Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

Students can Download 9th Tamil Chapter 8.4 யசோதர காவியம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.4 யசோதர காவியம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

Question 1.
தொடர்களை ஒப்பிட்டுக் கருத்துகளை வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
அறம் செய விரும்பு : ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக.
ஆறுவது சினம் : போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக.
ஆசிரியர் : ஆசிரியர் : நாம் இப்போது கற்ற ஆக்குவது ஏதெனில்… என்னும் அடிக்கு இணையான தொடர் ஏதாவது நினைவு வருகிறதா குழந்தைகளே…
கலா : ஐயா எனக்கு ஒரு தொடர் ஞாபகம் வருகிறது சொல்லட்டுமா ஐயா.
ஆசிரியர் : சொல்லு கலா…

கலா : ஔவையார் கூறிய “அறம் செய விரும்பு” ஐயா…..
ஆசிரியர் : மிகவும் சரியாகச் சொன்னாய் கலா.
மாலா : அய்யா கலா கூறியதும் நீங்கள் நடத்தியதும் ஒரே கருத்தா ஐயா….
ஆசிரியர் : ஆமாம். மாலா ஔவையார் “நீ எச்செயலைச் செய்ய விரும்பினாலும் அது அறம் செய்வதாக இருத்தல் வேண்டும் என்று விரும்பு” என்கிறார்…..
கலா : இரண்டாவது தொடர் ஐயா…

ஆசிரியர் : ஆறுவது சினம் – வெகுளி போக்குக. ஔவையார் மனதை சிறிது நேரம் அமைதியாக கட்டுப்படுத்தினால் தானாகவே சினம் ஆறி விடும் என்று உணர்த்துகிறார். யசோதர காவியம் “சினத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்” என்பதை வலியுறுத்தும் விதமாக “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” என்று கூறுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“ஞானம்” என்பதன் பொருள் யாது?
அ) தானம்
ஆ) தெளிவு
இ) சினம்
ஈ) அறிவு
Answer:
ஈ) அறிவு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

குறுவினா

Question 1.
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
Answer:
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன், அவந்தி நாட்டு மன்னனாகிய “யசோதரன்” ஆவார்.

சிறுவினா

Question 1.
நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?
Answer:

  • • நாம் செய்கின்ற செயல்கள் பிறருக்குப் பயன்தரத்தக்கச் செயலாக இருத்தல் வேண்டும்.
  • “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக”. நம்மிடம் உள்ள தீய நெறிகளை, பண்புகளை நீக்க விரும்பினால் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
  • “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக”.
    மெய்யறிவு நூல்களை ஆராய்ந்து ஞானம் பெற வேண்டும்.
  • “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக”.
    நாம் மேற்கொண்ட நற்செயல்களாகிய விரதத்தைக் காக்க வேண்டும். .
  • “காக்குவது ஏதெனில் விரதம்”
    என்று நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை யசோதர காவியம் கூறுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

Question 2.
யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிடுக.
Answer:
அறத்தை ஆக்குக:
பின்னாளில் செய்யலாம் என்று எண்ணாது அறஞ் செய்க என்று (36வது) குறள் கூறுகிறது.
“அன்றறிவாம் எண்ணாது அறஞ்செய்து மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

வெகுளி போக்குக:
யாரிடத்தும் கோபம் கொள்ளாமல் சினத்தை மறந்துவிட வேண்டும் என்று (குறள் 303) கூறுகிறது.
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்”.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

ஞானம் நோக்குக:
குற்றமில்லாத அறிவைக் கண்டவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் கிட்டும் என்று (குறள் 352) கூறுகிறது.
“இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு”.

விரதம் காக்க:
விரதம் என்றால் நன்னெறி. தீய செயல்கள் தீயைப் போல் தீமைதரும், எனவே கொடிதான தீமையை விட்டு விலகி நன்னெறி பற்றுக என்று (202) குறள் கூறுகிறது.
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”.
இவையே யசோதர காவியமும் திருக்குறளும் குறிப்பிடும் வாழ்க்கை நெறிகள் ஆகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
அ) உதயகுமாரன்
ஆ) யசோதரன்
இ) சீவகன்
ஈ) சனகன்
Answer:
ஆ) யசோதரன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

Question 2.
யசோதரன் எந்நாட்டு மன்னன்?
அ) மாளவம்
ஆ) மகதம்
இ) கலிங்கம்
ஈ) அவந்தி
Answer:
ஈ) அவந்தி

Question 3.
யசோதர காவியத்தின் சருக்கங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
அ) ஐந்து

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

Question 4.
‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
அ) கலித்தொகை
ஆ) யரோதர காவியம்
இ) நன்னூல்
ஈ) புறநானூறு
Answer:
ஆ) யசோதர காவியம்

Question 5.
யசோதர காவியம் ……….. மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
அ) வட
ஆ) கன்னட
இ) சிந்தி
ஈ) தெலுங்கு
Answer:
அ) வட

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

Question 6.
யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) ஐம்பெருங்காப்பியம்
ஈ) ஐஞ்சிறுகாப்பியம்
Answer:
ஈ) ஐஞ்சிறுகாப்பியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

Question 7.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம் - 1
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம் - 2

குறுவினா

Question 1.
யசோதர காவியம் – குறிப்பு வரைக.
Answer:

  • ஐஞ்சிறு காப்பிங்களுள் ஒன்று.
  • இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை
  • இந்நூல் ‘யசோதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
  • 5 சுருக்கங்களைக் கொண்டது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்

Question 2.
ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை?
Answer:

  • நீலகேசி
  • உதயண குமார காவியம்
  • சூளாமணி
  • நாககுமார காவியம்
  • யசோதர காவியம்

பாடலின் பொருள்:

காக்க வேண்டிய நன்னெறிகள்

  • நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.
  • நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்கிட வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
  • ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
  • இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால், தாம் கொண்ட நன்னெறியினைக் காக்க வேண்டும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2

Students can download 5th Maths Term 3 Chapter 6 Fractions 6.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 6 Fractions 6.2

Question 1.
Write the suitable number in the box.
(i)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.2

(ii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 4

(iii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.2

(iv)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 8

(v)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 9
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 10

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.2

(vi)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 11
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 12

(vii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 13
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 14

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.2

(viii)
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 15
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.2 16

Question 2.
Find an equivalent fraction with denominator 18 for each of the following fractions \(\frac{1}{2}, \frac{2}{3}, \frac{4}{6}, \frac{2}{9}, \frac{7}{9}, \frac{5}{3}\)
Answer:
\(\frac{1}{2}=\frac{1 \times 9}{2 \times 9}=\frac{9}{18}\)
\(\frac{2}{3}=\frac{2 \times 6}{3 \times 6}=\frac{12}{18}\)
\(\frac{4}{6}=\frac{3 \times 4}{3 \times 6}=\frac{12}{18}\)
\(\frac{2}{9}=\frac{2 \times 2}{9 \times 2}=\frac{4}{18}\)
\(\frac{7}{9}=\frac{7 \times 2}{9 \times 2}=\frac{14}{18}\)
\(\frac{5}{3}=\frac{5 \times 6}{3 \times 6}=\frac{30}{18}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.2

Question 3.
Find an equivalent fraction with denominator 5 for each of the following fractions \(\frac{6}{15}, \frac{10}{25}, \frac{12}{30}, \frac{6}{10}, \frac{21}{35}\)
Answeer:
\(\frac{6}{15}=\frac{6 \div 3}{15 \div 3}=\frac{2}{5}\)
\(\frac{10}{25}=\frac{10 \div 5}{25 \div 5}=\frac{2}{5}\)
\(\frac{12}{30}=\frac{12 \div 6}{30 \div 6}=\frac{2}{5}\)
\(\frac{6}{10}=\frac{6 \div 2}{10 \div 2}=\frac{3}{5}\)
\(\frac{21}{35}=\frac{21 \div 7}{35 \div 7}=\frac{3}{5}\)

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Students can Download 8th Tamil Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதுக.
Answer:
சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்னைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே வருகிறது.

‘மனிதன் ஏழ்மையிலே இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான்; பலவீனனாக இருப்பவன் போருக்கு அஞ்சுகிறான்; செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான அசுத்தத்திற்கு அஞ்சுகிறான்’ என்றெல்லாம் திருமதி இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவுகூரத் தக்கது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………… காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
Answer:
இ) அச்சுக்கலை

Question 2.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ………………….. என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
Answer:
ஆ) வட்டெழுத்து

Question 3.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ………………….
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ.சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) தந்தை பெரியார்

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் …………… என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் …………..
Answer:
1. கண்ணெழுத்துகள்)
2. வீரமாமுனிவர்)

குறுவினா

Question 1.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
Answer:
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவம் ஓவிய எழுத்து எனப்படும்.

Question 2.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
Answer:
(i) ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக : மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் கி குறிப்பதாயிற்று.

(ii) இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை, ஒலி எழுத்து நிலை எனப்பட்டது.

Question 3.
ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
Answer:
(i) ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளைப் பயன்படுத்தினர்.
(ii) புள்ளிகளைப் பயன்படுத்தினால் ஓலைகள் சிதைந்து விடும் என்பதால் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 4.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 2

சிறுவினா

Question 1.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
Answer:
(i) ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

(ii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

(iii) புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

(iv) இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

Question 2.
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
Answer:
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றம் :
(i) தமிழ் எழுத்துகளில் நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் ரு பயன்படுகின்றது.

(ii) ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக் கொம்புடை பயன்படுகின்றது.

(iii) ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால்ள பயன்படுகின்றது.

(iv) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.

நெடுவினா

Question 1.
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
Answer:
முன்னுரை :
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். பிறகு ஒலிகள் மூலம் வெளிப்படுத்தினான். அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக் கொண்டான். காலப் போக்கில் அவை பேச்சு மொழியாக உருவானது.

வரிவடிவத்தின் தொடக்க நிலை :
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையாகும்.

ஓவிய எழுத்து :
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

ஒலி எழுத்து நிலை :
அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்துநிலை என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழ் எழுத்துகள் :
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

முடிவுரை :
பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். பிறகு அச்சில் ஏற்றப்பட்டது. காலந்தோறும் வளர்ந்து வரிவடிவத்தில் பல மாற்றங்களை ஏற்று, தற்காலத்தில் கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாக வளர்ந்துள்ளது தமிழ் எழுத்துகள்.

சிந்தனை வினா

Question 1.
தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:
(i) பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும். பிறமொழிகளையும் அறிந்து கொள்ளுதல் நன்மை பயக்கும் என்பதால் அவற்றைக் கூடுதலாக கற்க
வழிவகை செய்யலாம்.

(ii) தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

(iii) கன்னித் தமிழைக் கணினித் தமிழில் ஏற்றி உலகெங்கும் பரப்ப வேண்டும்.

(iv) புதியதாகக் கண்டறியப்பட்ட அறிவியல் சாதனங்களுக்கும், பிற துறையில் கண்டறியப்படும் சொற்களுக்கும் கலைச்சொற்களைக் கண்டறிய வேண்டும்.

(v) பிறமொழியில் உள்ள நூல்களைத் தமிழில் எளிமையான முறையில் மொழிபெயர்க்க வேண்டும்.

(vi) சிறந்த தமிழ் நூல்கள் நிறைந்த, இலவச நூலகங்களை நாடெங்கிலும் அமைக்க வேண்டும்.

(vii) ஒவ்வொரு துறைக்கும் எளிமையான தமிழில் நூல்கள் வெளியிடப்பட வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 2.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.
Answer:
மாணவன் 1 : தமிழ்மொழியை உரோமன் எழுத்துருவில் எழுதுவது எவ்வளவு எளிமையாக உள்ளது பார்த்தாயா?

மாணவன் 2 : அவ்வாறு எழுதுவதே தவறான செயல். இதை எளிமை என்று மகிழ்கிறாயா?

மாணவன் 1 : தவறு என்று ஏன் கூறுகிறாய்? தவறொன்றும் இல்லை. ஏனெனில் தொண்ணூறு சதவீத மாணவர்கள் ஆங்கில வழியில் பயில்கின்றனர். அவர்களுக்குத் தமிழ் படிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பேச்சுமொழியில் படிப்பதில் மாணவர்கள் இன்னலுறுகின்றனர்.

மாணவன் 2 : நீ கூறுவது முற்றிலும் தவறானது. வரிவடிவம்தான் ஒரு மொழியின் அடையாளம். அவ்வாறு இருக்கும் நிலையில் தமிழ்மொழியை உரோமன் எழுத்துருவில் படித்தால் எந்த மொழியில் படிக்கிறோம் என்பதை அறிய முடியுமா? படிப்பவருக்கே குழப்பம்தான் விளையும்.

மாணவன் 1 : படிப்பவருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்குத் தமிழ் படிப்பதில் தகராறு. உரோமன் எழுத்துருவில் படிப்பது எளிமை என அவர் எண்ணுகிறார்.

மாணவன் 2 : இக்கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘தீ’ என்ற தமிழ்ச் சொல்லை உரோமன் எழுத்துருவில் ‘the’ என்றுதான் எழுதவேண்டும். இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளில்தான் புரிந்து கொள்வார்கள். தமிழ் எழுத்துகளில் ஒலி வேறுபாடறிந்து படிக்க இயலும். அதனை உரோமன் எழுத்துருவில் எழுதும்போது தமிழை அழிப்பதைப் போன்று உணர்வு ஏற்படுகிறது.

மாணவன் 1 : எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ்மொழி ஆரம்பக் காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அதிலிருந்து வட்டெழுத்துகள் உருவாயிற்று. அதன்பிறகு இன்றைய எழுத்துருக்கள் உருவாயின. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வரிவடிவத்தைப் பெற்றுள்ளன. அதுபோல தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதும் ஒரு மாற்றம் தானே?

மாணவன் 2 : “எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்” என்பார் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அவர் வழியில் நாம் உடலாகிய எழுத்துரு அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

மாணவன் 1 : மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான். பயிற்சியின் மூலம்தான் நாம் ஒரு மொழியைக் கற்கிறோம். உரோமன்
எழுத்துருவில எழுத்துகளை உச்சரிப்பது எளிமையானது.

மாணவன் 2 : நீ கூறுவது, உன்னுடைய மாயை. ஒரு வரிவடிவில் மற்றொரு மொழியைப் படிப்பதால் அம்மொழியை அறிந்தவர் ஆவோம் என்பது அறியாமை ஆகும். தமிழில் எழுத்து வடிவத்திற்கும் உச்சரிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை அப்படியே சரியான உச்சரிப்புடன் வாசிக்க இயலும். உரோமன் எழுத்து முறையே வேறு. அதில் தமிழ்மொழியில் உள்ளது போல் வரிவடிவத்திற்கும் உச்சரிப்பிற்கும் தொடர்பு இருக்காது. உச்சரிப்பைத் தனியே கற்றுக் கொள்வதற்கென்று உச்சரிப்பு அகராதி தேவைப்படுகிறது.

மாணவன் 1 : நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தெளிவான அமைப்பு முறை அடிப்படைத் தமிழில் இருக்கும்போது நாம் ஏன் உரோமன் எழுத்தில் தமிழை எழுத வேண்டும்.

மாணவன் 2 : நமக்கு நம் தாய்மொழியான தமிழ்தான் பண்பாட்டு, இன அடையாளம். எழுத்து வடிவம் அழிந்தால் மொழி அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும் என்ற வரலாற்று உண்மையை மறக்கக்கூடாது.

மாணவன் 1 : சரியாகச் சொன்னாய். இனிமேல் நானும் என்னை மாற்றிக் கொள்கிறேன். முகநூல், புலனம், கீச்சகம் போன்றவற்றில் இனிமேல் தமிழிலேயே செய்தியைப் பரிமாறுவோம் என உறுதிகொள்வோம். பிறரையும் மாற்றுவோம்.

மாணவன் 2 : நான் கூறியதைக் கேட்டு உன் கருத்தை மாற்றிக் கொண்டதற்கு நன்றி. நாம் அனைவரும் தமிழ்மொழியின் நிலையான தன்மையை உணர்ந்து பிறருக்கும் உணர்த்துவோம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன.
2. பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
3. பொருளின் ஓவிய வடிவமாக இருந்த வரிவடிவம் ஓவிய எழுத்து.
4. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து நிலை.
5. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் காணப்படும் இடங்கள் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்கள்.
6. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து வட்டெழுத்து.
7. கல்வெட்டுகள் மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
8. செப்பேடு, கல்வெட்டில் காணப்படும் வரிவடிவங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகைப்படும்.
9. அரச்சலூர் கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
10. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்ற எழுத்துகள் வட்டெழுத்துகள்.
11. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.
12. ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம்.
13. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.
14. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் இருந்ததற்குச் சான்றாக அமைந்த கல்வெட்டு அரச்சலூர் கல்வெட்டு.
15. பாறைகளில் செதுக்கும்போது பயன்படுத்த முடியாதது வளைகோடுகள்.
16. பாறைகளில் செதுக்கும்போது பயன்படுத்தப்பட்டவை நேர் கோடுகள்.
17. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
18. ஒற்றைப்புள்ளி, இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக பயன்படுத்தப்படுபவை துணைக்கால்(π), இணைக்கொம்பு(), கொம்புக்கால்(ள).
19. இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் தந்தை பெரியார்.
20. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.

குறுவினாக்கள் :

Question 1.
எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை யாது?
Answer:
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது – கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை ஆகும்.

Question 2.
தமிழ் எழுத்துகள் எப்போது நிலையான வடிவத்தைப் பெற்றன?
Answer:
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 3.
கண்ணெழுத்து – குறித்து எழுதுக.
Answer:
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும், ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடரால் அறியலாம்.

Question 4.
எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட காரணங்களாக அமைந்தவை யாவை?
Answer:
எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைந்தன.

Question 5.
தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சியின் இன்றைய நிலை யாது?
Answer:
காலந்தோறும் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழிகணினிப்பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

சிறுவினாக்கள் :

Question 1.
பேச்சுமொழி எவ்வாறு உருவானது?
Answer:
(i) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.

(ii) காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.

(iii) அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். அவை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டுக் காலப்போக்கில் அவை
பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது.

Question 2.
தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் பற்றி எழுதுக.
Answer:
(i) தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களை கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.

(ii) கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

(iii) கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

Question 3.
பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் நான்கனை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 3

Question 4.
இரு வகையான எழுத்துகள் பற்றி எழுதுக.
Answer:
(i) வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்து மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழ் எழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்.

(ii) சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம் பெற்றுள்ளன.

(iii) முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 5.
தமிழ் எழுத்துகளில் புள்ளிகளின் நிலை பற்றி எழுதுக.
Answer:
(i) எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.

(ii) எடுத்துக்காட்டாக எது என எழுதப்பட்டால் எது என்றும் எது என எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.

(iii) அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் (க. = கா, த. = தா) கருதப்பட்டன.

(iv) ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (.க =கை)

(v) எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இருபுள்ளிகள் இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ..= தெள).

(vi) மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்.

(vii) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

நெடுவினா :

Question 1.
எழுத்துச் சீர்திருத்தத்தில் வீரமாமுனிவர், பெரியார் மேற்கொண்டவை எவை?
Answer:
வீரமாமுனிவர் :
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.

அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து போ) புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் :
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 4

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் :
இருபதாம் நூற்றாண்டு வரை ணா, றா, னா ஆகிய எழுத்துகளை ணா, றா, னா என எழுதினார். அதே போல ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளை ணை, லை, ளை, னை என எழுதினார். இவற்றை அச்சுக்கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 5

 

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

Students can Download 9th Tamil Chapter 8.3 தாவோ தொ ஜிங் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.3 தாவோ தொ ஜிங்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

Question 1.
நீங்கள் அறிந்த அயல்நாட்டு தத்துவ அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
Answer:

  • சாக்ரடீஸ்
  • கார்ல்மார்க்ஸ்
  • பிளேட்டோ
  • லாவோட்சு
  • அரிஸ்டாட்டில்
  • டார்வின்
  • கன்பூசியஸ்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

Question 2.
ஜென் தத்துவக்கதை ஒன்றைப் படித்து அதுகுறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடல்

படித்த கதை : ‘இந்தாப்பா உன் சந்தோஷம்’
கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், மாலா, கமலா, குமார்.

ஆசிரியர் : கதையைக் கேட்டீர்களா மாணவர்களே …
மாலா : கேட்டோம் ஐயா!
கமலா : ஐயா! சந்தோஷம் எதில் என்பதை இக்கதை விளக்கமாக கூறியுள்ளது.
ஆசிரியர் : என்ன புரிந்துகொண்டீர்கள்…

குமார் : கோடீஸ்வரனுக்கு பணம் இருந்தும் மகிழ்ச்சியில்லை. எப்போதும் தன் பொன்னையும் பொருளையும் எண்ணிக் கொண்டிருக்கிறான்…
ஆசிரியர் : நிம்மதிக்கு என்ன செய்தான்.

கமலா : நாடு நாடாக ஊர் ஊராக சுற்றினான். பணத்தின் நினைவு வரும்போதெல்லாம் பதறி அடித்து திரும்பிப் போகின்றான்.
மாலா : பின் பொருள், பொன், பணம், எல்லாவற்றையும் மூட்டை கட்டி துறவியிடம் கொடுத்து சந்தோசம் கேட்கிறான்.
குமார் : துறவி மூட்டையுடன் ஓடுகிறார். சந்து பொந்தெல்லாம் ஓடிய துறவி மீண்டும் மரத்தடிக்கு வருகிறார்.

கமலா : மூட்டையை அவசர அவசரமாக கோடீஸ்வரன் பறித்துக் கொள்கிறான்.
ஆசிரியர் : மாணவர்களே செல்வம் படைத்தவனுக்கு அதனைக் கைவிட மனம் வருவதில்லை. அதனால் நிம்மதியும் அமைதியும் பெற முடியவில்லை. பொன், பொருள் இருப்பினும் அதில் பற்றற்ற மனதுடன் இருப்பதே மகிழ்ச்சி தரும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

Question 3.
மண் பாண்டம் செய்வோரைச் சந்தித்து அதன் உருவாக்கம் குறித்து அறிக.
Answer:

  • • மண்பாண்டம் செய்யும் தொழில் பழமையான தொழில்களில் ஒன்று.
    மண்பாண்டம்செய்பவர் குயவர் என்று அழைக்கப்பட்டனர்.
  • நீர் தூய்மையாகப்பட்ட மண் சேர்த்துக் குழைக்கபட்ட களிமண்ணோடு வேறு சில கனிமங்களையும் சேர்ப்பது உண்டு.
  • களிமண் கனமானது, அடர்த்தியானது, தூய்மையானது. இதனை நன்கு குழைத்து மேடையில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்படும்.
  • பானை செய்பவர் தேவைப்படும் வேகத்தில் சுழல் மேடையை சுழற்றுவார்.
  • சுழற்றும் வேகத்தில் கீழ்நோக்கியும் உள்நோக்கியும் அழுத்தி ஒரே அளவிலான தடிமனில் பரவவிட்டு என்ன வடிவில் வேண்டுமோ! அவ்வடிவில் வடிவமைத்து, ஈரம் உலர்ந்தவுடன் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூளையில் சூடாக்கி மண்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
Answer:
அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

குறுவினா

Question 1.
தாவோ தே ஜிங் ‘இன்னொரு பக்கம்’ என்று எதைக் குறிப்பிடுகின்றார்?
Answer:

  • இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளை உடையது மானுட வாழ்க்கை. இருக்கின்றதான உருப்பொருளையே பயன் உடையதாய்க் கருதுகிறோம்.
  • புலப்படாத இன்னொரு பக்கமாகிய இருத்தலின்மையை நாம் உணராமலே
  • பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

சான்று : உருப்பொருளாகிய மண்ணால் செய்யப்பட்ட பாண்டம் இருத்தல், அதனுள் இருக்கும் இன்மையாகிய வெற்றிடத்தையே நீர் முதலியவற்றை நிரப்பிக் கொள்ள பயன்படுத்துகிறோம். எனவே இருத்தல் மட்டுமல்ல “இருத்தலின்மையும்” வாழ்வின் இன்னொரு பக்கம் என்று தாவோ தே ஜிங் கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

சிறுவினா

Question 1.
பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக.
Answer:

  • வான்மீகி வடமொழியில் எழுதிய இராமகாதையைத் தழுவி கம்பர் “கம்பராமாயணம்” எழுதினார்.
  • வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி, ‘வில்லிபாரதம்’, ‘பாஞ்சாலி சபதம் எழுதப்பட்டது.
  • ஷத்ரிய சூடாமணி, ஸ்ரீபுராணம், சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி “சீவகசிந்தாமணி” எழுதப்பட்டது.
  • Pilgrims progress நூலைத் தழுவி “இரட்சண்ய யாத்திரிகம் எழுதப்பட்டது.
  • The secret way – என்னும் நூலைத் தழுவி” மனோன்மணியம்” எழுதப்பட்டது.
  • புட்பந்தர் எழுதிய யசோதர சரிதம் என்னும் நூலைத் தழுவி “யசோதர காவியம்” எழுதப்பட்டது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
லாவோட்சு வாழ்ந்த காலம் எது?
அ) கி.மு. முதலாம் நூற்றாண்டு
ஆ) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
இ) கி.பி. முதலாம் நூற்றாண்டு
ஈ) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
Answer:
ஆ) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

Question 2.
லாவோட்சின் சமகாலத்தில் வாழ்ந்த சீன ஞானி யார்?
அ) யுவான்சுவாங்
ஆ) பாகியான்
இ) தாவோதே ஜிங்
ஈ) கன்பூசியஸ்
Answer:
ஈ) கன்பூசியஸ்

Question 3.
லாவோட்சின் சிந்தனை …………. எனப்படும்.
அ) லாவோட்சின் பக்கம்
ஆ) தாகாவியம்
இ) தாவோவியம்
ஈ) லாவோட்சும் சினமும்
Answer:
இ) தாவோவியம்

Question 4.
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றவர் யார்?
அ) கன்பூசியஸ்
ஆ) யுவான்சுவாங்
இ) லாவோட்சு
ஈ) தாவோட்சு
Answer:
இ) லாவோட்சு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

Question 5.
…………… மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
அ) ஒழுக்கத்தை
ஆ) அன்பை
இ) பகுத்தறிவை
ஈ) உறவை
Answer:
அ) ஒழுக்கத்தை

Question 6.
தாவோ தே ஜிங் என்னும் கவிதையை மொழிபெயர்த்தவர் ………………
அ) சி.மணி
ஆ) கவிமணி
இ) ந.பிச்சமூர்த்தி
ஈ) வல்லிக்கண்ணன்
Answer:
அ) சி.மணி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

குறுவினா

Question 1.
லாவோட்சு – குறிப்பு வரைக.
Answer:

  • லாவோட்சு, சீனாவில் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்.
  • சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர்.
  • ‘தாவோவியம்’ என்ற சிந்தனைப் பிரிவைச் சார்ந்தவர்.

Question 2.
சுவரின் வெற்றிடமாக விளங்குவன யாவை?
Answer:
வீட்டிலுள்ள சாளரமும் கதவும் கூடச் சுவரின் வெற்றிடமாகத் திகழ்கின்றன.

Question 3.
வாழ்க்கையின் இருநிலைகள் எனப்படுவது யாது?
Answer:

  • இருப்பதும்
  • இல்லாதிருப்பதும்

Question 4.
சீனச் சிந்தனையின் பொற்காலம் எனப்படுவது எது?
Answer:
லாவோட்சு, கன்பூசியஸ் வாழ்ந்த காலம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

சிறுவினா

Question 1.
நம் வாழ்க்கையை எவ்வாறு பொருளுடையதாக்க வேண்டும்?
Answer:
வாழ்க்கை மிகவும் விரிவானது. அதன் சில பகுதிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். உணர்கிறோம். நாம் பயன்படுத்தாத அந்தப் பகுதிகளும் சுவை மிகுந்தவை. பொருள் பொதிந்தவை. வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் சுவைத்து, நம் வாழ்க்கையைப் பொருளுடையதாக்குவோம்.

Question 2.
இன்மையால்தான் நாம் பயனடைகிறோம் என்ற கவிஞரின் கருத்தை எடுத்தியம்புக.
Answer:

  • இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது.
  • குடம் செய்ய மண் என்பது உண்டு. இந்த உண்டும் இல்லையும் சேர்வதால்தான் குடத்தில் நீரை நிரப்ப முடியும். வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது.
  • ஆரங்களை விட நடுவிலுள்ள வெற்றிடம் சக்கரம் சுழல உதவுகிறது.
  • குடத்து ஓட்டினைவிட உள்ளே இருக்கும் வெற்றிடமே பயன்படுகிறது.
  • சுவர்களைவிட வெற்றிடமாக இருக்கும் இடமே பயன்படுகிறது.
  • ஆகவே, ‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்று கவிஞர்  கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்

பாடலின் பொருள்:

  • பல ஆரங்களைக் கொண்டது சக்கரம். எனினும் அவற்றிடையே உள்ள வெற்றிடத்தை மையமாகக் கொண்டே அச்சக்கரம் சுழல்கிறது. மண்ணினால் அழகிய வேலைப்பாடுகள் கொண்டதாய் இருப்பது பானை. ஆயினும் பானையினுள் இருக்கும் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
  • வீட்டில் உள்ள சன்னலும் கதவும் கூட சுவரின் வெற்றிடம்தான். அதுவே காற்றையும், வெளிச்சத்தையும் தரப் பயன்படுகிறது.
  • நான்கு சுவர்களுக்கும் இடையே உள்ள வெற்றிடம்தான், அறையாக நமக்குப் பயன்படுகிறது.
  • நம் பார்வையில் படுகின்ற உருப்பொருள்கள் உண்மைதான் எனினும் உருப்பொருளின் உள் உள்ள வெற்றிடமே நமக்குப் பயன் உடையதாகிறது.
  • வெற்றிடமும் பயன்தரும். இல்லை யென்றிருப்பதும் உள்ளதாய் மாறும். வெற்றிடமே பயன் உடையதாகும் எனில் வாழ்வில் வெற்றி பெற இருத்தலையும் பயன்படுத்துவோம் இருத்தலின்மையையும் பயன்படுத்துவோம்.
  • வாழ்வில் நாம் பயன்படுத்தாத பகுதிகள் பல உண்டு. அவற்றை வெற்றிடம் என்று ஒதுக்கி விடுகிறோம். நாம் பயன்படுத்தாத நம் வாழ்வின் வெற்றிடமான பகுதிகளும், சுவை மிகுந்தவை பொருள் பொதிந்தவை. எனவே வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் சுவைத்து நம் வாழ்வை பொருளுடையதாக்குவோம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Students can Download 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 1.
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
Answer:
(எ.கா) காகம் கரையும்.
(i) ஆந்தை : அலறும்
(ii) கிளி : பேசும்
(iii) குயில் : கூவும்
(iv) புறா : குனுகும்
(v) மயில் : அகவும்
(vi) குருவி : கீச்சிடும்
(vii) கோழி : கொக்கரிக்கும்
(viii) சேவல் : கூவும்
(ix) வண்டு : முரலும்
(x) கூகை : குழறும்

Question 2.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:
(i) நிலம் – பூமி, தரை, புவி
(ii) நீர் – புனல், தண்ணீர்
(iii) தீ – அனல், நெருப்பு, கனல்
(iv) காற்று – வளி, கால்
(v) வானம் – ஆகாயம், விண்

Question 3.
ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பறவைகள் ………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
Answer:
ஆ) விசும்பில்

Question 2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………… –
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
Answer:
அ) மரபு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
‘இருதிணை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
Answer:
அ) இரண்டு + திணை

Question 4.
‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
Answer:
ஆ) ஐந்து + பால்

குறுவினா

Question 1.
உலகம் எவற்றால் ஆனது?
Answer:
உலகம் ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவற்றால் ஆனது.

Question 2.
செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
Answer:
செய்யுளில் திணை, பால், வேறுபாடறிந்து மரபான சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.

சிந்தனை வினா

Question 1.
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
(i) உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் இருதிணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறியுள்ளது தமிழ்மொழி. இது இம்மொழியின் மரபு.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

(ii) நம் முன்னோர் ஒழுக்கத்தின் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துள்ளனர்.

(iii) உயர்திணைக்குரிய பால்களாக ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவற்றையும் அஃறிணைக்குரிய பால்களாக ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றையும் வகைப்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர்.

(iv) இம்மரபினை மாற்றாமல் பயன்படுத்தினால் மட்டுமே பொருள் மாறாமல் இருக்கும். இதனையறிந்த நம் முன்னோர் மரபு மாறாமல் பின்பற்றியுள்ளனர்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழாஅமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

நிரப்புக :

1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
2. நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
3. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
4. தொல்காப்பிய அதிகாரங்கள் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
5. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க கண்டுபிடித்தது மொழி.

விடையளி :

Question 1.
தொல்காப்பியம் – குறிப்பு எழுதுக.
Answer:
(i) தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.

(ii) இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.

Question 2.
அளபெடை என்பது யாது?
Answer:
(i) அளபெடை – நீண்டு ஒலித்தல்.

(ii) சில எழுத்துகள் அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும். அதனை அளபெடை என்பர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
உயிரளபெடை என்றால் என்ன?
Answer:
(i) உயிரெழுத்துகள் நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். அளபெடுத்ததற்கு அடையாளமாக உயிர்மெய் நெடிலுக்குப் பக்கத்தில் அதன் இன எழுத்து எழுதப்படும்.

(ii) (எ.கா.) வழாஅமை ழா – ழ் + ஆ; ‘ஆ’ – இன எழுத்து ‘அ)

Question 4.
புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் இளமைப் பெயர்களை எழுதுக.
Answer:
(i) புலி – பறழ்
(ii) சிங்கம் – குருளை
(iii) யானை – கன்று
(iv) பசு – கன்று
(V) கரடி – குட்டி

Question 5.
புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் ஒலிமரபினை எழுதுக.
Answer:
(i) புலி – உறுமும்
(ii) சிங்கம் – முழங்கும்
(iii) யானை – பிளிறும்
(iv) பசு – கதறும்
(v) கரடி – கத்தும்

Question 6.
நிலம், நீர், தீ, வளி, விசும்பு’ என்று தொடங்கும் நூற்பாக்களின் மூலம் தொல்காப்பியம் கூறுவனவற்றை எழுதுக.
Answer:
(i) இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும்.

(ii) உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபாகும். திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம்முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும்.

(iii) இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும். தமிழ்மொழிச் சொற்களை வழங்குதலில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

நூல் வெளி

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்

இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும். உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Students can Download 8th Tamil Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 1.
‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
இப்பாடலை இசையுடன் பாடி பழக வேண்டும்.

Question 2.
படித்துச் சுவைக்க.
Answer:
செந்தமிழ் அந்தாதி

செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே
எழில்மகவே எந்தம் உயிர்.
உயிரும் நீ மெய்யும் நீ ஓங்கும் அறமாம்
பயிரும் நீ இன்பம் நீ அன்புத் தருவும்நீ
வீரம் நீ காதல் நீ ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ யாவும் நீ யே! – து. அரங்கன்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ………
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
Answer:
அ) வைப்பு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 2.
‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
Answer:
ஆ) என்று + என்றும்

Question 3.
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
Answer:
இ) வானம் + அளந்தது

Question 4.
அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்……………….
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
Answer:
இ) அறிந்ததனைத்தும்

Question 5.
வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
Answer:
இ) வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

மோனைச் சொற்கள் :

வாழ்க – வாழிய
வான மளந்தது – வண்மொழி
எங்கள் – என்றென்றும்
வாழ்க – வாழ்க
வானம் – வளர்மொழி

குறுவினா

Question 1.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
Answer:
தமிழ் புகழ் கொண்டு வாழுமிடம் : ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்டு வாழ்கிறது.

Question 2.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
Answer:
தமிழின் வளர்ச்சி : தமிழ் மொழி, வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சிறுவினா

Question 1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:
தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகள்:

(i) தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்கிறது.

(ii) ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி.

(iii) ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்ட மொழி.

(iv) எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழும்.

(v) எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.

(vi) பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிரவேண்டும்.

(vii) வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழியைப் பாரதியார், என்றென்றும் வாழ்க ! வாழ்க! என்று வாழ்த்துகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சிந்தனை வினா

Question 1.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
Answer:
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் :

(i) தமிழ் மொழி, தமிழ் பேசும் பலருடைய தாய்மொழி. திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழி. எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது.

(ii) தமிழ், அறிவியல், மருத்துவம், கணிதம் எனப் பலவற்றையும் கூறுகிறது. தமிழர்
வானியல் அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளனர். வான் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்கள் தமிழில் உள்ளன. ஞாயிறு, திங்கள், விண்மீன் மற்றும் வானில் வலம் வரும் கோள்கள் பற்றியும் ஆராய்ந்து கூறியுள்ளனர் தமிழர்.

(iii) இலக்கிய வளம், இலக்கணவளம், சொல்வளம் என எல்லா வளங்களையும் தமிழ்மொழி பெற்றுள்ளதால் பாரதியார் தமிழ்மொழியை வண்மொழி என்று அழைக்கிறார்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. நிரந்தரம் – காலம் முழுமையும்
2. வைப்பு – நிலப்பகுதி
3. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
4. வண்மொழி – வளமிக்க மொழி
5. இசை – புகழ்
6. தொல்லை – பழமை , துன்பம்

நிரப்புக :

1. தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
2. பாரதியார் நடத்திய இதழ்கள் இந்தியா, விஜயா.
3. பாரதியாரின் உரைநடை நூல்கள் சந்திரிகையின் கதை, தராசு.
4. மொழி மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.

விடையளி :

Question 1.
சுப்பிரமணிய பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
Answer:
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் போன்றவை பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் ஆகும்.

Question 2.
தமிழ்நாடு எவ்வகைத் துன்பங்கள் நீங்கி ஒளிர வேண்டும்?
Answer:
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 3.
பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
Answer:
பாரதிதாசன், பாரதியாரைப் புகழ்ந்தமை :

(i) சிந்துக்குத் தந்தை
(ii) செந்தமிழ்த் தேனீ
(iii) புதிய அறம் பாட வந்த அறிஞன்
(iv) மறம் பாட வந்த மறவன்.

Question 4.
பாரதியார் இயற்றியவைகளாக நும் பாடப் பகுதியில் குறிப்பிடப்பட்டவை எவை?
Answer:
(i) சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்கள்.
(ii) வசன கவிதைகள்
(iii) சீட்டுக்கவிகள் ஆகியவையாகும்.

Question 5.
தமிழ்மொழி, எதனால் சிறப்படைய வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார்?
Answer:
தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்ந்து, எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நீக்கும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.

Question 6.
தமிழ்மொழி எவற்றை அறிந்து வளரும் என்று பாரதியார் கூறுகிறார்?
Answer:
தமிழ்மொழி வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் என்று பாரதியார் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

ஆசிரியர் குறிப்பு

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி.சுப்பிரமணிய பாரதியார். இந்தியா, விஜயா, முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். கவிதைகள் மட்டுமின்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைக! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

 

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

Students can Download 6th Tamil Chapter 9.4 அணி இலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.4 அணி இலக்கணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

Question 1.
பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.
ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.
Answer:
இயல்பு நவிற்சி அணி.

மதிப்பீடு

குறுவினா

Question 1.
உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது?
Answer:
உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் இயல்பு நவிற்சியணி.

Question 2.
உயர்வு நவிற்சி அணி என்பது யாது?
Answer:
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த இடம் ஒன்றினை இயல்பு நவிற்சியாகவும் உயர்வு நவிற்சியாகவும் விவரிக்க.
Answer:
இயல்பு நவிற்சி : கன்னியாகுமரி தமிழ்நாட்டின் ஓர் முக்கிய ஊராகும். இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது ஒரு சுற்றுலாத் தலம். இங்கு விவேகானந்தர், காமராசர், காந்தியடிகள் ஆகியோருக்கு நினைவு மண்டபம் உள்ளது. 133 அடி திருவள்ளுவர் சிலை உள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் சாம்பல்(அஸ்தி கரைக்கப்பட்டது.

உயர்வு நவிற்சி :
(i) கன்னியாகுமரி இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஊராகும். இங்கு மட்டும்தான் வங்காள விரிகுடா கடலும், அரபிக்கடலும், இந்திய பெருங்கடலும் சங்கமிக்கிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

(ii) இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.

(iii) இங்கு உலகப் புகழ்பெற்ற விவேகானந்தர் நினைவு மண்டபம் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். அந்தளவிற்கு அழகாக இருக்கிறது. வானை முட்டும் அளவிற்கு 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

(iv) இங்குதான் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் சாம்பல் (அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுக்கும், காமராசருக்கும் புகழ்பெற்ற நினைவு மண்டபங்கள் உள்ளது. இவை எல்லாம் கன்னியாகுமரியின் பெருமை ஆகும்.

மொழியை ஆள்வோம்

பேசுக :

Question 1.
உங்கள் மீது அதிகம் அன்பு செலுத்துபவர்கள் யார்? நீங்கள் யார்யார் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள்? காரணம் கூறுக.
Answer:
(i) என் மீது அதிகம் அன்பு செலுத்துபவர் என் அம்மா.
(ii) அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என என் உறவினர்கள் அனைவர் மீதும் அன்பு வைத்திருக்கிறேன்.

காரணம் :
நான் ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்கின்றேன். எனக்கு நினைவு தெரியும் போதிலிருந்தே என் வீட்டில், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா என அனைவரும் இருக்கின்றனர். என் நல்லது கெட்டது இவற்றில் எதுவானாலும் என்னோடு

சேர்ந்து மகிழவும் செய்வர் வருந்தவும் செய்வர். எனக்கு நேர்வதை அவர்களுக்கு நேர்ந்ததாக உணர்வர்.

எனக்கு ஏதாவது தேவை என்றால் நான் யாரிடம் வேண்டுமானாலும் கேட்பேன். என் தேவைகள் உடனே பூர்த்தியாகும். அதுமட்டுமின்றி என் வயதில் உள்ள மாமா, அத்தை பிள்ளைகள், பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் அனைவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகுவோம். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Question 2.
நீங்கள் ஒருவருக்குப் பரிசு கொடுக்க விரும்பினால் யாருக்குக் கொடுப்பீர்கள்? என்ன கொடுப்பீர்கள்? எதற்காகக் கொடுப்பீர்கள்?
Answer:
(i) என் நண்பனுக்குப் பரிசு கொடுப்பேன்.
(ii) புத்த கம்.
(iii) எனக்கும் என் நண்பனுக்கும் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். மற்றப் பரிசுகள் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும். ஆனால் புத்தகம் அறிவுப் பொருளாக இருக்கும். புத்தகத்தைப் படித்து அதனால் பெறுகின்ற அறிவை எக்காலத்திலும் மறக்கவியலாது. எனவே, புத்தகத்தை மட்டுமே பரிசாகத் தருவேன்.

Question 3.
பின்வரும் தலைப்புகளுள் ஒன்று பற்றி மூன்று மணித்துளிகள் பேசுக.
அ) பொதுநலம்
ஆ) சமூகத்தொண்டு
Answer:
அ) பொதுநலம்:
சுயநலமற்ற நலமே பொதுநலம். சுயநலம் என்பது நம்முடன் பிறந்தது. அதனை யாரும் நமக்குக் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. அது நம் உணர்வோடு கூடியதாக இருக்கும். நமக்கு நம் வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகும் வழக்கம் இருந்தாலே பொதுநலம் வளரும். தன்னலமற்றவராய் வாழ்ந்து இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். அவர்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தங்கள் சுக துக்கங்களுக்கு இடம் கொடாமல் பிறர் நலனை மட்டுமே கருதி வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகும்.

பொதுநலம் நாடுபவர்கள் சுயநலமற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறவியலாது. ஏனெனில் அவர்களிடம் பத்து சதவிகிதமாவாது சுயநலம் இருக்கும். வள்ளுவர். “குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்” என்று கூறியுள்ளார். ஒருவருடைய குணத்தை ஆராயும் போது அவற்றுள் எக்குணம் மேலோங்கி இருக்கின்றதோ அதனை வைத்து அவர் மதிப்பிடப்படுவார்.

அதுபோல்தான் சுயநலமும், பொதுநலமும், சுயநலக்காரர்கள் நூறு சதவிகிதம் சுயநலத்துடன் இருப்பர். பொதுநலக்காரர்கள் பெரும்பான்மை பொதுநலமும், சிறுபான்மை சுயநலமும் உடையவர்களாக இருப்பர். நாணயத்திற்கு இருபக்கம் போன்றதது தான் இச்சுயநலமும் பொதுநலமும்.

தன்னம்பிக்கை எவரிடம் அதிகமாகக் காணப்படுகிறதோ அவரிடம் பொதுநலம் அதிகமாகக் காணப்படும். சமுதாயத்திற்குச் செய்யப்படுகின்ற உதவியே பொதுநலம். பொதுநலம் என்பது பிறரைப் பார்த்து வருவது. பிறர் சொல்லித் தெரிவது. உணர்வோடு தொடர்புடையதாக இருக்கும். மற்றவர்களுக்கு நாம் செய்கின்ற சேவைகள், உதவிகள் எல்லாமே பொதுநலமாகும். கண்தானம், இரத்ததானம், உறுப்புதானம் : என இவையெல்லாமே பொதுநலம்தான். மனிதநேயம் எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கே பொதுநலம் மலர்கிறது.

பொதுநலம் என்பது சுயநலமற்றது. சாதி மதம் பாராதது, ஏழை எளியவர் எனக் கருதாது. பிறருக்காக உழைப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது, பிறரை அரவணைப்பது, ஏழைக் குழந்தைகளைக் கொஞ்சுதல் அவர்களுக்குத் தேவையானவற்றை அளிப்பது இவையெல்லாம் பொதுநலம்தான். பொதுநலம் உடையவரிடம் இருக்க வேண்டியது இனிமை, எளிமை, பொறுமை, பொதுமை ஆகிய பண்புகளாகும். இப்பண்புகளில் சிறந்தவர்கள் நோய்நொடிகளற்று நிம்மதியாக வாழ்வார்கள்.

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர் பெருமான். அவரன்றோ பொதுநலத்தின் முன்னோடி. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்பதைப் போல் பொதுநலம் அமைய வேண்டும். பொது நலத்தில் நம் உலகத்திற்கே முன்னோடியாக வாழ்பவர்கள் விவசாயிகள்தான். உலகமே அவர்களின் உழைப்பில்தான் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.

அவசர சிகிச்சைக்கான ஊர்தி பொதுநலம் கருதியே இயங்குகிறது. பொதுநலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதால் சுயநலச் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது. பொதுநலம் காப்பவர்கள் சூரியன், சந்திரன் போன்றும் காற்றும் மழையும் போன்று அனைவருக்கும் பொதுவாக இருந்து செயலாற்ற வேண்டும்.

ஆ) சமூகத் தொண்டு :
பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம், சமுதாயம் என அழைக்கப்படுகிறது. அந்த சமுதாயம் மேம்படவும், மக்களின் வாழ்வு மேம்படவும், பலரும் முயல்கின்றனர். குழு அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் தொண்டு செய்கின்றனர். அவ்வாறு மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி செயலாற்றுகிறார்கள். நாம் செய்யும் செயல்களை நம் கடமை என எண்ணிச் செயல்படவேண்டும்.

“உயிர் இனங்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாகும். நடமாடும் கடவுளர்களாகிய மக்களுக்கு ஒன்றைச் செய்தால் அது கோயிலில் உள்ளவர்க்குச் செய்யும் தொண்டாகும்” என்பது திருமூலரின் கருத்து. இவ்வாறு மக்களினத்திற்குச் செய்யும் தொண்டே மகத்தானது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

தற்போது வளர்ந்து வரும். இணையச் செயல்பாடுகளால் சமூகத்தொண்டு செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. புலனம் குழு, முகநூல் போன்றவற்றின் மூலம் பல சேவைகளைச் செய்யவியலும். தற்போதுள்ள தேவைகள் என்று சிந்தித்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழிப் பொருட்கள் பயன்பாடுகளைத் தவிர்த்தல், ஏரி, குளங்கள் தூர் வாருதல், காடுகள் அழிப்பதைத் தடுத்தல், விவசாய நிலங்களை விற்காமல் பார்த்துக் கொள்ளுதல், ஆங்காங்கு மரக்கன்றுகள் நடுதல் போன்றவையாகும். இளைஞர்கள் இவற்றைச் சரிசெய்வதற்கு அரசு உதவியோடும், பொதுமக்கள் துணையோடும் செயலாற்ற வேண்டும்.

கல்வி, சுகாதாரம், விவசாயம் இவையனைத்தும் மக்களின் அவசிய தேவைகள் ஆகும். இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வழி இல்லாத ஊருக்கு வழி அமைத்தல், ஊரைத் தூய்மை செய்தல், தூய்மை பற்றி மக்களுக்கு எடுத்துத் கூறுதல், உடல் நலத்துடன் வாழ்வதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுதல், விழாக் காலங்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். எப்பொழுதும் எவ்வுதவியும் செய்வதற்குத் தயாராய் இருக்க வேண்டும்.

சமூகத் தொண்டினை ஈடுபாட்டுடன் செய்து வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும். துன்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். திறந்த மனமும் அளவற்ற ஆற்றலும் உள்ளவர்களாய் எதையும் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும். உன்னத இலட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்து தொண்டாற்ற வேண்டும். நாட்டைப் பாதுகாப்போம். உயர்த்துவோம்.

அகர வரிசைப்படுத்துக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 1

1. அன்பு
2. ஆடு
3. இரக்கம்
4. ஈதல்
5. உயிர்
6. ஊக்கம்
7. எளிமை
8. ஏது
9. ஐந்து
10. ஒழுக்கம்
11. ஓசை
12. ஔ வை

கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக

அ) அன்பு
ஆ) நட்பு
இ) உதவி

அ) அன்பு :
கேட்டுப் பெறுவதல்ல அன்பு
கேட்காமலே பெறுதல் சிறப்பு
அன்பு பேச்சில் மட்டும்
போதுமா? செயலில் வேண்டாமா?
பகையைப் போக்கிடும் அன்பு
வெற்றியைத் தந்திடும் அன்பு
கண்களில் அன்பைக் காட்டு
கண்முன் கடவுளே நிற்பார்.

ஆ) நட்பு :
காயத்திற்கு மருந்தாகும்
அழியாச் சுவடாகும்
தவற்றைச் சுட்டிக்காட்டும்
குறைகளைத் திருத்தும்
தனிமையை இனிமையாக்கும்
சோர்வில் உற்சாகமூட்டும்
நீயில்லையேல் நான்
மழைக் கானா நிலமாய்
வாடி வருந்துவேன்.

இ) உதவி :
கல்லாதார்க்குக் கல்வியைக் கொடு
இல்லாதார்க்குப் பொருளைக் கொடு
கைகொடுக்கும் கையாய் இருந்திடு
கார்மேகத்தைப் போல் இருந்திடு
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பார்க்காதே
உதவி செய்வதில் தயங்காதே
பிறர்க்கு விதைக்கும் விதையைத்தான் – நீ
அறுவடை செய்வாய் மறவாதே!

பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க

அரசர் ஒருவர் தன் மக்களிடம் ‘அமைதி’ என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது.

அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?” என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். “இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். அதற்கு ஓவியர் “மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி” என்றார்.

Question 1.
அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
Answer:
அமைதி என்றவுடன் என் மனதில் தோன்றுவது “தேவையற்ற பேச்சைத் தவிர்த்து, அவசிய வேலைகளை மட்டும் செய்து பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதே அமைதி”. மற்றும் அமைதி என்றால் தியானம் நினைவிற்கு வரும். அன்னை தெரசா நினைவிற்கு வருவார்.

Question 2.
இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?
Answer:
பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்று இக்கதையில் கூறப்படுகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

Question 3.
நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?
Answer:
ஓர் அழகான பெரிய கோவில், அங்குள்ள கருவறை, மண்டபம், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவது போன்ற காட்சி. இக்காட்சியை ஓவியமாக வரைந்து இருப்பேன்.

Question 4.
இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
Answer:
எங்கே அமைதி?

மொழியோடு விளையாடு

கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 2
இவை போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க.
1. நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது.
2. இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது.
3. நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 3

1. நேற்று என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுத்தார்.
2. இன்று என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.
3. நாளை என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுப்பார்.

கட்டங்களில் மறைந்துள்ள அணிகலன்களின் பெயர்களை எழுதுக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 4

எ.கா. கம்ம ல்
அணிகலன்களின் பெயர்கள் :
1. கம்மல்
2. கடுக்கன்
3. சூளாமணி
4. மோதிரம்
5. சிலம்பு
6. வளையல்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. நான் எல்லாரிடமும் அன்பு காட்டுவேன்.
2. உறுப்பு தானத்தின் இன்றியமையாமையை எனக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துச் சொல்வேன்.
3. பிறருக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன்.
4. பிற உயிர்களைத் துன்புறுத்த மாட்டேன்.
5. எப்போதும் மனிதநேயத்துடன் நடந்து கொள்வேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

கலைச்சொல் அறிவோம்

1. மனிதநேயம் – Humanity
2. கருணை – Mercy
4. நோபல் பரிசு – Nobel Prize
3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation
5. சரக்குந்து – Lorry

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

Students can Download 9th Tamil Chapter 8.2 ஒளியின் அழைப்பு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.2 ஒளியின் அழைப்பு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

Question 1.
முயற்சி, நம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை உணர்த்தும் அறிஞரின் பொன்மொழிகளைத் தொகுக்க.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு - 1
Answer:
1. “நாம் நம்மால் முடியாது
என்று நினைக்கும் செயல்களை
யாரோ ஒருவர்
எங்கோ ஓர் இடத்தில்
அதை செய்து கொண்டுதான்
இருக்கிறார் என்பதை மறவாதே”
– அப்துல் கலாம்

2. எனது வெற்றிகளின் மூலம்
என்னை மதிப்பிடாதீர்கள்,
எத்தனை முறை நான் கீழே
விழுந்து மீண்டும் எழுந்தேன்
என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்
– நெல்சன் மண்டேலா

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

3. கண்ணெதிரே காணும்
ஒவ்வொருவரையும் நம்புவது
அபாயகரமானது. அதைக் காட்டிலும்
ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும்
அபாயகரமானது
– ஆபிரகாம் லிங்கன்

4. முடியாது என்பது நம்
அகராதியில் கிடையாது
– நெப்போலியன்

5. நம்பிக்கையோடு – உன்
முதலடியை – எடுத்துவை
முழுப் படிக்கட்டையும்
நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை,
முதலில் படியில் ஏறு
– மார்டின் லூதர்கிங்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

6. ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட
வேண்டும் என்ற முயற்சிதான்
உலகில் பல பெருந்துயருக்கும்
காரணமாயிருக்கிறது.
– சாமுவேல் பட்லர்

7. எவராவது தான் தன்னுடைய
வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை
என்று நினைத்தால் அவர்கள் தாம்
தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச்
செய்து பார்த்ததில்லை என்று பொருள்
– ஐன்ஸ்டைன்

Question 2.
“தன்னம்பிக்கையின் மறுபெயர்” நான் என்னும் தலைப்பில் ஒரு கவிதை படைத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
தன்னம்பிக்கையின் மறுபெயர் நான்
என் மறுபெயர்
என்ன தெரியுமா?…
பொறுமையுடன்
தன்னம்பிக்கை…
எனக்குள் ஒருவன் இருக்கிறான்
அவன்தான் தன்னம்பிக்கை…
முயன்றவரை மட்டுமல்ல
முடியும் வரை முயல்வேன்
துவண்டு போக மாட்டேன்
துணிவுடன் செல்வேன்…
வேகமாய் செல்லமாட்டேன் விவேகத்துடன்
செல்வேன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

பொறாமைகளை போட்டிகளை எதிர்கொள்ள
பொறுப்புடன் ஓடுவேன்
ஏனெனில்
என் பெயர் தன்னம்பிக்கை….
தோல்வியில் சிரித்துப் பார்த்தேன்…
கற்றதை உணர்ந்து பார்த்தேன்…
ஆசையைத் துறந்து பார்த்தேன்…
அச்சத்தை மறந்து பார்த்தேன்…..
வியர்வை சொட்ட உழைக்கப் பார்த்தேன்…
வெற்றிக்கனியைச் சுவைத்துப் பார்க்கிறேன்.
என் பெயர் தன்னம்பிக்கை…

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“முண்டி மோதும் துணிவே இன்பம்” – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது………………….
அ) மகிழ்ச்சி
ஆ) வியப்பு
இ) துணிவு
ஈ) மருட்சி
Answer:
இ) துணிவு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

குறுவினா

Question 1.
கமுகு மரம் எதைத் தேடியது?
Answer:
பெருமரங்களுக்கு இடையே தோன்றிய கமுகு மரமானது, தான் வளர்ந்து வளம் பெறுவதற்கு, விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் (ஒளியமுதை) தேடியது.

நெடுவினா

Question 1.
வாழ்க்கைப் போரில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கமுகுமரம் வாயிலாக ஆசிரியர் எவ்வாறு உணர்த்துகிறார்?
Answer:
முன்னுரை:
போட்டி இன்றி வாழ்க்கை இல்லை. வலிகளின்றி வெற்றி இல்லை. ஒன்றையொன்று அடுத்தும், படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று வாழ்க்கைக்கும் தான் என்பதை ந. பிச்சமூர்த்தி அவர்கள் கமுகுமரம் வாயிலாக உணர்த்துகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

கமுகு பிறந்த இடம்:
அடர்ந்த இருள் போன்ற நிழல் பரப்புகின்ற பெருமரங்களின் இடையே கமுகு பிறந்தது. பெருமரங்களின் நிழல் என்னும் இருள் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஒளியமுதைத் தடுத்தது. பெருமரங்களின் நிழலை வெறுத்த கமுகு தான் வளரத் தேவையான ஒளியமுதைப் பெற்று உயிர்ப்புப் பெற போராட துவங்கியது.

கமுகின் போராட்டம்:
கமுகு மரம் கடுமையாகப் பெருமரங்களுடன் முட்டிமோதும் முயற்சியைத் தொடங்கியது. விண்ணிலிருந்து வரும் தன் உயிர்ப்பாகிய ஒளியமுதைத் தேடியது. மீண்டும், மீண்டும் உயர முயற்சித்தது. கதிரவனின் ஒளிக்கதிர்களாகிய விரல்களின் அழைப்பைக் கண்டது. பெருமரங்களின் இருட்டில் இருந்து கொண்டே தன் கிளையை வளைத்து ஒளியை நோக்கி நீட்டத் தொடங்கியது; வளர்ந்தது. பெரு மரங்களை முட்டி மோதும் துணிச்சலையும், முயற்சியையும் பெற்றதால் கமுகு வளைந்து, நெளிந்து, நீண்டு வளர்ந்தது. மலர்ச்சி பெற்றது.

வாழ்க்கைப் போர்:
வாழ்க்கையிலும் இருள் போன்ற நிழல் சூழ்ந்த நிலைகள் ஏற்படலாம். ஒளியமுதை நம்பி, வேண்டி, கமுகு துணிச்சலான முயற்சியில் ஈடுபட்டது போல, நாமும் வாழ்க்கைப் போரில் நம்பிக்கை தன்முனைப்பு, விடாமுயற்சி, உடையவர்களாய் இருந்தால் வாழ்வு மலர்ச்சி பெறும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

முடிவுரை:
“பெருமரத்துடன் சிறுகமுகு போட்டியிடுகின்றது, அதுவே வாழ்க்கைப் போர். முண்டி போதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி”. இயற்கையின் போராட்டங்களையும், வாழ்வின் அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் வாழ்க்கைப் போரைச் சந்திப்போம்; முயல்வோம்; வெற்றி பெறுவோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு - 2
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு - 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

Question 2.
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) மீரா
ஈ) ந.பிச்சமூர்த்தி
Answer:
ஈ) ந.பிச்சமூர்த்தி

Question 3.
ந.பிச்சமூர்த்தி எழுதிய முதல் சிறுகதை எது?
அ) சயன்ஸுக்கு பழி
ஆ) சயன்ஸுக்கு பலி
இ) அறிவியல் உலகம்
ஈ) அறிவியல் விருந்து
Answer:
ஆ) சயன்ஸுக்கு பலி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

Question 4.
பிச்சை, ரேவதி என்ற புனைபெயர்களில் படைப்புகளை எழுதியவர் யார்?
அ) கண்ண தாசன்
ஆ) மீரா
இ) தாராபாரதி
ஈ) ந.பிச்சமூர்த்தி
Answer:
ஈ) ந.பிச்சமூர்த்தி

Question 5.
கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு ……………
அ) 1932
ஆ) 1933
இ) 1934
ஈ) 1935
Answer:
அ) 1932

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

Question 6.
யாப்புப்பிடியில் இருந்து விடுபட்டவையே …………… ஆகும்.
அ) மரபுக் கவிதை
ஆ) சங்கப் பாடல்
இ) காப்பியம்
ஈ) புதுக்கவிதை
Answer:
ஈ) புதுக்கவிதை

Question 7.
ஒளியமுது என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
அ) உவமைத் தொகை
ஆ) வினைத் தொகை
இ) உருவகம்
ஈ) எண்ணும்மை
Answer:
இ) உருவகம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

Question 8.
உயிரின் முயற்சியே வாழ்வின் …………….
அ) தளர்வு
ஆ) தடுமாற்றம்
இ) மனமாற்றம்
ஈ) மலர்ச்சி
Answer:
ஈ) மலர்ச்சி

Question 9.
“புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலை எழுதியவர் ……………
அ) நெல்லைக்கண்ணன்
ஆ)வல்லிக்கண்ணன்
இ) ஈரோடு தமிழன்பன்
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
ஆ) வல்லிக்கண்ணன்

Question 10.
பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ……….. ஆகும்
அ) ந. பிச்சமூர்த்தி
ஆ) மீரா
இ) வல்லிக்கண்ணன்
ஈ) மு. மேத்தா
Answer:
அ) ந.பிச்சமூர்த்தி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

குறுவினா

Question 1.
ந.பிச்சமூர்த்தி கவிதைகள் குறித்து வல்லிக்கண்ணன் கூறுவன யாவை?
Answer:
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்று வல்லிக்கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Question 2.
ந.பிச்சமூர்த்தி படைத்த இலக்கிய வகைமைகளைக் குறிப்பிடுக.
Answer:

  • புதுக்கவிதை
  • ஓரங்கநாடகங்கள்
  • சிறுகதை
  • கட்டுரைகள்

Question 3.
ந.பிச்சமூர்த்தி துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் யாவை?
Answer:

  • ஹனுமான்
  • நவ இந்தியா

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு

Question 4.
புதுக்கவிதைக்குரிய வேறு பெயர்கள் யாவை?
Answer:

  • இலகு கவிதை
  • கட்டற்ற கவிதை
  • விலங்குகள் இல்லாக் கவிதை
  • கட்டுக்குள் அடங்காக் கவிதை

சிறுவினா

Question 1.
ந. பிச்சமூர்த்தி குறிப்பு வரைக.
Answer:

  • புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர்.
  • வழக்குரைஞராகவும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
  • புதுக்கவிதை, ஓரங்க நாடகம், கட்டுரை ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.
  • பிச்சை, ரேவதி ஆகிய புனைபெயர்களில் எழுதினார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Students can Download 6th Tamil Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Question 1.
“முடிவில் ஒரு தொடக்கம்” உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பகிர்க.
Answer:
ஹிதேந்திரனின் உண்மைக்கதையைப் படித்தபோது என் மனம் வருந்தியது. இக்கதையைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கூறி என் மனக்காயத்தைப் போக்கினேன். இதுபோல் எவருக்கும் நேரக்கூடாது என்று இறைவனிடம் வேண்டினேன். உடல் உறுப்பு தானம் அளிப்பதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

Question 2.
முதலுதவி பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் சிலவற்றையேனும் அறிந்து கொள்க.
Answer:
(i) பாம்பு கடித்தல் : பாம்பு கடிக்கப்பட்டவரை சமதரையில் படுக்க வைக்க வேண்டும். கடித்த இடத்தில் துணியைக் கட்டவும் விஷம் உடலில் ஏறாமல் இருக்கும். துணியைச் சுற்றும்போது மேலிருந்து கீழாகச் சுற்ற வேண்டும்.

(ii) மின்சாரம் தாக்கினால் : மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். மின்சாரம் பாய்ந்தவரை அவசரப்பட்டுத் தொடக்கூடாது.

(iii) குழந்தைகளுக்கு அடிப்பட்டால் செய்ய வேண்டியவை : பனிக்கட்டியை அடிப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். அடிப்பட்ட இடத்தில் அட்டையை இரு பக்கமும் வைத்துக் கட்ட வேண்டும்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

சிந்தனை வினா

Question 3.
ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி யாது?
Answer:
ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என் இறப்புக்குப் பின் என்னுடைய உடல் உறுப்புகள் பிறருக்கு உதவும்படி செய்வதற்கு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்வேன். என் நண்பர் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

மதிப்பீடு

சிறுவினா

Question 1.
“முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.
Answer:
‘முடிவில் ஒரு தொடக்கம்’ என்ற தலைப்பின் காரணம் :
(i) உலகில் தோன்றுகின்ற எல்லாவற்றிற்கும் மறைவு என்பது உண்டு. தாவரங்கள்கூட தன் அழிவினால் நமக்கு நன்மையைத் தருகின்ற மரங்களை வெட்டுகிறோம். அதன் வேர் முதல் நுனி வரை நாம் பயன்படுத்துகிறோம்.

(ii) ஆனால் மனிதர்கள் இறந்தால் எதற்கும் பயன்படுவதில்லை . இதற்கு மாறாக இப்பாடத்தில் ஹிதேந்திரனின் இறப்பு ஒரு சிறுமியின் வாழ்வைக் காப்பாற்றியுள்ளது.

(iii) ஹிதேந்திரனின் இறப்பு ஒரு முடிவாகும். அச்சிறுமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தைப் பொருந்தியதால் அந்த இதயம் உயிர்பெற்று தன் இயக்கத்தைத் தொடங்குகிறது.

(iv) ஹிதேந்திரனின் உடலில் நின்றுபோன இதயத்தின் செயல்பாடு அச்சிறுமியின் உடலில் தொடங்கிற்று. எனவே முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பு சரியாகப் பொருந்துகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Question 2.
இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.
Answer:
தொடரும் இயக்கம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Students can Download 9th Tamil Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 1.
“இன்று பெரியார் இருந்திருந்தால்” என்னும் தலைப்பில் மேடைப் பேச்சுக்கான உரை ஒன்றை எழுதுக.
Answer:
அவையில் கூடியிருக்கும் அனைவருக்கும், முதற்கண் என் அன்பான வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.

இன்று உங்கள் முன் இந்த மேடையில் நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு என்ன தெரியுமா? “இன்று பெரியார் இருந்திருந்தால்” என்பதே ஆகும்.

பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர், தெற்காசியாவின் சாக்ரடீசு, வைக்கம் வீரர், பெண்ணினப் போர் முரசு, ஈரோட்டுச்சிங்கம், புத்துலகத் தொலை நோக்காளர் என்றெல்லாம் புகழப்பட்டவர் தந்தை பெரியார்.

அடிமை இருளில் மூழ்கிக் கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே, புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் எனில் மிகையாகாது. புதிய விடியலுக்கு தன் கொள்கையால் பூபாளம் இசைத்தவர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் புதிய சிந்தனை ஏற்படுத்திய பெரியார், இன்று இருந்தால், இன்றைய சமூக பண்பாட்டுச் சீர்கேடுகள், இன்றும் கல்வியில் உள்ள வேறுபாடுகள், பொருளாதார சீர்கேடுகள், நாகரிகமற்ற அரசியல் செயல்பாடுகள், சாதியினால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வீண் சண்டைகள், குழப்பங்கள், ஆணவக் கொலைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்கள் அனைத்தும் அந்தப் பகுத்தறிவு பகலவனை ஒளி குன்றச் செய்திருக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

கல்வியில், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு. பெண்களுக்கான இட ஒதுக்கீடு பெண்களுக்கான சொத்துரிமை, குடும்பநலத்திட்டம், கலப்புத் திருமணம், சீர்திருத்த திருமண சட்ட ஏற்பு என அவர் விதைத்த விதைகள் சில வேரூன்றி இருக்கின்றன. சில முளைக்காமலே போய்விட்டன. இந்த நிலையில் இன்று பெரியார் இருந்திருந்தால்,

“மீண்டும் ஒரு புரட்சி, மீண்டும் ஒரு மதுவிலக்கு, மீண்டும் ஒரு மொழிப் புரட்சி” எனப் புதிய புரட்சிகளால் புதிய விடியலை ஏற்படுத்தியிருப்பார்.

ஆனால், இன்று அவர் இல்லை, அவர் கொள்கைகளை உணர்ந்த நாம், அவர் காட்டிய வழியில் புதிய உலகம் செய்வோம். வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முயல்வோம்.

சமுதாயம் மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து மீண்டெழ அரும்பாடுபட்ட அவரது பிள்ளைகளாகிய நாம் அச்செயலை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்துவோம். நன்றி! வணக்கம்!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 2.
பெரியாரை நேர்காணல் செய்வதாகக் கருதி வினாப்பட்டியலை உருவாக்குக!
Answer:
நேர்காணலுக்கான வினாக்கள்

  • அய்யா! பகுத்தறிவு என்பதற்கு விளக்கம் தாருங்கள் அய்யா?
  • மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? தெளிவு படுத்துங்களேன்.
  • சாதியினால் மனித வாழ்விற்குப் பயன் உண்டா?
  • சாதியும் மதமும் மனித சமுதாயத்தை ஒற்றுமை படுத்துகிறதா? பிரித்து வைக்கிறதா?
  • கல்வியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களாகத் தாங்கள் கருதுபவை யாவை?
  • எத்தகைய நூல்கள் நம் மொழியில் படைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
  • உங்களுக்கு மிகவும் பிடித்தமான நூல் எது?
  • பெண்களை முன்னேற்ற உதவுவதற்கான வழிமுறைகள் யாவை?
  • நீங்கள் சிக்கனத்திற்குச் சான்றாய் இருப்பவர் சிக்கனத்தின் அவசியம் பற்றிச் சில வார்த்தைகள் கூறுங்களேன்.
  • சமுதாயம் மூட பழக்கத்தில் இருந்து மீண்டெழ இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
  • இன்றைய அரசியல் தலைவர்கள் நாட்டை ஆள்பவர்களுக்கு உங்கள் அறிவுரைகள் யாவை?
  • இன்றைய பத்திரிகைகள் இதழ்கள் ஊடகங்கள் பற்றி உங்கள் கருத்து யாது?
    மாணவர்களே இதைப் போன்று இன்றைய சூழலில் நீங்கள் பெரியாரைச் சந்தித்தால் என்ன கேட்க விரும்புகிறீர்களோ அவற்றை வினாக்களாக்கி இத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள்

Question 3.
“இன்றைய சமுதாயம் பெரியாரின் பாதையில் நடக்கிறதா? நடக்கவில்லையா? எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்துக.
Answer:

கலந்துரையாடல்

கலந்துரையாடுபவர்கள்: முகிலன், கமலா, ஆசிரியர், அகிலன்.

ஆசிரியர் : மாணவர்களே இன்று பெரியாரின் சிந்தனைகள் பற்றிய உரைநடையைப் பயின்றோம்
அல்லவா?

முகிலன் : ஆம் ஐயா! இந்த உரைநடை மூலம் பெரியார் கூறிய கருத்துகள் அவர் காட்டிய பாதையை அறிந்து கொண்டோம்.

ஆசிரியர் : ஆம். அவர் காட்டிய பாதையில் இன்றைய சமூகம் நடக்கிறதா இல்லையா?

கமலா : இல்லை ஐயா.

ஆசிரியர் : ஏன் கமலா அப்படி சொல்கிறாய்.

கமலா : ஐயா பெரியார் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடு பார்க்கக்கூடாது என்றார். ஆனால் இன்றும் எங்கள் கிராமத்தில் சாதியின் அடிப்படையில் தான் எல்லாம் நடைபெறுகிறது இதிலிருந்தே தெரியவில்லையா? பெரியார் வழியில் நடக்கவில்லை என்று.

முகிலன் : சரியாகச் சொன்னாய் கமலா எங்கள் சிற்றூரில் கூட சாதியைக் காரணம் காட்டி மக்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.

கமலா : அதுமட்டுமில்லை முகிலா! மணக்கொடை, வரதட்சணை கூடாது என்றார். ஆனால் எங்கள் உறவினர்களில் ஒரு பெண்ணுக்கு வரதட்சணை தரமுடியாமல் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. பின் எப்படி சமூகம் பெரியார் வழி நடக்கிறது என்று சொல்ல முடியும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

அகிலன் : இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கீங்க நான் கொஞ்சம் பேசலாமா?

கமலா : சொல்லு அகிலன்…..

அகிலன் : “நீங்க கலப்புத் திருமணம் செய்யலாம், சாதிமறுப்புத் திருமணம் செய்யலாம்” என்றார்.
ஆனால் அப்படி யாராவது செய்தால் கொல்லப்படுகிறார்கள் என்ன செய்வது….

முகிலன் : இதுமட்டுமல்ல வேறுபாடற்ற கல்வி வேண்டும் என்றார். இன்றும் பணம் படைத்தவர்கள் நல்ல பள்ளியில் நல்ல தரமான வேறுபட்ட கல்வி கற்க முடிகிறது. சாதாரண ஏழை ஜனங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை தானே…..

அகிலன் : இப்படியே பேசிக்கொண்டே போகலாம் கமலா. நாம் பெரியாரின் கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டுவர முயல்வோம்.

முகிலன் : ஆம் அகிலன்! நன்கு படித்துத் தொலைநோக்குடைய அவருடைய சிந்தனைகள் அவர் கற்றுத் தந்த தன்மதிப்பு, சமத்துவம் ஆகியவற்றை திறவுகோலாகக் கொண்டு புதிய சமுதாயத்தைப் படைப்போம்.

கமலா : நாம் நினைத்தால் முடியாதது இல்லை. முயல்வோம் வெல்வோம்….
ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி மாணவர்களே! நான் இன்று கற்றுக்கொடுத்தது வீணாகப் போவதில்லை ….

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
Answer:
கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

குறுவினா

Question 1.
“பகுத்தறிவு” என்றால் என்ன?
Answer:
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

சிறுவினா

Question 1.
சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
Answer:

  • பெரியார் அவர்கள், பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார்.
  • ஆனால் இன்றைய நடைமுறையில் பொருளாதாரத்தில் நிறைவு பெறவில்லை என்றாலும் சிறுகடன் பெற்றாவது அநேகர் ஆடம்பரமாகவே வாழ விரும்புகின்றனர்.
  • விழாக்களும் சடங்குகளும் மூடப்பழக்கம் வளர்ப்பதோடு வீண் செலவும் ஏற்படுத்துகிறது. சடங்குகள், விழாக்களைத் தவிர்த்து சிக்கனமாய் வாழச் சொன்னார்.
  • ஆனால் இன்று இதுவும் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.
  • எனவே பெரியார் கூறிய சிக்கனக் கொள்கைகளை, இன்றைய நடைமுறை நிகழ்வுகளில் பின்பற்ற முடியாத நிலையே அநேக நேரங்களில் உள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

நெடுவினா

Question 1.
மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.
Answer:
முன்னுரை:
தமிழக மக்களைப் பகுத்தறிவு பாதைக்கு அழைத்துச் சென்றவர் பெரியார். இந்தியாவின் பழமையான மொழி தமிழ். பழமையான இலக்கியமும் தமிழிலே உள்ளன. இலக்கியத்திலும், மொழியிலும் பெரியார் செய்த சீரமைப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.

மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் கருத்து:
மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும், மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராய் இருந்தார் தந்தை பெரியார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

இலக்கிய சீர்திருத்தம்:
அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும். மதம் கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற, யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியமே அதிகளவில் வேண்டும். திருக்குறளில் அறிவியல் கருத்துக்களும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால், அதை மதிப்புமிக்க நூலாகக் கருதியதோடு, திருக்குறளைப் போன்ற இலக்கியம் உருவாக வேண்டும் என்ற சீர்திருத்தத்தை உருவாக்க முனைந்தார்.

இலக்கியமானது அரசியல், சமூகம், பொருளாதாரம், சுயமரியாதை உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்பினார்.

மொழியில் சீர்திருத்தம்:
ஒரு மொழியின் பெருமையும், மேன்மையும், அவை எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. எனவே கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க தயங்கக் கூடாது என்று கருதினார் பெரியார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, உயிர் எழுத்துக்களில் ‘ஐ’ என்பதை ‘அய்’ எனவும் ‘ஔ’ என்பதை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். மேலும் மெய்யெழுத்துகளில் சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.

கால வளர்ச்சிக்கு மொழி சீரமைப்புகள் தேவை என்று கருதினார். அவரது சீரமைப்புக் கருத்தின் சில கூறுகளை 1978ம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

முடிவுரை:
மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் சிந்தனைகள், அறிவுலகின் திறவுகோலாய்த் திகழ்ந்தது எனில் மிகையாகாது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?
அ) அறிஞர் அண்ணா
ஆ) காமரசார்
இ) ராஜாஜி
ஈ) தந்தை பெரியார்
Answer:
ஈ) தந்தை பெரியார்

Question 2.
மன உறுதி படைத்த மக்களை உருவாக்க …… ……… இன்றியமையாதது.
அ) மக்கட் செல்வம்
ஆ) உறவு
இ) அன்பு
ஈ) பகுத்தறிவு
Answer:
ஈ) பகுத்தறிவு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 3.
மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு ……………… ஆகும்.
அ) போர்க்கருவி
ஆ) வாயில்
இ) துணை
ஈ) இணை
Answer:
அ) போர்க்கருவி

Question 4.
ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?
அ) 1938 நவம்பர் 14
ஆ) 1938 நவம்பர் 13
இ) 1939 நவம்பர் 16
ஈ) 1938 நவம்பர் 12
Answer:
ஆ) 1938 நவம்பர் 13

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 5.
தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?
அ) யுனெஸ்கோ நிறுவனம்
ஆ) காமன்வெல்த்
இ) தெற்காசிய கூட்டமைப்பு
ஈ) வெளிநாடுவாழ் இந்தியர் கூட்டமைப்பு
Answer:
அ) யுனெஸ்கோ நிறுவனம்.

Question 6.
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று பட்டம் வழங்கப்பட்ட நாள் ……………… ஆகும்.
அ) 26.05.1970
ஆ) 26.07.1970
இ) 24.06.1970
ஈ) 27.06.1970
Answer:
ஈ) 27.06.1970

Question 7.
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1921
ஆ) 1922
இ) 1925
ஈ) 1926
Answer:
இ) 1925

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 8.
தந்தை பெரியாரின் சொந்த ஊர் …………….
அ) ஈரோடு
ஆ) பொள்ளாச்சி
இ) நாமக்கல்
ஈ) சேலம்
Answer:
அ) ஈரோடு

Question 9.
பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது ……………
அ) அமைதி
ஆ) பகுத்தறிவு
இ) கோபம்
ஈ) முதுமை
Answer:
ஆ) பகுத்தறிவு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 10.
பெரியார் பின்பற்றிய கொள்கை ………….
அ) தலையிடாக் கொள்கை
ஆ) வரிகொடாக் கொள்கை
இ) கடவுள் மறுப்புக் கொள்கை
ஈ) கடவுள் சார்புக் கொள்கை
Answer:
இ) கடவுள் மறுப்புக் கொள்கை

Question 11.
பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறியவர் …
அ) பெரியார்
ஆ) அண்ணா
இ) காந்தி
ஈ) அம்பேத்கார்
Answer:
அ) பெரியார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 12.
1938 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராவுக்கு வழங்கப்பட்ட பட்டம் …….
அ) பெண்ணினப் போர்முரசு
ஆ) பெரியார்
இ) புத்துலகத் தெலை நோக்காளர்
ஈ) சுயமரியாதைச் சுடர்
Answer:
ஆ) பெரியார்

குறுவினா

Question 1.
பள்ளிகளில் கற்றுத் தரக் கூடாதனவாகப் பெரியார் கூறுவன யாவை?
Answer:

  • அறிவியலுக்குப் புறம்பான செய்திகள்
  • மூடப்பழக்கங்கள்

Question 2.
சாதி என்ற கட்டமைப்புக் குறித்துப் பெரியார் கூறுவன யாவை?
Answer:

  • சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது.
  • மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது.
  • மனிதர்களை இழிவுபடுத்துகிறது.
  • அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 3.
தேர்வுமுறை குறித்த பெரியாரின் சிந்தனைகளை எழுதுக.
Answer:
மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும்
முறையையும் எதிர்ப்பதாக பெரியாரின் சிந்தனை அமைந்தது.

Question 4.
தமிழ்மொழி குறித்த பெரியாரின் சிந்தனைகளை எடுத்தியம்புக.
Answer:

  • இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ்மொழியாகும்.
  • இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்.

Question 5.
திருக்குறளைப் பெரியார் ஏன் மதிப்புமிக்க நூலாகக் கருதினார்?
Answer:
திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக் கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார்.

Question 6.
பெரியார் நடத்திய இதழ்கள் யாவை?
Answer:
குடியரசு, விடுதலை, உண்மை , ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

சிறுவினா

Question 1.
தந்தை பெரியாரின் சிறப்புப் பெயர்களைக் கூறுக.
Answer:

  • பகுத்தறிவு பகலவன்
  • சுயமரியாதைச் சுடர்
  • தெற்காசிய சாக்ரடீசு
  • பெண்ணினப் போர் முரசு
  • வைக்கம் வீரர்
  • புத்துலகத் தொலைநோக்காளர்
  • ஈரோட்டுச் சிங்கம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 2.
கல்வி குறித்து பெரியாரின் சிந்தனைகள் யாவை?
Answer:

  • சமூக வளர்ச்சிக்குக் கல்வியே மிகச் சிறந்த கருவி. கற்பிக்கப்படும் கல்வியானது,
  • மக்களிடம் பகுத்தறிவு, சுயமரியாதை, நல்லொழுக்கம், சுய சிந்தனை ஆற்றல், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

Question 3.
தந்தை பெரியார் எவற்றையெல்லாம் எதிர்த்தார்?
Answer:

  • இந்தித்திணிப்பு
  • கள்ளுண்ணல்
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தைத் திருமணம்
  • சாதி அமைப்பு
  • மணக்கொடை
  • தேவதாசி முறை ஆகியவற்றை எதிர்த்தார்.

Question 4.
பெரியார் விதைத்த விதைகள் யாவை?
Answer:

  • கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
  • பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடு
  • குடும்ப நலத்திட்டம்
  • கலப்புத் திருமணம்
  • சீர்திருத்த திருமணச் சட்டம் ஏற்பு ஆகியவையாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Question 5.
பெண்கள் நலம் பற்றிய பெரியாரின் சிந்தனைகள் யாவை?
Answer:

  • நாட்டு விடுதலையை விட பெண் விடுதலைதான் முதன்மையானது.
  • கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
  • வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்.
  • பொருளாதாரத்தில் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கக் கூடாது.
  • நன்கு கல்வி கற்று, சுய உழைப்பில் பொருளீட்ட வேண்டும்.
  • தெளிந்த அறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் திகழ வேண்டும்.
  • கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய வழிவகை காண வேண்டும்.
  • குடும்பச் சொத்தில் ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.