 2.
பொருத்துக.
1. பகைவரை வென்றதைப் பாடுவது – அ) பரிபாடல்
2. இசைப்பாடல் – ஆ) பரணி
3. வான்புகழ் கொண்டது – இ) சங்க இலக்கியங்கள்
4. அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்டது – ஈ) திருக்குறள்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 3.
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 4.
தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 5.
தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்ற கவிஞர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 6.
முல்லைக்குத் தேர் தந்து புகழ்பெற்றவன் ………………
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
Answer:
அ) வேள்பாரி

Question 7.
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ……………..
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
Answer:
ஆ) குமணன்

Question 8.
இசைப்பாடல் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
அ) பரிபாடல்

Question 9.
அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்ட இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
இ) சங்க இலக்கியங்கள்

Question 10.
வான்புகழ் கொண்ட இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 11.
தானியக் கதிருக்குக் கூறப்பட்ட உவமை
அ) கனி
ஆ) தென்றல்
இ) பொன்
ஈ) தேன்
Answer:
இ) பொன்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒன்றல்ல இரண்டல்ல பாடலின் ஆசிரியர் …………………….
2. தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமின்றி …………………… வளமும் …………………… வளமும் நிரம்பியது.
3. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ………………….. மிக்கவர்களாக விளங்கினர்.
4. ‘கவிச்சொல்லுக்கு’ என்ற சொல்லில் ‘கவி’ என்பதன் பொருள் ……………………..
5. முல்லைக்குத் தேர் கொடுத்தான் ……………………..
Answer:
1. உடுமலை நாராயண கவி
2. பொருள், அருள்
3. கொடைத்திறன்
4. புலவன்
5. வேள்பாரி

குறு வினா

Question 1.
”வான்முகிலினும் புகழ்படைத்த உபகாரி” என்ற பாடலடியில் இடம் பெறும் ‘முகில்’ ‘உபகாரி’ ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:
1. முகில் – மேகம்
2. உபகாரி – வள்ளல்

Question 2.
தமிழ்நாட்டிலுள்ள வளங்கள் யாவை?
Answer:

  1. நில வளம்
  2. நீர் வளம்
  3. பொருள் வளம்
  4. அருள் வளம்

Question 3.
தமிழ்மொழியிலுள்ள வளங்கள் யாவை?
Answer:

  1. இலக்கிய வளம்
  2. இலக்கண வளம்

Question 4.
தமிழகத்தில் கொடைத்திறன் மிக்கவர்களாகத் திகழ்ந்தவர்கள் யாவர்?
Answer:

  1. மன்னர்கள்
  2. வள்ளல்கள் மழை

Question 5.
மேகத்தை விடப் புகழ்பெற்றவன் யார்? அவன் செயல் யாது?
Answer:
(i) மழை மேகத்தை விடப் புகழ்பெற்றவன் : வள்ளல் வேள்பாரி.
(ii) அவன் செயல் : முல்லைக் கொடி படர்வதற்குத்தன் விலை உயர்ந்த தேரைக் கொடுத்தல்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 6.
எங்குத் தேன் மணம் கமழும்?
Answer:
தமிழகத்தில் வீசும் தென்றல் காற்றில் தேன் மணம் கமழும்.

Question 7.
நன்செய் நிலம் என்றால் என்ன?
Answer:
ஆற்றுநீர், குளத்துநீர், கிணற்றுநீர் ஆகிய நீர்வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத்தொகுதி நன்செய் நிலம் எனப்படுகின்றது.

Question 8.
நன்செய் நிலப்பயிர்கள் யாவை?
Answer:
நெல், வாழை, கரும்பு.

சிறு வினா:

Question 1.
உடுமலை நாராயண கவி – குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : நாராயணசாமி
காலம் : 25.9.1899 – 23.5.1981
சிறப்புப்பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
பணி : தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
சிறப்புகள் : கலைமாமணி பட்டம், 31.12.2008ல் இந்திய அஞ்சல் துறை இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. உடுமலைப் பேட்டையில் சிலை மற்றும் மணிமண்டபத்தைத் தமிழக அரசு நிறுவியுள்ளது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

சொல்லும் பொருளும்

1. ஒப்புமை – இணை
2. அற்புதம் – விந்தை
3. முகில் – மேகம்
4. உபகாரி – வள்ளல்
5. சொல்ல – கூற
6. தென்றல் – தெற்கிலிருந்து வீசும் காற்று
7. கவி – கவிஞன் (அல்லது) புலவன்
8. அருள் – இரக்கம்