Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Students can Download 6th Tamil Chapter 8.5 பெயர்ச்சொல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.5 பெயர்ச்சொல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறி, காரணப் பெயர்களை அறிந்து எழுதுக.
நீர் வற்றிப்போன குளத்தில் செந்தாமரை, ஆம்பல், கொட்டி, நெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தன. நீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும் மரங்கொத்தி போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. காலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. இப்போது அக்குளத்தைக் கண்டு கொள்வார் யாருமில்லை
Answer:
இடுகுறிப் பெயர் :
(i) குளம்
(ii) ஆம்ப ல்
(iii) கொட்டி
(iv) நெய்தல்
(v) சூரியன்

காரணப் பெயர் :
(i) மரங்கொத்தி
(ii) செந்தாமரை

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை
ஆ) மண்
இ) முக்காலி
ஈ) மரங்கொத்தி
Answer:
ஆ) மண்

Question 2.
காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம்
ஆ) வளையல்
இ) சுவர்
ஈ) யானை
Answer:
ஆ) வளையல்

Question 3.
இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
அ) வயல்
ஆ) வாழை
இ) மீன்கொத்தி
ஈ) பறவை
Answer:
ஆ) வாழை

குறுவினா

Question 1.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
Answer:
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
(i) பொருட்பெயர்
(ii) இடப்பெயர்
(iii) காலப்பெயர்
(iv) சினைப்பெயர்
(v) குணப்பெயர்
(vi) தொழிற்பெயர்

Question 2.
இடுகுறிப்பெயர் என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் இட்டு வழங்கிய பெயர் இடுகுறிப்பெயர் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Question 3.
காரணப்பெயர் என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர் காரணப்பெயர் ஆகும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை.

சிறுவினா

Question 1.
அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
Answer:
அறுவகைப் பெயர்ச்சொற்கள் :
(i) பொருட்பெயர் – மயில், பறவை
(ii) இடப்பெயர் – தெரு, பூங்கா
(iii) காலப்பெயர் – நாள், ஆண்டு
(iv) சினைப்பெயர் – இலை, கிளை
(v) பண்புப்பெயர் – செம்மை, நன்மை
(vi) தொழிற்பெயர் – ஆடுதல், நடித்தல்.

சிந்தனை வினா

Question 1.
இடுகுறிப்பெயர், காரணப்பெயர் ஆகியவற்றின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
Answer:
இடுகுறிப்பெயர் – பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்டு வழங்கியவை இடுகுறிப்பெயர்கள் ஆகும். இவ்வகைப் பெயர்களுக்குக் காரணம் அறிய இயலாது. இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

(i) இடுகுறிப் பொதுப்பெயர் : காரணம் ஏதுமின்றி, பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிப் பொதுப்பெயராயிற்று.
(எ.கா.) மரம், பழம்

(ii) இடுகுறிச் சிறப்புப்பெயர் : காரணம் ஏதுமின்றி, சிறப்புத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
(எ.கா.) தென்னை , வாழை

காரணப்பெயர் – பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் காரணம் கருதி ஒரு பொருளுக்குப் பெயர் இட்டதனால் காரணப் பெயராயிற்று. இவை ஒரு காரணத்தின் அடிப்படையில் வழங்கிய பெயர்களாக இருக்கும். காரணப் பெயர் இரண்டு வகைப்படும். (எ.கா) நாற்காலி, கரும்பலகை.

(i) காரணப் பொதுப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பதால் காரணப் பொதுப்பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) பறவை, அணி.

(ii) காரணச் சிறப்புப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி.

மொழியை ஆள்வோம்

பேசுக
Question 1.
உங்கள் பகுதிகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் குறித்துப் பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம். நான் தொண்டு நிறுவனங்கள் பற்றிப் பேசவிருக்கிறேன்… இந்நிறுவனங்கள் சமூகத்தில் நிலவும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவை ஆகும். மக்களுக்குப் பல வகைகளில் இவை உதவி புரிகின்றன.

முதலில் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் பற்றிக் கூறுகிறேன். இது இந்திய அரசினால் நிறுவப்பட்ட சேவையாகும். இச்சேவை பாலர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வழங்குகிறது. இச்சேவை அங்கன்வாடி மையங்கள் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இச்சேவை 1975 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. நோய்த்தடுப்பு, கூடுதல் ஊட்டச்சத்து, சுகாதார சோதனை, பரிந்துரை சேவைகள், முன்பள்ளி அல்லாத முறையான கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்று தனியார் சேவை நிறுவனங்களும் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் தொடங்குவதற்கு உதவி செய்கின்றன. மூக்குக் கண்ணாடி வழங்குதல், பெண்களுக்கான சுயதொழில் உதவி, கல்விக்கான உதவி, நலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் அளித்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றன. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் இலவச மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை இரத்ததான முகாம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை எளியோருக்கு உதவுகின்றன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

எங்கள் பகுதியில் உள்ள சமூக நிறுவனம் மரம் நடுவிழா, நிழற்குடை அமைப்பு, போன்றவற்றைச் செவ்வனே செய்து வருகின்றன. உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல நன்மை தரும் அறச்செயல்களைச் செய்து இந்நிறுவனங்கள் மக்களுக்கு உதவிகள் புரிகின்றன.

குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக

Question 1.
நாய்க்குட்டி – குழிக்குள் – கத்தும் சத்தம் – முகிலன் – முதலுதவி – பால் – தூங்கியது – வாலாட்டியது.
Answer:
குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுதல் :
முகிலன் ஒருமுறை வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தான். சாலையோரத்தில் இருந்த குழிக்குள் நாய்க்குட்டி ஒன்று விழுந்து கிடந்தது. மேலே ஏறுவதற்கு இயலாததால் கத்திக் கொண்டிருந்தது. முகிலன் அப்பள்ளத்தில் இறங்கி அந்நாய்க்குட்டியைத் தூக்கினான்.

அதற்கு முதலுதவி செய்தான். அதற்குக் கொஞ்சம் பால் ஊற்றினான். அந்நாய்க்குட்டி பாலைக் குடித்துவிட்டு சோர்வில் தூங்கியது. கொஞ்ச நேரத்தில் கண் விழித்துப் பார்த்தது. முகிலனைப் பார்த்து வாலாட்டியது. இக்கதையின் மூலம் உயிர்களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை உணரலாம்.

அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக

1. கருணை
2. அச்சம்
3. ஆசை

அகராதி :
1. கருணை – இரக்கம்
2. அச்சம் – பயம்
3. ஆசை – விருப்பம்

கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக

Question 1.
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
Answer:
அகரவரிசை :
1. ஆசிரியர்
2. ஓணான்
3. கிளி
4. தேனி
5. தையல்
6. பழம்
7. பூனை
8. மனிதன்
9. மாணவன்
10. மான்
11. வௌவால்.

பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுக

Question 1.
கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
Answer:
(i) கைகள் – சினைப்பெயர்
(ii) சான்றோர் – பொருட்பெயர்

Question 2.
அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.
Answer:
அடைதல் – தொழிற்பெயர்.

Question 3.
அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.
Answer:
அடங்கல் – தொழிற்பெயர்.

Question 4.
நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.
Answer:
நீதிநூல் – பொருட்பெயர்

Question 5.
மாலை முழுதும் விளையாட்டு.
Answer:
மாலை – காலப்பெயர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Question 6.
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
Answer:
மேலோர் – பொருட்பெயர்.

பின்வரும் பாடலைப் படித்து, அடிக்கோடிட்ட சொல் எவ்வகைப் பெயர் என்பதை எழுதுக

1. விடியலில் துயில் எழுந்தேன். – விடியல் – காலப்பெயர்
2. இறைவனைக் கை தொழுதேன். – கை – சினைப்பெயர்
3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன் –  மதுரை – இடப்பெயர்
4. புத்தகம் வாங்கி வந்தேன். – புத்தகம் – பொருட்பெயர்
5. கற்றலைத் தொடர்வோம் இனி. – கற்றல் – தொழிற்பெயர்
6. நன்மைகள் பெருகும் நனி.  – நன்மைகள் – பண்புப்பெயர்

மொழியோடு விளையாடு

கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல் 1
Answer:
1. தீதும் நன்றும் பிறர்தர வாரா.
2. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
3. வாய்மையே வெல்லும்.

சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
Answer:
1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
2. அமுதசுரபியைப் பெற்றாள்.
3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

1. அரம் – அறம்
அரம் – கூர்மையான கருவி – இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.
அறம் – தர்மம் – பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.

2. மனம் – மணம்
மனம் – உள்ளம் – பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
மணம் – வாசனை – மல்லிகை மணம் மிக்க மலர்.

இருபொருள் தருக

(எ.கா) ஆறு
ஆறு – நதி
ஆறு – எண்
1. திங்கள்
திங்கள் – கிழமை, மாதம், நிலவு

2. ஓடு
ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

3. நகை
நகை – அணிகலன், புன்னகை

புதிர்ச் சொல் கண்டுபிடி

Question 1.
இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
Answer:
அறம்.

கட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக மாலையில்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல் 2
Answer:
1. மாலையில் விளையாடுவோம்.
2. பிறருக்கு உதவி புரிவோம்.
3. பெரியோரை வணங்குவோம்.
4. நூல்பல கற்போம்.
5. உடற்பயிற்சி செய்வோம்.
6. அதிகாலையில் எழுவோம்.

செயல் திட்டம்

Question 1.
நீங்கள் சேவை செய்ய விரும்பும் பணிகளைப் பட்டியலிடுக.
Answer:
நாங்கள் சேவை செய்ய விரும்பும் பணிகள் :
(i) இலவசமாகக் கல்வி கற்பித்தல்.
(ii) ஊனமுற்றோர்க்கு உதவுதல்.
(iii) விடுமுறை நாட்களில் வரும் திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுதல்.
(iv) வாரத்திற்கு ஒருமுறை நான் வசிக்கும் தெரு மற்றும் நகரை நண்பர்களுடன் சேர்ந்து சுத்தப்படுத்துதல்.

(v) சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பயன்பாடுகளின் மூலம் வரும் தீமைகள் பற்றியும் மரங்களினால் வரும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

(vi) மக்களின் நலன்கள் மேம்படுவதற்கான செயல்களைச் செய்வேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Question 2.
உயர்ந்த குறிக்கோளை அடைந்து வெற்றி பெற்ற சாதனையாளர்கள் தொகுப்பு ஒன்றைத் தயாரிக்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்
1. உணவை வீணாக்க மாட்டேன்.
2. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
3. பயணம் செய்யும் போது தேவைப்படுவோருக்கு எழுந்து இடம் தருவேன்.
4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.4 பாதம்

Students can Download 6th Tamil Chapter 8.4 பாதம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.4 பாதம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.4 பாதம்

Question 1.
தனக்குப் பெரும் வருமானத்தைத் தந்த காலணியைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென மாரி நினைத்தது ஏன்? வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 2 : மாரி ஏழ்மையில் வாழும் ஒரு தொழிலாளி. அவரிடம் செல்வம் இல்லையென்றாலும் நேர்மை இருந்தது. அதனால் அவர் அவ்வாறு நினைத்தார்.

மாணவன் 1 : அந்தக் காலணியை வைத்து அவர் பெரும் பணம் சம்பாதித்து உள்ளார். அதேபோல் சம்பாதித்துக் கொண்டு நிம்மதியாக இருந்திருக்கலாமே?

மாணவன் 2 : பிறர் பொருளைத் தான் வைத்திருக்கக்கூடாது என்று எண்ணி, அந்தக் காலணிக்கு உரியவர் சிறுமி எனவும், குழந்தையின் மனம் வருந்தும் எனக்கூட எண்ணியிருக்கலாம்.

மாணவன் 1 : அதுவும் சரிதான். சிறுமி வளர்ந்து விட்டால் அந்தக் காலணி அவளுக்குப் பொருந்தாது. பிறகு அது வீணாகவே இருக்கும் எண்ணி இருப்பார்.

மாணவன் 2 : மாரி மனசாட்சிக்குப் பயந்தும், பிறர் பொருளைத் தாம் வைத்திருக்கக்கூடாது என்றும் அந்தக் காலணியை வைத்துப் பெரும்பொருள் ஈட்டியதாலும் அவருடைய மனம் வருந்தியது. விசித்திரக் காலணியாய் இருந்ததால்தான் அவர் திரும்ப அச்சிறுமியிடம் ஒப்படைக்க எண்ணினார்.

Question 2.
மீண்டும் வந்த பெண்ணுக்குக் காலணி பொருந்தாதது ஏன்?
Answer:
மாரி அந்தக் காலணியின் விசித்திரத் தன்மையை அந்தப் பெண்ணிடம் கூறினார். அவள் அதனைக் கண்டு கொள்ளாமல், ஆச்சரியமின்றித் தலையாட்டி விட்டுச் சென்றாள். அந்தக் காலணியைப் பற்றி அவள் அறிந்திருந்தும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டாள். மாரியிடம் இருந்திருந்தால் அவர் இன்னும் பொருள் ஈட்டியிருப்பார். ஓர் ஏழைக்கு உதவிய அந்தக் காலணியை அப்பெண் பெற்றுக் கொண்டதால் அவளுக்கு அந்தக் காலணி பொருந்தவில்லை.

மதிப்பீடு

Question 1.
பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி. அவர் பசியால் வாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திரக் காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார். ஆனாலும் அவர் மனம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அவற்றை விளக்கும் கதையைக் காண்போம்.

வெறிச்சோடிய தெரு :
மாரி என்றைக்கும் போல் தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தார். விடாமல் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. டீ குடிப்பதற்குக் கூட பணம் இல்லை. மழையில் எவரேனும் காலணி தைக்கக் கொடுத்தால் பணம் கிடைக்கும். டீ குடிக்கலாம் என எண்ணினார். தெரு வெறிச்சோடி இருந்தது. அவரும் ஒரு மரமும் எட்டுப் பழைய செருப்புகளும் மட்டும் இருந்தன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.4 பாதம்

சிறுமியின் காலணி :
தியேட்டரின் வலப்புறச் சந்தில் இருந்து சிறுமியொருத்தி மீனைப்போலச் சுழன்று அவர் அருகில் வந்து ஒரு காலணியைக் கொடுத்துத் தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றாள். அந்தக் காலணி இளம் சிவப்பு நிறத்தில் வெல்வெட் தைத்துப் பூ வேலை கொண்டதாய் இருந்தது. அந்தக் காலணியில் ஏதோ பெயரிடப்படாத நறுமணம் வீசியது. காலணியைத் தைத்து முடித்துவிட்டு அச்சிறுமிக்காகக் காந்திருந்தார். இரண்டு ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார். அச்சிறுமி இரவு வரை வரவேயில்லை. மழை பெய்வதால் வரவில்லை என எண்ணியவராய் அந்தக் காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

மாரியின் ஏமாற்றம் :
அடுத்த நாள் மாரி அந்தக் காலணியைத் துடைத்து, தனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவில்லை. மறந்துவிட்டாளா? இல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளா? என்று எண்ணியபடி அன்றும் அக்காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இப்படியே. பல நாட்கள் கழிந்தன.

மாரியின் மனைவி :
மாரியின் மனைவி ஓர் இரவில் அந்தக் காலணியைக் கண்டாள் அதன் வசீகரம் அவளை ஈர்த்தது. அதனைப் போட்டுப் பார்த்தாள். அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்குச் சரியாக இருந்தது. மற்றொரு காலணியைத் தேடிப் பையைக் கொட்டினாள். சப்தம் கேட்டு மாரி வந்து பார்த்தார். மனைவியின் வலக்காலில் இருந்த அந்தக் காலணியைப் பார்த்தார். மனைவியைத் திட்டி விட்டு காலணியை எடுத்துப் பார்த்தார் கிழியவில்லை. சிறுமியின் காலணி மனைவிக்குப் பொருந்தியதை எண்ணி வியந்தார். அவருக்கும் அந்தக் காலணியின் மீது ஆசை ஏற்பட்டதால் தன் வலக்காலை அதனுள் நுழைத்துப் பார்த்தார். அவருக்கும் பொருந்தியது. இது விசித்திரமாய் இருந்தது. அவரால் யோசிக்க முடியவில்லை. உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பையில் போட்டுக் கொண்டார்.

காலணியின் விசித்திரம் :
மறுநாள் மாரி அவருடன் தொழில் செய்பவரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிக் கூறினார் அவரும் போட்டுப் பார்த்தார் பொருத்தமாக இருந்தது. இச்செய்தி நகர் முழுவதும் பரவியது சிறியவர் முதல் முதியவர் வரை அந்தக் காலணி அனைவருக்கும் பொருந்தியது. அதனைக் காலில் அணிந்தால் மேகத்துணுக்குகள் காலடியில் பரவுவது போலவும் பனியின் மிருது படர்வது போலவும் இருப்பதாகப் பலர் கூறினர். கோடைக்காலம் வந்தது அந்தக் காலணியை அணிந்து பார்த்தவர்கள் அவர்களாகவே பணம் கொடுத்தனர். அப்பணத்தில் இரண்டு பசு வாங்கினார். வீடு கட்டினார் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தார். இந்நிலையிலும் அச்சிறுமியை அவர் தேடிக் கொண்டேதான் இருந்தார்.

முப்பது வருடப் பயணம் :
மாரி வருவதற்கு முன்பாகவே பலர் வந்து மரத்தடியில் காத்திருப்பார்கள். காலணியை அணிந்து பார்ப்பார்கள் முகத்தில் சந்தோஷம் பீறிடும். கலைந்து போவார்கள் முப்பது வருடம் கடந்தது. ஒரு நாள் இரவு மாரி வீடு திரும்பும்போது அக்காலணியைத் திருட முனைந்த இருவர் தடியால் அடித்தனர். காலணி திருடு போகவில்லை . தலையில் பட்ட அடியால் அவர் பலவீனமானார். அன்றிலிருந்து வெளியில் செல்லவில்லை பார்வையாளர்கள் அவர் வீடு தேடி வந்து சென்றனர். அவருடைய மனதில் மட்டும் அச்சிறுமியினால் நாம் வளர்ந்தோம். இறப்பதற்குள் அவளைப் பார்க்க வேண்டுமே’ என வேதனையுற்றார்.

மீண்டும் வந்த சிறுமி :
ஒரு மழை இரவில் பார்வையாளர்கள் வந்து சென்றதும் மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள். “வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா?” என்றாள். அவளை அடையாளம் கண்டு கொண்டார் மாரி “வலது காலணியை தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்றாள். மாரி தன்னிடம் இருந்த காலணியைக் காட்டினார். “இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது” என்று கூறினார்.

சிறுமியின் செயல் :
சிறுமி ஆச்சரியமின்றித் தலையாட்டி விட்டு தன்னிடம் இருந்த நாணயம் எதையோ கூலியாகக் கொடுத்துவிட்டுக் காலணியைப் பெற்றுக் கொண்டாள். அவள் யார் என அறிவதற்காக மாரி அவளிடம் யார் எனக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் சென்றுவிட்டாள். அவள் இரு காலணிகளையும் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி பொருந்தியது தைத்து வாங்கின வலது காலணி பொருந்தவில்லை சிறியதாக இருந்தது.

சிந்தனை வினா

Question 1.
மாரிக்குக் கிடைத்தது போன்ற காலணி உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
Answer:
மாரிக்குக் கிடைத்தது போன்ற காலணி எனக்குக் கிடைத்தால் மாரியைப் போலவே நானும் பலர் அணிவதற்கு அக்காலணியைக் கொடுத்திருப்பேன். அவரைப் போலவே பணம் வசூலித்திருப்பேன். ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவுவேன். கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்குப் பணம் கொடுத்து உதவுவேன். ஆதரவற்றவர்களுக்கு உதவி புரிவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.4 பாதம்

Question 2.
பாதம் என்னும் கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்ட கருத்து யாது?
Answer:
பாதம் என்னும் கதையின் மூலம் நான் அறிந்து கொண்டது:
ஏழ்மையிலும் நேர்மை, செய்ந்நன்றி மறவாமல் மனசாட்சியின் படி வாழ்தல்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Students can download 5th Maths Term 3 Chapter 5 Money Ex 5.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 1.
Fill in the blanks
(i) ₹ 35,50 + ₹ 4.50 = ______
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1
Answer:
₹ 40.00

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

(ii) ₹ 7500 + ₹ 3000 = ______
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2
Answer:
₹ 10500

(iii) ₹ 1000 – ₹ 230 = ______
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3
Answer:
₹ 770.00

(iv) ₹ 75.50 – ₹ 30.25 = ______
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4
Answer:
₹ 45.25

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 2.
Match the following

(i) ₹ 950.50 + ₹ 350(a) ₹ 399.50
(ii) ₹ 8000 – ₹ 3500(b) ₹ 91.25
(iii) ₹ 50.70 + ₹ 40.00(c) ₹ 1300.50
(iv) ₹ 750 – ₹ 350.00(d) ₹ 4500

Answer:

(i) ₹ 950.50 + ₹ 350(c) ₹ 1300.50
(ii) ₹ 8000 – ₹ 3500(d) ₹ 4500
(iii) ₹ 50.70 + ₹ 40.00(b) ₹ 91.25
(iv) ₹ 750 – ₹ 350.00(a) ₹ 399.50

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 3.
Add the following
(i) ₹ 8987.75 + ₹ 9565.50 + ₹ 7693.50
(ii) ₹ 29763.50 + ₹ 95675.50 + ₹ 4973.50
(iii) ₹ 9978.75 + ₹ 7695.50 + ₹ 635.00
Answer:
(i) ₹ 8987.75 + ₹ 9565.50 + ₹ 7693.50
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.5

(ii) ₹ 29763.50 + ₹ 95675.50 + ₹ 4973.50
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.6

(iii) ₹ 9978.75 + ₹ 7695.50 + ₹ 635.00
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.7

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 4.
Subtract the following
(i) ₹1985 – ₹ 798.25
(ii) ₹ 688 – ₹ 215
(iii) ₹ 49689 – ₹ 33462.50
Answer:
(i) ₹1985 – ₹ 798.25
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.8

(ii) ₹ 688 – ₹ 215
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.9

(iii) ₹ 49689 – ₹ 33462.50
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.10

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 5.
Arun purchased gold coins in different weights in a Jewellery shop. The price of the gold coins were ₹ 18965.75, ₹ 26998.00 and ₹ 3589.50 respectively. Find the total price of the gold coins.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.11

Question 6.
In a textiles shop, father, mother, son and daughter were purchasing clothes. The price of each of their clothes were ₹ 8950, ₹ 14875, ₹ 7895 and ₹ 9780 respectively. Find the total cost of their clothes.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.12

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 7.
A farmer wanted to buy a tractor. The price of the tractor was ₹ 6,72,598, but he had only ₹ 2,86,760. How much more amount was required to buy the tractor?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.13

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 8.
A man had ₹ 17,246 in his savings account. If he had taken ₹ 8,891 to pay for house rent, then how much amount was left in his savings account?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.14

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.2

Students can download 5th Maths Term 3 Chapter 4 Algebra Ex 4.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 4 Algebra Ex 4.2

Question 1.
Say whether true or false

(i) (23 + 4) = (4 + 23)
Hint: 27 = 27
Answer:
True

(ii) (9 + 4) > 12
Hint: 13 > 12
Answer:
True

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.2

(iii) (9 + 4) < 12
Hint: 13 < 12
Answer:
False

(iv) 11 > 121
Answer:
False

(v) 142 < 142
Answer:
False

(vi) 112 = 112
Answer:
True

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.2

(vii) (6 × 5) (32 – 2)
Hint: 30 = 30
Answer:
True

(viii) \(\frac { 49 }{ 7 }\) > 7
Hint: \(\frac { 49 }{ 7 }\) = 7
Answer:
False

(ix) (4 × 3) = (3 × 4)
Hint: 4 × 3 = 12 ;
3 × 4 = 12
Answer:
True

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.2

(x) (21 + 0) = 21
Answer:
True

Question 2.
Fill in the blanks with the right symbol (<, > or =).
(i) (54 ÷ 9) ___ (8 – 3)
Answer:
54 ÷ 9 = 6
8 – 3 = 5
6 > 5
(54 ÷ 9) > 8 – 3

(ii)(6 + 2) ___ (4 × 2)
Answer:
6 + 2 = 8
4 × 2 = 8
8 = 8
(6 + 2) = (4 × 2)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.2

(iii) (10 × 2) ____ (15 + 20)
Answer:
10 × 2 = 20
15 + 20 = 35
20 < 35
10 × 2 < 15 + 20

Question 3.
Fill in the blanks in the expressions with the suitable number.
(i) (1 × 9) = (___ × 1)
Answer:
(1 × 9) = (9 × 1)

(ii) (6 × 3) > (8 × ___)
Answer:
6 × 3 = 18
8 × 2 = 16
18 > 16
6 × 3 > (8 × 2)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.2

(iii) (36 ÷ 6) < (___ × 7)
Answer:
36 ÷ 6 = 6
1 × 7 = 7
6 < 7
(36 ÷ 6) < 1 × 7

(iv) (0 + 2) > (7 × ____)
Answer:
(0 + 2) = 2
7 × 0 = 0
2 > 0
(0 + 2) > (7 × 0)

(v) (42 ÷ 7) = (4 + ____)
Answer:
(42 ÷ 7) = 6
4 + 2 = 6
(42 ÷ 7) = (4 + 2)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.2

(vi) (6 – ___) < (1 + 2)
Answer:
6 – 4 = 2
1 + 2 = 3
2 < 3
(6 – 3) < (1 + 2)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.1

Students can download 5th Maths Term 3 Chapter 4 Algebra Ex 4.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 4 Algebra Ex 4.1

Question 1.
Using brackets, write three pairs of numbers whose sum is 12. Use them to write three equalities.
Answer:
(a)
(i) (7 + 5)
(ii) (8 + 4)
(iii) (6 + 6)

(b)
(i) 7 + 5 = 8 + 4
(ii) 7 + 5 = 6 + 6
(iii) 8 + 4 = 6 + 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.1

Question 2.
Find four pairs of numbers, one for each of addition, subtractions multiplication and division that make the number 16. Write the equalities for each of them.
Answer:
(a)
(i) (12 + 4)
(ii) (20 – 4)
(iii) (8 × 2)
(iv) (32 ÷ 2)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 Algebra Ex 4.1

(b)
(i) 12 + 4 = 8 + 6
(ii) 20 – 4 = 18 – 2
(iii) 8 × 2 = 4 × 4
(iv) 32 ÷ 2 = 48 ÷ 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements InText Questions

Students can download 5th Maths Term 3 Chapter 3 Measurements InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 3 Measurements InText Questions

Activity 2 (Text Book Page N0.24)

Take some water in a beaker and mark its level.
Take a solid, that is, potato and immerse it in the beaker containing water.
What do you observe?
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements InText Questions 1
Answer:
The Water level increases

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements InText Questions

Activity 4 (Text Book Page N0.26)

We shall follow the method of unit cubes to calculate or find the volume of the objects given below. The dimensions of the objects are mentioned.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements InText Questions 2
Answer:
Volume of Book = 10 × 6 × 1 = 60 unit cubes
Volume of pencil Box = 6 × 2 × 1 = 12 unit cubes

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2

Students can download 5th Maths Term 3 Chapter 3 Measurements Ex 3.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 3 Measurements Ex 3.2

Question 1.
Volume of regular solids such as cube and cuboid can be found by multiplying the dimensions. Complete the given table by finding the volume of the given objects.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2

Question 2.
Complete the given table by finding the volume of the given objects.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2

Question 3.
Find the number of bricks of dimension 20 cm × 5 cm × 10 cm required to construct a wall of dimension 300 cm × 200 cm × 20 cm.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2 6
= 1200 bricks

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2

Question 4.
How many sack of dimension 15 cm × 45 cm × 90 cm filled with rice can be kept in a room of dimension 3 m × 18 m × 9 m.
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.2 5

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1

Students can download 5th Maths Term 3 Chapter 3 Measurements Ex 3.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 3 Measurements Ex 3.1

Question 1.
Tick the object which has more volume
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1

Question 2.
Arrange the given objects according to their volume
(i)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1 4

(ii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1

(i)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 Measurements Ex 3.1 8

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Students can Download 6th Tamil Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Question 1.
பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தை வகுப்பில் நடித்துக் காட்டுக.
Answer:
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தை வகுப்பில் மாணவர்கள் தாங்களாகவே அதில் வரும் கதாபாத்திரங்களில் வேடமிட்டு நடித்துக் காட்ட வேண்டும்.

Question 2.
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக.
Answer:
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தின் கதை வடிவம் :
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை, எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள், பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள் இடையே பொய்கைகள் என மனதை மயக்கும் காட்சிகள் கொண்ட மணிபல்லவத்தீவிற்குக் கொண்டுவந்து சேர்த்தது. அந்த மணிபல்லவத் தீவையும் அதிலுள்ள புத்தபீடிகையையும் காவல் செய்து வரும் தீவதிலகை மணிமேகலையைச் சந்திக்கிறாள். மேலும், அவள் மணிமேகலையிடம் ”பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும். நீ அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறாய். இன்னும் நீ அறிய வேண்டியது ஒன்று உண்டு என்று கூறினாள்.

மணிமேகலை “அஃது என்ன அம்மா?” என்று வினவினாள். இந்தத் தீவில் பூக்கள் நிறைந்து இருக்கும் பொய்கை ஒன்று உள்ளது. “இப்பொய்கை பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் கோமுகி என்று பெயர் பெற்றது. வைகாசித் திங்கள் முழுநிலவு நாளில் அப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும். அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம். அந்தப் பாத்திரம் தோன்றும் வைகாசி முழுநிலவு நாள் இன்றுதான்.” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.

இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போதே பொய்கையின் நீருக்கு மேல் அப்பாத்திரம் தோன்றியது. மணிமேகலை அதனை வணங்கிக் கையில் எடுத்தாள். தீவதிலகை, மணிமேகலையிடம் “மணிமேகலையே! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக!” என்று கூறினாள்.

மணிமேகலை தீவதிலகையை வணங்கி அமுதசுரபியுடன் விடைபெற்று பூம்புகாருக்குத் திரும்பினாள். ஆதிரையிடம் உணவு பெறச் சென்றாள்.

ஆதிரையின் வீட்டு வாயிலில் அமுதசுரபியுடன் நின்றாள். ஆதிரை மணிமேகலையைப் பார்த்து “யார் நீங்கள்?” என்றாள். மணிமேகலை, “இவ்வூரில் வாழ்ந்த கோவலன், மாதவி ஆகியோரின் மகள் நான். உங்களின் சிறப்பை அறிந்து இப்பாத்திரத்தில் உணவு பெற வந்தேன்” என்று கூறினாள்.

ஆதிரை “ஓ! நீங்கள் தான் மணிமேகலையா? உங்கள் பெற்றோரைப் பற்றி அறிவேன். உங்களை இன்று தான் காண்கிறேன். இஃது என்ன பாத்திரம்? மிகவும் அழகாக இருக்கிறதே!” என்றாள். மணிமேகலை “இது அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் ‘அமுதசுரபி’” என்றும், தனக்கு இப்பாத்திரம் கிடைத்த வரலாற்றையும் கூறினாள்.

அமுதசுரபியின் சிறப்பை அறிந்த ஆதிரை “இதைக் கொண்டு என்னசெய்வீர்கள் என்று கேட்டாள். அதற்கு மணிமேகலை அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால் இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் என்று கூறினாள்.

அதனைக் கேட்ட ஆதிரை, “உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன்” என்று கூறிவிட்டு உணவிட்டாள். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிட்டாள்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

மணிமேகலை உணவிட்டதும் அப்பாத்திரத்தில் இருந்த உணர்வு குறையவேயில்லை என்பதை மன்னரிடம் சிறைக்காவலர் தெரிவித்தனர். மன்னன் வியப்புடன் “அப்படியா? அப்பெண்ணை அழைத்து வா” என்று ஆணையிட்டார்.

மணிமேகலை மன்னரைச் சந்தித்தாள். அப்பாத்திரத்தைப் பற்றி மன்னர் வினவினார். மணிமேகலை அமுதசுரபி கிடைத்த வரலாற்றைக் கூறினாள். மன்னர், “மாதவம் செய்தவளே! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.

மணிமேகலை “சிறையில் உள்ளவர்கள் திருந்தி வாழ வழி காண வேண்டும். சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டுவன, எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா?” என்று கூறினாள். மன்னரும் உன் வேண்டுகோள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த ஆணையிடுகிறேன். நீ வாழ்க! உன் அறம் வளர்க! என்று கூறினார்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ……………….
அ) இலங்கைத் தீவு
ஆ) இலட்சத் தீவு
இ) மணிபல்லவத் தீவு
ஈ) மாலத் தீவு
Answer:
இ) மணிபல்லவத் தீவு

Question 2.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் …………….
அ) சித்திரை
ஆ) ஆதிரை
இ) காயசண்டிகை
ஈ) தீவதிலகை
Answer:
ஆ) ஆதிரை

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) செடிகொடிகள் – செடிகொடிகள் வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
ஆ) முழுநிலவு நாள் – முழுநிலவு நாள் பௌர்ணமி என்று அழைக்கப்படும்.
இ) அமுதசுரபி – அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஈ) நல்ல றம் – இல்லறம் சிறக்க ஒவ்வொருவரும் நல்லறச் செயல்களைச் செய்ய

குறுவினா
Question 1.
அமுதசுரபியின் சிறப்பு யாது?
Answer:
அமுதசுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Question 2.
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
Answer:
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது :
(i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும்.
(ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.

சிறுவினா

Question 1.
மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
Answer:
மணிபல்லவத்தீவில் எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள் இருந்தன. பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள், இடையே பொய்கைகள் ஆகியன இருந்தன. மனதை மயக்கும் காட்சிகளைத் தந்தது.

Question 2.
“கோமுகி” என்பதன் பொருள் யாது?
Answer:
(i) மணிபல்லவத்தீவில் பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்குப் பெயர் கோமுகி.
(ii) ‘கோ’ என்றால் பசு. முகி’ என்றால் முகம்.
(iii) பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் அந்தப் பொய்கை கோமுகி எனப் பெயர் பெற்றது.

சிந்தனை வினா

Question 1.
அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?
Answer:
அறச்செயல்கள் :
(i) உயர்ந்த நற்குணங்களுடன் எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுதல்.
(ii) அனைத்து உயிர்களிடத்திலும் கருணையுடன் இருத்தல்.
(iii) நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு.
(iv) அறநூல்களில் கூறப்பட்ட ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
(v) எளியோருக்கு ஈதல்.
(vi) எளியோரையும் நல்ல முறையில் உபசரித்தல்.
(vii) ஐம்புலன்களையும் அடக்கி நல்வழியில் செலுத்துதல்.
(vii) ஏழைகளுக்குத் தகுந்த உதவி செய்தல், உணவளித்தல், உவகையுடன் தானமளித்தல்.
(ix) பணிவுடன் நடந்து கொள்ளுதல்.
(x) எந்நிலையிலும் உண்மையைப் போற்றுதல்.
(xi) பசித்தோர்க்கு உணவளித்தல்.
(xii) தீய வழியில் செல்லாமல் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்.” என்று பாடியவர் ………………..
2. மணிமேகலை …………………. நகரைச் சேர்ந்த வள்.
3. மணிபல்லவத் தீவைப் பாதுகாப்பவள் …………..
4. பசுவின் முகம் போன்று அமைந்த பொய்கையின் பெயர் ………………..
5. கோமுகி நீரின் மேல் தோன்றும் அரிய பாத்திரத்தின் பெயர் ……………
6. அமுதசுரபி தோன்றும் நாள் ……………….. திங்கள் ………………… நாள்.
7. உயிர்களின் பசிபோக்கும் பாத்திரம் …………………
8. கோவலன், மாதவி ஆகியோரின் மகள் ………………………….
9. அமுதசுரபியில் முதலில் உணவை இட்டவள் …………….
10. வாழ்க்கைக்கு அறம் சொன்னவர் ………….
Answer:
1. பாரதியார்
2. பூம்புகார்
3. தீவதிலகை
4. கோமுகி
5. அமுதசுரபி
6. வைகாசித், முழுநிலவு
7. அமுதசுரபி
8. மணிமேகலை
9. ஆதிரை
10. வள்ளுவர்

விடையளி :

Question 1.
தீவதிலகை யார்?
Answer:
(i) தீவதிலகை மணிபல்லவத் தீவில் வாழ்பவள்.
(ii) அவள் அந்தத் தீவையும் அதிலுள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வருபவள்.

Question 2.
அமுதசுரபி பற்றி எழுதுக.
Answer:
(i) அமுதசுரபி ஓர் அரிய பாத்திரம். இது கோமுகியின் மேல் வைகாசித் திங்கள் முழு – நிலவு நாளில் தோன்றும்.
(ii) அஃது ஆபுத்திரன் கையிலிருந்தது.
(iii) அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
(iv) இப்பாத்திரத்தைப் பெற்றவள் மணிமேகலை.
(v) இப்பாத்திரத்தில் முதலில் உணவிட்டவள் ஆதிரை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Question 3.
ஆதிரையிடம் அமுதசுரபியைப் பற்றி மணிமேகலை கூறியது யாது?
Answer:
மணிமேகலை ஆதிரையிடம் இந்தப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் அமுதசுரபி ஆகும் என்றும், இதனைக் கொண்டு பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் உணவு வழங்கப் போகிறேன் என்றும் கூறினாள்.

Question 4.
மணிமேகலை எவருக்கெல்லாம் உணவிட்டாள்?
Answer:
மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள
சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிட்டாள்.

Question 5.
மன்னரிடம் மணிமேகலை விடுத்த வேண்டுகோள் யாது?
Answer:
வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே மணிமேகலை மன்னரிடம் விடுத்த வேண்டுகோள் ஆகும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.2 நீங்கள் நல்லவர்

Students can Download 6th Tamil Chapter 8.2 நீங்கள் நல்லவர் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.2 நீங்கள் நல்லவர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.2 நீங்கள் நல்லவர்

Question 1.
உங்களது நிறை குறைகளைப் பட்டியலிடுக.
Answer:
நிறைகள் :
(i) பிடிக்காதவர்கள் வீட்டிற்கு வந்தால்கூட புன்சிரிப்புடன் வரவேற்பேன்.
(ii) என் பெற்றோர் கூறுவதைக் கேட்டு அதன்வழி நடப்பேன்.
(iii) என் வீட்டுப்பாடங்களைப் பிறர் செய்வதற்குமுன் நானாகவே செய்வேன்.
(iv) என் காலுறைகளையும் சீருடையையும் நானே துவைப்பேன்.
(v) என் பொருட்களைப் பத்திரமாக வைத்துக் கொள்வேன்.

குறைகள் :
(i) பிறருடைய நிறைகளை எண்ணிப் பார்க்காமல் அவரிடம் உள்ள குறையை மட்டும் பறைசாற்றுவது.
(ii) ஒருசில நேரங்களில் சுயநலமாகச் சிந்திப்பது.
(iii) பிறருக்கு உதவி செய்வதற்குக் கொஞ்சம் தயங்குவது.
(iv) பிறர் கருத்துக்கு மதிப்பளிக்காமை.

Question 2.
உங்கள் நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேற்றும் வழிகள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேற்றும் வழிகள் :
(i) நண்பர் தேர்வில் தோல்வியுற்று அதனால் வருந்தினான் எனில், அவனுக்குத் ‘தோல்வியே வெற்றிக்குப் படிக்கல்’ என்று கூறி அவனைச் சமாதானப்படுத்த வேண்டும். அடுத்தத் தேர்விற்கு எவ்வாறு படிக்க வேண்டும் எனக் கூறவேண்டும்.

(ii) முக்கியமான வினாக்கள் எதுவெனக் கேட்டுப் படிப்பதற்கும், தினமும் படிக்கும் முறையையும் அவனுக்குக் கூறி அவனைத் தேற்றுவேன். பெற்றோரின் உதவியுடன் படிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவேன்.

(iii) வீட்டில் சகோதரர்களுடன் சண்டையிட்டு அதனால் மனம் சோர்ந்து இருந்தால், அவனுக்குப் பிறரிடம் விட்டுக் கொடுத்து வாழ்வதன் அவசியத்தைப் பற்றிக் கூறுவேன். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.

(iv) நம்மை விடச் சிறியவராக இருந்தாலும் அவர்களிடமும் பணிவாகப் பேசினால் நாம் கூறுவதை அவர்கள் கேட்டுக் கொள்வார்கள். அன்போடு நாம் பேசினால் அனைவரும் நம்மிடம் பழகுவார்கள்.

(v) மனம் வருந்துவதற்கான சூழலே வராது என்பதை உணர்த்துவேன். பெற்றோர்கள் நம்மைக் கடிந்துகொண்டால் நம் நன்மைக்குத்தான் என்பதைப் புரியவைத்து அவனைத் தேற்ற வேண்டும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பரிசு பெறும்போது நம் மனநிலை ………………….. ஆக இருக்கும்.
அ) கவலை
ஆ) துன்பம்
இ) மகிழ்ச்சி
ஈ) சோர்வு
Answer:
இ) மகிழ்ச்சி

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.2 நீங்கள் நல்லவர்

Question 2.
வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.
அ) பேச
ஆ) சிரிக்க
இ) நடக்க
ஈ) உழைக்க
(Answer:
ஈ) உழைக்க

குறுவினா

Question 1.
பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?
Answer:
பழத்தின் இயல்பு கொடுப்பது; வேரின் இயல்பு பெறுவது.

Question 2.
உழைக்கும்போது என்னவாக ஆகிறோம்?
Answer:
உழைக்கும் போது நாம் புல்லாங்குழலாகிறோம்.

சிறுவினா

Question 1.
நீங்கள் நல்லவர் என்னும் இப்பாடல் விளக்கும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நீங்கள் நல்லவர் என்னும் பாடல் விளக்கும் கருத்துகள் :
(i) காலம் மாறிக்கொண்டேதான் இருக்கும். வயது முதிர்ந்தவர் தன் இளம் வயதிற்குத் திரும்பிச் செல்லவியலாது. நேற்று நடந்தது இன்று நடைபெறாது. சிறகுகள் காற்றின் வேகத்திற்குச் சமமாக எழுவது போல் நாம் செயலாற்ற வேண்டும்.

(ii) நீங்கள் உழைக்கின்றபோது புல்லாங்குழலைப் போன்று மாறிவிடுகிறீர்கள். புல்லாங்குழல் அந்தந்தக் காலத்தில் நடைபெறுவனவற்றை ஓரிசையாக மாற்றிவிடுகிறது. உங்களிடம் உள்ள நன்மையைப் பற்றித்தான் பேசமுடியும். தீமைகளைப் பற்றி பேசக்கூடாது.

(iii) நீங்கள் சுயசிந்தனையுடன் ஒன்றுபட்டு இருக்கும்போது நல்லவராக இருக்கின்றீர்கள். என்னைப் போலவே இரு. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் முழுமையும் கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாய் சொல்லாது. பயன் அனைத்தையும் கொடுக்கும் இயல்பு பழத்திற்குண்டு. பெற்றுக் கொள்ளும் இயல்பு வேரினுக்குண்டு.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.2 நீங்கள் நல்லவர்

(iv) நீங்கள் பேசும்போது விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் இலட்சியப் பாதையை நோக்கி நடக்கும் போது எடுத்தச் செயலை உறுதியாக நின்று செயலாற்றி வெற்றி பெற்றால் ‘நீங்கள் நல்லவர்’ என்று பாடல் கூறுகிறது.

சிந்தனை வினா

Question 1.
நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம்?
Answer:
நல்லவர் என்னும் பெயர் பெற நாம் செய்ய வேண்டுவன :
வீட்டில் :
(i) பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடத்தல்.
(ii) பெரியோரை மதித்தல்.
(iii) வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மரியாதையுடன் பேசுதல், அவர்கள் கூறுவதைக் கேட்டல், அவர்களுடன் அன்புடன் பழகுதல்.
(iv) வீட்டில் அப்பா அம்மாவிற்குச் சிறுசிறு வேலைகள் செய்தல்.

பள்ளியில் :
(i) ஆசிரியர்கள் கூறும் வீட்டுப் பாடங்களை முடித்து வருதல்.
(ii) வகுப்பில் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனித்தல்.
(iii) மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தல்.
(iv) சக மாணவர்களுடன் சண்டையிடாமல் அன்புடன் பழகுதல். பிறர் குறைகளைக் கூறாமல் நிறைகளை மட்டும் கூறுதல்.

பொது இடங்களில் :
(i) நாம் செல்கின்ற வழியில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உதவி செய்தல் (சாலையைக் கடப்பது, அவர்கள் செல்கின்ற இடத்திற்கு வழி கூறுதல்…… போன்றவை)
(ii) விபத்து நேரிட்டால் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவற்றைச் செய்கின்றவர்கள் நல்லவர் என்ற பெயர் பெறுவார்கள்.

Question 2.
உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக.
Answer:
என்னுடைய குறிக்கோள் – சிறந்த மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ஆதல் :
(i) எனக்குள் பல விருப்பங்கள், இலட்சியங்கள் இருந்துகொண்டே இருக்கும். என் மனமும் அவற்றை அசைபோட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றுள் மட்டைப்பந்து விளையாட்டில் மாநில அளவில், தேசிய அளவில், உலக அளவில் என முதலிடம் பெற்று இவ்வுலகையே என்னைப் பார்க்கச் செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

(ii) என் விருப்பமே என்னுடைய குறிக்கோளாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த இலட்சியப் பாதையைக் கடப்பதற்கு நான் செய்ய வேண்டியது, பல ஆசைகள் இருந்தாலும் ஒன்றை மட்டும் தேர்வு செய்வேன்.

(iii) இவ்விளையாட்டில் வெற்றிபெறுவதற்கு முடியுமா? முடியாதா? சரியா? சரியில்லையா? என்று யோசித்துத் தீர்மானம் செய்துகொள்வேன்.

(iv) ‘திட்டமிட்டுச் செயல் புரிந்தால் வெற்றி நிச்சயம்’ என்பதால் திட்டமிடுவேன். பள்ளிக்குச் செல்லும் நேரம், பாடங்களைப் படிப்பதற்கான நேரம், காலை, மாலை விளையாடுவதற்கான நேரம் இவற்றைத் திட்டமிடுவேன்.

(v) திட்டமிட்டபடி தினமும் விளையாடுவேன். என்னுடைய முயற்சியும் தினம் தினம் செய்யும் பயிற்சியும் என்னை வெற்றி பெறச் செய்யும். இவ்வாறு என் குறிக்கோளை அடைவேன்.

கூடுதல் வினாக்கள்

1. கலீல் கிப்ரான் ……………… நாட்டைச் சேர்ந்தவர்.
2. ‘நீங்கள் நல்லவர்’ என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் ………………
3. தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் ………………..
Answer:
1. லெபனான்
2. தீர்க்கதரிசி
3. புவியரசு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.2 நீங்கள் நல்லவர்

நூல் வெளி
கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர். இப்பாடப் பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.