Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.4 மெய்ப்பாட்டியல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Question 1.
நீவிர் பார்த்த திரைப்படம் ஒன்றில், வெளிப்பட்ட மெய்பாடுகள் குறித்து எழுதுக.
Answer:
திரைப்பட உலகில், கலை வெளிப்பாட்டிற்காகவே தயாரிக்கப்பட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு படத்தைக் காவியமாகவே மக்கள் பார்க்கின்றனர். இப்படத்தில் நடிப்புக்கலையில் பிரசித்திப் பெற்ற ஜோடிகளான சிவாஜி – பத்மினி இணை நவரசத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நலந்தானா பாடல் காட்சி மெய் மயக்கச் செய்துவிடும்.

(i) நலந்தானா, நலந்தானா, உடலும் உள்ளமும் நலந்தானா என்ற பாடல் காட்சியில் பத்மினியின் கண்களில் எண்வகை மெய்ப்பாடுகளையும் தாண்டிய ஒரு வெளிப்பாடு, அவரது புருவம் தவிக்கும் பாவனை எழுத்தில் விவரிக்க இயலாது.

(ii) இந்தப் பெண்பட்ட பாட்டை யார் அறிவார் – என்ற பாடல் காட்சியில் கண்களில் பனிக்கும் கண்ணீர் அழுகையை நமக்கிடையே வரவழைக்கும்.

(iii) சிவாஜியின் புண்பட்டகைகளை துண்டு மறைத்திருக்கும். தனது முந்தானையால் விசிறிவிட்டுப் பார்க்கும் பத்மினியின் பார்வையில் வெளிப்படும் அச்சவுணர்வு நம்மைச் சிலிர்க்க வைக்கும்.

திரைப்படம் சொல்லாத கதையுமில்லை
கதை சொல்லாத காதலுமில்லை.

Question 2.
எண்வகை மெய்ப்பாடுகளுக்கு ஏற்ற திரையிசைப் பாடல்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்குக.
Answer:
எண்வகை மெய்ப்பாடுகள்:
நகை, அழுகை, இளிவரல், மருட்கை , அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல் 2

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
Answer:

  • நகை (சிரிப்பு)
  • அழுகை
  • இளிவரல் (சிறுமை)
  • மருட்கை (வியப்பு)
  • அச்சம் (பயம்)
  • பெருமிதம் (பெருமை)
  • வெகுளி (சினம்)
  • உவகை (மகிழ்ச்சி)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

என்பன எண்வகை மெய்ப்பாடுகளாகும் – தொல்காப்பியர்.

சிறுவினா

Question 1.
ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.
Answer:
வியப்பு :
நீண்ட நாளாக எனக்கு கால் முட்டியில் வலி தீரவில்லை . என் உறவுக்காரர் பக்கத்து ஊர் தர்காவில் மௌலவி ஒருவர் ஓதுகிறார். உடல் நோயெல்லாம் தீர்ந்து விடுகிறது போய் பார் என்றார். நம்பிக்கையோடு சென்றேன். வரிசையில் நின்றேன். என் முறை வந்தது. ஒரே வியப்பு! அழுகையும் வந்தது. அங்கே ஓதுகின்ற மௌலவி என் வாப்பா (தந்தை). வெட்கமும் வேதனையும் வந்தது. வாப்பாவிடம் இப்படியொரு மகத்துவமா!

பெருமை :
2004ஆம் ஆண்டு கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டு தன் தாய் தந்தையரை இழந்து அனாதையாக அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள். அந்தப் பெண் குழந்தையை மாரியப்பன் என்ற உடற்கல்வி ஆசிரியர் இனங்கண்டு அரசு உதவியோடு தன் இல்லத்திற்கு அழைத்துவந்து தன் குழந்தை போல் வளர்த்தார். கல்வியோடு சேர்ந்து கால் பந்திலும் அந்தப் பெண்ணை ஈடுபடுத்தினார். பட்டம் முடித்த அந்தப் பெண் கால் பந்தில் முழுக் கவனம் செலுத்தி ஆசிய அளவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றாள். தன் தாய் தந்தையரை இழந்தாலும் வளர்ப்புத் தந்தையால் அடையாளம் கண்டு அவருக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தாள்.

இலக்கணக்குறிப்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல் 3

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல் 4

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்திக் காட்டுக.
அ) நகை – 1. பெருமை
ஆ) இளிவரல் – 2. வியப்பு
இ) மருட்கை – 3. சிறுமை
ஈ) பெருமிதம் – 4. சிரிப்பு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 2.
வெகுளி, உவமை – முதலிய சொற்களின் பொருள் முறையே ………….. என்பதாகும்.
அ) சினம், மகிழ்ச்சி
ஆ) சிறுமை, சிரிப்பு
இ) வியப்பு, பெருமை
ஈ) மகிழ்ச்சி , சினம்
Answer:
அ) சினம், மகிழ்ச்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Question 3.
தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாடு.
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
Answer:
இ) எட்டு

Question 4.
‘சொற்கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல்’ என்று கூறிய உரையாசிரியர்
அ) நச்சினார்க்கினியர்
ஆ) சேனாவரையர்
இ) பேராசிரியர்
ஈ) அடியார்க்கு நல்லார்
Answer:
இ) பேராசிரியர்

Question 5.
கவி கண்காட்டும் என்று கூறிய உரையாசிரியர்
அ) நச்சினார்க்கினியர்
ஆ) சேனாவரையர்
இ) பேராசிரியர்
ஈ) அடியார்க்கு நல்லார்
Answer:
இ) பேராசிரியர்

Question 6.
பேராசிரியர் என்பார் …………….. உரையாசிரியர் ஆவார்.
அ) நன்னூல்
ஆ) சிலப்பதிகாரம்
இ) யாப்பருங்கல
ஈ) தொல்காப்பிய
Answer:
ஈ) தொல்காப்பிய

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Question 7.
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்பு
அ) பண்புத்தொகைகள்
ஆ) வினைத்தொகைகள்
இ) தொழிற்பெயர்கள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) தொழிற்பெயர்கள்

Question 8.
‘ஈட்டுபுகழ் நந்தி பாணநீ – என்னும் நந்திக்கலம்பக பாடலில் இடம்பெறும் மெய்ப்பாடு
அ) நகை
ஆ) அழுகை
இ) மருட்கை
ஈ) வெகுளி
Answer:
அ) நகை

Question 9.
பாணனின் பாடலைக் கேட்டவர்களின் கூற்றாகத் தலைவி கூறுவனவற்றைப் பொருத்திக் காட்டுக.
அ) அன்னை – 1. பாணன்
ஆ) தோழி – 2. நரி
இ) பிறர் – 3. நாய்
ஈ) தலைவி – 4. பேய்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 1, 4, 3
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 10.
‘ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே’ என்னும் புறநானூற்று அடிகளில் இடம்பெறும் மெய்ப்பாடு
அ) நகை
ஆ) அழுகை
இ) வெகுளி
ஈ) இளிவரல்
Answer:
ஆ) அழுகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Question 11.
‘தொடப்பாடு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய’ என்னும் புறநானூற்று அடிகளில் இடம்பெறும் சேரன் கணைக்கால் இரும்பொறை குறித்தான மெய்ப்பாடு
அ) நகை
ஆ) இளிவரல்
இ) மருட்கை
ஈ) சினம்
Answer:
ஆ) இளிவரல்

Question 12.
‘அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி’ என்று கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் காணும் குன்றவர்களின் மெய்ப்பாடு
அ) இளிவரல்
ஆ) உவகை
இ) மருட்கை
ஈ) அச்சம்
Answer:
இ) மருட்கை

Question 13.
‘மையல் வேழமம் மடங்களின் எதிர்தர’ என்னும் குறிஞ்சிப்பாட்டு அடிகளில் இடம்பெறும் மெய்ப்பாடு
அ) நகை
ஆ) அழுகை
இ) அச்சம்
ஈ) பெருமிதம்
Answer:
இ) அச்சம்

Question 14.
‘உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்’ என்னும் புறப்பொருள் வெண்பாமாலை அடிகளால் உணர்த்தப்படும் மெய்ப்பாடு
அ) அச்சம்
ஆ) பெருமிதம்
இ) வெகுளி
ஈ) உவகை
Answer:
ஆ) பெருமிதம்

Question 15.
‘உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கி’ என்னும் புறநானூற்று அடிகளால் பாண்டியர் நெடுஞ்செழியனின் அறியலாகும் மெய்ப்பாடு
அ) அச்சம்
ஆ) பெருமிதம்
இ) வெகுளி
ஈ) உவகை
Answer:
இ) வெகுளி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Question 16.
‘மண்டல மதியமன்ன மாசறு மகத்தினாளுந் …. ‘ என்ற அடிகளில் வெளிப்படும் குந்தியின் வெளிப்பாடு
அ) அச்சம்
ஆ) பெருமிதம்
இ) வெகுளி
ஈ) உவகை
Answer:
ஈ) உவகை

Question 17.
பொருத்திக் காட்டுக
அ) பாணன் – 1. உவகை
ஆ) கணைக்காலிரும்பொறை – 2. வெகுளி
இ) பாண்டியன் நெடுஞ்செழியன் – 3. இளிவரல்
ஈ) குந்தி – 4. நகை

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 1, 4
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 18.
‘உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே’ – என்று குறிப்பிடும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) நம்பிக்கைப்பொருள்
ஈ) செயிற்றியம்
Answer:
ஈ) செயிற்றியம்

Question 19.
தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் ………………… அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.
அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) யாப்பு
Answer:
இ) பொருள்

Question 20.
தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தொன்னூல் விளக்கம்
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Answer:
இ) தொன்னூல் விளக்கம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Question 21.
தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசும் நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) தொல்காப்பியம்
ஈ) யாப்பருங்காலக்காரிகை
Answer:
இ) தொல்காப்பியம்

Question 22.
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர்
அ) இளம்பூரணர்
ஆ) சேனாவரையர்
இ) பேராசிரியர்
ஈ) நச்சினார்க்கினியர்
Answer:
அ) இளம்பூரணர்

Question 23.
தொல்காப்பியத்தினை இயற்றியவர்
அ) அகத்தியர்
ஆ) தொல்காப்பியர்
இ) சமணமுனிவர்
ஈ) பவணந்தி முனிவர்
Answer:
ஆ) தொல்காப்பியர்

குறுவினா

Question 1.
மெய்ப்பாடு என்றால் என்ன?
Answer:
இலக்கியத்தைப் படிக்கின்றபோது அதன் பொருளை ஆழப்படுத்தும் வகையில் காட்டப்படும் உணர்ச்சி வெளிப்பாட்டு சுவையே மெய்ப்பாடு என்பர். ‘சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்
கவி கண் காட்டும்’ என்று உரையாசிரியர், பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

Question 2.
தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர் எவ்வாறு போற்றுகிறார்?
Answer:
‘ஒல்காப் பெரும்புகழ்ந்த தொல்காப்பியன்’ என்று போற்றுகிறார்கள்.

Question 3.
தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார்?
Answer:
‘இளம்பூரணர்’ நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் ஆவார்.

நெடுவினா

Question 1.
எண்வகை மெய்பாடுகளை இலக்கியச் சான்றுடன் விளக்குக.
Answer:
நகை :
ஈட்டுபுகழ் நந்தி பாணநீ எங்கையர் தம்
வீட்டிருந்து பாட விடிவளவும்…….

எனும் பாடல்களில் பாணனின் குரலை தலைவி எள்ளி நகையாடுகிறாள்.

நீ இரவு முழுவதும் பாடியதை என் தாய் பேய் என்றாள், பிறர் நரி என்றார், தோழி நாய் என்றாள். ஆனால் நானோ நீ என்றேன்.

அழுகை :
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகன் மார்பு……

என்ற பாடலடிகளில் காட்டில் புலியோடு போராடி இறந்த தலைவனைப் பற்றி தலைவி துயரம் கொள்வதாக உள்ளது.

தலைவன் உடலைப் பார்த்து ஐயோ என்று கதறினால், புலி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறாள்.

தூக்கிச் செல்லலாம் என்றால் ‘உனக்கு அகன்ற மார்பு உன்னைத் தூக்க இயலாது’ என்று துன்புறுகிறாள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

இளிவரல் (சிறுமை) :
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்……

என்ற பாடலில் சேரனுக்கு ஏற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடுவதாக அமைகிறது. நாயைச் சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்தியது போல என்னைத் துன்புறுத்தினர். சிறையிலிட்ட உன் உதவியால் வந்த தண்ணீரை நான் இரந்து உண்ணமாட்டேன்.

மருட்கை (வியப்பு) :
அமரரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி….

எனும் வரும் பாடல் அடிகளில் கண்ணகி கோவலனோடு சென்ற காட்சி வியப்பை ஏற்படுத்துகிறது. இந்திரன் கோவலனோடு வந்து பத்தினியாகிய கண்ணகியை விண்ணுக்கு அழைத்துச் சென்ற வியப்பான காட்சி.

அச்சம் :
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்வு இடம் அறியேம்…..

எனும் இப்பாடலில் அச்சம் வெளிப்படுகிறது. மதம் பிடித்த யானை மரங்களை முறித்தது; கார்மேகம் இடிப்பது போல் முழங்கியது. உயிர் பிழைப்பதற்கு வேறு இடம் இல்லாமல் மகளிர்தம் கை வளையல் ஒலிக்க மயில் போல் நடுங்கி நின்றார்கள்.

பெருமிதம் (பெருமை) :
உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின
சிறு சுடர் முற்பேர் இருளாங் கண்டாய்…..

இப்பாடலில் தனியொரு வீரன் பெரும் படையை எதிர்த்த பெருமையை விளக்குகிறது. ஒளிமிக்க வேலினையும், தேன் நிறைந்த மாலையும் உடைய வேந்தனே! வாளுடன் பெரும் படையைத் தடுப்பேன். அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவது போல் ஓடும்.

வெகுளி (சினம்) :
உறுதுப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை

என்ற பாடல் அடிகளில் நெடுஞ்செழியனின் சினம் கூறப்படுகிறது. தன்னை இளையவன் என்று எள்ளிய வேந்தர்களை சிதறி ஓடச் செய்து முரசையும் கைப்பற்றுவேன் என்று செழியன் சினங்கொள்கிறார்.

உவகை (மகிழ்ச்சி) :
மண்டல மதியமன்ன மாசறு முகத்தினாளுந்
திண்டிறன் மருகன் ……

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.4 மெய்ப்பாட்டியல்

இப்பாடலில் மழை மேகத்தைக் கண்ட மயில் போல மகிழ்ச்சி காணப்படுகிறது. குந்தி தன் திறன் மிக்க மருமகன் கண்ணனைக் கண்ட காட்சி வெள்ளலைகள் நிறைந்த நீலக் கடலின் நீரை முகந்து வரும் மேகத்தைக் கண்ட தோகை மயில் போல மகிழ்ந்து வரவேற்றாள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.3 சிலப்பதிகாரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.3 சிலப்பதிகாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 1.
பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா, பட்டிமன்றம், தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கான அரங்கம், அரசு விழாக்களுக்கான மேடை போன்றவற்றின் அரங்க அமைப்பு, ஒலி, ஒளி அமைப்பு, திரை அலங்காரம் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
பங்கு பெறுவோர் : நேசன், வாசன், ராசன்

நேசன் : நான் நேற்று எனது பள்ளியின் ஆண்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட மேடை பற்றிக் கூறுகிறேன். தரையிலிருந்து பத்து அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. மேடையானது இருபது அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டதாக இருந்தது. இருபுறத்திலிருந்து வருமாறும், மேலே ஏறுமாறும் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேடையின் பின்பக்கமும் மற்ற இரண்டு பக்கங்களும் ஒரு தெருவுக்குள் நடந்து செல்வது போன்ற ஒரு (தெருக்களின்) ஓவியம் வரையப்பட்டிருந்தது. மேடையின் மேல்பக்கத்தில் வட்ட வடிவிலான ஓவியம் இருந்தது. மேடையின் முன்பக்க ஓரத்தில் இரண்டு ஒலி வாங்கிகள், மேடையின் முன் பக்கத்தில் வண்ண வண்ண ஒளிகளைப் பாய்ச்சும் சுழல் விளக்குகள், மேடையை ஒட்டி, இரு பெரும் ஒலி பெருக்கிகள் என அற்புதமாக மேடை
அமைக்கப்பட்டிருந்தது.

வாசன் : இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் ஊர்த்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே பரதநாட்டிய மேடை அமைத்திருந்தார்கள். நான்கு அடி உயரத்தில் ஒரு மேடை. முன் பக்கம் தவிர மற்ற மூன்று பக்கங்களும் ஓவியம் தீட்டப்பட்ட துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. மேலும் வண்ண விளக்குகளால் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேடையின் மேல் இருபுறமும் நட்டு வாங்கும், வாய்பாட்டு, மிருதங்கம், மோர்சிங், வீணை வாசிப்பவர்களுக்கு
எனக் கலைஞர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தன.

ராசன் : எங்கள் ஊரில் பட்டிமன்ற நிகழ்வைப் பார்க்க நேற்று சென்றிருந்தேன். மிக உயரமான மேடை, கீழே தரை விரிப்பு, மேடையின் பின்பக்கம் அடைப்பில் நடுவர் மற்றும் பேச்சாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. மேடையின் இருபக்கங்களிலும் ஆயத்த ஒலிவாங்கி மேடைகள், கண்ணைப் பறிக்கும் ஒளி விளக்குகள், நடுவர் அமர்வதற்கு மிகப் பெரிய அமர்வு இருக்கை என்று பார்க்க அழகாக இருந்தது.

நேசன் : ஆமாம் நண்பர்களே! முற்காலங்கள் போல் இல்லாமல் இன்று மேடைகள் அலங்காரமாகவும், விளக்கின் ஒளியில் பகல் போலவும், மேடையில் கண்ணைக் கவரும் சில ஓவியங்களும் தெளிவாக ஒலி வாங்கியினின்று வெளிவிடும் ஒலிப்பெருக்குப் பெட்டிகள் என இதைப் பற்றிய ஒரு பார்வை நம்மை வியக்க வைக்கிறது. அதுமட்டுமா, இத்தனையையும் அமைக்க அந்தத் துறையில் தேர்ச்சிபெற்றகைவினைக்கலைஞர்கள், இவர்களின் ஒத்துழைப்பாலேயே இத்தகைய மேடைகள் கண்ணைக் கவருகின்றன. தெருக்கூத்தாக இருந்த மேடை இன்று திரைப்படத்தை நேரில் பார்க்கும் உளப்பாங்கினை உண்டாக்கும் அளவிற்கு மேடையில் வடிவமைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

“ஆடத் தெரியாதவனுக்கு தெருக் கோணல் என்பானாம்” இந்தப் பழமொழி பொய்த்துவிட்டது இந்த நாளில்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………….. தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

அ) 1-சரி, 2-தவறு
ஆ) 1-தவறு, 2-சரி
இ) 1-தவறு, 2-தவறு
ஈ) 1-சரி, 2-சரி
Answer:
ஈ) 1-சரி, 2-சரி

Question 2.
பொருத்துக.
அ) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா – 2. மூங்கில்
இ) கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை – 4. எடை அளவு

அ) 3, 1, 4, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2

குறுவினா

Question 1.
ஒருமுக எழினி, பொருமுக எழினி குறிப்பு எழுதுக.
Answer:
ஒருமுக எழினி:
நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு ரூ’ முகத்திரை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

பொருமுக எழினி:
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை

சிறுவினா

Question 1.
நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தைக் கூறுக.
Answer:
சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம் :
“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ண கம் ஒருவழி வகுத்தனர்”

கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.

மூங்கில் கொணர்தல் :
பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களைக் கொண்டு வந்தனர்.

ஆடல் அரங்கம் அமைத்தல் :
“நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்.”
நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவுகொண்டு அரங்கம் அமைத்தல்.

மூங்கில் அளவுகோல் :
கைப்பெருவிரலில் இருப்பத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும் எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

இலக்கணக் குறிப்பு

தொல்நெறி – பண்புத்தொகை
ஆடலும் பாடலும் – எண்ணும்மை
வருகிறோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
நின்று – வினையெச்சம்
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் – எண்ணும்மை
புரிகுழல், சூழ்சுழல் – வினைத்தொகைகள்
வழாஅ – செய்யுளிசை அளபெடை
நூல்நெறி, தூண் நிழல் – ஆறாம் வேற்றுமைத் தொகைகள்
வெண்குடை – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் 2

புணர்ச்சி விதி

Question 1.
தலைக்கோல் = தலை + கோல்
Answer:
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி தலைக்கோல் என்று புணர்ந்த து.

Question 2.
மண்ண கம் = மண் + அகம்
Answer:

  • தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி, மண் + ண் + அகம் என்றானது.
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ண் + அ = ண) மண்ணகம் என்று புணர்ந்தது.

Question 3.
கண்ணிடை = கண் + இடை
Answer:

  • தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி, கண்ண் + இடை என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ண் + இ = ணி) கண்ணிடை என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 4.
வெண்குடை – வெண்மை + குடை
Answer:
ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு, வெண் + குடை – வெண்குடை என்று புணர்ந்தது.

Question 5.
தொல்நெறி – தொன்மை + நெறி
Answer:

  • ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு, தொன் + நெறி என்றானது.
  • முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, தொல்நெறி என்று புணர்ந்து.

Question 6.
தலைக்கோல் – தலை + கோல்
Answer:
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி, தலைக்கோல் என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம்
அ) புகார்
ஆ) வஞ்சி
இ) மதுரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புகார்

Question 2.
இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை
அ) நீலகேசி, குண்டலகேசி
ஆ) உதயணகுமாரகாவியம், நாககுமார காவியம்
இ) சிந்தாமணி, சூளாமணி
ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை
Answer:
ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை

Question 3.
சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கத்தேவர்
ஈ) நக்கீரர்
Answer:
அ) இளங்கோவடிகள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 4.
‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று குறிப்பிடுபவர்
அ) திரு.வி.க.
ஆ) பாரதி
இ) பாரதிதாசன்
ஈ) ம.பொ.சி.
Answer:
ஆ) பாரதி

Question 5.
இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதைக் குறிப்பிட்டிருக்கும் காதை
அ) மங்கலவாழ்த்து
ஆ) அரங்கேற்றுகாதை
இ) வரந்தருகாதை
ஈ) ஊர்சூழ்வரி
Answer:
இ) வரந்தருகாதை

Question 6.
பொருத்திக் காட்டுக.
அ) கழை – 1. பந்தல்
ஆ) விதானம் – 2. புதுமை
இ) நித்திலம் – 3. மூங்கில்
ஈ) விருந்து – 4. முத்து

அ) 3, 1, 4, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) நாவலம்பொலம் – 1. இசைக்கருவிகள் வாசிப்போர்
ஆ) அரசு உவா – 2. நாடகக் கணிகையர் பெறும்பட்டம்
இ) குயிலுவமாக்கள் – 3. பட்டத்து யானை
ஈ) தலைக்கோல் – 4. சாம்பூந்தம் என்னும் உயர்ந்த வகைப் பொன்

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 1, 2

Question 8.
பொருத்திக் காட்டுக.
அ) புரிகுழல் – 1. ஒரு வகை எடை அளவு
ஆ) பல்இயம் – 2. இடக்கை வாத்தியம்
இ) வாரம் – 3. தெய்வப்பாடல்
ஈ) ஆமந்திரிகை – 4. இன்னிசைக்கருவி
உ) கழஞ்சு – 5. சுருண்ட கூந்தல்

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 5, 4, 3, 1, 2
இ) 3, 1, 2, 4, 5
ஈ) 5, 4, 2, 3, 1
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 9.
மாதவி ஆடற்கலையைப் பயின்ற ஆண்டுகள்
அ) 5
ஆ) 7
இ) 12
ஈ) 15
Answer:
ஆ) 7

Question 10.
ஆடல் கற்பதற்கான சடங்குகளை மாதவி செய்தபோது வயது
அ) 5
ஆ) 7
இ) 9
ஈ) 12
Answer:
அ) 5

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 11.
மாதவி தனது ஆடலை அரங்கேற்ற விரும்பிய வயது
அ) 7
ஆ) 9
இ) 12
ஈ) 15
Answer:
இ) 12

Question 12.
மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் நிரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஒரு முகத்திரை

Question 13.
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் திரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) பொருமுகத்திரை

Question 14.
மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் திரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) கரந்துவரல் திரை

Question 15.
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்கு அளிக்கப்படுவது
அ) தலைக்கோல்
ஆ) செங்கோல்
இ) வைரமணி
ஈ) அரசாட்சி
Answer:
அ) தலைக்கோல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 16.
இந்திரனின் மகன்
அ) சனகன்
ஆ) சயந்தன்
இ) அபினந்தன்
ஈ) மாயன்
Answer:
ஆ) சயந்தன்

Question 17.
மன்னனிடமிருந்து மாதவி பெற்ற பரிசு
அ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
ஆ) நூற்றெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
இ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சு வைரமாலை
ஈ) நூற்றெட்டுக் கழஞ்சு வைரமாலை
Answer:
அ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை

Question 18.
பொருத்திக் காட்டுக.
அ) பேரியாழ் – 1) 7 நரம்புகளைக் கொண்டது
ஆ) மகரயாழ் – 2) 16 நரம்புகளைக் கொண்டது
இ) சகோடயாழ் – 3) 17 நரம்புகளைக் கொண்டது
ஈ) செங்கோட்டியாழ் – 4) 21 நரம்புகளைக் கொண்டது.

அ) 4, 3, 2, 1
ஆ) 4, 2, 1, 3
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Question 19.
தொல்நெறி, ஆடலும் பாடலும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
அ) வினைத்தொகை, எண்ணும்மை
ஆ) பண்புத்தொகை, எண்ணும்மை
இ) பெயரெச்சம், முற்றும்மை
ஈ) உவமைத்தொகை, உம்மைத்தொகை
Answer:
ஆ) பண்புத்தொகை, எண்ணும்மை

Question 20.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்னும் விதிக்குரிய சொல்
அ) பொற்குடம்
ஆ) தலைக்கோல்
இ) பேரியாழ்
ஈ) பூங்கோதை
Answer:
ஆ) தலைக்கோல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
தலைக்கோல் பட்டம் பெற்றவள் யார்? ஏன்?
Answer:

  • தலைக்கோல் பட்டம் பெற்றவள் மாதவி.
  • தன் ஆடல் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்ததன் காரணமாகச் சிறப்பிக்கப்பட்டது.

Question 2.
சிலப்பதிகாரம் – ஓர் புரட்சி காப்பியம் எங்ஙனம் விளக்குக.
Answer:
முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் புரட்சிக் காப்பியம் எனப்படுகிறது.

Question 3.
இரட்டைக்காப்பியங்கள் யாவை? காரணம் கூறுக.
Answer:

  • சிலப்பதிகாரம், மணிமேகலை
  • சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சியும், மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியம் எனப்படும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 4.
பாரதியார் இளங்கோவையும், சிலம்பையும் எங்ஙனம் புகழ்கிறார்?
Answer:
‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி இளங்கோவையும், சிலம்பையும் புகழ்கிறார்.

Question 5.
இளங்கோவடிகள் எங்கு தன்னை அறிமுகம் செய்கிறார்?
Answer:
வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றி தான் செங்குட்டுவன் தம்பி என்று தன்னை அறிமுகம் செய்கிறார்.

Question 6.
மாதவியின் நாட்டியப் பயிற்சி பற்றி விளக்குக.
Answer:

  • மாதவி, அழகிய தோள்களை உடையவள்.
  • தேனும் தாதுவும் நிறைந்த பூக்கள் அணிந்த கூந்தலை உடையவள்.
  • ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் கற்றவர்கள்.
  • ஏழு ஆண்டுகள் ஆடல் கலையைப் பயின்றவள்.
  • பன்னிரெண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.

Question 7.
மங்கல வாழ்த்துப் பாடலில் இசைக்கருவிகள் ஒலித்த முறைகளை விளக்குக.
Answer:

  • குழலின் வழியே யாழிசை நின்றது.
  • யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தலம் ஒலித்தது.
  • தண்ணுமையோடு இயைந்து முடிவு ஒலித்தது.
  • முழவுடன் இடக்கை வாத்தியம் கூடிநின்று ஒலித்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 8.
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்.
Answer:

  • குடிமக்கள் காப்பியம்
  • இரட்டைக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • புரட்சிக் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • முத்தமிழ் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • நாடகக் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.

Question 9.
மாதவி மன்னனிடம் பரிசு பெற்றமையை விவரி.
Answer:
(i) பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி நடனமாடியது போல் மாதவி அரங்கில் நூலில் சொல்லப்பட்ட சரியாகக் கடைப்பிடித்து அழகுற ஆடினாள். கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து வழுவாது ஆடினாள்.

(ii) அந்த ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னன் ‘தலைக்கோலி’ என்னும் பட்டம் அளித்தான்.

(iii) மேலும் அரங்கேற்றம் செய்யும் நாடகக்கணிகைக்கு ‘பரிசு இவ்வளவு’ என நூல் விதித்த முறைப்படி ‘ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை அணிவித்தான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 10.
யாழின் வகைகள் யாவை?
Answer:

  • 21 நரம்புகளைக் கொண்ட பேரியாழ்.
  • 17 நரம்புகளைக் கொண்ட மகரயாழ்.
  • 16 நரம்புகளைக் கொண்ட சகோடயாழ்.
  • 7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டியாழ்.

Question 11.
குடிமக்கள் காப்பியம் பெயர்க்காரணம் தருக.
Answer:
அரசக்குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் ‘குடிமக்கள் காப்பியம்’ எனப் பெயர் பெற்றது.

Question 12.
‘இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத்
தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு’ – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
சிலப்பதிகாரம் – புகார்க்காண்டம். அரங்கேற்ற காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

விளக்கம் :
பொன்னால் செய்யப்பட்ட பூங்கொடி போல் மாதவி நடனமாடியது கண்டு அகமகிழ்ந்த மன்னன் ‘தலைக்கோலி’ என்ற பட்டத்தையும் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை பரிசாகவும் அளித்தான்.

சிறுவினா

Question 1.
நாட்டிய அறங்கின் அமைப்பை விளக்குக.
Answer:

  • ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரம் உடைய நாட்டிய அரங்கம் அமைத்தனர்.
  • அரங்கில் தூணிற்கு மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கு இடையே இடைவெளி நான்கு கோல் அளவு வைத்தனர்.
  • அரங்கு உள்ளே, வெளியே செல்ல ஏற்ற அளவுடன் இருவாயில்கள் அமைத்தனர்.
  • மேல்நிலை மாடத்தில் ஐம்பூதங்களை யாவரும் புகழும்படி சித்தரித்து வைத்தனர்.
  • தூணில் நிழல் விளக்குகளை நிறுத்தினர்.
  • ஒரு முகத்திரை, பொருமுகத்திரை, கரந்துவரல் திரை மூன்றையும் சிறப்புடன் அமைத்தனர்.
  • விதானம், முத்துமாலை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.
  • இத்தகைய வேலைப்பாடுகளுடன் நாட்டிய அரங்கம் அமைத்தனர்.

Question 2.
தலைக்கோல் அறிவை – விளக்குக.
Answer:
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மங்கைக்கு அளிக்கும் பட்டம்.
(i) இத்தலைக்கோல் புகழ் கொண்ட மன்னனுடன் போரிட்டு அவனிடமிருந்து பறிக்கப்பட்ட வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது.

(ii) காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகள் இருக்கும். அக்கணுக்களுக்கு சாம்பூந்தம் எனும் பொன்தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக் கோலாக்குவது.

(iii) மன்னனின் அரண்மனையில் வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து வழிபடுவர்.

(iv) தலைக்கோலை புண்ணிய நதி நீரைப் பொற்குடங்களில் கொண்டு வந்து நீராட்டுவர்.

(v) மாலைகள் அணிவித்து, முரசு முழங்க, வாத்தியங்கள் ஒலிக்க ஐம்பெருங்குழு, அரசர் சூழ்ந்துவர, பட்டத்து யானை தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும்.

(vi) அனைவரும் ஊர்வலமாக வந்தபின் கவிஞன் தலைக்கோலை ஆடல் அரங்கில் வைப்பார்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 3.
மாதவியின் நாட்டியத்தை மங்கல வாழ்த்துப் பாடலால் அறியலாகும் செய்தி யாது?
Answer:

  • அரசன் முதலானோர் தத்தம் தகுதிக்கு ஏற்ப இருக்கையில் அமர்ந்தனர்.
  • இசைக்கருவிகளை வாசிப்போர் நிற்க வேண்டிய முறைப்படி நின்றனர்.
  • நாடகக் கனிகையாகிய மாதவி வலக்காலை முன் வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்துடன் அருகே நின்றாள்.
  • ஆடலில் தேர்ச்சி பெற்ற தோரிய மகளிர் ஒருமுக எழினிக்கு இடப்பக்கத் தூணின் அருகே நின்றனர்.
  • நன்மை, பெருகவும், தீமை நீல்கவும் வேண்டி
    ‘ஓரொற்றுவாரம்’, ஈரொற்றுவாரம்’ என்னும் தெய்வப்பாடலை முறையாகப் பாடினர்.
  • இசைக்கருவிகள் அனைத்தும் கூட்டாக இசைத்தன.

Question 4.
‘ஆடலும் பாடலும் அழகும் என்று கிக்
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்
ஏழு ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆறு ஆண்டில்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி’ – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் : இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுக் காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
மாதவியின் நாட்டியப் பயிற்சி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

விளக்கம் :
அழகிய தோள்களை உடைய மாதவி, தேனும், தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். அவள் ஆடல், பாடல், அழகு இம்மூன்றில் என்றும் குறைபடாமல் ஏழு ஆண்டுகள் ஆடல் கலையைக் கற்று, தன் பன்னிரண்டு வயதில் அரங்கேற்றினாள்.

Question 5.
சிலப்பதிகாரம் குறிப்பு வரைக.
Answer:

  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.
  • கண்ணகியின் கால் சிலம்பால் உருவான கதை.
  • மூன்று காண்டங்கள் முப்பது காதைகள் கொண்டது. அவை முறையே: புகார் காண்டம் – 10; மதுரைக் காண்டம் – 13; வஞ்சிக் காண்டம் – 7 என மொத்தம் – 30

வேறு பெயர்கள் : முத்தமிழ்க் காப்பியம் , இரட்டைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்.

உண்மைகள் : அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.2 கவிதைகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.2 கவிதைகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Question 1.
உங்களுக்குப் பிடித்த புதுக்கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள் 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகாமௌனம் – அடிகள் புலப்படுத்துவது

அ) இரைச்சல்
ஆ) குறைக்கும் கூத்தாடும்
இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்
ஈ) புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது.
Answer:
இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

குறுவினா

Question 1.
மூச்சு நின்றுவிட்டால்
பேச்சும் அடங்கும் – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
Answer:

  • “எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானே அடங்கும்”
  • “சான்றோர் கொள்கையும் மாண்டால் அடங்கும்”

சிறுவினா

Question 1.
கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
Answer:
1. நிரந்தரமாக இருக்க எண்ணினோம்.
நிரந்தரமில்லாமல் சென்றுவிடுகிறோம்.

2. உயர்ந்த கொள்கைகளும் உயிர்போனால்
உதாசினப்படுத்தப்படும்.

3. உண்மைகள் எல்லாம் சில உண்மைகளைத்
திரைமறைவு செய்வதற்கே.

4. ஆர்ப்பரிப்பில் அடங்காத மனம்
அமைதியில் அடங்கிவிடும்.

5. கடலின் உள்நிகழ்வே கடல் அலைகள்
மனதின் வெளிப்பாடே புறச்செயல்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

  • நகுலனின் கவிதைகளே இங்கே பேசப்பட்டுள்ளன. நகுலனின் கவிதையின் முழங்கு பொருளே இவை.
  •  எனவே, கவிஞன் தான் நினைத்தவற்றைச் சொல்வடிவத்தில் சுருக்கிச் சொல்ல முற்படும்போது உதிர்ந்த முத்துக்களே இவை.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நம் பாடப்பகுதியிலுள்ள ‘கவிதைகள் ……. . என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
அ) நகுலன் கவிதைகள்
ஆ) கண்ணாடியாகும் கண்கள்
இ) நாய்கள்
ஈ) வாக்குமூலம்
Answer:
அ) நகுலன் கவிதைகள்

Question 2.
கவிஞர் நகுலனின் இயற்பெயர்
அ) டி.கே. நீலமேகம்
ஆ) டி.கே. துரைசாமி
இ) இராகோபாலன்
ஈ) கிருஷ்ணமூர்த்தி
Answer:
ஆ) டி.கே. துரைசாமி

Question 3.
கவிஞர் நகுலன் பிறந்த ஊர்
அ) தஞ்சாவூர்
ஆ) கும்பகோணம்
இ) திருச்சி
ஈ) விழுப்புரம்
Answer:
ஆ) கும்பகோணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Question 4.
கவிஞர் நகுலன் வாழ்ந்த ஊர்
அ) தஞ்சாவூர்
ஆ) கர்நாடக மாநிலத்தின் மாண்டியா
இ) கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்
ஈ) ஆந்திர மாநிலத்தின் கடப்பா
Answer:
இ) கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்

Question 5.
கவிஞர் நகுலன் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) அண்ணாமலை
ஈ) திருவள்ளுவர்
Answer:
இ) அண்ணாமலை

Question 6.
கவிஞர் நகுலன் எழுதியுள்ள புதினங்கள்
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
Answer:
ஆ) ஏழு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Question 7.
கவிஞர் நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்?
அ) பாரதி
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பாரதி

Question 8.
‘இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்று எழுதியவர்
அ) நாகூர் ரூமி
ஆ) பாரதிதான்
இ) நகுலன்
ஈ) ஆத்மாநாம்
Answer:
இ) நகுலன்

குறுவினா

Question 1.
நகுலன் (டி.கே. துரைசாமி) பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : நகுலன்
பிறப்பு : கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்
கல்வி : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம்
சிறப்பு : புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகளை

நறுக்கென்று : கூறுபவர். அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதியவர் படைப்புகள் : மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி ஆகிய புதினங்களை எழுதியுள்ளார். பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Question 2.
புதுக்கவிதை என்றால் என்ன?
Answer:
புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டுமல்ல. புதிய சிந்தனைகளையும், புதிய கருத்துகளையும், புதுமையாகச் சொல்வது புதுக்கவிதை ஆகும்

Question 3.
‘இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.’ இக்கவிதைக்குப் பொருத்தமான பழமொழியை எழுதுக.
Answer:
கானல் நீர் போல.

Question 4.
‘ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்.’ இக்கவிதைக்குப் பொருத்தமான பழமொழியை எழுதுக.
Answer:
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்காது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

புணர்ச்சி விதி

Question 1.
பிரயோஜனமில்லை – பிரயோஜனம் + இல்லை
Answer:
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + இ + மி) பிரயோஜனமில்லை என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.1 திரைமொழி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.1 திரைமொழி

பாடநூல் வினாக்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

பலவுள் தெரிக

Question 1.
வேறுபட்டதைக் குறிப்பிடுக.
அ) அண்மைக் காட்சித் துணிப்பு
இ) நடுக்காட்சித் துணிப்பு
ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு
ஈ) காட்சி மறைவு
Answer:
ஈ) காட்சி மறைவு

குறுவினா

Question 1.
பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
Answer:

  • திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவுவது பின்னணி இசையே.
  • பின்னணி இசைச் சேர்ப்பு, மவுனம் இவ்விரண்டும் சில வேளைகளில் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன.
  • இசை பாத்திரங்களின் மனக்கவலைகள் அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எதிரொலிப்பதாகவும் இருத்தல் அவசியமானது.

சிறுவினா

Question 1.
திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
Answer:
காட்சியின் முக்கியத்துவம்:

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
  • திரைப்படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்கு இரண்டாம் இடம்தான்.
  • திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

சான்று:
முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.

  • அடுத்தக் காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்.
  • முதல் காட்சியில் எண் 7, வீரையா தெரு… என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.

இவ்விரண்டு தரவுகளிலும் காட்சி அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நெடுவினா

Question 1.
திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
திரைப்படத்துறை – ஒரு கலை:
புதுமை வாழ்வில் எத்தனையோ அற்புதங்களைக் கண்டு மகிழ்கிறோம். நாடகத்தின் மறுமலர்ச்சியாக, மக்களை மயக்கும் கலையாக திரைப்படத்துறை தவிர்க்கமுடியாத ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறை வளர்ச்சியின் பின்னால் எத்தனைத் துறைகள் அடங்கியிருப்பது பற்றி யாரும் திரும்பிப் பார்ப்பது கிடையாது.

சான்றாக, கதை, கதை-உணர்த்தும் நீதி, எண்ணத்தை ஈர்க்கும் வசனம், கதாநாயகன், நாயகிகள் தேர்வு, ஆடை அலங்காரம், இடங்கள் தேர்வு, புகைப்படக் கருவி, நடனக் குழுக்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். இதற்குள் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன.

எல்லாக் கலைஞர்களும் அருகி வரும் நிலையில் இத்துறையின் வளர்ச்சி உயர்ந்த நிலையில் உள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க எத்தனை கோடிகள், எவ்வளவு செலவீனங்கள் என வளர்ந்து கொண்டே போகும். இதற்கு இடையில் குடும்பப் படங்கள், அரசியல் படங்கள், பக்திப் படங்கள் என்றும் பற்பல பிரிவுகளில் எடுக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

இவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு பிரிவிலும் விற்பன்னர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கென்று திரைப்படத்துறை சார்ந்த படிப்புகளும் உருவாகி உள்ளன. இத்துறையில் முழு ஈடுபாடு கொண்டால்தான் சிறக்கும்.

இதைப்பலகலைகளின்சங்கமம்என்றே கூறலாம். நடிகர்களின்நடிப்புக்கலை,ஒப்பனைக்கலை, வசனம் (பேச்சுக்கலை), (கேமரா) படமெடுப்பதில் கலையம்சம், ஒலிப்பதிவுக்கலை, ஒளிப்பதிவுக் குழு நடனக் கலை என ஒட்டுமொத்த கலைஞர்களால் மட்டும்தான் இது நடந்தேறி வருகிறது.

கணினி சம்பந்தப்பட்ட ஒத்துழைப்புகளாலும் உதவியாலும் இத்துறை மெருகூட்டப்படுகிறது. கண்டுபிடிப்புகள் அதிகமானாலும் கலையம்சம் நிறைந்தது திரைப்படத்துறையே. எனவே கலைகளின் சங்கமம் என்பது பொருத்தமானதே.

திரைப்படத்துறை ஆயிரம் பேரையல்ல, ஆயிரம் குடும்பங்களை வாழவைக்கிறது. கேளிக்கைகள் நிறைந்த இவ்வுலகில் திரைப்படத்துறைக்கு மட்டும் கலைஞர்கள், தொழில்நுட்ப 1121 வல்லுநர்கள், ஒப்பனைக்காரர்கள், ஆடை அலங்கார வல்லுநர்கள், ஆண்-பெண் நடனக் குழுக்கள், சண்டைக் காட்சிகளில் பங்குபெற எதிர்த்தலைவன் மற்றும் துணைவர்கள், உதவியாளர்கள் என எத்தனையோ ஆட்கள் இதை நம்பி இருக்கிறார்கள்.

திரைப்படத்துறையில் மட்டும் கால் வைத்து விட்டால் அவர்களுக்கு மற்ற தொழில் மறந்துவிடுகிறது. எல்லாம் இருந்தவர்கள் ஏன் இத்துறைக்கு வருகிறார்கள் என்று தெரிவதில்லை. சென்னை-கோடம்பாக்கத்தில் கலைத்துறை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இதை நம்பியே வாழ்ந்து வருகின்றன.

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைப்பணி” என்பது போல அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்க்கையும் வாய்ப்பும் கொடுக்கும் துறையாக திரைப்படத்துறை திகழ்கிறது. இந்தக் கலையைக் கற்க முடியாது. பயிற்சியால்தான் பெற முடியும். மறவோம் கலைஞர்களை! மதிப்போம் கலைஞர்களை!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் மாலை 5 மணி, பிரான்சின் தலைநகரான பாரீசில் கிராண்ட் கபே விடுதி முன் ‘அதிசயம் பிறக்கிறது’ என்ற தலைப்பில் முதல் திரைப்படம் வெளியிடப்பட்டது.
ii) லூமியர் சகோதரர்களே இத்திரைப்படத்தை உருவாக்கினர்.
iii) இச்சகோதரர்கள் வெளியிட்ட படங்களில் ஒன்று ரயிலின் வருகை

அ) i சரி
ஆ) ii சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 2.
அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர்
அ) லூமியர் சகோதரர்கள்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஜார்ஜ் மிலி
ஈ) இவர்களில் வெருமிலர்
Answer:
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்

Question 3.
படப்படிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகுக்கு அளித்தவர்கள்
அ) லூமியர் சகோரார்கள்
ஆ) எடிசன் சகோதரர்கள்
இ) ஜார்ஜ் சகோதரர்கள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) லூமியர் சகோரார்கள்

Question 4.
திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்
அ) லூமியர்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஜார்ஜ் மிலி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) ஜார்ஜ் மிலி

Question 5.
சார்லி சாப்ளின் பிறந்த இடம்
அ) தி ஹேக்
ஆ) இலண்டன்
இ) நியூயார்க்
ஈ) பாரிஸ்
Answer:
ஆ) இலண்டன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 6.
சார்லி சாப்ளின் தாயார் ஒரு
அ) மேடைப்பாடகர்
ஆ) நடிகை
இ) வழக்கறிஞர்
ஈ) மருத்துவர்
Answer:
அ) மேடைப்பாடகர்

Question 7.
சிறுவனான சாப்ளின் மேடையேறி ஆடிப்பாடிடக் காரணமாக அமைந்தது
அ) மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்
ஆ) இயற்கையிலேயே மேடையில் ஆடிப்பாடிட வேண்டும் என்ற சார்லி சாப்ளின் ஆசையினால்
இ) நண்பர்கள் மேடையேறியே ஆக வேண்டும் என்று சாப்ளினை வற்புறுத்தியதால்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்

Question 8.
சார்லி சாப்ளினைப் பேசாப் பட நாயகனாக உருவாக்கிய தோற்றம்
அ) லிட்டில் மாஸ்டர்
ஆ) லிட்டில் டிராம்ப்
இ) லிட்டில் ஸ்டார்
ஈ) மாஸ்டர் மார்ஷல்
Answer:
ஆ) லிட்டில் டிராம்ப்

Question 9.
சார்லி சாப்ளின், வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ……………….. என்ற வெற்றிப் படமாக்கினார்.
அ) தி கிட்
ஆ) சிட்டி லைட்ஸ்
இ) மார்டன் டைம்ஸ்
ஈ) தி. கிரேட் டிக்டேட்டர்
Answer:
அ) தி கிட்

Question 10.
சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்
அ) மார்டன் டைம்ஸ்
ஆ) சிட்டி லைட்ஸ்
இ) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
ஈ) யுனைடெட் மூவிஸ்
Answer:
இ) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 11.
தி கோல்டு ரஷ், தி சர்க்கஸ் போன்ற காவியப் படங்களை உருவாக்கியவர்
அ) அர்னால்டு
ஆ) ஜாக்கிஜான்
இ) சார்லி சாப்ளின்
ஈ) ஜார்ஜ் மீலி
Answer:
இ) சார்லி சாப்ளின்

Question 12.
‘சார்லி சாப்ளின்’ எதிரிகளின் வாய்களை அடைத்து எடுத்த பேசும் திரைப்படம்
அ) சிட்டி லைட்ஸ்
ஆ) சிட்டி நைட்ஸ்
இ) வில்லேஜ் லைட்ஸ்
ஈ) வில்லேஜ் நைட்ஸ்
Answer:
அ) சிட்டி லைட்ஸ்

Question 13.
சார்லி சாப்ளின் மூன்று ஆண்டு உழைப்பில் வெளியிட்ட திரைப்படம்
அ) சிட்டி லைட்ஸ்
ஆ) மார்டன் டைம்ஸ்
இ) தி கிட்
ஈ) தி கோல்டு ரஷ்
Answer:
அ) சிட்டி லைட்ஸ்

Question 14.
சார்லி சாப்ளினது சோதனைப் படமான ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வெளியான ஆண்டு.
அ) 1932
ஆ) 1940
இ) 1936
ஈ) 1945
Answer:
ஆ) 1940

Question 15.
ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல் படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி கிரேட் டிக்டேட்டர்
ஈ) தி கிரேட் லீடர்
Answer:
இ) தி கிரேட் டிக்டேட்டர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 16.
‘மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதை உணர்த்திய திரைப்படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி கிரேட் டிக்டேட்டர்
ஈ) தி கிரேட் லீடர்
Answer:
இ) தி கிரேட் டிக்டேட்டர்

Question 17.
சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ படம் ஏற்படுத்திய தாக்கம்
(i) அன்றைய தொழில் மய உலகின் கேடுகளை விமர்சனம் செய்வதாக இத்திரைப்படம் அமைந்தமையால் சாப்ளினுக்குப் பொதுவுடைமையாளர் என்னும் முத்திரை விழுந்தது.
ii) பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது.
iii) இருந்தாலும் படம் வெற்றி பெற்றது.

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 18.
சார்லி சாப்ளின் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்த ஆண்டு
அ) 1940
ஆ) 1950
இ) 1952
ஈ) 1942
Answer:
ஆ) 1950

Question 19.
சார்லி சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் …………….. விருது வழங்கப்பட்டது.
அ) கோல்டன் குளோப்
ஆ) ஆஸ்கார்
இ) பிரவு டு ஆஃப் அமெரிக்கா
ஈ) கோல்டன் வேர்ல்டு
Answer:
ஆ) ஆஸ்கார்

Question 20.
பொருத்திக் காட்டுக.
அ) LONG SHOT – 1. மீ அண்மைக் காட்சித்துணிப்பு
ஆ) MID SHOT – 2. அண்மைக் காட்சித்திணிப்பு
இ) CLOSEUP SHOT – 3. நடுக்காட்சித்துணிப்பு
ஈ) EXTREME CLOSEUP SHOT – 4. சேய்மைக்காட்சித் துணிப்பு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 21.
மனைவியின் வைரமாலையை விற்று, பிரெஞ்சுக்காரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப் படங்களையும் வாங்கியவர்
அ) சாமிக்கண்ணு வின்சென்ட்
ஆ) தியோடர் பாஸ்கரன்
இ) அஜயன் பாலா
ஈ) அம்ஷ ன் குமார்
Answer:
அ) சாமிக்கண்ணு வின்சென்ட்

Question 22.
சாமிக்கண்ணு வின்சென்ட் துண்டுப்படங்களைக் காட்ட ஆரம்பித்த இடம்
அ) சென்னை
ஆ) திருவனந்தபுரம்
இ) திருச்சி
ஈ) மதுரை
Answer:
இ) திருச்சி

Question 23.
சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ வெளியான ஆண்டு
அ) 1932
ஆ) 1936
இ) 1940
ஈ) 1942
Answer:
ஆ) 1936

Question 24.
1977ஆம் ஆண்டு வரை திரைப்படமே பார்க்காமல் வாழ்ந்த மக்களின் ஊர்
அ) கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு
ஆ) ஆந்திராவில் காக்கி நாடா
இ) கேரளத்தில் கோழிக்கோடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு

Question 25.
சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி சர்க்க ஸ்
ஈ) தி கிரேட் டிக்டேட்டர்
Answer:
ஈ) தி கிரேட் டிக்டேட்டர்

Question 26.
‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்திட சார்லி சாப்ளினால் உருவாக்கப்பட்ட பாத்திரம்
அ) ஹென்றி
ஆ) ஹென்கோல்
இ) மீலி
ஈ) ஆடம்ஸ்
Answer:
ஆ) ஹென்கோல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 27.
திரைமொழி குறித்த பாடப்பகுதி … கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டது.
அ) அஜயன் பாலா
ஆ) சுஜாதா
இ) செழியன்
ஈ) அம்ஷன்குமார்
Answer:
அ) அஜயன் பாலா

குறுவினா

Question 1.
திரைப்படத் துறையின் தோற்றம் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களைக் குறிப்பிடுக.
Answer:

  • தாமஸ் ஆல்வா எடிசன் (படப்பிடிப்புக்கருவி)
  • பிரான்சின் லூமியர் சகோதரர்கள் (படப்பிடிப்புக்கருவி)
  • ஜார்ஜ் மிலி (கதை சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்)

Question 2.
திரைக்கதை – விளக்குக.
Answer:

  • படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைவது திரைக்கதை.
  • திரைக்கதைகள் பலமுறை எழுதி, பலமுறை படித்துப் பார்த்துத் திருத்தி உருவாக்குவது.
  • இத்தகைய உழைப்பு உள்ள திரைக்கதை மக்கள் மனதில் நிற்கும்.

Question 3.
முப்பரிமாணக்கலை என்றால் என்ன?
Answer:
திரைப்படத்தில் நடிப்பவரை முன்பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடிப்பது முப்பரிமாணக் கலை என்பர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 4.
திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:
கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கும் போது கண்கள் தாமாகவே அகண்ட கோணத்தைத் தேர்வு செய்வது மீ சேய்மை காட்சித்துணிப்பு என்கிறோம்.

Question 5.
சேய்மைக் காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
பேருந்தைப் பிடிக்க சாலையைக் கடக்கும் போது சாலையின் இரு பக்கங்களைப் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவில் இருந்து பதிவு செய்வது சேய்மைக் காட்சித் துணிப்பு ஆகும்.

Question 6.
நடுக்காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:
பேருந்தை விட்டு இறங்கி நடந்து போகும் போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பளவில் மட்டும் கவனப்படுத்துகிறோம். கண், ஆளை முழுதாகப் பார்த்தாலும், நம் கவனம் இடுப்புவரை மட்டும் எடுத்துக் கொள்வது நடுக்காட்சித் துணிப்பு ஆகும்.

Question 7.
அண்மைக்காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகம் மட்டுமே நமக்குப் பதிவாவது அண்மைக்காட்சித் துணிப்பு ஆகும்.

Question 8.
மீஅண்மைக்காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
செருப்பைக் கழற்றி வாசலில் விடும் போது கண் கீழே குனிந்து செருப்பை மட்டும் பார்ப்பது மீ அண்மைக்காட்சித் துணிப்பு.

Question 9.
திரைப்படத்தின் காட்சிமொழி என்றால் என்ன?
Answer:
ஒரு மணி நேரப் பயணத்தை ஐந்தே காட்சித் துணிப்புகளாக இருபது நொடிகளில் பார்வையாளரிடம் உணர்த்துவது திரைப்படத்தின் காட்சிமொழி ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 10.
திரைப்படக்கலை என்றால் என்ன?
Answer:
திரைப்படத்தில் தேவையான கோணங்களைப் பயன்படுத்தி அவற்றை வெட்டி, ஒட்டி, படத்தொகுப்புச் செய்து வெள்ளித்திரையில் ஒரு நல்ல கதையாகச் சொல்வது திரைப்படக்கலை என்பர்.

Question 11.
படத்தொகுப்பு என்றால் என்ன?
Answer:
தேவையற்ற காட்சிகளை நீக்கி தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பது படத்தொகுப்பு என்பர்.

Question 12.
ஒற்றைக்கோணக் கலை என்றால் என்ன?
Answer:
ஒரு காட்சியை ஒற்றைக்கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது ஒற்றைக்கோணக் கலை என்பர்.

Question 13.
நேரேட்டர் என்றால் என்ன?
Answer:
நேரேட்டர் என்பதன் பொருள் ‘கதை சொல்லி’ என்பதாகும். திரையரங்கில் மவுனப்படங்கள் 112 ஓடிக் கொண்டிருக்க திரைக்கு அருகே ஒருவர் ஒலி வாங்கியைப் பிடித்துக் கதை சொல்லுபவரை நேரேட்டர் என்பர். அவர் வந்து நின்றாலே அனைவரும் கைத்தட்டுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

சிறுவினா

Question 1.
காட்சி ஆற்றல் என்பதை விளக்குக. (அல்லது) காட்சி நகர்வு உத்தியை விளக்குக.
Answer:

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
  • திரைப்படத்தில் காட்சி சிறப்பானால் வசனம் இரண்டாம் இடம்தான்.
  • நாடகத்தில் விளக்கை அணைத்தும், திரையை இறக்கியும் காண்பிப்பர்.
  • முதல் காட்சி – கதாநாயகியிடம் தோழி தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
  • அடுத்தக்காட்சி – கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்.
  • காட்சி மாறுவதை உணர்த்த சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக்காட்டுவர். இதைக் காட்சி மறைவு என்பர்.
  • தொடங்கும் போது சிறிது சிறிதாக வெளிச்சம் கூட்டி முழுக்காட்சி வெளிப்படும் இதை காட்சி உதயம் என்பர்.
  • ஒரு காட்சி தொடங்கும் போது அடுத்தக்காட்சி தொடங்குவது கலவை / கூட்டு என்பர் (Mix).
  • பழைய காட்சியை அழித்துக் கொண்டே அடுத்தக் காட்சியை தோன்றுவதை அழிப்பு (Wipe) என்பர்.

இவ்வாறு பல்வேறு உத்திகள் காட்சியில் கையாளப் படுகிறது.

Question 2.
குலஷோவ் விளைவு விளக்குக.
Answer:

  • மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் முதலில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன.
  • அடுத்தக்காட்சியில் தொழிற்சாலைக்குள் மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர்.
  • சமூகத்தில் மனிதர்கள் மந்தைகள் ஆவதை உணர்த்துகிறது.
  • காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்ட முடியும்.
  • இவ்வாறு காட்டுவதைக் குலஷோவ் விளைவு’ என்பர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 3.
நல்ல திரைப்படம் என்பது எது – விளக்குக.
Answer:

  • முறையான காட்சிமொழியுடன் நல்ல கலையாக உருவாக்கும் படத்தில் பொய்களும் இருக்க முடியாது.
  • நம் மூளையை மழுங்கச் செய்யும் கவர்ச்சிகளும் இடம் பெறாது.
  • இப்படைப்புகள் உண்மையைப் பேசும்.
  • அதன் மூலம் காண்பிக்கப்படும் வாழ்வியல், நம் அனுபவத்தை மேம்படுத்தி வாழ்க்கையை வளமாக்கும்.

Question 4.
சாமிக்கண்ணு வின்சென்ட் சினிமாத் தொழில் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினைக் கூறுக.
Answer:

  • பிரெஞ்சுக்காரர் டுபான் அவர்களிடம் 2500 ரூபாய்க்கு புரொஜக்டரையும், சில துண்டு படங்களையும் வாங்கினார்.
  • திருச்சி, திருவனந்தபுரம், மதுரை, மதராசு போன்ற இடங்களில் முகாமிட்டுப் படம் காட்டினார்.
  • பிறகு லாகூர், பெஷாவர், லக்னோ போன்றப் பகுதியில் படம் காட்டினார்.
  • 1909இல் மதராஸ் திரும்பி அங்கே எஸ்பிளனேட்டில் கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார். புரொஜக்டர்கள் இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார்.

நெடுவினா

Question 1.
திரைப்படத் துறையில் சார்லி சாப்ளினின் பங்கினை விளக்குக.
Answer:
இளமை :

  • இலண்டனில் பிறந்த சாப்ளின் வறுமையின் மடியில் வளர்ந்தவர்.
  • இவரது தாய் வறுமையை மறக்கடிக்கத் கதைகள் சொல்வார்.
  • அதன் மூலம் கலைஞனாக செதுக்கப்பட்டார்.
  • மேடையில் பாடிய அம்மாவின் குரல் கெட்டுவிட இவரே மேடையில் ஆடிப்பாடி அசத்தினார்.
  • நடிகராகி குடும்பத்தைக் காக்கக் கனவு கண்ட அவர் அமெரிக்கா சென்று திரை வாய்ப்பைப் பெற்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

தோற்றம் :

  • தொள தொள கால் சட்டை, இறுக்கமான கோட்டு, துண்டு மீசை, புதுவிதமான சேட்டை கொண்டவர்.
  • ‘லிட்டில் டிராம்ப்’ என்று அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது.

புகழ் :

  • அவர் ஊதியம் போல் புகழும் உயர்ந்தது.
  • வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ‘தி கிட்’ என்ற வெற்றிப் படமாக்கினார்.
  • யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனத்தைக் தொடங்கி வளர்ச்சி கண்டார்.
  • ‘தி கோல்டு ரஷ்’, ‘தி சர்க்கஸ்’ போன்ற காவியங்கள் உருவாகின.

வெற்றிப்பயணம் :

  • மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் அடித்து நொறுக்கினார்.
  • பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ் பெற்ற அவர் பேசும் படங்களில் தோற்பார் என்று எதிர்பார்த்தனர்.
  • எதிர்பார்ப்புகளை முறியடித்து சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தின் வாயிலாக எதிரிகளின் வாய்களை அடைத்தார்.
  • ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படத்தின் மூலம் உலகின் தொழில்மய கேடுகளை விமர்சனம் செய்தார்.
  • பொதுவுடைடையாளர் என்ற முத்திரை விழுந்தது பல நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது, இருந்தாலும் வெற்றி பெற்றார்.
  • 1940இல் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படம், மனித குலத்திற்குத் தேவை போர் அல்ல; நல்லுணர்வும் அன்பும்தான் என்று உணர்த்தியது.
  • இப்படம் சாதனைப் படமாக மட்டுமல்லாமல் ஹிட்லரை விமர்சித்து உருவான முதல் படமாகவும் விளங்கியது.
  • 1952இல் அவரை நாடு கடத்தியதாக அறிவித்தது. பிறகு சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறினார்.
  • தன் தவறை உணர்ந்து மீண்டும் சாப்ளினை அழைத்தது. அவரும் அமெரிக்கா வந்தார்.
  • வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
  • இன்றும் உலகின் பல பகுதிகளில் சாப்ளினின் டிராம் உருவம் குறியீடாக இடம் பெற்றிருப்பது அவரது உழைப்பும் வெற்றியுமே அடையாளம் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 2.
சார்லி சாப்ளியின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ கதையைச் சுருக்கி வரைக.
Answer:
1940இல் சாப்ளினுக்கு நல்ல வசனப்படங்கள் எடுக்கத் தெரியாது என்ற காலக்கட்டத்தில் விமர்சர்களின் கூற்றைப் பொய்யாக்கி வெற்றிக் கண்ட படம் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.

  • இப்படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார்.
  • அதே உருவம் கொண்ட இன்னொரு பாத்திரத்தைக் கடை நடத்தும் யூதர் இனத்தவராக அறிமுகம் செய்தார்.
  • சர்வாதிகாரி ஹென்கோல் யூதர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • யூதரான கடைக்காரரும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பித்து ஷென்கோலின் உடையை திருடி அணிந்து கொள்கிறார்.
  • தப்பித்த கைதியைத் தேடிய காவலர்கள் வழியில் வரும் ஹென்கோல் உடையணிந்த : கடைக்காரருக்கு மரியாதை செய்தனர்.
  • சாதாரண உடையில் வந்த ஹென்கோலை சிறையில் அடைக்கின்றனர்.
  • ஒரே நாளில் இருவர் வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது.
  • கடுமையான அரசியல் விமர்சனங்கள்.
  • இறுதியாக, சர்வாதிகாரி வேடத்தில் இருக்கும் யூதர் கைது செய்யப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்ய ஆணையிடுகிறார்.
  • மாநாட்டில் மனிதகுல பேருரை ஆற்றுகிறார்.
  • இப்பேருரைதான் இன்று வரை சிறந்த வசனமாகப் பேசப்படுகிறது.
  • தாம் வாழும் காலத்தில் ஹிட்லரைக் கடுமையாக விமர்சித்த ஒரே படம் என்ற பெருமையும் உண்டு.
  • இரட்டை வேடங்கள் எத்தனைவந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.6 படிமம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.6 படிமம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 1.
இரவும் பகலும்
எதிரெதிர் மோதிட
உடைந்த பகலின் துண்டுகள் – இக்கவிதையில் படிம உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுக.
Answer:
இரவும் பகலும் மோதிக்கொள்ளும் வினையைக் காட்சிப்படுத்தியதால் இது வினைப்படிமம் ஆகும்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
படிமம் என்பதன் பொருள்
அ) சொல்
ஆ) செயல்
இ) காட்சி
ஈ) ஒலி
Answer:
இ) காட்சி

Question 2.
‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்’ இக்கவிதையில் ………… பயின்று வந்துள்ளது.
அ) பயன் படிமம்
ஆ) வினைப்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) வினைப்படிமம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
கூற்று : உவமைஉருவகம்போலபடிமமும்வினை,பயன்,மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் சரி, காரணமும் சரி
ஈ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி

Question 4.
மெய்ப்படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.
அ) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு
ஆ) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்
ஈ) வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
Answer:
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்

Question 5.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது” – இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?
Answer:

  • இப்பாடலடிகளில் மெய் (வடிவப்) படிமம் வெளிப்படுகிறது.
  • மாந்தோப்பு பருவ காலத்தின் அழகு பட்டாடையாக மரத்தைப் போர்த்தியிருப்பது பூக்களும் தளிர்களும் பட்டாடையை உடுத்திய பெண்ணின் தோற்றத்தை அல்லது பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு ஒப்பிட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கும்” – என்று எருமையின் சுரணையைற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துபவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
ஆ) தேவதேவன்

Question 2.
“கத்தல்களின் நெருக்கடியில்
தத்துவங்கள்
குழந்தைகள் போல்
அடிக்கடி தொலைந்துபோகும்” – என்று எழுதியவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
அ) ஆ.வே.முனுசாமி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) தாழைமலர் – 1. பொன்
ஆ) செருந்தி மலர் – 2. அன்ன ம்
இ) முள்ளி மலர் – 3. முத்துகள்
ஈ) புன்னை மலர் – 4. நீலமணி

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 4.
எயிற்பட்டினம் உள்ள ஓய்மாநாட்டை ஆட்சி செய்தவன்
அ) அதியமான்
ஆ) நல்லியகோடன்
இ) பேகன்
ஈ) நளங்கிள்ளி
Answer:
ஆ) நல்லியகோடன்

Question 5.
‘அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்’- என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) பெரும்பாணாற்றுப்படை
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) மலைப்படுகடாம்
ஈ) அகநானூறு
Answer:
ஆ) சிறுபாணாற்றுப்படை

Question 6.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கின்றது’ என்ற படிமக்கவிதையின் ஆசிரியர்
அ) தேவதேவன்
ஆ) ஆ.வே.முனுசாமி
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
இ) ந. பிச்சமூர்த்தி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 7.
‘கட்டில் நிணக்கும் இழிசினன் கையது’ என்னும் புறநானூற்றில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
அ) வினைப்படிமம்

Question 8.
“காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத் துள்ளிவரும்
புதுவெயில்” – என்று கல்யாண்ஜி கவிதையில் படிமப்படுத்தப்படுவது

அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்
ஆ) கன்றின் செயல், காலை இளம் வெயிலின் அழகோடு ஒப்பிடுதல்
இ) கன்றின் செயல் இளைஞரோடு ஒப்பிடல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்

Question 9.
‘நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே’ என்னும் குறுந்தொகை பாடலில் இடம்பெறும் படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) பயன்படிமம்

Question 10.
“யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்” – என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்ப டிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) மெய்ப்ப டிமம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 11.
“கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும்” – என்னும் ந. பிச்சமூர்த்தியின் கவிதையில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) வடிவப்படிமம்

Question 12.
‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப என்னும் அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஈ) உருப்படிமம்

குறுவினா

Question 1.
படிமம் என்றால் என்ன?
Answer:

  • படிமம் என்பது காட்சி என்பது பொருள்.
  • காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி.

Question 2.
படிமத்தின் பணிகள் யாவை?
Answer:

  • காட்சித்தன்மை கொண்டவற்றை அப்படியே காணும் வகையில் வெளிப்படுத்தி தெளிவை ஏற்படுத்தலாம்.
  • புதிய முறையில் தோற்றக் கூறுகளை எழுத்துக் காட்டலாம்.
  • கருத்துத்தன்மையுள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டி காட்சித்தன்மை தரலாம்.
  • கருத்துக்களைப் புரிய வைக்கலாம்.
  • காட்சிக்குத் தெளிவுப்படுத்துவது, காட்சிப்படுத்துவது படிமத்தின் பணிகள் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
காட்சிப் படிமத்தை சான்றுடன் விளக்குக.
Answer:
“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதி நீரில் கிடக்கும்”

எருமையின் சுரணையற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துகிறார் கவிஞர். இது காட்சிப் படிமம் ஆகும்.

Question 4.
வினைப்படிவம் சான்றுடன் விளக்குக.
Answer:
கட்டிலைப் பின்னுகின்ற ஒருவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ அவ்வளவு விரைவாக ஊரைக் கைப்பற்ற வந்த வீரனின் போர் என்று கீழ்வரும் பாடல் வினையைக் காட்சிப்படுத்துகின்றது.

“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனோடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரோ.”

Question 5.
பயன் படிமம் விளக்குக.
Answer:
“நோம் என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!”

இனிய செய்தல் இன்னா செய்தல் என்ற பயன்களை, இனிய வகையாக நெருஞ்சி பூவையும், இன்னாதவையாக நெருஞ்சி முள்ளையும் காட்சிப் பொருளால் படிமப்படுத்தியுள்ளார் கவிஞர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 6.
யானை தன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பின் தோன்றும் – இப்பாடலில் பயின்று வரும் படிமத்தை விளக்குக.
Answer:
இப்பாடலில் மெய்ப்படிமம் பயின்று வந்துள்ளது. மதங்கொண்ட யானையானது தன் வாய்க்குள் துதிக்கையின் மூலம் உணவை வைக்கிறது. யானையின் வாய் மலைக்குகை வாயினைப் போல் உள்ளதாகவும். துதிக்கை மலைக்குகையில் நுழையும் பாம்பினைப் போல் உள்ளதாகவும் வடிவத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

Question 7.
புதுக்கவிதையில் கையாளும் உத்திகள் யாவை?
Answer:
உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகியன.

Question 8.
படிமத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை?
Answer:
வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்).

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

சிறுவினா

Question 1.
சங்கப் பாடலில் காணப்பெறும் உவமைகளில் படிமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன – விளக்குக.
Answer:
நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஓய்மா நாட்டின் காட்சி:

“அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழா அலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்”

எனும் பாடலில்

“தாழை மலர் அன்னம் போலவும்
செருந்தி மலர் பொன்னைப் போலவும்
முள்ளி மலர் நீலமணியைப் போலவும்”

புன்னை மரத்து அரும்பு முத்துப் போலவும் காட்சிப்படுத்துவதால் இப்பாடல் படிமங்களாகிறது. சங்கப்பாடலில் உவமை, உள்ளுறை மிகுதியாகக் காண முடிகிறது.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
ஒருமுறை எட்டயபுரம் அரண்மைனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர் சிறப்பத்தார். அவவருவால் ஒருவா சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 1
பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார். சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

‘என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க்கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக்குறிப்பிடுவார். இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்.

தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். : இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை :முன்னின்று நடத்தினார். வ.உ.சி. சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தகுந்தது. அவருடைய தீந்தமிழுக்குச் சான்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

“கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு , எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் : தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு.”.

(நாவலர் சோமசுந்தர பாரதியின் நூற்தொகுதி 4- ‘நற்றமிழ்’ என்னும் கட்டுரையிலிருந்து)

வினாக்கள்:
1. பாரதி பட்டம் பெற்ற இருவர் யார்?
2. பின்வரும் தொடருக்கு இலக்கணக்குறிப்பு எழுதுக: எளிமையும் தெளிவும்
3. புணர்ச்சி விதி தருக: வழக்கறிஞர்
4. சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் ஒன்றினை எழுது.
5. சோமசுந்தர பாரதியார் ஈடுபட்ட போராட்டம் எது?
Answer:

  1.  சுப்பிரமணிய பாரதியார், சோம சுந்தர பாரதியார்
  2. எளிமையும் தெளிவும் – எண்ணும்மை
  3.  வழக்கறிஞர் – வழக்கு + அறிஞர்
    • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி, வழக்க் + அறிஞர் என்றானது.
    • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = கி) வழக்கறிஞர் எனப் புணர்ந்தது.
  4. தசரதனன் குறையும் – கைகேயின் நிறையும்
  5.  இந்தி எதிர்ப்புப் போராட்டம்

தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene

தமிழாக்கம்:
பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்தப்பட்டோர்களுக்காகப் போராடி வெற்றி கண்டவர். அதுமட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை உடையது. எந்தப் பிரச்சினைக்கும் அவர் கூக்குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியார் அவர்களின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

இலக்கிய நயம் பாராட்டுதல்

பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்! – கவிமணி தேசிக விநாயகம்

தலைப்பு :
தீண்டாமையை விரட்டுவோம்.

ஆசிரியர் குறிப்பு :
பெயர் : கவிமணி தேசிக விநாயகம்
பெற்றோர் : சிவதாணு – ஆதிலட்சுமி
பிறப்பு : 1976 – 1954
சூர்யா – இளமைத்தமிழே
ஊர் : கன்னியாகுமரி – தேரூர்
நூல்கள் : ஆசிய ஜோதி, மலரும் மாலையும்

திரண்ட கருத்து:
மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான புகழ் வரவேண்டுமெனில் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும். தீமை செய்பவரை ஒருவரும் தீண்டமாட்டார்.

தொடை நயம்:
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு அளபெடை நயங்கள் அமைந்துள்ளன.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

சான்று :
ன்மை
நாடும்
தின்மை
தீண்ட

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

எதுகை நயம் :
மதுரைக்கு வகை
செய்யுளுக்கு எதுகை முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது எதுகை.

சான்று :
பிப்பினால்
சிப்பு
தின்மை
தீண்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.

சான்று :
வாராதப்பா
வேண்டுமப்பா
மேற்குலத்தார்
ஒண்ணாதார்

அணி நயம் :
குளத்துக்கு தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு ஏற்ப இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

முடிவுரை:
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 2
உழைத்து உழவு செய்த
உப்பையெல்லாம்
வண்டியில் பூட்டி எருதோடு வணிகர்கள்
வாழ வழி கண்டு
உப்புக்கு மாற்றாக நெல்லைப் பெற
தன் மகளிரோடு உள்நாட்டுச் சந்தைக்குச்
செல்கின்ற காட்சி
வணிகர்களின் வீதிஉலாபோல்
காட்சி தருகிறது

பேச்சுவழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

எ.கா: இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ .
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்
நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும்.

2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான்.

3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.

5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்
இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்.

வெட்டியும் ஒட்டியும் பேசுதல்

Question 1.
கிராமங்கள் நகரமாவது வளர்ச்சியா?
Answer:
(i) கிராமங்களில் அழிவால் நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அதுமட்டுமல்லாமல் நவீன உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக நகரங்கள் அமைகிறது.

(ii) நகரங்களின் வளர்ச்சியால் கிராமங்கள் அழிக்கப்படுகிறது. இயற்கைப் பாதிப்பு, தொழிற்சாலைப் பெருக்கத்தால் நீர் மாசுபாடு, மனவளம் குன்றல், (வேளாண்மை ) விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படக்கூடும்.

ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 3

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 4
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 5 பத்தி அமைத்தல்:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். அவை இரண்டு வகைப்படும். ஒன்று எட்டுத்தாகை. மற்றொன்று பத்துப்பாட்டு. எட்டுத்தொகை என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அகம் சார்ந்த இலக்கியங்கள் ஐந்து: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை. புறம் சார்ந்த நூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் சார்ந்த நூல் பரிபாடல் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

பத்துப்பாட்டு அகம், புறம் என இரண்டு : – வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அகம் சார்ந்த நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை. புறம் சார்ந்த நூல்கள்: மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை. இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து ஆகும்.

கீழ்க்காணும் பகுதியைப் படித்து பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது; எல்லாம் மாயை; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விலாசத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.
Answer:
அரசு கொடுக்கும் ஊதியம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் பொய்த்தோற்றம். உள்ளூர நிற்கும் உயிர் மாசுபடவில்லை. தான் வேறு தோற்றம் வேறு. தான் இந்த உலகத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு வடிவம் என்று திடமாக நம்பியிருந்தார்.

ஏனென்றால், அவரது உயிர் அடையாளத்தைச் சோதனைப் போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ, மனிதனுக்கோ நேரம் கிடைத்ததில்லை. மனித வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையைப் புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.

செய்து கற்போம்.

Question 1.
நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்காரணங்களைனத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.
Answer:
சிதம்பரம்:
இறைவன் நடராசர் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும் அதுவே சிதம்பரம் என்றாயிற்று என்பர். சித் + அம்பரம் = சிதம்பரம் என்றாயிற்று. சித் என்றால் அறிவு, அம்பரம் என்றால் ஆகாயம் அல்லது வெட்டவெளி. வெட்டவெளிக்கு எல்லைக் கிடையாது. அதுபோல எல்லையற்ற
அறிவைக் கொண்டவராலும் புரிந்துகொள்ள முடியாதவர் நடராசர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

குற்றாலம்:
குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் என்று பெயர் பெற்றது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது.

சிவகாசி:
தென் மதுரையை ஆண்ட ஹரிகேசரிபராக்கிரம பாண்டியன் வாரனாசியிலிருந்து (வாரனாசி என்பது காசி) ஒரு சிவலிங்கத்தைக் கொண்டுவந்து நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால் காசி சிவலிங்கம் பெயராலே சிகவாசி ஆயிற்று.

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். சென்னையின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது. முன்பு இங்கு நீர்நிலைகளில் செங்கழுநீர் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என்றானது.

நிற்க அதற்குத் தக

(ஆளுமைத்திறன் என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியம நடத்தை, உணர்வு, சிந்தனை ஆகியவற்றைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை, நேர்மறைச் சிந்தனைகள், அடிப்படை ஒழுக்கம், உடற்பயிற்சி ஆகிய அனைத்துமே ஆளுமைப் பண்புகளுள் அடங்கும்)

இமயா இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுகிறாள். ஓட்டுகையில் இடையில் தடுமாறிக் கீழே விழுகிறாள். கற்றுக்கொடுக்கும் அவளுடைய அண்ணன். ‘உன்னால் இருசக்கர வாகனம் ஓட்ட இயலாது’ என்கிறான். நீங்கள் இமயாவாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?
Answer:
அண்ணா நீங்கள் எனக்குத் தொடர்ந்து ஒரு வாரம் பழக்கிக் கொடுங்கள். நிச்சயம் கற்றுக்கொள்வேன். முடியாது என்பது வெறும் பேச்சு , முடியும் என்பது உயிர் மூச்சு. எனவே, பயிற்சி மேற்கொண்டால் எந்த வேலையும் எளிமையாகும் அண்ணா .

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

பள்ளி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு நன்றியுரை நிகழ்த்த ஆசிரியர் அழைக்கின்றார். அந்நிலையில் நீவிர் என்ன செய்வீர்?
Answer:
நன்றியுரை ஆற்ற வருவதற்கு நிச்சயம் ஒத்துக்கொள்வேன். தலைவர், சிறப்பு விருந்தினர், : ஆசிரியர், மாணவ மாணவியர், பெற்றோர் என வரிசைப்படுத்தி நன்றி என்றாலே போதுமே! மேலும், சிறப்பு விருந்தினர் கல்வியை விலைக்கு வாங்க முடியாது. கல்விக்கூடங்களில் கற்றால் மட்டுமே கல்வியைப் பெறலாம் என்று கூறியதை முன்வைத்து நன்றி சொல்வேன்.

படிப்போம் பயன்படுத்துவோம் (நீதி மன்றம்)

1. Affidavit – ஆணை உறுதி ஆவணம்
2. Allegation – சாட்டுரை
3. Conviction – தண்டனை
4. Jurisdiction – அதிகார எல்லை
5. Plaintiff – வாதி
6. Sentence – வாக்கியம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.5 தலைக்குளம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.5 தலைக்குளம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 1.
நீங்கள் இருக்கும் ஊரை வாழ ஏற்றதாய் மாற்ற மேற்கொள்ளும் வழிமுறைகளைத் தொகுக்க.
Answer:

  • கழிவுநீர் வாய்க்கால் ஊரின் உள்ளே கழிவுநீர்த் தேங்காமல் செய்தல் வேண்டும்.
  • உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை (டுழகூ) மாதம் இருமுறை குளோரின் போட்டு சுத்தம் செய்தல் வேண்டும். காரணம் குடிக்கும் நீரால்தான் அனைத்து நோய்களும் உருவாகுவதால் கவனம் செலுத்த வேண்டும்.
  • வீட்டுக் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல், துப்பரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.
  • தெருவில் இடம் இருப்பின் வேப்பங்கன்று, புன்கன் கன்று இவற்றை நட்டு பராமரிக்கலாம்.
    ஆடு, மாடுகளைத் தெருவில் இரவு நேரங்களில் கட்டி அசுத்தம் செய்யக் கூடாது.
  • தேவை இல்லாமல் தெருக்குழாய்களில் தண்ணீரைத் திறந்து விடுதல் கூடாது.
  • தெருக்குழாய்களிலேயே குளிப்பது, துணி துவைப்பது கூடாது.
  • சாலையோரங்களில், வெளியிடங்களில் மலம் கழிக்கக்கூடாது. ஏனெனில் மலம் கழிப்பதால்தான் மிகத் தொற்று நோய்கள் பரவுகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பொது நலம் காக்கும் எண்ணம் இயல்பாக இருக்க வேண்டும்.
  • மேலும், தெருக்களில் எதையும் எரிப்பதைத் தவிக்க வேண்டும்.
  • சுத்தம் சோறு போடு என்று எண்ண வேண்டும். – சுற்றுப்புறமே சுகாதாரம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 2.
கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டினைப் பற்றியும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் பெரியோர்களிடம் அறிந்து வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
மாணவர்களே வணக்கம், வாழ்த்துக்கள்!
நாங்கள் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்திருந்த வீடும் – சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி நான் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

  • பண்புடையவர்களால்தான் இன்னும் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சான்றோர் கூறுவர்.
  • நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பது போல நல்லவர்களால் தான் மழை பொழியும்.
  • உள்ளத்தால் (ஒருவன்) பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
  • மேற்கண்ட பொன் மொழிகளுக்கு ஏற்ப என் குடும்பத்தார், என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தவர்கள்.
  • அன்புடையவர்கள், புறம் பேசாதவர்கள், பொய் பேசாதாவர்கள், ஒப்புரவு உடையவர்கள், உண்டை விளம்பிகள் என எல்லா நற்குணங்கள் பெற்றவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
  • அவர்களின் வழித்தோன்றலாகிய எங்களை ஊதில் அனைவரும் அன்புடன் நடத்துவர்.
    உயிர்களிடத்து அன்பு வேணும் – என்னும் கொள்கையோடு வாழ்ந்ததால் ஊர் மக்களும் எங்கள் குடும்பத்தையே எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
  • வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

எனவே, மாணவச் செல்வங்களே நீங்கள் பிறர் விரும்புமாறு நல்லதை செய்து நலமோடு வாழுங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
முன்னுரை:
மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, புலம்பெயர்வு, தலைமுறை மாற்றம் இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் முகவரியை இழக்கின்றன.

நகரத்தை நோக்கிச் செல்ல காரணம் :

  • இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தலைமுறையினர் காலமாற்றத்தாலும், பல்வேறு காரணங்களாலும் கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
  • பெரும்பாலும் கிராமங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கையேடு வாழ்க்கை போன்றது.
  • அங்கு கடினமான உழைப்பும், விவசாயமும் தவிர பிற தொழில் சார்ந்த வளர்ச்சி காணப்படுவதில்லை.
  • முறையான தொலைதொடர்பு, மருத்துவ வசதி சுகாதார அமைப்பு காண்ப்படுவதில்லை.
  • இந்தியாவில் 57 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பவரே.
  • இன்றும் சில கிராமங்களில் கோயில் நுழைவு தீண்டாமை, சாதி அமைப்பு, மதக்கலவரம் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
  • நகரத்திலோ எந்தவித பாகுபாடு இல்லாமல் சமவாய்ப்போடு வாழ இயலுவதால் நகரத்தை நோக்கி புலம் பெயர்கின்றனர்.
  • மிகச்சரியான உள்கட்டமைப்புடன் கூடிய தரமானக் கல்வி. போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நோக்கி இடம் பெயர்கின்றனர்.

அடிப்படை வசதியை நோக்கி நகர்வு :

(i) வறுமை, கல்வியில் பின்னடைவு, குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவை இன்றும் கிராமங்களில் காண முடிகிறது.

(ii) மின்சாரம், பேருந்து வசதி, தொழிற்சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நாடுகின்றனர்.

(iii) சாதிப் பாகுபாடு இல்லாமல் தரமான கல்வியோடு தொழிற்கல்வி, போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் பயிலகம், மின்னணு போன்ற நிறுவனங்கள் நகர்ப்புறத்தில் மேலோங்கி வருவதால் கிராமங்களை மக்கள் வெறுக்கின்றனர்

(iv)  இன்று நகரம் என்பது கிராமத்தைவிட பெரிய மனித குடியிருப்பு உள்ளதாக அமைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வங்கிகள், வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

முடிவுரை :
இத்தகைய காரணங்களால் கிராமங்களை விட்டு மக்கள் நகர்ப்புறம் நோக்கிச் செல்கின்றனர். இதனால் கிராமங்கள் தங்கள் அடையாளங்களை இழந்து முகவரியற்று கதியின்றி அமைகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘தலைக்குளம்’ என்னும் கதையின் ஆசிரியர்
அ) பீர்முகமது
ஆ) தோப்பில் முகமது மீரான்
இ) அப்துல் ரகுமான்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) தோப்பில் முகமது மீரான்

Question 2.
‘தலைக்குளம்’ என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு
அ) துறைமுகம்
ஆ) கூனன் தோப்பு
இ) சித்தன் போக்கு
ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்
Answer:
ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்

Question 3.
தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம் ………….. ஊர் …………. ஆண்டு ………
அ) கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டணம், 1944.
ஆ) தஞ்சாவூர், உத்தமதானபுரம், 1942.
இ) சென்னை , மயிலாப்பூர், 1940.
ஈ) திருவாரூர், வலங்கைமான், 1943.
Answer:
அ) கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டணம், 1944.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 4.
தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் வெளிவரும் மொழிகள்
அ) தமிழ், ஆங்கிலம்
ஆ) தமிழ், இந்தி
இ) தமிழ், கன்ன டம்
ஈ) தமிழ், மலையாளம்
Answer:
அ) தமிழ், ஆங்கிலம்

Question 5.
தோப்பில் முகமது மீரான் ‘சாய்வு நாற்காலி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற ஆண்டு
அ) 1994
ஆ) 1997
இ) 1999
ஈ) 2001
Answer:
ஆ) 1997

Question 6.
தமிழக அரசின் விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் படைப்புகள்
அ) துறைமுகம், கூனன்தோப்பு
ஆ) சாய்வு நாற்காலி, துறைமுகம்
இ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்
ஈ) கூனன்தோப்பு, சாய்வுநாற்காலி
Answer:
அ) துறைமுகம், கூனன்தோப்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) உம்மா – 1. அப்பா
ஆ) வாப்பா – 2. அம்மா
இ) ஏச்சு – 3. படித்துறை
ஈ) கடவு – 4. திட்டுதல்

அ) 2, 1, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 2, 1, 3, 4

Question 8.
பொருத்திக் காட்டுக.
அ) புதுமைப்பித்தன் – 1. மலைவெடிப்பு
ஆ) சண்முகசுந்தரம் – 2. சூரிய வெப்பம்
இ) ஜெயகாந்தன் – 3. அஞ்சிய
ஈ) தி.ஜானகிராமன் – 4. விரைவு
உ) தோப்பில் முகமது மீரான் – 5. நெல்லைத்தமிழ்

அ) 4, 5, 3, 2, 1
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 5, 4
ஈ) 2, 3, 4, 5, 1
Answer:
ஆ) 5, 4, 3, 2, 1

Question 9.
சரியான கூற்றுகளைக் கண்டறிக.
i) கி. ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார்.
ii) தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் ‘கரிசல் இலக்கியம்’ என்று பெயரிட்டார்.
iii) சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் ‘தஞ்சைக் கதைகள்’ என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 10.
தலைக்குளம் கதையின் கருப்பொருள்
அ) கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது.
ஆ) தனக்கு உதவி செய்த மனிதனை தேடிக் கண்டுபிடித்து நன்றி பாராட்டுவது.
இ) பெண்களின் அவலநிலையும் ஆண்களின் அடக்குமுறையும்.
ஈ) இறந்து போன மனிதனின் சிறப்புகளைப் பேசுவது.
Answer:
அ) கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.4 அகநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.4 அகநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 1.
தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் மகளிர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
Answer:
ஒரு பெண் நம் சமூகத்தில் வெற்றி பெற வேண்டுமானால் 100 சதவீதம் வேலை செய்தால் போதாது. 200 சதவீதம் உண்மையான கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்றையக் காலத்தில் திருவாரூரில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை வணிகத்திலும் : ஈடுபடுத்தி, சிறந்து விளங்குகின்றனர்.

அவ்வகையில் திருவாரூரில் பிறந்து சென்னையில் பிழைப்புத் தேடி வந்த பெண் இன்று வணிகத்தில் சிறந்து விளங்குகிறாள். அவரைப் பற்றி சில வரிகள்.

வறுமை, கல்வி, பொருளாதாரம், கவலை, சோகச்சூழல் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சூழலில் சென்னை வந்த பெண் ஏதாவது செய்யத் துடிக்கிறாள்.

முன் அனுபவம் இல்லாத நிலையில் வடமாநில தோழி மூலம் பினாயில் தயாரிக்க ஆரம்பித்தார். பிறகு 500 ரூபாய் கடன் வாங்கி மூலப்பொருள் மூலம் பொருட்கள் வாயிலாக தாமே தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார். தான் தயாரித்த பினாயிலை, அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், உணவகங்களில் நேரிடையாகச் சென்று விற்க ஆரம்பித்தார். போதிய வருமானம் கிட்டியது. வியாபாரத்தை மேலும் சிறக்கச் செய்ய அதிக மூலதனம் வைத்து இரண்டு பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டார்.

தரம் உயர்தரம் என்ற நோக்கத்தோடு உழைத்த பெண்மணி இன்று தன்னிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களையும் வணிகத்தில் ஈடுபடச் செய்தார். தன் நிறுவனத்துக்கு நிலை ஏஜென்ஸி என்ற பெயர் வைத்து பினாயில் வணிகத்தில் சிறந்து விளங்குகிறார் என்றால் மிகையாகாது.

ஆணுக்குப் பெண் சமம் என்று மகளிர் தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 2.
பழங்காலத் தொழில்கள் குறித்துக் கருத்தரங்க உரை உருவாக்குக.
Answer:
பழந்தமிழ் மக்கள் வாழ்வதற்காகப் பொருள் தேடுவதைக் கடமையாகக் கொண்டனர். அதற்காகப் பற்பல தொழில் வகைகளை மேற்கொண்டனர். தம் வாழிடங்களுக்கு ஏற்ப : ! தொழில்களை தேர்ந்தெடுத்தனர். மலைநாட்டு மக்கள் தேனெடுப்பது தினை விதைப்பது, காட்டுப் பகுதியில் வாழ்பவர் நிரை மேய்ப்பது; பால் கடைவது; வயல்வெளியில் உள்ளோர் உழவு செய்து நகர் அமைத்து ஆட்சி செய்வது போன்ற பணிகளையும் செய்தனர். கடற்கரைப் பகுதியில் வாழ்வோர் உப்பு விளைத்தல்; முத்து குளித்தல்; அலை கடல் ஏறி வாணிகம் செய்தல்.

தொழில் செய்தே பொருள் தேடுவதே அவர் கொள்கை. பசுக்களுக்கு நீர் வேண்டும் என்று கருதி இரத்தல் கூட இழிவான செயலாகக் கருதினர். தாமே முயற்சி செய்து நீரைப்பெற்றுப் தர வேண்டும் என்றனர்.

தாமே முயன்று தேடும் பொருளையே தமக்குரியதாகக் கருதினர். எளிய முயற்சியில் வருவதை ஏற்க மறுத்தனர்.

முயற்சி உடையார் இகழச்சியுடையார் என்பதற்கு ஏற்ப இயன்று பழந்தமிழர் தொழில்கள் செய்தனர்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘விளியறி ஞமலி’ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
அ) எருது
ஆ) குதிரை
இ) நாய்
ஈ) யாழி
Answer:
இ) நாய்

குறுவினா

Question 1.
‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:
பெருங்கடல் – சிறுகுடிப் பரதவர்.

சிறுவினா

Question 1.
‘நெல்லின் நேரே வெண்கலம் உப்பு’ – இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.
Answer:
உப்புக்குப் பதிலாக (மாற்றாக) நெல்லை விற்றனர் என்ற செய்தியின் மூலம் சங்கக் காலத்தில் பண்டமாற்று வணிகம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.

விளக்கம் :
உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். தன் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒலிக்க வீதிக்குச் சென்றாள். அப்போது அந்த வீதி வழியாக வந்த வணிகனை நோக்கி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப்
பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவினார்’.
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்’
சேரி விலைமாறு கூறலின் மனைய்’
என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

இலக்கணக் குறிப்பு

பெருங்கடல் – பண்புத்தொகை
உழாஅது – செய்யுளிசை அளபெடை
வெரீஇய – சொல்லிசை அளபெடை

பகுபத உறுப்பிலக்கணம்

செய்த = செய் + த் + அ
செய் – பகுதி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

சாற்றி = சாற்று + இ
சாற்று – பகுதி
இ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. பெருங்கடல் = பெருமை + கடல்

  • ஈறுபோதல்’ என்ற விதிப்படி, மை கெட்டு பெரு + கடல் என்றானது.
  • ‘இனமிகல்’ என்ற விதிப்படி, க-வுக்கு இனமான ங் தோன்றி, பெருங்கடல் என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்திக் காட்டுக.
அ) வேட்டம் – 1. கானவன்
ஆ) செறு – 2. மீன்பிடித்தல்
இ) உமணர் – 3. வயல்
ஈ) புனவன் – 4. உப்பு வணிகர்

அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 2, 3, 4, 1

Question 2.
பொருத்திக் காட்டுக.
அ) ஞமலி – 1. சேறு
ஆ) பகடு – 2. விலை
இ) அள்ள ல் – 3. நாய்
ஈ) கொள்ளை – 4. எருது

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) என்றூழ் – 1. மலைவெடிப்பு
ஆ) விடர் – 2. சூரிய வெப்பம்
இ) கதழ் – 3. அஞ்சிய
ஈ) வெரீஇய – 4. விரைவு

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 4, 3
இ) 4, 2, 1, 3)
ஈ) 1, 2, 3, 4
Answer:
ஆ) 2, 1, 4, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 4.
‘மதர்கயல் மலைப்பின் அன்ன’ – என்பதில் ‘கயல்’ என்னும் சொல்லின் பொருள்
அ) மீன்
ஆ) விழி
இ) விண்மீ ன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) மீன்

Question 5.
பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
அ) குறவர்
ஆ) ஆயர்
இ) எயினர்
ஈ) பரதவர்
Answer:
ஈ) பரதவர்

Question 6.
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்பது யாருடைய கூற்று?
அ) பரதவரின் கூற்று
ஆ) உமணர் மகள் கூவியது
இ) தலைவியின் கூற்று
ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது
Answer:
ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது

Question 7.
உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக் கொண்ட இடம்
அ) மணற்திட்டு
ஆ) கருஞ்சேறு
இ) வாய்க்கால்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) கருஞ்சேறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 8.
‘வெய்ய உயிர்க்கும் நோயாகின்றே’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) உமணர் மகள் தந்தையிடம்
ஆ) தந்தை உமணர் மகளிடம்
இ) தலைமகன் பாங்கனிடம்
ஈ) பாங்கன் தலைமனிடம்
Answer:
இ) தலைமகன் பாங்கனிடம்

Question 9.
உப்பு விளையும் களத்திற்கு ……………. என்று பெயர்.
அ) அளம்
ஆ) பாலம்
இ) நிலம்
ஈ) களி
Answer:
அ) அளம்

Question 10.
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக விளங்கியது
அ) உப்பு
ஆ) முத்து
இ) துணி
ஈ) ஏலம்
Answer:
அ) உப்பு

Question 11.
பொருத்திக் காட்டுக.
அ) பெருங்கடல் – 1. செய்யுளிசை அளபெடை
ஆ) உழாஅது – 2. சொல்லிசை அளபெடை
இ) வெரீஇய – 3. பண்புத்தொகை

அ) 3, 1, 2
ஆ) 3, 2,1
இ) 1, 2, 3
ஈ) 2, 1, 3
Answer:
அ) 3, 1, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 12.
பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) குறுந்தாகை
ஈ) நற்றிணை
Answer:
அ) அகநானூறு

Question 13.
அகநானூறு ………. நூல்களுள் ஒன்று
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
அ) எட்டுத்தொகை

Question 14.
அகநானூறு …………….. பிரிவுகளை உடையது.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
அ) மூன்று

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) களிற்றியானை நிரை – 1) 100 பாடல்கள்
ஆ) மணிமிடை பவளம் – 2) 120 பாடல்கள்
இ) நித்திலக்கோவை – 3) 180 பாடல்கள்

அ) 2, 3, 1
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 1, 3, 2
Answer:
அ) 2, 3, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 16.
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்
ii) நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அம்மூவனார்.
ii) இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

அ) i), ii), சரி
ஆ) i), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

குறுவினா

Question 1.
பரதவர்கள் தொழிலான வேட்டையாடுபவை, விளைவிப்பவை எவை?
Answer:
வேட்டையாடுபவன் : கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
விளைவிப்பன : உப்பளங்களில் உழவு செய்யாமல் உப்பு விளைவிப்பவர்

Question 2.
உமணப் பெண்ணின் தோற்றத்தை விவரி.
Answer:

  • அழகும் இளமையும் வாய்ந்தவள்.
  • அவள் தம் கைகளில் அழகிய வளையல்கள் ஒலிக்க தெருவில் கைவீசி நடப்பவள்.
  • உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ!’ என்று கூவினாள்.

Question 3.
தலைமகன் பாங்கற்கு உரைத்ததை அகநானூற்றுப் பாடல் மூலம் விளக்குக.
Answer:
(i) வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல. தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன் என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

(ii) எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலைய காதல் வருத்தத்திற்கும் உள்ளுறை வைத்துப் பாடப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 4.
உப்பங்கழி என்றால் என்ன?
Answer:
கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு உப்பங்கழி என்பர்.

Question 5.
கல் உப்பை எவ்வாறு விளைவிப்பர்?
Answer:

  • உப்பங்கழிகளில் உள்ள கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்ற வகையில் அமைப்பர்.
  • இவ்வாறு அமைக்கப்பட்ட பகுதி ஆடைபோல் படியும் இந்த உப்பைக் கூட்டிச் சேகரித்துப் : பக்குவப்படுத்தி விற்பனை செய்வர்.

Question 6.
உப்பளம் என்றால் என்ன?
Answer:
கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்பு படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்பர்.

சிறுவினா

Question 1.
அகநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • அகம் + நான்கு + நூறு.
  • எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூல்.
  • நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
  • 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்டது.
    மூன்று பெரும் பிரிவுகளை உடையது:
    களிற்றியானை நிரை – 120; மணிமிடைப் பவளம் – 180; நித்திலக் கோவை – 100
  • திணை அமைப்பு:
    பாலை – 1, 3, 5, 7;
    மருதம் – 6, 16, 26;
    குறிஞ்சி – 2, 8, 12, 18
    நெய்தல் – 10, 20, 30;
    முல்லை – 4, 14, 24
    என்ற முறையில் திணை அமைப்பு அமைந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 2.
அகநானூற்றுப் பாடலில் வரும் நெய்தல் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் விளக்குக.
Answer:
திணை – நெய்தல்
பெரும்பொழுது : ஆறு பெரும்பொழுதுகளும்; சிறுபொழுது : எற்பாடு
முதற்பொருள் : கடலும் கடல் சார்ந்த இடமும்

கருப்பொருள்:
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதன், பரத்தியர்
உணவு – மீன் உப்புக்குப் பெற்றபொருள்
விலங்கு – முதலை, சுறா
பூ – நெய்தல், தாலை
மரம் – புன்னை
பறவை – கடற்காகம்
ஊர் – பட்டினம், பாக்கம்
பறை – மீன் கோட்பறை
யாழ் – விளரியாழ்
பண் – செவ்வழிப்பண்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

உரிப்பொருள் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
சான்று: ‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல்.

நெடுவினா

Question 1.
அகநானூற்றுப் பாடல் வழியாகத் தலைமகன் பாங்கற்கு உரைத்த செய்தியை விளக்குக.
Answer:

  • பழந்தமிழர்களின் தொழில் நிலத்தின் இயல்பைச் சார்ந்து அமைந்திருந்தது.
    கடற்கரையில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்கள் செய்து, அப்பொருட்களை பண்டமாற்று முறையில் உப்பு வணிகத்தைச் செய்தனர்.
  • பரதவர் கடலில் மீன் வேட்டையாடுவர்.
  • உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்.
  • வெண்மையான உப்பை வண்டியில் ஏற்றுவர்.
  • எருதுகளை விரட்ட தாழ்கோல் வைத்திருப்பர்.
  • கோடைக்காலத்தில் வெப்பத்தால் பிளவுபட்ட குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனைச் செய்வர்.
  • அத்தகைய உமணரின் பெண் அழகும், இளமையும் வாய்ந்தவள்.
  • அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் நடந்து சென்று உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பைப் பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவுகிறார்.
  • கூவுவதைக் கேட்டு நாய் குரைக்கிறது.
  • எதிர்பாராத அப்பெண் அச்சம் கொண்டு மீன்கள் போர் செய்வதுபோல் கண்கள் மருண்டன.
  • மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் கண்டேன்.
  • தினைப்புனம் அமைக்கும் கானவர் பழைய புனத்தைத் தீயிட்டு அழிக்கும்போது உருவாகும் புகையால் பெண்ணின் தந்தையின் வண்டியானது சேற்றில் சிக்கிக் கொண்டது.
  • துன்பத்தில் உள்ள எருதுக்குத் தந்தை உதவி செய்தார்.
  • எருது அடைந்த துன்பம் போல் பெண்ணின் கண்களால் நான் துன்பம் அடைந்தேன்.
  • வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீ போக்க வேண்டும் என்று தலைமகன் பாங்கற்கு உரைத்தான்.

உள்ளுறை :
எருதைத் தலைவனுக்கும்
தந்தையைப் பாங்கனுக்கும்

என உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கு உள்ளுறை வைத்துப் பாடப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.3 தேவாரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.3 தேவாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 1.
உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழக்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக.
Answer:
மேலாளர்,
தினத்தந்தி நாளிதழ் (செய்திப்பிரிவு),
கடலூர் அலுவலகம்,
கடலூர்.

வணக்கம்,
சிதம்பரம் நடராசர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்விழாவினைப் பற்றிய தகவல்கள் நாங்கள் தருகிறோம். அதை உங்கள் நாளிதழிலில் வெளியிட்டு மக்கள் வருகைத்தந்து இறையருளை வேண்டுகிறோம்.

செய்தி

ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நிரல்

பஞ்சசபை, பொற்சபை, ஆகாய தலம் எனப் போற்றப்படும் சிதம்பரம் நடராசருக்கு ஆருத்ரா தரிசன விழா.

உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறும் ஆனி மாதம் திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கிய மறுநாள் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவகாமிசுந்திரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்குத் திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, பஞ்சாங்கம் படித்தல்.

மார்கழி முதல் நாள் கொடியேற்றத்துடன் துவக்கம். தேரோட்டம் வரும் 25ஆம் தேதியும், 26ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராசமூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

காலசந்தி பூஜை, ரகசிய பூஜை நடைபெறும். காலை 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராசர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரம் முன்பு காட்சி தருவார்.

தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்வர். 9.30 மணியளவில் மகாதீபாரதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாகச் செல்வர்.

இரவு 8 மணிக்கு கொடிமர பூஜை பிறகு பஞ்சமூர்த்திகள் தங்கம் வெள்ளி வாகனத்தில் 4 வீதிகளில் உலா,

  • ஞாயிறன்று வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா
  • 21ஆம் நாள் கருட வாகனத்தில் வீதி உலா
  • 22ஆம் நாள் யானை வாகனத்தில் வீதி உலா
  • 23ஆம் நாள் தங்ககைலாச வாகனத்தில் வீதி உலா
  • 24ஆம் நாள் தங்கரதத்தின் பிஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதி உலா.
  • 25ஆம் நாள் தேரோட்டம்.
  • 26ஆம் நாள் அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ராஜசபை என்கிற

ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராச மூர்த்திக்கு மகா அபிஷேகத்துடன் மதியம் 2மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

இறையன்பர்கள் வருகை தந்து இறையருள் பெற வேண்டுகிறோம்.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.
Answer:

  • கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா
  • ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

சிறுவினா

Question 1.
பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
Answer:

  • கோவில் திருவிழா மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு.
  • ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று.
  • விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை.
  • இங்கு இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் விழாக்கள் நிறைந்த வீதியுடைய ஊர்.
  • எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும்.
  • மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் மிசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் கண்டு இறைவன் அருள்பெற திருஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.

இலக்கணக் குறிப்பு

மாமயிலை – உரிச்சொற்றொடர்

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம் 1

புணர்ச்சி விதி

1. பூம்பாவாய் = பூ + வாய்
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் என்ற விதிப்படி, பா-வுக்கு இனமானம் தோன்றி, பூம்பாவாய் என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா
அ) பங்குனி உத்திர விழா
ஆ) திருக்கார்த்திகை விழா
இ) சித்திரா பௌர்ணமி விழா
ஈ) தைப்பூச விழா
Answer:
அ) பங்குனி உத்திர விழா

Question 2.
தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் அமைந்துள்ள இடம்
அ) மயிலாப்பூர்
ஆ) திருநெல்வேலி
இ) திருவொற்றியூர்
ஈ) வள்ளியூர்
Answer:
ஆ) திருநெல்வேலி

Question 3.
மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்
அ) கபாலீசுவரர்
ஆ) தான்தோன்றிநாதர்
இ) லிங்கேசுவரர்
ஈ) பெருவுடையார்
Answer:
அ) கபாலீசுவரர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
‘மாமயிலை’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) உரிச்சொற்றொடர்
ஈ) உவமைத்தொடர்
Answer:
இ) உரிச்சொற்றொடர்

Question 5.
பொருத்திக் காட்டுக.
அ) ஐப்பசி – 1. விளக்குத் திருவிழா
ஆ) கார்த்திகை – 2. திருவாதிரைவிழா
இ) மார்கழி – 3. ஓணவிழா
ஈ) மாசி – 4. கடலாட்டு விழா

அ) 3, 1, 2, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 3, 1, 2, 4

Question 6.
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்
அ) திருநாவுக்கரசர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
Answer:
ஆ) திருஞானசம்பந்தர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 7.
திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர்
அ) சேக்கிழார்
ஆ) இராசராச சோழன்
இ) நம்பியாண்டார் நம்பி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) நம்பியாண்டார் நம்பி

Question 8.
கண்டான் என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) காண்(கண்) + ட் + ஆன்
ஆ) கண் + ட் + ஆன்
இ) காண் + ட் + ட் + ஆன்
ஈ) காண்டு + ஆன்
Answer:
அ) காண்(கண்) + ட் + ஆன்

Question 9.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் ……………… என்று அழைக்கப்படுகின்றன.
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருச்சதகம்
ஈ) திருத்தொண்டத்தொகை
Answer:
அ) தேவாரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

குறுவினா

Question 1.
திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகக் குறிப்பிடுவன யாவை?
Answer:

  • கோவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக உள்ளது.
  • ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

Question 2.
திருஞானசம்பந்தர் எங்கு வீற்றிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திர விழா கொண்டாடுகிறார்?
Answer:
திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூர் நகரில் வீற்றிருக்கும் இறைவனுக்கு விழா கொண்டாடுகிறார்.

Question 3.
மலி விழா, கலி விழா, பலி விழா, ஒலி விழா விளக்கம் தருக.
Answer:

  • மலி விழா – விழாக்கள் நிறைந்தது
  • கலி விழா – எழுச்சி தரும் விழா
  • பலி விழா – பூசையிடும் உத்திர விழா
  • ஒலி விழா – ஆரவார விழா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
திருமுறைகள் எத்தனை? தொகுத்தவர் யார்?
Answer:
திருமுறைகள் – 12, தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி.

Question 5.
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் திருமுறையில் எந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன?
Answer:
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடியவை.

Question 6.
சம்பந்தர் பாடலில் விரவிக் கிடக்கும் செய்திகள் சில கூறுக.
Answer:

  • சமயக் கோட்பாடுகள்.
  • இசை தத்துவம்.
  • தமிழுக்கு இருந்த உயர்நிலை.
  • சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

சிறுவினா

Question 1.
திருஞானசம்பந்ார் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் – சம்பந்தன்
பிறப்பு – சீர்காழி
பெற்றோர் – சிவபாதவிருதயர் – பகவதி அம்மையார்
காலம் – 7ஆம் நூற்றாண்டு
சிறப்பு – அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர். முதல் மூன்று திருமுறைகள் எழுதியவர்.

Question 2.
தேவாரம் – குறிப்பு வரைக.
Answer:

  • தேவாரம் – தே + வாரம் – பாமாலை; தே + ஆரம் – பூமாலை.
  • அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • தேவாரம் மொத்தப் பாடல்கள் – 8227.
  • நம் பாடப்பகுதி முதல் மூன்று திருமுறையில் இரண்டாவது திருமுறை சம்பந்தர் பாடிய திருமயிலாப்பூர் பதிகம்.
  • தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி,

Question 3.
மயிலாப்பூரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:

  • மடலார்ந்த தெங்கின் மயிலை
  • இருளகற்றும் சோதித் தொன்மயிலை
  • கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
  • கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
  • கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
  • மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
  • ஊர்திரை வேலை உலாவும் உயர்மலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களைக் குறிப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம் 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.2 தெய்வமணிமாலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.2 தெய்வமணிமாலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 1.
தெய்வமணிமாலைப் பாடல் கருத்துகளுக்கு இணையான திருக்குறள்களைத் தொகுத்துத் தருக.
Answer:
புறம்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும் (குறள் – 183)

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது (குறள் – 811)

பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (குறள் – 6)

இனையர்இவர் எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. (குறள் – 790)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3)

அந்தணர் என்போர் அறவோர்மற்(று) எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ – இத்தொடர் உணர்த்தும் பண்பு
அ) நேர்மறைப் பண்பு
ஆ) எதிர்மறைப் பண்பு
இ) முரண்பண்பு
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஆ) எதிர்மறைப் பண்பு

குறுவினா

Question 1.
‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ தொடருக்குப் பதவுரை எழுதுக.
Answer:
அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

சிறுவினா

Question 1.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:
(i) சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

(iii) சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள்புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்.

(iv) நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடையவனாக இருக்க வேண்டும் என்று கந்தகோட்டத்துக் கந்தவேளிடம் இராமலிங்கர் வேண்டுகிறார்.

நெடுவினா

Question 1.
சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தக்கோட்டப்பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப் படுகின்றன?
Answer:
மயிலாப்பூர்:
(i) இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.

(ii) அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும் மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா அன்று முதல் இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. அவ்விழாவினைக் கண்குளிரக் காண வேண்டும்.

கந்தகோட்டம்:
(i) அறம் செய்வோர்கள் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே!

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகரின் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

(iii) உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும். சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்ற எனக்கு அருள வேண்டும். மதப்பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.

(iv) நல்ல அறிவும், கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும். ஆறுமுகங்கள் உடைய தெய்வமாகிய மணியே இத்தகைய சிறப்புகளை எனக்கு அருள்வாயாக என்று கந்தகோட்டத்தில் பெருமானிடம் வேண்டுகிறார்.

இலக்கணக் குறிப்பு

மலரடி – உவமைத்தொகை
மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வளர்தலம் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

நினைக்கின்ற = நினை + க் + கின்று + அ
நினை – பகுதி
க் – சந்தி
கின்று – நிகழ்கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பேசுவார் = பேசு + வ் + ஆர்
பேசு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

வைத்து = வை + த் + த் + உ
வை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

புணர்ச்சி விதி

1. உள்ளொன்று = உள் + ஒன்று

  • ‘தனிக்குறில் முன் உயிர்வரின் ஒற்று இரட்டும்’ என்ற விதிப்படி, உள்ள + ஒன்று என்றானது.
  • ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ள் + ஒ = ளொ) உள்ளொன்று எனப் புணர்ந்தது.

2. ஒருமையுடன் = ஒருமை + உடன்

  • ‘இஈஐ வழி யவ்வும்’ என்ற விதிப்படி, ஒருமை + ய் + உடன் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ (ய் + உ = யு) ஒருமையுடன் என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தியவர்
அ) வள்ளலார்
ஆ) ஞானியாரடிகள்
இ) கிருபானந்த அடிகள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) வள்ளலார்

Question 2.
வள்ளலாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது
அ) வள்ளுவர் கோட்டம்
ஆ) கந்த கோட்டம்
இ) தில்லை கோட்டம்
ஈ) கணபதி கோட்டம்
Answer:
ஆ) கந்த கோட்டம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 3.
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம்
அ) சென்னை
ஆ) வடலூர்
இ) கடலூர்
ஈ) சிதம்பரம்
Answer:
அ) சென்னை

Question 4.
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் என்று பாடியவர்
அ) இராமலிங்க அடிகள்
ஆ) ஞானியாரடிகள்
இ) தாயுமானவர்
ஈ) திரு.வி.க.
Answer:
அ) இராமலிங்க அடிகள்

Question 5.
தெய்வமணிமாலையின் பாவகை
அ) கலி விருத்தம்
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஈ) பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Answer:
ஈ) பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Question 6.
துறவுக்கு எதிரான ஆசை என்று வள்ளலார் குறிப்பிடுவது.
அ) மண்ணாசை
ஆ) பெண்ணாசை
இ) பொன்னாசை
ஈ) புகழாசை
Answer:
ஆ) பெண்ணாசை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) மலரடி – 1. பெயரெச்சம்
ஆ) மறவா – 2. வினையெச்சம்
இ) வளர்தலம் – 3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) நினைக்கின்ற – 4. வினைத்தொகை
உ) வைத்து – 5. உவமைத்தொகை

அ) 5, 3, 4, 1, 2
ஆ) 4, 3, 5, 2, 1
இ) 2, 1, 3, 5, 4
ஈ) 5, 2, 1, 3, 4
Answer:
அ) 5, 3, 4, 1, 2

Question 8.
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ……………. திருமுறையில் இடம்பெற்றுள்ளது தெய்வமணிமாலை.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
இ) ஐந்தாம்

Question 9.
இராமலிங்க அடிகள் பிறந்த ஊர்
அ) சிதம்பரத்தை அடுத்த மருதூர்
ஆ) கடலூரை அடுத்த வடலூர்
இ) தஞ்சையை அடுத்த வல்லம்
ஈ) மயிலாடுதுறையை அடுத்த தேரழந்தூர்
Answer:
அ) சிதம்பரத்தை அடுத்த மருதூர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 10.
திருவருட்பா ………….. திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) நான்கு
ஆ) ஆறு
இ) பன்னிரு
ஈ) பதினாறு
Answer:
இ) பன்னிரு

Question 11.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களின் ஆசிரியர்
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) திரு.வி.க.
Answer:
ஆ) இராமலிங்க அடிகள்

குறுவினா

Question 1.
இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்.

Question 2.
இராமலிங்க அடிகளாரின் சீர்த்திருத்த சிந்தனை யாவை?
Answer:
ஆன்ம நேயம், சமய ஒருமைப்பாடு, ஒளி வழிபாடு.

Question 3.
இராமலிங்க அடிகளார் திருவருட்பா மூலம் வெளிப்படுத்தும் செய்தி யாது?
Answer:

  • வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்.
  • ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 4.
வள்ளலார் தெய்வமணிமாலை எங்கு வீற்றிருக்கும் இறைவன் மீது பாடியுள்ளாா?
Answer:
சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமான் மீது பாடியுள்ளார்.

Question 5.
திருவருட்பா – குறிப்பு வரைக.
Answer:

  • திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • திருவருட்பா – 5818 பாடல்கள்.
  • பா – ஆசிரியவிருத்தம்.
  • தொகுப்பு – ஆறு திருமுறை.
  • பாடப்பகுதி – ஐந்தாம் திருமுறை – தெய்வமணிமாலை.

சிறுவினா

Question 1.
வள்ளலார் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் – இராமலிங்க அடிகளார்
பெற்றோர் – இராமையா – சின்னமை
உடன்பிறந்தோர் – சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை சுந்தராம்பாள்
பிறப்பு – அக்டோபர் 5, 1823
ஊர் – மருதூர் – சிதம்பரம்
சிறப்பு – ஆன்மீகவாதி, சத்திய ஞான சபையை நிறுவியவர்.
முழக்கம் – அருட்பெருஞ்ஜோதி-தனிபெருங்கருணை வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.1 மதராசப்பட்டினம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.1 மதராசப்பட்டினம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 1.
ஒரு திட்டமிட்ட பெருநகரம் உருவாவதற்கு நீவிர் தரும் பரிந்துரைகளை, ‘கனவு நகரம்’ என்னும் தலைப்பில் ஒப்படைவாக உருவாக்குக.
Answer:
கனவு நகரம்

(i) தமிழகத்தின் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவது. இதற்காக நாவல்பட்டு கிராமம் ஒன்றையும் உருவாக்கினர். ஆனால் அந்தக் கனவு திட்டம் இன்று காலாவதியாகிவிட்டது. அத்திட்டத்தைப் பரிந்துரை செய்து நிறைவேற்றுவதே என் கனவு.

(ii) திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றி நாவல்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கரில் அண்ணா நகர் பகுதியைத் துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினோம். பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கு வசதி செய்யப்பட்டு அகலமான சாலைகள், ஆரம்ப சுகாதார திட்டம் உள்ளிட்ட பசுமை தொழிற்சாலைகள், தரமான கல்வி நிலையங்களின் பாதாள சாக்கடைகள் அமைக்க வேண்டும்.

(iii) பாதாள சாக்கடை நீரைச் சுத்தம் செய்ய தனி இயந்திரம், இயற்கை வேளாண் அங்காடி, குளிரூட்டப்பட்ட நூலகம் சிறாருக்கான தனி நூலகம் எனத் தனி தனியாக நூலகங்கள் அமைக்க வேண்டும்.

(iv) நெகிழி இல்லாத நகரமாகவும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாகவும் உருவாக்க வேண்டும்.
(v) வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
(vi) தடையற்ற மின்சாரம், தூய்மையான குடிநீர்; பாதுகாப்பு வசதி போன்ற வசதிகள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்வேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் –
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ, ஆ, இ அனைத்தும்
Answer:
ஈ) அ, ஆ, இ அனைத்தும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 2.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவோ இருந்தது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி காரணம் சரி
Answer:
ஈ) கூற்று சரி காரணம் சரி

Question 3.
பொருத்துக.
அ) திருவல்லிக்கேணி ஆறு – 1. மாவலிபுரச் செலவு
ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2. கல்கோடரி
இ) பல்லாவரம் – 3. அருங்காட்சியகம்
ஈ) எழும்பூர் – 4. கூவம்

அ) 1, 2, 4, 3
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 4, 1, 2, 3

குறுவினா

Question 1.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
Answer:

  • காலின் மெக்கன்சியின் தொகுப்புகளைக் கொண்டு 1869இல் உருவாக்கப்பட்ட நூலகம்.
  • ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் காணப்படுகிறது.

சிறுவினா

Question 1.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:

  • சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு.
  • அந்தப் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம்.
  • இந்திய சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றன.
  • ஆவணங்களை முறையாகக் கையாளும் ஆவணக் காப்பகம் (மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்) சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.
  • தென்னிந்திய வரலாற்றை, பண்பாட்டை அறிவதற்கு எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம் துணை நிற்கின்றன.
  • இந்தியாவின் பொதுநூலகம் கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

நெடுவினா

Question 1.
‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும்’ நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை :
ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு என்பதில் நான் பார்த்து வளர்ந்த சென்னை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சென்னை :
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் சென்னை இன்று தமிழகதெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். சென்னை இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்று மற்றும் தமிழகத்தின் தலைநகரம். சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன.

மானுட எச்சம் :
பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்று கிடைக்கும் மானுட எச்சங்கள் நமது பழமையை உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

பாடல் பெற்ற தலம் :
திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாக உள்ளன.

நீர்நிலை – வடிகால் :
வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென் சென்னைக்கு அடையாறு கீழே பாலாறு இவை நான்கும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய், காட்டன் கால்வாய் இருந்தன. 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் வடிகால் : பெற்றிருந்தது. ஆனால் அவை எங்கு போயின என்று தெரியவில்லை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

நகரம் – உருவாக்கம் :
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே உள்ள வீடுகள் இருந்த பகுதி வெள்ளை நகரம்’ என்றும் வெளியே இருந்த குடியிருப்பு ‘கருப்பர் நகரம்’ என்றும் அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் வணிகத்தையே செய்தது. இதனால் நெசவாளர்கள் சென்னையை நோக்கி வந்தனர். அவர்கள் வாழ்ந்த பகுதிதான் வண்ணத்துக்காரன் பேட்டை என்பது வண்ணாரப்பேட்டை என்றும் சின்னதறிப்பேட்டை சிந்தாதரிப் பேட்டை என்றும் தோன்றியது. வடசென்னையை மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னையை சென்னைப்பட்டினம் என்றனர். ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். அது இன்று சென்னையாக உள்ளது. ஆங்கிலேயரின் அதிகார மையமான இந்நகரம் ஆங்கிலேயரை எதிர்க்க முதல் தளமாக அமைந்த நகரமாக விளங்கியது.

கல்லூரிகள் – பள்ளிகள் :

  • 1715இல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’.
  • 1812இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி.
  • 1837இல் உருவான கிறிஸ்துவக் கல்லூரி.
  • 1840இல் பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி).
  • 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம்.
  • 1914இல் உருவான இராணிமேரிக் கல்லூரி.

போன்ற கல்லூரி பழமை வாய்ந்து அறிவின் நகரமாக விளங்குகிறது.

பண்பாட்டு அடையாளங்கள் :
சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குவது கடினம். இந்திய சாரசனிக் கட்டடக்கலை இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட கட்டடங்களாகத் தமிழ்நாடு ஆவணக் காப்பகம், எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றவை விளங்குகின்றன.

நம் சென்னை (இன்றைய சென்னை:
இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஏற்படுத்தி நேரடி, மறைமுக வாய்ப்புகள் உருவாகின்றன. கணினி மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் இன்று சென்னை: முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. : மின்னணுப் பொருள்கள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

முடிவுரை:
இத்தகு பெருமைகொண்ட சென்னை நகரம் நான் பார்த்து வாழ்ந்த காலகட்டத்தில் :(203) பெருமைகொண்ட பழமையைப் பறைசாற்றும் நகரமாக விளங்குகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம்
அ) மதராசப்பட்டினம்
ஆ) காவிரிபூம்பட்டினம்
இ) புதுச்சேரி
ஈ) கொற்கை
Answer:
அ) மதராசப்பட்டினம்

Question 2.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது
அ) திருப்பதி
ஆ) சென்னை
இ) திருவனந்தபுரம்
ஈ) கன்னியாகுமரி
Answer:
ஆ) சென்னை

Question 3.
தமிழகத்தின் தலைநகரம்
அ) மதுரை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
ஈ) சென்னை
Answer:
ஈ) சென்னை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 4.
சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி நிறுவுவது
அ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
இ) அப்பகுதிகளில் மனித வாழ்வு நடைபெறவில்லை என்பதை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை

Question 5.
சென்னையில் ஓடக்கூடிய ………….. படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
அ) அடையாற்றுப்
ஆ) பாலாற்றுப்
இ) கூவமாற்றுப்
ஈ) கொற்றலையாற்றுப்
Answer:
ஈ) கொற்றலையாற்றுப்

Question 6.
இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கல்கோடரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
அ) கூடுவாஞ்சேரி
ஆ) பல்லாவரம்
இ) புழல்
ஈ) மயிலாப்பூர்
Answer:
ஆ) பல்லாவரம்

Question 7.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ என்னும் துறைமுகமாகச் சுட்டப்படும் சென்னையின் இன்றைய ஒரு பகுதி
அ) திருவல்லிக்கேணி
ஆ) மீனம்பாக்கம்
இ) மயிலாப்பூர்
ஈ) வடபழனி
Answer:
இ) மயிலாப்பூர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 8.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை …………… காலத்தில் அமைக்கப்பட்டது.
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
இ) முதலாம் நந்திவர்மன்
ஈ) மூன்றாம் நந்திர்வமன்
Answer:
அ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 9.
சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு
அ) பல்லாவரம் கல்வெட்டு
ஆ) திருவல்லிக்கேணி கல்வெட்டு
இ) மயிலாப்பூர் கல்வெட்டு
ஈ) மாதவரம் கல்வெட்டு
Answer:
அ) பல்லாவரம் கல்வெட்டு

Question 10.
சென்னையில் நந்திவர்மன் கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ள இடம்
அ) பல்லாவரம்
ஆ) மாதவரம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) வடபழனி
Answer:
இ) திருவல்லிக்கேணி

Question 11.
வள்ளல் பச்சையப்பர் ……….. நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக ஒரு குறிப்பு, அவரது நாட்குறிப்பில் உள்ளது.
அ) கூவம்
ஆ) அடையாறு
இ) கொற்றலையாற்று
ஈ) பாலாற்று
Answer:
அ) கூவம்

Question 12.
பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்தவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) காமராசர்
Answer:
ஆ) பாரதிதாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 13.
சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும் – என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஈ) பாரதிதாசன்

Question 14.
கி.பி. 1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் ”தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்’ என்று காணப்படும் குறிப்பால் அறியப்படும் செய்தி
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு
ஆ) வளமிகு சென்னையின் வணிக மேம்பாடு
இ) சென்னை மக்களின் செல்வ வாழ்க்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு

Question 15.
மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியை ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) கால்பர்ட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் பிட்
Answer:
அ) பிரான்சிஸ் டே

Question 16.
கூவம் ஆற்றை …………… என்றும் அழைத்தனர்.
அ) வடபழனி ஆறு
ஆ) திருவல்லிக்கேணி ஆறு
இ) மாதவரம் ஆறு
ஈ) பல்லாவரம் ஆறு
Answer:
ஆ) திருவல்லிக்கேணி ஆறு

Question 17.
பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னை – 1. பாலாறு
ஆ) தென்சென்னை – 2. கூவம்
இ) மத்திய சென்னை – 3. அடையாறு
ஈ) தென்சென்னைக்கும் கீழ் – 4. கொற்றலையாறு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 18.
பிரான்சிஸ் டே மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைச் சென்னப்பரின் இருமகன்களிடமிருந்து வாங்கிய நாள்
அ) 22.08.1639
ஆ) 23.09.1739
இ) 23.08.1640
ஈ) 24.10.1642
Answer:
அ) 22.08.1639

Question 19.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே இருந்த பகுதி …………….. என்று அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கோட்டைநகரம்
இ) தமிழர் நகரம்
ஈ) கருப்பர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

Question 20.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்தகுடியிருப்புகள்…………..என அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கருப்பர் நகரம்
இ) கோட்டை நகரம்
ஈ) தமிழர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

Question 21.
பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னைப் பகுதிகள் – 1. மதராஸ்
ஆ) தென்சென்னைப் பகுதிகள் – 2. மதராசப்பட்டினம்
இ) ஆங்கிலேயர்கள் – 3. சென்னைப்பட்டினம்

அ) 2, 3, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 3, 2, 1
Answer:
அ) 2, 3, 1

Question 22.
1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னைநகரின் மக்கள் தொகை
அ) 18,000
ஆ) 25,000
இ) 19,000
ஈ) 29,000
Answer:
இ) 19,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 23.
சென்னை நகராட்சி உருவாக்கபப்ட்ட ஆண்டு
அ) 1639
ஆ) 1646
இ) 1688
ஈ) 1768
Answer:
இ) 1688

Question 24.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் தலைவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) தானியேல்
Answer:
ஆ) எலி யேல்

Question 25.
எலியேலைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தின் தலைவரானவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) தாமஸ் பிட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் மன்ரோ
Answer:
ஆ) தாமஸ் பிட்

Question 26.
……………… ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) இராபர்ட் கிளைவ்
Answer:
இ) தாமஸ் பிட்

Question 27.
சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றிய நூற்றாண்டு
அ) கி.பி. 17
ஆ) கி.பி. 16
இ) கி.பி. 18
ஈ) கி.பி. 19
Answer:
இ) கி.பி. 18

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 28.
ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1615
ஆ) 1635
இ) 1675
ஈ) 1715
Answer:
ஈ) 1715

Question 29.
பொருத்திக் காட்டுக.
அ) சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1) 1914
ஆ) கிறித்தவக் கல்லூரி – 2) 1857
இ) பிரசிடென்சி கல்லூரி – 3) 1840
ஈ) சென்னைப் பல்கலைக்கழகம் – 4) 1837
உ) இராணிமேரி கல்லூரி – 5) 1912

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ ) 2, 3, 1, 5, 4
ஈ) 2, 3, 4, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 30.
ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்
அ) இராணிமேரிக் கல்லூரி
ஆ) பச்சையப்பன் கல்லூரி
இ) சென்னைக் கோட்டைக் கல்லூரி
ஈ) கிறித்துவக்கல்லூரி
Answer:
ஆ) பச்சையப்பன் கல்லூரி

Question 31.
இந்தோ -சாரசனிக் கட்டடப் பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம்
அ) சேப்பாக்கம் அரண்மனை
ஆ) சென்னைப்பல்கலைக்கழகம்
இ) ரிப்பன் கட்டடம்
ஈ) விக்டோரியா அரங்கு
Answer:
அ) சேப்பாக்கம் அரண்மனை

Question 32.
இந்தியாவின் முதல் பொதுநூலகம்
அ) சரசுவதிமகால் நூலகம்
ஆ) கொல்கத்தா நூலகம்
இ) கன்னிமாரா நூலகம்
ஈ) திருவனந்தபுரம் நூலகம்
Answer:
இ) கன்னிமாரா நூலகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 33.
அண்ணாசாலைக்கு (மவுண்ட் ரோடு) அடுத்ததாக மதராசப்பட்டினத்தின் மற்றொரு முக்கியமான சாலை ………………. நெடுஞ்சாலையாகும்.
அ) பூவிருந்தவல்லி
ஆ) திருவொற்றியூர்
இ) சிந்தாதிரிப்பேட்டை
ஈ) மவுலிவாக்கம்
Answer:
அ) பூவிருந்தவல்லி

Question 34.
1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்
அ) எழும்பூர்
ஆ) கிண்டி
இ) இராயபுரம்
ஈ) திருவான்மியூர்
Answer:
இ) இராயபுரம்

Question 35.
ஆங்கிலேயருக்கும் சென்னை மாநகருக்கும் ஏறத்தாழ 300 ஆண்டுகாலமாக இருந்த உறவு முடிவுக்கு வந்த நாள்
அ) 1942 அக்டோபர் 2
ஆ) 1945 ஜூன் 15
இ) 1947 ஆகஸ்ட் 15
ஈ) 1950 ஜனவரி 26
Answer:
இ) 1947 ஆகஸ்ட் 15

Question 36.
பொருத்திக் காட்டுக.
அ) சென்னை இலக்கியச் சங்கம் – 1) 1869
ஆ) கன்னிமாரா நூலகம் – 2) 1812
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 3) 1860
ஈ) அண்ணா நூற்றாண்டு நூலகம் – 4) 2010

அ) 2, 3, 1, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 3, 1, 4

Question 37.
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) சரசுவதி மகால் நூலகம்
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
ஈ) சென்னை இலக்கியச் சங்கம்
Answer:
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 38.
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) திருவனந்தபுரம் நூலகம்
இ) சரசுவதிமகால் நூலகம்
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்
Answer:
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்

குறுவினா

Question 1.
சென்னை நகராட்சி, மாகாணம் உருவான அமைப்பை விளக்குக.
Answer:
நகராட்சி : 1646ஆம் ஆண்டின் நகரின் மக்கள் தொகை 19000. இதை அறிந்து 1688இல் நகராட்சி உருவாக்கப்பட்டது.

மாகாணம் :

  • ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாக தென்னிந்தியாவில் பல பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மாகாணத்தை உருவாக்கினர்.
  • தலைவர் – எலி யேல் அவரைத் தொடர்ந்து தாமஸ் பிட். இவரது ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம் என்பர்.

Question 2.
மல்லியர்பா – விளக்குக.
Answer:
தொல் பழங்கால மானுட எச்சங்களை உணர்த்தும் பழமையான சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சூட்டப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 3.
சென்னை – ஓர் காட்டுமரம் விளக்குக.
Answer:
(i) இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடித்தளமாகவும், அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம் மதராசப்பட்டினம்.

(ii) அது இன்று பரப்பரப்பானசென்னைமாநகரமாக வளர்ந்திருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்படாத இந்நகரம் காட்டுமரம் போல் தன் மனம் போன போக்கில் வளர்கிறது.

(iii) அதனால் சென்னை ஓர் காட்டுமரம் என்பது சாலப் பொருந்தும்.

Question 4.
சென்னை நகரின் பழமையான கோயில்களை குறிப்பிடுக.
Answer:
திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவான்மியூர், மயிலாப்பூர் இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் பெற்ற தளங்கள் ஆகும்.

Question 5.
சென்னை என்ற பெயர் வளர்ச்சி பெற்றதனை விளக்குக.
Answer:

  • வடசென்னைப் பகுதியை மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதியை சென்னைப்பட்டினம் என்றும் அமைத்தனர்.
  • ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று பெயர் சூட்டினர்.
  • மதராஸ் பின்பு மெட்ராஸ் ஆகியது.
  • இன்று சென்னை என்று பெருமையோடு விளங்குகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 6.
மெட்ராஸ் ரெக்காட் ஆபீஸ் – குறிப்பு வரைக.
Answer:
ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது. சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
சென்னைக்கு இயற்கை கொடுத்த வடிகால்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:

  • வடசென்னை – கொற்றலையாறு, தென்சென்னை, அடையாறு.
  • மத்திய சென்னை – கூவம், பாலாறு.

இவை நான்கையும் இணைப்பது, பக்கிங்காம் கால்வாய்.

Question 8.
சென்னை நகரில் காணப்படும் சில கால்வாய்களைக் கூறுக.
Answer:
காட்டன் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக் கால்வாய்.

Question 9.
சென்னையில் அக்காலத்தில் வடிகால்களாக எத்தனை பெரிய ஓடைகள், சிறிய ஓடைகள் காணப்பட்டன?
Answer:

  • 18 பெரிய ஓடைகள், 540 சிறிய ஓடைகள்.
  • மழைநீர் சிறிய ஓடைகள் வழியாக பெரிய ஓடைகளை அடைந்து பிறகு ஆறுடன் சேர்ந்து கடலில் கலக்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 10.
பாரதிதாசன் பக்கிங்காம்கால்வாயில் படகுப் பயணம் செய்தவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Answer:
மயிலை சீனி. வேங்கடாசாமி, ப. ஜீவானந்தம்

Question 11.
கூவம் நதியில் குளித்துவிட்டு கோயிலில் வழிபட்டவர் யார்?
Answer:
வள்ளல் பச்சையப்பர் கூவம் நதியில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலில் வழிபட்டவர் ஆவார்.

Question 12.
சென்னையில் கிழக்கிந்திய நிறுவனம் கால்பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்றிருந்த கிராமங்கள் யாவை?
Answer:
சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 13.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி, வெளியே குடியிருப்புகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:

  • வெள்ளையர் நகரம் = உள்ளே வீடுகள் இருந்த பகுதி.
  • கருப்பர் நகரம் = வெளியே குடியிருப்புகள் இருந்த பகுதி.

Question 14.
மதராசப்பட்டினம் என்று அழைக்கப்படும் பகுதி எது?
Answer:
உள்ளே வீடுகள் இருந்த பகுதி வெள்ளையர் நகரமும், வெளியே உள்ள குடியிருப்பு பகுதி கருப்பர் நகரமும் இணைந்த பகுதி. மதராசப்பட்டினம் என்று அழைப்பர்.

Question 15.
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் யாது?
Answer:
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் துணி வணிகம் ஆகும்.

சிறுவினா

Question 1.
சென்னை தொன்மைய வாய்ந்த நகரம் என்பதுற்குச் சான்று தருக.
Answer:
(i) சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதியில் மேற்கொண்ட அகழாய்வு. கொற்றலையாற்றுப் படுகை. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி.

(ii) கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்னும் கிடைக்கும் மானுட எச்சம்.

(iii) மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் மல்லியர்பா எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டது. திருநெல்வேலிக்கேணியில் கிடைத்த நந்திவர்மன் கல்வெட்டு
போன்றவை சென்னையின் தொன்மையை விளக்கும் சான்றாக அமைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 2.
சென்னை அறிவின் நகரம் என்பதற்குச் சான்று தருக.
Answer:

  • 18ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனம் தோன்றின.
  • 1715இல் புனித மேரி தேவாலய தர்மப்பள்ளி
  • 1812 சென்னைக் கோட்டைக் கல்லூரி
  • 1840 மாநிலக் கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி)
  • 1857 சென்னைப் பல்கலைக்கழகம்
  • 1914 இராணிமேரி கல்லூரி

இவை மட்டுமல்லாமல் ஆங்கிலேயரின் உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்லூரியாக பச்சையப்பன் கல்லூரி விளங்குகிறது. மருத்துவக் கல்லூரி, கவின்கலைக் கல்லூரி போன்ற பல்துறை சார்ந்த கல்லூரிகள் இங்குள்ளன.

Question 3.
இந்தோ -சாரசனிக் கட்டடக்கலை – விளக்குக.
Answer:
முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி. இவை மூன்றையும் கலந்து உருவாக்கப்பட்ட கட்டடக்கலை.
சான்று:

  • 1768இல் உருவான சேப்பாக்கம் அரண்மனை
  • மத்தியத் தொடர்வண்டி நிலையம்
  • எழும்பூர் தொடர்வண்டி நிலையம்
  • உயர்நீதிமன்றம்
  • ரிப்பன் கட்டடம்
  • விக்டோரியா அரங்கு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 4.
மதராசப்பட்டினத்தின் போக்குவரத்துப் பற்றி சில சான்றுகள் தருக.
Answer:
நடந்து சென்றபாதை, மாட்டுவண்டிகள் சென்ற பாதை ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு சாலைகளாக மாறின.

  • சென்னை அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) அடுத்ததாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை.
  • 1856 உருவான இராயபுரத்தில் உருவான தொடர் வண்டி நிலையம்.
  • சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம்.
  • எழும்பூர் தொடர் வண்டி நிலையம்.

Question 5.
சென்னையின் பழமை, அறிவுப் புரட்சி போன்றவற்றை சான்றுடன் நிறுவுக.
Answer:

  • சென்னை இலக்கிய சங்கம் 1812ல் உருவான நூலகம்.
  • 1860இல் கன்னிமாரா நூலகம் அருகங்காட்சியகமாக தொடங்கப்பட்டு இந்தியாவின் முதல் பொது நூலகம் என்ற பெருமை பெறுகிறது.
  • 1869இல் உருவான கீழ்த்திசைச் சுவடி நூலகம்.2010இல் உருவான ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • தமிழாய்வு நூலகம்.
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்.
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
  • மறைமலையடிகள் நூலகம்.
  • செம்மொழித் தமிழாய்வு நூலகம்.
  • உ.வே.சா நூலகம் போன்றவை.

சென்னையின் பழமையையும் அறிவுப் புரட்சியையும் விளக்குவதாக அமைகிறது.