Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Students can Download 6th Tamil Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ………
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
Answer:
ஆ அறிவுடைய மக்கள்

Question 2.
ஒருவர்க்குச் சிறந்த அணி ..
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
Answer:
இ) இன்சொல்

பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக

Question 1.
இனிய …………….. இன்னாத கூறல்
கனியிருப்பக் ……………… கவர்ந் தற்று.
Answer:
உளவாக, காய்க்

Question 2.
அன்பிலார் …………….. தமக்குரியர் அன்புடையார்
………………. உரியர் பிறர்க்கு .
Answer:
எல்லாம், என்பும்

நயம் அறிக

Question 1.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மோனை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா

எதுகை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா
இந்தக் குறளில் அடி மோனை, அடி எதுகை சொற்கள் வந்துள்ளது.

பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக

2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி பி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

விடை: ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

குறுவினாக்கள்

Question 1.
உயிருள்ள உடல் எது?
Answer:
அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல், அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும் எலும்பும் தோலும்தான் என வள்ளுவர் கூறுகிறார்.

Question 2.
எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?
Answer:
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமையும் என வள்ளுவர் கூறுகிறார். அன்பிலார்,

Question 3.
அன்புடையார் செயல்கள் யாவை?
Answer:
அன்பிலார் : அன்பு இல்லாதவர்கள் உலகில் உள்ள எல்லா பொருள்களும் தனக்கே சொந்தம் எனக் கூறுவார்கள்.
அன்புடையார் : அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே சொந்தமென கூறுவார்கள்.

மொழியை ஆள்வோம்

கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க.

Question 1.
இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளை மாணவர்கள் தாங்களாகவே கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

Question 2.
பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி காணொலிக் காட்சிகளை தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த்தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு.

இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் பேர்தாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Question 1.
எதனை இயற்கை என்கிறோம்?
Answer:
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.

Question 2.
இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
Answer:
பனி படர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா போன்றவை இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 3.
இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
Answer:
நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Question 4.
பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
Answer:
இயற்கை வளம்.

ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக

1. மாமழை
2. வான் சிறப்பு
3. முரல் மீன்
4. வலசை போதல்
5. பறவை இனங்கள்
6 சார்பு எழுத்துகள்
7. சாண்டியாகோ
8. தோற்கடிக்க முடியாது
9. காணிநிலம்

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

இயற்கையைக் காப்போம்
முன்னுரை:
இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவை. அவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள். அவற்றின் இயக்கம், அவை இயங்குகின்ற இடம், இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும். இயற்கையாய் உருவான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம்.

இயற்கை இன்பம் :
இயற்கை அன்னையின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பனிபடர்ந்த மலைகள், பச்சைப் பட்டாடை போர்த்தியும் அதில் வெள்ளிச் சரிகையாய் அருவிகளும் காண்போரைக் கவரும். பல விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழும் காடுகள், நீர்வாழ் விலங்கினங்களை வளர்க்கும் கடல், பல கோடி விண்மீன்களையும் சூரிய சந்திரனையும் தன்னகத்தே வைத்துள்ள வானத்தின் அதிசயத்தையும் கூறவியலாது.

இயற்கை இன்பத்தை இழக்கிறோம் :
இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் இயற்கை மாற்றமடைகின்றது. மலைகளின் சரிவு, இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு பக்கம். மக்கள் தொகைப் பெருக்கத்தால் காடுகளையும், விளைநிலங்களையும் அழித்து வீடுகளாக்கினோம். தொழிற்சாலைக் கழிவுகளினால் நீரை மாசுபடுத்தினோம். நெகிழிப் பொருட்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி நிலத்தை மாசுபடுத்தினோம். போக்குவரத்துச் சாதனங்களால் காற்றும் மாசுபட்டது. இவற்றால் புதிய நோய்கள் உருவாகிவிட்டன. வளரும் பிள்ளைகள் நோய்களோடு வளர்வதற்கு நாமே காரணமாகின்றோம்.

இயற்கைச் சூழல் :
வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம். அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும். இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள், ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கையான மூலிகைகள், காய்கறிகள், பழங்களை விளைவிப்போம்.

முடிவுரை :
பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையைப் புறந்தள்ளிவிட்டு, மெய்யாகவும் இன்பமாகவும் இருக்கும் இயற்கையை ஏற்று நடப்போம். அணுத்தீமை, நீர்நிலை அழிப்பு, சுற்றுச்சூழல் கேடு எனப் பல்வேறு தீமைகளைத் தவிர்த்துவிட்டு, பசுமையான மாற்றுகளைக் கண்டறிந்து எதிர்காலத்தைத் தக்க வழிகளில் மாற்றியமைப்போம்.

மொழியோடு விளையாடு

திரட்டுக :
கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.
1. அரி
2. அலை
3. ஆர்கலி
4. ஆழி
5. திரை
6. விரிநீர்
7. முந்நீர்
8. பரவை
9. சமுத்திரம்
10. அழவம்
11. பெருநீர்
12. பௌவம்

தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக

(எ.கா) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை : பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

Question 1.
கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.
Answer:
கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 2.
இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
Answer:
இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் …………. என்று பெயர். (பறவை / பரவை)
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ……….. ஆற்றினார். (உரை/ உறை
3. முத்து தம் ………… காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை ……… (அலைத்தாள் / அழைத்தாள்)
Answer:
1. பரவை
2. உரை
3. பணி
4. அழைத்தாள்

பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 1

வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக)

Question 1.
இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
Answer:
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

Question 2.
மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
Answer:
பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

Question 3.
மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.
Answer:
சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 4.
மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
Answer:
இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.

கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 2
Questions.
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று……………..
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை…………….
3. திங்கள் என்பதன் பொருள்……………….
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை. ………………
5. பாரதியார் …………………. வேண்டும் என்று பாடுகிறார்.
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்…………….
Answers:
1. மணிமேகலை
2. முப்பது
3. நிலவு
4. செங்கால் நாரை
5. காணி நிலம்
6. தனிநிலை

ஆய்ந்தறிக

Question 1.
பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா? இயற்கையைச் சுரண்டாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா?
Answer:
பெருகிவரும் மக்கள் தொகையின் காரணத்தினால் நமது தேவைகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் தோன்றியபோது அவன் கண்ட இயற்கைச் சூழலைக் கண்டு வியந்தான். அவற்றின் உதவியோடு வாழத் தொடங்கினான். காலப்போக்கில் நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி எனப் பல படிநிலைகளில் மாற்றங்களைக் கண்டான்.

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்கள், நெகிழிப் பொருட்கள் இவற்றால் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டோம். இயற்கையாக அமைந்த நிலம், நீர், காடு, காற்று என எல்லாவற்றையும் மாசுபடுத்தி விட்டோம்.

காடுகளை அழித்து வீடுகள் கட்டினோம். தொழிற்சாலைகளை வளர்த்து நீர், காற்று ஆகியவற்றைச் சீர் கேடாக்கினோம். நிலத்தையும் விட்டுவைக்கவில்லை. இவையெல்லாம் சீர் அழிந்ததால் தேனீ, சிட்டுக்குருவி போன்ற பல உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாகி விட்டோம். தேனீக்கள் வளர்வதற்கான காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டன. ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுவதால் நீரின் அளவும் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையின் முக்கியத்துவம் உணர்ந்தனர். அதனால் அவற்றைத் தெய்வமாக எண்ணி வழிபட்டனர். இயற்கைக்கு மாறாக நாம் பல வழிகளில் இயற்கை வளங்களைக் குறைத்து விட்டோம்.

இயற்கை வளங்கள் என்பது ஒன்றோடொன்றுதொடர்புடைய சங்கிலித்தொடர் போன்றது. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தும், தட்ப வெப்பநிலையைச் சமமாக வைத்துக் கொள்ளும். காடுகள் அழிக்கப்படுவதால் தட்ப வெப்பநிலை மாற்றம் அடைகிறது. புவி வெப்பமயமாகிறது. பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருகிறது. மழை வளம் குறைந்து விட்டது.

இவற்றை முற்றழிவிலிருந்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நெகிழிப் பொருட்கள் உருவாக்குவதைத் தடுக்க வேண்டும். சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் மேம்பாடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அரசு முடக்கம் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க, பசுமை அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும். இந்தப் பசுமை அமைப்பு செழுமை, வளமை, தூய்மை என்ற அடிப்படையில் தனது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

அவ்வப்போது இயற்கை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுமாறு பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் நிகழ்த்த வேண்டும். காடுகளை அழிக்காமல், மலைகளைத் தகர்க்காமல், மண் வளத்தைச் சுரண்டாமல் செயற்கைக் கருவிகளால் கரியமிலவாயுவைப் பெருக்காமல் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்து நீர்நிலைகளைப் பாதுகாத்து நிலங்களை வளப்படுத்துவோம். குறைந்து வரும் வேளாண் தொழிலை புதுமுறைக் கல்வித் துறைகளால் மேம்படுத்தி பூமியைக் காப்போம் என்று ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

நாம் இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்” என்ற வள்ளுவத்திற்கேற்ப எதிர்காலத் தலைமுறையினரின் சிறப்பான வாழ்க்கைக்கு வழிகாட்டுவோம். இயற்கையைப் போற்றி வாழ்வோம்.

கவிதை படைக்க

கீழே காணப்படும் மழை பற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
…………………………………
………………………………..
………………………………..
விடை :
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
ஆற்றில் வெள்ளம் பெருகிடும்
அணைகள் நிரம்பி வழிந்திடும்
நிலத்தடி நீரும் ஊறிடும்
பயிர்கள் செழிக்க உதவிடும்
இயற்கை எல்லாம் சிரித்திடும்
இன்பக் கடலில் ஆழ்த்திடும்
பட்ட மரங்கள் துளிர்த்திடும்
பாரே உன்னைப் போற்றிடும்.

நிற்க அதற்குத் தக….

என் பொறுப்புகள்…
அ) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்.
ஆ) இயற்கைப் பாதுகாப்பேன்.

கலைச்சொல் அறிவோம்

1. கண்ட ம் – Continent
2. தட்பவெப்பநிலை – Climate
3. வானிலை – Weather
4. வலசை – Migration
5. புகலிடம் – Sanctuary
6. புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field

கடவுள் வாழ்த்து

Question 1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Answer:
தெளிவுரை : அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். ஆதிபகவனே உலகுக்குத் தொடக்கம்.
விளக்கவுரை : தமிழ் எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அதுபோல இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

வான் சிறப்பு

Question 2.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
Answer:
தெளிவுரை : மழை உரியகாலத்தில் பெய்யாது போனால், உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும்.
விளக்கவுரை : மழையானது தொடர்ந்து பெய்யப்படாமல் இருக்குமேயானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தமடையச் செய்யும்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 3.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Answer:
தெளிவுரை : உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.
விளக்கவுரை : மழையானது பெய்யாமல் வாழ்வைக்கெடுக்க வல்லது; மழையில்லாமல் இருக்கும் காலங்களில் நம்முடைய இயற்கை வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் இருந்துக் காக்கக் கூடியதும் மழைதான். நீத்தார் பெருமை

Question 4.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
Answer:
தெளிவுரை : முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாத என்பவர் சிறியோர்.
விளக்கவுரை : மனிதனுக்குச் செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர்களாகும். செய்வதற்கரிய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் எல்லாம் சிறியோர்கள் என்பர்.

மக்கட்பேறு

Question 5.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
Answer:
தெளிவுரை : தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி.
விளக்கவுரை : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து.. உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பத்தைத் தரக்கூடியது ஆகும்.

Question 6.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
Answer:
தெளிவுரை : தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.
விளக்கவுரை : தன் மகனை நற்பண்புகள் நிறைந்தவன் என ஊரார் போற்றுவதைத் தன் காதால் கேட்டத் தாயானவள் தன்னுடைய மகனைப் பெற்ற நேரத்தில் மகிழ்ச்சி அடைந்ததைவிட இப்பொழுது பெரிதும் மகிழ்ச்சி அடைவாள்.

அன்புடைமை

Question 7.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
Answer:
தெளிவுரை : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.
விளக்கவுரை : தன்னுடைய உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே சொந்தம் எனக் கொண்டு வாழ்வார்கள். உள்ளத்தில் அன்பு உடையவர்கள் தம் உடமையையும் மற்றவர்களுக்குச் சொந்தம் என வாழ்வார்கள்.

Question 8.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
Answer:
தெளிவுரை : அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
விளக்கவுரை : உள்ளமானது அன்பின் வழியாக இயங்குகின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாகும். உள்ளத்தில் அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பே ஆகும்.

இனியவை கூறல்

Question 9.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
Answer:
தெளிவுரை : பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணி.
விளக்கவுரை : பணிவு மிக்கவர்களாகவும் இன்பம் தரும் சொல் வழங்குவோனாகவும் இருப்பதுவே ஒருவருக்கு மிகச் சிறந்த அணிகலனாகும். மற்ற உடம்பில் அணியும் அணிகலன்கள் அணிகலன்கள் ஆகாது.

Question 10.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
Answer:
தெளிவுரை : இனிய சொல் இருக்கும் போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது.
விளக்கவுரை : இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்துவிட்டுத் தீயச் சொற்களைக் கூறுதல் என்பது கனிகள் இருக்கும் போது அவற்றை விடுத்துக் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

நூல் வெளி
இந்நூல் மூன்று பிரிவுகளைக் கொண்டது அவை :
1. அறத்துப்பால் : இயல்-4 பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் 38 அதிகாரம் – 380 குறள்பாக்கள்
2. பொருட்பால் : இயல் 3 – அரசியல், அங்கவியல், ஒழிபியல் 70 அதிகாரம் – 700 குறட்பாக்கள்
3. இன்பத்துப்பால் : இயல் 2 – களவியல், கற்பியல் 25 அதிகாரம் – 250 குறள்
4. வேறுபெயர்கள் : முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து.

 

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Students can Download 6th Tamil Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 1.
முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் தொடர்பைப் பற்றி விவாதிக்க.
Answer:
மாணவன் 1 : வணக்கம்! இன்று வகுப்பில் ஆசிரியர் இலக்கணம் கற்பித்ததில் எனக்கு 3 ஓர் ஐயம் உள்ளது. அதனைக் கொஞ்சம் தீர்த்து வைக்க இயலுமா.

மாணவன் 2 : உன்னுடைய ஐயம் என்னவென்று கூறு. என்னால் இயன்றவரை கூறுகிறேன். முதலெழுத்து, சார்பெழுத்து பற்றித்தானே!

மாணவன் 1 : ஆமாம்… ஆமாம்… முதலெழுத்து என்பது முப்பது. அவை உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகும்.

மாணவன் 2 : சரிதான். எழுதப்படுவதால் எழுத்து எனக் கூறப்படுகிறது. எழுத்துக்கள் ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இருவகை வடிவினை உடையன. இதில் வரி வடிவ எழுத்துகளையே நாம் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாகப் பகுத்துக் கூறுகிறோம்.

மாணவன் 1 : முதலெழுத்து எனக் கூறக் காரணம் என்ன?

மாணவன் 2 : இம்முப்பது எழுத்துகள் இல்லாமல் தமிழ்மொழி இல்லை. ஆதலாலும் இவ்வெழுத்துகள் ஏனைய உயிர் மெய்யெழுத்துகள் பிறப்பதற்கு முதன்மையாய் இருப்பதாலும் இவை முதல் எழுத்துகள் எனப்பட்டன.

மாணவன் 1 : சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். சார்ந்து வருதலாலே இப்பெயர் பெற்றுள்ளது. எழுத்துகள் ஒலி வடிவில் ஒன்றையொன்று சார்ந்து வருவதால் சார்பெழுத்தாயிற்று. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பனவாகும்.

மாணவன் 2 : சரியாகக் கூறியுள்ளாய். மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும். இவ்வாறு முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்குகிறது. உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 216 ஆகும்.

மாணவன் 1 : அடுத்ததாக உள்ள சார்பெழுத்து ஆய்த எழுத்து. இது மூன்று புள்ளிகளை உடையது. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆயிற்று.

மாணவன் 2 : இதேபோன்று உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக் குறுக்கம் முதலியவை பிற எழுத்துகளின் சார்பினாலேயே ஓசையில் நீண்டும், ஓசையில் குறைந்தும் ஒலிக்கும். ஆதலால் இவை சார்பெழுத்துகள் எனப்பட்டன.

மாணவன் 1 : ஓசையில் நீண்டும், குறைந்தும் என்கிறாயா? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்.

மாணவன் 2 : உயிரளபெடையும் ஒற்றளபெடையும் மாத்திரையளவில் நீண்டு
ஒலிக்கும். (எ.கா.) 1. உயிரளபெடை – தொழாஅர், கெடுப்பதூஉம்
2. ஒற்றளபெடை – கலங்கு.

மாணவன் 1 : ஓசை குறைதல் என்றாயே?

மாணவன் 2 : ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக் குறுக்கம் ஆகியவை தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) ஐகாரக் குறுக்கம் – தலைவன்
ஔகாரக் குறுக்கம் – ஔவையார்
மகரக்குறுக்கம் – வரும் வண்டி
ஆய்தக் குறுக்கம் – அஃறிணை

இதேபோன்று குற்றியலுகரம், குற்றியலிகரம், இவையிரண்டும் தன் மாத்திரையளவில் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) குற்றியலுகரம் – காது, அஃது, பாக்கு
குற்றியலிகரம் – வீடு + யாது – வீடியாது, கேண்மியா,
சென்மியா.

மாணவன் 1 : முதலெழுத்து, சார்பெழுத்தைப் பற்றி இனிமேல் மறக்கவே முடியாது. அதுபோல நன்கு விளங்கும்படிக் கூறியுள்ளாய் மிக்க நன்றி.

Question 2.
முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக
(எ.கா.) ஆம்
Answer:
முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்கள் :
ஆம்
ஆள், ஆல், ஆண், ஆன், ஆய், ஆர்
உன், உண்,ஊழ், ஊண், ஊன், ஊர்
என், எண், எள், ஏன், ஏர், ஏண், ஏம், ஏல்
ஈர், ஓர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 3.
முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக.
(எ.கா.) குருவி
Answer:
குருவி
கருவி, கனவு, கனி, கதை
மருவி, பணிவு, தனிமை, கவிதை
தருவி, கனிவு, பொதுமறை, பெருமை
தருக, வருக, தீமை, கருமை

மதிப்பீடு

Question 1.
முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Answer:
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவை முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?
Answer:
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை.
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9 மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 3.
சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
Answer:
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். இது தனித்து இயங்காது. (எ.கா) : அஃது, இஃது

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

Students can Download 6th Tamil Chapter 2.4 கிழவனும் கடலும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.4 கிழவனும் கடலும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

Question 1.
கடல் காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக. அப்படத்திற்குப் பொருத்தமாக நான்கு வரிகளுக்குள் குறிப்பு எழுதுக.
Answer:
மாணவர்கள் கடல் காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும் 1
படத்திற்கு பொருத்தமான தலைப்பு : கடல் வாழ் உயிரினங்கள்.
குறிப்பு : கடல் அலை – நண்டுகள் – மணல்வீடு – கடற்கரை மணல் – சூரியன் மறைதல்.

Question 2.
இக்கதையின் வழியாக நீங்கள் உணர்ந்தவற்றை வகுப்பில் பகிர்க.
Answer:
(i) முயற்சி செய்வதற்கு வயது வேறுபாடு இல்லை. எவ்வயதினராக இருந்தாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதை இக்கதை மூலம் உணரலாம்.

(ii) எண்பத்து நான்கு நாட்கள் கிழவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்காமல் வந்தார். எண்பத்தைந்தாவது நாள் ஒரு பெரிய மீன் கிடைத்தது. அதனையும் எளிதில் அவரால் பிடிக்க இயலவில்லை. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்புதான் அதனையும் பிடிக்க முடிந்தது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

(iii) அந்த மீனையும் அவரால் முழுமையாக காப்பாற்ற முடியவில்லை சுறாமீன்களுக்கு இரையாக்கிவிட்டு தலையும் எலும்பும்தான் மிஞ்சியது. இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் இருந்தார்.

(iv) இனிமேல் தன்னைப் பழித்துப் பேசமுடியாது என்று கூறினார். முயற்சி செய்து பயன் கிடைக்கவில்லை என்றாலும் உலகம் குறை கூறாது. ஆனால் முயற்சியே செய்யாமல் இருந்தால் பழிச் சொற்களைக் கேட்கும்படியதான சூழல் உண்டாகும்.

Question 3.
சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?
Answer:
(i) சாண்டிய கோவயதில் முதிர்ந்தவர். பல நாட்கள் மீன்பிடிக்கச்சென்று மீன் கிடைக்காமல் கரையை அடைந்தவர். ஆனால் எண்பத்தைந்தாவது நாளில் ஒரு பெரிய மீன் கிடைக்கிறது. பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அதனைப் பிடிக்கிறார். அதையும் சுறாமீன்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் தலையும் எலும்பும் மட்டுமே எஞ்சியது.

(ii) இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டும் தன்னை யாரும் பழித்துப் பேசக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார். தன்மானம் மிக்கவராகத் திகழ்ந்தார்.
(iii) சாண்டியாகோ விடா முயற்சியும், ஊக்கமும் ஒருங்கே பெற்றவர். தன்மானம்மிக்கவர்.

மதிப்பீடு

Question 1.
கிழவனும் கடலும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.
Answer:
சாண்டியாகோ என்பவர் வயது முதிர்ந்த மீனவர். அவர் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல், திரும்ப மாட்டார். ஆனால் கடந்த எண்பத்து நான்கு நாள்களாக அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை . மனோலின் என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான்.

அவன் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத் துணையாகவும் இருந்தான். அவரோடு கடலுக்குச் சென்றால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை அவனது பெற்றோர் வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர். அதிலிருந்து சாண்டியாகோ தனியாகவே மீன் பிடிக்கச் செல்கிறார்.

எண்பத்தைந்தாவது நாள் தனக்கு மீன்கள் கிடைக்கவே கிடைக்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதை எப்படியாவது மாற்றிக் காட்ட வேண்டும் என எண்ணியபடி கடலில் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்துக் கொண்டிருந்தார். தூண்டிலில் சூரைமீனை மாட்டி வைத்திருந்தார். இரவு முழுவதும் காத்திருந்தார். மறுநாள் காலையிலும் மீன் இல்லாமல் திரும்பப் போவதில்லை என்ற முடிவுடன் இருந்தார்.

மதிய வேளையில் தூண்டில் கயிற்றை ஏதோ இழுப்பது போல் தெரிந்தது. மீன்தான் வந்திருக்கும் என நினைத்து மகிழ்ந்தார். தூண்டலில் சிக்கிய தூண்டிலை மீன் வேகமாக இழுத்தது. சாண்டியாகோவும் விடாமல் இழுக்கிறார். மீனோ சாண்டியாகோவைக் கடலுக்குள் இழுத்துத் தள்ளிவிடுவது போல் இழுத்தது. இப்படியாக நாலுமணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு களைத்துப் போய் சற்று கண்ணயர்ந்து விட்டார் சாண்டியாகோ.

மீன் மீண்டும் தூண்டிலை இழுத்தபோது சாண்டியாகோவின் உறக்கம் கலைந்தது. மீண்டும் சுறுசுறுப்பாக தூண்டிலை இழுத்தார். நீண்ட நேரம் போராடி ஒருவழியாக மீனைப் பிடிக்க முடியாமல் அதனை ஈட்டியில் குத்திக் கொன்று விடுகிறார். பிறகு பெரிய மீனாக இருந்ததனால் படகுக்குள் போட இயலாமல் படகின் பக்கவாட்டில் இழுத்துக் கட்டினார். தன்னுடைய விடாமுயற்சியின் பயனை உணர்ந்தார். படகைக் கரையை நோக்கிச் செலுத்தினார். அப்போது சுறாமீன்கள் இவர் படகில் கட்டி வைக்க மீனைச் சாப்பிடுவதற்காகச் சூழ்ந்தன. அவற்றைத் தன் ஈட்டியால் வீழ்த்தினார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

ஒரு வழியாகக் கரை சேர்ந்தார். இன்று நடந்த எல்லாவற்றையும் மனோலினுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணியபடி படகை இழுத்துக் கட்டினார். பிறகு படகோடு கட்டிய மீனைப் பார்த்தார். அது சுறாமீன்களால் உண்ணப்பட்டு அதன் தலையும் எலும்பும் தாம் மிஞ்சியிருந்தன.

சாண்டியாகோவைப் பார்க்க மனோலின் வந்தார். “அடேயப்பா! எவ்வளவு பெரிய மீன் அது! மீன் பிடிப்பதில் பெரிய வீரன் தாத்தா நீ!” என்றான் மனோலின். கிழவர் “நான் பிடித்த மீனைப் பார்த்தாயா?” கடைசியில் எலும்பும் தலையும்தான் மிச்சம்!” என்றார்.

மனோலின் “அதனால் என்ன தாத்தா? உன் திறமையும் விடாமுயற்சியும் வென்றுவிட்டதே! .9 இனி உன்னை யாரும் பழித்துப் பேச முடியாது தாத்தா! உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இனி நான் உன்னோடுதான் மீன் பிடிக்க வருவேன்” 9 என்று கூறினான். இக்கதை மூலம் நாம் உணர்வது ‘விடாமுயற்சி வெற்றியைத் தரும்’ என்பதாகும்.
முதல் பருவம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

Students can Download 6th Tamil Chapter 2.3 சிறகின் ஓசை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.3 சிறகின் ஓசை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

Question 1.
உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை 1
1. காகம்
2. சிட்டுக்குருவி
3. குயில்
4. மைனா
5. இட்டைவால் குருவி
6. கொக்கு
7. நாரை
8. பருந்து
9. கழுகு
10. மயில்
11. மரங்கொத்தி
12. பச்சைக் கிளி

Question 2.
உங்கள் வீட்டுக்கு அருகில் பறவைகள் வருவதற்கு என்னென்ன செய்யலாம் என்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
குமரன் : முகிலா! இன்று எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நான்கைந்து குருவிகள் இருந்தன. பார்க்கவே அழகாக இருந்தன.

முகிலன் : அப்படியா? இப்போதெல்லாம் பறவைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. முன்பெல்லாம் எங்கள் வீட்டிற்கருகில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதனால் நிறைய பறவைகள் இருக்கும். இப்போதெல்லாம் வருவதே இல்லை. மரத்தையும் வெட்டிவிட்டார்கள். பெரிய தொழிற்சாலை கட்டிவிட்டார்கள். அந்த இரைச்சலுக்குப் பறவைகள் அச்சப்படுவதால் வருவதில்லை .

குமரன் : நீ சொல்வதும் சரிதான். நகரங்களின் வளர்ச்சியினால் இயற்கைச்சூழல் மாறிவிட்டது. இயற்கையை விற்று செயற்கையை வாங்கிவிட்டோம். அதன் விளைவுதான் இந்நிலைக்குக் காரணம்.

முகிலன் : பறவைகள் நமது நண்பன் என்பதை மறந்துவிட்டோம். அதை நாம் மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் எனச் சிந்திக்க வேண்டும்.

குமரன் : மாடிகளில் தானியங்களைத் தூவி விட வேண்டும். அருகில் சிறு சிறு து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். வீட்டிற்கு ஒரு மரம் என்ற தொடரை மெய்ப்பிக்கும் படி மரம் நடுவோம். மாடியில் செயற்கையாகக் கூடுகள் அமைப்போம். அட்டைப் பெட்டிகளைப் பறவைகள் தங்குவதற்கு ஏதுவாகப் பயன்படுத்தலாம். குடியிருப்புகளின் நடுவில் உள்ள செல்பேசி கோபுரங்களை அகற்றுவதற்கு வழி செய்யலாம்.

முகிலன் : கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். கேழ்வரகு, நெல், கம்பு போன்ற சிறுதானியங்களை மாடிகளில் போட்டு வைக்கலாம். இவற்றைச் செய்தால் பறவைகள் தினமும் வரும். செயற்கைக் கூடுகள் இருப்பதால் இரவில் தங்குவதற்கும் வரும்.

குமரன் : இனிமேல் நாம் பேசியபடி செய்து பறவைகளின் வரவை அதிகரிக்கச் செய்வோம். நம் நண்பர்களிடம் கூறி அவர்களை இவ்வாறு செய்யச் சொல்லலாம்.

Question 3.
பறவைகள் தொடர்பான பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
பறவைகள் தொடர்பான பழமொழிகள் :
(i) கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
(ii) காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
(iii) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
(iv) எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
(v) எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
(vi) கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
(vii) சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
(viii) சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை .

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

Question 4.
இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.
எ.கா. காப்போம் காப்போம்! பறவைகளைக் காப்போம்!
Answer:
இயற்கையைப் பாதுகாக்கும் முழக்கங்கள் :
(i) காப்போம்! காப்போம் ! பறவைகளைக் காப்போம்!
(ii) காப்போம் ! காப்போம் ! விளைநிலங்களைக் காப்போம்!
(iii) சேமிப்போம் ! சேமிப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!
(iv) செய்வோம்! செய்வோம்! இயற்கை விவசாயம் செய்வோம்!
(v) தவிர்ப்போம் ! தவிர்ப்போம் ! நெகிழியைத் தவிர்ப்போம்!
(vi) மரங்களை நடுவோம்! இயற்கையை பாதுகாப்போம்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
Answer:
அ) தட்பம் + வெப்பம்

Question 2.
வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
Answer:
ஆ) வேதி + உரங்கள்

Question 3.
தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) தரையிறங்கும்
ஆ) தரை இறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைய்றங்கும்
Answer:
அ) தரையிறங்கும்

Question 4.
வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
Answer:
ஆ) வழித்தடம்

Question 5.
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ……………….
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
Answer:
அ) துருவப்பகுதி

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ………
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ………..
3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ……………. என்று பெயர்.
4. இந்தியாவின் பறவை மனிதர் ………….
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று …….
Answer:
[விடை: ஆர்டிக் ஆலா]
(விடை: சத்தி முத்தப் புலவர்)
(விடை: வலசை போதல்)
(விடை: டாக்டர். சலீம் அலி)
(விடை: தட்ப வெப்ப நிலை மாற்றம்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

சொற்றொடர் அமைத்து எழுதுக

1. வெளிநாடு …………………
விடை : நம் நாட்டில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலை செய்வது நல்லது அன்று.
2. வாழ்நாள் …………………
விடை : வாழ்நாள் முழுவதும் உண்மை மட்டுமே பேசி வாழ்ந்தவன் அரிச்சந்திரன்.
3. செயற்கை ……………….
விடை : விவசாயத்தில் செயற்கை உரங்களை இடுவது மண்ணிற்குக் கேடு.

பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக

1. மரங்களை வளர்த்து ………… யைக் காப்போம் ………. உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம் (செயற்கை / இயற்கை)
2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ……… தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை …………….. (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)
Answer:
1. (விடை: இயற்கை, செயற்கை)
2. (விடை: மிகுந்துள்ளது, குறைந்துள்ளது)

குறுவினா

Question 1.
பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
Answer:
பறவைகள் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :
பறவைகள் உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்
போன்றவற்றிற்காக இடம்பெயர்கின்றனள.

Question 2.
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
Answer:
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
(i) தலையில் சிறகுகள் வளர்தல்.
(ii) இறகுகளின் நிறம் மாறுதல்.
(iii) உடலில் கற்றையாக முடி வளர்தல்.

சிறுவினா

Question 1.
சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.
Answer:
(i) சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.

(ii) கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

(iii) துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

Question 2.
வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
Answer:
(i) பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிற்கு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.

(ii) சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

சிந்தனை வினா

Question 1.
பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
Answer:
(i) அழியும் நிலையில் உள்ள பறவைகளை அறிந்து அவற்றிற்குத் தேவையான உணவு, மருத்துவ உதவி செய்து இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்
(ii) ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற செடி, கொடிகளையும் வளர்க்கலாம்.
(iii) நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர் தாவரங்களையும் வளர்க்கலாம்.
(iv) தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்கலாம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

Students can Download 6th Tamil Chapter 2.2 காணி நிலம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.2 காணி நிலம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்
Question 1.
பாடலை ஓசைநயத்துடன் படித்து மகிழ்க.
Answer:
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணி அருகினிலே – தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர் போலே – நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்
தென்றல் வரவேணும். – பாரதியார்

Question 2.
காணி என்பது நில அளவைக் குறிக்கும் சொல். இதுபோல நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்கள் : சென்ட், ஏக்கர், ஹெக்டேர், ஏர்ஸ், மர, குழி, வேலி.

Question 3.
என் கனவு இல்லம் என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
(i) ஒரு ஏக்கர் அளவில் இடம் வேண்டும். அங்கு மிகவும் அழகான ஒரு மாளிகை கட்ட வேண்டும். ஒவ்வொரு தூண்களும் மிகவும் அழகாக இருக்க வேண்டும்,
தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

(ii) நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.

(iii) மனிதனுக்குப் பயன் தரும் பல பழ மரங்களும், மூலிகைத் தாவரங்களும் இருக்க வேண்டும். காலையில் எழுந்ததும் சூரியனைப் பார்க்கும்படி வாசற்படி இருக்க வேண்டும். அங்கே முத்துபோன்ற நிலவொளி வீச வேண்டும்.

(iv) காதுக்கு இனிய குயிலோசையும். மற்ற பறவைகளின் ஓசையும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
(v) மிக அழகாக மின்னும்படி மாளிகை போல் இருக்க வேண்டும். இதுவே என் கனவு இல்லமாகும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல் ………..
அ) ஏரி
ஆ) கேணி
இ) குளம்
ஈ) ஆறு
Answer:
ஆ) கேணி

Question 2.
‘சித்தம்’ என்பதன் பொருள் . ………..
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்
Answer:
அ) உள்ளம்

Question 3.
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ………….
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்
Answer:
அ) அடுக்குகள்

Question 4.
நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நன் + மாடங்கள்
ஆ) நற் + மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
Answer:
இ) நன்மை + மாடங்கள்

Question 5.
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நிலம் + இடையே
ஆ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே
Answer:
ஆ) நிலத்தின் + இடையே

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

Question 6.
முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்
Answer:
ஈ) முத்துச்சுடர்

Question 7.
நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலாவொளி
ஈ) நிலவுஒளி
Answer:
இ) நிலாவொளி

பொருத்துக

1. முத்துச்சுடர்போல – மாடங்கள்
2. தூய நிறத்தில் – மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி
விடை :
1. முத்துச்சுடர்போல – நிலாஒளி
2. தூய நிறத்தில் – தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட – தென்றல்

நயம் அறிக

Question 1.
காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
காணி – ட்டி
த்தும் – காதில்
கேணி – கீற்று
த்து – க்கத்திலே
முத்துச்சுடர் – முன்பு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

Question 2.
காணி நிலம் பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
காணி – கேணி – தூணில்
தென்றல் – முன்பு
முத்து – கத்து
சித்தம் – பத்து

குறுவினா

Question 1.
காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
Answer:
பாரதியார் விரும்பும் மாளிகை :
(i) அழகான தூண்களையும், தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
(ii) அங்கே நல்ல நீரையுடைய கிணறு இருக்க வேண்டும்.
(iii) அதனருகில் இளநீரையும், கீற்றுகளையும் தரும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் இருக்க வேண்டும் என்று பாரதியார் விரும்புகிறார்.

Question 2.
பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
Answer:
இயற்கையின் மீது அதிக விருப்பம் கொண்டு தன்னுடைய மாளிகையின் அருகில் கிணற்றையும், அதனருகில் இளந்தென்றல் விழக்கூடிய பத்துப் பன்னிரெண்டு தென்னை மரங்ளையும் வளர்க்க வேண்டும் எனவும், முத்துச்சுடர் போல நிலாவொளி வீசவேண்டும் எனவும், குயில்களின் குரலோசைகளைக் கேட்கவேண்டும் எனவும், பாரதியார் பெரிதும் விரும்புகிறார்.

சிந்தனை வினா

Question 1.
பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக.
Answer:
எங்கள் வீட்டில் கொய்யாமரம், மாமரம், வாழைமரம், பலாமரம், வேப்பமரம், தேக்கு, பூவரசு மரங்களை வளர்ப்பேன். மேலும் நிறைய பூச்செடிகள் வளர்ப்பேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

நூல் வெளி
இப்பாடல் பாரதியார் கவிதைகள் தொகுப்பில் காணி நிலம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

பொருளுரை
காணி அளவு நிலம் வேண்டும். அந்நிலத்தில் ஒரு மாளிகை கட்டித் தர வேண்டும். அது அழகான தூண்களையும், தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும். அங்கே நல்ல நீரையுடைய கிணறு இருக்க வேண்டும். அதனருகில் இளநீரையும், கீற்றுகளையும் தரும் பத்து, பன்னிரண்டு தென்னை மரங்களும் வேண்டும்.

அவ்விடத்தில் முத்தின் ஒளிபோல நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.

விளக்கவுரை
காணி அளவு நிலத்தில், ஒரு பெரிய மாளிகை கட்ட வேண்டும். அந்த மாளிகை மிக அழகான தூண்கள் இருக்கும்படியும், தூய்மையான வெண்மை நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும். அங்கே நல்ல சுவையான நீரையுடைய கிணறு இருக்க வேண்டும். அந்த மாளிகையின் அருகில் குளிர்ச்சியான தென்றல் காற்றை வீசக்கூடிய மரங்களையும் மற்றும் நல்ல இளநீரையும் கீற்றுகளையும் தரும் பத்து பன்னிரண்டு தென்னை மரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

அந்த மாளிகையின் அருகில் இரவு நேரத்தில் முத்து போன்ற வெளிச்சத்தைத் தரக்கூடிய நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிமையான குயில்களின் குரலோசை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும். குளிர்ந்த இளந்தென்றல் தவழ வேண்டும் எனப் பாரதியார் கூறுகிறார்.

சொல்லும் பொருளும்
1. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
2. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
3. சித்தம் – உள்ளம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்

Students can Download 6th Tamil Chapter 2.1 சிலப்பதிகாரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.1 சிலப்பதிகாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்
Question 1.
‘வளர்பிறையும் தேய்பிறையும்’ என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
மாணவர்கள் வளர்பிறையும், தேய்பிறையும் பற்றி அறிந்து கொள்ளச் செய்தல்.
அவையோர்க்கு வணக்கம்! நான் வளர்பிறை, தேய்பிறை பற்றிப் பேசப் போகிறேன். வானில் நட்சத்திரக் கூட்டங்கள், நிலா, சூரியன், வியாழன், புதன், செவ்வாய் போன்ற பல கோள்களும் உள்ளன. கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றைச் சூரியக் குடும்பம் என்பர்.

நிலவானது அமாவாசை தினத்தன்று வானில் தெரியாது. பௌர்ணமி தினத்தன்று முழுநிலவாகக் காட்சியளிக்கும். அமாவாசைக்குப் பிறகு நிலவானது கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து முழுநிலவாகும். இவ்வாறு வளர்வதை வளர்பிறை என்போம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒருநாள் கண்ணுக்கே தெரியாது. இவ்வாறு குறைவதைத் தேய்பிறை என்போம்.

சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு வளர்பிறை நாட்களே உகந்தது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இதனையே நாமும் பின்பற்றுகிறோம். பழங்காலத்தில் மின்சார விளக்குகள் இல்லாததால் சந்திரனின் ஒளியையே முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தனர். வளர்பிறை நாட்களில் செய்யும் செயல்கள் நிலவு வளர்வதைப் போல் வளரும் என்று நம்பினர்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம் 1
நிலவானது எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும். அது தேய்வதும் இல்லை. வளர்வதும் இல்லை. இதுவே அறிவியல் உண்மை. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றுவதற்கும் 365 நாட்கள் சூரியன் ஆகின்றன. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதற்கு 29 நாட்கள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும்போது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் உள்ளபோது பௌர்ணமி என்று குறிப்பிடும் முழுநிலவு தோன்றும். பின்பு இது நாளுக்கு நாள் நகர்ந்துகொண்டே செல்லும் போது சந்திரனின் உருவம் நமக்கு மறைந்து கொண்டே வரும். இதனைத் தேய்பிறை என்கிறோம்.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்லும் போது ஒருநாள் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் பூமி இருக்கும். சூரியனின் ஒளி பூமி இடையில் இருப்பதால், மறைக்கப்படுகிறது. அதனால் நிலவு தெரியாது. அந்நாளே அமாவாசை என்று குறிப்பிடுவோம்.

நிலவுக்கு இயல்பாக ஒளிவிடும் தன்மை இல்லை. ஒளியின் ஆதாரமே சூரியன்தான். சூரியனிடமிருந்து பெரும் ஒளியையே சந்திரன் பெற்று ஒளி வீசுகிறது. அதனால்தான் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும் போது முழு நிலவைக் காண முடிகிறது. அமாவாசை தினத்தன்று சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி இருப்பதால் சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படுகிறது. இச்சுழற்சியினால்தான் வளர்பிறையும் தேய்பிறையும் உருவாகிறது. நிலவு தேய்வதும் இல்லை. வளர்வதும் இல்லை.

Question 2.
நீங்கள் விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம் 2

Question 3.
‘நிலா’ என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.
Answer:
நீ பகலெல்லாம்
எங்கு செல்கிறாயோ?
இருளில் மட்டும் ஒளி வீசுகிறாய்!
உன் பெயரை உச்சரித்தாலே
மனதில் இன்பம் தவழ்கிறது
உன்னைப் பார்த்து வளர்ந்தவன் – நான்
உன்னைப் பார்க்கவே வளர்ந்தவன்
வா நிலவே வா ! கொஞ்சி விளையாட.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கழுத்தில் சூடுவது …….
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
Answer:
அ) தார்

Question 2.
கதிரவனின் மற்றொரு பெயர் ………………
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
Answer:
ஆ) ஞாயிறு

Question 3.
‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
Answer:
ஆ) வெண்மை + குடை

Question 4.
‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
‘ஈ) பொற்கோ + இட்டு
Answer:
அ) பொன் + கோட்டு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்

Question 5.
கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) கொங்கு அலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
Answer:
இ) கொங்கலர்

Question 6.
அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
Answer:
ஆ) அவனளிபோல்

நயம் அறிக

Question 1.
பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மாமழை – மேரு – மேல்
கொங்கு – காவேரி

Question 2.
பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
திங்கள் – கொங்கு
மாமழை – நாம

குறுவினா

Question 1.
சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
Answer:
சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்

Question 2.
இயற்கை போற்றத்தக்கது ஏன்?
Answer:
(i) நாம் இயற்கையோடு இயைந்து வாழ்கிறோம். இயற்கை என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன், மழை இவையெல்லாம் நாம் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து உதவுகிறது.
(ii) சூரியன் ஒளியைத் தருவதால்தான் மரங்கள் வளர்கின்றது. இதனால் நமக்கு மழை பொழிகிறது. மழை நமக்கு உணவைக் கொடுக்கும்.
(iii) உணவாகவும் அமையும். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே இயற்கை போற்றத்தக்கதாகும்.

சிந்தனை வினா

Question 1.
இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே,

முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’
என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். உண்மையில் கல்லும் மண்ணும் தோன்றிய பிறகே உயிரினங்கள் தோன்றின. யாராலும் தோற்றுவிக்கப்படாத இயற்கையோடு இணைந்த சமயமாகத் தமிழர் சமயம் விளங்கியது.
மாந்தர் தோன்றிய காலந்தொட்டு தன்னை விஞ்சும் ஆற்றல் இயற்கைக்கு இருந்ததை அறிந்திருந்தனர். இந்த ஆற்றல் தன்னை மீறி செயல்பட்டதை உணர்ந்தனர். அப்பேராற்றலைத் தனக்குத் துணையாகக் கொள்ள முயன்றனர்.

அதற்கான வழிமுறைகளே வழிபாட்டு முறைகள் ஆகும். அவ்வாற்றலைக் கடவுள் என்றோ இறைவன் என்றோ அழைக்கவில்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பேராற்றலான இயற்கையை வழிபட்டனர். தான் விரும்பும் அனைத்தையும் அவ்வாற்றலுக்குப் படைத்து மகிழ்வுற்றனர். படைக்கும் போது, தனக்கு உள்ள இடையூறுகளைக் கூறி அவைகளைக் களைந்தெறியுமாறு கேட்டுக்கொண்டனர்.

நாடோடிகளாய் வாழ்ந்திருந்த மக்களுக்குக் காளை, பசு, ஆடு, கோழி, நாய், பூனை ஆகிய நட்பு விலங்குகளைக் கடவுளுக்கு உதவியாளர்களாக இருப்பதாக நம்பினார்கள். கடவுளே இவ்வுலகைப் படைத்தார் என்றும் மாந்தர், உயிரினங்கள், விலங்குகள், வானம், வானத்திலுள்ள விண்மீன்கள், அண்டவெளி அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை என்றும் எண்ணி அவற்றை வழிபடலாயினர். இவ்வுலகமானது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐந்தும் உள்ளடக்கியது என உறுதிகொண்டனர்.

இயற்கையாய்த் தோன்றிய கதிரவனை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட்டனர் பிற்காலத்தில் தோன்றிய சமயங்கள் பலவும் கதிரவனையோ அல்லது அதன் உருவத்தையோ மையமாகக் கொண்டே தங்களது கடவுளைக் கண்டனர்.

மக்கள் தோன்றிய இடங்களானவை மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமான முல்லை , வயலும் வயல் சார்ந்த இடமான மருதம், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தல். இந்த நானிலங்களில் இருந்த மக்கள் அங்கங்கிருந்த உயிரினங்களையும் இயற்கையையும் வணங்கினர்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலுக்கு அரசனாக விளங்கும் இறைவன். தொழிலுக்கு ஒன்றாக இந்த ஐம்பூதங்களையே ஊர்தியாகக் கொண்டு உலவுகிறான் என்றும் நம்பினர். இவ்வாறு இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இறைவனும் இயற்கையும் வேறுவேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும் ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவைதான் அவை. இறைவன் என்பது இயற்கையின் தாய் இயற்கை என்பது இறைவனின் வடிவங்களுள் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவே நாம் இன்றும் சூரியன், சந்திரன், மழை நீர், போன்ற இயற்கையை வழிபடுகின்றோம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்

நூல் வெளி
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். சிலம்பின் செயலை மையமாகக் கொண்டு கதையைக் கூறுவதால் சிலப்பதிகாரம் என்னும் பெயர் பெற்றது. மூன்று காண்டங்கள் முப்பது காதைகளைக் கொண்டது. புகார் காண்டம் – 10 காதைகள், மதுரைக் காண்டம் -13 காதைகள், வஞ்சிக் காண்டம் – 7 காதைகள். காண்டம் – பெரும் பிரிவு, காதை – கதை தழுவியப்பாட்டு காண்டத்தின் உட்பிரிவு – காதை. தொடர்நிலைச் செய்யுள், முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் ஆகியவை இவற்றின் வேறு பெயர்களாகும். திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

பொருளுரை
தேன் நிறைந்த அத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக்குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போல வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்!

அச்சம் தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!

விளக்கவுரை
உலகத்தில் உள்ளவர்களுக்கு எக்காலத்திலும் பொதுவாக விளங்கி நலன்களைப் புரிந்து வரும் சந்திரன், சூரியன், மாமழை ஆகியவற்றைப் போற்றியுள்ளார். இது தனிப்பெருஞ்சிறப்புடையதாகும்.

சோழனின் வெண்கொற்றக் குடையானது வணக்கத்திற்குரியது, தண்மை நிறைந்தது. அது வெயிலை மறைப்பதற்கு என்று அமைவது அன்று. அதனைப் போன்று சந்திரனும் குளிர்ச்சித் தன்மையுடையது. அதனால் திங்களைப் போற்றி வணங்குவோம்.

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களிலும் பரந்து விரிந்துள்ளது அதனைப்போல கதிரவனும் உலகம் முழுவதிலும் பரந்து விரிந்து தனது ஒளியைத் தருகிறது. அதனால் கதிரவனைப் போற்றி வணங்குவோம்.

அச்சம் தருகின்ற கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்களுக்கு மன்னன் கருணை அளிக்கின்றான். அதனைப்போல மழை என்பது உலகத்தில் தன்மையினை விளங்கச் செய்கிறது. அமுத மழையாகப் பொழிந்து மக்களைக் காக்கின்றது. இதனை அன்பின் தன்மையினைக் குறிக்கும் வகையில் அளி எனக் கூறியுள்ளார். இதன் சிறப்பினை உணர்த்தவே மாமழையைப் போற்றுகிறார்.

சொல்லும் பொருளும்
1. திங்கள் – நிலவு
2. கொங்கு – மகரந்தம்
3. அலர் – மலர்தல்
4. திகிரி – ஆணைச்சக்கரம்
5. பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்
6. மேரு – இமயமலை
7. நாமநீர் – அச்சம் தரும் கடல்
8. அளி – கருணை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

Students can Download 6th Tamil Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை
Question 1.
உங்கள் பெயர் மற்றும் உங்கள் நண்பர்களது பெயர்களுக்கான மாத்திரை அளவை கண்டுபிடி.
Answer:
எ. கா. கபிலர் – 1 + 1 + 1 + 1/2 = 3 1/2
மாணவர்களைத் தமிழ் எழுத்துகளின் மாத்திரை அளவை அறிந்து கொள்ளச் செய்தல்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை 1

மதிப்பீடு

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக.
Answer:
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் ………….
(விடை: அது]
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் …………………..
[விடை : தீ]
3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் ……..
[விடை: அஃது]

மொழியை ஆள்வோம்

கேட்டும் பார்த்தும் உணர்க :

Question 1.
இனிய தமிழ் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
Answer:
கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்தல்.
மனதில் உறுதி வேண்டும்.
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்.
கைவசமாவது விரைவில் வேண்டும்.
தனமும் இன்பமும் வேண்டும்.
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்.
காரியத்தில் உறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்.
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

Question 2.
தமிழறிஞர்களின் வானொலி, தொலைக்காட்சி உரைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
தமிழறிஞர்களின் வானொலி, தொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ்தல். மாணவர்கள் இச்செயல்பாட்டினைத் தாங்களே செய்து பார்க்க வேண்டும்.

Question 3.
கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக
1. தமிழ் இனிது
2. தமிழ் எளிது
3. தமிழ் புதிது
Answer:
1. தமிழ் இனிது :
அனைவருக்கும் வணக்கம்! நம் தாய்மொழியாம் தமிழின் இனிமை, எளிமை, புதுமை பற்றிப் பார்ப்போமா! நம் தாய்மொழியாம் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பெயரிட்டபோதே அதன் சிறப்புகளை அனைவரும் அறிவர். இது தனித்து இயங்கும் மொழி, செம்மையான மொழி எனச் சிறப்பிக்கலாம்.

தமிழ் என்றால் அழகு, தமிழ் என்றால் இனிமை. அதனால்தான் இதனைத் தேன்தமிழ், தீந்தமிழ் முதலான சொற்களால் அழைக்கின்றனர். தமிழ் என்ற சொல்லைத் தம்-இழ் எனப் பிரித்தோமேயானால் தம்மிடத்தில் ‘ழ்’ ழைக் கொண்ட மொழி எனப் பொருள் கொள்ளலாம். தமிழில் மூன்று இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்.
“தேனொக்கும் தமிழே! நீ கனி, நான்கிளி
வேறென்ன வேண்டும் இனி?”
“செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!”
இப்பாடல் வரிகள் தமிழின் இனிமையைப் பறைசாற்றும்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

2. தமிழ் எளிது :
தமிழ் இனிய தமிழ் என்பதோடு எளிய தமிழ் எனவும் கூறப்படுகிறது. தமிழ் மொழியானது பேசவும் படிக்கவும் மிகவும் எளிதானது. இந்தச் சிறப்பு உலகில் எந்த மொழிக்கும் இல்லாதது. தமிழ் மொழியானது எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிமையான மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள். உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் போதும்.

எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழும். தமிழ்மொழியை எழுதும் முறையும் எளிதானது. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. தமிழ் எழுத்துகள் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு இவற்றின் முயற்சியால் மட்டுமே ஒலிப்பதாக இருக்கும். தமிழ் மிகவும் மென்மையாக ஒலிக்கக்கூடிய மெல்லோசை மொழியாகவே உள்ளதால் எழுதவும் பேசவும் படிக்கவும் எளிமையானதாக உள்ளது.

3. தமிழ் புதிது :
தமிழ் மொழி என்றென்றும் புதிதாக உள்ளது. அதற்குக் காரணம் இன்று வளர்ந்து வரும் அறிவியல், கணினி ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய கலைச் சொற்கள் உருவாகிக் கொண்டே உள்ளன. அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என்று சொல்லும் அளவிற்கு அவற்றின் கலைச் சொற்கள் பெருகியுள்ளன. சமூக ஊடகங்களான செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பயன்படத்தக்க மொழியாகவும் தமிழ்மொழி விளங்குகிறது. இதிலிருந்து தமிழ் இனிது, எளிது, புதிது என்பதை அறியலாம்.

சொல்லக் கேட்டு எழுதுக

ஆசிரியர் சொற்களைச் சொல்லக்கேட்டு மாணவர்கள் எழுதுதல்.
1. இன்பத்தமிழ்
2. சுப்புரத்தினம்
3. பாவேந்தர்
4. செந்தமிழ்
5. உயிரினங்கள்
6. தொல்காப்பியம்
7. பன்னிரண்டு
8. அஃறிணை
9. ஆராய்ச்சியாளர்
10. கருவூலங்கள்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக )

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது. –
Questions.
1. பழமொழியின் சிறப்பு …………….. சொல்வது
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழமையைச்
ஈ) பல மொழிகளில்

2. நோயற்ற வாழ்வைத் தருவது ………….

3. உடல் ஆரோக்கியமே ………………… அடிப்படை.

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
Answers:
1. (விடை: ஆ) சுருங்கச்)
2. (விடை: சுத்தம்)
3. (விடை: உழைப்புக்கு)
4. (விடை: உணவு, உடை. உறைவிடம்)
5. (விடை: சுத்தம்)

பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக

Question 1.
எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
Answer:
எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

Question 2.
பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னார்கள்.
Answer:
பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.

ஆய்ந்தறிக

Question 1.
பெயரில் தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்றோம்.
S. இனியன், எஸ். இனியன், ச. இனியன் -இவற்றுள் சரியானது எது? ஏன்?
Answer:
ச. இனியன்.
பெயரும் பெயரின் தலைப்பெழுத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும்.
பெயரைத் தமிழிலும் பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் எழுதுவது தவறு.
கடிதம் எழுதுக
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர்
அ.பூங்கோதை
ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப் பள்ளி
அண்ணாநகர், சென்னை -40.

பெறுநர்
வகுப்பாசிரியர் அவர்கள்
ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப் பள்ளி
அண்ணாநகர், சென்னை -40.

மதிப்பிற்குரிய ஐயா/ அம்மா,
வணக்கம், எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள்கள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். .
நன்றி!

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள மாணவி,
அ.பூங்கோதை

இடம் : முகப்பேர்
நாள் : 18.06.2018
பெற்றோர் கையொப்பம்
அருணாச்சலம்.

மொழியோடு விளையாடு

திரட்டுக :

Question 1.
மை என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க.
1. கருமை
2. இனிமை
3. பொறுமை
4. பெருமை
5. இளமை
6. சிறுமை
7. கல்லாமை
8. வறுமை
9. தனிமை
10. உவமை
11. அருமை
12. உண்மை
13. இல்லாமை
14. பன்மை

சொல்வளம் பெறுவோம்

Question 1.
கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
Answer:
(எ.கா.) கரும்பு – கரு, கம்பு
கவிதை – கவி, விதை, கதை, தை
பதிற்றுப்பத்து – பதி, பத்து, பற்று
பரிபாடல் – பரி, பாடல், பா, பால், பாரி

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

Question 2.
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை 2
(எ.கா) விண்மீ ன்
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை 3

பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக

Question 1.
அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, அன்பு
அ – _____ தருவது தமிழ்
ஆ – _______ தருவது தமிழ்
இ – _______ தருவது தமிழ்
ஈ – ________இல்லாதது தமிழ்
உ – ________ தருவது தமிழ்
ஊ – ________ தருவது தமிழ்
எ – __________வேண்டும் தமிழ்
ஏ – _________ தருவது தமிழ்
Answer:
அன்பு தருவது தமிழ்
ஆற்றல் தருவது தமிழ்
இன்பம் தருவது தமிழ்
ஈடு இல்லாதது தமிழ்
உவகை தருவது தமிழ்
ஊக்கம் தருவது தமிழ்
என்றும் வேண்டும் தமிழ்
ஏற்றம் தருவது தமிழ்

கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க

Question 1.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை 4
Answer:
விடை : 1. பாரதிதாசன்
2. பாரதியார்
3. திருவள்ளுவர்
4. வாணிதாசன்
5. சுரதா
6. ஔவையார்

நிற்க அதற்குத் தக

1. நான் தாய்மொழியிலேயே பேசுவேன்.
2. தாய்மொழியிலேயே கல்வி கற்பேன்.
3. தமிழ்ப்பெயர்களையே சூட்டுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. வலஞ்சுழி – Clockwise
2. இடஞ்சுழி – Anti Clockwise
3. இணையம் – Internet
4. குரல்தேடல் – Voice Search
5. தேடுபொறி – Search engine
6. தொடுதிரை – Touch Screen
7. முகநூல் – Facebook
8. செயலி – App
9. புலனம் – Whatapp
10. மின்ன ஞ்சல் – E-mail

கூடுதல் வினாக்கள்

Question 1.
இலக்கணம் என்றால் என்ன?
Answer:
(i) உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்று நோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான் இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான்.
(ii) மொழியை எவ்வாறு பேசவும், எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.

Question 2.
தமிழ்மொழியின் இலக்கண வகைகள் எத்தனை வகைப்படும்?
Answer:
தமிழ்மொழியின் இலக்கண வகைகள் ஐந்து வகைப்படும்.

Question 3.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை?
Answer:
(i) எழுத்து இலக்கணம்
(ii) சொல் இலக்கணம்
(iii) பொருள் இலக்கணம்
(iv) யாப்பு இலக்கணம்
(v) அணி இலக்கணம்

Question 4.
எழுத்து என்றால் என்ன?
Answer:
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும், வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.

Question 5.
உயிர் எழுத்துகள் என்றால் என்ன?
Answer:
உயிருக்கு முதன்மையானது காற்று. காற்றைப் பயன்படுத்தி வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளினால் வெளிப்படும் “அ முதல் ஔ வரை” உள்ள எழுத்துகள் உயிர் எழுத்துகள் எனப்படும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

Question 6.
உயிர் எழுத்துகள் எத்தனை அவற்றை எடுத்து எழுதுக.
Answer:
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு . அவை – அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஓள ஆகும்.

Question 7.
குறில் எழுத்துக்கள் என்றால் என்ன?
Answer:
குறுகி ஒலிக்கும் எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப்படும்.

Question 8.
நெடில் எழுத்துகள் என்றால் என்ன?
Answer:
நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும்.

Question 9.
உயிர்க் குறில் எழுத்துக்களை எழுதுக.
Answer:
அ, இ, உ, எ, ஒ என ஐந்து எழுத்துகளும் உயிர்க்குறில் எழுத்துகளாகும்.

Question 10.
உயிர் நெடில் எழுத்துகள் யாது?
Answer:
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என ஏழு எழுத்துகளும் உயிர் நெடில் எழுத்துகளாகும்.

Question 11.
மெய் எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
(i) மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது.
(ii) க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.

Question 12.
மெய்யெழுத்துகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது? அவை யாவை?
Answer:
மெய் எழுத்துக்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
அவை 1. வல்லினம், 2. மெல்லினம், 3. இடையினம் ஆகும்.

Question 13.
வல்லினம் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
வன்மையாக ஒலிக்கும் எழுத்துகள் வல்லினம் எனப்படும்.
அவை – க், ச், ட், த், ப், ற்

Question 14.
மெல்லினம் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
மென்மையாக ஒலிக்கும் எழுத்துகள் மெல்லினம் எனப்படும்.
அவை – ங், ஞ், ண், ந், ம், ன்

Question 15.
இடையினம் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்ற எழுத்துகள் இடையினம் எனப்படும்.
அவை – ய், ர், ல், வ், ழ், ள்

Question 16.
மாத்திரை என்பது யாது?
Answer:
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ, ஒருமுறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவு ஆகும்.

குறுவினா

Question 1.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
(i) தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை,
(ii) எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்.

Question 2.
மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
Answer:
(i) வல்லினம் : க், ச், ட், த், ப், ற்.
(ii) மெல்லினம் : ங், ஞ், ண், ந், ம், ன்
(iii) இடையினம் : ய், ர், ல், வ், ழ், ள்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

Question 3.
தமிழ் எழுத்துக்களுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
Answer:
(i) குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு :1 மாத்திரை
(ii) நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு : 2 மாத்திரை
(iii) மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு : 1/2 மாத்திரை
(iv) ஆய்த எழுத்து ஒலிக்கும் கால அளவு : 2 மாத்திரை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.4 கனவு பலித்தது

Students can Download 6th Tamil Chapter 1.4 கனவு பலித்தது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.4 கனவு பலித்தது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.4 கனவு பலித்தது

Question 1.
இக்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில் வேறொரு தலைப்பிடுக.
Answer:
இக்கதைக்கு நான் விரும்பும் தலைப்பு “எண்ணம் ஈடேறியது.”

Question 2.
உங்கள் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதுக.
Answer:
மாணவர்களை தமிழில் ‘உங்கள் எதிர்கால கனவு’ குறித்து ஒரு கடிதம் எழுதச் செய்தல்.

இடம் : செஞ்சி,
நாள் : 05-06-2019.

அன்புள்ள அத்தை,
நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்கள் அங்கு நலமாக உள்ளீர்களா? உங்களின் அறிவுரையின் படியும் வழிகாட்டுதலின்படியும் நான் இன்று அறிவியல் துறையில் சிறந்து விளங்குகின்றேன்.

என் எதிர்காலக் கனவு நனவாவதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். என் உயர்வும் உழைப்பும் நாட்டை உயர்த்துவதாக இருக்கும். என் இலட்சியப் பாதை மிகவும் சிறப்பானதாக அமையும். பத்துப் பேரோடு பதினொன்றாவது நபராக நான் இருக்கமாட்டேன். என் கடமையை உயிரென மேற்கொண்டு சாதனை புரிவேன்.

என்னுடைய அறிவியல் ஆய்வு மற்ற வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுவதாக இருக்காது. நம் நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாயத்திற்கு உதவும் வகையில் இருக்கும் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள், அக்கிராமங்களின் முதுகெலும்பு இளைஞர்கள், அவர்களுள் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களைக் கூட்டி விழிப்புணர்வூட்டி வேளாண்துறை மேம்படச் செய்வேன்.

மழைநீரைச் சேமிக்கவும், புதிய விவசாய உத்திகளைப் பயன்படுத்தி குறைந்த நாட்களில் மகத்தான விளைச்சலை உருவாக்குவேன். வேளாண் பணிக்கான புதிய எந்திரங்களைக் கண்டறிவேன். அவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படையாதபடிப் பார்த்துக் கொள்வேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.4 கனவு பலித்தது

நம்நாடுவறுமை, பஞ்சம், பிணிபோக்கி செழுமை, வளமை, பொருளாதார முன்னேற்றம் .. தொழில்வளம் கொழிக்க அறிவியலின் வழி நின்று பாடுபடுவேன். மேலும் வேறென்ன 6 செய்யலாம் என்பதை நீங்கள் அவ்வப்போது கூறுங்கள்.

இப்படிக்கு
தங்கள் அன்புக்குரிய,
ச. விஷ்ணு

உறைமேல் முகவரி :
திரு. அ. கதிர் அவர்கள்,
எண். 7, பிள்ளையார் கோயில் தெரு.
பரனூர், சென்னை – 600 060.

மதிப்பீடு

Question 1.
இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
(i) இன்சுவை, தான் எடுத்த செயலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளுடைய அத்தை கூறிய அறிவுரைகளைச் சிரமேற்கொண்டு
பின்பற்றினாள்.

(ii) நூலகம் சென்று பல நூல்களைப் படித்து சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்வில் அதனை மேற்கொண்டாள்.

(iii) விடாமுயற்சியும், உழைப்பும் மனிதனை உயர்த்தும் என்பதற்கு இன்சுவை சான்றாகத் திகழ்ந்தாள்.

Question 2.
அத்தையின் கடிதக் கருத்துகளைச் சுருக்கி எழுதுக.
Answer:
‘கனவு பலித்தது’ – கடிதக் கருத்துகள் :
இன்சுவை :
ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தாள். அவ்விருப்பம் நிறைவேறியது. ஆம் அவள் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் ஆராய்ச்சியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
இன்சுவை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்ததனால் தன் இலக்கை அடைவது கடினமானது என எண்ணினாள். ஆனால் அவளுடைய அத்தையின் ஊக்குவிப்பினால் தன் இலக்கை அடைந்தாள்.

சாதனையாளர்கள் :
சாதனை புரிவதற்கு மொழி தடை இல்லை. கணிதமேதை இராமானுஜம். மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோவின் தலைவர் சிவன், இஸ்ரோ அறிவியல் அறிஞர் வளர்மதி போன்றோர் தம் தாய்மொழித் தமிழில் பயின்ற சாதனையாளர்களாவர்.

தமிழர்களின் அறிவியல் சிந்தனை :
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்ததுதான் உலகம் என்பது அறிவியல் உண்மை. இக்கருத்தினைத் தொல்காப்பியரும் தமது தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ மேலும், உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ளனர்.

இலக்கியங்கள் கூறும் சான்றுகள் :
கடல்நீர் ஆவியாகி மேகமாகிப் பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் உண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவை

கார் நாற்பது : ‘கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி……’
அறுவை மருத்துவம் :
போரில் புண்பட்ட வீரரின் மார்பை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு’. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி நற்றிணை என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.4 கனவு பலித்தது

Question 3.
கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கடிதத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதனை விளக்குக.
Answer:
கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்குப் பொருந்தும் விதம் :
(i) எண்ணங்கள் நேரானால் செயல்களும் நேராகும். வெற்றியும் நம் கைவசமாகும். இக்கதையில் வரும் இன்சுவை சிறுவயதிலேயே அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதைத் தன் விருப்பமாகக் கொண்டுள்ளாள்.

(ii) அவள் தமிழ்வழியில் படிப்பதால் தன் இலக்கை அடைய முடியுமா என அச்சமுற்றாள். இன்சுவையின் அத்தை பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மேலும் பண்டைத் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.

(iii) நூலகம் சென்று சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்வது இன்சுவையின் சிந்தனைக்கு வளம் சேர்க்கும், அறிவியல் மனப்பான்மை பெருகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

(iv) இதனைச் சிரமேற்கொண்டு இன்சுவை, ஊக்கத்துடனும் விடாமுயற்சியுடனும் படித்து சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் ஆராய்ச்சியாளர் பணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள்.

(v) இன்சுவையின் கடும் உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் ஆர்வத்துடனும் படித்தனால் தன் இலக்கை அடைந்தாள். அவளுடைய கனவும் பலித்தது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Students can Download 6th Tamil Chapter 1.3 வளர்தமிழ் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.3 வளர்தமிழ்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Question 1.
மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ் என்பது பற்றிக் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களைக் கால மாற்றத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ்மொழி பற்றிப் பேசச் செய்தல்.
மாணவன் 1 : வணக்கம். நம் தமிழ்மொழியானது காலத்திற்கேற்றார்போல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை . ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல இலக்கியங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. தமிழ் மொழியில் உள்ள இலக்கிய இலக்கண வளங்களால்தான் அழியா நிலை பெற்றுள்ளது எனலாம்.

மாணவன் 2 : அதுமட்டுமா? ஒலியாகத் திரிந்து சித்திரமாய் மாறி பல மொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப்பல எடுத்தும் காலம் பல கடந்து கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டும் ஓலைச்சுவடிகளில் வரையப்பட்டும் தற்போது காகிதங்களில் மிளிர்ந்து கொண்டும் உள்ளது நம்தாய் மொழியாம் தமிழ். இது காலச்சூழல் மாற்றங்களுக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் சிறப்பு பெற்றது.

மாணவன் 1 : பிறமொழிகள் தங்கள் தொன்மை மாறாமலும் அவை இருந்த இடத்திலிருந்து இறங்கி வராமலும் காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளாமலும் இருந்ததால் வழக்கொழிந்துவிட்டன. ஆனால் நம் தமிழானது கற்றவர் கல்லாதவர் என அனைவருடைய நாவிலும் நடனமாடுகிறது. இதனால் அழியாப் புகழுடன் விளங்குகிறது. கன்னித்தமிழாய் இருப்பதோடல்லாமல் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் விளங்குகிறது.

மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். தமிழ் மேடைத் தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்று வெவ்வேறு உருவத்தில் தன்னை வளைத்துக் கொடுக்கும் தன்மையால்தான் இன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது.

மாணவன் 1 : இன்றைய நடைமுறைக்கு ஏற்ப ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்மொழியானது தனியாக வளர்க்கப்படவில்லை. பக்தி இலக்கியக் காலத்தில் பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசப்பக்திப் பாடல்கள் என மக்கள் மனதில் வளர்ந்து செழுமை பெற்றுள்ளது.

மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இவ்வாறு வளரும் தமிழ்மொழியானது இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து செல்லும் வகையில் புதிய கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டு தமிழ்மொழி தன்னை நாள்தோறும் புதுப்பித்துக் கொண்டே வருகிறது. தமிழ் இணையம், முகநூல், புலனம், குரல் தேடல், தேடுபொறி, செயலி, தொடுதிரை முதலிய சொற்களை உருவாக்குகிறது.

மாண்வன் 1 : அதுமட்டுமா? சமூக ஊடங்களிலும் பயன்படத்தக்க திறன் கொண்ட புது மொழியாகவும் தமிழ் திகழ்ந்து வருகிறது எனலாம். தமிழ் மூத்த மொழியாக மட்டுமின்றி இனிமை, எளிமை, சீர்மை, வளமை, இளமை மிக்க வளர்மொழியாகவும் நாளும் சிறந்து விளங்கும் புதுமொழியாகவும் திகழ்கிறது. தற்போது தமிழ்மொழி அறிவியல் தமிழ், கணினித் தமிழ், மாற்றங்களுக்கு ஏற்றவாறு மேலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப சரியான சொற்கள் தமிழில் புகுந்து தொடர்ந்து இன்றும் இயங்கி வருகின்றது.

Question 2.
தமிழ் பேசத்தெரியாத குடும்பத்தினர் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளனர் அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர விரும்பும் பத்துத் தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
மாணவர்கள் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களைக் கற்றுத் தருதல்.
தமிழ்சொற்கள் :
1. வணக்கம்
2. வாருங்கள்
3. அமருங்கள்
4. சாப்பிடுங்கள்
5. எப்படி இருக்கிறீர்கள்?
6. உங்கள் பெயர் என்ன?
7. தண்ணீ ர்
8. நன்றி
9. பொறுத்துக்கொள்ளுங்கள்
10. வாழ்க வளர்க

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Question 3.
வாழ்த்துகளைத் தமிழில் கூறுவோம்.
Answer:
மாணவர்கள் தமிழில் வாழ்த்துகளை அறிந்து வந்து எழுதச் செய்தல்.
திருமண வாழ்த்து
பதினாறுப் பெற்று பெறு வாழ்வு வாழ்க!
இரட்டைக்கிளவிபோல் என்றும் சேர்ந்தே வாழ வேண்டும்.
இன்றுபோல் என்றும் இன்முகத்துடன் வாழ்க!
அன்பு, அறிவு, பண்பு, பணிவுடன் வாழ்க பல்லாண்டு!
என்றெல்லாம் அறத்துடன் வாழ வேண்டும்.
எட்டுத்திசைக்கும் புகழ் பரவ வாழ வேண்டும்.
எடுத்துக்காட்டாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறோம்.
என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்!
என் அன்பான திருமண நல்வாழ்த்துகள்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ………………..
அ) புதுமை
ஆ) பழமை
இ) பெருமை
ஈ) சீர்மை
Answer:
(விடை: ஆ) பழமை)

Question 2.
‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இடன் + புறம்
ஆ) இடது + புறம்
இ) இட + புறம்
ஈ) இடப் + புறம்
AnsL
(விடை : ஆ) இடது + புறம்)

Question 3.
‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) சீர் + இளமை
ஆ) சீர்மை + இளமை
இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை
Answer:
(விடை: ஆ) சீர்மை + இளமை) .

Question 4.
சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….
அ) சிலம்பதிகாரம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) சிலம்புதிகாரம்
ஈ) சில பதிகாரம்
Answer:
(விடை: ஆ) சிலப்பதிகாரம்)

Question 5.
கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……..
அ) கணினிதமிழ்
ஆ) கணினித்தமிழ்
இ) கணிணிதமிழ்
ஈ) கனினிதமிழ்
Answer:
(விடை: ஆ) கணினித்தமிழ்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Question 6.
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்………….
அ) கண்ண தாசன்
ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
(விடை: ஆ) பாரதியார்)

Question 7.
‘மா’ என்னும் சொல்லின் பொருள் ………..
அ) மாடம்
ஆ) வானம்
இ) விலங்கு
ஈ) அம்மா
Answer:
[விடை: இ) விலங்கு)

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது …………… [விடை : மொழி]
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் …………… [விடை : தொல்காப்பியம்]
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ………. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். [விடை: எண்களின்]

சொற்களைத் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக

1. தனிச்சிறப்பு ………………………………..
விடை : திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது அதனின் தனிச்சிறப்பு ஆகும்.
2. நாள்தோறும் …………………………….
விடை : நாம் நாள்தோறும் நல்ல பழக்கவழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது.

குறுவினா

Question 1.
தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?
Answer:
தமிழ்மொழி – மூத்தமொழி :
(i) இலக்கியங்கள் தோன்றிய பிறகே அவற்றிற்கு இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.
(ii) இந்நூல் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது. அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கியங்கள் பல இருந்திருக்க வேண்டும். இதனைக்
கொண்டு தமிழ் தொன்மைமிக்க மூத்த மொழி என்பதை அறியலாம்.

Question 2.
நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, யசோதர காப்பியம், சூளாமணி, நாககுமார காவியம், உதயகுமார காவியம், நீலகேசி.

சிறுவினா

Question 1.
அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?
Answer:
அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு :
(i) திணை – உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும்.
(ii) உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்.
(iii) ஆனால் நம் முன்னோர் தாழ்திணை என்று கூறாமல் உயர்வு அல்லாத திணை (அல் + திணை) அஃறிணை என்று பெயரிட்டனர்.

பாகற்காய் :
பாகற்காய் கசப்புச் சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் (பாகு + அல் + காய்) பாகற்காய் என வழங்கினர்.

Question 2.
தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.
Answer:
தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம்:
(i) ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை ஆகியவை ஒருங்கே அமைந்த இலக்கியங்கள் பலவற்றைக் கொண்டது தமிழ்மொழி.

(ii) பன்மொழி கற்ற கவிஞராகிய பாரதியார், தமிழ் மொழியின் இனிமையை
”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடுகிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Question 3.
தமிழ் மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.
Answer:
(i) உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஒரு சில மொழிகளே! தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.

(ii) தமிழ் இலக்கியங்கள் ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை.

(iii) தமிழ் மொழி பேசவும், படிக்கவும், எழுதவும் உகந்த மொழி. தமிழ் எழுத்துகளின் ஒலிப்பு முறை மிக எளிமையானது. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

(iv) இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைக் கொண்ட மொழியாகும். தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சிறப்பாகும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?
Answer:
தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியமொழி :
(i) தமிழ் எழுத்துகள் வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், குவித்தல் ஆகிய மூன்று எளிய இயக்கங்களால் உயிர் ஒலிகள் பன்னிரண்டையும் எளிமையாக ஒலிக்க . இயலும்.

(ii) நாக்கு, உதடு, பல், அண்ண ம் ஆகிய பேச்சுறுப்புகளின் உதவியால் காற்றை அடைத்தும் வெளியேற்றியும் மெய்யொலிகளை ஒலிக்க இயலும்.

(iii) உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள். உயிர், மெய் ஆகியவற்றின் அடிப்படை ஒலிப்பு முறைகளை அறிந்தால் 216 உயிர்மெய் எழுத்துகளையும் எளிதாகக் கற்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தால் தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்.

(iv) தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிமையானது இடப்புறமிருந்து வலப்புறமாகச் சுழித்து எழுதுவது குழந்தைகளின் இயல்பு. இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. இதன் மூலம் தமிழ்மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பதை அறியலாம்.

Question 2.
தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.
Answer:

  • தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
  • துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள், கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
  • தற்போது அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. எனவே தமிழ்மொழி வளர்மொழி என்பதை உணர்கிறேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Students can Download 6th Tamil Chapter 1.2 தமிழ்க்கும்மி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.2 தமிழ்க்கும்மி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Question 1.
தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க.
Answer:
தமிழ்க்கும்மி பாடலை இசை நயத்தோடு பாடச் செய்தல்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் — அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழவழி காட்டிருக்கும்! பெருஞ்சித்திரனார்

Question 2.
பின்வரும் கவிதை அடிகளைப் படித்து மகிழ்க.
Answer:
வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி
மண் தோன்றி மழைதோன்றி மலைகள் தோன்றி
ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி
ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!
முதல் பருவம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம்.
அ) பன்மை
ஆ) மேன்மை
இ) பொறுமை
ஈ) சிறுமை
Answer:
(விடை: ஆ) மேன்மை)

Question 2.
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் …………… சுருங்கிவிட்டது.
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
Answer:
(விடை: இ) வானம்)

Question 3.
‘செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
Answer:
(விடை: ஈ) செம்மை + தமிழ்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Question 4.
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………..
அ) பொய் + அகற்றும்
ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
Answer:
(விடை: அ) பொய் + அகற்றும்)

Question 5.
பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும்
ஈ) பாடியிருக்கும்
Answer:
(விடை: அ) பாட்டிருக்கும்)

Question 6.
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) எட்டுத்திசை
ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை
ஈ) எட்டிஇசை
Answer:
(விடை: அ) எட்டுத்திசை)

நயம் உணர்ந்து எழுதுக

Question 1.
பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து
Answer:
சீர்மோனை :
கொட்டுங்கடி – கோதையரே
ட்டுத்திசை – ட்டிடவே
ழி – ற்று
ழிப் – ழியாமல்
பொய் – பூண்டவரின்
மெய்புகட்டும் – மேதினி

Question 2.
பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
அடிஎதுகை :
கொட்டுங்கடி – எட்டு
ழி – ஆழி
பொய் – மெய்

சீர் எதுகை :
ட்டுங்கடி – எட்டிடவே
ஆழி – அழியாமலே

Question 3.
பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
இயைபு :
கொட்டுங்கடி – கொட்டுங்கடி,
கொண்டதுவாம் – நின்றதுவாம்,
பாட்டிருக்கும் – காட்டிருக்கும்.

குறுவினா

Question 1.
தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
தமிழ் மொழியின் செயல்கள் :
(i) பொய்மை அகற்றும், மனதில் உள்ள அறியாமை என்ற இருளை நீக்கும்.
(ii) அன்பு உடையவருக்கு இன்பம் தரும். பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையைக் கற்பித்து அறத்தின் உயர்வை உணர்த்தும். இவ்வுலக மக்கள்
வாழ்வதற்கு வழிகாட்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Question 2.
செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன ?
Answer:
(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழி.

Question 2.
தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக.
Answer:
(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?
Answer:
பொய்மை அகற்றி மனதில் உள்ள அறியாமையை அகற்றும் அன்புடைய பலரின் இன்பம் நிறைந்த மொழி, உயிர்போன்ற உண்மையை ஊட்டி உயர்ந்த அறத்தைத் தந்து, இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழியாக தமிழ்மொழி விளங்குகிறது.

கூடுதல் வினாக்கள்

எதிர்சொல் தருக.
1. பல × சில
2. முற்றும் × தொடரும்
3. பொய் × மெய்
4. அழிவு × ஆக்கம்

வினா

Question 1.
பெருஞ்சித்திரனார் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் : மாணிக்கம்
ஊர் : சேலம் மாவட்டம் – சமுத்திரம்
பெற்றோர் : துரைசாமி – குஞ்சம்மாள்
மனைவி : தாமரை அம்மையார்
காலம். : 10-03-1933 முதல் 11-06-1995 வரை
சிறப்புப் பட்டம் : “பாவலரேறு”
இயற்றிய நூல்கள் : கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம்
இதழ்கள் : தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

நூல் வெளி
இப்பாடல் “கனிச்சாறு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது, இந்நூல் எட்டுத் தொகுதிகளைக் கொண்டது. இது தமிழுணர்வு செறிந்த பாடல்களைக் கொண்டது.

பொருளுரை
இளம்பெண்களே! எட்டுத் திசைகளிலும் தமிழின் புகழ் பரவவிடுமாறு கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம்.
பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவைப் பெருக்கும் பல நூல்களைப் பெற்றுள்ள மொழி. பெரும் கடல் சீற்றங்களினாலும், கால மாற்றங்களினாலும் அழியாமல் நிலை பெற்ற மொழி.
தமிழ் பொய்யை அகற்றும் மொழி; தமிழ் மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்பு உடையவருக்கு இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையைப் புகட்டி அறத்தின் உயர்வை உணர்த்தும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழி தமிழ்மொழி.

விளக்கவுரை
தமிழ் இளம் பெண்கள் விரும்பிப் பாடியப் பாடல் கும்மிப்பாடல்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு என எட்டுத் திசைகளிலும் தமிழ் மற்றும் தமிழரின் புகழ் உலகம் முழுக்க பரவுமாறு கைகொட்டிக் கும்மியடித்தனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி. அறிவைப் பெருக்க இலக்கண, இலக்கியம் எனப் பல நூல்களைப் பெற்றுள்ள மொழி நம் தமிழ்மொழி. பல பெரும் கடல் சீற்றங்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் அழியாமல் நிலை பெற்ற மொழி.
பொய்மைகளை அகற்றி மனத்தின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் மொழி. அன்புள்ளம் கொண்டவர்களுக்கு இன்பம் தரும் மொழி. உயிர்போன்ற உண்மையைப் புகட்டி ஒழுக்கம் தவறாமல் அறத்தோடுநின்று உயர்வை உணர்த்தும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

சொல்லும் பொருளும்

1. ஆழிப்பெருக்கு – கடல் கோள்
2. ஊழி – நீண்டதொருகாலப்பகுதி
3. மேதினி – உலகம்
4. உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை