Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Students can Download 6th Tamil Chapter 6.3 வளரும் வணிகம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.3 வளரும் வணிகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 1.
உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
எங்கள் ஊர் – நீலகிரி :
(i) தேயிலை, காபி, குறுமிளகு போன்ற பணப்பயிர்.
(ii) பாகற்காய், பீன்ஸ், பூசணி, மஞ்சள், இஞ்சி போன்ற காய்கறிகள்.
(iii) கேரட், கோஸ், நூக்கல், குடைமிளகாய் போன்றவை.

Question 2.
ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சிறப்புப் பொருள்களின் பெயர்களை அட்டவணைப்படுத்துக.
Answer:
சிறப்புப் பொருள்கள் :
(i) மதுரை மல்லி
(ii) திருப்பதி லட்டு
(iii) திருநெல்வேலி அல்வா
(iv) திண்டுக்கல் பூட்டு
(v) மணப்பாறை முறுக்கு
(vi) சேலம் மாம்பழம்
(vii) காஞ்சிபுரம் பட்டு
(viii) பழனி பஞ்சாமிர்தம்
(ix) பொல்லாச்சி இளநீர்
(x) ஊட்டி ரோஜா
(xi) காஞ்சிபுரம் இட்லி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்……………
அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி
Answer:
அ) நுகர்வோர்

Question 2.
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வணிகசாத்து
ஆ) வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து
Answer:
இ) வணிகச்சாத்து

Question 3.
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று
Answer:
அ) பண்டமாற்ற

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 4.
வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வண்ண ம் + படங்கள்
ஆ) வண்ண ப் + படங்கள்
இ) வண்ண + படங்கள்
ஈ) வண்ண மான + படங்கள்
Answer:
அ) வண்ண ம்+ படங்கள்

Question 5.
விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ் + அடைந்த
Answer:
இ) விரிவு + அடைந்த

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) வணிகம் – ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் விற்பதும் வணிகம்.
ஆ) ஏற்றுமதி – பழங்காலத்தில் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இ) சில்லறை தற்போது சில்லறை தட்டுப்பாடு அதிகமாகி விட்டது.
ஈ) கப்பல் – கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்.

குறுவினா

Question 1.
வணிகம் என்றால் என்ன?
Answer:
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.

Question 2.
பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் எனப்படும்.

Question 3.
சிறுவணிகப் பொருட்கள் யாவை?
Answer:
பால், கீரை, காய்கறிகள் போன்றவை சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.

சிறுவினா

Question 1.
சிறுவணிகம், பெருவணிகம் – வேறுபடுத்துக.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம் 1

Question 2.
பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
Answer:
பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்கள் :
தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு.

பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்கள் :
சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபியாவிலிருந்து குதிரைகள்.

சிந்தனை வினா

Question 1.
வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?
Answer:
(i) வணிகப் பொருள்கள் உற்பத்தியாளரிடமிருந்து மொத்த வியாபாரியிடம் செல்கிறது.
(ii) மொத்த வியாபாரியிடமிருந்து சில்லரை வியாபாரியிடம் செல்கிறது.
(iii) சில்லரை வியாபாரியிடமிருந்து நுகர்வோரை(மக்களை) வந்தடைகின்றது.
(iv) இணையத்தின் மூலமாகவும் பொருள்களை மக்கள் பெறுகின்றனர்.
(v) அஞ்சல் வழியிலும் பொருள்களைப் பெறுகின்றனர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 2.
உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.
Answer:
(i) பால் வியாபாரம்
(ii) காய்கறி அங்காடி
(iii) செய்தித்தாள் விற்பனையாளர்
(iv) தேநீர் அங்காடி
(v) பல்பொருள் விற்பனையாளர்

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம் 2

கூடுதல் வினாக்கள்

Question 1.
வணிகம் குறித்து கூறும் இலக்கியங்கள் யாவை?
Answer:
(i) தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
……………….
உமணர் போகலும். – நற்றிணை – 183
(ii) பாலோடு வந்து கூழொடு பெயரும்………….. – குறுந்தொகை – 23
(iii) பொன்னோடு வந்து கறியொடு பெயரும்………… – அகநானூறு – 149

Question 2.
வணிகத்தின் வகைகளையும் அவ்வகையில் நடைபெறும் வணிகம் பற்றியும் எழுதுக.
Answer:
(i) வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் E வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை – ‘வணிகச்சாத்து’ என்பர்.

(ii) கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம்’ என்றும் ‘பாக்கம்’ என்றும் குறிக்கப்பட்டன.

(iii) தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

(iv) வணிகத்தைத் தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம். தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்.

Question 3.
இணையவழி வணிகம் பற்றி எழுதுக.
Answer:
(i) கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது. இணையத்தளம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

(ii) இவற்றின் இணையத்தளப் பக்கத்தில் நமக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். பொருள்களின் தரம், விலை, சிறப்பு ஆகியவற்றைப் பிற நிறுவன பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமக்குப் பிடித்த பொருள்களை நம் வீட்டிற்கே வரவழைக்கலாம்.

(iii) பொருளைப் பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தலாம். மின்னணுப் பரிமாற்றம் மூலமும் பணத்தைச் செலுத்தலாம். வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது.

(iv) பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Students can Download 6th Tamil Chapter 6.2 கடலோடு விளையாடு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.2 கடலோடு விளையாடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Question 1.
பாடப்பகுதியில் உள்ள பாடலை பாடலை இசையோடு பாடிக் காட்டுக.
Answer:
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா
அடிக்கும் அலை நம்தோழன் – ஐலசா
அருமைமேகம் நமதுகுடை – ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா
விண்ணின் இடி காணும் கூத்து – ஐலசா

Question 2.
உங்களைக் கவர்ந்த நாட்டுப்புறப் பாடல்களை எழுதி வருக.
Answer:
ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வருமாய்ப்போல்
அதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல்
சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாற்போல்
செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாற்போல்
சினந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை
கண்ணான எங்கள் இளந்தாரிமாரை
கண்ணூறு படாமற் காவும் ஐயனாரே
மட்டுருக் காலை அருவாளு மடித்து
மாவிலங்கன் பிடி சீவி யிறுக்கி வெட்டும் பிடியைச் சிறக்கவே
போட்டு வெள்ளித்தகட்டினால் விரல் கூட்ட மிட்டு
வளர்தருவி வெட்டும் இளந்தாரி மாரை நாவூறு வாராமற் காரும் ஐயனாரே.

Question 3.
சொந்தமாக கடல், வானம், மலை ஆகியவற்றைப் பாடல் எழுதிப் பாடுக.
Answer:
கடல் :
அலைவதால் உனக்கு அலைகடல் பேரோ? நிலையிலா
உலகின் நிகழ்வுகளைக் காட்டிடவே அலைகிறாய்
போலும் அங்குமிங்கும்! ஆட்டமிட்டு விலையிலா
பொருள்களை விளைத்திடும் கடல் தாய்!
முத்துடன் பவளமெனக் கத்துகடல் அளித்திடுமே!
சத்தமிடும் சங்கீதக் கடலுக்கு வந்தனமே!
முத்தமிடும் தரைதனையே முழுதாடை கடலென்பார்
வித்தகரின் பாடலைப் போல் விலையேது கடலுக்கே!

வானம் :
வாழ்வில் இன்பமும் துன்பமும்
உண்டென்பதை உணர்த்த
வானில் சந்திரனையும் சூரியனையும்
உன்னகத்தே வைத்தாய்!
வாழ்வில் தோன்றி மறையும்
நகைச்சுவை போல
வானில் தோன்றி மறையும்
மின்னலைக் காட்டினாய்!
மனிதன் கைமாறு கருதா
உதவிகள் செய்வதற்கு
முகில் கூட்டங்களை வைத்து
மழைபெய்வித்துச் சான்றானாய்!
வானமே! எத்தனைப் பேருக்கு
அடைக்கலம் தந்தாய்!
வாழ்க்கைப் பெட்டகமே நீயேதான்!
வாழ்க வளர்கவே!

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

மலை :
காடுகளை உனதாக்கி
மழையினைத் தந்தாய்!
சுவைமிகு காய்கனிகளை உனதாக்கி
நல் அமுதினைத் தந்தாய்!
அரிய மூலிகைகளை உனதாக்கி
மாமருந்தினைக் தந்தாய்!
பல்வகை உயிரினங்களுக்கும்
இருப்பிடம் தந்தாய்!
மலைமகளே உன்னைப்
பாதுகாப்போம் பராமரிப்போம்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கதிர்ச் + சுடர்
ஆ) கதிரின் + சுடர்
இ) கதிரவன் + சுடர்
ஈ) கதிர் + சுடர்
Answer:
ஈ) கதிர் + சுடர்

Question 2.
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மூச்சு + அடக்கி
ஆ) மூச் + அடக்கி
இ) மூச் + சடக்கி
ஈ) மூச்சை + அடக்கி
Answer:
அ) மூச்சு + அடக்கி

Question 3.
பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்
Answer:
ஆ) பெருவானம்

Question 4.
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை
Answer:
அ) அடிக்குமலை

பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக

அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை
ஆ) மணல் – 2. ஊஞ்சல்
இ) புயல் – 3. போர்வை
ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு
Answer:
அ) 4
ஆ) 1
இ) 2
ஈ) 3

குறுவினா

Question 1.
அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?
Answer:
மீனவர்கள் அலையைத் தோழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Question 2.
கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
கடல் பாட்டில் முழுநிலவு கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.

சிறுவினா

Question 1.
‘கடல்’ பாட்டின் பொருளை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
Answer:
(i) மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள், விரிந்த கடலே பள்ளிக்கூடம்.

(ii) கடல் அலையே தோழன், மேகமே குடை, வெண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை. விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து, சீறிவரும் புயல் விளையாடும் ஊஞ்சல்.

(iii) பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை. அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை.

(iv) கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு. மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்: வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம். முழு நிலவுதான் கண்ணாடி.

(v) மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம். இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.
Answer:
நான்வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில் பாய் பின்னும் தொழில்(வந்தவாசி):
தமிழகத்தின் பாரம்பரிய கோரைப் பாய் தயாரிக்கும் தொழில் வந்தவாசியில் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான மூலப்பொருள் கோரை. இது ஒருவகைப் புல்லாகும். இது காவிரி ஓடும் கரையோரப் பகுதிகளில் விளைகின்றது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

தமிழகத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முன்பெல்லாம் கைத்தறி மூலம் நெய்யப்பட்ட பாய்கள், தற்போது இயந்திரங்கள் மூலம் நெய்யப்படுகிறது.

கோரைப் பிரிப்பது, அதற்கு சாயம் பூசுவது வெயிலில் உலர்த்துவது, நெய்வது, பாய் நெய்த பிறகு அதன் ஓரங்களில் துணி வைத்து தைப்பது, பாய்களைச் சுருட்டிக் கட்டாகக் கட்டுவது போன்ற பல்வேறு கட்டங்களில் பணி நிகழ்கிறது.

பத்தமடைப் பாய் எந்த அளவு புகழ்பெற்றதோ அதே போல் எங்கள் பகுதியான வந்தவாசியில் தயாரிக்கும் பாய்களும் புகழ்பெற்றது. பாயில் பல வகைகள் உள்ளன. அவை கோரைப்பாய், பிரம்புப் பாய், ஈச்சம்பாய், மூங்கில் பாய், நாணல் கோரைப் பாய் என்பனவாம். பாயைத் தரையில் விரித்து நாம் உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம் ஆகும்.

கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முகுது வலி வராமலும் தடுக்கும். பாயில் படுத்து உறங்குவது ஞாபக சக்தியையும் மன அமைதியையும் தருகிறது.

Question 2.
நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?
Answer:
நாட்டுப்புற இலக்கியங்கள், மக்களின் மனவுணர்வுகளைப் பலவாறான கூறுகளில் மிக எளிமையாகவும் இனிமையாகவும் வெளிப்படுத்துபவைகளாக விளங்கும். இவை பெரும்பான்மையும் கல்வி பயிலா மக்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன எனலாம். இப்பாடல்களுக்கு ஆசிரியர் என்று ஒருவர் இல்லை. இவை ஓலைச்சுவடிகளில் பதிவு பெறுவதற்கு முன்பு வாய்மொழியாக ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பதிவு செய்யப்பட்டன.

இந்த இலக்கியங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக அல்லது செவி வழியாக பகிரப்பட்டு வந்தவை ஆகும். ஏட்டில் எழுதப்படாமல் வழிவழியாக தாய் பாட அவளைத்தொடர்ந்து மகள் எனப் பல தலைமுறையாகப் பாடப்படுகிறது. நாட்டுப்புறங்களில் .9 பாடப்பட்டு வளர்ந்தவை. எழுதப்படாமல் வாய்மொழியாக வளர்ந்தமையால் இது வாய்மொழி இலக்கியம் எனப் பெயர் பெற்றது.

இதன் வேறு பெயர்கள் – பாமரர் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், ஏட்டில் எழுதாக் கவிதை, காற்றிலே மிதந்த கவிதை, வாய்மொழிப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்.

வகைகள் – புராணக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், ஏற்றப்பாட்டு, விதைப்புப் பாட்டு, நடவுப் பாட்டு, அறுவடைப் பாட்டு, நெல் குத்தும் பாட்டு, சுண்ணம் இடிக்கும் பாட்டு தெம்மாங்குப் பாடல்கள்,

கூடுதல் வினாக்கள்

Question 1.
வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?
Answer:
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் 3 பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

Question 2.
நீ அறிந்த நாட்டுப்புறப் பாடல்களின் பெயர்களை எழுதுக.
Answer:
நடவுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, வள்ளைப் பாட்டு, விடுகதைப் பாட்டு, ஏற்றப்பாட்டு, 5 பரிகாசப் பாட்டு, கும்மிப் பாட்டு, கண்ண ன் பாட்டு, ஏசல் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு.

Question 3.
நெய்தல் திணை பற்றி எழுதுக.
Answer:
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள் : பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

நூல் வெளி
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை ‘வாய்மொழி இலக்கியம்’ என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Students can Download 6th Tamil Chapter 6.1 நானிலம் படைத்தவன் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.1 நானிலம் படைத்தவன்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Question 1.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலுக்கு உரிய நிலங்களை அறிந்து எழுதுக.
Answer:
(i) குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த இடங்கள்.
(ii) முல்லை – காடும் காடு சார்ந்த இடங்கள்.
(iii) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடங்கள்.
(iv) நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ……………..
அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை
Answer:
இ) வீரம்

Question 2.
கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து
Answer:
ஆ) கல் + எடுத்து

Question 3.
நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………….
அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்
Answer:
ஆ) நான்கு + நிலம்

Question 4.
நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடி என்ற
ஈ) நாடு அன்ற
Answer:
அ) நாடென்ற

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Question 5.
கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி
Answer:
ஈ) கலமேறி

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) மாநிலம் – என் நண்பன் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளான்.
ஆ) கடல் – கடல் பரந்து விரிந்துள்ளதால் அதற்குப் பரவை என்று பெயர்.
இ) பண்டங்கள் – தின்பண்டங்களை வீணாக்கக்கூடாது.

நயம் அறிக

Question 1.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. எதுகை :
Answer:
ல்லெடுத்து – மல்லெடுத்த
ராக்கி – பேராக்கி
மாநிலத்தில் – நானிலத்தை
– சூழும்
முக்குளித்தான் – எக்களிப்பு
ண்டங்கள் – கண்டங்கள்
ஞ்சானம் – அஞ்சுவதை

Question 2.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மோனை :
அஞ்சாமை – அஞ்சுவதை

குறுவினா

Question 1.
நான்கு நிலங்கள் என்பன யாவை?
Answer:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை நான்கு நிலங்கள் ஆகும்.

Question 2.
தமிழன் எதற்கு அஞ்சினான்?
Answer:
தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.

Question 3.
தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
Answer:
ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்வதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்.

சிறுவினா

Question 1.
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?
Answer:
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை உருவாக்கின விதம் :
(i) தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான்.
(ii) தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.
(iii) ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான்.
(iv) முல்லை , மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்தினான். இதனால் நாகரிக மனிதன் ஆனான்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Question 2.
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
Answer:
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன :
(i) பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்.
(ii) பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக்கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.
(iii) ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான்.
(iv) தமிழன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுவான்.

சிந்தனை வினா

Question 1.
காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனச் சிந்தித்து எழுதுக.
Answer:
நாகரிக வளர்ச்சி :
மனிதன் காடுகளில் தோன்றினான், கூட்டம் கூட்டமாக வாழ்ந்தான். அவர்களுடைய பசியைப் போக்க காட்டு விலங்குகளை வேட்டையாடினான். அவற்றைச் சுட்டுத் தின்பதற்காக நெருப்பைக் கண்டறிந்தான். சிக்கிமுக்கிக் கல்லை அதற்குப் பயன்படுத்தினான். தேவதாரு மற்றும் மூங்கில் மரத்தைக் கொண்டு நெருப்பு மூட்டக் கற்றுக் கொண்டு உணவுப் பொருட்களைச் சுட்டுத் தின்றான். பிறகு கல், வெண்கலம், இரும்பு என வகை வகையான கருவிகளைக் கண்டறிந்தான். விவசாயத்திற்கு அக்கருவிகளைப் பயன்படுத்தினான்.

இரை கிடைக்கும் இடத்தைத் தேடி இடம் விட்டு இடம் பெயர்ந்தான். ஓரிடத்தில் வீடு கட்டி வாழ்ந்து விவசாயத்தின் மூலம் உணவு பெறுவது தொடங்கி ஆடு, மாடுகளைப் பழக்கி உழவுத் தொழில் செய்தான். மட்பாண்டங்கள் செய்யக் கற்றுக் கொண்டான். படகுகள் செய்து ஆறு, கடல் ஆகிய நீர்நிலைகளில் பயணித்தான். பருத்தி, ஆட்டு மயிர்கள் கொண்டு ஆடை உருவாக்கினான். இவ்வாறு அவனுக்குத் தேவையான அனைத்தையும் அவனே உருவாக்கினான். சிறு சிறு குடியிருப்புகள் உருவாயின.

இது ஒரு கிராமம் தோன்றுவதற்குத் தொடக்கமாக அமைந்தது. இச்சிறு கிராமங்கள் படிப்படியாக நகரங்களாக வளர்ச்சி பெற்றன. நகரங்கள் வந்தபிறகு நாகரிகம் வந்தது. தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள மொழி பயன்பட்டது.

இவ்வாறு வளர்ந்த மனிதன் அறிவியல் வளர்ச்சியின் மூலம் பல வகையில் முன்னேறினான். புதிய புதிய இயந்திரங்கள் மக்களின் வேலைச் சுமையைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தியது. மனிதன் ஓய்வு பெறக் கற்றுக் கொண்டான். இவ்வாறு மனிதன் படிப்படியாக வளர்ந்தான்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
முடியரசனின் இயற்பெயர் யாது?
Answer:
முடியரசனின் இயற்பெயர் துரைராசு.

Question 2.
முடியரசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
முடியரசன் இயற்றிய நூல்கள் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை.

Question 3.
முடியரசன் எவ்வாறு பாராட்டப் பெற்றார்?
Answer:
முடியரசன் திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றார்.

பிரித்து எழுதுக.

1. கல்லெடுத்து – கல் + எடுத்து
2. மல்லெடுத்த – மல் + எடுத்த
3. திண்டோள் – திண்மை + தோள்
4. பெருவெளி – பெருமை + வெளி
5. எக்களிப்பு – எ + களிப்பு
6. கலமேறி – கலம் + ஏறி
7. முத்தெடுத்தான் – முத்து + எடுத்தான்
8. நானிலம் – நான்கு + நிலம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

நூல் வெளி
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாரட்டப்பெற்றவர். இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Students can Download 6th Tamil Chapter 5.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்ற அதிகாரங்களில் உள்ள திருக்குறள்காரன் ஐந்தனைப் பொருளுடன் எழுதி வந்து வகுப்பில் பொருளுடன் பகிர்க
Answer:
விருந்தோம்பல் : விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவு அல்லது பொதுவாக, உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பது. அதாவது, விருந்தினர், அந்நியர்களை வரவேற்று விருந்தோம்பி மகிழ்விப்பதாகும்.

1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தேம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள் : வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம் வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆகும்.

2. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
பொருள் : தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

3. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள் : நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

கள்ளாமை : தனக்கு உரிமையில்லாத மற்றவர் உடைமையை அவரறியாமல் கைக்கொள்ளவோ வஞ்சித்து எடுத்துக் கொள்ளவோ, எண்ணாதிருத்தலும் அங்ஙனம் செய்யாதிருத்தலும் கள்ளாமை ஆகும்.

1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
பொருள் : பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

2. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
பொருள் : அருளைப் பெரிதாகக் கருதி அன்புடையவராய் நடத்தல் பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை .

3. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
பொருள் : நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும். கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
திருக்குறள் உலகப் பொதுமறை எனப்படுவது ஏன்? வகுப்பறையில் பேசுக.
Answer:
திருக்குறள் உலகப்பொதுமறை :
(i) திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘தமிழுக்குக் கதி’ எனச் சிறப்பிக்கப்படுவது. (க-கம்பராமாயணம், தி – திருக்குறள்) நம் தாய்மொழியான தமிழ்மொழிக்கு மணிமகுடம் போன்றது. புகழ்பெற்ற இலக்கியமாகும். திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ்மொழியில் இயற்றப்பட்ட நூலாகும். மேலும், திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

(ii) இந்நூல் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்துள்ளமையால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.

(iii) உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது. இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
அ) நம் முகம் மாறினால்
ஆ) நம் வீடு மாறினால்
இ) நாம் நான்கு வரவேற்றால்
ஈ) நம் முகவரி மாறினால்
Answer:
அ) நம் முகம் மாறினால்

Question 2.
நிலையான செல்வம் …………………..
அ) தங்கம்
ஆ) பணம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
Answer:
இ) ஊக்கம்

Question 3.
ஆராயும் அறிவு உடையவர்கள் ………………. சொற்களைப் பேசமாட்டார்.
அ) உயர்வான
ஆ) விலையற்ற
இ) பயன்தராத
ஈ) பயன்உடைய
Answer:
இ) பயன்தராத

Question 4.
பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) பொருளுடைமை
ஆ) பொருளுடைமை
இ) பொருள்+உடைமை
ஈ) பொருள்+ளுடைமை
Answer:
இ) பொருள்+உடைமை

Question 5.
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) உள்ளவது எல்லாம்
ஆ) உள்ளுவதெல்லாம்
இ) உள்ளுவத்தெல்லாம்
ஈ) உள்ளுவதுதெல்லாம்
Answer:
ஆ) உள்ளுவதெல்லாம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 6.
பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) பயனிலா
ஆ) பயன்னில்லா
இ) பயன் இலா
ஈ) பயன் இல்லா
Answer:
அ) பயனிலா

நயம் அறிக

Question 1.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
அடி எதுகை : உள்ளுவது – தள்ளினும்
அடி மோனை : உள்ளுவது – உயர்வுள்ளல்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.
பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
மற்றுப் பிற அணியல்ல.
Answer:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
Answer:
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

“ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திசூடி, இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

1. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.

2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

3. சொல்லுக சொல்லில் பயனுடைய
சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்.
Answer:
2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க,

வீட்டிற்குள் வந்த வேலனை தந்தை அழைத்தார். “உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். “இல்லையப்பா, அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். “போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக்கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். “நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன்” என்றான்.

1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

3. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
Answer:
2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

குறுவினா

Question 1.
எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?
Answer:
உண்ணப்படும் பொருள் அமிழ்தமே ஆனாலும் தன்னை நோக்கி வந்த விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

Question 2.
எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்?
Answer:
பிறருடைய பொருளை அவர் அறியா வகையில் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பதுகூடத் தீமையானது.

Question 3.
ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்?
Answer:
தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழி கேட்டுக் கொண்டு செல்லும்.

Question 4.
நாம் எத்தகைய சொற்களைப் பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?
Answer:
நாம் பயனுடைய சொற்களை மட்டும் பேச வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
அனிச்சமலர் குறித்து வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடும். அதுபோல் நாம் முகம் மாறினால் விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.

Question 2.
அழியும் செல்வம் எது?
Answer:
களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்து விடும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 3.
ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் மூலம் கூறப்பட்ட கருத்துகள் யாவை?
Answer:
(i) ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.
(ii) தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக் கொண்டு செல்லும்.
(iii) தண்ணீ ரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப் பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.
(iv) எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையாவிட்டாலும் எண்ணமே மனநிறைவைத் தருக.

Question 4.
பயன் தராத சொற்களைப் பேசாதவர் யார்?
Answer:
நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

Students can Download 6th Tamil Chapter 5.5 மயங்கொலிகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.5 மயங்கொலிகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

Question 1.
ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க
Answer:
1. அலகு – பறவை மூக்கு
அளகு – பெண் பறவை
அழகு – வனப்பு

2. அலை – திரை, திரி
அளை – தயிர்
அழை – கூப்பிடு

3. இலை – தழை
இளை – மெலி
இழை – நூல்

4. ஒலி – ஓசை
ஒளி – வெளிச்சம்
ஒழி – கெடு

5. கலை – வித்தை
களை – நீக்க
கழை – மூங்கில்

6. கிலி – அச்சம்
கிளி – ஒரு பறவை
கிழி – துண்டாக்கு

7. தலை – சிரசு
தளை – கட்டுதல்
தழை – இலை

8. தால் – நாக்கு
தாள் – கால், பாதம்
தாழ் – பணி

9. வலி – வலிமை
வளி – காற்று
வழி – பாதை

10. வால் – விலங்குகளின் வால் பகுதி
வாள் – கத்தி
வாழ் – உயிர் வாழ்.

Question 2.
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.
Answer:
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள்
3. உரிய – சொந்தமான
4. அருகு – பக்கம்
5. அரை – பாதி
6. இரங்கு – மனமுருகு
7. இறங்கு – கீழிறங்கு
8. உரை – சொல்
9. கூரை – முகடு
10. தரு – மரம்
11. மாரி – மழை
12. மறை – வேதம்
13. மறம் – வீரம்
14. ஆழி – கடல்
15. குழம்பு – காய்கறிக் குழம்பு
16. சோளம் – தானியம்
17. ஆணை – கட்டளை
18. கணி – கணக்கிடு
19. வளி – காற்று
20. விழி – கண்திற

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சிரம் என்பது ………………. (தலை / தளை )
2. இலைக்கு வேறு பெயர் ……………… (தளை / தழை)
3. வண்டி இழுப்பது ……………… (காலை/காளை)
4. கடலுக்கு வேறு பெயர் ……………….. (பரவை / பறவை)
5. பறவை வானில் ………….. (பறந்தது/பரந்தது)
6. கதவை மெல்லத் …………… திறந்தான் / திரந்தான்)
7. ………………. வீசும். (மனம்/மணம்)
8. புலியின் ………………. சிவந்து காணப்படும். (கன்/கண்)
9. குழந்தைகள் … …………………… விளையாடினர். (பந்து/பன்து)
10. வீட்டு வாசலில் …………… போட்டனர். கோலம்/கோளம்)
Answer:
1. தலை
2. தழை
3. காளை
4. பரவை
5. பறந்தது
6. திறந்தான்
7. மணம்
8. கண்
9. பந்து
10. கோலம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக

Question 1.
எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
Answer:
என் விட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

Question 2.
தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
Answer:
தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

Question 3.
வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
Answer:
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

பொருள் வேறுபாடறிந்து எழுதுக

1. வாசலில் போடுவது …………………..
2. பந்தின் வடிவம் …………….
Answer:
1. கோலம் – (அழகு புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம்).
2. கோளம் – (உருண்டை)

மொழியை ஆள்வோம்

பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க.

முகிலன் பொங்கல் விழா கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கு செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்வாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்.

வினாக்கள் :
1. முகிலன் எதற்காகத் தாத்தா வீட்டிற்குச் சென்றான்?
2. முகிலனின் தாத்தா வீட்டில் என்ன இருந்தது?
3. முகிலனின் வழக்கம் என்ன?
4. முகிலன் தாத்தாவிற்கு எவ்வாறு உதவுவான்?
5. முகிலன் தன் தாத்தா பாட்டியோடு எவ்விழாவைக் கொண்டாடுவான்?

சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக

1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்.
3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்.
4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்.
Answer:
(விடை: 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

உரையாடலை நிரப்புக

செல்வன் : வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா?
மாமா : நான் நலமாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?
செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.
மாமா : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?
செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்றுள்ளார்கள்.
மாமா : அப்படியா. நீ எப்படிப் படிக்கிறாய்?
செல்வன் : நன்றாகப் படிக்கிறேன் மாமா.
மாமா : நாளை சுதந்திர தினவிழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?
செல்வன் : ஆம் மாமா. நான் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
மாமா : வெற்றி பெற வாழ்த்துகள்.
செல்வன் : நன்றி மாமா!

நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக

இன்பம் கொடுப்பது நட்பு
மகிழ்ச்சி அளிப்பது நட்பு
கைக் கொடுப்பது நட்பு
ஊக்கம் அளிப்பது நட்பு.

மொழியோடு விளையாடு

Question 1.
கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா) கல் + ல் + உண்டு = கல்லுண்டு, கல் + ல் + இல்லை = கல்லில்லை.
Answer:
1. பல் + ல் + உண்டு = பல்லுண்டு
பல் + ல் + இல்லை = பல்லில்லை .

2. மின் + ன் + உண்டு = மின்னுண்டு
மின் +ன் + இல்லை = மின்னில்லை

3. மண் + ண் + உண்டு = மண்ணுண்டு
மண் + ண் + இல்லை = மண்ணில்லை.

கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் 1

சுற்றுலாத்தலங்கள் :
1. கன்னியாகுமரி
2. தஞ்சாவூர்
3. மாமல்லபுரம்
4. ஏற்காடு
5. கல்லணை
6. சுருளி
7. குற்றாலாம்
8. மதுரை
9. செஞ்சி
10. ஊட்டி

செயல் திட்டம்

Question 1.
கதிரவன் உதிக்கும் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் 2

Question 2.
உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்திலுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் குறித்த படத்தொகுப்பைச் செய்தியுடன் சேகரிக்க.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் 3
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் 4
விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது , செஞ்சி. இது, மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இதன் கிழக்கே சாரங்கபாணி ஆறு உள்ளது. சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட செஞ்சி, தொன்மைச் சிறப்புகள் பல நிறைந்தது. பெருங் கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் பல இங்கு உள்ளன. செஞ்சிக்குள் பல சிறப்பு பெற்ற ஊர்கள் காணப்படுகின்றன. தொண்டூர், திருநாதர்குன்று,

பனமலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொ.ஆ. 13-ம் நூற்றாண்டில், செஞ்சியர்கோன் என்ற அரசன், இவ்வூரில் உள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி எனும் மூன்று மலைகளையும் சேர்த்து கோட்டை ஒன்றை எழுப்பத் திட்டமிட்டான் செஞ்சிக்கோட்டையும் இக்காலத்தில் அமைக்கப்பட்டதுதான்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்குப்பின், செஞ்சி நாயக்கர்கள் செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, பொ.ஆ. 16-ம் நூற்றாண்டில் தங்களது ஆட்சியை ஏற்படுத்தினர். பின்னர், செஞ்சிக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. முக்கியத்துவம் பெற்ற இக்கோட்டையானது, பொ.ஆ. 1677-ல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்டது. இக்கோட்டை தமிழகத்திலேயே தலைசிறந்த கோட்டை ஆகும்.

தமிழகத்தில் இன்றைக்கும் முழமையான அமைப்பில் காணப்படக்கூடிய ஒரு கோட்டையாகத் திகழ்கிறது. இக்கோட்டைக்குள் ஏழுநிலை மாடங்கள் நிறைந்த கல்யாண மகால், வெங்கட்ரமணர் கோயில், தர்பார், களஞ்சியங்கள், யானைக்குளம், அரச குடும்பத்தினர் குடியிருப்புகள், சதத்துல்லாகான் மசூதி, தேசிங்குராஜன் சமாதி எனப் பல பகுதிகள் உள்ளன.

பீரங்கி மேடையும், அதன்மேல் காணப்படும் பீரங்கியும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கோட்டைவாயில்களும், அதன் படிக்கட்டுகளும், அதன் உள்கட்டமைப்புகளும் * மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரைவட்டவடிவில், வளைவு வளைவாக கருங்கற்களைக் கொண்டு கோட்டையின் அரண் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளை மறைந்திருந்து தாக்கவும், உள்ளே இருப்பவர்கள் தக்க பாதுகாப்புடன் இருக்கவும் மிகுந்த கவனத்துடன் இக்கட்டுமானம் அமைத்துள்ளது காண்போர் அனைவராலும் வியக்கவைக்கும் வகையில் உள்ளது.

தமிழ்ச்சொல் அறிவோம்
1. நல்வரவு – Welcome
2. சிற்பங்கள் – Sculptures
3. சில்லுகள் – Chips
4. ஆயத்த ஆடை – Readymade Dress
5. ஒப்பனை – Makeup
6. சிற்றுண்டி – Tiffin

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

Students can Download 6th Tamil Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

Question 1.
நீங்கள் சென்ற சுற்றுலா பற்றிய செய்திகளை நண்பர்களுடன் பகிர்க.
Answer:
கடந்த வாரம் என் பெற்றோருடன் நானும் குற்றாலம் சென்று வந்தேன். அங்கு நான் கண்ட காட்சிகளை எவ்வாறு எடுத்துரைப்பது என்றே தெரியவில்லை!

பஞ்சுப் பொதிகளைப் போல மேகக் மேக கூட்டங்கள் மலைகளிலே தவழுகின்ற காட்சி மிக அழகாக இருக்கிறது. குளிர்ந்த காற்று, சுற்றிலும் பசுமை மாறாக் காட்டுச் சூழல், ஓங்கி 6 வளர்ந்திருக்கும் மரக்கூட்டங்கள் கண்ணிற்குப் பசுமையைத் தருகின்றன.

‘ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியேகுற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே”-என குற்றாலத்தைப் பற்றி கவிஞன் பாடியிருப்பது முற்றிலும் உண்மையே! திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகிய திரிகூட மலையின் அடிவாரத்தில் தான் குற்றாலம் இருக்கிறது. நாம் கூட ‘குற்றாலக் குறவஞ்சி’ என்ற நூலின் சில பாடல்களைப் பாடப்பகுதியில் படித்திருக்கிறோமே! உனக்கு நினைவிருக்கிறதா?

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொரு கொஞ்சும் மந்திசிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.” – என்ற பாடலில் வரும் காட்சிகளையெல்லாம் கண்டேன்.

குற்றால அருவிநீர் நோய் போக்கும் ஆற்றலைக் கொண்டதால் நான் பலமுறை அருவியில் நீராடினேன். இந்த நல்ல இடத்தைக் காண நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணமாய் இருக்கின்றனர். எனவே, நீங்களும் வாய்ப்பு ஏற்படும்போது சென்று பார்த்து மகிழ்ந்திட வேண்டுகிறேன்.

Question 2.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
Answer:
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் : குற்றாலம், தஞ்சைப் பெரியகோவில், சென்னை – மெரினாக் கடற்கரை, மதுரை மீனாட்சியம்மன் கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில் (காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற பல கோவில்கள்) கும்பகோணம் – கோவில்கள், மேட்டூர் அணை, வைகை அணை, கல்லணை, கன்னியாகுமரி இவை போன்ற நிறைய இடங்கள் உள்ளன.

குற்றாலம் :
இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய பின்னணியில் உள்ளது. மழைக்காலத்தில் இங்குள்ள அருவியில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து குவிகின்றனர்.

குறு ஆல் என்பது ஒருவகையான ஆலமரம். இம்மரங்கள் அதிகமாகக் காணப்பட்டதால் குற்றாலம் என்ற பெயர் பெற்றுள்ளது. சங்க காலத்தில் இது தேனூர் என்ற பெயரில் அழைக்கப் பெற்றுள்ளது. தென் மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத் தொடங்கிவிடும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் குற்றால சீசன் என அழைக்கப்படுகிறது.

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாக இம்மலை விளங்குகிறது. குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் கோவில் உள்ளது. இங்கு பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகா தேவியருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என ஒன்பது அருவிகள் உள்ளன.

இங்கு அருவிகளைத் தவிர வேறு சில இடங்களும் பார்க்க வேண்டிய இடங்களாகும். அவை குற்றாலநாதர் கோயில் சித்திர சபை, தொல்லியல் அருங்காட்சியகம் – குற்றாலம், சிறுவர் பூங்கா, கலைவாணர் அரங்கம் ஆகியனவாகும்.

குற்றாலம் ஏழைகளின் சொர்க்கபுரி. இங்கு அகத்திய முனிவர் வாழ்ந்ததாகப் புராணக் கதைகளும் உண்டு. அரிய வகை மூலிகைகளும் நிரம்பிய இடம். மூலிகைக் காடுகளின் வழியாக ஓடிவந்து அருவியாக கொட்டுகின்ற நீரில் குளிப்பதற்காகவே மக்கள் கூட்டம் சேர்கின்றது. மூலிகைக் குளியலான அருவிகளைக் கொண்ட குற்றாலத்தைத் தென்னகத்தின் ‘ஸ்பா’ எனக் கூறுகிறார்கள். இங்குள்ள அருவியில் குளிப்பது ஆனந்தத்தைத் தருகிறது.

இவ்வளவு இன்பத்தைத் தரும் குற்றாலம் சென்று வந்ததில் எனக்குப் பேரின்பம். மீண்டும் எப்போது அங்கு செல்வோம் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறேன். மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் நண்பர்கள் நாம் அனைவரும் பெற்றோரை அழைத்துக் கொண்டு செல்வோம்.

ஸ்ரீ பிரகதீஸ்வரா கோவில் :
10-வது நூற்றாண்டு சோழ அரசர் ராஜராஜனால் கட்டப்பட்ட ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம். சோழ கட்டடக்கலை ஆடம்பரத்திற்கு ஒரு அற்புத உதாரணம் ஆகும் அற்புதமான 14 மாடிகளைக் கொண்ட கிரானைட் கோவில் 216 அடி உயரத்திற்கும், மத்திய ஆலயம் என்ற பீடம் 45,72 சதுர மீ மற்றும் சரியான சன்னதி 30.48 சதுர மீ அளவிட்டிலும் உள்ளது. 60.96 மீட்டர் உயரம் ஒரு சதுர தளத்தில் இருந்து செங்குத்தாக உயரும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில் விமானம் மற்றும் மேல் தங்க-பூசப்பட்ட செம்பு கலசம் 339.5 கிலோ எடையுள்ளது.

20 டன் எடையுள்ள பெரிய காளை, நந்தி, ஒரே கல்லில் இருந்து சிற்பமாக செதுக்கப்பட்டது மற்றும் கருவறைக்கு நேர் எதிராகவே அமர்ந்துள்ளது. ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவிலின் இந்த மகத்தான அமைப்புக்குள்ளே, 7 மீட்டர் உயர சிவலிங்கம் தலைமை தாங்குகிறது. கோவில் உள் சுவர்களில் மற்றும் கூரையில் அழகான ஓவியங்கள் மற்றும் சிறப்பான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

தமிழ்நாட்டிலுள்ள மலைவாசஸ்தலங்கள் :
கோத்தகிரி மலை வாசஸ்தலம், குன்னூர், ஏற்காடு மலை வாசஸ்தலம், உதகமண்டலம் மலைவாசஸ்தலம், ஏலகிரி மலைவாசஸ்தலம், ஊட்டி மலைவாசஸ்தலம், கொடைக்கானல் மலை வாசஸ்தலம்.

மதிப்பீடு

சிறுவினா

Question 1.
மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்குக் காரணமான நிகழ்வு யாது?
Answer:
மாமல்லபுரம் உருவான விதம் :
மாமல்லன் கடற்கரையில் பாறையின் நிழல் யானை போலத் தெரிந்ததைப் பார்த்தான். உடனிருந்த மகேந்திரவர்மனும் கோவில் போலத் தெரிந்த பாறையின் நிழலைப் பார்த்தான். நிழலை நிஜமாக மாற்ற சிந்தித்தனர். அச்சிந்தனையில் தோன்றியதே மாமல்லபுரம். யானை, கோவில் போல் தெரிந்த பாறைகளை மட்டுமல்லாமல் அங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றினர். நந்தி, சிங்கம் என்று பாறைகளைச் சிற்பமாக மாற்றினர். இதனைத் தொடர்ந்து நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டதே மாமல்லபுரம். மாமல்லனால் உருவான நகரம் என்பதால் மாமல்லபுரம் என்ற பெயர் பெற்றது. தற்போது மகாபலிபுரம் என்று அழைக்கிறோம்.

மாமல்லபுரம் உருவானவதற்குக் காரணமான நிகழ்வு :
பல்லவ அரசரான நரசிம்மவர்மன்(மாமல்லன்) சிறுவனாக இருந்தபோது, கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த பாறைகளின் நிழல் யானை போலத் தெரிவதைக் கூறினான். அவருடைய தந்தையும் கோவில் போலத் தெரிந்த குன்றின் நிழலைக் காட்டினார். அப்பாறைகளைக் கோவிலாகவும் யானையாகவும் மாற்றிவிடலாம் என்ற சிந்தனை தோன்றியதால் உருவானதே மாமல்லபுரம்.

Question 2.
மாமல்லபுரத்தில் “அர்ச்சுனன் தபசு ” பாறையில் உள்ள சிற்பங்களைப் பற்றி எழுதுக.
Answer:
மாமல்லபுரத்தில் ‘அர்ச்சுனன் தபசு’ பாறையில் உள்ள சிற்பங்கள் : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற புடைப்புச் சிற்பங்கள். ஒருவர் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி வணங்குவது போல ஒரு சிற்பம். அவரது உடல் மெலிந்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போலச் செதுக்கப்பட்டிருக்கும். ‘அர்ச்சுனன் தபசு’ என்று பெயர் பெற்ற அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி. இதனைப் ‘பகீரதன் தவம்’ என்றும் கூறுவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து ஓடுவதற்கு ஏதுவாய் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விடம் ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல அழகான காட்சி தரும். யானைச் சிற்பங்கள், சிங்கம், புலி, அன்னப் பறவை, உடும்பு, குரங்குகள் என எல்லாம் உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன. மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம். உண்மையிலேயே மான் ஒன்று இருப்பதைப் போலத் தோன்றும்.

சிந்தனை வினா

Question 1.
மாமல்லபுரச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டவை. வேறு எந்தெந்தப் பொருள்களால் சிற்பங்களைச் செய்யலாம்?
Answer:
(i) கற்கள் : கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல்.
(ii) உலோகம் : பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு.
(iii) செங்கல் : மரம், சுதை, தந்தம், மெழுகு.

Question 2.
கலைகளுள் ஒன்று சிற்பக்கலை. இது போன்ற பிற கலைகளின் பெயர்களை எழுதுக.
Answer:
கலைகளின் பெயர்கள் : ஓவியக்கலை, நடனக்கலை, நாடகக் கலை, இசைக்கலை, கட்டடக்கலை, . கவிதைக்கலை, ஒப்பனைக்கலை, தையற்கலை, நீச்சல்கலை இவை போன்ற அறுபத்து நான்கு கலைகள் உள்ளன.

கூடுதல் வினாக்கள்

Question 1.
மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள் யாவை?
Answer:
(i) அர்ச்சுனன் தபசு
(ii) கடற்கரைக் கோவில்
(iii) பஞ்சபாண்டவர் ரதம்
(iv) ஒற்றைக்கல் யானை
(v) குகைக்கோவில்
(vi) புலிக்குகை
(vii) திருக்கடல் மல்லை
(viii) கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து
(ix) கலங்கரை விளக்கம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

Question 2.
சிற்பக்கலை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சிற்பக்கலை நான்கு வகைப்படும். அவை
(i) குடைவரைக் கோயில்கள்
(ii) ஒற்றைக்கல் கோயில்கள்
(iii) கட்டுமானக் கோயில்கள்
(iv) புடைப்புச் சிற்பங்கள்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.3 தமிழர் பெருவிழா

Students can Download 6th Tamil Chapter 5.3 தமிழர் பெருவிழா Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.3 தமிழர் பெருவிழா

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.3 தமிழர் பெருவிழா

Question 1.
உங்கள் ஊரில் கொண்டாடப்படும் பிற விழாக்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
எங்கள் ஊர் மதுரை. இங்கு பல விழாக்கள் கொண்டாடப்படும் அவ்விழாக்கள் பற்றிப் பேசுவதற்காக நாங்கள் இங்கு அழைக்கப்பட்டுள்ளோம்.

மாணவன் 1 : வணக்கம்! தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும். இவ்விழாவில் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியும் திருத்தேர் நிகழ்ச்சியும் மிக முக்கியமானதாகும். அதனைத் தொடர்ந்து பௌர்ணமி நாளன்று அழகர் கோவிலிருந்து விஷ்ணு பெருமாள் தங்கக் குதிரையில் தங்கையான மீனாட்சியின் திருமணத்தில் கலந்து கொள்ள வைகை ஆறு கடந்து மதுரைக்கு வரும் நிகழ்ச்சி அழகர் ஆற்றில் இறங்குதல்’ விழாவாகும். இவ்விழாவும் மதுரையில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற விழாவாகும்.

மாணவன் 2 : சித்திரைத் திருவிழாவிற்குப் பிறகு வைகாசி மாதத்தில் வைகாசி வசந்த உற்சவம் நடைபெறும். ஆனி மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். உற்சவம் நடைபெறும் நாட்களில் சாயரட்சை பூஜைக்குப் பின் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி சன்னதியில் அமைந்துள்ள நூறுகால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்படத்திற்கு எழுந்தருள்வார். இவ்விழாவின் கடைசி நாளன்று சொக்கநாதப் பெருமானுக்கு முப்பழ அபிஷேகம் நடைபெறும்.

மாணவன் 1 : ஆனி மாதத்திற்கு அடுத்து ஆடி மாதத்தில் பத்து நாளைக்கு முளைக் கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. ஆவணி மாதத்தில் ஆவணி மூலத் திருநாள் கொண்டாடப்படும். நான்கு ஆவணி வீதிகளிலும் சுவாமி உலா வருவார். நான்கு சொக்கநாதர் நடத்திய திருவிளையாடல்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

மாணவன் 3 : புரட்டாசி மாதத்தில் ‘நவராத்திரி விழா’ ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி, கோலாட்டத் திருவிழா, பவித்ர .
உற்சவம் நடைபெறும்.

மாணவன் 1 : ஐப்பசி மாதத்திற்குப் பிறகு கார்த்திகை மாதம் இம்மாதத்தில் அனைத்துக் கோவில்களிலும் தீபத் திருவிழா நடைபெறும். இங்கு திருவண்ணாமலையில் நடைபெறுவது போலவே பத்து நாட்கள் 0 நடைபெறும். வீடுகளில் தீபம் ஏற்றி வைப்பர். வீதிகளில் ‘சொக்கர் பனை’ ஏற்றி வைத்துக் கொண்டாடுவர்.

மாணவன் 3 : அடுத்து நான் கூறுகிறேன். மார்கழி மாதத்தில் அஷ்டமி நாளில் சொக்கநாதரும் மீனாட்சி அம்மனும் உலா வருவர். இவ்வுலா வருவதன் நோக்கம் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதற்காக என்று கூறுவர். இம்மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருப்பர்.

மாணவன் 2 : மார்கழிக்கு அடுத்து வரும் மாதம் தை. இம்மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல்விழா கொண்டாடப்படும். மதுரையில் அறுவடை விழாவாகத்தொடங்கி பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் நிறைவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

மாணவன் 3 : தை மாதத்திற்கு அடுத்த மாதம் மாசி மாதம் வருகிறது. இம்மாதத்தில் மாசிமகத் திருவிழா நாற்பத்தெட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இம்மாதம் வரும் அமாவாசை நாளில் மகாசிவராத்திரி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர்.

மாணவன் 1 : பன்னிரண்டாம் மாதமான பங்குனி மாதத்தில் கோடை வசந்தவிழா பத்து நாட்கள் நடைபெறும். இவ்வாறு மதுரை மாநகரில் பன்னிரண்டு மாதங்களும் அதாவது ஆண்டு முழுவதும் விழாக்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கும். இரவு பகல் எனப் பாராமல் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு அழகுற விளங்கும். இதனால்தான் எம்மூர் தூங்கா நகர் என்றே அழைக்கப்படுகிறது.

மாணவன் 3 : சரியாகச் சொன்னாய். நம் ஊரைப் பற்றி இவ்வாறுசொல்லிக் கொண்டே போகலாம். விழாக்கள் பற்றி அறிய விரும்பினால் மதுரைக்கு
வாருங்கள்! விழாக்களைக் கொண்டாடி மகிழுங்கள்:

Question 2.
உங்கள் பள்ளியில் கொண்டாடப்படும் தேசியவிழாக்களின் பட்டியலை உருவாக்குக.
Answer:
(i) சுதந்திர தினம்
(ii) குடியரசு தினம்
(iii) குழந்தையர் தினம்
(iv) ஆசிரியர் தினம்
(v) தேசிய இளைஞர் தினம்

Question 3.
தமிழகத்தில் ஏறுதழுவுதல் நடக்கும் இடங்களின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஏறுதழுவுதல் நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது. உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.3 தமிழர் பெருவிழா

Question 4.
உங்களுக்குப் பிடித்த விழா எது? ஏன்?
Answer:
பௌர்ணமி என்பது மாதந்தோறும் வருகின்ற ஒருநாள். இந்நாள் இறைவனை வழிபடும் நாட்களுள் முக்கியமான நாளாகக் கருதுவர். தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படும். இந்நாளில் அனைத்துக் கோயில்களிலும் வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

சித்ரா பௌர்ணமி அன்று எங்கள் ஊரில் உள்ள ஆற்றங்கரைக்குச் செல்வோம். ஊர்மக்கள் அனைவரும் குழுமியிருப்போம். அங்கு இறைவழிபாடு நடைபெறும். நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் ஒன்று கூடி உணவு உண்டு, விளையாடி, உரையாடியபடி ஓரிரவு மகிழ்ச்சியுடன் கழியும். நம் முன்னோர்கள் ஏற்படுத்திய இவ்விழாவில் ஓர் அறிவியல் உண்மையும் பொதிந்துள்ளது. சித்திரை மாதம் என்றால் கோடை வெயில் சுட்டெரிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவ்வெப்பத்தைச் சமாளிப்பதற்காக நீர்நிலையான ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளனர் நம் முன்னோர். ஆற்றங்கரையில் தென்னை, பனை மரங்கள் மற்றும் தாவரங்கள் இருப்பதால் இயற்கையான காற்றையும் நம்மால் சுவாசிக்க முடியும்.

நண்பர்கள், உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளதால் இவ்விழா எனக்கு மிகவும் பிடிக்கும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கதிர் முற்றியதும் …………………. செய்வர்
அ) அறுவடை
ஆ) உரமிடுதல்
இ) நடவு
ஈ) களையெடுத்தல்
Answer:
அ) அறுவடை

Question 2.
விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ………………….. கட்டுவர்.
அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு
Answer:
இ) தோரணம்

Question 3.
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல் அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்கஅன்று
Answer:
அ) பொங்கலன்ற

Question 4.
போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………..
அ) போகி + பண்டிகை
ஆ) போ + பண்டிகை
இ) போகு + பண்டிகை
ஈ) போகிப் + பண்டிகை
Answer:
அ) போகி + பண்டிகை

Question 5.
பழையன கழிதலும் …………… புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான
Answer:
அ) புதியன

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.3 தமிழர் பெருவிழா

Question 6.
பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ………. தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு
Answer:
இ) துன்பம்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) பொங்கல் – பொங்கல் விழா கிராமங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ஆ) செல்வம் – செல்வத்திற்கு அழகு தன்னை நாடி வந்தவருக்கு உதவுதல்.
இ) பண்பாடு – தமிழர்கள் பண்பாட்டை மறவாமல் திருவிழாக்களைக் கொண்டாடுவர்.

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ……………. அறிமுகப்படுத்தினார்.
2. காமராசரைக் கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் …………………
Answer:
(விடை: சீருடை)
(விடை: தந்தை பெரியார்)

குறுவினா

Question 1.
போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
Answer:
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

Question 2.
உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
Answer:
உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துதல் :
மாடுகள் உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக விளங்குகின்றன. அதனால் உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றார்கள். மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

சிறுவினா

Question 1.
காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
Answer:
(i) மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது காணும் பொங்கல் ஆகும்.
(ii) இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.
(iii) குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்ப ர்.
(iv) மேலும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.

சிந்தனை வினா

Question 1.
பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?
Answer:
(i) பெண்களுக்கான கோலப் போட்டிகள்
(ii) இளைஞர்களுக்கான வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மாடு பிடித்தல், கபடி விளையாட்டு
(iii) சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கயிறு தாண்டுதல், இசை நாற்காலி, பம்பரப்போட்டி போன்ற விளையாட்டுகள்.
(iv) கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பட்டிமன்றங்கள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
(v) தப்பாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.3 தமிழர் பெருவிழா

Question 2.
காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?
Answer:
(i) காணும் பொங்கலன்று மக்கள் தங்களுடைய உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

(ii) தற்கால இயந்திர வாழ்க்கையை மறந்து குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வர். இவ்வாறு வெளியில் செல்வதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு நாம் மற்றவர் வீட்டுக்குச் செல்வதாலும் மற்றவர் நம் வீட்டுக்கு வருவதாலும் நம்மிடையே உள்ள உறவு மேம்படும்.

(iii) ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் நாம் அறியாத செய்திகளை அறிந்து கொள்ளவும் புதிய அனுபவங்களைப் பெறவும் காணும் பொங்கல் உதவுகிறது. வாகனங்களுக்கு எரிபொருள் எவ்வளவு அவசியமோ நமக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
இந்திர விழா எதற்காகக் கொண்டாடப்பட்டது?
Answer:
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

Question 2.
பொங்கல் விழா கொண்டாடப்படும் மாநிலங்களையும் அங்கு எந்தெந்த பெயர்களில் கொண்டாடப்படுகிறது என்றும் கூறுக.
Answer:
(i) அறுவடைத் திருநாளாம் பொங்கல் விழா ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.
(ii) பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாப்படுகிறது.
(iii) குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.

Question 3.
தமிழர் திருநாள் விளக்குக.
Answer:
தமிழரின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்து வாழ்வதாகும். இயற்கையைக் கடவுளாக வணங்குதல் தமிழர் மரபு. தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும். இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.

Question 4.
உழவர்கள் விதைவிதைப்பதும் அறுவடை செய்வதும் எம்மாதத்தில்?
Answer:
உழவர்கள் ஆடி மாதத்தில் விதை விதைப்பர். தை மாதத்தில் அறுவடை செய்வர்.

Question 5.
பொங்கல் விழா அறுவடைத் திருவிழா என்று அழைப்பதற்கான காரணம் என்ன?
Answer:
உழவர்கள் தைத்திங்களில் அறுவடை செய்வர். தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்று அழைப்பர்.

Question 6.
பொங்கல் திருநாள் பற்றிக் கூறுக.
Answer:
(i) தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும். இத்திருநாளன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலைத் தோரணம் கட்டுவர். புதுப்பானையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்துப் பொங்கலிடுவர். பொங்கல் என்பதற்குப் ‘பொங்கிப் பெருகி வருவது’ என்று பொருள்.

(ii) பொங்கல் பொங்கி வரும் வேளையில் “பொங்கலோ பொங்கல்” என்று மங்கல ஒலி எழுப்பிப் போற்றுவர். “பொங்கல் பொங்கி வருவதுபோல் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும்” என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

(iii) பின்னர் தலை வாழை இலையிட்டு பொங்கலைப் படைப்பர். கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். விளைச்சலுக்குக் காரணமான கதிரவனை நன்றியோடு வணங்கி மகிழ்வர். சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் அளித்துத் தாமும் உண்டு மகிழ்வர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.3 தமிழர் பெருவிழா

Question 7.
திருவள்ளுவராண்டு எவ்வாறு கணக்கிடப்படுகிறது.
Answer:
திருவள்ளுவர் கி.மு.31 இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Students can Download 6th Tamil Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Question 1.
உங்கள் பகுதியில் பாடப்படும் தாலாட்டுப் பாடல் ஒன்றை அறிந்து வந்து பாடுக.
Answer:
உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன் – உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?

Question 2.
உங்கள் பகுதியில் பேசப்படும் பழமொழிகளைத் தொகுக்க.
Answer:
(i) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
(ii) குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
(iii) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
(iv) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
(v) வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..
அ) பாட்டி + சைத்து
ஆ) பாட்டி + இசைத்து
இ) பாட்டு + இசைத்து
ஈ) பாட்டு + சைத்து
Answer:
இ) பாட்டு + இசைத்து

Question 2.
கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) கண் + உறங்கு
ஆ) கண்ணு + உறங்கு
இ) கண் + றங்கு
ஈ) கண்ணு + றங்கு
Answer:
அ) கண் + உறங்கு

Question 3.
வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) வாழையிலை
ஆ) வாழை இலை
இ) வாழைலை
ஈ) வாழிலை
Answer:
அ) வாழையிலை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Question 4.
கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) கைமர்த்தி
ஆ) கைஅமர்த்தி
இ) கையமர்த்தி
ஈ) கையைமர்த்தி
Answer:
இ) கையமர்த்தி

Question 5.
உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ……………..
அ) மறைந்த
ஆ) நிறைந்த
இ) குறைந்த
ஈ) தோன்றிய
Answer:
அ) மறைந்த

குறுவினா

Question 1.
இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?
Answer:
சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு.

Question 2.
நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?
Answer:
நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப்பாடல் கூறுவன: வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று வாழை இலையில் அறுசுவையான உணவளித்து உபசரிப்பர்.

சிறுவினா

Question 1.
தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?
Answer:
தாய் தன் குழந்தையைப் பாராட்டுதல் :
(i) தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ!
(ii) தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ!
(iii) இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழநாட்டின் முக்கனியோ.
(iv) குளம் வெட்டி, அணைகட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று பாராட்டிக் குழந்தையைத் தாலாட்டுகிறாள்.

சிந்தனை வினா

Question 1.
வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
(i) நடவுப் பாட்டு
(ii) தாலாட்டுப் பாட்டு
(iii) வள்ளைப் பாட்டு
(iv) விடுகதைப் பாட்டு
(v) ஏற்றப் பாட்டு
(vi) பரிகாசப் பாட்டு
(vii) கும்மிப் பாட்டு
(viii) கண்ண ன் பாட்டு
(ix) ஏசல் பாட்டு
(x) ஒப்பாரிப் பாட்டு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Question 2.
குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க.
Answer:
கண்ணே !
முத்தே !
செல்லம்!
பட்டு!
அம்முக்குட்டி!
ராஜா! தங்கம்!

கூடுதல் வினாக்கள்

Question 1.
தாலாட்டு – பெயர்க்காரணம் எழுதுக.
Answer:
(i) தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
(ii) தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது.
(iii) குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

Question 2.
தாலாட்டுப் பாடலில் குழந்தை எவ்வாறு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது?
Answer:
தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Question 3.
தாலாட்டுப் பாடலில் குழந்தை எவ்வாறு பாடப்பட்டுள்ளது?
Answer:
தங்கப் பூ – பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்குவதாகப் பாடப்பட்டுள்ளது.

Question 4.
தாலாட்டுப் பாடலில் பாண்டிய நாட்டினைப் பற்றிக் கூறுவது யாது?
Answer:
பாண்டிய நாடு குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் எனக் கூறுகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

நூல் வெளி
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு என்று பெயர் பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.1 ஆசாரக்கோவை

Students can Download 6th Tamil Chapter 5.1 ஆசாரக்கோவை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.1 ஆசாரக்கோவை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.1 ஆசாரக்கோவை

Question 1.
நாம் எந்தெந்த வகையில் பிறருக்கு உதவலாம் என்பது குறித்து நண்பர்களுடன் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : என்னடா இங்கு தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறாய்?

மாணவன் 2 : என்னவென்று சொல்வது. இன்று என் அம்மா என்னை நன்றாகத் திட்டிவிட்டார்கள். அதனால் காலையில் சிற்றுண்டியே வேண்டாம் எனக் கூறிவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து என்னைச் சமாதானப்படுத்திவிட்டு 3 அறிவுரையும் கூறினார்.

மாணவன் 1 : பிறகென்ன? அதுதான் சமாதானப்படுத்தி விட்டார்களே?

மாணவன் 2 : அதெல்லாம் சரிதான். அறிவுரை கூறினார்கள். அப்போது ‘பிறருக்கு 5 உதவியாய் இல்லை என்றாலும் உபத்திரமாக இருக்காதே’ என்று கூறினார். அதைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டு உள்ளேன். எவ்வாறு பிறருக்கு உதவலாம் என எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டே உள்ளேன்.

மாணவன் 1 : நல்ல சிந்தனைதான். பிறருக்கு என்று கூறுவது நம் வீட்டில் உள்ள உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று மட்டும் இல்லை. பொது இடங்களில் உள்ள எவருக்கேனும் உதவி தேவைப்பட்டால் உதவி செய்ய வேண்டும்.

மாணவன் 2 : வீட்டில் என்ன உதவி செய்வது? அதுதான் அம்மா, அப்பாவே செய்து விடுகிறார்களே!

மாணவன் 1 : நீ செய்யாமல் இருப்பதால் அவர்களே செய்து விடுகிறார்கள். இனிமேல் நீ தினமும் காலையும் மாலையும் அம்மாவிற்கு உதவும் பொருட்டு கடைக்குச் செல்லுதல், வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகள் செய்தல், வாரம் ஒருமுறை புத்தகங்களை அடுக்கி வைத்தல், உன்னுடைய காலணி, காலுறைகளைத் தூய்மையாக்குதல், சன்னல், கதவுகளைத் துடைத்தல், அப்பாவின் இரு சக்கர வாகனத்தினைத் தூய்மை செய்தல் போன்றவை நம் வீட்டில் உள்ளவர்களுக்குச் செய்யும் வேலைகளாகும்.

மாணவன் 2 : இதையெல்லாம் நான் செய்ததே கிடையாது.

மாணவன் 1 : பொது இடங்களில் நீ பிறருக்கு உதவுதல் பற்றிக் கூறுகிறேன் கேள். பேருந்தில் பயணம் செய்யும்போது முதியோர், உடல் ஊனமுற்றோர், நோயாளி போன்றோர் இருக்கை இல்லாமல் நின்று கொண்டிருந்தால் அவர்களுக்கு இடம் கொடுப்பது, சாலையைக் கடக்க இயலாதவரைக் கையைப் பிடித்துக் கொண்டு சென்று சாலையைக் கடக்க உதவி செய்வது, வகுப்பில் சக மாணவர்களில் எவரேனும் மெல்லக் கற்போராக இருந்தாலும் அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வது, அதாவது கணிதம் சொல்லித் தருவது, படிப்பதற்குச் சொல்லித் தருவது என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மாணவன் 2 : இதுவரை நான் இவ்வாறெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. இனிமேல் வீட்டிலும் பொது இடங்களிலும் பிறருக்கு உதவியாக இருப்பேன். நன்றி கணேஷ்,

Question 2.
இந்தப் பாடலில் கூறப்படும் கருத்துகளுக்குப் பொருத்தமான திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளைப் பட்டியலிடுக.
Answer:
(i) செய்ந்நன்றியறிதல்
(ii) பொறையுடைமை
(iii) இனியவை கூறல்
(iv) இன்னா செய்யாமை
(v) கல்வி
(vi) ஒப்புரவு அறிதல்
(vii) அறிவுடைமை
(vii) நட்பு.

Question 3.
“கூடா நட்புக் கேடாய் முடியும்” என்னும் கருத்து அமைந்த கதை ஒன்று கூறுக.
Answer:
வந்தவாசி கிராமத்தில் வசிக்கும் திவ்யா ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளுக்கு ஒரு தீய பழக்கமுடைய தோழி இருப்பதை அறிந்த திவ்யாவின் தாய், ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

ஒருநாள் அவர் திவ்யாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பெட்டியில் நிறைய மாம்பழங்கள் இருந்தன. அந்த பழங்களைக் கண்ட திவ்யாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப்போனவளிடம் தாய் தடுத்தார். அவற்றுள் நல்ல பழங்களாகத் தேர்ந்தெடுத்து இரண்டு கூடைகளில் வைக்கும்படி கூறினாள். அதன்படியே திவ்யா நல்ல பழங்களாகத் தெரிவு செய்து இரண்டு கூடைகளில் நிரப்பினாள். தாய் தனியே வைத்திருந்த ஓர் அழுகிய பழத்தை எடுத்தார். திவ்யா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையின் நடுவே வைத்தார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.1 ஆசாரக்கோவை

“ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள்?” என்றாள்.

“எல்லாம் ஒரு காரணம்தான், இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும் போது எடுத்து வா” என்றார் தாய். அவளும் அப்படியே செய்தாள்.

சில நாட்களுக்குப் பின் திவ்யாவின் தாய் மறுபடியும் அழைத்தார். அந்தப் பழக் கூடைகளை எடுத்து வரச்சொன்னார். பழக் கூடைகளை எடுத்து வந்தாள். அழுகிய பழம் வைத்த கூடையில் இருந்த பழங்கள் எல்லாமே அழுகிப்போய் இருந்தன. மற்றக் கூடையில் இருந்த பழங்கள் பழுதடையாமல் அப்படியே இருந்தது. இதனைப் பார்த்த திவ்யா வருந்தினாள். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவளுக்கு அழுகையே வந்து விட்டது.

தாய் அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னார்… “பார்த்தாயா? ஒரு அழுகிய மாம்பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்துவிட்டது. தீய நட்பும் இப்படித்தான். ‘கூடா நட்பு கேடாய் முடியும். எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. உண்மை நண்பர்கள் உங்களுடைய மகிழ்ச்சியின் போது காணாமல் போனாலும் உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பிறரிடம் நான் ………….. பேசுவேன்.
அ) கடுஞ்சொல்
ஆ) இன்சொல்
இ) வன்சொல்
ஈ) கொடுஞ்செல்
Answer:
ஆ) இன்சொல்

Question 2.
பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது ……….. ஆகும்.
அ) வம்பு
ஆ) அமைதி
இ) அடக்கம்
ஈ) பொறை
Answer:
ஈ) பொறை

Question 3.
அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……..
அ) அறிவுடைமை
ஆ) அறிவுஉடைமை
இ) அறியுடைமை
ஈ) அறி உடைமை
Answer:
அ) அறிவுடைமை

Question 4.
இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) இவை எட்டும்
ஆ) இவையெட்டும்
இ) இவ்வெட்டும்
ஈ) இவ்எட்டும்
Answer:
ஆ) இவையெட்டும்

Question 5.
நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .. ……….
அ) நன்றி – யறிதல்
ஆ) நன்றி + அறிதல்
இ) நன்று + அறிதல்
ஈ) நன்று + யறிதல்
Answer:
ஆ) நன்றி அறிதல்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.1 ஆசாரக்கோவை

Question 6.
பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) பொறுமை + உடைமை
ஆ) பொறை + யுடைமை
இ) பொறு + யுடைமை
ஈ) பொறை + உடைமை
Answer:
ஈ) பொறை + உடைமை

குறுவினா

Question 1.
எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது?
Answer:
நாம் எந்த உயிருக்கும் துன்பம் செய்யாதிருக்க வேண்டும்.

Question 2.
நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?
Answer:
நாம் நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் வேண்டும்.

குறுவினா

Question 1.
ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?
Answer:
(i) பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்.
(ii) பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல்.
(iii) இனிய சொற்களைப் பேசுதல்.
(iv) எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.
(v) கல்வி அறிவு பெறுதல்.
(vi) பிறருக்கு உதவுவதல்.
(vii) அறிவுடையவராய் இருத்தல்.
(viii) நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்.

சிந்தனை வினா

Question 1.
உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக.
Answer:
(i) பிறருக்கு உதவும் பண்புடையவன்.
(ii) பிறரை மன்னிக்கும் குணம் கொண்டவன்.
(iii) நட்பின் சிறப்பை உணர்ந்தவன்.
(iv) சிறியவரையும் மதிக்கும் பெருங்குணம் உடையவன்.
(v) என் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாதவன்.

Question 2.
நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.
Answer:
நல்ல ஒழுக்கங்களை வித்து எனக்கூறுவதின் காரணம் :
ஒரு விதையை விதைத்தோமானால் அது வளர்ந்து பல காய்கனிகளைத் தந்து பல தாவரங்களை உருவாக்குகிறது.
ஒழுக்கம் என்ற விதை
கல்வி
மரியாதை
பண்பு
கருணை
உயர்வு
முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

ஒரு விதை பல மரங்களை உருவாக்குகின்றது. அதுபோல மாணவரின் மனத்தில் ஒழுக்கம் என்ற விதை விதைக்கப்பட்டால் அவன் நல்ல மாணவன் எனப் பெயர் எடுப்பான். ஒழுக்கத்துடன் இருக்கும் மாணவனால் நன்றாகக் கல்வி கற்க இயலும். கல்வி நற்பண்புகளைத் தரும். நன்மை தீமைகளைப் பகுத்தறிய இயலும். பெற்றோர் பெரியோர் என அனைவருடனும் மரியாதையுடன் பழக இயலும். அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நல்வழியில் நடப்பான். இவற்றால் அவன் உயர்வு பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவான். எனவே மாணவர்கள் நன்முறையில் இருப்பதற்கு ஒழுக்கமே அடித்தளமாக உள்ளது. எனவே நல்லொழுக்கமே வித்து என்பதை உணர்ந்து மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகத் திகழ வேண்டும்.

கூடுதல் வினா

Question 1.
ஆசாரக்கோவை நூல் குறிப்பு எழுதுக.
Answer:
(i) ஆசாரக் கோவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
(ii) மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத (ஆசாரங்களை) ஒழுக்கங்களை எடுத்துக் கூறும் நூல்.
(iii) இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.1 ஆசாரக்கோவை

நூல் வெளி
ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பிறந்த ஊர் வண்கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.5 இன எழுத்துகள்

Students can Download 6th Tamil Chapter 4.5 இன எழுத்துகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 4.5 இன எழுத்துகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.5 இன எழுத்துகள்

Question 1.
தங்கப் பாப்பா வந்தாளே!
சிங்கப் பொம்மை தந்தாளே!
பஞ்சு போன்ற கையாலே!
பண்டம் கொண்டு வந்தாளே!
பந்தல் முன்பு நின்றாளே!
கம்பம் சுற்றி வந்தாளே!
தென்றல் காற்றும் வந்ததே!
தெவிட்டா இன்பம் தந்ததே!
இப்பாடலில் இடம் பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
தங்க, சிங்க, பஞ்சு, பண்டம், பந்தல், கம்பம், தென்றல், வந்தாளே, நின்றாளே, வந்ததே, தந்ததே.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மெல்வினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கல்வி
ஈ) தம்பி
Answer:
இ) கல்வி

Question 2.
தவறான சொல்லை வட்டமிடுக. அ) கண்டான்
ஆ) வென்ரான்
இ) நண்டு
ஈ) வண்டு
Answer:
ஆ) வென்ரான்

பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக

பிழையான சொல் – திருத்தம்
தென்றல் – தென்றல்
கன்டம் – கண்டம்
நன்ரி – நன்றி
மன்டபம் – மண்டபம்

சிறுவினா

Question 1.
இன எழுத்துகள் என்றால் என்ன?
Answer:
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
(i) வல்லின மெய்களுக்கு மெல்லின மெய்கள் இனம். இடையின எழுத்துகள் ஆறும் ஒரே இனம்.
(ii) உயிர்க்குறிலுக்கு உயிர்நெடிலும் உயிர் நெடிலுக்கு உயிர்க் குறிலும் இனம்.
(iii) ‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்ற எழுத்து இனம். ‘ஔ’ என்னும் எழுத்துக்கு ‘உ’ என்ற எழுத்து இனம்.

மொழியை ஆள்வோம்

தொடர்களை நீட்டித்துப் புதிய தொடர்களை உருவாக்குங்கள்.

Question 1.
மழை பெய்தது.
Answer:
(i) புயல் மழை பெய்தது.
(ii) தொடர்ந்து புயல் மழை பெய்தது.
(iii) நேற்று தொடர்ந்து புயல் மழை பெய்தது.
(iv) சென்னையில் நேற்று தொடர்ந்து புயல் மழை பெய்தது.

இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள்

Question 1.
(நூல், மாலை, ஆறு, படி)
(எ.கா) ஆடை தைக்க உதவுவது நூல்
மூதுரை அற நூல்
Answer:
1. மாலை – திருமாலுக்கு அணிவிப்பது துளசி மாலை.
மாலை வெயில் உடலுக்கு நல்லது.

2. ஆறு – சுவைகள் மொத்தம் ஆறு.
வைகையாற்றின் துணையாறுகளுள் ஒன்று மஞ்சளாறு.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.5 இன எழுத்துகள்

3. படி – நூலை எடுத்துப் படி.
மேலே ஏறுவதற்குப் பயன்படுவது படி.

பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குகள்

Question 1.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter Chapter 4.5 இன எழுத்துகள் 4
Answer:
(i) ஆசிரியர் கவிதை எழுதுகிறார்.
(ii) மாணவன் கவிதை எழுதுகிறான்.
(iii) ஆசிரியர் பாடம் படிக்கிறார்.
(iv) மாணவன் பாடம் படிக்கிறான்.
(v) ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்.

உரையாடலை நிறைவு செய்யுங்கள்

மாணவர் : வணக்கம் ஐயா, தலைமை
ஆசிரியர் : வணக்கம் மதி உனக்கு என்ன வேண்டும்?
மாணவர் : எனக்கு மாற்றுச் சான்றிதழ் வேண்டும் ஐயா.
தலைமை ஆசிரியர் : எதற்காக மாற்றுச் சான்றிதழ் வேண்டும்?
மாணவர் : என் தந்தைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ஐயா.
தலைமை ஆசிரியர் : அப்படியா! எந்த ஊருக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது?
மாணவர் : மதுரைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது.
தலைமை ஆசிரியர் : அங்கு எந்தப் பள்ளியில் சேரப் போகிறாய்?
மாணவர் : அங்கு அரசுப் பள்ளியில் சேரப் போகிறேன்.
தலைமை ஆசிரியர் : நீ யாரை அழைத்து வந்துள்ளாய்?
மாணவர் : என் அப்பாவை அழைத்து வந்திருக்கிறேன் ஐயா.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது

(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்வி வளர்ச்சி நாள்)
1. காமராசர் பிறந்த நாள் ………………..
2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ……………………
3. அப்துல்கலாம் பிறந்த நாள் ………………………
4. விவேகானந்தர் பிறந்த நாள் ………………..
5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் ……………….
Answer:
1. கல்வி வளர்ச்சி நாள்
2. ஆசிரியர் தினம்
3. மாணவர் தினம்
4. தேசிய இளைஞர் தினம்
5. குழந்தைகள் தினம்

இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை வட்டமிடுங்கள்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter Chapter 4.5 இன எழுத்துகள் 1

கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள்

1. சங்கு – ங்கு
2. நுங்கு – ங்கு
3. பிஞ்சு – ஞ்சு
4. வஞ்சம் – ஞ்ச
5. பட்டணம் – ட்ட
6. சுண்டல் – ண்ட
7. வண்டி – ண்டி
8. பந்தயம் – ந்த
9. பந்து – ந்து
10. கற்கண்டு – ண்டு
11. தென்றல் – ன்ற
12. நன்று – ன்று

பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க?’ என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்…

” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள், “அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுதான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

Question 1.
காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் ……………
அ) பெற்றோர்
ஆ) சிறுவன், சிறுமி
இ) மக்கள்
ஈ) ஆசிரியர்கள்
Answer:
ஆ) சிறுவன், சிறுமி

Question 2.
இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
அ) ஏழ்மை
ஆ) நேர்மை
இ) உழைப்பு
ஈ) கல்லாமை
Answer:
ஆ) நேர்மை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.5 இன எழுத்துகள்

Question 3.
மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் ………………….
Answer:
நெகிழ்ந்தார்

Question 4.
சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
Answer:
சிறுவனும் சிறுமியும் தன் அண்ணனுக்குத் தேர்வுக்குக் கட்டணம் கட்டுவதற்குப் பணம் இல்லாததால் பண உதவி கேட்டு காமராசரின் வீட்டிற்கு வந்தனர்.

Question 5.
காமராசர் செய்த உதவி யாது?
Answer:
காமராசர் ஏழை மாணவன் ஒருவனுக்குத் தேர்வுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.

கட்டுரை எழுதுக

Question 1.
காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை :
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்குக் குலதெய்வமான காமாட்சியின் பெயர் சூட்டப்பட்டது. அவருடைய தாயார் ‘ராசா’ என்று அழைத்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி ‘காமராசு’ என்று ஆனது.

இளமைக்காலம் :
காமராசர் தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது அவருடைய தந்தை இறந்ததால் அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

கல்விப் பணிகள் :
காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளி வேலைநாள்களை நூற்றெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தினார். தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டு, பள்ளிகளுக்கான அடிப்படைப் பொருள்களும் கருவிகளும் பெறப்பட்டன. உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. உடற்பயிற்சிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நிறைவேற்றிய பிற திட்டங்கள் :
நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியில் ஒன்பது முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருட்டினகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

தொழில் முன்னேற்றத்திற்குக் காமராசர் செய்தவை பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை இவையனைத்தும் காமராசரால் தொடங்கப்பட்டவை ஆகும்.

முடிவுரை :
கல்விக் கண் திறந்த காமராசரின் பிறந்த நாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஏழைப் பங்காளராகவும், கர்ம வீரராகவும் தன்னலமற்ற தலைவராகவும் வாழ்ந்தவரின் அடியொற்றி நாமும் நாட்டிற்கு நன்மைகள் செய்வோம்.

மொழியோடு விளையாடு

Question 1.
‘கல்விக்கண் திறந்த காமராசர்’ இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்குங்கள். (எ.கா.) கண்.
Answer:
1. கல்வி
2. கவி
3. கதி
4. ராசர்
5. விண்
6. திற
7. கா
8. வில்
9. கல்
10. திறந்த

முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க

Question 1.
முளையிலே விளையும் தெரியும் பயிர்.
Answer:
விளையும் பயிர் முளையிலே தெரியும்.

Question 2.
ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை.
Answer:
கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.

கீழ்க்காணும் கட்டங்களில் உள்ள இன எழுத்துச் சொற்களை வட்டமிட்டுத் தனியாக எடுத்து எழுதுக


(i) மண்ட பம்
(ii) பந்து
(iii) சங்கு
(iv) மஞ்சள்
(v) தென்றல்

செயல் திட்டம்

Question 1.
காமராசர் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களுடன் ஒரு படத்தொகுப்பு (Album) உருவாக்கவும்.
Answer:
காமராசர் நாளிதழ்களை படிக்கும்போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்குச் செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter Chapter 4.5 இன எழுத்துகள் 3
காமராசருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லோரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும்போது சாதாரண மனிதர் போலவே பேசுவார். காமராசர் 1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பைப் பயன்படுத்தி, பாராளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராசர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்திய மக்கள் காமராசரை ‘காலா காந்தி’ என்று அன்போடு அழைத்தார்கள். ‘காலா காந்தி’ என்றால் ‘கறுப்பு காந்தி’ என்று பொருள். சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராசரையே சேரும். 12 ஆண்டுகள் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

காமராசர் இளம் வயதில் கொஞ்ச காலம் காப்புறுதி முகவராக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். காமராசர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தினராக வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. காமராசர் 1966-ஆம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவாக்கியா, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.5 இன எழுத்துகள்

கலைச்சொல் அறிவோம்

1. கல்வி – Education
2. தொடக்கப் பள்ளி – Primary School
3. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School
4. நூலகம் – Library
5. மின்படிக்கட்டு – Escalator
6. மின்தூக்கி – Lift
7. மின்னஞ்சல் – E – Mail
8. குறுந்தகடு – Compact Disk (CD)
9. மின் நூலகம் – E – Library
10. மின்நூல் – E – Books
11. மின் இதழ்கள் – E – Magazine