Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.2 ஏதிலிக்குருவிகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

குறுவினா

Question 1.
ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?
Answer:

  • மரங்கள் வெட்டப்பட்டதால், காடுகள் அழிந்து போயின.
  • மழை பெய்யவில்லை. மண்வளம் குன்றியது.
  • இயற்கைச்சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதால், வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘அழகிய பெரியவன்’ – குறிப்பு வரைக.
Answer:

  • அழகிய பெரியவன், வேலூர் மாவட்டம் பேரணாம்பட் சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன்.
  • அரசுப் பள்ளி ஆசிரியர்; நாவல், சிறுகதை, கவிதை கட்டுரை படைப்பவர்.
  • ‘தகப்பன் கொடி’ புதினத்திற்குத் தமிழக அரசின் விருது பெற்றவர்.
  • குறடு, நெரிக்கட்டு, உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு, மீள்கோணம், பெருகும் வேட்கை ஆகியன, இவர் படைப்புகள்.

Question 3.
‘ஏதிலிக்குருவிகள்’ காட்சிப்படுத்தும் அவலம் யாது?
Answer:

  • இயற்கைச் சூழலே உயிர்களின் இருப்பை முடிவு செய்கிறது.
  • இயற்கைக்கும் மனிதர்க்குமான தொப்புள்கொடி மழைத்துளிகள்.
  • முதல்துளி விழுகையில், உயர்கள் மலர்கின்றன.
  • ‘ஏதிலிக்குருவிகள்’ கவிதை, சூழலியல் மாற்றத்தால் நிகழ்கிற அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

சிறுவினா

Question 4.
காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?
Answer:

  • சிற்றூர்களால் கூரை வேய்ந்த வீடுகள் இருந்த காலத்தில், நீர்வளம் கரைபுரண்டது; மரங்கள் நிறைந் திருந்தன; அவற்றில் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்தன.
  • தூக்கணாங் குருவிகள் கட்டிய கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் அசைந்தன; அவை, தூக்கணாங் குருவிகளின் வீடுகளாகும்.
  • இன்று மண்வளம் குறைந்தது; தாய்மடி சுரக்காததால், அதில் வாழ்ந்த உயிரினங்கள் மறைந்து போயின என்பதை, அழகிய பெரியவன் ஒப்பீடு செய்கிறார்.

கூடுதல் வினா

Question 1.
‘ஏதிலிக்குருவிகள்’ கவிதையால் பெறப்படும் செய்தி யாது?
Answer:

  • ஊரில், இன்று குருவிகளையும் கூடுகளையும் பார்க்க இயலவில்லை. முன்பு அடைமழை என்றால் ஆற்றில் நீர் புரளும். கரைகளில் நின்ற நெடுமரங்களில் பறவைகள் குரலெழுப்பும்.
  • நடந்து போகும் வழிகளில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் ஆடும். சிட்டுக் குருவிகள் மூங்கில் கிளைகளில் அமர்ந்து, சுழித்தோடும் நீருடன் பாடிக்கொண்டிருக்கும்.
  • இன்றோ, மரங்கள் வெட்டுண்டன; வானமோ பொய்த்தது; மண்ணோ மறுகிவிட்டது. குருவிகள் வாழ வழியின்றி அகதிகளாய் எங்கோ போய்விட்டன என்பதே கவிதைச் செய்தியாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

இலக்கணக்குறிப்பு

பார்க்க – வினையெச்சம்
மழைக்காலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
நெடுமரம் – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

1. பார்க்க – பார் + க் + க் + அ
பார் – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, அ – வினையெச்ச விகுதி.

2. சுரந்த – சுர + த் (ந்) + த் + அ
சுர – பகுதி, த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

3. பொய்த்தது – பொய் + த் + த் + அ + து
பொய் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – சாரியை,
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

4. மறுகியது – மறுகு + இ (ன்) + ய் + து
மறுகு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ‘ன’ கரம் புணர்ந்து கெட்டது,
ய் – உடம்படுமெய் சந்தி, து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

புணர்ச்சி விதிகள்

1. மழைக்காலம் – மழை + காலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிரம் (பழைக்காலம்)

2. கரையெல்லாம் – கரை + எல்லாம்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (கரை + ய் + எல்லாம்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (கரையெல்லாம்)

3. நெடுமரம் – நெடுமை + மரம்
“ஈறுபோதல்” (நெடுமரம்)

4. வழியெல்லாம் – வழி + எல்லாம்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (வழி + ய் + எல்லாம்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்று பது இயல்பே” (வழியெல்லாம்)

5. காலமது – காலம் + அது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலமது)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
அ) ஏதிலிக் குருவிகள் – மரபுக் கவிதை
ஆ) திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
இ) பானை டாக்டர் – குறும் புதினம்
ஈ) ஐங்குறுநூறு – புதுக்கவிதை
Answer:
இ) யானை டாக்டர் – குறும் புதினம்

கூடுதல் வினா

Question 2.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) ஏதிலிக்குருவிகள் – 1. பேயனார்
ஆ) திருமலை முருகன் பள்ளு 2. ஜெயமோகன்
இ) ஐங்குறு நூறு – 3. அழகிய பெரியவன்
ஈ) யானை டாக்டர் – 4. பெரியவன் கவிராயர்
i) 1 3 4 2
ii) 1 2 4 3
iii) 3 4 1 2
iv) 3 2 1 4
Answer:
iii) 3 4 1 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

Question 3.
அழகிய பெரியவன் இயற்பெயர்……………..
அ) ராசேந்திரன்
ஆ) ராசகோபாலன்
இ) அரவிந்தன்
ஈ) வில்வரத்தினம்
Answer:
இ) அரவிந்தன்

Question 4.
அழகிய பெரியவன் ஊர் ……………
அ) யாழ்ப்பாணம் கொக்குவில்
ஆ) ஈரோடு மாவட்ட மேட்டுப் புதூர்
இ) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு
ஈ) சென்னிகுளம் கழுகுமலை
Answer:
இ) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

Question 5.
அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல் …………………
அ) குறடு
ஆ) நெறிக்கட்டு
இ) வடக்குவீதி
ஈ) தகப்பன் கொடி
Answer:
ஈ) தகப்பன் கொடி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.3 பேசும் ஓவியங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ……………….
அ) மண்துகள்
ஆ) நீர் வண்ண ம்
இ) எண்ணெய் வண்ணம்
ஈ) கரிக்கோல்
Answer:
அ) மண்துகள்

Question 2.
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ………….
அ) குகை ஓவியம்
ஆ) சுவர் ஓவியம்
இ) கண்ணாடி ஓவியம்
ஈ) கேலிச்சித்திரம்
Answer:
ஈ) கேலிச்சித்திரம்

Question 3.
‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) கோடு + ஓவியம்
ஆ) கோட்டு + ஓவியம்
இ) கோட் + டோவியம்
ஈ) கோடி + ஓவியம்
Answer:
ஆ) கோட்டு + ஓவியம்

Question 4.
‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) செப்பு + ஈடு
ஆ) செப்பு + ஓடு
இ) செப்பு + ஏடு
ஈ) செப்பு + யேடு
Answer:
இ) செப்பு + ஏடு

Question 5.
எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) எழுத்து ஆணி
ஆ) எழுத்தாணி
இ) எழுத்துதாணி
ஈ) எழுதாணி
Answer:
ஆ) எழுத்தாணி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ………………..
2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது …………………..
3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ………………….. மீது பொறித்துப் பாதுகாத்தனர்.
Answer:
1. பாரதியார்
2. துணி ஓவியம்
3. செப்பேடுகளில்

குறு வினா

Question 1.
ஓவியங்களின் வகைகள் யாவை?
Answer:
1. குகை ஓவியம்
2. சுவர் ஓவியம்
3. துணி ஓவியம்
4. ஓலைச்சுவடி ஓவியம்
5. செப்பேட்டு ஓவியம்
6. தந்த ஓவியம்
7. கண்ணாடி ஓவியம்
8. தாள் ஓவியம்
9. கருத்துப்பட ஓவியம்
10. நவீன ஓவியம்

Question 2.
குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
Answer:
குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழர் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 3.
தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?
Answer:
கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டு தாள் ஓவியங்களை வரைவர்.

Question 4.
சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.
Answer:
அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களாகும்.

Question 5.
செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
Answer:
நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்.

சிறு வினா

Question 1.
கேலிச்சித்திரம் என்றால் என்ன?
Answer:
மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவதைக் கேலிச்சித்திரம் என்பர்.

Question 2.
ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
Answer:

  1. ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்.
  2. இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளைக் கொண்டு இருக்கும்.
  3. இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.

சிந்தனை வினா

Question 1.
தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?
Answer:
யானையின் தந்தங்கள் மீது வரையப்படும் ஓவியங்கள் தந்த ஓவியங்கள் ஆகும். இவ்வகை ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் யானைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது. எனவே, தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆய கலைகள் மொத்தம் ……………….
அ) 62
ஆ) 96
இ) 64
ஈ) 63
Answer:
இ) 64

Question 2.
பழந்தமிழரின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் ஓவியம் ……………
அ) குகை ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) குகை ஓவியம்

Question 3.
தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஓவியம் ………………..
அ) சுவர் ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) சுவர் ஓவியம்

Question 4.
தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வரும் ஓவியம் ………………..
அ) சுவர் ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
ஆ) துணி ஓவியம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 5.
கேரளாவில் அதிகம் காணப்படும் ஓவியம் ……………..
அ) தந்த ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) தந்த ஓவியம்

Question 6.
கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் காணப்படும் இடம் ……………….
அ) கோவை
ஆ) கேரளா
இ) தஞ்சாவூர்
ஈ) ஆந்திரா
Answer:
இ) தஞ்சாவூர்

Question 7.
கருத்துப்பட ஓவியம் முதன் முதலில் வெளிவந்த இதழ் ……………….
அ) எழுத்து
ஆ) இந்தியா
இ) விடுதலை
ஈ) கணையாழி
Answer:
ஆ) இந்தியா

குறுவினா

Question 1.
ஓவியம் வரையப் பயன்படும் துணியின் வேறுபெயர்கள் யாவை?
Answer:

  1. எழினி
  2. திரைச்சீலை
  3. கிழி
  4. படாம்

Question 2.
பசார் பெயிண்டிங் என்றால் என்ன?
Answer:
நாட்காட்டி ஓவியங்களை பசார் பெயிண்டிங் என்பர். இதன் முன்னோடி கொண்டையராஜு.

Question 3.
ஓவியத்தின் வேறுபெயர்கள் யாவை?
Answer:

  1. ஓவு
  2. ஓவம்
  3. சித்திரம்
  4. படம்
  5. படாம்
  6. வட்டிகைச் செய்தி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 4.
ஓவியம் வரைபவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:

  1. கண்ணுள்வினைஞர்
  2. ஓவியப் புலவர்
  3. கிளவி வல்லோன்
  4. சித்திரக்காரர்

Question 5.
புனையா ஓவியங்கள் பற்றிக் குறிப்பிடும் இலக்கியங்கள் யாவை?
Answer:

  1. நெடுநல்வாடை
  2. மணிமேகலை
  3. ஓவமாக்கள்
  4. வித்தகர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Question 1.
இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.
(எ.கா) மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது.
Answer:
ஆறு – எண் , நதி
அன்னம் – சோறு, பறவை
மதி – அறிவு, நிலவு
நகை – புன்னகை, அணிகலன்
மெய் – உடல், உண்மை
திங்கள் – மாதம், நிலவு
மாடு – விலங்கு, செல்வம்
தை – மாதம், தைத்தல்
பார் – உலகம், பார்த்ல்
திரை – கடல் அலை, திரைச்சீலை
படி – படித்தல், படிக்கட்டு
இசை – புகழ், சங்கீதம்
வேங்கை – மரம், விலங்கு
கிளை – மரக்கிளை, உறவு
மா – மாமரம், பெரிய
மறை – மறைத்தல், வேதம்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் ‘பரி’ என்பதன் பொருள் …………………
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
Answer:
ஆ) குதிரை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Question 2.
பொருந்தாத ஓசை உடைய சொல் ………………
அ) பாய்கையால்
ஆ) மேன்மையால்
இ) திரும்புகையில்
ஈ) அடிக்கையால்
Answer:
இ) திரும்புகையில்

Question 3.
‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) வண் + கீரை
ஆ) வண்ண ம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
Answer:
ஈ) வண்மை + கீரை

Question 4.
கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) கட்டியிடித்தல்
ஆ) கட்டியடித்தல்
இ) கட்டி அடித்தல்
ஈ) கட்டு அடித்தல்
Answer:
ஆ) கட்டியடித்தல்

சிறுவினா

Question 1.
கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும் 1
– இத்தகைய காரணங்களால் கீரைப்பாத்தியும் குதிரையும் ஒத்திருக்கின்றன.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?
Answer:
நான் குதிரையையும் ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும். தாக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காளமேகப்புலவரின் இயற்பெயர்
அ) வரதன்
ஆ) சுப்புரத்தினம்
இ) எத்திராசுலு
ஈ) சுப்ரமணியம்
Answer:
அ) வரதன்

Question 2.
தடுத்தல் என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) வண்கீரை
ஆ) பரி
இ) மறித்தல்
ஈ) முட்டப்போய்
Answer:
இ) மறித்தல்

குறுவினா

Question 1.
காளமேகப்புலவர் – பெயர்க்காரணம் யாது?
Answer:
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.

Question 2.
காளமேகப்புலவர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  1. திருவானைக்கா உலா
  2. சரசுவதி மாலை
  3. பரபிரம்ம விளக்கம்
  4. சித்திர மடல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Question 3.
காளமேகப் புலவர் கூறும் குதிரையில் இயல்புகள் யாவை?
Answer:

  1. வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
  2. கால் மாறி மாறிப் பாய்ந்து செல்லும்.
  3. எதிரிகளை மறித்துத் தாக்கும்.
  4. போக வேண்டிய இடம் முழுதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

Question 4.
இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
Answer:
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடுதல் இரட்டுற மொழிதல் ஆகும். இதனை சிலேடை என்றும் கூறுவர்.

சிறு வினா:

Question 1.
காளமேகப்புலவர் குறிப்பு வரைக.
Answer:

  1. காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
  2. மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
  3. திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  4. இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நுலில் இடம் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

காளமேகப்புலவர்
காளமேகப்புலவரின் இயற்பெயர்வரதன்.மேகம் மழைபொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நுலில் இடம் பெற்றுள்ளன. அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

1. வண்கீரை – வளமான கீரை
2. பரி – குதிரை
3. முட்டப்போய் – முழுதாகச் சென்று
4. கால் – வாய்க்கால், குதிரையின் கால்.
5. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப்பாத்தி கட்டுதல்). எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.1 இயற்கை வேளாண்மை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

குறுவினா

Question 1.
தமிழ்நாட்டின் மாநில மரம் – சிறு குறிப்பு வரைக.
Asnwer:

  • நம் தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.
  • இது, ஏழைகளின் கற்பக விருட்சம்.
  • சிறந்த காற்றுத் தடுப்பான்.
  • ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மையுடையது.

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘தொழுஉரம்’ என்பது என்ன?
Answer:

  • நன்செய்நிலத் தொழுஉரம் : மாட்டுச் சாணமும், கோமியமும் வைக்கோலுடன் கலந்து மக்கச்செய்து உருவாக்குவது.
  • புன்செய்நிலத் தொழுஉரம் : காய்ந்த இலை, சருகு, கால்நடைச் சாணத்தை எரிப்பதால் கிடைக்கும் சாம்பல் கலந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 3.
ஊடுபயிர் என்றால் என்ன?
Asnwer:

  • நெல் கதிர் சாயும்போது வயலில் ஊடுபயிராக உளுந்து போன்றவற்றை விதைப்பர்.
  • அவற்றின் வேர் முடிச்சுகளில் சேர்ந்திருக்கும் நைட்ரஜன், நிலத்தின் வளத்தைப் பெருக்கும்.

Question 4.
மதிப்புக் கூட்டுப் பொருள் என்பது யாது?
Answer:
ஒரு பொருளை மேம்படுத்தி, மாற்றுப் பொருளாக மாற்றுவதை மதிப்புக் கூட்டுப் பொருள் என அழைக்கின்றனர். பனைமரப் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி தயாரிப்பது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 5.
எதனால் மண் நஞ்சாகிப் போனது?
Answer:
விவசாயத்திற்கு வேதி உரம், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தியதனால், மண் நஞ்சாகிப் போனது.

Question 6.
நிலத்தை நஞ்சு நீக்கிச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?
Answer:
நஞ்சு நீக்கி நிலத்தைச் சரிசெய்ய, அறுவடை முடிந்ததும், வைக்கோலை வயலில் சமமாகப் பரப்பி மடியச் செய்து, மறுபருவம் வந்தவுடன் மழைநீரைத் தேக்கி உழவேண்டும்.

Question 7.
பூச்சிக் கொல்லியால் விளையும் கேடுகள் யாவை?
Answer:

  • பூச்சிக்கொல்லி, பயிரிலுள்ள பூச்சிகளைமட்டும் கொல்வதில்லை.
  • விளைபொருளுக்குள்ளும் அது ஊடுருவுகிறது. அந்த விளைபொருள்களை உண்ணும் மக்களுக்குப் புற்றுநோய், வயிற்றுப்புண், மலட்டுத்தன்மை முதலான நோய்கள் உண்டாகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 9.
எது இயற்கை வேளாண்மை?
Answer:
விதை விதைப்பதிலிருந்து விளைவை அறுவடை செய்கிறவரை, ஒட்டுமொத்தமாக வேதிப்பொருளான உரத்தையோ, பூச்சிக்கொல்லியையோ பயன்படுத்தாது இருப்பது, இயற்கை வேளாண்மையாகும்.

Question 10.
இயற்கை விவசாய பூச்சிக்கொல்லி பற்றி எழுதுக.
Answer:
வேப்பங்கொட்டை, நொச்சி இலை, பிரண்டை, கற்றாழை ஆகியவற்றை இடித்துக் கோமியத்தில் ஊறவைத்து எடுத்த சாற்றில், நீர் கலந்து, இயற்கை விவசாயப் பூச்சிக்கொல்லி தயாரிப்பர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 11.
நஞ்சை (நன்செய்) நிலத் தொழுஉரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
Answer:
தொழுஉரம் எனப்படும் மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றை வைக்கோலுடன் கலந்து மக்கச் செய்து பெறுவது, நஞ்சை நிலத் தொழுஉரமாகும்.

Question 12.
புஞ்சை (புன்செய்) நிலத் தொழுஉரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
Answer:
காய்ந்த இலைச் சருகு, கால்நடைகளின் சாணத்தை எரித்துக் கிடைக்கும் சாம்பல் ஆகியன கலந்தது, புஞ்சை நிலத் தொழுஉரமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 13.
ஐந்து விவசாய மந்திரங்கள் எவை?
Asnwer:

  • உழப்படாத நிலம், இரசாயன உரம் இல்லா உற்பத்தி.
  • பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி.
  • ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

சிறுவினா

Question 1.
வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? – நும் கருத்தை எழுதுக.
Answer:

  • வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி, நடைமுறைக்குச் சாத்தியமே.
  • பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதால், மனிதர்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
  • வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை ஆகிய அனைத்தையும் நன்றாக இடித்துக் கோமியத்தில் ஊற வைத்துப் பயிர்களில் தெளித்தால், பூச்சிகள் காணாமல் போய்விடும்.
  • வேதிக் கலப்பில்லாத பூச்சிக் கொல்லியால், நுண்ணுயிர்ப் பெருக்கம் ஏற்பட்டு, மண்வளம் பெருகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

கூடுதல் வினாக்கள்

Question 2.
இயற்கை வேளாண்மை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்? அவர் உலகிற்குச் சொன்னது என்ன?
Answer:

  • இயற்கை வேளாண்மை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், மசானபு ஃபுகோகா ஆவார்.
  • மசானபு ஃபுகோகா ஜப்பான் நாட்டு அறிஞர்.
  • சிறப்பான விவசாயம் செய்வதற்கு உழப்படாத நிலம், இரசாயன உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக் கொல்லி தெளிக்காத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல் என்னும் ஐந்து மந்திரங்களை உலகிற்கு வழங்கினர்.

Question 3.
இயற்கை விவசாயம் சிறக்கச் சித்தப்பா சொக்கலிங்கம் கூறும் நெறிகள் யாவை?
Asnwer:

  • நிலத்தில் இடைவிடாமல் மாறிமாறிச் சாகுபடி செய்தல் கூடாது; நிலத்தை ஆறப்போட வேண்டும். சரியான இடைவெளியில் மாறிமாறிப் பயிரிட வேண்டும்.
  • நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பண்ணைகளைப் பார்வையிட வேண்டும். வேளாண்மை அலுவலகம் மூலம் அரசு செய்துள்ள வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
  • வேளாண்துறை தரும் பயிற்சிகளில் கலந்துகொண்டு நல்ல வழிமுறைகளையறிந்து பயிரிட வேண்டும் என, இயற்கை விவசாயம் சிறக்கச் சித்தப்பா சொக்கலிங்கம் நெறிமுறைகளைக் கூறுகிறார்.
  • Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

நெதரவினா

Question 1.
‘சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே’ என்னும் தலைப்பில் மேடைப்பேச்சிற்கான உரையை உருவாக்குக.
Answer:
வேதி உரத்தால் நிலம் நஞ்சாகும்.)
அதிக விளைச்சலை எதிர்பார்த்து, வேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் விவசாயிகள் பயன்படுத்தினர். அச்செயல்களால் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. உயிர்களைப் பேணி வளர்க்க வேண்டிய நிலம், மலடாகிப் போனது. நிலத்திலிருந்த மண்புழு மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிந்துபோயின. மண்ணும் நஞ்சானது. அந்த மண்ணில் விளைந்த பொருளும் உணவு என்ற பெயரில் மறைமுக நஞ்சானது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

சுற்றுச்சூழலும் உயிரினங்களும் பாதிப்பு :
இதனால் சற்றுச்சூழல் பாதிப்பு அடைந்தது. மழை பெய்தபோது நிலத்தில் போட்ட வேதிப்பொருள் நீரோடு நீர்நிலைகளில் நீர்வாழ் உயிரினங்களையும் அழித்தது. மண்ணில் ஊறி நிலத்தடி நீரையும் நஞ் சாக்கியது. – இனங்களும் பறவைகளும் அழிந்தன. மண்ணும் காற்றும் நீரும் மாசுபட்டன. சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்பு அடைந்தது.

நிர் நிலவள மீட்டெடுப்பு முயற்சி :
நாம் வாழும் நிலப்பரப்பை மீண்டும் மீட்டெடுக்க வேண்டாமா? வேண்டும். முடியுமா? முடியும். அதற்கான முயற்சிதான் இயற்கை வேளாண்மை. வேதி உரங்களை நீக்கி, ஆடுமாடுகளின் சாணக்கழிவு, இலை தழைகளின் மட்கு ஆகியவற்றை மீண்டும் விவசாயத்தில் உரமாகப் பயன்படுத்த வேண்டும்.

வேதிப்பொருள் கலவாத பூச்சி விரட்டிகளைத் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும். இதனால் மீண்டும் மண் வளம்பெறும். நம் நாட்டு மரங்களை வளர்த்தால், காற்று தூய்மை அடையும். மழை பெருகும். ஆறு, குளம், கால்வாய்களைச் சரி செய்து, பெய்யும் மழைநீரைத் தேக்கி, இயற்கை முறை விவசாயத்தை மீட்டெடுத்தால், மனிதர்களாகிய நாமும் வாழலாம்; நமக்கு நன்மை செய்யும் பூச்சி, பறவை இனங்களும் வாழும். இயற்கை, தன் பழமை மாறாது நமக்குப் பாதுகாப்பு அளிக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

பலவுள் தெரிக

Question 1.
மண்ணுக்கு வளம் சேர்ப்பன ……………….
அ) மண்புழு
ஆ) ஊடுபயிர்
இ) இயற்கை உரங்கள்
ஈ) இவை மூன்றும்
Answer:
ஈ) இவை மூன்றும்

Question 2.
“வான் பொய்த்தது”- என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் …………………..
அ) வானம் இடிந்தது
ஆ) மழை பெய்யவில்லை
இ) மின்னல் வெட்டியது
ஈ) வானம் என்பது பொய்யானது
Answer:
ஆ) மழை பெய்யவில்லை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 3.
கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை …………….
அ) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்
ஆ) நேரடிப்பொருள்கள்
i) அ – மட்டும் சரி
ii) ஆ – மட்டும் சரி
iii) இரண்டும் சரி
iv) அ-தவறு, ஆ-சரி
Answer:
i) அ – மட்டும் சரி

Question 4.
பிழையான தொடரைக் கண்டறிக.
அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
ஆ) ஏதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்.
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நசல்களுள் உடையது.
ஈ) யானைகளால் வெகுதொலைவில் உள்ள நீரினை, வாசனைமூலம் அறியமுடியும்.
Answer:
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

கூடுதல் வினாக்கள்

Question 5.
மதிப்புக் கூட்டுப் பொருள் என்பது ……………….
அ) பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள்
ஆ) பனங்கற்கண்டு கருப்பட்டி போன்றவற்றை விற்பது.
இ) ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவது
ஈ) மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்வது
Answer:
இ) ஒரு பொரளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவது

Question 6.
‘உழவர் உலகிற்கு அச்சாணி’ எனக் கூறியவர் …………………
அ) பாரதி
ஆ) பாரதிதாசன்
இ) ஔவையார்
ஈ) திருவள்ளுவர்
Answer:
ஈ) திருவள்ளுவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 7.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” எனப் போற்றியவர்…………………..
அ) புரட்சிக்கவிஞர்
ஆ) பாரதியார்
இ) ஔவையார்
ஈ) நாமக்கல்லார்
Answer:
ஆ) பாரதியார்

Question 8.
ஒ றை வைக்கோல் புரட்சி’ என்னும் நூலின் ஆசிரியர் …………….
அ) நம்மாழ்வார்
ஆ)ஆர்.எஸ். நாராயணன்
இ) மசானபு ஃபுகோகா
ஈ) பாமயன்
Answer:
இ) மசானபு ஃபுகோகா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 9.
தமிழகத்தின் மாநில மரம் எது?
அ) அரசமரம்
ஆ) பனைமரம்
இ) ஆலமரம்
ஈ) வேப்பமரம்
Answer:
ஆ) பனைமரம்

Question 10.
மண்ணுக்கு நைட்ரஜன் சத்து அளிப்பது …………………..
அ) பனைமரம்
ஆ) இயற்கை உரம்
இ) சாணத்தை எரித்த சாம்பல்
ஈ) உளுந்தின் வேர்முடிச்சு
Answer:
ஈ) உளுந்தின் வேர்முடிச்சு

Question 11.
இயற்கை வேளாண்மை செய்ய மங்கை பின்பற்றியது ………………….. வழி.
அ) சொக்கலிங்கம்
ஆ) மல்லிகா
இ) நம்மாழ்வார்
ஈ) முன்னோர்
Answer:
இ) நம்மாழ்வார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 12.
கீழ்க்கண்டவற்றில் இயற்கை உரம் எது?
அ) யூரியா
ஆ) பொட்டாசியம்
இ) சாணம்
ஈ) சல்பேட்
Answer:
இ) சாணம்

Question 13.
ஏழைகளின் கற்பக விருட்சம் எனப் போற்றப்படும் மரம் எது?
அ) பனைமரம்
ஆ) வாழைமரம்
இ) முருங்கை மரம்
ஈ) தென்னை மரம்
Answer:
அ) பனைமரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 14.
கீழ்க்கண்டவற்றுள் மதிப்புக் கூட்டுப்பொருள் ……………….
அ) பனங்கொட்டை
ஆ) பனை ஓலை
இ) பதநீர்
ஈ) பனங்கற்கண்டு
Answer:
ஈ) பனங்கற்கண்டு

Question 15.
புஞ்சை நிலத்திற்கு இடும் சாம்பல் என்பது………………..
அ) வைக்கோல்
ஆ) தொழிற்சாலைக் கழிவு
இ) கால்நடைச் சாணத்தை எரித்தது
ஈ) சாணம், சிறுநீர்
Answer:
இ) கால்நடைச் சாணத்தை எரித்தது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

Question 16.
‘கருப்பட்டி’ என்பது ………………
அ) கரும்புச்சாறில் தயாரிப்பது
ஆ) தென்னை சாறில் தயாரிப்பது
இ) பதநீரில் தயாரிப்பது
ஈ) நுங்கில் தயாரிப்பது
Answer:
இ) பதநீரில் தயாரிப்பது

Question 17.
கூற்று 1 : பனைமரம் ஏழைகளோட கற்பக விருட்சக்னு சொல்லலாம்.
கூற்று 2 : பனைமரத்திலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்களும் உருவாக்கலாம்.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை, மதிப்புக் கூட்டுப்பொருள் என அழைக்கின்றனர்.
வினா : மதிப்புக் கூட்டுப் பொருள் என, எதை அழைக்கின்றனர்?

Question 2.
நிலத்தைச் சரிசெய்ய அறுவடை முடிந்தபிறகு வைக்கோலைச் சமமாகப் பரப்பி, மடியச் செய்து, மறுபருவம் வந்தவுன் நிலத்தில் நீரைத் தேக்கி உழவேண்டும்.
வினா : நிலத்தைச் சரிசெய்ய எது முடிந்தபிறகு வைக்கோலை சமமாகப் பரப்பி, மடியச் செய்து,
எப்பருவம் வந்தவுடன் நிலத்தில் நீரைத் தேக்கி, பிறகு உழவேண்டும்?

3. நிலத்திகுைந்து கிடைக்கும் குப்பைகூளம், செடி செத்தைகளை நிலத்திற்கே கொடுப்பது என்ற செல்கள், நெற்பயிரும் மாரிக்காலப் பயிரும் வளர்வதற்கான வளத்தைப் பூமிக்கு அளிக்கின்றன.
வினா : நெற்பயிரும் மாரிக்காலப் பயிரும் வளர்வதற்கான வளத்தைப் பூமிக்கு எவற்றை நிலத்திற்கே கொடுப்பது என்னும் செயல்கள் அளிக்கின்றன?

4. வைக்கோலைப் பற்றி மிகச்சிறந்த ஆய்வைச் செய்தவர், ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா.
வினா : ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா எதைப் பற்றி எத்தகைய ஆய்வைச் செய்தவர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

5. பூச்சிக்கொல்லி, பயிரில் இருக்கிற பூச்சியை மட்டும் கொல்லாமல், விளைகிற பயிர்க்குள்ளேயும் ஊடுருவுகிறது?
வினா : பூச்சிக்கொல்லி, எதை மட்டும் கொல்லாமல், எதிலேயும் ஊடுருவுகிறது?

6. புஞ்சையென்றால், காய்ந்த இலைச்சருகு, சாம்பல் ஆகியவற்றைக் கலந்து போட்டால் போதும்.
வினா : புஞ்சையென்றால் எவற்றைக் கலந்துபோட்டால் போதும்?

7. வேர்முடிச்சுகளில் இருக்கும் நைட்ரஜன், நிலத்தின் வளத்தைப் பெருக்கி, அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.
வினா : வேர்முடிச்சுகளில் இருக்கும் நைட்ரஜன், எதைப் பெருக்கி, எதை அதிகரிக்கச் செய்யும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.1 இயற்கை வேளாண்மை

8. மண்ணில் உள்ள நுண்ணுயிர்ப் பெருக்கத்தினால், மண்ணும் தன்னுடைய வளத்தை இழக்கிறதில்லை.
வினா : மண்ணும் தன்னுடைய வளத்தை எதனால் இழக்கிறதில்லை?

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.1 ஒரு வேண்டுகோள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 1.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
Answer:
எனக்குப் பிடித்த கலை சிலம்பாட்டக் கலை. இது தமிழரின் தற்காப்புக் கலை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்பர். இது தடியைக் கையாளும் முறை. கால அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக்கொண்டது. சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடவில் சிலம்புக் கம்பியினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

Question 2.
உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  1. “நீங்கள் சேற்றில் கால் வைத்ததல் தான் நாங்கள் சோற்றில் கைவைக்கமுடியும்”
  2. “உழைப்பாளியின் வியர்வையே அமுதம்”
  3. ”உழைப்பாளிகளே பூமியின் கதிரவன்கள்”

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மயிலும் மானும் வனத்திற்கு ………………. தருகின்றன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
Answer:
ஆ) வனப்பு

Question 2.
மிளகாய் வற்றலின் ……………… தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
Answer:
அ) நெடி

Question 3.
அன்னை தான் பெற்ற ………………… சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
Answer:
இ) மழலையின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 4.
‘வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ……………….
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
Answer:
ஆ) வனப்பு + இல்லை

Question 5.
‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………….
அ) வார்ப் எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்பு எனில்
Answer:
இ) வார்ப்பெனில்

நயம் அறிக.

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச்சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.

1. பிரும்மாக்களே – சேர்ப்பவர்களே
2. உடைப்பவனின் – உழவனின்
3. சிகரங்களா – அலைகளா – காடுகளா – பள்ளத்தாக்குகளா – தோட்டங்களா
4. வனப்பில்லை – உயிர்ப்பில்லை

குறு வினா

Question 1.
தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை?
Answer:
அன்பும் பாசமும் தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை ஆகும்.

Question 2.
ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
Answer:
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை .

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

சிறு வினா

Question 1.
சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
(i) நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.

(ii) உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

(iii) தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்து இருக்க வேண்டும்.

(iv) சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.

(v) ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை .

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?
Answer:
நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனித நேயச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒரு வேண்டு கோள் என்னும் கவிதையை எழுதியவர் …………………
அ) தேனரசன்
ஆ) காளமேகப் புலவர்
இ) சுரதா
ஈ) முடியரசன்
Answer:
அ) தேனரசன்

Question 2.
நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் ……………… நாற்றம் வீசவேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு
ஈ) பால் மணம்
Answer:
ஆ) வியர்வை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 3.
உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், …………….. அதில் மணம் வீச வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு
ஈ) பால் மணம்
Answer:
அ) ஈரமண்

Question 4.
தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் …………….. நிறைந்திருக்க வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு பாசம்
ஈ) பால் மணம்
Answer:
இ) அன்பு பாசம்

Question 5.
சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் ………………. கமழ வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு பாசம்
ஈ) பால் மணம்
Answer:
ஈ) பால் மணம்

பொருத்துக.

1. பிரும்மாக்கள் – அழகு
2. நெடி – மகிழ்ச்சி
3. வனப்பு – படைப்பாளர்கள்
4. பூரிப்பு – நாற்றம்
Answer:
1. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
2. நெடி – நாற்றம்
3. வனப்பு – அழகு
4. பூரிப்பு – மகிழ்ச்சி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

குறு வினா

Question 1.
தேனரசன் கவிதைகள் எழுதிய இதழ்கள் யாவை?
Answer:

  1. வானம்பாடி
  2. குயில்
  3. தென்றல்

Question 2.
தேனரசன் எழுதிய கவிதை நூல்கள் யாவை?
Answer:

  1. மண்வாசல்
  2. வெள்ளை ரோஜா
  3. பெய்து பழகிய மேகம்

Question 3.
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் என்று கவிஞர் தேனரசன் குறிப்பிடுவன எவை?
Answer:
ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத் தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் ஆகியன இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் என்று கவிஞர் தேனரசன் குறிப்பிடுகின்றார்.

Question 4.
உழவரின் உருவ வார்ப்பில் நிறைந்து இருக்க வேண்டியவை யாவை?
Answer:
உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

Question 5.
சிறு குழந்தையின் சித்திரத்தில் நிறைந்து இருக்க வேண்டியவை யாவை?
Answer:
சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 6.
ஒரு வேண்டுகோள் கவிதை இடம்பெறும் நூல் எது? அதனை எழுதியவர் யார்?
Answer:
ஒரு வேண்டுகோள் கவிதை இடம் பெறும் நூல் : பெய்து பழகிய மேகம். அதனை எழுதியவர் : கவிஞர் தேனரசன்.

சிறு வினா

Question 1.
கவிஞர் தேனரசன் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  1. கவிஞர் தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
  2. வானம்பாடி, தென்றல், குயில் ஆகிய இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.
  3. இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
  4. படைப்புகள் : மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் முதலிய கவிதை நூல்கள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

தேனரசன்
தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
வானம்பாடி, தென்றல், குயில் ஆகிய இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.
இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
படைப்புகள் : மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் முதலிய கவிதை நூல்கள்.

சொல்லும் பொருளும்

1. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
2. நெடி – நாற்றம்
3. மழலை – குழந்தை
4. வனப்பு – அழகு
5. பூரிப்பு – மகிழ்ச்சி
6. மேனி – உடல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Question 1.
பாடப்பகுதியில் இடம் பெற்ற சொற்களில் பகுபதம் பகாப்பதம் ஆகியவற்றைத் தனித்தனியே தொகுக்க.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 1
Question 2.
உங்கள் வகுப்பு மாணவ – மாணவிகளின் பெயர்களைப் பகுபதம் , பகாப்பதம் என வகைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 2

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ………………
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
Answer:
ஆ) 42

Question 2.
‘எழுதினான்’ என்பது ………………….
அ) பெயர்ப் பகுபதம்
ஆ) வினைப்பகுபதம்
இ) பெயர்ப் பகாப்பதம்
ஈ) வினைப் பகாப்பதம்
Answer:
ஆ) வினைப்பகுபதம்

Question 3.
பெயர்ப் பகுபதம் ………………… வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer:
இ) ஆறு

Question 4.
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு. ……………..
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சந்தி
Answer:
இ) இடைநிலை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

பொருத்துக. 

1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்
2. வினைப்பகுபதம் – மன்
3. பெயர்ப் பகாப்பதம் – நனி
4. வினைப் பகாப்பதம் – பெரியார்

1. பெயர்ப் பகுபதம் – பெரியார்
2. வினைப்பகுபதம் – வாழ்ந்தான்
3. இடைப் பகாப்பதம் – மன்
4. உரிப் பகாப்பதம் – நனி

சரியான பகுபத உறுப்பை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 3
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 4

குறு வினா

Question 1.
ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
Answer:
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும். எ.கா. பூ

Question 2.
பதத்தின் இருவகைகள் யாவை?
Answer:
பகுபதம், பகாப்பதம் என பதம் இருவகைப்படும்.

Question 3.
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
Answer:
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவையாவன : பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

சிறு வினா

Question 1.
விகுதி எவற்றைக் காட்டும்?
Answer:

  1. திணை
  2. பால்
  3. முற்று
  4. எச்சம்

Question 2.
விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா.) வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் +அன் +அன்
வா – பகுதி, இது ‘வ’ எனக் குறுகி இருப்பது விகாரம்.
த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்.
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Question 3.
பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும். அவையாவன:
1. பெயர்பெயர்ப்பகுபதம்
2. இடப்பெயர்ப்பகுபதம்
3. காலப்பெயர்ப்பகுபதம்
4. சினைப்பெயர்ப்பகுபதம்
5. பண்புப்பெயர்ப்பகுபதம்
6. தொழில் பெயர்ப்பகுபதம்

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடங்கள் பேசுக.

கல்வியின் சிறப்பு

வணக்கம். கல்வியின் சிறப்பு பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். இளமையில் கல், கேடில் விழுச்செல்வம் கல்வி, கல்விக் கரையில், கற்பவர் நாள் சில, கற்க கசடற, ஓதுவது ஒழியேல் ஆகியன கல்வியின் அவசியத்தைக் கூறும் பாடல் வரிகளாகும். மனிதனை வேறுபடுத்துவது அவன் கற்ற கல்வியால் தான். பொருளை இழந்தால் சம்பாதிக்கலாம். ஆனால் கல்வியை இழந்தால் மீண்டும் கற்க இயலாது.

அதனால் தான் பருவத்தே பயிர் செய் என்றனர். கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள்?

வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும் .நன்றி.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு

வணக்கம். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றி என்னுடைய கருத்துகளை சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் வேலைக்குச் செல்வதைக் கண்டால் மனம் வேதனை அடைகின்றது. இளமையில் கல் என்ற ஒளவையின் வாக்கு என்னவானது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகளுக்குச் சிறுவயதில் இரத்தசோகை, இளைப்பு, காச நோய் ஆகியன ஏற்படும். படிக்கும் வயதில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம். எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்பது வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடை முறையில் செயல்படுத்த நாம் போராட வேண்டும். நன்றி.

சொல்லக் கேட்டு எழுதுக.

1. இளமைப் பருவத்திலேயே கல்வி கற்க வேண்டும்.
2. கல்வியே அழியாத செல்வம்.
3. கல்வி இல்லாத நாடு விளக்கு இல்லாத வீடு.
4. பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்.
5. நூல்களை ஆராய்ந்து ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களை வகைப்படுத்துக.

நல்லூர், வடை, கேட்டல், முகம், அன்னம், செம்மை, காலை, வருதல், தோகை , பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, சோலை, ஐந்து மணி, விளையாட்டு, புதன்
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 5

அறிந்து பயன்படுத்துவோம்

மூவிடம்
இடம் 3 வகைப்படும். அவை.
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை

Question 1.
தன்னைக் குறிப்பது தன்மை.
Answer:
சான்று : நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.

Question 2.
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
Answer:
சான்று : நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Question 3.
தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.
Answer:
சான்று : அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், அவள், இவை.

சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)

1. உன் பெயர் என்ன?
2. நாம் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.
3. அவை எப்படி ஓடும்.
4. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.
5. அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பின்வரும் தொடர்களில் மூவிடப்பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.

1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
2. இவர்தான் உங்கள் ஆசிரியர்.
3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை .
4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை . நீயே கூறு.
5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 8

கடிதம் எழுதுக.

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையாளருக்குக் கடிதம் எழுதுக.

நூலகம் அமைத்துத் தர வேண்டி மடல்

அனுப்புநர்
ச.முகிலன்,
பாரதிநகர்,
ஈரோடு.

பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்.

வணக்கம். எங்கள் பாரதி நகர் ஈரோட்டின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க எங்கள் பகுதியில் நூலகம் இல்லை . அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறியவும் எங்களால் இயலவில்லை .எனவே எங்கள் அறிவுக் கண்களைத் திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம். நன்றி பல.

இப்படிக்குத் தங்கள் உண்மையுள்ள,
ச.முகிலன்.

நாள் : 03.5.2019
இடம் : ஈரோடு.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

உறைமேல் முகவரி
பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.

மொழியோடு விளையாடு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 7

1. காலையில் பள்ளி மணி ……………..
2. திரைப்படங்களில் விலங்குகள் ……………….. காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
3. கதிரவன் காலையில் கிழக்கே …………………
4. நாள்தோறும் செய்தித்தாள் ……………… வழக்கம் இருக்க வேண்டும்.
Answer:
1. ஒலிக்கும்
2. நடிக்கும்
3. உதிக்கும்
4. வாசிக்கும்

ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.

1. ……………. புல் மேயும்.
2. …………..சுடும்.
3. ……………பேசும்.
4. …………. பறக்கும்.
5. …………. மணம் வீசும்.
Answer:
1. ஆ
2. தீ
3. கை
4. ஈ
5. பூ

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.

(எ.கா) தா – கொடு
1. தீ ……………….
2. பா …………..
3. கை ……………..
4. வை ……………
5. மை ……………
Answer:
1. நெருப்பு
2. பாடல்
3. தைத்தல்
4. புல்
5. அஞ்சனம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.

ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
(எ.கா.)ஆறு – ஈ ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.

1. விளக்கு – பாடலின் பொருள் விளங்கியது.
அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர்.

2. படி – வாயிற் படியில் அமராதே!
இளமையிலேயே படிக்க வேண்டும்.

3. சொல் – மூத்தோர் சொல் அமுதம்.
தஞ்சை சொல் (நெல்) வளம் மிகுந்தது.

4. கல் – காய்த்த மரம் கல் அடிபடும்.
இளமையில் கல்.

5. மாலை – மாலைநேரத்தில் விளையாட வேண்டும்.
பூமாலை தொடுத்தாள்.

6. இடி – இடி மின்னலுடன் மழை பெய்தது.
மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது.

நிற்க அதற்குத் தக……

கலைச்சொல் அறிவோம்

1. கோடை விடுமுறை – Summer vacation
2. குழந்தைத் தொழிலாளர் – Child Labour
3. பட்டம் – Degree
4. கல்வியறிவு – Literacy
5. நீதி – Morall
6. சீருடை – Uniform
7. வழிகாட்டுதல் – Guidence
8. ஒழுக்க ம் – Dicipline

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer:
ஆ) இரண்டு

Question 2.
பசு என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
அ) ஆ

Question 3.
கொடு என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
ஆ) ஈ

Question 4.
இறைச்சி என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
இ) ஊ

Question 5.
அம்பு என்னும் பொருள் தரும் சொல் …………..
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
ஈ) ஏ

Question 6.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள நெடில்சொற்களின் எண்ணிக்கை
அ) 42
ஆ) 40
இ) 43
ஈ) 2
Answer:
ஆ) 40

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Question 7.
நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர் ………………..
அ) பவணந்தி முனிவர்
ஆ) ஆறுமுக நாவலர்
இ) தொல்காப்பியர்
ஈ) அகத்தியர்
Answer:
அ) பவணந்தி முனிவர்

Question 8.
பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ………………
அ) 6
ஆ) 2
இ) 5
ஈ) 42
Answer:
அ) 6

Question 9.
பகாப் பதத்தின் வகை ……………..
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) ஐந்து
Answer:
ஆ) நான்கு

பொருத்துக.

1. ஐ – சோலை
2.கா – இகழ்ச்சி
3. கூ – பூமி
4. சீ – தலைவன்
Answer:
1. ஐ – தலைவன்
2. கா – சோலை
3. கூ – பூமி
4. சீ – இகழ்ச்சி

குறுவினா

Question 1.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை யாது? அவை உணர்த்தும் பொருள் யாது?
Answer:
நொ, து ஆகிய இரண்டும் ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்கள் ஆகும்.
உணர்த்தும் பொருள் :

  1. நொ – நோய்
  2. து – உண்

Question 2.
பகுபதங்கள் என்றால் என்ன?
Answer:
சிறு சிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் பகுபதங்கள் ஆகும்.

Question 3.
வினைப்பகுபதம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
சான்று : உண்கின்றான் – உண் + கின்று + ஆன்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Question 4.
சந்தி என்பது யாது?
Answer:
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி ஆகும்.

Question 5.
சாரியை என்பது யாது?
Answer:
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை ஆகும்.

சிறு வினா

Question 1.
இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கண முறைப்படி சொற்கள் நான்கு வகைப்படும். அவையாவன:

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

குறுவினா

Question 1.
உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் – இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
Answer:

  • உயிரெழுத்து (த் + உ), பன்னிரண்டு (ட் உ); உயிர் எழுத்து (குற்றியலுகர) ஈறு.
  • திருக்குறள், நாலடியார் – மெய்எழுத்து ஈறு.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
புணர்ச்சி என்பது யாது?
Answer:
நிலைமொழியும் வருமொழி மான் இருசொற்கள் இணைவது புணர்ச்சி எனப்படும்.

Question 3.
சொல்லுக்கு இறுதியில் வாராத எழுத்துகள் எவை?
Answer:
க், ச், ட், த், ப், ம் என்னும் வல்லின மெய்களும், ‘ங்’ என்னும் மெல்லின மெய்யும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

Question 4.
இலக்கணவகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • இலக்கணவகைச் சொற்கள், நான்கு வகைப்படும்.
  • அவை வயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.

Question 5.
பெயரையும் வினையையும் சார்ந்துவரும் சொற்கள் எவை?
Answer:

  • இகடைச்சொற்களும் உரிச்சொற்களும் தனித்து வாரா;
  • பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் சார்ந்து வரும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 6.
குற்றியலுகர எழுத்துகள் யாவை?
Answer:
வல்லின மெய்களின்மேல் ஊர்ந்த கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு எழுத்துகளும் குற்றியலுகர எழுத்துகள் எனப்படும்.

Question 7.
குற்றியலுகர நிலைமொழி என்பதை விளக்குக.
Answer:
குற்றியலுகரத்தை ஈற்றில் பெற்ற சொல், வருமொழியோடு புணரும்போது, ‘குற்றியலுகர நிலைமொழி’ எனப்படும்.
எ – கா : பாக்கு + இல்லை – பாக்கில்லை. இதில் ‘பாக்கு’ என்பது குற்றியலுகர நிலைமொழி.

சிறுவினா

Question 1.
மொழிமுதல், மொழியிறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

மொழிமுதல் வரும் எழுத்துகள் : பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் பத்து மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளோடு சேர்ந்தும் மொழிக்கு முதலில் வரும்.

எ – கா : அன்பு (அ), ஆடு (ஆ), இலை (இ) ஈகை (ஈ) உரல் (உ), ஊசி (ஊ) எருது (எ), ஏணி (ஏ) ஐந்து (ஐ) ஒன்று (ஒ) ஓணான் (ஓ) ஔவை (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

(க்+அ) கலம், (ங்+அ) ஙனம், (ச்+அ) சங்கு , (ஞ்+அ) ஞமலி, (த்+அ) தமிழ், (ந்+அ) நலம்,
(ப்+அ) பழம், (ம்+அ) மலர், (ய் +அ) யவனம், (வ்+அ) வளம் என, மெய் எழுத்துகள் பத்தும் மொழிக்கு முதலில் வரும்.

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ், ண், நாம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு மெய்யெழுத்துகளும், (கு, சு, டு, து, ன் என்னும் ) குற்றியலுகரம் ஒன்றும் ஆக இருபத்து நான்கு எழுத்துகள், மொழிக்கு இறுதியில் வரும்.

எ – கா : பல (அ), பலா (ஆ), கிளி (இ), தேனீ (ஈ), தரு (உ), பூ (ஊ) (எ. ஒரே (ஏ), தளை (ஐ), (ஒ), பலவோ (ஓ), கௌ (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு இறுதியில் வரும்.

உரிஞ் (ஞ்), மண் (ண்), வெரிந் (ந்), பழம் (ம்), அறன் (ன்), மெய் (ய), அவர் (ர்), அவல் (ல்), அவ் (வ்), தமிழ் (ழ்), அவள் (ள்) என, மெய்யெழுத்துகள் பதினொன்று மொழிக்கு இறுதியில் வரும்.

பாக்கு (கு), பஞ்சு (சு), எட்டு (டு), பந்து (து), சால்பு (பு), கயிறு (று) எனக் குற்றியலுகர எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பலவுள் தெரிகள்

Question 1.
மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முலையா னதைக் கண்டுபிடிக்க.
அ) அன்னம், கிண்ண ம்
ஆ டமாரம், இங்ஙனம்
இ) ரூபாய், இலட்சாதிபதி
ஈ) றெக்கை, அங்ஙனம்
Answer:
அ) அன்னம், கிண்ணம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
அ) பன்னிரண்டு
ஆ) பதினெட்டு
இ) இருபத்து நான்கு
ஈ) இருபத்து இரண்டு
Answer:
ஈ) இருபத்து இரண்டு

Question 3.
மொழி இறுதில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
அ) பன்னிரண்டு
ஆ) பதினெட்டு
இ) இருபத்து நான்கு
ஈ) இருபத்து இரண்டு
Answer:
இ) இருபத்து நான்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
பெரம முதலில் வரும் மெய்யெழுத்துகள்………………
அ) க ச் ட் த் ற்
ஆ) ங் ஞ் ண் ந் ம் ன்
இ) யர் ல் வ் ழ் ள்
ஈ) க் ங் ச் ஞ் த் ம் ய் வ்
Answer:
ஈ) க் ங் ச் ஞ் த்ம்ய்வ்

Question 5.
மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் ……………
அ) ய் ர் ல் வ் ழ் ள்
ஆ) க் ச் ட் த் ப் ற்
இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
ஈ) க் ச் த் ம் ய் ஞ் ங்
Answer:
இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்

Question 6.
தவறான இணையைத் தெரிவு செய்க.
அ) கயல் + விழி – பெயர் + பெயர்
ஆ) தமிழ் + கற்றாள் – பெயர் + வினை
இ) வந்தாள் +மகாலட்சுமி – வினை +வினை
ஈ) தொழுதனர் +மக்கள் – வினை + பெயர்
Answer:
இ) வந்தாள் +மகாலட்சுமி – வினை+வினை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
தவறான இணையைத் தேர்வு செய்க.
அ) மொழி + ஆளுமை – உயிர் + உயிர்
ஆ) கடல் + அலை – உயிர் + மெய்
இ) தமிழ் + உணர்வு – மெய் + உயிர்
ஈ) மண் + வளம் – மெய் + மெய்
Answer:
ஆ) கடல் + அலை – உயிர் + மெய்

Question 2.
கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 1

அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)
Answer:
அறிஞர் அண்ணா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10)
Answer:
திரு. வி. கலியாணசுந்தரனார்

இ) “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என்று பாடியவா (6)
Answer:
பாரதிதாசன்

ஈ) பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளில் ஒருவர் (6)
Answer:
ஜீவானந்தம்

Question 3.
பேச்சுவழக்கை எழுத்துவழக்காக மாற்றுக.
அ) காலங்காத்தால எந்திரிச்சு படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
Answer:
அதிகாலையில் எழுந்திருந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பயன் வராம போவாது..
Answer:
முயற்சி செய்தால் அதற்கேற்ற பயன் வராமல் போகாது

இ) காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த பாத்தனும்
Answer:.
காலத்திற்கேற்ற மாதிரி புதிது புதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்.

ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமா பதிய வைக்கனும்.
Answer:
ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, எல்லாவற்றையும் கவனமாகப் பதியவைக்க வேண்டும்.

உ) தேர்வெழுத வேகமாப் போங்க, தெரங்கழிச்சி போனா பதட்டமாயிரும்.
Answer:
தேர்வெழுத வேகமாகப் போர்கள், நேரம் கழித்துப் போனால் பதற்றமாகிவிடும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
வினாக்கள்

அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
Answer:
மொழிக்கு முதல் வரும் எழுத்துகள் இருபத்திரண்டு. அவை உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து ஆக இருபத்திரண்டு.
எ – டு :

i) அன்பு, ஆடு, இலை, ஈகை, உரல், ஊசி, எருது, ஏணி, ஐந்து, ஒன்று, ஓணாண், ஔவை – இவை
உய முதல் எழுத்துகளாக அமைந்தன.

ii) கலம், ஙனம், சங்கு, ஞமலி, தமிழ், நலம், பழம், மலர், யவனம், வளம் – இச்சொற்களில் மெய்கள்
முதலில் நிற்பதால் மெய்முதலாகும்.
“பன்னீ ருயிரும் கசதந பமவய
ஞங ஈரைந்து உயிர்மெய் மொழிமுதல்” என்பது நன்னூல் நூற்பா (102)].

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் இருபத்து நான்கு. அவை, உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொன்று, குற்றியலுகரம் ஒன்று ஆக இருபத்து நான்கு ஆகும்
எ – டு : i) தமிழ் – ஈற்றெழுத்து ‘ழ்’ மெய்யீறு.
ii) கிளி – ஈற்றெழுத்து ‘ளி’ (ள் + இ); எனவே, உயிரீறு.
iii) ஆறு – ஈற்றெழுத்து ‘று’, குற்றியலுகரம்; எனவே, குற்றியலுகர ஈறு.

“ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயும் உகரம் நாலாறும் ஈறே” என்பது நன்னூல் நூற்பா (107)].
(ஆவி – உயிரெழுத்து. சாயும் உகரம் – குற்றியலுகரம்.)

இ) உயிரீறு, மெய்யீறு – விளக்குக.
Asnwer:
உயிரீறு : சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு.
எ-கா : அருவி (வ்+இ), மழை (ழ்+ஐ) – இ, ஐ என்னும் உயிர் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன.
மெய்யீறு : சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் மெய் எழுத்து அமைவது மெய்யீறு.
எ – கா : தேன் (ன்), தமிழ் (ழ்) – ன், ழ் என்னும் மெய் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஈ) உயிர்முதல், மெய்ம்முதல் – எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
உயிர்முதல் : சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் உயிர் எழுத்து வருவது கார் முதல் ஆகும். எ – கா : அம்மா (அ), ஆடு (ஆ), ஐவர் (ஐ), ஔவையார் (ஔ) – முதலில் உயிர் எழுத்துகள் வந்ததால் உயிர் முதலாகும்.

மெய்ம்முதல் : சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து எழுத்துகளில் ஒன்று, முதலில் வருவது மெய்ம்முதலாகும்.
எ – கா : கதவு (க் + அ = க), சங்கு (ச் + அ = ச), பந்து ( + அ = ப) – என, மெய்யெழுத்துகள் முதலில் வந்தன.

உ) குரங்குக்குட்டி – குற்றியலுகரப் புணர்ச்சியை விளக்குக.
Answer:
குரங்கு + குட்டி = குரங்குக்குட்டி. ‘குரங்கு என்னும் நிலைமொழியின் இறுதியில் ‘கு’ குற்றியலுகரமாக அமைந்தது. ‘குட்டி’ என்னும் வருமொழியில் ‘க்’ வல்லினமெய் வந்தது. இப்புணர்ச்சியில், ‘இருபெயரொட்டுப் பண்டுத்தொகையில் வல்லினம் மிகும்’ என்னும் விதிப்படி, ‘குரங்குக்குட்டி’ எனப் புணர்ந்தது. (“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்”
என்னும் விதிப்படி புணர்ந்ததாகவும் கொள்ளலாம்.)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஊ) ‘ங்’ என்னும் மெய் எவ்வாறு சொல்லுக்கு முதலில் வரும்?
Answer:
‘ங்’ என்னும் மெய், அகரத்துடன் சேர்ந்து (ங் + அ ) ‘ங’ எனச் சொல்லுக்கு முதலில் ‘ஙனம்’ (விதம்) என வரும்.
இச்சொல்லும், சுட்டெழுத்துகள், வினா எழுத்துகளுடன் இணைந்தே வரும்.
எ – கா : அங்கனம். இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

“தமிழ் இலக்கிய வரலாற்றில், கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின், வாராது வந்துதிக்க புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தென்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.

‘மீனாட்சிசுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள் தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல், அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். உ.வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர், இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் அவர்களின் புகழ், தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் – இத்தொடரில் புலமைக் கதிரவன் என்பதற்கு இலக்கணக்குறிப்புத் தருக.
Answer:
புலமைக் கதிரவன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

Question 2.
மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களைக் கண்டறிக.
Answer:
புலமைக் கதிரவன் – உருவகத் தொடர்.
(பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும்) வண்டுபோல் – உவமைத்தொடர்.

Question 3.
மீனாட்சிசுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் – விடைக்கேற்ற வினாவை அமைக்க.
Answer:
மீனாட்சிசுந்தரனார் எவற்றைப் பாடுவதில் வல்லவர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
பத்தியில் மொழிமுதல் எழுத்துகளைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் எனச் சுட்டுக.
Answer:
மகாவித்துவான், தலபுராணம், தேசிகர், யமகம், அந்தாதி, கலம்பகம்.

Question 5.
விளங்கினார் – பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.
Answer:
விளங்கினார் – விளங்கு + இன் + ஆர்
விளங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் விலை மாற்று விகுதி.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மீனாட்சி சுந்தரனார், பூக்கள் தோறும் சென்று தேனுண்ணும் வண்டு போலப் பாடம் கற்றார்.
வினா : மீனாட்சி சுந்தரனார் எவ்வாறு பாடம் கற்றார்?

2. மீனாட்சி சுந்தரனார், தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்
வினா : மீனாட்சி சுந்தரனார் எவற்றைப் பாடுவதில் வல்லவர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

தமிழாக்கம் தருக

1. The Pen is mightier than the Sword.
Answer:
எழுதுகோலின் முனை, வாளின் முனையைவு வலிமையானது.

2. Winners don’t do different things, wey do things differently.
Answer:
வென்றோர், வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் செயல்களை வேறுவிதமாகச்
செய்வார்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

3. A picture is worth a thousand words.
Answer:
ஒரு படம் என்பது, ஆயில் வார்த்தைகளைவிட மதிப்புள்ளது.

4. Work while you work and play while you play.
Answer:
உழைக்க வேண்டிய நேரத்தில் உழை! விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடு!

5. Knowledge rules the world.
Answer:
அறிவே உலகை ஆளுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துக:

வாடகை – குடிக்கூலி
மாதம் – திங்கள்
போலீஸ் – காவலர்
ரிச்சயம் – உறுதி
உத்திரவாதம் – உறுதி
சந்தோஷம் – மகிழ்ச்சி
சம்பளம் – ஊதியம்
ஞாபகம் – நினைவு
வருடம் – ஆண்டு
தேசம் – நாடு

வித்தியாசம் – வேறுபாடு
உற்சாகம் – பூரிப்பு
விசா – நுழைவு இசைவு
பாஸ்போர்ட் – கடவுச்சீட்டு
கம்பெனி – நிறுவனம்
பத்திரிகை – நாளிதழ்
கோரிக்கை – வேண்டுதல்
யுகம் – ஊழி
ராச்சியம் – மாநிலம், நாடு
சரித்திரம் – வரலாறு

முக்கியத்துவம் – முதன்மை
சொந்தம் – உறவு
சமீபம் – அருகில்
தருணம் – உரியவேளை
பந்து – உறவினர்
அலங்காரம் – ஒப்பனை
இலட்சணம் – அழகு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

அனுபவம் – பட்டறிவு
நட்சத்திரம் – விண்மீன்
ஜனங்கள் – மக்கள்
பௌத்திரன் – பெயரன்
நமஸ்காரம் – வணக்கம்
கும்பாபிஷேகம் – குடமுழுக்கு
ஆசீர்வதித்தல் – வாழ்த்துதல்
சம்பிரதாயம் – மரபு
ஜாஸ்தி – மிகுதி
விஷயம் – செய்தி

நாஷ்டா – சிற்றுண்டி
அங்கத்தினர் – உறுப்பினர்
அபூர்வம் – புதுமை
ஆராதனை – வழிபாடு
உபயோகம் – பயன்
அபிஷேகம் – திருமுழுக்கு
ஜென்ம நட்சத்திரம் – பிறந்தநாள்
சிரஞ்சீவி – திருநிறை செல்வன்

கீழ்க்காணும் நிகழ்ச்சிநிரலினைப் படித்து நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 2

அனுப்புநர் :
மாணவர் இலக்கிய மன்றத் தலைவர்
அரசு மேல்நிலைப் பள்ளி,
சென்னை – 600 001.

பெறுநர் :
முதன்மை ஆசிரியர்,
தினமணி நாளிதில்
சென்னை – 600 002.

ஐயா, எம் பள்ளியில் டைபெற இருக்கும் திங்கள் கூடுகை நிகழ்வு குறித்த செய்தி அனுப்பியுள்ளேன். அதனை வெளியிட்டு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

உங்கள்
வேலன்
(மாணவர் தலைவர்)

கைலத் திங்கள் வார இறுதி வெள்ளிக்கிழமை அன்று, அரசு மேனிலைப் பள்ளியில் பிற்பகல் 2. மணிக்கு ‘அரியன கேள் புதியன செய்’ என்னும் அமைப்பின் திங்கள் கூடுகை நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. மாணவர் இலக்கியச்செல்வன், 2.35 மணிக்கு வரவேற்புரை நிகழ்த்துகிறார். தலைமை ஆசிரியர் திரு. எழிலன் அவர்கள், ‘புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை ‘ என்னும் தலைப்பில், 2.50 மணிக்குச் சிறப்புரை நிகழ்த்துவார். 3.45 மணிக்கு மாணவர் ஏஞ்சலின் நன்றியுரை கூறிமுடித்தவுடன், 4.00 மணிக்கு நாட்டுப் பண்ணுடன் கூடுகை நிகழ்வு நிறைவு பெறும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பத்தியினைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

‘தமிழ்’ என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. இனிமையும் நீர்மையும் தமிழெனல்’ ஆகும் என்று, பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. ‘தமிழ்’ என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற புறநானூற்றுப் பாடலடியில், ‘தமிழ்’ எனும் சொல், மொழி, கவிதை என்பவற்றைத் தாண்டிப் “பல்கலைப் புலமை” என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. “தமிழ்கெழு கூடல்” என்றவிடத்திலும், “கலைப்புலமை ” என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. கம்பன், “தமிழ் தழீஇய சாயலவர்” என்னும் இடத்து, ‘தமிழ்’ என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில், ‘தமிழ்’, பாட்டு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ஞானசம்பந்தன் சொன்ன ‘தமிழ் இவை பத்துமே’, ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டுகளாலான திருப்பாவையை ஆண்டாள், ‘தமிழ்மாலை’ என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். (‘பண்பாட்டு அசைவுகள்’ – தொ. பரமசிவன்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை?
Answer:
இனிமை, பண்பாடு, அகப்பொருள் அழகு, மென்மை, பாட்டு என்பன, தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள்.

Question 2.
பத்தியில் உள்ள அளபெடைகளைக் கண்டறிக.
Answer:
அதூஉம் – செய்யுளிசை அளபெடை, தழீஇய – சொல்லிசையளபெடை.

Question 3.
தமிழ் என்றவுடன் உங்கள் மனத்தில் தோன்றுவதை ஒரு வரியில் குறிப்பிடுக.
Answer:
“தமிழுக்கு அமுதென்று பேர்”

Question 4.
திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர் யாது?
Answer:
தமிழ்மாலை.

Question 5.
பத்தியின் மையக்கருத்திற்கேற்ப ஒரு தலைப்பிடுக.
Answer:
காலந்தோறும் தமிழ்.

மொழியோடு விளையாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
எண்ணங்களை எழுத்தாக்குக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 3

வானத்தில் பறந்தென்ன
வண்ணத்தில் சிறந்தென
சொட்டும் நீரின்றி
சொகுசாக வாழ முடியுமா?

Question 2.
தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக.
எ – கா : ஓர் பயிர் பறவை வள வேண்டும் அழகான தண்ணீர் மயில்
அ) மயில் ஓர் அழகான பறகை ஆ) பயிர் வளரத் தண்ணீர் வேண்டும்.
i) பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி
Answer:
ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போகவேண்டும்.
கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.

ii) நிலவு வீசுவுதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனத்தை.
Answer:
மாலை நிலவு மனத்தை மகிழ்விக்கும்.
தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

iii) நேர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை.
Answer:
பிறர் செய்த உதவியை, நன்மையை மறக்கக்கூடாது.
நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யக்கூடாது.

iv) நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா?
Answer:
நேற்று வந்த பையன் யார் தெரியுமா?
ஏன் பக்கத்தில் இருக்கவில்லை?

v) கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழ்ந்த நாடு வந்தனர்.
Answer:
கோசல நாடு ஒரு சிறந்த நாடு.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வாந்தனர்.

Question 3.
வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடர்களாக மாற்றுக.
அ) வா ஆ) பேசு இ) தா ஈ) ஓடு உ) பாடு
Answer:
எ – கா : அ. வா – வேர்ச்சொல்.
அருணா, வீட்டுக்கு வந்தாள். (வினைமுற்று)
அங்கு வந்த பேருந்தில், அனைவரும் ஏறினர். (பெயரெச்சம்)
கருணாகரன், மேடையில் வந்து நின்றார். (வினையெச்சம்)
என்னைப் பார்க்க வந்தவர், என் தந்தையின் நண்பர். (வினையாலணையும் பெயர்)

ஆ) பேசு – வேர்ச்சொல்
அவள் பேசினாள். (வினைமுற்று)
அவள் பேசிய மொழி இனிமையாக இருந்தது. (பெயரெச்சம்)
அவள் பேசி முடித்தாள். (வினையெச்சம்)
மேடையில் பேசியவளைப் பார்த்தேன். (வினையாலணையும் பெயர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

இ) தா – வேர்ச்சொல்
அண்ணன் தந்தான். (வினைமுற்று)
அண்ண ன் தந்த பரிசு. (பெயரெச்சம்)
அண்ணன் தந்து சென்றான். (வினையெச்சம்)
அண்ண னிடம் தந்தவன் யாவன்? (வினையாலணையும் பெயர்)

ஈ) ஓடு – வேர்ச்சொல்
நான் வேகமாக ஓடினேன். (வினைமுற்று)
வேகமாக ஓடிய பையன் யார்? (பெயரெச்சம் )
அவன் ஓடிக் களைத்தான். (வினையெச்சம்)
அங்கே ஓடியவனைப் பார்த்தாயா? (வினையாலணையும் பெயர்)

உ. பாடு – வேர்ச்சொல்
சீதை பாடுகிறாள். (வினைமுற்று)
சீதை பாடிய பாட்டு. (பெயரெச்சம்)
சீதை பாடி முடித்தாள் (வினையெச்சம்)
மேடையில் பாடியவள் எள் (வினையாலணையும் பெயர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 4

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

கலைச்சொல் அறிவோம்

அழகியல் – Aesthetics
புத்தக மதிப்புரை – Book Review
இதழாளர் – Journalist
புலம் பெயர்தல் – Migration
கலை விமர்சகர் – Art Critic
மெய்யியலாளர் – Philosopher

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

Question 1.
1. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
2. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:

  1. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கச் சொல்லித் தருவேன்.
  2. எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணத்திற்காக, தன்மானம் இழந்த நிலை போக்க அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தருவேன்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
‘பள்ளி மறுதிறப்பு’ சிறுகதையினைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை
சுப்ரபாரதிமணியன் இயற்றிய ‘பள்ளி மறுதிறப்பு’ சிறுகதையில் மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கமாகக் காண்போம். மதிவாணனும் கவினும்

மதிவாணனும் கவினும்
ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கோடைவிடுமுறையில் ஒன்றரை மாதம் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றனர். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. வேலைக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர். கவின் தான் மீண்டும் பள்ளிக்குப் போவதில்லை. வாராவாரம் சம்பளம், திரைப்படம் பார்க்க காசு, பரோட்டா, போண்டா, வீட்டில் யாரும் திட்டுவதில்லை. இந்த மகிழ்ச்சி போதும் என்றான். மதிவாணனும் சற்றே குழம்பினான்.

மதிவாணனின் சிந்தனை
படிக்கின்ற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று மதிவாணன் உள்ளும் கனவுகள் இருந்தன. தொழிலாளியாகவே கடைசி வரைக்கும் இருக்க வேண்டுமா என்பதை நன்கு சிந்தித்தான். எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவரைப் போல உயர வேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தான்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

படிக்காதவரின் நிலை
பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர். அங்கிருந்த சிறுவர்களிடம், இந்தப் பேருந்து நல்லூர் செல்லுமா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் கேட்டார். சிறுவர்கள் எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர். இது கூடப் படிக்கத் தெரியாதா என்றார் பெரியவர்.

அதற்கு ஒருவன் ஏன் உங்களுக்குப் படிக்கத் தெரியாத என்று கேட்டு, அனைவரும் சிரித்தனர். மதிவாணன் அவரிடம் நல்லூர் இது போகாது. போகும் பேருந்து வரும் போது சொல்கின்றேன் என்றான். இதையெல்லாம் பார்த்து கல்வி தான் தலைநிமிரச் செய்யும் என்பதை உணர்ந்து, பள்ளியை நோக்கி நடந்தான் மதிவாணன்.

முடிவுரை
“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதைப் புரிந்து கொண்டு இளமையில் மதிவாணன் கல்வி கற்க விருப்பம் கொண்டான். இன்று கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புக்காக இன்றே கல்வி கற்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

சுப்ரபாரதிமணியன்
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகிய கருத்துகளை மையமாக வைத்து தம் படைப்புகளைப் படைப்பவர். கனவு என்னும் இதழை நடத்தி வருபவர்.

படைப்புகள் : பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை முதலியன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 1.
கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக.
(எ.கா.) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
Answer:

  1. இளமையில் கல்.
  2. கேடில் விழுச்செல்வம் கல்வி.
  3. கற்க கசடற.
  4. ஓதுவது ஒழியேல்!
  5. கல்விக்கு அழகு கசடற மொழிதல்
  6. உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக்
  7. கடலின் பெருமை கடவார்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ………………
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
Answer:
ஆ) காலம் அறிதல்

Question 2.
கல்வியில்லாத ………………….. நாடு
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
Answer:
அ) விளக்கில்லாத

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 3.
‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ………………
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
Answer:
இ) பாரதியார்

Question 4.
‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
Answer:
ஈ) உயர்வு + அடைவோம்

Question 5.
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………..
அ) இவை எல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
Answer:
ஆ) இவையெல்லாம்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. செல்வம் – கல்விச்செல்வம் என்றும் அழியாதது.
2. இளமைப்பருவம் – இளமைப்பருவம் கல்விக்கு உரிய பருவம் ஆகும்.
3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

குறு வினா

Question 1.
மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
எதிர்காலத்தில் பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச்சொல்ல முடியும். ஆனால், மனிதப் பிறவியின் எதிர்காலத்தைக் கூறவே முடியாது. இதுவே மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

Question 2.
கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

Question 3.
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
Answer:
படிக்க வேண்டிய நூல்களை நன்கு ஆழ்ந்து ,ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

சிறு வினா

Question 1.
கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
Answer:

  1. உலகில் எல்லாச் செல்வங்களும் அழிந்துவிடும்.
  2. இருபது இருபத்தைந்தாண்டுக்கு முன் இங்கு இருந்த ஆலமரம் எங்கே என்றால் புயலில் விழுந்துவிட்டது என்போம்.
  3. இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால், மழையால் இடிந்து விட்டது என்பர்.
  4. 10 ஆண்டுக்கு முன் 2 இலட்சம் ரூபாய் வைத்திருந்தவர். இன்று இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்போம்.

எல்லாம் அழியும். ஆனால் கல்வி அப்படியன்று. 10 ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்றவர் இன்று 10ம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கல்வி அழியாதது. வள்ளுவரும் ”கேடில் விழுச்செல்வம் கல்வி …..” என்கின்றார்.

Question 2.
கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
Answer:
கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாதவீடு. விளக்கில்லாதவீட்டில் யார்குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

சிந்தனை வினா

Question 1.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:

  1. உண்மைப் பொருளை விளக்க வேண்டும்.
  2. நன்னெறிப் பாதை காட்ட வேண்டும்.
  3. அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இருக்க வேண்டும்.
  4. எளிமை, தெளிவு ஆகியவை கொண்ட நடையில் இருத்தல் வேண்டும். –
    ஆகியன நல்ல நூலின் இயல்புகளாக நான் கருதுவன ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திருக்குறளனார் என்று அழைக்கப்படுபவர் ……………….
அ) வீ.முனிசாமி
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
அ) வீ.முனிசாமி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூ ல்களை எழுதியவர் …………….
அ) வீ.முனிசாமி
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
அ) வீ.முனிசாமி

Question 3.
உலகில் மிகவும் அருமையானது ……………..
அ) காலம்
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) செல்வம்
Answer:
அ) காலம்

Question 4.
………………… ஓர் ஒளி விளக்கு.
அ) காலம்
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) செல்வம்
Answer:
அ) காலம்

Question 5.
நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்று கூறியவர் ………….
அ) வீ.முனிசாமி
ஆ) திருவள்ளுவர்
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
ஆ) திருவள்ளுவர்

குறுவினா

Question 1.
திருக்குறளார் வீ.முனிசாமி இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  1. வள்ளுவர் உள்ளம்
  2. வள்ளுவர் காட்டிய வழி
  3. திருக்குறளில் நகைச்சுவை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள் விளங்கும் என்பதற்கு திருக்குறளனார் கூறும் ஒப்புமை யாது?
Answer:
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள்விளங்கும் என்பதற்குதிருக்குறளனார் கூறும் ஒப்புமை கத்தரிக்காய், வாழைக்காய், கீரை இவை எல்லாம் பூமிக்கு மேல் விளையும். சில மண்ணுக்குள்ளே இருக்கும் அதை நாம் தான் தோண்டி எடுக்க வேண்டும் என்பதாகும்.

Question 3.
திருக்குறளனாரின் புகழ்பெற்ற நூல் எது?
Answer:
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

Question 4.
பள்ளி பற்றி பாரதியாரின் கருத்து யாது?
Answer:
நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். அதனால் தான் ”பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்றார்.

Question 5.
விளக்கில்லாத வீடு எது?
Answer:
கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு ஆகும்.

Question 6.
கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் யார்?
Answer:
திருவள்ளுவரே கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் ஆவார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 7.
எவை அழியும் என்பதற்குத் திருக்குறளனார் கூறும் உவமைகள் எவை?
Answer:

  1. ஆலமரம்
  2. பெரிய கட்டடம்
  3. இரண்டு இலட்ச ரூபாய் பணம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.2 அழியாச் செல்வம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.2 அழியாச் செல்வம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 1.
கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
Answer:

  1. ஓதுவது ஒழியேல்! – ஔவையார்
  2. கல்விக்கு அழகு கசடற மொழிதல் – அதிவீரராம பாண்டியன்
  3. உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக் கடலின் பெருமை கடவார். – நன்னெறி
  4. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. – திருக்குறள்

Question 2.
கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றினை அறிந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான். வெற்றி பெற்ற மன்னர் உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன? என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.

அதைக் குடிக்காமல் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும் இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது என்றார். இந்த நீரைக்குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றார். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் …………………..
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
Answer:
ஆ) கல்வி

Question 2.
கல்வியைப் போல் ……………… செல்லாத செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
Answer:
அ) விலையில்லாத

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 3.
‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………….
அ) வாய்த்து + ஈயின்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து + தீயின்
ஈ) வாய் + ஈயீன்
Answer:
அ) வாய்த்து + ஈயின்

Question 4.
‘கேடில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) கேடி + இல்லை
ஆ) கே + இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
Answer:
ஈ) கேடு + இல்லை

Question 5.
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) எவன் ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
Answer:
இ) எவனொருவன்

குறுவினா

Question 1.
கல்விச் செல்வத்தின் இயல்புகளாகி நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் பிறரால் கொள்ளப்படாது. கொடுத்தாலும் குறையாது, அரசரால் கவர முடியாது.

சிறுவினா

Question 1.
கல்விச்செல்வம் குறித்த நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

சிந்தனை வினா

Question 1.
கல்விச்செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்? – சிந்தித்து எழுதுக.
Answer:

  1. நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
  2. திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது.
  3. கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.
    – எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ………………
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Question 2.
நாலடியார் …………….. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேல்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 3.
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் ……………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 4.
திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல் …………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Question 5.
விச்சை என்பதன் பொருள் ……………
அ) கல்வி
ஆ) பொருள்
இ) களவு
ஈ) அரசர்
Answer:
அ) கல்வி

சிறுவினா

Question 1.
நாலடியார் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  1. சமண முனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார்.
  2. நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  3. 400 வெண்பாக்களால் ஆனது.
  4. அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்பு கொண்டது.
  5. இது நாலடி நானூறு, வேளாண் வேதம் என்றும் அழைக்கப்படும் நூல்.
  6. திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

சொல்லும் பொருளும்

1. வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்
2. கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
3. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
4. விச்சை – கல்வி