Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
ஆத்மாநாம் தம் கவிதைவழி தூண்டுவது யாது?
Answer:
விலங்குகளும் தாவர வகைகளும் இயற்கைவழி இன்ப வாழ்வு வாழ்வகை விளக்கித் தம் கவிதைவழி ஆத்மாநாம், சிந்தனையைத் தூண்டியுள்ளார்.

Question 2.
அணில் எங்கே உறங்கச் சென்றது? அதன் கனவு எதைக் குறித்தது?
Answer:
மலர்க்கிளைப் படுக்கையிலோ, ஆற்று மணல் சரிவிலோ, சதுர வட்ட கோண மயக்கச் சந்து பொந்துகளிலோ அணில் உறங்கச் சென்றது. உணவு, உறக்கம் குறித்தே அது கனவு கண்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

சிறுவினா

Question 1.
உணவும் உறக்கமும் அணில் கனவாம் – உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.
Answer:

  • காலை எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வெண்டும்.
  • அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்கவேண்டும்.
  • உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்குப் பதில் சொல்லவேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘கேள்வி’ என்னும் தலைப்பில், ‘ஆத்மாநாம் உணர்த்தும் செய்திகளை எழுதுக.
Answer:

  • காலையில் எழுந்ததும் இரை தோத துள்ளி ஓடும் அணில், இரவு எங்கே உறங்குகிறது?
  • மலர்க்கிளையாகிய படுக்கையிலா ? ஆற்று மணல் சரிவிலா? சந்து பொந்துகளிலா?
  • ஒன்றல்ல, நூற்றுக்கணகம் இருக்கும் இந்த அணில்கள், நிச்சயம் தம் குழந்தைத்தனமான
  • முகங்களுடனும் சிஜியிள்ளைக் கைகளுடனும் அனுபவித்தே உண்ணும் !
  • இவை உணலையும் உறக்கத்தையும் தவிர, தங்களைப் பற்றி என்ன கனவு காணும்? என்பது, ஆத்மாநாமின் ‘கேள்வி’க் கவிதைச் செய்தியாகும்.

Question 3.
புளியமர நிழலில் கேட்டதாக ஆத்மாநாம் கூறுவன யாவை?
Answer:
சமீபத்தில் ஒரு புளியமரம் என் நண்பனாயிற்று! தற்செயலாக நான் அப்புறம் சென்றபோது, “என்னைத் தெரிகிறதா? நினைவு இருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது, என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்!

அப்போது உன் முகம் உடல் எங்கும் குளிர்காற்றை வீசினேனே! எப்படியும் என் மடிக்கு வா!” என, நிழலிலிருந்து குரல் கேட்டதாக ஆத்மாநாம் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 4.
ஆத்மாநாம் – குறிப்பெழுதுக.
Answer:

  • மதுசூதனன் என்பது, ‘ஆத்மாநாம்’ என்பாரின் இயற்பெயர்.
  • முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்.
  • 156 கவிதைகளை எழுதித் தமிழ்க்கவிதை உலகில் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
  • ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்பது இவருடைய கவிதைத் தொகுப்பு.
  • ‘ழ’ என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்.
  • கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.

இலக்கணக்குறிப்பு

உணவையும், உறக்கத்தையும் – எண்ணும்மை
சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ல் ‘ன்’ எனத் திரிந்தது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

2. குளிர்ந்த – குளிர் + த் (ந்) + த் + அ
குளிர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

புணர்ச்சி விதிகள்

Question 1.
நூற்றுக்கணக்கு – நூறு + கணக்கு
Answer:
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” (நற்று + கணக்கு) “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (நூற்றுக்கணக்கு)

Question 2.
நண்பனாயிற்று – நண்பன் + ஆயிற்று
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நண்பனரயினது)

Question 3.
நிழலிலிருந்து – நிழலில் + இருந்து
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நிலிருந்து)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

பலவுள் தெரிக

Question 1.
‘ழ’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மருதமால் வெளியிடப்பட்டது; கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படுவது…………………..
அ) சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்.
ஆ) கவிதைநூல், திருச்சாழல்
இ) நாளிதழ், நன்னகர் வெல்டர்
ஈ) கட்டுரை நூல், குற்றாலக்கோவை
Answer:
அ) சிற்றிதழ், குஜாலக்குறவஞ்சி

Question 2.
‘ஆத்மாநாம்’ இயற்பெயர் யாது?
அ) ரங்கராஜன்
ஆ) மதுசூதனன்
இ) ராசேந்திரன்
ஈ) மீனாட்சி
Answer:
ஆது சூதனன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 3.
ஆத்மாநாமின் கவிதைத் தொகுப்பு ………………….
அ) ஒன்றே ஒன்று
ஆ) இரண்டு
இ) ஆறு
ஈ) எதுவும் இல்லை
Answer:
அ) ஒன்றே ஒன்று

Question 4.
அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர்………………….
அ) வில்வரத்தினம்
ஆ) மீரா
இ) மீனாட்சி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஈ) ஆத்மாநாம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 5.
ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு ………………….
அ) கொடி விளக்கு
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) காகிதத்தில் ஒரு கோடு
ஈ) உதயத்திலிருந்து
Answer:
இ) காகிதத்தில் ஒரு கோடு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 1.
சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழக்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 2

Question 2.
எதிர்பாராத சூழலில் ஏற்படும் சாலை விபத்தையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் உள்ளடக்கிய நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுக.
Answer:

பங்குபெறுவோர் : ராமு, சோமு, பீமு.

ராமு : எங்க அப்பாவிடம் கேட்டுத் தொந்தரவு பண்ணி வாங்கின இருசக்கர வாகனம் இதுடா!
சோமு : நல்லா இருக்குடா, பல்சரா?
ராமு : பல்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சரி இன்றைக்கு மகாபலிபுரம் வரைக்கும் வண்டியில் போய் வருவோமா?
சோமு : நான் தயார். ஆனா பீமு நீ வர்றியா?
பீமு : நானும் வர்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள்.
ராமு : என்னன்னு சொல்லு.
பீமு : மூவரும் வண்டியில் போகனும்னா, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
ராமு : மூன்று இருக்குடா. போகலாம் வா.

(மூவரும் செல்கின்றனர். எதிரே லாரி ஒன்று தடம் மாறி வேகமாக வருகிறது. எவ்வளவோ இருசக்கர வாகனத்தை வளைத்தும் முடியாமல் வண்டி கீழே விழுந்துவிட்டது. மூவருக்கும் காயம். மருத்துவமனை சென்று வீடு திரும்புதல்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

பீமு : தலைக்கவசம் அணிய சொன்னேன். அதனால்தான் தலையில் அடி படல.
ராமு : பீமு, நீ நல்லா சொன்னடா, நான் முதல்ல தலைக்கவசம் வேணான்னு நெனச்சேன். மூன்று பேரு உயிரையும் நீ காப்பித்திட்ட.
சோமு : ஆமாண்டா, பீமு நீ வற்புறுத்தலன்னா, தலைக்கவசம் அணிந்திருக்க மாட்டோம். வெறும் தலையோட போயிருப்போம். அதிகமாக அடி பட்டிருக்கும்.
பீமு : நான் காப்பத்தலடா, தலைக்கவசம் நம்மள காப்பாத்துச்சு.
மூவரும் : தலைக்குக் கவசம்! நம் உயிர் காக்கும் சுவாசம்!

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும் :

  • பதினெட்டு வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சிப் பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும்.
  • தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
  • இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது.
  • கைபேசியை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருந்தல் வேண்டும்.
  • காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.

வாகன ஓட்டிகளின் அலட்சியம் :
அவசரம் என்ற ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும்.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் :

  • வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு.
  • பயிற்சியில்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு.
  • தவறான தட்பவெப்பநிலையும், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது.
  • இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை சரக்குகளை ஏற்றிச் செல்வது.
  • தொடர் வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
  • மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன.
    விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

விபத்துகளைத் தவிர்க்க :
(i) பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளைக் கொடுத்தல் வேண்டும்.

(ii) சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

(iii) வேகமாகச் செல்லும் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

(iv) பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது.

(v) பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிந்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும்.

(vi) இவ்வாறு வாகனம் ஓட்டும் போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையாக உபயோகித்து சாலை விதிகளைப் : – பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோம் என்றால், சாலை விபத்தில்லாத தமிழ்நாடு’ உருவாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எத்தனை வயதிற்கு உட்பட்டவர்கள் வண்டி ஓட்ட அனுமதியில்லை?
அ) 17
ஆ) 21
இ) 18
ஈ) 25
Answer:
இ) 18

Question 2.
சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது?
அ) 1312
ஆ) 1317
இ) 1315
ஈ) 1318
Answer:
ஆ) 1317

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 3.
சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை
அ) 413
ஆ) 613
இ) 418
ஈ) 618
Answer:
அ) 413

Question 4.
தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர ஊர்தியால் ஏற்படும் விபத்தின் விழுக்காடு
அ) 38
ஆ) 33
இ) 37
ஈ) 35
Answer:
ஈ) 35

Question 5.
சாலைப் போக்குவரத்து உதவிக்கு உரிய தொலைபேசி எண்
அ) 108
ஆ) 101
இ) 103
ஈ) 109
Answer:
இ) 103

Question 6.
உரிய வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திய இயக்கினாலோ விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை
அ) 3
ஆ) 5
இ) 2
ஈ) 1
Answer:
அ) 3

Question 7.
ஊர்திகளுக்கு உரிய காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் வசூலிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹2,000
ஆ) ₹3,000
இ) ₹450
ஈ) ₹800
Answer:
அ) ₹2,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 8.
மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் விதிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹1,000
ஆ) ₹ 10,000
இ) ₹5,000
ஈ) ₹2,000
Answer:
ஆ) ₹ 10,000

Question 9.
கூற்று 1 : சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.
கூற்று 2 : இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 10.
கூற்று 1 : சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 109-ஐ தொடர்பு கொள்ளலாம்.
கூற்று 2 : எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 11.
கூற்று : 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்குவது சட்டப்படித் தவறு.
காரணம் : இச்சட்டத்தை மீறி ஊர்தி இயக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை .

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 12.
கூற்று 1 : சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன.
கூற்று 2 : சாலையின் வகைகள் மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சாலையில் உத்தரவு குறியீடுகள் இடம் பெறாது.
ஆ) சாலைச் சந்திப்புகளில் பாதுகாப்பற்ற அணுகுமுறை தேவை.
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.
ஈ) 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கலாம்.
Answer:
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.

Question 14.
சரியானதைத் தேர்க.
அ) காப்பீடு இல்லாமல் இயக்கினால் – ₹3,000 தண்டத்தொகை
ஆ) தலைகவசம் அணியாமல் பயணித்தால் – ₹2,000 தண்டத்தொகை
இ) மதுகுடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் – ₹1,000 தண்டத்தொகை
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை
Answer:
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் 10,000 தண்டத்தொகை
ஆ) காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் 2000 தண்டத்தொகை
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
ஈ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் 15,000 தண்டத்தொகை.
Answer:
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.

Question 16.
பொருந்தாததைத் தேர்க.
அ) பாரிஸ் நகரில் 1909-ஆம் ஆண்டு ‘பன்னாட்டுச் சாலை அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆ) இதர சாலைப் பயனணிகளை நண்பராக எண்ண வேண்டும்.
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.
ஈ) மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும்.
Answer:
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.

Question 17.
பொருத்துக.
அ) மது குடித்துவிட்டு – 1. ₹1,000
ஆ) இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் – 2. ₹2,000
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் – 3. ₹5,000
ஈ) தலைகவசம் அணியாமல் – 4. ₹10,000

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 1, 2, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 18.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு
அ) இந்தியா
ஆ) சீனா
இ) பாகிஸ்தான்
ஈ) அமெரிக்கா
Answer:
அ) இந்தியா

Question 19.
ஏறக்குறைய …………. இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன.
அ) 25
ஆ) 35
இ) 45
ஈ) 55
Answer:
ஈ) 55

Question 20.
நம் நாட்டில் ……. கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன.
அ) 11
ஆ) 21
இ) 31
ஈ) 51
Answer:
ஆ) 21

Question 21.
நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய …………. இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
அ) 1
ஆ) 10
இ) 5
ஈ) 20
Answer:
இ) 5

Question 22.
நாளொன்றுக்கு நேரும் விபத்துகளில் உயிரிழப்போர்
அ) மூன்றில் ஒரு பங்கினர்
ஆ) நான்கில் ஒரு பங்கினர்
இ) ஐந்தில் ஒரு பங்கினர்
ஈ) ஆறில் ஒரு பங்கினர்
Answer:
அ) மூன்றில் ஒரு பங்கினர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 23.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலம்
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) மத்திய பிரதேசம்
Answer:
ஆ) தமிழ்நாடு

Question 24.
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகள் ……………. விழுக்காடு.
அ) 15
ஆ) 25
இ) 35
ஈ) 55
Answer:
இ) 35

Question 25.
பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது
அ) சட்டப்படி சரியாகும்
ஆ) சட்டப்படி குற்றமாகும்
இ) சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சட்டப்படி குற்றமாகும்

Question 26.
முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு
அ) பாரிஸ், 1909
ஆ) ரியோடி ஜெனிரோ, 1908
இ) ஹாமில்டன், 1907
ஈ) டர்பன், 1915
Answer:
அ) பாரிஸ், 1909

Question 27.
18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திகள் இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம்
அ) மோட்டார் வாகனச் சட்டம், 1988
ஆ) மோட்டார் வாகனச் சட்டம் 1965
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017
ஈ) மோட்டார் வாகனச் சட்டம், 2016
Answer:
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 28.
பொருத்திக் காட்டுக.
அ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் தண்டனைத் தொகை – 1.₹ 10,000
ஆ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் தண்டனைத்தொகை – 2. ₹ 5,000
இ) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் தண்டனைத் தொகை – 3. ₹ 2, 000
ஈ) ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் தண்டனைத் தொகை – 4. ₹ 1,000

அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 2,1
இ) 4, 3, 2, 1
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 29.
சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள்
i) உத்தரவுக் குறியீடுகள்
ii) எச்சரிக்கைக் குறியீடுகள்
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) தகவல் குறியீடுகள்

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) ili மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 30.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் கிடைக்கும் தண்டனைகள்
i) ரூ. 5,000
ii) மூன்று மாதச் சிறைத்தண்டனை
iii) அல்லது இரண்டும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

அ) i சரி
ஆ) ii சரி
இ) ii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.4 புறநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 1.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைத் திரட்டி வகுப்பறையில் உரையாடுக.
Answer:
i) யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

  • யாதானும் நாடாமால் ………….. கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு, எல்லா ஊரும்
    சொந்த ஊர், அவ்வாறு இருக்க ஒருவன் சாகும்வரை ஏன் கல்வி கற்கக் கூடாது என்கிறார் வள்ளுவர்.
  • சாகும் வரை கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவனின் வற்புறுத்தல்.

ii) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

  • ஒரு பிறவியில் ஒருவன் கற்கின்ற கல்வியானது எழுகின்ற ஏழு பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினைத் தரவல்லது.
  • ஏழு பிறவியிலும் தொடர்ந்து வரவல்லது கல்வி ஒன்றேயாகும்.

iii) நாய்க்கால் சிறு விரல் போல் நன்கணியராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் – செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு – நாலடியார்

  • நாலடியார் பாடலில், நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும். அதுபோல நம்மை நெருங்கி இருப்பவர்கள் ஈயின் கால் அளவுகூட உதவமாட்டார்கள்.
  • வாய்க்காலின் தூரத்திலிருந்து வரும் தண்ணீர் பயிர் விளைச்சலுக்கு உதவும். அதுபோல தூரத்திலிருந்து உதவி செய்யும் நல்லவர்களை நாம் நெருங்கிச் சென்று நட்பு கொள்ள வேண்டும் என்கிறது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்
அ) போர்க்கருவி
ஆ) தச்சுக்கருவி
இ) இசைக்கருவி
ஈ) வேளாண்கருவி
Answer:
இ) இசைக்கருவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:

  • கலைத்தொழில் செய்வோர்க்கு சோறு தட்டாது கிட்டும்.
  • கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

சிறுவினா

Question 1.
வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
Answer:
திணை விளக்கம்:
பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.

சான்று விளக்கம்:

  • வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடலில், ‘பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!’ என்ற வரி இடம் பெற்றுள்ளது.
  • அதாவது தன்னை நாடி வரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை.
  • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
  • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

இலக்கணக் குறிப்பு

வயங்குமொழி – வினைத்தொகை
அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிவும் புகழும் – எண்ணும்மை
சிறாஅர் – இசைநிறை அளபெடை.

புணர்ச்சி விதி

1. எத்திசை = எ + திசை
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி எத்திசை என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கற்றோரது ‘செம்மாப்பு’ என்பதில் ‘செம்மாப்பு’ – பொருள்
அ) பெருமை
ஆ) புகழ்
இ) இறுமாப்பு
ஈ) வெற்றி
Answer:
இ) இறுமாப்பு

Question 2.
புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்
அ) புறம், புறப்பாட்டு
ஆ) புறம், புறப்பொருள்
இ) நானூறு, புறப்பாட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புறம், புறப்பாட்டு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘வயங்குமொழி வித்தித்தாம்’ – ‘வித்தி’ என்பதன் பொருள்
அ) விதி
ஆ) விதை
இ) புத்தி
ஈ) விதைத்து
Answer:
ஈ) விதைத்து

Question 4.
தாழும் நிலை வரினும் கலங்காதவர்
அ) கல்வி கற்றோர்
ஆ) செல்வம் உடையவர்
இ) ஞானம் பெற்றவர்
ஈ) செல்வாக்கு உடையவர்
Answer:
அ) கல்வி கற்றோர்

Question 5.
ஔவையார் அகநானூற்றில் பாடியுள்ள பாடல்கள்
அ) 5
ஆ) 15
இ) 4
ஈ) 7
Answer:
இ) 4

Question 6.
கூற்று 1 : இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
கூற்று 2 : கலைத்தொழில் வல்லவர்களுக்கு எத்திசை சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 7.
கூற்று 1 : அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகப் போர்க்களம் சென்றார்.
கூற்று 2 : அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர் ஔவையார்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) எம் யாழினை எடுக்கவில்லை ; கருவிப்பையையும் எடுக்கவில்லை.
ஆ) கலைத்தொழில் வல்ல எங்களுக்கு எத்திசை சென்றாலும் ஒன்றும் கிடைப்பதில்லை.
இ) தச்சனின் பிள்ளைகள் காட்டுக்குச் சென்றால் வெட்ட மரம் கிடைக்காது.
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.
Answer:
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.

Question 9.
சரியானதைத் தேர்க.
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.
ஆ) புறநானூற்று பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று.
இ) அதியமானிடம் நட்பு பாராட்டும் குணம் இல்லாதவர் ஒளவையார்.
ஈ) ஔவையார் பாடியதாக நற்றிணையில் 8 பாடல்கள் உள்ளன.
Answer:
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.

Question 10.
பொருந்தியதைத் தேர்க.
அ) அறிவும் புகழும் – வினைத்தொகை
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை
இ) வயங்குமொழி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) அடையா – எண்ணும்மை
Answer:
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 11.
பொருந்தாததைத் தேர்க.
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.
ஆ) அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றவர்.
இ) ஒளவையார் பாடியதாக புறநானூற்றில் 33 பாடல்கள் உள்ளன.
ஈ) புறநானூறு பாடிய ஔவையார் அதியமானிடம் இருந்து நெல்லிகனியைப் பெற்றவர்.
Answer:
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.

Question 12.
புறநானூற்றில் பயின்று வரும் பா
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) குறள் வெண்பா
இ) சிந்தியல் வெண்பா
ஈ) கலிவிருத்தம்
Answer:
அ) நேரிசை ஆசிரியப்பா

Question 13.
பரிசில் துறை என்பது
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
ஆ) மன்னன் பரிசளித்துப் புலவரைப் பாராட்டுவது
இ) பரிசு பெற்ற புலவன் மகிழ்ச்சியாக இல்லறம் திரும்புவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை .
Answer:
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

Question 14.
பொருத்திக் காட்டுக.
அ) உரன் – 1. கோடரி
ஆ) கலன் – 2. கருவிகளை வைக்கும் பை
இ) கலப்பை – 3. யாழ்
ஈ) மழு – 4. வலிமை

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) பரிசிலர் – 1. காடு
ஆ) கல்வி – 2. மரங்க ள்
இ) திசை – 3. சிறுவர்
ஈ) உணவு – 4. கோடரி

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 16.
பொருத்திக் காட்டுக.
அ) வயங்குமொழி – 1. எண்ணும்மை
ஆ) அடையா – 2. இசைநிறை அளபெடை
இ) அறிவும் புகழும் – 3. வினைத்தொகை
ஈ) சிறாஅர் – 4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
‘வாயிலோயே! வாயிலோயே!’ என்னும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டதன் காரணம்
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.
ஆ) பேகன் இரவலர்க்கு இரங்காமையால் பாடியது.
இ) பாரி முல்லைத் தேர் கொடுத்தமையால் பாடியது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.

Question 18.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிக்கு பொருத்தமானச் சொல்
அ) எத்திசை
ஆ) உரனுடை
இ) வலுந்தலை
ஈ) மாய்ந்தென
Answer:
அ) எத்திசை

Question 19.
புறநானூறு ………………. நூல்க ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
அ) எட்டுத்தொகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 20.
அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்
அ) ஓதலாந்தையார்
ஆ) ஔவையார்
இ) கபிலர்
ஈ) பரணர்
Answer:
ஆ) ஔவையார்

Question 21.
ஔவை யாருக்காகத் தூது சென்றார்?
அ) அதியமானுக்காக
ஆ) பேகனுக்காக
இ) பாரிக்காக
ஈ) தொண்டைமானுக்காக
Answer:
அ) அதியமானுக்காக

Question 22.
ஔவையார் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை
அ) 22
ஆ) 36
இ) 59
ஈ) 65
Answer:
இ) 59

Question 23.
ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் நூல்களும் (பொருத்திக் காட்டுக).
அ) அகநானூறு – 1) 7
ஆ) புறநானூறு – 2) 15
இ) குறுந்தொகை – 3) 04
ஈ) நற்றிணை – 4) 33

அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 2, 1

Question 24.
அதியமானின் அரசவைப் புலவர்
அ) கபிலர்
ஆ) பாணர்
இ) ஒளவையார்
ஈ) ஒக்கூர் மாசாத்தியார்
Answer:
இ) ஒளவையார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
புறநானூற்றுப் பாடல்களால் அறியப்படுபவை யாவை?
Answer:
தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை .

Question 2.
ஔவையார் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கிய பாடல்கள் எத்தனை?
Answer:

  • அகநானூற்றில் 4 பாடல்கள்.
  • குறுந்தொகையில் 15 பாடல்கள்.
  • நற்றிணையில் 7 பாடல்கள்.
  • புறநானூற்றில் 33 பாடல்கள் என மொத்தம் 59 பாடல்கள்.

Question 3.
பாடாண் திணை என்றால் என்ன?
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண் திணை
  • பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.
  • ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 4.
கல்வி கற்றோரின் சிறப்பு என்ன?
Answer:

  • கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர்.
  • தாமும் எந்நிலை வந்தாலும் கலங்க மாட்டார்கள்.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கிக் கொள்வர்.
  • எங்கு சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

Question 5.
கற்றவர்க்கு எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்பதற்கு ஔவையார் கூறும் உவமை யாது?
Answer:

  • மரம் வெட்டும் தச்சர் பெற்ற சிறுவர்கள் தங்கள் மழுவோடு (கோடாரி) காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு மரம் கிடைக்காமல் போகுமா? என்பதே உவமை.
  • பரிசிலருக்குச் சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும், உணவிற்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகளாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • புறம் + நான்கு + நூறு
  • 400 பாடல்களைக் கொண்டது.
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறப்பொருள் பற்றியது.
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
  • சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு கருவூலமாகத் திகழ்கிறது.

Question 2.
‘அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுத்தலை உலகமும் அன்றே ; அதனால்
காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை’ – இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் அடிகளானது அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்தபோது ஔவையார் பாடியதாகும். இது புறநானூற்றின் 206 ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை. அதனால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம். யாழ் முதலிய இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக் கட்டிக் கொண்டோம்.

விளக்கம் :
அறிவு சார்ந்த கருத்துகளை எடுத்துக்கூறி அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெற சென்றார் ஔவையார். அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் தாழ்த்தியதால் கோபமடைந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறானா, இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை .

இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை உன் மன்னன் பரிசு தரவில்லை என்றால் என்ன ? கலைத்தொழிலில் வல்ல எங்களுக்கு எங்குச் சென்றாலும் உணவு கிடைக்கும். எனவே எங்கள் இசைக்கருவிகளைத் தோளில் எடுத்துவிட்டோம் இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக்கட்டி விட்டோம் என்று கூறுமிடத்தில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே’ என்ற ஔவையாரின் செம்மாப்பு கருத்தின் உண்மையை ஆராய்க.
Answer:
(i) கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்.
(ii) கற்றோரின் சொல்லைக் கேட்டு அவர்களுக்கு வாரி வாரி வழங்கினர் பண்டைய தமிழ் மன்னர்கள்.

(iii) நல்ல கருத்துகளைக் கூறி அரசின் நிர்வாகத்தையும், அரசாட்சியின் நடைமுறையையும் சீர்ப்படுத்தும் பணியைக் கற்றறிந்த புலவர்கள் மேற்கொண்டனர்.

(iv) அத்தகைய கற்றறிந்தோரை அரசர்கள் மிகவும் கௌரவித்துப் பரிசுகள் பலவும் வழங்கினர்.

(v) பரிசு தர காலதாமதம் ஆனதால் ஒளவையார் வாயில் காவலனிடம் உன் அரசன் ஒருவனை மட்டுமே நம்பி இந்த உலகம் உள்ளது என்று அவன் நினைத்துள்ளானோ?

(vi) மரம் வெட்டும் தச்சனின் மகன் கோடரியுடன் காட்டிற்குச் சென்றால் அவர்கள் வெட்ட காட்டில் ஏதாவது ஒரு மரம் கிடைக்காமல் போய்விடுமா?

(vii) ‘அதுபோலவே, கற்றவர்கள் எத்திசை செல்லினும் அத்திசையில் உணவு கிடைக்கும்.’

(viii) கற்றவர்களுக்கு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் புகழ் உண்டாகும்.

(ix) கல்விக்கு அத்தகைய சிறப்புண்டு என்பதை அறிந்ததால் ஔவையார் செம்பாப்புடன் வாயிற்காவலனிடம் எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே என்று வாயிற்காவலனிடம் கூறினார்.

Question 4.
பாடாண் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
பாடு + ஆண் + திணை – பாடாண் திணை. பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும். ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் 12 பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 5.
பரிசில் துறை சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மையை நோக்கி பரிசிலர் அரண்மனையின் வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

Question 6.
“பரிசிலிர்க்கு அடையா வாயிலோயே” என்று வாயிற்காவலளிடம் தன் வருத்தத்தைப் பதியவும் புலவரின் மனக்குமுறல்களை எடுத்தியம்புக.
Answer:
பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே!

  • விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
  • இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை, இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை.
  • ஆகவே, எம் யாழினை எடுத்துக் கொண்டோம்; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம்.
  • மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்?
  • அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
  • என்று தன் மனக்குமுறலை வாயிற்காப்பானிடம் புலவர் எடுத்துரைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

“அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே”

நெடுவினா

Question 1.
அதியமான் நெடுமான் அஞ்சியின் பரிசு நீட்டித்தல் குணம் தவறு என்பதை ஔவையாரின் புறநானூற்றுப் பரிசில் துறை பாடல் எங்ஙனம் உணர்த்துகிறது ?
Answer:
(i) வாயில் காவலனே ! வாயில் காவலனே ! புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலையானது வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளிலே உரைப்பதாகும்.

(ii) அவர்களிடம் அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது.

(iii) வள்ளல்கள் பற்றித் தாங்கள் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டும் என நினைத்து வருந்துவர்.

(iv) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி தன்னுடைய தகுதியை அறியாமல் இருக்கின்றான்.

(v) அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்று நினைக்கின்றானோ ? காலம் நீட்டிப்பது சரியான முறையல்ல.

(vi) பரிசிலர் அரண்மனை வருவதை விரும்பும் அதியாமன் நெடுமான் அஞ்சி பரிசு தர நீட்டிப்பது முறையாகாது.

(vii) இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் அழிந்து போகவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகி விடவில்லை.

(viii) பரிசு தரக் காலம் நீட்டித்தான் என்றால், எங்களை அறிந்து பரிசு தருவதற்குப் பல பேர் உள்ளனர்.

(ix) மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள் கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்ட ஒரு மரம் கிடைக்கும்.

(x) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் நீட்டித்தான் என்றால், நான் என் இசைக்கருவியைத் தோளில் சுமந்துக் கொண்டும், என் இசைக்கருவிகளைக் கருவிப்பைக்குள் சுருக்கிட்டுக் கொண் டும் புறப்படப் போகின்றேன்.

(xi) கலைத்தொழில் புரியும் எங்களைப் போன்றோரைக் காத்து வைக்க நினைக்கும் எண்ணம் சரியானது அன்று. ஏனெனில் இவ்வுலகின் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல் கிடைக்கும் என்று உணர்த்துகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.1 காலத்தை வென்ற கலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

குறுவினாக்கள்

Question 1.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நாகரம், வேசரம், திராவிடம்.

Question 2.
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாவை?
Answer:
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் எருதந் குஞ்சர மல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும், இன்னொரு கல்வெட்டில் ‘சோமயன் அமிர்தவல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும் குறிப்புகள் உள்ளன.

இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் படைரிந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 4.
கோபுரம், விமானம் – வேறுபாடு என்ன?
Answer:

  • நுழைவு வாயிலின்மேல் அமைக்கப்படுவது கோபுரம். –
  • கருவறை’ என்னும் அகநாழிகையின்மேல் அமைக்கக் வெது விமானம்.

Question 5.
பிற்காலச் சோழர்களின் தனி அடையாளம் எது? .
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் முதலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில், அடுத்து உள்ள இராசராசன் திருவாயில் ஆகிய இரண்டு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இவை பிற்காலச் சோழர்களின் சிறப்பான தனி அடையாளங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 6.
கற்றளிக் கோவில்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில், தஞ்சைப் பெரிய கோவில் ஆகியன, கற்றளிக் கோவில்களாகும்.

Question 7.
‘கற்றளி’க் கோவிலை முதலில் உருவாக்கியவன் யார்?
Answer:
கருங்கற்களை ஒன் என் மேல் ஒன்றாக அடுக்கிக் ‘கற்றளி’க் கோவிலை கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இரண்டாம் நரசிம் வம் பல்லவ மன்னன் உருவாக்கினான்.

Question 8.
பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன?
Answer:

  • பழங்காலத்தில் கோவில்களை மண்ணால்கட்டி, மேலே மரத்தால் சட்டகம் இட்டனர்.
  • அவற்றின் மேல் செப்பு, பொன் தகடுகளைக் கூரையாக வேய்ந்தனர்.
  • அடுத்து, செங்கற்களை அடுக்கிக் கோவில்களைக் கட்டினர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 9.
தடைவரைக் கோவில் என்பது யாது?
Answer:
செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலானவற்றைப் பயன்படுத்தாமல், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில், குடைவரைக் கோவிலாகும்.

சிறுவினா

Question 1.
ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?
Answer:

  • ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : * ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
  • ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கற்றளிக் கோவில்கள் :

செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
கற்றளிக் கோவில்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதைப்போல் கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் ‘கற்றளி’ என்று பெயர். இவ்வடிவத்தை ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் உருவாக்கினான்.

மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக்கோயில் ஆகியவற்றைக் கற்றளிக் கோவில்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அந்தவகையில் இராசராசசோழன் கட்டியது மிகப் பெரிய கற்றளிக் கோவிலாகும். தட்சிணமேரு’ என இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட தஞ்சைப் பெரியகோவில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களில் பெரியதும் உயரமானதுமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 3.
கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல – நிறுவுக.
Answer:

  • பெரிதாகக் கட்டப்பட்ட தமிழகக் கோவில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லை.
  • இசை, நடனம், நாடகம் முதலான அருங்கலைகள், அக்கோவில்களால் போற்றி வளர்க்கப்பட்டன.
  • மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகக் கோவில்கள் இருந்ததனால், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளாகப் பறித்தனர்.

பஞ்சம் ஏற்படும் காலத்தில், மக்களுக்கு உதவுவதற்காகத தானியக் கிடங்குகளையும் கோவில்களில் அமைத்திருந்தனர். கருவூலமாகவும், மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படைவீரர்கள் தங்கும் இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன.

Question 4.
தஞ்சைப் பெரிய கோவில் விமான அமைப்பின் ( சிலப்பினை விளக்குக.
Answer:

  • கற்றளிக் கோவில்களிலேயே மிகமிக உர மானதும் பெரியதும் தஞ்சைப் பெரிய கோவிலாகும். முழுவதும் கருங்கற்களை ஒன்றன் (மல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோவில் இது.
  • ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று, இராசராச சோழனால் இது கட்டி முடிக்கப்பட்டது.
  • இக்கோவில் கருவறை விமானம், 216 அடி உயரத்தையும், 13 தளங்களையும் கொண்டுள்ளது.
  • இதனை இராசராசன், தினைமேரு’ எனப் பெருமையுடன் அழைத்தான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 5.
கோவில் கோபுரம் அமைக்கும் மரபு குறித்து எழுதுக.
Answer:
பழமையான கோவில்களில் கோபுரங்கள் சிறியனவாக இருந்தன. வெளிக்கோபுரம் உயரமாகவும், உள்கோபுரம் உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரம் அமைக்கும் மரபை இராசராசன் தோற்றுவித்தான்.

12ஆம் நூற்றாண்டில் கோபுரங்கள் அமைப்பு, தனிச்சிறப்புப் பெற்றது. நான்கு புறங்களில், நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தொடங்கியது.

புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றில் மிக உயரமான கோபுரங்களை எழுப்பியது விஜயநகர அரசு. ‘கோபுரங்களின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டி இருப்பர்.

காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களிலுள்ள கோவில் கோபுரங்கள், நூற்றைம்பது அடி உயரத்திற்குமேல் இருக்கும்.

Question 6.
‘கலை’ என்பது குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலை. கலை, நம் மனத்தில் அழகுணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனப் பலவிதமாகப் பிரிப்பர்.
  • கலை என்பது, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் பிரதிபலிக்கிறது.
  • சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலான கலைகளில், தமிழகம் பழங்காலத்திலேயே சிறப்புற்றிருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

நெடுவினா

Question 1.
‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.
Answer:
காலத்தை வென்று நின்ற கலை :
ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டு மேன்மைகளைப் பிரதிபலிப்பது கலை. தஞ்சைப் பெரிய கோவில், தமிழ்ச் சமுதாயத்தின் கலையாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் கருங்கல் கலைச்செல்வம், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை இன்றளவும் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அமைந்துள்ள கோவில், இராசராச சோழனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில், கருங்கற் கொண்டு 216 அடி உயரம் உடையதாகவும், கருவறை விமானம், 13 தளங்களை உடையதாகவும் கட்டப்பட்டது.

கதை சொல்லும் கல்வெட்டு :
சுற்றுச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகள், எண்ணற்ற பழமையான வரலாற்றைக் கூறுகின்றன. கதை சொல்லும் அந்தக் கல் இசை, நடனம், நாடகம் எனப் பல அருங்கலைகளைப் பேணி வளர்த்த செய்தியைத் தன்னுள் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவும் தானியக் கிடங்குகளைத் தன்னிடம் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கருவூலமாக, மருத்துவமனையாக, படைவீரர் தங்கும் கூடமாகக் கோவில் பயன்பட்ட கதைகளைக் கேட்டறிய முடிகிறது.

கோவில் உருவான கதையைக் கூறுகிறது :
கோவிலை உருவாக்க மக்களும் அதிகாரிகளும் செயல்பட்டதைக் கதைபோல் எண்ணிப் பார்க்கச் செய்கிறது. இராசராசன் அமைத்த கோவிலின் முன்வாயில்கள் எண்ணற்ற வரலாற்றுக் கதைகளைக் கூறுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

ஓவியங்கள் கூறும் கதை :
கோவிலின் கருவறைத் தளங்களில் உள்ள சுற்றுக்கட்டம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில், தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியவற்றைப் பெரிய அளவில் வரைந்து வைத்துள்ளதை, இன்றளவும் காணமுடிகிறது. கோவல் கட்டுவதில் புதிய மரபு படைத்த இராசராசன் அமைத்த சிலைவடிவங்கள், வண்ண ஓவியங்கள் என யாவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கலை வளர்த்ததைக் கதைகதையாக இன்று இந்தப் பெரிய கோவில் நமக்குக் கூறுகிறது.

கல் சொல்லும் கதை :
ஆண்களே அன்றிப் பெண்களும் அதிகாரிகளாகப் பணி புரிந்த செய்தியைக் கல்வெட்டுகள் கதைபோல் பாதுகாத்து வைத்துள்ளன. தஞ்சை பெரிய கோவிலை ஒருமுறை காணும்போது, கல்லும் கதை சொல்லும்’ என்பது தெளிவாகப் புலப்படும்.

பலவுள் தெரிக

Question 1.
கூற்று 1 : தந்சைப் பெரியகோவிலிலுள்ள ஓவியங்களை எஸ். கே. கோவிந்தசாமி கண்டறிந்தார்.
கூற்று 2 : அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள், ஃப்ரெஸ்கோ வகையைச் சார்ந்தவை
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 2.
மனிதகுல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை
அ) கல்வியும் தொழிலும்
ஆ) கல்வியும் கலையும்
இ) கலையும் அறிவியலும்
ஈ) தொழிலும் அறிவியலும்
Answer:
இ) கலையும் அறிவியலும்

Question 3.
ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேம்பாட்டையும் பிரதிபலிப்பது ……………
அ) கல்வி
ஆ) அறிவியல்
இ) கோவில்
ஈ) கலை
Answer:
ஈ) கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 4.
கட்டடக் கலை என்பது, ‘உறைந்து போன இசை’ என்று கூறியவர் …………………
அ) எஸ். கே. கோவிந்தசாமி
ஆ) ஃப்ரெஸ்கோ
இ) ஷூல்ஸ்
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்
Answer:
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்

Question 5.
தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் உயரமானது………………
அ) இராசராசன் திருவாயில் கோபுரம்
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
இ) மதுராந்தகன் கோபுரம்
ஈ) இராசராசன் கோபுரம்
Answer:
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்

Question 6.
‘தட்சிண மேரு’ என அழைக்கப்படுவது –
அ) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
ஆ) திருவில்லிபுத்தூர் கோவில்
இ) தஞ்சைப் பெரிய கோவில்
ஈ) ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
Answer:
இ) தஞ்சைப் பெரிய கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 7.
செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியவன் ………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
ஈ) சோழன் செங்கணான்
Answer:
ஈ) சோழன் செங்கணான்

Question 8.
‘இராசசிம்மேச்சுரம்’ என அழைக்கப்படும் கோவில் ……………
அ) திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
ஆ) தஞ்சைப் பெரிய கோவில்
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
ஈ) தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
Answer:
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Question 9.
இராசராசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட வேன்டுமென்ற எண்ணத்தைத் தூண்டிய கோவில் ………….
அ) தில்லைக் கோவில்
ஆ) குற்றாலநாதர் கோவில்
இ) திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
Answer:
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 10.
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம்……………
அ) காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
ஆ) தஞ்சாவூர், அஜந்தா, திருவில்லிபுத்தூர்
இ) அஜந்தா, எல்லோரா. சித்தன்னவாசல்
ஈ) காஞ்சிபுரம், எல்லோரா, சித்தன்னவாசல்
Answer:
இ) அஜந்தா, எ மோரா, சித்தன்னவாசல்

Question 11.
தஞ்சைப் பெரிய கோவிலில் அமைந்த கட்டடக்கலைப் பாணி ……………
அ) நாகர கலைப்பாணி
ஆ) வேசர கலைப்பாணி
இ) திராவிட கலைப்பாணி
ஈ) மாயன் கலைப்பாணி
Answer:
இ) தராவிட கலைப்பாணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 12.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியங்களைக் கண்டறிந்தவர் ……………
அ) எஸ்.கே.கோவிந்தசாமி
ஆ) பி. கே. கோவிந்தசாமி
12) வி. கே. கோவிந்தராஜன்
ஈ) எம். எஸ். கோவிந்தராஜன்
Answer:
அ) எஸ்.கே.கோவிந்தசாமி

Question 13.
‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியவர்……………
அ) முதலாம் நரசிம்மவர்மன்
ஆ) இராசராசசோழன்
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஈ) மகேந்திரவர்மன்
Answer:
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்

Question 14.
காஞ்சி கைலாசநாதர் கோவிலை அமைத்த மன்னன்……………
அ) மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) நரசிம்மவர்மன்
ஈ) இராசராசன்
Answer:
ஆ) இராசசிம்மன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 15.
குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ……………
அ) இராசசிம்மன்
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்
இ) இரண்டாம் நரசிம்மன்
ஈ) இராசராச சோழன்
Answer:
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 16.
தஞ்சைப் பெரிய கோவிலை இராசராசன்தான் கட்டினான் என உறுதி செய்தவர் ……………
அ) இத்தாலி ஃப்ரெஸ்கோ
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
இ) எஸ். கே. கோவிந்தசாமி
ஈ) கோவலூர் உடையான்
Answer:
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்

Question 17.
தமிழக அரசின் சின்னம்……………
அ) ஆலமரம்
ஆ) கோவில் நந்தி
இ) கோவில் கோபுரம்
ஈ) திருவாயில்
Answer:
இ) கோவில் கோபுரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 18.
இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் ……………
அ) நாயக்க மன்னர்
ஆ) பல்லவர்
இ) குலோத்துங்கன்
ஈ) இராசராசன்
Answer:
ஈ) இராசராசன்

Question 19.
நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபைத் தொடங்கியவன் ……………
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
இ) இரண்டாம் இராசராசன்
ஈ) இரண்டாம் மகேந்திரவர்மன்
Answer:
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்

Question 20.
பெரிய கோவிலில் காணப்படும் பெரிய நந்தியும் மண்டபமும்,……………காலத்தில் கட்டப்பட்டவை.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பல்லவர்
ஈ) நாயக்கர்
Answer:
ஈ) நாயக்கர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 21.
புகழ்பெற்ற கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பியது……………
அ) சோழ அரசு
ஆ) பல்லவ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) விஜயநகர அரசு
Answer:
ஈ) விஜயநகர அரசு

Question 22.
‘ஒலோகமாதேவீச்சுரம்’ கோவிலைத் திருவையாற்றில் கட்டியவர் ……………
அ) எருதந் குஞ்சர மல்லி ,
ஆ) சோமயன் அமிர்தவல்லி
இ) ஒலோகமாதேவி
ஈ) குந்தவைதேவி
Answer:
இ) ஒலோகமாதேவி

Question 23.
‘ஒலோகமாதேவீச்சில் கோவில் கல்வெட்டால் அறியப்படும் பெண் அதிகாரிகள்……………
அ) குந்தவை, ருதஞ் குஞ்சர மல்லி
ஆ) சோமயின் அமிர்தவல்லி , குந்தவை
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி
ஈ) ஓவோகமாதேவி, எருதந் குஞ்சர மல்லி
Answer:
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி

Question 24.
சரியான விடையைத் தெரிவு செய்க.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகை ……………
அ) நாகரம்
ஆ) வேசரம்
இ) தட்சிணம்
ஈ) திராவிடம்

1. அ, ஆ, இ
2. அ, ஆ, ஈ
3. ஆ, இ, ஈ
4. அ, இ, ஈ
Answer:
2. அ, ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 25.
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ) தஞ்சாவூர் – 1. கடற்கரைக் கோவில்
ஆ) மகாபலிபுரம் – 2. ஒலோகமாதேவீச்சுரம்
இ) காஞ்சிபுரம் – 3. தட்சிண மேரு
ஈ) திருவையாறு – 4. கைலாசநாதர் கோவில்

அ) அ – 1, ஆ – 2, இ – 3, ஈ – 4
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
இ) அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3
ஈ) அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
Answer:
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2

Question 26.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1) ‘தட்சிண மேரு’ என்பது – அ. வாயில்களின்மேல் அமைவது
2) ‘விமானம் என்பது – ஆ. தானியக் கிடங்கு
3) ‘கோபுரம்’ என்பது – இ. தஞ்சைப் பெரிய கோவில்
4) ‘கற்றளி’ என்பது – ஈ. அகநாழிகைமேல் அமைக்கப்படுவது
உ. கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது

அ) 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ
ஆ) 1 – உ , 2 – இ, 3 – ஆ, 4 – ஈ
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ
ஈ) 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
Answer:
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 27.
பொருத்துக.
1. வளர்க்கப்பட்ட அருங்கலைகள் – அ. பஞ்சகாலத்தில் மக்களுக்கு -வ.
2. கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டவை – ஆ. போர்க்காலத்தில் படை பரர்களுக்கு.
3. தானியக் கிடங்குகள் – இ. மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள்.
4. தங்கும் இடம் – ஈ. மக்கள் ஒன்று டும் இடம்.
– உ. இசை, நடனம், நாடகம்.
Answer:
1 – உ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. கலை, ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையைப் பிரதிபலிக்கிறது.
வினா : கலை, எவற்றைப் பிரதிபலிக்கிறது?

2. தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்டம் நம்மை வியப்படையச் செய்கிறது.
வினா : எக்கோவிலின் கட்டடக் கலைநுட்பம், நம்மை வியப்படையச் செய்கிறது?

3. கருவறையை அகநாழிகை என்று அழைப்பார்கள்.
வினா : எதனை அகநாழிகை என் அழைப்பார்கள்?

4. தஞ்சைப் பெரிய கோவில், நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும்.
வினா : நம் நாட்டிலுள்ள கறளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது?

5. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காகத் தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப் பட்டிருந்தன.
வினா : கோவிலுக்குள் தானியக் கிடங்குகளும் எதற்காக அமைக்கப்பட்டிருந்தன?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

6. தஞ்சைப் பெரிய கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்.
வினா : (தஞ்சைப் பெரிய கோவில் எப்படிக் கட்டப்பட்ட வடிவு கலைப்பாணி எவை?

7. ஃப்ஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்று பொருள்.
விரை : எந்த இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை’ என்று பொருள்?

8. காலாற்றைப் படைத்த நமக்கு அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.
வினா : வரலாற்றைப் படைத்த நமக்கு, எது தெரியவில்லை?

9. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
வினா : கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் எதனைப் பார்த்திருக்கிறோம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

10. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர் என்பது,
ஆச்சரியமாக இருக்கிறது. வினா : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சரியமாக இருக்கிறது என்பது எது?

11. தான் மட்டுமே பங்களிக்காமல், மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு, அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தி இருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது.
வினா : இராசராசன், எதனை ஆவணப்படுத்திய பாங்கு போற்றத்தக்கதாகும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

குறுவினாக்கள்

Question 1.
மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
Answer:
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு பிரிவுகளை உடையது மருத்துவம் எனக் குறள் கூறுகிறது.

Question 2.
படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை?
Answer:
வீரம், மானம், முன்னோர்வழி நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல் என்னும் நான்கும் படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை ஆகும்.

Question 3.
பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிடவேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக.
Answer:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 4.
எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
“முன் உண்டது செரித்ததை அறிந்து, அடுத்து உண்டால், மருந்து என ஒன்று தேவையில்லை” என்று, திருவள்ளுவர் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

Question 5.
இகழ்ச்சியில் கெட்டாரை எப்போது நினைத்தல் வேண்டும்?
Answer:
மகிழ்ச்சியில் தங்கள் கடமையை மறக்கும் போது, மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

Question 6.
எண்ணியதை அடைதல் எப்போது எளிதாகும்?
Answer:
எண்ணியதை எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் என்பது எளிதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 7.
எதைக் கொடுத்து யாரைத் துணையாகக் கொள்ள வேண்டும்?
Answer:
முகக் குறிப்பா அகக் குறிப்பை அறிபவரை, எதையேனும் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

Question 8.
கண் உரைப்பவை எவை?
Answer:
பகைைையயும், நட்பையும் கண் உரைத்துவிடும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 9.
நகையையும் வேண்டற் பாற்று அன்று – எது?
Answer:
கை என்னும் பண்பற்றதை, விளையாட்டிற்குக் கூட ஒருவன் விரும்பக்கூடாது.

Question 10.
திருவள்ளுவர் எவர் பகையைக் கொள்ளற்க என்கிறார்?
Answer:
திருவள்ளுவர், வில்லேர் உழவரின் பகையைக் கொண்டாலும், சொல்லேர் உழவரின் பகையைக் கொள்ளல் கூடாது என்கிறார்.

Question 11.
உலகியற்றியான் எவ்வாறு கெடல் வேண்டும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
பிறரிடம் யாசித்து உயிர் வாழும் நிலை இருக்குமானால், அப்படிப்பட்ட உயிர் வாழ்க்கையைப் படைத்தவன், இவ்வுலகில் அலைந்து கெடட்டும் என்கிறார் திருவள்ளுவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 12.
ஏமாப்பில் தோணி எது? அது எப்போது பக்குவிடும்?
Answer:
பிறரை எதிர்பார்த்து யாசித்து வாழ்தல் என்பது, பாதுகாப்பு இல்லாத படகு ஆகும். ஈயாமை என்னும் பாறை மோதினால், அது உடைந்துவிடும்.

சிறுவினாக்கள்

Question 1.
உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக.
Answer:
உவமானத்தின் தன்மையை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவகம். இவ்வகை உருவகம் இடம் பெற்றுள்ள செய்யுளை, உருவக அணிச் செய்யுள் எனக் கூறுவர்.

எ – கா: இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

விளக்கம் : இக்குறளில் ‘இரவு’ (யாசித்தல்) ‘ஏமாப்புஇல்’ (பாதுகாப்பு இல்லாத) தோணியாகவும், ‘கரவு’ (ஈயாமை – கொடுக்காமை) ‘பார்’ (பாறை) ஆகவும் உருவகம் செய்யப் பெற்றுள்ளன. எனவே, உருவக அணி அமைந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் ‘பிறிதுமொழிதலணி’ பயின்று வந்துள்ளது.

உவமானத்தைக் கூறி, உவமேயத்தைப் பெறவைப்பது, பிறிதுமொழிதல் அணியாகம்

‘சிறியதாக இருக்கும்போதே முள்மரத்தைக் களைந்துவிட வேண்டும். முதிர்ந்தால் வெட்டுபவரின் கையை வருத்தும்’ என்னும் உவமானத்தைக் கூறி, “பகைவர் வலிமை பெற து இருக்கும்போதே அழித்துவிட வேண்டும். வலிமை பெற்றால் வெல்லுவது எளிதாக இருக்காது” என்னும் உவமேயத்தைப் பெறவைத்தமையால், ‘பிறிதுமொழிதலணி’ பயின்று வந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 3.
மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?
Answer:
முன்னர் உண்டது செரித்ததை அறிந்து உண்டால், மருந்து என ஒன்று உடலுக்குத் தேவை இல்லை .

நோயையும், அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து, நோயாளியின் வயதையும், நோயின் அளவையும், மருத்துவம் செய்தற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, அதன்பின் மருத்துவர் செயல்பட வேண்டும்.

மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், பருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு வகைக்குள் அடங்கும் என்று, திருவள்ளுவர் கூறியுள்மாரர்.

கூடுதல் வினாக்கள்

Question 4.
மறதி குறித்துத் திருவள்ளுவர் சறுவன யாவை?
Answer:
மகிழ்ச்சி மிகுதியால் ஒருன் தான் ஆற்ற வேண்டிய கடமையை மறக்கும்போது, மறதியால் கெட்டவர்களை அவன் நினைத்துப் பார்த்தல் வேண்டும். மறவாமல் எப்போதும் எண்ணியதையே எண்ணிக்கொண்டு இருப்பதனால், எண்ணியதை அடைவது எளிதாகும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 5.
‘குறிப்பறிதல்’ வாயிலாகத் திருவள்ளுவர் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
முகக்குறிப்பினால் அகக்குறிப்பை அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவருக்கு, எப்பொருளையாவது கொடுத்து நமக்குத் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.

தொனன்றால், கண்ணின் குறிப்புகளை உணர்ந்து அறிபவரைப் பெற்றால், அவரது கண்ணே கைமை யையும் நட்பையும் அறிந்து உணர்த்தும் எனக் குறிப்பறிதல்’ சிறப்பைத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Question 6.
பகைத்திறம் தெளிதல்’ குறித்துத் திருவள்ளுவர் கூறுவனவற்றை விளக்குக.
Answer:

  • ‘பகைமை’ என்பது பண்பற்ற செயல். அதனை ஒருவன் விளையாட்டுக்குக்கூட விரும்பக்கூடாது.
  • வில்லைக் கருவியாக உடைய வீரனின் பகைமையைத் தேடிக் கொண்டாலும், சொல்லைக் கருவியாகக் கொண்ட அறிஞரின் பகையை உருவாக்கிக் கொள்ளல் கூடாது.
  • முள்மரத்தை முதிர்ந்தபின் வெட்டுபவனின் கைகளை அது வருத்தும். அதனால் பகைமையை ஆராய்ந்து அறிந்து, வலிமை பெறும் முன்பே களைய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 7.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:

  • இதில் ‘சொற்பொருட் பின்வரு நிலையணி’ அமைந்துள்ளது.
  • முன்னர் வந்த சொல், அதே பொருளில் பின்னரும் பலமுறை வருவது, சொற்பொருட் பின்வருநிலையணியாகும். இக்குறளில் ‘நாடி’ என்னும் சொல், ‘ஆராய்ந்து ‘ என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, ‘சொற்பொருட் பின்வருநிலையணி’ பயின்றுள்ளது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

நெடுவினா

Question 1.
வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக.
Answer:
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அரிய பண்புகள் சிலவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாகப் பல செய்திகளைத் திருக்குறள் தன்னிடத்தில் பெற்றுள்ளது. இனிக் குறளின் துணையுடன் வாழ்வின் உயர்வுக்கு உதவும் செய்திகளை ஆராய்வோம்.

மறதியை விலக்கு :
‘மறதி’ என்பது மிகமிகக் கெட்ட பழக்கம். எதனையும் காலம் தாழ்த்திச் செய்வதால், ‘மறதி’ என்பது குடி கொள்ளும். மறதியைப் போக்க, நாம் எண்ணியதை மீண்டும் மீண்டும் நினைத்துச் செயல்பட வேண்டும்.

வாழத் தெரிந்துகொள் :
வாழ்க்கை என்பது பலருடன் சேர்ந்து வாழ்வதாகும். எனவேறெருடன் பழகும்போது அவர்தம் மனக் குறிப்பை அறிந்து பழகவேண்டும். மனக்கருத்தை முகக்குறிரே காட்டிவிடும். ஆகையால் எவருடனும் முகம் பார்த்துப் பழக வேண்டும். அதனால் பகைமையையும் நட்டையும், பிரித்துப் புரிந்துகொள்ள முடியும்.

பிறரிடம் பகைமை பாராட்டுவதனை விளையாட்டுக்காகக்கூட விரும்பக் கூடாது. அச்செயல், தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பயன்படாது. முகக்குறிப்பால் அகக்குறிப்பை அறியும் ஆற்றலுடையவருக்கு, ஏதேனும் ஒன்றைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்வது, நம் வாழ்க்கைக்குப் பக்கபலமாக அமையும்.

பிரச்சனை போக்கு :
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அது தோன்றும்போதே களைந்து எறிந்து தீர்வு காண்பது நற்பயன் தரும். இல்லையானால் அது பெரித்த வளர்ந்து, பெருந்துன்பத்தை ஏற்படுத்தும். இதனையே திருவள்ளுவர்,

“இளைதாக மள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லிம் காழ்த்த இடத்து”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

எனக் கூறியுள்ளார்.

நோயற்ற வாழ்வு:
உடல் நோயுற்றால், மருத்துவரையும் மருந்தையும் தேடிச் செல்லவேண்டி இருக்கும். இத்துன்ப நீக்கத்திற்கு எளியதொரு வழியைத் திருவள்ளுவர், ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். நாம் உண்ண வு செரித்ததை அறிந்து, அடுத்த வேளை உணவையும் அளவறிந்து உண்டால், மருந்து என ஒன்று தேவையில்லை என்று, திருவள்ளுவர் கூறுவதை அறிந்து கடைப்பிடிக்கலாம். அத்துடன் நோய் வந்தால், நோய்க்கான அடிப்படையை ஆராய்ந்து, அதைப் போக்குவதற்கு மருந்தளிக்கும் மருத்துவரைத் தேடிச்செல்ல வழியும் கூறுகிறார்.

கொடியது களைக :
உலகில் வறுமை என்பதே கொடியது. அந்தக் கொடுமையைப் போக்கப் பொருள் இல்லாதவர்க்கு நம்மால் இயன்ற பொருளைக் கொடுத்து வாழ்வது சிறந்த வாழ்வாக அமையும். இப்படி நம் வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாகும் கருத்துகள், திருக்குறட்பாக்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. வாழ்விற்குப் பெருமை சேர்க்கும் நெறிகளைக் கொண்டமைந்த நூல் திருக்குறள். எனவே, திருக்குறளைத் தெளிவாகக் கற்று, மனத்தில் இருத்தி, கற்றதன்வழி வாழ்வை நடத்தி உயர்வோமாக.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Question 1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 1
Answer:
அ) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
ஆ) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
இ) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக.
Answer:
கொடி தவித்ததைப் பாரி
அறிந்துகொண்டான்
மயில் தவித்ததைப் பேகன்
உணர்ந்துகொண்டான்
பிள்ளையின் பரிதவிப்பைத்
தாய் அறிவாள்
பளிங்கு முகத்தைப் படித்துக்கொள்
அப்படிப் படித்தவர்களைப்
பிடித்துக்கொள்.

அ) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
ஆ) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
இ) இளைதாக முள்மரம் கொல்க களையும் கைகொல்லும் காழ்த்த விடத்து.

Question 3.
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ………………. நினை.
அ) முகக்குறிப்பை அறிந்தவரை
ஆ) எண்ணியதை எண்ணியவரை
இ) மறதியால் கெட்டவர்களை
ஈ) கொல்லேர் உழவரை
Answer:
இ) மறதியால் கெட்டவர்களை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 4.
பொருள் கூறுக.
அ) ஏமம் – பாதுகாப்பு
ஆ) மருந்துழைச் செல்வான் – மருந்தாளுநர்.

Question 5.
இலக்கணக்குறிப்புத் தருக.
அ) கெடுக – வியங்கோள் வினைமுற்று
ஆ) குறிப்புணர்வார் – வினையாலணையும் பெயர்

கூடுதல் வினாக்கள்

Question 6.
முகக்குறிப்பால் அகக் குறயை அறிபவரை………………ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அ) பகை
ஆ) நகை
இ) துணை
ஈ) இணை
Answer:
இ) துணை

Question 7.
பகைமை என்னும் பண்பை ………………. கூட ஒருவன் விரும்பக் கூடாது.
அ) மறதியாக
ஆ) இகழ்ச்சியாக
இ) குறிப்பாக
ஈ) விளையாட்டாக
Answer:
ஈ) விளையாட்டாக

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 8.
எவருடைய பகையைக் கொள்ளக்கூடாது?
இ) வில்லேர் உழவர்
ஆ) உழவர்
இ) மருத்துவர்
ஈ) சொல்லேர் உழவர்
Answer:
ஈ) சொல்லேர் உழவர்

Question 9.
பாதுகாப்பற்ற படகு போன்றது ……………….
அ) மறதியுடன் வாழ்வது
ஆ) கண்ணோட்டமின்றி வாழ்தல்
இ) இரந்து வாழ்தல்
ஈ) பகையோடு வாழ்தல்
Answer:
இ) இரந்து வாழ்தல்

Question 10.
மகிழ்ச்சியின் மைந்துறும்போது ………………..உள்ளுக.
அ) குறிப்பில் குறிப்புணர்வாரை
ஆ) மானம் மாண்ட வழிச்செலவு
இ) பகை என்னும் பண்பில் அதனை
ஈ) இகழ்ச்சியின் கெட்டாரை
Answer:
ஈ) இகழ்ச்சியின் கெட்டாரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 11.
கொடுத்தும் கொளல் வேண்டும் – எவரை ?
அ) இகழ்ச்சியில் கெட்டாரை
ஆ) பகைமையைக் கொண்டாரை
இ) குறிப்பில் குறிப்புணர்வாரை
ஈ) கண்ணியம் இல்லாரை
Answer:
இ) குறிப்பில் குறிப்புணர்வாரை

Question 12.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் – இதில் பயின்றுள்ள அணி
அ) பிறிதுமொழிதலணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பின்வருநிலையணி
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 13.
‘இளைதாக முள்மரம்’ எனத் தொடங்கும் குறளில் ஈற்றடி ஈற்றுச்சீர், என்னும் வாப்பாட்டால் முடிந்துள்ளது.
அ) நாள்
ஆ) மலர்
இ) காசு
ஈ) பிறப்பு
Answer:
ஈ) பிறப்பு

அலகிடுதல்

Question 1.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் – அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொலை – அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.3 இடையீடு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.3 இடையீடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 1.
இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளில் இரண்டினைத் திரட்டி, வகுப்பறையில் படித்துக் காட்டி, அவை கவிஞனின் மனநிலையை எவ்விதம் வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கவும்.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 1

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
‘இடையீடு’ – எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?
Answer:
இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண் ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

சிறுவினா

Question 1.
‘மூன்றான காலம் போல் ஒன்று” எவை? ஏன்? விளக்குக.
Answer:
மூன்றான காலம் போல் ஒன்று என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்.

எண்ண ம் :
நம் மனதில் உள்ளவையே எண்ணம்.

வெளியீடு :
நம் மனதில் எண்ணியதை வெளியிடுவது வெளியீடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

கேட்டல் :

  • நாம் வெளியிட்டதை கருத்துவேறுபாடின்றி கேட்பது கேட்டல்.
  • எண்ணம் மொழியாக உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தி கேட்கிறவர்கள் சொல்லுகின்ற கருத்துகளைப் புரிதல். இவற்றில் மாற்றமடையலாம்.
  • எப்படி மூன்று காலமும் ஒரே நேரத்தில் கூற முடியாதோ அப்படியே இந்த மூன்றும் ஒன்றாக வருவதில்லை .

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கவிஞர் சி. மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தது?
அ) விளக்கு
ஆ) எழுத்து
இ) நடை
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
ஆ) எழுத்து

Question 2.
கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ்
அ) நடை
ஆ) விளக்கு
இ) யாப்பும் கவிதையும்
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
அ) நடை

Question 3.
கவிஞர் சி. மணி வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கவை
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) இதுவரை
இ) நடை
ஈ) எழுத்து
Answer:
அ) ஒளிச்சேர்க்கை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 4.
கவிஞர் சி. மணி மொழிப்பெயர்த்த சீன மெய்யியல் நூல்
அ) தாவோ ஜிஜிங்
ஆ) தாவோ லி ஜிங்
இ) தாவோதே ஜிங்
ஈ) தாவோ ஸி ஜிங்
Answer:
இ) தாவோதே ஜிங்

Question 5.
கவிஞர் சி. மணி புதுக்கவிதையில் எந்தச் சுவையை மிகுதியாகப் பயன்படுத்துவார்?
அ) உவகை
ஆ) மருட்கை
இ) இளிவரல்
ஈ) அங்கதம்
Answer:
ஈ) அங்கதம்

Question 6.
கவிஞர் சி. மணி இருத்தலின் வெறுமையை எப்படிக் சொன்னவர்?
அ) அழுகையும் அங்கலாய்ப்பும்
ஆ) நகையும் உவமையும்
இ) சிரிப்பும் கசப்பும்
ஈ) பயமும் துக்கமும்
Answer:
இ) சிரிப்பும் கசப்பும்

Question 7.
கூற்று 1 : குதிரை வரையக் குதிரை வராது ; கழுதையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
கூற்று 2 : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை ; சுவைப்போன் பசியை, சுவை முடிச்சைச் சார்ந்தது.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 8.
கூற்று 1 : சொல்ல விரும்பியதெல்லாம் எழுத்தில் வருவதில்லை.
கூற்று 2 : எலிக்குப் பொறிவைத்தால் விரலும் விழுவதுண்டு.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி

Question 9.
கூற்று : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை .
காரணம் : கனியை உண்போனின் பசியைப் பொறுத்ததே கனியின் சுவை.

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று சரி காரணம் சரி

Question 10.
சரியானதைத் தேர்க.
அ) குதிரை வரைய யானையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
ஆ) கனியின் இனிமை அதன் மறத்தால் அறியப்படும்.
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.
ஈ) நீர்த்தேடி அலையும் போது நீர் கிடைக்கும்.
Answer:
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.

Question 11.
சரியானதைத் தேர்க.
அ) கவிஞர் சி. மணி அவர்கள் புதுக்கவிதையின் அங்கதத்தை பயன்படுத்தவில்லை .
ஆ) இருத்தலின் வெறுமையைக் கவிஞர் சி மணி சிரிப்பும் கசப்புமாகச் சொன்னார்.
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.
ஈ) கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நகர்வதில்லை.
Answer:
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 12.
பொருத்தாதைத் தேர்க.
அ) கனியின் இனிமை சுவைப்போன் பசியை சுவை முடிச்சைச் சார்ந்தது.
ஆ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும், கேட்பதில் சிக்கல் உண்டு.
இ) நீர்தேடி அலையும் போது இளநீரும் கிடைக்கும்.
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.
Answer:
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.

Question 13.
பொருத்தாதைத் தேர்க.
அ) கவிஞர். சி.மணி, வே.மாலி, செல்வம் என்னும் புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்.
ஆ) கவிஞர். சி.மணி, ஆசான் கவிதை விருது பெற்றவர்.
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.
ஈ) கவிஞர். சி.மணி எழுத்து இதழில் எழுதியவர்.
Answer:
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.

Question 14.
பொருத்தி,
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 2
அ) 4, 2, 1, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3, 1
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஈ) 4, 1, 3, 2

Question 15.
சி. மணியின் (சி பழனிச்சாமி) இடையீடு என்னும் கவிதை………….. தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அ) யாப்பும் கவிதையும்
ஆ) வரும் போகும்
இ) ஒளிச்சேர்க்கை
ஈ) இதுவரை
Answer:
ஈ) இதுவரை

Question 16.
சி. மணியின் கவிதைகள் எழுத்து என்னும் இதழில் வெளிவரத் தொடங்கிய ஆண்டு
அ) 1953
ஆ) 1956
இ) 1959
ஈ) 1962
Answer:
ஈ) 1962

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 17.
சி. மணி படைத்த இலக்கணம் பற்றிய நூல்
அ) யாப்பும் கவிதையும்
ஆ) அணியும் கவிதையும்
இ) எழுத்தும் கவிதையும்
ஈ) சொல்லும் கவிதையும்
Answer:
அ) யாப்பும் கவிதையும்

Question 18.
‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை ‘ என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) வேணுகோபாலன்
ஆ) இரா.மீனாட்சி
இ) சி.மணி
ஈ) ஆத்மாநாம்
Answer:
இ) சி.மணி

Question 19.
சி. மணி, பேராசிரியராகப் பணியாற்றிய துறை
அ) தமிழ்
ஆ) ஆங்கிலம்
இ) கணிதம்
ஈ) இயற்பியல்
Answer:
ஆ) ஆங்கிலம்

Question 20.
‘தாவோ தே ஜிங்’ என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) கவிமணி
ஆ) சி. மணி
இ) நாகூர் ரூமி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஆ) சி. மணி

Question 21.
வே. மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியவர்
அ) சி. மணி
ஆ) ஆத்மாநாம்
இ) நாகூர் ரூமி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
அ) சி. மணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 22.
எம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல என்கிறார் சி. மணி?
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்
ஆ) பார்த்தல், கேட்டல், இரசித்தல்
இ) கேட்டல், பார்த்தல், கவனித்தல்
ஈ) உணர்தல், நினைத்தல், செய்தல்
Answer:
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்

Question 23.
சொல்ல விரும்பியதெல்லாம்
சொல்லில் வருவதில்லை – என்று எழுதியவர்

அ) ஆத்மாநாம்
ஆ) நாகூர் ரூமி
இ) சி. மணி
ஈ) கவிமணி
Answer:
இ) சி. மணி

குறுவினா

Question 1.
கல்வி எவற்றையெல்லாம் நமக்கு வழங்குகிறது?
Answer:

  • சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையையும் தருகிறது.
  • நமக்குத் துணை நின்று காக்கும் அறிவையும் வழங்குகிறது கல்வி.

Question 2.
கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே நிகழும் விளைவுகள் என்ன?
Answer:

  • கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நேர்வதும் உண்டு.
  • எதிர்பாராத நல்ல விளைவுகளும் கிடைப்பதுண்டு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 3.
கனியின் சுவை எதைப் பொறுத்தது?
Answer:

  • கனியின் சுவை என்பது கனியைப் பொறுத்தது அல்ல.
  • மாறாக அதைச் சுவைப்பவரின் பசியையும், சுவையின் முடிச்சையும் சார்ந்ததாகும்.

Question 4.
கவிஞர் சி. மணி பெற்றுள்ள விருதுகளைக் கூறுக.
Answer:

  • விளக்கு இலக்கிய விருது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது.
  • ஆசான் கவிதை விருது.
  • கவிஞர் சிற்பி விருது.

Question 5.
‘மனம்புழுங்கம் பலவுண்டு’ என்று கவிஞர் சி. மணி எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:
கணக்கிலடங்கா மாற்றங்களும் இலக்கைத் தவறிய ஏமாற்றங்களும் மனம் வருந்த செய்வதற்கென்று பற்பலவும் இருப்பதாகச் சி. மணி குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.
குதிரை வரையக் குதிரையே
வராது ; கழுதையும் வரலாம்
இரண்டும் கலக்கலாம் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
நாம் சொல்ல விரும்பிய எல்லாமே சொல்லில் வருவதில்லை. நாம் எண்ணும் எண்ணம் எல்லாவற்றையுமே சொல்லில் கொண்டு வர முடிவதில்லை.

விளக்கம் :
நாம் ஒன்றை நினைத்துப் பேச அது புரிந்து கொள்ளும் விதத்தில் வேறொன்றாகிவிடும் நிகழ்வுகள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கும். எவ்வாறெனில் ஓவியன் குதிரையை வரைய நினைத்து வரையும் போது அது பார்ப்பதற்குக் குதிரை போல இல்லாமல் கழுதைபோலக் காட்சியளிக்கலாம்.

பல நேரங்களில் இரண்டும் கலந்து கூட தோற்றமளிக்கலாம். அதுபோன்றுதான் : நாம் எண்ணுகின்ற எண்ணம் வெளிவரும் போது புரிந்து கொள்ளும் விதத்தில் நம் எண்ணம் அப்படியே புரிந்து கொள்ளப்படலாம் அல்லது மாற்றுக்கருத்தையும் பெறலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

Question 2.
“எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
எலியைப் பிடிக்க பொறிவைத்தால் விரலும் மாட்டிக்கொள்ளும். தண்ணீர் தேடிய அலையும் பொழுது இளநீரும் கிடைக்கும்.

விளக்கம் :
ஒரு செயலைச் செய்கின்றபொழுது அச்செயலுக்கு மாற்றாக வேறு செயல் நடந்து நம்மைத் துன்புறுத்தலாம். நாம் சிறிய குறிக்கோளுடன் செல்லும்பொழுது எதிர்பாராத விதமாக பெரிய குறிக்கோளும் நடக்கலாம், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தலாம். ஆகவே, இடையீடுகள் எப்பொழுதும் நம்மிடம் வந்துபோகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.2 இதில் வெற்றி பெற Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.2 இதில் வெற்றி பெற

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 1.
பேச்சு வழக்கில் பயன்படுத்துகின்ற உவமைச் சொற்களைத் தொகுக்க. இவை கருத்தை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பது குறித்துக் குழுவாக உரையாடுக.
Answer:
பாலு : ஓடறவனுக்கு ஒம்பதாம் இடத்தில் சுக்கிரன்னு சொல்கிறார்களே அதன் அர்த்தம் என்ன?

வேலு : ஓடறவன்னா, ஓய்வில்லாமல் உழைக்கிறவன். ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன்னா
– சுக்கிரதிசை என்பது மக்களுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பான் என்று சொல்வார்கள்.

பாலு : நல்ல விளக்கம் இது. இன்னும் ஒரு சந்தேகம்?
வேலு : என்ன?
பாலு : காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை. இதன் பொருளென்ன?
வேலு : பனைமரத்தில் பனம்பழம் பழுத்தவுடன் தானே விழும். ஆனால் காக்கா போய் பனை மரத்தில் உட்காரவும் அதனால் பனம்பழம் விழுந்ததாம் என்பது கருத்து. இதன் விளக்கம் குழந்தை ஒன்று மழையே மழையே வா என்று பாடியதும் மழை வந்துவிட்டதாம். மழை தானேதான் பொழியும் யாரும் வரவைக்க முடியாது.

பாலு : கடைசியாக, ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. சாண் ஏற முழம் சறுக்கும் என்பதன் விளக்கம் கூறு.

வேலு : வரவு இரண்டணா என்றால் செலவு ஒரு அணாவாக இருக்க வேண்டும். அது இயல்பான வாழ்க்கை. வரவு இரண்டணா என்றால் செலவு நாலணாவாக இருந்தால், அச்செய்கைதான் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதாகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சுரதா நடத்திய கவிதை இதழ்
அ) இலக்கியம்
ஆ) காவியம்
இ) ஊர்வலம்
ஈ) விண்மீன்
Answer:
ஆ) காவியம்

Question 2.
“விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” – தொடர் தரும் முழுமையான பொருள்
அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு
ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு
இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
Answer:
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

குறுவினா

Question 1.
வசனம், கவிதை வேறுபாடு தருக.
Answer:
வசனம் : எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.

கவிதை :
எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிக்கென்று எல்லைவைத்து எழுதப்படுவதே கவிதையாகும்.

நெடுவினா

Question 1.
கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
Answer:
கவிதை :

  • சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து எழுத வேண்டும்.
  • அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.
  • சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.

கவிதைக்குரிய உறுப்புகள் :

  • எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.
  • அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல் வேண்டும்.
  • சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.
  • இளமைத் அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும்.
  • அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

சிறந்த கவிதை :
(i) கவிதைக்குரிய உறுப்புகளை வைத்துக் கவிதை எழுதும் போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும்.

(ii) தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும்.

(iii) செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகளில் எப்போதும் புகழ் தங்கும். . இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது
அ) கவிதை
ஆ) கொச்சைச் சொற்கள்
இ) பாட்டு
ஈ) உரைநடை
Answer:
ஈ) உரைநடை

Question 2.
சிறந்த படைப்புகள் உருவாக பெரும் துணையாக இருப்பது
அ) கவிதை
ஆ) கட்டுரை
இ) கல்வி
ஈ) பள்ளிக்கூடம்
Answer:
இ) கல்வி

Question 3.
அடியின் கீழே அடியிருந்தால் வருவது
அ) சீர்
ஆ) அசை
இ) தளை
ஈ) தொடை
Answer:
ஈ) தொடை

Question 4.
இரண்டுசீரின் இடைவெளியில் வருவது
அ) தளை
ஆ) அசை
இ) எதுகை
ஈ) மோனை
Answer:
அ) தளை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 5.
எதுகை, மோனை இல்லாமல் அடியளவு அறிந்திடாமல் வருவது
அ) உரைநடை
ஆ) செய்யுள்
இ) தளை
ஈ) தொடை
Answer:
அ) உரைநடை

Question 6.
வெள்ளைப்பாட்டின் இறுதிச்சீர் தருவது
அ) நாள்
ஆ) காசு
இ) மோனை
ஈ) இயைபு
Answer:
ஆ) காசு

Question 7.
முன்னோர் போல் கற்று வந்தால் உள்ளத்தில் விளைவது
அ) அருள், அறம்
ஆ) அறம், மறம்
இ) அறம், பொருள்
ஈ) பொருள், இன்பம்
Answer:
இ) அறம், பொருள்

Question 8.
சுரதாவின் இயற்பெயர்
அ) கோபால்
ஆ) இராசகோபால்
இ) துரைகோபாலன்
ஈ) இராசகோபாலன்
Answer:
ஈ) இராசகோபாலன்

Question 9.
கூற்று 1 : பழுத்திருந்தால் சாறு வரும் ; வயலில் தண்ணீர் பாய்ந்திருந்தால் ஏர் வரும்.
கூற்று 2 : அடியின் கீழ் அடியிருந்தால் தொடை வரும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 10.
கூற்று : எதுகை மோனை சேர்க்காமல், அடியளவை அறிந்திடாமல் வார்க்கின்ற வடிவந்தான் வசனம்.
காரணம் : எளிய மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவதே உரைநடை.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் சரி
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் சரி

Question 11.
கூற்று 1 : எழுத்தெண்ணி முன்னோர் போல் கற்றுவந்தால் அறம் பொருள் உள்ளத்தில் விளையும்.
கூற்று 2 : தேமாவும், புளிமாவும் மரத்தில் காய்க்கும் ; சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Question 12.
சரியானதைத் தேர்க.
அ) பூக்கும் வரை பூ என்போம்.
ஆ) ஆக்கிய பின் அரிசி என்றும்.
இ) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே செய்யுள்.
ஈ) கவிநடையும் உரைநடையும் வேறுவேறு அல்ல.
Answer:
இ) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே செய்யுள்.

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சிறந்த கேள்வி எழ்புவதால் படிப்பு வரும்
ஆ) நுணுக்கத்தோடே முன்னோர் போலக் கற்க வேண்டாம்.
இ) மொழியை அறியாமல் எழுதுவோரே புகழ் அடைவார்.
ஈ) வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு.
Answer:
ஈ) வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 14.
பொருந்தாததைத் தேர்க.
அ) கண்வேறு ; கல்விக் கண் வேறு.
ஆ) புகழ் வேறு ; செல்வாக்கு வேறு.
இ) வெண்மதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல.
ஈ) மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும் மணல் வேறு.
Answer:
இ) வெண்மதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல.

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) பழம் – சாறு
ஆ) தண்ணீ ர் – எர்
இ) அடி – இரண்டுசீர் இடை
ஈ) பா தொடை நன்கு அமை
Answer:
இ) அடி – இரண்டுசீர் இடை

Question 16.
பொருத்துக.
அ) தொடைகள் – 1. அசைகள்
ஆ) தளைகள் – 2. தொடைகள்
இ) எழுத்துகள் – 3. பாக்கள்
ஈ) அடியின் கீழ் அடிகள் – 4. சீரின் இடைவெளியில்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 3, 1, 4, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
பொருத்துக.
அ) எரு – 1. ஆராய்ச்சி
ஆ) கேள்வி – 2. குளிர்
இ) அத்தி இரவு – 3. பயிர்
ஈ) கற்றால் விளையும் – 4. அறம் பொருள்

அ) 3, 2, 1, 4
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
ஆ) 3, 1, 2, 4

Question 18.
இதில் வெற்றிபெற என்னும் சுரதாவின் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை
அ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) கலிவிருத்தம்
ஈ) நேரிசை ஆசிரியபா
Answer:
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 19.
இதில் வெற்றிபெற என்னும் சுரதாவின் கவிதை இடம்பெற்றுள்ள காதைத் தொகுப்பு
அ) தேன்மழை
ஆ) துறைமுகம்
இ) அமுதும் தேனும்
ஈ) மங்கையர்க்கரசி
Answer:
ஆ) துறைமுகம்

Question 20.
உவமைக்கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர்
அ) சுரதா
ஆ) வெ.ராமலிங்கனார்
இ) அப்துல் ரகுமான்
ஈ) மு.மேத்தா
Answer:
அ) சுரதா

Question 21.
சுரதா நடத்திய இதழ்
அ) காவியம்
ஆ) தென்றல்
இ) குயில்
ஈ) எழுத்து
Answer:
அ) காவியம்

Question 22.
சுரதா என்பதன் விரிவாக்கம்
அ) சுப்புரத்தினதாசன்
ஆ) சுதாரகுநாததாசன்
இ) சுப்பிரமணியரத்தினதாசன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சுப்புரத்தினதாசன்

Question 23.
இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
அ) சுரதா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 24.
சுரதா பெற்றுள்ள விருதுகள்
i) தமிழக அரசின் கலைமாமணி விருது
ii) பாரதிதாசன் விருது
iii) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 25.
தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்;
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்; – என்று எழுதியவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
அ) சுரதா

Question 26.
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு – என்னும் அடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்
அ) எதுகை
ஆ) இயைபு
இ) அந்தாதி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) எதுகை

Question 27.
சுரதாவின் ‘காவியம்’ என்னும் இதழ்
அ) முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது.
ஆ) முழுக்க முழுக்க சிறுகதைகளைக் கொண்டது.
இ) குறும்புதினங்களின் தொகுப்பினைக் கொண்டது.
ஈ) இவற்றில் எதுவும் கொண்டதில்லை.
Answer:
அ) முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 28.
தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்
அ) சுரதா
ஆ) அப்துல் ரகுமான்
இ) வாணிதாசன்
ஈ) மு.மேத்தா
Answer:
அ) சுரதா

குறுவினா

Question 1.
புண் வேறு ; வீரர்களின் விழுப்புண் வேறு ;
புகழ் வேறு ; செல்வாக்கு வேறு ; காணும் – இப்பாடல் வரிகளில் அமைந்துள்ள நயங்களை எடுத்து
எழுது.
Answer:
சீர் மோனை – புண்வேறு – புகழ்வேறு
இயைபு – ‘வேறு’ என்ற சொல் ஓசை நயத்துடன் சீர்களில் இடம் பெற்றுள்ளது.

Question 2.
‘இதில் வெற்றி பெற’ என்ற சுரதாவின் கவிதையில் இடம் பெற்றுள்ள உவமை எடுத்து எழுதுக.
Answer:
‘செடியில் பூத்த பூமீது வண்டுவந்து தங்கும்’.

Question 3.
புண் வேறு, விழுப்புண் வேறு – விளக்குக.
Answer:
புண்:
உடலில் காயத்தால் ஏற்படுவது. இது இயல்பாகவோ, விபத்து மூலமாகவோ நோய் மூலமாகவோ ஏற்படலாம்.

விழுப்புண் :
விழுப்புண்ணும் உடலில் ஏற்படுவதுதான். ஆனால் இது வீரத்தினை வெளிப்படுத்தும் எதிரியுடன் போரிட்டு பெற்ற புண்ணைக் குறிக்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 4.
கவிஞர் சுரதா நடத்திய இதழ்கள் யாவை?
Answer:
இலக்கியம், விண்மீன், ஊர்வலம், காவியம்.

Question 5.
கவிஞர் சுரதா அவர்கள் பெற்றுள்ள விருதுகள் யாவை?
Answer:

  • தமிழக அரசின் கலைமாமணி விருது.
  • பாரதிதாசன் விருது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.

Question 6.
உரைநடை, கவிதை – வேறுபடுத்துக.
Answer:

  • உரைநடை என்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது.
  • கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அடைவது.

Question 7.
அறம்பொருள்கள் உள்ளத்தில் விளைய என்ன செய்ய வேண்டும் என்கிறார் சுரதா?
Answer:
நுட்பமான எழுத்தை எண்ணி முன்னோர்கள் போன்று கற்று வரும் பட்சத்தில், அறம் பொருள்கள் உள்ளத்தில் விளையும் என்று சுரதா கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 8.
விண்வெளியில் இயங்குவனாகச் சுரதா கூறுவன யாவை?
Answer:

  • வெண்மதி (வெண்ணிலவு)
  • செங்கதிரோன் (சூரியன்)
  • முகில் (மேகம்)

சிறுவினா

Question 1.
‘வேறு’ என்ற சொல்லைப் பயன்படுத்தி கவிஞர் கவிதை புனைத்துள்ள கவித்திறமையை விளக்குக.
Answer:

  • வானம் வேறு, ஆனால் வானத்தில் இயக்கும் நிலவும், கதிரவனும் மேகமும் வேறு.
  • மண் பலவகைப்படும். செம்மண், வண்டல்மண், கரிசல் மண் எனலாம். ஆனால், மண்ணில் சாய்ந்திருக்கும் மணல் என்பது வேறு.
  • பனித்துளியும் நீர்தான் உள்ளது. மழைத்துளியிலும் நீர்தான் ஆனால் இரண்டும் வெவ்வேறு.
  • புண் என்றால் உடம்பில் ஏற்படும் காயம் தான், ஆனால் சாதாரணமாக வருவது புண் ; போரில் பெறுவது விழுப்புண்.
  • புகழ் என்பதும் செல்வாக்கு என்பதும் எல்லோருக்கும் நம்மைத் தெரியும் என்றே கூறப்பட்டாலும், புகழ் என்பது கல்வி, நற்செயலால் வருவது, ஆனால் செல்வாக்கு என்பது பொருளால் வருவது.
  • காணும் கண் ; கல்விக்கண் வேறு – பார்க்கும் கண்ணால் உலகைப் பார்த்துக் கொள்ளலாம். கல்விக் கண்ணால் அறியாமை அகன்று நாம் அகஒளியைப் பெறுகின்றோம்.
  • இவ்வாறுதான் கவிதையும் உரைநடையும் எழுதப்படுவனவாக இருந்தாலும் இரண்டின் நடையழகும் வேறு வேறாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 2.
பூக்கும் வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லைச்
சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல் அடியளவை அறிந்திடாமல் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது கவிஞர் சுரதாவின் துறைமுகம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள “இதில் வெற்றிபெற” என்னும் பகுதியில் உள்ளது.

பொருள் :
பூக்கும் வரை அரும்பு பூத்தப்பின் பூ
தனியாக இருந்தால் சொல் முறையாகச் சேர்த்தால் கவிதை

விளக்கம் :
மரத்தில் இருக்கும் பூவானது விரியாமல் இருக்கும் வரை மொட்டு என்றுதான் அழைக்கப்படும். அதுவே பூத்துவிட்டால் அதனைப் பூ என்று அழைப்போம் அதுபோன்றுதான் பரவலாக இருக்கும் எல்லா வார்த்தைகளையும் சரியான முறையில் எதுகை, மோனையுடன், அடியளவையும் அறுதியிட்டுச் சேர்த்தால் அதனைக் கவிதை என்போம். அதுவே எதுகை, மோனை இல்லாமல், அடிவரையரையின்றி வந்தால் அதனை உரைநடை என்போம் என்று கவிஞர் கூற வரும் இடத்தில் இப்பாடல் அடியினை எழுதியுள்ளார்.

Question 3.
‘வரும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிஞர் சுரதா எழுதியுள்ளவை யாவை?
Answer:

  1. பழம் பழுத்திருந்தால் அதிலிருந்து சாறு வரும்; வயலில் தண்ணீர் பாய்ந்தால் உழவுத் தொழிலை மேற்கொள்ள ஏர்கள் வரும்.
  2. எழுத்துகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து அசைகள் வரும்; செய்யுளில் இரண்டு சீர்களின் இடையிலே சரியான தளைகள் வரும்.
  3. தளைகள் முறையாக அமைந்து அடிகள் வரும்; அடிகளை வரிசையாக அடிக்கியிருந்தால் தொடைகள் வரும்.
  4. தொடைகள் சரியாக அமைந்து இருந்தால் முறையான கவிதை உருவாகும்.

Question 4.
‘தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும் ;
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம்
இப்பாடல் வரியானது கவிஞர் சுரதாவின் துறைமுகம்’ என்று கவிதைத் தொகுப்பில் இடம் : பெற்றுள்ள “இதில் வெற்றிபெற” என்னும் பகுதியில் உள்ளது.

பொருள் :
மாங்காயும், புளியங்காயையும் மரத்தில் காய்ப்பதாகும். அதைப் போன்று செய்யுளிள் முறையாக சீர்கள் அமைக்கப்பட்டால் அச்சீர்களிலும் இவை தோன்றும்.

விளக்கம் :
மாமரத்திலும், புளியமரத்திலும் முறையான பருவநிலைகள் நிலவி எவ்விதமான நோய்த்தாக்குதலும் இல்லாமல் இருந்தால் மிகுதியாக மாங்காயும், புளியங்காயும் மரத்திலே காய்த்துக் கிடக்கும். அதுபோலவே, எழுத்துகளைக் கொண்டு சீர்கள் அமைக்கும் போது முறையான எழுத்துகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறப்பான சீர்கள் அமைந்தால் அந்தச் சீர்களுக்கு இடையே இந்தத் தேமா, புளிமா என்ற அசை வாய்ப்பாடு நன்றாகக் காய்க்கும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

Question 5.
கவிஞர் சுரதா ஒரு சிறந்த சொல்லேர் உழவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ‘இதில் வெற்றிபெற’ என்ற கவிதையில் ‘விளையும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிபுனைந்த திறமையை விளக்குக.
Answer:

  • எருவைப் பயன்படுத்தினால் பயிர் நன்றாக விளையும் ;
  • சிறந்த கேள்விகள் எழுப்புவதால் ஆராய்ச்சிகள் புதிது புதிதாக விளையும் ;
  • மாலை நேரத்திலும், இரவிலும் நன்றாக குளிர்விளையும் ;
  • மிகவும் நுட்பமாக எழுத்துகளை எண்ணி, சிறந்த பொருள்களைப் புரிந்து நம் முன்னோர்கள் கற்று வந்தது போல கற்று வந்தோம் என்றால், நம் உள்ளத்தில் அறம், பொருள் விளையும் ;
  • மதிக்கத்தகுந்த அறிவினால் ஒருவனுக்கு புகழ் விளையும்.

Question 6.
கவிஞர் சுரதா பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : இராசகோபாலன்.

சிறப்புப் பெயர் : பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். பிறகு சுரதா என்று மாற்றிக் கொண்டார்.

இலக்கியப் பணி : இலக்கியம், விண்மீன் , ஊர்வலம், போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியவர்.
தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.

விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.

Question 7.
கவிஞர் சுரதா சிறந்த உவமைக் கவிஞர் என்பதற்கு உன் பாடப்பகுதியைக் கொண்டு விளக்குக.
Answer:
(i) மரத்திலே ஆங்காங்கே பூக்கள் மொட்டுகளாக இருக்கும். அவைப் பூத்துவிட்டால் பூ என்று பெயர் பெற்று எல்லோரும் அறியும் விதத்திலும் பயன்தரும் விதத்திலும் அமையும்.

(ii) அதுபோல தமிழ்மொழியின் பல்லாயிரக்கணக்கான சொற்கள் நிரம்பி இருந்தாலும் அவை முறையாக வைக்கப்பட்டால், எதுகை, மோனையோடு அடிவரையரையுடன் இருந்தால் கவிதையாகும். அவ்வாறு இல்லையெனில் உரைநடையாகும் என்னும் வரிகளில் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

(iii) செடியில் பூத்த பூ மீது வண்டு வந்து தங்கும் என்பதனையும் உவமைப்படுத்தியுள்ளார். பூ பூத்து மணம் பரப்பி தன்னுடைய இருப்பை உலகிற்குச் சொல்லி வண்டுகளை அழைத்து தன் இருப்பை அடுத்தவர்களுக்கு அறியச் செய்கிறது.

(iv) புலவர்கள் சிறப்பாகப் பாடல்களை எழுதினார்கள் என்றால் அவர்களின் பாடல் மேல் புகழ்வந்து தங்கும் என்று கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

குறுவினா

Question 1.
ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
ஈரசைச்சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள், இயற்சீர், ஆசிரிய உரிசர்சான்பன. ஈரசைச்சீர்கள் மாச்சீர் (தேமா, புளிமா), விளச்சீர் (கூவிளம், கருவிளம்) என இரு வகைப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘செய்யுள்’ என்னும் பொருளைக் குறிக்கும் சொற்கள் எவை?
Answer:
செய்யுள் என்னும் பொருளைக் குறிக்கும் சொற்கள், காக்கு கவி, கவிதை, பாட்டு என்பன.

Question 3.
செய்யுள் உறுப்புகள் எவை?
Answer:
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பல செய்யுள் உறுப்புகளாகும்.

Question 4.
அசையாவது யாது? அது எத்தனை வகைப்படும். அவை யாவை?
Answer:

  • எழுத்தோ எழுத்துகளோ சேர்ந்து அசைத்து, ஆசைபொருந்த சீர்க்கு உறுப்பாக வருவது அசை.
  • அது இரண்டு வகைப்படும். அவை நேர் நிரை.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 5.
நேரசை எவ்வாறு அமையும்?
Answer:
குறில் தனித்தோ, குறில் ஒற்றிணைத்தோ, நெடில் தனித்தோ, நெடில் ஒற்றிணைந்தோ நேர்’ அசை அமையும்.

Question 6.
நிரையசை எவ்வாறு அமையும்?
Answer:
இருகுறில் இணைந்தோ, இருகுறிலோடு ஒற்றிணைந்தோ, குறில்நெடில் இணைந்தோ, குறில் நெடிலோடு நற்றிணைந்தோ, நிரை அசை அமையும்.

Question 7.
நேரிசை ஆசிரியப்பா எவ்வாறு அமையும்?
Answer:
ஈற்றயல் அடி மூன்று சீர்களாய் அமைய, ஏனைய அடிகள் நான்கு சீர்களாக அமைய வருவது, நேரிகை ஆசிரியப்பா.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 8.
எல்லா அகளும் நான்கு சீர்களாக அமைந்து வரும் ஆசிரியப்பாப் பெயர் என்ன?
Answer:
எல்லா அடிகளும் நான்கு சீர்களாக அமைந்து வரும் ஆசிரியப்பா ‘நிலைமண்டில ஆசிரியப்பா’. இது ‘ஏ’, ‘என்’ என்னும் ஈற்று அசை பெறுவது சிறப்பு என்பர்.

Question 9.
இணைக்குறள் ஆசிரியப்பா எவ்வாறு அமையும்?
Answer:
முதல் அடியும் இறுதி அடியும் நான்கு சீர்களைப் பெற்று, இடையடிகள் ஈரசை, மூவசைச் சீர்களைப் பெற்று வருவது, இணைக்குறள் ஆசிரியப்பா.

Question 10.
அடிமறிமண்டில ஆசிரியப்பா என்பது யாது?
Answer:
அடிகளை முன்பின்னாக மாற்றிப் பாடினாலும் பொருளோ, ஓசையோ மாறாது அமைவது அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 11.
ஆசிரியப்பாவின் இனங்கள் யாவை?
Answer:
ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் என்பன, ஆசிரியப்பாவின் இனங்களாகும்.

சிறுவினா

Question 1.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்துள், எவையேனும் நான்கினைக் கூறுக.
Answer:

  • எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வரும்.
  • இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
  • நிரை நடுவாகிய (கூவிளங்கனி, கருவிளங்கனி) வஞ்சி உரிச்சீர்கள் வாரா.
  • இறுதி அடியின் இறுதிச் சீர் ‘ஏ’ என்னும் ஓசையில் முடிவது சிறப்பு.

பலவுள் தெரிக

Question 1.
நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது……………………….
அ) காய் முன் நேர்
ஆ) காய் முன் நிரை
இ) கனி முன் நிரை
ஈ) மா முன் நேர்
Answer:
ஈ) மா முன் நேர்

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
பாக்களின் வகை, ஓசை இயற்றும் விதிமுறைகளைக் கூறும் நூல்……………………….
அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) யாப்பருங்கலக்காரிகை
ஈ) புறம்பொருள் வெண்பா மாலை
Answer:
இ) யாப்பருங்கலக்காரிகை

Question 3.
பா (செய்யுள்) எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
இ) நான்கு

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 4.
கலிப்பாவிற்கு உரிய ஓசை……………………….
அ) துள்ளலோசை
ஆ) செப்பலோதை
இ) அகவலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
அ) துள்ளலோசை

Question 5.
‘அகவலோசை’ பெற்று வருவது……………………….
அ) வெண்பா
ஆ) கலிப்பா
இ) ஆசிரியப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
இ) ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 6.
செய்யுளில் இசையைப் பிணைப்பவை ……………………….
அ) எழுத்து, அசை, சீ
ஆ) எதுகை, மோனை, இயைபு
இ) அடி, தொடை பா
ஈ) சீர், அடி, தொடை
Answer:
ஆ) எதுகை, மோனை, இயைபு

Question 9.
‘அகவற்பா’ எனக் குறிப்பிடப்படுவது……………………….
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 10.
‘ஆரிய உரிச்சீர்’ என்று அழைக்கப்படுவது……………………….
அ) ஈரசைச்சீர்
ஆ) மூவசைச்சீர்
இ) ஓரசைச்சீர்
ஈ) நாலசைச்சீர்
Answer:
அ) ஈரசைச்சீர்

Question 11.
எல்லா அடிகளும் அளவடி (நாற்சீர் அடி) பெற்று வருவது……………………….
அ) நிலைமண்டில ஆசிரியப்பா
ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா
Answer:
அ) நிலைமண்டில ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 12.
முதலடியும் இறுதி அடியும் அளவடிகளாகவும், இடையடிகள் குறளடி, சிந்தடிகளாகவும் வரும் ஆசிரியப்பா……………………….
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) நிலைமண்டில ஆசிரியப்பா
இ) இணைக்குறள் ஆசிரியப்பா
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா
Answer:
இ) இணைக்குறள் ஆசிரியப்பா

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
ஆசிரியப்பா, நான்கு வகைப்படும். அவை: நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா.

Question 2.
ஆசிரியப்பாவிற்குரிய சீரும் தளையும் யாவை?
Answer:

  • மாச்சீர், விளச்சீர் எனும் ஈரசைச் சீர்கள், ஆசிரியப்பாவிற்குரிய சீர்களாகும்.
  • வெண்பாவிற்குரிய காய்ச்சீர்கள் வரலாம்.
  • நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் ஆசிரியப்பாவின் தளைகளாகும்.
  • பிற தளையும் கலந்து வரும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 3.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளையும், அவை இயற்றுவதற்கான விதிகளையும் கூறுக.
Answer:

  • ஆறுசீர்கள் நான்கு கொண்டதாக அமைந்து, நான்கு அடிகளும் அளவு ஒத்து வரவேண்டும்.
  • முதல்சீரிலும், நான்காம் சீரிலும் மோனை அமைத்தும், முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைத்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதலாம்.

Question 4.
பொருத்துக.
அ) நேரிசை ஆசிரியப்பா – i) முதலடியும் இறுதியடியும் அளவடிகளால் வரும்
ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா – ii) அடிகளை மாற்றிப் பாடினாலும் ஓசயும் பொருளும் மாறாது
இ) நிலைமண்டில ஆசிரியப்பா – iii) ஈற்றயல் அடி சிந்தடியாய் வரும்
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா – iv) எல்லா அடிகளும் அளவடி பெற்று வரும்
Answer:
அ – iii ஆ – 1 இ – iv ஈ – ம

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

மொழியை ஆள்வோம்,
சான்றோர் சித்திரம்
இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர் (1882 – 1954)

தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர். இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். டி. கே. சி.யின் வீட்டுக் கூடத்தில் வட்டவடிவமான தொட்டிக் கட்டு. ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய காலம், இலக்கியத்தைப் பற்றிப் பேசியது. அவ்வமைப்பு, ‘வட்டத் தொட்டி’ என்றே பெயர் பெற்றது. டி. கே. சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும். வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார்.

தமிழ்க்கலைகள், தமிழ்இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவாகம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. இதய ஒலி, தயார் யார்? முதலான நூல்களும், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவ தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம். சென்னை மாநில மேலவையின் உறுப்பினர் கவும், அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்த டி.கே.சி. ஏற்றிய இலக்கிய ஒளி, தமில் அழகியலை வெளிச்சப்படுத்தியது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அன்று, அல்ல என்பவற்றுக்கான பொருள்வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க.
Answer:
அன்று : நீ செய்யும் செயல் நன்று அன்று.
அல்ல : நான் கேட்டவை இவை அல்ல.

Question 2.
சொல்லச் சொல்ல, திளைப்பர் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
சொல்லச் சொல்ல – அடுக்குத்தொடர்
திளைப்பர் – படர்க்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 3.
ரசிகர் – தமிழ்ச்சொல் எழுதுக. மாநில மேலவை – ஆங்கிலக் கலைச்சொல் தருக.
Answer:
ரசிகர் – சுவைப்பவர், சுவைஞர்,
மாநில மேலவெ – Legislative Council

Question 4.
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார் – விடைக்கேற்ற வினா அமைக்க.
Answer:
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிட, எதில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார்?

Question 5.
மேலவை, புத்துணர்வு – இச்சொற்களின் புணர்ச்சி வகையைக் கண்டறிக.
Answer:
மேலவை – மேல் + அவை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மேலவை)
புத்துணர்வு – புதுமை + உணர்வு
“ஈறுபோதல்” (புது + உணர்வு)“தன் ஒற்று இரட்டல்” (புத்து + உணர்ச்சி)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (புத்த் + உணர்வு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (புத்துணர்வு)

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. டி. கே. சிதம்பரநாதர் தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு
ஊட்டினார். வினா : டி. கே. சிதம்பரநாதர் தமிழுக்கும் தமிழருக்கும் எவ்வாறு பத்துணர்வு ஊட்டினார்?

2. டி. கே. சி. எழுதிய கடிதங்களும் நூல் உரைகளும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம்.
வினா : எவற்றை டி. கே. சி. இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம்?

தமிழக்கம் தருக

The folk songs of TamilNadu have in thema rawarkable charm just as we find in the folk songs of any other country. But what is special in Mese Tamil songs is, they not only possess a native charm and the aroma of the soil but have reserved in them a certain literary and artistic quality. This is so because the people who yowak the language of these folk songs, the Tamils, have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet so full of life that they are alwax new and progressively modern. These songs were born several centuries ago; they are baing born every generation; they will be born and reborn over and over again!
Answer:
தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள், பிறமொழி நாட்டுப்புறப் பாடல்களைவிட ஒரு குறிப்பிடத்தக்க அழகுணர்ச்சி நிறைந்த கவாசி யைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதனால், தமிழில் உள்ள பாடல்கள் தனிச்சிறப்பு உடையன.

இயற்கை அழகின் தோற்றத்தையும், சொந்த மண்ணின் மணத்தையும், குறிப்பிட்ட இலக்கிய மற்றும் கலை உணர்வுகளையும் தன்னகத்தே பாதுகாத்து வைத்துள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள், அவை புழங்கும் தமிழ் மொழி ஒரு பெரிய வரலாற்றைக் கடந்த அற்புதமான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டதாக இருந்துள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள், மிகவும் பழைமையானவை.

அது புதிய வாழ்க்கையையும் படிப்படியாக தவனமயமாக்கப்படும் வாழ்க்கையையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு தலைமுறைய பெருக்கும் மறுபடியும் மறுபடியும் தோன்றிப் புதுப்பித்து வந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கீழ்க்காணும் பாடலின் முதலடியைக் கவனித்துப் பிற அடிகளில் உள்ள சீர்களை ஒழுங்கு செய்க.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்றதீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்தசுகந்தமணமலரே
மேடையிலேவீசுகின்றமெல்லியபூங்காற்றே
மென்காற்றில்விளைசுகமேசுகத்திலுறும்பயனே
ஆடையிலே எனைமணந்தமணவாளாபொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந்தருளே.
Answer:
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

படித்துப் பார்த்துப் படைத்துக் காட்டுக

புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த சான்றோர் குறித்த அறிமுக உரை :

பேரன்பு கொண்டோரே! பேரறிவுச் செல்வமே பெருஞ்செல்வம் எனக் கருதி வந்திருக்கும் சான்றே ரே! இளைய தலைமுறையே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொல்றேன்.

புத்தக வாசிப்பை மூச்சுக்காற்றாய்ச் சுவாசித்து வாழ்கின்ற படிப்பாளர்களாகிய உங்கள் முன்பு ஒரு படைப்பாளரை, மிகச் சிறந்த பண்பாளரை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். சிறுவயது முதலாகத் தனக்குப் பெற்றோர்கள் அளித்த சில்லறைகளைச் சேகரித்து, ஆண்டுதோறும் புத்தகம் வாங்கும் வழக்கத்தைக் கொண்டவர்.

புத்தகங்களோடு வாழ்ந்து வருபவர். புத்தகத்தை வாங்குவ தாடு மட்டுமல்லாமல் முழுமையாக அவற்றை வாசிப்பதும், குறிப்பெடுப்பதும் இளைய தலைமுறையினர்க்குத் தன்னம்பிக்கை அளிக்கும் கூட்டங்களில் பேசுவதும் எனப் பல்வேறு திறன்களைப் பெற்றவர்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

ஷேக்ஸ்பியர் என்னும் மாபெரும் படைப்பாளரின் பிறந்த நாளான ஏடல் 23ஐ, உலகம் முழுவதும் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த வாசிப்பு வழக்கமே ஆகும். அவ்வகையில் வாசிப்பையே தம் வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் தம் சிறப்பு விருந்தினர், நமக்கெல்லாம் முன்மாதிரியானவர். அவர் வழியில் புத்தக வாசிப்பைத் தொடர்போடி! புதியதோர் உலகம் படைப்போம்! வெல்வோம்!

உங்கள் பகுதி நூலகத்தில் வாசகர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்க வருகைதரும் அறிஞரை அறிமுகம் செய்க.

திரண்டுள்ள அனைவருக்கும் வணக்கம்.
நாம் இன்று இங்குத் திரண்டிருப்பதன் நோக்கத்தை அனைவரும் அறிவீர்கள். இன்று, பெருமைக்குரிய ஐயா, அறிவொளி அவர்கள் இங்கு உங்கள் அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டை வழங்க வந்துள்ளார் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. இருப்பினும் சில கூறி முடிக்கிறேன். இவர் சிறந்த சொற்பொழிவாளர், உன்னதமான எழுத்தாளர், உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, நம் தமிழின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பைப் பறையறைந்து கொண்டிருப்பவர். இவர் போன்றவர்களை நாம் பெற்றிருப்பது, நம் நாட்டுக்கும் மொழிக்கும் பெருமை சேர்க்கிறது.

இவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். இந்த விழாவைப் பற்றிக் குறிப்பிட்டு அழைத்ததும், முகமலர்ச்சியோடு மறுப்புத் தெரிவிக்காமல் வர உடன்பட்டார். இனி அவர் தரும் நூலக அட்டைகளைப் பெற்றுச் சென்று, இந்த நூலகத்திலுள்ள நூல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசித்து, மகிழ்ச்சி அடையுமாறு வேண்டுகிறேன்.

ஐயாவுக்கும் உங்களுக்கும் நன்றி. வணக்கம்.
இலக்கிய நயம் பாராட்டுக

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 1

ஆசிரியர் குறிப்பு : ‘பெ. தூரன்’ என்று சுருக்கப் பெயரில் குறிப்பிடப் பெறுபவர், ‘பெரியசாமித்

தூரன்’. இவர் சிறந்த இலக்கியப் புலமையும், ஆழ்ந்த அறிவியல் அறிவும் பெற்றவர். தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காகத் தாய்மொழியில் இனிய எளிய பாடல்களை எழுதி, நல்லறிவு புகட்ட முயன்றார். தமிழ்மொழியில் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தைப் படைத்தளித்த உழைப்பாளி.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

திரண்ட செய்தி : இயற்கையைப் போற்ற வேண்டும். அதனால் வளம் பெருகும். உணவுப் பொருள் உற்பத்தி பெருகும். வறுமை போகும் என்பவற்றை வலியுறுத்துகிறார். முன்பு சாதி, சமய வேறுபாடுகளால் சிதைந்து அடிமைப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கி அனைவரும் ஒரு குடும்பமாக வாழவேண்டுமென அறிவுரை கூறுகிறார்.

ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வது நல்லது என்னும் செய்தி, உறுதிபடக் கூறப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கலில் தமிழ்ப்பண்பு வெளிப்பட விழா எடுத்து வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார். வேற்றுமைகளை மறந்து, மனித இன உயர்வுக்குப் பாடுபட வேண்டுமென் வதை வலியுறுத்துகிறார். எளிய சொற்களில், இனிய கருத்தை அருமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடை நயம் :
மோனைத்தொடை : ஒருதனி, ஒற்றுமை; தமிழன், தமிழன்; புவியெலாம், புறம்பிலை யாதும், யாவரும் என்னும் சீர்களில், முதலெழுத்து ஒன்றிவந்து, சீர்மோனை அமைந்துள்ளது.

இயைபுத்தொடை : விளைந்தனவே, விரிந்தனவே; போயொழிக, நலமுறுக, வாழ்ந்திடுவோம், செய்திடு வோம்; சாற்றியதும், ஏற்றதுவும் என்னும் ஈற்றுச்சீர்களில், ஓசைநயம் பொருந்தி, இயைபுத் தொடை அமைந்துள்ளது.

சந்தநயம் : எளிய சொற்களில் ஓசைநயம் பெறப் பாடி இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளமை, சந்தநயத்தைப் புலப்படுத்தும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

மொழியோடு விளையாடு

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக
Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 2

தமிழ் மொழியின் ஐவகை இலக்கணப் பிரிவுகளுள் ‘பொருள் இலக்கணம்’ தமிழர் வாழ்வுமுறை கூறுவதாகும். இந்தப் பொருள் இலக்கணம் என்பது, அகம் (அகப்பொருள்), புறம் (புறப்பொருள்) என இருவகையாகப் பிரிக்கப் பெற்றுளராது.

அன்பு நிறை காதல் வாழ்வைப் பற்றிக் கூறும் அகப்பொருள் செய்திகளை விளக்கும் இலக்கணம் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூவகைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

முதல்பொருள் என்பது (நிகழ்வு நடைபெறும்) நிலத்தையும் பொழுதையும் குறிக்கும். நிலமானது குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐந்து வகைப்படும்.

‘குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
‘முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
மருதம்’ என்பது வயலும் வயல் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
நெய்தல்’ என்பது கடலும் கடல் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
‘பாலை’ என்பது சுரமும் சுரம் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.

பொழுது என்பதைச் சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைகளாகப் பிரிப்பர். சிறுபொழுது என்பது ஒருநாளின் வைகறை, காலை, நண்பகல், மாலை, எற்பாடு, யாமம் என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டதாகும். பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டதாகும்.

‘கருப்பொருள்’ என்பது தெய்வம், மக்கள், புள் (பறவை), விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்னும் பிரிவுகளைக் கொண்டது. இது ஐந்து திணைகளுக்கும் தனித்தனியே அமையும்.

‘உரிப்பொருள்’ என்பது புணர்தல் புணர்தல் நிமித்தம், பிரிதல் பிரிதல் நிமித்தம், இருத்தல் இருத்தல் நிமித்தம், ஊடல் ஊடல் நிமித்தம், இரங்கல் இரங்கல் நிமித்தம் என ஐந்து வகைப்படும். இவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திணைகளுக்கு உரியனவாகும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

புதிர்களுக்கான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (கம்பு, மை, வளை, மதி, இதழ், ஆழி)
1. எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும்………………….
2. அடிக்கவும் செய்யலாம்; கோடைக்குக் கூழாகக் குடிக்கவும் செய்யலாம்………………….
3. கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம்.
4. அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுதான்………………….
5. பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே………………….
6. வண்டியையும் இயக்கும்; பெரும் கப்பலையும் தாங்கும்.
Answers:
1. வளை ,
2. கம்பு,
3. மை,
4. மதி,
5. இதழ்,
6. ஆழி.

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 3

கத்திக்கும் ஈட்டிக்கும் இப்போது இடமில்லை!
புத்திக்கும் உழைப்புக்குமே இடம் உண்டு!

முயற்சி செய் முடிவு உன்கையில்!
உழைப்பவர்க்கே ஊதியம் கிடைக்கும்.
எண்ணித் துணிந்தால் எதுவும் கைகூடும்.
வெற்றி எப்போதும் எட்டாக் கனிதான்
ஏன் எட்டாது என முயன்று பார்!
மனம் ஊனமுற்றால் உழைக்க முடியாது
உறுதியோடு போரிட்டவனே உலகை ஆண்டான்
விதியே உன்னதம் என்றால், உன் முயற்சி என்னவானது?

நம்பிக்கை உள்ளோர் பிரச்சனைகளை மிதித்து வாய்ப்டை எதிர்நோக்குவர்!
வெற்றியை உறுதிசெய்யச் சோம்பலை விரட்டு!
அண்டவிட்டால் அழிவது உறுதி!
அச்சப்படாமல் தொட்டுப் பார்!
பயத்தைப் பலியிட்டு, உரிய காலத்தோடு கைகுலுக்கு!

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

ஆழ்கடல் மூழ்கியோர் முத்தெடுப்பர்
அடுத்து முயல்வோர் இமய உச்சி மிதிப்பர்!
கண் மூடாதே. பசி நோக்காதே
பழிமொழி கேளாதே, புகழ்மொ தவிர்!
குறிக்கோள் ஒன்றே குறியாது நில். வெற்றி உனதே!

நிற்க அதற்குத் தக

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 4

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கலைச்சொல் அறிவோம்

ஆவணம் – Document
உப்பங்கழி – Backwater
ஒப்பந்தம் – Agreement
படையெடுப்பு- Invasion
பண்பாடு – Culture
மாலுமி – Sailor

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 1.
பண்டைக்காலப் பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்பட்ட குறிப்பிடத்தக்க நடைமுறைகளில், தற்காலத்தில் மேற்கொள்ளத்தக்கவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் : வணக்கம் ஐயா! அக்காலத்தில் கையெழுத்து எப்படி இருந்தது ஐயா?

ஆசிரியர் : வணக்கம். எழுத்துகள் ஒன்றோடொன்று வரி கோணல் இல்லாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள். நாமும் அவ்வாறே எழுத வேண்டும். புள்ளி, கால், கொம்பு முதலிய வரி எழுத்தின் உறுப்புகளை அன்றைய பெரியோர்கள் பழக்கினார்கள். நாம் இன்றைய பெரியோர்களிடமிருந்து அவற்றைப் பழக்கிக் கொள்ள வேண்டும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை முதலானவற்றை மனனம் செய்தார்கள். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்தார்கள்.

மாணவன் : அப்படியா ஐயா! வேறு ஏதேனும் செய்தார்களா ஐயா?

ஆசிரியர் : ஆசிரியர் ஒவ்வொரு நாளும் மாணவர்களைத் தான் எழுதிய ஏடுகளின் எழுத்துகளின் மேலேயே எழுதி வரச் செய்தார்கள். இதுபோன்ற செயல்பாடுகளை
நீயும் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

மாணவன் : நன்றி ஐயா! உறுதியாகச் செய்கிறேன் ஐயா!

Question 2.
‘மனனம் செய்தல்’ – இன்றைய கல்வி நிலையிலும் குறிப்பிடத்தக்க ஒரு கூறு. இது பற்றிய பத்துக் கருத்துகளை முன் வைக்க.
Answer:

  • திருக்குறள், சான்றோர் சிந்தனைகள், அறநூல் தொடர்கள் போன்றவற்றை மனனம் செய்தால் தான் அறிவை வெளிக்கொணர முடியும். அன்று கவனச் சிதறல்கள் இல்லை.
  • இன்று கவனச்சிதறல்களின் ஊடேதான் கல்வி. எனவே, மனனம் செய்வதே நல்லது.
  • ர்வு நேரங்களில் மனனப் பாடல்கள், சில கொள்கைகள் மனனம் செய்தாலொழிய நினைவுக்கு வராது.
  • மனனம் என்பது மனதை ஒருமைப்படுத்தும் ஒரு தியானம். மனம் என்பது நீண்டநாள் மனதில் இருத்தி வைத்துக் கொள்ளும் ஒரு ஞாபக சக்தி. சான்றோர் அறிவுரை, முந்தைய நிகழ்வுகள் எல்லாம் மனனம் என்னும் வகையில்தான் அடங்கும்.
  • ஒரு ஆராய்ச்சியின் தொடர்ச்சி என்பது நேற்று என்ன செய்தோம் நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதும் மனன சக்தியே.
  • புரியாத ஒரு பகுதியை மனனம் செய்தோம் என்றால் விளங்கும் காலத்தில்தானே விளங்கும். : மனனம் இல்லை என்றால் மூளையின் செயல்பாடு குறையும் என்பது ஆராய்ச்சி கருத்து.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

எனவே, மனனத்தின் மீது கவனம் செலுத்துவது சிந்தனையாற்றலைச் சிறக்க வித்திடும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வசம்பு
ஆ) மணத்தக்காளியிலைச் சாறு
இ) கடுக்காய்
ஈ) மாவிலைக்கரி
Answer:
இ) கடுக்காய்

Question 2.
‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்
அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வேளாண்மை
Answer:
ஆ) கணிதம்

குறுவினா

Question 1.
அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை ?
Answer:

  1. தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்.
  2. கணிதத்தில் : கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள்.
  3. ‘தலைகீழ்ப்பாடம்’ என்ற முறையும் உண்டு.
  4. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற அகராதி வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

சிறுவினா

Question 1.
நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்?
Answer:
(i) மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு , செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.

(ii) கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன் மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்ததற்கான காரணத்தைக் கண்டு அவனைத் தேற்றுவேன்.

(iii) கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.

(iv) எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன். தகாத வார்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.

(v) மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவேன்.

(vi) மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல் ; துன்புறுத்தல், மனம்நோக நடத்தல் என்பன போன்ற மனவேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன்.

(vii) நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவனாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன்.

Question 2.
மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
Answer:

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

  • முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் எழுதினர். மணலில் எழுதிப் பழகுவர்.
  • எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.
  • பழங்காலத்தில் கல், களிமண்பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை.
  • மரப்பலகை, மூங்கில் பத்தை இவைகளின் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது கடினமாக இருந்தன. தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவினை உண் டாக்கின.
  • கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகைக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினர்.
  • எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதத்தில் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டனர்.

நெடுவினா

Question 1.
பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.

(ii) ஊர்தோறும் பொதுவாக இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். அம்மேடையை மன்றம் என்றும் அம்பலம் என்றும் கூறுவர். மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை . அதுதான் : பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. மரத்தடிப் பள்ளிகள் நாளடைவில் குடிசைப் பள்ளியாக மாறியது.

(iii) பெற்றோர்கள் ஐந்து வயதில் பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஒரு நல்ல நாளில் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பையனிடம் கொடுப்பர். உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்ல மாணவன் அதைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி மாணாக்கர்கள் பலர் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்பது’ என்பர்.

(iv) சுவடியில் எழுத்துகள் தெளிவாகத் தெரிய மஞ்சள், மணத்தக்காளிச் சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக் கரி தடவுவர். உபாத்தியாயர் மாணவர்களை முதலில் மணலில் எழுதிப் பழக்குவர். உபாத்தியாயர் எழுதியதின்மேல் மாணவர்கள் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவர்.

(v) எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.

(vi) மனனம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தனர். மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.

(vii)  தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியவற்றையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்களை மனப்பாடம் செய்ய வைப்பதன் மூலமாகக் கற்றுக் கொடுத்தனர்.

(viii) கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூ லம் கற்பித்தல் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் கற்றுவரும் முறையும் இருந்தது. சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையும், கற்றுக்கொடுத்தனர்.

(ix) ஆசிரியர்கள் மாணக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். கற்றல் கற்பித்தல் முக்கியமாக விளங்கியவாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது. அரசவையில் கூடவாது புரியும் அளவிற்குக் :கற்றல் முறைகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும்” – நன்னூல் 41

(x) ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.

(xi) இவ்வாறு, மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வளர்க்கும் விதமாக கற்பித்தல் இருந்தது. : மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன?
அ) 12-ஆம் நூற்றாண்டு
ஆ) 18-ஆம் நூற்றாண்டு
இ) 19-ஆம் நூற்றாண்டு
ஈ) 17-ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 19-ஆம் நூற்றாண்டு

Question 2.
குருகுலம் என்பது
அ) ஆசிரியரின் அறை
ஆ) குருக்கள் தங்கும் இடம்
இ) துறவியரின் குழல்
ஈ) ஆசிரியரின் வீடு
Answer:
ஈ) ஆசிரியரின் வீடு

Question 3.
மன்றத்திற்கு வழங்கும் இன்னொரு பெயர்
அ) சபை
ஆ) சங்கம்
இ) கோட்டை
ஈ) அம்பலம்
Answer:
ஈ) அம்பலம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 4.
ஜைன மடங்களுக்கான பெயர்
அ) அம்பலம்
ஆ) மன்றம்
இ) திண்ணை
ஈ) பள்ளி
Answer:
ஈ) பள்ளி

Question 5.
பள்ளியென்னும் பெயர் எவ்வறிற்கெல்லாம் பொதுவாக வழங்கப்படும்
அ) பாடசாலை, ஆலயம்
ஆ) பாடசாலை, விருந்தினர் கூடும் இடம்
இ) பாடசாலை, மடங்கள்
ஈ) பாசறை, மடங்கள்
Answer:
இ) பாடசாலை, மடங்கள்

Question 6.
‘நெடுங்கணக்கு’ என்பது
அ) நீண்ட கணக்கு
ஆ) பெருக்கல் கணக்கு
இ) ஓலைச் சுவடி
ஈ) அரிச்சுவடி
Answer:
ஈ) அரிச்சுவடி

Question 7.
‘சட்டாம்பிள்ளை ‘ என்பவர் யார்?
அ) ஊரில் பெரியவர்
ஆ) சண்டித்தனம் செய்பவர்
இ) தலைமை வகிக்கும் மாணவர்
ஈ) பிடிவாதம் பிடிக்கும் மாணவர்
Answer:
இ) தலைமை வகிக்கும் மாணவர்

Question 8.
‘அக்ஷராப்பியாசம்’ என்றால்
அ) பாடம்படித்தல்
ஆ) எழுத்தறிவித்தல்
இ) மனனம் செய்தல்
ஈ) ஏடு எழுதுதல்
Answer:
ஆ) எழுத்தறிவித்தல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 9.
‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ என உரைக்கும் நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) வளையாபதி
இ) குண்டலகேசி
ஈ) சிந்தாமணி
Answer:
ஈ) சிந்தாமணி

Question 10.
செய்யுளை நினைவுப்படுத்தும் முறைகள்
அ) எழுதுதல், படித்தல்
ஆ) வாசித்தல், எதுகை மோனை
இ) எதுகை மோனை, அந்தாதி
ஈ) கற்பித்தல், எழுதுதல்
Answer:
இ) எதுகை மோனை, அந்தாதி

Question 11.
எழுத்தாணிக்கு வழங்கும் வேறு பெயர்
அ) மடக்கெழுத்தாணி
ஆ) குண்டெழுத்தாணி
இ) ஊசி
ஈ) எழுதுகோல்
Answer:
இ) ஊசி

Question 12.
கதைப்பாடல் குறிப்பிடும் மனனம் செய்வதற்கான சுவடி
அ) அம்கொவதி சுவடி
ஆ) இந்திரச்சுவடி
இ) பிரபாவதி சுவடி
ஈ) சரஸ்வதி சுவடி
Answer:
இ) பிரபாவதி சுவடி

Question 13.
“மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” – எனக் குறிப்பிடும் நூல்
அ) சிந்தாமணி
ஆ) தமிழ்விடு தூது
இ) தமிழ்க்கோவை
ஈ) இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
Answer:
ஆ) தமிழ்விடு தூது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 14.
ஓதற் பிரிவுக்கென தொல்காப்பியம் குறிப்பிடும் கால எல்லை
அ) மூன்று ஆண்டுகள்
ஆ) நான்கு ஆண்டுகள்
இ) இரண்டு ஆண்டுகள்
ஈ) ஏழு ஆண்டுகள்
Answer:
அ) மூன்று ஆண்டுகள்

Question 15.
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்னும் உ.வே.சாவின் இக்கட்டுரை எந்தத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
அ) உயிர்நீட்சி
ஆ) உயிர்மீட்சி
இ) உயிர்க்காட்சி
ஈ) மையாடல்
Answer:
ஆ) உயிர்மீட்சி

Question 16.
கூற்று 1 : ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணக்கன் அதனைப் பின்பற்றிச் செல்வான்.
கூற்று 2 : பிள்ளைகள் முதலில் தரையில் எழுத ஆசிரியர்கள் அதன் மேல் எழுதுவார்கள்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

Question 17.
கூற்று : சுவடிகளிலுள்ள எழுத்துகளில் மையைத் தடவி வாசிக்கத் தருவார்கள்.
காரணம் : கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும், எழுத்துகளை விளக்கமாகக் காட்டும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 18.
கூற்று 1 : உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.
கூற்று 2 : கணக்காயரென்பது அமைச்சரின் பெயர்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

Question 19.
கூற்று : பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களை ஆசிரியர் கூறி அனுப்புவதில்லை .
காரணம் : பெயர்களை நினைவில் வைத்து மறுநாள் சொல்வதன் மூலம் நினைவாற்றல் அதிகமாகும்.

அ) கூற்று தவறு காரணம் சரி
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் சரி
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று தவறு காரணம் சரி

Question 20.
கூற்று : தமிழ்நாட்டிற்கும் நவத்வீபம் முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்றவர்கள் பலர் உண்டு .
காரணம் : திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் முதலியன பல வருஷமாகக் கல்வியைப் போதிக்கவில்லை.

அ) கூற்று சரி, காரணம் சரி
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 21.
கூற்று 1 : பள்ளிக்கு முதலில் வருபவனை வேத்தான் என்று அழைப்பர்.
கூற்று 2 : வேத்தான் சில நேரங்களில் சட்டாம்பிள்ளைக்குரிய கடமை செய்வான்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 22.
சரியானதைத் தேர்க.
அ) உபாத்தியாயர் – கணக்காயர்
ஆ) கீழ்வாயிலாக்கம் – பின்ன எண்ணின் மேல் தொகை
இ) நவத்வீபம் – கல்விப் பயிற்சிக் கூடம்
ஈ) வித்தியாரம்பம் – எழுத்துப் பயிற்சி
Answer:
அ) உபாத்தியாயர் – கணக்காயர்

Question 23.
சரியானதைத் தேர்க.
அ) மனப்பாடம் செய்ய சகல வல்லவாதி சுவடி என்ற புத்தகம் இருந்தது.
ஆ) ‘மையாடல் விழா’ என்பது திருமண விழா.
இ) நெடுங்கணக்கை மாணாக்கர் தானே கற்றனர்.
ஈ) நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
Answer:
ஈ) நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.

Question 24.
சரியானதைத் தேர்க.
அ) சாஸனம் – இருக்கை
ஆ) மணல் – சிலேட்
இ) பனையேடு – கரும்பலகை
ஈ) எழுத்தாணி – பென்சில்
Answer:
ஆ) மணல் – சிலேட்

Question 25.
பொருந்தாததைத் தேர்க.
அ) ஓதற்பிரிவு – 3 வருடம்
ஆ) வேத்தான் – முதலில் வரும் மாணக்கன்
இ) மையாடல் விழா – அக்ஷராப்பியாசம்
ஈ) விலங்கு – வரியெழுத்தின் இனம்
Answer:
ஈ) விலங்கு – வரியெழுத்தின் இனம்

Question 26.
பொருந்தாததைத் தேர்க.
அ) சுவடிகளை வைக்கவும் எடுத்துச்செல்லவும் பயன்படும் கருவி அசை எனப்படும்.
ஆ) ‘கிளிமூக்கு’ என்பது ஓலைச் சுவடியுடன் தொடர்புடையது.
இ) மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.
ஈ) புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியன வரியெழுத்தின் உறுப்புகள்.
Answer:
இ) மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 27.
பொருந்தாததைத் தேர்க.
அ) கோணாமல் – கொம்பு சுழி
ஆ) சாயாமல் – கொண்ட பந்தி
இ) அசையாமல் – தராசுபோல் கால்கள்
ஈ) கொம்பு – வரியெழுத்தின் உறுப்பு
Answer:
இ) அசையாமல் – தராசுபோல் கால்கள்

Question 28.
பொருத்துக.
அ) உபாத்தியாயர் – 1. தாழைமடல்
ஆ) குழிமாற்று – 2. ஆசிரியர்
இ) சீதாளபத்திரம் – 3. எழுத்துப்பயிற்சி
ஈ) அக்ஷராப்பியாசம் – 4. பெருக்கல் வாய்பாடு

அ) 2, 4, 1, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 4, 1, 3

Question 29.
பொருத்துக.
அ) எட்டயபுரம் திண்ணைப் பள்ளி – 1. பின்னத்தூர் நாராயணசாமி
ஆ) முத்துராம பாரதி திண்ணைப் பள்ளி – 2. நாவலர் சோமசுந்தர பாரதியார்
இ) கணபதியார் திண்ணைப் பள்ளி – 3. வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்
ஈ) மௌனகுரு – 4. மாண. இராசமாணிக்கனார்

அ) 2, 1, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 3, 4

Question 30.
பொருத்துக.
அ) நெடுங்கணக்கு – 1. அரசாணை
ஆ) சட்டாம் பிள்ளை – 2. ஓலைச்சுவடி
இ) தூக்கு – 3. அரிச்சுவடி
ஈ) சாஸனம் – 4. வகுப்புத்தலைவன்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஈ) 4, 3, 1, 2

Question 31.
சென்னை புரசைவாக்கம் சர்,எம்.சி.டி. முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதல் சொற்பொழிவாக 20.03.1936இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936இல் கட்டுரையாக வெளியான வார இதழ்
அ) இந்தியா
ஆ) விஜயா
இ) நவசக்தி
ஈ) சுதேசமித்திரன்
Answer:
ஈ) சுதேசமித்திரன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 32.
மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்
ஆ) எட்டையபுரம் சி.சுப்பிரமணிய பாரதி
இ) சுப்ரமணிய சிவா
ஈ) உ.வே.சாமிநாதர்
Answer:
அ) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்

Question 33.
வெள்ளைக்கால் சுப்பிரமணியனார் என்பார் ……………….. ஆவார்.
அ) வழக்கறிஞர்
ஆ) பொறியாளர்
இ) உயிரின மருத்துவர்
ஈ) நீதியரசர்
Answer:
இ) உயிரின மருத்துவர்

Question 34.
ப. சுப்பிரமணியார், திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த வருடங்கள்
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

Question 35.
வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் …………. படித்திருக்கிறார்.
அ) ஞான குருவிடம்
ஆ) மௌன குருவிடம்
இ) கணபதியாரிடம்
ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரிடம்
Answer:
ஆ) மௌன குருவிடம்

Question 36.
நற்றிணை நூலின் உரையாசிரியர்
அ) டாக்டர் மா. இராசமாணிக்கனார்
ஆ) பின்னத்தூர் நாராயணசாமி
இ) ப. சுப்பிரமணியனாா
ஈ) வ.சுப. மாணிக்கம்
Answer:
ஆ) பின்னத்தூர் நாராயணசாமி

Question 37.
நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ……………… திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
அ) சோமசுந்தர பாரதி
ஆ) சுப்பிரமணிய பாரதி
இ) முத்துராம பாரதி
ஈ) கவிபாரதி
Answer:
இ) முத்துராம பாரதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 38.
நாவலர் சோமசுந்தர பாரதிக்குப் பொருந்தாததைக் கண்டறிக.
அ) பாரதியின் நண்பர்
ஆ) வழக்கறிஞர்
இ) தமிழறிஞர்
ஈ) வரலாற்றாய்வாளர்
Answer:
ஈ) வரலாற்றாய்வாளர்

Question 39.
பின்வரும் தமிழறிஞர்களில் சிலப்பதிகார உரையாசிரியரைக் கண்டறிக.
அ) ப. சுப்பிரமணியனார்.
ஆ) மா.இராசமாணிக்கனார்
இ) வ.சுப. மாணிக்கம்
ஈ) வேங்கடசாமி
Answer:
ஈ) வேங்கடசாமி

Question 40.
டாக்டர் வ.சுப. மாணிக்கம் …………… பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.
அ) சென்னை
ஆ) மதுரை
இ) மைசூர்
ஈ) டெல்லி
Answer:
ஆ) மதுரை

Question 41.
‘இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை’ என்னும் நூலின் ஆசிரியர்
அ) அ.கா. பெருமாள்
ஆ) வ.சுப. மாணிக்கம்
இ) வ.வே.சு. ஐயர்
ஈ) மு.வரதராசனார்
Answer:
அ) அ.கா. பெருமாள்

Question 42.
பொருத்திக் காட்டுக.
அ) கீழ்வாயிலக்கம் – 1. பெருக்கல் வாய்ப்பாடு
ஆ) மேல்வாயிலக்கம் – 2. தாழை மடல்
இ) குழிமாற்று – 3. பின்ன எண்ணின் கீழ்த்தொகை
ஈ) சீதாளபத்திரம் – 4. பின்ன எண்ணின் மேல்தொகை

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

Question 43.
நவத்வீப்ம் என்பது
அ) நேபாளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் பெயர்
ஆ) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
இ) தெய்வத்திற்குப் படைக்கப்படும் ஒருவித பொருள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 44.
முதன் முதலில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய்தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்த வயது
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) பத்து
ஈ) பதின்மூன்று
Answer:
அ) ஐந்து

Question 45.
உபாத்தியாயர் ………………. சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்வான்.
அ) குறுங்கணக்கை
ஆ) நெடுங்கணக்கை
இ) புராணத்தை
ஈ) இதிகாசத்தை
Answer:
ஆ) நெடுங்கணக்கை

Question 46.
உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ……………… என்று கூறுவார்கள்.
அ) முறை வைப்பது
ஆ) திருமறை படிப்பது
இ) பாடம் படிப்பது
ஈ) நூல் வாசிப்பது
Answer:
அ) முறை வைப்பது

Question 47.
உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் முறை வைப்பவர்
அ) சட்டாம்பிள்ளை
ஆ) கணக்குப்பிள்ளை
இ) உபாத்தியாயரின் மனைவி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) சட்டாம்பிள்ளை

Question 48.
மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அகூராப்பியாசத்தை ………… என்று சொல்வார்கள்.
அ) மஞ்சள் நீராட்டுவிழா
ஆ) மையாடல் விழா
இ) மையிழைக்கும் விழா
ஈ) புதுவாசிப்பு நாள் விழா
Answer:
ஆ) மையாடல் விழா

Question 49.
வரியெழுத்தின் உறுப்புகள்
i) புள்ளி
ii) கால்
iii) கொம்பு
iv) விலங்கு

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) ili) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 50.
சிறுவர்களைப் படிக்கவைக்கும் வகையில் அகராதி வரிசையில் அமைந்த நூல்கள்
அ) ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
ஆ) திருக்குறள், நாலடியார்
இ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்

Question 51.
கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்வதற்காக இருந்த சுவடிப் புத்தகம்
அ) லீலாவதி
ஆ) கலாவதி
இ) பிரபாவதி
ஈ) அமராவதி
Answer:
இ) பிரபாவதி

Question 52.
இரட்டைத் துணையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதை ……………… என்று கூறுவர்.
அ) மூங்கிலாசனம்
ஆ) நாராசம்
இ) ஏடாசம்
ஈ) கிளிமூக்கு
Answer:
ஆ) நாராசம்

Question 53.
சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்கு ………….. என்று பெயர்.
அ) மையாடல்
ஆ) நாராசுரம்
இ) கிளிமூக்கு
ஈ) தூக்கு
Answer:
ஈ) தூக்கு

Question 54.
தூக்கு என்னும் சுவடி சார்ந்த பொருளுக்கு ………….. என்றும் பெயர்.
அ) அசை
ஆ) இசை
இ) தூக்கிசை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) அசை

Question 55.
அரசவையில் வாதுபுரிந்து தம் கல்வித்திறமையை நிலைநாட்டும் நூற்பயிற்சியுடையவர்கள் கொடிகட்டியிருப்பரென்று குறிப்பிடும் நூல்
அ) பரிபாடல்
ஆ) பட்டினப்பாலை
இ) மதுரைக்காஞ்சி
ஈ) முல்லைப்பாட்டு
Answer:
இ) மதுரைக்காஞ்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 56.
“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இக்கும்” – என்று குறிப்பிடும் நூல்
அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) தொன்னூல் விளக்கம்
Answer:
இ) நன்னூல்

Question 57.
‘என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு’ என்று குறிப்பிடும் நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நான்மணிக்கடிகை
ஈ) திரிகடுகம்
Answer:
அ) திருக்குறள்

Question 58.
கல்வியின் பொருட்டு பிரியுங்காலத்தைத் தொல்காப்பியம் ……….. பிரிவு என்று குறிப்பிடுகிறது.
அ) ஓதற்பிரிவு
ஆ) பொருள்வயின் பிரிவு
இ) தலைமகற்பிரிவு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஓதற்பிரிவு

Question 59.
தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரென்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கற்றுச் சென்றார்களென்னும் செய்தி …………….. சாஸனம் ஒன்றால் தெரிகின்றது.
அ) முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையில் பொறிக்கப்பட்ட
ஆ) முதல் இராசேந்திர சோழன் காலத்தில், உறையூரில் பொறிக்கப்பட்ட
இ) இரண்டாம் இராஜஇராஜசோழன் காலத்தில், தாராசுரத்தில் பொறிக்கப்பட்ட
ஈ) முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், காஞ்சிபுரத்தில் பொறிக்கப்பட்ட
Answer:
அ) முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையில் பொறிக்கப்பட்ட

Question 60.
பல வருடகாலம் தமிழ்க்கல்லூரியாகவும், வடமொழிக் கல்லூரியாகவும் விளங்கி வந்த மடங்கள்
அ) திருவாவடுதுறை, தருமபுரம்
ஆ) மதுரை, திருப்பாதிரிப் புலியூர்
இ) காஞ்சிபுரம், திருநெல்வேலி
ஈ) இவற்றில் ஏதுமில்லை
Answer:
அ) திருவாவடுதுறை, தருமபுரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 61.
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம்.
ii) முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள்.
iii) வேத்தன் என்பதற்கு மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்.

அ) i), ii), ii) தவறு
ஆ) i), ii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 62.
‘தமிழ்த்தாத்தா’ என்னும் சிறப்புக்குரியவர்
அ) உ.வே.சா.
ஆ) ம.பொ .சி.
இ) தெ.பொ.மீ
ஈ) மு.வ.
Answer:
அ) உ.வே.சா

Question 63.
உ.வே.சா. பெறாத பட்டத்தைக் கண்டறிக.
அ) மகாமகோபாத்தியாய
ஆ) திராவிட வித்தியா பூஷணம்
இ) தாக்ஷிணாத்தி கலாநிதி
ஈ) தாஹுணாத்திய கருணாநிதி
Answer:
ஈ) தாஹுணாத்திய கருணாநிதி

Question 64.
பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்
அ) உ.வே.சா.
ஆ) ம.பொ .சி.
இ) தெ.பொ.மீ
ஈ) மு.வ.
Answer:
அ) உ.வே.சா.

Question 65.
உ.வே.சா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஆண்டு
அ) 1932
ஆ) 1930
இ) 1928
ஈ) 1926
Answer:
அ) 1932

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 66.
உ.வே.சா.வின் திருவுருவச்சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் …………… வண்ண ம் நிறுவப்பட்டுள்ளது.
அ) வங்கக்கடலை நோக்கி நிற்கும்
ஆ) வள்ளுவர் கோட்டத்தைப் பார்க்கும்
இ) அனைவரும் வியக்கும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) வங்கக்கடலை நோக்கி நிற்கும்

Question 67.
உ.வே.சா. நூலகம் அமைந்துள்ள இடம்
அ) சென்னை , திருவான்மியூர்
ஆ) சென்னை , வடபழனி
இ) தஞ்சை, கிழக்குவாசல்
ஈ) மதுரை, மேற்குவாசல்
Answer:
அ) சென்னை , திருவான்மியூர்

குறுவினா

Question 1.
நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்? அவர் எங்கு யாரிடம் திண்ணைக் கல்விக் கற்றார்?
Answer:

  • நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி.
  • பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகக் கற்றார்.

Question 2.
இன்றைய பள்ளிக்கூடங்களில் வளர்க்கப்படும் செடிகொடிகளுக்கு ஆசிரியர் கூறும் உவமை என்ன?
Answer:
நாடகத்தில் வனங்களைத் திரையில் எழுதித் தொங்கவிடுவது போலப் பள்ளிக்கூடங்களில் சட்டியிலும் வாயில்களிலும் செடி கொடிகளை வளர்ப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.

Question 3.
மன்றம் என்பது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்? அதன் வேறு பெயர்கள் என்ன?
Answer:

  • பெரிய மரத்தடியில் மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும்.
  • ‘அம்பலம்’ என்றும் மன்றம்’ என்றும் அழைப்பர்.

Question 4.
‘முறை வைப்பு’ என்றால் என்ன ?
Answer:
உபாத்தியாயர் (ஆசிரியர்) ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வது 11 ‘முறை வைப்பது’ என்று அழைக்கப்படும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 5.
கையெழுத்து எவ்வாறு இருக்க வேண்டுமென்று பழைய வெண்பா பாடல் குறிப்பிடுகிறது?
Answer:

  • எழுத்துகளில் கொம்பு, சுழி போன்றவை கோணக் கூடாது.
  • வரிசையாக எழுதும் எழுத்துகள் சாயக் கூடாது.
  • துணைக்கால் எழுத்துகள் சாயாமல் அம்பு போல் அசையாமல் எழுத வேண்டும்.

Question 6.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:
புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள்.

Question 7.
‘கிளிமூக்கு’ என்பது என்ன?
Answer:

  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்தது அமைப்பது பார்ப்பதற்குக் கிளிமூக்கு போன்று இருக்கும்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் அமைப்பு ‘கிளிமூக்கு’ என்றழைக்கப்படும்.

Question 8.
எழுத்தாணியின் வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:

  • எழுத்தாணியின் வகைகள் மூன்று.
  • மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 9.
சட்டம் தூக்கு இவை எவற்றை உணர்த்துகின்றன?
Answer:
சட்டம் :
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக வர தினமும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாங்கள் மேலே எழுதி அதைப் போன்று எழுதி வரச் சொல்வர். இதற்குச் ‘சட்டம்’ என்று பெயர்.

தூக்கு :
சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படும் கருவிக்குத் தூக்கு’ என்று பெயர். இதற்கு அசை’ என்ற வேறுபெயரும் உண்டு.

Question 10.
தஞ்சையில் பொறிக்கப்பட்டுள்ள அரசாணையால் அறியப்படும் செய்தி யாது?
Answer:
தஞ்சாவூரில் வாழ்ந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரிடத்தில் பல நாட்டைச் : சார்ந்த மாணாக்கர்கள் கல்விக் கற்க வந்திருந்தார்கள் என்ற செய்தி, முதல் இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்டுள்ளது.

Question 11.
‘வேத்தான்’ – இச்சொல்லால் அழைக்கப்பட்டவர் யார்? இதன் பொருள் என்ன?
Answer:

  • பள்ளிக்கூடத்திற்குக் காலை 5 மணிக்கே வரவேண்டும்.
  • பள்ளிக்கூடத்திற்கு முதலிலே வரும் மாணாக்கரே ‘வேத்தான்’ என்று அழைக்கப்பட்டார்.
  • மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பதே ‘வேத்தான்’ என்பதன் பொருள்.

Question 12.
‘தமிழ்த்தாத்தா’ பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை?
Answer:

  • மகாமகோபாத்தியாய
  • திராவிட வித்தியா பூஷணம்
  • தாக்ஷிணாத்திய கலாநிதி
  • 1932-இல் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 13.
உ.வே.சா. அவர்களின் பண்முகங்கள் யாவை?
Answer:

  • இணையற்ற ஆசிரியர்
  • புலமைப்பெருங்கடல்
  • சிறந்த எழுத்தாளர்
  • பதிப்பாசிரியர்
  • பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்
  • கும்பகோணம் அரசுக்கலைக்கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

Question 14.
சுவடியில் உள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரிய முன்னோர்கள் செய்தது யாது?
Answer:
சுவடியில் வம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமைத்தயிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கலந்து செய்த மையைத் தடவினால் எழுத்துகள் தெளிவாகத் தெரியும்.

Question 15.
வித்தியாரம்பம் என்பது யாது?
Answer:
முதன் முதலில் ஐந்து வயதில் கல்வி கற்பதற்காகக் குழந்தைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுப்பதே வித்தியாரம்பம் என்பர்.

Question 16.
நாராசம் என்றால் என்ன?
Answer:
இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள் அதற்கு நாராசம்’ என்று பெயர்.

Question 17.
உ.வே.சா. விற்குத் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்புகள் யாவை?
Answer:
உ.வே.சா. வின் திருவுருவச்சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 18.
அக்கால பிள்ளைகளின் சிலேட்டு, புத்தகம், பேனாவாக எவை இருந்ததாக உ.வே.சா கூறுகிறார்?
Answer:

  • மணல்தான் சிலேட்டு
  • பனையேடுதான் புத்தகம்
  • எழுத்தாணியே பேனா

சிறுவினா

Question 1.
பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள் யாரெல்லாம் திண்ணை பள்ளியில் கல்விக்கற்றவர்கள் என்று பட்டியலிடுகின்றார்?
Answer:
(i) மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும், உயிரின மருத்துவருமான வெள்ளக்கால் ப.சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில்

(ii) வருடங்கள் கல்வி கற்றார். வரலாற்று ஆய்வாளரும், தமிழறிஞருமான டாக்டர் மா.இராசமாணிக்கனார் மௌனகுருவிடம் கல்வி கற்றார்.

(iii) நற்றிணை நூலின் உரையாசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.

(iv) சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் வழக்குரைஞருமான தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.

(v) சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய வேங்கடசாமி அவர்கள் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.

(vi) மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வ.சுப.மாணிக்கம் மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.

Question 2.
வித்தியாரம்பம் (கல்வித்தொடக்கம்) குறித்து உ.வே.சாமிநாதர் கூறுவது என்ன?
Answer:

  • ஐந்து வயதில் வித்தியாப்பியாசம் (கல்விப்பயிற்சி) பெறுவதற்காகப் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைப்பர்.
  • பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலம் மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படும்.
  • ஏட்டின் மீது மக்கள் பூசிப் பூசித்துப் பள்ளியில் சேரும் மாணாக்கரிடம் கொடுத்து வாசிக்கக் கூறுவர்.
  • ஆசிரியர் நெடுங்கணக்கைக் (அரிச்சுவடி / எழுத்துவரிசை) சொல்ல மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்.
  • ஆசிரியர் சொல்ல மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை முறை வைப்பு’ என்பர்.
  • சில நேரங்களில் ஆசிரியருக்குப் பதிலாகச் சட்டாம் பிள்ளை (வகுப்புத்தலைவன்) முறை வைப்பதும் உண்டு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 3.
அக்ஷராப்பியாசத்தை (எழுத்து அறிவித்தல்) மையாடல் விழா என அழைக்கக் காரணம் என்ன? : மாணக்கர் எவ்வாறு எழுத்துகளைக் கற்க தொடங்கினர்?
Answer:
மையாடல் விழா :
(i) சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமைத்தயிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கலந்து செய்த மையைத் தடவினால் எழுத்துகள் தெளிவாகத் தெரியும்.

(ii) இவ்வாறு தடவும் மையானது சுவடியில் இருக்கும் எழுத்துகளை விளக்கமாகக் காட்டும். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
(iii) இதனாலேயே அக்ஷராப்பியாசத்தை (எழுத்து அறிவித்தலை) மையாடல் விழா என்றனர்.

எழுத்து அறிவித்தல் :

  • மாணக்கர்கள் முதலில் மணலில் எழுதிப் பழகுவர்.
  • ஆசிரியர் முதலில் தரையில் எழுத அதன் மேல் மாணாக்கர்கள் எழுதுவர். பிறகு தாமே எழுதுவர்.
  • இதனால் மாணக்கர்களுடைய எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.

Question 4.
பண்டையக் கல்வி முறையில் ‘மனனம்’ என்பது எளிதான ஒன்றாக இருக்கக் காரணம் என்ன என்பதை விளக்குக.
Answer:

  • பண்டைய மாணாக்கருக்கு அடிப்படை நூல்களெல்லாம் மனனமாக இருக்கும்.
  • தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியன பாடமாகும்.
  • கணிதத்தில், கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று போன்ற பலவகை வாய்பாடுகள் இருக்கும்.
  • ‘தலைகீழ்ப்பாடம்’ என்ற முறையும் உண்டு.
  • அகராதி வரிசையில் படிப்பதால் அவை மாணாக்கரின் நினைவை விட்டு அகல்வதில்லை. சான்று : ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்.
  • அந்தாதி முறை, எதுகை மோனை முறையும் மனனம் செய்ய எளிய முறை.
  • பாடங்களைச் சிந்தித்து வருதல், ஒன்றாகச் சேர்ந்து கேள்விகள் கேட்டு விடை கூறுதல் இவையும் தா ‘மனனம்’ செய்ய எளிய வழிமுறைகளாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Question 5.
சுவடியை உருவாக்கும் முறையை விவரி.
Answer:

  • ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்து ஒரு துளை அல்லது இரண்டு துளையிடுவர்.
  • மேல் சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பர். மரத்தால் சட்டம் செய்வதும் உண்டு. செப்புத்தகட்டாலும் சட்டம் செய்வர்.
  • சட்டங்களின் மேல் வர்ணமையினாற் பல வகையான சித்திரங்களை வரைந்து வைப்பர்.
  • இரட்டைத்துளையுள்ள ஏடுகளில், ஒரு துளையினைச் செப்புக் கம்பி அல்லது மூங்கில் குச்சியைச் செருகிக் கட்டுவர். இதனை நாராசம்’ என்று அழைப்பர்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பது பார்ப்பதற்கு கிளிமூக்கு போன்று இருக்கும். சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் அமைப்பு ‘கிளிமூக்கு’ என்றழைக்கப்படும்.

Question 6.
பண்டைய மாணவர்களுக்குக் கற்பித்த பாடங்களாகக் கதைப்பாடல் உணர்த்துபவை எனப் பேராசிரியர் அ.கா.பெருமாள் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கதைப்பாடல் உணர்த்தும் நூற்கள் :

  • ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி கற்பிக்கப்பட்டது.
  • நிகண்டுகளை மனப்பாடம் செய்பவனுக்கு மதிப்பு அதிகமாக இருந்தது.
  • வியாபாரம் செய்வதற்கும் கோவிலில் பணி செய்வதற்கும் ஏற்ற முறையில் அமைந்த கணித முறை பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
  • கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகள் கட்டாயம் மனனம் செய்யும்படிக் கற்பிக்கப்பட்டது.
  • ‘பிரபவாதி சுவடி’ என்ற புத்தகம் மனனம் செய்வதற்கென இருந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் 1
அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
இ) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.
Answer:
இ) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.

Question 2.
கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி
இ) திணையளவு செய்த உதவி
Answer:
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்

அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்.
Answer:
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

Question 4.
கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் தேர்ந்தெடுக்க.
உயர் அலுவலரின் வருகை
அலுவலகமே அல்லாடும்
அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே
கோப்புகளை விரைந்து முடிக்க
ஒழுங்கு செய்ய
நேரத்தில் இருக்க வேண்டும்
விரைகிறது மனம்
பரபரப்பும் மனவழுத்தமுமாய்
வண்டியை எடுக்கிறேன்
காலைக் கட்டிக் கொள்கிறது குழந்தை
‘போ அந்தப் பக்கம்’
உதறிச் செல்கிறேன் குழந்தையை.
Answer:
செல் இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 5.
இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
அன்பும் அறமும் – எண்ணும்மை
நன்கலம் – பண்புத் தொகை
மறத்தல் – தொழிற் பெயர்
உலகு – இடவாகு பெயர்

Question 6.
பொருள் கூறுக.
Answer:
வெகுளி – கோபம்
புணை – தெப்பம்
ஏமம் – பாதுகாப்பு
திரு – செல்வம்

Question 7.
வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) செய்ந்நன்றி
Answer:
அ) செய்யாமல் செய்த உதவி

Question 8.
பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.
Answer:
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை விட வேறுபகை இல்லை.

Question 9.
செல்லிடத்து – புணர்ச்சி விதி கூறுக.
Answer:
செல்லிடத்து = செல் + இடத்து

  • ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்ற விதிப்படி, செல் + ல் + இடத்து என்றாகியது.
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவதே இயல்பு என்ற விதிப்படி, ல் + இ = L = செல்லிடத்து என்று புணர்ந்தது.

Question 10.
பொருத்திக் காட்டுக.
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி – 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் – 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினாற் செய்த நன்றி – 4. நன்மை கடலின் பெரிது

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஆ) 3, 4, 1, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
Answer:
அறத்தின் வழியாக இல்லற வாழ்க்கை வாழ்பவர் முயல்வருள் எல்லாம் தலையானவர்.

Question 2.
ஞாலத்தின் பெரியது எது?
Answer:
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அஃது உலகைவிடப் பெரியதாகும்.

Question 3.
மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை ?
Answer:

  • ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.
  • ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.
  • மறக்க கூடாதது – நன்மை ; மறக்கக்கூடியது – தீமை.

Question 4.
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
Answer:
ஒருவரிடம் இருக்கும் செல்வம் குறையாமலிருக்க வேண்டுமென்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாமல் இருத்தல் வேண்டும்.

Question 5.
சினத்தை ஏன் காக்க வேண்டும் ?
Answer:
சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

சிறுவினா

Question 1.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’ – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி நிரல்நிறை அணியாகும்.
அணி இலக்கணம் :
ஒரு செய்யுளின் முதலில் சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறையாகும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல் நிறை அணியாகும்.

பொருள் :
இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.

அணிப்பொருத்தம் :
இக்குறட்பாவில் அன்பு, அறன் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இக்திருக்குறள் ‘நிரல் நிறை அணிக்குப் பொருத்தமாயிற்று.
அன்பு – பண்பு ; அறன் – பயன் என்று நிரல்பட உள்ளது.

Question 2.
இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
Answer:
(i) ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியும், அறச்செயல்கள் செய்தும் வாழும் இல்லற வாழ்வைப் பெறுவான் என்றால், அவன் இல்வாழ்க்கை அன்பினால் உருவான நல்ல பண் பையும், அறச் செயலினால் உருவாகின்ற நல்ல புகழாகிய பயனையும் அடைவான்.

(ii) அறத்தின் இயல்போடு இல்லற வாழ்க்கையை வாழ்பவன் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலைசிறந்தவன் ஆவான்.

(iii) உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் வானுலகத்தில் உள்ள தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 3.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? குறள் வழி விளக்குக.
Answer:

  • இந்நில உலகம், வானகம், கடல், பனை இவைகளை விடவும் நன்றி உயர்ந்தது.
  • நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
  • ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகை விடப் பெரியதாகும்.
  • மறுபலனை எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.
  • ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியை பனையளவாகக் கொள்வர்.

Question 4.
சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
Answer:

  • நமக்கு ஏற்படும் தீமையான விளைவுகள் அனைத்தும் நாம் கொள்ளும் சினத்தால் வரும். அதனால், நாம் யாரிடமும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும்.
  • சினம் என்னும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தில் அருளைக் கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொள்ளும்.
  • சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.
  • சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவருடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும்.

Question 5.
கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
Answer:
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகின்றது.
அணி இலக்கணம் :
கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, அதற்கேற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

விளக்கம் :
சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனைச் சேர்ந்த சுற்றத்தாரையும் சேர்த்து அழிந்துவிடும். தன்னைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம், நம்மை மட்டுமில்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இனமென்னும் தெப்பத்தை அழித்துவிடும்.

அணிப்பொருத்தம் :
இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.

நெடுவினா

Question 1.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக.
Answer:
விண் மண் :
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது”
நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.

உலகம் :
“காலத்தி னால்செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அது உலகத்தின் அளவை விடப் பெரியதாகும்.

கடல் :
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”
எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

பனை :
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்”
ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியைப் பனையளவாகக் கொள்வர்.

வாழ வழி :
“நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். தப்பிக்க முடியாது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எந்த அறத்தை அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்குத் தப்பிப் பிழைக்கும் வழியே கிடையாது.
எனவே, செய்ந்நன்றியறிதலே சிறந்த அறம் என்பதனை வள்ளும் உணர்த்துகின்றது.

Question 2.
சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும். இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
Answer:
சினமானது அருள் உள்ளத்தை அழித்து மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். சினத்தைக் காத்தால் வாழ்வு மேன்மையடையும் சினத்தைக் காப்பான்.

சினம் செல்லுமிடம் :
“செல் இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?”

தன் சினம் செல்லுபடியாகும் தன்னை விடவும் மெலியாரிடத்தில் சினம் கொள்ளாமல் சினத்தைக் காத்துக் கொள்பவனே உண்மையில் சினத்தைக் காப்பவனாவான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

மறத்தல் நன்று :
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனான் வரும்”
ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிடுவது நன்மையாகும்.

சினம் எனும் பகை :
“நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோப் பிற?”
சினம் எனும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும்.

தன்னைக்காக்க சினம் தவிர் :
“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்”
சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும். எனவே, தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.

சுற்றம் பேண சினத்தைத் தவிர் :
“சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையச் சுடும்”
சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவனுடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும். எனவே, சினத்தைக் காத்தோமென்றால், எளியவரோடு பகை மேற்கொள்ளமாட்டோம்; யாரிடத்தும் சினம் கொள்ள மாட்டோம்; முகமலர்ச்சியும், அகமகிழ்ச்சியும் அதிகமாகும்; தன்னையே காத்துக் கொள்வோம்; சுற்றத்தையும் காப்பாற்றுவோம். இதனால் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால் கூறுகின்றது.

இலக்கணக் குறிப்பு

பண்பும் பயனும் – எண்ணும்மை
வாழ்பவன் – வினையாலணையும் பெயர்
அரிது, பெரிது – ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
தூக்கின் – எதிர்கால வினையெச்சம்
தூக்காச் – முற்றெச்சம்
கொள்வர், தெரிவர் – வினையாலணையும் பெயர்
கொன்ற – பெயரெச்சம்
பிறத்தல் – தொழிற்பெயர்

புணர்ச்சி விதி

1. தினைத்துணை = தினை + துணை
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி, தினைத்துணை என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

2. நன்றல்லது + நன்று + அல்லது

  • ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி. நன்ற் + அல்லது என்றானது
  • உடல்மேல் உயர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ற் + அ = ற) நன்றல்லது’ என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
திருக்குறள் என்பது
அ) ஆகுபெயர்
ஆ) கருவியாகுபெயர்
இ) அடையடுத்த ஆகுபெயர்
ஈ) அடையடுத்த கருவியாகுபெயர்
Answer:
ஈ) அடையடுத்த கருவியாகுபெயர்

Question 2.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்
அ) வீரமாமுனிவர்
ஆ) ஜி.யு.போப்
இ) கால்டுவெல்
ஈ) சார்லஸ் வில்கினிஸ்
Answer:
அ) வீரமாமுனிவர்

Question 3.
ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
அ) 1912
ஆ) 1712
இ) 1612
ஈ) 1812
Answer:
ஈ) 1812

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 4.
அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
அ) 380
ஆ) 700
இ) 250
ஈ) 133
Answer:
அ) 380

Question 5.
இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 9
Answer:
இ) 2

Question 6.
திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள்
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 9
Answer:
ஈ) 9

Question 7.
அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் அமைந்துள்ள பிரிவு
அ) இன்பத்துப்பால்
ஆ) பொருள் பால்
இ) அறத்துப்பால்
ஈ) காமத்துப்பால்
Answer:
ஆ) பொருள் பால்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 8.
இல்லறவியலில் அமைந்துள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
அ) 130
ஆ) 200
இ) 133
ஈ) 250
Answer:
ஆ) 200

Question 9.
கற்பியல், களவியல் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
அ) 18, 07
ஆ) 07, 18
இ) 09, 16
ஈ) 16, 09
Answer:
ஆ) 07, 18

Question 10.
ஊழியலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
அ) 08
ஆ) 13
இ) 01
ஈ) 04
Answer:
இ) 01

Question 11.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை ‘ – ‘அன்பும் அறனும்’ இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) எண்ணும்மை
இ) உவமைத்தொகை
ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Answer:
ஆ) எண்ணும்மை

Question 12.
‘செய்த’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) செய்து + அ
ஆ) செய்+த்(ந்)+த்+அ
இ) செய் + து
ஈ) செய் + த் + அ
Answer:
ஈ) செய் + த் + அ

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 13.
‘நன்றல்லது’ இச்சொல்லிற்கு உரிய சரியான புணர்ச்சி விதிகள்
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈ) ஈறுபோதல், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Answer:
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

Question 14.
‘மறத்தல் வெகுளியை யார்மாட்டும்’ – ‘மறத்தல்’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உவமையாகு பெயர்
ஆ) வினைமுற்று
இ) தொழிற்பெயர்
ஈ) பண்புப்பெயர்
Answer:
இ) தொழிற்பெயர்

Question 15.
‘கொன்ற’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) கொன் + ற் + அ
ஆ) கொன்று + அ
இ) கொன் + ற் + உ
ஈ) கொல்(ன்) + ற் + அ
Answer:
ஈ) கொல்(ன்) + ற் + அ

Question 16.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி அமைந்த சொல்
அ) உலகத்தார்
ஆ) பனைத்துணை
இ) கொல்லாது
ஈ) காப்பால்
Answer:
ஆ) பனைத்துணை

Question 17.
‘நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது’ – ‘நன்றி மறப்பது’ – இலக்கணக் குறிப்பு
அ) வினையெச்சம்
ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
இ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
ஈ) பெயரெச்சம்
Answer:
ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

Question 18.
கூற்று 1 : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லது.
கூற்று 2 : ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வு இல்லை.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 19.
கூற்று : சினத்தை விட நமக்கு வேறு பகை இல்லை.
காரணம் : அது நம் முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொன்றுவிடும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி காரணம் சரி

Question 20.
கூற்று 1 : மெலியவரிடத்தில் சினம் கொள்ளாமல் காப்பவரே சினம் காப்பவர்.
கூற்று 2 : புலால் உண்ணவில்லை என்றால் வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்கமாட்டார்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 21.
கூற்று 1 : ஒருவர் செய்த தீமையை அப்பொழுது மறந்துவிடுவது நல்லதன்று.
கூற்று 2 : உரிய காலத்தில் செய்யும் சிறிய உதவி உலகத்தைவிடப் பெரியது.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி

Question 22.
கூற்று : ஒருவன் தன்னைக் காக்க சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டாம்.
காரணம் : சினம் காக்கவிட்டால் தன்னையே அழித்துவிடும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று சரி, காரணம் சரி.
ஈ) கூற்று வறு, காரணம் தவறு.
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.

Question 23.
சரியானதைத் தேர்க.
அ) ஒருவர் செய்த தீமையை மறக்கக் கூடாது.
ஆ) உரிய காலத்தில் செய்த உதவி பனையளவு பெரியது.
இ) நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.
ஈ) இயல்பான அறிவு எப்போதும் வெளிப்படாது.
Answer:
இ) நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.

Question 24.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
அ) இல்வாழ்க்கை – 26-ஆம் அதிகாரம்
ஆ) புலால் மறுத்தல் – 38-ஆம் அதிகாரம்
இ) ஊழ் – 05-ஆம் அதிகாரம்
ஈ) வெஃகாமை – 18-ஆம் அதிகாரம்
Answer:
ஈ) வெஃகாமை – 18-ஆம் அதிகாரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 25.
சரியானதைத் தேர்க.
அ) பாயிரவியல் – 20 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 01 அதிகாரம்
இ) துறவறவியல் – 13 அதிகாரம்
ஈ) ஊழியல் – 04 அதிகாரம்
Answer:
இ) துறவறவியல் – 13 அதிகாரம்

Question 26.
பொருந்தாதைத் தேர்க.
அ) ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வே இல்லை.
ஆ) ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறந்துவிடுவது நல்லது அன்று.
இ) செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.
ஈ) அறத்தின் இயல்புடன் வாழ்பவர் முயற்சி உடையவரை விட மேம்பட்டவர்.
Answer:
இ) செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.

Question 27.
பொருத்துக.
அ) அரசவியல் – 1) 13 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 2) 25 அதிகாரம்
இ) ஒழிபியல் – 3) 20 அதிகாரம்
ஈ) கற்பியல் – 4) 18 அதிகாரம்

அ) 2, 4, 3, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 1, 4

Question 28.
பொருத்துக.
அ) 11-ஆம் அதிகாரம் – 1. வெகுளாமை
ஆ) 31-ஆம் அதிகாரம் – 2. வெஃகாமை
இ) 18-ஆம் அதிகாரம் – 3. புலால் மறுத்தல்
ஈ) 26-ஆம் அதிகாரம் – 4. செய்ந்நன்றி அறிதல்

அ) 4, 1, 3, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
ஈ) 4, 1, 2, 3

Question 29.
பொருத்திக் காட்டுக.
அ) அறத்துப்பால் – 1) 70
ஆ) பொருட்பால் – – 2) 38
இ) இன்பத்துப்பால் – 3) 25

அ) 2, 1, 3
ஆ) 3, 2, 1
இ) 1, 2, 3
ஈ) 2, 3,1
Answer:
அ) 2, 1, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 30.
பொருத்திக் காட்டுக.

அ) அறத்துப்பால் – 1) 3 இயல்கள்
ஆ) பொருட்பால் – 2) 4 இயல்கள்
இ) இன்பத்துப்பால் – 3) 2 இயல்கள்

அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2
Answer:
அ) 2, 1, 3

Question 31.
அறத்துப்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அ) பாயிரவியல்
ஆ) இல்லறவியல்
இ) துறவறவியல்
ஈ) ஒழிபியல்
Answer:
ஈ) ஒழிபியல்

Question 32.
பொருட்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அ) அரசு இயல்
ஆ) அமைச்சு இயல்
இ) ஒழிபியல்
ஈ) ஊழியல்
Answer:
ஈ) ஊழியல்

Question 33.
இன்பத்துப்பாலில் இடம்பெறும் இயல்களைக் கண்டறிக
அ) களவியல், கற்பியல்
ஆ) அரசியல், அமைச்சியல்
இ) ஊழியல், ஒழிபியல்
ஈ) பாயிரவியல், இல்லறவியல்
Answer:
அ) களவியல், கற்பியல்

Question 34.
பொருத்திக் காட்டுக (இயல்களும் அதிகாரங்களின் எண்ணிக்கையும்).
அ) பாயிரவியல் – 1) 1 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 2) 13 அதிகாரங்கள்
இ) துறவறவியல் – 3) 20 அதிகாரங்கள்
ஈ) ஊழியல் – 4) 4 அதிகாரங்கள்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 35.
பொருத்திக் காட்டுக.
அ) அரசியல் – 1) 18 அதிகாரங்கள்
ஆ) அமைச்சியல் – 2) 13 அதிகாரங்கள்
இ) ஒழிபியல் – 3) 32 அதிகாரங்கள்
ஈ) கற்பியல் – 4) 25 அதிகாரங்கள்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Question 36.
திருக்குறளின் களவியலில் உள்ள அதிகாரங்கள்
அ) 07
ஆ) 18
இ) 13
ஈ) 04
Answer:
அ) 07

Question 37.
திருக்குறள் ……………… ஆன நூல்.
அ) குறள் வெண்பாக்களால்
ஆ) சிந்தியல் வெண்பாக்களால்
இ) ஆசிரியப்பாவால்
ஈ) கலிப்பாவால்
Answer:
அ) குறள் வெண்பாக்களால்

Question 38.
திருக்குறள் ……………. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 39.
திருக்குறள் என்பது ………………. ஆகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) அடையடுத்த ஆகுபெயர்
ஈ) எண்ணலளவையாகுபெயர்
Answer:
இ) அடையடுத்த ஆகுபெயர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 40.
திருக்குறள் என்பது
அ) இரண்டடி வெண்பா
ஆ) நான்கடி வெண்பா
இ) மூவடி வெண்பா
ஈ) ஓரடி வெண்பா
Answer:
அ) இரண்டடி வெண்பா

Question 41.
உலகப் பொதுமறை, அறவிலக்கியம், தமிழர் திருமறை உள்ளிட்ட சிறப்புப் பெயர்களுக்குரிய நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நான்மணிக்கடிகை
ஈ) இன்னாநாற்பது
Answer:
அ) திருக்குறள்

Question 42.
மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக்காட்டிய நூல்
அ) இலியட்ஸ்
ஆ) மெயின்காம்ப்
இ) திருக்குறள்
ஈ) சாகுந்தலம்
Answer:
இ) திருக்குறள்

Question 43.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இவற்றால் ‘நாலும்’ என்பது …………… ‘இரண்டு’ என்பது ………………. குறிக்கும்.
அ) நாலடியார், திருக்குறள்
ஆ) நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது
இ) நானிலம், இருதிணை
ஈ) நாற்படை, இருசுடர்
Answer:
அ) நாலடியார், திருக்குறள்

Question 44.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களாகப் பழம்பாடலால் குறிப்பிடப்படுபவர்கள்
அ) இருவர்
ஆ) நால்வர்
இ) அறுவர்
ஈ) பதின்மர்
Answer:
ஈ) பதின்மர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 45.
திருக்குறளுக்கு உரை எழுதாதவரைக் கண்டறிக.
அ) தருமர்
ஆ) மணக்குடவர்
இ) பரிமேலழகர்
ஈ) அடியார்க்கு நல்லார்
Answer:
ஈ) அடியார்க்கு நல்லார்

Question 46.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – எனப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ. ராமலிங்கனார்
ஈ) இராமலிங்க அடிகள்
Answer:
அ) பாரதியார்

Question 47.
வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே – எனப் பாடியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) இராமலிங்க அடிகள்
ஈ) வெ. இராமலிகனார்
Answer:
அ) பாரதிதாசன்

Question 48.
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ள இடம்
அ) சென்னை
ஆ) நாகர்கோவில்
இ) கன்னியாகுமரி
ஈ) சேலம்
Answer:
இ) கன்னியாகுமரி

Question 49.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
அ) வேலூர்
ஆ) சென்னை
இ) மேலூர்
ஈ) திருத்தணி
Answer:
அ) வேலூர்

Question 50.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி

அ) நிரல்நிறை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
அ) நிரல்நிறை அணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 51.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையச் சுடும் – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) நிரல்நிறை அணி
ஆ) ஏகதேச உருவக அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
ஆ) ஏகதேச உருவக அணி

குறுவினா

Question 1.
வானுலகத் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுபவர் யார் ?
Answer:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியின்படி வாழ்கின்றவர்கள் வானுலகத் தெய்வத்திற்கு இணையானவர்கள்.

Question 2.
வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
Answer:
நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.

Question 3.
கடலின் பெரிது எது என்று வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

Question 4.
யார் தப்பிப்பிழைக்கும் வாய்ப்பில்லாதவர் என்று குறள் கூறுகின்றார்?
Answer:
எந்த அறத்தை அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவருக்குத் : தப்பிப் பிழைக்க வழியே கிடையாது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 5.
பிறர் பொருளைக் கவரும் பழியான செயலைச் செய்யாதவர் யார்?
Answer:
நீதி இல்லாதவற்றைக் கண்டு வெட்கம் அடைந்து ஒதுங்கும் பண்பாளர்கள் பெரும் பயன் கிடைப்பினும் பிறர் பொருள்மேல் ஆசைப்படும் பழியான செயலைச் செய்யமாட்டார்கள்.

Question 6.
உண்மையிலே சினத்தைக் காப்பவர் யாரென்று குறள் கூறுகிறது?
Answer:
தன் சினம் செல்லுபடியாகும், தன்னை விடவும் மெலியாரிடத்தில் சினம் கொள்ளாமல் சினத்தைக் காத்துக் கொள்பவனே உண்மையில் சினத்தைக் காப்பவனாகும்.

Question 7.
திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்களில் ஏதேனும் நான்கினை எழுதுக.
Answer:
உலகப்பொதுமறை, தமிழர் திருமறை, வாயுறைவாழ்த்து, முப்பால்.

Question 8.
திருக்குறளின் பெருமையை விளக்கும் பழமொழிகள் யாவை?
Answer:

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்.

Question 9.
பழம்பாடல்பாடித் திருக்குறளுக்கு உரை செய்தவர்களை கூறுக.
Answer:
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள் காளிங்கர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 10.
பாரதியார் வள்ளுவரை எவ்வாறு புகழ்கின்றார்?
Answer:
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – எனப் புகழ்கின்றார்.

Question 11.
வள்ளுவரைப் பாரதிதாசன் புகழ்ந்து கூறும் கூற்று யாது?
Answer:
“வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே” எனப் புகழ்ந்து கூறுகின்றார்.

Question 12.
திருவள்ளுவரைப் புகழும் விதமாகத் தமிழக அரசு செய்துள்ளவை யாவை ?
Answer:

  • கன்னியாகுமரியில் கி.பி.2000-இல் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ளது.
  • வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளது.

Question 13.
‘திருக்குறள்’ – பெயர்க்காரணம் தருக.
Answer:

  • திரு + குறள் = திருக்குறள்.
  • சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல். ஆதலால் திருக்குறள் எனப் பெயர் பெற்றது.
  • குறள் என்பது இரண்டடி வெண்பா , ‘திரு’ என்பது சிறப்பு அடைமொழி.
  • திருக்குறள் என்பது அடையெடுத்த கருவி ஆகுபெயர் ஆகும்.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 14.
பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? அவையாவை ?
Answer:
பொருட்பாலில் உள்ள இயல்கள் மூன்று ஆகும். அவை, அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்பதாகும்.

Question 15.
சினம் என்னும் பகை நம்மிடமிருந்து எவற்றையெல்லாம் கொல்லும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
சினம் என்னும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும்.

Question 16.
உலக இயல்பின் இருவேறு ஊழ் நிலையாகக் குறள் கூறுவது யாது?
Answer:

  • உலக இயல்பு இருவேறு வகைப்படும்.
  • செல்வம் உடையார் அறிவுடையராக இருப்பதில்லை.
  • தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.

சிறுவினா

Question 1.
புலால் மறுத்தல் சாத்தியமாகும் என்பதைக் குறள் வழி நிறுவுக.
Answer:

  • புலால் உணவை உண்ணுகிறவர்கள் இன்று உலகில் வாழ்கின்றனர்.
  • புலால் உணவைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தவர்கள் கொல்லாதிருத்தல் வேண்டும்.
  • புலால் உண்பவர்கள் தங்கள் உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்வதால் தான், அதனை விலைக்கு விற்பனை செய்யும் பொருட்டு ஊன் விற்பவர்கள் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.
  • புலால் மறுத்தலை உலகில் வாழும் நபர்கள் கடைபிடித்தால் எந்த ஒரு உயிானமும் உணவிற்காகவும், வருவாய்க்காவும் கொல்லப்படாமல் உயிர்வாழும்.
  • இதனையே வள்ளுவர் பிற உயிர்களை உணவிற்காகக் கொல்லாதாதிருந்தாலே புலால் உணவை நிறுத்திவிடலாம் என்கிறார்.