Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

கற்பறை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 1.
ஐகார, ஔகார, மகர, ஆய்தக்குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்தெழுதுக.
Answer:
எடுத்துக்காட்டு :
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …………………
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஆ) ஒன்று

Question 2.
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ………………
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது
Answer:
ஈ) பணம் கிடைத்தது

Question 3.
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………….
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

குறு வினா

Question 1.
ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?
Answer:
ஔ, வௌ என ஔவைகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தன்னுடைய இரண்டு மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும்.

Question 2.
சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Answer:
ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை
முதல் – 1 1/2 மாத்திரை
இடை – 1 மாத்திரை
கடை – 1 மாத்திரை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 3.
மகரக்குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
1. வலம் வந்தான்
2. போன்ம்

மொழியை ஆழ்வோம்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
காட்டு வளமே நாட்டு வளம்!
Answer:
அனைவருக்கும் வணக்கம். காட்டு வளமே நாட்டு வளம்! என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஒரு நாட்டு வளம் எப்படி முடிவு செய்யப்படுகின்றது என்றால், அந்த நாட்டில் உள்ள நீர் வளம், நில வளம், தொழில் வளம் ஆகியவை கொண்டு தான் கணக்கிடப்படுகின்றது. நீர் வளத்திற்குக் காரணம் மழை. மழையினால் மட்டுமே நீர் வளத்தைப் பெருக்க முடியும்.

அந்த மழைக்கு அடிப்படைக் கராணம் காடுகள்தான். காடுகள் இல்லையென்றால் நீர் வளம் நாட்டில் இல்லை. காடுகளும் காட்டுயிரிகளும் நிலவளமாகிய மண்வளத்தை மேம்படுத்துகின்றது.நிலமும் நீரும் பெருகவில்லை என்றால் நாட்டின் தொழில் வளம் கிடையாது. எனவே காட்டு வளமே நாட்டு வளம் என்று கூறி நிறைவு செய்கின்றேன். நன்றி.

Question 2.
காட்டின் பயன்கள்
Answer:
அனைவருக்கும் வணக்கம். காட்டின் பயன்கள் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். காட்டின் பயன்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.அவை பலவாகும்.விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள், ஊர்வன ஆகிய எண்ணற்ற உயிரிகளுக்கு உணவையும் உறைவிடத்தையும் தருவது காடே. உயிர்வளியை அதிகமாக உற்பத்தி செய்து கொடுக்கின்றது.

மழை வளத்தைப் பெருக்குகின்றது. மண்ணைப் பண்படுத்துகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும். உணவுப்பெருக்கம் ஏற்படும். பருவநிலை சீரடையும். மண்ணரிப்பு தடுக்கப்படும். நிலத்தடி நீர் மட்டத்தைப் பெருக்கும். புவி வெப்பமயமாதலைத் தடுக்கும். எனவே காட்டின் பயன் அறிந்து காடுகள் வளர்ப்போம் என்று கூறி நிறைவு செய்கின்றேன்.நன்றி.

அறிந்து பயன்படுத்துவோம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 2

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.

1. மகளிர் × ஆடவர்
2. அரசன் × அரசி
3. பெண் × ஆண்
4. மாணவன் × மாணவி
5. சிறுவன் × சிறுமி
6. தோழி × தோழன்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 3
ஒன்றன் பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 4
ஆண்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 5
ஒன்றன் பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 6
பெண்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 7
பலர்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 8
பலவின் பால்

பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.

(எ.கா) : கண்ண கி சிலம்பு அணிந்தான்.
Answer:
கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 9

கடிதம் எழுதுக.

Question 1.
நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
Answer:
நண்பனுக்குக் கடிதம்

23, பெரியார் வீதி,
சேலம் – 3.
10.6.2019.

ஆருயிர் நண்பா !
உன் அன்பு நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த நலத்துடன் இருக்கின்றோம். நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?எங்கள் பள்ளியில் கடந்த வாரம் மதுரைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்.

அங்குச் சென்ற அனுபவத்தை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மதுரை என்றால் இனிமை என்பதைப் பாடநூலில் தான் படித்திருக்கின்றேன். அங்குச் சென்றபோது தான் அந்த இனிமையை உணர்ந்தேன்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு எவ்வளவு நுணுக்கமான கலைநுட்பம் தெரியுமா? காணக் கண் கோடி வேண்டும் நண்பா! குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டுகளில் அங்குச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.பின்னர் நாயக்கர் மகாலுக்குச் சென்றோம். அங்குள்ள ஒவ்வொரு தூ ணும் கதைகள் பல சொல்லும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

அங்குள்ள நாட்டிய அரங்கு மிகவும் பொலிவுடன் உள்ளது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் சென்றோம்.அங்குள்ள நூலகத்தைக் கண்டு வியந்து தமிழ்ச்சங்கமே! இதுவோ? என்று நினைத்தேன். அடுத்த வாரம் நேரில் வரும் போது இன்னும் விளக்கமாகக் கூறுகின்றேன். அன்புடன் முடிக்கின்றேன்.வாழ்க வளமுடன்.

இப்படிக்கு
உயிர் நண்பன்,
ப. இளங்கதிர்

உறைமேல் முகவரி
பெறுநர்
ச.கதிரவன்,
34,புதுக் காலனி,

மொழியோடு விளையாடு

வட்டத்திலுள்ள எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 10/>

1. புதையல்
2. இயல்
3. கயல்
4. புயல்
5. கடல்
6. தையல்
7. புல்
8. கல்
9. இல்லை
10. இயல்பு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 11
(எ.கா) : வாழை + காய் – வாழைக்காய்

1. குருவி + கூடு – குருவிக்கூடு
2. விளையாட்டு + திடல் – விளையாட்டுத் திடல்
3. தயிர் + சோறு – தயிர்ச் சோறு
4. கொய்யா + பழம் – கொய்யாப் பழம்
5. விளையாட்டு + போட்டி – விளையாட்டுப்போட்டி
6. அவரை + காய் – அவரைக்காய்

விடுகதைக்கு விடை எழுதுக.

Question 1.
மரம் விட்டு மரம் தரவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு; புலி அல்ல கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?……………..
Answer:
அணில்

Question 2.
என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது.
முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன்.
இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன்.
மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்? ……………..
Answer:
குதிரை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 3.
வெள்ளையாய் இருப்பேன். பால் அல்ல.
மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல
தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?……………..
Answer:
கொக்கு

கலைச்சொல் அறிவோம்

1. தீவு – Island
2. இயற்கை வளம் – Nature Resource
3. வன விலங்குகள் – Wild Animals
4. வனப் பாதுகாவலர் – Forest Conservator
5. உவமை – Parable
6. காடு – Jungle
7. வனவியல் – Forestry
8. பல்லுயிர்மண்ட லம் – Bio Diversity

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம் …………………
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாகரக்குறுக்கம்

Question 2.
சொல்லுக்கு முதலில் மட்டுமே குறுகும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Question 3.
வையம், சமையல், பறவை ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாகரக்குறுக்கம்

Question 4.
ஔவையார், வௌவால் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 5.
சொல்லின் இடையிலும் கடையிலும் வராத குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Question 6.
மகரக்குறுக்கத்தின் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஈ) கால்

Question 7.
ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஈ) கால்

Question 8.
மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
அ) அரை

Question 9.
உயிர்க்குறில் பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஆ) ஒன்று

Question 10.
உயிர்க்நெடில் பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஈ) இரண்டு

Question 11.
வலம் வந்தான், போன்ம், மருண்ம் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
இ) மகரக்குறுக்கம்

Question 12.
முஃடீது, கஃறீது ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஔகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஈ) ஆய்தக்குறுக்கம்

Question 13.
பொருத்துக.
1. ஐகாரக்குறுக்கம் – அ) ஔவையார்,வௌவால்
2. ஔகாரக்குறுக்கம் – ஆ) வலம் வந்தான்
3. மகரக்குறுக்கம் – இ) முஃடீது , கஃறீது
4. ஆய்தக்குறுக்கம் – ஈ) சமையல் , பறவை

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 14.
ஆய்தக்குறுக்கம் இடம் பெறாத சொல்
அ) அஃது
ஆ) முஃடீது
இ) கஃறீது
ஈ) பஃறுளி
Answer:
அ) அஃது

Question 15.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
1. ஐகாரக்குறுக்கம் – ஒன்றரை மற்றும் ஒரு மாத்திரை
2. ஔகாரக்குறுக்கம் – இரண்டு மாத்திரை
3. மகரக்குறுக்கம் – கால் மாத்திரை
4. ஆய்தக்குறுக்கம் – கால் மாத்திரை
Answer:
2. ஔகாரக்குறுக்கம் – இரண்டு மாத்திரை

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. சில இடங்களில் தன்னுடைய மாத்திரையளவு குறைந்து ஒலிப்பவை ………………..
2. ‘ஐ’ என்ற எழுத்து பெறும் மாத்திரையளவு …………………
3. அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு……………….
4. ………………. சொல்லின் இடையிலும் இறுதியிலும் வாராது.
5. ஆய்தம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது …………………
Answer:
1. குறுக்கங்கள்
2. இரண்டு
3. அரை
4. ஔகாரம்
5. ஆய்தக்குறுக்கம்.

குறுவினா

Question 1.
ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஒளகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சான்று: ஔவையார் , வௌவால்

Question 2.
ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஐகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதல் , இடை , கடை ஆகிய இடங்களில் குறுகும்.
சான்று: சைவம் , சமையல்

Question 3.
மகரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
மகரம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.
சான்று: வலம் வந்தான்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 4.
ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
சான்று: கற்றீது.

 

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Students can Download 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.3 தேம்பாவணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

கற்பவை கற்றபின்

Question 1.
வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கிப் பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் நூலகத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டுக.
Answer:

  • வீரமாமுனிவர் 1710 முதல் 1747 வரை தமிழகத்தில் இருந்து தமிழ்ப்ப ணி ஆற்றினார்.
  • சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார்.
  • இலக்கியச் சுவடிகளைத் தேடி எடுத்ததால் “சுவடி தேடும் சாமியார்’ எனப்பட்டார்.
  • திருக்குறள், தேவாரம், திருப்புகழ் போன்ற நூல்களைப் பிற ஐரோப்பிய மொழிகளில்
  • மொழிபெயர்த்தார்.
  • தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீனில் விளக்கம் அளித்து உள்ளார்.
  • திருக்குறள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்தார்.
  • 1728இல் புதுவையில் இவரின் பரமார்த்தக் குருவின் கதை நூல் முதல் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.
  • வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி இலக்கணம், உரைநடை என பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைக்கவில்லை.
  • இத்தமிழ்ப் பணிகளை இவர் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ஆற்காடு வேலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பல்வேறு இடங்களில் தங்கிப் பணியாற்றினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 2.
கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மலைப் பொழிவுப் பகுதியைப் படித்து அதில் வரும் அறக் கருத்துகளை எழுதுக.
Answer:
மலைப் பொழிவின் அறக்கருத்துகள்:

  • எளிய மனத்தோர் பேறு பெற்றோர்.
  • வஞ்சமில்லாத நெஞ்சத்துடன், பிறரைப் பழி சொல்லாது வாழ்பவர் விண்ணரசு எய்துவார்.
  • துயரம் அடைவோர் பேறு பெற்றோர் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
  • சாந்தம் உடையவர் பேறு பெற்றவர்கள்; தரணி (உலகம்) முழுவதும் அவர்களுக்கு உரியது.
  • நீதியின்மேல் பற்றுக்கொண்டு வாழ்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
  • இரக்க சிந்தை உடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்களுக்கே இரக்கம் கிடைக்கும்.
  • தூய மனதையுடையவர்கள் சிறப்புப் பெற்றவர்கள்; தோன்றும் கடவுளை அவர்கள் நேரில் காண்பர்.
  • பிறர் வேதனை தீர்க்க, தம்மை வருத்தும் ஞானிகள் எவரோ, அவர்கள் விண்ணக அரசை அடைந்தே தீர்வர்.
  • மனிதர்கள் பால் பகை கொண்டு, மடி நிறைய காணிக்கையை இறைவனுக்கு மட்டும் செலுத்துவதால் பயன் என்ன?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

“ஊருக்குத் தீமைகள் செய்து – உன்
உள்ளம் மகிழ்வது பாவம்
யாருக்கும் தீமையில்லாமல் – நீ
அழிந்து விடுவதே லாபம்”

இவைபோன்ற இன்னும் பல அறக்கருத்துகள் “மலைப்பொழிவில்” இடம்பெற்று உள்ளன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று…………………….. , …………………………. வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக
ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக
ஈ) எலிசபெத், பூமிக்காக
Answer:
அ) கருணையன், எலிசபெத்துக்காக

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

குறுவினா

Question 1.
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன்
– உவமை உணர்த்தும் கருத்து யாது?
Answer:
உவமை:
இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்

உவமை உணர்த்தும் கருத்து:
கருணையனாகிய நான் என் தாயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகின்றேன்.

சிறுவினா

Question 1.
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
Answer:

  • கருணையனாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
  • அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.

“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

நெடுவினா

Question 1.
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரி.
Answer:
குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி
  • முடிவுரை

முன்னுரை:
தாயின் அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்லில் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.

வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி :

1) மலர்ப்படுக்கை :
கருணையனின் தாய் மறைந்துவிட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்ப்படுக்கையை பரப்பினான். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

2) இளம்பயிர் வாட்டம்:
என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது. இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்போல் வாடுகிறது.

3) அம்பு துளைத்த வேதனை:
தீயையும் நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்ததால் ஏற்படும் புண்ணின் வரியைப் போல என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது வாடுகிறேன்.

4) தவிப்பு :
சரிந்த வழுக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழிதெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.

5) உயிர்கள் அழுதல்:
புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போல கூச்சலிட்டன.

முடிவுரை:
வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

இலக்கணக் குறிப்பு.

காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய் மணி – வினைத்தொகை
உய்முறை – வினைத்தொகை
செய்முறை – வினைத்தொகை
மெய்முறை – வேற்றுமைத்தொகை
கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஒலித்து – வினையெச்சம்
வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
பரப்பி – வினையெச்சம்
வீ – ஓரெழுத்தொருமொழி
தடவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லறம் – பண்புத்தொகை
இளங்கூழ் – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………
அ) பேதுரு
ஆ) ஆபிரகாம்
இ) திருமுழுக்கு யோவான்
ஈ) சூசை
Answer:
இ) திருமுழுக்கு யோவான்

Question 2.
திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………
அ) கருணாகரன்
ஆ) கருணையன்
இ) கருணாமூர்த்தி
ஈ) வலின்
Answer:
ஆ) கருணையன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 3.
கருணையனின் தாயார் யார்?
அ) எலிசபெத்
ஆ) மரியாள்
இ) சாரா
ஈ) அண்ணாள்
Answer:
அ) எலிசபெத்

Question 4.
சொல்லையும் பொருளையும் பொருத்துக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி - 2
அ) 3, 2, 1, 4
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 3, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
ஆ) 4, 1, 2, 3

Question 5.
தேம்பா + அணி என்பதன் பொருள் …………………
அ) வாடாத மாலை
ஆ) சூடாத மாலை
இ) பாடாத மாலை
ஈ) தேன்மாலை
Answer:
அ) வாடாத மாலை

Question 6.
கிறித்துவின் வளர்ப்புத் தந்தை …………………………….
அ) கருணையன்
ஆ) சூசையப்பர்
இ) தாவீது
ஈ) ஈசாக்கு
Answer:
ஆ) சூசையப்பர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 7.
தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் ………………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) மூன்று

Question 8.
தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………………………..
அ) 7ஆம் நூற்றாண்டு
ஆ) 12ஆம் நூற்றாண்டு
இ) 17ஆம் நூற்றாண்டு
ஈ) 19ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 17ஆம் நூற்றாண்டு

Question 9.
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………………..
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Answer:
ஈ) 3615

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 10.
தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ………………………..
அ) 33
ஆ) 35
இ) 36
ஈ)
Answer:
இ) 36

Question 11.
தேம்பாவணி ஒரு ……………………….. நூல் ஆகும்.
அ) பெருங்காப்பிய
ஆ) புதின
இ) நாடக நூல்
ஈ) வரலாற்று
Answer:
அ) பெருங்காப்பிய

Question 12.
தேம்பாவணியை இயற்றியவர் யார்?
அ) கபிலர்
ஆ) கால்டு வெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) வீரமாமுனிவர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 13.
தமிழ் முதல் அகராதி எது?
அ) சதுரகராதி
ஆ) தமிழ் அகராதி
இ) தொன்மை அகராதி
ஈ) பழைய அகராதி
Answer:
அ) சதுரகராதி

Question 14.
வீரமாமுனிவரின் இயற்பெயர்………………………..ஆகும்.
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
ஆ) தாமஸ் பெஸ்கி
இ) இஸ்மத்
ஈ) கால்டுவெல்
Answer:
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

Question 15.
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
அ) சாகிப்
ஆ) இஸ்மத்
இ) இஸ்மத் சன்னியாசி
ஈ) சன்னியாசி
Answer:
இ) இஸ்மத் சன்னியாசி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 16.
இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ………………
அ) தூயவன்
ஆ) புனிதன்
இ) பெரியோன்
ஈ) தூயதுறவி
Answer:
ஈ) தூயதுறவி

Question 17.
இஸ்மத் சன்னியாசி என்பது ……………… மொழிச் சொல்.
அ) பாரசீக
ஆ) இலத்தீன்
இ) எபிரேய
ஈ) உருது
Answer:
அ) பாரசீக

Question 18.
கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?
அ) எலிசபெத் கூற்று
ஆ) கருணையன் கூற்று
இ) சூசையப்பர் கூற்று
ஈ) தாவீது கூற்று
Answer:
ஆ) கருணையன் கூற்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 19.
பொருத்துக.
1. கூழ் – அ) கிளை
2. கொம்பு – ஆ) பயிர்
3. புழை – இ) காடு
4. கான் – ஈ) துளை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 20.
பொருத்துக.
1. கடிந்து – அ) விலக்கி
2. உவமணி – ஆ) மாலை
3. படலை – இ) மணமலர்
4. துணர் – ஈ) மலர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Question 21.
பொருத்துக.
1. காக்கென்று – அ) இடைக்குறை
2. கணீர் – ஆ) தொகுத்தல் விகாரம்
3. காய்மணி – இ) வேற்றுமைத்தொகை
4. மெய்முறை – ஈ) வினைத்தொகை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 22.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) திருமுழுக்கு யோவான்
ஆ) அருளப்பன்
இ) கருணையன்
ஈ) எலிசபெத்
Answer:
ஈ) எலிசபெத்

Question 23.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஈ) இயேசு

Question 24.
‘சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள் ………………
அ) வானம்
ஆ) நிலம்
இ) காடு
ஈ) கிளை
Answer:
ஆ) நிலம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 25.
நவமணி என்பதில் ‘நவம்’ என்ற சொல் குறிப்பது ………………
அ) ஆறு
ஆ) ஒன்பது
இ) பத்து
ஈ) ஐந்து
Answer:
ஆ) ஒன்பது

Question 26.
‘நல்லறப் படலைப் பூட்டும்’ இவ்வடிகளில் ‘படலை’ என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) மாலை
ஆ) மணமலர்
இ) மலர்கள்
ஈ) நிலம்
Answer:
அ) மாலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 27.
கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ………………
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஆ) யோவான்

Question 28.
கருணையன் என்பவர் ………………
அ) வீரமாமுனிவர்
ஆ) யோசேப்பு
இ) அருளப்பன்
ஈ) சாந்தாசாகிப்
Answer:
இ) அருளப்பன்

குறுவினா

Question 1.
தேம்பாவணி பிரித்துப் பொருள் கூறுக.
Answer:

  • தேம்பாவணி – தேம்பா + அணி என்றும் தேன் + பா + அணி என்றும் பிரிக்கலாம்.
  • தேம்பா + அணி என்பதற்கு வாடாத மாலை என்று பொருள்.
  • தேன் + பா + அணி என்பதற்கு தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்று பொருள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 2.
வீரமாமுனிவர் படைத்த இலக்கியங்கள் யாவை?
Answer:

  • சதுரகராதி
  • தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)
  • சிற்றிலக்கியங்கள்
  • உரைநடை நூல்கள்
  • பரமார்த்தக் குரு கதைகள்
  • மொழிபெயர்ப்பு நூல்கள்

ஆகியவற்றைப் படைத்துள்ளார்.

Question 3.
எதனை மட்டும் தான் அறிந்ததாகக் கருணையன் கூறுகிறார்?
Answer:
தன் தாயாகிய எலிசபெத் தன் கையால் காட்டிய முறைகளை மட்டும் அறிவேன். வேறொன்றும் அறியேன் என்று கூறுகிறார்.

Question 4.
தேம்பாவணி குறிப்பு வரைக.
Answer:

  • தேம்பாவணி பெருங்காப்பிய வகை நூல்.
  • இந்நூல் மூன்று காண்டங்களை உடையது.
  • 36 படலங்களையும் 3615 பாடல்களையும் உடையது.
  • இந்நூல் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூலாகும்.
  • இந்நூலின் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 5.
கருணையன் உள்ளம் வாடியது எதற்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது?
Answer:
கருணையன் உள்ளம் ,மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்வாடுதலுக்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது.

Question 6.
கருணையன், ‘இரும்புழைப் புண்போல்’ நோகக் காரணம் யாது?
Answer:
கருணையனின் தாய் இறந்து விட்டார். தாயை இழந்து வாடும் அவர், தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்று வருந்துகின்றார்.

Question 7.
‘நவமணி வடக்க யில்போல்’ – இவ்வடிகள் சுட்டும் நவமணிகள் யாவை?
Answer:

  • கோமேதகம்
  • முத்து
  • நீலம்
  • புருடராகம் (புஷ்பராகம்)
  • பவளம்
  • வைடூரியம்
  • மரகதம்
  • வைரம்
  • மாணிக்கம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 8.
திருமுழுக்கு யோவான் என்பவர் யார்?
Answer:

  • கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
  • இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
  • இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
  • தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் காட்டினில் வாழ்ந்தார்.
  • வீரமாமுனிவர் கருணையன் என்று இவரை அழைக்கின்றார்.

Question 9.
‘அழுங்கணீர் பொழிந்தான்’ யார்? ஏன்?
Answer:

  • அழுங்கணீர் பொழிந்தவர் : திருமுழுக்கு யோவான்(கருணையன்)
  • கருணையன் தன் அன்னையின் உடலை மண்ணுள் அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும் கண்ணீரையும் ஒன்றாகப் பொழிந்தான்.

Question 10.
கருணையன் புலம்பியதைக் கேட்டு, அழுவன போன்று கூச்சலிட்டன எவை?
Answer:
கருணையன் புலம்பியதைக் கேட்டு, தேன்மலர்கள் பூத்த மணம் வீசும் மலர்களும், சிறுகுட்டைகள் தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டில் அழுவன போன்று கூச்சலிட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

சிறுவினா

Question 1.
கருணையனிடம் இயற்கை கொண்ட பரிவு யாது?
Answer:
நல் அறங்களையெல்லாம் ஒரு கோவையாக இணைத்த அறமாலையை அணிந்த மார்பனாகிய கருணையன் கொண்ட துயரைக் கண்டு இயற்கையும் பரிவு கொண்டது.

பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும், சுனை தோறும் தங்கியுள்ள பறவைகளும் வண்டுகளும் கருணையன் உடன் இணைந்து அழுவன போல கூச்சலிட்டன.

Question 2.
இஸ்மத் சன்னியாசி – விளக்குக.
Answer:

  • வீரமாமுனிவரின் எளிமையையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.
  • இஸ்மத் சன்னியாசி என்பதற்குத் தூயதுறவி என்று பொருள்.
  • இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 3.
வீரமாமுனிவர் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : வீரமாமுனிவர்
இயற்பெயர் : கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி
புனைபெயர் : தைரிய நாத சுவாமி இலக்கியப் பணி : இலக்கண நூல், மொழிபெயர்ப்பு,
சிற்றிலக்கியம், உரைநடை.
இயற்றிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், பரமார்த்தக் குருகதைகள், வேதியர் ஒழுக்கம்,
செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம்.
காலம் : கி.பி. 1680-1747.
பிறமொழிப் புலமை : இலத்தீன், கிரீக்கு, எபிரேயம், ஆங்கிலம், தெலுங்கு.
மறைந்த ஊர் : அம்பலக்காடு

Question 4.
‘தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடி’ என்ற உவமையை விளக்கிப் பொருளொடு பொருத்துக.
Answer:
உவமை :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

பொருள் :
கருணையன் தாயை இழந்து வாடுதல்.

பொருத்தம் :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல் போன்று கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றார்.

Question 5.
கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) யாவை?
Answer:

  • இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்
  • மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்
  • தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருத்தம்.
  • துணையைப் பிரிந்த பறவை
  • சரிந்த வழுக்கு நிலத்தில் தனியே விடப்பட்டு வழி தெரியாமல் தவிப்பவன்.
    – ஆகியன கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 6.
‘தாயும் கடிந்தெனைத் தனித்துப் போனாள்’ என்று கருணையன் வருந்தக் காரணம் யாது?
Answer:

  • நான் உயிர்ப்பிழைக்கும் வழி அறியேன்.
  • நினைத்ததைக் கண்ட அறிவுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளையும் அறியாதவன்.
  • என் தாய் கையால் காட்டிய அறிவுரையை மட்டுமே நான் அறிவேன்.
  • இப்படி என்னைத் தவிக்க விட்டுவிட்டு என் தாய் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!
    – என்னையும் என் தாய் கூட்டிச் சென்று இருக்கலாம், எதுவும் தெரியாத நான் எப்படி வாழ்வேனோ?

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.4 இந்திய வனமகன் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.4 இந்திய வனமகன்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

Question 1.
ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
Answer:
முன்னுரை
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜாதவ்பயேங். ‘இந்திய வனமகன்’ என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார். அதனை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

ரம் வளர்க்கும் எண்ணம்
1979ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் பாம்புகள் கரை ஒதுங்கின.சில பாம்புகள் இறந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இக்காட்சி ஜாதவ்பயேங்கை மிகவும் பாதித்தது. ஊர்ப் பெரியவர்கள் ‘தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம்’ என்றனர். அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. ஊர் மக்களிடம் தீவில் மரம் வளர்க்கலாம் என்று அவர் கூறிய போது, அதனை யாரும் ஏற்கவில்லை.

விடா முயற்சி
ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைக்கத் தொடங்கினார். நன்கு பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை. வனத்துறை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை நன்கு வளர ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் இத்தீவில் வளரவில்லை .

அசாம் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படி மண்புழுவுடன் சிவப்புக் கட்டெறும்பை அத்தீவு மண்ணில் விட்டார். சிறிது சிறிதாக மண்ணின் தன்மை மாறி பசும்புல்லும் மரங்களும் வளரத் தொடங்கின.

புதிய காடு உருவானது
மரங்களில் விளைந்த பழங்களை உண்டு, அதன் கொட்டைகளை விதையாகச் சேமித்து வைத்து விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். மழை பெய்யாத காலங்களில் பானை பெரிய மூங்கில் துணை கொண்டு சொட்டு சொட்டாக நீரினை மரங்களுக்குவிட்டார். மரங்கள் பெருகி வளர்ந்து, அத் தீவு 7 பெருங்காடானது.யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலிகள் முதலிய காட்டு விலங்குகள் வரத்தொடங்கின.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

முடிவுரை
ஜாதவ்பயேங் போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை காக்க வேண்டும். இந்திய வனமகன் வழியில் நாமும் செல்வோம்.

மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம்!காட்டினை உருவாக்குவோம்!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Students can Download 10th Tamil Chapter 9.2 சித்தாளு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.2 சித்தாளு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

கற்பவை கற்றபின்

Question 1.
மனிதநேயத்தை வெளிப்படுத்தும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு - 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது……………………..
அ) தலைவிதி
ஆ) பழையகாலம்
இ) ஏழ்மை
ஆ) பழையகாலம்
ஈ) தலையில் கல் சுமப்பது
Answer:
ஈ) தலையில் கல் சுமப்பது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

குறுவினா

Question 1.
‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
Answer:
“வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்.

சிறுவினா

Question 1.
சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது – இடஞ்சுட்டிப் பொருள் கூறுக.
Answer:
இடம் சுட்டல்: “சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம்பெற்றுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பொருள் : சித்தாளின் துன்பங்களைச் செங்கற்கள் அறிவது இல்லை.

விளக்கம் : அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் இவர்களின் மரணம்கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும். பல இன்னல்களின் நடுவே தன் வாழ்வைத் தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாள்களின் மனச்சுமையைச் செங்கற்களும், கற்களும் அறியாது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

கற்காலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
புலம்புவார் – வினையாலணையும் பெயர்
செங்கற்கள் – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.

புலம்புவார் – புலம்பு + வ் + ஆர்

புலம்பு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – படர்க்கை வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பலவுள் தெரிக

Question 1.
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
அ) முகம்மதுரஃபி
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது
Answer:
அ) முகம்மதுரஃபி

Question 2.
நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்
அ) மதுரை
ஆ) நெல்லை
இ) தஞ்சை
ஈ) திருச்சி
Answer:
இ) தஞ்சை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 3.
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Answer:
ஆ) கணையாழி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 4.
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) – ………………..
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Answer:
இ) கப்பலுக்குப் போன மச்சான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 5.
சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ……………………
அ) தலைக்கனம்
ஆ) அடுத்தவர் கனவு
இ) சித்தாளின் மரணம்
ஈ) சித்தாளின் புலம்பல்
Answer:
இ) சித்தாளின் மரணம்

Question 6.
தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது ………………………
அ) கட்டடம்
ஆ) செங்கற்கள்
இ) கம்பிகள்
ஈ) மணல்
Answer:
ஆ) செங்கற்கள்

Question 7.
தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….
அ) சித்தாளு
ஆ) பொறியாளர்
இ) உழவர்
ஈ) காவலர்
Answer:
அ) சித்தாளு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 8.
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………………….
அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) கொல்லிப்பாவை
இ) நதியின் கால்கள்
ஈ) மீட்சி
Answer:
இ) நதியின் கால்கள்

Question 9.
இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ……………………
அ) முதலாளிகள்
ஆ) கவிஞர்கள்
இ) மக்கள்
ஈ) அமைச்சர்கள்
Answer:
ஆ) கவிஞர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 10.
தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?
அ) மோனை நயம்
ஆ) எதுகை நயம்
இ) இயைபு
ஈ) உவமை அணி
Answer:
அ) மோனை நயம்

Question 11.
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
அ) நாகூர் ரூமி
ஆ) கண்ணதாசன்
இ) ஜெயகாந்தன்
ஈ) பாரதியார்
Answer:
அ) நாகூர் ரூமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 12.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக.
அ) மீட்சி
ஆ) சுபமங்களா
இ) ஏழாவது சுவை
ஈ) புதியபார்வை
Answer:
இ) ஏழாவது சுவை

Question 13.
நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
அ) கவிதைத் தொகுதி

Question 14.
‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
இ) நாவல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

குறுவினா

Question 1.
நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களைப் பட்டியலிடுக.
Answer:

  • மீட்சி
  • கொல்லிப்பாவை
  • சுபமங்களா
  • குமுதம்
  • புதிய பார்வை
  • இலக்கிய வெளிவட்டம்
  • குங்குமம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 2.
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
Answer:

  • நதியின் கால்கள்
  • ஏழாவது சுவை
  • சொல்லாத சொல் ஆகியவையாகும்.

Question 3.
சித்தாள் கற்கள் சுமக்கக் காரணம் யாது?
Answer:

  • வாழ்வைத் தொலைக்காமல் தன்னைக் காக்கவும்,
  • அடுத்த வேளை உணவுக்காகவும் சித்தாள் கற்களைச் சுமக்கிறாள்.

Question 4.
‘தலைக்கனமே வாழ்வாக
ஆகிப்போனது இவளுக்கு’ – ஏன்? யாருக்கு?
Answer:
செங்கற்களைச் சுமந்து , சித்தாளுக்குத் தலைக்கனமே வாழ்வாகிப்போனது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 5.
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ என்று கவிஞர் நாகூர் ரூமி கூறுவதன் உள்நோக்கம் யாது?
Answer:

  • சித்தாள் தலையில் சுமக்கும் செங்கற்கள் சுமைகளைவிட,
  • அவளது மனதில் சுமக்கும் வறுமை உள்ளிட்ட சுமைகள் ஏராளம் ஆகும்.

Question 6.
‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதியவர் யார்? அவர் இயற்பெயர் யாது?
Answer:

  • ‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதியவர் : நாகூர் ரூமி
  • அவரின் இயற்பெயர் : முகம்மது ரஃபி

சிறுவினா

Question 1.
நாகூர் ரூமி குறிப்பு வரைக.
Answer:

  • நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • இவரது இயற்பெயர் முகம்மது ரஃபி.
  • இவர் 1980களில் “கணையாழி” இதழில் எழுதத் தொடங்கினார்.
  • குறுநாவல், கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி வருபவர்.
  • கப்பலுக்குப் போன மச்சான் என்ற புதினத்தையும் படைத்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 2.
சித்தாளின் இன்னல்களை விளக்குக (அல்லது) நாகூர் ரூமியின் ‘சித்தாளு’ கவிதைக் கருத்தை எழுதுக.
Answer:

  • பொற்காலமாக இருந்தாலும் சித்தாள் தலையில் எழுதப்பட்டதோ கற்காலம்.
    தன் வாழ்வை தொலைத்துவிடாமல் காத்துக்கொள்வதற்காக தலையில் கை வைப்பவள்.
  • வாழ்வில் தலைக்கனம் (இறுமாப்பு) கொண்டவர் உண்டு. ஆனால், கல் சுமந்து தலைக்கனமானது இவளுக்கு.
  • அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் சுமக்கும் கற்களெல்லாம் இவளின் அடுத்தவேளை உணவுக்குதான். இவள் இறந்தால் கூட சலனம் சிறிதளவுதான்.
  • இந்தச் சித்தாளின் மனச்சுமையை அவள் சுமக்கும் செங்கற்கள் அறியாது.

Question 3.
‘அலுக்காமல் இவள் சுமக்கும்
கற்களெல்லாம்
அடுத்தவேளை உணவுக்காக’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
நாகூர் ரூமியின் சித்தாளு’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் சித்தாள் ஒருவர் கூறுவதாக இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பொருள் விளக்கம் :
அடுக்குமாடி வீடாகவோ அல்லது அலுவலகமாகவோ, எதுவாக இருப்பினும் அடுத்தவர் கட்டும் கட்டிடத்தின் கனவுக்கு அலுப்பில்லாமல் கற்களைச் சுமந்து உழைப்பது எல்லாம், சித்தாளின் அடுத்தவேளை உணவுக்காகத் தான்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.3 விலங்குகள் உலகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.3 விலங்குகள் உலகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 1.
விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.
Answer:
1. பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி
(எ.கா.) : புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
2. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
3. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
4. நொண்டிக் கழுதைக்குச் சருக்கினது சாக்காம்.
5. வீட்டில் எலி, வெளியில் புலி.
6. நாயப் பொறந்தாலும் நல்லாப் பொறக்கனும்.
7. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசைன.
8. ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராசா.
9. தூங்கணாங் குருவிக்குக் குரங்கு புத்தி சொல்லுச்சாம்.

Question 2.
காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது
அ) காது
ஆ) தந்தம்
இ) கண்
ஈ) கால்நகம்
Answer:
ஆ) தந்தம்

Question 2.
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியகரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தக் குளம்
Answer:
இ) முண்டந்துறை

Question 3.
‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) காடு + ஆற
ஆ) காட்டு + ஆற
இ) காட் + ஆறு
ஈ) காட் + டாறு
Answer:
அ) காடு + ஆறு

Question 4.
‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) அனைத்து + துண்ணி
ஆ) அனை + உண்ணி
இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி
Answer:
ஈ) அனைத்து + உண்ணி

Question 5.
‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………….
அ) நேரமாகி
ஆ) நேராகி
இ) நேரம் ஆகி
ஈ) நேர் ஆகி
Answer:
அ) நேரமாகி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 6.
‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………
அ) வேட்டை ஆடிய
ஆ) வேட்டையாடிய
இ) வேட்டாடி
ஈ) வேடாடி
Answer:
ஆ) வேட்டையாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு …………………
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ………………. யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ……………..
Answer:
1. புலி
2. பெண்
3. அடர்ந்த முடிகள்

குறு வினா

Question 1.
காடு – வரையறு.
Answer:
(i) மனிதர்களின் முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடி, கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல உயிர்களின் வாழ்விடம் காடாகும்.
(ii) இடையிடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.
(iii) மனிதனின் முதல் இருப்பிடம் காடு.

Question 2.
யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகிறது ஏன்?
Answer:

  1. யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை.
  2. யானைகள் செல்லும் வழிப்பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடும்போது, அவர்களைத் தாக்குகின்றன.
  3. மேலும் யானைக்குக் கண்பார்வைக் குறைவு, கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ளது.

Question 3.
கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகின்றது.

Question 4.
மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:

  1. புள்ளிமான்
  2. சருகுமான்
  3. மிளாமான்
  4. வெளிமான்

சிறு வினா

Question 1.
புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையன.

(ii) ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குச் செல்லாது.

(iii) கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் வரைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும்.

(iv) அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து அனுப்பிவிடும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

சிந்தனை வினா

Question 1.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.
Answer:
1. மழை வளம் குறையும்.
2. மண் தரிசு நிலமாக மாறிவிடும்.
3. காட்டுயிரிகள் வாழ்விடம் அழியும்.
4. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.
5. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
6. மண் வளம் சேர்க்கும் நுண்ணுயிரிகள் அழியும்.
7. மண்ண ரிப்பு ஏற்படும்.
8. நோய் தீர்க்கும் மூலிகைகள் அழியும்.
9. பருவநிலைமாறும்.
10. புவி வெப்பமயமாகும்.
11. நிலத்தடி நீர்க்குறையும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்த இடம் …………………
அ) மேட்டுப்பாளையம்
ஆ) குன்னூர்
இ) ஊட்டி
ஈ) கோத்தகிரி
Answer:
அ) மேட்டுப்பாளையம்

Question 2.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ………………..
அ) ஈரோடு
ஆ) கோவை
இ) நாமக்கல்
ஈ) சேலம்
Answer:
ஆ) கோவை

Question 3.
தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் அமைந்துள்ள இடம் ………………..
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியகரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தக் குளம்
Answer:
இ) முண்டந்துறை

Question 4.
உலகில் உள்ள யானை வகைகள்
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer:
ஆ) இரண்டு

Question 5.
ஆண் , பெண் ஆகிய இரண்டுக்கும் தந்தம் கொண்ட யானை வகை ………………..
அ) ஆப்ரிக்க யானை
ஆ) ஆசிய யானை
இ) அமெரிக்க யானை
ஈ) தாய்லாந்து யானை
Answer:
அ) ஆப்ரிக்க யானை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 6.
நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல் , இலை தழைகளை உணவாகக் கொள்ளும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
ஈ) யானை

Question 7.
கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ள விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
ஈ) யானை

Question 8.
நன்கு வளர்ந்த கரடியின் எடை
அ) 160 கி
ஆ) 100 கி
இ) 106 கி
ஈ) 601 கி
Answer:
அ) 160 கி

Question 9.
தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த உணவையும் வேட்டையாடாத விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி

Question 10.
பண்புள்ள விலங்கு என்றழைக்கப்படும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி

Question 11.
இரவில் மட்டும் வேட்டையாடும் தன்மை கொண்ட விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி

Question 12.
அழகில் சிறந்த மான் வகை
அ) புள்ளிமான்
ஆ) சருகுமான்
இ) மிளாமான்
ஈ) வெளிமான்
Answer:
அ) புள்ளிமான்

Question 13.
இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசனாகக் குறிப்பிடும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) சிங்கம்
Answer:
இ) புலி

Question 14.
‘நினைவாற்றல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………………….
அ) நினை + ஆற்றல்
ஆ) நினை + வாற்றல்
இ) நினைவு + ஆற்றல்
ஈ) நினைவு + வாற்றல்
Answer:
இ) நினைவு + ஆற்றல்

‘கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்திய வனக்கல்லூரி அமைந்த மாவட்டம் …………………
2. காட்டுவிலங்குகளின் உறைவிடம் ……………….
3. மனிதனின் முதல் இருப்பிடம் …………………
4. முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு …………………….
5. கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வனவியல் சார்ந்த படிப்புகள் ……………………, ……………
6. மிகுந்த நினைவாற்றலைக் கொண்ட விலங்கு ………………….
7. பாசம் நிறைந்த விலங்கு ………………….
8. யானைக்குக் கடிப்பதற்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு …………………..
9. …………… ஒரு அனைத்துண்ணி.
10. காட்டு அரசன் ……………….
11. விஞ்ஞானிகள் என்ற பிறமொழிச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் …………………….
Answer:
1. கோவை
2. முண்டந்துறை புலிகள் காப்பகம்
3. காடு
4. 895 சதுரமீட்டர்
5. இளநிலை வனவியல், முதுநிலை வனவியல் –
6. யானை
7. யானை
8. 65 லிட்டர்
9. கரடி
10. சிங்கம்
11. அறிவியலறிஞர் (அல்லது) அறிவியலாளர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

குறுவினா

Question 1.
ஆதினி எங்குச் சென்றாள்? எதற்காகச் சென்றாள்?
Answer:
(i) ஆதினி தன் அம்மாவுடன் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குச் சென்றாள்.

(ii) காட்டு விலங்குகள் பற்றிய புகைப்படத்தொகுப்பிற்குத் தேவையான புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றாள்.

Question 2.
முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்து வன அலுவலர் கூறியது யாது?
Answer:

  1. தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் : முண்டந்துறை புலிகள் காப்பகம்.
  2. 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
  3. யானை, புலி, சிறுத்தை , மான் , கரடி , காட்டுமாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.
    – என்று முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்து வன அலுவலர் கூறினார்.

Question 3.
முண்டந்துறை புலிகள் காப்பகத்தல் வாழும் அரிய விலங்குகள் யாவை?
Answer:
1. யானை
2. புலி
3. சிறுத்தை
4. மான்
5. கரடி
6. காட்டுமாடு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 4.
உலகில் உள்ள யானை வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. அவையாவன:

  1. ஆசிய யானை
  2. ஆப்பிரிக்க யானை

Question 5.
ஆசிய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
1. ஆசிய யானை
ஆண்யானைக்குத் தந்தம் உண்டு, பெண் யானைக்குத் தந்தம் இல்லை.

2. ஆப்பிரிக்க யானை
ஆண், பெண் யானைகள் இரண்டுக்குமே தந்தம் உண்டு.

Question 6.
ஒரு காட்டு வளத்தைக் குறிக்கும் குறியீடு எது?
Answer:
புலியே ஒரு காட்டு வளத்தைக் குறிக்கும் குறியீடாகும்.

Question 7.
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
Answer:
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது.

Question 8.
வனவியல் சார்ந்த படிப்புகள் யாவை? அவை எங்குள்ளன?
Answer:
(i) வனவியல் சார்ந்த படிப்புகள் இளநிலை வனவியல் , முதுநிலை வனவியல் ஆகும்.
(ii) கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அவை கற்பிக்கப்படுகின்றன.

Question 9.
புலியைப் பண்புள்ள விலங்கு எனக் கூறக் காரணம் யாது?
Answer:
தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த உணவையும் வேட்டையாடாத விலங்கு. எனவே புலியைப் பண்புள்ள விலங்கு என் கூறுகின்றனர்.

Question 10.
புலியைக் காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறக் காரணம் யாது?
Answer:
(i) நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத் திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தைவிட புலியே உயர்ந்தது.
(ii) எனவே, புலியைக் காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Question 11.
அழகில் சிறந்த மான் வகை எது?
Answer:
நம் நாட்டில் உள்ள புள்ளி மானே அழகில் சிறந்ததாகும்.

Question 12.
சிங்கங்களின் வகைகளைக் குறிப்பிடுக.
Answer:

  1. ஆசியச் சிங்கம்
  2. ஆப்பிரிகச் சிங்கம்

Question 13.
யானைகள் அடிக்கடி இடம்பெயரக் காரணம் யாது?
Answer:
யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 14.
சிங்கம் குறித்து நீவிர் அறிந்த செய்திகள் யாவை?
Answer:
(i) ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கம் உள்ளன.
(ii) இந்தியாவில் குஜராத்தில் ‘கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

சிறு வினா

Question 1.
யானைகள் குறித்து நீவிர் அறிந்ததை எழுதுக.
Answer:
(i) யானைகள் எப்போதும் கூட்டமாகவே வாழும்.
(ii) கூட்டத்திற்குப் பெண் யானை தலைமை தாங்கும்.
(iii) தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.
(iv) நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவும், 60 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும்.
(v) மிகுந்த நினைவாற்றலும் பாசமும் கொண்ட விலங்கு.
(vi) கண்பார்வைக் குறைவு, மோப்ப ஆற்றல் மிகுதி.

Question 2.
கரடி குறித்து நீவிர் அறிந்த செய்திகள் யாவை?
Answer:
(i) நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்
(ii) பழங்கள் மற்றும் தேன் உண்பதற்காக கரடி மரம் ஏறும்.

(iii) பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகின்றது.

(iv) தன் அடர்ந்த முடிகள் மூலம் எதிரிகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 1.
உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:
பலாமரம்

  1. நெடுநெடுனு வளர்ந்த மரம், நேர்த்தியான பலாமரம்
  2. முக்கனியில் இராண்டாம் கனி தரு மரம்
  3. பெரும்பழம் சுமந்ததால் உன்மேனி இளைத்ததோ?
  4. பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும்
  5. கொடுக்க குறையாத அமுதசுரபி மரம் பலாமரம்

Question 2.
உங்கள் பகுதியிலுள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
வேப்ப மரம், புளிய மரம், அரசமரம், ஆல மரம், வாழை மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம், பலா மரம், தேக்கு மரம், சந்தன மரம், அத்தி மரம், வாகை மரம், புங்க மரம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது …………………
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
Answer:
ஆ) கோலிக்குண்டு

Question 2.
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………….
அ) ஒட்டிய பழங்கள் .
ஆ) சூடான பழங்கள்
இ) வேகவைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
Answer:
அ) ஒட்டிய பழங்கள்

Question 3.
‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………..
அ) பெயர் + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர் + அறியா
Answer:
இ) பெயர் + அறியா

Question 4.
‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………….
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
Answer:
ஈ) மனம் + இல்லை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 5.
‘நேற்று + இரவு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………..
அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
Answer:
ஆ) நேற்றிரவு

குறுவினா

Question 1.
நாவல் மரம் எத்தனை தலைமுறையாக அங்கு நின்றிருந்தது?
Answer:
நாவல் மரம் இரண்டு தலைமுறையாக அங்கு நின்றிருந்தது.

Question 2.
சிறுவர்களுக்கு நாவல் பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
Answer:

  1. காக்கை
  2. குருவி
  3. மைனா
  4. பெயரறியாப் பவைகள்
  5. அணில்
  6. காற்று

சிறுவினா

Question 1.
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
1. ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.

2. அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

3. பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.

4. காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.

5. தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.

6. இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.

7. அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில்தான்.

சிந்தனை வினா

Question 1.
பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
Answer:
1. பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.

2. குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.

3. அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்த கவிஞர்.
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

Question 2.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர்
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

Question 3.
‘பெருவாழ்வு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………..
அ) பெரு + வாழ்வு
ஆ) பெ + ருவாழ்வு
இ) பெருமை + வாழ்வு
ஈ) பேர் + வாழ்வு
Answer:
இ) பெருமை + வாழ்வு

Question 4.
ஊரின் வடகோடியில் இருந்த மரம் ………………..
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 5.
தாத்தா நட்டு வைத்த மரம்
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 6.
பொருத்துக.
1. பரவசம் – அ) துக்கம் விசாரித்ததல்
2. துஷ்டி கேட்டல் – ஆ) விரவி
3. பரவி – இ) எல்லை
4. கோடி – ஈ) மகிழ்ச்சிப்பெருக்கு

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ

Question 7.
‘செங்காய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………………….
அ) செம்மை + காய்
ஆ) செம் + காய்
இ) செங் + காய்
ஈ) செ + காய்
Answer:
அ) செம்மை + காய்

Question 8.
இரவில் படையெடுத்து வரும் பழந்தின்னி …………………
அ) வௌவால் கூட்டம்
ஆ) காக்கைக் கூட்டம்
இ) குருவிக் கூட்டம்
ஈ) மைனாக் கூட்டம்
Answer:
அ) வௌவால் கூட்டம்

Question 9.
நாவற்பழங்களை உதிர்த்துவிடுவனவற்றுள் பறவைகள் அல்லாத ஒன்று ……………….
அ) காக்கை
ஆ) குருவி
இ) அணில்
ஈ) மைனா
Answer:
இ) அணில்

Question 10.
பெருவாழ்வு வாழ்ந்த மரம் ……………
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 11.
நேற்று இரவுப் பேய்க்காற்றில் வேறோடு சாய்ந்தது …………….
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Ans;
இ) நாவல் மரம்

Question 12.
குன்றுகளின் நடுவே மாமலை போன்றது ……………..
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 13.
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே ……………………..
2. …………….. பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன.
3. ………………. – பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
4. தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் …………………… பொறுக்குகின்றனர்
5. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் – என்ற நூலை இயற்றியவர் ………………….
6. குன்றுகளின் நடுவே மாமலை போல நின்றது. …………………

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Answer:
1. மரங்கள்
2. மரங்கள்
3. நாவல்
4. நாவல்பழம்
5. ராஜமார்த்தாண்டன்
6. மாமரம்

குறு வினா

Question 1.
நாவல் மரம் தோற்றம் குறித்துக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.

Question 2.
சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கக் காரணம் யாது?
Answer:
நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

Question 3.
எப்போது நாவில் நீர் ஊறும்?
Answer:
பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.

Question 4.
சிறுவர் கூட்டம் அலைமோதக் காரணம் யாது?
Answer:
காக்கை, குருவி,மைனா , பெயரறியாப் பவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.

Question 5.
தங்கைகள் யாருக்காக நாவல் பழம் பொறுக்குகின்றனர்?
Answer:
தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 6.
இரவு நேரத்தில் நாவல்மரத்தை நோக்கிப் படைஎடுத்தது எது? ஏன்?
Answer:
இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.

Question 7.
ஊர்மக்கள் எதனைப் பார்க்கச் சென்றனர்?
Answer:
பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.

Question 8.
கவிஞர் மனதில் என்றும் நிற்பது எது?
Answer:
குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் என்றும் நிற்கிறது.

சிறு வினா:

Question 1.
கவிஞர் ராஜமார்த்தாண்டன் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : இராசமார்த்தாண்டன்
திறன்கள் : இதழாளர், கவிதைத் திறனாய்வாளர்.
பரிசு : ராஜமார்த்தாண்டன் கவிதைகள் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர்.
படைப்புகள் : ராஜமார்த்தாண்டன் கவிதைகள், அப்படியே நிற்கட்டும் அந்த மரம், சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்துள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

சொல்லும் பொருளும்

1. பரவசம் – மகிழ்ச்சிப்பெருக்கு
2. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்ததல்
3. தாண்டி – கடந்து
4. பழந்தின்னி – பழம் உண்ணும்
5. பரவி – விரவி
6. வடகோடி – வட எல்லை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.1 காடு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.1 காடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 1.
காடு என்னும் தலைப்பில் அமைந்த கிளிக்கண்ணி’ பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
பின்வரும் கிளிக்கண்ணிப் பாடலைப் பாடி மகிழ்க.
Answer:
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பித்தலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ ! – கிளியே
நாளில் மறப்பாரடீ. ……….- பாரதியார்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாழை, கன்றை ………………….
அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது
Answer:
அ) ஈன்றது

Question 2.
‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்
Answer:
ஆ) காடு + எல்லாம்

Question 3.
‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………
அ) கிழங்கு எடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
Answer:
ஆ) கிழங்கெடுக்கும்

நயம் அறிக

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு 1

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு 2

குறு வினா

Question 1.
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
Answer:
காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக்கவிஞர் சுரதாகுறிப்பிடுகிறார்.

Question 2.
காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
Answer:

  1. காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும்.
  2. காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
  3. எல்லோரும் சேர்ந்துமகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
  4. காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

சிறு வினா

Question 1.
‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  1. பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
  2. நரிக் கூட்டம் ஊளையிடும்.
  3. மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
  4. இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

சிந்தனை வினா

Question 1.
காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறக் காரணம் என்ன?
Answer:
(i) பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன.

(ii) மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் மற்றும் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால், காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Question 2.
உவமைக்கவிஞர் என்றழைக்கப்படக் கூடிய கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Question 3.
தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் முதலிய நூல்களைப் படைத்த கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 4.
கார்த்திகை விளக்குகள் போன்று இருந்தவை
அ) காடு
ஆ) மலர்கள்
இ) காய்கனி
ஈ) மயில்
Answer:
ஆ) மலர்கள்

Question 5.
பொருத்துக.
1. அதிமதுரம் – அ) மகிழ்ந்திட
2. களித்திட – ஆ) மிகுந்த சுவை
3. கொம்பு – இ) பெற்று
4. ஈன்று – ஈ) கிளை

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 6.
பொருத்துக.
1. மயில்கள் – அ) கிழங்குகளைத் தோண்டி உண்ணும்
2. பன்றிகள் – ஆ) கலக்கமடையும்
3. பாம்புகள் – இ) புதிய நடை போடும்
4. யானைகள் – ஈ) நடனமாடும்

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ

Question 7.
…………………. குயில் கூவுமடி! பாடலடியில் இடம்பெறும் தகுந்த சொல்லால் நிரப்புக.
அ) கருங்
ஆ) பூங்
இ) மணிக்
ஈ) சிறு
Answer:
ஆ) பூங்

Question 8.
புதுநடை போட்டது எது?
அ) பாம்பு
ஆ) பன்றி
இ) குரங்கு
ஈ) யானை
Answer:
ஈ) யானை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ………………, ………………… நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை.
2. உவமைகளைப் பயன்படுத்தி கவிதை எழுதுவதில் வல்லவர் …………………
3. காடு என்னும் கவிதை அமைந்த நூல் …………………
4. சுரதாவின் கவிதைகள் என்ற நூலில் காடு என்னும் கவிதை அமைந்த பகுதி ……………..
5. காடு என்ற கவிதை அமைந்த பாவகை ……………………
6. நரிக்கூட்டம் ……………..
Answer:
1. காடும் கடலும் .
2. சுரதா
3. சுரதாவின் கவிதைகள்
4. இயற்கை எழில்
5. கிளிக்கண்ணி
6. ஊளையிடும்

குறு வினா

Question 1.
சுரதா என்பதன் பெயர்க்காரணம் யாது?
Answer:
இராசகோபாலன் பாரதிதாசன் மீது பற்றுக்கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் எனமாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

Question 2.
கவிஞர் சுரதாவை ‘உவமைக்கவிஞர்’ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
உவமைகளைப் பயன்படுத்தி கவிதை எழுதுவதில் வல்லவர் என்பதால் சுரதா ‘உவமைக்கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 3.
சுரதாவின் படைப்புகள் யாவை?
Answer:

  1. தேன்மழை
  2. துறைமுகம்
  3. அமுதும் தேனும்

Question 4.
கிளிக்கண்ணி என்னும் பாவகை குறித்து எழுதுக.
Answer:
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் கிளிக்கண்ணி ஆகும்.

Question 5.
‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ எனக் அறிஞர் கூறக் காரணம் யாது?
Answer:
ஒரு நாட்டின் வளம் , அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகின்றது. அதனால் தான் ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என அறிஞர் கூறுகின்றனர்.

Question 6.
‘காடு’ பாடலில் பறவைகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  1. பச்சை நிறமுடைய மயில்கள் நடனமாடும்.
  2. பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும்.

Question 7.
இயற்கைத் தங்குமிடம் எது?
Answer:
இயற்கைத் தங்குமிடம் : காடு

Question 8.
எங்கும் திரியுமடீ! – இதில் ‘திரிந்தவை’ எவை?
Answer:
சிங்கம், புலி, கரடி, சிறுத்தை .

சிறு வினா

Question 1.
சுரதா – குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : இராசகோபாலன்
பிறப்பு : 23.11.1921
சிறப்புப்பெயர் : உவமைக்கவிஞர்
சுரதா – பெயர்க் காரணம் : பாரதிதாசன் மீது பற்றுக்கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே ‘சுரதா’ என்பதாகும்.
படைப்புகள் : 1. தேன்மழை 2. துறைமுகம் 3.அமுதும் தேனும் முதலியன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 2.
‘காடு’ என்னும் கவிதையில் இடம் பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
1. குரங்கு
2. கிளி
3. மயில்
4. பன்றி
5. பாம்பு
6. நரி
7. யானை
8. குயில்
9. சிங்கம்
10. புலி
11.கரடி
12. சிறுத்தை

Question 3.
காட்டைக் குறிக்கும் வேறுபெயர்கள் யாவை?
Answer:
கா, கால், கான், கானகம், அடவி, அரண், புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை , விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.

Question 4.
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
Answer:
தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

சொல்லும் பொருளும்

ஈன்று – பெற்று
கொம்பு – கிளை
அதிமதுரம் – மிகுந்த சுவை
களித்திட – மகிழ்ந்திட
நச்சரவம் – விடமுள்ள பாம்பு
விடுதி – தங்கும் இடம்
தீபம் – ஒளி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Students can Download 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

கற்பவை கற்றபின்

Question 1.
வகுப்பு மாணவர்களின் படைப்புகளைத் திரட்டிக் குழுவாக இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்குக.
Answer:
(மாணவர் செயல்பாடு)

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..
அ) ஜெயகாந்தன்
ஆ) ஜெயமோகன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) ஜெயகாந்தன்

Question 2.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Answer:
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.
அ) வியாசர்
ஆ) கம்பர்
இ) வில்லிபுத்தூரார்
ஈ) பாரதியார்
Answer:
அ) வியாசர்

Question 4.
“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..
அ) அறம், மானம், கல்வி, புகழ்
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், மறம், மானம், புகழ்
ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமை
Answer:
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 5.
கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..
அ) மானுடம்
ஆ) சமூகப்பார்வை
இ) நன்னெறி
ஈ) நாட்டுப்பற்று
Answer:
ஆ) சமூகப்பார்வை

Question 6.
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Answer:
அ) 1934-2015

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 7.
பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் எது?
அ) உண்மை சுடும்
ஆ) ஒரு கதாசிரியரின் கதை
இ) வாழ்விக்க வந்த காந்தி
ஈ) தேவன் வருவார்
Answer:
இ) வாழ்விக்க வந்த காந்தி

Question 8.
முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..
அ) ஒரு கதாசிரியனின் கதை
ஆ) பிரளயம்
இ) இனிப்பும் கரிப்பும்
ஈ) யுகசந்தி
Answer:
அ) ஒரு கதாசிரியனின் கதை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 9.
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Answer:
ஆ) யுகசந்தி

Question 10.
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ……………………..
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஈ) ஜெயகாந்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 11.
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Answer:
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Question 12.
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Answer:
ஆ) இமயத்துக்கு அப்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 13.
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Question 14.
சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன

Question 15.
உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது……………………..
அ) குடியரசுத்தலைவர் விருது
ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது
ஈ) தாமரைத் திரு விருது
Answer:
அ) குடியரசுத்தலைவர் விருது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 16.
மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.
அ) குருபீடம், யுகசந்தி
ஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்
இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா
ஈ) பிரளயம், கைவிலங்கு
Answer:
ஈ) பிரளயம், கைவிலங்கு)

Question 17.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
அ) குருபீடம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 18.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப் போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஆ) பிரளயம்

Question 19.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஈ) ஒரு கதாசிரியரின் கதை

Question 20.
பொருத்துக.
1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்
2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்
அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 21.
ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்
இ) ஒருபிடி சோறு
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) ஒருபிடி சோறு

Question 22.
சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 23.
படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Question 24.
திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
ஆ) யாருக்காக அழுதான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 25.
ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்

Question 26.
ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………………..
அ) 1972
ஆ) 1971
இ) 1975
ஈ) 1978
Answer:
அ) 1972

குறுவினா

Question 1.
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
Answer:

  • குடியரசுத் தலைவர் விருது
  • சாகித்திய அகாதெமி விருது
  • சோவியத் நாட்டு விருது
  • ஞானபீட விருது
  • தாமரைத்திரு விருது – ஆகியவையாகும்.

Question 2.
ஜெயகாந்தன் என்ற தமிழனின் சிறந்த அடையாளங்கள் என்று கா. செல்லப்பன் குறிப்பிடுவது யாது?
Answer:
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்திரங்கள் இவையே ஜெயகாந்தனின் சிறந்த அடையாளங்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
ஜெயகாந்தன் இயற்றிய குறும்புதினங்களுள் ஏதேனும் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:

  • கைவிலங்கு
  • ரிஷி மூலம்
  • கருணையினால் அல்ல
  • சினிமாவுக்குப் போன சித்தாளு

Question 4.
ஜெயகாந்தனின் இன்னொரு முகம் கவிஞன் – என்பதற்குச் சான்று தருக.
Answer:
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றி கவிதை எழுதியதே, ஜெயகாந்தன் ஒரு கவிஞர் என்பதற்குச் சான்றாகும்.

“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்
பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்.”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 5.
ஜெயகாந்தனின் சாதனையாக தீபம் இதழ் வாசகர்கள் கூறியது யாது?
Answer:
சிறுகதைகளில் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் புதிய கருத்துகளையும் வெற்றிகரமாக சித்தரிப்பது ஜெயகாந்தனின் அரிய சாதனை என்று பாராட்டுகின்றனர்.

Question 6.
திரைப்படமான ஜெயகாந்தனின் படைப்புகள் யாவை?
Answer:

  • சில நேரங்களில் சில மனிதர்கள்.
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
  • உன்னைப்போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர்.
  • யாருக்காக அழுதான் – ஆகியவையாகும்.

Question 7.
‘பாயிரந் தோன்றி மும்மை யினொன்றாய்’ – இவ்வடிகளில் உள்ள ‘மும்மை’ எவை?
Answer:

  1. இறப்பு
  2. நிகழ்வு
  3. எதிர்வு

Question 8.
ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் சிலவற்றை எழுதுக.
Answer:

  • குருபீடம்
  • இனிப்பும் கரிப்பும்
  • யுகசந்தி
  • தேவன் வருவாரா
  • ஒருபிடி சோறு
  • புதிய வார்ப்புகள்
  • உண்மை சுடும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 9.
ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை?
Answer:
வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை.

Question 10.
‘பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – ஏழை
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்’ – என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
Answer:

  • ஜெயகாந்தன்
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல்.

Question 11.
‘எண்ணும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்’ என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
Answer:

  • ஜெயகாந்தன்.
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல் பாடினார்.

Question 12.
ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?
Answer:

  • மகத்தான சாதனை: பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்,
  • அதுவே மிகப்பெரிய சவால் என்கிறார் ஜெயகாந்தன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 13.
இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது? என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
Answer:
காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம், நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

சிறுவினா

Question 1.
ஜெயகாந்தனின் புகழ்பெற்ற புதினங்கள் யாவை?
Answer:

  • பாரீசுக்குப் போ!
  • சுந்தரகாண்டம்
  • உன்னைப்போல் ஒருவன்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • கங்கை எங்கே போகிறாள்
  • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  • இன்னும் ஒரு பெண்ணின் கதை

Question 2.
“எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் விளக்கமளிக்கிறார்?
Answer:

  • நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.
  • முழுக்க முழுக்க வாழ்க்கையில் இருந்து நான் பெறும் கல்வியின், முயற்சியின் பயனை வெளிப்படுத்த எழுதுகிறேன்.
  • சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவும் எழுதுகிறேன்.
  • கலாதேவியின் (கலை) காதல் கணவனாக இருப்பதாலும், சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாக இருப்பதாலும் எழுதுகிறேன். – என்று ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுவது யாது?
Answer:
“நூலினியல்பே நுவலின் ஓரிரு
பாயிரந் தோற்றி மும்மை யினொன்றாய்
நாற்பொருட் பயத்தலொடு எழுமதந் தழுவி”
என்று நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுகிறது.

Question 4.
நாற்பொருள் பயத்தல் – என்பது எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:

  • நூல் என்பது நாற்பொருள் தருவதாய், பயனுடையதாய் இருத்தல் வேண்டும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நாற்பொருள் ஆகும்.

Question 5.
முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.
Answer:
எழுத்தாளர், ஒருவருடைய படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான் முன்னுரை.

தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரைகள் எழுதிக்கொள்ளும் ஜெயகாந்தன், பின்னர் வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார்.

“ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்ம சக்தியோடு எழுதுகிறானே அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்” (1966) என்று பாரீசுக்குப் போ என்னும் புதினத்தின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 6.
சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
Answer:
நுணுக்கமா? அப்படித் தனியாக நான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை. என் மனத்தால், புத்தியால், உணர்வாய் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சனைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாகி அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சனைகளே.

நெடுவினா

Question 1.
“எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் எழுதுவதற்கான காரணத்தை விளக்கமளிக்கிறார்?
Answer:
குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • தனிமுயற்சியின் பயன்
  • நாற்பயன்
  • கணவன்-புதல்வன்
  • சமுதாயப் பார்வை
  • முடிவுரை

முன்னுரை:
தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே! அவர் எழுத்துலகில் எழுதுவதற்கான காரணங்களைக் காண்போம்.

தனிமுயற்சியின் பயன்:
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு, என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனி முயற்சியின் பயனுமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

நாற்பயன்:
வியாசன் முதல் பாரதி வரை தாங்கள் எதற்காக எழுதுகிறோம்? என்பதையும் கலையைத் தாங்கிப்பிடிக்கச் சொல்லவும் இல்லை. ஆனால் இவர்களைவிட கலையைத் தாங்கியவர்கள் யாரும் இல்லை. அறநெறியை உபதேசிக்க பாரதத்தை வியாசர் எழுதினார். தமிழ் இலக்கணம் நாற்பயனையே நூலின் பயனாகச் சுட்டுகிறது.

கணவன்-புதல்வன்:
கலைத்தன்மைக்கு எவ்விதக் குறைவும் வாராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான், நான் எழுதுகிறேன்.

சமுதாயப் பார்வை:
அர்த்தமே வடிவத்தை வளமாக்கும். வெறும் வடிவம் மரப்பொம்மைதான். அதனால் அதைப்பிடித்து துன்பப்படுத்தாமல், சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன். கலைப்பணியில் சமூகப்பார்வை அடக்கம்.

முடிவுரை:
‘எதற்காக எழுதுகிறேன்?’ என்று நான் சொன்ன காரணங்களுக்கு எதிராக நடந்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும் உட்பட்டு இருக்கிறேன் என்கிறார் ஜெயகாந்தன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது…………………….
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம்
ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 2.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது?
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார். ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
Answer:
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

குறுவினா

Question 1.
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
Answer:

  • நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு.
  • நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.

சிறுவினா

Question 1.
ஜெயகாந்தன் தம் கதை மாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். – இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:
“தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:
கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்ப்பிக்கும் செயல்:
இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைக்காரனுக்கு இரண்டணாவை அவர் போட்டார். அதைப் பெற்றுக்கொண்டவர் கைகள் குவித்து, ‘சாமி, நீங்கபோற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்தப் பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யாமல் இருந்திருந்தாலோ அல்லது தர்மம் செய்த ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில்தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதைத் தர்மம் செய்தவன் உணர்ந்தான்.
தர்மம் தந்தவனும் அதைப்பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.

நெடுவினா

Question 1.
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Students can Download 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

கற்பவை கற்றபின்

Question 1.
பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் பாவகைகளையும் வகைப்படுத்தி பட்டியல் இடுக.
Answer:
1. குறள்வெண்பா : திருக்குறள்
2. வெண்பா : நீதி வெண்பா, திருவிளையாடற்புராணம், தேம்பாவணி,
3. கலிவெண்பா : முல்லைப்பாட்டு, பரிபாடல்
4. ஆசிரியப்பா : அன்னைமொழியே, மலைபடுகடாம், திருமால் திருமொழி, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மெய்க்கீர்த்தி, சிலப்பதிகாரம், ஞானம், காலக்கணிதம், ஏர் புதிதா?
5. இணைக்குறள் ஆசிரியப்பா : காற்றே வா, பூத்தொடுத்தல், சித்தாளு.
6. கலிப்பா : கம்பராமாயணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 2.
வெண்பாவில் அமைந்த நூல்கள், ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வெண்பாவில் அமைந்த நூல்கள் : திருக்குறள், நாலடியார்.
ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.

கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: இரகு, மது, சாந்தி.

இரகு : நண்பா! இரகு செய்யுள் நூல்கள் பல எழுதப்பட்டாலும் நாம் இப்போது வெண்பாவிலும், ஆசிரியப்பாவிலும் எழுதப்பட்ட நூல்கள் பற்றி உரையாடுவோம்.
மது : நல்ல செய்தி தான், வெண்பாவில் ஒன்றும் ஆசிரியப்பாவில் ஒன்றும் எடுத்துக்கொள்ளலாமா?
சாந்தி : மது அண்ணா ! வெண்பாவில் திருக்குறளும், ஆசிரியப்பாவில் சிலப்பதிகாரமும் பற்றி பேசலாமா!.
இரகு : பேசலாமே! முதலில் வெண்பாவில் திருக்குறளைப் பற்றி பேசலாம்.

மது : உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்றை தலைமையாகக் கொண்டு 133 அதிகாரத்தையும் 1330 பாக்கள் கொண்டு குறள் வெண்பாவால் பாடப்பட்ட நூல்.
சாந்தி : இந்த நூலுக்கு பத்து பேர் உரை எழுதி உள்ளார்களாம்.
இரகு : இன்று ஏராளமானவர் எழுதி உள்ளனர். பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை.
சாந்தி : நாம் திருக்குறளைப் படிப்பதோடு இல்லாமல் திருக்குறளோடு குறள் கூறியுள்ளது போல் வாழ்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மது : சரி, வெண்பாவினால் அமைந்த நூலைப் பார்த்தோம்.
சாந்தி : ஆசிரியப்பாவால் அமைந்த நூல், தமிழில் முதன் முதலில் தோன்றிய காப்பியம் எது என்றுசொல்லுங்கள்?
மது : சிலப்பதிகாரம் சாந்தி!.
இரகு : இந்நூல் கோவலன், கண்ணகி, மாதவி என மூன்று மூன்றாக பாடினாலும்
குடிமக்களைப்பற்றி பாடிய நூல்.
சாந்தி : 1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
3. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
என்னும் மூன்று உண்மைகளைக் கூறுகிறது.
இரகு : ஒவ்வொரு நூலையும் பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். நேரம் போய்க்
கொண்டே இருக்கிறது. வீட்டில் தேடுவார்கள். புறப்படுவோமா!
மூவரும் : நல்லது. புறப்படுவோம்.

Question 3.
யாப்போசை தரும் பாவோசைகள் எவையெனப் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்?
Answer:
யாப்போசை தரும் பாவோசை

1. செப்பலோசை : இருவர் உரையாடுவது போன்ற ஓசை.
2. அகவலோசை : ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
3. துள்ளலோசை : கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது
4. தூங்கலோசை : சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை,
தாழ்ந்தே வருவது – யாப்பதிகாரம், புலவர் குழந்தை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு:
Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city, “He is helped whom God helps”. The Second beggar used to cry, “He is helped who the king helps”. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him, “What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well baked” Then the Emperor said, “Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out of his palace.
Answer:
தமிழாக்கம்:
முன்பொருநாள் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன் கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான். இரண்டாம் பிச்சைக்காரன் மன்னனைப் புகழ்ந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான். தினமும் இருவரும் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

ரோம் அரசர் தன்னைப் பற்றிப் பேசிப் புகழ்ந்து எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ விரும்பினார்.

நீளமான ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித் துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்துக் கொடுத்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

இரண்டாம் பிச்சைக்காரன் ரொட்டித் துண்டு பொட்டலம் கனமாக இருக்கிறது; விற்றால் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்றுவிடுகிறான்.

இப்படியே ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை வாங்கும் முதலாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டை வெட்டிப்பார்த்தால் தினமும் பொற்காசுகள் மின்னின.

தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து சேர்த்து வைத்தான். பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான்.

இரண்டாம் பிச்சைக்காரன் தொடர்ந்து வீதிகளில் பிச்சை எடுத்துக்கொண்டே இருக்கிறான். மன்னன் அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டிப் பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார்.

அது எடுத்துச்செல்ல கனமாக இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்றுவிட்டேன் என்றான்.

மன்னர் தனக்குள் நினைத்துக்கொண்டார். “கடவுள் தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது உதவுகிறார்” இரண்டாம் பிச்சைக்காரனிடம் திரும்பி, ‘சரி நீ போகலாம்’ என்று அரண்மனையில் இருந்து வெளியேறச் சொன்னார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

மனக்கோட்டை:
கண்ணும் கருத்தும்:
அள்ளி இறைத்தல்:
ஆறப்போடுதல்:
Answer:
மனக்கோட்டை:
படிக்காமலே தேர்வில் வெற்றிபெற்றுவிடலாம் என்று சில மாணவர்கள் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.

கண்ணும் கருத்தும்:
கண்ணும் கருத்தாய் கவனமுடன் படித்தால் முதல் மதிப்பெண் பெறலாம்.

அள்ளி இறைத்தல்:
பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தால் விரைவில் வறுமைநிலை அடைவாய்.

ஆறப்போடுதல்:
பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாது ஆறப்போடுதல் அநேக தீயவிளைவுகளைத் தடுக்கும்.

பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

பேச்சுவழக்கு:
“தம்பீ? எங்க நிக்கிறே?”
“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்…”
“சரிங்கண்ணே ”
Answer:
எழுத்து வழக்கு:

“தம்பி எங்கே நிற்கிறாய்?”
“நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது.”
“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன்.”
“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன.”
“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.”
“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ”
“இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”
“சரி அண்ணா !”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

கடிதம் எழுதுக.

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
எஸ். சங்கரன்,
23, வள்ளலார் சாலை,
பாரதிதாசன் நகர்,
திருச்சி.

பெறுநர்
உயர்திரு. மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள், செயற்பொறியாளர் அலுவலகம்,
திருச்சி.

பொருள்: தெருவிளக்குகள் பழுது நீக்குதல் – தொடர்பாக

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். நான் பாரதிதாசன் நகர் வள்ளலார் சாலையைச் சார்ந்தவன். கடந்த வாரம் வீசிய தானே புயலால் எங்கள் தெருவில் உள்ள மினவிளக்கு கம்பங்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டன. இதனால் இரவில் வெளியே செல்வோர்க்கு மிகவும் துன்பமாக இருக்கிறது. தெருவிளக்கு இல்லாததைப் பயன்படுத்தி சமூக விரோதிகளின் செயல்களும் அதிகமாகி விட்டது. அதனால் தயவுசெய்து நேரில் பார்வையிட்டு பழுதடைந்த மின்விளக்குக் கம்பங்களைச் சரிசெய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு,
தெருமக்கள் சார்பாக,
எஸ். சங்கரன்.

21.03.2020
பாரதிதாசன் நகர்.

உறைமேல் முகவரி:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 6

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

நயம் பாராட்டுக.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே. – வள்ளலார்
Answer:
திரண்ட கருத்து:
கோடையில் இளைப்பாறும் வகையில் கிடைத்த குளிர்ச்சி பொருந்திய தரு ஆனவன். மரம் (தரு) தரும் நிழலாகவும், நிழலின் குளிர்ச்சியாகவும், நிழல் தரும் கனியாகவும் இருப்பவன். ஓடையிலே ஊறுகின்ற இன்சுவை நீராகவும், நீரின் இடையில் மலர்ந்து சுகந்தம் தரும் வாசமலராகவும் திகழ்பவன். மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றாகவும், மென்காற்று தரும் சுகமாகவும் சுகத்தின் பயனாகவும் இருக்கும் இறைவா. இவ்வுலக வாழ்வில் ஆடிக்கொண்டிருக்கும் என்னையும் ஏற்றுக்கொண்ட (மனந்த) தலைவனே (மணவாளனே) பொதுவிலே ஆடுகின்ற, ஆட்டுவிக்கின்ற எம் அரசே நான் தரும் பாமாலையை (அலங்கல்) அணிந்து எனக்கு அருள் செய்வாயாக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மோனை நயம்:
குயவனுக்கு பானை
செய்யுளுக்கு மோனை
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை ஆகும்.
மேடையிலே
மென்காற்று…
டையிலே…
டுகின்ற… என்று மோனை நயமும் மிகுந்து வருகின்றது.

எதுகை நயம்:

மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை

முதல் எழுத்து அளவொத்திருக்க அடியிலோசீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகையாகும். இப்பாடலில்,
கோடையிலே
டையிலே
மேடையிலே
டையிலே – என்று எதுகை நயம் அமைந்துள்ளது.

இயைபு நயம்:
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும்.
தண்ணீரே
மலரே என இயைபு நயமும் உள்ளது.

அணி நயம்:
அணி என்றால் அழகு. இப்பாடலின் அழகுக்கு அழகு செய்யும் வகையில்,
“குளிர் தருவே…
நிழல் கனிந்த கனியே…”

இறைவனை உருவகப்படுத்தும் “உருவக அணியும்” இறைவனை மேன்மைப்படுத்தி உயர்த்திப் புகழ்ந்து பாடியிருப்பதால் “உயர்வு நவிற்சி அணியும்” அமைந்து பாடலுக்கு நயம் கூட்டியுள்ளது.

சந்த நயம்:
இப்பாடல் இனிய ஓசையுடன், இசையுடன் பாடும் வகையில், ஒழுகிய ஓசையாய் ‘எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவலோசையுடன் சந்த நயமும் மிக்குள்ளது.

இப்பாடல் அனைத்து இலக்கிய நயங்களுமுடையதாய்ப் படிப்போர் மனதில் இறைபக்தியையும், இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மொழியோடு விளையாடு

கண்டுபிடித்து எழுதுக.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம்பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக……
Answer:
எண்ணுப்பெயர்கள் இடம்பெறும் திருக்குறள் பாக்கள்:

ஒன்று :
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

இரண்டு :
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.

மூன்று :
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

நான்கு :
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

ஐந்து :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்.

ஆறு :
படைகுடி கூழ்அமைச்சு நட்பரன் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

ஏழு:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

எட்டு :
கோயில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை.

ஒன்பது :
ஒன்பது என்ற எண்ணை திருவள்ளுவர் தம் நூலில் எங்கும் பயன்படுத்தவில்லை

பத்து :
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

சொற்களைப் பிரித்துப் பொருள் தருக.

1. கானடை
2. வருந்தாமரை
3. பிண்ணாக்கு
4. பலகையொலி

கானடை : கான் அடை காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
Answer:
1. கானடை : கான் அடை காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
2. வருந்தாமரை: வரும் தாமரை தாமரை மலர்
வரும் தா மரை – தாவும் மான் வருகிறது.
வருந்தா மரை – துன்புறாத மான்
3. பிண்ணாக்கு : பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது.
பிள் நாக்கு – பிளவுபட்ட நாக்கு
4. பலகையொலி : பலகை ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
பல கை ஒலி – பல கைகள் தட்டும் ஒலி.

அகராதியில் காண்க.

ஆசுகவி
மதுரகவி
சித்திரகவி
வித்தாரகவி
Answer:
ஆசுகவி – கொடுத்தப் பொருளை உடனே பாடும் பாட்டு.
அப்பாடலைப் பாடும் புலவன்.
மதுரகவி – இனிமை பெருகப் பாடும் கவி.
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு.
சித்திரகவி – சித்திரத்தில் அமைத்ததற்கு ஏற்ப பாடும் இறைக்கவி, 21 நயங்களில் கவிதை இயற்றுபவர்
வித்தாரகவி – விரித்துப் பாடப் பெறும் பாட்டு.
விரிவாகப் பாடும் நூல்.

கலைச்சொல் அறிவோம்

Belief – நம்பிக்கை
Philosopher – மெய்யியலாளர்
Renaissance – மறுமலர்ச்சி
Revivalism – மீட்டுருவாக்கம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 2
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 7

நிற்க அதற்குத் தக

நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை, நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ, உடன்பிறந்தவருடனோ எதிர்பாராமல் சச்சரவு ஏற்படுகிறது….. இந்தச் சமயத்தில் சினம்கொள்ளத் தக்க சொற்களைப் பேசுகிறோம்; கேட்கிறோம்; கைகலப்பில் ஈடுபடுகிறோம்; இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படுகளும் நன்மைகளும்…..
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 1
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 8

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……………………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Answer:
அ) அகவற்பா

குறுவினா

Question 1.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

  • குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
  • முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
    எ.கா: கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

Question 2.
வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
Answer:
வஞ்சிப்பா தூங்கல் ஓசையையும், கலிப்பா துள்ளல் ஓசையையும் பெற்று வரும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

சிறுவினா

Question 1.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
Answer:

  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.
  • வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவி வரும்.
  • மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
  • ஏகாரத்தில் முடியும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யாப்பின் உறுப்புகள்…………………….
அ) 3
இ) 6
ஆ) 5
ஈ) 7
Answer:
இ) 6

Question 2.
பொருத்திக் காட்டுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 3
அ) 2, 4, 1, 3
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 1, 2, 4
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 2, 4, 1, 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 3.
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Question 4.
வெண்பாக்களின் வகைகள் எத்தனை?
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
இ) ஐந்து

Question 5.
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …………..
அ) அகவல்
ஆ) துள்ளல்
இ) தூங்கல்
ஈ) செப்பல்
Answer:
ஆ) துள்ளல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 6.
வெண்பாவில் அமைந்த நூல்கள் …………..
அ) குறள்; நாலடியார்
ஆ) நாலடியார்; மணிமேகலை
இ) குறள்; சிலம்பு
ஈ) குறள், வளையாபதி
Answer:
அ) குறள்; நாலடியார்

Question 7.
ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா …………..
அ) ஆசிரியப்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) வெண்பா

Question 8.
“பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை …………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
அ) அகவற்பா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 9.
பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும் பா வகை …………..
அ) கலிவெண்பா
ஆ) வஞ்சிப்பா
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) இன்னிசை வெண்பா
Answer:
ஆ) வஞ்சிப்பா

Question 10.
சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது – …………..
அ) தூங்கலோசை
ஆ) துள்ளலோசை
இ) செப்பலோசை
ஈ) அகவலோசை
Answer:
அ) தூங்கலோசை

Question 11.
இருவர் உரையாடுவது போன்ற ஓசை – …………..
அ) செப்பலோசை
ஆ) அகவலோசை
இ) துள்ளலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
அ) செப்பலோசை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 12.
ஆசிரியப்பாவின் வகைகள் …………..
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

Question 13.
“ஏகாரத்தில்” முடியும் சிறப்புடைய பா வகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Question 14.
பொருத்துக.
1. இருவர் உரையாடுவது போன்றது – அ) அகவலோசை
2. சொற்பொழிவாற்றுவது போன்றது – ஆ) செப்பலோசை
3. தாழ்ந்து உயர்ந்து வருவது – இ) தூங்கலோசை
4. தாழ்ந்தே வருவது – ஈ) துள்ளளோசை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 15.
அகவற்பாவுடன் தொடர்பில்லாத ஒன்று …………..
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பெருங்கதை
ஈ) நாலடியார்
Answer:
ஈ) நாலடியார்

Question 16.
பொருத்துக.
1. நேர் – அ) மலர்
2. நிரை – ஆ) காசு
3. நேர்பு – இ) பிறப்பு
4. நிரைபு – ஈ) நாள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 17.
பொருத்துக.
1. நேர் நேர் – அ) புளிமா
2. நிரை நேர் – ஆ) தேமா
3. நேர் நிரை – இ) கருவிளம்
4. நிரை நிரை – ஈ) கூவிளம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 18.
பொருத்துக.
1. நேர் நேர் நேர் – அ) புளிமாங்காய்
2. நிரை நேர் நேர் – ஆ) தேமாங்காய்
3. நேர் நிரை நேர் – இ) கருவிளங்காய்
4. நிரை நிரை நேர் – ஈ) கூவிளங்காய்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 19.
பொருத்துக.
1. நேர் நேர் நிரை – அ) புளிமாங்கனி
2. நிரை நேர் நிரை – ஆ) தேமாங்கனி
3. நேர் நிரை நிரை – இ) கருவிளங்கனி
4. நிரை நிரை நிரை – ஈ) கூவிளங்கனி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 20.
புலவர் குழந்தை இயற்றிய யாப்பு நூல் …………………
அ) யாப்பதிகாரம்
ஆ) யாப்பருங்கலம்
இ) யாப்பருங்கலங்காரிகை
ஈ) நன்னூல்
Answer:
அ) யாப்பதிகாரம்

குறுவினா

Question 1.
யாப்பின் உறுப்புகள் யாவை?
Answer:
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, தளை ஆகியவை ஆகும்.

Question 2.
பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பா நான்கு வகைப்படும். அவையாவன: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 3.
வெண்பாவின் வகைகள் யாவை?
Answer:
வெண்பா ஐந்து வகைப்படும்: அவையாவன:
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவையாகும்.

Question 4.
ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
ஆசிரியப்பாவின் வகைகள் நான்கு வகைப்படும். அவை:
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா

Question 5.
திருக்குறளும் நாலடியாரும் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
Answer:

  • திருக்குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளது.
  • அதன் ஓசை : செப்பலோசை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 6.
சங்க இலக்கியங்கள் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
Answer:

  • சங்க இலக்கியங்கள் அகவற்பாவில் அமைந்துள்ளது.
  • அதன் ஓசை :அகவல் ஓசை

Question 7.
அகவலோசையில் அமைந்த நூல்கள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை

Question 8.
பதின்மூன்று அடிக்கு மேல் வரும் வெண்பா எது?
Answer:
கலிவெண்பா.

Question 9.
கலித்தளையும் வெண்டளையும் விரவிவரும் பா எது?
Answer:
ஆசிரியப்பா (அகவற்பா).

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 10.
ஓரசைச் சீர்கள் யாவை?
Answer:
நேர் – நாள் ; நிரை – மலர்
நேர்பு – காசு ; நிரைபு – பிறப்பு

Question 11.
ஈரசைச் சீர்கள் யாவை?
Answer:
நேர் நேர் – தேமா ; நிரை நேர் – புளிமா
நிரை நிரை – கருவிளம் ; நேர் நிரை – கூவிளம்

Question 12.
மூவசைச் சீர்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 4

சிறுவினா

Question 1.
வெண்பாவின் பொது இலக்கணத்தை விளக்குக.
Answer:

  • வெண்பா செப்பல் ஓசை பெற்று வரும்.
  • ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்.
  • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 2.
அகவற்பாவை விளக்கி, சான்று தருக.
Answer:

  • அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது.
  • இலக்கணக் கட்டுக் கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா .
    சான்று: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை – ஆகியவையாகும்.

Question 3.
அலகிட்டு வாய்பாடு எழுதுக.
Answer:
குறள்: உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3

Students can download 4th Maths Term 2 Chapter 1 Geometry Ex 1.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 1 Geometry Ex 1.3

A. Which of the following figure is symmetrical about dotted line?

Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 4

Question 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 10

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3

Question 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 8

Question 5.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3 10

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3

Who am I:
Question 1.
I have no side, no vertices and many lines of symmetry. Who am I? ——————-
Answer:
Circle

Question 2.
I have 4 equal sides and 4 lines of symmetry.
Who am I? ——————-
Answer:
Square

Question 3.
I have 3 equal sides, 3 vertices and 3 lines of symmetry,
who am I? ——————-
Answer:
Equilateral triangle

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry Ex 1.3

Question 4.
I have 4 sides opposite sides are equal and I hove 2 lines
of symmetry. Who am I ——————-
Answer:
Rectangle