Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Tamil Guide Pdf Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

கற்பவை கற்றபின்

Question 1.
சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளைப் பட்டியலிட்டு அவர்கள் செய்த சமூகப்பணி குறித்துக் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: மதியழகன், புனிதா

மதியழகன் : புனிதா! தங்கம்மா என்ற சமூகச் சேவையாளர் எங்கு எப்போது பிறந்தார் என்று உனக்குத் தெரியுமா?
புனிதா : தெரியாது மதியழகா… நீ சொல் தெரிந்துகொள்கிறேன்.
மதியழகன் : இவர் சனவரி 7ஆம் நாள் 1925இல் யாழ்ப்பாணம் அருகில் உள்ள ஓர் ஊரில் பிறந்தவர். சைவ சித்தாந்த தத்துவங்களில் ஈடுபாடுடையவர்.
புனிதா : அவரது சமூகப் பணிகள் பற்றி சொல்கிறாயா?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

மதியழகன் : ஓ!… சொல்கிறேன். 1977இல் ஓர் ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக எடுத்துக்கொண்டு ஆன்மீகத்தின் வாயிலாக அறச்சாலைகள், நந்தவனம், தீர்த்த தடாகம் உருவாக்கினார். ஆதரவற்ற சிறுமிகளுக்குத் “துர்க்காபுரம் மகளிர் இல்லம்” நிறுவினார். அன்னபூரணி அன்னதான மண்டபம் அமைத்தார். வயோதிகர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அன்னையர் இல்லம், துர்க்காதேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து சமூகத் தொண்டாற்றினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

புனிதா : ஓ!… இவ்வளவு சேவைகள் செய்திருக்கிறார்களா… அதனால்தான் அத்தனைவிருதுகளும்,பட்டங்களும் பெற்றாரோ.
மதியழகன் : ஆம் புனிதா. இன்னும் இதுபோன்ற ஆளுமைகளின் சிறப்புகளை மீண்டும் நாம் சந்திக்கும் போது பேசலாமா?
புனிதா : ஓ!… பேசலாம். இப்போது புறப்படுகிறேன். நன்றி டா…..

Question 2.
“அகநக நட்பதே நட்பு” – என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழல்களைச் சுவைபட எழுதுக.
Answer:

“அகநக நட்பதே நட்பு”

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் எனக்கு நண்பன் என்று புறத்தே பார்ப்பவர்களுக்குத் தெரியாது. நண்பர்கள் என்று யாரும் கண்டுபிடித்ததும் இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

“முகநக நட்பது நட்பன்று” என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்து இருந்தோம்.

ஒருநாள் வகுப்பறைக்கு அறிவிப்பு ஒன்று வந்தது. ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்க பணம் கொடுப்பது தொடர்பான அறிவிப்பு அது. எங்கள் வகுப்பில் அனைவரும் கொடுத்து விட்டோம். என் நண்பனைத் தவிர…

அவன் என்னைப் பார்த்தான்… அன்று நான் மதிய உணவு எடுத்துவரவில்லை . கடையில் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பணத்தை அவனுக்காகக் கொடுத்துவிட்டேன். அவன் கொண்டு வந்திருந்த உணவைப் பகிர்ந்து உண்டோம். எல்லோரும் வியந்தனர்.

எப்படிடா நீங்க இரண்டுபேரும்… என்று கேட்டவர்களுக்கு இருவரும் ஒரே மாதிரி பதில் சொன்னோம்.

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
Answer:
மனித நேயம் கொண்ட கதைமாந்தர் – வீரப்பன்

குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • அன்பாளர்
  • கொடையாளர்
  • பண்பாளர்
  • முடிவுரை

முன்னுரை:
கு.அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தன் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார்.

அன்பாளர்:
வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகுகடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன்குப்புசாமிமீது மிகுந்த அன்புவைத்திருந்தார். அனாதையானகுப்புசாமிக்கு அவன் உறவினர்களும் உதவ முன்வரவில்லை. ஆனால் தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் வீரப்பன், குப்புசாமியுடன் மனித நேயத்துடன் இருக்கின்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

கொடையாளர்:
குப்புசாமி நோய்வாய்ப்பட்டு வேலை இழந்தபோது வீரப்பன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுப்பார். மேலும், தான் கடன் வாங்கி அதனைக் குப்புசாமிக்குக் கொடுப்பார். சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் மூன்று ரூபாயையும் குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினார் வீரப்பன்.

பண்பாளர்:
வீரப்பன் குப்புசாமி குணமடைய நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வேண்டுகிறார். அவருக்கு வேலை இல்லாதபோதும் நண்பன் குப்புசாமிக்குக் கொடுக்க ஒருவரிடம் மூன்று width=”197″ height=”19″ கடன் வாங்கி சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்புகிறார். குப்புசாமியைப் பார்க்க வரலாம் என்றால், இந்த மூன்று width=”197″ height=”19″ பேருந்துக்கு செலவாகிவிடும் என்பதால்தான் கொடுத்தனுப்புகிறேன். இன்னொரு இடத்திலும் பணம் கேட்டிருப்பதாகவும் கிடைத்தவுடன் குப்புசாமியைப் பார்க்க விரைவாக வருவதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.

முடிவுரை: ஏழ்மையிலும் நட்பைப் பாராட்டி உதவும் வீரப்பன், மனித நேயத்தின் மாமகுடமாகத் திகழ்கின்றார். அவரின் செயல்பாடுகள் கல் மனதையும் கரைத்து மனிதநேயத்தைச் சுரக்க வைக்கின்றது. ஒருவன் இருக்கிறான், மனித நேயத்திற்குச் சான்றாக அவன் இருக்கின்றான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் ………………… ஆவார்.
அ) அழகர்சாமி
ஆ) அழகிரிசாமி
இ) அண்ணாதுரை
ஈ) சுஜாதா
Answer:
ஆ) அழகிரிசாமி

Question 2.
அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………………
அ) அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயகாந்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) அழகிரிசாமி

Question 3.
…………………வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி ஆவார்.
அ) வானம்பாடி
ஆ) மணிக்கொடி
இ) கரிசல் எழுத்தாளர்கள்
ஈ) கணையாழியில் எழுதியவர்
Answer:
இ) கரிசல் எழுத்தாளர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Question 4.
அழகிரிசாமி எந்நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்புப் பயிற்சி அளித்தார் …………………
அ) தாய்லாந்து
ஆ) இந்தியா
இ) இலங்கை
ஈ) மலேசியா
Answer:
ஈ) மலேசியா

Question 5.
சரியான கூற்றுகளைத் தேர்க.
i) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களைப் படைக்கவில்லை.
ii) கு. அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.
iii) வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) கூற்று (ii), (ii) சரியானவை
இ) கூற்று (iii) மட்டும் சரி
ஈ) மூன்று கூற்றுகளும் தவறானவை.
Answer:
ஆ) கூற்று (i), (iii) சரியானவை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Question 6.
ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………
அ) கலைமகள்
ஆ) கணையாழி
இ) குமுதம்
ஈ) ஆனந்தவிகடன்
Answer:
அ) கலைமகள்

Question 7.
“ஒருவன் இருக்கிறான்” கதை வெளியான ஆண்டு …………………
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1979
Answer:
ஆ) 1966

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Question 8.
வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் …………………
அ) ஒரு width=”197″ height=”19″
ஆ) மூன்று width=”197″ height=”19″
இ) நான்கு width=”197″ height=”19″
ஈ) ஐந்து width=”197″ height=”19″
Answer:
ஆ) மூன்று width=”197″ height=”19″

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Tamil Guide Pdf Chapter 9.5 அணி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.5 அணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

கற்பவை கற்றபின்

Question 1.
முன் வகுப்புகளில் கற்ற அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்து ஒப்படைவு ஒன்றை உருவாக்குக.
Answer:
உவமையணி:
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

பிறிது மொழிதலணி:
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

வேற்றுமையணி:
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”

சொற்பொருட்பின்வரு நிலையணி: :
“உதவி வரைத்தன் றுதவி
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.”

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு

1. Education is what remains after one has forgotten what one has learned in School. – Albert Einstein.
Answer:
ஒரு பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்னே!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

2. Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb
Answer:
இவ்வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே அதிக வேலைப்பளு உள்ளது.

3. It is during our darkest moments that we must focus to see the light. – Aristotle
Answer:
நம் இருண்ட தருணங்களிலும் ஒளியைப் பார்ப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

4. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts. – Winston Churchill.
Answer:
வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பதும் விதியல்ல. இரண்டுக்காகவும் தொடர்ந்து முயற்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்படுவதே எண்ணப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

1. தாமரை இலை நீர் போல
Answer:
என் நண்பன் தாமரை இலைநீர் போலப் பட்டும் படாமலும் பழகுவான்.

2. மழைமுகம் காணாப் பயிர்போல
Answer:
தாயை இழந்த கருணையன் மழை முகம் காணாப் பயிர்போல வாடினான்.

3. கண்ணினைக் காக்கும் இமைபோல
Answer:
இறைவன் அனுதினமும் நம்மைக் கண்ணினைக் காக்கும் இமைபோலக் காத்துக் கொண்டு இருக்கிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

4. சிலை மேல் எழுத்து போல
Answer:
சிறுவயதில் கற்கும் அறக்கருத்துகள் சிலைமேல் எழுத்து போல் மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்வை வழி நடத்தும்.

பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

சேரனின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

வாழ்த்துரை எழுதுக.

உம் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்கவிழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்குக.
Answer:

” இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்”
ஆம்! அன்பார்ந்த மாணவர்களே!

நாளைய தலைவர்களான உங்களை இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மூலம் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

நவீன பாரதத்தை உயர்த்துபவர்களே!
“நூறு இளைஞர்களைக் கொடுங்கள்: இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகின்றேன்” என்றார் சுவாமி விவேகானந்தர் அன்று. அவர் இன்று இருந்திருந்தால், இந்த முகாமிலுள்ள உங்களை வைத்து நவீன பாரதத்தையே வடிவமைத்திருப்பார். நவீன பாரதத்தை உயர்த்தும் உன்னத தூண்கள் நீங்கள்தான்.

சேவைச் செம்மல்களே!
மக்கள் தொண்டே! இறைவன் தொண்டு என்பார்கள். அதைப்போலவே நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய காத்திருக்கும் சேவைச் செம்மல்களே! அன்னை தெரஸாவின் உள்ளங்களே! சேவை செய்ய பணம் தேவை இல்லை. நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை அறிந்து செயல்படும் செல்வங்களே! உங்களை மனம் நெகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.

நாளைய கலாம்களே!

“தூக்கத்தில் வருவது கனவன்று
உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு”

என்றார் டாக்டர். அப்துல் கலாம். நாட்டைத் தூய்மையாக்குவதிலும் நாட்டைப் பசுமையாக்குவதிலும் நீங்கள் தூங்காமல் கனவு கண்டு நனவாக்குங்கள். உங்கள் கைகளால் வைக்கப்படும் இந்த மரங்கள்தான் நீங்கள் நாளைய கலாம் என்பதைப் பறைசாற்றும். இன்றைய இளைய கலாம்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டு நலத்திட்டப் பணிபுரியும் வள்ளல் களை மீண்டும் வாழ்த்தி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.\

நன்றி! வணக்கம்!

குறுக்கெழுத்துப் போட்டி.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 10
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 11
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 2
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

பாடலில் இடம்பெற்றுள்ளத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிக.

கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம் புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
Answer:
புலவர் பெயர்கள்

  • கம்பன்
  • உமறுப்புலவர்
  • ஜவ்வாதுப் புலவர்
  • அபுல் காசிம்
  • குணங்குடி மஸ்தான்
  • சேக்கிழார்
  • செய்கு முதலியார்

விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 12
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 4
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 5

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

நன்றியுரை எழுதுக.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “மரம் நடு விழாவுக்கு” வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர், பெற்றோர்க்கு பசுமைப் பாதுகாப்பு படை சார்பாக நன்றியுரை எழுதுக.
Answer:

நன்றியுரை

வணக்கம், நாளைய நிகழ்வின் தொடக்கம்தான், இன்றைய நன்றி
எம் பள்ளியின் பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி!

எம் அழைப்பிற்கிணங்க, பல பணிகளுக்கு இடையிலும் தன் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கித் தந்து, மரங்கள் பற்றிய சிறப்புரை வழங்கி இவ்விழாவை சிறப்பு செய்து கொண்டிருக்கும் வனச்சரக அலுவலர் அவர்களுக்கு மறவாத நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதுமட்டுமின்றி, மரம் நடுவதற்குத் தேவையான மரக்கன்றுகளைத் தந்து உதவியதற்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

இவ்விழாவில் பங்கேற்று முன்னிலை வகித்துக்கொண்டிருக்கும் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். விழாவைச் சிறப்பிக்க வருகை தந்திருக்கும் பெற்றோர்களுக்கும், எம்மை ஊக்குவித்த தலைமை ஆசிரியர்க்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் அமைதி காத்த நண்பர்களுக்கும் எம் பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக நன்றி மலர்களைக் காணிக்கையாக்கி விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!
நாள் : 08.03.2020
இடம் : சேலம்

இப்படிக்கு,
செயலர்,
தேசிய பசுமைப்படை,
அரசு உயர்நிலைப்பள்ளி,
சேலம்.

மொழியோடு விளையாடு

விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 13
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 6

“சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு” விழா

ஜனவரி 18, நெல்லை .
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் தலைமையேற்றார். சாலைக் குறியீடுகளை விளக்கி, குறியீடுகள் உணர்த்துவதை மனதில் கொண்டு கட்டுப்பாட்டுடன் கூடிய வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள் மாணவர்கள் மனதில் சாலைவிதிகளைப் பதித்து விழிப்புணர்வுடன் வளர்க்க அறிவுறுத்தினார். தலைக்கவசம், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது இருக்கை பட்டை கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களை நம் விழிப்புணர்வால் தடுத்து விடலாம் என்றார். நிறைவாக வருகை தந்திருந்த பெரியோர், குழந்தைகள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இணைந்து “சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி” மாரத்தான் தொடர் ஓட்டம் நிகழ்த்தினர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 14
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 7

அகராதியில் காண்க.

குணதரன்
செவ்வை
நகல்
பூட்கை
Answer:
குணதரன் – முனிவன், நற்குணமுள்ளவன்.
செவ்வை – நேர்மை, மிகுதி, வழி செப்பம், சரியான நிலை.
நகல் – சிரிக்கை , மகிழ்ச்சி , நட்பு, படி, ஏளனம்.
பூட்கை – கொள்கை, வலிமை, மனஉறுதி, சிங்கம், யானை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

செயல் திட்டம்
மாணவர்களே விளையாட்டு உலகில் உங்களுக்குப்பிடித்த ஆளுமைத்திறன் மிக்க விளையாட்டு வீரர் பற்றிய படங்கள், செய்திகளை தொகுத்து தொகுப்பேடு (Album) செய்து கொள்ளுங்கள். (மாணவர் செயல்பாடு)

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 15
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 8

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

நிற்க அதற்குத் தக

ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்; உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள்; சில உதவிகள் அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் பிச்சை போடுகிறோம். தொல்லை வேண்டாம் என்று கருதி, வேண்டாவெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம்!
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 16
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 9

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

கலைச்சொல் அறிவோம்

Humanism – மனித நேயம்
Cabinet – அமைச்சரவை
Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?
அ) உவமை
ஆ) தற்குறிப்பேற்றம்
இ) உருவகம்
ஈ) தீவகம் குறுவினா
Answer:
இ) உருவகம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

குறுவினா

Question 1.
தீவக அணியின் வகைகள் யாவை?
Answer:
தீவக அணி மூவகைப்படும். அவை:

  • முதல் நிலைத் தீவகம்
  • இடைநிலைத் தீவகம்
  • கடைநிலைத் தீவகம் எனப்படும்.

Question 2.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
Answer:

  • இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி நிரல்நிறையணியாகும்.
  • இலக்கணம்: நிரல் – வரிசை: நிறை – நிறுத்துதல்
  • சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

சிறுவினா

Quesiton 1.
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக் காட்டுக.
Answer:
அணி இலக்கணம்:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை (கருத்தை) ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

எ.கா: “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட”

பாடல் பொருள்:
கோட்டை மதில்மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கைகாட்டியது என்பது பொருள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

விளக்கம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேல் இருந்த கொடிகள் | காற்றில் இயற்கையாக அசைந்தன.

ஆனால் இளங்கோவடிகள், மதுரையில் கோவலன் கொலை செய்யப்படுவான் எனக் கருதி அக்கொடிகள், கையை அசைத்து இம் மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாக தன் கருத்தைக் கொடியின் மேல் ஏற்றிக் கூறுகிறார். எனவே இப்பாடல் தற்குறிப்பேற்ற அணிக்குச் சான்றாகியது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மக்களுக்கு அழகு சேர்ப்பன……………….ஆகும்.
அ) அணிகலன்கள்
ஆ) கலை
இ) கல்வி
ஈ) பேச்சுத்திறன்
Answer:
அ) அணிகலன்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 2.
தீவகம் என்ற சொல்லின் பொருள் ……………….
அ) விளக்கம்
ஆ) சான்று
இ) விளக்கு
ஈ) வெளிச்சம்
Answer:
இ) விளக்கு

Question 3.
கோவலனும் கண்ண கியும்……………….நகருக்குள் சென்றபோது கொடிகள் அசைந்தன.
அ) தஞ்சை
ஆ) புகார்
இ) மதுரை
ஈ) வஞ்சி
Answer:
இ) மதுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 4.
தீவக அணி……………….வகைப்படும்.
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
அ) மூன்று

Question 5.
நிரல் நிறையணி – இதில் ‘நிரை’ என்பதன் பொருள் ……………….
அ) நிறுத்துதல்
ஆ) வரிசை
இ) எடை
ஈ) கூட்டம்
Answer:
ஆ) வரிசை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 6.
இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது……………….அணி ஆகும்.
அ) தற்குறிப்பேற்றணி
ஆ) நிரல்நிறை அணி
இ) உயர்வு நவிற்சி அணி
ஈ) தன்மையணி
Answer:
ஈ) தன்மையணி

Question 7.
தன்மை அணியின் வகைகள்……………….ஆகும்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) நான்கு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 8.
தன்மை அணியை……………….என்றும் கூறுவர்.
அ) தீவக அணி
ஆ) உவமை அணி
இ) தன்மை நவிற்சி அணி
ஈ) தற்குறிப்பேற்ற அணி
Answer:
இ) தன்மை நவிற்சி அணி

Question 9.
வைகை நதி பாயும் நகரம்……………….
அ) நெல்லை
ஆ) மதுரை
இ) தஞ்சை
ஈ) கடலூர்
Answer:
ஆ) மதுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 10.
‘சேந்தன வேந்தன் திரு நெடுங்கன்’ எனும் பாடலில் அமைந்த அணி?
அ) தீவக அணி
ஆ) தன்மை அணி
இ) தற்குறிப்பேற்ற அணி
ஈ) உவமை அணி)
Answer:
அ) தீவக அணி

Question 11.
பொருத்துக.
1. சேந்தன் – அ) பகை
2. தெவ் – ஆ) சிவந்தன
3. சிலை – இ) பறவை
4. புள் – ஈ) வில்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 12.
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

குறுவினா

Question 1.
தன்மையணியின் வகைகளை எழுதுக.
Answer:
தன்மையணி நான்கு வகைப்படும். அவை:

  • பொருள் தன்மையணி
  • சாதித் தன்மையணி
  • குணத் தன்மையணி
  • தொழிற் தன்மையணி ஆகியவை ஆகும்.

Question 2.
தன்மையணியை விளக்குக.
Answer:
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும், அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரியச் சொற்கள் அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

சிறுவினா

Question 1.
நிரல்நிறை அணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி இலக்கணம்:
நிரல் – வரிசை நிறை – நிறுத்துல்.
சொல்லையும், பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

சான்று:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அணிப் பொருத்தம்:
இக்குறளில் “அன்பும் அறனும்” என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி “பண்பும் பயனும்” என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணிக்குச் சிறந்த சான்றாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 2.
தீவக அணியை விளக்கி, சான்று கூறுக.
Answer:
அணி இலக்கணம்:
தீவகம் என்னும் சொல்லுக்கு விளக்கு என்று பொருள். செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது தீவக அணி என்பர்.

சான்று: “சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து
திசை அனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து”

பாடலின் பொருள்:
அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன. கண்கள் சிவந்த அளவில் பகை மன்னர்களின் தோள்கள் சிவந்தன. இரத்தம் பாய்ந்த திசைகள் அனைத்தும் சிவந்தன; அம்புகள் சிவந்தன. இரத்தம் மேலே வீழ்வதால் பறவைகள் சிவந்தன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

அணிப்பொருத்தம்:
முதலில் உள்ள சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது.

Question 3.
‘எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்’ அணி எது? சான்றுடன் விளக்குக. (அல்லது) தன்மை நவிற்சி அணியைச் சான்றுடன் விளக்கு.
Answer:
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனை தன்மை நவிற்சியணி என்றும் கூறுவர்.

சான்று: “மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன்
உண்டளவே தோற்றான் உயிர்.”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

பாடலின் பொருள்: உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை பாயும் நகரத்து அரசன் பாண்டியன் தோற்றான். அவளது சொல் கேட்டு உயிர் நீத்தான்.

அணிப்பொருத்தம் : கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாடு உரிய சொற்களின் மூலம் கூறியமையால் தன்மை நவிற்சியணி எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Students can Download 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.3 தேம்பாவணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

கற்பவை கற்றபின்

Question 1.
வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கிப் பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் நூலகத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டுக.
Answer:

  • வீரமாமுனிவர் 1710 முதல் 1747 வரை தமிழகத்தில் இருந்து தமிழ்ப்ப ணி ஆற்றினார்.
  • சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார்.
  • இலக்கியச் சுவடிகளைத் தேடி எடுத்ததால் “சுவடி தேடும் சாமியார்’ எனப்பட்டார்.
  • திருக்குறள், தேவாரம், திருப்புகழ் போன்ற நூல்களைப் பிற ஐரோப்பிய மொழிகளில்
  • மொழிபெயர்த்தார்.
  • தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீனில் விளக்கம் அளித்து உள்ளார்.
  • திருக்குறள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்தார்.
  • 1728இல் புதுவையில் இவரின் பரமார்த்தக் குருவின் கதை நூல் முதல் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.
  • வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி இலக்கணம், உரைநடை என பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைக்கவில்லை.
  • இத்தமிழ்ப் பணிகளை இவர் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ஆற்காடு வேலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பல்வேறு இடங்களில் தங்கிப் பணியாற்றினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 2.
கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மலைப் பொழிவுப் பகுதியைப் படித்து அதில் வரும் அறக் கருத்துகளை எழுதுக.
Answer:
மலைப் பொழிவின் அறக்கருத்துகள்:

  • எளிய மனத்தோர் பேறு பெற்றோர்.
  • வஞ்சமில்லாத நெஞ்சத்துடன், பிறரைப் பழி சொல்லாது வாழ்பவர் விண்ணரசு எய்துவார்.
  • துயரம் அடைவோர் பேறு பெற்றோர் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
  • சாந்தம் உடையவர் பேறு பெற்றவர்கள்; தரணி (உலகம்) முழுவதும் அவர்களுக்கு உரியது.
  • நீதியின்மேல் பற்றுக்கொண்டு வாழ்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
  • இரக்க சிந்தை உடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்களுக்கே இரக்கம் கிடைக்கும்.
  • தூய மனதையுடையவர்கள் சிறப்புப் பெற்றவர்கள்; தோன்றும் கடவுளை அவர்கள் நேரில் காண்பர்.
  • பிறர் வேதனை தீர்க்க, தம்மை வருத்தும் ஞானிகள் எவரோ, அவர்கள் விண்ணக அரசை அடைந்தே தீர்வர்.
  • மனிதர்கள் பால் பகை கொண்டு, மடி நிறைய காணிக்கையை இறைவனுக்கு மட்டும் செலுத்துவதால் பயன் என்ன?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

“ஊருக்குத் தீமைகள் செய்து – உன்
உள்ளம் மகிழ்வது பாவம்
யாருக்கும் தீமையில்லாமல் – நீ
அழிந்து விடுவதே லாபம்”

இவைபோன்ற இன்னும் பல அறக்கருத்துகள் “மலைப்பொழிவில்” இடம்பெற்று உள்ளன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று…………………….. , …………………………. வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக
ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக
ஈ) எலிசபெத், பூமிக்காக
Answer:
அ) கருணையன், எலிசபெத்துக்காக

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

குறுவினா

Question 1.
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன்
– உவமை உணர்த்தும் கருத்து யாது?
Answer:
உவமை:
இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்

உவமை உணர்த்தும் கருத்து:
கருணையனாகிய நான் என் தாயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகின்றேன்.

சிறுவினா

Question 1.
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
Answer:

  • கருணையனாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
  • அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.

“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

நெடுவினா

Question 1.
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரி.
Answer:
குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி
  • முடிவுரை

முன்னுரை:
தாயின் அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்லில் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.

வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி :

1) மலர்ப்படுக்கை :
கருணையனின் தாய் மறைந்துவிட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்ப்படுக்கையை பரப்பினான். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

2) இளம்பயிர் வாட்டம்:
என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது. இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்போல் வாடுகிறது.

3) அம்பு துளைத்த வேதனை:
தீயையும் நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்ததால் ஏற்படும் புண்ணின் வரியைப் போல என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது வாடுகிறேன்.

4) தவிப்பு :
சரிந்த வழுக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழிதெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.

5) உயிர்கள் அழுதல்:
புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போல கூச்சலிட்டன.

முடிவுரை:
வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

இலக்கணக் குறிப்பு.

காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய் மணி – வினைத்தொகை
உய்முறை – வினைத்தொகை
செய்முறை – வினைத்தொகை
மெய்முறை – வேற்றுமைத்தொகை
கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஒலித்து – வினையெச்சம்
வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
பரப்பி – வினையெச்சம்
வீ – ஓரெழுத்தொருமொழி
தடவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லறம் – பண்புத்தொகை
இளங்கூழ் – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………
அ) பேதுரு
ஆ) ஆபிரகாம்
இ) திருமுழுக்கு யோவான்
ஈ) சூசை
Answer:
இ) திருமுழுக்கு யோவான்

Question 2.
திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………
அ) கருணாகரன்
ஆ) கருணையன்
இ) கருணாமூர்த்தி
ஈ) வலின்
Answer:
ஆ) கருணையன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 3.
கருணையனின் தாயார் யார்?
அ) எலிசபெத்
ஆ) மரியாள்
இ) சாரா
ஈ) அண்ணாள்
Answer:
அ) எலிசபெத்

Question 4.
சொல்லையும் பொருளையும் பொருத்துக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி - 2
அ) 3, 2, 1, 4
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 3, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
ஆ) 4, 1, 2, 3

Question 5.
தேம்பா + அணி என்பதன் பொருள் …………………
அ) வாடாத மாலை
ஆ) சூடாத மாலை
இ) பாடாத மாலை
ஈ) தேன்மாலை
Answer:
அ) வாடாத மாலை

Question 6.
கிறித்துவின் வளர்ப்புத் தந்தை …………………………….
அ) கருணையன்
ஆ) சூசையப்பர்
இ) தாவீது
ஈ) ஈசாக்கு
Answer:
ஆ) சூசையப்பர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 7.
தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் ………………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) மூன்று

Question 8.
தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………………………..
அ) 7ஆம் நூற்றாண்டு
ஆ) 12ஆம் நூற்றாண்டு
இ) 17ஆம் நூற்றாண்டு
ஈ) 19ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 17ஆம் நூற்றாண்டு

Question 9.
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………………..
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Answer:
ஈ) 3615

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 10.
தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ………………………..
அ) 33
ஆ) 35
இ) 36
ஈ)
Answer:
இ) 36

Question 11.
தேம்பாவணி ஒரு ……………………….. நூல் ஆகும்.
அ) பெருங்காப்பிய
ஆ) புதின
இ) நாடக நூல்
ஈ) வரலாற்று
Answer:
அ) பெருங்காப்பிய

Question 12.
தேம்பாவணியை இயற்றியவர் யார்?
அ) கபிலர்
ஆ) கால்டு வெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) வீரமாமுனிவர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 13.
தமிழ் முதல் அகராதி எது?
அ) சதுரகராதி
ஆ) தமிழ் அகராதி
இ) தொன்மை அகராதி
ஈ) பழைய அகராதி
Answer:
அ) சதுரகராதி

Question 14.
வீரமாமுனிவரின் இயற்பெயர்………………………..ஆகும்.
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
ஆ) தாமஸ் பெஸ்கி
இ) இஸ்மத்
ஈ) கால்டுவெல்
Answer:
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

Question 15.
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
அ) சாகிப்
ஆ) இஸ்மத்
இ) இஸ்மத் சன்னியாசி
ஈ) சன்னியாசி
Answer:
இ) இஸ்மத் சன்னியாசி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 16.
இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ………………
அ) தூயவன்
ஆ) புனிதன்
இ) பெரியோன்
ஈ) தூயதுறவி
Answer:
ஈ) தூயதுறவி

Question 17.
இஸ்மத் சன்னியாசி என்பது ……………… மொழிச் சொல்.
அ) பாரசீக
ஆ) இலத்தீன்
இ) எபிரேய
ஈ) உருது
Answer:
அ) பாரசீக

Question 18.
கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?
அ) எலிசபெத் கூற்று
ஆ) கருணையன் கூற்று
இ) சூசையப்பர் கூற்று
ஈ) தாவீது கூற்று
Answer:
ஆ) கருணையன் கூற்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 19.
பொருத்துக.
1. கூழ் – அ) கிளை
2. கொம்பு – ஆ) பயிர்
3. புழை – இ) காடு
4. கான் – ஈ) துளை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 20.
பொருத்துக.
1. கடிந்து – அ) விலக்கி
2. உவமணி – ஆ) மாலை
3. படலை – இ) மணமலர்
4. துணர் – ஈ) மலர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Question 21.
பொருத்துக.
1. காக்கென்று – அ) இடைக்குறை
2. கணீர் – ஆ) தொகுத்தல் விகாரம்
3. காய்மணி – இ) வேற்றுமைத்தொகை
4. மெய்முறை – ஈ) வினைத்தொகை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 22.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) திருமுழுக்கு யோவான்
ஆ) அருளப்பன்
இ) கருணையன்
ஈ) எலிசபெத்
Answer:
ஈ) எலிசபெத்

Question 23.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஈ) இயேசு

Question 24.
‘சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள் ………………
அ) வானம்
ஆ) நிலம்
இ) காடு
ஈ) கிளை
Answer:
ஆ) நிலம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 25.
நவமணி என்பதில் ‘நவம்’ என்ற சொல் குறிப்பது ………………
அ) ஆறு
ஆ) ஒன்பது
இ) பத்து
ஈ) ஐந்து
Answer:
ஆ) ஒன்பது

Question 26.
‘நல்லறப் படலைப் பூட்டும்’ இவ்வடிகளில் ‘படலை’ என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) மாலை
ஆ) மணமலர்
இ) மலர்கள்
ஈ) நிலம்
Answer:
அ) மாலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 27.
கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ………………
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஆ) யோவான்

Question 28.
கருணையன் என்பவர் ………………
அ) வீரமாமுனிவர்
ஆ) யோசேப்பு
இ) அருளப்பன்
ஈ) சாந்தாசாகிப்
Answer:
இ) அருளப்பன்

குறுவினா

Question 1.
தேம்பாவணி பிரித்துப் பொருள் கூறுக.
Answer:

  • தேம்பாவணி – தேம்பா + அணி என்றும் தேன் + பா + அணி என்றும் பிரிக்கலாம்.
  • தேம்பா + அணி என்பதற்கு வாடாத மாலை என்று பொருள்.
  • தேன் + பா + அணி என்பதற்கு தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்று பொருள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 2.
வீரமாமுனிவர் படைத்த இலக்கியங்கள் யாவை?
Answer:

  • சதுரகராதி
  • தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)
  • சிற்றிலக்கியங்கள்
  • உரைநடை நூல்கள்
  • பரமார்த்தக் குரு கதைகள்
  • மொழிபெயர்ப்பு நூல்கள்

ஆகியவற்றைப் படைத்துள்ளார்.

Question 3.
எதனை மட்டும் தான் அறிந்ததாகக் கருணையன் கூறுகிறார்?
Answer:
தன் தாயாகிய எலிசபெத் தன் கையால் காட்டிய முறைகளை மட்டும் அறிவேன். வேறொன்றும் அறியேன் என்று கூறுகிறார்.

Question 4.
தேம்பாவணி குறிப்பு வரைக.
Answer:

  • தேம்பாவணி பெருங்காப்பிய வகை நூல்.
  • இந்நூல் மூன்று காண்டங்களை உடையது.
  • 36 படலங்களையும் 3615 பாடல்களையும் உடையது.
  • இந்நூல் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூலாகும்.
  • இந்நூலின் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 5.
கருணையன் உள்ளம் வாடியது எதற்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது?
Answer:
கருணையன் உள்ளம் ,மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்வாடுதலுக்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது.

Question 6.
கருணையன், ‘இரும்புழைப் புண்போல்’ நோகக் காரணம் யாது?
Answer:
கருணையனின் தாய் இறந்து விட்டார். தாயை இழந்து வாடும் அவர், தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்று வருந்துகின்றார்.

Question 7.
‘நவமணி வடக்க யில்போல்’ – இவ்வடிகள் சுட்டும் நவமணிகள் யாவை?
Answer:

  • கோமேதகம்
  • முத்து
  • நீலம்
  • புருடராகம் (புஷ்பராகம்)
  • பவளம்
  • வைடூரியம்
  • மரகதம்
  • வைரம்
  • மாணிக்கம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 8.
திருமுழுக்கு யோவான் என்பவர் யார்?
Answer:

  • கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
  • இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
  • இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
  • தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் காட்டினில் வாழ்ந்தார்.
  • வீரமாமுனிவர் கருணையன் என்று இவரை அழைக்கின்றார்.

Question 9.
‘அழுங்கணீர் பொழிந்தான்’ யார்? ஏன்?
Answer:

  • அழுங்கணீர் பொழிந்தவர் : திருமுழுக்கு யோவான்(கருணையன்)
  • கருணையன் தன் அன்னையின் உடலை மண்ணுள் அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும் கண்ணீரையும் ஒன்றாகப் பொழிந்தான்.

Question 10.
கருணையன் புலம்பியதைக் கேட்டு, அழுவன போன்று கூச்சலிட்டன எவை?
Answer:
கருணையன் புலம்பியதைக் கேட்டு, தேன்மலர்கள் பூத்த மணம் வீசும் மலர்களும், சிறுகுட்டைகள் தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டில் அழுவன போன்று கூச்சலிட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

சிறுவினா

Question 1.
கருணையனிடம் இயற்கை கொண்ட பரிவு யாது?
Answer:
நல் அறங்களையெல்லாம் ஒரு கோவையாக இணைத்த அறமாலையை அணிந்த மார்பனாகிய கருணையன் கொண்ட துயரைக் கண்டு இயற்கையும் பரிவு கொண்டது.

பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும், சுனை தோறும் தங்கியுள்ள பறவைகளும் வண்டுகளும் கருணையன் உடன் இணைந்து அழுவன போல கூச்சலிட்டன.

Question 2.
இஸ்மத் சன்னியாசி – விளக்குக.
Answer:

  • வீரமாமுனிவரின் எளிமையையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.
  • இஸ்மத் சன்னியாசி என்பதற்குத் தூயதுறவி என்று பொருள்.
  • இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 3.
வீரமாமுனிவர் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : வீரமாமுனிவர்
இயற்பெயர் : கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி
புனைபெயர் : தைரிய நாத சுவாமி இலக்கியப் பணி : இலக்கண நூல், மொழிபெயர்ப்பு,
சிற்றிலக்கியம், உரைநடை.
இயற்றிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், பரமார்த்தக் குருகதைகள், வேதியர் ஒழுக்கம்,
செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம்.
காலம் : கி.பி. 1680-1747.
பிறமொழிப் புலமை : இலத்தீன், கிரீக்கு, எபிரேயம், ஆங்கிலம், தெலுங்கு.
மறைந்த ஊர் : அம்பலக்காடு

Question 4.
‘தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடி’ என்ற உவமையை விளக்கிப் பொருளொடு பொருத்துக.
Answer:
உவமை :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

பொருள் :
கருணையன் தாயை இழந்து வாடுதல்.

பொருத்தம் :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல் போன்று கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றார்.

Question 5.
கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) யாவை?
Answer:

  • இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்
  • மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்
  • தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருத்தம்.
  • துணையைப் பிரிந்த பறவை
  • சரிந்த வழுக்கு நிலத்தில் தனியே விடப்பட்டு வழி தெரியாமல் தவிப்பவன்.
    – ஆகியன கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 6.
‘தாயும் கடிந்தெனைத் தனித்துப் போனாள்’ என்று கருணையன் வருந்தக் காரணம் யாது?
Answer:

  • நான் உயிர்ப்பிழைக்கும் வழி அறியேன்.
  • நினைத்ததைக் கண்ட அறிவுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளையும் அறியாதவன்.
  • என் தாய் கையால் காட்டிய அறிவுரையை மட்டுமே நான் அறிவேன்.
  • இப்படி என்னைத் தவிக்க விட்டுவிட்டு என் தாய் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!
    – என்னையும் என் தாய் கூட்டிச் சென்று இருக்கலாம், எதுவும் தெரியாத நான் எப்படி வாழ்வேனோ?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Students can Download 10th Tamil Chapter 9.2 சித்தாளு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.2 சித்தாளு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

கற்பவை கற்றபின்

Question 1.
மனிதநேயத்தை வெளிப்படுத்தும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு - 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது……………………..
அ) தலைவிதி
ஆ) பழையகாலம்
இ) ஏழ்மை
ஆ) பழையகாலம்
ஈ) தலையில் கல் சுமப்பது
Answer:
ஈ) தலையில் கல் சுமப்பது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

குறுவினா

Question 1.
‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
Answer:
“வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்.

சிறுவினா

Question 1.
சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது – இடஞ்சுட்டிப் பொருள் கூறுக.
Answer:
இடம் சுட்டல்: “சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம்பெற்றுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பொருள் : சித்தாளின் துன்பங்களைச் செங்கற்கள் அறிவது இல்லை.

விளக்கம் : அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் இவர்களின் மரணம்கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும். பல இன்னல்களின் நடுவே தன் வாழ்வைத் தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாள்களின் மனச்சுமையைச் செங்கற்களும், கற்களும் அறியாது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

கற்காலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
புலம்புவார் – வினையாலணையும் பெயர்
செங்கற்கள் – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.

புலம்புவார் – புலம்பு + வ் + ஆர்

புலம்பு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – படர்க்கை வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பலவுள் தெரிக

Question 1.
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
அ) முகம்மதுரஃபி
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது
Answer:
அ) முகம்மதுரஃபி

Question 2.
நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்
அ) மதுரை
ஆ) நெல்லை
இ) தஞ்சை
ஈ) திருச்சி
Answer:
இ) தஞ்சை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 3.
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Answer:
ஆ) கணையாழி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 4.
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) – ………………..
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Answer:
இ) கப்பலுக்குப் போன மச்சான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 5.
சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ……………………
அ) தலைக்கனம்
ஆ) அடுத்தவர் கனவு
இ) சித்தாளின் மரணம்
ஈ) சித்தாளின் புலம்பல்
Answer:
இ) சித்தாளின் மரணம்

Question 6.
தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது ………………………
அ) கட்டடம்
ஆ) செங்கற்கள்
இ) கம்பிகள்
ஈ) மணல்
Answer:
ஆ) செங்கற்கள்

Question 7.
தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….
அ) சித்தாளு
ஆ) பொறியாளர்
இ) உழவர்
ஈ) காவலர்
Answer:
அ) சித்தாளு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 8.
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………………….
அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) கொல்லிப்பாவை
இ) நதியின் கால்கள்
ஈ) மீட்சி
Answer:
இ) நதியின் கால்கள்

Question 9.
இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ……………………
அ) முதலாளிகள்
ஆ) கவிஞர்கள்
இ) மக்கள்
ஈ) அமைச்சர்கள்
Answer:
ஆ) கவிஞர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 10.
தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?
அ) மோனை நயம்
ஆ) எதுகை நயம்
இ) இயைபு
ஈ) உவமை அணி
Answer:
அ) மோனை நயம்

Question 11.
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
அ) நாகூர் ரூமி
ஆ) கண்ணதாசன்
இ) ஜெயகாந்தன்
ஈ) பாரதியார்
Answer:
அ) நாகூர் ரூமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 12.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக.
அ) மீட்சி
ஆ) சுபமங்களா
இ) ஏழாவது சுவை
ஈ) புதியபார்வை
Answer:
இ) ஏழாவது சுவை

Question 13.
நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
அ) கவிதைத் தொகுதி

Question 14.
‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
இ) நாவல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

குறுவினா

Question 1.
நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களைப் பட்டியலிடுக.
Answer:

  • மீட்சி
  • கொல்லிப்பாவை
  • சுபமங்களா
  • குமுதம்
  • புதிய பார்வை
  • இலக்கிய வெளிவட்டம்
  • குங்குமம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 2.
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
Answer:

  • நதியின் கால்கள்
  • ஏழாவது சுவை
  • சொல்லாத சொல் ஆகியவையாகும்.

Question 3.
சித்தாள் கற்கள் சுமக்கக் காரணம் யாது?
Answer:

  • வாழ்வைத் தொலைக்காமல் தன்னைக் காக்கவும்,
  • அடுத்த வேளை உணவுக்காகவும் சித்தாள் கற்களைச் சுமக்கிறாள்.

Question 4.
‘தலைக்கனமே வாழ்வாக
ஆகிப்போனது இவளுக்கு’ – ஏன்? யாருக்கு?
Answer:
செங்கற்களைச் சுமந்து , சித்தாளுக்குத் தலைக்கனமே வாழ்வாகிப்போனது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 5.
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ என்று கவிஞர் நாகூர் ரூமி கூறுவதன் உள்நோக்கம் யாது?
Answer:

  • சித்தாள் தலையில் சுமக்கும் செங்கற்கள் சுமைகளைவிட,
  • அவளது மனதில் சுமக்கும் வறுமை உள்ளிட்ட சுமைகள் ஏராளம் ஆகும்.

Question 6.
‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதியவர் யார்? அவர் இயற்பெயர் யாது?
Answer:

  • ‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதியவர் : நாகூர் ரூமி
  • அவரின் இயற்பெயர் : முகம்மது ரஃபி

சிறுவினா

Question 1.
நாகூர் ரூமி குறிப்பு வரைக.
Answer:

  • நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • இவரது இயற்பெயர் முகம்மது ரஃபி.
  • இவர் 1980களில் “கணையாழி” இதழில் எழுதத் தொடங்கினார்.
  • குறுநாவல், கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி வருபவர்.
  • கப்பலுக்குப் போன மச்சான் என்ற புதினத்தையும் படைத்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 2.
சித்தாளின் இன்னல்களை விளக்குக (அல்லது) நாகூர் ரூமியின் ‘சித்தாளு’ கவிதைக் கருத்தை எழுதுக.
Answer:

  • பொற்காலமாக இருந்தாலும் சித்தாள் தலையில் எழுதப்பட்டதோ கற்காலம்.
    தன் வாழ்வை தொலைத்துவிடாமல் காத்துக்கொள்வதற்காக தலையில் கை வைப்பவள்.
  • வாழ்வில் தலைக்கனம் (இறுமாப்பு) கொண்டவர் உண்டு. ஆனால், கல் சுமந்து தலைக்கனமானது இவளுக்கு.
  • அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் சுமக்கும் கற்களெல்லாம் இவளின் அடுத்தவேளை உணவுக்குதான். இவள் இறந்தால் கூட சலனம் சிறிதளவுதான்.
  • இந்தச் சித்தாளின் மனச்சுமையை அவள் சுமக்கும் செங்கற்கள் அறியாது.

Question 3.
‘அலுக்காமல் இவள் சுமக்கும்
கற்களெல்லாம்
அடுத்தவேளை உணவுக்காக’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
நாகூர் ரூமியின் சித்தாளு’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் சித்தாள் ஒருவர் கூறுவதாக இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பொருள் விளக்கம் :
அடுக்குமாடி வீடாகவோ அல்லது அலுவலகமாகவோ, எதுவாக இருப்பினும் அடுத்தவர் கட்டும் கட்டிடத்தின் கனவுக்கு அலுப்பில்லாமல் கற்களைச் சுமந்து உழைப்பது எல்லாம், சித்தாளின் அடுத்தவேளை உணவுக்காகத் தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Students can Download 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

கற்பவை கற்றபின்

Question 1.
வகுப்பு மாணவர்களின் படைப்புகளைத் திரட்டிக் குழுவாக இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்குக.
Answer:
(மாணவர் செயல்பாடு)

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..
அ) ஜெயகாந்தன்
ஆ) ஜெயமோகன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) ஜெயகாந்தன்

Question 2.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Answer:
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.
அ) வியாசர்
ஆ) கம்பர்
இ) வில்லிபுத்தூரார்
ஈ) பாரதியார்
Answer:
அ) வியாசர்

Question 4.
“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..
அ) அறம், மானம், கல்வி, புகழ்
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், மறம், மானம், புகழ்
ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமை
Answer:
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 5.
கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..
அ) மானுடம்
ஆ) சமூகப்பார்வை
இ) நன்னெறி
ஈ) நாட்டுப்பற்று
Answer:
ஆ) சமூகப்பார்வை

Question 6.
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Answer:
அ) 1934-2015

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 7.
பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் எது?
அ) உண்மை சுடும்
ஆ) ஒரு கதாசிரியரின் கதை
இ) வாழ்விக்க வந்த காந்தி
ஈ) தேவன் வருவார்
Answer:
இ) வாழ்விக்க வந்த காந்தி

Question 8.
முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..
அ) ஒரு கதாசிரியனின் கதை
ஆ) பிரளயம்
இ) இனிப்பும் கரிப்பும்
ஈ) யுகசந்தி
Answer:
அ) ஒரு கதாசிரியனின் கதை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 9.
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Answer:
ஆ) யுகசந்தி

Question 10.
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ……………………..
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஈ) ஜெயகாந்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 11.
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Answer:
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Question 12.
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Answer:
ஆ) இமயத்துக்கு அப்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 13.
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Question 14.
சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன

Question 15.
உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது……………………..
அ) குடியரசுத்தலைவர் விருது
ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது
ஈ) தாமரைத் திரு விருது
Answer:
அ) குடியரசுத்தலைவர் விருது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 16.
மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.
அ) குருபீடம், யுகசந்தி
ஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்
இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா
ஈ) பிரளயம், கைவிலங்கு
Answer:
ஈ) பிரளயம், கைவிலங்கு)

Question 17.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
அ) குருபீடம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 18.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப் போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஆ) பிரளயம்

Question 19.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஈ) ஒரு கதாசிரியரின் கதை

Question 20.
பொருத்துக.
1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்
2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்
அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 21.
ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்
இ) ஒருபிடி சோறு
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) ஒருபிடி சோறு

Question 22.
சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 23.
படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்

Question 24.
திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
ஆ) யாருக்காக அழுதான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 25.
ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்

Question 26.
ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………………..
அ) 1972
ஆ) 1971
இ) 1975
ஈ) 1978
Answer:
அ) 1972

குறுவினா

Question 1.
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
Answer:

  • குடியரசுத் தலைவர் விருது
  • சாகித்திய அகாதெமி விருது
  • சோவியத் நாட்டு விருது
  • ஞானபீட விருது
  • தாமரைத்திரு விருது – ஆகியவையாகும்.

Question 2.
ஜெயகாந்தன் என்ற தமிழனின் சிறந்த அடையாளங்கள் என்று கா. செல்லப்பன் குறிப்பிடுவது யாது?
Answer:
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்திரங்கள் இவையே ஜெயகாந்தனின் சிறந்த அடையாளங்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
ஜெயகாந்தன் இயற்றிய குறும்புதினங்களுள் ஏதேனும் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:

  • கைவிலங்கு
  • ரிஷி மூலம்
  • கருணையினால் அல்ல
  • சினிமாவுக்குப் போன சித்தாளு

Question 4.
ஜெயகாந்தனின் இன்னொரு முகம் கவிஞன் – என்பதற்குச் சான்று தருக.
Answer:
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றி கவிதை எழுதியதே, ஜெயகாந்தன் ஒரு கவிஞர் என்பதற்குச் சான்றாகும்.

“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்
பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்.”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 5.
ஜெயகாந்தனின் சாதனையாக தீபம் இதழ் வாசகர்கள் கூறியது யாது?
Answer:
சிறுகதைகளில் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் புதிய கருத்துகளையும் வெற்றிகரமாக சித்தரிப்பது ஜெயகாந்தனின் அரிய சாதனை என்று பாராட்டுகின்றனர்.

Question 6.
திரைப்படமான ஜெயகாந்தனின் படைப்புகள் யாவை?
Answer:

  • சில நேரங்களில் சில மனிதர்கள்.
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
  • உன்னைப்போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர்.
  • யாருக்காக அழுதான் – ஆகியவையாகும்.

Question 7.
‘பாயிரந் தோன்றி மும்மை யினொன்றாய்’ – இவ்வடிகளில் உள்ள ‘மும்மை’ எவை?
Answer:

  1. இறப்பு
  2. நிகழ்வு
  3. எதிர்வு

Question 8.
ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் சிலவற்றை எழுதுக.
Answer:

  • குருபீடம்
  • இனிப்பும் கரிப்பும்
  • யுகசந்தி
  • தேவன் வருவாரா
  • ஒருபிடி சோறு
  • புதிய வார்ப்புகள்
  • உண்மை சுடும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 9.
ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை?
Answer:
வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை.

Question 10.
‘பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – ஏழை
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்’ – என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
Answer:

  • ஜெயகாந்தன்
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல்.

Question 11.
‘எண்ணும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்’ என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
Answer:

  • ஜெயகாந்தன்.
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல் பாடினார்.

Question 12.
ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?
Answer:

  • மகத்தான சாதனை: பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்,
  • அதுவே மிகப்பெரிய சவால் என்கிறார் ஜெயகாந்தன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 13.
இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது? என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
Answer:
காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம், நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

சிறுவினா

Question 1.
ஜெயகாந்தனின் புகழ்பெற்ற புதினங்கள் யாவை?
Answer:

  • பாரீசுக்குப் போ!
  • சுந்தரகாண்டம்
  • உன்னைப்போல் ஒருவன்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • கங்கை எங்கே போகிறாள்
  • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  • இன்னும் ஒரு பெண்ணின் கதை

Question 2.
“எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் விளக்கமளிக்கிறார்?
Answer:

  • நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.
  • முழுக்க முழுக்க வாழ்க்கையில் இருந்து நான் பெறும் கல்வியின், முயற்சியின் பயனை வெளிப்படுத்த எழுதுகிறேன்.
  • சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவும் எழுதுகிறேன்.
  • கலாதேவியின் (கலை) காதல் கணவனாக இருப்பதாலும், சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாக இருப்பதாலும் எழுதுகிறேன். – என்று ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 3.
நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுவது யாது?
Answer:
“நூலினியல்பே நுவலின் ஓரிரு
பாயிரந் தோற்றி மும்மை யினொன்றாய்
நாற்பொருட் பயத்தலொடு எழுமதந் தழுவி”
என்று நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுகிறது.

Question 4.
நாற்பொருள் பயத்தல் – என்பது எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:

  • நூல் என்பது நாற்பொருள் தருவதாய், பயனுடையதாய் இருத்தல் வேண்டும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நாற்பொருள் ஆகும்.

Question 5.
முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.
Answer:
எழுத்தாளர், ஒருவருடைய படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான் முன்னுரை.

தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரைகள் எழுதிக்கொள்ளும் ஜெயகாந்தன், பின்னர் வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார்.

“ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்ம சக்தியோடு எழுதுகிறானே அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்” (1966) என்று பாரீசுக்குப் போ என்னும் புதினத்தின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 6.
சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
Answer:
நுணுக்கமா? அப்படித் தனியாக நான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை. என் மனத்தால், புத்தியால், உணர்வாய் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சனைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாகி அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சனைகளே.

நெடுவினா

Question 1.
“எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் எழுதுவதற்கான காரணத்தை விளக்கமளிக்கிறார்?
Answer:
குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • தனிமுயற்சியின் பயன்
  • நாற்பயன்
  • கணவன்-புதல்வன்
  • சமுதாயப் பார்வை
  • முடிவுரை

முன்னுரை:
தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே! அவர் எழுத்துலகில் எழுதுவதற்கான காரணங்களைக் காண்போம்.

தனிமுயற்சியின் பயன்:
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு, என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனி முயற்சியின் பயனுமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

நாற்பயன்:
வியாசன் முதல் பாரதி வரை தாங்கள் எதற்காக எழுதுகிறோம்? என்பதையும் கலையைத் தாங்கிப்பிடிக்கச் சொல்லவும் இல்லை. ஆனால் இவர்களைவிட கலையைத் தாங்கியவர்கள் யாரும் இல்லை. அறநெறியை உபதேசிக்க பாரதத்தை வியாசர் எழுதினார். தமிழ் இலக்கணம் நாற்பயனையே நூலின் பயனாகச் சுட்டுகிறது.

கணவன்-புதல்வன்:
கலைத்தன்மைக்கு எவ்விதக் குறைவும் வாராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான், நான் எழுதுகிறேன்.

சமுதாயப் பார்வை:
அர்த்தமே வடிவத்தை வளமாக்கும். வெறும் வடிவம் மரப்பொம்மைதான். அதனால் அதைப்பிடித்து துன்பப்படுத்தாமல், சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன். கலைப்பணியில் சமூகப்பார்வை அடக்கம்.

முடிவுரை:
‘எதற்காக எழுதுகிறேன்?’ என்று நான் சொன்ன காரணங்களுக்கு எதிராக நடந்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும் உட்பட்டு இருக்கிறேன் என்கிறார் ஜெயகாந்தன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது…………………….
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம்
ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Question 2.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது?
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார். ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
Answer:
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

குறுவினா

Question 1.
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
Answer:

  • நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு.
  • நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.

சிறுவினா

Question 1.
ஜெயகாந்தன் தம் கதை மாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். – இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:
“தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:
கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்ப்பிக்கும் செயல்:
இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைக்காரனுக்கு இரண்டணாவை அவர் போட்டார். அதைப் பெற்றுக்கொண்டவர் கைகள் குவித்து, ‘சாமி, நீங்கபோற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்தப் பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யாமல் இருந்திருந்தாலோ அல்லது தர்மம் செய்த ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில்தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதைத் தர்மம் செய்தவன் உணர்ந்தான்.
தர்மம் தந்தவனும் அதைப்பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.

நெடுவினா

Question 1.
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Students can Download 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

கற்பவை கற்றபின்

Question 1.
பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் பாவகைகளையும் வகைப்படுத்தி பட்டியல் இடுக.
Answer:
1. குறள்வெண்பா : திருக்குறள்
2. வெண்பா : நீதி வெண்பா, திருவிளையாடற்புராணம், தேம்பாவணி,
3. கலிவெண்பா : முல்லைப்பாட்டு, பரிபாடல்
4. ஆசிரியப்பா : அன்னைமொழியே, மலைபடுகடாம், திருமால் திருமொழி, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மெய்க்கீர்த்தி, சிலப்பதிகாரம், ஞானம், காலக்கணிதம், ஏர் புதிதா?
5. இணைக்குறள் ஆசிரியப்பா : காற்றே வா, பூத்தொடுத்தல், சித்தாளு.
6. கலிப்பா : கம்பராமாயணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 2.
வெண்பாவில் அமைந்த நூல்கள், ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வெண்பாவில் அமைந்த நூல்கள் : திருக்குறள், நாலடியார்.
ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.

கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: இரகு, மது, சாந்தி.

இரகு : நண்பா! இரகு செய்யுள் நூல்கள் பல எழுதப்பட்டாலும் நாம் இப்போது வெண்பாவிலும், ஆசிரியப்பாவிலும் எழுதப்பட்ட நூல்கள் பற்றி உரையாடுவோம்.
மது : நல்ல செய்தி தான், வெண்பாவில் ஒன்றும் ஆசிரியப்பாவில் ஒன்றும் எடுத்துக்கொள்ளலாமா?
சாந்தி : மது அண்ணா ! வெண்பாவில் திருக்குறளும், ஆசிரியப்பாவில் சிலப்பதிகாரமும் பற்றி பேசலாமா!.
இரகு : பேசலாமே! முதலில் வெண்பாவில் திருக்குறளைப் பற்றி பேசலாம்.

மது : உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்றை தலைமையாகக் கொண்டு 133 அதிகாரத்தையும் 1330 பாக்கள் கொண்டு குறள் வெண்பாவால் பாடப்பட்ட நூல்.
சாந்தி : இந்த நூலுக்கு பத்து பேர் உரை எழுதி உள்ளார்களாம்.
இரகு : இன்று ஏராளமானவர் எழுதி உள்ளனர். பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை.
சாந்தி : நாம் திருக்குறளைப் படிப்பதோடு இல்லாமல் திருக்குறளோடு குறள் கூறியுள்ளது போல் வாழ்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மது : சரி, வெண்பாவினால் அமைந்த நூலைப் பார்த்தோம்.
சாந்தி : ஆசிரியப்பாவால் அமைந்த நூல், தமிழில் முதன் முதலில் தோன்றிய காப்பியம் எது என்றுசொல்லுங்கள்?
மது : சிலப்பதிகாரம் சாந்தி!.
இரகு : இந்நூல் கோவலன், கண்ணகி, மாதவி என மூன்று மூன்றாக பாடினாலும்
குடிமக்களைப்பற்றி பாடிய நூல்.
சாந்தி : 1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
3. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
என்னும் மூன்று உண்மைகளைக் கூறுகிறது.
இரகு : ஒவ்வொரு நூலையும் பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். நேரம் போய்க்
கொண்டே இருக்கிறது. வீட்டில் தேடுவார்கள். புறப்படுவோமா!
மூவரும் : நல்லது. புறப்படுவோம்.

Question 3.
யாப்போசை தரும் பாவோசைகள் எவையெனப் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்?
Answer:
யாப்போசை தரும் பாவோசை

1. செப்பலோசை : இருவர் உரையாடுவது போன்ற ஓசை.
2. அகவலோசை : ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
3. துள்ளலோசை : கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது
4. தூங்கலோசை : சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை,
தாழ்ந்தே வருவது – யாப்பதிகாரம், புலவர் குழந்தை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு:
Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city, “He is helped whom God helps”. The Second beggar used to cry, “He is helped who the king helps”. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him, “What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well baked” Then the Emperor said, “Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out of his palace.
Answer:
தமிழாக்கம்:
முன்பொருநாள் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன் கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான். இரண்டாம் பிச்சைக்காரன் மன்னனைப் புகழ்ந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான். தினமும் இருவரும் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

ரோம் அரசர் தன்னைப் பற்றிப் பேசிப் புகழ்ந்து எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ விரும்பினார்.

நீளமான ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித் துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்துக் கொடுத்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

இரண்டாம் பிச்சைக்காரன் ரொட்டித் துண்டு பொட்டலம் கனமாக இருக்கிறது; விற்றால் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்றுவிடுகிறான்.

இப்படியே ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை வாங்கும் முதலாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டை வெட்டிப்பார்த்தால் தினமும் பொற்காசுகள் மின்னின.

தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து சேர்த்து வைத்தான். பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான்.

இரண்டாம் பிச்சைக்காரன் தொடர்ந்து வீதிகளில் பிச்சை எடுத்துக்கொண்டே இருக்கிறான். மன்னன் அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டிப் பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார்.

அது எடுத்துச்செல்ல கனமாக இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்றுவிட்டேன் என்றான்.

மன்னர் தனக்குள் நினைத்துக்கொண்டார். “கடவுள் தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது உதவுகிறார்” இரண்டாம் பிச்சைக்காரனிடம் திரும்பி, ‘சரி நீ போகலாம்’ என்று அரண்மனையில் இருந்து வெளியேறச் சொன்னார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

மனக்கோட்டை:
கண்ணும் கருத்தும்:
அள்ளி இறைத்தல்:
ஆறப்போடுதல்:
Answer:
மனக்கோட்டை:
படிக்காமலே தேர்வில் வெற்றிபெற்றுவிடலாம் என்று சில மாணவர்கள் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.

கண்ணும் கருத்தும்:
கண்ணும் கருத்தாய் கவனமுடன் படித்தால் முதல் மதிப்பெண் பெறலாம்.

அள்ளி இறைத்தல்:
பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தால் விரைவில் வறுமைநிலை அடைவாய்.

ஆறப்போடுதல்:
பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாது ஆறப்போடுதல் அநேக தீயவிளைவுகளைத் தடுக்கும்.

பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

பேச்சுவழக்கு:
“தம்பீ? எங்க நிக்கிறே?”
“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்…”
“சரிங்கண்ணே ”
Answer:
எழுத்து வழக்கு:

“தம்பி எங்கே நிற்கிறாய்?”
“நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது.”
“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன்.”
“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன.”
“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.”
“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ”
“இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”
“சரி அண்ணா !”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

கடிதம் எழுதுக.

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
எஸ். சங்கரன்,
23, வள்ளலார் சாலை,
பாரதிதாசன் நகர்,
திருச்சி.

பெறுநர்
உயர்திரு. மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள், செயற்பொறியாளர் அலுவலகம்,
திருச்சி.

பொருள்: தெருவிளக்குகள் பழுது நீக்குதல் – தொடர்பாக

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். நான் பாரதிதாசன் நகர் வள்ளலார் சாலையைச் சார்ந்தவன். கடந்த வாரம் வீசிய தானே புயலால் எங்கள் தெருவில் உள்ள மினவிளக்கு கம்பங்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டன. இதனால் இரவில் வெளியே செல்வோர்க்கு மிகவும் துன்பமாக இருக்கிறது. தெருவிளக்கு இல்லாததைப் பயன்படுத்தி சமூக விரோதிகளின் செயல்களும் அதிகமாகி விட்டது. அதனால் தயவுசெய்து நேரில் பார்வையிட்டு பழுதடைந்த மின்விளக்குக் கம்பங்களைச் சரிசெய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு,
தெருமக்கள் சார்பாக,
எஸ். சங்கரன்.

21.03.2020
பாரதிதாசன் நகர்.

உறைமேல் முகவரி:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 6

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

நயம் பாராட்டுக.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே. – வள்ளலார்
Answer:
திரண்ட கருத்து:
கோடையில் இளைப்பாறும் வகையில் கிடைத்த குளிர்ச்சி பொருந்திய தரு ஆனவன். மரம் (தரு) தரும் நிழலாகவும், நிழலின் குளிர்ச்சியாகவும், நிழல் தரும் கனியாகவும் இருப்பவன். ஓடையிலே ஊறுகின்ற இன்சுவை நீராகவும், நீரின் இடையில் மலர்ந்து சுகந்தம் தரும் வாசமலராகவும் திகழ்பவன். மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றாகவும், மென்காற்று தரும் சுகமாகவும் சுகத்தின் பயனாகவும் இருக்கும் இறைவா. இவ்வுலக வாழ்வில் ஆடிக்கொண்டிருக்கும் என்னையும் ஏற்றுக்கொண்ட (மனந்த) தலைவனே (மணவாளனே) பொதுவிலே ஆடுகின்ற, ஆட்டுவிக்கின்ற எம் அரசே நான் தரும் பாமாலையை (அலங்கல்) அணிந்து எனக்கு அருள் செய்வாயாக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மோனை நயம்:
குயவனுக்கு பானை
செய்யுளுக்கு மோனை
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை ஆகும்.
மேடையிலே
மென்காற்று…
டையிலே…
டுகின்ற… என்று மோனை நயமும் மிகுந்து வருகின்றது.

எதுகை நயம்:

மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை

முதல் எழுத்து அளவொத்திருக்க அடியிலோசீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகையாகும். இப்பாடலில்,
கோடையிலே
டையிலே
மேடையிலே
டையிலே – என்று எதுகை நயம் அமைந்துள்ளது.

இயைபு நயம்:
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும்.
தண்ணீரே
மலரே என இயைபு நயமும் உள்ளது.

அணி நயம்:
அணி என்றால் அழகு. இப்பாடலின் அழகுக்கு அழகு செய்யும் வகையில்,
“குளிர் தருவே…
நிழல் கனிந்த கனியே…”

இறைவனை உருவகப்படுத்தும் “உருவக அணியும்” இறைவனை மேன்மைப்படுத்தி உயர்த்திப் புகழ்ந்து பாடியிருப்பதால் “உயர்வு நவிற்சி அணியும்” அமைந்து பாடலுக்கு நயம் கூட்டியுள்ளது.

சந்த நயம்:
இப்பாடல் இனிய ஓசையுடன், இசையுடன் பாடும் வகையில், ஒழுகிய ஓசையாய் ‘எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவலோசையுடன் சந்த நயமும் மிக்குள்ளது.

இப்பாடல் அனைத்து இலக்கிய நயங்களுமுடையதாய்ப் படிப்போர் மனதில் இறைபக்தியையும், இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

மொழியோடு விளையாடு

கண்டுபிடித்து எழுதுக.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம்பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக……
Answer:
எண்ணுப்பெயர்கள் இடம்பெறும் திருக்குறள் பாக்கள்:

ஒன்று :
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

இரண்டு :
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.

மூன்று :
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

நான்கு :
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

ஐந்து :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்.

ஆறு :
படைகுடி கூழ்அமைச்சு நட்பரன் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

ஏழு:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

எட்டு :
கோயில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை.

ஒன்பது :
ஒன்பது என்ற எண்ணை திருவள்ளுவர் தம் நூலில் எங்கும் பயன்படுத்தவில்லை

பத்து :
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

சொற்களைப் பிரித்துப் பொருள் தருக.

1. கானடை
2. வருந்தாமரை
3. பிண்ணாக்கு
4. பலகையொலி

கானடை : கான் அடை காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
Answer:
1. கானடை : கான் அடை காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
2. வருந்தாமரை: வரும் தாமரை தாமரை மலர்
வரும் தா மரை – தாவும் மான் வருகிறது.
வருந்தா மரை – துன்புறாத மான்
3. பிண்ணாக்கு : பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது.
பிள் நாக்கு – பிளவுபட்ட நாக்கு
4. பலகையொலி : பலகை ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
பல கை ஒலி – பல கைகள் தட்டும் ஒலி.

அகராதியில் காண்க.

ஆசுகவி
மதுரகவி
சித்திரகவி
வித்தாரகவி
Answer:
ஆசுகவி – கொடுத்தப் பொருளை உடனே பாடும் பாட்டு.
அப்பாடலைப் பாடும் புலவன்.
மதுரகவி – இனிமை பெருகப் பாடும் கவி.
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு.
சித்திரகவி – சித்திரத்தில் அமைத்ததற்கு ஏற்ப பாடும் இறைக்கவி, 21 நயங்களில் கவிதை இயற்றுபவர்
வித்தாரகவி – விரித்துப் பாடப் பெறும் பாட்டு.
விரிவாகப் பாடும் நூல்.

கலைச்சொல் அறிவோம்

Belief – நம்பிக்கை
Philosopher – மெய்யியலாளர்
Renaissance – மறுமலர்ச்சி
Revivalism – மீட்டுருவாக்கம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 2
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 7

நிற்க அதற்குத் தக

நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை, நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ, உடன்பிறந்தவருடனோ எதிர்பாராமல் சச்சரவு ஏற்படுகிறது….. இந்தச் சமயத்தில் சினம்கொள்ளத் தக்க சொற்களைப் பேசுகிறோம்; கேட்கிறோம்; கைகலப்பில் ஈடுபடுகிறோம்; இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படுகளும் நன்மைகளும்…..
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 1
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 8

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……………………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Answer:
அ) அகவற்பா

குறுவினா

Question 1.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

  • குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
  • முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
    எ.கா: கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

Question 2.
வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
Answer:
வஞ்சிப்பா தூங்கல் ஓசையையும், கலிப்பா துள்ளல் ஓசையையும் பெற்று வரும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

சிறுவினா

Question 1.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
Answer:

  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.
  • வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவி வரும்.
  • மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
  • ஏகாரத்தில் முடியும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யாப்பின் உறுப்புகள்…………………….
அ) 3
இ) 6
ஆ) 5
ஈ) 7
Answer:
இ) 6

Question 2.
பொருத்திக் காட்டுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 3
அ) 2, 4, 1, 3
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 1, 2, 4
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 2, 4, 1, 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 3.
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Question 4.
வெண்பாக்களின் வகைகள் எத்தனை?
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
இ) ஐந்து

Question 5.
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …………..
அ) அகவல்
ஆ) துள்ளல்
இ) தூங்கல்
ஈ) செப்பல்
Answer:
ஆ) துள்ளல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 6.
வெண்பாவில் அமைந்த நூல்கள் …………..
அ) குறள்; நாலடியார்
ஆ) நாலடியார்; மணிமேகலை
இ) குறள்; சிலம்பு
ஈ) குறள், வளையாபதி
Answer:
அ) குறள்; நாலடியார்

Question 7.
ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா …………..
அ) ஆசிரியப்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) வெண்பா

Question 8.
“பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை …………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
அ) அகவற்பா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 9.
பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும் பா வகை …………..
அ) கலிவெண்பா
ஆ) வஞ்சிப்பா
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) இன்னிசை வெண்பா
Answer:
ஆ) வஞ்சிப்பா

Question 10.
சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது – …………..
அ) தூங்கலோசை
ஆ) துள்ளலோசை
இ) செப்பலோசை
ஈ) அகவலோசை
Answer:
அ) தூங்கலோசை

Question 11.
இருவர் உரையாடுவது போன்ற ஓசை – …………..
அ) செப்பலோசை
ஆ) அகவலோசை
இ) துள்ளலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
அ) செப்பலோசை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 12.
ஆசிரியப்பாவின் வகைகள் …………..
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

Question 13.
“ஏகாரத்தில்” முடியும் சிறப்புடைய பா வகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Question 14.
பொருத்துக.
1. இருவர் உரையாடுவது போன்றது – அ) அகவலோசை
2. சொற்பொழிவாற்றுவது போன்றது – ஆ) செப்பலோசை
3. தாழ்ந்து உயர்ந்து வருவது – இ) தூங்கலோசை
4. தாழ்ந்தே வருவது – ஈ) துள்ளளோசை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 15.
அகவற்பாவுடன் தொடர்பில்லாத ஒன்று …………..
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பெருங்கதை
ஈ) நாலடியார்
Answer:
ஈ) நாலடியார்

Question 16.
பொருத்துக.
1. நேர் – அ) மலர்
2. நிரை – ஆ) காசு
3. நேர்பு – இ) பிறப்பு
4. நிரைபு – ஈ) நாள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 17.
பொருத்துக.
1. நேர் நேர் – அ) புளிமா
2. நிரை நேர் – ஆ) தேமா
3. நேர் நிரை – இ) கருவிளம்
4. நிரை நிரை – ஈ) கூவிளம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 18.
பொருத்துக.
1. நேர் நேர் நேர் – அ) புளிமாங்காய்
2. நிரை நேர் நேர் – ஆ) தேமாங்காய்
3. நேர் நிரை நேர் – இ) கருவிளங்காய்
4. நிரை நிரை நேர் – ஈ) கூவிளங்காய்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 19.
பொருத்துக.
1. நேர் நேர் நிரை – அ) புளிமாங்கனி
2. நிரை நேர் நிரை – ஆ) தேமாங்கனி
3. நேர் நிரை நிரை – இ) கருவிளங்கனி
4. நிரை நிரை நிரை – ஈ) கூவிளங்கனி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 20.
புலவர் குழந்தை இயற்றிய யாப்பு நூல் …………………
அ) யாப்பதிகாரம்
ஆ) யாப்பருங்கலம்
இ) யாப்பருங்கலங்காரிகை
ஈ) நன்னூல்
Answer:
அ) யாப்பதிகாரம்

குறுவினா

Question 1.
யாப்பின் உறுப்புகள் யாவை?
Answer:
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, தளை ஆகியவை ஆகும்.

Question 2.
பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பா நான்கு வகைப்படும். அவையாவன: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 3.
வெண்பாவின் வகைகள் யாவை?
Answer:
வெண்பா ஐந்து வகைப்படும்: அவையாவன:
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவையாகும்.

Question 4.
ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
ஆசிரியப்பாவின் வகைகள் நான்கு வகைப்படும். அவை:
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா

Question 5.
திருக்குறளும் நாலடியாரும் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
Answer:

  • திருக்குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளது.
  • அதன் ஓசை : செப்பலோசை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 6.
சங்க இலக்கியங்கள் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
Answer:

  • சங்க இலக்கியங்கள் அகவற்பாவில் அமைந்துள்ளது.
  • அதன் ஓசை :அகவல் ஓசை

Question 7.
அகவலோசையில் அமைந்த நூல்கள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை

Question 8.
பதின்மூன்று அடிக்கு மேல் வரும் வெண்பா எது?
Answer:
கலிவெண்பா.

Question 9.
கலித்தளையும் வெண்டளையும் விரவிவரும் பா எது?
Answer:
ஆசிரியப்பா (அகவற்பா).

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 10.
ஓரசைச் சீர்கள் யாவை?
Answer:
நேர் – நாள் ; நிரை – மலர்
நேர்பு – காசு ; நிரைபு – பிறப்பு

Question 11.
ஈரசைச் சீர்கள் யாவை?
Answer:
நேர் நேர் – தேமா ; நிரை நேர் – புளிமா
நிரை நிரை – கருவிளம் ; நேர் நிரை – கூவிளம்

Question 12.
மூவசைச் சீர்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 4

சிறுவினா

Question 1.
வெண்பாவின் பொது இலக்கணத்தை விளக்குக.
Answer:

  • வெண்பா செப்பல் ஓசை பெற்று வரும்.
  • ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்.
  • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Question 2.
அகவற்பாவை விளக்கி, சான்று தருக.
Answer:

  • அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது.
  • இலக்கணக் கட்டுக் கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா .
    சான்று: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை – ஆகியவையாகும்.

Question 3.
அலகிட்டு வாய்பாடு எழுதுக.
Answer:
குறள்: உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் - 5

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Students can Download 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

கற்பவை கற்றபின்

Question 1.
கருத்துகளை உரைநடையாகப் படிப்பதிலும் நாடகமாகப் படிப்பதிலும் நீங்கள் உணரும் வேறுபாடுகள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: மீனாட்சி, கயல்விழி, கண்ணன்.

மீனாட்சி : அனைவருக்கும் வணக்கம்! இன்றைய பொழுதில் அனைவரும் ஒன்றாய் உள்ளோம். இப்பொழுதை நல்லமுறையில் கழிக்க வேண்டும்.
கயல்விழி : நாம் இன்று கல்வி தொடர்பான செய்திகளைக் கலந்துரையாடலாமா?
மீனாட்சி : இராமானுசரைப்பற்றி கலந்துரையாடலாமா?
கயல்விழி : ஓ… கலந்துரையாடலாமே!
கண்ணன் : நாம் இன்று நாடகமாக இராமானுசரைப் பற்றிப் படித்தோம் அல்லவா…
மீனாட்சி : ஆம்! அதற்கென்ன…
கண்ணன் : உரைநடையைப் படிப்பதற்கும் நாடகத்தைப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு குறித்துப் பேசுவோமா…
கயல்விழி : ஓ தாராளமாக… நானே தொடங்கி வைக்கிறேன். உரைநடை நீண்ட வாக்கிய அமைப்பு உடையதாக இருக்கும். எனவே படிப்பதற்குச் சலிப்பாக இருக்கும்.
மீனாட்சி : சரியாகச் சொன்னாய். நாடகமாகப் படிக்கும் போது கதைப்போக்கில் அமைந்து விடுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)
கண்ணன் : கதைப்போக்கில் அமைவதால் படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
கயல்விழி : உரையாடல் வடிவில் கருத்துகள் இருப்பதால் நேரில் பேசிக் கேட்பது போல் உள்ளது.
மீனாட்சி : கதைமாந்தர்கள் பெயர் நினைவுக்கு வரும்போதே அவர்கள் கூறும் கருத்தும் நினைவுக்கு வந்துவிடும்.
கயல்விழி : ஆம் மீனாட்சி. உரைநடையை நாம்தான் சொல்லிச் சொல்லிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.
கண்ணன் : ஆம் தோழிகளே! நம் கலந்துரையாடலில் இருந்து ஒரு கருத்தை உரைநடையில் படிப்பதை விட நாடக வடிவில் படிப்பதே எளிது என்பதை உணர்ந்து கொண்டோம் அல்லவா!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 2.
இந்நாடகம் வெளிப்படுத்துவது போன்று இராமானுசர் வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றைத் தொகுத்து அவை குறித்த உங்களின் கருத்துகளை எடுத்துரைக்க.
Answer:

  • • இராமானுசர் தினமும் ஆற்றில் குளிக்கப் போகுமுன் முதலியாண்டான் என்ற அந்தணச் சீடரின் கரம் பற்றி நீராடப் புகுவார்.
  • நீராடி முடித்த பின் அந்தணர் அல்லா “உறங்காவில்லி தாசரின்’ கரம் பற்றி எழுவார்.
  • இது வர்ணாசிரம் தருமத்துக்கு எதிரானது என்றும், பிராமணன் கீழ்க் குலத்தோனைத் தொடுவது தவறல்லவா?
  • இது நீர் அறியாததா? இதற்கான காரணம் என்ன என்றனர் பிற சீடர்கள்.

இராமானுசர் பின்வருமாறு பதில் கூறினாராம்:

  • எத்தனை தான் ஞானம் பெற்றாலும், உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணம் எனக்குள் ஆணவமாக இருந்தால் இறைநிலை அடைய முடியாமல் போய்விடும் அல்லவா?
  • எனவே இப்பிறவியின் அகங்காரத்தைப் போக்க அகங்காரமே சிறிதும் இல்லாத இந்த அடியவனைத் தீண்டி என்னைச் சுத்தம் செய்து கொள்கிறேன் என்றார்.
  • “சாதியை ஒழிப்போம், ஆன்மீகத்தால் சமத்துவம் வளர்ப்போம், உயர்வு தாழ்வு நீக்குவோம் என்று வெறும் வாய்ப்பேச்சு பேசாதவராய்த் தன் செய்கையால் வாழ்ந்து காட்டியவர் இராமானுசர். அவர் வழியை நாமும் பின்பற்றுவோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
Answer:
மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

காட்சி – 1

இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : குகன், செழியன், தமிழாசிரியர் மற்றும் மாணவர்கள்.

குகன் : செழியா! வந்துவிட்டாயா.
செழியன் : வந்துவிட்டேன் குகன். இன்று நம் தமிழாசிரியர் அவர்கள் மாணவன் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் என்றாரே! அவர் அறைக்குச் செல்வோமா?
குகன் : செல்வோம் செழியன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம். ஆசிரியரைச் சந்திக்க முடியவில்லை …
செழியன் : இன்று கட்டாயம் நம்மை சந்திப்பார்.

காட்சி – 2

இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : ஆசிரியர், குகன், செழியன்.

மாணவர்கள் இருவரும் : வணக்கம் ஐயா!
ஆசிரியர் : வணக்கம்!
குகன் : ஐயா! உள்ளே வரலாமா?
ஆசிரியர் : வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள்.
செழியன் : ஐயா, வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை கூறுகிறேன் என்றீர்களே… அதற்காகத்தான் வந்தோம்.
ஆசிரியர் : நல்லது. உங்களுக்கு மூன்று உதாரணங்கள் கூறப்போகிறேன். முதலில் கொக்கைப் போல’ வாய்ப்பு கிட்டும் வரை கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் வள்ளுவர், ‘கொக்கொக்க’ எனப் பாடியுள்ளார்.
குகன் : சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம்.
ஆசிரியர் : இரண்டாவதாக, கோழியைப் போல்!’

செழியன் : ஆமாங்க ஐயா! அதென்ன கோழியைப் போல்….
ஆசிரியர் : கோழி, குப்பையைக் கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான ‘உணவை மட்டுமே’ கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களைக் கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்குத் தேவையான
நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.
இருவரும் : நன்றாகப் புரிந்தது ஐயா!
ஆசிரியர் : மூன்றாவதாக, உப்பைப் போல….

குகன் : ஆம். ஐயா, ‘உப்பைப்போல’ என்பதன் விளக்கம் தாருங்கள்.
ஆசிரியர் : கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் இட்டு உணரலாம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படியிருப்பினும், உங்களைச் சார்ந்தவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து நடந்து கொள்ள வேண்டும். மிக நெருங்கி இருந்தாலும், மிக தூரம் இருந்தாலும் துன்பந்தான். உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால்தான் ருசிக்க முடியும். நாமும் அளவோடு இருப்போம்.
இருவரும் : மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
நன்றி! ஐயா!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது ………………..
அ) பிரம்மகமலம்
ஆ) சண்ப கம்
இ) குறிஞ்சி
ஈ) முல்லை
Answer:
அ) பிரம்மகமலம்

Question 2.
தண்டு கொடிக்கு இணையானவர்கள் யாவர்?
அ) பூரணர்
ஆ) கூரேசர்
இ) முதலியாண்டான், கூரேசர்
ஈ) இராமானுசர்
Answer:
இ) முதலியாண்டான், கூரேசர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 3.
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………………..
அ) மூங்கில்
ஆ) குறிஞ்சி
இ) கமலம்
ஈ) செண்பகம்
Answer:
அ) மூங்கில்

Question 4.
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) ஆ மட்டும் சரியான கூற்று
இ) ஆ, இ இரண்டும் சரியானவை.
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.
Answer:
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 5.
பூரணரின் மகன் பெயர் ………………………..
அ) நாராயணன்
ஆ) சௌம்ய நாராயணன்
இ) சௌம்ய ராஜன்
ஈ) முதலியாண்டான்
Answer:
ஆ) சௌம்ய நாராயணன்

Question 6.
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
அ) இராமானுசர்
ஆ) பூரணர்
இ) கூரேசர்
ஈ) முதலியாண்டான்
Answer:
அ) இராமானுசர்

Question 7.
சௌம்ய நாராயணன் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டான்?
அ) முதலியாண்டானிடம்
ஆ) பூரணரிடம்
இ) இராமானுசரிடம்
ஈ) கூரேசரிடம்
Answer:
இ) இராமானுசரிடம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 8.
பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து ………………………..
அ) திருமந்திரம்
ஆ) திருநீறு
இ) மந்திரம்
ஈ) துறவு
Answer:
அ) திருமந்திரம்

Question 9.
நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்பவர்………………………..
அ) திருமகள்
ஆ) மலைமகள்
இ) கலைமகள்
ஈ) அலைமகள்
Answer:
அ) திருமகள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 10.
இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?
அ) கூரேசரை
ஆ) முதலியாண்டானை
இ) இராமானுசரை
ஈ) பெரியவரை
Answer:
இ) இராமானுசரை

Question 11.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்
அ) செண்பகம்
ஆ) குறிஞ்சி
இ) முல்லை
ஈ) பிரம்மகமலம்
Answer:
ஆ) குறிஞ்சி

Question 12.
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! – இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Question 13.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை
அ) பழனி மலை
ஆ) பிரான் மலை
இ) பொதிகை மலை
ஈ) நல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை

நெடுவினா

Question 1.
இராமானுசர் நாடகம் மூலம் இராமானுசரின் பண்புகளைக் கூறுக.
Answer:
குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • பொறுமை உடையவர்
  • நட்புக்கு மரியாதை
  • தன்னலமற்ற பரந்த உள்ளம்
  • முடிவுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

முன்னுரை:
பிறர்நலம் போற்றுவதே மனித வாழ்வின் சிறந்த நிலை ஆகும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணுவோர் மத்தியில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்ந்து காட்டிய இராமானுசரின் பண்புநலன்கள் பற்றிக் காண்போம்.

பொறுமை உடையவர்:

  • திருமந்திரத் திருவருளைக் கற்றுக் கொள்வதற்காக பதினெட்டு முறை பூரணரைச் சந்திக்கச் சென்றார்.
  • இன்றாவது நம் விருப்பம் நிறைவேறுமா! என்ற உடன்வந்தவர்களையும் பொறுமையுடன் வழி நடத்துகிறார்.
  • உங்களை மட்டும்தானே வரச்சொன்னேன் என்ற பூரணரிடமும் பொறுமையுடன் பதில் கூறுகிறார்.
  • இவ்வாறு இராமானுசர் பொறுமை என்னும் பண்பில் சிறந்திருத்தலை அறியலாம்.

நட்புக்கு மரியாதை:

  • எப்பொழுதும் தன்னுடன் இருக்கும் கூரேசரையும், முதலியாண்டானையும் உண்மையான நட்புடன் நேசிக்கிறார். திருமந்திர
  • திருவருளைக் கற்கப் போகும் பொழுதுகூட, பூரணர் தண்டு கொடியுடன் மட்டும் வாருங்கள் என்கிறார்.
  • அப்போதும் இவர்கள் இருவரும் என்னுடன் இருக்கும் தண்டும் கொடியும் போன்றவர்கள்தான் என்று கூறி நட்பு உணர்வை வெளிப்படுத்துகிறார்.

தன்னலமற்ற பரந்த உள்ளம்:

  • பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை கற்றபின் தன்னலம் கருதி அதனைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர்.
  • குருவின் கட்டளையை மீறினால் நரகம் வந்து சேரும் என்று தெரிந்தபோதும் மக்களுக்குத் திருமந்திரத்தை வெளிப்படுத்துகிறார்.
  • திருமந்திரத் திருவருளை வெளியில் சொன்னால் நான் மட்டுமே நரகம் செல்வேன். இத்தனை மக்கள் நரகத்தில் இருந்து விடுபடுவார்கள் அல்லவா! என்ற பரந்த எண்ணம் கொண்டிருந்தார்.
  • அதனால் மக்கள் கூட்டத்தை அழைத்து பிறவிப் பிணியறுக்கும் திருமந்திரத்தைக் கற்றுக்கொடுத்து மக்களை நரகில் இருந்து காத்த மகிழ்ச்சியைப் பெற்றார்.
  • பரந்த மனப்பான்மை பெற்றிருந்தபடியால் பூரணரால் “எம் பெருமான்” என்று அழைக்கப் பெற்றார்.
  • அது மட்டுமின்றி பூரணர் தன் மகன் சௌம்ய நாராயணனையும் அடைக்கலமாக அளித்தார்.
  • இவையே இராமானுசர் நாடகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளும் தலைமைப் பாத்திரமான “இராமானுசரின் பண்புகள்” ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

முடிவுரை:
தன்னலம் அகற்றி, பொதுநலம் போற்றுபவரே உண்மையான மகான்களாக முடியும் என்பதற்கு இராமானுசரே சான்றாக விளங்குகிறார் எனலாம்.

Question 2.
‘என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன்’ என்ற இராமானுசரின் கூற்றுக்கு
ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
குறிப்புச் சட்டம் ப்பச் சட்டம் –

  • முன்னுரை
  • அன்னை தெரசா
  • விவேகானந்தர்
  • அப்துல்கலாம்
  • முடிவுரை

முன்னுரை:
நாளுக்கு ஒருமுறை மலர்வது செண்பகம். ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது மூங்கில். அதைப்போல் நம் தலைமுறைக்கு ஒருமுறை பிறப்பவர்கள் ஞானிகள். அவ்வாறு உதித்தவர்தான் இராமானுசர். அவர் தனக்கு மட்டுமே வீடுபேறு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் எல்லாருக்கும் நலம் கிட்ட வேண்டும் என்று எண்ணி, வாழ்ந்து காட்டிய அவரது வாழ்க்கை போற்றுத்தற்குரியது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

அன்னை தெரசா:
அயல்நாட்டுப் பெண்மணியாக இருந்தாலும், இந்திய நாட்டுக் குடிமகளாகவே வாழ்ந்தவர் அன்னை தெரசா. அவர் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கும், ஆதரவற்ற எளியோருக்கும் தனது களங்கமில்லாத சேவையால் பெருந்தொண்டாற்றினார்.

“காண்கின்ற மனிதர்களிடத்தில் அன்பு கூறாவிட்டால்
காணாத இறைவனிடத்தில் எப்படி அன்பு கூறுவாய்”

என்ற விவிலியத்தின் வார்த்தைகளைக் கொள்கையாகக் கொண்டு “உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிட மேலானவை” என்று கூறி தன்னலமற்ற உதவிகளை அன்னை தெரசா செய்தமையால் ஒரு கவிஞர் தனது கவிதையில்,

“நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருப்பாய்…
கருணையுற்றதால் உலகத்திற்கே தாயாகிவிட்டாய்”
என்று எழுதினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

விவேகானந்தர்:
அயல்நாட்டிலும் ஆகச்சிறந்த ஆன்மீக உரையால் இந்தியப் பண்பாட்டை உலகறிய செய்த மகான் விவேகானந்தர்.

“எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத்
துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்’
என்று குறிப்பிடும் விவேகானந்தர்,

“சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு
வேலை செய்யுங்கள்”
என்கிறார்.

அப்துல்கலாம்:
தன்னலமற்ற தனிப்பெரும் தலைவராக வாழ்ந்து மறைந்தவர் அப்துல் கலாம்.

“நம்மை அனைவரும் நினைவு கூரும் வகையில்
ஒரு பெரும் செல்வத்தை நம் வருங்கால
சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும்
உரிமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது”

என்று குறிப்பிடும் கலாம், என்ன செய்வாய்’ என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்வி முறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தலைவர்களை உருவாக்கும்’ என தன்னலமற்றவர்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

முடிவுரை:
தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் பிறரையும் வாழ வைப்பதற்கான நெறிமுறைகளை அளிப்பதாக பலரின் கூற்றுகளையும் சான்றாகக் கூறிட இயலும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் திருமூலரின் வாக்கினுக்கேற்ப வாழ்வை அமைத்துக் கொண்டால் உலகில் அன்பே நிலைத்து நிற்கும். பரிதி முன் பனி காணாமல் போவதைப் போல் பகை இவ்வுலகைவிட்டு நீங்கிவிடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Students can Download 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.3 காலக்கணிதம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

கற்பவை கற்றபின்

Question 1.
கவிதைகளை ஒப்பிட்டுக் கருத்துரைக்க.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம் - 2
Answer:
நதியின் பிழையன்று:

  • இராமன் கானகம் செல்ல வேண்டும் என்றவுடன் இலக்குவன் சினம் கொண்டான்.
  • அண்ணனைக் கானகம் போகச் சொல்லிவிட்டார்களே, விதிக்கு விதி காரணம் என் வில்லினால் அனைவரையும் அழிப்பேன் என்று ஆவேசப்பட்ட இலக்குவனைத் தடுத்து நிறுத்தி இராமன் கூறியது இது.
  • நதியின் பிழை எதுவும் அல்ல நல்ல தண்ணீர் இல்லாதது.
  • நறும்புனல் இன்மை என்பது, நதியில் நீர் இருக்கிறது. ஆனால் நல்லதாக இல்லை . அதுபோல நான் கானகம் செல்வது தசரதன் பிழையும் அன்று. அன்போடு நம்மை வளர்த்த கைகேயின் மதியின் பிழையும் அன்று.
  • பரதன் பிழையும் இதில் இல்லை . விதியின் பிழை. நீ ஏன் இதற்காகக் கோபப்படுகிறாய். “சினமும் வேகமும் தவிர்”
  • இதைப் போலவே கண்ணதாசனின் பாடலான “நதிவெள்ளம் காய்ந்து விட்டால்….” பாடல் உணர்த்துவதும் விதியைத் தான்.
  • தவறு செய்யாத நாயகன் மீது பழி சுமத்தப்படும் சூழலில் நதியின் நீர்மையைப் போல மானுடர் உள்ளங்களில் இருக்கும் நற்பண்புகள், மனசாட்சி உண்மை , பொய் அறிதல் வற்றிவிடுகிறது.
  • நதி வற்றிவிட்டால் அது நதியின் குற்றம் அல்ல. விதியின் குற்றமே.
  • அதைப்போலவே மானுடர் பண்புகள் மாற்றம் பெற்று நாயகன் மீது சுமத்தப்பட்ட பழி பாவங்களும் விதி செய்த பிழையேயன்றி வேறு யாருமில்லை என்பதை கண்ணதாசன் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
காலக் கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் ……….
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது.
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என் மனம்.
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்.
Answer:
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது

குறுவினா

Question 1.
“கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது.”
அ) அடி எதுகையை எழுதுக.
ஆ) இலக்கணக்குறிப்பு எழுதுக: கொள்க, குரைக்க.
Answer:
அடி எதுகை:
கொள்வோர்
ள்வாய்

இலக்கணக்குறிப்பு:
கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

நெடுவினா

Question 1.
காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
Answer:
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படுபொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக! – கண்ண தாசன்

“காலக்கணிதம்”

திரண்ட கருத்து:
கவிஞன் நானே காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
கவிஞன்….
கருப்படு….
இவை சரி
இவை தவறாயின் … மோனை நயம் பெற்று வந்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும். கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் – சீர் எதுகை நயம் அமைந்துள்ளது.

முரண்:
நாட்டுக்கு அரண்
பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகும். ஆக்கல் x அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:
அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும்.
…புகழுடைத் தெய்வம்
….. பொருளென் செல்வம் – இயைபு நயமும் உள்ளது.

அணி நயம்:
கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக
யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்
என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்:
சந்தம் தமிழுக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

காலக்கணிதம் – உருவகம்
ஆக்கல், அளித்தல், அழித்தல் – தொழிற்பெயர்
கொள்க, எழுதுக – வியங்கோள் வினைமுற்று
கொள்வோர் – வினையாலணையும் பெயர்
அறிந்து – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம் - 1

பலவுள் தெரிக

Question 1.
காலத்தை வெல்பவன் ………………………..
அ) ஆசிரியர்
ஆ) அரசர்
இ) கவிஞன்
ஈ) ஓவியன்
Answer:
இ) கவிஞன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 2.
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
அ) முத்தரசன்
ஆ) முத்தையா
இ) முத்துக்குமார்
ஈ) முத்துசாமி
Answer:
ஆ) முத்தையா

Question 3.
கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ………………………..
அ) இராமநாதபுரம்
ஆ) நெல்லை
இ) புதுக்கோட்டை
ஈ) சிவகங்கை
Answer:
ஈ) சிவகங்கை

Question 4.
கண்ண தாசன் பிறந்த ஊர் – ………………………..
அ) சிறுகூடல்பட்டி
ஆ) கூடல் மாநகர்
இ) முக்கூடல்
ஈ) சிவகங்கை
Answer:
அ) சிறுகூடல்பட்டி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 5.
கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………………………..
அ) 1939
ஆ) 1942
இ) 1949
ஈ) 1950
Answer:
இ) 1949

Question 6.
கண்ண தாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல்………………………..
அ) வாழ நினைத்தால் வாழலாம்
ஆ) கலங்காதிரு மனமே
இ) மலர்களைப் போல் தங்கை
ஈ) உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
Answer:
ஆ) கலங்காதிரு மனமே

Question 7.
கண்ணதாசன் திரைப்படப் பாடல் வாயிலாக மக்களுக்கு………………………..உணர்த்தினார்.
அ) மெய்யியலை
ஆ) உலகியலை
இ) ஆன்மீகத்தை
ஈ) இலக்கணத்தை
Answer:
அ) மெய்யியலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 8.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ………………………..
அ) மாங்கனி
ஆ) இயேசு காவியம்
இ) சேரமான் காதலி
ஈ) சிவகங்கைச் சீமை
Answer:
இ) சேரமான் காதலி

Question 9.
தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) கண்ண தாசன்
இ) வைரமுத்து
ஈ) மேத்தா
Answer:
ஆ) கண்ண தாசன

Question 10.
கண்ணதாசன் அட்சயப்பாத்திரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
அ) தத்துவம்
ஆ) கொள்கை
இ) ஞானம்
ஈ) பண்பாடு
Answer:
அ) தத்துவம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 11.
கண்ணதாசன் தன் வாக்கு மூலங்களாக எவற்றைக் குறிப்பிடுகிறார்?
அ) தன் நூல்களை
ஆ) உரைகளை
இ) இதழ்களை
ஈ) வளமார் கவிகளை
Answer:
ஈ) வளமார் கவிகளை

Question 12.
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்றவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதி
இ) கண்ண தாசன்
ஈ) பெரியார்
Answer:
இ) கண்ண தாசன்

Question 13.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – இவ்வடிகளில் அமைந்த நயம்.
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
Answer:
ஆ) மோனை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 14.
‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?
அ) என்னுடல் x என்மனம்
ஆ) புல்லரிக்காது x இறந்துவிடாது
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்
ஈ) புகழ்ந்தால் x என்மனம்
Answer:
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்

Question 15.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

Question 16.
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 17.
‘வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்’ – எனக் கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

குறுவினா

Question 1.
கவிஞன் என்பவன் யார்?
Answer:
மனம் என்னும் வயலில் சொல்லோர் கொண்டு உழுது, சிந்தனை விதைகளைத் தூவி, மடமை என்னும் களை பறித்து, தத்துவ நீர்ப் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவனே கவிஞன் ஆவான்.

Question 2.
எவர் கூறாத ஒன்றைத் தான் கூற முனைவதாக கண்ணதாசன் குறிப்பிடுகிறார்?
Answer:
கம்பன், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத சிலவற்றைச் சொல்லிட முனைவேன் (முயல்வேன்) என்று கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 3.
எவையெல்லாம் மாறாதவை?
Answer:
காடு, மேடு, மரம், கல், வனவிலங்குகள் ஆகியவை மாறாதவையாகும்.

Question 4.
கண்ணதாசனின் சிறப்பியல்புகள் யாவை?
Answer:
பாடல்கள் புனைவதில், இலக்கிய உலகில் சிறந்த கவிஞர், பேச்சாளர், இதழாளர் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.

Question 5.
கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
Answer:
கண்ணதாசனின் பெற்றோர் : சாத்தப்பன், விசாலாட்சி ஆவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 6.
‘ஆக்கல் அளித்தல், அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை’ – அவனும் யானும் யாவர்?
Answer:

  • அவன் என்பது இறைவன் (இறைவன்)
  • யான் என்பது கவிஞனாகிய கண்ணதாசன்.

Question 7.
‘கருப்படுப் பொருளை உருப்பட வைப்பேன்’ யார்?
Answer:
கருப்படுப் பொருளை உருப்பட வைப்பவர் கவிஞர் (கண்ணதாசன்).

Question 8.
‘உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’ – இத்தொடர் பொருள் ஆழத்தை விளக்குக.
Answer:
ஒருவர் தன் வாயால் புகழ்வதும் இகழ்வதும் நம் உடம்பின் மீது வந்து சேராது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

சிறுவினா

Question 1.
கண்ணதாசன் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : முத்தையா
பிறப்பு : 24.6.1927
பெற்றோர் : சாத்தப்பன் – விசாலாட்சி
ஊர் : சிவகங்கை – சிறுகூடல்பட்டி
சிறப்பு : தமிழக அரசவைக் கவிஞர்
சாகித்திய அகாதெமி விருது – இயேசு காவியம்
புனைப்பெயர் : வணங்காமுடி, ஆரோக்கியநாதன், காரைமுத்துப்புலவர்.
இறப்பு : 17.10.1981

Question 2.
காலக்கணிதம் கவிதையில் இடம் பெறும் முரண் சொற்களை எழுதுக.
Answer:

  • சரி  x  தவறு
  • புகழ்ந்தால்  x  இகழ்ந்தால்
  • ஆக்கல் x அழித்தல்
  • தீமை  x  நன்மை
  • அவனும் x யானும்
  • தொடக்கம்  x  முடிவு
  • உண்டாயின்  x  இல்லாயின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 3.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டல்:
கண்ணதாசன் கவிதைத்தொகுப்பில் ‘காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் இவ்வரிகள் கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது.

பொருள் விளக்கம்:
கவிஞனாகிய நான் காலமாகிய கணிதம் போன்றவன். கவிதைகளில் கருவான பொருளைக் கூட பயன்படும் பொருளாக ஆக்குவேன் என்கிறார் கவிஞர்.

Question 4.
‘நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டல் :
கண்ணதாசன் கவிதைத்தொகுப்பில் ‘காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் இவ்வரிகள் கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

பொருள் விளக்கம்:
கவிஞனாகிய நானே அனைத்தின் தொடக்கம் ஆவேன். நானே முடிவும் ஆவேன். நான் சொல்வது தான் நாட்டினுடைய சட்டம் ஆகும்.

Question 5.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – எனத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசனின் கவிதையில் உங்களைக் கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.
Answer:
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது’

– தன்னை ஒருவர் புகழ்வதினால் பெருமகிழ்ச்சியடைவதோ, இகழ்வதினால் மனம் வருந்துவதோ இல்லை என்பது பண்பட்ட மனத்திற்குச் சான்றாகிறது.

‘செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

– என்பதிலிருந்து பணமோ, பதவியோ தன்னை ஒருபோதும் அடிமைப்படுத்த இயலாது என்பதற்குச் சான்றாக அமைகிறது.

‘எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!’

– நல்லது எது கெட்டது எது என்பதறிந்து பகுத்தறிவுடன் செயல்படுவதற்குச் சான்றாகிறது.

நெடுவினா

Question 1.
கண்ணதாசனின் ‘காலக்கணிதம்’ கவிதைக் கருத்துகளில் உன்னைக் கவர்ந்ததைச் சுருக்கி எழுதுக.
Answer:

  • கவிஞன் நான் ஓர் காலக்கணிதம் கருவாகிய பொருளை உருப்பட வைப்பேன். பூமியில் புகழுக்கு உரிய தெய்வம் நான்.
  • பொன்னைவிட உயர்ந்தது என் செல்வம். ஒரு செயல் சரி என்றால் எடுத்துச் சொல்வேன்; தவறு என்றால் எதிர்ப்பேன். அதுதான் என் வேலை.
  • முத்தொழில் நானும் அவனும் மட்டுமே அறிந்தது. செல்வர் வாளில் சிறைப்பட மாட்டேன். பதவி வாளுக்குப் பயப்பட மாட்டேன். அன்பும், விருப்பமும் மிகுந்து ஆசை தருவதை விரும்புவேன்.
  • என்னிடம் உண்டு என்றால், பிறர் உண்ணத் தருவேன். இல்லை என்றால் பிறர் இல்லம் தட்டுவேன். வண்டு போல மாறி மலரில் அமர்ந்து, குடித்த தேனை ஊர்ப்புறம் தருவேன்.
  • கம்பன், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத கருத்துகளைச் சொல்லிட முயற்சிப்பேன். என்னுடல் புகழ்ந்தால் புல்லரிக்காது. இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
  • என் கவிதை வாக்குமூலம் அதை வைத்து இறந்த பிறகு தீர்ப்பை எழுதுங்கள். கல், மரம், விலங்காக மாற நான் காட்டு விலங்கு கிடையாது.
  • மாற்றம் எனது மானிடத் தத்துவம். மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். நன்மை, தீமை அறிந்து ஏற்கும் என் சாலை.
  • தலைவர் மாறுவார்கள், தர்பார் மாறும், தத்துவம் மட்டும் குறையாத அட்சயப் பாத்திரம் ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்ளட்டும். குரைப்போர் குரைக்கட்டும்.
  • வாய்ச்சொற்கள் உடம்பினைத் தொடாது. நானே தொடக்கம் நானே முடிவு. நான் சொல்வதுதான் நாட்டின் சட்டம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Students can Download 10th Tamil Chapter 8.2 ஞானம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.2 ஞானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

கற்பவை கற்றபின்

Question 1.
“துளிப்பா” ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினைப் பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக.
Answer:
ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி ஆகிவிட்டன.

நீதி தவறாத செங்கோல் வளையாத மரபாக இருந்தது சோழ மரபு. அச்சோழ மரபிலே வந்தவன் மனுநீதிச் சோழன்.
அரண்மனை வாயிலின் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயரைத் துடைக்கத் தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைத் தானும் அனுபவித்து “வாயில்லா ஜீவனுக்கும் அறம்” உணர்த்திய மாண்பு நம் தமிழ் மண்.
ஆனால் சீர்கேடு அடைந்து உள்ள இன்றைய சமூகச் சூழலில் நீதி கேட்டுப் போராடுபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்; அழிக்கப்படுகிறார்கள்.
இச்சமூக அவலத்தையே இக்கவிதை தோலுரித்துக் காட்டியுள்ளது. அன்று ஆராய்ச்சி மணி அடித்த போது பசுவுக்கு நீதி கிடைத்தது. இன்றோ ! நீதி கேட்கும் மாடுகள் அழிக்கப்பட்டு விடும் என்பதைக் குறிப்பாக இக்கவிதை உணர்த்துகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் தலைப்பினை எழுதி, அகரவரிசைப்படுத்தி அதன் பொருளினை எழுதுக.
Answer:
அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன. அவை:

  1. அடக்கமுடைமை – அடக்கத்தின் மேன்மை
  2. அருளுடைமை – கருணை உடையவராய் இருத்தல் வேண்டும்.
  3. அவாவறுத்தல் – பேராசையை விலக்கு
  4. அழுக்காறாமை – பொறாமை நீக்க வேண்டும்.
  5. அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை எடுத்துக் கூறுதல்
  6. அன்புடைமை – அன்பின் மகத்துவம்
  7. இல்வாழ்க்கை – குடும்ப வாழ்வின் சிறப்பு, பெருமை
  8. இன்னாசெய்யாமை – துன்பம் செய்யாதிருத்தல்
  9. இனியவைகூறல் – இனிய சொற்களின் சிறப்பு
  10. ஈகை – கொடுத்து மகிழ்தலின் சிறப்பு
  11. ஊழ் – விதி வலிமை
  12. ஒப்புரவறிதல் – கொடுத்தல்
  13. ஒழுக்கமுடைமை – ஒழுக்கமே உயர் செல்வம்
  14. கடவுள் வாழ்த்து – இறைவனை வாழ்த்துதல்
  15. கள்ளாமை – மது அருந்துதல் கூடாது
  16. கூடாவொழுக்கம் – பொய் ஒழுக்கம்
  17. கொல்லாமை – உயிர்க்கொலைக் கூடாது.
  18. செய்ந்நன்றியறிதல் – ஒருவர் செய்த நன்மையை நினைத்தல்
  19. தவம் – துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்குத் துன்பம் செய்யாமை
  20. தீவினையச்சம் – தீச் செயல் செய்ய அஞ்சுதல்
  21. துறவு – உலகப் பற்றை நீக்குதல்
  22. நடுவு நிலைமை – பாரபட்சம் பாராதிருத்தல்
  23. நிலையாமை – எதுவும் நிலையன்று
  24. நீத்தார் பெருமை – துறவு மேற்கொள்பவர் சிறப்பு
  25. பயனில சொல்லாமை – பயனற்ற சொற்களைத் தவிர்த்தல்
  26. பிறனில் விழையாமை – பிறர் மனைவி, பொருளை விரும்பாமை
  27. புகழ் – சிறப்பு
  28. புலால் மறுத்தல் – ஊன் உண்ணாதிருத்தல்
  29. புறங்கூறாமை – ஒருவர் இலாதிடத்து அவரைப் பற்றிப் பேசாமை
  30. பொறையுடைமை – பொறுமை
  31. மக்கட்பேறு – பிள்ளைச் செல்வம்
  32. மெய்யுணர்தல் – பொய் மயக்கத்திலிருந்து விடுபடுதல்
  33. வாழ்க்கைத் துணை நலம் – நன்மனையாள் பெருமை
  34. வாய்மை – உண்மையின் மேன்மை
  35. வான்சிறப்பு – மழையின் சிறப்பு
  36. விருந்தோம்பல் – விருந்தினரை உபசரித்தல்
  37. வெகுளாமை – சினம் கொள்ளாமை
  38. வெஃகாமை – பிறர் பொருளை விரும்பாமை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது……………………
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை
ஈ) வண்ண ம் பூசுவதை
Answer:
இ) இடையறாது அறப்பணி செய்தலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

குறுவினா

Question 1.
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
Answer:

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறுவினா

Question 1.
‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில்’, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
Answer:
உரைக்குறிப்புகள்:

  • அறம் என்பதன் விளக்கம் தரல்.
  • சுற்றுச்சூழல் என்றால் என்ன?
  • சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
  • அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று, வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
Answer:
வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு கந்தைத் துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். மூன்றாவதாக, சாயக் குவளையில் உள்ள சாயத்தைக் கட்டைத் தூரிகைக் கொண்டு சாயம் பூசி புதுப்பிக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

காலக்கழுதை – உருவகம்
கந்தைத்துணி – இருபெயரொட்டுப்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம் - 1

பலவுள் தெரிக

Question 1.
‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..
அ) அப்துல் ரகுமான்
ஆ) வேணுகோபாலன்
இ) இராஜகோபாலன்
ஈ) இராமகோபாலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?
அ) மறம்
ஆ) அறம்
இ) ஞானம்
ஈ) கல்வி
Answer:
ஆ) அறம்

Question 3.
‘ஞானம்’ கவிதை இடம்பெற்ற தொகுப்பு……………………..
அ) தீக்குச்சி
ஆ) மீட்சி விண்ணப்பம் இ) கோடை வயல்
ஈ) கோடைமழை
Answer:
இ) கோடை வயல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 4.
தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ……………………..
அ) தஞ்சாவூர்
ஆ) திருவாதவூர்
இ) திருவாரூர்
ஈ) திருவையாறு
Answer:
ஈ) திருவையாறு

Question 5.
தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?
அ) மணிக்கொடி
ஆ) எழுத்து
இ) வானம்பாடி
ஈ) கவிக்குயில்கள்
Answer:
ஆ) எழுத்து

Question 6.
வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது……………………..
அ) கோவை மருத்துவக் கல்லூரியில்
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்
இ) சென்னை கிண்டி கல்லூரியில்
ஈ) வேளாண்மைக் கல்லூரியில்
Answer:
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 7.
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்……………………..
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

Question 8.
‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள்
அ) சமூக அறப்பணி
ஆ) வீட்டைப் புதுப்பித்தல்
இ) இடைவிடாத சமூக அறப்பணியை
ஈ) உலகப் பணிகள்
Answer:
இ) இடைவிடாத சமூக அறப்பணியை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 9.
அறப்பணி ஓய்ந்தால்……………………..இல்லை .
அ) மனிதன்
ஆ) இயற்கை
இ) உலகம்
ஈ) கடல்
Answer:
இ) உலகம்

Question 10.
“புதுக்கொக்கி பொருத்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது………………………
அ) சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்
இ) பொய்களை நீக்குதல் ஈ) வீட்டைப் புதுப்பித்தல்
Answer:
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 11.
பொருத்துக.
1. கரையான் – அ) கட்டெறும்பு
2. காலக்கழுதை – ஆ) வந்தொட்டும்
3. தெருப்புழுதி – இ) காற்றுடைக்கும்
4. சட்ட ம் – ஈ) மண்வீடு கட்டும்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 12.
‘அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !’ – இவ்வடிகளில் அமைந்த நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஈ) இயைபு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 13.
பொருத்துக.
1. வாளி – அ) குவளை
2. சாயம் – ஆ) தண்ணீர்
3. கந்தை – இ) தூரிகை
4. கட்டை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

குறுவினா

Question 1.
வேணுகோபாலனின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
Answer:
கோடை வெயில், மீட்சி விண்ணப்பம் ஆகியவை ஆகும்.

Question 2.
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
கரையான், கழுதை, கட்டெறும்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 3.
‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே’ – என இவ்வடிகளுக்கு இணையான தமிழ்ப்பழமொழி எழுதுக.
Answer:
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

சிறுவினா

Question 1.
தி.சொ. வேணுகோபாலன் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : தி.சொ.வேணுகோபாலன்
பிறப்பு : 7.11.1929)
ஊர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு.
கல்வி : சென்னை லயோலா கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம், ராஜஸ்தான் பிலானியில் இயந்திரவியல் (mechanical) பொறியியல் பட்டம்.
பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
நூல்கள் : கோடைவயல், மீட்சி விண்ணப்பம்.
1959 முதல் “எழுத்து” இதழில் கவிதை எழுதத் தொடங்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள் யாது? (அல்லது) “அறப்பணி ஓய்வதில்லை, ஓய்ந்திடில் உலகமில்லை ” – எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?
Answer:

  • ‘ஞானம்’ கவிதை இடையுறாது செய்யும் அறப்பணியாம் சமூகப் பணியை உணர்த்துகிறது.
  • வீட்டின் சாளரத்தில் எத்தனை முறை புழுதி ஒட்டினாலும், கரையான் மண் வீடு கட்டினாலும் துடைக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம்.
  • சுத்தப்படுத்தும் இப்பணியை முதிர் வயதாகும் வரை செய்து கொண்டேதான் இருக்கிறோம்.
  • சமுதாயத்திலும் சீர்கேடுகள் தொடர்ந்து ஏற்படும்.
  • அவலங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.
  • எனினும் அவற்றைத் தடுத்து சமூகத்தைச் சீர்படுத்தும் பணியான அறப்பணியை தொடர்ந்து நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Question 3.
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !.

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
Answer:
கோடைவயல்.

ஆ) இவ்வடிகள் இடம்பெற்ற கவிதை எது?
Answer:
ஞானம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

இ) எது ஓய்வதில்லை ?
Answer:
அறப்பணிகள் ஓய்வதில்லை .

ஈ) இவ்வடியில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
Answer:
ஓய்வதில்லை       –      உலகமில்லை

Question 4.
‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே வாளித்தண்ணீ ர்……..’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
தி.சொ.வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் ‘ஞானம்’ என்னும் தலைப்புக் கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

பொருள்:
காலமாகிய கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்துபோன இன்று வரை கையில் வாளித் தண்ணீர் மட்டுமே வைத்துள்ளோம்.

விளக்கம் :

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை,துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Students can Download 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

கற்பவை கற்றபின்

Question 1.
‘பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறக் கருத்துக்களை வலியுறுத்தும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஐந்தினைத் தொகுத்து அவை கூறும் அறச் செய்திகளை எழுதுக.
Answer:
சங்க இலக்கியப்பாடலடிகள் கீழ்க்காணும் ஐந்தின் அடிப்படையில் அறச்செய்திகளைவலியுறுத்துகிறது.

  • வறுமை
  • நிலையான செல்வம்
  • நேரிய ஆட்சி
  • வாய்மை
  • ஈகை

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்…… – புறநானூறு

இப்பிறப்பில் அறம் செய்தால், அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை.

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

மன்னருடைய செங்கோலும் வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசின் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்.

‘செல்வத்துப் பயனே ஈதல்’ – புறநானூறு

வீரத்தைப் போலவே ஈகையையும் தமிழ் நூல் போற்றியது. ஈகையும் ஓர் அறச்செயலே. செல்வத்தின் பயன் கொடுத்து மகிழ்வதே என்று வாழ்ந்தனர்.

‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’ – நற்றிணை

பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவுதலே பண்பு. பிறர் துன்பம் தீர்ப்பதே உண்மையான
செல்வம் ஆகும்.

‘பிழையா நன்மொழி’ – நற்றிணை

மெய் பேசுவது நன்மொழியாகும் வாய்மை எனப்படுவது தவறியும் பொய் பேசாதிருத்தல். நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது.

Question 2.
கொன்றை வேந்தன் முதலான பிற்கால அறநூல்களின் பெயர்களை அறிந்து, அவற்றுள் ஏதேனும் ஒரு நூலின் அறக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவை இன்றும் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடுபவர்கள் : சோமு, கலா, மாலா,

சோமு : நானும் நலம்தான் சரி நாம் இன்றைக்கு வகுப்பில் அறக் கருத்துக்கள் பற்றிப் படித்தோம் அல்லவா, அதைப் போலவே எளிமையான அறக்கருத்துக்களை நாம் புரிந்து கொள்ளும் வகையில் சில நூல்கள் கூறுகிறது. அதனைப் பற்றிப் பேசுவோமா.
கலா : எனக்கு கொன்றை வேந்தன் மிகவும் பிடிக்கும்
மாலா : எனக்கும்தான்….
சோமு : அதைப்பற்றிப் பேசுவோம். இந்நூல் அகரநிரல் அமைப்புப்படி 91 ஒற்றை வரிப் பாக்களால் ஆனது
கலா : அதை எழுதினது ஒளவைதானே.
மாலா : சரியாகச் சொல்லி விட்டாயே!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

சோமு : அந்த நூலில் ஈகை என்னும் அறத்தைப் பற்றி ஒரு வரி உணர்த்துகிறது. அது என்ன தெரியுமா?
கலா : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்’
சோமு : சரியாகச் சொன்னாய்.
மாலா : ஆமாடா நாம் ஒருவருக்கும் கொடுக்காமல், யாருக்கும் நன்மை செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் யாருக்கும் பயன்படாது, அதனை திருடரோ மற்றவரோ கொள்வர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

கலா : எங்கள் பக்கத்து ஊரில் மிகப் பெருஞ்செல்வந்தர். வேலை பார்ப்பவருக்குக் கூட கூலி ஒழுங்காத் தர மாட்டார். இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துவிடுவார். ஒரு நாள் வந்த திருடன் பெட்டியை உடைத்து அத்தனையும் கொள்ளையடித்து விட்டான்.
சோமு : புரிந்து கொண்டீர்களா தோழிகளே! எக்காலத்திலும் அறக்கருத்துகள் எப்போதும், முக்காலத்துக்கும் பொருந்துவனவாகவே உள்ளது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மேன்மை தரும் அறம் என்பது………………
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது.
இ) புகழ் கருதி அறம் செய்வது.
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.
Answer:
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.

Question 2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………………….
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
Answer:
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

குறுவினா

Question 1.
குறிப்பு வரைக: அவையம்.
Answer:

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு.
  • உறையூரிலிருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது.

சிறுவினா

Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 1
நீர் நிலையைப் பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதும் அரசனின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 2
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது. நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:
தமிழர்போர்செய்வதிலும் அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது, வீரமற்றோர், சிறார், முதியோர் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதில் அறம்:

  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது, தன்னைத் தாண்டி பிறரைப் பற்றிச் சிந்திக்கும் நிலை.
  • ‘பிழையா நன்மொழி’ என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய்பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.

இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

நெடுவினா

Question 1.
பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
Answer:

உறவினருக்கு மடல்

திருச்சி,
18.03.2020

அன்புள்ள சித்தப்பாவிற்கு இரகு எழுதுவது,

நலம். நலம் அறிய ஆவல்.

நான் இன்று மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஏன் தெரியுமா? நேற்று வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் பயம்! ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே. பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டுவிட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

‘பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று, மறுநாளே காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையைப் பாராட்டி, சன்மானத் தொகையைப் பரிசாகவும் வழங்கினார்.

அது மட்டுமில்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு இரகுவே’ சான்று என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடனும், சித்தி, தங்கையுடனும் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
இரகு.ம.

உறைமேல் முகவரி:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..
அ) அறநெறிக் காலம்
ஆ) மன்னர் காலம்
இ) பக்திக் காலம்
ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்
Answer:
அ) அறநெறிக் காலம்

Question 2.
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் ………………….
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Answer:
ஆ) ஆர்னால்டு

Question 3.
சங்கப் பாடலில் அறம் பற்றிய கருத்துகள் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்படுகிறது?
அ) வீரர்களை
ஆ) மக்களை
இ) அமைச்சர்களை
ஈ) அரசர்களை
Answer:
ஈ) அரசர்களை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 4.
மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) பரிபாடல்
ஈ) மதுரை மும்மணிக்கோவை
Answer:
ஆ) மதுரைக்காஞ்சி

Question 5.
உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்………………………
அ) ஈழத்துப் பூதன் தேவனார்
ஆ) நக்கீரர்
இ) திருமுடிக்காரி
ஈ) கபிலர்
Answer:
அ) ஈழத்துப் பூதன் தேவனார்

Question 6.
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) கலித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 7.
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………………………
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Answer:
ஈ) பரணர்

Question 8.
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) பெரும்பதுமனார்

Question 9.
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………………….
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Answer:
ஆ) தாவோவியம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 10.
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ………………….
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Answer:
இ) நற்றிணை

Question 11.
நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?
அ) மூளை
ஆ) நாக்கு
இ) கண்
ஈ) கை
Answer:
ஆ) நாக்கு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 12.
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) பதிற்றுப்பத்து

Question 13.
தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்
அ) கம்ப ர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
ஆ) கபிலர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 14.
பின்வரும் புலவர்களையும், மன்னர்களையும் சரியான இணையாகப் பொருத்துக.
அ) நக்கீரர் – 1. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ) ஔவையார் – 2. பெருஞ்சாத்தன்
இ) கபிலர் – 3. அதியன்
ஈ) நச்செள்ளையார் – 4. திருமுடிக்காரி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 3, 4, 1
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 4, 1

Question 15.
இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 16.
காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.
அ) தர்மர்
ஆ) கன்பூசியஸ்
இ) போதி தர்மர்
ஈ) புத்தர்
Answer:
இ) போதி தர்மர்

Question 17.
போதி தர்மருக்குக் கோயில் கட்டியவர்கள் ………………….
அ) சீனர்கள்
ஆ) ஜப்பானியர்
இ) கிரேக்கர்
ஈ) புத்தர்
Answer:
அ) சீனர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 18.
சமூகக் கடலின் ஒரு துளி ………………….
அ) பறவைகள்
ஆ) விலங்குகள்
இ) மரங்கள்
ஈ) மனிதன்
Answer:
ஈ) மனிதன்

Question 19.
சொற்றொடர்களை முறைப்படுத்துக.
i) செய்ய வெறுத்தனர்
ii) பழிதரும் செயல்களை
iii) பரிசாகக் கிடைத்தாலும்
iv) உலகே
அ) (iv)-(iii)-(ii)-(i)
ஆ) (iii)-(iv)-(i)-(ii)
இ) (ii)-(i)-(iv)-(iii)
ஈ) (i)-(iv)-(iii)-(ii)
Answer:
அ) (iv)-(iii)-(i)-(i)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 20.
பொருத்துக.
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ) பேகன்
3. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ) மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ) அதியன்
அ) 1.அ 2.ஆ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ)1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 21.
பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
தவறான சொற்றொடரைக் கண்டறிக.
அ) நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல்.
ஆ) நாக்கு இன்பத்தின் கதவைத் திறப்பது.
இ) நாக்கு துன்பத்தின் கதவைத் திறப்பது.
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
Answer:
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

Question 23.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Answer:
அ) அமைச்சர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 24.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) மாங்குடி மருதனார்

Question 25.
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) ஆவூர் மூலங்கிழார்

Question 26.
குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்
Answer:
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 27.
‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல் – ………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
Answer:
அ) புறநானூறு

Question 28.
தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Answer:
அ) உறையூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 29.
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) நல்வேட்டனார்

Question 30.
சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ………………….
அ) உதவி
ஆ) கொடை
இ) வாய்மை
ஈ) பொருள்
Answer:
இ) வாய்மை

Question 31.
ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) நற்றிணை
Answer:
அ) கலித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 32.
செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறநானூறு

குறுவினா

Question 1.
அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?
Answer:
மன்னர்களுடைய செங்கோலும், வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 2.
அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?
Answer:

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது.

Question 3.
தனிச்சிறப்புப் பெற்ற அவையம் எவை?
Answer:

  • உறையூரில் இருந்த அறஅவையம் தனிச் சிறப்புப் பெற்றிருந்தது.
  • மதுரையில் இருந்த அவையமும் சிறப்புப் பெற்று இருந்தது.
  • இவ் அவையங்கள் துலாக் கோல் போல் நடுநிலைமையுடன் இருந்தன.

Question 4.
மகிழ்ச்சி என்பதை விளக்குக.
Answer:

  • ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து, மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி .
  • அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

Question 5.
வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் கூறுக.
Answer:

  • ‘பொய்யாச் செந்நா’
  • ‘பொய்படு பறியா வயங்கு செந்நா’
  • ‘பிழையா நன்மொழி – நற்றிணை’
  • ‘பொய்மொழிக் கொடுஞ்சொல்’

என்று பொய் கூறக்கூடாது, வாய்மையே கூறவேண்டும் என்பதை இலக்கியங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 6.
சங்க இலக்கியம் முதல் தரமான அறம் என்பதை விளக்குக.
Answer:

  • இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது.
  • சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமான அறம்.
  • தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாந்தரமான அறம்.
  • எனவே, சங்க இலக்கிய அறங்கள் இயல்பான முதல் தரமான அறம் என்பது சாலப் பொருந்தும்.

Question 7.
அற இலக்கியங்களில் ஈதல் பற்றிக் கூறப்பட்டுள்ளதை விளக்குக.
Answer:

  • புற இலக்கியங்களில் மட்டுமல்ல, அற இலக்கியங்களிலும் ஈகை பற்றிய செய்திகள் உள்ளன.
  • ஈயாமை இழிவு என அற இலக்கியம் கூறுகிறது.
  • இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கலித்தொகை கூறுகிறது.

Question 8.
கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.
Answer:

  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அதியன்
  • மறுமை நோக்கி கொடுக்காதவன் – பேகன்
  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்துக் கொடுப்பவன் – ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் – திருமுடிக்காரி.
  • இவ்வாறு மன்னர்கள் கொடையால் சிறந்திருந்தனர்.

Question 9.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் செம்மை சான்ற அமைச்சர் கடமையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 10.
‘அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’ என்ற புறநானூற்று வரிகளின் உட்கருத்தைப் புலப்படுத்துக.
Answer:
இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. அத்தகைய நோக்கம் இல்லாதவன் வள்ளல் ஆய்.

Question 11.
அறங்கூறவையம் இருந்த இடங்கள் யாவை?
Answer:

  1. உறையூர்
  2. மதுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 12.
வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?
Answer:
இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன் என்றெல்லாம் வள்ளல்கள் போற்றப்பட்டனர்.

Question 13.
உதவியாண்மை என்ற சொல்லின் பொருள் மற்றும் அதனைக் குறிப்பிட்டவர் யார் என்பதைக் குறிப்பிடவும்?
Answer:
உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். ”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 14.
உண்மையான செல்வம் எது என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்?
Answer:
பிறர் துன்பம் தீர்ப்பது தான் உண்மையான செல்வம் என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்.

Question 15.
‘ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாக உள்ளன’ – இக்கூற்றில் சுட்டப்படும் ஆற்றுப்படை இலக்கியங்கள் யாவை?
Answer:

  • திருமுருகாற்றுப் படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • பொருநாராற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை

Question 16.
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பைப் புலப்படுத்துவன எவை?
Answer:
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பை சிறுபாணாற்றுப்படையும், பெருஞ்சித்திரனார் பாடல்களும் புலப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 17.
குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் என்று குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.

Question 18.
“இல்லோர் ஒக்கல் தலைவன்’ யார் என்பதை விளக்குக.
Answer:
பொருள் இல்லாத ஏழைச் சுற்றத்திற்குத் தலைவன் வள்ளல்கள் ஆவர்.

Question 19.
கொடை என்பதும் ஓர் அறம் என்பதனை ஔவையார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer:
‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’ என்கின்ற ஒளவையின் கூற்று கொடை என்பதும் ஓர் அறம் என்பதனைத் தெளிவாக்குகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

சிறுவினா

Question 1.
உண்மையான செல்வம் எது?
Answer:
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்.
‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்’
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’
என்று நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.

Question 2.
சங்ககாலப் போர் அறம் குறித்து எழுதுக.
Answer:

  • தமிழர் போரிலும் அறத்தைப் பின்பற்றினர்.
  • போர் அறம் என்பது வீரமற்றோர் புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கும்.
  • பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போரிடுவதும் போர் அறமாகக் கருதப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 3.
நோக்கம் கருதி அறம் செய்தல் கூடாது விளக்குக.
Answer:

  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது.
  • இப்பிறப்பில் அறம் செய்தால் மறுபிறப்பில் பயன் பெறலாம் என்று கருதியும் செய்தல் கூடாது.
  • நோக்கமின்றித் தரும் அறமே சிறந்த அறமாகும்.

Question 4.
கொடையின் சிறப்பை இலக்கியங்கள் போற்றுவது பற்றி எழுதுக.
Answer:

  • கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பு, சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் போற்றப்பட்டுள்ளது.
  • ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாகவே உள்ளன.
  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகும்.
  • புறநானூற்றிலும் குறிப்பிட்ட மன்னர்களின் கொடைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 5.
மகிழ்ச்சி பெருக என்ன செய்ய வேண்டும்?
Answer:

  • மனிதன் சமூகக் கடலின் ஒரு துளி.
  • மனிதன் எல்லோரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கு எவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவு மகிழ்ச்சி பெருகும்.
  • இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்றால் மகிழ்ச்சி பெருகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 6.
கொடை என்னும் பகுதியில் அமைந்த வள்ளல்கள் பெயரினைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • அதியன்
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • பேகன்
  • குமணன்
  • திருமுடிக்காரி