Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Students can Download 9th Tamil Chapter 7.4 மதுரைக்காஞ்சி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.4 மதுரைக்காஞ்சி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Question 1.
ஊரின் பெயர்க்காரணம் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடுபவர்கள்: செல்வன், கிள்ளை , மது. இன்று நாம் வகுப்பில் மதுரையைப் பற்றி பல அரிய செய்திகள் அறிந்து கொண்டோம். அது போல் எங்கள் ஊருக்கும் பெயர் ஏற்பட காரணங்கள் உண்டு. நாம் கலந்துரையாடி தெரிந்து கொள்வோமா!

செல்வன் : மது, கிள்ளை நான் முதலில் சொல்லட்டுமா.

மது : சொல் செல்வா! உன் ஊர் ஈரோடு தானே.

செல்வன் : ஆம், ஈரோடு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா ……..
துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளான திருமாலின் வாயில் காப்போனாகிய தைபர் என்பவரின் தலை ஓடு நான்காகப் பிளவுபட்டதாம். அதில் பெரிய ஓடு வீழ்ந்த இடம் பேரோடு என்றும், சிறிய ஓடு விழுந்த இடம் சித்தோடு என்றும், வெள்ளை ஓடு விழுந்த இடம் வெள்ளோடு என்றும், ஈர ஓடு விழுந்த இடம் ஈரோடு என்றும் பெயர் பெற்றதாம். சித்தோடு, பேரோடு, வெள்ளோடு ஆகிய ஊர்கள் ஈரோட்டிற்கு அருகிலே உள்ளன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

கிள்ளை : அப்படியாடா ஆச்சரியமாக இருக்கிறதே……….
சரி செல்வன் எங்கள் சொந்த ஊர் தூத்துக்குடி. அதன் பெயர்க்காரணம் என்ன தெரியுமா?

தூர்த்து + குடி. தூர்த்து’ என்பதன் பொருள் கடலில் இருந்து உருமாறி வந்த நிலம்’ என்பது ஆகும். ‘குடி’ என்பதற்கு ‘குடியமர்தல்’ என்று பொருள். கடலில் இருந்து உருமாறி மக்கள் வாழத் தகும் நகராக மாறியதால் ‘தூத்துக்குடி’ எனப் பெயர் பெற்றதாம்.

மது : எங்கள் ஊர் சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி ஆகும். அதற்கு ஏன் அப்பெயர் வந்தது தெரியுமா?

மல்லிகைப்பூக்கள் (செடிகள்) அதிக அளவில் பயிரிடப்பட்ட பகுதி இது. இவ்விடத்தை சமஸ்கிருதத்தில் ‘புஷ்பகவல்லி’ என்றும், தமிழில் ‘பூவிருந்தவல்லி’ என்றும் வழங்கினர். நாளடைவில், பூந்தமல்லியாக மாறிவிட்டது.

நாம் மூவரும் நம் ஊரின் பெயர்க்காரணத்தை அறிந்து வைத்திருக்கிறோம் மகிழ்ச்சியாக உள்ளது அல்லவா?
(மாணவர்களே உங்கள் ஊரின் பெயர்க்காரணத்தையும் அறிந்து கொள்ளுங்கள்)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Question 2.
தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம் மதுரை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட உலகின் தொன்மை நகரங்களில் ஒன்று மதுரை. அந்நகரத்தில் இயலும் இசையும் நாடகமும் பொங்கிப் பெருகின – இத்தொடர்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கருத்துகளைத் திரட்டி ஐந்து மணித்துளிகள் பேசுக.
Asnwer:
மதுரையின் சிறப்புகள் (மேடைப் பேச்சு)

இந்திய துணைக்கண்டத்தில் மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நகரம் மதுரை ஆகும். தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம். 2500 ஆண்டுகளுக்கு மேலான பழம் பெருமை வாய்ந்தது. கி.மு 4 முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்ககாலம். இக்காலத்தில் தமிழ் அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம்.

கௌடில்யர், மெகஸ்தனிஸ் ஆகியோரின் குறிப்புகளிலும் மதுரை பெருமை பெறுகிறது.

மரபுச்சின்னமாக மதிக்கப்படும் மதுரை பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட நகரமாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச்சோழர், பிற்காலச் சோழர், பிற்காலப்பாண்டியர், மதுரை சுல்தான், விஜயநகரப்பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் ஆண்டுள்ளனர்.

பல வரலாற்று நினைவிடங்களைக் கொண்டிருந்த போதிலும் மீனாட்சியம்மன் கோவிலும். திருமலை நாயக்கர் அரண்மனையும் புகழ் பெற்றவை. சித்திரைத் திருவிழாவும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும் இந்நகரின் புகழ்பெற்ற திருவிழாக்கள் ஆகும். சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிறப்பு நிகழ்வாகும்.

பொங்கல் திருநாளில் நகரின் அருகில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஏறுதழுவுதல் நிகழ்வும் பெயர் பெற்றது ஆகும்.

இந்நகரம் கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக் கூடல், திரு ஆலவாய் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

7ம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற்புராணத்திலும் மதுரையின் சிறப்புப் பெயர்கள், பெருமைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற அனைத்து இலக்கியங்களிலும் மதுரையின் பெருமை பேசப்படுகிறது.

சிலப்பதிகாரம் மூலம் மதுரையில் இயலும், இசையும் பொங்கிப் பெருகியது என்பதை உணரலாம். இவ்வாறு மதுரையின் பெருமை வரலாற்று சிறப்பு என பேசிக் கொண்டே போகலாம். அதற்கு முடிவே இராது.

நன்றி! வணக்கம்.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
மதுரைக் காஞ்சி – பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • காஞ்சி என்றால் நிலையாமை என்று பொருள். “மதுரை” நகரைக் குறிக்கும்.
  • மதுரை நகரின் சிறப்புகளைப் பாடுவதாலும், நிலையாமையைப் பற்றியக் கருத்துகளைக் கூறுவதாலும், இப்பெயர் பெற்றது.

சிறுவினா

Question 1.
“மாகால் எடுத்த முந்நீர் போல” – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
Answer:
இடம் :
மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
மதுரையின் வளங்களையும், விழாக்களையும் பற்றிக் குறிப்பிடும் போது புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

விளக்கம்:
ஆறு போன்ற தெருக்களில் பல்வேறு பொருள்களை வாங்க வந்த பல்வேறு மொழி பேசும் மக்களின் ஒலியோடு விழாக்கள் பற்றிய அறிவிப்புகள் ஒலிக்கின்றன. “முரசறைவோரின் முழக்கம், பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ” ஒலிக்கிறது. இதனையே “மாகால் எடுத்த முந்நீர் போல” என்றார் மாங்குடி மருதனார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆழ்ந்த மணிநீர் கிடங்கின் – மணிநீர் கிடங்கு என்பது யாது?
அ) மணல்
ஆ) கடல்
இ) அகழி
ஈ) ஆறு
Answer:
இ) அகழி

Question 2.
மதுரைக்காஞ்சி நூலின் மொத்த அடிகள் எத்தனை?
அ) 732
ஆ) 752
இ) 782
ஈ) 792
Answer:
இ) 782

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Question 3.
மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?
அ) 254
ஆ) 284
இ) 324
ஈ) 354
Answer:
ஈ) 354

Question 4.
பொருத்துக:
அ) புழை – 1. நீர்நிலை
ஆ) பனை – 2. ஓவியம்
இ) கயம் – 3. முரசு
ஈ) ஓவு – 4. சாளரம்
Answer:
அ) 4 ஆ) 3 இ) 1 ஈ) 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Question 5.
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
அ) சொல்லிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) செய்யுளிசை அளபெடை
ஈ) இயற்கை அளபெடை
Answer:
இ) செய்யுளிசை அளபெடை

Question 6.
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம் எது?
அ) தஞ்சாவூர்
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) முசிறி
Answer:
இ) மதுரை

Question 7.
மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) ஓரம்போகியார்
ஈ) மாங்குடி மருதனார்
Answer:
ஈ) மாங்குடி மருதனார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Question 8.
மாங்குடி மருதனார் எட்டுத் தொகையில் …………… பாடல்களைப் பாடியுள்ளார்.
அ) 11
ஆ) 12
இ) 13
ஈ) 14
Asnwer:
இ) பதின்மூன்று

Question 9.
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்…………….
அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்
ஆ) கிள்ளிவளவன்
இ) வெற்றிவேற்செழியன்
ஈ) நெடுஞ்செழியன்
Answer:
அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

Question 10.
காஞ்சி என்ற சொல்லின் பொருள் ……………. ஆகும்.
அ) உண்ணாமை
ஆ) அழியாமை
இ) இல்லாமை
ஈ) நிலையாமை
Answer:
ஈ) நிலையாமை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Question 11.
மாகால் – இலக்கணக் குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) தொழிற்பெயர்
ஈ) உரிச்சொல் தொடர்
Answer:
ஈ) உரிச்சொல் தொடர்

குறுவினா

Question 1.
மாங்குடி மருதனார் – குறிப்பு வரைக.
Answer:
மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

சிறுவினா

Question 1.
மதுரைக்காஞ்சி குறிப்பு வரைக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமைத் தத்துவத்தைக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப் பெயர்.
  • இந்நூல் 782 அடிகளை உடையது.
  • இந்நூலை இயற்றியவர் மாங்குடி மருதனார் ஆவார்.
  • இந்நூலின் பாட்டுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

நெடுவினா

Question 1.
மதுரை மாநகரின் அழகை மாங்குடி மருதனாரின் வழி விளக்குக.
Answer:
முன்னுரை:
மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கில், மதுரைக்காஞ்சி முதன்மையானது. இந்நூலில் மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள், பலவகைப் பள்ளிகள், நாற்பெருங்குழு, அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன.

மதுரையின் சிறப்புகள்:
மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது. பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது. அவ்வாயில் நெய் பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது. மேகங்கள் உலாவும் மலைபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன. இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப் போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.

மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு பிரிவுகளைக் கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் .பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன. ஆறு போன்ற

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன. விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது. இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுகிறது. அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர். பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

முடிவுரை :
காலை தொடங்கி மறுநாள் விடியல்வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பாடலின் பொருள்:

  • மதுரை மாநகரிலே ஆழமான, தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது.
  • பழமையானதும், வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது. வாயில் கதவுகளில் நெய் பூசியதால் கரிய நிறமும், வலிமையும் உடையதாய் மாறிவிட்டன.
  • மேகங்கள் உலவும் மலைமுகடுகளைப் போல மாளிகைகள் ஓங்கி உயர்ந்து உள்ளன. இடைவிடாது பாய்ந்தோடும் வைகையைப் போல மக்கள் வாயில் வழி சென்று கொண்டே இருக்கின்றனர்.
  • மண்டபம், கூடம், அடுக்களை என பல்வேறு அங்கங்களை உடையதாய், வான்வரை ஓங்கிய, தென்றல் காற்று இசைத்து நுழையும் பல சாளரங்களைக் கொண்ட நல் இல்லங்கள் உள்ளன.
  • ஆறு போன்ற அகன்ற நீண்ட தெருக்களில் மலையெனக் குவிந்து கிடக்கும் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்ற நகரம்,
  • விழா பற்றிய முரசறைவோனின் முழக்கமானது. பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது. இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும்
  • இசை, நீர்நிலைகளைக் கைகளினால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுகின்றது.
  • இசையைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர். பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும், அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன என்று மதுரைக் காஞ்சி, மதுரையின் பெருமையைக் கூறுகிறது.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions

Students can download 5th Maths Term 3 Chapter 1 Geometry InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 1 Geometry InText Questions

Activity 1 (Text Book Page No. 2)

Write the perimeter of each figure:
Question 1.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 1
Answer:
5 + 6 + 5 + 6 = 22 cm

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions

Question 2.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 2
Answer:
4 + 4 + 4 + 4 = 16 cm

Question 3.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 3
Answer:
3 + 5 + 7 = 15 cm

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions

Question 4.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 4
Answer:
6 + 3 + 4 + 3 + 4 + 3 + 6 + 9 = 38 cm

Question 5.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 5
Answer:
5 + 5 + 10 + 5 + 5 + 10 = 40 cm

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions

Question 6.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 6
Answer:
11 + 6 + 7 + 7 + 16 = 57 cm

Try This (Text Book Page No. 5)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 7
If a square of side 1 cm is cut out of the corner of a larger square with side 4 cm (See the figure). What will be the perimeter of the remaining shape?
Answer:
Perimeter of the shape = 4 cm + 4 cm + 4 cm + 4cm = 16 cm
Perimeter of the remaining shape
= 4cm + 4cm + 3cm + 1cm + 1cm + 3cm
= 16cm

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions

Activity 2 (Text Book Page No. 10)

Using the grid sheet find the area and perimeter of the rectangles and squares. Each square is 1 sq. cm.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 8
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry InText Questions 9

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

Students can download 5th Maths Term 3 Chapter 2 Numbers InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 2 Numbers InText Questions

Try This (Text Book Page.No 15)

Write down the estimated value of numbers and find their sum. Also, find the difference of their sum.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

Try This (Text Book Page.No 16)

Write down the estimated value of numbers and divide. Then find the difference between estimated value and actual value.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

Activity (Text Book Page.No 18)

A. Color the number’s row with the help of the following tips.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 5
1. Orange colour to the prime number row.
2. Don’t colour to the odd number row.
3. Blue colour to 6 in multiples row.
4. Orange colour to the square number row.
5. Dont colour to the even number row.
6. Blue colour to 8 in multiples row.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

B. Let us fill the number wheel
Question 1.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 8
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 10

Question 2.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 11

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

Question 3.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 9
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 12

C. Complete the circle using the given four basic operators to get the number 20.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 13
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number InText Questions 14

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

D. Fill in the blanks
Question 1.
5, 10, 15, ——, 25
Answer:
20

Question 2.
30, 24, ——- ,126
Answer:
18

Question 3.
7, 9, 11, ——-, ——-, 17
Answer:
15

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

Question 4.
1, 4, 9, ——-, 25
Answer:
16

Question 5.
1, 4, 7, ——-,13, ——-, 19
Answer:
10, 16

E. Answer the following

Question 1.
If BOOK is 43,
Then PEN is ———-
Answer:
PEN = 16 + 5 + 14 = 35

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

Question 2.
If SCHOOL is 1938151512,
Then CLASS is ———–
Answer:
31211919

Question 3.
If BAG is 10,
Then BOOK is ———–
Answer:
2 + 15 + 15 + 11 = 43

Question 4.
If LION is 50.
Then TIGER is ———–
Answer:
20 + 9 + 7 + 5 + 18 = 59

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers InText Questions

Question 5.
If HEN is 8514,
Then COCK is ———–
Answer:
315311

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Students can download 5th Maths Term 3 Chapter 2 Numbers Ex 2.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Question 1.
Fill in the blanks

(i) Estimation of 27 to its nearest Tens place is ———–
Answer:
30

(ii) Estimation of 65 to its nearest Tens place is ———–
Answer:
70

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

(iii) The cost of 1kg pomegranate is? 93. Then the estimated cost is
Answer:
90

(iv) Estimation of 76 bananas to its nearest Tens place is ———–
Answer:
80

Question 2.
There are 27 girls and 38 boys in a class. Find the sum and estimate the sum to its nearest Tens place.
Ans:
Number of girls = 30
Number of boys = 40
Sum = 30 + 40
= 70

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Question 3.
If the cost of a geometry box is ₹ 53 and the cost of a note book is ₹ 36, then estimate their cost to its nearest Tens place and find the sum. Also, find the difference between the estimated value and the actual value.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number Ex 2.1

Question 4.
If Kavitha has 93 pictures and she gave 42 pictures to her friend Neela, then estimate the picutres to its nearest Tens place and find their difference. Also, find the difference between actual value and the estimated value,
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Number Ex 2.2

Question 5.
The cost of a pen is ₹ 32. Find the cost of 6 pens and estimate it to its nearest Tens place.
Answer:
Cost of a pen = ₹ 32
Cost of 5 pens = 32 × 6 = 192.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Question 6.
Arun has ₹ 47, Raja has nearest Hundreds place. ₹ 54. Find the sum and estimate it to its nearest Hundreds place.
Answer:
Money A run has = Rs. 47
Money Raja has = Rs. 54
Sum = Rs. 47 + Rs 54 = 101
Sum ~ 100

Question 7.
There are 21 chocolate bars in a packet. Find the number of chocolate bars in 9 such packets and estimate it to its nearest Hundreds place.
Answer:
Number of chocolate bars in a packet = 21
Number of chocolate bars in 9 pockets = 21 × 9 = 189
Nearest hundred = 200

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 Numbers Ex 2.1

Question 8.
132 peanut candies are shared equally with 12 students. Find the share for one student and estimate it to its nearest Tens place.
Answer:
Number of peanut candies = 132
Number of students = 12
Number of candies one student get = 132 ÷ 12 = 11
Nearest tens = 10

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.2

Students can download 5th Maths Term 3 Chapter 1 Geometry Ex 1.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 1 Geometry Ex 1.2

Question 1.
The length of the side of each square is given below. Find its area.
(i) 10 metres
(ii) 5 cm
(iii) 15 metres
(iv) 16 cm
Answer:
(i) 10 metres
Area of the square = Length of a side × length of side
= 10 × 10 = 100 sq.m

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.2

(ii) 5 cm
Area of the square = Length of a side × length of side
= 5 × 5 = 25 sq.cm

(iii) 15 metres
Area of the square = Length of a side × length of side
= 15 ×15 = 225 sq.m

(iv) 16 cm
Area of the square = Length of a side × length of side
= 16 × 16 = 256 sq.cm

Question 2.
Find the area of the following rectangles.
(i) length = 6 cm and breadth = 3 cm
(ii) length = 7 in and breadth = 4
(iii) length = 8 cm and breadth = 5 cm
(iv) length = 9 m and breadth = 6 m
Answer:
(i) length = 6 cm and breadth = 3 cm
Area of the rectangle = Length × breadth
= 6 cm × 3 cm = 18cm 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.2

(ii) length = 7 in and breadth = 4
Area of the rectangle = Length × breadth
= 7 cm × 4 cm = 28 cm 2

(iii) length = 8 cm and breadth = 5 cm
Area of the rectangle = Length × breadth
= 8 cm × 5 cm = 40 cm 2

(iv) length = 9 m and breadth = 6 m
Area of the rectangle = Length × breadth
= 9 m × 6m = 54 m 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.2

Question 3.
If the cost of 1 sq.m of a plot is ₹ 800, then find the total cost of the plot that is 15 m long and 10 m breadth.
Answer:
Area of plot = length × breadth 15 × 10 = 150 sq.m
Cost of 1 sq.m of a plot of land = 800 rupees
Cost of a plot of land = 150 × 800 = 1,20,000 rupees.

Question 4.
The side of a square is 6 cm. The length of a rectangle is 10 cm and its breadth is 4 cm. Find the perimeter and area of both the square and rectangle.
Answer:
Perimeter of a square = 4 × length of a side = 4 × 6 cm: 24 cm
Area of a square = length of a side × length of a side
= 6 × 6 = 36cm2
Perimeter of a rectangle = 2 × length + 2 × breadth
= 2 × 10 + 2 × 4
= 20 + 8 = 28cm
Area of a rectangle = length × breadth
= 10 × 4 = 40 cm2

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.2

Question 5.
What will be the labour cost of laying the floor of an assembly hall which is 14 m long and 10 m breadth if the cost of laying is 60 per sq.m?
Answer:
Area of a rectangle = length × breadth
= 14 × 10 = 140 cm2
Cost of laying 1 sq.m = 60 rupees
Cost of laying the floor = 140 × 60 = 8400 rupees

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Students can Download 6th Tamil Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Question 1.
காந்தியடிகளின் பொன்மொழிகளைத் திரட்டுக.
Answer:
காந்தியடிகளின் பொன்மொழிகள் :
(i) எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உய்த்திருக்கிறது.
(ii) நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
(iii) அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.
(iv) எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.
(v) பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.
(vi) பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம்.
(vii) குணநலனும், புனிதத்தன்மையுமே பெண்ணின் உண்மையான ஆபரணம்.
(viii) சாதுவான வழியில், உன்னால் உலகத்தையும் அசைக்க முடியும்.
(ix) உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.
(x) எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.
(xi) தோல்வி மனச்சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.

Question 2.
காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்கள் :
(i) கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம்
(ii) வரிகொடா இயக்கம்
(iii) ஒத்துழையாமை இயக்கம்
(iv) உண்ணாவிரதம்
(v) உப்பு சத்தியாகிரகம்
(vi) சட்டமறுப்பு இயக்கம்
(vii) தனியாள் அறப்போராட்டம்
(viii) வெள்ளையனே வெளியேறு.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்
Answer:
ஆ) மதுரை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Question 2.
காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) திரு.வி.க
இ) உ.வே.சா.
ஈ) பாரதியார்
Answer:
இ) உ.வே.சா

பொருத்துக

1. இலக்கிய மாநாடு – பாரதியார்
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
3. குற்றாலம் – ஜி.யு.போப்
4. தமிழ்க் கையேடு – அருவி
Answer:
1. இலக்கிய மாநாடு – சென்னை
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்
3. குற்றாலம் – அருவி
4. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலோசனை – நாம் எச்செயலைச் செய்தாலும் பெரியவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும்.

2. பாதுகாக்க – நம் நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

3. மாற்றம் – பருவமழை பொய்த்ததால் பூமியின் தட்பவெப்பநிலை மாற்றம் அடைகிறது.

4. ஆடம்பரம் – நாம் ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்த்து எளிமையாக வாழவேண்டும்.

குறுவினா

Question 1.
காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை ?
Answer:
காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் நுழையாததற்குக் காரணம் :
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லை என்பதால் காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்லவில்லை.

Question 2.
காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
Answer:
1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும்
ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.

சிறுவினா

Question 1.
காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.
Answer:
காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு :
(i) காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.

(ii) செல்லும் வழியில், வயலில் வேலை செய்யும் உழவர்களைக் கண்டார். அவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருந்தனர்.

(iii) அப்போது, காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

(iv) பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார்.

(v) அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அந்த எளிமைத் திருக்கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Question 2.
காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
Answer:
(i) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
(ii) ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
(iii) திருக்குறள் அவரைக் கவர்ந்த நூல்.

(iv) 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.

(v) உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்து, “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார். இந்நிகழ்வுகளே காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன.

சிந்தனை வினா

Question 1.
காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?
Answer:
காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகள் :
(i) உண்மை பேசுதல்
(ii) நேர்மை
(iii) இன்னா செய்யாமை
(iv) பிறர் துன்பம் தீர்க்கும் திறம்
(v) அகிம்சை வழிப் போராட்டம்
(vi) ஆடம்பரத்தை எதிர்த்து எளிமையைப் போற்றியமை
(vii) தீண்டாமையை எதிர்த்தமை
(viii) ஒற்றுமையைப் போற்றியமை.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மதுரையில் காந்தியடிகளின் பெயரில் …………………… உள்ளது.
2. ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ………………………..
3. ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ……. வீட்டில் நடைபெற்றது.
4. எளிமையை ஓர் அறமாகப் போற்றியவர் ………………..
5. காந்தியடிகளைப் “பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டவர் ………………..
6. பாராதியாரை “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறியவர் …………………
7. “பாரதியாரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியவர் ……………..
8. தமிழகம் வந்த பிறகு காந்தியடிகளின் கோலம் …………….
9. காந்தியடிகள் மனிதர்களிடம் ……………………….. பாராட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
10. காந்தியடிகளைக் கவர்ந்த நூல்கள் ……………
11. சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு …………………
12. சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் …………………….
13. காந்தியடிகள் செல்வதற்கு முதலில் மறுத்த இடங்கள் ………………,……………..
Answer:
1. அருங்காட்சியகம்
2. 1919
3. இராஜாஜி
4. காந்தியடிகள்)
5. பாரதியார்
6. இராஜாஜி
7. காந்தியடிகள்)
8. எளிமைத் திருக்கோலம்
9. உயர்வு தாழ்வு
10. ஜி.யு.போப் எழுதிய தமிழ்க் கையேடு, திருக்குறள்
11. 1937
12. உ.வே.சாமிநாதர்
13. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி

வினாக்கள் :

Question 1.
காந்தியடிகளுக்கும் பாரதிக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் யாது?
Answer:
(i) 1919 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ரௌலட் சட்டத்தை எதிர்த்து இராஜாஜியின் வீட்டில் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார்.

(ii) “திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டார்.

(iii) “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்று கேட்டார் காந்தியடிகள்.

(iv) “அது முடியாது, திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்” என்று கூறிய பாரதியார், “நான் போய் வருகிறேன்” என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்.

Question 2.
பாரதியார் பற்றிக் காந்தியடிகளின் மதிப்பீடு யாது?
Answer:
(i) ஒருமுறை பாரதியார், காந்தியடிகளை ஒரு பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்தார். அவர் ‘வேறு பணி இருப்பதாகவும் அடுத்த நாள் நடத்த முடியுமா’ என்று கேட்டார். அதற்குப் பாரதியார் மறுத்துவிட்டுத் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் காந்தியடிகளின் இயக்கத்திற்கு வாழ்த்துகள் என்றும் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

(ii) அவர் சென்றதும் “இவர் யார்?” என்று காந்தி வியப்புடன் கேட்டார். “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்றார் இராஜாஜி.

(iii) “அப்படியா? இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றார் காந்தியடிகள். இந்நிகழ்ச்சியின் மூலம் பாரதியார் பற்றிய காந்தியடிகளின் மதிப்பீட்டை அறியலாம்.

Question 3.
காந்தியடிகள் ஆடம்பரத்தை எதிர்ப்பவர் என்பதற்கு சான்று ஒன்று தருக.
Answer:
(i) காந்தியடிகள் தமிழ்நாடு வந்தபோது காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றபோது கானாடுகாத்தான் என்னும் ஊரில் ஒரு பணக்காரர் வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீடு மிகவும் ஆடம்பரமாக இருந்தது.

(ii) வீட்டில் எங்குப் பார்த்தாலும் வெளிநாட்டு அலங்காரப் பொருட்கள் நிறைந்து இருந்தன. காந்தியடிகள் அந்தப் பணக்காரரிடம், “உங்கள் வீட்டை வெளிநாட்டுப் பொருள்களால் அழகு செய்து இருக்கிறீர்கள். அதற்குச் செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுத்தால் போதும். இதைவிட அழகாக செய்துவிடுவேன்” என்று கூறினார். பணக்காரர் தலைகுனிந்தார்.

(iii) அந்த வீட்டுக்குக் காந்தியடிகள் மறுமுறை வந்தபோது அங்கே வெளிநாட்டுப் பொருள்கள் ஒன்றுகூட இல்லை. காந்தியடிகள் மகிழ்வுடன் அவரைப் பாராட்டினார்.

Question 4.
காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட முதலில் ஏன் மறுத்தார்?
Answer:
(i) குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒருசாராருக்குத் தடை இருந்தது.

(ii) எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார்.

(iii) மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Question 5.
உ.வே.சாமிநாதர் பற்றிக் காந்தியடிகள் கூறியது யாது?
Answer:
(i) 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சா அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். அப்போது உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ச்சியடைந்தார்.

(ii) ” இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் கூறினார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

Students can Download 6th Tamil Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

Question 1.
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக.
Answer:
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை மாணவர்கள் தாங்களாகவே இசையோடு பாடி மகிழ்ந்திடுங்கள்.

Question 2.
நாட்டு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
(i) இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்பது போல இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாய்த் திகழ்வது நம்மைப் போன்ற மாணவர்கள்தாம். * நாம் நமது சக்தியை நல்வழியில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். நாம் பெற்றோர் கூறுவதனையும், ஆசிரியர் கூறுவதனையும் கேட்டு செயலாற்ற வேண்டும்.

(ii) நம்மைப் போன்ற மாணவர்கள் முயன்றால் எதிர்கால வரலாற்றையே சிறப்பாக மாற்றலாம். மாணவர்கள் இளம்வயதிலேயே பொதுத்தொண்டு செய்வதைப் பற்றி அறிய வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி இயக்கம் ஆகிய இயக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்புகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இத்தொண்டு பதிலுதவி பாராத் தொண்டாக இருக்க வேண்டும்.

(iii) பொதுத்தொண்டு செய்ய முனையும் மாணவர்கள் தன்னலமற்றவராக இருத்தல் வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை எதிர்ப்பவராகவும் இருக்க வேண்டும். அடக்கத்துடன் இருக்க வேண்டும். ஏமாற்றம் ஏற்பட்டால் சகித்துக் கொள்பவராய் இருக்க வேண்டும். அளவற்ற பொறுமையுடனும், கீழ்ப்படியும் பண்புடனும் இருத்தல் அவசியம் ஆகும்.

(iv) அப்துல்கலாம் கூறியதைப் போல் ‘வானம்தான் எல்லை, நான் பறந்து கொண்டே இருப்பேன்’ என்பதைப் போல் நம்முடைய வாழ்வில் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்கி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(v) ஆபத்துக் காலங்களில் மட்டும்தான் உதவி செய்ய வேண்டும் என்று இருக்கக்கூடாது. எந்நிலையிலும் பிறர் துயர் களைய நாம் உதவ வேண்டும். சாலை விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்புதல், அவருடைய உறவினர்க்குத் தகவல் அனுப்புதல், தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்க்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்யலாம்.

(vi) சுத்தமான குடிநீர், நல்ல உணவு போன்றவை ஏழை, எளியவர்களுக்குக் கிடைக்கும் வகையில் செயல்படும் எண்ணம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான அவசியத்தைத் தெளிவுப்படுத்த வேண்டும். டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

(vii) குளம், குட்டைகளை ஆழப்படுத்துதல், மரங்களை வெட்டாமல் பாதுகாத்தல், புதியதாக மரக்கன்றுகள் நடுதல், அனைத்து இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டுதல், – சுற்றுச்சூழல் பாதுகாத்தல் போன்றவை தற்கால தேவையாக உள்ளன. இவற்றை மாணவர்கள் நல்ல முறையில் செய்ய வேண்டும்.

(viii) விழாக்காலங்களில் பொது இடங்களில் மக்கள் செல்வதற்கு வரிசையை ஒழுங்குப்படுத்துதல், போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளையும் செய்யலாம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

(ix) “துறவும் தொண்டும்தான் இந்தியாவின் இலட்சியங்கள் அந்த இருவழிகளில் நாட்டைச் செலுத்தினால் மற்றவை தாமாக சரியாகிவிடும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இவ்விரு வழிகளில் மாணவர்கள் தொண்டு செய்து நாடு வளம் பெற வழி செய்ய வேண்டும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை
Answer:
ஆ) திருக்குறள்

Question 2.
காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை
ஆ) வைகைக்கரை
இ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்கரை
Answer:
அ) காவிரிக்கரை

Question 3.
கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்
Answer:
அ) சிற்பக்கூடம்

Question 4.
நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல் + ஆடை
ஆ) நூலா + டை
இ) நூல் + லாடை
ஈ) நூலா + ஆட
Answer:
அ) நூல் + ஆடை

Question 5.
எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
Answer:இ) எதிரொலிக்க

நயம் அறிக

Question 1.
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
எதுகை :
மெய்களை – மெய்யுணர்வு
ன்னை – அன்னிய

மோனை :
புதுமை – பூமி
தெய்வ – தேசம்
மெய்களை – மெய்யுணர்வு
காளி – காவிரி
ம்பனின் – ங்கை
ன்னி – காஷ்மீர்
புல்வெளி – புன்னகை
ல்லை – ட்டி
ன்னை – ன்னிய – ண்ணல் – றத்தின்

குறுவினா

Question 1.
தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்கள் :
(i) திருவள்ளுவர்
(ii) காளிதாசர்
(iii) கம்ப ர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

Question 2.
இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
Answer:
இந்தியாவின் மேற்குத் திசையில் தோன்றுகின்ற நதிகள் அனைத்தும் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.

சிறுவினா

Question 1.
தாராபாரதி பாடலின் கருத்தைச் சுருக்கி எழுதுக.
Answer:
தாராபாரதி பாடலின் பொருள் :
(i) பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்திய நாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது.

(ii) உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன.

(iii) கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

(iv) குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.

(v) புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சித் தருகின்றன.

(vi) அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகள் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

சிந்தனைவினா

Question 1.
நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
Answer:
நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை :
(i) இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் மன்னர்கள் என்றும் நாட்டைத் தாங்கும் தூண்கள் என்றும் கூறிக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? போதாது. அதனை மெய்ப்படுத்த மாணவ சமுதாயம் முன்வர வேண்டும்.

(ii) ஆம் இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான் உள்ளது. மாண்+ அவன் = மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்+அவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் ஊக்கத்தில் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது.

(iii) மண்ணைக் குழைத்தால்தான் நாம் விரும்பிய வண்ணம் மட்பாண்டங்கள் செய்யவியலும். கல்லை உளியால் செதுக்கினால்தான் அழகான சிலை உருவாகும். அவற்றை போல மாணவர்ளைச் செம்மைப்படுத்தினால்தான் நம் நாடு வளரும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

(iv) பூகோளப் பாடத்தில் இந்திய வரைபடம் வரையும் போது எந்த மாநிலங்களில் எந்தெந்த நதிகள் பாய்கின்றன? அவற்றிலிருந்து பிரியும் கிளை நதிகள் யாவை? அவற்றால் பயனடையும் நிலப்பரப்பு அளவு யாது? நம் நாட்டில் விளையும் பயிர்கள் யாவை? போன்ற விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். மாணவப் பருவத்தில் இவற்றையெல்லாம் அறிந்தால்தான் எதிர்காலத்தில் நாட்டைப் பற்றிய விழிப்புணர்வு அவனிடத்தில் தோன்றும்.

(v) ஒவ்வொரு மாணவனும், படித்த இளைஞனும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட வேண்டும். நாட்டை நல்வழிப்படுத்தவும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தவும் மாணவர்களின் மகத்தான பொறுப்பே முதலிடத்தில் உள்ளது.

(vi) படித்துவிட்டோம், வேலைக்குப் போகிறோம், வருவாயைப் பெற்றோரிடம் கொடுத்தோம் என்று இல்லாமல் பெற்றோருக்கு உதவுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், கிராமப்புற இளைஞர்கள் காலை, மாலை வேளைகளில் வயலுக்குச் சென்று தந்தைக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்யலாம். ஒவ்வொரு மாணவனும் இதைக் கடைப்பிடித்தால் நாடு கண்டிப்பாக முன்னேறும்.

(vii) மனிதநேயம் வளர மாணவர்கள் பாடுபடுதல் அவசியம். சமூகத் தொண்டுகளில் பெயருக்காகவும், புகழுக்காகவும் இல்லாமல் ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. இந்தியத் தாய்க்கு …………… நூலாடை.
2. இந்தியத் தாய்க்கு …………… என்பது மேலாடை.
3. கன்னிக்குமரியின் கூந்தலுக்குப் பூத்தொடுப்பது ………………….. தோட்டம்
4. அள்ள அள்ளக் குறையாதது ……………….
5. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது ……………..
6. தாராபாரதியின் இயற்பெயர் …………….
7. தாராபாரதி பெற்ற அடைமொழி ………….
8. புதுமைகளைச் செய்த நாடு …………….
9. அண்ணல் காந்தியின் அகிம்சை’ என்னும் சிறிய கைத்தடி அறத்தின் …………… ஆக விளங்கும்.
Answer:
1. திருக்குறள்
2. மெய்யுணர்வு.
3. காஷ்மீர்
4. அமுத சுரபி
5. இந்தியா)
6. இராதாகிருஷ்ணன்
7. கவிஞாயிறு
8. இந்தியத் திருநாடு
9. ஊன்றுகோல்

விடையளி

Question 1.
இந்திய நாட்டின் ஆடைகளாக விளங்குபவை எவை?
Answer:
(i) திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகிறது.
(ii) உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகிறது.

Question 2.
காளிதாசர், கம்பர் பற்றி தாராபாரதியின் கவிதைகள் கூறுவது யாது?
Answer:
(i) காளிதாசரின் இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கும்.
(ii) கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கையாற்றின் அலைகள் இசையமைக்கும்

Question 3.
பொற்காலம், கலைக்கூடம் எனக் குறிப்பிடப்படுபவை எவை?
Answer:
(i) புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து காட்சியளித்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன.
(ii) கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சியளிக்கின்றன.

Question 4.
பாரதநாடு எவ்வாறு திகழ்கிறது?
Answer:
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது.

Question 5.
அறத்தின் ஊன்றுகோல் எது?
Answer:
காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி அறத்தின் ஊன்றுகோலாக விளங்குகின்றது.

Question 6.
தாராபாரதி – குறிப்பு எழுதுக.
Answer:
(i) தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
(ii) இவரது அடைமொழி கவிஞாயிறு.
(iii) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள் ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

நூல் வெளி
தாராபராதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இவற்றிய நூல்களாகும். இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பாடலின் பொருள்

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் . தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Students can Download 9th Tamil Chapter 7.3 முத்தொள்ளாயிரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 1.
நீங்கள் வசிக்கும் பகுதி, வேந்தருள் யார் ஆண்ட நாடு, என்பதை அறிந்து அவர்களைப் பற்றிய செய்தித்தொகுப்பேடு ஒன்றை உருவாக்குக.
Answer:
நாங்கள் வசிக்கும் பகுதி நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி என்னும் ஊர் ஆகும்.
தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக் கொண்ட மன்னன் “சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்” ஆவார். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்துப் பாண்டியரும் தென்காசியையே தலைநகராகக் கொண்டு தென்காசி பெரிய கோயிலில் உள்ள சிவந்த பாதவூருடைய ஆதீன மடத்தில் முடிசூட்டிக் கொண்டனர்.
தென்காசி பெரியகோயில் பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

தென்காசிப் பகுதியை ஆண்ட பாண்டியர்களில் “கொல்லங்கொண்டான்” என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான். தென்காசியில் பாண்டிய மன்னர்களின் ஆளுகை 17ம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றது அறியப்படுகிறது. தென்காசி கோவிலில் உள்ள இவனது மெய்க்கீர்த்தி “பூமிசைவளிதை நாவினில் பொலிய” எனத் தொடங்குகிறது. பொன்னி பெருமான், மானக்கவசன் போன்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். திருக்குற்றாலத்தில் சேர மன்னன் ஒருவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் - 3

ஆற்றிய அறப்பணிகள்:

  • ஐந்து ஊர்களில் அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான்.
  • திருக்குற்றாலம், திருப்புடைமருதூரில் உள்ள சிவாலயங்களுக்கு மண்டபங்கள் அமைத்தான்.
  • நெல்லை சிவன் கோவிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான்.
  • செங்கோல் ஆட்சி நடத்திய சடையவர்மன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான்.
  • இவ்வாறு எங்கள் ஊரை ஆண்ட பாண்டிய வேந்தனின் பெருமைகளை எழுதிக்கொண்டே போகலாம். எம் ஊரில் வசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 2.
நெல் விதைப்பு முதல் அரிசி புடைப்பது வரை, வயல்களக்காட்சியை அறிந்து தகுந்த படங்களுடன் காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் - 4

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக.
அ) உருவகத்தொடர், வினைத்தொகை
ஆ) பண்புத் தொகை, வினைத்தொகை
இ) வினைத்தொகை, பண்புத்தொகை
ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்
Answer:
ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 2.
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை – இருக்கை
ஆ) புள் – தாவரம்
இ) அள்ளல் – சேறு
ஈ) மடிவு – தொடக்கம்
Answer:
இ) அள்ளல் – சேறு

Question 3.
நச்சிலைவேல் கோக் கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு
ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
Answer:
இ) சேர நாடு, சோழ நாடு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

குறுவினா

Question 1.
அள்ளல் பழனத்து அரக்காம்பால் வாயவிழ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
Answer:

  • அள்ளல் – சேறு
  • பழனம் – வயல்

சிறுவினா

Question 1.
சேர, சோழ, பாண்டி நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
Answer:
சேரநாடு:
சேறுபட்ட நீர்வளம் மிகுந்த வயல்பகுதிகளில் அரக்கு நிறம்கொண்ட செவ்வாம்பல் மலர்கள் மெல்ல தம் வாயவிழ்ந்து விரிந்தன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்தது என எண்ணி தம் தமது கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து, தம் குஞ்சுகளைத் தீயினின்று காப்பாற்றும் பொருட்டு அணைத்துக்கொண்டன. இப்பறவைகளின் இத்தகு ஆரவாரம் தவிர, மக்கள் துயரமிகுதியால் செய்யும் ஆரவாரத்தைச் சேரநாட்டில் காண இயலாது.

சோழநாடு:
சோழநாடு ஏர்க்களச்சிறப்பையும், போர்க்களச் சிறப்பையும் கொண்டிருந்தது. வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போரின் மீது ஏறி நி;ன்று கொண்டு அருகில் இருக்கும் உழவர்களைப் பார்த்து “நாவலோ” என்று கூவி அழைப்பர் நாவலோ “இந்நாள் வாழ்க சிறக்க” என்று பொருள்) இவ்வாறு வயல் வளம் மிகுந்ததாகக் காணப்பட்டது சோழநாடாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

பாண்டியநாடு:
வெண்கொற்றக்குடையை உடைய தென்னவனாகிய பாண்டியனுடைய ஒளி பொருந்திய நாட்டின்கண் எங்கு நோக்கினும் முத்துக்குவியலே காணப்பட்டது. வெண்சங்குகள் மணலில் ஈனுகின்ற இளஞ்சினையும், குவிந்துகிடக்கின்ற புன்னை மரத்தின் அரும்புகளும், பாக்கு மரங்களின் பாளைகளில் இருந்து சிந்திய மணிகளும் முத்துக்குவியல்களைப்போலவே காட்சியளித்தன என்று முத்தொள்ளாயிரம் மூன்று நாடுகளின் வளங்களையும் எடுத்துக் கூறுகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
அ) சோழநாடு
ஆ) சேரநாடு
இ) பாண்டிய நாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
ஆ) சேரநாடு

Question 2.
‘நாள்வாழ்க’ என்னும் வாழ்த்துப்பொருளை உணர்த்தும் சொல் யாது?
அ) காவலோ
ஆ) நாவலோ
இ) பந்தரோ
ஈ) நச்சிலையோ
Answer:
ஆ) நாவலோ

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 3.
“கொல் யானை மேலிருந்து” இத்தொடரில் கொல்யானை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) உரிச்சொற்றொடர்
இ) உருவகம்
ஈ) வினைத்தொகை
Answer:
ஈ) வினைத்தொகை

Question 4.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் - 1
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 5.
பொருத்திக்காட்டுக.
அ) கோதை – 1. சோழர்
ஆ) கிள்ளி – 2. பாண்டியர்
இ) தென்னன் – 3. சேரர்
அ) 3, 1, 2
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 2, 3, 1
Answer:
அ) 3, 1, 2

Question 6.
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு அடிகளில் இடம் பெறும் அணி ………………
அ) உவமை
ஆ) உருவகம்
இ) பிறிதுயெறுதல்
ஈ) வேற்றுமை
Answer:
அ) உவமை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 7.
முத்தொள்ளாயிரத்தின் பா …….
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
அ) வெண்பா

Question 8.
புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முத்தொள்ளாயிரத்தின் செய்யுள்கள்
அ) 106
ஆ) 108
இ) 110
ஈ) 112
Answer:
ஆ) 108

Question 9.
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ………….
அ) நக்கீரர்
ஆ) பரணர்
இ) கபிலர்
ஈ) அறிய முடியவில்லை
Answer:
ஈ) அறிய முடியவில்லை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 10.
முத்தொள்ளாயிரம் ஆசிரியரின் காலம் ……………….
அ) முன்றாம் நூற்றாண்டு
ஆ) நான்காம் நூற்றாண்டு
இ) ஐந்தாம் நூற்றாண்டு
ஈ) ஆறாம் நூற்றாண்டு
Answer:
இ) ஐந்தாம் நூற்றாண்டு

Question 11.
பொருத்திக்காட்டுக.
அ) சேர நாடு – 1. ஏர்க்க ளச் சிறப்பு
ஆ) சோழ நாடு – 2. அச்சமில்லாத நாடு
இ) பாண்டிய நாடு – 3. முத்துடை நாடு
அ) 2, 1, 3
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 2, 3, 1
Answer:
அ) 2, 1, 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

குறுவினா

Question 1.
சோழ நாட்டின் சிறப்புகளாக முத்தொள்ளாயிரச் செய்யுளில் கூறப்படுவன யாவை?
Answer:
ஏர்க்களச் சிறப்பு, போர்க்களச் சிறப்பு.

Question 2.
நீர்ப்பறவைகள் அஞ்சி தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டதற்காண காரணம் யாது?
Answer:
சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்ததைக் கண்டு தண்ணீரில் தீப்பிடித்துவிட்டதாக அஞ்சி தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் நீர்ப்பறவைகள் ஒடுக்கி வைத்துக் கொண்டன.

Question 3.
‘நாவலோ’ என்று கூவி அழைப்பவர் யார்?
Answer:
நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்று கொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ’ என்று கூவி அழைப்பர்.

Question 4.
முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெறும் மன்னர்களைக் குறிப்பிடுக.
Answer:
சேர, சோழ, பாண்டியர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 5.
அஞ்சி, வெண்குடை – இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பை எழுது.
Answer:
அஞ்சி – பெயரெச்சம்,
வெண்குடை – பண்புத்தொகை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Students can Download 6th Tamil Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. “இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது” என்றாள் மலர்க்கொடி, “இந்த மலரைப் பார் அந்த மலரைவிட அழகாக உள்ளது” என்றான் கரிகாலன்.

Question 1.
இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்கள் :
அவனுடைய, அங்கு, இங்கு, இம்மலர், அம்மலர், இந்த, அந்த

Question 2.
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.
Answer:
நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் :
அது, அவர்கள், அவள், அவை, அந்த வீடு, இது, இவர்கள், இவள், இவை, இந்த வீடு, இப்புத்தகம், அப்புத்தகம், இப்பையன், அப்பையன்.

பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக

செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது? என்று வினவினான். “யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா. 2 பெரியவர்களுக்கா?” என்று கேட்டார் விற்பனையாளர். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?” என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது” என்றார் விற்பனையாளர்.

பத்தியில் உன்ன வினாச்சொற்கள் :
1. எங்கு ?
2. யாருக்கு?
3. ஏன்?
4. இல்லையோ?
5. ஆடைதானே?

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் வீடு ……………. உள்ள து. (அது/அங்கே )
2. தம்பி …………….. வா. (இவர்/இங்கே )
3. நீர் ………………. தேங்கி இருக்கிறது? (அது/எங்கே )
4. யார் …………….. தெரியுமா? (அவர்/யாது)
5. உன் வீடு. …………. அமைந்துள்ளது? (எங்கே என்ன)
Answer:
1. அங்கே
2. இங்கே
3. எங்கே
4. அவர்
5. எங்கே

குறுவினா

Question 1.
சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அவை அகச்சுட்டு, புறச்சுட்டு, அண்மைச்சுட்டு, சேய்மைச்சுட்டு, சுட்டுத்திரிபு.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Question 2.
அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 1

சிந்தனை வினா

Question 1.
அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
Answer:
அகச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) அது, இவன், அவர்.

அகவினா : வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) எது? எவர்? யார்?

புறச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) அப்பையன், இப்பெட்டி

புறவினா : வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) எவ்வீடு? வருவானோ ?
(i) அகச்சுட்டு, அகவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் உள்ளேயே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
(ii) புறச்சுட்டு, புறவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் வெளியே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

மொழியை ஆள்வோம்

சொற்றொடர்ப் பயிற்சி.
அ) அந்த, இந்த என்னும் சுட்டுச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
Answer:
(i) அந்தக் குழந்தை அழகாக இருந்தது.
(ii) இந்தக் குளத்தில் நீர் வற்றி விட்டது.

ஆ) எங்கே, ஏன், யார் ஆகிய வினாச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
Answer:
(i) “எங்கே செல்கிறாய்?” என்று கண்ணன் முகிலனிடம் கேட்டான்.
(ii) “ஏன் அழுகிறாய்?” என்று தாய் குழந்தையைக் கேட்டாள்.
(iii) திருக்குறளை இயற்றியவர் யார்?

சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக

அ) நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு, அரசு)
Answer:
நான் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன்.

ஆ) பொன்னன் முன்னேறினான். (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)
Answer:
பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்.

பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 2

(i) நான் ஊருக்குச் சென்றேன்.
(ii) நீ ஊருக்குச் சென்றாய்.
(iii) அவன் ஊருக்குச் சென்றேன்.
(iv) அவள் ஊருக்குச் சென்றான்.
(v) அவர் ஊருக்குச் சென்றாள்.

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்

அ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
Answer:
நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.

ஆ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)
Answer:
நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

இ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)
Answer:
நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும். ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருட்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

Question 1.
கிடைக்கும் பொருள்களின் …………..க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
அ) அளவை
ஆ) மதிப்பை
இ) எண்ணிக்கையை
ஈ) எடையை
Answer:
ஆ) மதிப்பை

Question 2.
சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை ………………. மாற்றலாம்.
Answer:
கோலமாவாக

Question 3.
வணிகத்தின் நோக்கம் என்ன?
Answer:
மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.

Question 4.
மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
Answer:
கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இது மதிப்புக் கூட்டுதல் எனப்படும்.

Question 5.
இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
Answer:
வணிகம்.

மொழியோடு விளையாடு

விடுகதைக்கு விடை காணுங்கள்

(கப்பல், ஏற்றுமதி இறக்குமதி, தராசு, நெல்மணி, குதிரை)
1. தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?
2. தண்ணீ ரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான். காலில்லாத அவன் யார்?
3. பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்?
4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?
5. ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும், அவை என்ன?
Answer:
1. தராசு
2. கப்பல்
3. குதிரை
4. நெல்மணி
5. ஏற்றுமதி இறக்குமதி

பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக

நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

1. கோமேதகம்
2. நீலம்
3. பவம்
4. புஷ்பராகம்
5. மரகதம்
6. மாணிக்கம்
7. முத்து
8. வைடூரியம்
9. வைரம்.

செயல் திட்டம்

Question 1.
பண்டைத் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றியும் அங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் எழுதுக.
Answer:
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள், வணிகத் தலங்களாக அமைந்திருந்தன.

இத்துறைமுகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல், கொற்கை பெருமைகளைப் பாராட்டியுள்ளார். மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில், இந்த நகர அமைப்புகள், மாட மாளிகைகள் தன்னைக் கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.

கொற்கை, புகார் போன்ற துறைமுகங்களில் அரேபிய குதிரைகள் ஓடுகின்ற சத்தம், பொருட்களை வாங்கும் பொழுது ரோமானியர்கள் கொடுக்கும் பொற்காசுகளின் சலசலப்பு, உயர்தமிழ் செம்மொழிக்கு ஒப்ப அரபி, ரோமானியரின் மொழி, பேச்சுக்கள், இரவு நேரங்களில் வெளிநாட்டு லாந்தர்களின் மந்தகாச ஒளி, வெளிநாட்டினர் நடமாட்டத்தில் தூங்கா நகரங்களாக இவை இருந்தன. இந்து, கிறித்துவம், இஸ்லாம் மத நல்லிணக்கமும் பேணப்பட்டது.

இந்தத் துறைமுகங்கள் பண்டைய காலத்தில் கடற்கொள்ளையர் அணுக முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளன. கொற்கை முத்து மற்றும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லியத் துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற பொருட்களை யவனர், உரோமர், எகிப்தியர், கிரேக்கர் ஆகியோர் தங்களுடைய பொற்காசுகளைக் கொடுத்து, தமிழ் மண்ணிலிருந்து கடல் வழியாக எடுத்துச் சென்றதற்குச் சான்றுகள் உள்ளன.

Question 2.
உங்களுக்குத்தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதி அதில் பயன்படுத்தப்படும் ஐந்தைந்து சொற்களைப் பட்டியலிடுக. (எ.கா.) உழவு
Answer:
(i) உழவுத்தொழில் – கலப்பை, அறுவை இயந்திரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயற்கை உரங்கள்.
(ii) நெசவுத்தொழில் – ஊடைநூல், பாவுநூல், கரக்கோல், மிதிக்கட்டை, கத்திக் கயிறு
(iii) தச்சுத்தொழில் – உளி, அரம், மரப்பலகைகள், ஒட்டுப்பலகைகள், சுத்தி.
(iv) உணவுத்தொழில் – பாத்திரங்கள் (தட்டு, கரண்டி, குவளைகள், சிறு பாத்திரங்கள், பெரிய பாத்திரங்கள்) அடுப்பு, சமையலுக்குத் தேவையான பொருட்கள்.

குறுக்கெழுத்துப்புதிர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 3
இடமிருந்து வலம்
1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர்.
2. சுட்டிக்காட்டப் பயன்படுவது ……………. எழுத்து

வலமிருந்து இடம்
4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை.

மேலிருந்து கீழ்
1. காடும் காடு சார்ந்த இடமும்
3. தோட்டத்தைச் சுற்றி …………… அமைக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கீழிருந்து மேல்
4. மீனவருக்கு மேகம் ……………. போன்றது.
5. உடலுக்குப் போர்வையாக அமைவது.

விடைகள் :
இடமிருந்து வலம் : 1. முடியரசன், 2. சுட்டு
மேலிருந்து கீழ் : 1. முல்லை , 3. வேலி

வலமிருந்து இடம் : 4. குதிரை, 5. பண்டமாற்று
கீழிருந்து மேல் :4. குடை, 5. பனி மூட்டம்

கலைச்சொல் அறிவோம்

1. பண்ட ம் – Commodity
2. கடற்பயணம் – Voyage
3. பயணப் படகுகள் – Ferries
4. தொழில் முனைவோர் – Entrepreneur
5. பாரம்பரியம் – Heritage
6. கலப்படம் – Adulteration
7. நுகர்வோர் – Consumer
8. வணிகர் – Merchant

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Students can Download 6th Tamil Chapter 6.4 உழைப்பே மூலதனம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.4 உழைப்பே மூலதனம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Question 1.
உழைப்பே மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
காட்சி -1

கதாபாத்திரங்கள்: அருளப்பர், வளவன்,
அமுதா, எழிலன் (அருளப்பர் பிள்ளைகளை அழைத்தல்)

அருளப்பர் : பிள்ளைகளே! நான் வெளிநாட்டிற்குச் செல்ல இருக்கிறேன். நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நான் கொடுத்த பணத்தைக் கவனமாகப் பாதுகாத்து எனக்குத் திருப்பித் தர வேண்டும்.
(ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். மூவரும் மகிழ்ந்தனர்.)

வளவன் : நமது திறமையை எடைப்போடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

அமுதா : நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

எழிலன் : நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்.
வளவன் உழவுத்தொழில் செய்து முன்னேறினான். அமுதா ஆடு, மாடு வளர்த்து தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்றுப் பொருள் ஈட்டினாள். எழிலன் பணத்தைப் பெட்டியில் வைத்து வீட்டின் பின்புறம் புதைத்து வைத்தான்.)

காட்சி -2

கதாபாத்திரங்கள் : அருளப்பர், வளவன், அமுதா, எழிலன்
(அருளப்பர் பயணம் முடிந்து திரும்பி வந்தார்.)

அருளப்பர் – 1: வளவா! நான் கொடுத்த பணம் எங்கே?

வளவன் : அப்பா, நீங்கள் எனக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வேளாண்மைச் செய்தேன். நல்ல வருவாய் கிடைத்தது. நீங்கள் கொடுத்த பணம் இப்போது இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது.

அருளப்பர் : நல்லது! உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. அந்தப் பணத்தை நீயே வைத்துக் கொள் வேளாண்மையைத் தொடர்ந்து செய். அமுதா! நீ என்ன செய்தாய்?

அமுதா : அப்பா! நான் மாடுகளை வாங்கிப் பராமரித்தேன். நீங்கள் தந்த பணம் இரண்டு மடங்காக ஆகியிருக்கிறது. இதோ பெற்றுக் கொள்ளுங்கள்.

அருளப்பர் : மிக்க மகிழ்ச்சி. இந்தப் பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக் கொள். பண்ணையை மேலும் விரிவாக்கி நடத்து. வாழ்த்துகள். எழிலா! உன்னிடம் கொடுத்த பணம் எங்கே?

எழிலன் : அப்பா! நீங்கள் கொடுத்த பணத்தை மிகப் பத்திரமாகப் பெட்டியில் வைத்திருக்கிறேன். (தந்தை மனம் வருந்தினார்).

அருளப்பர் : பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். எழிலா! நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். வயதில் இளையவன் நீ. என்னுடன் சிறிதுகாலம் உடனிருந்து தொழிலைக் கற்றுக் கொள். உன் எதிர்கால வாழ்வுக்கு அது உதவும்.
(தந்தை கூறியதைக் கேட்ட எழிலன், தன் தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என முடிவு செய்தான்.)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Question 2.
நீங்கள் எழிலனாக இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? வகுப்பறையில் பேசுக.
Answer:
நான் எழிலனாக இருந்தால் பல்பொருள் அங்காடி வைப்பேன். ஏனெனில் அங்குதான் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைக்கும். பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டு விற்கப்படவில்லையே என வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எப்போதும் வியாபாரம் நடக்கும். அதுமட்டுமின்றி நான் உற்பத்தியாளரிடம் நேரிடையாகப் பொருள்களை வாங்கி விற்பேன். அதிக இலாபமின்றி நியாயமான முறையில் வியாபாரம் செய்வேன். மக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொள்வேன். “கொடுப்பதும் குறைவிலாது, கொள்வதும் மிகை கொளாது” என்ற பழந்தமிழரின் வாக்கினை மெய்ப்பிப்பேன்.

என்னுடைய அங்காடியில் இயன்றவரை இயற்கை முறையில் பயிர்செய்த காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றையே விற்பேன். என் நோக்கம் நுகர்வோராகிய மக்கள் மனநிறைவுடன் என் அங்காடிக்கு வந்து செல்ல வேண்டும் என்பதாகும். அதன்படி வணிகம் செய்து என் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.

சிந்தனை வினா
Question 3.
கதையில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?ஏன்?
Answer:
கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் என்னைக் கவர்ந்தவர் அமுதா.

காரணம் : ஆடு, மாடுகளை வளர்த்து அதில் வரும் பணத்தைச் சேமித்து வைத்தாள். அவள் வருமானத்திற்காக அதனைச் செய்தாலும் பல உயிர்களைக் காப்பாற்றுகிறாள். இதனால் அவளிடம் உள்ள கருணை, அன்பு, பரிவு போன்ற பண்புகள் வெளிப்படுகின்றன. இக்காரணத்தினால் எனக்கு அமுதா கதாபாத்திரம் கவர்ந்ததாக உள்ளது.

மதிப்பீடு

சுருக்கி எழுதுக

Question 1.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
‘பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்’ என்பது ஔவையாரின் அறிவுரை, பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும். அதுவே பணத்தின் பயன். இக்கருத்தை விளக்கும் கதைதான் உழைப்பே மூலதனம்’

அருளப்பர் விடைபெற்றுச் செல்லல் :
பூங்குளம் என்னும் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தமது பிள்ளைகளான வளவன், அமுதா, எழிலன் ஆகியோருக்குத் தனித்தனியாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அதனைக் கவனமாகப் பாதுகாத்துத் தனக்குத் திருப்பித் தரவேண்டும் என்று கூறிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.

பிள்ளைகளின் ஆலோசனை :
“நமது திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றான் வளவன். “நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அமுதா. “நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்” என்றான் எழிலன்.

வளவனின் செயல் :
வளவன் உழவுத்தொழிலில் ஆர்வம் உடையவன். தந்தை கொடுத்த பணத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தான். உழுது, பண்படுத்திக் காய்கறித் தோட்டம் அமைத்தான். நாள்தோறும் கவனமுடன் பாதுகாத்தான். தோட்டம் முழுவதும் அவரை, வெண்டை , கத்தரி, பாகற்காய் முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தான்.

அமுதாவின் செயல் :
அமுதாவிற்கு ஆடு, மாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம். தந்தை கொடுத்த பணத்தில் நாட்டுப் பசுக்கள் சிலவற்றை வாங்கினாள். அவற்றை அன்போடு பராமரித்தாள். அவை தந்த பாலை வீடு வீடாகச் சென்று விற்றாள். மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.

எழிலனின் செயல் :
எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்தான். வீட்டில் இருந்தால் தொலைந்து விடும் என்பதால் பணத்தைப் பெட்டியில் வைத்து மூடி, அதனை வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்து வைத்தான்.

வளவனை விசாரித்த அருளப்பர் :
அருளப்பர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். பிள்ளைகளிடம் தான் கொடுத்த பணத்தைப் பற்றி விசாரித்தார். வளவன் வேளாண்மைத் தொழில் செய்ததாகவும் அதிலிருந்து நல்ல வருவாய் வந்ததாகவும் கூறினான். இரண்டு மடங்காக பணம் சேர்ந்துள்ளது என்று கூறி பணத்தைத் தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த தந்தை “உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. இப்பணத்தில் வேளாண்மையைத் தொடர்ந்து செய்” என்றார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

அமுதாவின் பதில்:
அமுதா, தான் மாடுகளை வாங்கிப் பராமரித்ததாகவும் அதில் பணம் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது என்றும் கூறினாள். மிக்க மகிழ்ச்சி. “இந்தப் பணத்தை எனது 6 பரிசாக நீயே வைத்துக் கொள்” என்றார் அருளப்பர்.

எழிலனின் பதில் :
எழிலன் தனக்குக் கொடுத்த பணத்தைப் பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறினான். தந்தை ஏமாற்றம் அடைந்தார். அவனது முதிர்ச்சி இன்மையைக் கண்டு மனம் வருந்தினார்.

அருளப்பரின் அறிவுரை :
“பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். என்னுடன் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்” என்றார்.

முடிவுரை :
எழிலன் தன்னுடைய தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தான்.