Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

Students can download 5th Maths Term 1 Chapter 1 Geometry InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 1 Geometry InText Questions

Acitivity (Text Book Page No. 4)

I. Write the 3-D shapes lying around us
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

II. What will you observe, if you look at this object from the front?

Question 1.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 4

Question 2.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

III. What will you observe, if you look at this object from the sideways?

Question 1.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 8

Question 2.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 9
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 10

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Practice (Text Book Page No. 8)

Look at the following shapes. Draw that how will it be changed after 1/3 and 1/6 of a turn?

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 11
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 12

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Activity (Text Book Page No. 9)

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 13
While standing in front of a mirror, see your image.

Observe your image in the mirror when moving back and coming front to the mirror again, what do you infer?

Question 1.
Your image in the mirror is __________ (bigger, smaller, same size)
Answer:
same size

Question 2.
When you go back, your image is moving _________ (backward, forward)
Answer:
backward

Question 3.
The distance between you and mirror and the distance between you and your image is ________ . (equal, unequal)
Answer:
equal

Question 4.
When you come forward to the mirror, your images is moving _________ . (forward, backward)
Answer:
forward

Question 5.
When you raise your right hand, the image in the mirror looks like, _________ hand is raising. (right, left)
Answer:
left

Question 6.
When you raise your left hand, the image in the mirror looks like, _________ hand is raising, (right, left)
Answer:
right

Question 7.
Look at this shape:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 14
Which image shows a reflection? ✓ the answer given below
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 15
Answer:
B

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Try yourself (Text Book Page No. 10)

Draw some of your favourite shapes and draw its reflection images on a chart and show it to your teacher.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 16

Project (Text Book Page No. 12)

Question 1.
List out 2 symmetrical objects that you know
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 17

Question 2.
Tick among the following picture, having symmetry
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 18
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 19

Question 3.
Complete the other half to make the given figure as symmetrical.
Question 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 20
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 21

Question 2.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 22
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 23

Question 4.
Draw the lines of symmetry for the following figures then count and write the number of lines.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 24
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 25

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Think it (Text Book page No. 13)

Question 1.
Can we divide the irregular solids symmetrically? if no why?
Answer:
No, they are not equal parts.
Example:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 26

Question 2.
Write the english alphabets that can’t be divided symmetrically?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 27

Question 3.
Write the english alphabets which are divided symmetrically?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 28

Question 4.
Circle has many lines of symmetry. Is is true? why?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 29
It has infinite lines of symmetry. The circle is symmetric along all the diameters.

Question 5.
Find the three numbers between 1 and 9 that can be divided symmetrically?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 30

Question 6.
Find two numbers between 1 to 9 having two lines of symmetry?
Answer:
8, [1, 2, 3, 4, 5, 6, 7, and 9 are unsymmetrical 3 has a horizontal line of symmetry 8 has a vertical and a horizontal line of symmetry]

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Try These (Text Book Page No. 14)

Find out which of these can be made into a box by folding along the dotted lines. Put a tick mark for the correct option.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 32

Activity (Text Book Page No. 16)

Match the net with the shape you will get by folding.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 33
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 34

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Introduction of Angles (Text Book Page No. 18)

To get the feel of an angle through observation of objects and by paper folding:Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 36
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 35

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Name the types of angles formed in the following items.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 39
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 40

Try These (Text Book Page No: 20)

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 37
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 38

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Do yourself (Text Book Page No. 21)

Draw 5 objects with right angle.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 43

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Try These (Text Book Page No. 21)

Question 1.
Classify the following angles (acute angle, obtuse angle and right angle)
30°, 45°, 60°, 90°, 120°, 130°, 170°, 75°
Answer:

1. Acute angles30°, 45°, 60°, 75°
2. Right angle90°
3. Obtuse angle120°, 130°, 170°

Question 2.
Observe the following pictures and write the name of the angles in their box.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 42
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 43

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 In Text Questions

Activity (Text Book Page No. 22)

Draw right angle, acute angle and obtuse angle by tracing.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 44
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 45

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Additional Questions

Students can download 5th Maths Term 1 Chapter 1 Geometry Additional Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Additional Questions

Write True or False.

Question 1.
Cuboid is covered by 6 rectangles _________
Answer:
True

Question 2.
The height and slant height of the cone are unequal
Answer:
True

Question 3.
The cube has 8 vertices
Answer:
True

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Additional Questions

Question 4.
Sphere has vertices and edges
Answer:
False

Question 5.
Rectangle is a 2-D shape
Answer:
True

Question 6.
The angle 90° is called as The right angle in AABC is
Answer:
Right angle

Question 7.
In the following letters, which forms the acute angle?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 46
(a) ∠A
(b) ∠B
(c) ∠C
Answer:
(b) ∠B

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Additional Questions

Question 8.
Hand of a clock at 3:00 shows ______ angle.
Answer:
right

Question 9.
Circle the obtuse angle
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 47
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 48
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 49
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 50
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 49

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Additional Questions

Question 10.
In the following letters, which forms the acute angle?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 51
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 52
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 53
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 54
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry 51

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

Students can Download 9th Tamil Chapter 2.2 பட்டமரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 2.2 பட்டமரம்

கற்பவை கற்றபின்

Question 1.
விளைநிலங்கள் கட்டடங்களாகின்றன என்னும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசுக.
Answer:
ஏழை விவசாயி : எங்க அப்பா காலத்திலிருந்து நெல் கரும்பு போட்டோம். அப்ப வந்தது. இப்ப……. வெண்டை , புடலை கூட வரமாட்டேங்குது.
அழகு : என்ன போட்டு என்ன ஆச்சு? மழையில்லானா என்ன பண்ண முடியும்? (மனை விற்பனையாளர்)
ஏழை விவசாயி : அழகு…. பக்கத்திலிருக்கிற வயலெல்லாம் பிளாட் போட்டுட்டாங்க.
எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல்லே! மழையும் இல்ல, கிணத்துல
தண்ணியில்லே!
அழகு : நான் சொல்ற வழிக்கு வரமாட்டங்கிற… வித்து பணத்த பேங்க்ல போட்டுட்டு நிம்மதியா சாப்பிட்டுட்டு தூங்கு.
ஏழை விவசாயி : பூமித்தாய விக்கச் சொல்ற… வித்தா அப்பார்ட் மெண்ட் கட்றங்கிறீங்க.. என்ன ஆகப் போதுன்னு எனக்குத் தெரியல!
அழகு : மழையில்ல தண்ணியில் வீடு கட்டி நூறு ஜனங்க பொழக்கட்டுமே! வயல் வரப்ப வச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க? வித்தா மகளுக்கு கல்யாணம்; மகனைப் படிக்க வைக்க…. எல்லாம் உன் நன்மைக்கே சொல்றேன்.
ஏழை விவசாயி : பால் தர்ற பசுமாட்ட மடி அறுத்துப் பால் குடிக்கிறதா? விளை நிலத்தைப் பூரா விலை நிலமா ஆக்கிட்டீங்க அழகு.
அழகு : இனி வரப்போற நாளில் வீடுதான் முக்கியம். குடியிருக்க வேண்டாமா?
ஏழை விவசாயி : உங்க மாதிரி ஆளுகளால தான் கொசு தொந்தரவு நிறைய ஆகிருச்சு. குளங்குட்டையெல்லா பிரிச்சுப் போட்டு வித்தாச்சு தவளை இருந்தா கொசுவப் பிடிக்கும் இப்ப அதுக்கும் வழியில்ல
அழகு : ஒன்னும் வேணாங்க உங்க புள்ளங்க இந்தக் குடிசையில் இருக்குமா?
கேட்டுச் சொல்லுங்க….
ஏழை விவசாயி : உனக்குப் பணம் முக்கியம் எனக்குப் பயிர் முக்கியம். நிலத்தால் சோறு போடுறவன் ஏழையாகிறான். நிலத்தைக் கூறுபோடுறவன் பணக்காரனாகிறான்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

Question 2.
பட்டமரம், புதிதாக முளைவிட்ட குருத்து ஆகிய இரண்டும் பேசிக்கொள்வதாய்க் கற்பனை உரையாடல் நிகழ்த்துக.

Question 3.
பட்டணத்துப் பறவைகளும் ஊர்ப் பறவைகளும் என்ற தலைப்பில் பறவைகள் கூறுவன போலச் சிறு சிறு கவிதைகள் படைக்க.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம் - 1
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம் - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘மிசை’ – என்பதன் எதிர்ச்சொல் என்ன?
அ) கீழே
ஆ) மேலே
இ) இசை
ஈ) வசை
Answer:
அ) கீழே

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

சிறுவினா

Question 1.
பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?
Answer:
கவிஞர் தமிழ் ஒளியின் கருத்துகள்:
“தினந்தோறும் மொட்டைக்கிளையோடு நின்று பெருமூச்சு விடும் மரமே!
நம்மை வெட்டும் நாள் ஒன்றுவரும் என்று துன்பப்பட்டாயோ?
நிழலில் அமர. வாசனை தரும் மலர்களையும் இலைகளையும் கூரையாக விரித்த மரமே!
வெம்பிக் கருகிட இந்த நிறம் வர வாடிக் குமைந்தனவோ?
கொடுந்துயர் உற்று கட்டை என்னும் பெயர் பெற்று கொடுந்துயர் பட்டுக் கருகினையோ?
உன் உடையாகிய பட்டை இற்றுப்போய்க் கிழிந்து உன் அழகு முழுதும் இழந்தனையோ? சீறிவரும் காலப் புயலில் எதிர்க்கக் கலங்கும் ஒரு மனிதன்
ஓலமிட்டுக் கரம் நீட்டியதுபோல துன்பப்பட்டு வருந்தி நிற்கிறாய்”.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘விசனம்’ சொல் தரும் பொருள்
அ) வேதனை
ஆ) மகிழ்ச்சி
இ) ஏக்கம்
ஈ) கவலை
Answer:
ஈ) கவலை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

Question 2.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
அ) மிசை – மேல்
ஆ) கந்தம் – மணம்
இ) வெம்பல் – வாடல்
ஈ) குந்த – வருந்த
Answer:
குந்த – வருந்த

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

நிரப்புக

3. கவிஞர் தமிழ் ஒளி வாழ்ந்த காலம் …………..
Answer:
1924 – 1965

4. ‘பட்டமரம்’ கவிதை இடம் பெற்ற நூல் ……….
Answer:
தமிழ் ஒளியின் கவிதைகள்

5. பாரதியார் வழித்தோன்றல் – பாரதிதாசனின் மாணவர்……….
Answer:
கவிஞர் தமிழ்ஒளி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

குறுவினா

Question 1.
கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் யாவை?
Asnwer:
நிலைபெற்ற சிலை, வீராயி கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலியன ஆகும்.

பாடலின் பொருள் :
இலைகள், துளிர்கள் எதுவும் இன்றி வறண்ட மொட்டைக் கிளைகளோடு நின்று. தினம் தினம் தன் நிலையை எண்ணிபெருமூச்சுவிட்டுக் கொண்டு ஏக்கத்துடன் திகழும் பட்ட மரமே, உன்னையும் ஒருவன் வெட்டும் நாள் விரைவில் வரும் என்று எண்ணி மனக்குமுறல் அடைந்தாயோ?

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

அமர்வதற்கு நிழல் தந்து, வாசனை பொருந்திய மலர்களை மலரச் செய்து, இலைகளால் கூரை விரித்திருந்த மரமே. வெப்பத்தால் வெந்து, கருகி இந்த நிறம் வந்ததே என்று வருந்துகிறாயோ!

மரம் என்னும் பெயர் மாறி, கட்டை என்னும் பெயர் உற்று கொடுந்துயர் கொண்டனையோ! உன் மரப்பட்டை என்னும் உடல் வெப்பமுற்று, கிழிந்துவிட முற்றும் இழந்த நிலை அடைந்தாயோ!

காலம் என்னும் புயல் சீறிவர, கலங்கும் மனிதன் உதவி கேட்டு, ஓலமிட்டு கரம் நீட்டி தவிப்பது போல நீயும் துன்பத்தில் உழல்கிறாயோ!

பாடும் பறவைகள் உன்னில் கூடி வாழ்ந்து, உனக்கு ஒரு பாடல் புனைந்ததும் மூடு பனித்திரை உனக்கு மோகம் கொடுத்ததும், ஆடும் கிளைகளில் சிறுவர்கள் ஏறிநின்று குதிரை ஓட்டி விளையாடியதும் ஏட்டில் நின்ற பெருங்கதையாய் ஒரு கதையாய் முடிந்தனவே.

அவையாவும் வெறுங்கனவாய் ஆனதே என்று, பட்ட மரம் ஒன்று தன் நிலையை எண்ணி குமைவதாக எழுதியுள்ளார் கவிஞர் தமிழ் ஒளி அவர்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

சொல்லும் பொருளும்

விசனம் – துன்பம், கவலை
குந்த – உட்கார
கந்தம் – வாசனை
இற்று – அழிந்து (இத்துப் போச்சு கொச்சை வழக்கு)
எழில் – அழகு
மிசை – மேல்
ஓலம் – அலறல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

இலக்கணக் குறிப்பு :

வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சங்கள்
மூடுபனி – வினைத்தொகைகள்
ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர்
வெறுங்கனவு – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம் :

1. விரித்த – விரி + த் + த் + அ
விரி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

2. குமைந்தனை – குமை + த்(ந்) + த் + அன் + ஐ

குமை – பகுதி
த்(ந்) – த் ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன்- சாரியை
ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

3. அடைந்தனை – அடை + த்(ந்) + த் + அன் + ஐ

அடை – பகுதி
த்(ந்) – த்’ந்’ ஆனாது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

4. கருகினை – கருகு + இன் + ஐ
கருகு – பகுதி,
இன் – இறந்தகால இடைநிலை
ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

5. இழந்தனை – இழ + த்(ந்) + த் + அன் + ஐ
இழ – பகுதி
த்(ந்) – த்’ந்’ ஆனாது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஐ – – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

6. உழன்றனை – உழ + ல்(ன்) + ற் + அன் + ஐ
உழல் – பகுதி,
ல்(ன்) – ல்’ன்’ ஆனாது விகாரம்
ற் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஐ – முன்னிலை ஒருமை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்

7. புனைந்தது – புனை + த்(ந்) + த் + அ + து
புனை – பகுதி,
த்(ந்) – த்’ந்’ ஆனாது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அ – சாரியை
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

8. கொடுத்தது – கொடு + த் + த் + அ + து
கொடு – பகுதி,
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – சாரியை
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Students can Download 9th Tamil Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

கற்பவை கற்றபின்

Question 1.
நீரின்று அமையாது உலகு, நீரின்று அமையாது யாக்கை இவ்விரண்டு தொடர்களையும் ஒப்புமைப்படுத்தி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு - 1

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 2.
வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? இதற்கான நீர் எங்கிருந்து வருகிறது? இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தண்ணீர் போதுமானதாக இருக்கும்? என்பவற்றுக்கான தகவல்களைத் திரட்டி ஒப்புடைவு உருவாக்குக.
Answer:

  • நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் தண்ணீ ருக்கு ஆதாரமாக இருப்பது நிலத்தடி நீர்,
  • அணைகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், கிணற்றுநீர் ஆகியவை ஆகும்.
  • ஆழ்குழாயில் வரும் நீரின் வேகத்தைப் பொறுத்து அஃது எவ்வளவு நாள் வரும் என கணக்கிடப்படும்.

அணைகளின் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்று கூறுவர். அணைகளில் வெளியேறும் நீர்வரத்து நீரை அடிப்படையாகக் கொண்டும், வானிலை அறிக்கை தெரிவிக்கும் மழையின் போக்கைக் கொண்டும், ஒரு மாதத்திற்கு போதுமானது….. எத்தனை நாட்களுக்கு பிரச்சனையின்றி நீர் வழங்கலாம் போன்றவை முடிவு செய்யப்படும்.

அதன் அடிப்படையில் மக்களின் குடிநீர், பயன்படுத்தும் நீரின் தேவை பூர்த்தி செய்யப்படும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி
ஆ) ஆறு
இ) இலஞ்சி
ஈ) புலரி
Answer:
ஈ) புலரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 2.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது யாக்கை – ஒளவையார்
இ) மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
i) அ, இ, ஆ
ii) ஆ, இ, அ
iii) ஆ, அ , இ
iv) அ, ஆ, இ
Answer:
iv) அ, ஆ, இ

குறுவினா

Question 1.
“கூவல்” என்று அழைக்கப்படுவது எது?
Answer:
உவர்மண் (களர்மண்) நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலைக்கு கூவல் என்று பெயர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 2.
உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
ஆழிக் கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
இலஞ்சி – பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
ஊருணி – மக்கள் பருகு நீர் உள்ள நீர்நிலை
கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
பூட்டைக் கிணறு – கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு

Question 3.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
Answer:
காடும் உடையது அரண்
– இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும், ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

சிறுவினா

Question 1.
அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
Answer:

  • ஐம்பூங்களுள் ஒன்று நீர். அது நிலம், காற்று, நெருப்பு வானம் ஆகிய நான்குடன் தொடர்பு
  • கொண்டு இயங்கவல்லது. நம் முன்னோர் கிடைத்த நீரை அளவோடு பயன்படுத்தினர்.
  • அதனால் நாமும், நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.
  • ‘குளம் தொட்டு வளம் பெருக்கி வாழ்ந்தவர்கள் தமிழர். இன்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
  • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும். இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 2.
சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
Answer:

  • குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டன.
  • சோழர்காலத்தில் நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி கழிமுகத்தை (ஏரி நீர்க்கழிவு) அடைந்து குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
  • குமிழித்தூம்பில் இரண்டு துளைகள் இருக்கும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து
  • நீர் வெளியேறும். கீழே இருக்கும் சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர் வாரத் தேவையில்லை .

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

நெடுவினா

Question 1.
நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக் காட்டுடன் விவரி.
Answer:
முன்னுரை :
‘நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு’

ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. எத்தகைய சிறப்புகளை உடையவர்களுக்கும் நீர் இல்லையேல் ஒழுக்கங்கள் அமையா. எனவே மழையின்றி ஒழுக்கம் நிலை பெறாது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நம்முன்னோர்கள் பல்வேறு நீர்நிலை வடிவங்களை அமைத்து நீரைப் பாதுகாத்தனர். நாமும் இனிவரும் தலைமுறையினர்க்கு நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மழை உழவுக்கு உதவுகிறது :
மழை உழவுத் தொழிலுக்கு உதவுகிறது. விதைத்து வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன. ” நிலமும் மரமும் உயிர்களும் நோயின்றி வாழ வேண்டும் என்ற புலவர்களுள் ஒருவரான மாங்குடி மருதனார் கூறியதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

ஒவ்வொரு வட்டாரத்தின் நில அமைப்பு, மண்வளம், வடிவமைக்கப்பட்டிருந்தது, இதில் ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான எளிய வடிவங்களாகப் பயன்பட்டன.

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே:
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்னும் சங்கப்பாடல், நீரின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைக்கிறது.

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’

என்னும் குறளில் நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.

உலகச் சுகாதார நிறுவனம், “உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும்” என எச்சரிக்கிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் தொடரும் நிலையை மாற்றியமைக்கத் திட்டமிட வேண்டியது உடனடித் தேவையாகும். ஆண்டுதோறும், பெறுகின்ற மழைப்பொழிவை ஆக்கநிலையில் பயன்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

பல்லுயிர்ப் பாதுகாப்பு :
உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படை தண்ணீர் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

நிறைவுரை :
உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே. அந்த நீரே உணவாகவும் இருக்கிறது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”

என்று கூறியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பாண்டி மண்டலத்தில் ஏரியை ……….. என்று அழைப்பர்.
அ) ஊருணி
ஆ) கண்மாய்
இ) குளம்
ஈ) அகழி
Answer:
ஆ) கண்மாய்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 2.
உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள் ……..
அ) ஜுன் 5
ஆ) மார்ச் 20
இ) அக்டோபர் 5
ஈ) பிப்ரவரி 2
Answer:
அ) ஜுன் 5

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 3.
‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர் ………..
அ) மிளைகிழான் நல்வேட்டனார்
ஆ) கணிமேதாவியார்
இ) மாங்குடி மருதனார்
ஈ) நல்லந்துவனார்
Answer:
இ) மாங்குடி மருதனார்

Question 4.
‘இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை’ என்று போற்றப்படுபவர் ………
அ) பென்னி குயிக்
ஆ) விஸ்வேஸ்வரய்யா
இ) சர்.பக்கிள்
ஈ) சர். ஆர்தர் காட்டன்
Answer:
ஈ) சர். ஆர்தர் காட்டன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 5.
‘கிராண்ட் அணைக்கட்’ என்று அழைக்கப்படுவது …………
அ) பக்ரா நங்கல்
ஆ) ஹிராகுட்
இ) சர்தார் சரோவர்
ஈ) கல்லணை
Answer:
ஈ) கல்லணை

Question 6.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) குண்டு – குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
ஆ) அருவி – மலைமுகட்டுத் தேக்க நீர்
இ) அகழி – கோட்டைப்புறத்து நீர் அரண்
ஈ) கூவல் – மக்கள் பருகுநீர்நிலை
Answer:
ஈ) கூவல் – மக்கள் பருகுநீர்நிலை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 7.
திருமணம் முடிந்த பின் தொடர் நிகழ்வை ………. என்பர்.
அ) சனி நீராடு
ஆ) மஞ்சள் நீராட்டு
இ) கடலாடுதல்
ஈ) பூப்புனித நீராட்டு
Answer:
இ) கடலாடுதல்

Question 8.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) குண்டம் – குளிக்கும் நீர்நிலை
ஆ) கூவல் – உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
இ) ஊருணி – மக்கள் பருகும் நீர்நிலை
ஈ) கண்மாய் – உவர் நீர்நிலை
Answer:
ஈ) கண்மாய் – உவர் நீர்நிலை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

நிரப்புக

9. மழை பற்றிய பத்துக் குறட்பாக்கள் அடங்கிய அதிகாரம் ………….
Answer:
வான்சிறப்பு

10. மாமழை போற்றுதும் என்று போற்றியவர் ………..
Answer:
இளங்கோவடிகள்

11. கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை
Answer:
தௌலீஸ்வரம்

12. நாம் வாழும் தமிழ்நாடு……….. பகுதியில் உள்ளது.
Answer:
வெப்ப மண்டலப்

13. சனிநீராடு என்றவர் ………….
Answer:
ஔவையார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

14.  அகலமும், ஆழமும் உள்ள பெருங்கிணறு ………….
Answer:
கேணி

15. தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை …………
Answer:
சிறை

16. பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் ……….. எனப்படும்.
Answer:
இலஞ்சி

17. முல்லைப் பெரியாறு அணை கட்டியவர் …………
Answer:
ஜான் பென்னிகுயிக்

18. ஒரு நாட்டின் சிறந்த அரண்களுள் முதன்மையாகத் திகழ்வது …………
Answer:
நீர் அரண்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

குறுவினா

Question 1.
நன்னீர் நிலைகள் யாவை?
Answer:
மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் மூலம் கிடைக்கும் நீர்நிலைகள்.

Question 2.
நீ அறிந்த தமிழகத்தின் மூன்று நீர்நிலைப் பெயர்களுக்கு விளக்கம் தருக.
Answer:

  • ஆழிக்கிணறு : கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு.
  • ஊருணி : மக்கள் பருகு நீர் உள்ள நீர்நிலை.
  • உறைக்கிணறு : மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு.

Question 3.
ஜான் பென்னி குயிக் – குறிப்பு வரைக.
Answer:
தமிழகத்தில் மதுரை தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர். ஆங்கில அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த போது தனது சொத்துக்களை விற்று அணையைக் கட்டிமுடித்தார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

Question 4.
நிலத்தடி நீர்வளம் குறைந்து வரும் நாடுகள் யாவை?
Answer:
அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா.

Question 5.
கல்லணை பற்றிக் குறிப்பு தருக.
Answer:

  • பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகால் சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
  • நீளம் – 1080 அடி, அகலம் – 40 முதல் 60 அடி, உயரம் – 15 முதல் 18 அடி.
  • கல்லணை நம் முன்னோரின் திட்ப நுட்பத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும் சான்றாகத் திகழ்கிறது.

Question 6.
‘குளித்தல்’ என்பதன் பொருள் யாது?
Answer:
சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிரவைத்தலாகும். குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆனது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

சிறுவினா

Question 1.
கல்லணையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை விவரி.
Answer:
காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.

அவற்றின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசி, இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

இதுவே, கல்லணையைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Students can Download 9th Tamil Chapter 1.5 தொடர் இலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 1.5 தொடர் இலக்கணம்

கற்பவை கற்றபின்

Question 1.
தொடர்களை மாற்றி உருவாக்குக.
அ) பதவியை விட்டு நீக்கினான். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)
Answer:
பதவியை விட்டு நீக்குவித்தான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)
Answer:
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே. (இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக)
Answer:
உண்ணும் தமிழ்த்தேனே.

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாக பகுத்துள்ளனர். (இத்தொடரை செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக)
Answer:
திராவிட மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)
Answer:
நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தான்.

Question 2.
சொற்களைத் தொடர்களாக மாற்றுக :
Answer:
அ) மொழிபெயர் (தன்வினை, பிறவினை தொடர்களாக மாற்றுக)
Answer:
மொழி பெயர்த்தாள் – தன்வினை
மொழி பெயர்ப்பித்தாள் – பிறவினை

ஆ) பதிவுசெய் (செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக மாற்றுக)
Answer:
பதிவு செய்தான் – செய்வினை
பதிவு செய்யப்பட்டது – செயப்பாட்டுவினை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

இ) பயன்படுத்து (தன்வினை, பிறவினைத் தொடர்களாக மாற்றுக)
Answer:
பயன்படுத்துவித்தான் – பிறவினை
பயன்படுத்தினான் – தன்வினை

ஈ) இயங்கு (செய்வினை, செயப்பாட்டு வினை தொடர்களாக மாற்றுக)
Answer:
இயங்கினாள் – செய்வினை
இயக்கப்பட்டாள் – செயப்பாட்டுவினை

Question 3.
பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.
(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களைக், நம்மை, வாழ்வியல் அறிவை)
அ) தமிழ் …………………………………. கொண்டுள்ளது.
ஆ) நாம் …………………………………. வாங்க வேண்டும்
இ) புத்தகங்கள் …………………………………. கொடுக்கின்றன.
ஈ) நல்ல நூல்கள் …………………………………. நல்வழிப்படுத்துகின்றன.
Asnwer:
அ) தமிழ் செவ்விலக்கியங்களைக் கொண்டுள்ளது.
ஆ) நாம் தமிழிலக்கிய நூல்களை வாங்க வேண்டும்
இ) புத்தகங்கள் வாழ்வியல் அறிவைக் கொடுக்கின்றன.
ஈ) நல்ல நூல்கள் நம்மை நல்வழிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Question 4.
பொருத்தமான பெயரடைகளை எழுதுக.
(நல்ல, பெரிய, இனிய, கொடிய)
அ) எல்லோருக்கும் …………………….. வணக்கம்.
ஆ) அவன் …………………….. நண்பனாக இருக்கிறான்.
இ) …………………….. ஓவியமாக வரைந்து வா.
ஈ) …………………….. விலங்கிடம் பழகாதே.
Answer:
அ) எல்லோருக்கும் இனிய வணக்கம்.
ஆ) அவன் நல்ல நண்பனாக இருக்கிறான்.
இ) பெரிய ஓவியமாக வரைந்து வா.
ஈ) கொடிய விலங்கிடம் பழகாதே.

Question 5.
பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.
(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)
அ) ஊர்தி …………………….. சென்றது.
ஆ) காலம் …………………….. ஓடுகிறது.
இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை …………………….. காட்டுகிறது.
ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் …………………….. காட்டு.
Answer:
அ) ஊர்தி மெதுவாகச் சென்றது.
ஆ) காலம் வேகமாக ஓடுகிறது.
இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை அழகாகக் காட்டுகிறது.
ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் பொதுவாகக் காட்டு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Question 6.
அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக எழுதுக)
Answe:
நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா? (அல்லது)
இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர் யார்?

ஆ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக அமைக்க)
Answer:
இசையோடு அமையும் பாடல்

இ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக மாற்றுக)
Answer:
நீ இதைச் செய்.

Question 7.
வேர்ச்சொல்லை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.
அ) தா (உடன்பாட்டு வினைத்தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)
Answer:
தந்தேன் – உடன்பாட்டு வினைத்தொடர்
தருவித்தேன் – பிறவினைத் தொடர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

ஆ) கேள் (வினாத்தொடர் ஆக்குக)
Answer:
கேட்டாயா? – வினாத் தொடர்

இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர் ஆக்குக)
Answer:
நீ அதைக் கொடு – செய்தித் தொடர்
நீ கொடு – கட்டளைத் தொடர்

ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டு வினைத் தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)
Answer:
பார்த்தான் – செய்வினைத் தொடர்
பார்க்கப்பட்டான் – செயப்பாட்டு வினைத் தொடர்
பார்க்கச் செய்தான் – பிறவினைத் தொடர்

Question 8.
சிந்தனை வினா
கீழ்க்காணும் சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.
அ) அவை யாவும் இருக்கின்றன
அவை யாவையும் இருக்கின்றன.
அவை யாவும் எடுங்கள்
அவை – பன்மை , யாவும்
அவை யாவையும் எடுங்கள்
அவை – பன்மை, யாவையும்
அவை யாவற்றையும் எடுங்கள்
கீழ்க்காணும் சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

ஆ) நீங்கள் ஒரு நாளிதழில் பணிபுரிகிறீர்கள். அங்குப் புதிய வார இதழ் ஒன்று தொடங்க விருக்கிறார்கள். அதற்காக அந்நாளிதழில் விளம்பரம் தருவதற்குப் பொருத்தமான சொற்றொடர்களை வடிவமைத்து எழுதுக.

இ) சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றன என்பதைப் பதிவு செய்க.

ஈ) வந்திருப்பவர்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இத்தொடர் ஆங்கிலத்திலிருந்து நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் மொழி மரபை இத்தொடரில் பேணுகிறோமா?
Answer:
அ) அவை யாவும் இருக்கின்றன – தவறு (அவை – பன்மை ; யாவும் – ஒருமை)
அவை யாவையும் இருக்கின்றன. – சரி (அவை – பன்மை; யாவையும் – பன்மை)
அவை யாவும் எடுங்கள் – தவறு (அவை யாவும் எடு என்பதே சரி)
அவை – பன்மை , யாவும் – ஒருமை, எடு – ஒருமை
அவை யாவையும் எடுங்கள் – தவறு (அவை யாவையும் எடு என்பதே சரி)
அவை – பன்மை, யாவையும் – பன்மை, எடு – ஒருமை
அவை யாவற்றையும் எடுங்கள் – சரி (அவை – பன்மை, யாவற்றையும் – பன்மை)

ஆ) சொற்றொடர் வகைகளை சரிவர அறிந்தால் தால் தான் பிழையின்றிப் பேசவும் மரபு மாறாமல் எழுதுவதற்கும் பயன்படுகின்றன.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 5

இ) வந்திருப்பவர் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தொடரில் “கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்பது ஆங்கிலத்தின் நேரடி மொழி பெயர்ப்பு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

ஈ)  இதைக் கேட்டுக்கொள்கிறோம் – என்ற தொடரில் எழுதுவதுதான் சிறந்தது. இதேபோன்று, வருகையைத் தரமுடியாது. ஆனாலும் அழைப்பிதழ்களிலும் மேடை நாகரிகம் கருதி “வருகை தர வேண்டுகிறோம்” என்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். நம்மொழி மரபைப் பேணவில்லை. மொழி நடை முறையைப் பின்பற்றுகிறோம்.

மொழியை ஆள்வோம்

1. படித்துச் சுவைக்க :
விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த
பிறகுநான் வீணையாய்ப் போனேன்;
சிறகுநான் சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!
நின்னால் விமானமானேன் நான்!
தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்
வருவாய் எனநீ வருவாய்; – ஒருவாய்
உணவாய் உளதமிழே! ஒர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்று! – கவிஞர் வாலி

Question 2.
மொழி பெயர்க்க :
1. Linguistics – ………………………….
2. Literature – ………………………….
3. Philologist – ………………………….
4. Polyglot – ………………………….
5. Phonologist – ………………………….
6. Phonetics – ………………………….
Answer:
1. Linguistics – மொழியியல்
2. Literature – இலக்கியம்
3. Philologist – மொழி ஆய்வ றிஞர்
4. Polyglot – பன்மொழி அறிஞர்
5. Phonologist – ஒலியியல் ஆய்வ றிஞர்
6. Phonetics – ஒலியியல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Question 3.
அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ்…………………………. (திகழ்)
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ………………………….(கலந்துகொள்)
3. உலகில் மூவாயிரம் மொழிகள் …………………………. (பேசு)
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ………………………….(செல்)
5. தவறுகளைத் …………………………. (திருத்து)
Answer:
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கின்றது. (திகழ்)
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்து கொள்வாள். (கலந்துகொள்)
3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. (பேசு)
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றார்கள். (செல்)
5. தவறுகளைத் திருத்தினான். (திருத்து)

4. வடிவம் மாற்றுக.
பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.
மருதூர் அரசு மேனிலைப் பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த ‘உள்ளங்கை உலகம்’ என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் (கின்னஸ் சாதனை படைத்த) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.
Answer:

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

அறிவிப்பு
நூல் வெளியீட்டு விழா

இடம் : வெள்ளி விழா அரங்கம், அரசு மேனிலைப் பள்ளி, மருதூர்.
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆனிமாதம் 7 ஆம் நாள் (21.06.2018)
முன்னிலை : பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், திருமிகு. மலரவன் அவர்கள்
தலைமை : பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. முஸ்தபா, M.A., M.Ed., அவர்கள்,
வரவேற்புரை : இலக்கிய மன்றச் செயலர்
சிறப்புரை : கின்னஸ் சாதனை படைத்த முன்னாள் மாணவர் கவிஞர். இன்சுவை
நூல் வெளியீடு : பூங்குழலி படைத்த “உள்ளங்கை உலகம்”
நன்றியுரை : ரா. அன்பரசன், பள்ளி மாணவர் தலைவர்.
அனைவரும் வருக! அமுதச் சுவை பருக!!

Question 5.
தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி ………………………….
2. சித்திரமும் கைப்பழக்கம் ………………………….
3. கல்லாடம் படித்தவரோடு ………………………….
4. கற்றோர்க்குச் சென்ற ………………………….
Answer:
1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்
2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Question 6.
கடிதம் எழுதுக.
உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
Answer:

விருதுநகர்,
28.03.2018

அன்புள்ள நண்பன் எழிலனுக்கு,
பாலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் இறையருளால் நலமுடன் இருப்பீர்கள்.

உன் பள்ளியில் திருப்புதல் தேர்வு, தேர்வுகளுக்கான பயிற்சி எல்லாம் நிறைவு பெற்றுவிட்டதா?
எழிலன்……. இந்த கடிதத்தின் நோக்கம் என்ன தெரியுமா? என் பிறந்தநாளை கடந்த மாதம் 7.2.18 அன்று கொண்டாடும் போது நீ எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய் அல்லவா? சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்தபோது பரிசுப்பொருளைப் பிரித்து வியந்து போனேன்.

எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

சிறுவர்களுக்கான கதைகள், உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா! நன்கு படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.

அன்புடன்,
பாலன்.

முகவரி:
அ. எழிலன், த/பெ மதியரசன்,
1/3, கூலமாட வீதி, கோவை.

Question 7.
நயம் பாராட்டுக :
விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே! – ம.இலெ. தங்கப்பா
Answer:

இலக்கிய நயம் பாராட்டுதல் ஆசிரியர்

முன்னுரை :
ம.இலெ.தங்கப்பா ஓர் இயற்கைக் கவிஞர் பாரதியாரின் ‘குயில்பாட்டு’ போல பாடியிருக்கிறார். பாட்டு என்பது இசையுடன் தொடர்பு கொண்டது. அப்போது தான் பாட்டு உயிர் பெறுகிறது. அத்தகைய உயிர்ப்பை இப்பாடலில் காண முடிகிறது.

திரண்ட கருத்து :
நெடுவானம், கடற்பரப்பு, பெருமலை, பள்ளத்தாக்கு, பொழிகின்ற, புனலருவி அழகில், காட்டில், புல்வெளியில், நல் வயலில், விலங்கில், பறவைகளில் இன்னும் தெரிகின்ற பொருள்களில். எல்லாம் பயின்று எம் நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே! மக்கள் மனத்திலும் நீ குடியிருக்க வேண்டும். தூய்மை ஊற்றே, அழகு என்னும் பெருமை கொண்ட ஒழுங்கே மக்கள் மனத்தில் நீ குடியிருக்க வேண்டுவேன்.

எதுகை நயம் :
இப்பாடலில் எதுகை நயம் அழகுற அமைந்து விளங்குகிறது எனலாம். அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

சீர் எதுகை :
பொழிகின்ற பொழிலில்
புல்வெளியில் நல்வயலில்

மோனை நயம் : அடிதோறும், சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.
விரிகின்ற – விண்ணோங்கு
பொழிகின்ற – புனலருவி பொழிலில்
தெரிகின்ற – திகழ்ந்து
தெவிட்டாத – தூய்மை
அழகு – அகத்திலும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

சொல் நயம் :
கவிஞர், நுண்பாட்டு என்ற சொல்லில் ‘நுட்பமான பாட்டு’ என்றே குறிப்பிடுகிறார். பாட்டுக்கு, ‘அழகு என்னும் பேரொழுங்கு’ என்ற அடை கொடுத்துப் பாடுகிறார்.

பொருள் நயம் :
விண்ணோங்கு, புனலருவிப் பொழில், தெவிட்டாத நுண்பாட்டே என்று பொருள் நயம் புலப்படப் பாடுகிறார்.

நிறைவுரை :
இயற்கையை வருணிப்பதில் தலை சிறந்து விளங்கும் ம.இலெ.தங்கப்பாவை அழகியல் கவிஞர்’ என்று கூறினால் அது மிகையாது.

Question 8.
நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க :
உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 6

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

மொழியோடு விளையாடு

Question 1.
அந்தாதிச் சொற்களை உருவாக்குக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 14
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 7

Question 2.
அகராதியில் காண்க.
நயவாமை, கிளத்தல், கேழ்பு, புரிசை,செம்மல்
Answer:
நயவாமை – விரும்பாமை
கிளத்தல் – எழுப்பல், சொல்லுதல், பேசுதல்
கேழ்பு – நன்மை
புரிசை – மதில்
செம்மல் – அரசன், அருகன், தலைமகன், பழம்பூ, புதல்வன், பெருமையிற் சிறந்தோம், உள்ளநிறைவு, நீர், தருக்கு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Question 3.
கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 15
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 8

Question 4.
தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 9

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Question 5.
அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க. (திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை )

எ.கா: நான் திடலில் ஓடினேன். (தன்வினை)
நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன். (பிறவினை )
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 16
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 10

காவியா – வரை காவியா போட்டியில் வரைந்தாள். (தன்வினை)
காவியா போட்டியில் ஓவியத்தை வரைவித்தாள். (பிறவினை )
கவிதை – நனை கவிதை மழையில் நனைந்தேன். (தன்வினை)
இரகு கவிதை மழையில் நனைவித்தான். (பிறவினை )
இலை – அசை இலை வேகமாக அசைந்தது. (தன்வினை)
காற்று இலையை வேகமாக அசைவித்தது. (பிறவினை )
மழை – சேர் மழை மண்ணை சேர்ந்தது. (தன்வினை)
மழைநீரை மண்ணில் சேர்த்தான். (பிறவினை )

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 17
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 11

மனிதர்களே,
பத்தோடு பதினொன்றாக வாழாதீர்…….
இக்கரைக்கு அக்கரை பச்சை யென்று
வேதாந்தம் பேசி மூச்சு முட்டி வாழாதீர்……
சவாலை சந்தியுங்கள் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள்
“வாய்ப்புகளை நழுவ விடாதீர்”

செயல்திட்டம்

நீங்கள் வாழும் பகுதியில் மக்கள் பேசும் மொழிகளைப் பட்டியலிட்டு அம்மொழி பேசப்படுகின்ற இடங்களை நிலப்படத்தில் வண்ணமிட்டுக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 12

உங்களுடைய நாட்குறிப்பில் இடம் பெற்ற ஒருவாரத்திற்குரிய மகிழ்ச்சியான செய்திகளைக் தொகுத்து அட்டவணைப்படுத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 18
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 13

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

கலைச்சொல் அறிவோம்

உருபன் – Morpheme
ஒலியன் – Phoneme
ஒப்பிலக்கணம் – Comparative Grammar
பேரகராதி – Lexicon

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
செய்வினையை, செயப்பாட்டுவினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை சான்றுடன் எழுதுக.
Answer:
செய்வினையை, செயப்பாட்டு வினையாக மாற்ற பயன்படும் துணை வினைகள் படு, பெறு ஆகும்.

Question 2.
வீணையோடு வந்தாள், கிளியே பேசு தொடர் வகையைச் சுட்டுக.
Answer:
வீணையோடு வந்தாள் – செய்தித் தொடர்; கிளியே பேசு – கட்டளைத் தொடர்

சிறுவினா

Question 1.
தன்வினை, பிறவினை, காரணவினைகளை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்திக் காட்டுக.
Answer:
தன்வினை : வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும். எ.கா: பந்து உருண்டது.

பிறவினை :
வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும். எ.கா. பந்தை உருட்டினான்

காரணவினை :
எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரணவினை
எ.கா. பந்தை உருட்ட வைத்தான்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 1

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை…………………
அ) பெயர்ப் பயனிலை
ஆ) வினைப் பயனிலை
இ) உரிப் பயனிலை
ஈ) வினா பயனிலை
Answer:
ஆ) வினைப் பயனிலை

Question 2.
‘சொன்னவள் கலா’ இதில் வரும் பயனிலை ………..
அ) வினைப் பயனிலை
ஆ) வினாப் பயனிலை
இ) இடைப் பயனிலை
ஈ) பெயர்ப் பயனிலை
Answer:
ஈ) பெயர்ப் பயனிலை

Question 3.
‘அவன் திருந்தினான்’ எவ்வகைத் தொடர்?
அ) செவினைத் தொடர்
ஆ) வினாத்தொடர்
இ) தன்வினைத் தொடர்
ஈ) பிறவினைத் தொடர்
Answer:
இ) தன்வினைத் தொடர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Question 4.
ஒரு சொற்றொடரில் அமையும் வினைச்சொல் ………… ஆகும்.
விடை:
பயனிலை

Question 5.
எழுவாய் ஒரு வினையைச் செய்ய அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே …………. ஆகும்.
Answer:
செயப்படுபொருள்

பகுபத உறுப்பிலக்கணம்

  • பதம் (சொல்) இரு வகைப்படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும்.
  • பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும்.
  • இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 2
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம் - 4

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

எழுத்துப்பேறு

  • பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.
  • பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும்.
  • சாரியை வரும் இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு. எ.கா:

1. வந்தனன் – வா(வ)+த்(ந்)+த்+அன்+அன்
வா – பகுதி (‘வ’ ஆனது விகாரம்)
த்(ந்) – சந்தி (‘ந்’ ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

2. செய்யாதே – செய்+ய்+ஆ+த்+ஏ
செய் – பகுதி
ய் – சந்தி
ஆ – எதிர்மறை இடைநிலை
த் – எழுத்துப்பேறு
ஏ – முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி

இன்றியமையாத இலக்கணக் குறிப்புகள்

1. பெயரெச்சம் :
வினை முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் எச்சம் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவது. பெயரெச்சம் (எ.கா) படித்த மாணவன், படித்த ………… (அ) நடந்த (த் + அ) அ என்ற விகுதியுடன் முடியும்.

2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் :
ஓர் எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசியில் ‘த’ கெட்டு விடுவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இது ‘ஆ’ என்ற ஒசையுடன் முடியும்.
(அணையாத விளக்கு) (அணையா விளக்கு) அணையா …………… (ஆ) (யா = யா + ஆ)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

3. வினையெச்சம் :
வினை முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் ஒரு எச்சம் வினைச்சொல்லக் கொண்டு முடிவது. வினையெச்சம். இது “உ” “இ” விகுதிகளுடன் முடியும்.
படித்து முடித்தான் படித்து …………. (ஊ) நடந்து ……………. கூறி (த் + உ)

4. வியங்கோள் வினைமுற்று :
வாழ்த்துதல், வைதல், வேண்டல் பொருளில் வருவது. காலம் காட்டாது. இது க, இய, இயர் – என்ற விகுதிகளுடன் முடியும்
(எ.கா) செல்க, வாழ்க, வாழி, வாழிய, வாழியர்.

5. வினையாலணையும் பெயர் :
ஒரு வினைமுற்று வினையைக் குறிக்காமல் வினையைச் செய்த கருத்தாவைக் குறிக்கும் பெயராய் வருவது வினையாலணையும் பெயர். எழுதினான் – எழுதியவன் என வரும். அது அன், ஆன், அர், ஆர், ஒர், நர் ஆகிய ஓசைகளுடன் முடியும்
(எ.கா) இழந்தவன், சென்றனர், அனுப்புநர்.

6. சொல்லிசை அளபெடை :
மூன்று மாத்திரை அளவில் வினையெச்சப் பொருளில் வரும் அளபெடை இது ‘இ’ என்று எழுத்துடன் முடியும்.
(எ.கா) ஓரீஇ, நம்பெழீஇ, உரனசை இ.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

7. இன்னிசை அளபெடை :
மூன்று மாத்திரை அளவில் மூன்று அசைச் சொற்களில் அமைவது இன்னிசை அளபெடை
(எ.கா) உண்பதூம் (உண்/பதூ/உம்) உடுப்பதூஉம்.

8. செய்யுளிசை அளபெடை :
மூன்று மாத்திரை அளவில் இரண்டு அசை சொற்களில் அமைவது செய்யுளிசை அளபெடை (எ.கா) ஆஅதும், கழுஉமணி, படாஅபறை, தொழா அர்.

9. அடுக்குத் தொடர் :
அர்த்தமுள்ள சொற்கள் பலமுறை அடுக்கி வருவது
(எ.கா) எண்ண எண்ண , பலப்பல, தீ தீ தீ

10. இரட்டைக் கிளவி :
அர்த்தமுள்ள சொற்கள் வினையைச் சிறப்பிக்க இரட்டையாக மட்டும் அமைவது.
(எ.கா) மடமட, சலசல.

11. ஒரு பொருட் பன்மொழி :
ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களுடன் அமைவது ஒரு பொருட் பன்மொழி. (எ.கா) தீயழல், நடுமையம், ஒரு தனி.

12. பண்புத் தொகை :
இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் மை மறைந்திருப்பது.
(எ.கா) சிற்றில் (சிறுமை + இல்) பைந்தமிழ் = (பழமை + தமிழ்), செங்கோல் = (செம்மை + கோல்).

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

13. வினைத் தொகை :
இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் காலம் காட்டும் இடைநிலை கின்ற மறைந்திருப்பது.
(எ.கா) தொடுகடல் (தொடுகின்ற கடல்)

14. உவமைத் தொகை :
இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் போன்ற’ அல்லது ‘போல’ உவம உருபு மறைந்திருப்பது.
(எ.கா) பவளவாய் (பவளம் போன்ற வாய்)

15. வேற்றுமைத் தொகை :
இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் வேற்றுமை உருபுகளில் (ஐ, ஆல், இன், கு, அது, கண்) ஏதேனும் ஒன்று மறைந்திருப்பது.
(எ.கா) கூலி வேலை (கூலிக்கு வேலை).

16. உம்மைத் தொகை :
இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் “உம்” மறைந்திருப்பது (எ.கா) செடி கொடிகள் (செடிகளும், கொடிகளும் என்பதில் உம் மறைந்தது).

17. எண்ணும்மை :
உம்மைத் தொகையைப் போல் உம் மறையாமல் எண்ணிக்கை காண்பதற்காக வெளிப்படையாக இருப்பது எண்ணும்மை
(எ.கா) கற்பும் காதலும் (உம் – வெளிப்படை)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

18. அன்மொழித் தொகை :
ஆகுபெயர் போல் ஒரு தொகைச் சொல் வேறு அல்லாத ஒன்றைக் குறிப்பது அன்மொழித் தொகை (எ.கா) செந்தாமரை (பண்புத் தொகை) செந்தாமரை வந்தாள் (அன்மொழித் தொகை)

19. உருவகம் : உம்மைத் தொகையை முன் பின்னாக மாற்றுவது உருவகம். இது, உவமையைப் பொருள் மேல் ஏற்று இடையில் ஆகிய என்ற சொல் மறைந்து வரும்.
(எ.கா) மதிமுகம் (மதி போன்ற முகம் – உவமைத் தொகை) முகமதி (முகமாகிய மதி உருவகம்)

20. தன்மை பன்மை வினைமுற்று :
அம் ஓம் என்ற விகுதிகளுடன் முடிவது (எ.கா) போற்றுதும்.

21. செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று :
செய்யும் என்ற சொல்லைப் போன்றே தொனிப்பது
(எ.கா) படும்.

22. செயின் என்னும் வாய்ப்பாடு வினைமுற்று :
செயின் என்ற சொல்லைப் போன்றே தொளிப்பது.
(எ.கா) பெறின்.

23. ஆகுபெயர் :
ஒன்றின் இயற்பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது.
(எ.கா) உலகு (உலக மக்களைக் குறிக்கும்) ஊர் சிரித்தது.

24. தொழிற்பெயர் :
ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர், காலம் காட்டாது. இது தல், அல், கை, மை, ஐ, சி, பு என்ற விகுதிகளுடன் அமையும்.
(எ.கா) பாடுதல், பாடல், ஆட்டம், வீற்றிருக்கை, கொல்லாமை, எஞ்சாமை.

25. முதல் நிலை திரிந்த தொழிற்பெயர் :
ஒரு தொழிற்பெயரின் விகுதி கெட்டு, முதல் எழுத்தும் மாறி ஒலிப்பது (எ.கா) கெடுதல்.
கெடுதல் – கெடு – கேடு
பெறுதல் – பெறு – பேறு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

26. இலக்கணப் போலி :
ஓர் இலக்கண அமைப்புடைய சொல்லுக்கு போலியாக அமைவது (எ.கா) தசை (சதை)

27. எழுத்துப் போலி :
ஒரு சொல்லில் எழுத்து மாறினாலும் பொருள் மாறாது. இது முதல், இடை, கடைசியில் அமையும். முற்றிலும் மாறுபட்டு அமையும்.
(எ.கா) நலன் (நலம்) கடைப்போலி, அஞ்சு (ஐந்து) முற்றுப்போலி

28. உரிச் சொல் தொடர் :
தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாத, சால, உறு, தவ, நனி, கூர், கழி, வான், மா, தட, வை, மழு, கடி போன்ற சொற்கள் வேறு ஒரு சொல்லுடன் உரிமை பெற்றுத் தொடர்ந்து வருவது இது அதன் பண்பை விளக்கும்.
(எ.கா) மாநாடு, உறுபசி, சாலப் பேசினான்.

29. மருஉச் சொல் :
காலப்போக்கில் மருவி மாறி வருபவை (எ.கா) எந்தை (என் தந்தை ) பேர் (பெயர்)

30. இடைக்குறை விகாரம் :
ஒரு சொல்லின் இடையில் ஓர் எழுத்து குறைந்து மாறுபட்டாலும் அதே பொருளைத் தருவது (எ.கா) உளம் (உள்ளம்) கணீர் (கண்ணீ ர்),

31. இரு பெயரொட்டுப் பண்புத் தொகை :
இரு சொற்களில் முதல் சொல் சிறப்புப் பெயராகவும் அடுத்துள்ள சொல் பொதுப் பெயராகவும் இருப்பது.
(எ.கா) தமிழ்மொழி, இமயமலை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

32. தன்மை ஒருமை வினைமுற்று :
என், ஏன் என்ற விகுதிகளுடன் முடிவது. (எ.கா) கொள்வேன்.

33. முற்றெச்சம் :
ஒரு வினைமுற்றுச் சொல் வினையெச்சப் பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடியும். (எ.கா) படித்தனன் தேறினான்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

Students can download 5th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.3

Question 1.
The angles below 90° and above 0° are called as _________
Answer:
acute angle

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

Question 2.
The angles below 180° and above 90° are called as __________
Answer:
obtuse angle.

Question 3.
By joining two right angles ________ angle is formed
Answer:
straight angle

Question 4.
The obtuse angle in ΔABC is ________
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 1
a. ∠A
b. ∠B
c. ∠C
Answer:
c) ∠C

Question 5.
Hand of a clock at 3.20 shows ________ angle.
Answer:
acute

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

Question 6.
In the following letters, which one forms the right angle in it?
a. L
b. K
c. Z
d. N
Answer:
a. L

Question 7.
Circle the right angle.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 2
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 3
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 4
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 3

Question 8.
The angle shown in this picture is
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 6
a. more than 120°
b. Less than 45°
c. more than 180°
d. 90°
Answer:
d. 90°

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

Question 9.
The angle formed by the nail cutter is _______
Answer:
acute

Question 10.
Name the angles formed when the vessels are lifted by tongs in the kitchen.
Answer:
obtuse angle

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2

Students can download 5th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.2

Question 1.
Among the following shapes, find out which one would look the same after one-fourth turn. Put a (✓) mark.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1a 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1a 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2

Question 2.
Among the following letters, find out which one would look same after half turn.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1a 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1a 6

Question 3.
Find the numbers which will look same on a half-turn
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1a 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1a 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2

Question 4.
How the following numbers are changed after half-turn
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1a 9
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1a 10

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்

Students can Download 9th Tamil Chapter 1.4 வளரும் செல்வம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 1.4 வளரும் செல்வம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்

Question 1.
நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றில் இடம் பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை அறிந்து எழுதுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம் - 6
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம் - 5

Question 2.
உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம்செய்க.
அருண் : ஹலோ! நண்பா !
நளன் : ………………………………..
அருண் : உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?
நளன் : ஆமாம்! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன நீ என்ன செய்கிறாய். இப்போது நான்
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிகிறேன், நீ…..
அருண் : ………………………………..
நளன் : அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி வணிகவியல் முதலாமாண்டு படிக்கிறான்.
அருண் : ………………………………..
நளன் : மீண்டும் பார்க்கலாம்.
Answer:
அருண் : ஹலோ! நண்பா !
நளன் : வணக்கம் நண்பா .
அருண் : உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?
நளன் : ஆமாம்! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன நீ என்ன செய்கிறாய். இப்போது நான்
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிகிறேன், நீ…..
அருண் : நான் நந்தனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.
நளன் : அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி வணிகவியல் முதலாமாண்டு படிக்கிறான். அருண் : மிக்க நன்றி, மீண்டும் சந்திப்போம்.
நளன் : மீண்டும் பார்க்கலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம் - 1
அ) வங்கம், மானு, தாழிசை, பிறவினை
ஆ) தாழிசை, மானு, பிறவினை, வங்கம்
இ) பிறவினை, தாழிசை, மானு, வங்கம்
ஈ) மானு, பிறவினை, வங்கம், தாழிசை
Answer:
அ) வங்கம், மானு, தாழிசை, பிறவினை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்

குறுவினா

Question 1.
கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களை தருக.
i) Moniter – திரை
ii) Mouse – நகர்த்தி (அல்லது) சுட்டி
iii) Keyboard – விசைப்பலகை
iv) CD – குறுந்தட்டு
v) Download – பதிவிறக்கம்
vi) File – கோப்பு
vii) E-Mail – மின்ன ஞ்சல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்

சிறுவினா

Question 1.
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
Answer:
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொற்கள் கிரேக்க மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளன.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம் - 2

Question 2.
வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அதற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம் - 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்

கூடுதல் வினாக்கள்

குறுவினா

Question 1.
கடற்கலன்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
நாவாய், வங்கம், தோணி, கலம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்

சிறுவினா

Question 1.
தமிழில் கணினி தொடர்பான சொற்களைப் பட்டியலிடுக.
Answer:

  • சாப்ட்வேர் – மென்பொருள்
  • கர்சர் – ஏவி அல்லது சுட்டி
  • க்ராப் – செதுக்கி
  • போல்டர் – உறை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம் - 4

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

Students can Download 9th Tamil Chapter 1.3 தமிழ்விடு தூது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 1.3 தமிழ்விடு தூது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

Question 1.
நமது எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதாக எடுத்துரைக்க உதவுவது தமிழ் மொழி என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் உரை ஒன்று எழுதுக.
Answer:
“நண்ணு மிளவைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்த மொழி – எங்கள்
கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தோ டிசைத்த மொழி”

என்று வரத நஞ்சைய பிள்ளை தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுகிறார். “இனிமையும் நீர்மையும் தமிழ் எனல்” ஆகும் என்பது புகழ்மொழியாகும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் பாடினார். தமிழ் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதில் எடுத்துரைக்கத் தக்கதாகும்.

தமிழ் மொழியிலுள்ள சொற்கட்டமைப்பும் வாக்கியக் கட்டுக் கோப்பும் எளிமையாகவும் திறமாகவும் அமைந்துள்ளன. இலக்கணக் கட்டுப்பாடு மொழிக்கு வேலி போன்றது ஆகும். சொற்கள் இலக்கியத்திற்கு என்றும் இலக்கணத்திற்கு என்றும் தனித்தனியே அமைந்துள்ளன.

இலக்கியத்திற்கு இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு சொற்களையும் பயன்படுத்துகிறோம். இலக்கணத்திற்குப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் தனியமைப்புப் பயன்பாட்டுக்குரியது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

தமிழ் மொழியின் இனிமையும் எளிமையும் சமயம் பரப்ப தமிழகத்துக்கு வந்த மேனாட்டுக் கிறித்துவ சமயச் சான்றோர்களைக் கவர்ந்தது. அவர்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் இனிய எளிய தமிழில் எடுத்துரைக்கச் செய்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் தேசியத்தை வளர்த்தது. தேசியம் தமிழை எடுத்துக் கொண்டது. கருத்துகளையும் எண்ணங்களையும் எடுத்துச் சொல்ல முடிந்தது. அறிவியல் நுட்பங்களை எடுத்துச் சொல்ல புதுப்புதுச் சொற்களைப் படைத்து அளித்ததனால் சொல்வளம் பெருகியது. தமிழ் கணினிப் பயன்பாட்டிற்கு வந்தவுடன் கணினித் தமிழ் என்ற துறை முகிழ்த்தது.
நமது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க மொழி பயன்பட்டது. அம்மொழி வழியே கருத்துகளைப் பிறருக்குப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

Quesiton 2.
படித்துத் திரட்டுக.
“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க”
– கவியோகி சுத்தானந்த பாரதியார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

இப்பாடல் காட்டும் இலக்கியங்களின் பெயர்களை வரிசைப்படுத்துக.
Answer:
இப்பாடல் காட்டும் இலக்கியங்கள்

குண்டலமும் – குண்டலகேசி
கைக்கு வளையாபதி – வளையாபதி
சிந்தாமணி – சீவக சிந்தாமணி
பொன்முடி சூளாமணி – சூளாமணி
செங்கோலாய்த் திருக்குறள் – திருக்குறள்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது - 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள்
ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம்
ஈ) தனிப்பாடல்
Answer:
இ) சிற்றிலக்கியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

Question 2.
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
i) ………………. இனம்
ii) வண்ணம்…………………..
iii) …………… குணம்
iv) வனப்பு …………………….
அ) மூன்று, நூறு, பத்து, எட்டு
ஆ) எட்டு, நூறு, பத்து, மூன்று
இ) பத்து, நூறு, எட்டு, மூன்று
ஈ) நூறு, பத்து, எட்டு, மூன்று
Answer:
அ) மூன்று, நூறு, பத்து, எட்டு

Question 3.
அழியா வனப்பு, ஒழியா வனப்பு சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு
அ) வேற்றுமைத்தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
Answer:
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

குறுவினா

Question 1.
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
Answer:
இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

நெடுவினா

Question 1.
‘தூது அனுப்பத் தமிழே சிறந்தது’ – தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது ஆகும். வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்றும் இதனை அழைப்பர். தலைவர் தலைவியர்களுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் அன்பு காட்டுவர். அதற்கு அடையாளமாக மாலை வாங்கி வருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகப் பாடுவது ஆகும். இது கலிவெண்பாவால் பாடப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண், தன் காதலைக் கூறிவருமாறு தமிழைத் தூது விடுவதாகப் பாடப்படுவதாகும். கலிவெண்பாவால் பாடப்படும். இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் :
தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் வீடுபேற்றைத் தரும் கனியே! இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் சிறந்து விளங்கும் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் மகிழ்ந்து விடுக்கும் விண்ணப்பம் ஒன்றுள்ளது அதைக்

கேட்பாயாக. மூவகைப் பாவினங்களிலும் உறவு உண்டோ ?
தமிழே, உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புப் பெற்றனர். நீயும் படிக்கக் கொடுப்பாய். அதனால் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களிலும் உறவு உண்டோ ?

‘சிந்து’ என்றழைப்பது தகுமோ?
தமிழ்ப்பாவகை அனைத்தும் பொருந்தி நின்று என்றுமே சிந்தாமணியாய் இருக்கும் உன்னை , சிந்து என்றழைப்பது உன் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு கூறிய நா இற்று விழும்.

பத்துக் குணங்கள் பொருந்திய தமிழே!
வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம் (அமைதி) இராசசம் (தீவிரமான குணம்) தாமசம் (சோம்பல்) மூன்று குணங்கள் பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக் குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை , காந்தம், வலி, சமாதி எனும் பத்துக் குணங்களைப் பெற்றுள்ளாய்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

நூறு வண்ணங்கள் கொண்ட வண்டமிழே:
மனிதர்களால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை (பொன் நிறம்) பசுமை என ஐந்தே. நீயோ, புலவர்கள் தெளிந்த குறில், அகவல், தூங்கிசை, வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

எட்டழகு பெற்ற கட்டழகுத் தமிழே :
நாவினால் அறியும் சுவைகள் ஆறு. நீயோ, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமனிலை பெற்றுள்ளாய். தமிழை அறியாதவர்களுக்கு அழகு ஒன்றே ஒன்று என்றில்லாமல் அதிகம் உண்டோ ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்
அ) தமிழ்விடு தூது
ஆ) தமிழோவியம்
இ) திருக்குற்றால குறவஞ்சி
ஈ) முக்கூடற்பள்ளு
Answer:
அ) தமிழ்விடு தூது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

Question 2.
தமிழின் வண்ணங்கள்…………….
அ) 20
ஆ) 96
இ) 18
ஈ) 100
Answer:
ஈ) 100

Question 3.
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்…………………
அ) பெருஞ்சேரல் இரும்பொறை
ஆ) உ.வே.சாமிநாதர்
இ) அடியார்க்கு நல்லார்
ஈ) ஆறுமுகநாவலர்
Answer:
ஆ) உ.வே.சாமிநாதர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

Question 4.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அ) சத்துவம்
ஆ) புலம்
இ) இராசசம்
ஈ) தாமசம்
Answer:
ஆ) புலம்

Question 5.
தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்………………
அ) பலபட்டடைச் சொக்கநாதர்
ஆ) என்னயினாப் புலவர்
இ) சத்திமுத்தப் புலவர்
ஈ) எவருமில்லை
Answer:
ஈ) எவருமில்லை

நிரப்புக

6. இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலை ……………
Answer:
கண்ணி

7. சிந்து என்பது ஒருவகை …………
Answer:
இசைப்பாடல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

8. சிந்தாமணி என்பதன் பொருள்………………….
Answer:
சீவகசிந்தாமணி, சிதறாதமணி

9. செவிக்கு விருந்தளிக்கும் சுவைகள்………………
Answer:
ஒன்பது

10. பாவினங்க ள் …………..
Answer:
மூன்று

11. தாழிசை, துறை, விருத்தம் என்பவை ………..
Answer:
பாவினங்கள்

12. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுவது …………
Answer:
தூது இலக்கியம்

13. தூது இலக்கியம் பாடப்படும் பாவகை …………..
Answer:
கலி வெண்பா

14. தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன் ………….
Answer:
மதுரை சொக்கநாதர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

15. தமிழ்விடு தூது நூலை முதன்முதலில் பதிப்பித்தவர்
Answer:
உ.வே.சா

16. தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு ……….
Answer:
1930

17. தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள் ……….
Answer:
268

18. வனப்பின் வகைகள் ………..
Answer:
எட்டு

19. செறிவு, சமனிலை பத்தும் ……..
Answer:
குண அணிகள்

20. ‘தாமசம்’ என்ப து ……….
Answer:
சோம்பல், தாழ்மை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

21. முற்றும் உணர்ந்த தேவர்கள் பெற்றுள்ள குணம்
Answer:
மூன்று

குறுவினா

Question 1.
எவையெல்லாம் தூதாக அனுப்பப்படும்?
Answer:
அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், தமிழ், மான் ஆகிய பத்தும் தூதாக அனுப்பப்படும்.

Question 2.
வனப்பு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வனப்பு எட்டு வகைப்படும்.
அவை அம்மை அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகும்.

Question 3.
குற்றமிலா பத்துக் குணங்கள் யாவை?
Answer:
பத்துக் குணங்களாவன: செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்பவை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

தெளிவுரை :

தமிழ், தெளிந்த அமுதாய் அமிழ்தினும் மேலான வீடுபேற்றைத் தரும் கனியாக இருக்கிறது. இயல், இசை, நாடகம் என முத்தமிழாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! உன்னிடம் மகிழ்ந்து கேட்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது, நீ அதைக் கேட்பாயாக.

தமிழே! உன்னிடமிருந்து பள்ளு, குறவஞ்சி எனும் நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்படைந்தனர். நீயும் அவற்றை எல்லாம் படிக்கக் கொடுப்பாய் அதனால், தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவினப் பாவினங்களிலும் உறவு உண்டோ ?

பாவின் திறம் பொருந்தி நின்று, என்றுமே சிந்தாமணியாய் இருக்கும் உன்னை “சிந்து” என்றழைப்பது உன் பெருமைக்குத் தகுமோ? ஒருவேளை அவ்வாறு கூறிவிட்டால் ‘நா’ இற்று விழும். வானத்தில் வசிக்கும் தேவர்கள் கூட சத்துவம், இராசசம், தாமசம் ஆகிய முக்குணங்களைப் பெற்றிருக்கிறார்கள். நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் பத்துக் குணங்களைப் பெற்றுள்ளாய்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

மனிதனின் கை வண்ணங்கள் ஐந்திற்கு மேல் இல்லை நீயோ, புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், துங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டிருக்கிறாய்.

நாவில் தோன்றும் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ, செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். தமிழை அறியாதவர்க்கு அழகு ஒன்றே ஒன்று. நீயோ எண்வகை வனப்புகளைப் பெற்றுள்ளாய்.

சொற்பொருள் :

குறம், பள்ளு – 96 வகை சிற்றிலக்கியங்களுள் இரண்டு
மூன்றினம் – பாவகைகளின் பிரிவுகள் தாழிசை, துறை, விருத்தம்
சிந்தாமணி – 1. சீவகசிந்தாமணி, 2. சிதறாத மணி
சிந்து – ஒருவகை இசைப்பாடல். யாப்பு வகைகளுள் ஒன்று காவடிச்சிந்து, மூன்று சீர்களில் வரும் செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – பாரதியார் ‘சிந்துக்குத் தந்தை’ என்பதைத் தெரிக.
முக்குணம் – மூன்று குணம் சத்துவம் (அமைதி, மேன்மை ) இராசசம் (தீவிரமான
செயல், போர்) தாமசம் (சோம்பல், தாழ்மை)
வண்ணங்கள் ஐந்து – வெள்ளை , சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை
வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை முதலான இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு
ஊனரசம் – குறையுடைய சுவை.
நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம் நகை, சமநிலை
வனப்பு – அழகு (அம்மை, தொன்மை, தோல், விருந்து இயைபு, புலன், இழைபு) என எட்டாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

இலக்கணக் குறிப்பு :

முத்திக்கனி – உருவகம்
தெள்ளமுது – பண்புத்தொகை
குற்றமிலா – ஈறுகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம்
செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத்தொகை
தெள்ளமுது – பண்புத்தொகை
நா – ஒரெழுத்து ஒருமொழி
சிந்தா மணி, அழியா வனப்பு, ஒழியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம் :

1. கொள்வார் – கொள் + வ் + ஆர்
(2. உணர்ந்த
கொள் – பகுதி,
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2. உணர்ந்த – உணர் + த்(ந்) + த் + அ
உணர் – பகுதி
த்(ந்) – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்,
த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

3. சொல்லிய – சொல் + இ(ன்) + ய் + அ
சொல் – பகுதி,
இன் – இறந்தகால இடைநிலை
ய் – உடம்படு மெய் சந்தி,
அ – பெயரெச்ச விகுதி

4. பெற்றாய் – பெறு(பெற்று) + ஆய்
பெறு – பகுதி (பெற்று) என ஒற்று இரட்டித்து இறந்த காலம் காட்டியது
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

5. உடையாய் – உடை + ய் + ஆய்
உடை – பகுதி
ய் – உடன்படு மெய் சந்தி,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

Students can Download 9th Tamil Chapter 1.2 தமிழோவியம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 1.2 தமிழோவியம்

கற்பவை கற்றபின்

Question 1
பிறமொழி கலப்பின்றித் தனித்தமிழில் இரண்டு மணித்துளிகள் வகுப்பறையில் பேசுக. பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசுதல்:
Answer:
அவையோர் அனைவருக்கும் வணக்கம்! என் உரையைக் கேட்க ஆவலுடன் அமர்ந்திருக்கும் எங்கள் தமிழ் ஐயா! அவர்களே! என் உடன் பயிலும் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் முன் தனித்தமிழில் உரையாடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

நான் உரையாற்ற எடுத்துக்கொண்ட தலைப்பே, “தனித்தமிழ்” என்பதுதான்.

நாம், நம் அன்றாட வாழ்வில் தமிழ்மொழியைச் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருக்கிறோம். பிறமொழிச்சொற்களைத் தமிழ்மொழி போலவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்பது, பள்ளிக்கு வருவது, கடைக்குச் செல்வது என அனைத்து நிலைகளிலும் நம்மை அறியாமலே பிறமொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். “மெல்லத் தமிழ் இனி சாகும்” என்று கவிஞர் வருந்தியது போலவே எனக்கும் வருத்தமாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே! அனைத்துத் துறை சார்ந்த சொற்கள், கலைச்சொற்கள் மட்டும் அல்ல அனைத்துத் தரவுகளும் நம் அமுதத் தமிழில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

கணினியைப் பயன்படுத்தும் நாம்……. எப்படித் தமிழைப் பயன்படுத்துவது என தயங்காதீர். அனைத்து கணினி சார்ந்த ஆங்கில வார்த்தைக்கும் செயலி, விரலி, சுட்டி, உலவி …… என தமிழில் சொற்கள் உண்டு.

எனவே, தனித்தமிழ் பயன்படுத்துவோம்! நம் கன்னித்தமிழை வளர்ப்போம்!!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

Question 2.
கவிதையைத் தொடர்க.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம் - 3
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம் - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ……………
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை.
ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை
இ) எதுகை, மோனை, இயைபு.
ஈ) மோனை, முரண், அந்தாதி.
Answer:
இ) எதுகை, மோனை, இயைபு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

குறுவினா

Question 1.
தமிழோவியம் கவிதையில் நும்மை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
Answer:
“மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்
மட்டுமே போதுமே ஓதி நட”
மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய குறள் மட்டுமே போதும் அதைப் படித்து நடக்க வேண்டும்.

Question 2.
“அகமாய் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்”
இலக்கியங்களின் பாடு பொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?
Answer:
பழந்தமிழ் இலக்கியங்கள், அகம் புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிகள், தமிழர்களின் இல்லற வாழ்வைச் சொல்லும் அக இலக்கியங்களையும் போர் வாழ்வைச் சொல்லும் புற இலக்கியங்களையும் உணர்த்துகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

சிறுவினா

Question 1.
காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
Answer:

  • தமிழ் மொழி தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது.
  • தமிழ் மொழி ஏனைய திராவிட மொழிகளைவிட தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.
  • பிற மொழித் தாக்கம் தமிழில் குறைவு.
  • ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளம் பெற்ற மொழி.
  • இந்தியாவில் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழில் அமைந்துள்ளன.
  • எண்ணற்ற வேர்ச்சொற்களைக் கொண்டு புதுப்புது சொற்களை உருவாக்கி அறிவியல்,
  • சமூகம், பண்பாட்டுத் துறைகளில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது தமிழ்.

Question 2.
புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
Answer:
முன்னுரை :
தமிழ்மொழி, இலக்கண இலக்கிய வளம் பெற்று செழித்தோங்கி இருக்கிறது. தமிழானது தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய அறிவுக்கருவூலம் நிறைந்துள்ள தொன்மை சான்ற மொழியாகும். தமிழ்மொழியின் சீர் இளமைத்திறம் வியந்து போற்ற வேண்டும். சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழ் புதுக்கோலம் பெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கான பங்கினை இக்கட்டுரையில் காண்போம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

அறிவியல் தமிழ் :
தமிழ், தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழியாக இருந்து பிற துறைகளோடு இணைந்து வாழும் மொழியாகக் கருதப்படுகிறது. “தமிழன் அறிவியல் முன்னோடி” என்று கொண்டல் சு.மகாதேவன் நிலை நாட்டுகிறார். ந. சுப்புரெட்டியார், ஜி.ஆர் தாமோதரன், எழுத்தாளர் சுஜாதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். எதிர்வரும் காலங்களில் என்பங்களிப்பை இதைவிடச் சிறப்பாகச் செய்வேன்.

ஊடகத்துறை :
நம் நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறையோடு பத்திரிகைத்துறையும் வளர்ந்து வந்திருக்கிறது. இதழியல் தமிழறிஞர்கள் பாரதியார், திரு.வி.க, சி.பா.ஆதித்தனார் வழி என் பங்கையும் அளிப்பேன். வானொலி, தொலைக்காட்சி, இணைய வலைத் தொலைபேசி ஆகியவற்றிற்கான இணையத் தமிழ் அகராதி கண்டுபிடிப்புக்கு முயற்சி செய்வேன்.

கணிப்பொறி :
இன்று வளர்ந்து நிற்கும் துறைகளுள் ஒன்று கணினித்துறை. ஆனால் இதில் இன்று வரை ஆங்கிலமே ஆட்சிசெய்து வருகிறது. மின்னணு அஞ்சல், பல்நோக்கு ஊடகம், மக்களை ஆட்சி செய்கிறது. வளர்ந்து வந்துள்ள உயிரோட்ட (Animation) வரைபடங்கள், ஒளிக்காட்சிப் படங்கள் (Vidio Pictures), வரைகலை (Graphies), எழுத்து (Text), ஒலி (Sound) ஆகியவற்றை எடுத்துச் சொல்ல தமிழ்ச் சொற்களைப் புதுப்பொலிவுடன் உருவாக்குவேன்.

நிறைவுரை :
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்; தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” எனும் பாரதியாரின் எண்ணங்களுக்குப் புதுமை வடிவம் தருவேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் ………..
அ) இலங்கை, சிங்கப்பூர்
ஆ) அமெரிக்கா, கனடா
இ) பிரான்சு, இங்கிலாந்து
ஈ) நார்வே, சுவீடன்
Answer:
அ) இலங்கை, சிங்கப்பூர்

Question 2.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் …..
அ) பாரதிதாசன்
ஆ) நாமக்கல் கவிஞர்
இ) கவிமணி
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

Question 3.
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
அ) கதை
ஆ) சிறுகதை
இ) கவிதை
ஈ) உரைநடை
Answer:
இ) கவிதை

நிரப்புக

4. ‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்……………
Answer:
ஈரோடு தமிழன்பன்

5. 2004 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல் ………….
Answer:
வணக்கம் வள்ளுவ

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

6. புதுக்கவிதை, சிறுகதை என பல படைப்புகளை வெளியிட்டவர் …………
Answer:
தமிழன்பன்

7. புதுப்புது வடிவங்களில் கவிதை நூல் இயற்றியவர் ………..
Answer:
தமிழன்பன்

8. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல்
Answer:
பிங்கல நிகண்டு

9. உலகத் தாய்மொழி நாள்
Answer:
பிப்ரவரி 21

10. ‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை ‘ என்ற வர் …………
Answer:
தமிழன்பன்

தெளிவுரை :

தமிழ், காலம் தோன்றும் முன் பிறந்தது. எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! அகமும் புறமும் அமைந்த இலக்கியங்களும் அவற்றை விளக்கிச் சொல்லும் இலக்கண நூல்களும் எம்மொழிக்கும் நிகரில்லாக் காப்பியங்களும் அமைந்திருக்கின்றன. அதை நினைத்து நெஞ்சம் மகிழ்ச்சியில் ஊர்வலம் நடத்தட்டும்.

இலக்கிய காலப்பகுதியில் ஏன் இவ்விருண்ட காலம் எனக்கேட்டு நீதியை ஏந்திய தீபமாய் பாட்டுக்கள் இடம் பெறும். இன்னும் மானிட மேன்மையைச் சாதித்துக் காட்டத் திருக்குறள் மட்டுமே போதும். அதைப் படித்து அதற்குத்தக நிற்க வேண்டும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்ச் சமயங்களை வளர்த்து வந்தது. சமயங்களும் தமிழை வளர்க்கத் தவறியதில்லை . தாயும் சேயும் போல தமிழும் சமயமும் இருந்தன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

சித்தர் வழித்தோன்றியவர்கள் பகுத்தறிவு ஒளியை நிலத்தில் பாய்ச்சினர்.

விரலை மடக்கிக் கொண்டவன் எழில் வீணையில் இசை தோன்றவில்லை எனச் சொல்வது போல் குறைகளைக் களைந்து விட்டுப் புதுக்கோலம் தழுவட்டும் தமிழ். நாளும் வளர்ப்போம் நற்றமிழை.

அருஞ்சொற்பொருள் :

அகமாய் – அக இலக்கியங்கள்
(நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநூறு, அகநானூறு, கலித்தொகை)
புறமாய் – புற இலக்கியம் (பதிற்றுப்பத்து, புறநானூறு)
அகமாய் புறமாய் – பரிபாடல்
இருட்டு – அறியாமை
சித்தர் – ஞான சித்தி பெற்றவர்
நிகரிலா – ஈடு இணையில்லா
ஓதி – கற்று

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

இலக்கணக் குறிப்பு :

எத்தனை எத்தனை – அடுக்குத் தொடர்
ஏந்தி – வினையெச்சம்
நிகரிலாக் காப்பியம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விட்டு விட்டு – அடுக்குத் தொடர்
காலமும் – முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம் - 1