Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.3 சிலப்பதிகாரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.3 சிலப்பதிகாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 1.
பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா, பட்டிமன்றம், தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கான அரங்கம், அரசு விழாக்களுக்கான மேடை போன்றவற்றின் அரங்க அமைப்பு, ஒலி, ஒளி அமைப்பு, திரை அலங்காரம் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
பங்கு பெறுவோர் : நேசன், வாசன், ராசன்

நேசன் : நான் நேற்று எனது பள்ளியின் ஆண்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட மேடை பற்றிக் கூறுகிறேன். தரையிலிருந்து பத்து அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. மேடையானது இருபது அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டதாக இருந்தது. இருபுறத்திலிருந்து வருமாறும், மேலே ஏறுமாறும் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேடையின் பின்பக்கமும் மற்ற இரண்டு பக்கங்களும் ஒரு தெருவுக்குள் நடந்து செல்வது போன்ற ஒரு (தெருக்களின்) ஓவியம் வரையப்பட்டிருந்தது. மேடையின் மேல்பக்கத்தில் வட்ட வடிவிலான ஓவியம் இருந்தது. மேடையின் முன்பக்க ஓரத்தில் இரண்டு ஒலி வாங்கிகள், மேடையின் முன் பக்கத்தில் வண்ண வண்ண ஒளிகளைப் பாய்ச்சும் சுழல் விளக்குகள், மேடையை ஒட்டி, இரு பெரும் ஒலி பெருக்கிகள் என அற்புதமாக மேடை
அமைக்கப்பட்டிருந்தது.

வாசன் : இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் ஊர்த்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே பரதநாட்டிய மேடை அமைத்திருந்தார்கள். நான்கு அடி உயரத்தில் ஒரு மேடை. முன் பக்கம் தவிர மற்ற மூன்று பக்கங்களும் ஓவியம் தீட்டப்பட்ட துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. மேலும் வண்ண விளக்குகளால் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேடையின் மேல் இருபுறமும் நட்டு வாங்கும், வாய்பாட்டு, மிருதங்கம், மோர்சிங், வீணை வாசிப்பவர்களுக்கு
எனக் கலைஞர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தன.

ராசன் : எங்கள் ஊரில் பட்டிமன்ற நிகழ்வைப் பார்க்க நேற்று சென்றிருந்தேன். மிக உயரமான மேடை, கீழே தரை விரிப்பு, மேடையின் பின்பக்கம் அடைப்பில் நடுவர் மற்றும் பேச்சாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. மேடையின் இருபக்கங்களிலும் ஆயத்த ஒலிவாங்கி மேடைகள், கண்ணைப் பறிக்கும் ஒளி விளக்குகள், நடுவர் அமர்வதற்கு மிகப் பெரிய அமர்வு இருக்கை என்று பார்க்க அழகாக இருந்தது.

நேசன் : ஆமாம் நண்பர்களே! முற்காலங்கள் போல் இல்லாமல் இன்று மேடைகள் அலங்காரமாகவும், விளக்கின் ஒளியில் பகல் போலவும், மேடையில் கண்ணைக் கவரும் சில ஓவியங்களும் தெளிவாக ஒலி வாங்கியினின்று வெளிவிடும் ஒலிப்பெருக்குப் பெட்டிகள் என இதைப் பற்றிய ஒரு பார்வை நம்மை வியக்க வைக்கிறது. அதுமட்டுமா, இத்தனையையும் அமைக்க அந்தத் துறையில் தேர்ச்சிபெற்றகைவினைக்கலைஞர்கள், இவர்களின் ஒத்துழைப்பாலேயே இத்தகைய மேடைகள் கண்ணைக் கவருகின்றன. தெருக்கூத்தாக இருந்த மேடை இன்று திரைப்படத்தை நேரில் பார்க்கும் உளப்பாங்கினை உண்டாக்கும் அளவிற்கு மேடையில் வடிவமைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

“ஆடத் தெரியாதவனுக்கு தெருக் கோணல் என்பானாம்” இந்தப் பழமொழி பொய்த்துவிட்டது இந்த நாளில்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………….. தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

அ) 1-சரி, 2-தவறு
ஆ) 1-தவறு, 2-சரி
இ) 1-தவறு, 2-தவறு
ஈ) 1-சரி, 2-சரி
Answer:
ஈ) 1-சரி, 2-சரி

Question 2.
பொருத்துக.
அ) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா – 2. மூங்கில்
இ) கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை – 4. எடை அளவு

அ) 3, 1, 4, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2

குறுவினா

Question 1.
ஒருமுக எழினி, பொருமுக எழினி குறிப்பு எழுதுக.
Answer:
ஒருமுக எழினி:
நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு ரூ’ முகத்திரை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

பொருமுக எழினி:
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை

சிறுவினா

Question 1.
நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தைக் கூறுக.
Answer:
சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம் :
“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ண கம் ஒருவழி வகுத்தனர்”

கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.

மூங்கில் கொணர்தல் :
பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களைக் கொண்டு வந்தனர்.

ஆடல் அரங்கம் அமைத்தல் :
“நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்.”
நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவுகொண்டு அரங்கம் அமைத்தல்.

மூங்கில் அளவுகோல் :
கைப்பெருவிரலில் இருப்பத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும் எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

இலக்கணக் குறிப்பு

தொல்நெறி – பண்புத்தொகை
ஆடலும் பாடலும் – எண்ணும்மை
வருகிறோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
நின்று – வினையெச்சம்
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் – எண்ணும்மை
புரிகுழல், சூழ்சுழல் – வினைத்தொகைகள்
வழாஅ – செய்யுளிசை அளபெடை
நூல்நெறி, தூண் நிழல் – ஆறாம் வேற்றுமைத் தொகைகள்
வெண்குடை – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம் 2

புணர்ச்சி விதி

Question 1.
தலைக்கோல் = தலை + கோல்
Answer:
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி தலைக்கோல் என்று புணர்ந்த து.

Question 2.
மண்ண கம் = மண் + அகம்
Answer:

  • தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி, மண் + ண் + அகம் என்றானது.
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ண் + அ = ண) மண்ணகம் என்று புணர்ந்தது.

Question 3.
கண்ணிடை = கண் + இடை
Answer:

  • தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி, கண்ண் + இடை என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ண் + இ = ணி) கண்ணிடை என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 4.
வெண்குடை – வெண்மை + குடை
Answer:
ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு, வெண் + குடை – வெண்குடை என்று புணர்ந்தது.

Question 5.
தொல்நெறி – தொன்மை + நெறி
Answer:

  • ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு, தொன் + நெறி என்றானது.
  • முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, தொல்நெறி என்று புணர்ந்து.

Question 6.
தலைக்கோல் – தலை + கோல்
Answer:
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி, தலைக்கோல் என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம்
அ) புகார்
ஆ) வஞ்சி
இ) மதுரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புகார்

Question 2.
இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை
அ) நீலகேசி, குண்டலகேசி
ஆ) உதயணகுமாரகாவியம், நாககுமார காவியம்
இ) சிந்தாமணி, சூளாமணி
ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை
Answer:
ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை

Question 3.
சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கத்தேவர்
ஈ) நக்கீரர்
Answer:
அ) இளங்கோவடிகள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 4.
‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று குறிப்பிடுபவர்
அ) திரு.வி.க.
ஆ) பாரதி
இ) பாரதிதாசன்
ஈ) ம.பொ.சி.
Answer:
ஆ) பாரதி

Question 5.
இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதைக் குறிப்பிட்டிருக்கும் காதை
அ) மங்கலவாழ்த்து
ஆ) அரங்கேற்றுகாதை
இ) வரந்தருகாதை
ஈ) ஊர்சூழ்வரி
Answer:
இ) வரந்தருகாதை

Question 6.
பொருத்திக் காட்டுக.
அ) கழை – 1. பந்தல்
ஆ) விதானம் – 2. புதுமை
இ) நித்திலம் – 3. மூங்கில்
ஈ) விருந்து – 4. முத்து

அ) 3, 1, 4, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) நாவலம்பொலம் – 1. இசைக்கருவிகள் வாசிப்போர்
ஆ) அரசு உவா – 2. நாடகக் கணிகையர் பெறும்பட்டம்
இ) குயிலுவமாக்கள் – 3. பட்டத்து யானை
ஈ) தலைக்கோல் – 4. சாம்பூந்தம் என்னும் உயர்ந்த வகைப் பொன்

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 1, 2

Question 8.
பொருத்திக் காட்டுக.
அ) புரிகுழல் – 1. ஒரு வகை எடை அளவு
ஆ) பல்இயம் – 2. இடக்கை வாத்தியம்
இ) வாரம் – 3. தெய்வப்பாடல்
ஈ) ஆமந்திரிகை – 4. இன்னிசைக்கருவி
உ) கழஞ்சு – 5. சுருண்ட கூந்தல்

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 5, 4, 3, 1, 2
இ) 3, 1, 2, 4, 5
ஈ) 5, 4, 2, 3, 1
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 9.
மாதவி ஆடற்கலையைப் பயின்ற ஆண்டுகள்
அ) 5
ஆ) 7
இ) 12
ஈ) 15
Answer:
ஆ) 7

Question 10.
ஆடல் கற்பதற்கான சடங்குகளை மாதவி செய்தபோது வயது
அ) 5
ஆ) 7
இ) 9
ஈ) 12
Answer:
அ) 5

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 11.
மாதவி தனது ஆடலை அரங்கேற்ற விரும்பிய வயது
அ) 7
ஆ) 9
இ) 12
ஈ) 15
Answer:
இ) 12

Question 12.
மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் நிரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஒரு முகத்திரை

Question 13.
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் திரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) பொருமுகத்திரை

Question 14.
மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் திரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) கரந்துவரல் திரை

Question 15.
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்கு அளிக்கப்படுவது
அ) தலைக்கோல்
ஆ) செங்கோல்
இ) வைரமணி
ஈ) அரசாட்சி
Answer:
அ) தலைக்கோல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 16.
இந்திரனின் மகன்
அ) சனகன்
ஆ) சயந்தன்
இ) அபினந்தன்
ஈ) மாயன்
Answer:
ஆ) சயந்தன்

Question 17.
மன்னனிடமிருந்து மாதவி பெற்ற பரிசு
அ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
ஆ) நூற்றெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
இ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சு வைரமாலை
ஈ) நூற்றெட்டுக் கழஞ்சு வைரமாலை
Answer:
அ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை

Question 18.
பொருத்திக் காட்டுக.
அ) பேரியாழ் – 1) 7 நரம்புகளைக் கொண்டது
ஆ) மகரயாழ் – 2) 16 நரம்புகளைக் கொண்டது
இ) சகோடயாழ் – 3) 17 நரம்புகளைக் கொண்டது
ஈ) செங்கோட்டியாழ் – 4) 21 நரம்புகளைக் கொண்டது.

அ) 4, 3, 2, 1
ஆ) 4, 2, 1, 3
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Question 19.
தொல்நெறி, ஆடலும் பாடலும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
அ) வினைத்தொகை, எண்ணும்மை
ஆ) பண்புத்தொகை, எண்ணும்மை
இ) பெயரெச்சம், முற்றும்மை
ஈ) உவமைத்தொகை, உம்மைத்தொகை
Answer:
ஆ) பண்புத்தொகை, எண்ணும்மை

Question 20.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்னும் விதிக்குரிய சொல்
அ) பொற்குடம்
ஆ) தலைக்கோல்
இ) பேரியாழ்
ஈ) பூங்கோதை
Answer:
ஆ) தலைக்கோல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
தலைக்கோல் பட்டம் பெற்றவள் யார்? ஏன்?
Answer:

  • தலைக்கோல் பட்டம் பெற்றவள் மாதவி.
  • தன் ஆடல் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்ததன் காரணமாகச் சிறப்பிக்கப்பட்டது.

Question 2.
சிலப்பதிகாரம் – ஓர் புரட்சி காப்பியம் எங்ஙனம் விளக்குக.
Answer:
முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் புரட்சிக் காப்பியம் எனப்படுகிறது.

Question 3.
இரட்டைக்காப்பியங்கள் யாவை? காரணம் கூறுக.
Answer:

  • சிலப்பதிகாரம், மணிமேகலை
  • சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சியும், மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியம் எனப்படும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 4.
பாரதியார் இளங்கோவையும், சிலம்பையும் எங்ஙனம் புகழ்கிறார்?
Answer:
‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி இளங்கோவையும், சிலம்பையும் புகழ்கிறார்.

Question 5.
இளங்கோவடிகள் எங்கு தன்னை அறிமுகம் செய்கிறார்?
Answer:
வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றி தான் செங்குட்டுவன் தம்பி என்று தன்னை அறிமுகம் செய்கிறார்.

Question 6.
மாதவியின் நாட்டியப் பயிற்சி பற்றி விளக்குக.
Answer:

  • மாதவி, அழகிய தோள்களை உடையவள்.
  • தேனும் தாதுவும் நிறைந்த பூக்கள் அணிந்த கூந்தலை உடையவள்.
  • ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் கற்றவர்கள்.
  • ஏழு ஆண்டுகள் ஆடல் கலையைப் பயின்றவள்.
  • பன்னிரெண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.

Question 7.
மங்கல வாழ்த்துப் பாடலில் இசைக்கருவிகள் ஒலித்த முறைகளை விளக்குக.
Answer:

  • குழலின் வழியே யாழிசை நின்றது.
  • யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தலம் ஒலித்தது.
  • தண்ணுமையோடு இயைந்து முடிவு ஒலித்தது.
  • முழவுடன் இடக்கை வாத்தியம் கூடிநின்று ஒலித்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 8.
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்.
Answer:

  • குடிமக்கள் காப்பியம்
  • இரட்டைக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • புரட்சிக் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • முத்தமிழ் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • நாடகக் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.

Question 9.
மாதவி மன்னனிடம் பரிசு பெற்றமையை விவரி.
Answer:
(i) பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி நடனமாடியது போல் மாதவி அரங்கில் நூலில் சொல்லப்பட்ட சரியாகக் கடைப்பிடித்து அழகுற ஆடினாள். கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து வழுவாது ஆடினாள்.

(ii) அந்த ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னன் ‘தலைக்கோலி’ என்னும் பட்டம் அளித்தான்.

(iii) மேலும் அரங்கேற்றம் செய்யும் நாடகக்கணிகைக்கு ‘பரிசு இவ்வளவு’ என நூல் விதித்த முறைப்படி ‘ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை அணிவித்தான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 10.
யாழின் வகைகள் யாவை?
Answer:

  • 21 நரம்புகளைக் கொண்ட பேரியாழ்.
  • 17 நரம்புகளைக் கொண்ட மகரயாழ்.
  • 16 நரம்புகளைக் கொண்ட சகோடயாழ்.
  • 7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டியாழ்.

Question 11.
குடிமக்கள் காப்பியம் பெயர்க்காரணம் தருக.
Answer:
அரசக்குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் ‘குடிமக்கள் காப்பியம்’ எனப் பெயர் பெற்றது.

Question 12.
‘இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத்
தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு’ – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
சிலப்பதிகாரம் – புகார்க்காண்டம். அரங்கேற்ற காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

விளக்கம் :
பொன்னால் செய்யப்பட்ட பூங்கொடி போல் மாதவி நடனமாடியது கண்டு அகமகிழ்ந்த மன்னன் ‘தலைக்கோலி’ என்ற பட்டத்தையும் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை பரிசாகவும் அளித்தான்.

சிறுவினா

Question 1.
நாட்டிய அறங்கின் அமைப்பை விளக்குக.
Answer:

  • ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரம் உடைய நாட்டிய அரங்கம் அமைத்தனர்.
  • அரங்கில் தூணிற்கு மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கு இடையே இடைவெளி நான்கு கோல் அளவு வைத்தனர்.
  • அரங்கு உள்ளே, வெளியே செல்ல ஏற்ற அளவுடன் இருவாயில்கள் அமைத்தனர்.
  • மேல்நிலை மாடத்தில் ஐம்பூதங்களை யாவரும் புகழும்படி சித்தரித்து வைத்தனர்.
  • தூணில் நிழல் விளக்குகளை நிறுத்தினர்.
  • ஒரு முகத்திரை, பொருமுகத்திரை, கரந்துவரல் திரை மூன்றையும் சிறப்புடன் அமைத்தனர்.
  • விதானம், முத்துமாலை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.
  • இத்தகைய வேலைப்பாடுகளுடன் நாட்டிய அரங்கம் அமைத்தனர்.

Question 2.
தலைக்கோல் அறிவை – விளக்குக.
Answer:
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மங்கைக்கு அளிக்கும் பட்டம்.
(i) இத்தலைக்கோல் புகழ் கொண்ட மன்னனுடன் போரிட்டு அவனிடமிருந்து பறிக்கப்பட்ட வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது.

(ii) காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகள் இருக்கும். அக்கணுக்களுக்கு சாம்பூந்தம் எனும் பொன்தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக் கோலாக்குவது.

(iii) மன்னனின் அரண்மனையில் வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து வழிபடுவர்.

(iv) தலைக்கோலை புண்ணிய நதி நீரைப் பொற்குடங்களில் கொண்டு வந்து நீராட்டுவர்.

(v) மாலைகள் அணிவித்து, முரசு முழங்க, வாத்தியங்கள் ஒலிக்க ஐம்பெருங்குழு, அரசர் சூழ்ந்துவர, பட்டத்து யானை தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும்.

(vi) அனைவரும் ஊர்வலமாக வந்தபின் கவிஞன் தலைக்கோலை ஆடல் அரங்கில் வைப்பார்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

Question 3.
மாதவியின் நாட்டியத்தை மங்கல வாழ்த்துப் பாடலால் அறியலாகும் செய்தி யாது?
Answer:

  • அரசன் முதலானோர் தத்தம் தகுதிக்கு ஏற்ப இருக்கையில் அமர்ந்தனர்.
  • இசைக்கருவிகளை வாசிப்போர் நிற்க வேண்டிய முறைப்படி நின்றனர்.
  • நாடகக் கனிகையாகிய மாதவி வலக்காலை முன் வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்துடன் அருகே நின்றாள்.
  • ஆடலில் தேர்ச்சி பெற்ற தோரிய மகளிர் ஒருமுக எழினிக்கு இடப்பக்கத் தூணின் அருகே நின்றனர்.
  • நன்மை, பெருகவும், தீமை நீல்கவும் வேண்டி
    ‘ஓரொற்றுவாரம்’, ஈரொற்றுவாரம்’ என்னும் தெய்வப்பாடலை முறையாகப் பாடினர்.
  • இசைக்கருவிகள் அனைத்தும் கூட்டாக இசைத்தன.

Question 4.
‘ஆடலும் பாடலும் அழகும் என்று கிக்
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்
ஏழு ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆறு ஆண்டில்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி’ – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் : இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுக் காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
மாதவியின் நாட்டியப் பயிற்சி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

விளக்கம் :
அழகிய தோள்களை உடைய மாதவி, தேனும், தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். அவள் ஆடல், பாடல், அழகு இம்மூன்றில் என்றும் குறைபடாமல் ஏழு ஆண்டுகள் ஆடல் கலையைக் கற்று, தன் பன்னிரண்டு வயதில் அரங்கேற்றினாள்.

Question 5.
சிலப்பதிகாரம் குறிப்பு வரைக.
Answer:

  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.
  • கண்ணகியின் கால் சிலம்பால் உருவான கதை.
  • மூன்று காண்டங்கள் முப்பது காதைகள் கொண்டது. அவை முறையே: புகார் காண்டம் – 10; மதுரைக் காண்டம் – 13; வஞ்சிக் காண்டம் – 7 என மொத்தம் – 30

வேறு பெயர்கள் : முத்தமிழ்க் காப்பியம் , இரட்டைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்.

உண்மைகள் : அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.2 கவிதைகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.2 கவிதைகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Question 1.
உங்களுக்குப் பிடித்த புதுக்கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள் 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகாமௌனம் – அடிகள் புலப்படுத்துவது

அ) இரைச்சல்
ஆ) குறைக்கும் கூத்தாடும்
இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்
ஈ) புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது.
Answer:
இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

குறுவினா

Question 1.
மூச்சு நின்றுவிட்டால்
பேச்சும் அடங்கும் – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
Answer:

  • “எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானே அடங்கும்”
  • “சான்றோர் கொள்கையும் மாண்டால் அடங்கும்”

சிறுவினா

Question 1.
கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
Answer:
1. நிரந்தரமாக இருக்க எண்ணினோம்.
நிரந்தரமில்லாமல் சென்றுவிடுகிறோம்.

2. உயர்ந்த கொள்கைகளும் உயிர்போனால்
உதாசினப்படுத்தப்படும்.

3. உண்மைகள் எல்லாம் சில உண்மைகளைத்
திரைமறைவு செய்வதற்கே.

4. ஆர்ப்பரிப்பில் அடங்காத மனம்
அமைதியில் அடங்கிவிடும்.

5. கடலின் உள்நிகழ்வே கடல் அலைகள்
மனதின் வெளிப்பாடே புறச்செயல்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

  • நகுலனின் கவிதைகளே இங்கே பேசப்பட்டுள்ளன. நகுலனின் கவிதையின் முழங்கு பொருளே இவை.
  •  எனவே, கவிஞன் தான் நினைத்தவற்றைச் சொல்வடிவத்தில் சுருக்கிச் சொல்ல முற்படும்போது உதிர்ந்த முத்துக்களே இவை.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நம் பாடப்பகுதியிலுள்ள ‘கவிதைகள் ……. . என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
அ) நகுலன் கவிதைகள்
ஆ) கண்ணாடியாகும் கண்கள்
இ) நாய்கள்
ஈ) வாக்குமூலம்
Answer:
அ) நகுலன் கவிதைகள்

Question 2.
கவிஞர் நகுலனின் இயற்பெயர்
அ) டி.கே. நீலமேகம்
ஆ) டி.கே. துரைசாமி
இ) இராகோபாலன்
ஈ) கிருஷ்ணமூர்த்தி
Answer:
ஆ) டி.கே. துரைசாமி

Question 3.
கவிஞர் நகுலன் பிறந்த ஊர்
அ) தஞ்சாவூர்
ஆ) கும்பகோணம்
இ) திருச்சி
ஈ) விழுப்புரம்
Answer:
ஆ) கும்பகோணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Question 4.
கவிஞர் நகுலன் வாழ்ந்த ஊர்
அ) தஞ்சாவூர்
ஆ) கர்நாடக மாநிலத்தின் மாண்டியா
இ) கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்
ஈ) ஆந்திர மாநிலத்தின் கடப்பா
Answer:
இ) கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்

Question 5.
கவிஞர் நகுலன் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) அண்ணாமலை
ஈ) திருவள்ளுவர்
Answer:
இ) அண்ணாமலை

Question 6.
கவிஞர் நகுலன் எழுதியுள்ள புதினங்கள்
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
Answer:
ஆ) ஏழு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Question 7.
கவிஞர் நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்?
அ) பாரதி
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பாரதி

Question 8.
‘இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்று எழுதியவர்
அ) நாகூர் ரூமி
ஆ) பாரதிதான்
இ) நகுலன்
ஈ) ஆத்மாநாம்
Answer:
இ) நகுலன்

குறுவினா

Question 1.
நகுலன் (டி.கே. துரைசாமி) பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : நகுலன்
பிறப்பு : கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்
கல்வி : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம்
சிறப்பு : புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகளை

நறுக்கென்று : கூறுபவர். அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதியவர் படைப்புகள் : மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி ஆகிய புதினங்களை எழுதியுள்ளார். பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

Question 2.
புதுக்கவிதை என்றால் என்ன?
Answer:
புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டுமல்ல. புதிய சிந்தனைகளையும், புதிய கருத்துகளையும், புதுமையாகச் சொல்வது புதுக்கவிதை ஆகும்

Question 3.
‘இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.’ இக்கவிதைக்குப் பொருத்தமான பழமொழியை எழுதுக.
Answer:
கானல் நீர் போல.

Question 4.
‘ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்.’ இக்கவிதைக்குப் பொருத்தமான பழமொழியை எழுதுக.
Answer:
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்காது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.2 கவிதைகள்

புணர்ச்சி விதி

Question 1.
பிரயோஜனமில்லை – பிரயோஜனம் + இல்லை
Answer:
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + இ + மி) பிரயோஜனமில்லை என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.2 புரட்சிக்கவி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.2 புரட்சிக்கவி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

குறுவினாக்கள்

Question 1.
உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?
Answer:

  • உழைப்பாளர்கள் தங்கள் தோள்வலிமையால் பாழ்நிலத்தைத் பண்படுத்திப் புதுநிலமாக்கினர்.
  • அழகு நகர்களையும் சிற்றூர்களையும் உருவாக்கினர்.
  • வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.

Question 2.
அலைகடல், புதுக்கியவர் – இலக்கணக்குறிப்புத் திருக.
Answer:
அலைகடல் – வினைத்தொகை; புதுக்கியவா வினையாலணையும் பெயர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

கூடுதல் வினாக்கள்

Question 3.
‘உதாரன் அழகும் அறிவும் இளமையும் வாய்ந்த வன்’ – யார், யாரிடம் கூறியது?
Answer:
“உதாரன் அழகும் அறிவும் இளயையும் வாய்ந்தவன்” என்று அரசனிடம் அமைச்சர் கூறியது.

Question 4.
“சில பேச்சுப் பேசிடுக” – யாடு யாரிடம், எங்கு கூறியது?
Answer:
“சில பேச்சுப் பேசிடுக தலைப்பாகை அதிகாரி, உதாரனிடமும் மங்கையிடமும் கொலைக்களத்தில் கூறியது.

Question 5.
அரசன், அமைச்சரிடம் எதற்கு ஆலோசனை கேட்டான்?
Answer:
அரசன், தன் மகள் இளவரசி அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையைக் கற்றுத் தர விரும்பியதால், அமைச்சரிடம் ஆலோசனை கேட்டான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 6.
அரசன், எதற்குத் தயங்கினான்?
Answer:
அழாம் அறிவும் இளமையும் வாய்ந்த உதாரனே, கவிதை எழுதும் கலை கற்பிக்க ஏற்றவன் என அமைச்சர் கூறியதால், ‘தன் மகள் எளிய கவிஞனோடு காதல் வயப்படுவாளோ?’ என அரசன் தயங்கினான்.

Question 7.
தயங்கிய அரசனுக்கு அமைச்சர் கூறிய உத்தி யாது?
Answer:
“உதாரன் பார்வையற்றவன்” என அமுதவல்லியிடமும், “அமுதவல்லி தொழுநோயாளி” என உதாரனிடமும் கூறி, இருவருக்கும் இடையே, ஒருவரை மற்றொருவர் காணாவகையில் திரை இடுமாறும் அரசனுக்கு அமைச்சர் உத்தி கூறினார்.

Question 8.
பாரதிதாசனைப் ‘புரட்சிக்கவி’ எனக் கூறக் காரணங்கள் என்ன?
Answer:
தம் கவிதைகளில் தாய்மொழி, தமிழினம், குடியாட்சி உரிமைகள், சமூக சீர்திருத்தங்கள் என்பன பற்றி, உரத்த சிந்தனைகளை வெளியிட்டுள்ளமையே, பாரதிதாசனைப், ‘புரட்சிக்கவி’ எனக் கூறக் காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 9.
மக்களாட்சி அடிப்படைக் கூறுகளாகப் புரட்சிக்கவி கூறுவன யாவை?
Answer:
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன, மக்களாட்சி அடிப்படைக் கூறுகள் எனப் புரட்சிக்கவி கூறுகிறது.

Question 10.
பாரதிதாசன் இயற்றிய காப்பியங்கள் யாவை?
Answer:
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு என்பன, பாரதிதாசன் இயற்றிய காப்பியங்களாகும்.

சிறுவினாக்கள்

Question 1.
“உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் : பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்.
பொருள் : உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்.
விளக்கம் : கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதநரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினான். “யானறிந்த தமிழே என் மரணத்துக்குக் காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 2.
பெருங்காடு, உழுதுழுது – பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுக.
Answer:
பெருங்காடு – பெருமை + காடு ‘ஈறுபோதல்’ (பெரு + காடு), ‘இனம் மிகல்’ (பெருங்காடு)

உழுதுழுது – உழுது + உழுது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உழுத் + அது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உந்துது)

கூடுதல் வினா

Question 3.
புரட்சிக் கவிஞர் – குறிப்பெழுதுக.
Answer:
புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்ட கனக சுப்புரத்தினம், பாரதியாரிடம் கொண்ட பற்றுதலால், தம் பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

சமுதாயப் பொறுப்புணர்ந்து கவிதைகளைப் படைத்தார். தம் பாடல்களில் மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியன குத்த கருத்துகளை உரக்க வெளிப்படுத்தியமையால், ‘புரட்சிக் கவிஞர்’ எனவும், ‘பாவேந்தர் எனவும் அழைக்கப்பெற்றார்.

குடும்ப விளக்கு பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு முதலான நூல்களை இயற்றினார். ‘குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.

வடமொழியால் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி 1937இல், புரட்சிக்கவி’யை எழுதி ளார். பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தார்.

இவடைய ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு இவர் பெயரில் திருச்சியில், ‘பல்கலைக்கழகம்’ ஒன்றை நிறுவியுள்ளது.

இவர் இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்னும் பாடலைப் புதுவை அரசு, ”தமிழ்த்தாய் வாழ்த்தாக’ ஏற்றுச் சிறப்பித்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

நெடுவினா

Question 1.
பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.
Answer:
உதாரன் புரட்சிக்கவி :
வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ காவியத்தைத் தழுவிப் பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’யைப் படைத்துள்ளார். அதில் புரட்சிக்கவியாக இடம் பெற்றவன் ‘உதாரன்’.

தனிமனித ஆட்சியை, ஆதிக்கத்தை அழித்து, உதாரன் மக்களாட்சியை நிறுவுகிறான். அதற்கு அவன் ஆற்றிய வீரவுரைகளே காரணம். அவ்வுரைகள் அத்தனையும் பாரதிதாசன் சிந்தையில் உருவானவையே.

வாய்ப்பைப் பயன்படுத்தும் உதாரன் :
தொழுநோயாளி என அறிமுகப்படுத்தப்பட்ட இளவரசி அமுதவல்லிக்குப் பார்வையற்றவனாகக் கூறப்பட்ட கவிஞன் உதாரன், கவிதை எழுதும் கலையைக் கற்பிக்கத் தொடங்கினான்.

அவர்கள் இறுதியில் காதலர்களாயினர். அதனால், மரண தண்டனைக்கு உள்ளாகி, இருவரும் கொலைக்களம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே கிடைத்த வாய்ப்பைத் தனதாக்கிப் புரட்சிக்காரனாகிறான் கவிஞன். இங்குக் கவிஞன் உதாரனின் முழக்கமெல்லாம், பாவேந்தரின் கருத்துகளே என்பதில் ஐயமில்லை!

பாட்டாளி மக்களின் உழைப்பால் விளைந்த நலன்களை, உதாரன் பட்டியலிடுகின்றான்! “பாழ் நிலத்தை அந்நாளில் புதுக்கியவர் யார்?”, “பயன்விளைக்கும் நின்ற உழைப்புத் தோள்கள் எவரின் தோள்கள்?”, “கருவியெலாம் செய்த அந்தக் கைதான் யார் கை?”, “கடல் முத்தை எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?” இவையெல்லாம் பாரதிதாசனது உணர்ச்சியின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

உதாரன் புரட்சியைத் தூண்டுதல் :
மக்கள் உள்ளத்தில் புரட்சியைத் தூண்ட விரும்பியதால் கவிஞன் உதாரன், தனக்கும் அரகனுக்கும் உண்டான வழக்கின் அடிப்படையை எடுத்துரைக்கிறான்.

“மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா?” என்னும் சிந்தனையைத் தூண்டும் மக்களுக்காக மட்டுமே ஆட்சி இருக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாவேந்தர், உகாரன் வாய்மொழியாக வைத்து, “ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அந்தத் தேசம் ஒழதல் நன்றாம்” எனக் கூறுகின்றார்.

புரட்சிக்கவியின் தமிழ்ப்பற்று :
தமிழின்மேல் தமக்குள்ள பற்றுதலைப் பாவேந்தர், உதாரன் மூலமாத வெளிப்படுத்துகிறார். “அமுது சொல்லும் இந்தத் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று சமுதாயம் நினைத்திடுமோ?” அஞ்சுவதாகக் கூறி, “என் தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ ?” என வேதனைப்படுகிறான்.

எனவே மக்களை நோக்கி, “உமை ஒன்று வேண்டுகின்றேன்; மாசில்லாத உயர் தமிழை உயிர் என்று போற்று மின்கள்” என்கிறான். இவை அனைத்தும் பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவியே என்பதனை உறுதிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

இலக்கணக்குறிப்பு

ஒதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய, வீழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
அலைகடல், நிறைஉழைப்பு, உயர்தமிழ் வழ்கொள்ளி – வினைத்தொகைகள்
தமிழ்க்கவிஞன், பாம்புக்கூட்டம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்
பேரன்பு, நெடுங்குன்றம், இளஞ்சிங்கம், பெருங்காடு, சிற்றூர், நெடுமரங்கள், நன்னாடு, பொன்னாடு, பெருமக்கள் – பண்புத்தொகைகள்
ஒழிதல், சாதல், தவிர்தல், முழக்கம் – தொழிற்பெயர்கள்
உழுதுழுது, பதைபதைத்து – அடுக்குத்தொடர்கள்
பெரியோரே, தாபோரே, இளஞ்சிங்கங்காள், பெரியீர், அன்னையீர் – அண்மை விளிகள்
பூட்டி – வினையெச்சம்
வந்திருந்தார், கொண்டவர் – வினையாலணையும் பெயர்
எலாம் – இடைக்குறை
கற்பிளுந்து, மலைபிளந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
அரசனுக்கும் எனக்கும், இவளும் நானும், கவிஞனுக்கும் காதலிக்கும் – எண்ணும்மைகள்
வந்தோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
கண்ணீர்வெள்ளம் – உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

உறுப்பிலக்கணம்

1. நின்றார் – நில் (ன்) + ற் + ஆர்
நில் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

2. செய்வான் – செய் + வ் + ஆன்
செய் – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அழைத்தான் – அழை + த் + த் + ஆன்
அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

4. வேண்டுகின்றேன் – வேண்டு + கின்று + ஏன்
வேண்டு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

5. ஆழ்க – ஆழ் + க
ஆழ் – பகுதி, க – வியங்கோள் வினைமுற்று விகுதி.

6. பறித்தார் – பறி + த் + த் + ஆர்
பறி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுறு விகுதிர

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

7. உரைப்பாய் – உரை + ப் + ப் + ஆய்
உரை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

8. தந்தார் – தா (த) + த் (ந்) + த் + ஆர்
தா – பகுதி, ‘த’ ஆனது விகாரம், த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்,
த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.,

9. ஏகுகின்றேன் – ஏகு + கின்று + ஏன்
ஏகு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

10. வாழார் – வாழ் + (ஆ) + ஆர்
வாழ் – பகுதி, (ஆ) – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

11. செய்தார் – செய் + த் + ஆர்
செய் – பகுதி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

12. ஓதுக – ஓது + க
ஓது – பகுதி, க – வியங்கோள் விலை கற்று விகுதி.

13. பூட்டி – பூட்டு + இ
பூட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

14. வெட்டி – வெட்டு + இ
வெட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

15. அறுத்தல் – அறு – த + தல்
அறு – பகுதி, த்து சத்தி, தல் – தொழிற்பெயர் விகுதி.

16. வாழிய – வாழ் + இய
வாழ் – பக்தி, இய – வியங்கோள் வினைமுற்று விகுதி.

17. செய்தேன் – செய் + த் + ஏன்
செய் பகுதி, த் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

18. குனந்தான் – குனி+ த் (ந்) + த் + ஆன்
தனி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
‘ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. நீரோடை – நீர் + ஓடை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நீரோடை)

2. சிற்றூர் – சிறுமை + ஊர்
“ஈறுபோதல்” (சிறு + ஊர்)
“தன்னொற்று இரட்டல்” (சிற்று + ஊர்)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (சிற்ற் + ஊர்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (சிற்றூர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

3. கற்பிளந்து – கல் + பிளந்து
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பிளந்து )

4. மணிக்குலம் – மணி + குலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (மணிக்குலம்)

5. அமுதென்று – அமுது + என்று
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அமுத் + என்று)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அமுதென்று)

6. புவியாட்சி – புவி + ஆட்சி
“இ ஈ ஐ வழி யவ்வும்” (புவி + ய் + ஆட்சி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (புவியாட்சி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

7. ஒப்பவில்லை – ஒப்ப + இல்லை
“ஏனை உயிர்வழி வவ்வும்” (ஒப்ப +வ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஒப்பவில்லை)

8. நெற்சேர – நெல் + சேர
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (நெற்சேர)

9. பொற்றுகளை – பொன் + துகளை
“னலமுன் றன ஆகும் தநக்கள்” (பொன் + றுகளை)
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (பொற்றுகளை)

10. பேரன்பு – பெருமை + அன்பு
“ஈறுபோதல்” (பெரு + அன்பு), “ஆதி நீடல்” (பேரு + அன்)
“முற்றும் அற்று ஒரோ வழி” (பேர் அன்பு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போன்பு)

11. இளஞ்சிங்கம் – இளமை + சிங்கம்
“ஈறுபோதல்” (இள + சிங்கம்), “இனம் மிகில்” (இளஞ்சிங்கம்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

12. பொன்னாடு – பொன் + நாடு
“னலமுன் றன ஆகும் தநக்கள்” (பொன்னாடு)

13. நன்னாடு – நன்மை + நாடு
“ஈறுபோதல்” (நன் + நாடு எனலமுன் றன ஆகும் தநக்கள்” (நன்னாடு)

14. கண்ணீ ர் – கண் + நீர்
“ணளமுன் டண ஆகும் ஆக்கள்” (கண்ணீ ர்)

15. ஆவென்று – ஆல் என்று
“ஏனை உயிர்வழி வவ்வும்” (ஆ + வ் + என்று),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஆவென்று)

16. தூதொன்று – தூது + ஒன்று
“உதிர்வான உக்குறள் மெய்விட்டோடும்” (தூத் + ஒன்று)
உடலமேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தூதொன்று)

17. நிலவில்லை – நலிவு + இல்லை
முற்றும் அற்று ஒரோவழி” (நலிவ் + இல்லை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நலிவில்லை)

18. தலைப்பாகை – தலை + பாகை
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (தலைப்பாகை)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

19. நெடுங்குன்று – நெடுமை + குன்று
“ஈறுபோதல்” (நெடு + குன்று), “இனமிகல்” (நெடுங்குன்று)

20. பாம்புக் கூட்டம் – பாம்பு + கூட்டம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பாம்புக் கூட்டம் )

பலவுள் தெரிக

Question 1.
அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன் – யார், யாரிடம் கூறியது?
அ) அமைச்சர் கவிஞரிடம்
ஆ) மன்னன் அமைச்சரிடம்
இ) அமைச்சர் மன்னனிடம்
ஈ) மன்னன் அமுதவல்லியிடம்
Answer:
இ) அமைச்சர் மன்னனிடம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் ……………..
அ) சட்டம், நிருவாகம், நீதி
ஆ) அரசு, அமைச்சர், தூதுவர்
இ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
ஈ) மக்கள் புரட்சி, போராட்டம், மக்களாட்சம்
Answer:
இ) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 3.
மக்களாட்சிச் சிந்தனைகளைப் பரப்பியதில்…………….. பெரும்பங்கு உண்டு.
அ) புரட்சிக்கு
ஆ) போராட்டத்திற்கு
இ) இலக்கியத்திற்கு
ஈ) காலத்திற்கு
Answer:
இ) இலக்கியத்திற்கு

Question 4.
“உயிர் எமக்கு வெல்லமன்று” எனக் கூறியவர் ……………..
அ) கவிஞர் உதாரன்
ஆ) மந்திரி
இ) திரண்டிருந்த மக்கள்
ஈ) இளவரசி அமுதவல்லி
Answer:
ஈ) இளவரசி அமுதவல்லி

Question 5.
சிரம் அறுத்தல்……………..பொழுதுபோக்கு!
அ) கவிஞனுக்கு
ஆ) அமைச்சனுக்கு
இ) வேந்தனுக்கு
கொலைகாரனுக்கு
Answer:
இ) வேந்தனுக்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 6.
“சாதல் எனில் இருவருமே சாதல் வேண்டும்” – இதில் இருவர் என்பது …………….. குறித்தது.
அ) அரசன், அமுதவல்லி
ஆ) அமைச்சர், அரசர்
இ) அமுதவல்லி, உதாரன்
ஈ) உதாரன், அமைச்சர்
Answer:
இ) அமுதவல்லி, உதானன

Question 7.
குடிகட்கெல்லாம் ஆளுரிமையைப் பொதுவாக்க நினைத்தது……………..
அ) உதாரன்
ஆ) அமைச்சன்
இ) மக்கள்
ஈ) அமுதவல்லி
Answer:
ஈ) அமுதவல்லி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 8.
‘உலகம்’ என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) முழக்கம்
ஆ) படிகம்
இ) படி
Answer:
வி படி

Question 9.
‘தந்திட்டான் என்னும் சொல்லின் பகுதி ……………..
அ) தம்
ஆ) தந்து
இ) தந்த
ஈ) தந்திடு
Answer:
ஈ) தந்திடு

Question 10.
தெமிழ் அறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவி என் றெனை அவளும் காதலித்தாள் – இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்
அ) அழகின் சிரிப்பு
ஆ) பாண்டியன் பரிசு
இ) பிசிராந்தையார்
ஈ) புரட்சிக்கவி
Answer:
ஈ) புரட்சிக்கவி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 11.
பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’க் காவியத்தை , எதனைத் தழுவி எழுதினார்?
அ) பாரதம்
ஆ) சாகுந்தலம்
இ) பில்கணீயம்
ஈ) பெருங்கதை
Answer:
இ) பில்கணீயம்

Question 12.
எப்பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்?
அ) ராஜகோபாலன்
ஆ) அரவிந்தன்
இ) வில்வரத்தினம்
ஈ) சுப்புரத்தினம்
Answer:
ஈ) சுப்புரத்தினம்

Question 13.
பாரதிதாசன், தமிழ் வடிவில் தந்தது …………….. மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டம்.
அ) ஆங்கில
ஆ) டச்சு
இ) பிரெஞ்சு
ஈ) போர்த்துகீசிய
Answer:
இ) பிரெஞ்சு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 14.
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழின் பெயர் ……………..
அ) வானம்பாடி
ஆ) கரும்பு
இ) இந்தியா
ஈ) குயில்
Answer:
ஈ) குயில்

Question 15.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடகம்……………..
அ) பாண்டியன் பரிசு
ஆ) சேரதாண்டவம்
இ) இருண்டவீடு
ஈ) பிசிராந்தையார்
Answer:
ஈ) பிசிராந்தையார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 16.
புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், …………….. எனத் தொடங்கும்.
அ) தமிழுக்கு அமுதென்று பேர்
ஆ) நீராரும் கடலுடுத்த நிலமடந்தை
இ) வாழ்வினில் செம்மையைச் செய்பவள்
ஈ) என் அம்மை ஒற்றி எடுத்த நெற்றிகண்
Answer:
இ) வாழ்வினில் செம்மையைச் செய்பவள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 புரட்சிக்கவி

Question 17.
சொல் பொருள் பொருத்துக.
1. மீட்சி – அ. உலோகங்கள்
முழக்கம் – ஆ. மாணிக்கம்
3. மணி – இ. விடுதலை
4. கனிகள் – ஈ. உலகம்
– உ. ஓங்கி உரைத்தல்
Answer:
1-இ, 2-உ, 3-ஆ, 4-அ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

குறுவினா

Question 1.
‘நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.
Answer:
‘வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.

எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு பருருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ் வமை கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

கூடுதல் வினாக்கள்

Question 2.
ஜீவா குறித்து அறிந்தவற்றைச் சுருக்கமாக எழுதுக.
Answer:

  • ‘ஜீவா’ என அழைக்கப்பெறும் ‘ப. ஜீவானந்தம்’, சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
  • தொடக்கக் காலத்தில் காந்தியவாதி; பின்னர்ச் சுயமரியாதை இயக்கப் போராளி.
  • ஜீவா, சிறந்த தமிழ்ப் பற்றாளர்; எளிமையின் அடையாளமாக வாழ்ந்தவர்.

Question 3.
ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணம் எது
Answer:
“நான் ஒரு பள்ளி மாணவன். படித்துக்கொண்டிருக்கிறேன்; படித்துக்கொண்டே இருப்பேன்” என்பது, ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 4.
ஜீவாவின் பிரார்த்தனை யாது?
Answer:
“மனிதச் சிந்தனையே! கற்பனை கும் எட்டாத பேராற்றலே! நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை ஒருமுறை என்னிடம் கூறு. அதலன எட்டுத் திசைகளிலும் பரப்பி, மனித இனத்தை நீ சொல்லும் இடத்திற்கு அழைத்து வருவேன். முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைம்மாறு வேண்டேன்! என்னைப் பயன்படுத்திக் கொள்வதே, நீ எனக்குச் செய்யும் கைம்மாறு” என்பதே, ஜீவாவின் பிரார்த்தனை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 5.
ஜீவாவின் கொள்கையில் நம்பிக்கையும் எதிலிருந்து பிறந்தன?
Answer:
‘கற்பனைக்கு எட்டாத பேராற்றலான மனிதச் சிந்தனையில் சிறந்தவற்றை, எட்டுத் திசைகளிலும் பரப்பி, மன்ற இனத்தை உயர்த்தத் தம்மால் இயன்றதைக் கைம்மாறு கருதாமல் செய்யவேண்டும்’ என்னும் அடிப்படை மனோபாவத்திலிருந்து பிறந்ததே, ஜீவாவின் கொள்கையும் நம்பிக்கையுமாகும்.

Question 6.
ஜீவாவின் நினைவில் எப்போதும் நிற்கும் எளிய உண்மை யாது?
Answer:
தழக்குத் தெரியாத அரிய செய்திகள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்னும் எளிய உண்மை , வாவின் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும்.

சிறுவினா

Question 1.
ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?
Answer:

  • ஜீவாவின் பாணி, இரவல் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! ‘பேச்சுக்கலை’ என்பது ஜீவா பெற்ற வரம்!
  • மக்கள் தரத்தை, அனுபவ அறிவை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த
  • ஒருவர், கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில்
  • வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
  • உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணமுடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 2.
கூடுதல் வினாக்கள் ஜீவா சமூக நலனுக்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு குறித்து எழுதுக.
Answer:

  • நாஞ்சில் நாட்டுத் தோவாளையில் மக்களிடம் பள்ளி மாணவர் குழு ஒன்று, திருவாங்கூர் வெள்ளப் பெருக்கின் பாதிப்பை எடுத்துக் கூறித் துயர் துடைக்க நிதி திரட்டியது.
  • பள்ளி இறுதி வகுப்பு மாணவரான ஜீவா, அக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
  • சமூக நலனுக்காக ஜீவா தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு அது.
  • அதுவே அரசியல் சிந்தனையிலும் பொதுவுடைமைச் சிந்தனையிலும் ஜீவா, தம்மைக் கூர்வாளாக மெருகேற்றிக் கொண்ட முதல் நிகழ்வாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 3.
ஜீவா மேடையில் வாழ்ந்த மாமனிதர் என்பதை விவரி.
Answer:

  • எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடைப் பேச்சாளர்.
  • ஜீவா, தமக்கென ஒரு தத்துவத்தைப் படைத்துக் கொண்டவர் அல்லர்.
  • தாம் நம்பிய தத்துவத்தை, அச்சில் உயிரிழந்து கிடக்கும் சித்தாந்தக் கருத்துகளைத் தமது அரிய பேச்சாற்றலால், கலைநோக்கால், கற்பனையால் உயிர்பெற்று எழச் செய்தார்கள்
  • தம் மேடைப்பேச்சால் அந்த மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தார் எனலாம், தம் மேடைப்பேச்சால், மனித இனத்தை உன்னத உயரத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்.
  • ‘என் வாழ்க்கை என் கைகளில்’ என்னும் நம்பிக்கையோடு மேடையில் வாழ்ந்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

நெடுவினா

Question 1.
சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’ என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக.
Answer:
மக்கள் நம்பிக்கை :
மக்கள் கூட்டத்தின் முன் நின்று அண்டம் முட்ட, நாற்றிசையும் அலை பரவச் சங்கநாதமென முழங்கிய ஜீவாவின் மரணம், முத்திரை கொண்டதாகத்தான் இருக்குமென அனைவரும் நம்பினர். மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்க வேண்டுமென, மக்களின் பேதை மனம் எண்ணுகிறது. ஜீவா என்கிற தொண்டன், இறுதி மூச்சு நிற்பதுவரை மேடையில் கர்ஜித்துக்கொண்டு இருந்திருப்பான் என்பதில், அனைவருக்கும் அத்தனைம்பிக்கை.

மேடைப்பேச்சில் வண்ண ஜாலம்
பேச்சு, அவர் பெற்ற வரம் பேச்சுக்கலை குறித்துக் கூறும் புத்தக விதிகளை மறுத்து, தம் சொந்தப் பாணியில் கற்றதை வெளிபடுத்தியவர். மக்களின் தரம், அறிவு, பழக்கவழக்கம், நம்பிக்கைகளைப் புரிந்து, விஷயத்தோடும், கலைநோக்கோடும் கற்பனை கலந்ததாக அவர் பேச்சுப் பாணி அமைந்தது. உழுது விதைத்து நல்ல அறுவடைகாண விரும்பியவர் அவர். எனவே, செய்திகளைக் குவியல் குவியலாகக் கூறிக் குழப்பாமல், சில றிப் புரிய வைத்தவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

காற்றில் கலந்த பேரோசை :
பேச்சுக்கலை, அவர் காலடியில் விழுந்து கிடந்தது. இப்போது மேடையில் ஒரு நாற்காலி கானமாக விட்டது. அது, இனிக் காலியாகவே கிடக்கும். ஆற்றில் விழுந்த கிளை, எதிர்நீச்சல் போட்டுக் கடவுளின் முன்னேற்பாடுகளைத் தகர்த்து எறிந்துவிட்டு, மலை உச்சிக்குச் சென்றுவிட்டது. பேரோசை, காற்றில் கலந்துவிட்டது என்கிறார் சுந்தர ராமசாமி.

பலவுள் தெரிக

Question 1.
‘ஜனப் பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
அ) மக்கள் அலை
ஆ) உயிர் அலை
இ) மக்கள் வெள்ளம்
ஈ) மக்கள் அவை
Answer:
இ) மக்கள் வெள்ளம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

கூடுதல் வினாக்கள்

Question 2.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1. நான் ஒரு பள்ளி மாணவன் என்ற எண்ணம் உடையவர்
2. இயற்கையின் விதிகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டவர்
3. என் வாழ்வு என் கையில் என்று நம்பியவர்
4. பொதுவுடைமை இயக்கத் தலைவர்
அ) சுந்தர ராமசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) குமட்டூர் கண்ண னார்
ஈ) குடவாயில் பாலசுப்பிரமணியன்
Answer:
ஆ) ப. ஜீவானந்தம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 3.
‘சொரிமுத்து’ என்பது,……………….இயற்பெயர்.
அ) மதுசூதனின்
ஆ) வைத்தியலிங்கத்தின்
இ) ஜீவாவின்
ஈ) ராசேந்திரனின்
Answer:
இ) ஜீவாவின்

Question 4.
‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையை எழுதியவர் ………….
அ) ஆத்மாநாம்
ஆ) பிரபஞ்சன்
இ) பாரதியார்
ஈ) சுந்தர ராமசாமி
Answer:
ஈ) சுந்தர ராமசாமி

Question 5.
மாணவர்கள் குழுவாகச் சென்று வெள்ளப் பெருக்கிற்காக ஜீவா நிதி திரட்டிய இடம்……………..
அ) திருவிதாங்கூர்
ஆ) நாகர்கோவில்
இ) தோவாளை
ஈ) குற்றாலம்
Answer:
இ) தோவாளை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

Question 6.
‘மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர்’ எனத் வந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர் ……………
அ) திரு. வி. க.
ஆ அறிஞர் அண்ணா
இ) ஜீவானந்தம்
ஈ) சங்கரதாசு சுவாமிகள்
Answer:
இ) ஜீவானந்தம்

Question 7.
ஜீவா நினைவில் கொண்டிருந்த எளிய உண்மையாகச் சுந்தர ராமசாமி குறிப்பிடுவது
அ) பேச்சு எனக்குக் கைவந்த கலை
ஆ) எல்லாம் கரைத்துக் குடித்துவிடவில்லை
இ) இயற்கை விதிகளை மறுத்து எதிர்நீச்சல் போடமுடியும்
ஈ) எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்
Answer:
ஈ) எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்கவும் வேண்டுமென எண்ணுகிய பேதை மனசு.
வினா : பேதை மனசு எவ்வாறு எண்ணுகிறது?

2. “அன்சு நின்றுவிட்டது” என்று நான் சொன்னபோது, “பேச்சு நின்றபோதா?” எனத் திருப்பிக் கே கிறார்கள்.
வினா : “பேச்சு நின்றபோதா?” என எப்போது திருப்பிக் கேட்கிறார்கள்?

3. பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
வினா : அவர் பெற்ற வரம் என்று, எதனைச் சொல்ல வேண்டும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை

4. பேச்சுக்கலைதான் அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது.
வினா : அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது எது?

5. தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்ற எளிய உண்மை , எப்போதும் அவர் நினைவில் நிற்கும்.
வினா : எவ்வுண்மை அவர் நினைவில் எப்போதும் நிற்கும்?

6. ‘என் வாழ்வு என் கைகளில்’ என்று நம்பினார் அவர்.
வினா : அவர் என்னவென்று நம்பினார்?

7. நீரில் விழுந்த கிளை மலைக்குச் சென்றுவிட்டது.
வினா : நீரில் விழுந்த கிளை எங்குச் சென்றுவிட்டது?
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை - 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.1 திரைமொழி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.1 திரைமொழி

பாடநூல் வினாக்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

பலவுள் தெரிக

Question 1.
வேறுபட்டதைக் குறிப்பிடுக.
அ) அண்மைக் காட்சித் துணிப்பு
இ) நடுக்காட்சித் துணிப்பு
ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு
ஈ) காட்சி மறைவு
Answer:
ஈ) காட்சி மறைவு

குறுவினா

Question 1.
பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
Answer:

  • திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவுவது பின்னணி இசையே.
  • பின்னணி இசைச் சேர்ப்பு, மவுனம் இவ்விரண்டும் சில வேளைகளில் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன.
  • இசை பாத்திரங்களின் மனக்கவலைகள் அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எதிரொலிப்பதாகவும் இருத்தல் அவசியமானது.

சிறுவினா

Question 1.
திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
Answer:
காட்சியின் முக்கியத்துவம்:

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
  • திரைப்படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்கு இரண்டாம் இடம்தான்.
  • திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

சான்று:
முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.

  • அடுத்தக் காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்.
  • முதல் காட்சியில் எண் 7, வீரையா தெரு… என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.

இவ்விரண்டு தரவுகளிலும் காட்சி அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நெடுவினா

Question 1.
திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
திரைப்படத்துறை – ஒரு கலை:
புதுமை வாழ்வில் எத்தனையோ அற்புதங்களைக் கண்டு மகிழ்கிறோம். நாடகத்தின் மறுமலர்ச்சியாக, மக்களை மயக்கும் கலையாக திரைப்படத்துறை தவிர்க்கமுடியாத ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறை வளர்ச்சியின் பின்னால் எத்தனைத் துறைகள் அடங்கியிருப்பது பற்றி யாரும் திரும்பிப் பார்ப்பது கிடையாது.

சான்றாக, கதை, கதை-உணர்த்தும் நீதி, எண்ணத்தை ஈர்க்கும் வசனம், கதாநாயகன், நாயகிகள் தேர்வு, ஆடை அலங்காரம், இடங்கள் தேர்வு, புகைப்படக் கருவி, நடனக் குழுக்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். இதற்குள் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன.

எல்லாக் கலைஞர்களும் அருகி வரும் நிலையில் இத்துறையின் வளர்ச்சி உயர்ந்த நிலையில் உள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க எத்தனை கோடிகள், எவ்வளவு செலவீனங்கள் என வளர்ந்து கொண்டே போகும். இதற்கு இடையில் குடும்பப் படங்கள், அரசியல் படங்கள், பக்திப் படங்கள் என்றும் பற்பல பிரிவுகளில் எடுக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

இவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு பிரிவிலும் விற்பன்னர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கென்று திரைப்படத்துறை சார்ந்த படிப்புகளும் உருவாகி உள்ளன. இத்துறையில் முழு ஈடுபாடு கொண்டால்தான் சிறக்கும்.

இதைப்பலகலைகளின்சங்கமம்என்றே கூறலாம். நடிகர்களின்நடிப்புக்கலை,ஒப்பனைக்கலை, வசனம் (பேச்சுக்கலை), (கேமரா) படமெடுப்பதில் கலையம்சம், ஒலிப்பதிவுக்கலை, ஒளிப்பதிவுக் குழு நடனக் கலை என ஒட்டுமொத்த கலைஞர்களால் மட்டும்தான் இது நடந்தேறி வருகிறது.

கணினி சம்பந்தப்பட்ட ஒத்துழைப்புகளாலும் உதவியாலும் இத்துறை மெருகூட்டப்படுகிறது. கண்டுபிடிப்புகள் அதிகமானாலும் கலையம்சம் நிறைந்தது திரைப்படத்துறையே. எனவே கலைகளின் சங்கமம் என்பது பொருத்தமானதே.

திரைப்படத்துறை ஆயிரம் பேரையல்ல, ஆயிரம் குடும்பங்களை வாழவைக்கிறது. கேளிக்கைகள் நிறைந்த இவ்வுலகில் திரைப்படத்துறைக்கு மட்டும் கலைஞர்கள், தொழில்நுட்ப 1121 வல்லுநர்கள், ஒப்பனைக்காரர்கள், ஆடை அலங்கார வல்லுநர்கள், ஆண்-பெண் நடனக் குழுக்கள், சண்டைக் காட்சிகளில் பங்குபெற எதிர்த்தலைவன் மற்றும் துணைவர்கள், உதவியாளர்கள் என எத்தனையோ ஆட்கள் இதை நம்பி இருக்கிறார்கள்.

திரைப்படத்துறையில் மட்டும் கால் வைத்து விட்டால் அவர்களுக்கு மற்ற தொழில் மறந்துவிடுகிறது. எல்லாம் இருந்தவர்கள் ஏன் இத்துறைக்கு வருகிறார்கள் என்று தெரிவதில்லை. சென்னை-கோடம்பாக்கத்தில் கலைத்துறை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இதை நம்பியே வாழ்ந்து வருகின்றன.

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைப்பணி” என்பது போல அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்க்கையும் வாய்ப்பும் கொடுக்கும் துறையாக திரைப்படத்துறை திகழ்கிறது. இந்தக் கலையைக் கற்க முடியாது. பயிற்சியால்தான் பெற முடியும். மறவோம் கலைஞர்களை! மதிப்போம் கலைஞர்களை!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் மாலை 5 மணி, பிரான்சின் தலைநகரான பாரீசில் கிராண்ட் கபே விடுதி முன் ‘அதிசயம் பிறக்கிறது’ என்ற தலைப்பில் முதல் திரைப்படம் வெளியிடப்பட்டது.
ii) லூமியர் சகோதரர்களே இத்திரைப்படத்தை உருவாக்கினர்.
iii) இச்சகோதரர்கள் வெளியிட்ட படங்களில் ஒன்று ரயிலின் வருகை

அ) i சரி
ஆ) ii சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 2.
அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர்
அ) லூமியர் சகோதரர்கள்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஜார்ஜ் மிலி
ஈ) இவர்களில் வெருமிலர்
Answer:
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்

Question 3.
படப்படிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகுக்கு அளித்தவர்கள்
அ) லூமியர் சகோரார்கள்
ஆ) எடிசன் சகோதரர்கள்
இ) ஜார்ஜ் சகோதரர்கள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) லூமியர் சகோரார்கள்

Question 4.
திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்
அ) லூமியர்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஜார்ஜ் மிலி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) ஜார்ஜ் மிலி

Question 5.
சார்லி சாப்ளின் பிறந்த இடம்
அ) தி ஹேக்
ஆ) இலண்டன்
இ) நியூயார்க்
ஈ) பாரிஸ்
Answer:
ஆ) இலண்டன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 6.
சார்லி சாப்ளின் தாயார் ஒரு
அ) மேடைப்பாடகர்
ஆ) நடிகை
இ) வழக்கறிஞர்
ஈ) மருத்துவர்
Answer:
அ) மேடைப்பாடகர்

Question 7.
சிறுவனான சாப்ளின் மேடையேறி ஆடிப்பாடிடக் காரணமாக அமைந்தது
அ) மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்
ஆ) இயற்கையிலேயே மேடையில் ஆடிப்பாடிட வேண்டும் என்ற சார்லி சாப்ளின் ஆசையினால்
இ) நண்பர்கள் மேடையேறியே ஆக வேண்டும் என்று சாப்ளினை வற்புறுத்தியதால்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்

Question 8.
சார்லி சாப்ளினைப் பேசாப் பட நாயகனாக உருவாக்கிய தோற்றம்
அ) லிட்டில் மாஸ்டர்
ஆ) லிட்டில் டிராம்ப்
இ) லிட்டில் ஸ்டார்
ஈ) மாஸ்டர் மார்ஷல்
Answer:
ஆ) லிட்டில் டிராம்ப்

Question 9.
சார்லி சாப்ளின், வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ……………….. என்ற வெற்றிப் படமாக்கினார்.
அ) தி கிட்
ஆ) சிட்டி லைட்ஸ்
இ) மார்டன் டைம்ஸ்
ஈ) தி. கிரேட் டிக்டேட்டர்
Answer:
அ) தி கிட்

Question 10.
சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்
அ) மார்டன் டைம்ஸ்
ஆ) சிட்டி லைட்ஸ்
இ) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
ஈ) யுனைடெட் மூவிஸ்
Answer:
இ) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 11.
தி கோல்டு ரஷ், தி சர்க்கஸ் போன்ற காவியப் படங்களை உருவாக்கியவர்
அ) அர்னால்டு
ஆ) ஜாக்கிஜான்
இ) சார்லி சாப்ளின்
ஈ) ஜார்ஜ் மீலி
Answer:
இ) சார்லி சாப்ளின்

Question 12.
‘சார்லி சாப்ளின்’ எதிரிகளின் வாய்களை அடைத்து எடுத்த பேசும் திரைப்படம்
அ) சிட்டி லைட்ஸ்
ஆ) சிட்டி நைட்ஸ்
இ) வில்லேஜ் லைட்ஸ்
ஈ) வில்லேஜ் நைட்ஸ்
Answer:
அ) சிட்டி லைட்ஸ்

Question 13.
சார்லி சாப்ளின் மூன்று ஆண்டு உழைப்பில் வெளியிட்ட திரைப்படம்
அ) சிட்டி லைட்ஸ்
ஆ) மார்டன் டைம்ஸ்
இ) தி கிட்
ஈ) தி கோல்டு ரஷ்
Answer:
அ) சிட்டி லைட்ஸ்

Question 14.
சார்லி சாப்ளினது சோதனைப் படமான ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வெளியான ஆண்டு.
அ) 1932
ஆ) 1940
இ) 1936
ஈ) 1945
Answer:
ஆ) 1940

Question 15.
ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல் படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி கிரேட் டிக்டேட்டர்
ஈ) தி கிரேட் லீடர்
Answer:
இ) தி கிரேட் டிக்டேட்டர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 16.
‘மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதை உணர்த்திய திரைப்படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி கிரேட் டிக்டேட்டர்
ஈ) தி கிரேட் லீடர்
Answer:
இ) தி கிரேட் டிக்டேட்டர்

Question 17.
சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ படம் ஏற்படுத்திய தாக்கம்
(i) அன்றைய தொழில் மய உலகின் கேடுகளை விமர்சனம் செய்வதாக இத்திரைப்படம் அமைந்தமையால் சாப்ளினுக்குப் பொதுவுடைமையாளர் என்னும் முத்திரை விழுந்தது.
ii) பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது.
iii) இருந்தாலும் படம் வெற்றி பெற்றது.

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 18.
சார்லி சாப்ளின் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்த ஆண்டு
அ) 1940
ஆ) 1950
இ) 1952
ஈ) 1942
Answer:
ஆ) 1950

Question 19.
சார்லி சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் …………….. விருது வழங்கப்பட்டது.
அ) கோல்டன் குளோப்
ஆ) ஆஸ்கார்
இ) பிரவு டு ஆஃப் அமெரிக்கா
ஈ) கோல்டன் வேர்ல்டு
Answer:
ஆ) ஆஸ்கார்

Question 20.
பொருத்திக் காட்டுக.
அ) LONG SHOT – 1. மீ அண்மைக் காட்சித்துணிப்பு
ஆ) MID SHOT – 2. அண்மைக் காட்சித்திணிப்பு
இ) CLOSEUP SHOT – 3. நடுக்காட்சித்துணிப்பு
ஈ) EXTREME CLOSEUP SHOT – 4. சேய்மைக்காட்சித் துணிப்பு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 21.
மனைவியின் வைரமாலையை விற்று, பிரெஞ்சுக்காரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப் படங்களையும் வாங்கியவர்
அ) சாமிக்கண்ணு வின்சென்ட்
ஆ) தியோடர் பாஸ்கரன்
இ) அஜயன் பாலா
ஈ) அம்ஷ ன் குமார்
Answer:
அ) சாமிக்கண்ணு வின்சென்ட்

Question 22.
சாமிக்கண்ணு வின்சென்ட் துண்டுப்படங்களைக் காட்ட ஆரம்பித்த இடம்
அ) சென்னை
ஆ) திருவனந்தபுரம்
இ) திருச்சி
ஈ) மதுரை
Answer:
இ) திருச்சி

Question 23.
சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ வெளியான ஆண்டு
அ) 1932
ஆ) 1936
இ) 1940
ஈ) 1942
Answer:
ஆ) 1936

Question 24.
1977ஆம் ஆண்டு வரை திரைப்படமே பார்க்காமல் வாழ்ந்த மக்களின் ஊர்
அ) கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு
ஆ) ஆந்திராவில் காக்கி நாடா
இ) கேரளத்தில் கோழிக்கோடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு

Question 25.
சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி சர்க்க ஸ்
ஈ) தி கிரேட் டிக்டேட்டர்
Answer:
ஈ) தி கிரேட் டிக்டேட்டர்

Question 26.
‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்திட சார்லி சாப்ளினால் உருவாக்கப்பட்ட பாத்திரம்
அ) ஹென்றி
ஆ) ஹென்கோல்
இ) மீலி
ஈ) ஆடம்ஸ்
Answer:
ஆ) ஹென்கோல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 27.
திரைமொழி குறித்த பாடப்பகுதி … கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டது.
அ) அஜயன் பாலா
ஆ) சுஜாதா
இ) செழியன்
ஈ) அம்ஷன்குமார்
Answer:
அ) அஜயன் பாலா

குறுவினா

Question 1.
திரைப்படத் துறையின் தோற்றம் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களைக் குறிப்பிடுக.
Answer:

  • தாமஸ் ஆல்வா எடிசன் (படப்பிடிப்புக்கருவி)
  • பிரான்சின் லூமியர் சகோதரர்கள் (படப்பிடிப்புக்கருவி)
  • ஜார்ஜ் மிலி (கதை சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்)

Question 2.
திரைக்கதை – விளக்குக.
Answer:

  • படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைவது திரைக்கதை.
  • திரைக்கதைகள் பலமுறை எழுதி, பலமுறை படித்துப் பார்த்துத் திருத்தி உருவாக்குவது.
  • இத்தகைய உழைப்பு உள்ள திரைக்கதை மக்கள் மனதில் நிற்கும்.

Question 3.
முப்பரிமாணக்கலை என்றால் என்ன?
Answer:
திரைப்படத்தில் நடிப்பவரை முன்பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடிப்பது முப்பரிமாணக் கலை என்பர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 4.
திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:
கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கும் போது கண்கள் தாமாகவே அகண்ட கோணத்தைத் தேர்வு செய்வது மீ சேய்மை காட்சித்துணிப்பு என்கிறோம்.

Question 5.
சேய்மைக் காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
பேருந்தைப் பிடிக்க சாலையைக் கடக்கும் போது சாலையின் இரு பக்கங்களைப் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவில் இருந்து பதிவு செய்வது சேய்மைக் காட்சித் துணிப்பு ஆகும்.

Question 6.
நடுக்காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:
பேருந்தை விட்டு இறங்கி நடந்து போகும் போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பளவில் மட்டும் கவனப்படுத்துகிறோம். கண், ஆளை முழுதாகப் பார்த்தாலும், நம் கவனம் இடுப்புவரை மட்டும் எடுத்துக் கொள்வது நடுக்காட்சித் துணிப்பு ஆகும்.

Question 7.
அண்மைக்காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகம் மட்டுமே நமக்குப் பதிவாவது அண்மைக்காட்சித் துணிப்பு ஆகும்.

Question 8.
மீஅண்மைக்காட்சித் துணிப்பு என்றால் என்ன?
Answer:
செருப்பைக் கழற்றி வாசலில் விடும் போது கண் கீழே குனிந்து செருப்பை மட்டும் பார்ப்பது மீ அண்மைக்காட்சித் துணிப்பு.

Question 9.
திரைப்படத்தின் காட்சிமொழி என்றால் என்ன?
Answer:
ஒரு மணி நேரப் பயணத்தை ஐந்தே காட்சித் துணிப்புகளாக இருபது நொடிகளில் பார்வையாளரிடம் உணர்த்துவது திரைப்படத்தின் காட்சிமொழி ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 10.
திரைப்படக்கலை என்றால் என்ன?
Answer:
திரைப்படத்தில் தேவையான கோணங்களைப் பயன்படுத்தி அவற்றை வெட்டி, ஒட்டி, படத்தொகுப்புச் செய்து வெள்ளித்திரையில் ஒரு நல்ல கதையாகச் சொல்வது திரைப்படக்கலை என்பர்.

Question 11.
படத்தொகுப்பு என்றால் என்ன?
Answer:
தேவையற்ற காட்சிகளை நீக்கி தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பது படத்தொகுப்பு என்பர்.

Question 12.
ஒற்றைக்கோணக் கலை என்றால் என்ன?
Answer:
ஒரு காட்சியை ஒற்றைக்கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது ஒற்றைக்கோணக் கலை என்பர்.

Question 13.
நேரேட்டர் என்றால் என்ன?
Answer:
நேரேட்டர் என்பதன் பொருள் ‘கதை சொல்லி’ என்பதாகும். திரையரங்கில் மவுனப்படங்கள் 112 ஓடிக் கொண்டிருக்க திரைக்கு அருகே ஒருவர் ஒலி வாங்கியைப் பிடித்துக் கதை சொல்லுபவரை நேரேட்டர் என்பர். அவர் வந்து நின்றாலே அனைவரும் கைத்தட்டுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

சிறுவினா

Question 1.
காட்சி ஆற்றல் என்பதை விளக்குக. (அல்லது) காட்சி நகர்வு உத்தியை விளக்குக.
Answer:

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
  • திரைப்படத்தில் காட்சி சிறப்பானால் வசனம் இரண்டாம் இடம்தான்.
  • நாடகத்தில் விளக்கை அணைத்தும், திரையை இறக்கியும் காண்பிப்பர்.
  • முதல் காட்சி – கதாநாயகியிடம் தோழி தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
  • அடுத்தக்காட்சி – கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்.
  • காட்சி மாறுவதை உணர்த்த சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக்காட்டுவர். இதைக் காட்சி மறைவு என்பர்.
  • தொடங்கும் போது சிறிது சிறிதாக வெளிச்சம் கூட்டி முழுக்காட்சி வெளிப்படும் இதை காட்சி உதயம் என்பர்.
  • ஒரு காட்சி தொடங்கும் போது அடுத்தக்காட்சி தொடங்குவது கலவை / கூட்டு என்பர் (Mix).
  • பழைய காட்சியை அழித்துக் கொண்டே அடுத்தக் காட்சியை தோன்றுவதை அழிப்பு (Wipe) என்பர்.

இவ்வாறு பல்வேறு உத்திகள் காட்சியில் கையாளப் படுகிறது.

Question 2.
குலஷோவ் விளைவு விளக்குக.
Answer:

  • மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் முதலில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன.
  • அடுத்தக்காட்சியில் தொழிற்சாலைக்குள் மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர்.
  • சமூகத்தில் மனிதர்கள் மந்தைகள் ஆவதை உணர்த்துகிறது.
  • காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்ட முடியும்.
  • இவ்வாறு காட்டுவதைக் குலஷோவ் விளைவு’ என்பர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 3.
நல்ல திரைப்படம் என்பது எது – விளக்குக.
Answer:

  • முறையான காட்சிமொழியுடன் நல்ல கலையாக உருவாக்கும் படத்தில் பொய்களும் இருக்க முடியாது.
  • நம் மூளையை மழுங்கச் செய்யும் கவர்ச்சிகளும் இடம் பெறாது.
  • இப்படைப்புகள் உண்மையைப் பேசும்.
  • அதன் மூலம் காண்பிக்கப்படும் வாழ்வியல், நம் அனுபவத்தை மேம்படுத்தி வாழ்க்கையை வளமாக்கும்.

Question 4.
சாமிக்கண்ணு வின்சென்ட் சினிமாத் தொழில் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினைக் கூறுக.
Answer:

  • பிரெஞ்சுக்காரர் டுபான் அவர்களிடம் 2500 ரூபாய்க்கு புரொஜக்டரையும், சில துண்டு படங்களையும் வாங்கினார்.
  • திருச்சி, திருவனந்தபுரம், மதுரை, மதராசு போன்ற இடங்களில் முகாமிட்டுப் படம் காட்டினார்.
  • பிறகு லாகூர், பெஷாவர், லக்னோ போன்றப் பகுதியில் படம் காட்டினார்.
  • 1909இல் மதராஸ் திரும்பி அங்கே எஸ்பிளனேட்டில் கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார். புரொஜக்டர்கள் இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார்.

நெடுவினா

Question 1.
திரைப்படத் துறையில் சார்லி சாப்ளினின் பங்கினை விளக்குக.
Answer:
இளமை :

  • இலண்டனில் பிறந்த சாப்ளின் வறுமையின் மடியில் வளர்ந்தவர்.
  • இவரது தாய் வறுமையை மறக்கடிக்கத் கதைகள் சொல்வார்.
  • அதன் மூலம் கலைஞனாக செதுக்கப்பட்டார்.
  • மேடையில் பாடிய அம்மாவின் குரல் கெட்டுவிட இவரே மேடையில் ஆடிப்பாடி அசத்தினார்.
  • நடிகராகி குடும்பத்தைக் காக்கக் கனவு கண்ட அவர் அமெரிக்கா சென்று திரை வாய்ப்பைப் பெற்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

தோற்றம் :

  • தொள தொள கால் சட்டை, இறுக்கமான கோட்டு, துண்டு மீசை, புதுவிதமான சேட்டை கொண்டவர்.
  • ‘லிட்டில் டிராம்ப்’ என்று அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது.

புகழ் :

  • அவர் ஊதியம் போல் புகழும் உயர்ந்தது.
  • வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ‘தி கிட்’ என்ற வெற்றிப் படமாக்கினார்.
  • யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனத்தைக் தொடங்கி வளர்ச்சி கண்டார்.
  • ‘தி கோல்டு ரஷ்’, ‘தி சர்க்கஸ்’ போன்ற காவியங்கள் உருவாகின.

வெற்றிப்பயணம் :

  • மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் அடித்து நொறுக்கினார்.
  • பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ் பெற்ற அவர் பேசும் படங்களில் தோற்பார் என்று எதிர்பார்த்தனர்.
  • எதிர்பார்ப்புகளை முறியடித்து சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தின் வாயிலாக எதிரிகளின் வாய்களை அடைத்தார்.
  • ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படத்தின் மூலம் உலகின் தொழில்மய கேடுகளை விமர்சனம் செய்தார்.
  • பொதுவுடைடையாளர் என்ற முத்திரை விழுந்தது பல நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது, இருந்தாலும் வெற்றி பெற்றார்.
  • 1940இல் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படம், மனித குலத்திற்குத் தேவை போர் அல்ல; நல்லுணர்வும் அன்பும்தான் என்று உணர்த்தியது.
  • இப்படம் சாதனைப் படமாக மட்டுமல்லாமல் ஹிட்லரை விமர்சித்து உருவான முதல் படமாகவும் விளங்கியது.
  • 1952இல் அவரை நாடு கடத்தியதாக அறிவித்தது. பிறகு சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறினார்.
  • தன் தவறை உணர்ந்து மீண்டும் சாப்ளினை அழைத்தது. அவரும் அமெரிக்கா வந்தார்.
  • வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
  • இன்றும் உலகின் பல பகுதிகளில் சாப்ளினின் டிராம் உருவம் குறியீடாக இடம் பெற்றிருப்பது அவரது உழைப்பும் வெற்றியுமே அடையாளம் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

Question 2.
சார்லி சாப்ளியின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ கதையைச் சுருக்கி வரைக.
Answer:
1940இல் சாப்ளினுக்கு நல்ல வசனப்படங்கள் எடுக்கத் தெரியாது என்ற காலக்கட்டத்தில் விமர்சர்களின் கூற்றைப் பொய்யாக்கி வெற்றிக் கண்ட படம் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.

  • இப்படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார்.
  • அதே உருவம் கொண்ட இன்னொரு பாத்திரத்தைக் கடை நடத்தும் யூதர் இனத்தவராக அறிமுகம் செய்தார்.
  • சர்வாதிகாரி ஹென்கோல் யூதர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • யூதரான கடைக்காரரும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பித்து ஷென்கோலின் உடையை திருடி அணிந்து கொள்கிறார்.
  • தப்பித்த கைதியைத் தேடிய காவலர்கள் வழியில் வரும் ஹென்கோல் உடையணிந்த : கடைக்காரருக்கு மரியாதை செய்தனர்.
  • சாதாரண உடையில் வந்த ஹென்கோலை சிறையில் அடைக்கின்றனர்.
  • ஒரே நாளில் இருவர் வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது.
  • கடுமையான அரசியல் விமர்சனங்கள்.
  • இறுதியாக, சர்வாதிகாரி வேடத்தில் இருக்கும் யூதர் கைது செய்யப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்ய ஆணையிடுகிறார்.
  • மாநாட்டில் மனிதகுல பேருரை ஆற்றுகிறார்.
  • இப்பேருரைதான் இன்று வரை சிறந்த வசனமாகப் பேசப்படுகிறது.
  • தாம் வாழும் காலத்தில் ஹிட்லரைக் கடுமையாக விமர்சித்த ஒரே படம் என்ற பெருமையும் உண்டு.
  • இரட்டை வேடங்கள் எத்தனைவந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.6 படிமம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.6 படிமம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 1.
இரவும் பகலும்
எதிரெதிர் மோதிட
உடைந்த பகலின் துண்டுகள் – இக்கவிதையில் படிம உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுக.
Answer:
இரவும் பகலும் மோதிக்கொள்ளும் வினையைக் காட்சிப்படுத்தியதால் இது வினைப்படிமம் ஆகும்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
படிமம் என்பதன் பொருள்
அ) சொல்
ஆ) செயல்
இ) காட்சி
ஈ) ஒலி
Answer:
இ) காட்சி

Question 2.
‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்’ இக்கவிதையில் ………… பயின்று வந்துள்ளது.
அ) பயன் படிமம்
ஆ) வினைப்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) வினைப்படிமம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
கூற்று : உவமைஉருவகம்போலபடிமமும்வினை,பயன்,மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் சரி, காரணமும் சரி
ஈ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி

Question 4.
மெய்ப்படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.
அ) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு
ஆ) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்
ஈ) வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
Answer:
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்

Question 5.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது” – இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?
Answer:

  • இப்பாடலடிகளில் மெய் (வடிவப்) படிமம் வெளிப்படுகிறது.
  • மாந்தோப்பு பருவ காலத்தின் அழகு பட்டாடையாக மரத்தைப் போர்த்தியிருப்பது பூக்களும் தளிர்களும் பட்டாடையை உடுத்திய பெண்ணின் தோற்றத்தை அல்லது பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு ஒப்பிட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கும்” – என்று எருமையின் சுரணையைற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துபவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
ஆ) தேவதேவன்

Question 2.
“கத்தல்களின் நெருக்கடியில்
தத்துவங்கள்
குழந்தைகள் போல்
அடிக்கடி தொலைந்துபோகும்” – என்று எழுதியவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
அ) ஆ.வே.முனுசாமி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) தாழைமலர் – 1. பொன்
ஆ) செருந்தி மலர் – 2. அன்ன ம்
இ) முள்ளி மலர் – 3. முத்துகள்
ஈ) புன்னை மலர் – 4. நீலமணி

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 4.
எயிற்பட்டினம் உள்ள ஓய்மாநாட்டை ஆட்சி செய்தவன்
அ) அதியமான்
ஆ) நல்லியகோடன்
இ) பேகன்
ஈ) நளங்கிள்ளி
Answer:
ஆ) நல்லியகோடன்

Question 5.
‘அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்’- என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) பெரும்பாணாற்றுப்படை
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) மலைப்படுகடாம்
ஈ) அகநானூறு
Answer:
ஆ) சிறுபாணாற்றுப்படை

Question 6.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கின்றது’ என்ற படிமக்கவிதையின் ஆசிரியர்
அ) தேவதேவன்
ஆ) ஆ.வே.முனுசாமி
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
இ) ந. பிச்சமூர்த்தி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 7.
‘கட்டில் நிணக்கும் இழிசினன் கையது’ என்னும் புறநானூற்றில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
அ) வினைப்படிமம்

Question 8.
“காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத் துள்ளிவரும்
புதுவெயில்” – என்று கல்யாண்ஜி கவிதையில் படிமப்படுத்தப்படுவது

அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்
ஆ) கன்றின் செயல், காலை இளம் வெயிலின் அழகோடு ஒப்பிடுதல்
இ) கன்றின் செயல் இளைஞரோடு ஒப்பிடல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்

Question 9.
‘நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே’ என்னும் குறுந்தொகை பாடலில் இடம்பெறும் படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) பயன்படிமம்

Question 10.
“யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்” – என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்ப டிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) மெய்ப்ப டிமம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 11.
“கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும்” – என்னும் ந. பிச்சமூர்த்தியின் கவிதையில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) வடிவப்படிமம்

Question 12.
‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப என்னும் அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஈ) உருப்படிமம்

குறுவினா

Question 1.
படிமம் என்றால் என்ன?
Answer:

  • படிமம் என்பது காட்சி என்பது பொருள்.
  • காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி.

Question 2.
படிமத்தின் பணிகள் யாவை?
Answer:

  • காட்சித்தன்மை கொண்டவற்றை அப்படியே காணும் வகையில் வெளிப்படுத்தி தெளிவை ஏற்படுத்தலாம்.
  • புதிய முறையில் தோற்றக் கூறுகளை எழுத்துக் காட்டலாம்.
  • கருத்துத்தன்மையுள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டி காட்சித்தன்மை தரலாம்.
  • கருத்துக்களைப் புரிய வைக்கலாம்.
  • காட்சிக்குத் தெளிவுப்படுத்துவது, காட்சிப்படுத்துவது படிமத்தின் பணிகள் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 3.
காட்சிப் படிமத்தை சான்றுடன் விளக்குக.
Answer:
“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதி நீரில் கிடக்கும்”

எருமையின் சுரணையற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துகிறார் கவிஞர். இது காட்சிப் படிமம் ஆகும்.

Question 4.
வினைப்படிவம் சான்றுடன் விளக்குக.
Answer:
கட்டிலைப் பின்னுகின்ற ஒருவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ அவ்வளவு விரைவாக ஊரைக் கைப்பற்ற வந்த வீரனின் போர் என்று கீழ்வரும் பாடல் வினையைக் காட்சிப்படுத்துகின்றது.

“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனோடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரோ.”

Question 5.
பயன் படிமம் விளக்குக.
Answer:
“நோம் என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!”

இனிய செய்தல் இன்னா செய்தல் என்ற பயன்களை, இனிய வகையாக நெருஞ்சி பூவையும், இன்னாதவையாக நெருஞ்சி முள்ளையும் காட்சிப் பொருளால் படிமப்படுத்தியுள்ளார் கவிஞர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

Question 6.
யானை தன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பின் தோன்றும் – இப்பாடலில் பயின்று வரும் படிமத்தை விளக்குக.
Answer:
இப்பாடலில் மெய்ப்படிமம் பயின்று வந்துள்ளது. மதங்கொண்ட யானையானது தன் வாய்க்குள் துதிக்கையின் மூலம் உணவை வைக்கிறது. யானையின் வாய் மலைக்குகை வாயினைப் போல் உள்ளதாகவும். துதிக்கை மலைக்குகையில் நுழையும் பாம்பினைப் போல் உள்ளதாகவும் வடிவத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

Question 7.
புதுக்கவிதையில் கையாளும் உத்திகள் யாவை?
Answer:
உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகியன.

Question 8.
படிமத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை?
Answer:
வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்).

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

சிறுவினா

Question 1.
சங்கப் பாடலில் காணப்பெறும் உவமைகளில் படிமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன – விளக்குக.
Answer:
நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஓய்மா நாட்டின் காட்சி:

“அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழா அலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்”

எனும் பாடலில்

“தாழை மலர் அன்னம் போலவும்
செருந்தி மலர் பொன்னைப் போலவும்
முள்ளி மலர் நீலமணியைப் போலவும்”

புன்னை மரத்து அரும்பு முத்துப் போலவும் காட்சிப்படுத்துவதால் இப்பாடல் படிமங்களாகிறது. சங்கப்பாடலில் உவமை, உள்ளுறை மிகுதியாகக் காண முடிகிறது.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
ஒருமுறை எட்டயபுரம் அரண்மைனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர் சிறப்பத்தார். அவவருவால் ஒருவா சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 1
பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார். சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

‘என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க்கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக்குறிப்பிடுவார். இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்.

தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். : இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை :முன்னின்று நடத்தினார். வ.உ.சி. சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தகுந்தது. அவருடைய தீந்தமிழுக்குச் சான்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

“கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு , எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் : தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு.”.

(நாவலர் சோமசுந்தர பாரதியின் நூற்தொகுதி 4- ‘நற்றமிழ்’ என்னும் கட்டுரையிலிருந்து)

வினாக்கள்:
1. பாரதி பட்டம் பெற்ற இருவர் யார்?
2. பின்வரும் தொடருக்கு இலக்கணக்குறிப்பு எழுதுக: எளிமையும் தெளிவும்
3. புணர்ச்சி விதி தருக: வழக்கறிஞர்
4. சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் ஒன்றினை எழுது.
5. சோமசுந்தர பாரதியார் ஈடுபட்ட போராட்டம் எது?
Answer:

  1.  சுப்பிரமணிய பாரதியார், சோம சுந்தர பாரதியார்
  2. எளிமையும் தெளிவும் – எண்ணும்மை
  3.  வழக்கறிஞர் – வழக்கு + அறிஞர்
    • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி, வழக்க் + அறிஞர் என்றானது.
    • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = கி) வழக்கறிஞர் எனப் புணர்ந்தது.
  4. தசரதனன் குறையும் – கைகேயின் நிறையும்
  5.  இந்தி எதிர்ப்புப் போராட்டம்

தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene

தமிழாக்கம்:
பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்தப்பட்டோர்களுக்காகப் போராடி வெற்றி கண்டவர். அதுமட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை உடையது. எந்தப் பிரச்சினைக்கும் அவர் கூக்குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியார் அவர்களின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

இலக்கிய நயம் பாராட்டுதல்

பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்! – கவிமணி தேசிக விநாயகம்

தலைப்பு :
தீண்டாமையை விரட்டுவோம்.

ஆசிரியர் குறிப்பு :
பெயர் : கவிமணி தேசிக விநாயகம்
பெற்றோர் : சிவதாணு – ஆதிலட்சுமி
பிறப்பு : 1976 – 1954
சூர்யா – இளமைத்தமிழே
ஊர் : கன்னியாகுமரி – தேரூர்
நூல்கள் : ஆசிய ஜோதி, மலரும் மாலையும்

திரண்ட கருத்து:
மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான புகழ் வரவேண்டுமெனில் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும். தீமை செய்பவரை ஒருவரும் தீண்டமாட்டார்.

தொடை நயம்:
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு அளபெடை நயங்கள் அமைந்துள்ளன.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

சான்று :
ன்மை
நாடும்
தின்மை
தீண்ட

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

எதுகை நயம் :
மதுரைக்கு வகை
செய்யுளுக்கு எதுகை முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது எதுகை.

சான்று :
பிப்பினால்
சிப்பு
தின்மை
தீண்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.

சான்று :
வாராதப்பா
வேண்டுமப்பா
மேற்குலத்தார்
ஒண்ணாதார்

அணி நயம் :
குளத்துக்கு தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு ஏற்ப இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

முடிவுரை:
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 2
உழைத்து உழவு செய்த
உப்பையெல்லாம்
வண்டியில் பூட்டி எருதோடு வணிகர்கள்
வாழ வழி கண்டு
உப்புக்கு மாற்றாக நெல்லைப் பெற
தன் மகளிரோடு உள்நாட்டுச் சந்தைக்குச்
செல்கின்ற காட்சி
வணிகர்களின் வீதிஉலாபோல்
காட்சி தருகிறது

பேச்சுவழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

எ.கா: இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ .
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்
நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும்.

2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான்.

3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.

5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்
இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்.

வெட்டியும் ஒட்டியும் பேசுதல்

Question 1.
கிராமங்கள் நகரமாவது வளர்ச்சியா?
Answer:
(i) கிராமங்களில் அழிவால் நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அதுமட்டுமல்லாமல் நவீன உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக நகரங்கள் அமைகிறது.

(ii) நகரங்களின் வளர்ச்சியால் கிராமங்கள் அழிக்கப்படுகிறது. இயற்கைப் பாதிப்பு, தொழிற்சாலைப் பெருக்கத்தால் நீர் மாசுபாடு, மனவளம் குன்றல், (வேளாண்மை ) விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படக்கூடும்.

ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 3

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 4
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம் 5 பத்தி அமைத்தல்:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். அவை இரண்டு வகைப்படும். ஒன்று எட்டுத்தாகை. மற்றொன்று பத்துப்பாட்டு. எட்டுத்தொகை என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அகம் சார்ந்த இலக்கியங்கள் ஐந்து: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை. புறம் சார்ந்த நூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் சார்ந்த நூல் பரிபாடல் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

பத்துப்பாட்டு அகம், புறம் என இரண்டு : – வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அகம் சார்ந்த நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை. புறம் சார்ந்த நூல்கள்: மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை. இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து ஆகும்.

கீழ்க்காணும் பகுதியைப் படித்து பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது; எல்லாம் மாயை; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விலாசத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.
Answer:
அரசு கொடுக்கும் ஊதியம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் பொய்த்தோற்றம். உள்ளூர நிற்கும் உயிர் மாசுபடவில்லை. தான் வேறு தோற்றம் வேறு. தான் இந்த உலகத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு வடிவம் என்று திடமாக நம்பியிருந்தார்.

ஏனென்றால், அவரது உயிர் அடையாளத்தைச் சோதனைப் போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ, மனிதனுக்கோ நேரம் கிடைத்ததில்லை. மனித வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையைப் புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.

செய்து கற்போம்.

Question 1.
நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்காரணங்களைனத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.
Answer:
சிதம்பரம்:
இறைவன் நடராசர் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும் அதுவே சிதம்பரம் என்றாயிற்று என்பர். சித் + அம்பரம் = சிதம்பரம் என்றாயிற்று. சித் என்றால் அறிவு, அம்பரம் என்றால் ஆகாயம் அல்லது வெட்டவெளி. வெட்டவெளிக்கு எல்லைக் கிடையாது. அதுபோல எல்லையற்ற
அறிவைக் கொண்டவராலும் புரிந்துகொள்ள முடியாதவர் நடராசர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

குற்றாலம்:
குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் என்று பெயர் பெற்றது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது.

சிவகாசி:
தென் மதுரையை ஆண்ட ஹரிகேசரிபராக்கிரம பாண்டியன் வாரனாசியிலிருந்து (வாரனாசி என்பது காசி) ஒரு சிவலிங்கத்தைக் கொண்டுவந்து நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால் காசி சிவலிங்கம் பெயராலே சிகவாசி ஆயிற்று.

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். சென்னையின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது. முன்பு இங்கு நீர்நிலைகளில் செங்கழுநீர் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என்றானது.

நிற்க அதற்குத் தக

(ஆளுமைத்திறன் என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியம நடத்தை, உணர்வு, சிந்தனை ஆகியவற்றைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை, நேர்மறைச் சிந்தனைகள், அடிப்படை ஒழுக்கம், உடற்பயிற்சி ஆகிய அனைத்துமே ஆளுமைப் பண்புகளுள் அடங்கும்)

இமயா இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுகிறாள். ஓட்டுகையில் இடையில் தடுமாறிக் கீழே விழுகிறாள். கற்றுக்கொடுக்கும் அவளுடைய அண்ணன். ‘உன்னால் இருசக்கர வாகனம் ஓட்ட இயலாது’ என்கிறான். நீங்கள் இமயாவாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?
Answer:
அண்ணா நீங்கள் எனக்குத் தொடர்ந்து ஒரு வாரம் பழக்கிக் கொடுங்கள். நிச்சயம் கற்றுக்கொள்வேன். முடியாது என்பது வெறும் பேச்சு , முடியும் என்பது உயிர் மூச்சு. எனவே, பயிற்சி மேற்கொண்டால் எந்த வேலையும் எளிமையாகும் அண்ணா .

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

பள்ளி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு நன்றியுரை நிகழ்த்த ஆசிரியர் அழைக்கின்றார். அந்நிலையில் நீவிர் என்ன செய்வீர்?
Answer:
நன்றியுரை ஆற்ற வருவதற்கு நிச்சயம் ஒத்துக்கொள்வேன். தலைவர், சிறப்பு விருந்தினர், : ஆசிரியர், மாணவ மாணவியர், பெற்றோர் என வரிசைப்படுத்தி நன்றி என்றாலே போதுமே! மேலும், சிறப்பு விருந்தினர் கல்வியை விலைக்கு வாங்க முடியாது. கல்விக்கூடங்களில் கற்றால் மட்டுமே கல்வியைப் பெறலாம் என்று கூறியதை முன்வைத்து நன்றி சொல்வேன்.

படிப்போம் பயன்படுத்துவோம் (நீதி மன்றம்)

1. Affidavit – ஆணை உறுதி ஆவணம்
2. Allegation – சாட்டுரை
3. Conviction – தண்டனை
4. Jurisdiction – அதிகார எல்லை
5. Plaintiff – வாதி
6. Sentence – வாக்கியம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.5 தலைக்குளம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.5 தலைக்குளம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 1.
நீங்கள் இருக்கும் ஊரை வாழ ஏற்றதாய் மாற்ற மேற்கொள்ளும் வழிமுறைகளைத் தொகுக்க.
Answer:

  • கழிவுநீர் வாய்க்கால் ஊரின் உள்ளே கழிவுநீர்த் தேங்காமல் செய்தல் வேண்டும்.
  • உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை (டுழகூ) மாதம் இருமுறை குளோரின் போட்டு சுத்தம் செய்தல் வேண்டும். காரணம் குடிக்கும் நீரால்தான் அனைத்து நோய்களும் உருவாகுவதால் கவனம் செலுத்த வேண்டும்.
  • வீட்டுக் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல், துப்பரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.
  • தெருவில் இடம் இருப்பின் வேப்பங்கன்று, புன்கன் கன்று இவற்றை நட்டு பராமரிக்கலாம்.
    ஆடு, மாடுகளைத் தெருவில் இரவு நேரங்களில் கட்டி அசுத்தம் செய்யக் கூடாது.
  • தேவை இல்லாமல் தெருக்குழாய்களில் தண்ணீரைத் திறந்து விடுதல் கூடாது.
  • தெருக்குழாய்களிலேயே குளிப்பது, துணி துவைப்பது கூடாது.
  • சாலையோரங்களில், வெளியிடங்களில் மலம் கழிக்கக்கூடாது. ஏனெனில் மலம் கழிப்பதால்தான் மிகத் தொற்று நோய்கள் பரவுகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பொது நலம் காக்கும் எண்ணம் இயல்பாக இருக்க வேண்டும்.
  • மேலும், தெருக்களில் எதையும் எரிப்பதைத் தவிக்க வேண்டும்.
  • சுத்தம் சோறு போடு என்று எண்ண வேண்டும். – சுற்றுப்புறமே சுகாதாரம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 2.
கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டினைப் பற்றியும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் பெரியோர்களிடம் அறிந்து வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
மாணவர்களே வணக்கம், வாழ்த்துக்கள்!
நாங்கள் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்திருந்த வீடும் – சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி நான் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

  • பண்புடையவர்களால்தான் இன்னும் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சான்றோர் கூறுவர்.
  • நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பது போல நல்லவர்களால் தான் மழை பொழியும்.
  • உள்ளத்தால் (ஒருவன்) பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
  • மேற்கண்ட பொன் மொழிகளுக்கு ஏற்ப என் குடும்பத்தார், என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தவர்கள்.
  • அன்புடையவர்கள், புறம் பேசாதவர்கள், பொய் பேசாதாவர்கள், ஒப்புரவு உடையவர்கள், உண்டை விளம்பிகள் என எல்லா நற்குணங்கள் பெற்றவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
  • அவர்களின் வழித்தோன்றலாகிய எங்களை ஊதில் அனைவரும் அன்புடன் நடத்துவர்.
    உயிர்களிடத்து அன்பு வேணும் – என்னும் கொள்கையோடு வாழ்ந்ததால் ஊர் மக்களும் எங்கள் குடும்பத்தையே எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
  • வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

எனவே, மாணவச் செல்வங்களே நீங்கள் பிறர் விரும்புமாறு நல்லதை செய்து நலமோடு வாழுங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
முன்னுரை:
மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, புலம்பெயர்வு, தலைமுறை மாற்றம் இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் முகவரியை இழக்கின்றன.

நகரத்தை நோக்கிச் செல்ல காரணம் :

  • இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தலைமுறையினர் காலமாற்றத்தாலும், பல்வேறு காரணங்களாலும் கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
  • பெரும்பாலும் கிராமங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கையேடு வாழ்க்கை போன்றது.
  • அங்கு கடினமான உழைப்பும், விவசாயமும் தவிர பிற தொழில் சார்ந்த வளர்ச்சி காணப்படுவதில்லை.
  • முறையான தொலைதொடர்பு, மருத்துவ வசதி சுகாதார அமைப்பு காண்ப்படுவதில்லை.
  • இந்தியாவில் 57 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பவரே.
  • இன்றும் சில கிராமங்களில் கோயில் நுழைவு தீண்டாமை, சாதி அமைப்பு, மதக்கலவரம் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
  • நகரத்திலோ எந்தவித பாகுபாடு இல்லாமல் சமவாய்ப்போடு வாழ இயலுவதால் நகரத்தை நோக்கி புலம் பெயர்கின்றனர்.
  • மிகச்சரியான உள்கட்டமைப்புடன் கூடிய தரமானக் கல்வி. போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நோக்கி இடம் பெயர்கின்றனர்.

அடிப்படை வசதியை நோக்கி நகர்வு :

(i) வறுமை, கல்வியில் பின்னடைவு, குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவை இன்றும் கிராமங்களில் காண முடிகிறது.

(ii) மின்சாரம், பேருந்து வசதி, தொழிற்சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நாடுகின்றனர்.

(iii) சாதிப் பாகுபாடு இல்லாமல் தரமான கல்வியோடு தொழிற்கல்வி, போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் பயிலகம், மின்னணு போன்ற நிறுவனங்கள் நகர்ப்புறத்தில் மேலோங்கி வருவதால் கிராமங்களை மக்கள் வெறுக்கின்றனர்

(iv)  இன்று நகரம் என்பது கிராமத்தைவிட பெரிய மனித குடியிருப்பு உள்ளதாக அமைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வங்கிகள், வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

முடிவுரை :
இத்தகைய காரணங்களால் கிராமங்களை விட்டு மக்கள் நகர்ப்புறம் நோக்கிச் செல்கின்றனர். இதனால் கிராமங்கள் தங்கள் அடையாளங்களை இழந்து முகவரியற்று கதியின்றி அமைகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘தலைக்குளம்’ என்னும் கதையின் ஆசிரியர்
அ) பீர்முகமது
ஆ) தோப்பில் முகமது மீரான்
இ) அப்துல் ரகுமான்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) தோப்பில் முகமது மீரான்

Question 2.
‘தலைக்குளம்’ என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு
அ) துறைமுகம்
ஆ) கூனன் தோப்பு
இ) சித்தன் போக்கு
ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்
Answer:
ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்

Question 3.
தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம் ………….. ஊர் …………. ஆண்டு ………
அ) கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டணம், 1944.
ஆ) தஞ்சாவூர், உத்தமதானபுரம், 1942.
இ) சென்னை , மயிலாப்பூர், 1940.
ஈ) திருவாரூர், வலங்கைமான், 1943.
Answer:
அ) கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டணம், 1944.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 4.
தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் வெளிவரும் மொழிகள்
அ) தமிழ், ஆங்கிலம்
ஆ) தமிழ், இந்தி
இ) தமிழ், கன்ன டம்
ஈ) தமிழ், மலையாளம்
Answer:
அ) தமிழ், ஆங்கிலம்

Question 5.
தோப்பில் முகமது மீரான் ‘சாய்வு நாற்காலி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற ஆண்டு
அ) 1994
ஆ) 1997
இ) 1999
ஈ) 2001
Answer:
ஆ) 1997

Question 6.
தமிழக அரசின் விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் படைப்புகள்
அ) துறைமுகம், கூனன்தோப்பு
ஆ) சாய்வு நாற்காலி, துறைமுகம்
இ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்
ஈ) கூனன்தோப்பு, சாய்வுநாற்காலி
Answer:
அ) துறைமுகம், கூனன்தோப்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) உம்மா – 1. அப்பா
ஆ) வாப்பா – 2. அம்மா
இ) ஏச்சு – 3. படித்துறை
ஈ) கடவு – 4. திட்டுதல்

அ) 2, 1, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 2, 1, 3, 4

Question 8.
பொருத்திக் காட்டுக.
அ) புதுமைப்பித்தன் – 1. மலைவெடிப்பு
ஆ) சண்முகசுந்தரம் – 2. சூரிய வெப்பம்
இ) ஜெயகாந்தன் – 3. அஞ்சிய
ஈ) தி.ஜானகிராமன் – 4. விரைவு
உ) தோப்பில் முகமது மீரான் – 5. நெல்லைத்தமிழ்

அ) 4, 5, 3, 2, 1
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 5, 4
ஈ) 2, 3, 4, 5, 1
Answer:
ஆ) 5, 4, 3, 2, 1

Question 9.
சரியான கூற்றுகளைக் கண்டறிக.
i) கி. ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார்.
ii) தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் ‘கரிசல் இலக்கியம்’ என்று பெயரிட்டார்.
iii) சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் ‘தஞ்சைக் கதைகள்’ என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

Question 10.
தலைக்குளம் கதையின் கருப்பொருள்
அ) கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது.
ஆ) தனக்கு உதவி செய்த மனிதனை தேடிக் கண்டுபிடித்து நன்றி பாராட்டுவது.
இ) பெண்களின் அவலநிலையும் ஆண்களின் அடக்குமுறையும்.
ஈ) இறந்து போன மனிதனின் சிறப்புகளைப் பேசுவது.
Answer:
அ) கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர் நகரமாக மாறியதைப் பற்றிப் பேசுவது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.4 அகநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.4 அகநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 1.
தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் மகளிர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
Answer:
ஒரு பெண் நம் சமூகத்தில் வெற்றி பெற வேண்டுமானால் 100 சதவீதம் வேலை செய்தால் போதாது. 200 சதவீதம் உண்மையான கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்றையக் காலத்தில் திருவாரூரில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை வணிகத்திலும் : ஈடுபடுத்தி, சிறந்து விளங்குகின்றனர்.

அவ்வகையில் திருவாரூரில் பிறந்து சென்னையில் பிழைப்புத் தேடி வந்த பெண் இன்று வணிகத்தில் சிறந்து விளங்குகிறாள். அவரைப் பற்றி சில வரிகள்.

வறுமை, கல்வி, பொருளாதாரம், கவலை, சோகச்சூழல் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சூழலில் சென்னை வந்த பெண் ஏதாவது செய்யத் துடிக்கிறாள்.

முன் அனுபவம் இல்லாத நிலையில் வடமாநில தோழி மூலம் பினாயில் தயாரிக்க ஆரம்பித்தார். பிறகு 500 ரூபாய் கடன் வாங்கி மூலப்பொருள் மூலம் பொருட்கள் வாயிலாக தாமே தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார். தான் தயாரித்த பினாயிலை, அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், உணவகங்களில் நேரிடையாகச் சென்று விற்க ஆரம்பித்தார். போதிய வருமானம் கிட்டியது. வியாபாரத்தை மேலும் சிறக்கச் செய்ய அதிக மூலதனம் வைத்து இரண்டு பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டார்.

தரம் உயர்தரம் என்ற நோக்கத்தோடு உழைத்த பெண்மணி இன்று தன்னிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களையும் வணிகத்தில் ஈடுபடச் செய்தார். தன் நிறுவனத்துக்கு நிலை ஏஜென்ஸி என்ற பெயர் வைத்து பினாயில் வணிகத்தில் சிறந்து விளங்குகிறார் என்றால் மிகையாகாது.

ஆணுக்குப் பெண் சமம் என்று மகளிர் தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 2.
பழங்காலத் தொழில்கள் குறித்துக் கருத்தரங்க உரை உருவாக்குக.
Answer:
பழந்தமிழ் மக்கள் வாழ்வதற்காகப் பொருள் தேடுவதைக் கடமையாகக் கொண்டனர். அதற்காகப் பற்பல தொழில் வகைகளை மேற்கொண்டனர். தம் வாழிடங்களுக்கு ஏற்ப : ! தொழில்களை தேர்ந்தெடுத்தனர். மலைநாட்டு மக்கள் தேனெடுப்பது தினை விதைப்பது, காட்டுப் பகுதியில் வாழ்பவர் நிரை மேய்ப்பது; பால் கடைவது; வயல்வெளியில் உள்ளோர் உழவு செய்து நகர் அமைத்து ஆட்சி செய்வது போன்ற பணிகளையும் செய்தனர். கடற்கரைப் பகுதியில் வாழ்வோர் உப்பு விளைத்தல்; முத்து குளித்தல்; அலை கடல் ஏறி வாணிகம் செய்தல்.

தொழில் செய்தே பொருள் தேடுவதே அவர் கொள்கை. பசுக்களுக்கு நீர் வேண்டும் என்று கருதி இரத்தல் கூட இழிவான செயலாகக் கருதினர். தாமே முயற்சி செய்து நீரைப்பெற்றுப் தர வேண்டும் என்றனர்.

தாமே முயன்று தேடும் பொருளையே தமக்குரியதாகக் கருதினர். எளிய முயற்சியில் வருவதை ஏற்க மறுத்தனர்.

முயற்சி உடையார் இகழச்சியுடையார் என்பதற்கு ஏற்ப இயன்று பழந்தமிழர் தொழில்கள் செய்தனர்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘விளியறி ஞமலி’ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
அ) எருது
ஆ) குதிரை
இ) நாய்
ஈ) யாழி
Answer:
இ) நாய்

குறுவினா

Question 1.
‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:
பெருங்கடல் – சிறுகுடிப் பரதவர்.

சிறுவினா

Question 1.
‘நெல்லின் நேரே வெண்கலம் உப்பு’ – இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.
Answer:
உப்புக்குப் பதிலாக (மாற்றாக) நெல்லை விற்றனர் என்ற செய்தியின் மூலம் சங்கக் காலத்தில் பண்டமாற்று வணிகம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.

விளக்கம் :
உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். தன் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒலிக்க வீதிக்குச் சென்றாள். அப்போது அந்த வீதி வழியாக வந்த வணிகனை நோக்கி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப்
பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவினார்’.
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்’
சேரி விலைமாறு கூறலின் மனைய்’
என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

இலக்கணக் குறிப்பு

பெருங்கடல் – பண்புத்தொகை
உழாஅது – செய்யுளிசை அளபெடை
வெரீஇய – சொல்லிசை அளபெடை

பகுபத உறுப்பிலக்கணம்

செய்த = செய் + த் + அ
செய் – பகுதி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

சாற்றி = சாற்று + இ
சாற்று – பகுதி
இ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. பெருங்கடல் = பெருமை + கடல்

  • ஈறுபோதல்’ என்ற விதிப்படி, மை கெட்டு பெரு + கடல் என்றானது.
  • ‘இனமிகல்’ என்ற விதிப்படி, க-வுக்கு இனமான ங் தோன்றி, பெருங்கடல் என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்திக் காட்டுக.
அ) வேட்டம் – 1. கானவன்
ஆ) செறு – 2. மீன்பிடித்தல்
இ) உமணர் – 3. வயல்
ஈ) புனவன் – 4. உப்பு வணிகர்

அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 2, 3, 4, 1

Question 2.
பொருத்திக் காட்டுக.
அ) ஞமலி – 1. சேறு
ஆ) பகடு – 2. விலை
இ) அள்ள ல் – 3. நாய்
ஈ) கொள்ளை – 4. எருது

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) என்றூழ் – 1. மலைவெடிப்பு
ஆ) விடர் – 2. சூரிய வெப்பம்
இ) கதழ் – 3. அஞ்சிய
ஈ) வெரீஇய – 4. விரைவு

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 4, 3
இ) 4, 2, 1, 3)
ஈ) 1, 2, 3, 4
Answer:
ஆ) 2, 1, 4, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 4.
‘மதர்கயல் மலைப்பின் அன்ன’ – என்பதில் ‘கயல்’ என்னும் சொல்லின் பொருள்
அ) மீன்
ஆ) விழி
இ) விண்மீ ன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) மீன்

Question 5.
பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
அ) குறவர்
ஆ) ஆயர்
இ) எயினர்
ஈ) பரதவர்
Answer:
ஈ) பரதவர்

Question 6.
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்பது யாருடைய கூற்று?
அ) பரதவரின் கூற்று
ஆ) உமணர் மகள் கூவியது
இ) தலைவியின் கூற்று
ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது
Answer:
ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது

Question 7.
உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக் கொண்ட இடம்
அ) மணற்திட்டு
ஆ) கருஞ்சேறு
இ) வாய்க்கால்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) கருஞ்சேறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 8.
‘வெய்ய உயிர்க்கும் நோயாகின்றே’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) உமணர் மகள் தந்தையிடம்
ஆ) தந்தை உமணர் மகளிடம்
இ) தலைமகன் பாங்கனிடம்
ஈ) பாங்கன் தலைமனிடம்
Answer:
இ) தலைமகன் பாங்கனிடம்

Question 9.
உப்பு விளையும் களத்திற்கு ……………. என்று பெயர்.
அ) அளம்
ஆ) பாலம்
இ) நிலம்
ஈ) களி
Answer:
அ) அளம்

Question 10.
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக விளங்கியது
அ) உப்பு
ஆ) முத்து
இ) துணி
ஈ) ஏலம்
Answer:
அ) உப்பு

Question 11.
பொருத்திக் காட்டுக.
அ) பெருங்கடல் – 1. செய்யுளிசை அளபெடை
ஆ) உழாஅது – 2. சொல்லிசை அளபெடை
இ) வெரீஇய – 3. பண்புத்தொகை

அ) 3, 1, 2
ஆ) 3, 2,1
இ) 1, 2, 3
ஈ) 2, 1, 3
Answer:
அ) 3, 1, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 12.
பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) குறுந்தாகை
ஈ) நற்றிணை
Answer:
அ) அகநானூறு

Question 13.
அகநானூறு ………. நூல்களுள் ஒன்று
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
அ) எட்டுத்தொகை

Question 14.
அகநானூறு …………….. பிரிவுகளை உடையது.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
அ) மூன்று

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) களிற்றியானை நிரை – 1) 100 பாடல்கள்
ஆ) மணிமிடை பவளம் – 2) 120 பாடல்கள்
இ) நித்திலக்கோவை – 3) 180 பாடல்கள்

அ) 2, 3, 1
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 1, 3, 2
Answer:
அ) 2, 3, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 16.
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்
ii) நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அம்மூவனார்.
ii) இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

அ) i), ii), சரி
ஆ) i), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

குறுவினா

Question 1.
பரதவர்கள் தொழிலான வேட்டையாடுபவை, விளைவிப்பவை எவை?
Answer:
வேட்டையாடுபவன் : கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
விளைவிப்பன : உப்பளங்களில் உழவு செய்யாமல் உப்பு விளைவிப்பவர்

Question 2.
உமணப் பெண்ணின் தோற்றத்தை விவரி.
Answer:

  • அழகும் இளமையும் வாய்ந்தவள்.
  • அவள் தம் கைகளில் அழகிய வளையல்கள் ஒலிக்க தெருவில் கைவீசி நடப்பவள்.
  • உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ!’ என்று கூவினாள்.

Question 3.
தலைமகன் பாங்கற்கு உரைத்ததை அகநானூற்றுப் பாடல் மூலம் விளக்குக.
Answer:
(i) வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல. தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன் என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

(ii) எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலைய காதல் வருத்தத்திற்கும் உள்ளுறை வைத்துப் பாடப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 4.
உப்பங்கழி என்றால் என்ன?
Answer:
கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு உப்பங்கழி என்பர்.

Question 5.
கல் உப்பை எவ்வாறு விளைவிப்பர்?
Answer:

  • உப்பங்கழிகளில் உள்ள கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்ற வகையில் அமைப்பர்.
  • இவ்வாறு அமைக்கப்பட்ட பகுதி ஆடைபோல் படியும் இந்த உப்பைக் கூட்டிச் சேகரித்துப் : பக்குவப்படுத்தி விற்பனை செய்வர்.

Question 6.
உப்பளம் என்றால் என்ன?
Answer:
கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்பு படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்பர்.

சிறுவினா

Question 1.
அகநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • அகம் + நான்கு + நூறு.
  • எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூல்.
  • நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
  • 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்டது.
    மூன்று பெரும் பிரிவுகளை உடையது:
    களிற்றியானை நிரை – 120; மணிமிடைப் பவளம் – 180; நித்திலக் கோவை – 100
  • திணை அமைப்பு:
    பாலை – 1, 3, 5, 7;
    மருதம் – 6, 16, 26;
    குறிஞ்சி – 2, 8, 12, 18
    நெய்தல் – 10, 20, 30;
    முல்லை – 4, 14, 24
    என்ற முறையில் திணை அமைப்பு அமைந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

Question 2.
அகநானூற்றுப் பாடலில் வரும் நெய்தல் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் விளக்குக.
Answer:
திணை – நெய்தல்
பெரும்பொழுது : ஆறு பெரும்பொழுதுகளும்; சிறுபொழுது : எற்பாடு
முதற்பொருள் : கடலும் கடல் சார்ந்த இடமும்

கருப்பொருள்:
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதன், பரத்தியர்
உணவு – மீன் உப்புக்குப் பெற்றபொருள்
விலங்கு – முதலை, சுறா
பூ – நெய்தல், தாலை
மரம் – புன்னை
பறவை – கடற்காகம்
ஊர் – பட்டினம், பாக்கம்
பறை – மீன் கோட்பறை
யாழ் – விளரியாழ்
பண் – செவ்வழிப்பண்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

உரிப்பொருள் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
சான்று: ‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல்.

நெடுவினா

Question 1.
அகநானூற்றுப் பாடல் வழியாகத் தலைமகன் பாங்கற்கு உரைத்த செய்தியை விளக்குக.
Answer:

  • பழந்தமிழர்களின் தொழில் நிலத்தின் இயல்பைச் சார்ந்து அமைந்திருந்தது.
    கடற்கரையில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்கள் செய்து, அப்பொருட்களை பண்டமாற்று முறையில் உப்பு வணிகத்தைச் செய்தனர்.
  • பரதவர் கடலில் மீன் வேட்டையாடுவர்.
  • உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்.
  • வெண்மையான உப்பை வண்டியில் ஏற்றுவர்.
  • எருதுகளை விரட்ட தாழ்கோல் வைத்திருப்பர்.
  • கோடைக்காலத்தில் வெப்பத்தால் பிளவுபட்ட குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனைச் செய்வர்.
  • அத்தகைய உமணரின் பெண் அழகும், இளமையும் வாய்ந்தவள்.
  • அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் நடந்து சென்று உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பைப் பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவுகிறார்.
  • கூவுவதைக் கேட்டு நாய் குரைக்கிறது.
  • எதிர்பாராத அப்பெண் அச்சம் கொண்டு மீன்கள் போர் செய்வதுபோல் கண்கள் மருண்டன.
  • மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் கண்டேன்.
  • தினைப்புனம் அமைக்கும் கானவர் பழைய புனத்தைத் தீயிட்டு அழிக்கும்போது உருவாகும் புகையால் பெண்ணின் தந்தையின் வண்டியானது சேற்றில் சிக்கிக் கொண்டது.
  • துன்பத்தில் உள்ள எருதுக்குத் தந்தை உதவி செய்தார்.
  • எருது அடைந்த துன்பம் போல் பெண்ணின் கண்களால் நான் துன்பம் அடைந்தேன்.
  • வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீ போக்க வேண்டும் என்று தலைமகன் பாங்கற்கு உரைத்தான்.

உள்ளுறை :
எருதைத் தலைவனுக்கும்
தந்தையைப் பாங்கனுக்கும்

என உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கு உள்ளுறை வைத்துப் பாடப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.3 தேவாரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.3 தேவாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 1.
உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழக்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக.
Answer:
மேலாளர்,
தினத்தந்தி நாளிதழ் (செய்திப்பிரிவு),
கடலூர் அலுவலகம்,
கடலூர்.

வணக்கம்,
சிதம்பரம் நடராசர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்விழாவினைப் பற்றிய தகவல்கள் நாங்கள் தருகிறோம். அதை உங்கள் நாளிதழிலில் வெளியிட்டு மக்கள் வருகைத்தந்து இறையருளை வேண்டுகிறோம்.

செய்தி

ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நிரல்

பஞ்சசபை, பொற்சபை, ஆகாய தலம் எனப் போற்றப்படும் சிதம்பரம் நடராசருக்கு ஆருத்ரா தரிசன விழா.

உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறும் ஆனி மாதம் திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கிய மறுநாள் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவகாமிசுந்திரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்குத் திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, பஞ்சாங்கம் படித்தல்.

மார்கழி முதல் நாள் கொடியேற்றத்துடன் துவக்கம். தேரோட்டம் வரும் 25ஆம் தேதியும், 26ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராசமூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

காலசந்தி பூஜை, ரகசிய பூஜை நடைபெறும். காலை 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராசர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரம் முன்பு காட்சி தருவார்.

தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்வர். 9.30 மணியளவில் மகாதீபாரதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாகச் செல்வர்.

இரவு 8 மணிக்கு கொடிமர பூஜை பிறகு பஞ்சமூர்த்திகள் தங்கம் வெள்ளி வாகனத்தில் 4 வீதிகளில் உலா,

  • ஞாயிறன்று வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா
  • 21ஆம் நாள் கருட வாகனத்தில் வீதி உலா
  • 22ஆம் நாள் யானை வாகனத்தில் வீதி உலா
  • 23ஆம் நாள் தங்ககைலாச வாகனத்தில் வீதி உலா
  • 24ஆம் நாள் தங்கரதத்தின் பிஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதி உலா.
  • 25ஆம் நாள் தேரோட்டம்.
  • 26ஆம் நாள் அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ராஜசபை என்கிற

ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராச மூர்த்திக்கு மகா அபிஷேகத்துடன் மதியம் 2மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

இறையன்பர்கள் வருகை தந்து இறையருள் பெற வேண்டுகிறோம்.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.
Answer:

  • கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா
  • ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

சிறுவினா

Question 1.
பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
Answer:

  • கோவில் திருவிழா மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு.
  • ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று.
  • விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை.
  • இங்கு இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் விழாக்கள் நிறைந்த வீதியுடைய ஊர்.
  • எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும்.
  • மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் மிசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் கண்டு இறைவன் அருள்பெற திருஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.

இலக்கணக் குறிப்பு

மாமயிலை – உரிச்சொற்றொடர்

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம் 1

புணர்ச்சி விதி

1. பூம்பாவாய் = பூ + வாய்
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் என்ற விதிப்படி, பா-வுக்கு இனமானம் தோன்றி, பூம்பாவாய் என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா
அ) பங்குனி உத்திர விழா
ஆ) திருக்கார்த்திகை விழா
இ) சித்திரா பௌர்ணமி விழா
ஈ) தைப்பூச விழா
Answer:
அ) பங்குனி உத்திர விழா

Question 2.
தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் அமைந்துள்ள இடம்
அ) மயிலாப்பூர்
ஆ) திருநெல்வேலி
இ) திருவொற்றியூர்
ஈ) வள்ளியூர்
Answer:
ஆ) திருநெல்வேலி

Question 3.
மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்
அ) கபாலீசுவரர்
ஆ) தான்தோன்றிநாதர்
இ) லிங்கேசுவரர்
ஈ) பெருவுடையார்
Answer:
அ) கபாலீசுவரர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
‘மாமயிலை’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) உரிச்சொற்றொடர்
ஈ) உவமைத்தொடர்
Answer:
இ) உரிச்சொற்றொடர்

Question 5.
பொருத்திக் காட்டுக.
அ) ஐப்பசி – 1. விளக்குத் திருவிழா
ஆ) கார்த்திகை – 2. திருவாதிரைவிழா
இ) மார்கழி – 3. ஓணவிழா
ஈ) மாசி – 4. கடலாட்டு விழா

அ) 3, 1, 2, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 3, 1, 2, 4

Question 6.
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்
அ) திருநாவுக்கரசர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
Answer:
ஆ) திருஞானசம்பந்தர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 7.
திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர்
அ) சேக்கிழார்
ஆ) இராசராச சோழன்
இ) நம்பியாண்டார் நம்பி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) நம்பியாண்டார் நம்பி

Question 8.
கண்டான் என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) காண்(கண்) + ட் + ஆன்
ஆ) கண் + ட் + ஆன்
இ) காண் + ட் + ட் + ஆன்
ஈ) காண்டு + ஆன்
Answer:
அ) காண்(கண்) + ட் + ஆன்

Question 9.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் ……………… என்று அழைக்கப்படுகின்றன.
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருச்சதகம்
ஈ) திருத்தொண்டத்தொகை
Answer:
அ) தேவாரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

குறுவினா

Question 1.
திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகக் குறிப்பிடுவன யாவை?
Answer:

  • கோவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக உள்ளது.
  • ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

Question 2.
திருஞானசம்பந்தர் எங்கு வீற்றிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திர விழா கொண்டாடுகிறார்?
Answer:
திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூர் நகரில் வீற்றிருக்கும் இறைவனுக்கு விழா கொண்டாடுகிறார்.

Question 3.
மலி விழா, கலி விழா, பலி விழா, ஒலி விழா விளக்கம் தருக.
Answer:

  • மலி விழா – விழாக்கள் நிறைந்தது
  • கலி விழா – எழுச்சி தரும் விழா
  • பலி விழா – பூசையிடும் உத்திர விழா
  • ஒலி விழா – ஆரவார விழா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
திருமுறைகள் எத்தனை? தொகுத்தவர் யார்?
Answer:
திருமுறைகள் – 12, தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி.

Question 5.
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் திருமுறையில் எந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன?
Answer:
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடியவை.

Question 6.
சம்பந்தர் பாடலில் விரவிக் கிடக்கும் செய்திகள் சில கூறுக.
Answer:

  • சமயக் கோட்பாடுகள்.
  • இசை தத்துவம்.
  • தமிழுக்கு இருந்த உயர்நிலை.
  • சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

சிறுவினா

Question 1.
திருஞானசம்பந்ார் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் – சம்பந்தன்
பிறப்பு – சீர்காழி
பெற்றோர் – சிவபாதவிருதயர் – பகவதி அம்மையார்
காலம் – 7ஆம் நூற்றாண்டு
சிறப்பு – அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர். முதல் மூன்று திருமுறைகள் எழுதியவர்.

Question 2.
தேவாரம் – குறிப்பு வரைக.
Answer:

  • தேவாரம் – தே + வாரம் – பாமாலை; தே + ஆரம் – பூமாலை.
  • அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • தேவாரம் மொத்தப் பாடல்கள் – 8227.
  • நம் பாடப்பகுதி முதல் மூன்று திருமுறையில் இரண்டாவது திருமுறை சம்பந்தர் பாடிய திருமயிலாப்பூர் பதிகம்.
  • தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி,

Question 3.
மயிலாப்பூரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:

  • மடலார்ந்த தெங்கின் மயிலை
  • இருளகற்றும் சோதித் தொன்மயிலை
  • கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
  • கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
  • கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
  • மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
  • ஊர்திரை வேலை உலாவும் உயர்மலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

Question 4.
மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களைக் குறிப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம் 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

குறுவினாக்கள்

Question 1.
அயர்ந்து, எழுந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
அயர்ந்து – அயர் + த் (ந்) + த் + உ
அயர் – பகுதி, த-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த்- இறந்தகால இடைநிலை, உ- வினையெச்ச விகுதி.
எழுந்த -ஏழு + த் (ந்) + த் + அ
ஏழு பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

Question 2.
தொடர் அமைத்து எழுதுக.
Answer:
அன்றொருநாள் : அன்றொருநாள் நான் கண்ட அழகிய காட்சியை, மீண்டும் காண ஏங்கினேன்.
நிழலிலிருந்து : வெயில் வேளையில் நிழலிலிருந்து இளைப்பாறினேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
கலைச்சொற்கள் பயன்படும் துறைகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பியல் முதலான துறைசார்ந்து இன்றைய சூழலுக்கு ஏற்பக் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Question 4.
கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்களிப்புக் குறித்து எழுதுக.
Answer:

  • நாள்தோறும், துறைதோறும் கண்டுபிடிப்புகள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன.
  • இந்தச் சூழலில் அவற்றிற்கெனக் கலைச்சொல்லாக்கங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவை ஏட்டளவில் இல்லாமல் பயன்பாட்டிற்கு வருவதே, மாணவர்களின் பங்களிப்பாக அமையும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு பெறலாம்?
Answer:
காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள்சார்ந்த கலைச்சொற்களின் தேவை மிகுதி. அதனால் கலைச்சொற்கள் உருவாக்கப் பணியில், எல்லாரும் ஈடுபாடு கொள்ளவேண்டும்.

இப்பணிக்கு இதழ்களும் ஊடகங்களும் துணைபுரியும். இதழ்கள், மின் இதழ்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளம் போன்றவற்றில் கலைச்சொற்களைப் பெறலாம். பள்ளி இதர்களில்
இவற்றை வெளியிட்டு, மாணவர்களிடம் கலைச்சொல்லாக்க விழிப்புணர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
தாய்மொழிவழிக் கற்றலில் ஜப்பானியர் சிறக்கக் காரணம் என்ன?
Answer:
உலகின் எம் மூலையில், எவ்வகைக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், ஜப்பானியர் உடனுக்குடன் தம் தாய் மொழியில், அதனை ஆக்கம் செய்து விடுகின்றனர். அதனால், தாய்மொழிவழியில் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்கின்றனர். ஆகையால், ஜப்பானில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

சிறுவினாக்கள்

Question 1.
கலைச்சொல்லாக்கத்திற்கும், அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள் சார்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கும் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழில், இணையான சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. அவ்வாறு கலைச்சொல்லை உருவாக்கும் முறையில் முழு ஈடுபாடு காட்டவேண்டும்.

பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அசராதி. ஆனால், பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் வழக்கிலுள்ள சொற்களை அடையாளம் காட்டியும், தேவையான இடத்தில் புதிய சொற்களை உருவாக்கியும் தருவது கலைச்சொல்லாக்கம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கலைச்சொல், அதன் சிறப்புக் குறித்து கழுதுக.
Answer:
காலத்திற்கு ஏற்ப, வளரும் துறைசார்ந்த புதுக்கண்டுபிடிப்புக்கென உருவாக்கிப் பயன்படுத்தும் சொல், கலைச்சொல். மொழியின் வேர்ச்சொல் பகுதி) கொண்டு, இதனை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது, மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதோடு, புது வளர்ச்சியும் பெறும். தலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருக்கும்.

Question 3.
மருத்துவம், கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்களை எழுதுக.
Answer:
மருத்துவத்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
Clinic – மருத்துவமனை
Blood Group – குருதிப் பிரிவு
Companser – மருந்தாளுநர்
X – ray – ஊடுகதிர்
Typhas – குடல் காய்ச்சல்
Ointment – களிம்பு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
Note Book – எழுதுசுவடி
Answer Book – விடைச்சுவடி
Rough Note book – பொதுக்குறிப்புச் சுவடி
Prospectus – விளக்கச் சுவடி

Question 4.
கலைச்சொல் அகராதி என்பது யாது?
Answer:
பல்வேறு துறைகள் சார்ந்த கலைச்சொற்களைத் தனித்தனியே தொகுத்து, அகர வரிசைப்படுத்தி வெளியிடப்படுவது, ‘கலைச்சொல் அகராதி’ எனப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை அறிக.
Answer:
Smart phone – திறன்பேசி
Website – இணையம்
Touch screen – தொடுதிரை
Blog – வலைப்பூ
Bug – பிழை
Gazette – அரசிதழ்
Ceiling – உச்சவரம்பு
Despatch – அனுப்புகை
Circular – சுற்றறிக்கை
Subsidy – மானியம்
Sub Junior – மிக இளையோர்
Super Senior – மேல் மூத்தோர்
Customer – வாடிக்கையாளர்
Carrom – நாலாங்குழி ஆட்டம்
Consumer – நுகர்வோர்
Sales Tax – விற்பனை வரி
Account – பற்று வரவுக் கணக்கு
Referee – நடுவர்
Cell phone – கைப்பேசி, அலைபேசி, செல்லிடப்பேசி/

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
உருவாக்கும் சொல் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
ஒரு சொல்லை மொழி பெயர்க்கும்போதோ, புதிய சொற்களை உருவாக்கும்போதோ அச்சொல்லானது, அதே போன்று வேறு பல சொற்கள் உருவாக உதவுவதாக இருக்க வேண்டும்.

சான்றாக ‘Library’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘நூலகம்’, ‘நூல் நிலையம்’ என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

இவற்றில் ‘நூலகம்’ என்னும் சொல், ‘நூலகர்’ (Librarian), நூலக அறிவியல் Library Science) என்னும் சொற்கள் உருவாகத் துணை புரிந்துள்ளமை காண்க.

Question 7.
கலைச்சொற்களை ஏன் தரப்படுத்த வேண்டும்?
Answer:
கற்றவர், கல்லாதவர், கைவினைஞர், பயிற்றுநர், மாணவர், மகளிர் எனப் பலரும் இன்றைய சூழலில் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அறிவியல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்கும்போது, ஒரே பொருளைக் குறிக்கப் பலவேறு சொற்களைக் கையாளுகின்றனர்.

அக்கலைச் சொற்கள், தமிழின் சொல்லாக்க வளர்ச்சியைக் காட்டினாலும், புரிந்து கொள்ளுதல் நிலையில் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தும். இக்குழப்பத்தைத் தவிர்த்துத் தெளிவைப் பெறக் கலைச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்துதல் அவசியமாகும்.

சான்று : ‘ANTIBIOTICS’ என்னும் சொல்லைத் தமிழில் எதிர் உயிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, உயிர் எதிர் நச்சுகள், கேடுயிர்க் கொல்லிகள், நக்கயிர்க் கொல்லிகள் எனப் பலவாறு தமிழில் வழங்குவது, குழப்பத்தை ஏற்படுத்துதல் காண்க.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கமாத் தேர்ச்சி கொள்

Question 1.
கலைச்சொல்லாக்கம் – பொருள் தருக?
Answer:
ஒரு மொழியில் காலத்திற்கேற் துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப் படும் சொற்கள், ‘கலைச்சொற்கள் எனப்படும்.

Question 2.
கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?
Answer:

  • புதிதாக உருவாக்கப்பெறும் கலைச்சொல், தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
  • பொருள் பொருத்தமுடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
  • வடிவில் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருத்தல் வேண்டும்.
  • ஓரை யமுடையதாகவும், தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
  • மொழியின் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, பல சொற்களை மேலும் உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாகக் கலைச்சொற்களை உருவாக்கல் வேண்டும்.
  • இவ்விதிமுறைகளைக் கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குமுன், பின்பற்ற வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக.
Answer:
Personality – ஆளுமை, வேறுபட்ட பண்பு.
Plastic – நெகிழி
Emotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி.
Escalator – நகரும் மின்படி
Straw – நெகிழிக்குழல், உறிஞ்சுகுழல்.
Mass Drill – கூட்டு உடற்பயிற்சி
Horticulture – தோட்டக்கலை
Average – நடுத்தரம், சராசரி அளவு.
Apartment – அடுக்குமாடி, அடுக்ககம், தொகுப்புமனை.

Question 4.
Ship என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக.
Answer:
நாவாய், கலம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்?
Answer:
உலக அளவில் பயன்படுத்தப்படும் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும்போது, பழந்தமிழிலக்கியச் சொல்லைத் தேர்ந்து பயன்படுத்துதல். (எ-கா: வலவன் Pilot)

பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் . (எ-கா : அம்மை)
பிறமொழிச் சொற்களைக் கடன் பெறுதல். (எ-கா : தசம முறை / Decimal)
புதுச்சொல் படைத்தல். (எ-கா : மூலக்கூறு / Molecule)
உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல். (எ-கா : எக்ஸ் கதிர் / Xray)
பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல். (ஒளிச்சேர்க்கை / Photo anthesis)
ஒலிபெயர்த்துப் பயன்படுத்துதல். (எ-கா : மீட்டர் / Meter) (ஓம் / Om)
உலக அளவிலான குறியீடுகள் – சூத்திரங்களை R√A = r,r2 H2O, Ca
அப்படியே ஏற்றல் என்னும் நெறிமுறையைக் கையாள வேண்டுமென்று, வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

பலவுள் தெரிக

Question 1.
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முலா ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் …………
அ) மூதூர்
ஆ) வெற்றிடம்
இ) நல்லாடை
ஈ) பைந்தளிர்
Answer:
இ) நல்லாடை

கூடுதல் வினாக்கள்

Question 2.
பொருள் தெரியாத சொற்களுக்கும் பொருள் கூறுதல் ……………… நோக்கம்.
அ) கலைச் சொல்லின்
ஆ, இணையத்தின்
இ) அகராதியின்
ஈ) வலைப்பூவின்
Answer:
இ) அகராதியின்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
மக்கள் பயன்பாற் றடுக் கலைச்சொற்களைக் கொண்டு சேர்க்கத் துணை நிற்பவை……………
அ) பொதுமக்களும் இதழ்களும்
ஆ) பள்ளிகளும் இதழ்களும்
இ) மாணவர்களும் ஊடகங்களும்
ஈ) இதழ்களும் ஊடகங்களும்
Answer:
ஈ) இதழ்களும் ஊடகங்களும்

Question 4.
மாயர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவது………………….
அ) செய்தித்தாள்
ஆ) வார மாத இதழ்
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்
ஈ) வானொலி
Answer:
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 5.
‘தென்ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் கட்டுரை எழுதியவர்……………….
அ) பாரதிதாசன்
ஆ) திரு. வி. கலியாணசுந்தரனார்
இ) காந்தியடிகள்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

குறுவினா

Question 1.
முக்காற் புள்ளி இடம்பெற வேண்டிய இடத்தினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
சிறுதலைப்பு, நூற்பகுதி, எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற் புள்ளி இடவேண்டும்.
எ – கா : i. சார்பெழுத்து :
ii. பத்துப்பாட்டு 2 : 246
iii. எட்டுத்தொகை என்பன வருமாறு:

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
காற்புள்ளி இடம்பெற வேண்டிய இடங்களை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
பொருள்களைத் தனித்தனியே குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், ஆணைப்புச் சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி இடம்பெற வேண்டும்.

எ – கா : i. அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப் பேறுகள் நான்கு
ii. நாம் எழுதும்போது, பிழையற எழுதவேண்டும்.
iii. இனியன் நன்கு படித்ததனால், தேர்ச்சி பெற்றான்.
iv. ஐயா, / அம்மையீர்,
V. சிறியவன், பெரியவன், செல்வன், ஏழை.

Question 3.
அரைப்புள்ளி இடம்பெறும் இடங்களைக் கூறுக.
Answer:
தொடர்நிலைத் தொடர்களிலும், ஒரு சொல்லுக்குப் பலபொருவு கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

எ – கா : i. வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
ii. அளி – அன்பு; அருள்; குளிர்ச்சி, பயண்டு; இரக்கம்; எளிமை.

Question 4.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில்,
முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

எ – கா : i. மரபியல்.
ii. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
iii. தலைமையாசிரிய அரசு மேனிலைப்பள்ளி.
iv. தொல். சொல். 58.
v. 12 / 12 /2018

Question 5.
வினாக்குறி இடவேண்டிய இடம் குறித்து விளக்கு.
Answer:
ஒரு வினாத்தொடர் முற்றுத் தொடராகவும்), நேர்க்கூற்றுத் தொடராகவும் இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.

எ – கா : i. அது என்ன? (வினா – முற்று)
ii. “நீ வருகிறாயா?” என்று கேட்டான். (நேர்க்கூற்று)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 6.
விளிக்குறி இடம்பெறும் இடத்தை எழுதுக.
Answer:
அண்மையில் இருப்பவரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கும் விளிக்குறி இடுதல் வேண்டும். (வியப்புக் குறிக்கும் விளிக்குறிக்கும் அடையாளம் ஒன்றே)
எ – கா : i. அவையீர் ! ii. அவைத் தலைவீர்!

Question 7.
வியப்புக்குறி இடம்பெறும் இடம் விளக்குக.
Answer:
வியப்பு, இடைச்சொல்லுக்குப் பின்பும், நேர்க்கூற்று, வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி இடுதல் வேண்டும்.

எ – கா : i. எவ்வளவு உயரமானது!
ii. “என்னே தமிழின் பெருமை!” என்றார் கவிஞர்.
iii. வா! வா! போ! போ! போ!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 8.
மேற்கோள் குறி இடும் இடங்கள் யாவை?
Answer:

  • இரட்டை மேற்கோள்குறி, ஒற்றை மேற்கோள்குறி என, மேற்கோள் குறிகள் இரண்டு வகைப்படும்.
  • இரட்டை மேற்கோள்குறி : நேர்க்கூற்றுகளில் இரட்டை மேற்கோள்குறி இடம்பெறும். எ – கா :“நான் படிக்கிறேன்” என்றான்.
  • ஒற்றை மேற்கோள்குறி : ஓர் எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ தனியே குறிக்கும் இடம், கட்டுரைப் பெயர், நூற் பெயர், பிறர் கூற்று இடம்பெறும் வேறு கூற்று ஆகியவற்றைக் குறிக்க, ஒற்றை மேற்கோள்குறி இடல் வேண்டும்.

எ – கா : i. ‘ஏ’ என்று ஏளனம் செய்தான்.
ii. பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
iii. ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல், சிறந்த ஒப்பீட்டு நூல்.
iv. ‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்’ என்பர்.

தெரிந்து கொள்வோம்
நிறுத்தக்குறிகள்

சிறுவினா

Question 1.
நிறுத்தற் குறிகளின் வகைகளையும், அவை எங்கெங்கு இடம் பெறுதல் வேண்டும் என்பதையும் தொகுத்து எழுதுக.
Answer:
காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்படவிளிக்குறி, மேற்கோள்குறி என்பன நிறுத்தற்குறிகளாகும்.
(விடை : குறுவினா 1முதல் 8வரை உள்ளவற்றைத் தொகுத்துப் படிக்க)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

பலவுள் தெரிக

Question 1.
சரியான நிறுத்தக்குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்க
அ) மலரவன் தன் பாட்டியிடம் நான் படிக்கிறேன் என்றான்.
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
இ) மலரவன் தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
ஈ) மலரவன் தன் பாட்டியிடம், நான் படிக்கிறேன்! என்றான்.
Answer:
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.

கூடுதல் வினா

Question 2.
சரியான நிறுத்தற்குறியுடைய சொற்றொடலாக் காண்க.
அ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
ஆ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை, என்னும் ‘சிறுகதை’ எழுதினார்.
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
ஈ) ‘பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
Answer:
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
நிறுத்தற் குறிகளின் பயன்களைக் கூறுக.
Answer:
நிறுத்தற் குறிகள், வெறும் அடையாளங்கள் அல்ல. அவை பொருள் பொதிந்தவை. மக்களது உணர்வின் இயக்கமாக விளங்குவது மொழி. மொழியின் தெளிவை உணர்த்த, நிறுத்தல்களும் குறியீடுகளும் அடையாளங்களாகும். நிறுத்தற்குறிகள், ஒரு தொடரிலுள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும்.

பெயயைத் தெளிவாகப் பேசவும் எழுதவும் நிறுத்தற்குறிகள் துணை நிற்கின்றன. நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும்போது, தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும், கேட்பவர்களும் பயன்பெறுவர்.

Question 2.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
தொடரின் இறுதி, முகவரி இறுதிகளில் முற்றுப்புள்ளி இடவேண்டும்.
எ-கா: i. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
ii. தலைமை ஆசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, சென்னை – 600 002.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
விளிக்குறி, வியப்புக்குறி வரும் இடங்களை வேறுபடுத்துக.
Answer:
விளிக்குறிக்கும், வியப்புக்குறிக்கும் இடப்படும் அடையாளம் ஒன்றே. விளிக்குறி, அண்மையில் இருப்பவரையோ, தொலைவில் இருப்பவரையோ அழைப்பதற்கு இடப்படும்.

வியப்பு, இடைச்சொல்லுக்குப் பின்பும், நேர்க்கூற்றின் வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச்சொற்களுக்குப் பின்பும் வியப்புக்குறி இடப்படும்.

Question 4.
சிலப்பதிகாரத்தைப் படித்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் – இத்தொடர்க்குரிய நிறுத்தற்குறிகளைத் தகுந்த இடங்களில் இட்டெழுதுக.
Answer:
“சிலப்பதிகாரத்தைப் படித்தேன். வியந்தேன்! மகிழ்ந்தேன்!”.

மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
(சங்கரதாசு சுவாமிகள்)

நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல்வராகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர்.

இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர், தம்முடைய 16ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று, வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்.

இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் ‘சந்தக் குழிப்புகளின்’ சொற்சிலம்புகளைக் கண்டு, அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

சங்கரதாசு சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா, நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ட்டினார். நாடக மேடை, நாகரிகம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், ‘தத்துவ ம.

லோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கி, ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி. கே. எஸ். சகோதரர்கள். நாடகத்தின்மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.

Question 1.
தமிழ்ச் சொல்லாக்குக – சன்மார்க்கம், வித்துவ பால சபை.
Answer:
சன்மார்க்கம் – ஆன்மநெறி
வித்துவ பால சபை – இளங்கலைஞர் மன்றம்

Question 2.
நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள் – அடிக்கோடிட்ட வினையாலணையும் பெயரை வினைமுற்றாக்கித் தொடரை எழுதுக.
Answer:
சங்கரதாசு சுவாமிகள், நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தார்.

Question 3.
ஈட்டினார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
ஈட்டு + இன் + ஆர்
ஈட்டு – பகுதி, இன் – இறந்ததால் இடைநிலை, ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 4.
தன்னன தானன தன்னனனே, இந்தச் சந்தத்தில் பொருள் பொதிந்த இரண்டு அடிகள் கொண்ட பாடல் எழுதுக.
Answer:
எ – கா : இந்திய நாட்டினில் வாழ்வதையே
இன்பமாய்க் கொண்டிடல் வேண்டுமப்பா……
இங்குமம் கையராய் வந்ததையே
பற்றதாம் என்றிடல் வேண்டுமையா.

Question 5.
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் – சிறப்புப் பெயருக்கான காரணத்தை அளிக்க.
Answer:
நாட்டத்தின்வழித்தமது சுவைமிகுந்த பாடல்கள், உரையாடல்கள் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் உணர்த்தினார். எனவே, நாடகத்துறைக் கலைஞர்கள், சங்கரதாசு சுவாமிகளைத் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றிச் சிறப்பித்தனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. பெரும்புலவர்கள், சங்கரதாசு சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர்.
வினா : பெரும்புலவர்கள் எவற்றை உணர்ந்து, சங்கரதாசு சுவாமிகளை எவ்வாறு பாராட்டியுள்ளனர்?

2. சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்று உளமகிழ்ந்து போன்றுகின்றனர்.
வினா : நாடகத்துறைக் கலைஞர்கள் உளமகிழ்ந்து யாரை என்னவென்று போன்றுகின்றனர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

3. தம் நாடகத்தின்மூலம் சங்கரதாசு சுவாமிகள், மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் உணர்த்தினார்.
வினா : சங்கரதாசு சுவாமிகள், தம் நாடகத்தின்மூலம் மக்களுக்கு எவற்றை உணர்த்தினார்?

தமிழாக்கம் தருக

The oldest documented forms of art are visual arts, which include creation of images or objects in fields including today painting, sculpture, printmaking, photography and other visual media. Music, theatre, film, dance, and other performing arts, as well as literature and other media such as interactive media, are included in a broader definition of art or the arts. Until the 17th century, art referred to any skill or mastery and was not differentiated from crafts or sciences. Art has had a great number of different functions throughout its history, making its purpose difficult to abstract or quantiy to any single concept. This does not imply that the purpose of Art is “vague” abu unat it has had many unique, different reasons for being created.
Answer:
மிகவும் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட கலை வடிவங்கள் எல்லாம், காட்சி முகக் கலைகளாக உள்ளன. அவை, பல்வேறு துறைகளில் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. இன்றைய ஓவியம், சிற்பம், அச்சுப் படங்கள், நிழற்படங்கள் மற்றும் காட்சிப்படங்கள் போன்றவையும் அவற்றுள் அடங்கியனவேயாகும்.

இசை, நாடகம், திரைப்படம், நடனம், கலை நிகழ்ச்சிகள், இலக்கியங்கள் மற்றும் வடிகங்களில் காணப்படும் கலைகள் எல்லாமும், ஒரு பரந்த வரையறைக்குள் சேர்க்கப்பட்டவையே ஆகும். பதினேழாம் நூற்றாண்டுவரை கலை என்பது ஏதோ ஒரு திறமை, நிபுணத்துவமாகக் கருதப்பட்டது. கைவினைத் தொழில் அறிவியலோடு வேறுபட்டதாக இருந்தது. கலை மற்றும் அதன் வரலாறு முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

கலைகளின் நோக்கம் எந்த ஒரு கருத்தையும் சுருக்கமாக அல்லது அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துவதாக இருக்காது. வெவ்வேறு தனித்தனிக் காரணங்களால், தனித்துவமான தன்மைகளால் உருவாக்கப்பட்டனவாகவே உள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

தொடர் நாற்றம்

Question 1.
மூன்று நாள்கள், கல்லூரிக்கு விடுமுறை மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச்
சென்றனர். சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர். (கலவைத் தொடராக மாற்றுக)
Answer:
மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறையாதலால் மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

Question 2.
தஞ்சைக் கோவில், எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும். (வினாத் தொடராக்குக)
Answer:
தஞ்சைக் கோவில் கட்டப்பட்ட கலைப்பாணி யாது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

Question 3.
என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை. (செய்தித் தொடராக்குக)
Answer:
மதுரை வீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை மிக அழகானது.

Question 4.
நான், வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்வேன். (பொருள்மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக)
Answer:
நான் வாரத்தின் இறுதிநாள்களிலன்றிப் பிற நாள்களில் நூலகத்திற்குச் செல்லேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

மெய்ப்பத் திருத்துநர் பணிவேண்டி, நாளிதழ் முதன்மையாசிரியருக்குக் கீழ்க்காணும் விவரங்களுடன் தன்விலக்குறிப்பு ஒன்று எழுதுக.
Answer:
பெயர், வயது, பாலினம், பிறந்தநாள், பெற்றோர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி,
அறிந்த மொழிகள், எடை, உயரம், குருதிவகை, கல்வித்தகுதி)

அனுப்புநர்
க. அன்புச்செல்வன்,
8, 82ஆவது தெரு,
கலைஞர் நகர்,
சென்னை – 600078.

பெறுநர்
ஆசிரியர்,
‘தினமலர்’ நாளிதழ்,
சென்னை – 600002.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : மெய்ப்புத் திருத்துநர் பணிவேண்டி விண்ணப்பம்.

வணக்கம். நான், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழில் தட்டச்சுச் செய்வேன். பத்திரிகைகளின் மெய்ப்புத் திருத்தும் பணியையும் செய்த அனுபவம் உண்டு. பணி அளித்தால், சிறப்பாகச் செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.

நன்றி.

உங்கள்,
உண்மையுள்ள,
க. அன்புச்செல்வன்.

தன்விவரக் குறிப்பு

பெயர் : க. அன்புச்செல்வன்
தந்தை : கோ. கந்தசாமி
தாயார் : சாரதாதேவி
பிறந்தநாள் : 15.07. 1999
கல்வித்தகுதி : பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி
தொழில் பயிற்சித் தகுதி : தமிழ்த் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வு.
கணினி : அடிப்படைக் கணினித் தேர்வு
பட்டறிவு : இரண்டு ஆண்டுகள் சிறுபத்திரிகைகளில் மெய்ப்புத் திருத்தல்
முகவரி : 8, 82 ஆவது தெரு, கலைஞர் நக சென்னை – 600078.
அலைபேசி எண் : 9677074899
மின்ன ஞ்சல் முகவரி : anbuselvan08@gmailcom
அறிந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு.
உயரம் : 6′
எடை : 68 கிலோ
குருதிவகை : O+

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

இலக்கியநயம் பாராட்டுக

தண்டலை மயில்கள் ஆட, தாமன் விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் எங்கள் தவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பால மருதம்வீற் றிருக்கும் மாதோ. – கம்பர்

ஆசிரியர் குறிப்பு : ‘கல்வியில் பெரியவர் கம்பர்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்னும் வழக்குகள், கம்பரின் கல்விப் பெருமையை விளக்கும். வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத் தேத் தழுவித் தமிழ் மரபுக்கு ஏற்ப, இக்காப்பியத்தைப் பாடியுள்ளது சிறப்பாகும். இங்குக் கம்பரின் பாட்லொன்று, நயம் பாராட்டக் கொடுக்கப்பட்டுள்ளது. இது, கம்பராமாயணத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

நயம் : மருதநிலம் தலைவன்போல் கொலுவீற்றிருக்க, மயில் ஆடுமகளாகவும், தாமரை அரும்பு விளக்காகவும், மேகமுழக்கம் மத்தள ஓசையாகவும், குவளைமலர்கள் கண்விழித்து நோக்கும் மக்களாகவும், வண்டுகளின் ரீங்காரம் மகர யாழிசையாகவும், தெளிந்த நீர்ப்பரப்பு எழினியாகவும் உருவகம் செய்துள்ளார். கம்பரின் கற்பனை வளத்திற்கு இது மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

எதுகை நயம் :
அடிதோறும் முதல்சீரில் முதலெழுத்து அளவு ஒத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து – தண்டலை, கொண்டல்கண், தெண்திரை, வண்டுகள் – அடி எதுகைத் தொடை அமைந்துள்ளது.

பாடல் அடியின் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவந்து – தண்டலை, தாமரை, தாங்க – கொண்டல், குவளை, கண் – தெண்டிரை, தேம்பிழி – சீர்மோனை அமைந்துள்ளது.

ஆட, தாங்க, ஏங்க, நோக்க, காட்ட, பாட என இனிய ஓசை தரும் சொற்கள் கையாளப்பட்டுள்ளன.

அணிநயம் : மருதநிலக் காட்சி, இயல்பாக உள்ளது உள்ளபடி வருணித்துக் கூறப்பட்டிருந்தாலும், புலவரின் கற்பனை இணைந்து, தற்குறிப்பேற்ற அணியை உள்ளடக்கியதாகவும் செய்யுள் திகழ்கிறது. உவமை, உருவகம், கற்பனை எனப் பலவும் நிறைந்த பாடலாக உள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் - 1Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் - 1
Answer:
மீனைச் சமைத்து
உண்ணக் கொடுக்காதே!
மீனைப் பிடித்துச்
சமைத்துண்ணக் கற்றுக்கொடு!
உழைத்துப் பிழைக்க வழிகாட்டியவும்
கூறிய நன்மொழி!
பிழைத்துக் கொள்வானிவன்
தூண்டிலில் சிக்கியது மீன்தானே!

விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

1. தனிமொழி – அறிவு; …………………. – வண்ண மயில்; பொது பொழு – ………………….
Answer:
தொடர்மொழி, பலகை (பலகை / பல கை)

2. கார்காலம் – …………………. ; குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை; …………………. – மார்கழி, தை
Answer:
ஆவணி, புரட்டாசி; முன்பனிக்காலம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

3. எழுத்து, சொல் …………………. , யாப்பு, ………………….
Answer:
பொருள், அணி

4. எழுத்து, …………………. , சீர், தளை, …………………. , தொடை.
Answer:
அசை, அடி

5. சேரன் – வில், சோழன் – …………………. , …………………. – மீன்.
Answer:
புலி, பாண்டியன்

நிற்க அதற்குத் தக

நம் நாட்டின் பெருமைகளில் ஒன்று தொன்மைச் சின்னங்கள். அவை நம் வரலாற்றைப் பறைசாற்றுபவை. கோயில்களிலும், தொன்மையான இடங்களிலும், கல்வெட்டுகளிலும் சிலர் கிறுக்குவதை, சிதைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்முடைய பெருமையை நாமே சிதைக்கலாமா? அவற்றை அழியாமல் பாதுகாக்க, டும் என்ன செய்யப் போகிறோம்? பட்டியலிடுக.

செல்லும் இடம் கோவிலோ, தொல்லியல் சார்ந்த இடடோ, இன்றளவும் இருப்பதனால் வழிபடவும் கண்டு மகிழவும் செல்கிறோம். எனவே, அவற்றைப் பழமை சிதையாமல், நம் பிற்காலச் சந்ததியினர் காணவும் பாதுகாக்கவும் வேண்டும். சுவர்களைக் கண்டால், கீறலோ) கிறுக்கவோ கூடாது. நம் உறைவிடத்தைச் சிதைப்போமா? குப்பைகளையும் நெகிழிப்பைகளையும் போடக்கூடாது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்

வீட்டை மட்டுமன்று நாம் சார்ந்துள்ள பகுதிகளையும் தூய்மையோடு வைக்கவேண்டும். நம் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் சின்னங்கள் அவை. அவற்றை அழிக்கவோ, சேதப்படுத்தவோ, நமக்கோ மற்றவர்களுக்கோ உரிமை கிடையாது. நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை! எனவே, நாம் அவற்றைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கலைச்சொல் அறிவோம்

நுண்க லைகள் – Fine Arts
தானியக் கிடங்கு – Grain Warehouse
ஆவணப்படம் – Documentary
பேரழிவு – Disaster
கல்வெட்டு – Inscription / Epigraph
தொன்மம் – Myth