Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள்

Students can Download 6th Tamil Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள்
Question 1.
ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் மொழிமுதல் எழுத்துகளாக அமைபவை எவை? அவ்வெழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை அகராதியைப் பார்த்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் 1

மதிப்பீடு

Question 1.
மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?
Answer:
(i) க,ச,த,ந,ப,ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகள்.
(ii) ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டும்.
‘ங’ வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டும்.
வரிசையில் ஞ, ஞா, ஞெ,ஞொ ஆகிய நான்கு எழுத்துகள்.
‘ய’ வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகள்.
‘வ’ வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய ஏழு எழுத்துகள்.

Question 2.
மொழி இறுதியில் வராத மெய்கள் என்னென்ன?
Answer:
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை .

Question 3.
சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?
Answer:
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

மொழியை ஆள்வோம்

கண்டதும் கேட்டும் மகிழ்க.

Question 1.
அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய காணொலிகளைக் கண்டும், கேட்டும் மகிழ்க.
Answer:
மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய காணொலி காட்சிகளைத் தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ளச் செய்தல் வேண்டும்.

பேசி வெளிப்படுத்துக

Question 1.
உங்களை ஓர் அறிவியல் அறிஞராகக் கற்பனை செய்து கொண்டு எவ்வகைக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவீர்கள் என்பது குறித்துப் பேசுக.
Answer:
(i) நான் அறிவியல் அறிஞரானால் நாட்டு மக்களுக்குப் பயன்தரும் ஆராய்ச்சிகளைச் செய்வேன். அறிவியல் பிரிவில் விலங்கியலைப் பாடமாக எடுத்துப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி செய்வேன்.

(ii) முதலில் மக்களின் மனதில் எழும் கோபம், தீயகுணங்கள் அதாவது எதிர்மறையான எண்ணங்கள், பிறரை அழிக்கும் வஞ்சக எண்ணம். இவற்றையெல்லாம் தூண்டும் உட்சுரப்பு நீர்(Harmone) எதுவெனக் கண்டறிந்து அவற்றைச் செயலிழக்கச் செய்வேன்.

(iii) ஏழை முதல் பணக்காரன் வரை இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் பணம் ஒன்றே முதன்மையானது என்ற எண்ணத்தில் உலா வருகிறார்கள். அவரவர் நிலைக்கேற்றபடி அவர்களின் தேவை வேறுபடுகிறது.

(iv) இவர்களின் தேவையை நிறைவேற்ற மனம் போன போக்கில் பல நேர்மையற்ற செயல்களைச் செய்கின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு என் ஆராய்ச்சி கட்டாயம் பயன்படும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள்

(v) இக்கண்டுபிடிப்பால் மாணவர்கள் தங்களின் இளமைப் பருவத்திலிருந்தே பெற்றோரை மதித்தல், ஒழுக்கச் சீலராய் வாழ்தல், தங்கள் மனதை அமைதியான நிலையில் வைத்தல், போட்டி, பொறாமை இன்றி வாழ்தல் ஆகிய நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வர். அவர்களால் ஒரு நல்ல சமுதாயமே உருவாகும் என நம்புகிறேன்.

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

அது 1921 ஆம் ஆண்டு. மத்திய தரைக்கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.

ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா? அவர் தான் சர்.சி.வி. இராமன்.

Question 1.
இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?
Answer:
சர்.சி.வி. இராமன்.

Question 2.
இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
அ) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
ஆ) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை ?
இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
ஈ) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
Answer:
(விடை: இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?)

Question 3.
தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது? ஏன்?
Answer:
பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் அன்றுதான் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார் சர்.சி.வி. இராமன்.

Question 4.
இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.
Answer:
இப்பத்திக்கு நான் கொடுக்கும் தலைப்பு சர்.சி.வி. இராமன்.

ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக

1. ஈடுபாடு
2. நுண் பொருள்
3. உற்றவன்
4. பெருங்கடல்
5. துருவப் பகுதி
6. குறிக்கோள்
7. தொழில்நுட்பம்
8. நுண்ணுணர்வு
9. போலியோ
10. மூலக்கூறுகள்

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

அறிவியல் ஆக்கங்கள்

முன்னுரை :
மக்களுக்குப் பயன்படும் பொருள்களுள் மிகவும் இன்றியமையாதவை அறிவியல் சாதனங்கள். அறிவியலின் துணைகொண்டு தங்கள் வாழ்க்கையில் பல்வேறு வசதிகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, தொழிலில் அறிவியல் என்று பல வளங்களையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.

அன்றாட வாழ்வில் அறிவியல் :
அறிவியல்’ என்ற ஒற்றை வார்த்தையில்தான் உலகமே அடங்கிவிட்டது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நிறைந்துள்ளது. வீட்டில் உபயோகப்படுத்தப்படும் மாவரைக்கும் இயந்திரங்கள், சமையல் செய்யப் பயன்படும் வாயு அடுப்பு, மின்சார அடுப்பு, பல வகையான மின் விளக்குகள், குளிரூட்டும் இயந்திரம், குளிர்காலத்தில் வெம்மையைக் கொடுக்கும் ) இயந்திரங்கள், தூசு நீக்கி, ஈரம் அகற்றி, ஒட்டடை போக்கி என அடுக்கிக் கொண்டே போகலாம்.

பயன்பாடுகள் :
மாணவர்கள் கல்வி கற்கப் பயன்படுகின்ற நூல்கள் அனைத்தும் அறிவியல் சாதனமான அச்சுப் பொறிகளின் உதவியால் கிடைக்கின்றன. தகவல் தொடர்பு சாதனமாகப் பயன்படுகின்ற வானொலி, தொலைக்காட்சி ஆகியவை பல வகைகளில் மாணவர்களுக்கும் பயன்படுகின்றன. செல்பேசி, தொலைபேசி, கணினி, மடிக்கணினி, மின்னஞ்சல் போன்றவற்றின் பயன்கள் எண்ணிலடங்காதவை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள்

மருத்துவத்துறை :
நோயறியும் கருவிகளும், வந்த நோயைப் போக்கவும் பல மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிய புதிய நோய்கள் உருவாகிக் கொண்டே உள்ளன. அவற்றைப் போக்க பலவிதமான மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானங்கள் பெருகியுள்ளன. உடல் உறுப்புகள் தேவையானவர்களுக்குச் சரியான நேரத்தில் பொருத்தி நோயாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

தொழில்துறை :
தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் இயந்திரங்கள் உருவாக்குவதற்கும் அறிவியல் மிகவும் பயன்படுகிறது. உற்பத்திப் பொருள்களைப் பெருக்குவதற்கும், நேரத்திற்கு அவற்றை நுகர்வோர்க்கு அனுப்புவதற்கும் பயன்படுகிறது. வேளாண்துறைகளில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.

போக்குவரத்து சாதனங்கள் :
மிதிவண்டி, இரு சக்கர வண்டி, மகிழுந்து, பேருந்து, சரக்குந்து என சாலை வழி வாகனங்களும் நீர் வழிப்பயணத்திற்குப் பயணம் செய்ய கப்பல்களும், வான்வழிப் பயணத்திற்குப் பயணம் செய்ய வானூர்த்திகளும் மிகுந்த அளவில் பயன் தருகின்றன. வானில் ஏவப்படுகின்ற ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் யாவுமே அறிவியலின் கண்டுபிடிப்புகளாகும்.

முடிவுரை :
இயற்கையின் செயல்பாடுகளை அறிந்து ஆராய்ந்து அதில் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே அறிவியல். அறிவியலின் வியத்தகு சாதனைகளைப் போற்றுவோம். அவற்றை நன்மைக்காவே பயன்படுத்துவோம்.

மொழியோடு விளையாடு

சொல்வளம் பெருக்குக.
பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.
3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின்களைக் கண்டுபிடித்தனர்.
4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Answer:
1. (விடை: கணினி)
2. (விடை: அழைப்பு மணி)
3. (விடை: எந்திரங்கள்)
4. (விடை: தானியங்கி)

பகிர்க

Question 1.
ரோபோக்கள் கண்டுபிடிப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க.
Answer:
பூங்குழலி : தேவி! தானியங்கி என்று அழைக்கப்படும் ரோபோவைப் பற்றித் தெரியுமா?

தேவி : எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். தானியங்கி என்னும் சொல்லை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் செக் எழுத்தாளரான காரல் கேபெக் என்பவர்தான். அவர் 1920 ஆம் ஆண்டு ஆர்.யு.ஆர். நாடகத்தில் தானியங்கிகளை அறிமுகம் செய்து வைத்தார். நாடகத்தில் ரோபோக்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடனும் தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் விரும்பி பணிபுரியும் எண்ணம்
கொண்டவர்களாகவும் வடிவமைத்திருந்தார்.

பூங்குழலி : 1920-இல் தொடங்கிய ரோபோவின் பயணம் 2020-இல் உச்சக் கட்டத்தை எட்டிவிடும் என்றால் மிகையாகாது. நாளுக்கு நாள் இதன் வளர்ச்சி பெருகிக் கொண்டேதான் உள்ளது. மனிதர்கள் செய்ய இயலாத பணியைச் செய்கிறது. வீடு, அலுவலகம், மருத்துவமனை, தொழிற்சாலை என்று பல இடங்களிலும் தானியங்கிகள் பணியாற்றுகின்றன.

தேவி : ஆமாம். தொழிற்சாலையில் உதிரிப்பாகங்களை இணைக்கவும். பொருட்களைப்பொட்டலம்செய்வதற்கும், உற்பத்திசெய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்வதற்கும் பயன்படுகிறது.

பூங்குழலி : இதையெல்லாம் விட மருத்துவதுறையில் இதன் பங்கு அளப்பிடற் கரியது. நோய்களைக் கண்டறியவும் அறுவை சிகிச்சைகள் செய்யவும் பயன்படுகிறது.

தேவி : நான்கூட செய்தித்தாளில் படித்தேன். இது மனிதர்களைக் காட்டிலும் துல்லியமாகவும் நுட்பகமாகவும் வேலை செய்கிறது. பரவலாக பொருள் உற்பத்தி, ஒருங்கு திரட்டுதல், கட்டி வைத்தல், போக்குவரவு, நிலம் அகழ்வது மற்றும் விண்வெளியை ஆய்ந்து அறிதல் அறுவை உபகரணங்கள், ஆயுதங்கள் செய்தல், ஆய்வுக்கூட ஆராய்ச்சி மற்றும் நுகர்வோர் தொழிற்சாலையின் பொருள்கள் செய்தல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பூங்குழலி : பிப்ரவரி 2018-ல் தென்னிந்தியாவில் மதுரையில் முதன் முறையாக முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

தேவி : இது மட்டுமா! நான் செய்தித்தாளில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஈரோட்டில் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் நுகர்வோர்கள் பணமாகவோ, காசோலையாகவோ, வங்கி வரையோலையாகவோ செலுத்தலாம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள்

பூங்குழலி : அப்பப்பா! இந்த தானியங்கியினால் தான் எவ்வளவு புதுமைகள் ஏற்பட்டுள்ளது? கூகுள் பல வருடங்களின் முயற்சியில் விளைந்தது தானியங்கி கார். இதற்கு முதலில் எக்ஸ்லேப் எனப் பெயரிட்டு தற்போது ‘வேமோ’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. கண் தெரியாதவர்கள் கூட தனியாக இதில் எளிதாகப் பயணம் செய்ய முடியும். இத்தானியங்கி கார் மூலம் களைப்பு, கவனச்சிதறல்கள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

தேவி : இத்தானியங்கி கார் விபத்தில் சிக்கியதாக செய்தித்தாளில் பார்த்த நினைவிருக்கிறது.

பூங்குழலி : ஆமாம். நான்கூட படித்திருக்கிறேன். போக்குவரத்துச் சாலைகளில் சோதிப்பதற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது. விபத்து நேர்ந்ததால் அதை அப்படியே ஒதுக்க முடியுமா? வேறு வகையில் முயற்சி செய்ய வேண்டியது ஆராய்ச்சியாளர்களின் பொறுப்பாகும்.

விபத்தைத் தவிர்க்கும் வகையில் தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரைச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம். நான்கு சக்கரம் கொண்டதாக உள்ளது. பயணம் செய்யும்போது இடையூறுகள் ஏற்பட்டால் கண்டறிய இதில் நுண்ணுணர் (Sensors) பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேவி : இதுமட்டுமல்ல. இரயில் பயணிகள் தங்களுடைய செல்லிடப் பேசியில் UTS என்னும் செயலியை நிறுவி தானியங்கி பயணச்சீட்டுகளை பெறலாம். மேலும் நிறுவப்பட்டுள்ள இரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான தங்களது முன்பதிவு அல்லாத பயணச்சீட்டுகளைத் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

பூங்குழலி : தேவி தானியங்கியைப் பற்றி நாம் இவ்வளவு செய்திகளை அறிந்து வைத்துள்ளோம். மேலும் தானியங்கிகளின் செயல்பாடுகள் பற்றி நீ
அறிந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்.

கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்துக
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் 2
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் 3

வட்டத்தில் சிக்கிய எழுத்துக்களை எடுத்து எழுதுக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் 4
எழுத்துகளை வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டுபிடியுங்கள்………
விடை : அப்துல்கலாம்.

வாக்கியத்தை நீட்டி எழுதுக

(எ.கா) நான் படிப்பேன். (அறிவியல், பாடம், நன்றாக)
விடை : நான் பாடம் படிப்பேன்.
நான் அறிவியல் பாடம் படிப்பேன்.
நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்.

Question 1.
அறிந்து கொள்ள விரும்பு. (எதையும், காரணத்துடன், தெளிவாக)
Answer:
விடை : எதையும் அறிந்து கொள்ள விரும்பு.
எதையும் காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு.
எதையும் காரணத்துடன் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு.

Question 2.
நான் சென்றேன். ஊருக்கு, நேற்று, பேருந்தில்)
Answer:
விடை : நான் ஊருக்குச் சென்றேன்.
நான் நேற்று ஊருக்குச் சென்றேன்.
நான் பேருந்தில் நேற்று ஊருக்குச் சென்றேன்.

அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக
(எ.கா) அறி – அறிக, அறிந்து, அறிஞர், அறிவியல், அறிவிப்பு
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் 5

மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்கு
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் 6

குறுக்கெழுத்துப்புதிர்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள் 7

இடமிருந்து வலம் :
1. அப்துல்கலாமின் சுயசரிதை
3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி
10. எந்திர மனிதனுக்குக் குடியுரிமை

மேலிருந்து கீழ் :
1. ‘ரோபோ’ என்னும் சொல்லின் பொருள்
2. அகர வரிசையில் அமையும் இலக்கியம்
7. ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் வழங்கிய முதல் நாடு பட்டம் பெற்ற ரோபோ.

வலமிருந்து இடம் :
2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல்
6. சதுரங்கப் …………. யில் டீப்புளூ
8. மருந்து என்னும் பொருள் தரும் சொல்.

கீழிருந்து மேல் :
4. இந்தியா செலுத்திய ஏவுகணை.
5. தானாகச் செயல்படும் எந்திரம். வெற்றி பெற்றது
9. அப்துல்கலாம் வகித்த ……………. குடியரசுத் தலைவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.5 மொழிமுதல், இறுதி எழுத்துகள்

விடைகள்
இடமிருந்து வலம் :
1. அக்னிச் சிறகுகள்
3. எந்திர மனிதன்
10. சவுதி அரேவியா

மேலிருந்து கீழ் :
1. அடிமை
2. ஆத்திசூடி
7. சோபியா

வலமிருந்து இடம் :
2. ஆய்வு
6. போட்டி
8. ஔடதம்

கீழிருந்து மேல் :
4. அக்னி
5. தானியங்கி
9. பதவி

சூழலைக் கையாள்க

மாலையில் பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறீர்கள். அப்போது பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றுவிடுகிறது. இந்தப் பேருந்தை விட்டால் உங்கள் ஊருக்கு வேறு பேருந்து இல்லை. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
(i) அழ ஆரம்பித்துவிடுவேன்.
(ii) யாரிடமாவது உதவி கேட்பேன்.
(iii) அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன்.
(iv) ஊருக்கு நடந்தே செல்லத் தொடங்குவேன்.
விடை : அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. செயற்கை நுண்ண றிவு – Artificial Intelligence)
2. மீத்திறன் கணினி – Super Computer
3. செயற்கைக் கோள் – Satellite
4. நுண்ண றிவு – Intelligence

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Students can download 5th Maths Term 2 Chapter 4 Measurements Ex 4.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 1.
Fill in the blanks.

(i) 7 kg 400 g = ______ g
Answer:
7400

(ii) 5 g 50 mg = ______ mg
Answer:
5050

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 9500 mg = ______ g ______ mg
Answer:
9,500

(iv) 15 kg 350 g = ______ g
Answer:
15350

(v) 6250 g = ______ kg ______ g
Answer:
6,250

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 2.
Add the following:

(i) 4 kg 250 g + 3 kg 450 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 1
4 kg 250 g + 3 kg 450 g = 7 kg 700 g

(ii) 75g 430 mg + 750 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 2
75g 430 mg + 750 g = 825 g 430 mg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 97 kg 45 g + 77 kg 450g + 33 kg 250 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 3
97 kg 45 g + 77 kg 450g + 33 kg 250 g = 207 kg 745 g

(iv) 75 kg 400 g + 30 kg 250 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 4
75 kg 400 g + 30 kg 250 g = 105 kg 650 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 3.
Subtract the following:

(i) 40 kg 350 g – 25 kg 200 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 5
40 kg 350 g – 25 kg 200 g = 15 kg 150 g

(ii) 35 kg 850 g – 18 kg 500 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 6
35 kg 850 g – 18 kg 500 g = 17 kg 350 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 985 kg 475 g – 275 kg 325 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 7
985 kg 475 g – 275 kg 325 g = 710 kg 150 g

(iv) 700 kg – 300 kg 500 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 8
700 kg – 300 kg 500 g = 399 kg 500 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 4.
Multiply the following:

(i) 4 kg 300 g × 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 9
4 kg 300 g × 7 = 30 kg 100 g

(ii) 17kg 750 g × 8
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 10
17kg 750 g × 8 = 142 kg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 25 kg 550 g × 4
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 11
25 kg 550 g × 4 = 102 kg 200 g

(iv) 72g 350 mg × 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 12
72g 350 mg × 5 = 361 g 750 mg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 5.
Divide the following:

(i) 99 kg 99 0g ÷ 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 13
99 kg 99 0g ÷ 3 = 33 kg 330 g

(ii) 147 g 630 mg ÷ 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 14
147 g 630 mg ÷ 7 = 21 g 90 mg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 550 kg 220 g ÷ 11
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 15
550 kg 220 g ÷ 11 = 50 kg 20 g

(iv) 484 g 384 mg ÷ 4
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 16
484 g 384 mg ÷ 4 = 121 g 96 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 6.
What is the total weight of 7 kg 500 g of cashew nut and 3 kg 350 g of pista?
Answer:
cashew nut = 7 kg 500 g
pista = 3 kg 350 g
Total weight = 7 kg 500 g + 3 kg 350 g
= 10 kg 850 g
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 17

Question 7.
Vimal had a sack of cotton seeds weighing 50 kg 350 g. He used 7 kg 300 g cotton seeds to feed his cow. How much cotton seed will be remaining after feeding his cow?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 18
Remaining cotton seeds = 43 kg 50 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 8.
A glass bottle can contain 25 g 125 mg of medicine, how much medicine can 7 such bottles contain?
Answer:
Samacheer Kalvi 5th Maths
7 bottles contain = 175 g 875 mg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 9.
75 kg 750 g of groundnut seed is filled in five bags, how much groundnut seed can a bag contain?
Answer:
Total = 75 kg 750 g
One bag = 75 kg 750 g ÷ 5
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 20
one bag = 15 kg 150 g

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Students can Download 9th Tamil Chapter 6.2 இராவண காவியம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.2 இராவண காவியம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 1.
ஐவகை நிலங்களில் உங்கள் மாவட்டம்/ஊர் அமைந்த நிலவகை பற்றியும் அதன் கவின்மிகு காட்சியையும் படக் கட்டுரையாக்குக.
Answer:
என்னுடைய மாவட்டம் கன்னியாகுமரி. ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த நிலமாக இருப்பது என் மாவட்டத்தின் பெருமை.

கன்னியாகுமரியின் கவின்மிகு காட்சிகள்

தமிழகத்திற்குத் தென் எல்லையாகத் திகழும் எம் மாவட்டம் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 1
அரபிக்கடல், வங்காளவிரிகுடா. இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடம் இது.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 2
இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத் திருவிழாவாகவும், வானத்தில் பல வர்ணஜாலம் வாரியிறைக்கும் நிகழ்வுகளாகவும் அமைகின்றன. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்
தமிழினம் செழிக்க இரண்டடி தந்த வள்ளுவரைப் பெருமைப்படுத்தும் மாவட்டம்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 4
‘எழுமின் விழுமின்” என்று இளைய மனங்களில் எழுச்சித்தீபம் ஏற்றிய விவேகானந்தரைப் பெருமைப்படுத்தியுள்ளதும் எம் மாவட்டமே.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 5
காமராசர் நினைவாலயம், காந்தி மண்டபமும் இங்கு உண்டு.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 6
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம் போல் அமையப் பெற்றிருக்கும் குமரியம்மன் கோயில். பழமை வாய்ந்த தேவாலயங்களும் இங்கு இறையாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 7
இங்கு புலியை முறத்தால் கொன்ற வீரப் பெண்ணுக்கும், முல்லைக்குத் தேர் தந்த பாரி மன்னனுக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 8
திற்பரப்பில் இருந்து, திருவட்டார் வந்த பின் மாத்தூர் என்ற சிற்றூருக்குச் செல்லும் சாலையில் தொட்டிப் பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல் அமைந்துள்ள இப்பாலத்தில் விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

செல்லும் வழியெங்கும் பசி தீர்க்க பழவகைகள் பலவும் கிடைக்கும். கன்னியாகுமரியை இப்படிச் சொல்லி, சொல்லி வர்ணனை செய்து கொண்டே போகலாம்.
எம் மாவட்டத்திற்கு நீங்களும் ஒருமுறை வாருங்கள். இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள்.

Question 2.
இப்பாடப் பகுதியில் உங்களை ஈர்த்த கவிதைக் காட்சியினை ஓவியமாகத் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 9
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
வைக்கோற் போர், நெற்கதிர், போரடிக்கும் களம் போன்ற உழவுத் தொழிலோடு தொடர்புடையவற்றின் விளக்கங்களைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களே! இராவண காவியத்தில் ஐவகை நில வளங்களைப் பற்றிக் கற்கும் போது, வைக்கோற் போர், நெற்கதிர் போரடிக்கும் களம் போன்ற வார்த்தைகளைக் கற்றீர்கள் அல்லவா! அதன் விளக்கங்கள் தெரிந்து கொள்ள ஒரு கலந்துரையாடல்

கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், புகழேந்தி, சுதா.

ஐயா : நெற்குதிர் பற்றிச் சொல்லுங்கள் ஐயா!
ஆசிரியர் : கூறுகிறேன் புகழேந்தி.
நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு. பெரிய அளவில் இருக்கும் குதிரில் தானியத்தைச் சேமிப்பர். சிறிய அளவில் உள்ளவை விதை தானியங்களைச் சேகரித்து வைக்கவும் உதவும்.
புகழேந்தி : ஐயா! குதிர் பற்றி என் தாத்தா ஏதோ பழமொழி சொல்வாரே
ஆசிரியர் : ஆமாடா ………” எங்கப்பன் குதிருக்குள் இல்லை ”. “ஐயா!” கதிர் போல அம்மா குதிர் போல ” போன்ற பழமொழிகள் உள்ளன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சுதா :ஐயா போர் அடித்தல் என்றால் என்ன ஐயா!
ஆசிரியர் : அறுவடை செய்த நெல்லையும், வைக்கோலையும் பிரிக்கும் செயல். அகன்ற களத்திற்கு கொண்டு வந்து அடிப்பர். முதலில் அடிப்பதை தலையடி என்பர். பின் வைக்கோலைப் பரப்பி, மாட்டைச் சுற்றி வரச் செய்தும் நெல்லையும்,
வைக்கோலையும் தனித்தனியே பிரித்தெடுத்தலே போரடித்தல் ஆகும்.

சுதா : ஐயா வைக்கோற்போர் பற்றிச் சொல்லுங்களேன்.
ஆசிரியர் : நெல்லைப் பிரித்து எடுத்த பின் அதன் தாளை உலர்த்தி சேகரிப்பது வைக்கோல். அது கால்நடைகளுக்குக் குறிப்பாக மாடுகளுக்கு உணவாகும். வைக்கோலை ஈரம்படாமல் உலரவைத்து. அதனை அழகாக அடுக்கி குவித்து, காற்றில் பறக்காமல் இருக்க, வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியைக் கொண்டு சுற்றி வைத்துப் பாதுகாப்பதே வைக்கோற் போர் ஆகும்.
புகழேந்தி

சுதா : நன்றி ஐயா எங்கள் தலைமுறைக்குத் தெரியாத செய்திகள் இவை. விளக்கமாக புரிய வைத்து விட்டீர்கள் ஐயா!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……………….
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல்
இ) முல்லை
ஈ) கெடுதல்
Answer:
இ) முல்லை

குறுவினா

Question 1.
இடிகுரல், பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
இடிகுரல் – உவமைத் தொகை
பெருங்கடல் – பண்புத் தொகை

Question 2.
பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
Answer:
மராமலர்களை மாலையாக அணிந்த சிறுவர்கள், எருதின் கொம்புகளைப் போல் இருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின.
“வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால் அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு உவமைகளை எடுத்துக் காட்டுக.
Answer:
குன்று போல:
முல்லை நிலத்தவர்கள், முதிரை. சாமை, கேழ்வரகு மணி போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.

மதியம் தொடரும் மேகம் போல:
கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது, தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும். அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின் காட்சி போல் உள்ளது என்று உவமைப்படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.

Question 2.
குறிஞ்சி மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
Answer:
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின் மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

நெடுவினா

Question 1.
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
Answer:
முன்னுரை:
பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை, அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள் நீர் நிறைந்த நதி, குளக்கரைகள், மயில்கள், குயில்கள், கிளிகள் எனப் பறந்து திரியும் பறவைகள் இத்தகு அழகு சூழலை இராவண காவியத்தில் ஐவகை நிலங்கள் பற்றிக் குறிப்பிடும் பாடல்களில் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

பொன் மயில் ஆடும்:
அருவிகள் பறையைப் போல் ஆரவாரமாய் ஒலித்து விழும். பைங்கிளிகள் தாம் அறிந்த இசையினைப் பாடும். பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான அகன்ற சிறகினை விரித்து ஆடும். பூக்கள் நிறைந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குரங்கினமோ இவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்.

“………….. பொன் மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்”.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

குயிலும், வண்டும் இசைக்கும்:
அழகிய நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும் அழகுமிக்க சிறகினையுடைய வண்டு இனங்களும், பாவிசைத்துப் பாடின. புகழ்பெற்ற முல்லை நில ஆயர்கள் கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன முக்குழலை இசைத்து, மேயும் பசுக்கூட்டங்களை அருகருகே ஒன்றிணைக்கும் காட்சியும் இன்பம் தருவன.

“தேஇசை பெறும் கடறு இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகு அணைக்குமால்”

பூத்துக்குலுங்கும் காஞ்சி, வஞ்சி:
மலையிடைத் தோன்றும் ஆறும், கரையை மோதித் ததும்பி நிற்கும் குளமும் மனதைக் கொள்ளை கொள்ளும். முல்லை நிலத்தின் காட்டாற்று வெள்ளம் மருத நிலத்தில் பாய்ந்தோடும். நெற் பயிரினைக் காக்கும் பொருட்டு கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் கால்வாய் வழி ஓடி வயலில் தேங்கி வளம் சேர்க்கும். இத்தகு வளம் நிறைந்த நிலத்திலே காஞ்சி மலர்களும் வஞ்சி மலர்களும் பூத்துக் குலுங்கி மனதைப் பரவசப்படுத்தும்.

“மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

இளைப்பாற்றும் தாய் :
வெப்பத்தைத் தாங்க இயலாத தன் குட்டியின் களைப்பை இளைப்பாற்ற எண்ணிய தாய், எங்கும் நிழல் இன்றி தன் நிழலையே அதற்குத் தந்து குட்டியை இளைப்பாற்றும் தாயின் அன்பையும் இயற்கை மூலம் அறியலாம்.

“தன்னிழல் தங்கவே தாய்மை மீதுர ”

முடிவுரை:
மேற்கூறிய தன்மையில், இராவண காவியம் என்னும் இலக்கியமானது, எழிலோவியங்களை, தன் சொல் ஓவியங்களால் தீட்டி வைத்திருக்கிறது. இவற்றைக் கற்க கற்க இன்பமேயன்றி வேறில்ைைல யன்றோ!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ் பெருங்காப்பியம்.
அ) கம்பராமாயணம்
ஆ) இராவணகாவியம்
இ) தண்ணீர்த்தேசம்
ஈ) பொன்னியின் செல்வன்
Answer:
ஆ) இராவணகாவியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 2.
இராவண காவியத்தின் பாடல்கள்
அ) 2100
ஆ) 2500
இ) 3100
ஈ) 3500
Answer:
ஈ) 3100

Question 3.
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
அ) புலவர் குழந்தை
ஆ) மு. வரதராசனார்
இ) சாலமன் பாப்பையா
ஈ) பரிமேலழகர்
Answer:
அ) புலவர் குழந்தை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 4.
யாப்பதிகாரம், தொடையதிகாரம் எழுதியவர்
அ) பெருந்தேவனார்
ஆ) வாணிதாசன்
இ) வரந்தருவார்
ஈ) புலவர் குழந்தை
Answer:
ஈ) புலவர் குழந்தை

Question 5.
“மன்னிய” – என்பதன் இலக்கணக்குறிப்பு.
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) தொழிற்பெயர்
ஈ) வியங்கோள் வினைமுற்று
Answer:
பெயரெச்சம்

Question 6.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 10
Answer:
அ. ii) ஆ. i) இ. iv) ஈ. ili)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 7.
“பூவை” – என்பது எப்பறவையைக் குறிக்கும்.
அ) காகம்
ஆ) ஆறுமணிக்குருவி
இ) நாகணவாய்ப்பறவை
ஈ) நாரை
Answer:
இ) நாகணவாய்ப்பறவை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 8.
எருதின் கொம்பினைப்போல் இருந்த காய் எது?
அ) பாலைக்காய்
ஆ) பாகற்காய்
இ) ஏலக்காய்
ஈ) வாழைக்காய்
Answer:
அ) பாலைக்காய்

Question 9.
காஞ்சியும், வஞ்சியும் பூக்கும் நிலம்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
Answer:
இ) மருதம்

Question 10.
கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆனது ……………..
அ) முக்கூடை
ஆ) முக்குழல்
இ) முத்தளிர்
ஈ) முக்கொம்பு
Answer:
ஆ) முக்குழல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 11.
இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்டவன்
அ) இராமன்
ஆ) அனுமன்
இ) இராவணன்
ஈ) குகன்
Answer:
இ) இராவணன்

Question 12.
“மரை முகம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) உருவகம்
ஈ) உரிச்சொற்றொடர்
Answer:
அ) உவமைத்தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 13.
புரைதபப் பறித்துக் காஞ்சிப் புனை நிழல் அருந்துவாரே – இதில் அமைந்துள்ள நயம்
அ) அடிமோனை
ஆ) சீர்மோனை
இ) அடிஎதுகை
ஈ) சீர்எதுகை
Answer:
அ) அடிமோனை

Question 14.
“வருமலை அளவி” – வருமலை என புலவர் எதனைக் குறிப்பிடுகிறார்.
அ) கடற்காகம்
ஆ) கடற்காளான்
இ) கடலாமை
ஈ) கடல் அலை
Answer:
ஈ) கடல் அலை

Question 15.
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
அ) சேவற்கொண்டை
ஆ) யானைத்தந்தம்
இ) மான்கொம்பு
ஈ) மயிற்தோகை
Answer:
ஆ) யானைத்தந்தம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 16.
‘போர்’ அடிக்கும் குரலைக் கேட்டு அஞ்சி ஓடுவது எது?
அ) உழைமான்
ஆ) கவரிமான்
இ) கலைமான்
ஈ) செந்நாய்
Answer:
அ) உழைமான்

Question 17.
குருளைக்குத் தன் நிழல் தந்த விலங்கு எது?
அ) உழைமான்
ஆ) செந்நாய்
இ) மந்தி
ஈ) வானரம்
Answer:
ஆ) செந்நாய்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

குறுவினா

Question 1.
இராவண காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது?
Answer:

  • இராவண காவியம் காலத்தின் விளைவு
  • ஆராய்ச்சியின் அறிகுறி
  •  புரட்சிப் பொறி

உண்மையை உணரவைக்கும் உன்னத நூல் என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்தாகும்.

Question 2.
புலவர் குழந்தை – குறிப்பு வரைக.
Answer:

  • இராவணக் காவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை ஆவார்.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
புலவர் குழந்தையின் படைப்புகளில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
Answer:

  • யாப்பதிகாரம்
  • தொடையதிகாரம்

Question 4.
குரக்கினம் மருண்டு நோக்குமால் – ஏன்?
Answer:

  • பறையின் ஒசையைப் போல் ஆரவாரமாய் விழும் அருவியோசை .
    பாடுகின்ற பைங்கிளிகள்
  • பொன் போன்ற அழகிய சிறகினை விரித்து ஆடும் மயில் இவற்றைக் கண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் குரங்கு மிரட்சியுடன் நோக்கியது என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

Question 5.
குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் யாவை? எந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்தது?
Answer:

  • முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவை குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
  • முல்லை நிலத்தில்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 6.
கோர்வை / கோவை பற்றிய சொற்பொருள் விளக்கம் தருக.
Answer:
கோ என்பது வேர்ச்சொல்.

  • கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
  • எ.கா : ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

Question 7.
மைவனம், முருகியம் – என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் யாவை?
Answer:
மலைநெல், குறிஞ்சிப்பறை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தின் காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
இராவண காவியத்தில் ஐந்து காண்டங்கள் உள்ளன. அவையாவன.

  • தமிழகக் காண்டம்,
  • இலங்கைக் காண்டம்
  • விந்தக் காண்டம்
  • பழிபுரிகாண்டம்
  • போர்க்காண்டம் என்பவையாகும்.

Question 2.
மருதநில சிறுவர்களின் மனமகிழ் செயல்பாடுகளை எடுத்தியம்புக.
Answer:
தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து, அதன் வடிவழகு கண்டு மகிழந்தனர். சிறுகழல் அணிந்த சிறார்கள் வைக்கோற்போர் குலுங்கிடும்படி ஏறி, தென்னை இளநீர்க் காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
நெய்தல் நில வண்டுகள் பற்றி எழுதுக.
Answer:
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Students can Download 6th Tamil Chapter 3.4 ஒளி பிறந்தது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.4 ஒளி பிறந்தது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 1.
கனவு காணுங்கள் என்பது அப்துல் கலாமின் பொன்மொழி. உங்கள் கனவுகள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வகுப்பில் மாணவர்கள் தங்கள் கனவுகளைப் பற்றிக் கலந்துரையாடுதல்)
மாணவர் 1 : வணக்கம். என் கனவு நன்றாகப் படித்து உலகமே என்னைப் பற்றி அறியும்படி சாதனை புரிய வேண்டும் என்பதுதான்.

மாணவர் 2 : நல்லது. எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறாய்?

மாணவர் 1 : நான் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு அப்துல்கலாம் மாதிரி விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது என் வாழ்க்கை இலட்சியமாகவே எண்ணுகிறேன்.

மாணவர் 2 : நன்று! நன்று! அதுசரி எத்தனையோ விஞ்ஞானிகள் உள்ளனர். நீஎன்ன அப்துல்கலாம் மாதிரி என்று கூறுகிறாய்?

மாணவர் 1 : நன்றாகக் கேட்டாய். அவரை நான் என் முன்மாதிரியாக எண்ணுகிறேன். அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியில் படித்து விஞ்ஞானி ஆனவர்.

மாணவர் 2 : ஆமாம். அவர் காட்சிக்கு எளிமையானவர். நம்மைப் போன்ற மாணவர்களிடம் உரையாடுவதை மிகவும் விரும்பியவர்.

மாணவர் 1 : அதுமட்டுமா? தம்முடைய கடுமையான உழைப்பால் முன்னேறியவர். அவர் சென்ற பணிகளுக்கெல்லாம் அவருடைய உழைப்பும் அவர் கற்ற கல்வியுமே பரிந்துரையாக இருந்துள்ளது.

மாணவர் 2 : அதுசரி. நீ எதிர்காலத்தில் எவற்றில் எல்லாம் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

மாணவர் 1 : நான் அறிவியல் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவேன். அப்துல்கலாம் ஐயா கூறியதைப்போல் நான் கிராமங்களில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்வேன். ஐயா அவர்களின் கனவை நனவாக்க கிராமங்களில் உள்ள இளைஞர்களைக் கனவு காணச் செய்வேன்.

மாணவர் 2 : இளைஞர்கள் என்ன கனவு காண வேண்டும்.

மாணவர் 1 : சொல்கிறேன் கேள். இளைஞர்கள் வாய்மைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நல்லவற்றை எண்ண வேண்டும். அதன்வழி நடக்க வேண்டும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைக்க வேண்டும். தோல்விக்குத் தோல்வியைத் தர வேண்டும். துன்பத்திற்குத் துன்பத்தைத் தர வேண்டும். அவர்களுடைய கனவுகளாவன “அரும் பெரும் இலட்சியத்துடன் நாளைய வரலாற்றை உருவாக்குவோம்.

நாம் வசிக்கும் கிராமத்தை வளம் பொருந்தியதாக மாற்றுவோம். மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் வேளாண்துறையைத் தேர்ந்தெடுப்போம். வேளாண்மையில் புதுமைகள் செய்வோம். நாட்டின் உயிர் கிராமங்கள் என உணர்ந்து செயல்படுவோம். இடைத்தரகர்கள் இன்றி நேரடி விற்பனை முறையைக் கொண்டு வருவோம்” இளைஞர்கள் இக்கனவை நனவாக்கினால் கட்டாயம் நம் கிராமங்கள் முன்னேறும். அதனைத் தொடர்ந்து நாடும் முன்னேறும்.

மாணவர் 2 : நீ விஞ்ஞானியாக வேண்டும் என்று கூறினாயே. ஏதோ செயற்கைக்கோள், ஏவுகணை என்று கூறுவாய் என எதிர்பார்த்தேன்.

மாணவர் 1 : இதுவும் விஞ்ஞானம்தான். நிலம் விவசாயத்திற்கு ஏற்றார்போல் உள்ளதா எனச் சோதித்து அதற்கேற்றபடி மாற்றுவது, நிலத்தடி நீர் பெருகுவதற்குச் செய்ய வேண்டிய வழிமுறைகள், நல்ல விதைகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை ஆய்வு செய்து விவசாயம் மேம்படச் செய்ய வேண்டும். அம்முறையில் விவசாயம் செய்து பல மடங்கு விளைச்சல் பெறுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இவையெல்லாம் அறிவியல் சார்ந்ததே. இயற்கை முறையில் வேளாண்மை செய்து மக்கள் நோய் நொடியின்றி வாழ வழி வகுப்பேன்.

மாணவர் 2 : உன்னுடைய கனவு நனவாக வாழ்த்துகள்.

மாணவர் 1 : நன்றி!

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 2.
நீங்கள் நேர்காணல் செய்ய விரும்பும் ஒருவரைக் குறிப்பிடுக. அவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களைப் பட்டியலிடுக.
Answer:
நான் நேர்காணல் செய்ய விரும்பும் நபர் Dr.APJ அப்துல் கலாம் அவர்கள்.
வினாக்கள் :
(i) அறிவியல் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்படக்காரணம் எது?
(ii) சிறு வயதில் என்னவாக வேண்டும் என விரும்பினீர்கள்?
(iii) உங்களுக்குப் பிடித்தத் துறை எது? (அறிவியல் தவிர)
(iv) உங்களுக்கு முன் மாதிரியாக யார் இருந்தனர்?
(v) வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய சில யோசனைகள் கூறுங்கள் ஐயா?

Question 3.
நீங்கள் அப்துல் கலாமிடம் கேட்க விரும்பும் வினாக்களை ஒரு கடிதமாக எழுதுக.
Answer:

இடம் : செஞ்சி
நாள் : 09-03-2018

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம், நான் செஞ்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறேன். உங்களைப் போல அறிவியல் விஞ்ஞானியாக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை, கனவு, விருப்பம் உங்களிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள நினைக்கிறேன். அதற்காக உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். எனவே அதற்குத் தாங்கள் பதில் அளிக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்விகள் :
(i) நீங்கள் சிறு வயதில் விஞ்ஞானியாக வருவேன் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?
(ii) உங்கள் ஆராய்ச்சியில் உங்களைக் கவர்ந்தது எது?
(iii) ஒரு சிறந்த குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
(iv) நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பங்கள் விவசாயத்திற்கு எந்த அளவு பயன்படுகிறது?
(v) நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய வழி சொல்லுங்கள்?
(vi) உங்களுக்குப் பிடித்தத் தலைவர் யார்? ஏன்?
(vii) உங்க ளுக்குப் பிடித்தப் புத்தகம் எது? ஏன்?
(viii) “ஊழல் இல்லாத நாடு” சாத்தியப்படுமா?
(ix) இந்த உலகிலே மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது?
(x) எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

இப்படிக்கு,
அன்புடன் – செந்தாழினி

உறைமேல் முகவரி :
மேதகு. ஆ.ப.ஜை. அப்துல்கலாம் அவர்கள்,
மேனாள் குடியரசுத் தலைவர்,
புதுடெல்லி.

மதிப்பீடு

Question 1.
சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
சுதத்திர இந்தியாவின் வெற்றிகள் :
(i) உணவு உற்பத்தியில் தன்னிறைவு.
(ii) தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி.
(iii) எவ்வகையான செயற்கைக்கோளையும் ஏவும் திறன்.
(iv) அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணி. நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி.
(v) பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ‘அக்னி’ மற்றும் பிரித்வி’ ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி. இவையெல்லாம் சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 2.
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?
Answer:
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு : ‘போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் தனக்குப் பெருமகிழ்வை அளித்ததாகக் கலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Students can Download 6th Tamil Chapter 3.3 கணியனின் நண்பன் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.3 கணியனின் நண்பன்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Question 1.
உங்களை ஓர் ரோபோவாகக் கற்பனை செய்துகொண்டு நண்பர்களுடன் உரையாடுக.
Answer:
மாணவன் 1 : இன்று நம் வகுப்பிற்கு ரோபோ வரப் போவதாக நம் ஆசிரியர் கூறினாரே? கண்டிப்பாக வருமா?

மாணவன் 2 : கண்டிப்பாக வரும். ரோபோ என்றால் என்ன? உனக்குத் தெரியுமா?

மாணவன் 1 : ரோபோ என்பதைத் தமிழில் தானியங்கி என்று கூறுவோம். இது நடைமுறையில் இயந்திர வடிவுடைய மெய்நிகர் முகவர் ஆகும். இதோ ரோபோ வந்துவிட்டதே. வா ரோபோ உன்னைத்தான் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ரோபோ : வணக்கம். நான் வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. தாமதமாக வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னிக்கவும்.

மாணவன் 2 : அட்டா. இதென்ன நீ மன்னிப்பெல்லாம் கேட்கிறாய்? நீ ஒரு எந்திர மனிதன்தானே.

ரோபோ : நான் எந்திரமனிதன்தான். ஆனால் தவறு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது எங்களுக்குள் வடிவமைக்கப்பட்ட கட்டளைகளுள் ஒன்று.

மாணவன் 2 : அப்படியானால் நீயும் மனிதர்களைப் போல் எல்லாப் பணிகளையும் செய்வாயா?

ரோபோ : நான் உங்களைப் போல் இல்லை. உங்களை விட வேகமாகவும், நுட்பமான, கடினமான வேலைகளை மிக எளிதாகவும் செய்து முடிப்பேன். என்னுடன் ஒரு கணினி இணைந்திருக்கும். அது என்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்தும் நான் செயல்படும் இடத்திற்கு ஏற்ற வகையில் எந்திரக் கைகள், நகரும் கால்கள், சூழ்நிலைகளை உணர்வதற்கான நுண்ணுணர்வுக் கருவிகள் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளேன்.

மாணவன் 1 : உன்னுடைய பணிகள் என்னென்ன?

ரோபோ : நான் உங்களால் செய்ய முடியாத கடினமான செயல்களையும் எளிதாகச் செய்வேன். தொழிற்சாலையில் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல், உதிரிப் பாகங்களை இணைத்தல் ஆகிய பணிகளைச் செய்வேன்.

மாணவன் 2 : மருத்துவத் துறையில் கூட உன் வேலை மகத்தானது என என் அப்பா கூறினார். அங்கு உன்னுடைய வேலை என்ன?

ரோபோ : மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டறியவும் மருத்துவம் பார்க்கவும் பயன்படுகின்றேன். மேலும் சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்யவும் நான் பயன்படுகின்றேன்.

மாணவன் 1 : கேட்கவே வியப்பாக உள்ளதே. இன்னும் உன் பணிகள் என்னென்ன?

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

ரோபோ : என்னால் உங்களுடன் சேர்ந்து விளையாட முடியும். என்னைப் போன்ற எந்திர மனிதர்கள் உணவகங்களில் உணவு பரிமாறுவர். 3 பொது இடங்களில் வழிகாட்டுவர். வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் 9 செய்யவும் எங்களால் முடியும். பிறகோள்களுக்குச் சென்று ஆய்வு 2 நடத்தவும் செயற்கைக் கோள்களை இயக்கவும் பயன்படுவேன். பெருங்கடலின் அடி ஆழம், வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துருவப் பகுதிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் உதவுகின்றேன்.

மாணவன் 2 : நீ கூறுவதையெல்லாம் கேட்பதற்கே வியப்பாக உள்ளதே.

ரோபோ : நான் போர்க்களத்தில் இராணுவ வீரர்களுள் இணைந்து செயலாற்றுவேன். வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன். இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மாணவன் 1 : உன்னுடைய பயன்பாட்டைப் பார்க்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது.

ரோபோ : எங்கள் வளர்ச்சி இத்துடன் நின்றுவிடாது. மனிதர்கள் எங்களை அவர்களின் பயன்பாட்டிற்கும் தேவைக்கும் ஏற்றபடி வடிவமைத்து செயல்படுத்திக் கொள்வார்கள். எங்களால் எந்த இடையூறுகளும் இருக்காது என்பதை உறுதியாகக் கூறுவேன். நீங்கள் நன்றாகப் படித்து எங்களைப் போல் பிறருக்கும் பயன்படுமாறு பணிபுரியுங்கள்.

மாணவர்கள் : நன்றி ரோபோ! இவ்வளவு நேரம் நீ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

ரோபோ : நன்றி மாணவர்களே! சென்று வருகிறேன்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
நுட்பமாகச் சிந்தித்து அறிவது …………..
அ) நூலறிவு
ஆ) நுண்ண றிவு
இ) சிற்றறிவு
ஈ) பட்டறிவு
Answer:
ஆ) நுண்ண றிவு

Question 2.
தானே இயங்கும் இயந்திரம் …………..
அ) கணினி
ஆ) தானியங்கி
இ) அலைபேசி
ஈ) தொலைக்காட்சி
Answer:
ஆ) தானியங்கி

Question 3.
‘நின்றிருந்த என்னும்’ சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
Answer:
ஆ) நின்று + இருந்த

Question 4.
‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) அவ்வு + ருவம்
ஆ) அ + உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ + வுருவம்
Answer:
ஆ) அ + உருவம்

Question 5.
மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) மருத்துவம்துறை
ஆ) மருத்துவதுறை
இ) மருந்துதுறை
ஈ) மருத்துவத்துறை
Answer:
ஈ) மருத்துவத்துறை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Question 6.
செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) செயலிழக்க
ஆ) செயல் இழக்க
இ) செய இழக்க
ஈ) செயலிலக்க
Answer:
அ) செயலிழக்க

Question 7.
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………….
அ) போக்குதல்
ஆ) தள்ளுதல்
இ) அழித்தல்
ஈ) சேர்த்தல்
Answer:
ஈ) சேர்த்தல்

Question 8.
எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் …………..
அ) அரிது
ஆ) சிறிது
இ) பெரிது
ஈ) வறிது
Answer:
அ) அரிது

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ……………..
2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ………………
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் …………..
4. ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு …………..
Answer:
1. (விடை: எந்திரங்கள்)
2. (விடை: செயற்கை நுண்ணறிவு)
3. (விடை: டீப் புளூ)
4. (விடை: சவுதி அரேபியா)

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. தொழிற்சாலை …………………………………………….
விடை : எங்கள் பகுதியில் தொழிற்சாலை மூலம் வெளியேறும் கழிவுகள் மிகுந்து விட்டன.

2. உற்பத்தி ………………………………………………
விடை : நம் நாட்டில் விளையும் உணவு தானியங்களை மேலும் உற்பத்தி செய்து தன்னிறைவை அடையவேண்டும்.

3. ஆய்வு ……………………………………………………
விடை : அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

4. செயற்கை ……………………………………………
விடை : நாம் நமது மண்ணில் இருந்தே செயற்கைக் கோள்களை அனுப்பும் திறனைப் பெற்றுள்ளோம்.

5. நுண்ண றிவு …………………………………………….
விடை : இயந்திர மனிதர்கள் தங்கள் நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி வேலையை முடிக்கின்றன.

குறுவினா

Question 1.
‘ரோபோ’ என்னும் சொல் எவ்வாறு உருவானது?
Answer:
ரோபோ உருவாக அடிப்படை நிகழ்வு :
(i) செக் நாட்டைச் சேர்ந்த காரல் சேபெக் என்ற நாடக ஆசிரியர், 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.
(ii) அதில் ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள்.
(iii) அந்நாடகத்தில் ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாகக் காட்சிகளை அமைத்திருந்தார். இந்நிகழ்வே, ரோபோ என்னும் சொல் என்ற சொல் உருவாக அடிப்படை நிகழ்வானது.

Question 2.
‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
Answer:
‘டீப் ப்ளூ’ – ரோபோ :
(i) ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினிதான் டீப் ப்ளூ’.
(ii) இது 1997 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவருடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

சிறுவினா

Question 1.
எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.
Answer:
எந்திர மனிதனின் பயன்கள் :
(i) தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்தல்.
(ii) மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டறிதல்.
(iii) சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்தல்.

Question 2.
துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?
Answer:
துருவப் பகுதிகளில் நிகழும் தட்ப வெப்ப நிலை, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல. எனவே அப்பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு எந்திர மனிதர்களை அனுப்புகிறார்கள்.

சிந்தனை வினா

Question 1.
உங்களுக்கென்று ஒரு எந்திரமனிதன் இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள் எனச் சிந்தித்து எழுதுக.
Answer:
1. விண்வெளிக்கு என்னை அழைத்துச் செல்வதற்கும், ஆய்வு செய்வதற்கும்.
2. வாகனம் ஓட்டுவதற்கும்
3. இராணுவத்தில் உயிர் பலியாவதைத் தடுக்கும் பணிக்கு அனுப்புவேன்.
4. போக்குவரத்துக் காவல் துறைக்குப் பதிலாக ரோபோவைப் பயன்படுத்துவேன்.
5. கட்டிட வேலைகள் செய்வதற்கும்
6. உடற்பயிற்சி செய்வதற்கும்
7. வனவிலங்குகள் நடமாட்டங்களை அறிவதற்கும்
8. என்னோடு விளையாடுவதற்கும்
9. வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்குக் காவல் பணி செய்வதற்கும்
10. கல்வி கற்றுதருவதற்கும்
11. கழிவறையைச் சுத்தம் செய்வதற்கும்.
12. ஆழ்கடலில் மனிதன் செல்லாமல் ஆய்வு செய்வதற்கும் ரோபோக்களைப் பயன்படுத்துவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Additional Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Additional Questions

Question 1.
Mention the time in the clock when the angle is

(i) 30°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 1

(ii) 120°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions

(iii) 150°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:1 (Text Book Page No.16)

Continue the pattern as done in first to complete the tile.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 4

Activity:2 (Text Book Page No.16)

Continue the border stripe.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:3 (Text Book Page No.16)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:4 (Text Book Page No.22)

Arrange the given words to form a pattern
Depth, called, walked, mice, played, pulled, breadth, rice, length, width, price, voice
_______, _______, _______, _______,
_______, _______, _______, _______,
_______, _______, _______, _______,
Answer:
Depth, breadth, length, width
called, walked, played, pulled
nice, rice, price, voice

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.3

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Ex 3.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Ex 3.3

Question 1.
Write down the collection of words by ending with “ENT” AND “HT”.

(i) WENT, SENT, B____ , R____ , T____
Answer:
BENT, RENT, TENT

(ii) NIGHT, LIGHT, R____, B____, M____
Answer:
RIGHT, BIGHT, MIGHT

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.3

Question 2.
Fill in the blanks

(i) C__AT, B__ AT, G__AT
Answer:
COAT,BOAT,GOAT

(ii) R __D, B__D, W__D
Answer:
REb, BEb, WED

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Ex 3.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Ex 3.2

Question 1.
Mention the time in the clock when the angle is

i) 180°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

ii) 90°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 2

iii) 60°.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

Question 2.
Find the angle made by the hands of the clock at the given time.
i)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 4
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 5

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

ii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 6
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 7

iii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 8
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 9

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

iv)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 10
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 11

v)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 12
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 13

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2

vi)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 14
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.2 15

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Ex 3.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Ex 3.1

Question 1.
Find the angle of the given shapes using the equilateral triangle.
i)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1

ii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 2
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1

Question 2.
Find the angles of a rectangle using a circle.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Ex 3.1 5
Angle of a circle is 360° ○
= 360 ÷ 4 = 90