Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Students can Download 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்……………………..
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
இ) வலிமையை நிலைநாட்டல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

குறுவினா

Question 1.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 1

சிறுவினா

Question 1.
அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
Answer:

  • இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திணை வஞ்சித்திணை’ ஆகும்.
  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.
  • அவந்தி நாட்டுமன்னன், மருத நாட்டு மன்னனுடன் பகைகொண்டு போர் புரிந்து மருத நாட்டைக் கைப்பற்ற நினைப்பதால் இந்நிகழ்வு வஞ்சித்திணைக்குப் பொருந்தி வருகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….
அ) புறத்திணை
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறத்திணை

Question 2.
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) ஒன்பது
ஆ) பதினொன்று
இ) பன்னிரண்டு
ஈ) பதிமூன்று
Answer:
இ) பன்னிரண்டு

Question 3.
வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) மல்லிகைப்பூ
ஆ) இட்லிப்பூ
இ) சங்குப்பூ
ஈ) உன்னிப்பூ
Answer:
ஆ) இட்லிப்பூ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 4.
ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….
அ) பெருந்திணை
ஆ) பொதுவியல்
இ) கைக்கிளை
ஈ) கொடையை
Answer:
இ) கைக்கிளை

Question 5.
‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?
அ) போர்
ஆ) வெற்றி
இ) ஆநிரைமீட்டல்
ஈ) மதில் வளைத்தல்
Answer:
ஆ) வெற்றி

Question 6.
‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) முல்லை
ஈ) பாலை
Answer:
ஆ) மருதம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 7.
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….
அ) கோட்டையைக் காக்க
ஆ) மன்னனைக் காக்க
இ) ஆநிரைக் கவர
ஈ) வலிமையை நிலைநாட்ட
Answer:
அ) கோட்டையைக் காக்க

Question 8.
பாடாண் திணை பிரித்து எழுதுக.
அ) பாடாண் + திணை
ஆ) பாடாண் + ஆண் + திணை
இ) பாடு + ஆண் + திணை
ஈ) பாட + ஆண் + திணை
Answer:
இ)பாடு+ஆண்+திணை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 9.
காஞ்சி என்பது ஒரு வகை …………………….
அ) நெடுமரம்
ஆ) குறுமரம்
இ) குறுஞ்செடி
ஈ) புதர்ச்செடி
Answer:
ஆ) குறுமரம்

Question 10.
போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….
அ) கோட்டை வளைத்தல்
ஆ) போரிடல்
இ) ஆநிரை கவர்தல்
ஈ) கோட்டை காத்தல்
Answer:
இ) ஆநிரை கவர்தல்

Question 11.
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.
அ) கோட்டையை
ஆ) ஆநிரைகளை
இ) நிலத்தை
ஈ) வீரத்தை
Answer:
ஆ) ஆநிரைகளை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 12.
மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….
அ) பாடாண் திணை
ஆ) பொதுவியல் திணை
இ) வாகைத் திணை
ஈ) நொச்சித் திணை
Answer:
அ) பாடாண் திணை

Question 13.
அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.
அ) அகப்பொருள்
ஆ) புறப்பொருள்
இ) நுண்பொருள்
ஈ) ஐவகைநிலம்
Answer:
அ) அகப்பொருள்

Question 14.
கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….
அ) வெட்சி
ஆ) வஞ்சி
இ) கரந்தை
ஈ) உழிஞை
Answer:
இ) கரந்தை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 15.
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்
2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்
3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 17.
பொருத்துக.
1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்
2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்
3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்
4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 18.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
அ) 8

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 19.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
ஈ) 4

Question 20.
அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்
அ) கைக்கிளை, பெருந்திணை
ஆ) பொதுவியல், பாடாண்
இ) வெட்சி, கரந்தை
ஈ) நொச்சி, உழிஞை
Answer:
அ) கைக்கிளை, பெருந்திணை

Question 21.
முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப் பூ
இ) வெட்சிப் பூ
ஈ) நொச்சிப் பூ
Answer:
அ) உழிஞைப் பூ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 22.
மருத நிலத்திற்குரியப்பூ …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப்பூ
இ) வெட்சிப்பூ
ஈ) நொச்சிப்பூ
Answer:
ஈ) நொச்சிப்பூ

Question 23.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) வெட்சித்திணை – ஆநிரை கவர்தல்
ஆ) கரந்தைத்திணை – ஆநிரை மீட்டல்
இ) வஞ்சித்திணை – மண்ணாசை காரணமாக போர்
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்
Answer:
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Question 24.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) காஞ்சித்திணை – எதிர்த்துப் போரிடல்
ஆ)நொச்சித்திணை – கோட்டை காத்தல்
இ) உழிஞைத்திணை – மதில் வளைத்தல்
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி
Answer:
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

குறுவினா

Question 1.
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சி
  • கரந்தை
  • வஞ்சி
  • காஞ்சி
  • நொச்சி
  • உழிஞை
  • தும்பை
  • வாகை
  • பாடாண்
  • பொதுவியல்
  • கைக்கிளை
  • பெருந்திணை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 2.
நொச்சிப் பூக்களின் வகைகளைக் குறிப்பிடுக.
Answer:
மணிநொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெண் நொச்சி – போன்றவையாகும்.

Question 3.
தும்பைத் திணையை விளக்குக.
Answer:
பகை கொண்ட வேந்தர்கள் இருவரும் ‘தம் வலிமையே பெரிது’ என்பதை நிலை நாட்டும் பொருட்டு தம் வீரர்களுடன் தும்பைப் பூச்சூடி களம் குறித்துப் போரிடுதல் ஆகும்.

Question 4.
பாடாண் திணையை விளக்குக.
Answer:

  • பாடு + ஆண் + திணை எனப் பிரிக்கப்படும்.
  • பாடப்படும் ஆண்மகனது, கல்வி, வீரம், செல்வம், புகழ், ஈகை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது.
  • போரை மட்டும் சொல்லாது ஒருவரின் பிற மாண்புகளையும் குறிப்பிடுவதே பாடாண்திணையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 5.
பொதுவியல் திணையை விளக்குக.
Answer:
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

Question 6.
புறத்திணை என்பது யாது?
Answer:
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணையாகும்.

Question 7.
ஆநிரை கவர்தல் நடைபெறக் காரணம் யாது?
Answer:

  • மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளை (மாடுகளை) சொத்தாகக் கருதினர்.
  • ஒரு குழுவினர் மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாயிற்று.
  • போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

Question 8.
போரிடும் அரசர்கள் இருவரும் ஒரே வகைப் பூவைச் சூடுவர் – எப்போது? எவ்வகைப்பூ?
Answer:
பகை மன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 9.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் எத்தனை ? அவை யாவை?
Answer:
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் : எட்டு

  • வெட்சிப்பூ – வெட்சித்திணை
  • கரந்தைப் பூ – கரந்தைத் திணை
  • வஞ்சிப்பூ – வஞ்சித்திணை
  • காஞ்சிப்பூ – காஞ்சித்திணை
  • நொச்சிப்பூ – நொச்சித்திணை
  • உழிஞைப்பூ – உழிஞைத்திணை
  • தும்பைப்பூ – தும்பைத்திணை
  • வாகைப்பூ – வாகைத்திணை

Question 10.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் : நான்கு.
அவை: பாடாண் திணை, பொதுவியல் திணை, கைக்கிளை, பெருந்திணை

Question 11.
தொல்காப்பியர் காலத்தில் அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள் யாவை?
Answer:
கைக்கிளை, பெருந்திணை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 12.
மதில் போர் பற்றிய திணைகள் யாவை?
Answer:
நொச்சித்திணை, உழிஞைத்திணை.

Question 13.
ஆநிரை பற்றிய திணைகள் யாவை?
Answer:
வெட்சித்திணை, கரந்தைத்திணை.

Question 14.
எதிர் எதிர் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சித்திணை (கவர்தல்)
  • காஞ்சித்திணை (எதிர்போரிடல்)
  • கரந்தைத்திணை (மீட்டல்)
  • நொச்சித்திணை (கோட்டை காத்தல்)
  • வஞ்சித்திணை (மண்ணாசை கருதிப் போரிடல்)
  • உழிஞைத்திணை (கோட்டை முற்றுகையிடல்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 15.
வெற்றிப்பூ எது?
Answer:
வெற்றிப்பூ : வாகை
போரில் வெற்றி பெற்ற மன்னனுக்கு வாகைப்பூ சூடி மகிழ்வர்.

Question 16.
கல்வி, செல்வம், வீரம் முதலியவற்றைப் புகழ்ந்து பாடும் புறத்திணை எது?
Answer:
பாடாண் திணை.

Question 17.
புறப்பொருள் பற்றி உரையாடியவர்கள் யாவர்?
Answer:

  • கிள்ளிவளவன் : முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்
  • சேரலாதன் : பத்தாம் வகுப்பு மாணவர்

Question 18.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெரும்போர் நடக்கின்றது. இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
Answer:
புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் :
பகைமன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப்பூவைச் சூடிப் போரிடுவர். இது தும்பைத் திணை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

விளக்கம் :
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தங்கள் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் போரிடுவதால், இதனைத் தும்பைத் திணையாகக் கொள்ளலாம்.

Question 19.
மலைப்பகுதியில் அரியதாகக் கிடைக்கும் நெல்லிக்கனி. அது நீண்ட ஆயுள் தரும். அதியனே நீவிர் உண்ணாது. எம் சாதல் ஒழிய கொடுத்த பெருமகனே என்று வாழ்த்துகிறார் ஔவையார். இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
Answer:
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணம் :
பாடுவதற்குத் தகுதி உடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது பாடாண் திணையாகும்.

விளக்கம் :
அதியமானின் புகழை ஒளவையார் பாடுவதால், இஃது பாடாண் திணையாகும்.

சிறுவினா

Question 1.
புறத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை? விளக்குக.
Answer:
புறத்திணை 12 வகைப்படும். அவை:

  • வெட்சித்திணை – நிரை கவர்தல்
  • கரந்தைத்திணை – நிரை மீட்டல்
  • வஞ்சித்திணை – வஞ்சிப்பூ சூடி போருக்குச் செல்லுதல்
  • காஞ்சித்திணை – காஞ்சிப்பூ சூடி எதிர்த்துப் போரிடல்
  • நொச்சித்திணை – கோட்டையைக் காக்க உள்ளிருந்து போரிடுதல்
  • உழிஞைத்திணை – கோட்டையைக் கைப்பற்ற சுற்றி வளைத்தல்.
  • தும்பைத்திணை – வலிமையை நிலைநாட்ட களம் குறித்துப் போரிடுதல்
  • வாகைத்திணை – போரில் வெற்றி பெற்றவன் வாகை சூடி மகிழ்தல்
  • பாடாண்திணை – போரை மட்டும் சொல்லாது மன்னனின் பேராண்மைகளைப் பாடுவது
  • பொதுவியல் – புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
  • கைக்கிளை பெருந்திணை – ஒருதலைக்காமம்
  • பெருந்திணை – பொருந்தாக்காமம்
  • Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.
Answer:

மருத நிலம்

பண்டைய சங்க இலக்கிய காலத்தில், பூகோள அடிப்படையில் (நில அமைப்புப்படி) தமிழ்நாடு ஐந்து வகையாக இருந்தது. அவற்றுள் மருத நிலப்பகுதியே உழவுத் தொழிலுக்கு ஏற்றதாய் இருந்தது. அந்த நிலப்பகுதியில் விவசாயிகள் (உழவர்கள்) பயன்பெறும் வகையான தேவையான பருவ காலங்கள் சிறந்திருந்தது. தேவையான சூரிய வெப்பம், வளமான நிலம், போதுமான அளவு மழையும் இருந்தது. அதனால் விவசாயம் செழித்தது. மருத நிலத்தின் இயற்கைக் கூறுகளாலும், போதுமான சூரிய வெப்பத்தினாலும் பழந்தமிழகத்தில் மருதநிலத்தில் உழவுத்தொழில் சிறந்திருந்தது.

பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

வரப்போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்.
இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்
Answer:
வரப்போகிறேன்
என் நண்பன்  இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன் என்றான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

இல்லாமல் இருக்கிறது
எங்கள் நாடு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

கொஞ்சம் அதிகம்
சங்ககாலத்தில் மன்னர்களுக்கு காதலும் வீரமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

முன்னுக்குப் பின்
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது நன்றன்று.

மறக்க நினைக்கிறேன்.
எனக்கு பிடிக்காத நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்.

தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது.
Answer:
தொகைச் சொற்கள்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கடிதம் எழுதுக.

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
ஆர். இராகவன்,
16, பெரியகடைவீதி,
மதுரை.

பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
‘கனல்’ நாளிதழ்,
மதுரை.

பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல் – தொடர்பாக.

மதிப்பிற்குரிய ஐயா,

தங்கள் நாளிதழின் சார்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். அக்கட்டுரையைத் தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளேன். தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் என் கட்டுரையும் வெளிவர ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

இடம் : மதுரை
நாள் : 8.3.2020

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஆர். இராகவன்.

உறைமேல் முகவரி:

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 3

கவிதையை உரையாடலாக மாற்றுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 11
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 4
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 5

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

மொழியோடு விளையாடு

ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 12
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 6

படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 7
Answer:
செய்தி :
பகை கொண்ட வேற்று நாட்டு மன்னனை எதிர்த்துப் போரிட வஞ்சிப்பூ சூடி வென்றே தீருவோம் என குதிரைப்படை, காலாட்படை, யானைப்படையோடு முன்னேறிச்செல்லும் 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

அகராதியில் காண்க.

மிரியல், வருத்தனை, அதசி, துரிஞ்சில்
Answer:
மிரியல் – மிளகு
வருத்தனை – பிழைப்பு, தொழில், பெருகுதல், மானிய உரிமை, சம்பளம்.
அதசி – சணல்
துரிஞ்சில் – வௌவால்வகை, சீக்கரிமரம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 8
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 9

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கலைச்சொற்கள் அறிவோம்.

  • Consulate – துணைத்தூதரகம்
  • Guild – வணிகக்குழு
  • Patent – காப்புரிமை
  • Irrigation – பாசனம்
  • Document – ஆவணம்
  • Territory – நிலப்பகுதி

நிற்க அதற்குத் தக

அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியவர் பெயர், நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள். இவை நமது இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை.

அதுபோலவே கோவில்களிலும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம்பெற்றிருக்கும். அவை நம் பழம்பெருமையையும் வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்கள் என்று அறிவீர்கள்தானே? இவற்றைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள்….
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 13
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 10

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்

Students can Download 8th Tamil Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்

Question 1.
சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்ட சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.
Answer:
சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்டவர்கள் :
1. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
2. எஸ். தர்மாம்பாள்
3. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
4. ஈ.வே.ரா. பெரியார்
5. பாரதியார்
6. நிவேதிதா தேவி
7. பாரதிதாசன்.
8. அம்பேத்கர்

தெரிந்து தெளிவோம்
(i) அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் : போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்.

(ii) என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள். – தந்தை பெரியார்

(iii) அயோத்திதாசர் எழுதிய நூல்கள்: புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா முதலியன. திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.

(iv) சென்னைதாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சிமையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அயோத்திதாசர் …………….. சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
அ) தமிழக
ஆ) இந்திய
இ) தென்னிந்திய
ஈ) ஆசிய
Answer:
இ) தென்னிந்திய

Question 2.
அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..
அ) ஒருபைசாத் தமிழன்
ஆ) காலணாத் தமிழன்
இ) அரைப்பைசாத் தமிழன்
ஈ) அரையணாத் தமிழன்
Answer:
அ) ஒருபைசாத் தமிழன்

Question 3.
கல்வியோடு …………. கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.
அ) சிலம்பமும்
ஆ) கைத்தொழிலும்
இ) கணிப்பொறியும்
ஈ) போர்த்தொழிலும்
Answer:
ஆ) கைத்தொழிலும்

Question 4.
அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது …………
அ) ஆழ்ந்த படிப்பு
ஆ) வெளிநாட்டுப்பயணம்
இ) இதழியல் பட்டறிவு
ஈ) மொழிப்புலமை
Answer:
அ) ஆழ்ந்த படிப்பு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்

Question 5.
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது …………….
அ) வானம்
ஆ) கடல்
இ) மழை
ஈ) கதிரவன்
Answer:
இ) மழை

குறுவினா

Question 1.
அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?
Answer:
அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் :
(i) நல்ல சிந்தனை
(ii) சிறப்பான செயல்
(iii) உயர்வான பேச்சு
(iv) உவப்பான எழுத்து
(v) பாராட்டத்தக்க உழைப்பு

Question 2.
ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?
Answer:
ஒரு சிறந்த வழிகாட்டி :
‘ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்’ என்று அயோத்திதாசர் கூறுகிறார்.

Question 3.
திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?
Answer:
திராவிட மகாஜன சங்கம் சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் பராமரித்தல், குடிகளின் பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல், பொது மருத்துவமனைகள் அமைத்தல், சிற்றூர்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காகப் போராடியது.

சிறுவினா

Question 1.
அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.
Answer:
அயோத்திதாசரின் இதழ்ப்பணி :
(i) அயோத்திதாசர் 1907ஆம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.

(ii) ஓர் ஆண்டிற்குப்பின் அவ்விதழின் பெயரைத் “தமிழன்” என மாற்றினார்.

(iii) உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார்.

(iv) இவர் ‘தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

(v) இவர் தமது நூல்கள் மூலமாகவும் தமது சீர்திருத்தச் சிந்தனைகளை வெளியிட்டார்.

Question 2.
அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?
Answer:
அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் :
(i) விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று.

(ii) அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

(iii) “சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது;

(iv) மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும்.

(v) மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது” என்று ஆணித்தரமாகக் கூறினார் அயோத்திதாசர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்

நெடுவினா

Question 1.
வாழும்முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
வாழும் முறை :
(i) மக்கள் வாழவேண்டிய முறை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் சிறப்பானவையாகும்.

(ii) மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும்; கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழவேண்டும்.

(iii) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது. மேலும் மதியை அழிக்கும் போதைப் பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது.

(iv) ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால் அக்குடும்பம் வாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்.

(v) ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்.

(vi) இத்தகைய நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள் ஆகும்.

சமத்துவம் :
(i) அயோத்திதாசர், மக்கள் அனைவரும் சம உரிமை பெற்றுச் சமத்துவமாக வாழ வேண்டும் என்று விரும்பினார்.

(ii) கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

(iii) ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

(iv) இவற்றில் இந்து, பௌத்தர், கிறித்துவர், இசுலாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் அயோத்திதாசர்.

சிந்தனை வினா

Question 1.
ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள் யாவை?
Answer:
ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள்:
(i) அரசாங்கம் கூறும் சட்டத்திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிதல்.

(ii) சண்டை சச்சரவுகள் இன்றி வாழ்தல், ஒற்றுமையைப் பேணுதல்.

(iii) பொது இடங்களைச் சரியான முறையில் பயன்படுத்துதல்.

(iv) சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்களான மரங்களை வெட்டுதல், நெகிழியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்தல்.

(v) நமது தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு அறிவுறுத்தல் .

(vi) பெரியோரை மதித்தல், இறை வழிபாடு போன்றவற்றை கடைப்பிடித்தல் ஆகிய உயர்பண்புகள் அடிப்படைப் பண்புகளாகும்.

கூடுதல் வினாக்கள்

நீரப்புக

1. தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ……………………
2. அயோத்திதாசரைத் …………………. என்று போற்றுவர்.
3. அயோத்திதாசரின் இயற்பெயர் ………………
4. அயோத்திதாசர் பிறந்த ஊர் …………………..
5. அயோத்திதாசர் பிறந்த நாள் …………………
6. அயோத்திதாசர் அறிந்த மொழிகள் …………………
7. அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ள இடம் சென்னையில் உள்ள ……………….
8. திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………..

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்
Answer:
1. அயோத்திதாசர்
2. தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை
3. காத்தவராயன்
4. சென்னை
5. 20-05-1845
6. தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம்
7. தாம்பரம்
8. 1892

விடையளி :

Question 1.
அயோத்திதாசரின் சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்தது எது?
Answer:
(i) அயோத்திதாசர் தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

(ii) இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்துவம் உள்ளிட்ட பல்துறை நூல்களையும் ஆழ்ந்து கற்றார். இத்தகைய ஆழ்ந்த படிப்பே அயோத்திதாசரது புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

Question 2.
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் யாவை?
Answer:
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் :
(i) போகர் எழுநூறு
(ii) அகத்தியர் இருநூறு
(iii) சிமிட்டு இரத்தினச் சுருக்கம்
(iv) பாலவாகடம்.

Question 3.
அயோத்திதாசர் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
அயோத்திதாசர் எழுதிய நூல்கள் :
(i) புத்தரது ஆதிவேதம்
(ii) இந்திரர் தேச சரித்திரம்
(iii) விவாக விளக்கம்
(iv) திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.

Question 4.
தனக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் என்று தந்தை பெரியார் யார் யாரைக் குறிப்பிட்டுள்ளார்?
Answer:
“பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

Question 5.
அயோத்திதாசரின் கல்விச் சிந்தனைகள் யாவை?
Answer:
அயோத்திதாசரின் கல்விச் சிந்தனைகள் :
(i) ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று அயோத்திதாசர் கருதினார்.

(ii) நிலவு நாளும் வளர்ந்து முழு நிலவாகி ஒளி வீசுவதுபோல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

(iii) கல்வியோடுகைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல் போன்றவற்றையும் கற்க வேண்டும்.

(iv) சங்ககாலப் பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்வி கற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெற வேண்டும். இவ்வாறு தம் கல்விச் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்

Question 6.
அயோத்திதாசரின் வாழ்க்கை பற்றி எழுதுக.
Answer:
(i) அயோத்திதாசர் 1845ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும். இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதால் பள்ளிப் பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானார்.

(ii) அயோத்திதாசப் பண்டிதர் என்பவரிடம் இவர் கல்வியும் சித்த மருத்துவமும் பயின்றார். தம்மீது அன்பு காட்டிய அந்த ஆசிரியரது பெயரையே தமது பெயராக வைத்துக் கொண்டார்.

(iii) நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர் திருமணத்திற்குப்பிறகு பர்மாவுக்குச் சென்றார். அங்குக் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த தமிழர்களின் உரிமைகளுக்காக இவர் பாடுபட்டார்.

(iv) பின்னர் இவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பி ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார்.

(v) திராவிட மகாஜன சங்கம் அமைத்து அதன் மூலம் பல நல்ல செயல்களைச் செய்தார். இவருடைய சிந்தனைகள் சமுதாயத்தில் விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.

Question 7.
மக்களையும் மழையையும் தொடர்புப்படுத்தி அயோத்திதாசர் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:
மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி அயோத்திதாசர் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கதாகும்.

‘வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும். அறிவாளிகள் இல்லாமைக்குக் காரணம் ஆட்சித்திறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே.

அத்தகைய அரசர்கள் இல்லாமைக்குக் காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியன உடைய குடிகள் இல்லாமையே என்று கூறுவதன் மூலம் நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது’ என்கிறார் அயோத்திதாசர்.

Question 8.
அயோத்திதாசரின் தனித்தன்மைகள் யாவை?
Answer:
(i) அயோத்திதாசர் காலத்தில் பண்டிதர், புலவர், நாவலர், பேச்சாளர், எழுத்தாளர் எனப் பலர் இருந்தனர். ஆயினும், பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை கொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் அயோத்திதாசரே. எனவே, அவரை அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளராக மதித்தனர்.

(ii) அயோத்திதாசரின் சிந்தனைகள் ஒரு தனிமனிதனின் சிந்தனைகளாக மட்டும் அமையாமல் அகன்ற சமுதாயத்தில் விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் சித்தாந்தங்களாக விளங்கின.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி

Students can Download 8th Tamil Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி

Question 1.
கண்ணி வகையில் பாடப்பட்ட வேறு பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) தாயுமானவர் பாடல் – பராபரக் கண்ணி :
முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே!
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்
தாக்காதே தாக்குந் தனியே பராபரமே
பார்த்த இட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே.
அன்பைப் பெருக்கி என தாருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!

(ii) தமிழ்விடு தூது :
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மனிதர்கள் தம் ……………. தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
அ) ஐந்திணைகளை
ஆ) அறுசுவைகளை
இ) நாற்றிசைகளை
ஈ) ஐம்பொறிகளை
Answer:
ஈ) ஐம்பொறிகளை

Question 2.
ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ……………..
அ) பகர்ந்த னர்
ஆ) நுகர்ந்த னர்
இ) சிறந்தனர்
ஈ) துறந்தனர்
Answer:
அ) பகர்ந்த னர்

Question 3.
‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) ஆனந்த + வெள்ளம்
ஆ) ஆனந்தன் + வெள்ளம்
இ) ஆனந்தம் + வெள்ளம்
ஈ) ஆனந்தர் + வெள்ளம்
Answer:
இ) ஆனந்தம் + வெள்ளம்

Question 4.
உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) உள்ளேயிருக்கும்
ஆ) உள்ளிருக்கும்
இ) உளிருக்கும்
ஈ) உளருக்கும்
Answer:
ஆ) உள்ளிருக்கும்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி

குறுவினா

Question 1.
உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?
Answer:
உண்மை அறிவனை உணர்ந்தோர் உள்ளத்தில் இறைவன் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றான்.

Question 2.
மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?
Answer:
இறைவனின் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல், பணத்தின் மீது ஆசை வைப்பது மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைகிறது.

சிறுவினா

Question 1.
குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?
Answer:
குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன :
(i) “மேலான பொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் பி மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் a திருவடிகளின்மேல் பற்று வைக்காமல் பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

(ii) நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி

(iii) மேலான பொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள் செய்வாயாக!” என்று குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?
Answer:
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் :
(i) தன்னிலும் தகுதி முதலானவற்றில் குறைந்தவர்கள் என்றாலும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

(ii) இன்சொல் மட்டுமே பேசி மகிழ வேண்டும்.

(iii) பிறருக்கு உண்டாகும் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணி, இரக்கப்பட்டு, தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

(iv) நம் உடல் உழைப்பால் பிறருக்கு உதவ வேண்டும்.

(v) ஒருவரது நாக்கு பிறரைத் தூற்றவும், போற்றவும் செய்யும். நாவினால் சுட்ட வடு ஆறாது என்பதால், பிறர் மனம் புண்படாதபடி பேசுவதே பெரிய நற்பண்பாகும்.

(vi) நமது கண்கள் நல்ல நூல்களைப் படிக்கவும், நல்ல காட்சிகளை (திரைப்படம், தொலைக்காட்சி காணவும் செய்ய வேண்டும். மனதிற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளை, நூல்களை பார்க்க, படிக்கக் கூடாது.

(vii) கோபமின்றி வாழ்தல் போன்றவை நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் ஆகும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. குணங்குடியாரின் இயற்பெயர் ………………..
2. இறைவன், மனத்துள் எழுந்தருளி இருக்கும் உண்மையான ……………. ஆனவன்.
3. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் ……………..
Answer:
1. சுல்தான் அப்துல்காதர்
2. அறிவு ஒளி
3. அரிய செயலாகும்

விடையளி :

Question 1.
குணங்குடி மஸ்தான் சாகிபு – குறிப்பு வரைக.
Answer:
(i) குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர்.

(ii) சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.

(iii) இயற்றிய நூல்கள் – எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி

பாடல்
கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு
உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!
காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத
ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே!
அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க்
கரையறவே பொங்கும் கடலே பராபரமே!
அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்
படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே! – குணங்குடி மஸ்தான் சாகிபு

சொல்லும் பொருளும்

1. பகராய் – தருவாய்
2. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
3. பராபரம் – மேலான பொருள்
4. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு

பாடலின் பொருள்
மேலானபொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் திருவடிகளின் மேல் பற்றுவைக்காமல், பணத்தின் மீது ஆசைவைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய். மேலானபொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள் செய்வாயாக.

ஆசிரியர் குறிப்பு
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

Students can Download 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 1.
உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்புமிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.
Asnwer:

கடின உழைப்பாளர்
(மாலையில் பூ விற்பவர், வீட்டு வேலை செய்பவர்)

எங்கள் ஊரில் விமலா என்றொரு பெண்மணி இருந்தார். மாலையில் பூ விற்பார், வீட்டு வேலை செய்வார். அவர் கல்வியாளரோ, எழுத்தாளரோ, போராட்டக்காரரோ அல்லர். கடின உழைப்பாளர்.

எவ்வாறெனில், திருமணமான நாள் முதல் கணவரால் பல இன்னல்களைத் துன்பங்களை அனுபவித்ததோடு, இளம் வயதிலேயே விதவையுமாகி சமூக அவலத்துக்கும், உள்ளானார்.

துன்பங்களைப் பெற்ற அவர் துன்பம் துடைத்தூன்றும் தூணாக மாறினார். உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டார். உழைப்பையே உயிர் மூச்சாய் மாற்றினார். வீட்டு வேலை முதல் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து. தன் பிள்ளைகளின் கல்விக் கண்களைத் திறந்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

ஒரு குழந்தையை மருத்துவராகவும் மற்றொரு குழந்தையைப் பொறியாளராகவும் மாற்றிய விமலா உழைப்பின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.

சிறப்புமிக்கவர்
(நர்த்தகி நடராஜ்)

மதுரை மாநகரில் பிறந்து, உலகின் பல்வேறு பகுதிக்குச் சென்று தன் கலையை நடத்தி சிறப்பு செய்தவர் நர்த்தகி நடராஜ்.
இவர் யார் என்றால் நமக்கும் நம் எண்ணங்கள் எல்லாம் சிதறும். இவர் ஒரு மூன்றாம் பாலினத்தவர். செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர் பெற்றோரால் வெறுக்கப்பட்டு, தன் ஆசிரியரால் ஈர்க்கப்பட்டு, அவரிடமே குருகுலமுறையில் பரதக் கலையை கற்றவர்.

தன் ஆசிரியரால் நர்த்தகி என்று அழைக்கப்பட்ட இவர் 30 ஆண்டுகளாக தன் பரதக் கலையை உலக அரங்கில் நடத்தி 2019-ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு பத்மஸ்ரீ விருதளித்தது. மனித இனத்தில் மற்றவரால் தாம் வெறுக்கப்பட்டாலும் தன்னையும், தமிழரின் பரதக்கலையையும் உலகிற்குக் கொண்டு சென்ற சிறப்புமிக்கவர் நர்த்தகி நடராஜ்

போற்றத்தக்கவர்
(சாலை ஓரம் உணவகம் நடத்துபவர்)

கோவை பேரூர் பகுதியில் வசிக்கும், பாட்டி பெயர் சொன்னாலே அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு இட்லியால் புகழ் பெற்றவர். இன்றும் ஒரு ரூபாய்க்கு ஆவி பறக்கும் இட்லி விற்பவர்.

நல்ல சுவையான சட்னியோடு 80 வயதிலும் இலாபத்தை நோக்காமல் பலரின் பசியாற்றியவர். அவர் தேவையை ஆட்சியர் கேட்டாலும் எதுவும் வேண்டாம் என்பார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

ஆட்சியர் அவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடும், அரசு அவரை கௌரவித்தும் வருகிறது. ஒரு ரூபாய் இட்லியால் ஓராயிரம் கோடி மக்களால் போற்றப்படுபவர்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே... - 1
Answer:

மகளிர் நாள் விழா

எம்பள்ளிக் கலையரங்கில் 08.03.2020 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவினைப் பற்றிய அறிக்கையாவது.

விழா நாள் : 08.03.2020
இடம் : பள்ளிக் கலையரங்கம்.

எம் பள்ளி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சரியாக மாலை 3.30 மணி அளவில் விழா நிகழ்விடமான பள்ளிக் கலையரங்கிற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்வுடன் வந்து அமர்ந்தனர். சரியாக 4.00 மணிக்கு சிறப்பு விருந்தினர் இதழாளர் கலையரசி வருகை புரிந்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்வுடன் ஆரவாரம் செய்து கைதட்டி சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

தலைமையாசிரியரின் வரவேற்பு:
இதழியல் துறையில் பட்டம் பெற்று, பட்டப்படிப்புடன் அச்சுத்துறையில் முதுகலையும் பயின்று, நாளிதழ் வார இதழ் படிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இதழாளர் திருமதி. கலையரசி அவர்கள் தான் பணிபுரியும் இதழில் செய்திகளை வெளியிடுவது, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை எழுதுவது, குழந்தைகளுக்கான பகுதிகளை வடிவமைப்பது. கேலிச்சித்திரம் வாயிலாக சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இதழியல் துறையில் பன்முகத் திறமை பெற்றவர். அவரை இவ்விழாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதழாளரின் சிறப்புரை:
‘காரிருள் அகத்தில் கதிரொளி பாய்ச்சுவதும், துயில்பவர்கள் நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்துவதும் இதழ்களே என்றால் மிகையில்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்களால் இயலும் என்பதை மகாகவி நமக்கு ஒரு ஊக்க சக்தியாக தந்து சென்றிருக்கிறார். பெண்களே உங்களுக்கு முழுமையான கல்வி கட்டாயம் தேவை. எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கல்வியை விட்டுக் கொடுக்காதீர்கள். கல்வியில்லா பெண் களர் நிலம்’ என்றார் புரட்சிக்கவி. நாம் களர்நிலமாக பயனற்றுப் போக பிறக்கவில்லை . ஞானச் செருக்கும் உடையவர்களாய், புதிய உலகம் படைக்கும் வலிமை பொருந்தியவர்களாய்ப் பிறந்திருக்கிறோம். எனவே நன்கு படியுங்கள்; புதிய சமுதாயம் படையுங்கள்; புதுமைப் பெண்ணின் மகிழ்வு கண்டு இம்மண்ணுலகம் வியக்கட்டும் என்று சிறப்புரையாற்றினார்.

நன்றியுரை:
நிறைவாக பள்ளியின் மாணவத் தலைவர் ‘மோகனா’ நன்றி கூறினார். அழைப்பிற்கிணங்கி வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கும், அவரை அழைத்து வந்து விழாவினை ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும், உடன் ஒத்துழைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும், அமைதி காத்த மாணவ நண்பர்களுக்கும் நன்றி கூறினாள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாத இணையைத் தேர்க.
அ) பாலசரஸ்வதி – மீரா
ஆ) எம்.எஸ். சுப்புலட்சுமி – மகசேசே
இ) ராஜம் கிருஷ்ணன் – வேருக்கு நீர்
ஈ) சின்னப்பிள்ளை களஞ்சியம்
Answer:
அ) பாலசரஸ்வதி – மீரா

Question 2.
1954-ல் தாமரையணி விருது பெற்றவர் ………………………..
அ) சின்னப்பிள்ளை
ஆ) பாலசரசுவதி
இ) எம்.எஸ். சுப்புலட்சுமி
ஈ) ராஜம் கிருஷ்ணன்
Answer:
இ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 3.
எம்.எஸ். சுப்புலட்சுமியைத் தொட்டுத் தடவிப் பாராட்டியவர் ………………………..
அ) சரோஜினி நாயுடு
ஆ) கமலாநேரு
இ) ஹெலன் கெல்லர்
ஈ) மீரா
Answer:
இ) ஹெலன் கெல்லர்

Question 4.
வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு ………………………..
அ) 1966
ஆ) 1963
இ) 1971
ஈ) 1976
Answer:
அ) 1966

Question 5.
இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது ………………………..
அ) நோபல் பரிசு
ஆ) தாமரை விருது
இ) மகசேசே விருது
ஈ) இந்தியமாமணி விருது
Answer:
இ) மகசேசே விருது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 6.
பொருத்துக. பெண்கள்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே... - 2
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 7.
கிருஷ்ணம்மாளுக்கு ‘வாழ்வுரிமை விருது’ வழங்கிய நாடு ………………………..
அ) சுவிட்சர்லாந்து
ஆ) சுவீடன்
இ) தாய்லாந்து
ஈ) மலேசியா
Answer:
ஆ) சுவீடன்

Question 8.
படுகர் இனமக்களின் வாழ்வியல் மாற்றத்தைப் பேசும் புதினம் ………………………..
அ) கரிப்புமணிகள்
ஆ) வேருக்குநீர்
இ) சேற்று மனிதர்கள்
ஈ) குறிஞ்சித்தேன்
Answer:
ஈ) குறிஞ்சித்தேன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 9.
‘பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர் ………………………..
அ) சின்னப்பிள்ளை
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) ராஜம் கிருஷ்ண ன்
ஈ) பாலசரசுவதி
Answer:
ஆ) கிருஷ்ணம்மாள்

Question 10.
சமூக அவலங்களை உற்று நோக்கி எழுத்தின் வழியாக உலகுக்குக் காட்டியவர் ……………….
அ) ராஜம்கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) பாலசரசுவதி
ஈ) எம்.எஸ்.சுப்புலட்சமி
Answer:
அ) ராஜம்கிருஷ்ணன்

Question 11.
‘களஞ்சியம்’ மகளிர் குழு முதன் முதலில் ஆரம்பித்தவர்……………….
அ) சின்னப்பாப்பா
ஆ) சின்னத்துரை
இ) சின்னப்பிள்ளை
ஈ) சரசுவதி
Answer:
இ) சின்னப்பிள்ளை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 12.
‘உழுபவருக்கே நில உரிமை இயக்கம்’ தொடங்கியவர் …………………
அ) ராஜம்கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) பாலசரசுவதி
ஈ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
Answer:
ஆ) கிருஷ்ணம்மாள்

Question 13.
எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பிரபலப்படுத்திய பாடல் அ) சுப்ரபாதம்………………………
ஆ) காற்றினிலே வரும் கீதம்
இ) இரகுபதி ராகவராஜாராம்
ஈ) மீரா பற்றிய பாடல்
Answer:
ஆ) காற்றினிலே வரும் கீதம்

Question 14.
பாலசரசுவதியின் நாட்டியக் கச்சேரியைப் புகழ்ந்தவர் ……………………
அ) பண்டிட் நேரு
ஆ) காந்தி
இ) பண்டிட் இரவிசங்கர்
ஈ) இயக்குநர் இரவிக்குமார்
Answer:
இ) பண்டிட் இரவிசங்கர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 15.
‘காந்தி அமைதி விருதை’ கிருஷ்ணம்மாளுக்கு வழங்கிய நாடு ………………….
அ) இந்தியா
ஆ) சுவிட்சர்லாந்து
இ) சிங்கப்பூர்
ஈ) சுவீடன்
Answer:
ஆ) சுவிட்சர்லாந்து

குறுவினா

Question 1.
எம்.எஸ் சுப்புலட்சுமியின் இசையைப் பாராட்டியோர் யாவர்?
Answer:

  • ஜவஹர்லால் நேரு
  • சரோஜினி நாயுடு
  • காந்தியடிகள்
  • ஹெலன் கெல்லர் – ஆவர்

Question 2.
ராஜம்கிருஷ்ணனின் புகழ்பெற்ற சமூக நாவல்களைப் பட்டியலிடுக.
Answer:

  • கரிப்பு மணிகள்
  • குறிஞ்சித்தேன்
  • அலைவாய்க் கரையில்
  • சேற்றில் மனிதர்கள்
  • வேருக்கு நீர் – ஆகியவையாகும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 3.
எம்.எஸ். சுப்புலட்சுமி தன் இசைத்திறனை எம்மொழிகளிலெல்லாம் வெளிப்படுத்தினார்?
Answer:
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.

Question 4.
கிருஷ்ணம்மாள் களப்பணிபுரிந்த இயக்கங்கள் யாவை?
Answer:

  • ஒத்துழையாமை இயக்கம்
  • சட்டமறுப்பு இயக்கம்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • பூதான இயக்கம்
  • உழுபவருக்கே நில உரிமை இயக்கம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

Question 5.
களஞ்சியம் மகளிர் குழு மூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?
Answer:

  • விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
  • கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
  • அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
  • கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
  • வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 6.
மகளிர் குழுமூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?
Answer:

  • விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
  • கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
  • அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
  • கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
  • வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 ஒன்றே குலம்

Students can Download 8th Tamil Chapter 8.1 ஒன்றே குலம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.1 ஒன்றே குலம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 ஒன்றே குலம்

Question 1.
பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.
Answer:
1. வள்ளலார்
2. புத்தர்
3. விவேகானந்தர்
4. அன்னை தெரசா
5. திரு.வி.க.
6. பண்டித ரமாபாய்
7. நாராயண குரு
8. ரமணமகரிஷி
9. குருநானக்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ……………… க் கண்டு அஞ்சமாட்டார்கள்.
அ) புலனை
ஆ) அறனை
இ) நமனை
ஈ) பலனை
Answer:
இ) நமனை

Question 2.
ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
அ) குலம்
ஆ) குளம்
இ) குணம்
ஈ) குடம்
Answer:
அ) குலம்

Question 3.
‘நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) நம் + இல்லை
ஆ) நமது + இல்லை
இ) நமன் + நில்லை
ஈ) நமன் + இல்லை
Answer:
ஈ) நமன் + இல்லை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 ஒன்றே குலம்

Question 4.
நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) நம்பரங்கு
ஆ) நம்மார்க்கு
இ) நம்பர்க்கங்கு
ஈ) நம்பங்கு
Answer:
இ) நம்பர்க்கங்கு

குறுவினா

Question 1.
யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?
Answer:
மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை .

Question 2.
மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?
Answer:
உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின், “மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர், “உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே” என்ற இக்கருத்துகளை மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைவிட வேறு நல்வழி இல்லை என்று நினைத்து ஈடேற வேண்டும்.

சிறுவினா

Question 1.
மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?
Answer:
மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவன :
படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

சிந்தனை வினா

Question 1.
அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?
Answer:
அன்றாட வாழ்வில் நாம் பிறருக்குச் செய்யும் உதவிகள் :
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறருக்கு உதவி செய்யும் போது பயனை எதிர்பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். நாம் வெளியில் செல்லும் போது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது தேவையா என்று கேட்டு அவர்களின் தேவையை நிறைவேற்றலாம்.

வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அவர்கள் கூறும் சிறு வேலைகளைச் செய்து அவர்களின் வேலைச் சுமையைக் குறைக்கலாம். பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்பேடு, எழுதுகோல் போன்றவை தேவையேற்படின் கொடுத்து உதவலாம். பள்ளிக் கட்டணம் கட்ட இயலாத மாணவர்கள் இருந்தால் பெற்றோரிடம் கேட்டு பணம் கட்டலாம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 ஒன்றே குலம்

படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்யலாம். சாலைகளில் நடந்து செல்லும்போது, மாற்றுத் திறனாளிகளைக் கண்டால், அவர்களுக்கு உதவலாம். இவ்வாறு நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றலாம்.

கூடுதல் வினாக்கள்

நீரப்புக :

1. மனிதர்களிடையே பிறப்பால் ………………… பாராட்டுவது தவறானது.
2. திருமந்திரத்தை இயற்றியவர் ……………….
3. திருமந்திரம் …………………. என்றும் அழைக்கப்படும்.
4. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ………………..
5. நமன் என்னும் சொல்லின் பொருள் …………….
6. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் ………………….. சேரும்.
Answer:
1. உயர்வுதாழ்வு
2. திருமூலர்
3. தமிழ் மூவாயிரம்
4. திருமந்திரம்
5. எமன்
6. இறைவனுக்குச்

விடையளி :

Question 1.
திருமூலர் குறிப்பு எழுதுக.
Answer:
(i) திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்.
(ii) இவர் திருமந்திரத்தை இயற்றியுள்ளார்.

Question 2.
திருமந்திரம் – நூல் குறிப்பு எழுதுக.
Answer:
(i) திருமந்திரம் நூலை இயற்றியவர் திருமூலர்.
(ii) இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. எனவே, தமிழ் மூவாயிரம் எனப்படுகிறது.
(iii) இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 ஒன்றே குலம்

பாடல்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. – திருமூலர்

சொல்லும் பொருளும்

1. நமன் – எமன்
2. சித்தம் – உள்ள ம்
3. நம்பர் – அடியார்
4. படமாடக் கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
5. நாணாமே – கூசாமல்
6. உய்ம்மின் – ஈடேறுங்கள்
7. ஈயில் – வழங்கினால்

பாடலின் பொருள்
மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

நூற்குறிப்பு
திருமந்திரம் என்ற நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர். இது பன்னிரு திருமறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

ஆசிரியர் குறிப்பு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 ஒன்றே குலம் 1
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் A சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

Students can Download 8th Tamil Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கோடிட்டு அறிக. அவற்றின் காரணங்களை எழுதுக.
Answer:
வல்லினம் மிகும் இடம் :
(i) தாக்குதலைக் கண்ட – இரண்டாம் வேற்றுமை விரி
(ii) தாவிக்குதித்து – வினையெச்சம்
(iii) இந்தத் திட்டம் – “இந்த” சுட்டுத் திரிபு
(iv) கலிங்கப்படையினர் – கலிங்கம் + படை : மகரமெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்துள்ளது.
(v) இறப்புக்குப்பின் – நான்காம் வேற்றுமை விரி

வல்லினம் மிகா இடம் :
(i) சிறுசிறு – அடுக்குத்தொடர்
(ii) காமராசர் காலத்தில் – எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
(iii) நடித்த கதைமாந்தர் – பெயரெச்சத் தொடர்
(iv) பாடம் படிக்கின்றனர் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
(v) இரண்டு சிறுவர்கள் – எண்ணுப் பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் தவிர பிற எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
(vi) துணைவியாரது காலணி – ஆறாம் வேற்றுமைத் தொடர்

மதிப்பீடு

பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

1. சுட்டுத் திரிபு – மிகும்
2. திசைப் பெயர்கள் – மிகும்
3. பெயரெச்சம் – மிகாது
4. உவமைத் தொகை – மிகும்
5. நான்காம் வேற்றுமை விரி – மிகும்
6. இரண்டாம் வேற்றுமை தொகை – மிகாது
7. வினைத்தொகை – மிகாது
8. உருவகம் – மிகும்
9. எழுவாய்த் தொடர் – மிகாது
10. எதிர்மறைப் பெயரெச்சம் – மிகாது

சிறுவினா

Question 1.
சந்திப்பிழை என்றால் என்ன?
Answer:
வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுவதுவதும் மிகக்கூடாத இடத்தில் வல்லின மெய்இட்டு எழுதுவதும் தவறாகும். இது சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை எனப்படும்.

Question 2.
வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.
Answer:
வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்கள் :
(i) இரண்டாம் வேற்றுமை உருபாதிய வெளிப்படையாக வருடத்தில் வல்லினம் மிகும்
எ.கா. தலையைக் காட்டு.

(ii) நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
எ.கா. எனக்குத் தெரியும்.

Question 3.
வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.
Answer:
வல்லினம் மிகாத் தொடர்கள் :
(i) எழுவாய்த் தொடர் – தம்பி படித்தான்
(ii) பெயரெச்சம் – எழுதிய பாடல்
(iii) எதிர்மறைப் பெயரெச்சம் – எழுதாத பாடல்
(iv) வினைத் தொகை – சுடுசோறு
(v) உம்மைத் தொகை – தாய்தந்தை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
நாட்டுப்பற்றை வளர்க்கும் நாடகங்களின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே நாட்டுப்பற்றை வளர்க்கும் நாடகங்களை ஒலிப்பதிவுகளை கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
நான் விரும்பும் தலைவர்.
Answer:
நான் விரும்பும் தலைவர் – வ.உ.சி

அவையோர்க்கு வணக்கம் ! நான் விரும்பிய தலைவரான வ.உ.சிதம்பரனாரைப் பற்றிப் பேச வந்துள்ளேன்.

சுதந்திரப் போருக்கு மகாத்மா காந்தி தலைமை ஏற்பதற்கு முன்பே, சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர் ‘கப்பலோட்டிய தமிழன்” வ. உ. சிதம்பரம் பிள்ளை . பாலகங்காதர திலகரைத் தன் குருவாக ஏற்றவர்.

வெள்ளையர்களின் கடல் வாணிகத்தை ஒடுக்குவதற்காகவே சுதேசி கப்பலை ஓட்டியவர். அதற்காக அவர் செய்தவை ஏராளம். வெள்ளையர்களுக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்க அவர் விரும்பினார். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” என்ற பெயரில் கப்பல் கம்பெனி தொடங்கப் பதிவு செய்தார்.

பத்து லட்சம் ரூபாயைத் திரட்டினார். வடநாட்டுக்குச் சென்று, காங்கிரசு தலைவர்களின் உதவியுடன் “காலியா”, “லாவோ” என்ற பெயர்களுடைய கப்பல்களை வாங்கிக் கொண்டு வெற்றிகரமாகத் தமிழகம் திரும்பினார். இவருடைய கப்பல் கம்பெனிக்குப் பொதுமக்கள் ஆதரவு அளித்தனர். இதனால் வெள்ளையர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இதனால் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியதாகவும், அரசுக்கு எதிரியான சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் சிதம்பரனார் மீது வழக்குத் தொடரப்பட்டது. அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காக ஓர் ஆயுள் தண்டனையும் சுப்பிரமணிய சிவாவிற்கு அடைக்கலம் தந்ததற்காக இன்னொரு ஆயுள் தண்டனையும்  ஆண்டுகள்) விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த அப்பீலை விசாரித்து, இரட்டை ஆயுள் தண்டனையை 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தது.

கோவை, கண்ணனூர் சிறைகளில் தமது தண்டனைக் காலத்தைச் சிதம்பரனார் கழித்தார். சிறையில் செக்கிழுத்தார், கல்லுடைத்தார். 1912 டிசம்பர் மாத இறுதியில் சிதம்பரனார் விடுதலையானார்.

விடுதலையான பிறகும் வ.உ.சி பல துன்பங்களை அனுபவித்தார். அவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்த போதிலும் அதை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்துவிட்டதால், அவர் எண்ணெய் வியாபாரம் செய்தார். மளிகைக் கடை நடத்தினார். தம் தாய்த்திருநாட்டிற்குப் பல தியாகங்களைச் செய்து வாழ்ந்தவர் என்பதால் இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி!

Question 2.
நான் முதலமைச்சர் ஆனால்…
Answer:
நான் முதலமைச்சரானால் நம் தமிழ்நாட்டிற்குப் பல நன்மைகள் செய்வேன். நான் முதலில் கல்வியில் சீர்திருத்தம் செய்வேன். அழியாத சொத்து கல்வி. கல்வி எவராலும் எப்போதும் அழிக்க முடியாத சொத்து. அதுமட்டுமன்று. ஒரு நாட்டில் அனைத்தையும் ஆக்கும் வல்லமை கல்விக்கு மட்டும்தான் உண்டு.

கல்வித்துறையினர் நினைத்தால் உயர்ந்த அறிவும், ஆற்றலும், பெருமையும், பொருள் வளமும் உள்ள மக்களை உருவாக்க முடியும். ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டில் கல்வித்துறை எவ்வளவு வளர்ச்சியடைந்தது என்பதைப் பொருத்துத்தான் உள்ளது. நாடு கல்வியால் உயர்ந்தால் வல்லரசு நாடாக மாறும்.

அதனால் என் முதல் பணியே கல்வியை மேம்படுத்துவதுதான். கல்வி கேள்வியில் சிறந்த சான்றோர்களின் ஆலோசனையின்படி பல புதிய சீர்திருத்தம் மேற்கொள்வேன். கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்கும் வண்ணம் சட்டங்கள் இயற்றுவேன்.

அடுத்ததாகப் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு நான் முனைந்து பாடுபடுவேன். அதற்கு உற்பத்திப் பெருக்கம் செய்து பொருள்களை ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியைப் பெருமளவில் ஈட்டுவேன்.

வேளாண்மையில் புதுமைகள் செய்வேன். பலவிதமான உதவிகளை உழவர்களுக்குச் செய்து, அவர்கள் நன்முறையில் வேளாண் தொழிலை வளர்ப்பதற்கு வழி செய்வேன். நவீன முறை விவசாயமான வேதியுரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையான அங்க வேளாண்மையை செய்யும்படி வலியுறுத்துவேன்.

ஏரி குளங்களைத் தூர்வாரி நீர்நிலைகளை வளப்படுத்துவேன். அணைகள் தேவையெனில் அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதியைப் பெருக்குவேன். விலைவாசிகள் ஏறாதபடி பார்த்துக்கொள்வேன்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

சமுதாயத்தின் சீர்கேடுகளை குலைக்கும் எத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தமாட்டேன். அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவேன். அரசு வேலை அல்லது அரசு சார்ந்த வேலை இவற்றின் மூலம் தகுதி வாய்ந்த இளைஞர்களை பணியில் அமர்த்துவேன். மக்கள் செல்வச் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ என்னென்ன செய்ய இயலுமோ அவற்றைக் கட்டாயம் செய்வேன். என்னுடைய தலைமையின் கீழ் உள்ள மக்கள் அச்சமின்றி வாழவும் வழி செய்வேன். நன்றி!

சொல்லக் கேட்டு எழுதுக

அனைவருக்கும் தலைவராகும் விருப்பம் இருக்கலாம். ஆனால் சிறந்த ஆளுமைப் பண்பும் அனைவரையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பவர்களால்தான் தலைவர்கள் ஆக முடிகிறது. எடுத்துக்காட்டாகப் பின்வரும் நிகழ்வுகளைக் காணலாம். ஒரு விளையாட்டு அணியின் தலைவருக்கான தேர்வு நடந்தது.

அணியின் பயிற்சியாளர் வீரர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொண்டார். சிலர் தங்களைத் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் என அறிமுகப்படுத்திக் கொள்ள, ஒருவர் மட்டும் தன்னை ‘இந்தியர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அவர்தான் அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காரணம் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியதும். ‘இந்தியர்’ என்று குழுவாகச் சிந்தித்ததுமே ஆகும். இப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால் நீங்களும் தலைவர் ஆகலாம்.

அறிந்து பயன்படுத்துவோம்

எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் 1

பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

Question 1.
அதைச் செய்தது நான் அன்று.
Answer:
அதைச் செய்தது நான் அல்லேன்.

Question 2.
பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
Answer:
பானையை உடைத்தது கண்ணன் அல்லன்.

Question 3.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
Answer:
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்ற.

Question 4.
சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
Answer:
சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

Question 5.
பகைவர் நீவீர் அல்லர்.
Answer:
பகைவர் நீவீர் அல்லீர்.

சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.

1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை …………….
2. உங்களோடு வருவோர் ……………. அல்லோம்.
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் …………….
4. மொய்த்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ……………
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் …………. அல்லை.
Answer:
1. அல்ல
2. நாம்
3. அல்லள்
4. அன்ற
5. நீ

கட்டுரை எழுதுக.

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

முன்னுரை :
‘விதைத்ததே விளையும்’ என்பது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழியாகும். ஒரு மனிதன் தன் இளமைப் பருவத்தில் கற்றுக் கொள்பவைகளைப் பின்பற்றியே வாழ்கிறான். ஆதலால் இப்பருவத்தில் தொண்டு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாற்றங்களின் விதை :
‘இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இவை மாற்றங்களுக்கு வித்திடுகிறது.

தொண்டு :
இளைஞர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.

இளைஞர்களின் பங்கு :
வறுமை, கல்வியின்மை , அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சமுதாயம் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் ஓர் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் இச்சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான செயல்களைச் செய்ய வேண்டும்.

பிற பணிகள் :
புயல் வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவினரோடு சேர்ந்து ஐம்பது சதவீதம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது போதாது. அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும். காலரா, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

முடிவுரை :
மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டவுடன் உதவி புரியும் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களாலேயே நாடு வளம் பெறும் நலம் பெறும், என்பதை உணர்வோமாக.

மொழியோடு விளையாடு

வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் 2

கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.

1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
3. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
4. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
Answer:
1. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
3. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
4. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
5. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
6. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள் …

1. தலைமைக்குரிய பண்புகளை அறிந்து வளர்த்துக் கொள்வேன்.
2. சமூக மாற்றத்திற்குக் காரணமான தலைவர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. குதிரையேற்றம் – Equestrian
2. கதாநாயகன் – The Hero
3. முதலமைச்சர் – Chief Minister
4. தலைமைப்பண்பு – Leadership
5. ஆதரவு – Support
6. வரி – Tax
7. வெற்றி – Victory
8. சட்டமன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly

கூடுதல் வினாக்கள்

நிரப்புக .

1. எண்ணுப்பெயர்களில் ………………… ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
2. வடக்கு + தெரு சேர்த்து எழுதக் கிடைப்பது ……………..
3. சுட்டுத்திரிபு வினாத்திரியை அடுத்து வல்லினம் ……………..
4. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடா குற்றியலுகரமாகவோ, ………………….. குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது.
Answer:
1. எட்டு, பத்து
2. வடக்குத்தெரு
3. மிகும்
4. இடைத்தொடர்க்

விடையளி :

Question 1.
வல்லினம் மிகும் இடங்களுக்குச் சில சான்றுகள் தருக.
Answer:
(i) சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
எ.கா: அந்தப்பக்கம்

(ii) வினாத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
எ.கா: எந்தச்சட்டை ?

(iii) இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை வெளிப்படையாக வரும் இடங்களில் வல்லினம் மிகும்.
எ.கா: பாடத்தைப்படி (ஐ) ; அவனுக்கு பிடிக்கும் ,

Question 2.
வல்லினம் மிகா இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக
Answer:
(i) எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
சான்று: தம்பி படித்தான்.

(ii) வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
சான்று: சுடு சோறு.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

Question 3.
மண்வெட்டி கொண்டு வா.
Answer:
மண்வெட்டிக் கொண்டு வா – இத்தொடர்களின் பொருள் எழுதுக.
(i) மண்வெட்டி கொண்டு வா – மண்வெட்டியை எடுத்து வா.
(ii) மண்வெட்டிக் கொண்டு வா – மண்ணை வெட்டி எடுத்து வா.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Students can Download 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.4 சிலப்பதிகாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 1.
சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தை அறிந்துவந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
பதினாறு வயதுடைய கோவலனுக்கும், பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் இனிதே வாழ்கின்றனர்.

கோவலன் கலைகளின் காதலன். ஆடல் பாடல்களில் விருப்பம் கொண்டவன். யாழ் மீட்டுவதில் வல்லவன். ஒரு நாள் ஆடல் அரசி அழகுப்பாவை மாதவியின் ஆடலில் மயங்குகிறான்.

மாதவியின் பசிய மாலையை யார் வாங்குகிறார்களோ அவர்கள் மாதவியை அடையலாம் என்று அவள் இல்லத்தில் ஒருத்தி கடைத்தெருவுக்கு வந்து கூறுகிறாள்.

கோவலன் மாலையை வாங்கி மாதவியை அடைகிறான். மாதவியோடு வாழ்கின்ற காலத்தில் அவன் செல்வம் எல்லாம் கரைகிறது.

மனம் வேறுபட்டு கண்ணகியை வந்தடைகிறான். இழந்தப் பொருளை மீட்டு மதுரைக்குச் சென்று ஆயர்குலப் பெண் மாதரியின் வீட்டில் தங்குகிறான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பொருள் ஈட்டுவதற்காக கண்ணகியின் காற்சிலம்பை எடுத்துக்கொண்டு மதுரை வீதிக்குச் செல்கிறான். பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அப்பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடியவன் அதை மறைக்க சமயம் கிடைத்ததை எண்ணி அரண்மனைச் சென்று மன்னனிடம் கோவலன் மீது பழி சுமத்துகிறான். மன்னனின் ஆணையால் கோவலன் கொலை செய்யப்படுகிறான்.

இதைக்கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரசபைக்குச் சென்று வழக்குரைக்கிறாள். உண்மை அறிந்த அரசனும் அரசியும் உயிர் துறக்கிறார்கள். மதுரையும் தீக்கிரையாகிறது.

பின் சேரநாட்டை அடைந்து வேங்கை மர நிழலில் தங்குகிறாள். பிறகு வானுலகோர் சூழ கோவலன் கண்ணகியை அழைத்துச் சென்றதைக் குன்றக் குறவர்கள் கூறுகிறார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

செங்குட்டுவன் இமயம் வென்று, கல்லெடுத்து கங்கையில் நீராட்டி வஞ்சியில் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான்.

இக்கதையின் மூலம் நாம் அறியும் மூன்று உண்மைகள்:

  1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
  2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

Question 2.
சிலப்பதிகாரம் காட்டும் மருவூர்ப்பாக்கம் பற்றிய விவரிப்பை இன்றைய கடைத் தெருவுடன் ஒப்பிட்டு உரையாடுக.
Answer:

உரையாடல்

மாணவர்களே! மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் பற்றிக் கற்றோம் அல்லவா! அதை மனதில் கொண்டு இன்றைய கடை வீதிகளோடு ஒப்பிட்டு உரையாடலாமா? சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை ஒளிப்படங்களாகச் சேகரித்து. வரலாற்றுக் குறிப்பேடாக வைத்துக் கொள்ளுங்கள்.

உரையாடுபவர்கள்: மதன், சுதன், உமா.

மதன் : சுதன், உமா எப்படி இருக்கிறீர்?
இருவரும் : நன்றாக இருக்கிறோம்!
மதன் : இருவரும் விடுமுறைக்கு எங்காவது சென்றீர்களா?
உமா : நான் சென்னை சென்றேன் மதன்.
சுதன் : நான் மதுரைக்குப் போனேன்.
மதன் : நானும் திருச்சிக்குச் சென்று இருந்தேன்.
சுதன் : நான் மதுரைக்குப் போனபோது அங்கு ‘மால்’ என்று சொல்லப்படும் வணிக வளாகத்துக்குச் சென்றேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

உமா : சென்னையிலும் பெரிய பெரிய வணிக வளாகங்கள் அதிகமாக உள்ளன.
மதன் : நானும் தான் சென்றேன். அவற்றையெல்லாம் பார்க்கும் போது ஏனோ! என் மனதில் நாம் பாடத்தில் பயின்று தெரிந்து கொண்ட மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளின் காட்சி என் மனதில் வந்து போனது.
சுதன் : ஆமாடா…….. வணிக வீதிகளில் எல்லாப் பொருள்களும் கிடைத்தது போல் இங்கும் கிடைக்கிறது.
உமா : மருவூர்ப்பாக்க வீதியை விட இங்கு ஆரவாரமும், அலங்காரமும் அதிகமாக உள்ளது.

மதன் : அங்கு உற்பத்தியாளரே பொருளைக் கொண்டு வந்து விற்பார். இங்கு முதலீட்டாளர்கள் இடைத்தரகர் மூலம் வாங்கி வந்து விற்பனையாளரை வைத்து விற்கின்றனர்.
சுதன் : அந்தக் காலத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் நியாயமான விலை, பண்டமாற்று முறை இருந்தது.

உமா : தானியங்கள் குவித்து வைத்து அளந்து கொடுத்தனர். ஆனால். இந்த வளாகங்களிலும், அங்காடிகளிலும் வண்ணக் காகிதங்களில் ஏற்கனவே கட்டிவைத்து அடுக்கி வைத்துள்ளார்கள். நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மதன் : மூன்று ஊர்களிலும் பொதுவான முறையில் ஒரு விற்பனை முறை இருந்ததை யாரும் உணர்ந்தீர்களா……
சுதன் : பொதுவான விற்பனை முறையா…… என்னடா அது?
உமா : எனக்குத் தெரிந்து விட்டது. நடைபாதை கடைகளைத்தானே சொல்கிறாய்.

மதன் : ஆமா உமா…. ஒவ்வொரு கடைத்தெருவிலும் கண்ணைக் கவரும் பலமாடிக் கட்டிடங்கள், அலங்கார விளக்குகள் அமைத்து பல் பொருள் அங்காடிகள் இருப்பினும் அதே பொருள்களை நடைபாதைகளில் வைத்து சிறுகுறு வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருளை விற்றல் ஆகிய காட்சிகளையும் காண முடிந்தது தானே……

இருவரும் : ஆம் மதன்! நடைபாதைக் கடைகளிலும் தரமான பொருள் கிடைக்கும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.
மூவரும் : ஒருவருக்கொருவர் …… நேரமாகிவிட்டது போய் வரலாமா….. என்று விடைபெற்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
Answer:

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
  • பல்நிணவிலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

சிறுவினா

Question 1.
பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்;
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

அ) இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
Answer:
சிலப்பதிகாரம்

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
Answer:
கர்வனர், ட்டினும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
Answer:
ட்டினும் மயிரினும், கட்டு நுண்வினை

ஈ) காருகர் – பொருள் தருக.
Answer:
நெய்பவர் (நெசவாளர்)

உ) இப்பாடலடியில் காணப்படும் நறுமணப் பொருட்கள் யாவை?
Answer:
சந்தனமும் அகிலும்.

நெடுவினா

Question 1.
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
Answer:

  • • மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப் பொடி விற்பது போல் இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
  • குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப்பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன. விற்கப்படுகின்றன.
  • • பொன், மணி, முத்து, பவளம் ஆகியவை மருவூர்ப்பாக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம்’ விற்கப்படுகிறது.
  • வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்தது தானிய வகைகள்.
  • இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடைபோட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
  • மருவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள். இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.

மருவூர்ப்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தினவேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பலதிறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.

அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

இலக்கணக்குறிப்பு

வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
பயில்தொழில் – வினைத்தொகை
நுண்வினை, அரும்பௌல் – பண்புத்தொகை
பகருநர் – வினையாலணையும் பெயர்
செறிந்த – பெயரெச்சம்
நன்கலம், வெறுக்கை – பண்புத்தொகை
குழலினும் யாழினும் – எண்ணும்மை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

பகுபத உறுப்பிலக்கணம்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம் - 1

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் …………………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
Answer:
அ) சிலப்பதிகாரம்

Question 2.
சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் ……………………
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) மூன்று
ஈ) ஒன்பது
Answer:
இ) மூன்று

Question 3.
சிலப்பதிகாரத்தின் காதைகள் ………………………..
அ) 30
ஆ) 27
இ) 33
ஈ) 36
Answer:
அ) 30

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 4.
‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் ……………………..
அ) கம்பர்
ஆ) கபிலர்
இ) திருத்தக்கதேவர்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
Answer:
ஈ) சீத்தலைச்சாத்தனார்

Question 5.
சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ……………….
அ) மணிமேகலை
ஆ) சூளாமணி
இ) வளையாபதி
ஈ) நீலகேசி
Answer:
அ) மணிமேகலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 6.
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
அ) பாரதியார்
ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள்
ஈ) உமறுப்புலவர்
Answer:
இ) இளங்கோவடிகள்

Question 7.
மணிமேகலையின் ஆசிரியர் …………………..
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கதேவர்
ஈ) புத்தமித்திரர்
Answer:
ஆ) சீத்தலைச்சாத்தனார்

Question 8.
இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….
அ) புகார்க்காண்டம்
ஆ) மதுரைக்காண்டம்
இ) வஞ்சிக்காண்டம்
ஈ) பாலகாண்டம்
Answer:
அ) புகார்க்காண்டம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 9.
சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………
அ) பாகம்
ஆ) அங்கம்
இ) காண்டம்
ஈ) காதை
Answer:
இ) காண்டம்

Question 10.
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு …………….
அ) படலம்
ஆ) சருக்கம்
இ) காதை
ஈ) காட்சி
Answer:
இ) காதை

Question 11.
சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை……………..
அ) உரைப்பாட்டு மடை
ஆ) உரைநடை
இ) வசனநடை
ஈ) செய்யுள் நடை
Answer:
அ) உரைப்பாட்டு மடை

Question 12.
பேசும் மொழியின் ஓட்டம் என்பது ………………….
அ) மொழி
ஆ) உரை
இ) காதை
ஈ) காட்சி
Answer:
ஈ) காட்சி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 13.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்……………………. ஆகும்.
அ) இணைகாப்பியம்
ஆ) முதற்காப்பியம்
இ) பினைகாப்பியம்
ஈ) இரட்டைக்காப்பியம்
Answer:
ஈ) இரட்டைக்காப்பியம்

Question 14.
கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர்……………………..
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) திருவரங்கம்
இ) உறையூர்
ஈ) கொடும்பாளூர்
Answer:
ஈ) கொடும்பாளூர்

Question 15.
இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
அ) சேர

Question 16.
அழகர் மலை என்பது …………………..
அ) திருவரங்கம்
ஆ) திருமால்குன்றம்
இ) வேலவன் குன்றம்
ஈ) மால்குன்றம்
Answer:
ஆ) திருமால்குன்றம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 17.
கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் ………………….
அ) கவுந்தியடிகள்
ஆ) மாதரி
இ) மாதவி
ஈ) ஆயர்குலப்பெண்
Answer:
அ) கவுந்தியடிகள்

Question 18.
கணவனை இழந்த கண்ணகி சென்று அடைந்த இடம்…………………
அ) வைகைக்கரை
ஆ) வேங்கைக்கானல்
இ) அழகர்மலை
ஈ) உறையூர்
Answer:
ஆ) வேங்கைக்கானல்

Question 19.
பெருங்குணத்துக் காதலாள் யார்?
அ) கண்ணகி
ஆ) மாதவி
இ) மாதரி
ஈ) மணிமேகலை
Answer:
அ) கண்ணகி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 20.
சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) தூசு – 1. செல்வம்
ஆ) துகிர் – 2. பட்டு
இ) வெறுக்கை – 3. விலை
ஈ) நொடை – 4. பவளம்
அ) 3, 1, 4, 2
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ) 2, 4, 1, 3

Question 21.
மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம் ………….. ஆகும்.
அ) புகார்
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) காஞ்சி
Answer:
அ) புகார்

Question 22.
மண்ணீ ட்டாளர் எனக் குறிக்கப் பெறுபவர் ……………………….
அ) ஓவியர்
ஆ) வணிகர்
இ) சிற்பி
ஈ) சாலியர்
Answer:
இ) சிற்பி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 23.
கூவம் குவித்த – இதில் ‘கூவம்’ என்பதன் பொருள் …………………….
அ) தானியம்
ஆ) குப்பை
இ) பழம்
ஈ) தோல்
Answer:
அ) தானியம்

Question 24.
கள் விற்பவர் ……………………….
அ) பரதவர்
ஆ) உமணர்
இ) பாசவர்
ஈ) வலைச்சியர்
Answer:
ஈ) வலைச்சியர்

Question 25.
பொருத்துக.
1. கண்ணுள் வினைஞர் – அ) சிற்பி
2. மண்ணீட்டாளர் – ஆ) ஓவியர்
3. கிழி – இ) தொழில்
4. வினை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 26.
சொல்லும் பொருளும் பொருந்தாத சொல் எது?
அ) சுண்ண ம் – நறுமணப்பொடி
ஆ) காருகர் – நெய்பவர்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் முத்து
Answer:
ஈ) துகிர் – முத்து

Question 27.
சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) சுண்ணம் – நெய்பவர்
ஆ) காருகர் – பவளம்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் நறுமணப்பொடி
Answer:
இ) தூசு – பட்டு

Question 28.
சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) வெறுக்கை – செல்வம்
ஆ) நொடை – எண்ணெய் விற்போர்
இ) பாசவர் – விலை
ஈ) ஓசுநர் – வெற்றிலை விற்போர்
Answer:
அ) வெறுக்கை – செல்வம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 29.
‘பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் ‘காருகர்’ என்பதைச் சுட்டும் சொல் …………..
அ) நெய்பவர்
ஆ) நுண்வினை
இ) சிற்பி
ஈ) ஓவியர்
Answer:
அ) நெய்பவர்

Question 30.
‘அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா’ இவ்வடிகளில் ‘வெறுக்கை’ என்பதைச் சுட்டும் சொல் ……………….
அ) துணி
ஆ) பவளம்
இ) பட்டு
ஈ) செல்வம்
Answer:
ஈ) செல்வம்

Question 31.
‘ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்’ இவ்வடிகளில் ‘ஓசுநர்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) எண்ணெய் விற்போர்
ஆ) வெற்றிலை விற்போர்
இ) சிற்பி
ஈ) துணி விற்போர்
Answer:
அ) எண்ணெய் விற்போர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 32.
‘கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்’ இவ்வடிகளில் ‘மண்ணுள்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) சிற்பி
இ) சாலியர்
ஆ) ஓவியர்
ஈ) செல்வம்
Answer:
ஆ) ஓவியர்

Question 33.
‘வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்’ இவ்வடிகளில் அமைந்த நயம்
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
அ) எதுகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

Question 2.
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள், காதைகள் குறிப்பிடுக.
Answer:
சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் மூன்று, காதைகள் முப்பது ஆகும். அவை:

  • புகார்க்காண்டம் – 10
  • மதுரைக்காண்டம் – 13
  • வஞ்சிக்காண்டம் –

Question 3.
சிலப்பதிகாரத்தின் வேறுபெயர்கள் யாவை?
Answer:
முதல்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக்காப்பியம் – உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 4.
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் விளக்குக.
Answer:

  • உரையிடையிட்ட பாட்டுடை என்பது ‘உரைப்பாட்டு மடை’ என்னும் தமிழ்நடை.
  • இது சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது.
  • உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு என்பது பொருளாகும்.

Question 5.
‘கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்
மரம் கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

இவ்வடி அமைந்த நூல் எது?
Answer:
சிலப்பதிகாரம்.

இவ்வடி அமைந்த காதை எது?
Answer:
இந்திரவிழா ஊரெடுத்த காதை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

கருங்கைக் கொல்லர் எனப்படுபவர் யார்?
Answer:
இரும்புக் கொல்லர்.

இவ்வடியில் அமைந்த தொடை எது?
Answer:
இயைபுத் தொடை – செய்குநரும் கொல்லரும்.

Question 6.
மருவூர்ப்பாக்க வீதியில் இருந்த கைவினைத் தொழில் வல்லுநர்கள் யாவர்?
Answer:
செப்புப் பாத்திரம் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், பொற்கொல்லர், தையற்காரர், தோல் பொருள் தைப்பவர் ஆகியோர்.

Question 7.
இரட்டைக் காப்பியங்கள் யாவை?
Answer:

  • சிலப்பதிகாரமும், மணிமேகலையும், இரட்டைக்காப்பியம் ஆகும்.
  • காலத்தாலும், கதைத் தொடர்பாலும் தொடர்புடையதாய் இருக்கும்.

Question 8.
சிலப்பதிகாரத்தில் மருவூர்ப்பாக்கம் பற்றிய செய்தி இடம் பெறும் காண்டம் மற்றும் காதை யாவை?
Answer:
மதுரைக் காண்டம், இந்திரவிழா ஊரெடுத்த காதை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 9.
‘கூலம் குவித்த கூல வீதியும்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
மருவூர்ப்பாக்கத்தில் எட்டு வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்கள் உள்ளன.

Question 10.
‘குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்வழுவின்றி இசைத்து’ இவ்வடிகளில் சுட்டும் குரல் முதலான ஏழிசைகள் யாவை?
Answer:
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்,

Question 11.
ஏழு சுரங்களைச் சுட்டுக.
Answer:
ஸ, ரி, க, ம, ப, த, நி.

Question 12.
நன்கலம் தருநர் – என்று எவரைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது?
Answer:
இரத்தினம் முதலான அணிகலன்கள் வேலை செய்பவர்.

Question 13.
‘பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் இளங்கோவடிகள் புலப்படுத்தும் கருத்தினை எழுதுக.
Answer:
மருவூர்ப்பாக்கத்தில் பட்டு, பருத்தி நூல், முடி இவற்றைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகளும் உள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Question 14.
‘மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்’ – இவ்வடியில் சிலப்பதிகாரம் சுட்டும் செய்தி யாது?
Answer:

  • மீன்விலைப் பரதவர் – மீன் விற்கும் பரதவர்
  • வெள்உப்புப் பகருநர் – வெண்மையான உப்பு விற்கும் உமணர்

சுட்டும் செய்தி :
மீன்களை விற்பனை செய்யும் நெய்தல் நில பரதவர் மற்றும் வெண்மையான உப்பு விற்கும் உமணர்மருவூர்ப்பாக்கத் தெருக்களில் வணிகம் செய்கின்றனர்.

சிறுவினா

Answer:1.
‘பால்வகை தெரிந்த பகுதிப் பாண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
சிலப்பதிகாரம் புகார்க்காண்டத்தில் இந்திர விழா காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:
மருவூர்ப்பாக்க வணிக வீதியில் நடைபெற்ற வணிகம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

விளக்கம் :
மருவூர்ப்பாக்கத் தெருக்களில் பலப்பல பண்டங்களின் (பொருட்களின்) விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

Question 2.
மருவூர்ப்பாக்கத் தெருக்களில் எவ்வெவ் மணப்பொருட்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்?
Answer:
புகார் நகர மருவூர்ப்பாக்க வணிக வீதிகளில் :
வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப்பொருள்கள், அகில் – முதலான மணப்பொருட்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.4 அறிவுசால் ஔவையார்

Students can Download 8th Tamil Chapter 7.4 அறிவுசால் ஔவையார் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.4 அறிவுசால் ஔவையார்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.4 அறிவுசால் ஔவையார்

Question 1.
அறிவுசால் ஒளவையார் – என்னும் நாடகத்தை வகுப்பில் நடித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய செயல்பாடு.

Question 2.
சங்காலப் பெண் புலவர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
1. ஒளவையார்
2. அள்ளூர் நன்முல்லையார்
3. ஆதிமந்தி
4. ஓக்கூர் மாசாத்தியார்
5. காக்கைப்பாடினியார்
6. நப்பசலையார்
7. காவற்பெண்டு
8. வெள்ளிவீதியார்
9. பொன்முடியார்
10. முடத்தாமக்கண்ணியார்
11. வெண்ணிக்குயத்தியார்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.4 அறிவுசால் ஔவையார்

தெரிந்து தெளிவோம்

(i) சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே. – ஔவையார்

(ii) இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே. – ஔவையார்

மதிப்பீடு

Question 1.
அறிவுசால் ஒளவையார் – என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.
Answer:
அதியமானின் அரண்மனையில் ஒளவையார் நீண்டகாலம் தங்கியிருந்தார். அப்போது தொண்டைமான், அதியமான் இருவருக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்து நிறுத்தியதைப் பற்றி இக்கதையில் காண்போம்.

ஒருநாள் அதியமான் காட்டுவளத்தைக் காணச் சென்றான். திரும்பி வரும்போது அரிய நெல்லிக்கனியைக் கொண்டு வந்து ஒளவையாரிடம் கொடுத்தான். சுவைத்துப் பார்த்த ஒளவையார் இதுவரை இவ்வளவு சுவையுள்ள கனியை தான் சுவைத்ததே இல்லை என்று கூறினார்.

அமைச்சர் “இது அரிய நெல்லிக்கனி , நமது வீரர்களால் பறிக்க இயலவில்லை . நம் மன்னரே மலையுச்சியில் இருந்த மரத்தில் ஏறிப் பறித்தார்” என்று கூறினார். மேலும் “இக்கனியை உண்டவர்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்” என்றும் கூறினார்.

அதனைக் கேட்ட ஒளவையார் வியந்து அதியமானிடம் “நீ உண்ணாமல் எனக்கு ஏன் கொடுத்தாய்?” என்று கேட்டார். அதற்கு அதியமான் “என்னைப் போன்ற அரசன் இறந்து போனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால், அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது” என்று கூறினான். அதியமான் தமிழ் மீது கொண்ட பற்றினைக் கண்டு ஒளவையார் மனமுருகினார்.

மறுநாள் அதியமானின் கவலைகொண்ட முகத்தைக் கண்டு ஒளவையார் காரணம் கேட்டார். அதியமானும் “தொண்டைமான் போர்ச் செய்தி அனுப்பியுள்ளான்” என்று கூறினான். ஔவையார் அதியமானிடம் “எதற்கும் அஞ்சாத நீ போரைக் கண்டு அஞ்சலாமா?” என்று கேட்டார்.

அதியமான் தான் போரைக் கண்டு அஞ்சவில்லை என்றும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அஞ்சுவதாகவும் கூறினான். அதியமானின் உள்ளத்தை அறிந்த ஒளவையார், அதியமானின் ஒப்புதலோடு தொண்டைமானைக் காணச் சென்றார்.

தொண்டைமானின் அரண்மனையில் படைத் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது படைத்தலைவர் “அதியமான் நம் படையின் பெருக்கத்தைக் கண்டு அதிர்ந்துபோய், சமாதானம் வேண்டிப் புலவர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார்” என்று கூறினான்.

தொண்டைமான் ஒளவையாரை வரவேற்றான். போர்க்கருவிகள் நிறைந்த படைக்கலக் கொட்டிலைப் பார்க்க அழைத்துச் சென்றான். அப்படைக் கருவிகளைப் பார்த்து ஒளவையார் “அளவுக்கதிகமான கருவிகள், அழகாக அடுக்கி வைத்திருக்கும் முறை, புத்தம் புதியனவாய் நெய் பூசப்பெற்று மாலையும் மயில் தோகைகளும் அணிவிக்கப்பட்டு அழகாக உள்ளன” என்றார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.4 அறிவுசால் ஔவையார்

மேலும், ‘அதியமான் எப்போதும் போர் புரிந்து கொண்டே இருப்பதால் அவனது படைக்கருவிகள் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன் நுனி ஒடிந்தும் கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்றன” என்று கூறினார்.

ஒளவையாரின் பேச்சில் இருந்த உட்பொருளை உணர்ந்த தொண்டைமான். ‘தான் இதுவரை போர்க்களத்தைக் கண்டதில்லை என்றும், அதியமான் பல போர்களைக் கண்டுள்ளான்’ என்றும், கூறி அதியமானுடன் போரிடப் போவதில்லை என்று முடிவெடுத்தான். இதனை அதியமானிடம் தெரிவிக்கும்படியும் கூறினான்.

ஒளவையாரின் அறிவு சார்ந்த செயலினால் இழப்புகளின்றி நாடும், நாட்டு மக்களும் காப்பாற்றப்பட்டனர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Students can Download 8th Tamil Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Question 1.
தமிழக முதலமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் 1
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் 2

Question 2.
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் உள்ள சமூகநலன் சார்ந்த பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
சமூக நலன் சார்ந்த பாடல்கள் :
1. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம். – கண்ணதாசன்

2. கொடுத்த தெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான். – வாலி

3. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்ப அயல் நாட்டில்

4. “போர் படைதனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்.
உயர் பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்.
கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான்.
கொண்ட கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்.”
– பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

5. “உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்” – புலமைப்பித்தன்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

6. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இந்த ஏழைகள் வேதனை படமாட்டார் .
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீ ர் கடலிலே விழமாட்டார்.

தெரிந்து தெளிவோம்

(i) கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கையில் உள்ள கண்டியில் கி.பி.(பொ.ஆ.) 1917 சனவரித் திங்கள் பதினேழாம் நாள் கோபாலன் – சத்துயபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர். பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து, கும்பகோணத்தில் குடியேறினார்.

(ii) சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது; சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது. அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

(iii) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசால் சென்னையிலும் ம மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.
அ) கண்டி
ஆ) கும்பகோணம்
இ) சென்னை
ஈ) மதுரை
Answer:
ஆ) கும்பகோணம்

Question 2.
எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் …………..
அ) நடிப்பு ஆர்வம்
ஆ) பள்ளி இல்லாமை
இ) குடும்ப வறுமை
ஈ) படிப்பில் ஆர்வமில்லாமை
Answer:
இ) குடும்ப வறுமை

Question 3.
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான …………. எனும் பட்டத்தை எம்.ஜி. டக்கு வழங்கியது.
அ) புரட்சித் தலைவர்
ஆ) பாரத்
இ) பாரத மாமணி
ஈ) புரட்சி நடிகர்
Answer:
ஆ) பாரத்

Question 4.
ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………
அ) திருச்சி
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) கோவை
Answer:
இ) மதுரை

Question 5.
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் …………..
அ) மதிய உணவுத் திட்டம்
ஆ) வீட்டு வசதித் திட்டம்
இ) மகளிர் நலன் திட்டம்
ஈ) இலவசக் காலணித் திட்டம்
Answer:
அ) மதிய உணவுத் திட்டம்

குறுவினா

Question 1.
எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?
Answer:
எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் :
எம்.ஜி.ஆர். குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் (இலங்கை) கண்டியில் இருந்து குழந்தைகளுடன் கும்பகோணத்திற்கு வந்து குடியேறினார். அங்குள்ள ஆனையடிப் பள்ளியில் பயின்றார். குடும்பநிலை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாமல் நாடகத் துறையில் ஈடுபட்டார்.

Question 2.
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?
Answer:
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் :
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்.

Question 3.
எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக.
Answer:
எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்கள் :
(i) உழவர்களின் கடன் தள்ளுபடி.
(ii) ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்.
(iii) ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம்.
(iv) தாய்சேய் நல இல்லங்கள்.
(v) பற்பொடி வழங்கும் திட்டம்.
(vi) நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்.
(vii) முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.
(viii) வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம். (மாணவர்கள் இவற்றில் எவையேனும் நான்கனை மட்டும் எழுதினால் போதுமானது)

சிறுவினா

Question 1.
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக.
Answer:
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வு :
எம்.ஜி.ஆர். ஒருமுறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர்.

சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார்.

உடன் வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச் செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Question 2.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?
Answer:
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் :
(i) பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
(ii) மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
(iii) தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

நெடுவினா

Question 1.
எம்.ஜி.ஆரின் பண்புநலன்களை விளக்கி எழுதுக.
Answer:
எம்.ஜி.ஆரின் பண்புநலன்கள் :
எம்.ஜி.ஆர். ஒரு முறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர். சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார்.

உடன் வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச் செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.

எம்.ஜி.ஆர். ஒரு முறை படப்பிடிப்பிற்காகக் காஷ்மீருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த இந்தியப் படைவீரர் நலச்சங்கத்தினர் தமது சங்கவிழாவிற்கு எம்.ஜி.ஆர். வருகைதர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட அவர் அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினார்.

ஆனால் அப்பொழுது அவரிடம் பணம் இல்லை. – எனவே, அங்குத் தங்கியிருந்த தமிழ்நாட்டுத் தொழிலதிபர் ஒருவரிடம் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அதனை நன்கொடையாக வழங்கினார். சென்னை திரும்பியதும் முதல் வேலையாக அத்தொகையைத் திருப்பிக் கொடுத்தார்.

இவ்வாறு பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கியமையால் தான் அவரைப் பொன்மனச்செம்மல் என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சிந்தனை வினா

Question 1.
சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் :
(i) விடாமுயற்சியுடனும் சுய அறிவாற்றலுடனும் அவர்களுக்கென தனிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுதல்.

(ii) பொறுமையுடன் செயல்களைச் செய்தல், தன்னிடம் வரும் பிரச்சனைகளைப் பொறுமையுடன் தீர்த்து வைத்தல்.

(iii) குறைவாய்ப் பேசி நிறைவாய் வேலை செய்யும் மனமுடையவராய் இருத்தல்.

(iv) இது இல்லை அது இல்லை என்று கூறாமல் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பதைப் போல் இருக்கும் வளத்தைப் பயன்படுத்தி செயல்களைச் செய்தல்.

(v) பிறருடைய கருத்துகளுக்கும் மதிப்பு அளித்தல்.

(vi) தன்னிடம் நியாயம் இருந்தாலும் யாரிடமும் விவாதம் செய்யாமல் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மதிய உணவுத் திட்டம் …………………. காலத்தில் தொடங்கப்பட்டது.
2. மதிய உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு …………………. என அழைக்கப்பட்டது.
3. எம்.ஜி. இராமச்சந்திரன் ………………. என்று அழைக்கப்பட்டவர்.
4. எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் ……………………….
5. எம்.ஜி.ஆர். பிறந்த நாள் ……………..
6. எம்.ஜி.ஆரின் பெற்றோர் ………………………
7. எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் குடியேறிய இடம் …………………
8. எம்.ஜி.ஆருக்கு இந்திய அரசு வழங்கிய பட்டம் ………………………….
9. எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கியப் பட்டம் …………………
10. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஆண்டு …………………,
11. எம்.ஜி.ஆர். ………………………… என்றெல்லாம் அழைக்கப்பெற்றார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்
Answer:
1. காமராசர்
2. சத்துணவுத் திட்டம்
3. புரட்சித் தலைவர்
4. இலங்கையில் உள்ள கண்டி
5. 17-1-1917
6. கோபாலன் – சத்தியபாமா
7. கும்பகோணம்
8. பாரத் பட்டம்
9. டாக்டா பட்டம்
10. 2017-2018
11. புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர்

விடையளி :

Question 1.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு எம்.ஜி.ஆருக்குச் செய்த சிறப்பு யாது?
Answer:
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசு, சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டி அவருக்குச் சிறப்பு செய்துள்ளது.

Question 2.
எம்.ஜி.ஆர் ஏன் பொன்மனச்செம்மல் என அழைக்கப் பெற்றார்?
Answer:
எம்.ஜி.ஆர் பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கியமையால் பொன்மனச்செம்மல் என்று அழைக்கப் பெற்றார்.

Question 3.
எம்.ஜி.ஆரிருக்குக் கிடைத்த சிறப்புகள் யாவை?
Answer:
சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது; சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது. அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Question 4.
எம்.ஜி.ஆரின் இளமைக்காலம் குறித்து எழுதுக.
Answer:
எம்.ஜி.ஆரின் பெற்றோர் கேரளாவைச் சார்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கையில் உள்ள கண்டியில் கி.பி. 1917 சனவரித் திங்கள் பதினேழாம் நாள் கோபாலன் – சத்தியபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர் பிறந்தார்.

இவர் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் நாடகக் குழுவில் சேர்ந்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Students can Download 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ – என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்?
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
Answer:
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

குறுவினா

Question 1.
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
Answer:
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாதவகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

சிறுவினா

Question 1.
பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.
Answer:
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி, பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்திக் காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை . ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து:
பேரரசனது புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு கூறுமிடத்தில் அமைக்கப் பெறும். மன்னனுடைய வெற்றிகளையும், வரலாறுகளையும் கூறும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படுவதில்லை . இதன் பின் வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரித்துக் கூறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

நெடுவினா

Question 1.
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி - 1
முன்னுரை:
நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தி பாடல், சோழநாட்டின் வளத்தையும். மன்னனின் சிறப்பையும் நயமுடன் எடுத்துரைக்கிறது.

சோழ நாட்டின் வளம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி - 2

மன்னனின் சிறப்பும் பெருமையும் :
மன்னன் மக்களுக்குக் காவல் தெய்வமாக, தாயாக, தந்தையாக இருக்கிறான். மகன் இல்லாதோர்க்கு மகனாக இருக்கிறான். உலக உயிர்களுக்கு உயிராக, விழியாக, மெய்யாக, புகழ் பெற்ற நூலாக புகழ் அனைத்துக்கும் தலைவனாக விளங்குகிறான்.

முடிவுரை :
சோழ அரசனின் பெருமையும் அவன் காலத்தில் நாடு பெற்றிருந்த வளத்தையும் மெய்க்கீர்த்திப்பாடல் வழியாக நயம்பட உரைக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

வருபுனல் – வினைத்தொகை
இளமான் – பண்புத்தொகை
மாமலர் – உரிச்சொல் தொடர்
எழு கழனி – வினைத்தொகை
நெடுவரை – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.

கடிந்து கடி த்(ந்) த் உ

கடி – பகுதி
த்(ந்) – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

Question 1.
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்……………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) குறுந்தொகை
ஈ) அகநானூறு
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 2.
பல்லவர் கால கல்வெட்டும், பாண்டியர் கால செப்பேடும் சோழர் காலத்தில் எனப் ………………………பெயர் பெற்றது.
அ) மெய்க்கீர்த்தி
ஆ) மெய்யுரை
இ) நூல்
ஈ) செப்பம்
Answer:
அ) மெய்க்கீர்த்தி

Question 3.
………………………இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.
அ) இளஞ்சேரலாதன்
ஆ) இரண்டாம் இராசராசன்
இ) இராஜேந்திர சோழன்
ஈ) முதலாம் இராசராசன்
Answer:
ஆ) இரண்டாம் இராசராசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
சோழநாட்டில் பிறழ்ந்தொழுகுவது………………………
அ) இளமான்கள்
ஆ) யானைகள்
இ) மக்கள்
ஈ) கயற்குலம்
Answer:
ஈ) கயற்குலம்

Question 5.
‘காவுகளே கொடியவாயின’ – இதில் ‘காவு’ என்பதன் பொருள்………………………
அ) காடுகள்
ஆ) மலைக்குகை
இ) கடல்
ஈ) யானைகள்
Answer:
அ) காடுகள்

Question 6.
‘இயற்புலவரே பொருள் வைப்பார்’ – எதில்?
அ) இல்லத்தில்
ஆ) மன்றத்தில்
இ) செய்யுளில்
ஈ) சான்றோர் அவையில்
Answer:
இ) செய்யுளில்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 7.
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்………………………
அ) பொருள்
ஆ) முன்னுரை
இ) நூல்
ஈ) கோல்
Answer:
இ) நூல்

Question 8.
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………………………
அ) இரண்டாம் இராசராசன்
ஆ) குலோத்துங்கன்
இ) முதலாம் இராசராசன்
ஈ) விக்கிரம சோழன்
Answer:
அ) இரண்டாம் இராசராசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 9.
யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?
அ) பல்ல வர்
ஆ) பாண்டியர்
இ) முதலாம் இராசராசன்
ஈ) இராஜேந்திர சோழன்
Answer:
இ) முதலாம் இராசராசன்

Question 10.
இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தியின் வரிகள்………………………
அ) 81
ஆ) 91
இ) 101
ஈ) 112)
Answer:
ஆ) 91

Question 11.
அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப்படுவது………………………
அ) செப்பேடு
ஆ) சிற்பங்கள்
இ) ஓவியம்
ஈ) மெய்க்கீர்த்தி
Answer:
ஈ) மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 12.
சோழநாட்டில் சிறைப்படுவன………………………
அ) மா
ஆ) வண்டுகள்
இ) வருபுனல்
ஈ) காவுகள்
Answer:
இ) வருபுனல்

Question 13.
திசாபாலர் ………………………ஆவார்
அ) அறுவர்
ஆ) எழுவர்
இ) எண்மர்
ஈ) பதின்மர்
Answer:
இ) எண்மர்

Question 14.
பொருத்துக.
1. பிணிப்பு – அ) நீர்
2. புனல் – ஆ) கட்டுதல்
3. கழனி – இ) இருள்
4. மை – ஈ) வயல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 15.
பொருத்துக.
1. முகம் – அ) மலை
2. வரை – ஆ) செவிலித்தாய்
3. கைத்தாய் – இ) நூல்
4. பனுவல் – ஈ) முன்னுரை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. யானை – அ) புலம்புகின்றன
2. சிலம்புகள் – ஆ) பிணிக்கப்படுவன
3. ஓடைகள் – இ) வடுப்படுகின்றன
4. மாங்காய்கள் – ஈ) கலக்கமடைகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 17.
பொருத்துக.
1. மலர்கள் – அ) பறிக்கப்படுகின்றன
2. காடுகள் – ஆ) தேன் உண்ணுகின்றன
3. வண்டுகள் – இ) கொடியன
4. மலை மூங்கில்- ஈ) உள்ளீடு இன்றி வெறுமை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Question 18.
பொருத்துக.
1. நெற்கதிர்கள் – அ) இருள் சூழ்ந்திருக்கின்றன
2. மலைகள் – ஆ) மருள்கின்றன
3. மான்களின் கண்கள் – இ) பிறழ்ந்து செல்கின்றன
4. குளத்து மீன்கள் – ஈ) போராக எழுகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 19.
பொருத்துக.
1. செவிலித்தாய் – அ) பொருள் பொதிந்து கிடக்கின்றது.
2. புலவர் பாட்டு – ஆ) தெருவில் ஆடிப்பாடுபவர்.
3. இசைப்பாணர் – இ) பிறழ்ந்து செல்கின்றன.
4. குளத்து மீன்கள் – ஈ) சினங்காட்டுவார்.
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 20.
சொற்றொடரை முறைப்படுத்துக.
i) கல்தச்சர்களால்
ii) புலவர்களால் எழுதப்பட்டு
iii) மெய்க்கீர்த்திகள்
iv) கல்லில் பொறிக்கப்பட்டவை
அ) (ii)-(ii)-(i)-(iv)
ஆ) (ii)-(i)-(i)-(iv)
இ) (i)-(iii)-(iv)-(ii)
ஈ) (iv)-(iii)-(i)-(ii)
Answer:
அ) (iii)-(ii)-(i)-(iv)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 21.
பொருந்தாததைக் கண்டறிக.
அ) யானைகள் பிணிக்கப்படும் – மக்கள் பிணிக்கப்படுவதில்லை
ஆ) சிலம்புகள் புலம்பும் – மக்கள் புலம்புவதில்லை
இ) ஓடைகள் கலக்கமடையும் – மக்கள் கலக்கமடைவதில்லை
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்
Answer:
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்

Question 22.
செப்பமான வடிவம் பெற்றது, கல்லிலக்கியமாய் அமைந்தது………………………
அ) கல்வெட்டு
ஆ) மெய்க்கீர்த்தி
இ) செப்பேடு
ஈ) இலக்கியம்
Answer:
ஆ) மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 23.
தந்தையில்லாதவருக்குத் தந்தையாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 24.
தாயில்லாதவருக்குத் தாயாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 25.
மகனில்லாதவருக்கு மகனாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 26.
உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 27.
விழி பெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூ லாகவும் திகழ்பவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 28.
புகழ் அனைத்திற்கும் தலைவனானவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

குறுவினா

Question 1.
இரண்டாம் இராசராசனின் பட்டங்கள் யாவை?
Answer:
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி ஆகியவையாகும்.

Question 2.
திசாபாலர் எண்மர் யாவர்? (அல்லது) திசைபாலகர் எட்டு பேர் யாவர்?
Answer:
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயகுபேரன், ஈசானன் ஆவர்.

Question 3.
இராசராசனின் நாட்டில் புலம்புவதும், அடைக்கப்படுவதும் எது?
Answer:

  • சோழமன்னனின் ஆட்சியில் சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் எதனை நினைத்தும் துன்புற்றுப் புலம்புவதில்லை
  • நீர் மட்டுமே தேக்கி வைக்கும் பொருட்டு அடைக்கப்படும். மக்கள் எதற்காகவும் சிறைப்படுத்தி அடைக்கப்படுவதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
காவல்நெறி பூண்டு ஆண்டவன் இராசராசன் என்பதை மெய்க்கீர்த்தி எவ்வாறு கூறுகின்றது?
Answer:

  • தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருந்தான்.
  • தாயில்லாதோருக்குத் தாயாய்த் திகழ்ந்தான்.
  • மகனில்லாதோருக்கு மகனாய் இருந்தான்.
  • உலகின் உயிர்களுக்கெல்லாம் உயிராக இருந்து காவல் நெறி. பூண்டு ஆண்டான் என்று மெய்க்கீர்த்தி போற்றுகிறது.

Question 5.
இராசராசசோழனின் புகழ் பற்றி எழுதுக.
Answer:

  • விழி பெற்ற பயனாகவும்,
  • மெய் பெற்ற அருளாகவும்,
  • மொழி பெற்ற பொருளாகவும்,
  • புகழ் பெற்ற நூல் போலும்
    புகழ் அனைத்திற்கும் தலைவனாய்ப் பெருமையுற்று நின்றான்.

Question 6.
‘படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை.
  • சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை
  • Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 7.
‘செல்லோடையே கலக்குண்பன
வருபுனலே சிறைப்படுவன’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன. ஆனால் மக்கள் கலக்கமடைவதில்லை.
  • புனல் (நீர்) மட்டுமே அடைக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் அடைக்கப்படுவதில்லை

Question 8.
‘மையுடையன நெடுவரையே
மருளுடையன இளமான்களே’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை.
  • இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.

Question 9.
‘கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பர்’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை.
  • செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 10.
“தந்தையில்லோர்க்கு தந்தையாகியுந் தாயாரில்லோர் தாயாராகி” இருப்பவர் யார்?
Answer:
தந்தையில்லாதவருக்குத் தந்தையாகவும், தாய் இல்லாதவருக்குத் தாயாகவும் இருப்பவர் இராசராச சோழன் ஆவார்.

Question 11.
மைந்தரில்லோர்க்கு மைந்தராகவும் மன்னுயிர்க்குயிராகவும் இருப்பவர் யார்? மகன் இல்லாதவருக்கு மகனாகவும், உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராகவும் இருப்பவர் இராசராச சோழன் ஆவார்.

சிறுவினா

Question 1.
மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக.
Answer:

  • அரசர்கள் தம் வரலாறும், பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கச் செய்யும் சாசனம்.
  • பல்லவர் கல்வெட்டுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம் சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
  • முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.
  • மெய்க்கீர்த்தி ஒரு மன்னரின் ஆட்சிச் சிறப்பு, நாட்டு வளம், ஆகியவற்றை ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 2.
இராசராச சோழன் மெய்க்கீர்த்தியில் எவற்றுக்கெல்லாம் உவமைப்படுத்தப்பட்டுள்ளான்?
Answer:

  • தந்தையில்லாதவருக்குத் தந்தை
  • தாயில்லாதவருக்குத் தாய்
  • மகனில்லாதவருக்கு மகன்
  • உலக உயிர்களுக்கு உயிர்
  • விழி பெற்ற பயன்
  • மெய் பெற்ற அருள்
  • மொழி பெற்ற பொருள்
  • புகழ்பெற்ற நூல்

– ஆகியவற்றுக்கெல்லாம் இராசராச சோழன் உவமைப்படுத்தப்பட்டுள்ளதாக மெய்க்கீர்த்திகள் மூலம் அறியலாம்.

Question 3.
சோழ நாட்டில் மையுடையன, மருளுடையன யாவை?
Answer:

  • ‘மை’ என்றால் இருள் என்று பொருள்.
  • சோழநாட்டின் மலைப்பகுதியும் மலைக்குகைகளுமே இருள் சூழ்ந்து காணப்படுவன.
  • மக்கள் தம் வாழ்வில் வறுமை இருள் சூழ்வதில்லை.
  • மருள்’ என்பது ஒருவித பயஉணர்வு ஆகும்.
  • அத்தகு மருட்சி இளமான்களின் கண்களில் மட்டுமே காணப்படும். மக்கள் எதற்கும் மருட்சியடைவதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
‘படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன’ -இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை. சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை.

Question 5.
‘மையுடையன நெடுவரையே
மெருளுடையன இளமான்களே’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
AnsweR:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை. இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 6.
‘கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பர்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை. செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.