Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.5 இசைத்தமிழர் இருவர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Question 1.
‘சிம்பொனி’த் தமிழரும், ‘ஆஸ்கர்’ தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.
Answer:
சாதனை புரிந்த இளையராஜா

சிம்பொனித் தமிழர் :
“ஆசியக் கண்டத்தவர், ‘சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்க முடியாது” என்னும் மேலை இசை வல்லுநர் கருத்தைச் சிதைத்தவர் இளையராஜா. இவர், தமிழ்நாட்டுத் தேனி மாவட்டத்து இராசையா ஆவார். தாலாட்டில் தொடங்கித் தமிழிசைவரை அனைத்தையும் அக் சபோட்ட இசை மேதை.

இசையைச் செவியுணர் கனியாக்கியவர் :
திரையுலகில் கால் பதித்த இளையராஜா, இசையல் சிலம்பம் சுழற்றி, மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்தவர். பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி, மெல்லிசையில் புது உயர் தொட்டவர். எழுபது எண்பதுகளில் இவர் இசை, இசை வல்லாரை மட்டுமன்றி, பாமர மக்களையும் கர்த்துத் தன்வசப் படுத்தியது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் சாதனைப் படைப்புகள்:
ஐவகை நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தும் இளையராஜாவின் இசை மெட்டுகள், நெடுந்தூரப் பயணங்களுக்கு வழித்துணையாயின. இளையராஜாவின் இசையில், மண்ணின் மணத்தோடு, பண்ணின் மணமும் கலந்திருக்கும். எனவே, இசை மேதைகளால் மதிக்கப்பட்டார்.

‘எப்படிப் பெயரிவேன்?’, ‘காற்றைத் தவிர ஏதுமில்லை!’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள் (இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படப் பின்னணி இசை, மனித உணர்வுகளான மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி என்பவற்றை உணர்த்துவன.

இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜாவின் ‘இரமணமாலை’, ‘கீதகள்கள்’, மூகாம்பிகை பக்தித் தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம் என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ் சமுகி) என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
‘இசைஞானி’ எனப் போற்றப்படும் இளையராஜா, மேற்கத்திய இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். திரை இசைக்கு ஏற்ப உணர்வின் மொழியை மாற்றுவதில் வல்லவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

அரிய செயல் :
தேசத் தந்தை மகாத்மாகாந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, ‘அஜொய் சக்கரபர்த்தி’யைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் ‘முதல் சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்கினார். இன்று இளையராஜாவின் இசை ஆட்சி, உலகு முழுவதும் பரவியுள்ளமை தமிழராகிய நமக்குப் பெருமை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

பெற்ற விருதுகள் :
இளையராஜா, தமிழக அரசின் கலைமாமணி’ விருதைப் பெற்றார்; சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றார். மத்தியப்பிரதேச அரசு அளித்த ‘லதா மங்கேஷ்கர்’ விருதைப் பெற்றார்; கேரள நாட்டின் ‘நிஷாகந்தி சங்கீத விருதைப் பெற்றார்.

இந்திய அரசு, ‘பத்ம விபூஷண் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. இசையால் உலகளக்கும் இளையராஜாவின் புகழ், காலம் கடந்து நன்று பாராட்டைப் பெறும். வாழ்க இசை! வளர்க இளையராஜாவின் இசைப்பணி!

தமிழ் இசை உலகில் சாதனைபுரிந்த இரஹ்மான்

ஆஸ்கர் விருது வென்ற தமிழர் :
2009ஆம் ஆண்டு அமெரிக்க ‘கோடாக்’ அரங்கில், இசைக்கான ஆஸ்கர் பாந்துக்கு, ஐந்து பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இரஹ்மான் பெயரும் இருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

ஏனைய நால்வர், பலமுறை பரிந்துரை பெற்றவர்கள். எனினும், முதன்முறை பரிந்துரைக்கப்பட்டவர் அரங்கில் ஏறி, இரு கைகளிலும் ஆஸ்கர் விருதுக்கான சிலைகளை ஏந்தி, இறைவனை வணங்கியபின், தன் தாய்மொழியில் உரை நிகழ்த்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

இளமையில் இசையும் படிப்பும் :
மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய தம் தந்தை ஆர். கே. சேகரை எண்ணினார். நான்கு வயதில் தந்தையுடன் ஹார்மோனியம் வாசித்துத் திறமைகாட்டியதை எண்ணினார்.
தந்தையை இழந்த சூழலில் பள்ளிப் படிப்புக்கு இடைறு ஏற்படாவகையில், இரவெல்லாம் இசைக்குழுவில் பணி செய்து, காலையில் நேராகப் பள்ளி சென்று, வாயிலில் காத்திருக்கும் தாய் தந்த உணவை உண்டு, பள்ளிச் சீருடை அணிந்த காலத்தை நினைத்தார். பாழ்க்கைப் போராட்டம், பதினோராம் வகுப்போடு படிப்பை முடிக்க வைத்தது.

துள்ளல் இசைக்கு ஆட வைத்தவர்:
1992இல் ‘ரோஜா’ படத்திற்கு இசையமைத்துத் திரை இசைப் பயணத்தைத் தொடங்கினார். தம் இசையால் தமிழ்த் திரையுலகில் கதெழுச்சியை ஏற்படுத்தினார். இளைஞர்களிடையே இசை ஆளுமையை வளர்த்தார். இவரது தமிழிசையின் துள்ளல் ஓசைக்கு மயங்காதவர் இலர். இசையின் நுட்பமுணர்ந்து, செம்மையாகக் கையாண்டு இளைஞர்களைத் தம் பாடலுக்கு ஆடவும் பாடவும் வைத்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் கணினித் தொழில்நுட்பம் :
கணினித் தொழில் நுட்ப உதவியுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை முறைகளைக் கலந்து, உலகத்தரத்தில் இசை அமைத்தார். இளம் பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.

இசைப்பா லின் மெட்டை உருவாக்குமுன், தாளத்தைக் கட்டமைத்துப் பாடலுக்கான சூழலை உள்வாங்கி, அதன்பின் பாட்டை வெளிக்கொணர்வது இரஹ்மானின் தனிஆற்றல். பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இசையை, மக்களை ஈர்க்கும் வகையில் அமைத்துத் தம் வல்லமையை வெளிப்படுத்துவார்.

உலகக் கலாசாரத்தை இசையில் இணைத்தல் :
இவர் இசையமைத்த ‘வந்தே மாதரம்’, ‘ஜனகணமன’ இசைத் தொகுதிகள், நாட்டுப் பற்றைத் தூண்டுவன. தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு, மேலை நாட்டுப் படங்களுக்கும் நாடகங்களுக்கும் இசையமைத்து, இசையுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார். தம் இசையால் வெவ்வேறு கலாசார மக்களை ஒருங்கிணைக்கவும் செய்தார்.

பெற்ற விருதுகள் :
ஏ. ஆர். இரஹ்மானுக்குத் தமிழக அரசு, ‘கலைமாமணி’ விருது வழங்கியது. கேரள அரசு, ‘தங்கப்பதக்கம்’ வழங்கிப் பாராட்டியது. உத்தரப்பிரதேச அரசு, ‘ஆவாத் சம்மான்’ விருதும், மத்தியப் பிரதேச அரசு, ‘லதா மங்கேஷ்கர்’ விருதும் வழங்கின.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

மொரிஷியஸ் அரசும் மலேசியா அரசும், ‘தேசிய இசை விருது’ வழங்கிச் சிறப்பித்தன. ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகம், சர்வதேச இசை விருது’ வழங்கிப் பாராட்டியது.

இந்திய அரசு, பத்மபூஷண்’ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்கு இசையமைத்து, ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்று, உலகப் புகழ் பெற்றார்.

இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியராக வலம் வரும் இரஹ்மானின் வாழ்க்கை , சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குப் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கூடுதல் வினா

Question 2.
சிம்பொனித் தமிழர் இசைத் தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக.
Answer:
சிம்பொனித் தமிழரின் சாதனைப் படைப்புகள் :
பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி மெல்லிசையில் புது உயரம் தொட்டவர் இளையராஜா.

இந்தியாவின் பஹார், பஹாடி இன மக்கள் தொடங்கி, மதுரைக் கிராமிய இசைவரை அனைத்தையும் தம் கைவண்ணத்தில் வழிந்தோடச் செய்கம் எப்படிப் பெயரிடுவேன்?’, ‘காற்றைத் தவிர எதுவுமில்லை !’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள். இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படத்திற்குப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜவின் ‘இரமண மாலை’, ‘கீதாஞ்சலி’, ‘மூகாம்பிகை பக்தித் தொகுப்பு’, ‘மீனாட்சி ஸ்தோத்திரம்’ என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ்சமுகி’ என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். மூன்றே சுரங்களோடு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசை அமைத்தது சிப்பு. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

அரிய செயல் :
மகாத்மா காந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, அஜொய் சக்கரபர்த்தியைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் முதல் சிம்பொனி இசைக்கோவையை இளையராஜா உருவாக்கினார். தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைக்கென்று ஓர் இனிமையான இடமுண்டு. அதில், இளையராஜாவின் புகழ், மகுடமாக அனிர்கின்றது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.4 திருச்சாழல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.4 திருச்சாழல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

குறுவினாக்கள் – கூடுதல்

Question 1.
சாழல் – விளக்குக.
Answer:

  • சோழன் என்பது, மகளிர் விளையாட்டுகளுள் ஒருவகை.
  • இது ஒரு மொழி விளையாட்டு. ஒருத்தி ஒரு செய்தி குறித்து வினா எழுப்புவாள்; மற்றொருத்தி தோள் வீசி நின்று, விடை கூறுவதாகச் சாழல் விளையாட்டு அமையும்.
  • விடையைக் கூறும்போது இறைவன் செயல்களையும், அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது போல் அமைந்திருத்தலால், ‘திருச்சாழல்’ எனப்பட்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 2.
‘சாழல்’ என்பதை எவ்வெவர் பயன்படுத்தியுள்ளனர்?
Answer:

  • மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில், ‘திருச்சாழல்’ இடம் பெற்றுள்ளது.
  • திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழி’யில் இவ்வடியைப் பயன்படுத்தியுள்ளார்.

Question 3.
‘திருச்சாழல்’ எங்கு யாரால் பாடப்பட்டது?
Answer:
‘திருச்சாழல்’ என்பது, தில்லைக் கோவிலில், மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.

சிறுவினா

Question 1.
தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?
Answer:
சாழல்’ என்பது, மகளிர் விளையாட்டு. இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

எ – கா : “சுடுகாட்டைக் கோவிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?” என்பது பழிப்பான வினா!

“எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும், அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கல்பொடியாகி விடும்” என்பது, செயலை நியாயப்படுத்தும் விடை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் – குறிப்புத் தருக.
Answer:

  • சிவபெருமான் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருத எசகம்.
  • பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.
  • திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.
  • ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் நகார்’ என்னும் மூதுரை வழக்கைப் பெற்றுள்ளது. ஜி.யு.போப், திருவாசகம் முழுவதையும் இங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 3.
மாணிக்கவாசகர் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • மாணிக்கவாசகர், சைவ சமயக் குரவர் நால்வரும் ஒருவர்.
  • இவர், திருவாதவூரைச் சேர்ந்தவர். எனவே திருவாதவூரார்’ எனவும் அழைக்கப் பெற்றார்.
  • அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும் திருக்கோவையாருமாகும்.

Question 4.
அந்தமிலான் செய்த புதுமை, மேன்மை குறித்துச் சாழலால் அறியப்படும் செய்தி யாது?
Answer:
“அழிவு இல்லாதவனாகிய அவன், தன்னை அடைந்த நாயினும் இழிந்தவனையும் எல்லை இல்லா ஆனந்த வெள்றுத்திய அழுத்தும் புதுமையை எவ்வாறு செய்தானடி?” என்று, ஒருத்தி இகழ்வதுபோல் வினா எழுப்பினாள்.

இன்னொருத்தி தன் தோள்களை அசைத்து ஆடியபடி, “அடைந்தவனை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள், தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்பதை அறிந்துகொள்!’ என, அவன் சிறப்பை விடையாகக் கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

நெடுவினா (கூடுதல்)

Question 1.
இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் திருச்சாழல்மூலம் மாணிக்கவாசகரின் மொழி விளையாட்டினை விவரிக்கவும்.
Answer:
(சாழல் என்னும் விளையாட்டு :
மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு சாழல். இதில் ஒருத்தி வினா எழுப்புவாள். மற்றொருத்தி அதற்கு ஏற்ற விடை கூறுவாள். இறைவன் செயல்களையும் அச்செயல்களால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவதாக அமைந்தது திருச்சாழலாகும். ‘திருச்சாழல்’ என்னும் ஒருவகை மொழி விளையாட்டின்மூலம் இருபது பாடல்களில் இறைவனின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

ஆற்றல் நிறைந்தவன் இறைவன்!
சாழல் ஆடும் ஒருத்தி, “சுடுகாட்டைக் கோவிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்டவனுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை! இத்தகையவரா உங்கள் கடவுள்?” எனக் கேள்வி எழுப்பினாள். அதற்கு, “எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லையாயினும், அவன் சினந்தால் உலகு அனைத்தும் கல்பொடியாகிவிடும்” என்று மற்றொருத்தி விடை கூறி இறைவனின் ஆற்றலை நிலைப்படுத்தினாள்.

பிறரைக் காக்கவே நஞ்சை உண்டான் :
உடனே அவள், “பாற்கடலைக் கடைந்தபோது உண்டான நஞ்சைப் பருகினானே. அதற்குக் காரணம் என்ன?” என வினவினாள். அதற்கு மற்றொருத்தி, “அந்த நஞ்சை எங்கள் இறைவன் அன்று உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அன்றே அழிந்திருப்பார்களே!” எனக் கூறி விளக்கினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

அனைவருக்கும் அவன் அடியே மேலானது :
“முடிவு இல்லாதவனாக இருக்கும் அவனை அடைந்த என்னை, ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தது என்னே புதுமை” எனக் கேட்டாள். அதற்கு மற்றொருத்தி, “உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த அதே திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையானதேயாகும்” என்று கூறி அமைந்தாள்.

சுவைக்கத்தக்க நயம் :
இவ்வகையில் திருச்சாழல் என்னும் விளையாட்டுப் பாடல் மூலம் ஒருத்தி இறைவனைப் பழிப்பதுபோலவும், இன்னொருத்தி இறைவனின் செயல்களை நியாயப்படுத்துவதுபோலவும் மாணிக்கவாசகர் சிவபெருமானின் பெருமைகளைப் புலப்படுத்தியுள்ள நயம் சுவைக்கத் தக்கதாகும்.

இலக்கணக்குறிப்பு

சுடுகாடு, கொல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
நல்லாடை – பண்புத்தொகை
அயன்மால் – உம்மைத்தொகை
கற்பொடி – ஆறாம் வேற்றுமைத்தொகை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

உறுப்பிலக்கணம்

1. உண்டான் – உண் + ட் + ஆன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை, ஆன் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. உண்டிலன் – உண் + ட் + இல் + அன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை இல் – எதிர்மறை இடைநிலை,
அன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அடைந்த – அடை + த் (ந்) + த் அ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. கற்பொடி – கல் + பொடி
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பொடி)

2. உலகனைத்தும் – உலகு + அனைத்தும்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (உலக் + அனைத்தும்)
“உடல் பால் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உலகனைத்தும்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

3. திருவடி – திரு + அடி
ஏனை உயிர்வழி வவ்வும்” (திரு + வ் + அடி)
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (திருவடி)

4. தாயுமிலி – தாயும் + இலி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தாயுமிலி)

5. தேவரெல்லாம் – தேவர் + எல்லாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தேவரெல்லாம்)

6. தனையடைந்த – தனை + அடைந்த
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனை + ய் + அடைந்த)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனையடைந்த)

7. புலித்தோல் – புலி + தோல்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (புலித்தோல்)

8. தனியன் – தனி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனி + ய் + அன்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனியன்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

9. நல்லாடை – நன்மை + ஆடை
“ஈறுபோதல்” (நன் + ஆடை), “முன்னின்ற மெய்திரிதல்” (நல் + ஆடை)
“தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஆடை),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லாடை)

பலவுள் தெரிக

Question 1.
பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று ………………….
அ) சாழல்
ஆ) சிற்றில்
இ) சிறுதேர்
ஈ) சிறுபறை
Answer:
அ) சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ………………….
அ) பெஸ்கி
ஆ) கால்டுவெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஈ) ஜி.யு. போப்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 3.
சைவத் திருமுறைகளில் திருவாசகம், ………………….திருமுறையாக உள்ளது.
அ) பன்னிரண்டாம்
ஆ) ஆறாம்
இ) எட்டாம்
ஈ) ஏழாம்
Answer:
இ) எட்டாம்

Question 4.
திருமங்கையாழ்வார் பாடியது………………….
அ) திருச்சாழல்
ஆ) நாட்டார் வழக்கியல்
இ) தேவாரம்
ஈ) பெரிய திருமொழி
Answer:
ஈ) பெரிய திருமொழி

Question 5.
திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பதிகங்கள் ………………….
அ) 658
இ) 51
ஈ) 12
Answer:
இ) 51

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 6.
சாழல் வடிவத்தைக் கையாண்ட ஆழ்வார் ………………….
அ) பெரியாழ்வார்
ஆ) திருமங்கை ஆழ்வார்
இ) ஆண்டாள்
ஈ) திருப்பாணாழ்வார்
Answer:
ஆ) திருமங்கை ஆழ்வார்

Question 7.
சைவத் திருமுறைகள் ………………….
அ) ஏட்டு
ஆ) பதினெட்டு
இ) பத்து
ஈ) பன்னிரண்டு
Answer:
பன்னிரண்டு

Question 8.
பைத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக அமைந்தது ………………….
அ) தேவாரம்
ஆ) திருவாய்மொழி
இ) திருவாசகம்
ஈ) திருக்குறள்
Answer:
இ) திருவாசகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 9.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் ………………….
அ) திருவாசகம், தேவாரம்
ஆ) திருக்கோவையார், தேவாரம்
இ) திருவாசகம், திருக்கோவையார்
ஈ) திருவாசகம், திருப்புகழ்
Answer:
இ) திருவாசகம், திருக்கோவையார்

Question 10.
ஒருவர் வினா கேட்டு, அதற்கு மற்றொருவர் விடை கூறும் வகையில் இறைவனைப் போற்றிப் பாடப்பட்டவை ………………….
அ) திருச்சாழல், திருப்புகழ்
ஆ) பெரிய திருமொழி, திருவருட்பா
இ) திருப்புகழ், திருவருட்பா
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி
Answer:
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி

Question 11.
மாணிக்கவாசகர், ‘திருச்சாழலில்’………………….பாடல்களைப் பாடியுள்ளார்.
அ) பன்னிரண்டு
ஆ) எட்டு
இ) இருபது
ஈ) பத்து
Answer:
இ) இருபது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 12.
பொருத்துக.
1. காயில் – அ. திருமால்
2. அந்தம் – ஆ. நஞ்சு
3. அயன் – இ. வெகுண்டால்
4. ஆலாலம் – ஈ. முடிவு
– உ. பிரமன்
Answer:
1-இ, 2-ஈ, 3-உ, 4-ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
குற்றாலக் குறவஞ்சி, குற்றால மாலை, குற்றாலச் சிலேடை, குற்றாலப் பிள்ளைத் தமிழ், குற்றால யமக அந்தாதி ஆகியன, திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் ஆகும்.

Question 2.
சிங்கிக்குப் பரிசளித்த நாடுகள் எவை?
Answer:
சேலத்து நாடு, கோலத்து நாடு, பாண்டி நாடு, கண்டி நாடு ஆகியவை, சிங்கிக்குப் பரிசளித்த நாடுகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 3.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களுள் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:
சிலம்பு, தண்டை , பாடகம், காலாழி.

சிறுவினா

Question 1.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?
Answer:

  • சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு;
  • கோலத்து நாட்டாரிடம் பெற்ற முறுக்கிட்ட தண்டை;
  • பாண்டியனார் மகள் கொடுத்த பாடகம்;
  • குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்;
  • கண்டி தேசத்தில் பெற்ற காலாழி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

கூடுதல் வினாக்கள்

Question 2.
குறவஞ்சி – பெயர்க்காரணம் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • குறவஞ்சி, சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று; தமிழ்ப் பாடல் நாடக இலக்கிய வடிவாகும்.
  • பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி, அத் தலைவன்மீது காதல் கொள்வாள்.
  • அப்போது வரும் குறவர்குலப் பெண் ஒருத்தி, தலைவிக்கு நற்குறி கூறிப் பரிசில்களைப் பெறுவாள்.
  • இவ்வகையில் அமைவது, ‘குறவஞ்சி’ இலக்கியம். இதனைக் ‘குறத்திப் பாட்டு’ எனவும் கூறுவர்.

Question 3.
குற்றாலக் குறவஞ்சி – குறிப்புத் தருக.
Answer:
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி, நாடக இலக்கிய வடிவில் அமைந்ததாகும். இது இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது. உலா வந்த தலைவன்மீது காதல் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லிப் பரிசு பெறுவதுபோன்ற அமைப்புடையது.

தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குற்றாலநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குறவஞ்சி, ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ என வழங்கப்பெறுகிறது. இது ‘கவிதைக் கிரீடம்’ எனப் போற்றப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 4.
திரிகூட ராசப்பக் கவிராயர் குறித்து அறிவன யாவை?
Answer:

  • திருநெல்வேலி விசய நாராயணம் என்னும் ஊரில் வாழ்ந்தவர், திரிகூட ராசப்பக் கவிராயர்.
  • திருக்குற்றால நாதர் கோவிலில் பணிபுரிந்தார்.
  • சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்.
  • குற்றாலத் தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றி யுள்ளார். திருக்குற்றாலநாதர் கோவிலின் ‘வித்துவான்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
  • மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார் வேண்டுதலின்படி, திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பாடி அரங்கேற்றினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

நெடுவினா – கூடுதல் வினா

Question 1.
சிங்கன் சிங்கி – உரையாடலை விரித்துரைக்க.
Answer:
குறி சொல்லப் போன குறவஞ்சி :
குறி சொல்லிப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிய குறத்தி சிங்கியை, அவள் கணவன் சிங்கன் சந்தித்தான். அவள் அணிந்திருந்த அணிவகைகளைக் கண்டு வியந்தான்.

“நெடுநாள் பிரிந்திருந்தமையால், “என்னிடம் சொல்லாமல் இத்தனை நாள்களாக எங்கே சென்றாய்?” என வினவினான்.

அதற்குச் சிங்கி :
“கொத்தான மலர்களால் அலங்கரித்த கூந்தலையுடைய பெண்களுக்குக் குறி சொல்லப் போனேன்” என்று கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

சிங்கனின் வினா – சிங்கி விடை :

சிங்கன் : “உன்னைப் பார்க்க அதிசயமாகத் தோன்றுகிறது! ஆனால் அது பற்றிப் – இருக்கிறது!”.
சிங்கி : “எவர்க்கும் பயப்படாமல் தோன்றுவதை அஞ்சாமல் சொல்”,
சிங்கன் : “காலுக்கு மேல் பெரிய விரியன் பாம்புபோல் கடித்துக் கிடப்பது என்ன?”
சிங்கி : “சேலத்து நாட்டில் குறி சொல்லியதற்குப் பரிசாகப் பெற்ற சிலம்
சிங்கன் : “அதற்கு மேல் திருகு முருகாகக் கிடப்பது என்ன?”
சிங்கி : “கலிங்க நாட்டில் கொடுத்த முறுக்கிட்ட தண்டை”

சிங்கன் : “சரி, நாங்கூழ்ப் புழுபோல் நீண்டு நெளிந்து குறுதிக் கிடப்பது என்ன?”
சிங்கி : “பாண்டியனார் மகளுக்குச் சொன்ன குறிக்குப் பரிசாக அளித்த பாடகம்” என்றாள்.
சிங்கன் : “உன் காலிலே பெரிய தவளைபோல் கட்டியள்ளது என்னடி?”,
சிங்கி : “இறைவன் குற்றாலநாதர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்”.
சிங்கன் : “அப்படியானால் சுண்டு விரலிலே கண்டலப் பூச்சிபோல் சுருண்டு கிடப்பது என்ன?”
சிங்கி : “கண்டி தேசத்தில் முன்பு நான் பெற்ற காலாழி”.
இப்படி உரையாடிக் கொண்டு, தம் உறைவிடம் நோக்கிச் சென்றனர்.

இலக்கணக்குறிப்பு

மாண்ட, பெற்ற, இட்ட, கொடுத்த கட்டிய – பெயரெச்சங்கள்
சொல்ல, கடித்து, சொல்லி நீண்டு, நெளிந்து, சுருண்டு – வினையெச்சங்கள்
சுண்டுவிரல் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
திருகுமுருகு – உம்மைத்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

உறுப்பிலக்கணம்

1. பெற்ற பெறு (பெற்று) + அ
பெறு பகுதி, ‘பெற்று’ என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது, அ – பெயரெச்ச விகுதி.

2. நடந்தாய் – நட + த் (ந்) + த் + ஆய்
நட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

3. சொல்ல – சொல் + ல் + அ
சொல் – பகுதி, ல் – சந்தி, அ – வினையெச்ச விகுதி.

4. கடித்து – கடி + த் + த் + உ
கடி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

5. சொல்லி – சொல் + ல் + இ
சொல் – பகுதி, ல் – சந்தி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

6. கொடுத்த – கொடு + த் + த் + அ
கொடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

7. நெளிந்த – நெளி + த் (ந்) + த் + அ
நெளி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. பயமில்லை – பயம் + இல்லை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பயமில்லை)

2. காலாழி – கால் + ஆழி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலாழி)

3. விரியன் – விரி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (விரி + ய் + அன் )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (விரியன்)

4. குண்டலப் பூச்சி – குண்டலம் + பூச்சி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்புவும் ஆகும்” (குண்டல + பூச்சி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (குண்டப்பூச்சி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

பலவுள் தெரிக

Question 1.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.
அ) விரியன் – 1. தண்டை
ஆ) திருகுமுருகு – 2. காலாழி
இ) நாங்கூழ்ப்புழு – 3. சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி – 4. பாடகம்
i – 3 4 2 1
ii – 3 1 4 2
iii – 4 3 2 1
iv – 4 1 3 2
Answer:
ii – 3 1 4 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

கூடுதல் வினாக்கள்

Question 2.
திரிகூட ராசப்பக் கவிராழரின் கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்பட்ட நூல் ………………
அ) குற்றால மாலை
ஆ) குற்றாலக் கோவை
இ) நன்னகர் வெண்பா
ஈ) குற்றாலக் குறவஞ்சி
Answer:
ஈ) தற்றாகக் குறவஞ்சி

Question 3.
முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் ………………
அ) காவடிச்சிந்து
ஆ) திருமலை முருகன் பள்ளு
இ) குற்றாலக் குறவஞ்சி
ஈ) திருச்சாழல்
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 4.
நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்தது ………………
அ) பரணி
ஆ) கலம்பகம்
இ) குறவஞ்சி
ஈ) காவடிச்சிந்து
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி

Question 5.
‘குறத்திப்பாட்டு’ என வழங்கப் பெறுவது ………………
அ) பள்ளு
ஆ) காவடிச்சிந்து
இ) பரணி
ஈ) குறவஞ்சி
Answer:
ஈ) குறவஞ்சி

Question 6.
குற்றாலக் குறவஞ்சி பாடியவர் ………………
அ) வில்வரத்தினம்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்
ஈ) அழகிய பெரியவன்
Answer:
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 7.
குற்றாலக் குறவஞ்சி இயற்றி அரங்கேற்றக் காரணமானவர் ………………
அ) வள்ளல் சீதக்காதி
ஆ) சென்னிகுளம் அண்ணாமலையார்
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
ஈ) இராசராசசோழன்
Answer:
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்

Question 8.
சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு ………………
அ) கோலத்து நாடு
ஆ) பாண்டி நாடு
இ) சேலத்து நாடு
ஈ) கண்டிதேசம்
Answer:
இ) சேலத்து நாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 9.
‘திருகுமுருகு’ என்று சிங்கன் குறிப்பிட்டது ………………
அ) காலாழி பீலி
ஆ) பாடகம்
இ) முறுக்கிட்ட தண்டை
ஈ) அணிமணிக்கெச்சம்
Answer:
இ) முறுக்கிட்ட தண்டை

Question 10.
அரசர்களையும், வள்ளல்களையும், வீரர்களையும், தனி மனிதர்களையும் பாடியவை………………
அ) சமய நூல்கள்
ஆ) சங்க இலக்கியங்கள்
இ) சிறுகாப்பியங்கள்
ஈ) சிற்றிலக்கியங்கள்
Answer:
ஆ) சங்க இலக்கியங்கள்

Question 11.
கடவுளோடு மனிதர்களைப் பாடியவை ………………
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) சிற்றிலக்கியங்கள்
இ) சமய இலக்கியங்கள்
ஈ) காப்பியங்கள்
Answer:
ஆ) சிற்றிலக்கியங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 12.
பொருத்துக.
1. குழல் – அ. சன்மானம்
2. நாங்கூழ் – ஆ. பூமாலை
3. வரிசை – இ. கூந்தல்
4. கொத்து – ஈ. கோலம்
– உ. மண்புழு
Answer:
1-இ, 2-உ, 3-ஆ 4.ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
ஆத்மாநாம் தம் கவிதைவழி தூண்டுவது யாது?
Answer:
விலங்குகளும் தாவர வகைகளும் இயற்கைவழி இன்ப வாழ்வு வாழ்வகை விளக்கித் தம் கவிதைவழி ஆத்மாநாம், சிந்தனையைத் தூண்டியுள்ளார்.

Question 2.
அணில் எங்கே உறங்கச் சென்றது? அதன் கனவு எதைக் குறித்தது?
Answer:
மலர்க்கிளைப் படுக்கையிலோ, ஆற்று மணல் சரிவிலோ, சதுர வட்ட கோண மயக்கச் சந்து பொந்துகளிலோ அணில் உறங்கச் சென்றது. உணவு, உறக்கம் குறித்தே அது கனவு கண்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

சிறுவினா

Question 1.
உணவும் உறக்கமும் அணில் கனவாம் – உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.
Answer:

  • காலை எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வெண்டும்.
  • அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்கவேண்டும்.
  • உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்குப் பதில் சொல்லவேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘கேள்வி’ என்னும் தலைப்பில், ‘ஆத்மாநாம் உணர்த்தும் செய்திகளை எழுதுக.
Answer:

  • காலையில் எழுந்ததும் இரை தோத துள்ளி ஓடும் அணில், இரவு எங்கே உறங்குகிறது?
  • மலர்க்கிளையாகிய படுக்கையிலா ? ஆற்று மணல் சரிவிலா? சந்து பொந்துகளிலா?
  • ஒன்றல்ல, நூற்றுக்கணகம் இருக்கும் இந்த அணில்கள், நிச்சயம் தம் குழந்தைத்தனமான
  • முகங்களுடனும் சிஜியிள்ளைக் கைகளுடனும் அனுபவித்தே உண்ணும் !
  • இவை உணலையும் உறக்கத்தையும் தவிர, தங்களைப் பற்றி என்ன கனவு காணும்? என்பது, ஆத்மாநாமின் ‘கேள்வி’க் கவிதைச் செய்தியாகும்.

Question 3.
புளியமர நிழலில் கேட்டதாக ஆத்மாநாம் கூறுவன யாவை?
Answer:
சமீபத்தில் ஒரு புளியமரம் என் நண்பனாயிற்று! தற்செயலாக நான் அப்புறம் சென்றபோது, “என்னைத் தெரிகிறதா? நினைவு இருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது, என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்!

அப்போது உன் முகம் உடல் எங்கும் குளிர்காற்றை வீசினேனே! எப்படியும் என் மடிக்கு வா!” என, நிழலிலிருந்து குரல் கேட்டதாக ஆத்மாநாம் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 4.
ஆத்மாநாம் – குறிப்பெழுதுக.
Answer:

  • மதுசூதனன் என்பது, ‘ஆத்மாநாம்’ என்பாரின் இயற்பெயர்.
  • முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்.
  • 156 கவிதைகளை எழுதித் தமிழ்க்கவிதை உலகில் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
  • ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்பது இவருடைய கவிதைத் தொகுப்பு.
  • ‘ழ’ என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்.
  • கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.

இலக்கணக்குறிப்பு

உணவையும், உறக்கத்தையும் – எண்ணும்மை
சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ல் ‘ன்’ எனத் திரிந்தது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

2. குளிர்ந்த – குளிர் + த் (ந்) + த் + அ
குளிர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

புணர்ச்சி விதிகள்

Question 1.
நூற்றுக்கணக்கு – நூறு + கணக்கு
Answer:
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” (நற்று + கணக்கு) “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (நூற்றுக்கணக்கு)

Question 2.
நண்பனாயிற்று – நண்பன் + ஆயிற்று
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நண்பனரயினது)

Question 3.
நிழலிலிருந்து – நிழலில் + இருந்து
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நிலிருந்து)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

பலவுள் தெரிக

Question 1.
‘ழ’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மருதமால் வெளியிடப்பட்டது; கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படுவது…………………..
அ) சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்.
ஆ) கவிதைநூல், திருச்சாழல்
இ) நாளிதழ், நன்னகர் வெல்டர்
ஈ) கட்டுரை நூல், குற்றாலக்கோவை
Answer:
அ) சிற்றிதழ், குஜாலக்குறவஞ்சி

Question 2.
‘ஆத்மாநாம்’ இயற்பெயர் யாது?
அ) ரங்கராஜன்
ஆ) மதுசூதனன்
இ) ராசேந்திரன்
ஈ) மீனாட்சி
Answer:
ஆது சூதனன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 3.
ஆத்மாநாமின் கவிதைத் தொகுப்பு ………………….
அ) ஒன்றே ஒன்று
ஆ) இரண்டு
இ) ஆறு
ஈ) எதுவும் இல்லை
Answer:
அ) ஒன்றே ஒன்று

Question 4.
அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர்………………….
அ) வில்வரத்தினம்
ஆ) மீரா
இ) மீனாட்சி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஈ) ஆத்மாநாம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 5.
ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு ………………….
அ) கொடி விளக்கு
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) காகிதத்தில் ஒரு கோடு
ஈ) உதயத்திலிருந்து
Answer:
இ) காகிதத்தில் ஒரு கோடு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 1.
சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழக்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 2

Question 2.
எதிர்பாராத சூழலில் ஏற்படும் சாலை விபத்தையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் உள்ளடக்கிய நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுக.
Answer:

பங்குபெறுவோர் : ராமு, சோமு, பீமு.

ராமு : எங்க அப்பாவிடம் கேட்டுத் தொந்தரவு பண்ணி வாங்கின இருசக்கர வாகனம் இதுடா!
சோமு : நல்லா இருக்குடா, பல்சரா?
ராமு : பல்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சரி இன்றைக்கு மகாபலிபுரம் வரைக்கும் வண்டியில் போய் வருவோமா?
சோமு : நான் தயார். ஆனா பீமு நீ வர்றியா?
பீமு : நானும் வர்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள்.
ராமு : என்னன்னு சொல்லு.
பீமு : மூவரும் வண்டியில் போகனும்னா, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
ராமு : மூன்று இருக்குடா. போகலாம் வா.

(மூவரும் செல்கின்றனர். எதிரே லாரி ஒன்று தடம் மாறி வேகமாக வருகிறது. எவ்வளவோ இருசக்கர வாகனத்தை வளைத்தும் முடியாமல் வண்டி கீழே விழுந்துவிட்டது. மூவருக்கும் காயம். மருத்துவமனை சென்று வீடு திரும்புதல்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

பீமு : தலைக்கவசம் அணிய சொன்னேன். அதனால்தான் தலையில் அடி படல.
ராமு : பீமு, நீ நல்லா சொன்னடா, நான் முதல்ல தலைக்கவசம் வேணான்னு நெனச்சேன். மூன்று பேரு உயிரையும் நீ காப்பித்திட்ட.
சோமு : ஆமாண்டா, பீமு நீ வற்புறுத்தலன்னா, தலைக்கவசம் அணிந்திருக்க மாட்டோம். வெறும் தலையோட போயிருப்போம். அதிகமாக அடி பட்டிருக்கும்.
பீமு : நான் காப்பத்தலடா, தலைக்கவசம் நம்மள காப்பாத்துச்சு.
மூவரும் : தலைக்குக் கவசம்! நம் உயிர் காக்கும் சுவாசம்!

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும் :

  • பதினெட்டு வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சிப் பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும்.
  • தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
  • இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது.
  • கைபேசியை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருந்தல் வேண்டும்.
  • காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.

வாகன ஓட்டிகளின் அலட்சியம் :
அவசரம் என்ற ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும்.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் :

  • வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு.
  • பயிற்சியில்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு.
  • தவறான தட்பவெப்பநிலையும், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது.
  • இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை சரக்குகளை ஏற்றிச் செல்வது.
  • தொடர் வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
  • மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன.
    விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

விபத்துகளைத் தவிர்க்க :
(i) பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளைக் கொடுத்தல் வேண்டும்.

(ii) சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

(iii) வேகமாகச் செல்லும் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

(iv) பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது.

(v) பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிந்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும்.

(vi) இவ்வாறு வாகனம் ஓட்டும் போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையாக உபயோகித்து சாலை விதிகளைப் : – பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோம் என்றால், சாலை விபத்தில்லாத தமிழ்நாடு’ உருவாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எத்தனை வயதிற்கு உட்பட்டவர்கள் வண்டி ஓட்ட அனுமதியில்லை?
அ) 17
ஆ) 21
இ) 18
ஈ) 25
Answer:
இ) 18

Question 2.
சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது?
அ) 1312
ஆ) 1317
இ) 1315
ஈ) 1318
Answer:
ஆ) 1317

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 3.
சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை
அ) 413
ஆ) 613
இ) 418
ஈ) 618
Answer:
அ) 413

Question 4.
தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர ஊர்தியால் ஏற்படும் விபத்தின் விழுக்காடு
அ) 38
ஆ) 33
இ) 37
ஈ) 35
Answer:
ஈ) 35

Question 5.
சாலைப் போக்குவரத்து உதவிக்கு உரிய தொலைபேசி எண்
அ) 108
ஆ) 101
இ) 103
ஈ) 109
Answer:
இ) 103

Question 6.
உரிய வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திய இயக்கினாலோ விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை
அ) 3
ஆ) 5
இ) 2
ஈ) 1
Answer:
அ) 3

Question 7.
ஊர்திகளுக்கு உரிய காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் வசூலிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹2,000
ஆ) ₹3,000
இ) ₹450
ஈ) ₹800
Answer:
அ) ₹2,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 8.
மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் விதிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹1,000
ஆ) ₹ 10,000
இ) ₹5,000
ஈ) ₹2,000
Answer:
ஆ) ₹ 10,000

Question 9.
கூற்று 1 : சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.
கூற்று 2 : இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 10.
கூற்று 1 : சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 109-ஐ தொடர்பு கொள்ளலாம்.
கூற்று 2 : எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 11.
கூற்று : 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்குவது சட்டப்படித் தவறு.
காரணம் : இச்சட்டத்தை மீறி ஊர்தி இயக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை .

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 12.
கூற்று 1 : சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன.
கூற்று 2 : சாலையின் வகைகள் மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சாலையில் உத்தரவு குறியீடுகள் இடம் பெறாது.
ஆ) சாலைச் சந்திப்புகளில் பாதுகாப்பற்ற அணுகுமுறை தேவை.
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.
ஈ) 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கலாம்.
Answer:
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.

Question 14.
சரியானதைத் தேர்க.
அ) காப்பீடு இல்லாமல் இயக்கினால் – ₹3,000 தண்டத்தொகை
ஆ) தலைகவசம் அணியாமல் பயணித்தால் – ₹2,000 தண்டத்தொகை
இ) மதுகுடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் – ₹1,000 தண்டத்தொகை
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை
Answer:
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் 10,000 தண்டத்தொகை
ஆ) காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் 2000 தண்டத்தொகை
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
ஈ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் 15,000 தண்டத்தொகை.
Answer:
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.

Question 16.
பொருந்தாததைத் தேர்க.
அ) பாரிஸ் நகரில் 1909-ஆம் ஆண்டு ‘பன்னாட்டுச் சாலை அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆ) இதர சாலைப் பயனணிகளை நண்பராக எண்ண வேண்டும்.
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.
ஈ) மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும்.
Answer:
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.

Question 17.
பொருத்துக.
அ) மது குடித்துவிட்டு – 1. ₹1,000
ஆ) இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் – 2. ₹2,000
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் – 3. ₹5,000
ஈ) தலைகவசம் அணியாமல் – 4. ₹10,000

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 1, 2, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 18.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு
அ) இந்தியா
ஆ) சீனா
இ) பாகிஸ்தான்
ஈ) அமெரிக்கா
Answer:
அ) இந்தியா

Question 19.
ஏறக்குறைய …………. இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன.
அ) 25
ஆ) 35
இ) 45
ஈ) 55
Answer:
ஈ) 55

Question 20.
நம் நாட்டில் ……. கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன.
அ) 11
ஆ) 21
இ) 31
ஈ) 51
Answer:
ஆ) 21

Question 21.
நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய …………. இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
அ) 1
ஆ) 10
இ) 5
ஈ) 20
Answer:
இ) 5

Question 22.
நாளொன்றுக்கு நேரும் விபத்துகளில் உயிரிழப்போர்
அ) மூன்றில் ஒரு பங்கினர்
ஆ) நான்கில் ஒரு பங்கினர்
இ) ஐந்தில் ஒரு பங்கினர்
ஈ) ஆறில் ஒரு பங்கினர்
Answer:
அ) மூன்றில் ஒரு பங்கினர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 23.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலம்
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) மத்திய பிரதேசம்
Answer:
ஆ) தமிழ்நாடு

Question 24.
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகள் ……………. விழுக்காடு.
அ) 15
ஆ) 25
இ) 35
ஈ) 55
Answer:
இ) 35

Question 25.
பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது
அ) சட்டப்படி சரியாகும்
ஆ) சட்டப்படி குற்றமாகும்
இ) சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சட்டப்படி குற்றமாகும்

Question 26.
முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு
அ) பாரிஸ், 1909
ஆ) ரியோடி ஜெனிரோ, 1908
இ) ஹாமில்டன், 1907
ஈ) டர்பன், 1915
Answer:
அ) பாரிஸ், 1909

Question 27.
18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திகள் இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம்
அ) மோட்டார் வாகனச் சட்டம், 1988
ஆ) மோட்டார் வாகனச் சட்டம் 1965
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017
ஈ) மோட்டார் வாகனச் சட்டம், 2016
Answer:
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 28.
பொருத்திக் காட்டுக.
அ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் தண்டனைத் தொகை – 1.₹ 10,000
ஆ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் தண்டனைத்தொகை – 2. ₹ 5,000
இ) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் தண்டனைத் தொகை – 3. ₹ 2, 000
ஈ) ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் தண்டனைத் தொகை – 4. ₹ 1,000

அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 2,1
இ) 4, 3, 2, 1
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 29.
சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள்
i) உத்தரவுக் குறியீடுகள்
ii) எச்சரிக்கைக் குறியீடுகள்
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) தகவல் குறியீடுகள்

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) ili மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 30.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் கிடைக்கும் தண்டனைகள்
i) ரூ. 5,000
ii) மூன்று மாதச் சிறைத்தண்டனை
iii) அல்லது இரண்டும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

அ) i சரி
ஆ) ii சரி
இ) ii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.4 புறநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 1.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைத் திரட்டி வகுப்பறையில் உரையாடுக.
Answer:
i) யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

  • யாதானும் நாடாமால் ………….. கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு, எல்லா ஊரும்
    சொந்த ஊர், அவ்வாறு இருக்க ஒருவன் சாகும்வரை ஏன் கல்வி கற்கக் கூடாது என்கிறார் வள்ளுவர்.
  • சாகும் வரை கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவனின் வற்புறுத்தல்.

ii) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

  • ஒரு பிறவியில் ஒருவன் கற்கின்ற கல்வியானது எழுகின்ற ஏழு பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினைத் தரவல்லது.
  • ஏழு பிறவியிலும் தொடர்ந்து வரவல்லது கல்வி ஒன்றேயாகும்.

iii) நாய்க்கால் சிறு விரல் போல் நன்கணியராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் – செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு – நாலடியார்

  • நாலடியார் பாடலில், நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும். அதுபோல நம்மை நெருங்கி இருப்பவர்கள் ஈயின் கால் அளவுகூட உதவமாட்டார்கள்.
  • வாய்க்காலின் தூரத்திலிருந்து வரும் தண்ணீர் பயிர் விளைச்சலுக்கு உதவும். அதுபோல தூரத்திலிருந்து உதவி செய்யும் நல்லவர்களை நாம் நெருங்கிச் சென்று நட்பு கொள்ள வேண்டும் என்கிறது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்
அ) போர்க்கருவி
ஆ) தச்சுக்கருவி
இ) இசைக்கருவி
ஈ) வேளாண்கருவி
Answer:
இ) இசைக்கருவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:

  • கலைத்தொழில் செய்வோர்க்கு சோறு தட்டாது கிட்டும்.
  • கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

சிறுவினா

Question 1.
வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
Answer:
திணை விளக்கம்:
பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.

சான்று விளக்கம்:

  • வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடலில், ‘பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!’ என்ற வரி இடம் பெற்றுள்ளது.
  • அதாவது தன்னை நாடி வரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை.
  • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
  • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

இலக்கணக் குறிப்பு

வயங்குமொழி – வினைத்தொகை
அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிவும் புகழும் – எண்ணும்மை
சிறாஅர் – இசைநிறை அளபெடை.

புணர்ச்சி விதி

1. எத்திசை = எ + திசை
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி எத்திசை என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கற்றோரது ‘செம்மாப்பு’ என்பதில் ‘செம்மாப்பு’ – பொருள்
அ) பெருமை
ஆ) புகழ்
இ) இறுமாப்பு
ஈ) வெற்றி
Answer:
இ) இறுமாப்பு

Question 2.
புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்
அ) புறம், புறப்பாட்டு
ஆ) புறம், புறப்பொருள்
இ) நானூறு, புறப்பாட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புறம், புறப்பாட்டு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘வயங்குமொழி வித்தித்தாம்’ – ‘வித்தி’ என்பதன் பொருள்
அ) விதி
ஆ) விதை
இ) புத்தி
ஈ) விதைத்து
Answer:
ஈ) விதைத்து

Question 4.
தாழும் நிலை வரினும் கலங்காதவர்
அ) கல்வி கற்றோர்
ஆ) செல்வம் உடையவர்
இ) ஞானம் பெற்றவர்
ஈ) செல்வாக்கு உடையவர்
Answer:
அ) கல்வி கற்றோர்

Question 5.
ஔவையார் அகநானூற்றில் பாடியுள்ள பாடல்கள்
அ) 5
ஆ) 15
இ) 4
ஈ) 7
Answer:
இ) 4

Question 6.
கூற்று 1 : இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
கூற்று 2 : கலைத்தொழில் வல்லவர்களுக்கு எத்திசை சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 7.
கூற்று 1 : அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகப் போர்க்களம் சென்றார்.
கூற்று 2 : அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர் ஔவையார்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) எம் யாழினை எடுக்கவில்லை ; கருவிப்பையையும் எடுக்கவில்லை.
ஆ) கலைத்தொழில் வல்ல எங்களுக்கு எத்திசை சென்றாலும் ஒன்றும் கிடைப்பதில்லை.
இ) தச்சனின் பிள்ளைகள் காட்டுக்குச் சென்றால் வெட்ட மரம் கிடைக்காது.
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.
Answer:
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.

Question 9.
சரியானதைத் தேர்க.
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.
ஆ) புறநானூற்று பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று.
இ) அதியமானிடம் நட்பு பாராட்டும் குணம் இல்லாதவர் ஒளவையார்.
ஈ) ஔவையார் பாடியதாக நற்றிணையில் 8 பாடல்கள் உள்ளன.
Answer:
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.

Question 10.
பொருந்தியதைத் தேர்க.
அ) அறிவும் புகழும் – வினைத்தொகை
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை
இ) வயங்குமொழி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) அடையா – எண்ணும்மை
Answer:
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 11.
பொருந்தாததைத் தேர்க.
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.
ஆ) அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றவர்.
இ) ஒளவையார் பாடியதாக புறநானூற்றில் 33 பாடல்கள் உள்ளன.
ஈ) புறநானூறு பாடிய ஔவையார் அதியமானிடம் இருந்து நெல்லிகனியைப் பெற்றவர்.
Answer:
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.

Question 12.
புறநானூற்றில் பயின்று வரும் பா
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) குறள் வெண்பா
இ) சிந்தியல் வெண்பா
ஈ) கலிவிருத்தம்
Answer:
அ) நேரிசை ஆசிரியப்பா

Question 13.
பரிசில் துறை என்பது
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
ஆ) மன்னன் பரிசளித்துப் புலவரைப் பாராட்டுவது
இ) பரிசு பெற்ற புலவன் மகிழ்ச்சியாக இல்லறம் திரும்புவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை .
Answer:
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

Question 14.
பொருத்திக் காட்டுக.
அ) உரன் – 1. கோடரி
ஆ) கலன் – 2. கருவிகளை வைக்கும் பை
இ) கலப்பை – 3. யாழ்
ஈ) மழு – 4. வலிமை

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) பரிசிலர் – 1. காடு
ஆ) கல்வி – 2. மரங்க ள்
இ) திசை – 3. சிறுவர்
ஈ) உணவு – 4. கோடரி

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 16.
பொருத்திக் காட்டுக.
அ) வயங்குமொழி – 1. எண்ணும்மை
ஆ) அடையா – 2. இசைநிறை அளபெடை
இ) அறிவும் புகழும் – 3. வினைத்தொகை
ஈ) சிறாஅர் – 4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
‘வாயிலோயே! வாயிலோயே!’ என்னும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டதன் காரணம்
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.
ஆ) பேகன் இரவலர்க்கு இரங்காமையால் பாடியது.
இ) பாரி முல்லைத் தேர் கொடுத்தமையால் பாடியது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.

Question 18.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிக்கு பொருத்தமானச் சொல்
அ) எத்திசை
ஆ) உரனுடை
இ) வலுந்தலை
ஈ) மாய்ந்தென
Answer:
அ) எத்திசை

Question 19.
புறநானூறு ………………. நூல்க ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
அ) எட்டுத்தொகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 20.
அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்
அ) ஓதலாந்தையார்
ஆ) ஔவையார்
இ) கபிலர்
ஈ) பரணர்
Answer:
ஆ) ஔவையார்

Question 21.
ஔவை யாருக்காகத் தூது சென்றார்?
அ) அதியமானுக்காக
ஆ) பேகனுக்காக
இ) பாரிக்காக
ஈ) தொண்டைமானுக்காக
Answer:
அ) அதியமானுக்காக

Question 22.
ஔவையார் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை
அ) 22
ஆ) 36
இ) 59
ஈ) 65
Answer:
இ) 59

Question 23.
ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் நூல்களும் (பொருத்திக் காட்டுக).
அ) அகநானூறு – 1) 7
ஆ) புறநானூறு – 2) 15
இ) குறுந்தொகை – 3) 04
ஈ) நற்றிணை – 4) 33

அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 2, 1

Question 24.
அதியமானின் அரசவைப் புலவர்
அ) கபிலர்
ஆ) பாணர்
இ) ஒளவையார்
ஈ) ஒக்கூர் மாசாத்தியார்
Answer:
இ) ஒளவையார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
புறநானூற்றுப் பாடல்களால் அறியப்படுபவை யாவை?
Answer:
தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை .

Question 2.
ஔவையார் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கிய பாடல்கள் எத்தனை?
Answer:

  • அகநானூற்றில் 4 பாடல்கள்.
  • குறுந்தொகையில் 15 பாடல்கள்.
  • நற்றிணையில் 7 பாடல்கள்.
  • புறநானூற்றில் 33 பாடல்கள் என மொத்தம் 59 பாடல்கள்.

Question 3.
பாடாண் திணை என்றால் என்ன?
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண் திணை
  • பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.
  • ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 4.
கல்வி கற்றோரின் சிறப்பு என்ன?
Answer:

  • கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர்.
  • தாமும் எந்நிலை வந்தாலும் கலங்க மாட்டார்கள்.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கிக் கொள்வர்.
  • எங்கு சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

Question 5.
கற்றவர்க்கு எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்பதற்கு ஔவையார் கூறும் உவமை யாது?
Answer:

  • மரம் வெட்டும் தச்சர் பெற்ற சிறுவர்கள் தங்கள் மழுவோடு (கோடாரி) காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு மரம் கிடைக்காமல் போகுமா? என்பதே உவமை.
  • பரிசிலருக்குச் சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும், உணவிற்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகளாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • புறம் + நான்கு + நூறு
  • 400 பாடல்களைக் கொண்டது.
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறப்பொருள் பற்றியது.
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
  • சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு கருவூலமாகத் திகழ்கிறது.

Question 2.
‘அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுத்தலை உலகமும் அன்றே ; அதனால்
காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை’ – இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் அடிகளானது அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்தபோது ஔவையார் பாடியதாகும். இது புறநானூற்றின் 206 ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை. அதனால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம். யாழ் முதலிய இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக் கட்டிக் கொண்டோம்.

விளக்கம் :
அறிவு சார்ந்த கருத்துகளை எடுத்துக்கூறி அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெற சென்றார் ஔவையார். அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் தாழ்த்தியதால் கோபமடைந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறானா, இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை .

இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை உன் மன்னன் பரிசு தரவில்லை என்றால் என்ன ? கலைத்தொழிலில் வல்ல எங்களுக்கு எங்குச் சென்றாலும் உணவு கிடைக்கும். எனவே எங்கள் இசைக்கருவிகளைத் தோளில் எடுத்துவிட்டோம் இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக்கட்டி விட்டோம் என்று கூறுமிடத்தில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே’ என்ற ஔவையாரின் செம்மாப்பு கருத்தின் உண்மையை ஆராய்க.
Answer:
(i) கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்.
(ii) கற்றோரின் சொல்லைக் கேட்டு அவர்களுக்கு வாரி வாரி வழங்கினர் பண்டைய தமிழ் மன்னர்கள்.

(iii) நல்ல கருத்துகளைக் கூறி அரசின் நிர்வாகத்தையும், அரசாட்சியின் நடைமுறையையும் சீர்ப்படுத்தும் பணியைக் கற்றறிந்த புலவர்கள் மேற்கொண்டனர்.

(iv) அத்தகைய கற்றறிந்தோரை அரசர்கள் மிகவும் கௌரவித்துப் பரிசுகள் பலவும் வழங்கினர்.

(v) பரிசு தர காலதாமதம் ஆனதால் ஒளவையார் வாயில் காவலனிடம் உன் அரசன் ஒருவனை மட்டுமே நம்பி இந்த உலகம் உள்ளது என்று அவன் நினைத்துள்ளானோ?

(vi) மரம் வெட்டும் தச்சனின் மகன் கோடரியுடன் காட்டிற்குச் சென்றால் அவர்கள் வெட்ட காட்டில் ஏதாவது ஒரு மரம் கிடைக்காமல் போய்விடுமா?

(vii) ‘அதுபோலவே, கற்றவர்கள் எத்திசை செல்லினும் அத்திசையில் உணவு கிடைக்கும்.’

(viii) கற்றவர்களுக்கு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் புகழ் உண்டாகும்.

(ix) கல்விக்கு அத்தகைய சிறப்புண்டு என்பதை அறிந்ததால் ஔவையார் செம்பாப்புடன் வாயிற்காவலனிடம் எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே என்று வாயிற்காவலனிடம் கூறினார்.

Question 4.
பாடாண் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
பாடு + ஆண் + திணை – பாடாண் திணை. பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும். ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் 12 பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 5.
பரிசில் துறை சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மையை நோக்கி பரிசிலர் அரண்மனையின் வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

Question 6.
“பரிசிலிர்க்கு அடையா வாயிலோயே” என்று வாயிற்காவலளிடம் தன் வருத்தத்தைப் பதியவும் புலவரின் மனக்குமுறல்களை எடுத்தியம்புக.
Answer:
பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே!

  • விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
  • இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை, இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை.
  • ஆகவே, எம் யாழினை எடுத்துக் கொண்டோம்; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம்.
  • மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்?
  • அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
  • என்று தன் மனக்குமுறலை வாயிற்காப்பானிடம் புலவர் எடுத்துரைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

“அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே”

நெடுவினா

Question 1.
அதியமான் நெடுமான் அஞ்சியின் பரிசு நீட்டித்தல் குணம் தவறு என்பதை ஔவையாரின் புறநானூற்றுப் பரிசில் துறை பாடல் எங்ஙனம் உணர்த்துகிறது ?
Answer:
(i) வாயில் காவலனே ! வாயில் காவலனே ! புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலையானது வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளிலே உரைப்பதாகும்.

(ii) அவர்களிடம் அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது.

(iii) வள்ளல்கள் பற்றித் தாங்கள் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டும் என நினைத்து வருந்துவர்.

(iv) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி தன்னுடைய தகுதியை அறியாமல் இருக்கின்றான்.

(v) அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்று நினைக்கின்றானோ ? காலம் நீட்டிப்பது சரியான முறையல்ல.

(vi) பரிசிலர் அரண்மனை வருவதை விரும்பும் அதியாமன் நெடுமான் அஞ்சி பரிசு தர நீட்டிப்பது முறையாகாது.

(vii) இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் அழிந்து போகவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகி விடவில்லை.

(viii) பரிசு தரக் காலம் நீட்டித்தான் என்றால், எங்களை அறிந்து பரிசு தருவதற்குப் பல பேர் உள்ளனர்.

(ix) மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள் கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்ட ஒரு மரம் கிடைக்கும்.

(x) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் நீட்டித்தான் என்றால், நான் என் இசைக்கருவியைத் தோளில் சுமந்துக் கொண்டும், என் இசைக்கருவிகளைக் கருவிப்பைக்குள் சுருக்கிட்டுக் கொண் டும் புறப்படப் போகின்றேன்.

(xi) கலைத்தொழில் புரியும் எங்களைப் போன்றோரைக் காத்து வைக்க நினைக்கும் எண்ணம் சரியானது அன்று. ஏனெனில் இவ்வுலகின் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல் கிடைக்கும் என்று உணர்த்துகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.1 காலத்தை வென்ற கலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

குறுவினாக்கள்

Question 1.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நாகரம், வேசரம், திராவிடம்.

Question 2.
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாவை?
Answer:
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் எருதந் குஞ்சர மல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும், இன்னொரு கல்வெட்டில் ‘சோமயன் அமிர்தவல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும் குறிப்புகள் உள்ளன.

இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் படைரிந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 4.
கோபுரம், விமானம் – வேறுபாடு என்ன?
Answer:

  • நுழைவு வாயிலின்மேல் அமைக்கப்படுவது கோபுரம். –
  • கருவறை’ என்னும் அகநாழிகையின்மேல் அமைக்கக் வெது விமானம்.

Question 5.
பிற்காலச் சோழர்களின் தனி அடையாளம் எது? .
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் முதலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில், அடுத்து உள்ள இராசராசன் திருவாயில் ஆகிய இரண்டு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இவை பிற்காலச் சோழர்களின் சிறப்பான தனி அடையாளங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 6.
கற்றளிக் கோவில்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில், தஞ்சைப் பெரிய கோவில் ஆகியன, கற்றளிக் கோவில்களாகும்.

Question 7.
‘கற்றளி’க் கோவிலை முதலில் உருவாக்கியவன் யார்?
Answer:
கருங்கற்களை ஒன் என் மேல் ஒன்றாக அடுக்கிக் ‘கற்றளி’க் கோவிலை கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இரண்டாம் நரசிம் வம் பல்லவ மன்னன் உருவாக்கினான்.

Question 8.
பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன?
Answer:

  • பழங்காலத்தில் கோவில்களை மண்ணால்கட்டி, மேலே மரத்தால் சட்டகம் இட்டனர்.
  • அவற்றின் மேல் செப்பு, பொன் தகடுகளைக் கூரையாக வேய்ந்தனர்.
  • அடுத்து, செங்கற்களை அடுக்கிக் கோவில்களைக் கட்டினர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 9.
தடைவரைக் கோவில் என்பது யாது?
Answer:
செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலானவற்றைப் பயன்படுத்தாமல், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில், குடைவரைக் கோவிலாகும்.

சிறுவினா

Question 1.
ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?
Answer:

  • ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : * ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
  • ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கற்றளிக் கோவில்கள் :

செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
கற்றளிக் கோவில்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதைப்போல் கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் ‘கற்றளி’ என்று பெயர். இவ்வடிவத்தை ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் உருவாக்கினான்.

மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக்கோயில் ஆகியவற்றைக் கற்றளிக் கோவில்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அந்தவகையில் இராசராசசோழன் கட்டியது மிகப் பெரிய கற்றளிக் கோவிலாகும். தட்சிணமேரு’ என இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட தஞ்சைப் பெரியகோவில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களில் பெரியதும் உயரமானதுமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 3.
கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல – நிறுவுக.
Answer:

  • பெரிதாகக் கட்டப்பட்ட தமிழகக் கோவில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லை.
  • இசை, நடனம், நாடகம் முதலான அருங்கலைகள், அக்கோவில்களால் போற்றி வளர்க்கப்பட்டன.
  • மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகக் கோவில்கள் இருந்ததனால், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளாகப் பறித்தனர்.

பஞ்சம் ஏற்படும் காலத்தில், மக்களுக்கு உதவுவதற்காகத தானியக் கிடங்குகளையும் கோவில்களில் அமைத்திருந்தனர். கருவூலமாகவும், மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படைவீரர்கள் தங்கும் இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன.

Question 4.
தஞ்சைப் பெரிய கோவில் விமான அமைப்பின் ( சிலப்பினை விளக்குக.
Answer:

  • கற்றளிக் கோவில்களிலேயே மிகமிக உர மானதும் பெரியதும் தஞ்சைப் பெரிய கோவிலாகும். முழுவதும் கருங்கற்களை ஒன்றன் (மல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோவில் இது.
  • ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று, இராசராச சோழனால் இது கட்டி முடிக்கப்பட்டது.
  • இக்கோவில் கருவறை விமானம், 216 அடி உயரத்தையும், 13 தளங்களையும் கொண்டுள்ளது.
  • இதனை இராசராசன், தினைமேரு’ எனப் பெருமையுடன் அழைத்தான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 5.
கோவில் கோபுரம் அமைக்கும் மரபு குறித்து எழுதுக.
Answer:
பழமையான கோவில்களில் கோபுரங்கள் சிறியனவாக இருந்தன. வெளிக்கோபுரம் உயரமாகவும், உள்கோபுரம் உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரம் அமைக்கும் மரபை இராசராசன் தோற்றுவித்தான்.

12ஆம் நூற்றாண்டில் கோபுரங்கள் அமைப்பு, தனிச்சிறப்புப் பெற்றது. நான்கு புறங்களில், நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தொடங்கியது.

புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றில் மிக உயரமான கோபுரங்களை எழுப்பியது விஜயநகர அரசு. ‘கோபுரங்களின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டி இருப்பர்.

காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களிலுள்ள கோவில் கோபுரங்கள், நூற்றைம்பது அடி உயரத்திற்குமேல் இருக்கும்.

Question 6.
‘கலை’ என்பது குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலை. கலை, நம் மனத்தில் அழகுணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனப் பலவிதமாகப் பிரிப்பர்.
  • கலை என்பது, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் பிரதிபலிக்கிறது.
  • சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலான கலைகளில், தமிழகம் பழங்காலத்திலேயே சிறப்புற்றிருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

நெடுவினா

Question 1.
‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.
Answer:
காலத்தை வென்று நின்ற கலை :
ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டு மேன்மைகளைப் பிரதிபலிப்பது கலை. தஞ்சைப் பெரிய கோவில், தமிழ்ச் சமுதாயத்தின் கலையாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் கருங்கல் கலைச்செல்வம், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை இன்றளவும் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அமைந்துள்ள கோவில், இராசராச சோழனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில், கருங்கற் கொண்டு 216 அடி உயரம் உடையதாகவும், கருவறை விமானம், 13 தளங்களை உடையதாகவும் கட்டப்பட்டது.

கதை சொல்லும் கல்வெட்டு :
சுற்றுச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகள், எண்ணற்ற பழமையான வரலாற்றைக் கூறுகின்றன. கதை சொல்லும் அந்தக் கல் இசை, நடனம், நாடகம் எனப் பல அருங்கலைகளைப் பேணி வளர்த்த செய்தியைத் தன்னுள் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவும் தானியக் கிடங்குகளைத் தன்னிடம் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கருவூலமாக, மருத்துவமனையாக, படைவீரர் தங்கும் கூடமாகக் கோவில் பயன்பட்ட கதைகளைக் கேட்டறிய முடிகிறது.

கோவில் உருவான கதையைக் கூறுகிறது :
கோவிலை உருவாக்க மக்களும் அதிகாரிகளும் செயல்பட்டதைக் கதைபோல் எண்ணிப் பார்க்கச் செய்கிறது. இராசராசன் அமைத்த கோவிலின் முன்வாயில்கள் எண்ணற்ற வரலாற்றுக் கதைகளைக் கூறுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

ஓவியங்கள் கூறும் கதை :
கோவிலின் கருவறைத் தளங்களில் உள்ள சுற்றுக்கட்டம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில், தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியவற்றைப் பெரிய அளவில் வரைந்து வைத்துள்ளதை, இன்றளவும் காணமுடிகிறது. கோவல் கட்டுவதில் புதிய மரபு படைத்த இராசராசன் அமைத்த சிலைவடிவங்கள், வண்ண ஓவியங்கள் என யாவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கலை வளர்த்ததைக் கதைகதையாக இன்று இந்தப் பெரிய கோவில் நமக்குக் கூறுகிறது.

கல் சொல்லும் கதை :
ஆண்களே அன்றிப் பெண்களும் அதிகாரிகளாகப் பணி புரிந்த செய்தியைக் கல்வெட்டுகள் கதைபோல் பாதுகாத்து வைத்துள்ளன. தஞ்சை பெரிய கோவிலை ஒருமுறை காணும்போது, கல்லும் கதை சொல்லும்’ என்பது தெளிவாகப் புலப்படும்.

பலவுள் தெரிக

Question 1.
கூற்று 1 : தந்சைப் பெரியகோவிலிலுள்ள ஓவியங்களை எஸ். கே. கோவிந்தசாமி கண்டறிந்தார்.
கூற்று 2 : அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள், ஃப்ரெஸ்கோ வகையைச் சார்ந்தவை
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 2.
மனிதகுல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை
அ) கல்வியும் தொழிலும்
ஆ) கல்வியும் கலையும்
இ) கலையும் அறிவியலும்
ஈ) தொழிலும் அறிவியலும்
Answer:
இ) கலையும் அறிவியலும்

Question 3.
ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேம்பாட்டையும் பிரதிபலிப்பது ……………
அ) கல்வி
ஆ) அறிவியல்
இ) கோவில்
ஈ) கலை
Answer:
ஈ) கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 4.
கட்டடக் கலை என்பது, ‘உறைந்து போன இசை’ என்று கூறியவர் …………………
அ) எஸ். கே. கோவிந்தசாமி
ஆ) ஃப்ரெஸ்கோ
இ) ஷூல்ஸ்
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்
Answer:
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்

Question 5.
தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் உயரமானது………………
அ) இராசராசன் திருவாயில் கோபுரம்
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
இ) மதுராந்தகன் கோபுரம்
ஈ) இராசராசன் கோபுரம்
Answer:
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்

Question 6.
‘தட்சிண மேரு’ என அழைக்கப்படுவது –
அ) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
ஆ) திருவில்லிபுத்தூர் கோவில்
இ) தஞ்சைப் பெரிய கோவில்
ஈ) ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
Answer:
இ) தஞ்சைப் பெரிய கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 7.
செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியவன் ………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
ஈ) சோழன் செங்கணான்
Answer:
ஈ) சோழன் செங்கணான்

Question 8.
‘இராசசிம்மேச்சுரம்’ என அழைக்கப்படும் கோவில் ……………
அ) திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
ஆ) தஞ்சைப் பெரிய கோவில்
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
ஈ) தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
Answer:
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Question 9.
இராசராசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட வேன்டுமென்ற எண்ணத்தைத் தூண்டிய கோவில் ………….
அ) தில்லைக் கோவில்
ஆ) குற்றாலநாதர் கோவில்
இ) திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
Answer:
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 10.
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம்……………
அ) காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
ஆ) தஞ்சாவூர், அஜந்தா, திருவில்லிபுத்தூர்
இ) அஜந்தா, எல்லோரா. சித்தன்னவாசல்
ஈ) காஞ்சிபுரம், எல்லோரா, சித்தன்னவாசல்
Answer:
இ) அஜந்தா, எ மோரா, சித்தன்னவாசல்

Question 11.
தஞ்சைப் பெரிய கோவிலில் அமைந்த கட்டடக்கலைப் பாணி ……………
அ) நாகர கலைப்பாணி
ஆ) வேசர கலைப்பாணி
இ) திராவிட கலைப்பாணி
ஈ) மாயன் கலைப்பாணி
Answer:
இ) தராவிட கலைப்பாணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 12.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியங்களைக் கண்டறிந்தவர் ……………
அ) எஸ்.கே.கோவிந்தசாமி
ஆ) பி. கே. கோவிந்தசாமி
12) வி. கே. கோவிந்தராஜன்
ஈ) எம். எஸ். கோவிந்தராஜன்
Answer:
அ) எஸ்.கே.கோவிந்தசாமி

Question 13.
‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியவர்……………
அ) முதலாம் நரசிம்மவர்மன்
ஆ) இராசராசசோழன்
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஈ) மகேந்திரவர்மன்
Answer:
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்

Question 14.
காஞ்சி கைலாசநாதர் கோவிலை அமைத்த மன்னன்……………
அ) மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) நரசிம்மவர்மன்
ஈ) இராசராசன்
Answer:
ஆ) இராசசிம்மன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 15.
குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ……………
அ) இராசசிம்மன்
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்
இ) இரண்டாம் நரசிம்மன்
ஈ) இராசராச சோழன்
Answer:
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 16.
தஞ்சைப் பெரிய கோவிலை இராசராசன்தான் கட்டினான் என உறுதி செய்தவர் ……………
அ) இத்தாலி ஃப்ரெஸ்கோ
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
இ) எஸ். கே. கோவிந்தசாமி
ஈ) கோவலூர் உடையான்
Answer:
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்

Question 17.
தமிழக அரசின் சின்னம்……………
அ) ஆலமரம்
ஆ) கோவில் நந்தி
இ) கோவில் கோபுரம்
ஈ) திருவாயில்
Answer:
இ) கோவில் கோபுரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 18.
இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் ……………
அ) நாயக்க மன்னர்
ஆ) பல்லவர்
இ) குலோத்துங்கன்
ஈ) இராசராசன்
Answer:
ஈ) இராசராசன்

Question 19.
நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபைத் தொடங்கியவன் ……………
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
இ) இரண்டாம் இராசராசன்
ஈ) இரண்டாம் மகேந்திரவர்மன்
Answer:
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்

Question 20.
பெரிய கோவிலில் காணப்படும் பெரிய நந்தியும் மண்டபமும்,……………காலத்தில் கட்டப்பட்டவை.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பல்லவர்
ஈ) நாயக்கர்
Answer:
ஈ) நாயக்கர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 21.
புகழ்பெற்ற கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பியது……………
அ) சோழ அரசு
ஆ) பல்லவ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) விஜயநகர அரசு
Answer:
ஈ) விஜயநகர அரசு

Question 22.
‘ஒலோகமாதேவீச்சுரம்’ கோவிலைத் திருவையாற்றில் கட்டியவர் ……………
அ) எருதந் குஞ்சர மல்லி ,
ஆ) சோமயன் அமிர்தவல்லி
இ) ஒலோகமாதேவி
ஈ) குந்தவைதேவி
Answer:
இ) ஒலோகமாதேவி

Question 23.
‘ஒலோகமாதேவீச்சில் கோவில் கல்வெட்டால் அறியப்படும் பெண் அதிகாரிகள்……………
அ) குந்தவை, ருதஞ் குஞ்சர மல்லி
ஆ) சோமயின் அமிர்தவல்லி , குந்தவை
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி
ஈ) ஓவோகமாதேவி, எருதந் குஞ்சர மல்லி
Answer:
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி

Question 24.
சரியான விடையைத் தெரிவு செய்க.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகை ……………
அ) நாகரம்
ஆ) வேசரம்
இ) தட்சிணம்
ஈ) திராவிடம்

1. அ, ஆ, இ
2. அ, ஆ, ஈ
3. ஆ, இ, ஈ
4. அ, இ, ஈ
Answer:
2. அ, ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 25.
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ) தஞ்சாவூர் – 1. கடற்கரைக் கோவில்
ஆ) மகாபலிபுரம் – 2. ஒலோகமாதேவீச்சுரம்
இ) காஞ்சிபுரம் – 3. தட்சிண மேரு
ஈ) திருவையாறு – 4. கைலாசநாதர் கோவில்

அ) அ – 1, ஆ – 2, இ – 3, ஈ – 4
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
இ) அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3
ஈ) அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
Answer:
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2

Question 26.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1) ‘தட்சிண மேரு’ என்பது – அ. வாயில்களின்மேல் அமைவது
2) ‘விமானம் என்பது – ஆ. தானியக் கிடங்கு
3) ‘கோபுரம்’ என்பது – இ. தஞ்சைப் பெரிய கோவில்
4) ‘கற்றளி’ என்பது – ஈ. அகநாழிகைமேல் அமைக்கப்படுவது
உ. கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது

அ) 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ
ஆ) 1 – உ , 2 – இ, 3 – ஆ, 4 – ஈ
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ
ஈ) 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
Answer:
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 27.
பொருத்துக.
1. வளர்க்கப்பட்ட அருங்கலைகள் – அ. பஞ்சகாலத்தில் மக்களுக்கு -வ.
2. கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டவை – ஆ. போர்க்காலத்தில் படை பரர்களுக்கு.
3. தானியக் கிடங்குகள் – இ. மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள்.
4. தங்கும் இடம் – ஈ. மக்கள் ஒன்று டும் இடம்.
– உ. இசை, நடனம், நாடகம்.
Answer:
1 – உ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. கலை, ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையைப் பிரதிபலிக்கிறது.
வினா : கலை, எவற்றைப் பிரதிபலிக்கிறது?

2. தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்டம் நம்மை வியப்படையச் செய்கிறது.
வினா : எக்கோவிலின் கட்டடக் கலைநுட்பம், நம்மை வியப்படையச் செய்கிறது?

3. கருவறையை அகநாழிகை என்று அழைப்பார்கள்.
வினா : எதனை அகநாழிகை என் அழைப்பார்கள்?

4. தஞ்சைப் பெரிய கோவில், நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும்.
வினா : நம் நாட்டிலுள்ள கறளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது?

5. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காகத் தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப் பட்டிருந்தன.
வினா : கோவிலுக்குள் தானியக் கிடங்குகளும் எதற்காக அமைக்கப்பட்டிருந்தன?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

6. தஞ்சைப் பெரிய கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்.
வினா : (தஞ்சைப் பெரிய கோவில் எப்படிக் கட்டப்பட்ட வடிவு கலைப்பாணி எவை?

7. ஃப்ஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்று பொருள்.
விரை : எந்த இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை’ என்று பொருள்?

8. காலாற்றைப் படைத்த நமக்கு அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.
வினா : வரலாற்றைப் படைத்த நமக்கு, எது தெரியவில்லை?

9. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
வினா : கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் எதனைப் பார்த்திருக்கிறோம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

10. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர் என்பது,
ஆச்சரியமாக இருக்கிறது. வினா : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சரியமாக இருக்கிறது என்பது எது?

11. தான் மட்டுமே பங்களிக்காமல், மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு, அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தி இருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது.
வினா : இராசராசன், எதனை ஆவணப்படுத்திய பாங்கு போற்றத்தக்கதாகும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

குறுவினாக்கள்

Question 1.
மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
Answer:
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு பிரிவுகளை உடையது மருத்துவம் எனக் குறள் கூறுகிறது.

Question 2.
படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை?
Answer:
வீரம், மானம், முன்னோர்வழி நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல் என்னும் நான்கும் படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை ஆகும்.

Question 3.
பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிடவேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக.
Answer:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 4.
எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
“முன் உண்டது செரித்ததை அறிந்து, அடுத்து உண்டால், மருந்து என ஒன்று தேவையில்லை” என்று, திருவள்ளுவர் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

Question 5.
இகழ்ச்சியில் கெட்டாரை எப்போது நினைத்தல் வேண்டும்?
Answer:
மகிழ்ச்சியில் தங்கள் கடமையை மறக்கும் போது, மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

Question 6.
எண்ணியதை அடைதல் எப்போது எளிதாகும்?
Answer:
எண்ணியதை எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் என்பது எளிதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 7.
எதைக் கொடுத்து யாரைத் துணையாகக் கொள்ள வேண்டும்?
Answer:
முகக் குறிப்பா அகக் குறிப்பை அறிபவரை, எதையேனும் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

Question 8.
கண் உரைப்பவை எவை?
Answer:
பகைைையயும், நட்பையும் கண் உரைத்துவிடும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 9.
நகையையும் வேண்டற் பாற்று அன்று – எது?
Answer:
கை என்னும் பண்பற்றதை, விளையாட்டிற்குக் கூட ஒருவன் விரும்பக்கூடாது.

Question 10.
திருவள்ளுவர் எவர் பகையைக் கொள்ளற்க என்கிறார்?
Answer:
திருவள்ளுவர், வில்லேர் உழவரின் பகையைக் கொண்டாலும், சொல்லேர் உழவரின் பகையைக் கொள்ளல் கூடாது என்கிறார்.

Question 11.
உலகியற்றியான் எவ்வாறு கெடல் வேண்டும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
பிறரிடம் யாசித்து உயிர் வாழும் நிலை இருக்குமானால், அப்படிப்பட்ட உயிர் வாழ்க்கையைப் படைத்தவன், இவ்வுலகில் அலைந்து கெடட்டும் என்கிறார் திருவள்ளுவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 12.
ஏமாப்பில் தோணி எது? அது எப்போது பக்குவிடும்?
Answer:
பிறரை எதிர்பார்த்து யாசித்து வாழ்தல் என்பது, பாதுகாப்பு இல்லாத படகு ஆகும். ஈயாமை என்னும் பாறை மோதினால், அது உடைந்துவிடும்.

சிறுவினாக்கள்

Question 1.
உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக.
Answer:
உவமானத்தின் தன்மையை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவகம். இவ்வகை உருவகம் இடம் பெற்றுள்ள செய்யுளை, உருவக அணிச் செய்யுள் எனக் கூறுவர்.

எ – கா: இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

விளக்கம் : இக்குறளில் ‘இரவு’ (யாசித்தல்) ‘ஏமாப்புஇல்’ (பாதுகாப்பு இல்லாத) தோணியாகவும், ‘கரவு’ (ஈயாமை – கொடுக்காமை) ‘பார்’ (பாறை) ஆகவும் உருவகம் செய்யப் பெற்றுள்ளன. எனவே, உருவக அணி அமைந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் ‘பிறிதுமொழிதலணி’ பயின்று வந்துள்ளது.

உவமானத்தைக் கூறி, உவமேயத்தைப் பெறவைப்பது, பிறிதுமொழிதல் அணியாகம்

‘சிறியதாக இருக்கும்போதே முள்மரத்தைக் களைந்துவிட வேண்டும். முதிர்ந்தால் வெட்டுபவரின் கையை வருத்தும்’ என்னும் உவமானத்தைக் கூறி, “பகைவர் வலிமை பெற து இருக்கும்போதே அழித்துவிட வேண்டும். வலிமை பெற்றால் வெல்லுவது எளிதாக இருக்காது” என்னும் உவமேயத்தைப் பெறவைத்தமையால், ‘பிறிதுமொழிதலணி’ பயின்று வந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 3.
மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?
Answer:
முன்னர் உண்டது செரித்ததை அறிந்து உண்டால், மருந்து என ஒன்று உடலுக்குத் தேவை இல்லை .

நோயையும், அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து, நோயாளியின் வயதையும், நோயின் அளவையும், மருத்துவம் செய்தற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, அதன்பின் மருத்துவர் செயல்பட வேண்டும்.

மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், பருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு வகைக்குள் அடங்கும் என்று, திருவள்ளுவர் கூறியுள்மாரர்.

கூடுதல் வினாக்கள்

Question 4.
மறதி குறித்துத் திருவள்ளுவர் சறுவன யாவை?
Answer:
மகிழ்ச்சி மிகுதியால் ஒருன் தான் ஆற்ற வேண்டிய கடமையை மறக்கும்போது, மறதியால் கெட்டவர்களை அவன் நினைத்துப் பார்த்தல் வேண்டும். மறவாமல் எப்போதும் எண்ணியதையே எண்ணிக்கொண்டு இருப்பதனால், எண்ணியதை அடைவது எளிதாகும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 5.
‘குறிப்பறிதல்’ வாயிலாகத் திருவள்ளுவர் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
முகக்குறிப்பினால் அகக்குறிப்பை அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவருக்கு, எப்பொருளையாவது கொடுத்து நமக்குத் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.

தொனன்றால், கண்ணின் குறிப்புகளை உணர்ந்து அறிபவரைப் பெற்றால், அவரது கண்ணே கைமை யையும் நட்பையும் அறிந்து உணர்த்தும் எனக் குறிப்பறிதல்’ சிறப்பைத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Question 6.
பகைத்திறம் தெளிதல்’ குறித்துத் திருவள்ளுவர் கூறுவனவற்றை விளக்குக.
Answer:

  • ‘பகைமை’ என்பது பண்பற்ற செயல். அதனை ஒருவன் விளையாட்டுக்குக்கூட விரும்பக்கூடாது.
  • வில்லைக் கருவியாக உடைய வீரனின் பகைமையைத் தேடிக் கொண்டாலும், சொல்லைக் கருவியாகக் கொண்ட அறிஞரின் பகையை உருவாக்கிக் கொள்ளல் கூடாது.
  • முள்மரத்தை முதிர்ந்தபின் வெட்டுபவனின் கைகளை அது வருத்தும். அதனால் பகைமையை ஆராய்ந்து அறிந்து, வலிமை பெறும் முன்பே களைய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 7.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:

  • இதில் ‘சொற்பொருட் பின்வரு நிலையணி’ அமைந்துள்ளது.
  • முன்னர் வந்த சொல், அதே பொருளில் பின்னரும் பலமுறை வருவது, சொற்பொருட் பின்வருநிலையணியாகும். இக்குறளில் ‘நாடி’ என்னும் சொல், ‘ஆராய்ந்து ‘ என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, ‘சொற்பொருட் பின்வருநிலையணி’ பயின்றுள்ளது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

நெடுவினா

Question 1.
வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக.
Answer:
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அரிய பண்புகள் சிலவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாகப் பல செய்திகளைத் திருக்குறள் தன்னிடத்தில் பெற்றுள்ளது. இனிக் குறளின் துணையுடன் வாழ்வின் உயர்வுக்கு உதவும் செய்திகளை ஆராய்வோம்.

மறதியை விலக்கு :
‘மறதி’ என்பது மிகமிகக் கெட்ட பழக்கம். எதனையும் காலம் தாழ்த்திச் செய்வதால், ‘மறதி’ என்பது குடி கொள்ளும். மறதியைப் போக்க, நாம் எண்ணியதை மீண்டும் மீண்டும் நினைத்துச் செயல்பட வேண்டும்.

வாழத் தெரிந்துகொள் :
வாழ்க்கை என்பது பலருடன் சேர்ந்து வாழ்வதாகும். எனவேறெருடன் பழகும்போது அவர்தம் மனக் குறிப்பை அறிந்து பழகவேண்டும். மனக்கருத்தை முகக்குறிரே காட்டிவிடும். ஆகையால் எவருடனும் முகம் பார்த்துப் பழக வேண்டும். அதனால் பகைமையையும் நட்டையும், பிரித்துப் புரிந்துகொள்ள முடியும்.

பிறரிடம் பகைமை பாராட்டுவதனை விளையாட்டுக்காகக்கூட விரும்பக் கூடாது. அச்செயல், தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பயன்படாது. முகக்குறிப்பால் அகக்குறிப்பை அறியும் ஆற்றலுடையவருக்கு, ஏதேனும் ஒன்றைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்வது, நம் வாழ்க்கைக்குப் பக்கபலமாக அமையும்.

பிரச்சனை போக்கு :
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அது தோன்றும்போதே களைந்து எறிந்து தீர்வு காண்பது நற்பயன் தரும். இல்லையானால் அது பெரித்த வளர்ந்து, பெருந்துன்பத்தை ஏற்படுத்தும். இதனையே திருவள்ளுவர்,

“இளைதாக மள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லிம் காழ்த்த இடத்து”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

எனக் கூறியுள்ளார்.

நோயற்ற வாழ்வு:
உடல் நோயுற்றால், மருத்துவரையும் மருந்தையும் தேடிச் செல்லவேண்டி இருக்கும். இத்துன்ப நீக்கத்திற்கு எளியதொரு வழியைத் திருவள்ளுவர், ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். நாம் உண்ண வு செரித்ததை அறிந்து, அடுத்த வேளை உணவையும் அளவறிந்து உண்டால், மருந்து என ஒன்று தேவையில்லை என்று, திருவள்ளுவர் கூறுவதை அறிந்து கடைப்பிடிக்கலாம். அத்துடன் நோய் வந்தால், நோய்க்கான அடிப்படையை ஆராய்ந்து, அதைப் போக்குவதற்கு மருந்தளிக்கும் மருத்துவரைத் தேடிச்செல்ல வழியும் கூறுகிறார்.

கொடியது களைக :
உலகில் வறுமை என்பதே கொடியது. அந்தக் கொடுமையைப் போக்கப் பொருள் இல்லாதவர்க்கு நம்மால் இயன்ற பொருளைக் கொடுத்து வாழ்வது சிறந்த வாழ்வாக அமையும். இப்படி நம் வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாகும் கருத்துகள், திருக்குறட்பாக்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. வாழ்விற்குப் பெருமை சேர்க்கும் நெறிகளைக் கொண்டமைந்த நூல் திருக்குறள். எனவே, திருக்குறளைத் தெளிவாகக் கற்று, மனத்தில் இருத்தி, கற்றதன்வழி வாழ்வை நடத்தி உயர்வோமாக.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Question 1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 1
Answer:
அ) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
ஆ) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
இ) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக.
Answer:
கொடி தவித்ததைப் பாரி
அறிந்துகொண்டான்
மயில் தவித்ததைப் பேகன்
உணர்ந்துகொண்டான்
பிள்ளையின் பரிதவிப்பைத்
தாய் அறிவாள்
பளிங்கு முகத்தைப் படித்துக்கொள்
அப்படிப் படித்தவர்களைப்
பிடித்துக்கொள்.

அ) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
ஆ) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
இ) இளைதாக முள்மரம் கொல்க களையும் கைகொல்லும் காழ்த்த விடத்து.

Question 3.
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ………………. நினை.
அ) முகக்குறிப்பை அறிந்தவரை
ஆ) எண்ணியதை எண்ணியவரை
இ) மறதியால் கெட்டவர்களை
ஈ) கொல்லேர் உழவரை
Answer:
இ) மறதியால் கெட்டவர்களை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 4.
பொருள் கூறுக.
அ) ஏமம் – பாதுகாப்பு
ஆ) மருந்துழைச் செல்வான் – மருந்தாளுநர்.

Question 5.
இலக்கணக்குறிப்புத் தருக.
அ) கெடுக – வியங்கோள் வினைமுற்று
ஆ) குறிப்புணர்வார் – வினையாலணையும் பெயர்

கூடுதல் வினாக்கள்

Question 6.
முகக்குறிப்பால் அகக் குறயை அறிபவரை………………ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அ) பகை
ஆ) நகை
இ) துணை
ஈ) இணை
Answer:
இ) துணை

Question 7.
பகைமை என்னும் பண்பை ………………. கூட ஒருவன் விரும்பக் கூடாது.
அ) மறதியாக
ஆ) இகழ்ச்சியாக
இ) குறிப்பாக
ஈ) விளையாட்டாக
Answer:
ஈ) விளையாட்டாக

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 8.
எவருடைய பகையைக் கொள்ளக்கூடாது?
இ) வில்லேர் உழவர்
ஆ) உழவர்
இ) மருத்துவர்
ஈ) சொல்லேர் உழவர்
Answer:
ஈ) சொல்லேர் உழவர்

Question 9.
பாதுகாப்பற்ற படகு போன்றது ……………….
அ) மறதியுடன் வாழ்வது
ஆ) கண்ணோட்டமின்றி வாழ்தல்
இ) இரந்து வாழ்தல்
ஈ) பகையோடு வாழ்தல்
Answer:
இ) இரந்து வாழ்தல்

Question 10.
மகிழ்ச்சியின் மைந்துறும்போது ………………..உள்ளுக.
அ) குறிப்பில் குறிப்புணர்வாரை
ஆ) மானம் மாண்ட வழிச்செலவு
இ) பகை என்னும் பண்பில் அதனை
ஈ) இகழ்ச்சியின் கெட்டாரை
Answer:
ஈ) இகழ்ச்சியின் கெட்டாரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 11.
கொடுத்தும் கொளல் வேண்டும் – எவரை ?
அ) இகழ்ச்சியில் கெட்டாரை
ஆ) பகைமையைக் கொண்டாரை
இ) குறிப்பில் குறிப்புணர்வாரை
ஈ) கண்ணியம் இல்லாரை
Answer:
இ) குறிப்பில் குறிப்புணர்வாரை

Question 12.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் – இதில் பயின்றுள்ள அணி
அ) பிறிதுமொழிதலணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பின்வருநிலையணி
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 13.
‘இளைதாக முள்மரம்’ எனத் தொடங்கும் குறளில் ஈற்றடி ஈற்றுச்சீர், என்னும் வாப்பாட்டால் முடிந்துள்ளது.
அ) நாள்
ஆ) மலர்
இ) காசு
ஈ) பிறப்பு
Answer:
ஈ) பிறப்பு

அலகிடுதல்

Question 1.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் – அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொலை – அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.3 இடையீடு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.3 இடையீடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 1.
இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளில் இரண்டினைத் திரட்டி, வகுப்பறையில் படித்துக் காட்டி, அவை கவிஞனின் மனநிலையை எவ்விதம் வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கவும்.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 1

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
‘இடையீடு’ – எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?
Answer:
இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண் ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

சிறுவினா

Question 1.
‘மூன்றான காலம் போல் ஒன்று” எவை? ஏன்? விளக்குக.
Answer:
மூன்றான காலம் போல் ஒன்று என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்.

எண்ண ம் :
நம் மனதில் உள்ளவையே எண்ணம்.

வெளியீடு :
நம் மனதில் எண்ணியதை வெளியிடுவது வெளியீடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

கேட்டல் :

  • நாம் வெளியிட்டதை கருத்துவேறுபாடின்றி கேட்பது கேட்டல்.
  • எண்ணம் மொழியாக உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தி கேட்கிறவர்கள் சொல்லுகின்ற கருத்துகளைப் புரிதல். இவற்றில் மாற்றமடையலாம்.
  • எப்படி மூன்று காலமும் ஒரே நேரத்தில் கூற முடியாதோ அப்படியே இந்த மூன்றும் ஒன்றாக வருவதில்லை .

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கவிஞர் சி. மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தது?
அ) விளக்கு
ஆ) எழுத்து
இ) நடை
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
ஆ) எழுத்து

Question 2.
கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ்
அ) நடை
ஆ) விளக்கு
இ) யாப்பும் கவிதையும்
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
அ) நடை

Question 3.
கவிஞர் சி. மணி வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கவை
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) இதுவரை
இ) நடை
ஈ) எழுத்து
Answer:
அ) ஒளிச்சேர்க்கை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 4.
கவிஞர் சி. மணி மொழிப்பெயர்த்த சீன மெய்யியல் நூல்
அ) தாவோ ஜிஜிங்
ஆ) தாவோ லி ஜிங்
இ) தாவோதே ஜிங்
ஈ) தாவோ ஸி ஜிங்
Answer:
இ) தாவோதே ஜிங்

Question 5.
கவிஞர் சி. மணி புதுக்கவிதையில் எந்தச் சுவையை மிகுதியாகப் பயன்படுத்துவார்?
அ) உவகை
ஆ) மருட்கை
இ) இளிவரல்
ஈ) அங்கதம்
Answer:
ஈ) அங்கதம்

Question 6.
கவிஞர் சி. மணி இருத்தலின் வெறுமையை எப்படிக் சொன்னவர்?
அ) அழுகையும் அங்கலாய்ப்பும்
ஆ) நகையும் உவமையும்
இ) சிரிப்பும் கசப்பும்
ஈ) பயமும் துக்கமும்
Answer:
இ) சிரிப்பும் கசப்பும்

Question 7.
கூற்று 1 : குதிரை வரையக் குதிரை வராது ; கழுதையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
கூற்று 2 : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை ; சுவைப்போன் பசியை, சுவை முடிச்சைச் சார்ந்தது.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 8.
கூற்று 1 : சொல்ல விரும்பியதெல்லாம் எழுத்தில் வருவதில்லை.
கூற்று 2 : எலிக்குப் பொறிவைத்தால் விரலும் விழுவதுண்டு.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி

Question 9.
கூற்று : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை .
காரணம் : கனியை உண்போனின் பசியைப் பொறுத்ததே கனியின் சுவை.

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று சரி காரணம் சரி

Question 10.
சரியானதைத் தேர்க.
அ) குதிரை வரைய யானையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
ஆ) கனியின் இனிமை அதன் மறத்தால் அறியப்படும்.
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.
ஈ) நீர்த்தேடி அலையும் போது நீர் கிடைக்கும்.
Answer:
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.

Question 11.
சரியானதைத் தேர்க.
அ) கவிஞர் சி. மணி அவர்கள் புதுக்கவிதையின் அங்கதத்தை பயன்படுத்தவில்லை .
ஆ) இருத்தலின் வெறுமையைக் கவிஞர் சி மணி சிரிப்பும் கசப்புமாகச் சொன்னார்.
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.
ஈ) கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நகர்வதில்லை.
Answer:
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 12.
பொருத்தாதைத் தேர்க.
அ) கனியின் இனிமை சுவைப்போன் பசியை சுவை முடிச்சைச் சார்ந்தது.
ஆ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும், கேட்பதில் சிக்கல் உண்டு.
இ) நீர்தேடி அலையும் போது இளநீரும் கிடைக்கும்.
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.
Answer:
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.

Question 13.
பொருத்தாதைத் தேர்க.
அ) கவிஞர். சி.மணி, வே.மாலி, செல்வம் என்னும் புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்.
ஆ) கவிஞர். சி.மணி, ஆசான் கவிதை விருது பெற்றவர்.
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.
ஈ) கவிஞர். சி.மணி எழுத்து இதழில் எழுதியவர்.
Answer:
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.

Question 14.
பொருத்தி,
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 2
அ) 4, 2, 1, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3, 1
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஈ) 4, 1, 3, 2

Question 15.
சி. மணியின் (சி பழனிச்சாமி) இடையீடு என்னும் கவிதை………….. தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அ) யாப்பும் கவிதையும்
ஆ) வரும் போகும்
இ) ஒளிச்சேர்க்கை
ஈ) இதுவரை
Answer:
ஈ) இதுவரை

Question 16.
சி. மணியின் கவிதைகள் எழுத்து என்னும் இதழில் வெளிவரத் தொடங்கிய ஆண்டு
அ) 1953
ஆ) 1956
இ) 1959
ஈ) 1962
Answer:
ஈ) 1962

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 17.
சி. மணி படைத்த இலக்கணம் பற்றிய நூல்
அ) யாப்பும் கவிதையும்
ஆ) அணியும் கவிதையும்
இ) எழுத்தும் கவிதையும்
ஈ) சொல்லும் கவிதையும்
Answer:
அ) யாப்பும் கவிதையும்

Question 18.
‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை ‘ என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) வேணுகோபாலன்
ஆ) இரா.மீனாட்சி
இ) சி.மணி
ஈ) ஆத்மாநாம்
Answer:
இ) சி.மணி

Question 19.
சி. மணி, பேராசிரியராகப் பணியாற்றிய துறை
அ) தமிழ்
ஆ) ஆங்கிலம்
இ) கணிதம்
ஈ) இயற்பியல்
Answer:
ஆ) ஆங்கிலம்

Question 20.
‘தாவோ தே ஜிங்’ என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) கவிமணி
ஆ) சி. மணி
இ) நாகூர் ரூமி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஆ) சி. மணி

Question 21.
வே. மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியவர்
அ) சி. மணி
ஆ) ஆத்மாநாம்
இ) நாகூர் ரூமி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
அ) சி. மணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 22.
எம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல என்கிறார் சி. மணி?
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்
ஆ) பார்த்தல், கேட்டல், இரசித்தல்
இ) கேட்டல், பார்த்தல், கவனித்தல்
ஈ) உணர்தல், நினைத்தல், செய்தல்
Answer:
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்

Question 23.
சொல்ல விரும்பியதெல்லாம்
சொல்லில் வருவதில்லை – என்று எழுதியவர்

அ) ஆத்மாநாம்
ஆ) நாகூர் ரூமி
இ) சி. மணி
ஈ) கவிமணி
Answer:
இ) சி. மணி

குறுவினா

Question 1.
கல்வி எவற்றையெல்லாம் நமக்கு வழங்குகிறது?
Answer:

  • சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையையும் தருகிறது.
  • நமக்குத் துணை நின்று காக்கும் அறிவையும் வழங்குகிறது கல்வி.

Question 2.
கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே நிகழும் விளைவுகள் என்ன?
Answer:

  • கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நேர்வதும் உண்டு.
  • எதிர்பாராத நல்ல விளைவுகளும் கிடைப்பதுண்டு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 3.
கனியின் சுவை எதைப் பொறுத்தது?
Answer:

  • கனியின் சுவை என்பது கனியைப் பொறுத்தது அல்ல.
  • மாறாக அதைச் சுவைப்பவரின் பசியையும், சுவையின் முடிச்சையும் சார்ந்ததாகும்.

Question 4.
கவிஞர் சி. மணி பெற்றுள்ள விருதுகளைக் கூறுக.
Answer:

  • விளக்கு இலக்கிய விருது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது.
  • ஆசான் கவிதை விருது.
  • கவிஞர் சிற்பி விருது.

Question 5.
‘மனம்புழுங்கம் பலவுண்டு’ என்று கவிஞர் சி. மணி எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:
கணக்கிலடங்கா மாற்றங்களும் இலக்கைத் தவறிய ஏமாற்றங்களும் மனம் வருந்த செய்வதற்கென்று பற்பலவும் இருப்பதாகச் சி. மணி குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.
குதிரை வரையக் குதிரையே
வராது ; கழுதையும் வரலாம்
இரண்டும் கலக்கலாம் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
நாம் சொல்ல விரும்பிய எல்லாமே சொல்லில் வருவதில்லை. நாம் எண்ணும் எண்ணம் எல்லாவற்றையுமே சொல்லில் கொண்டு வர முடிவதில்லை.

விளக்கம் :
நாம் ஒன்றை நினைத்துப் பேச அது புரிந்து கொள்ளும் விதத்தில் வேறொன்றாகிவிடும் நிகழ்வுகள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கும். எவ்வாறெனில் ஓவியன் குதிரையை வரைய நினைத்து வரையும் போது அது பார்ப்பதற்குக் குதிரை போல இல்லாமல் கழுதைபோலக் காட்சியளிக்கலாம்.

பல நேரங்களில் இரண்டும் கலந்து கூட தோற்றமளிக்கலாம். அதுபோன்றுதான் : நாம் எண்ணுகின்ற எண்ணம் வெளிவரும் போது புரிந்து கொள்ளும் விதத்தில் நம் எண்ணம் அப்படியே புரிந்து கொள்ளப்படலாம் அல்லது மாற்றுக்கருத்தையும் பெறலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 2.
“எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
எலியைப் பிடிக்க பொறிவைத்தால் விரலும் மாட்டிக்கொள்ளும். தண்ணீர் தேடிய அலையும் பொழுது இளநீரும் கிடைக்கும்.

விளக்கம் :
ஒரு செயலைச் செய்கின்றபொழுது அச்செயலுக்கு மாற்றாக வேறு செயல் நடந்து நம்மைத் துன்புறுத்தலாம். நாம் சிறிய குறிக்கோளுடன் செல்லும்பொழுது எதிர்பாராத விதமாக பெரிய குறிக்கோளும் நடக்கலாம், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தலாம். ஆகவே, இடையீடுகள் எப்பொழுதும் நம்மிடம் வந்துபோகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.2 இதில் வெற்றி பெற Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.2 இதில் வெற்றி பெற

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 1.
பேச்சு வழக்கில் பயன்படுத்துகின்ற உவமைச் சொற்களைத் தொகுக்க. இவை கருத்தை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பது குறித்துக் குழுவாக உரையாடுக.
Answer:
பாலு : ஓடறவனுக்கு ஒம்பதாம் இடத்தில் சுக்கிரன்னு சொல்கிறார்களே அதன் அர்த்தம் என்ன?

வேலு : ஓடறவன்னா, ஓய்வில்லாமல் உழைக்கிறவன். ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன்னா
– சுக்கிரதிசை என்பது மக்களுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பான் என்று சொல்வார்கள்.

பாலு : நல்ல விளக்கம் இது. இன்னும் ஒரு சந்தேகம்?
வேலு : என்ன?
பாலு : காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை. இதன் பொருளென்ன?
வேலு : பனைமரத்தில் பனம்பழம் பழுத்தவுடன் தானே விழும். ஆனால் காக்கா போய் பனை மரத்தில் உட்காரவும் அதனால் பனம்பழம் விழுந்ததாம் என்பது கருத்து. இதன் விளக்கம் குழந்தை ஒன்று மழையே மழையே வா என்று பாடியதும் மழை வந்துவிட்டதாம். மழை தானேதான் பொழியும் யாரும் வரவைக்க முடியாது.

பாலு : கடைசியாக, ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. சாண் ஏற முழம் சறுக்கும் என்பதன் விளக்கம் கூறு.

வேலு : வரவு இரண்டணா என்றால் செலவு ஒரு அணாவாக இருக்க வேண்டும். அது இயல்பான வாழ்க்கை. வரவு இரண்டணா என்றால் செலவு நாலணாவாக இருந்தால், அச்செய்கைதான் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதாகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சுரதா நடத்திய கவிதை இதழ்
அ) இலக்கியம்
ஆ) காவியம்
இ) ஊர்வலம்
ஈ) விண்மீன்
Answer:
ஆ) காவியம்

Question 2.
“விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” – தொடர் தரும் முழுமையான பொருள்
அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு
ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு
இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
Answer:
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

குறுவினா

Question 1.
வசனம், கவிதை வேறுபாடு தருக.
Answer:
வசனம் : எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.

கவிதை :
எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிக்கென்று எல்லைவைத்து எழுதப்படுவதே கவிதையாகும்.

நெடுவினா

Question 1.
கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
Answer:
கவிதை :

  • சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து எழுத வேண்டும்.
  • அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.
  • சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.

கவிதைக்குரிய உறுப்புகள் :

  • எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.
  • அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல் வேண்டும்.
  • சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.
  • இளமைத் அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும்.
  • அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

சிறந்த கவிதை :
(i) கவிதைக்குரிய உறுப்புகளை வைத்துக் கவிதை எழுதும் போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும்.

(ii) தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும்.

(iii) செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகளில் எப்போதும் புகழ் தங்கும். . இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது
அ) கவிதை
ஆ) கொச்சைச் சொற்கள்
இ) பாட்டு
ஈ) உரைநடை
Answer:
ஈ) உரைநடை

Question 2.
சிறந்த படைப்புகள் உருவாக பெரும் துணையாக இருப்பது
அ) கவிதை
ஆ) கட்டுரை
இ) கல்வி
ஈ) பள்ளிக்கூடம்
Answer:
இ) கல்வி

Question 3.
அடியின் கீழே அடியிருந்தால் வருவது
அ) சீர்
ஆ) அசை
இ) தளை
ஈ) தொடை
Answer:
ஈ) தொடை

Question 4.
இரண்டுசீரின் இடைவெளியில் வருவது
அ) தளை
ஆ) அசை
இ) எதுகை
ஈ) மோனை
Answer:
அ) தளை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 5.
எதுகை, மோனை இல்லாமல் அடியளவு அறிந்திடாமல் வருவது
அ) உரைநடை
ஆ) செய்யுள்
இ) தளை
ஈ) தொடை
Answer:
அ) உரைநடை

Question 6.
வெள்ளைப்பாட்டின் இறுதிச்சீர் தருவது
அ) நாள்
ஆ) காசு
இ) மோனை
ஈ) இயைபு
Answer:
ஆ) காசு

Question 7.
முன்னோர் போல் கற்று வந்தால் உள்ளத்தில் விளைவது
அ) அருள், அறம்
ஆ) அறம், மறம்
இ) அறம், பொருள்
ஈ) பொருள், இன்பம்
Answer:
இ) அறம், பொருள்

Question 8.
சுரதாவின் இயற்பெயர்
அ) கோபால்
ஆ) இராசகோபால்
இ) துரைகோபாலன்
ஈ) இராசகோபாலன்
Answer:
ஈ) இராசகோபாலன்

Question 9.
கூற்று 1 : பழுத்திருந்தால் சாறு வரும் ; வயலில் தண்ணீர் பாய்ந்திருந்தால் ஏர் வரும்.
கூற்று 2 : அடியின் கீழ் அடியிருந்தால் தொடை வரும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 10.
கூற்று : எதுகை மோனை சேர்க்காமல், அடியளவை அறிந்திடாமல் வார்க்கின்ற வடிவந்தான் வசனம்.
காரணம் : எளிய மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவதே உரைநடை.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் சரி
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் சரி

Question 11.
கூற்று 1 : எழுத்தெண்ணி முன்னோர் போல் கற்றுவந்தால் அறம் பொருள் உள்ளத்தில் விளையும்.
கூற்று 2 : தேமாவும், புளிமாவும் மரத்தில் காய்க்கும் ; சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Question 12.
சரியானதைத் தேர்க.
அ) பூக்கும் வரை பூ என்போம்.
ஆ) ஆக்கிய பின் அரிசி என்றும்.
இ) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே செய்யுள்.
ஈ) கவிநடையும் உரைநடையும் வேறுவேறு அல்ல.
Answer:
இ) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே செய்யுள்.

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சிறந்த கேள்வி எழ்புவதால் படிப்பு வரும்
ஆ) நுணுக்கத்தோடே முன்னோர் போலக் கற்க வேண்டாம்.
இ) மொழியை அறியாமல் எழுதுவோரே புகழ் அடைவார்.
ஈ) வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு.
Answer:
ஈ) வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 14.
பொருந்தாததைத் தேர்க.
அ) கண்வேறு ; கல்விக் கண் வேறு.
ஆ) புகழ் வேறு ; செல்வாக்கு வேறு.
இ) வெண்மதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல.
ஈ) மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும் மணல் வேறு.
Answer:
இ) வெண்மதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல.

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) பழம் – சாறு
ஆ) தண்ணீ ர் – எர்
இ) அடி – இரண்டுசீர் இடை
ஈ) பா தொடை நன்கு அமை
Answer:
இ) அடி – இரண்டுசீர் இடை

Question 16.
பொருத்துக.
அ) தொடைகள் – 1. அசைகள்
ஆ) தளைகள் – 2. தொடைகள்
இ) எழுத்துகள் – 3. பாக்கள்
ஈ) அடியின் கீழ் அடிகள் – 4. சீரின் இடைவெளியில்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 3, 1, 4, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
பொருத்துக.
அ) எரு – 1. ஆராய்ச்சி
ஆ) கேள்வி – 2. குளிர்
இ) அத்தி இரவு – 3. பயிர்
ஈ) கற்றால் விளையும் – 4. அறம் பொருள்

அ) 3, 2, 1, 4
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
ஆ) 3, 1, 2, 4

Question 18.
இதில் வெற்றிபெற என்னும் சுரதாவின் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை
அ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) கலிவிருத்தம்
ஈ) நேரிசை ஆசிரியபா
Answer:
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 19.
இதில் வெற்றிபெற என்னும் சுரதாவின் கவிதை இடம்பெற்றுள்ள காதைத் தொகுப்பு
அ) தேன்மழை
ஆ) துறைமுகம்
இ) அமுதும் தேனும்
ஈ) மங்கையர்க்கரசி
Answer:
ஆ) துறைமுகம்

Question 20.
உவமைக்கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர்
அ) சுரதா
ஆ) வெ.ராமலிங்கனார்
இ) அப்துல் ரகுமான்
ஈ) மு.மேத்தா
Answer:
அ) சுரதா

Question 21.
சுரதா நடத்திய இதழ்
அ) காவியம்
ஆ) தென்றல்
இ) குயில்
ஈ) எழுத்து
Answer:
அ) காவியம்

Question 22.
சுரதா என்பதன் விரிவாக்கம்
அ) சுப்புரத்தினதாசன்
ஆ) சுதாரகுநாததாசன்
இ) சுப்பிரமணியரத்தினதாசன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சுப்புரத்தினதாசன்

Question 23.
இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
அ) சுரதா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 24.
சுரதா பெற்றுள்ள விருதுகள்
i) தமிழக அரசின் கலைமாமணி விருது
ii) பாரதிதாசன் விருது
iii) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 25.
தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்;
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்; – என்று எழுதியவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
அ) சுரதா

Question 26.
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு – என்னும் அடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்
அ) எதுகை
ஆ) இயைபு
இ) அந்தாதி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) எதுகை

Question 27.
சுரதாவின் ‘காவியம்’ என்னும் இதழ்
அ) முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது.
ஆ) முழுக்க முழுக்க சிறுகதைகளைக் கொண்டது.
இ) குறும்புதினங்களின் தொகுப்பினைக் கொண்டது.
ஈ) இவற்றில் எதுவும் கொண்டதில்லை.
Answer:
அ) முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 28.
தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) வாணிதாசன்
ஈ) மு.மேத்தா
Answer:
அ) சுரதா

குறுவினா

Question 1.
புண் வேறு ; வீரர்களின் விழுப்புண் வேறு ;
புகழ் வேறு ; செல்வாக்கு வேறு ; காணும் – இப்பாடல் வரிகளில் அமைந்துள்ள நயங்களை எடுத்து
எழுது.
Answer:
சீர் மோனை – புண்வேறு – புகழ்வேறு
இயைபு – ‘வேறு’ என்ற சொல் ஓசை நயத்துடன் சீர்களில் இடம் பெற்றுள்ளது.

Question 2.
‘இதில் வெற்றி பெற’ என்ற சுரதாவின் கவிதையில் இடம் பெற்றுள்ள உவமை எடுத்து எழுதுக.
Answer:
‘செடியில் பூத்த பூமீது வண்டுவந்து தங்கும்’.

Question 3.
புண் வேறு, விழுப்புண் வேறு – விளக்குக.
Answer:
புண்:
உடலில் காயத்தால் ஏற்படுவது. இது இயல்பாகவோ, விபத்து மூலமாகவோ நோய் மூலமாகவோ ஏற்படலாம்.

விழுப்புண் :
விழுப்புண்ணும் உடலில் ஏற்படுவதுதான். ஆனால் இது வீரத்தினை வெளிப்படுத்தும் எதிரியுடன் போரிட்டு பெற்ற புண்ணைக் குறிக்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 4.
கவிஞர் சுரதா நடத்திய இதழ்கள் யாவை?
Answer:
இலக்கியம், விண்மீன், ஊர்வலம், காவியம்.

Question 5.
கவிஞர் சுரதா அவர்கள் பெற்றுள்ள விருதுகள் யாவை?
Answer:

  • தமிழக அரசின் கலைமாமணி விருது.
  • பாரதிதாசன் விருது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.

Question 6.
உரைநடை, கவிதை – வேறுபடுத்துக.
Answer:

  • உரைநடை என்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது.
  • கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அடைவது.

Question 7.
அறம்பொருள்கள் உள்ளத்தில் விளைய என்ன செய்ய வேண்டும் என்கிறார் சுரதா?
Answer:
நுட்பமான எழுத்தை எண்ணி முன்னோர்கள் போன்று கற்று வரும் பட்சத்தில், அறம் பொருள்கள் உள்ளத்தில் விளையும் என்று சுரதா கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 8.
விண்வெளியில் இயங்குவனாகச் சுரதா கூறுவன யாவை?
Answer:

  • வெண்மதி (வெண்ணிலவு)
  • செங்கதிரோன் (சூரியன்)
  • முகில் (மேகம்)

சிறுவினா

Question 1.
‘வேறு’ என்ற சொல்லைப் பயன்படுத்தி கவிஞர் கவிதை புனைத்துள்ள கவித்திறமையை விளக்குக.
Answer:

  • வானம் வேறு, ஆனால் வானத்தில் இயக்கும் நிலவும், கதிரவனும் மேகமும் வேறு.
  • மண் பலவகைப்படும். செம்மண், வண்டல்மண், கரிசல் மண் எனலாம். ஆனால், மண்ணில் சாய்ந்திருக்கும் மணல் என்பது வேறு.
  • பனித்துளியும் நீர்தான் உள்ளது. மழைத்துளியிலும் நீர்தான் ஆனால் இரண்டும் வெவ்வேறு.
  • புண் என்றால் உடம்பில் ஏற்படும் காயம் தான், ஆனால் சாதாரணமாக வருவது புண் ; போரில் பெறுவது விழுப்புண்.
  • புகழ் என்பதும் செல்வாக்கு என்பதும் எல்லோருக்கும் நம்மைத் தெரியும் என்றே கூறப்பட்டாலும், புகழ் என்பது கல்வி, நற்செயலால் வருவது, ஆனால் செல்வாக்கு என்பது பொருளால் வருவது.
  • காணும் கண் ; கல்விக்கண் வேறு – பார்க்கும் கண்ணால் உலகைப் பார்த்துக் கொள்ளலாம். கல்விக் கண்ணால் அறியாமை அகன்று நாம் அகஒளியைப் பெறுகின்றோம்.
  • இவ்வாறுதான் கவிதையும் உரைநடையும் எழுதப்படுவனவாக இருந்தாலும் இரண்டின் நடையழகும் வேறு வேறாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 2.
பூக்கும் வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லைச்
சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல் அடியளவை அறிந்திடாமல் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது கவிஞர் சுரதாவின் துறைமுகம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள “இதில் வெற்றிபெற” என்னும் பகுதியில் உள்ளது.

பொருள் :
பூக்கும் வரை அரும்பு பூத்தப்பின் பூ
தனியாக இருந்தால் சொல் முறையாகச் சேர்த்தால் கவிதை

விளக்கம் :
மரத்தில் இருக்கும் பூவானது விரியாமல் இருக்கும் வரை மொட்டு என்றுதான் அழைக்கப்படும். அதுவே பூத்துவிட்டால் அதனைப் பூ என்று அழைப்போம் அதுபோன்றுதான் பரவலாக இருக்கும் எல்லா வார்த்தைகளையும் சரியான முறையில் எதுகை, மோனையுடன், அடியளவையும் அறுதியிட்டுச் சேர்த்தால் அதனைக் கவிதை என்போம். அதுவே எதுகை, மோனை இல்லாமல், அடிவரையரையின்றி வந்தால் அதனை உரைநடை என்போம் என்று கவிஞர் கூற வரும் இடத்தில் இப்பாடல் அடியினை எழுதியுள்ளார்.

Question 3.
‘வரும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிஞர் சுரதா எழுதியுள்ளவை யாவை?
Answer:

  1. பழம் பழுத்திருந்தால் அதிலிருந்து சாறு வரும்; வயலில் தண்ணீர் பாய்ந்தால் உழவுத் தொழிலை மேற்கொள்ள ஏர்கள் வரும்.
  2. எழுத்துகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து அசைகள் வரும்; செய்யுளில் இரண்டு சீர்களின் இடையிலே சரியான தளைகள் வரும்.
  3. தளைகள் முறையாக அமைந்து அடிகள் வரும்; அடிகளை வரிசையாக அடிக்கியிருந்தால் தொடைகள் வரும்.
  4. தொடைகள் சரியாக அமைந்து இருந்தால் முறையான கவிதை உருவாகும்.

Question 4.
‘தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும் ;
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம்
இப்பாடல் வரியானது கவிஞர் சுரதாவின் துறைமுகம்’ என்று கவிதைத் தொகுப்பில் இடம் : பெற்றுள்ள “இதில் வெற்றிபெற” என்னும் பகுதியில் உள்ளது.

பொருள் :
மாங்காயும், புளியங்காயையும் மரத்தில் காய்ப்பதாகும். அதைப் போன்று செய்யுளிள் முறையாக சீர்கள் அமைக்கப்பட்டால் அச்சீர்களிலும் இவை தோன்றும்.

விளக்கம் :
மாமரத்திலும், புளியமரத்திலும் முறையான பருவநிலைகள் நிலவி எவ்விதமான நோய்த்தாக்குதலும் இல்லாமல் இருந்தால் மிகுதியாக மாங்காயும், புளியங்காயும் மரத்திலே காய்த்துக் கிடக்கும். அதுபோலவே, எழுத்துகளைக் கொண்டு சீர்கள் அமைக்கும் போது முறையான எழுத்துகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறப்பான சீர்கள் அமைந்தால் அந்தச் சீர்களுக்கு இடையே இந்தத் தேமா, புளிமா என்ற அசை வாய்ப்பாடு நன்றாகக் காய்க்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 5.
கவிஞர் சுரதா ஒரு சிறந்த சொல்லேர் உழவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ‘இதில் வெற்றிபெற’ என்ற கவிதையில் ‘விளையும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிபுனைந்த திறமையை விளக்குக.
Answer:

  • எருவைப் பயன்படுத்தினால் பயிர் நன்றாக விளையும் ;
  • சிறந்த கேள்விகள் எழுப்புவதால் ஆராய்ச்சிகள் புதிது புதிதாக விளையும் ;
  • மாலை நேரத்திலும், இரவிலும் நன்றாக குளிர்விளையும் ;
  • மிகவும் நுட்பமாக எழுத்துகளை எண்ணி, சிறந்த பொருள்களைப் புரிந்து நம் முன்னோர்கள் கற்று வந்தது போல கற்று வந்தோம் என்றால், நம் உள்ளத்தில் அறம், பொருள் விளையும் ;
  • மதிக்கத்தகுந்த அறிவினால் ஒருவனுக்கு புகழ் விளையும்.

Question 6.
கவிஞர் சுரதா பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : இராசகோபாலன்.

சிறப்புப் பெயர் : பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். பிறகு சுரதா என்று மாற்றிக் கொண்டார்.

இலக்கியப் பணி : இலக்கியம், விண்மீன் , ஊர்வலம், போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியவர்.
தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.

விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.

Question 7.
கவிஞர் சுரதா சிறந்த உவமைக் கவிஞர் என்பதற்கு உன் பாடப்பகுதியைக் கொண்டு விளக்குக.
Answer:
(i) மரத்திலே ஆங்காங்கே பூக்கள் மொட்டுகளாக இருக்கும். அவைப் பூத்துவிட்டால் பூ என்று பெயர் பெற்று எல்லோரும் அறியும் விதத்திலும் பயன்தரும் விதத்திலும் அமையும்.

(ii) அதுபோல தமிழ்மொழியின் பல்லாயிரக்கணக்கான சொற்கள் நிரம்பி இருந்தாலும் அவை முறையாக வைக்கப்பட்டால், எதுகை, மோனையோடு அடிவரையரையுடன் இருந்தால் கவிதையாகும். அவ்வாறு இல்லையெனில் உரைநடையாகும் என்னும் வரிகளில் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

(iii) செடியில் பூத்த பூ மீது வண்டு வந்து தங்கும் என்பதனையும் உவமைப்படுத்தியுள்ளார். பூ பூத்து மணம் பரப்பி தன்னுடைய இருப்பை உலகிற்குச் சொல்லி வண்டுகளை அழைத்து தன் இருப்பை அடுத்தவர்களுக்கு அறியச் செய்கிறது.

(iv) புலவர்கள் சிறப்பாகப் பாடல்களை எழுதினார்கள் என்றால் அவர்களின் பாடல் மேல் புகழ்வந்து தங்கும் என்று கூறியுள்ளார்.