Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

Students can Download 9th Tamil Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

Question 1.
“பிறருக்கு உதவி செய்வதற்கு மொழி தேவையில்லை” என்ற கருத்தை அடிப்படையாக் கொண்டு வகுப்பறை மேடையில் நடித்துக் காட்டுக.
Answer:
மாணவர்களே,
உங்கள் வகுப்பறை மேடையில் (mime show) மௌன நாடகமாக பின்வருவதை நடித்துக்காட்டுங்கள்.
நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது மிதிவண்டியில் வரும் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு, சாலையில் விழுகிறார் உடனடியாக நீங்கள் அவருக்கு முதலுதவி செய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்து, வீட்டு முகவரியை விசாரித்து பத்திரமாய் அழைத்து செல்வது என மேற்கூறிய காட்சியை நடித்து காட்டுங்கள்.
மனிதநேயம், அன்பு, இரக்கம், உதவி இவற்றை வெளிப்படுத்த மொழி தேவையில்லை என்பதை உணர்த்துங்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

Question 2.
கதையைத் தொடர்ந்து எழுதித் தலைப்பிடுக.
Answer:
சுண்டெலியின் அறிவு சுண்டெலிகளுக்குப் பூனையால் மிகவும் துன்பமான நேரம். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று சுண்டெலிகளைப் பிடித்துத் தின்றது பூனை. சுண்டெலிகள் ஒன்று சேர்ந்து என்ன செய்வது என்று ஆலோசித்தன. மேலும் மேலும் ஆலோசித்தன. ஆனால் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.
பிறகு ஒரு சின்ன சுண்டெலி சொன்னது, பூனைக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். நான் செய்கிறேன் என்றது. சரி முயற்சி செய்து பார் என்று மற்ற சுண்டெலிகள் கூறின.

அன்று பூனை தனக்குத் தேவையான சுண்டெலிகளைப் பிடித்துத் தின்று ஓய்வாக படுத்திருந்தது. சுண்டெலி அருகில் சென்றது. பூனை ஐயா! தங்களுக்கு என் வணக்கம். எங்கள் பூனைகளின் சார்பாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். அப்படியா என்ன… விஷயம் சொல்லு என்றது பூனை.

ஐயா! உங்கள் பசியைப் போக்க நீங்கள் அலைந்து திரிந்து எங்களைத் தேடி வந்து சாப்பிட வேண்டாம் ஐயா!
நாங்களே தேடி வந்து உங்களுக்குத் தேவையானபோது உணவாகி விடலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஐயா! ஓ அப்படியா ரொம்ப மகிழ்ச்சி. சரி எனக்கு எப்போது பசி என்று நீங்கள் எப்படி தெரிந்து கொள்வீர்கள்?

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

அதற்கு ஒரு யோசனை இருக்குதய்யா…. ம்ம்… சொல்லு உங்கள் நான்கு கால்களில் ஒரு காலில் மணி ஒன்றை கட்டி விடுகிறேன் ஐயா.

நீங்கள் பசிக்கும் போது… உங்கள் காலை தரையில் உதையுங்கள் மணியோசை கேட்டவுடன் நாங்கள் ஓடோடி வருகிறோம் ஐயா… என்றது.
பூனை யோசித்தது… சரி… நானும் வளை தேடி ஓடி வரவேண்டியிருக்காது சாப்பிட்டோமா… படுத்தோமான்னு நிம்மதியா இருப்பேன்… என்றது.

பூனையைத் தன் அறிவாற்றலால் வென்ற சுண்டெலி, பூனையின் காலில் மணியைக் கட்டிவிட்டு ஓடி வந்து விட்டது.
பயந்து போய் நின்ற தன் சக சுண்டெலிகளிடம் நான் மணியைக் கட்டிவிட்டேன். இனி மகிழ்ச்சியாக அவரவர் வளைகளிலும். பொந்துகளிலும் சுதந்திரமாக வாழலாம் என்றது.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘தாய்மைக்கு வறட்சி இல்லை’, என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.
Answer:
முன்னுரை:
எது வறண்டு போனாலும் உலகில் தாய்மை வறண்டு போவது இல்லை. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

1. அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:
தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.
செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கையில் உணவுடன் வந்த கணவனைத் தன் கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார். இவ்வாறு கண்டிப்பும் அன்பும் கலந்து அந்த ஏழைத்தாய் வறுமையிலும் தன்மானம் உள்ளவளாகக் காணப்படுகிறாள்.

2. குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:
குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். பசிமுள் அவள் வயிற்றைக் குத்தியது. சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள் அவள் அனுதாபத்துடன் குழந்தைகளைப் பார்த்து, இப்போ இப்படிச் சாப்டுகிறீர்கள் ராத்திரி என்ன செய்வீர்கள்? என்று உள்ளத்துள் வருந்துவதால் அன்புத்தாய் ஆகிறாள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

3. மனிதநேயம் புரிந்தாள்:
அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள்.

4. நாய்க்குட்டிகளை விரட்டுதல்:
சாப்பிடும் நேரத்தில் தொந்தரவு செய்த நாய்க்குட்டிகளைக் குரலிட்டபடியே கையைத் தூக்கி துரத்தினாள். ஒரு காலைத் தூக்கியபடியே ஓடின. நாய்க்குட்டி ஒலி எழுப்பியது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

5. சுவைத்து உண்டாள்:
தட்டை குழந்தையைப் போல மடியில் வைத்துக்கொண்டு உணவை வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. உண்டு உண்டு அந்த சுவையில் சொக்கி லயித்துக்கொண்டிருந்தாள். நாயின் ஒலி அவளைச் சுண்டி இழுத்தது. பாசத்தில் பரிதவித்து ஓடுகிறாள்.

6. நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:
எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை

முடிவுரை:
வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Students can Download 9th Tamil Chapter 9.3 குறுந்தொகை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.3 குறுந்தொகை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 1.
நீங்கள் கண்ட / உதவி செய்து மனம் நெகிழ்ந்த நிகழ்வை வகுப்பறையில் பதிவு செய்க.
Asnwer:
ஒருநாள், நான் காய்கறி வாங்குவதற்காகச் சந்தைக்குச் சென்றேன். காலை நேரமாக இருந்தாலும், வெயில் சுறுசுறுவென்று எரிந்துகொண்டிருந்தது. வெப்பம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலில் அம்மா அனுப்பி விட்டாளே என்று எண்ணிக்கொண்டே சென்றேன்.

என் முன்னே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடியின்றி நடந்து கொண்டிருந்தார், நான் அவரைக் கடந்து செல்ல முயன்றபோது, சோர்வுற்று கீழே விழுந்து விட்டார், தண்ணீர் தெளித்து, தேநீர் வாங்கிக் கொடுத்து என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவி செய்தனர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

சற்று அவர் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார். நான் அருகில் சென்று ஐயா! ஏன் விழுந்து விட்டீர்கள்? என்ன காரணம்? என்றேன்,
தம்பி நான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. என்னால் பசி மயக்கத்தில் ஓரடி கூட நடக்க முடியாது போல் உள்ளது என்ன செய்வேன் என்றார் என் கையில் அம்மா காய்கறி வாங்கி வரச் சொல்லி கொடுத்த 50 ரூபாய் இருந்தது. அருகில் ஒரு சிற்றுண்டிச் சாலை 20 ரூபாய்க்கு 4 இட்லியை வாங்கி கொடுத்துவிட்டு, மீதி உள்ள பணத்தில் காய்கறி வாங்கிச் சென்றேன். அம்மாவிடம் பயந்து கொண்டே கூறினேன். இப்பதாண்டா நீ என் பிள்ளை! என்று கூறி என்னை உச்சி முகர்ந்தாள்.

நான் மகிழ்ந்தேன்; நெகிழ்ந்தேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) பாலை
ஈ) நெய்தல்
Answer:
இ) பாலை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

குறுவினா

Question 1.
பிடிபசி களைஇய பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கணக் குறிப்புகளை கண்டறிக.
Asnwer:

  1. பிடிபசி – ஆறாம் வேற்றுமைத்தொகை
  2. களை இய – சொல்லிசை அளபெடை
  3. பெருங்கை – பண்புத்தொகை
  4. பெருங்கை வேழம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

Question 2.
குறுந்தொகை – பெயர் காரணம் எழுதுக.
Answer:
குறுமை + தொகை – குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகளால் குறுகிய பாக்களால் ஆன தொகுக்கப்பட்ட நூல் ஆதலால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

சிறுவினா

Question 1.
‘யா’ மரத்தின் பட்டையை உரித்தது எது? எதற்காக? விளக்குக.
Answer:

  • யா மரம் என்பது பாலை நிலத்தில் உள்ள ஒருவகை மரம் அதன் பட்டை ஈரத் தன்மையுடையது பாலை நிலத்தின் வழியாகக் கடந்து செல்லும் யானைகள்.
  • அப்போது ஆண் யானை பெண் யானையின் பசியையும் களைப்பையும் போக்கும் பொருட்டு அம்மரப்பட்டைகளை தன் தும்பிக்கையில் உரித்து பெண் யானைக்கு கொடுக்கும் காட்சியை குறுந்தொகை,
  • “பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்” என்று விளக்குகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘நசை பெரிது’ – எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?
அ) தோழியிடம் தலைவி கூறியது
ஆ) தலைவியிடம் தோழி கூறியது
இ) தலைவன் தலைவியிடம் கூறியது
ஈ) தலைவி தலைவனிடம் கூறியது
Answer:
அ) தோழியிடம் தலைவி கூறியது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 2.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை - 1
Answer:
சொல்
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 4, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 3.
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை யாது?
அ) 4 – 8
ஆ) 3 – 9
இ) 9 – 12
ஈ) 13 – 39
Answer:
அ) 4 – 8

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 4.
‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர் யார்?
அ) பூரிக்கோ
ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்
இ) பிள்ளைப்பெருமாள்
ஈ) உ.வே.சாமிநாதர்
Answer:
ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்

Question 5.
குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?
ஆ) 1915
இ) 1925
ஈ) 1920
Answer:
ஆ) 1915

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 6.
கலித்தொகையில் “பாலைத்திணை” பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) ஓதலாந்தையார்
இ) பெருங்கடுங்கோ
ஈ) அம்மூவனார்
Answer:
இ) பெருங்கடுங்கோ

Question 7.
“நசை பெரிது” என்னும் குறுந்தொகைப் பாடலை பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) ஓதலாந்தையார்
இ) பெருங்கடுங்கோ
ஈ) அம்மூவனார்
Answer:
இ) பெருங்கடுங்கோ

Question 8.
பாலை பாடிய பெருங்கடுங்கோ மரபைச் சார்ந்தவர்?
அ) சோழ
ஆ) பாண்டிய
இ) சேர
ஈ) பல்லவ
Answer:
இ) சேர

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 9.
‘நசை பெரிது’ பாடலில் அமைந்துள்ள இலக்கிய உத்தி எது?
அ) உள்ளுறை உவமை
ஆ) இறைச்சி
இ) உவமை
ஈ) உருவகம்
Answer:
ஆ) இறைச்சி

Question 10.
‘களை இய’ என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
அ) இன்னிசை அளபெடை
ஆ) வினையெச்சம்
இ) சொல்லிசை அளபெடை
ஈ) இசைநிறை அளபெடை
Answer:
இ) சொல்லிசை அளபெடை

குறுவினா

Question 1.
குறுந்தொகை – குறிப்பு வரைக.
Answer:

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை.
  • இது தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது.
  • 4 அடி சிற்றெல்லையும் 8 அடி பேரெல்லையும் கொண்டவை.
  • 1915 ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 2.
பெருங்கடுங்கோ – குறிப்பு வரைக.
Answer:

  • குறுந்தொகையின் 37ஆவது பாடலைப் பாடியவர் பெருங்கடுங்கோ.
  • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர் ஆவார்.
  • கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப் பெற்றார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Students can Download 8th Tamil Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

மதிப்பீடு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது …………………
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை
Answer:
இ) நடுவுநிலைமை

Question 2.
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் …………….
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
Answer:
ஆ) கல்லாதவர்

Question 3.
‘வல்லுருவம்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) வல் + உருவம்
ஆ) வன்மை + உருவம்
இ) வல்ல + உருவம்
ஈ) வல்லு + உருவம்
Answer:
ஆ) வன்மை + உருவம்

Question 4.
நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) நெடுநேர்
ஆ) நெடுத்தேர்
இ) நெடுந்தேர்
ஈ) நெடுமைதேர்
Answer:
இ) நெடுந்தேர்

Question 5.
‘வருமுன்னர்’ – எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ……………….
அ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
இ) உவமை அணி

குறுவினா

Question 1.
சான்றோர்க்கு அழகாவது எது?
Answer:
தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

Question 2.
பழியின்றி வாழும் வழியாக திருக்குறள் கூறுவது யாது?
Answer:
தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 3.
‘புலித் தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?
Answer:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக

Question 1.
தக்கார் தகவிலரெ என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
Answer:
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

Question 2.
தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.
Answer:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க
இடங்கண்ட பின்அல் லது.

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ……………
புலியின்தோல் ……… மேய்ந் தற்று.

2. விலங்கொடு …………. அனையர் ……………….
கற்றாரோடு ஏனை யவர்.
Answer:
1. பெற்றம், போர்த்து
2. மக்கள், இலங்குநூல்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.
Answer:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 1
1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 2
2. கடல்ஓடா கால்வல் நெடுந்நேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. திருவள்ளுவர் …………………. ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
2. திருக்குறளில் உள்ள முப்பால் ………………….
3. அறத்துப்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
4. பொருட்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
5. இன்பத்துப்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
6. நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே ………………… அழகாகும்.
7. புலித்தோல் போர்த்திய பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது மனத்தை அடக்க இயலாதவரின் வலிய ………………….
8. வளைவுடன் இருப்பினும் ………………. கொம்பு இனிமையைத் தரும்.
9. நேராக இருந்தாலும் ……………… கொடியதாக இருக்கும்.
10. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே ……………….. செயல்பட முடியும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்
Answer:
1. இரண்டாயிரம்
2. அறம், பொருள், இன்பம்
3. நான்கு
4. மூன்று
5. இரண்டு
6. சான்றோர்க்கு
7. தவக்கோலம்
8. யாழின்
9. அம்பு
10. சிறப்பாகச்

விடையளி

Question 1.
புகழாலும் பழியாலும் அறியப்படுவதாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Question 2.
பசுத்தோல் போர்த்திய புலி – விளக்குக.
Answer:
மனத்தை அடக்கி ஆளும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலமானது, புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்தது போன்றது.

Question 3.
அம்பு, யாழின் கொம்பு – இவற்றால் அறியப்படுவது யாது?
Answer:
(i) அம்பு நேராக இருந்தாலும் கொடியதாக இருக்கும். யாழின் கொம்பு வளைவுடன் இருந்தாலும் இனிமையைத் தரும்.
(ii) அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 4.
கல்லாதவர் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை .

Question 5.
விலங்கொடு மக்கள் அனையர் – விளக்குக.
Answer:
கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

Question 6.
யாருடைய வாழ்க்கை , நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழியும்?
Answer:
பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.

Question 7.
செயலைத் தொடங்குதல் பற்றிக் குறள் கூறுவது யாது?
Answer:
பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; 30 இகழவும் கூடாது.

Question 8.
தேர், கப்பல் மூலம் வள்ளுவர் கூறும் கருத்து யாது?
Answer:
(i) வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேரினால் கடலில் ஓட இயலாது.
(ii) கடலில் ஓடும் கப்பலினால் தரையில் ஓட இயலாது.
(iii) அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 3
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல்; ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

நடுவுநிலைமை

1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.*

தெளிவுரை : நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.

2. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

தெளிவுரை : தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவு நிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.
அணி : உவமை அணி.

கூடா ஒழுக்கம்

3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

தெளிவுரை : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
அணி : இல்பொருள் உவமை அணி.

4. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.*

தெளிவுரை : நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கல்லாமை

5. உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.

தெளிவுரை : கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை .

6. விலங்கொடு மக்களை அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.*

தெளிவுரை : கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

குற்றங்கடிதல்

7. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

தெளிவுரை : பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்து விடும்.
அணி : உவமை அணி.

8. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.*

தெளிவுரை : தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

இடனறிதல்

9. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

தெளிவுரை : பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

10. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.

தெளிவுரை : வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர்
தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.
அணி : பிறிது மொழிதல் அணி.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4

Students can download 11th Business Maths Chapter 4 Trigonometry Ex 4.4 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 4 Trigonometry Ex 4.4

Samacheer Kalvi 11th Business Maths Trigonometry Ex 4.4 Text Book Back Questions and Answers

Question 1.
Find the principal value of the following:
(i) sin-1 (\(-\frac{1}{2}\))
(ii) tan-1 (-1)
(iii) cosec-1 (2)
(iv) sec-1 (-√2)
Solution:
(i) sin-1 (\(-\frac{1}{2}\))
Let sin-1 (\(-\frac{1}{2}\)) = y
[where \(\frac{-\pi}{2} \leq y \leq \frac{\pi}{2}\)]
\(-\frac{1}{2}\) = sin y
sin y = \(-\frac{1}{2}\) (∵ \(\sin \frac{\pi}{6}=\frac{1}{2}\))
sin y = sin(\(-\frac{\pi}{6}\)) [∵ \(\sin \left(-\frac{\pi}{6}\right)=-\sin \left(\frac{\pi}{6}\right)\)]
∴ y = \(-\frac{\pi}{6}\)
∴ The principal value of sin-1 (\(-\frac{1}{2}\)) is \(-\frac{\pi}{6}\)

(ii) tan-1 (-1) = y
(-1) = tan y where \(\frac{-\pi}{2} \leq y \leq \frac{\pi}{2}\)
(or) tan y = – 1
tan y = tan(\(-\frac{\pi}{4}\)) (∵ \(\tan \frac{\pi}{4}\) = 1)
∴ y = \(-\frac{\pi}{4}\) [∵ \(\tan \left(-\frac{\pi}{4}\right)=-\tan \left(\frac{\pi}{4}\right)=-1\)]
∴ The principal value of tan-1 (-1) is \(-\frac{\pi}{4}\).

(iii) Let cosec-1 (2) = y
2 = cosec y
(or) cosec y = 2
⇒ \(\frac{1}{\sin y}\) = 2
⇒ sin y = \(\frac{1}{2}\) (Take reciprocal)
⇒ sin y = \(\sin \left(\frac{\pi}{6}\right)\)
⇒ y = \(\frac{\pi}{6}\)
The principal value of cosec-1 (-1) is \(\frac{\pi}{6}\).

(iv) Let sec-1 (-√2 ) = y
-√2 = sec y
sec y = -√2
\(\frac{1}{\cos y}\) = -√2
Taking reciprocal cos y = \(\frac{-1}{\sqrt{2}}\) [where 0 ≤ y ≤ π]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q1
∴ The principal value of sec-1 (-√2) is \(\frac{3 \pi}{4}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4

Question 2.
Prove that
(i) 2 tan-1 (x) = \(\sin ^{-1}\left(\frac{2 x}{1+x^{2}}\right)\)
(ii) \(\tan ^{-1}\left(\frac{4}{3}\right)+\tan ^{-1}\left(\frac{1}{7}\right)=\frac{\pi}{4}\)
Solution:
(i) Let tan-1 x = θ
x = tan θ
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q2

(ii) \(\tan ^{-1}\left(\frac{4}{3}\right)+\tan ^{-1}\left(\frac{1}{7}\right)=\frac{\pi}{4}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q2.1

Question 3.
Show that \(\tan ^{-1}\left(\frac{1}{2}\right)+\tan ^{-1}\left(\frac{2}{11}\right)=\tan ^{-1}\left(\frac{3}{4}\right)\)
Solution:
We know that tan-1 x + tan-1 y = \(\tan ^{-1}\left(\frac{x+y}{1-x y}\right)\)
Now LHS = \(\tan ^{-1}\left(\frac{1}{2}\right)+\tan ^{-1}\left(\frac{2}{11}\right)\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q3

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4

Question 4.
Solve: tan-1 2x + tan-1 3x = \(\frac{\pi}{4}\).
Solution:
Given tan-1 (2x) + tan-1 (3x) = \(\frac{\pi}{4}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q4
⇒ 5x = 1(1 – 6x2)
⇒ 6x2 + 5x – 1 = 0
⇒ (x + 1) (6x – 1) = 0
⇒ x + 1 = 0 (or) 6x – 1 = 0
⇒ x = -1 (or) x = \(\frac{1}{6}\)
x = -1 is rejected. It doesn’t satisfies the question.
Note: Put x = -1 in the given question.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q4.1
So the question changes.

Question 5.
Solve: tan-1 (x + 1) + tan-1 (x – 1) = \(\tan ^{-1}\left(\frac{4}{7}\right)\)
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q5.1
⇒ 7x = 2(2 – x2)
⇒ 7x = 4 – 2x2
⇒ 2x2 + 7x – 4 = 0
⇒ (x + 4) (2x – 1) = 0
⇒ x + 4 = 0 (or) 2x – 1 = 0
⇒ x = -4 (or) x = \(\frac{1}{2}\)
x = -4 is rejected, since does not satisfies the question.
∴ x = \(\frac{1}{2}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4

Question 6.
Evaluate
(i) cos[tan-1(\(\frac{3}{4}\))]
(ii) \(\sin \left[\frac{1}{2} \cos ^{-1}\left(\frac{4}{5}\right)\right]\)
Solution:
(i) Let \(\tan ^{-1}\left(\frac{3}{4}\right)\) = θ
\(\frac{3}{4}\) = tan θ
tan θ = \(\frac{3}{4}\)
∴ cos θ = \(\frac{4}{5}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q6
Now \(\cos \left(\tan ^{-1} \frac{3}{4}\right)\) = cos θ = \(\frac{4}{5}\)

(ii) Let \(\cos ^{-1}\left(\frac{4}{5}\right)\) = A
Then \(\frac{4}{5}\) = cos A
cos A = \(\frac{4}{5}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q6.1
We know that
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q6.2

Question 7.
Evaluate: \(\cos \left(\sin ^{-1}\left(\frac{4}{5}\right)+\sin ^{-1}\left(\frac{12}{13}\right)\right)\)
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q7
Let \(\sin ^{-1}\left(\frac{4}{5}\right)\) = A
sin A = \(\frac{4}{5}\)
∴ cos A = \(\frac{3}{5}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q7.1
Let \(\sin ^{-1}\left(\frac{12}{13}\right)\) = B
\(\frac{12}{13}\) = sin B
sin B = \(\frac{12}{13}\)
∴ cos B = \(\frac{5}{13}\)
Now \(\cos \left(\sin ^{-1}\left(\frac{4}{5}\right)+\sin ^{-1}\left(\frac{12}{13}\right)\right)\) = cos (A + B)
= cos A cos B – sin A sin B
= \(\frac{3}{5} \times \frac{5}{13}-\frac{4}{5} \times \frac{12}{13}\)
= \(\frac{15}{65}-\frac{48}{65}\)
= \(-\frac{33}{65}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4

Question 8.
Prove that \(\tan ^{-1}\left(\frac{m}{n}\right)-\tan ^{-1}\left(\frac{m-n}{m+n}\right)=\frac{\pi}{4}\)
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q8

Question 9.
Show that \(\sin ^{-1}\left(-\frac{3}{5}\right)-\sin ^{-1}\left(-\frac{8}{17}\right)=\cos ^{-1}\left(\frac{84}{85}\right)\)
Solution:
\(\sin ^{-1}\left(-\frac{3}{5}\right)-\sin ^{-1}\left(-\frac{8}{17}\right)=-\sin ^{-1}\left(\frac{3}{5}\right)+\sin ^{-1}\left(\frac{8}{17}\right)\)
= \(\sin ^{-1}\left(\frac{8}{17}\right)-\sin ^{-1}\left(\frac{3}{5}\right)\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q9
Let \(\sin ^{-1}\left(\frac{8}{17}\right)\) = A
\(\frac{8}{17}\) = sin A
sin A = \(\frac{8}{17}\)
∴ cos A = \(\frac{15}{17}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q9.1
Let \(\sin ^{-1}\left(\frac{3}{5}\right)\) = B
sin B = \(\frac{3}{5}\)
∴ cos B = \(\frac{4}{5}\)
Consider cos(A – B) = cos A cos B + sin A sin B
= \(\frac{15}{17} \times \frac{4}{5}+\frac{8}{17} \times \frac{3}{5}\)
= \(\frac{60}{85}+\frac{24}{85}\)
cos (A – B) = \(\frac{84}{85}\)
∴ A – B = \(\cos ^{-1}\left(\frac{84}{85}\right)\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q9.2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4

Question 10.
Express \(\tan ^{-1}\left[\frac{\cos x}{1-\sin x}\right]\), \(-\frac{\pi}{2}<x<\frac{3 \pi}{2}\) in the simplest form.
Solution:
\(\tan ^{-1}\left[\frac{\cos x}{1-\sin x}\right]\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q10
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q10.1
[∵ a2 – b2 = (a + b) (a – b)]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q10.2
[∵ Divide each term by cos \(\frac{x}{2}\)]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.4 Q10.3

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Students can Download 8th Tamil Chapter 2.5 வினைமுற்று Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 1.
‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.
Answer:
(எ.கா) அவன் வாழ்க. (ஆண்பால்)
(i) அவள் வாழ்க. (பெண்பால்)
(ii) மக்கள் வாழ்க. (பலர்பால்)
(iii) அது வாழ்க. (ஒன்றன்பால்)
(iv) ‘அவை வாழ்க. (பலவின்பால்)

(எ.கா) நாம் வாழ்க. (தன்மை )
(i) நீங்கள் வாழ்க. (முன்னிலை)
(ii) அவர்கள் வாழ்க. (படர்க்கை)

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று ………………..
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்
ஈ) மேய்ந்த து
Answer:
ஈ) மேய்ந்தது

Question 2.
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ………………….
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
ஈ) ஓடாது
Answer:
அ) படித்தான்

Question 3.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் …………
அ) செல்க
ஆ) ஓடு
இ) வாழ்க
ஈ) வாழிய
Answer:
அ) செல்க

சிறுவினா

Question 1.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும். (எ.கா.) மலர்விழி எழுதினாள்.

Question 2.
தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
Answer:
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறனையும் தெரிநிலை வினைமுற்று காட்டும்.
(எ.கா.) எழுதினாள்
செய்பவர் – மாணவி
காலம் – இறந்தகாலம்
கருவி – தாளும் எழுதுகோலும்
செய்பொருள் – கட்டுரை
நிலம் – பள்ளி
செயல் – எழுதுதல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 3.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
Answer:
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் : க, இய, இயர், அல்.

Question 4.
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 4

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
இயற்கையைப் பாதுகாப்போம்
Answer:
இயற்கை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நம்மைச் சுற்றியுள்ள மலை, காடு, ஆறு, நிலம் என்பனவாகும். ஆதிகால மனிதன் மலை, காடுகளில் வாழ்ந்து வந்தான். அங்கு விளைந்த காய்கறி, பழங்களை உண்டு வந்தான். அங்கிருந்த விலங்கினங்களைத் தங்கள் பணிகளுக்குப் பயன்படுத்தினான். அங்கு வாழ்ந்த மக்கள் அவற்றைத் தங்கள் வீட்டுச் செல்லக்குழந்தைகளாக வளர்த்தனர். இயற்கையைக் கண்டு வியந்தனர். அதனால் இயற்கையைத் தெய்வமாக எண்ணி வணங்கினர். இந்நிலை படிப்படியாய் வளர்ந்து காடு, மலை என்பது மாறி வயல், நாடு நகரம் என உருவாயின.

“நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர்; ஆடவர்
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!”

என்ற ஔவையின் பாடல் மூலம் நாம் அறிவது நிலமானது நாடு, காடு, மேடு, பள்ளம் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அம்மண்ணைப் பண்படுத்தி பயன்படுத்திக் கொள்ளும் ஆண்மகன் இருந்தால் அம்மண் வளம் பெறும்; நாடும் நலம் பெறும் என்பதாகும்.

நாம் நாகரிகம் என்ற பெயரில் புதிய புதிய அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தியும், பல தொழிற்சாலைகளை உருவாக்கியும் இயற்கையைப் பல வழிகளில் சீரழிக்கிறோம். நாம் இயற்கையை மறந்து போனதால்தான் வாழ வழியின்றி அழிந்து வருகின்றோம். இயற்கையை நேசிக்க மறந்துவிட்டோம். அதனால் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன.

கடல்கள் குப்பைகளின் கூடாரமாகிவிட்டன. அதனால் நீர்வாழ் அரிய உயிரினங்களும் அழிந்து வருகின்றன. கடல் உணவுகள் நஞ்சாகின்றன. சூரியன், சக்தியை மட்டுமே கொடுக்காமல் பல நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. நாம் அன்றாடம் உடுத்தும் உடைகள், பயன்படுத்தும் பொருள்களான பாய், போர்வை, தலையணைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வெயிலில் காய வைப்பதன் மூலம் பல ஆபத்தான நோய்க்கிருமிகளை இயற்கையான முறையிலேயே அழித்துவிட முடியும். நாம் விண்வெளியையும் மாசுபடுத்தத் தயங்கவில்லை. அதி நவீன கண்டுபிடிப்புகளால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

இயற்கை ‘தங்களை அழிக்காதீர்கள்’ என்று கூறுவது போலவும், தங்களுடைய அழிவில் ஏற்படும் விளைவுகள் யாவை என்பதை நமக்கு அறிவுறுத்தும் வகையிலும் அவ்வப்போது நிலநடுக்கம், கனமழை, நிலையற்ற தட்பவெப்பம், புயல்காற்று, கடல் சீற்றம் போன்றவற்றை உருவாக்கி நம்மை நல்வழிப்படுத்த எண்ணுகிறது.

இவற்றையெல்லாம் பார்த்தாவது நாம் சிந்திக்க வேண்டும். நல்லமுறையில் செயலாற்ற வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மைப்படுத்திக் கொள்ள இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை வெட்டிச் சாய்க்கும் நாம், புதியதாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். உடல், உள, சமூக ஆன்மிக நன்னிலையைக் காத்து நிற்கும் மரம் என்ற மருத்துவச் சுடரைத் தாய்நாடெங்கும் ஏற்றி வைப்போம். அச்சுடர்களின் ஒளியில் மிளிர்ந்து ஆரோக்கிய வாழ்வை நாம் வாழ வேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியவை, இயற்கையை நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். எங்கும் தூய்மையைப் போற்ற வேண்டும். காடுகளை அழிக்கக்கூடாது. மலைகளைத் தகர்க்கக் கூடாது. மண்வளத்தைச் சுரண்டக்கூடாது. நெகிழிப்பொருள்களைத் தவிர்க்க வேண்டும். இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமன்று; பொறுப்பும் என்பதை உணர்வோம்.

இயற்கையைக் காப்போம். எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்.
‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்’ என்ற வள்ளுவரின் வாய்மொழியைப் போற்றி வரும் முன் காப்போம். நோயற்ற மக்கள் சமுதாயத்தை உருவாக்குவோம்.

சொல்லக்கேட்டு எழுதுக

இயற்கையை விரும்புவது மட்டுமன்றி, அதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது. அது நமது கடமை மட்டுமன்று; பொறுப்பும் ஆகும். நாம் விரும்பிக் கண்டு களித்த இயற்கைச் செல்வங்களை, வரும் தலைமுறையினருக்காகச் சேர்த்தும் பாதுகாத்தும் வைக்க வேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ் எண்கள் அறிவோம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 2

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக

1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2.
2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16.
3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3.
4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6.
5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5.
Answer:
1. உ
2. கசு
3. ங
4. சு
5. ரு

அறிந்து பயன்படுத்துவோம்

தொடர் வகைகள்

தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.
செய்தித் தொடர் :
ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத் தொடர் :
ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.
(எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத் தொடர் :
ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.) இளமையில் கல்.      (ஏவல்)
உன் திருக்குறள் நூலைத் தருக      (வேண்டுதல்)
உழவுத்தொழில் வாழ்க.        (வாழ்த்துதல்)
கல்லாமை ஒழிக.    (வைதல்)

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

உணர்ச்சித் தொடர் :
உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்!     (உவகை)
ஆ! புலி வருகிறது!   (அச்சம்)
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே!    (அவலம்)
ஆ! மலையின் உயரம்தான் என்னே!     (வியப்பு)

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ……………………..
2. கடமையைச் செய் ………………………….
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! ………………………
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? …………………..
Answer:
1. செய்தித் தொடர்
2. ஏவல் தொடர்/விழைவுத்தொடர்
3. உணர்ச்சித் தொடர்
4. வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக.

(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

Question 1.
காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
Answer:
ஆ! காட்டின் அழகுதான் என்னே !

Question 2.
ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித் தொடராக மாற்றுக.)
Answer:
பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 3.
அதிகாலையில் துயில் எழுதுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
Answer:
அதிகாலையில் துயில் எழு.

Question 4.
முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித் தொடராக மாற்றுக.)
Answer:
முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

Question 5.
காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
Answer:
காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

கடிதம் எழுதுக

Question 1.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
Answer:

25, கம்பர் தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி – 2.
19-5-2019.

அன்புள்ள நண்பனுக்கு,
உன் அன்புத் தோழன் ராம் எழுதுவது. நலம். நலமறிய ஆவல். உன் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தம்பியை விசாரித்ததாகக் கூறவும்.

சென்ற வாரம் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாகவும் அடுத்து மாநில அளவில் நடக்கப் போகும் விளையாட்டுப் போட்டிகளுக்கு நீ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்தாளில் படித்தேன். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்தனர்.

உனக்கு விளையாடுவதில் ஆர்வம் மிகுதி என நானறிவேன். அதன் பயனாய் நீ உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளாய். இவ்வெற்றி உன் படிப்பிற்கான முழு செலவையும் அரசாங்கத்தை ஏற்க வைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.

உன்னுடைய இப்பயணம் மேலும் மேலும் வெற்றிப் பயணமாய்த் தொடர வேண்டும். முயற்சியைக் கைவிடாதே! வாழ்த்துகள்.

இப்படிக்கு
உன் அன்புத் தோழன்
ராம். அ.

உறைமேல் முகவரி
பெறுநர் அஞ்சல் தலை
ம.மாதேஷ்,
த/பெ. மணி,
எண் – 30, பாரி தெரு,
சென்னை – 20.

மொழியோடு விளையாடு

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 3

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக

1. நடக்கிறது – நட
2. போனான் – போ
3. சென்றனர் – செல்
4. உறங்கினாள் – உறங்கு
5. வாழிய – வாழ்
6. பேசினாள் – பேசு
7. வருக – வா
8. தருகின்றனர் – தா
9. பயின்றாள் – பயில்
10. கேட்டார் – கேள்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.
2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

கலைச்சொல் அறிவோம்

1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain
3. பள்ளத்தாக்கு – Valley
4. புதர் – Thicket
5. மலைமுகடு – Ridge
6. வெட்டுக்கிளி – Locust
7. சிறுத்தை – Leopard
8. மொட்டு – Bud

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ………………….
2. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொல் ………………….. என்றும் கூறுவர்.
3. முற்றுவினையை …………………….. என்றும் கூறுவர்.
4. வினைமுற்று ……………….. வினைமுற்று, ………………. வினைமுற்று என இருவகைப்படும்.
5. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று ………………… எனப்படும்.
6. ஏவல் வினைமுற்று …………………… ஆகிய இருவகைகளில் வரும்.
7. வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் …………………..
8. பாடினான் என்பது ………………….. வினைமுற்று.
9. வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று ………………..
Answer:
1. வினைச்சொல்
2. முற்றுவினை
3. வினைமுற்று
4. தெரிநிலை, குறிப்பு
5. ஏவல் வினைமுற்று
6. ஒருமை, பன்மை
7. க, இய, இயர், அல்
8. தெரிநிலை
9. வியங்கோள் வினைமுற்று

விடையளி:

Question 1.
வினைசொல் என்றால் என்ன?
Answer:
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) படித்தான், ஆடுகிறான்.

Question 2.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) எழுதினாள், பாடுகிறாள்.

Question 3.
வினைமுற்று எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பனவாம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 4.
தெரிநிலை வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையான செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

(எ.கா.) எழுதினாள்
செய்பவர் – மாணவி
கருவி – தாளும் எழுதுகோலும்
நிலம் – பள்ளி
காலம் – இறந்தகாலம்
செய்பொருள் – கட்டுரை
செயல் – எழுதுதல்

Question 5.
குறிப்பு வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு, காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.

(எ.கா.) பொருள் – பொன்னன்
இடம் – தென்னாட்டார்
காலம் – ஆதிரையான்
சினை – கண்ண ன்
பண்பு(குணம்) – கரியன்
தொழில் – எழுத்தன்

Question 6.
தமிழில் உள்ள வினைமுற்றுகள் யாவை?
Answer:
தமிழில் உள்ள வினைமுற்றுகள் :
(i) தெரிநிலை வினைமுற்று
(ii) குறிப்பு வினைமுற்று
(iii) ஏவல் வினைமுற்று
(iv) வியங்கோள் வினைமுற்று

Question 7.
ஏவல் வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
(எ.கா) எழுது – ஒருமை
எழுதுமின் – பன்மை

Question 8.
வியங்கோள் வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
(எ.கா) வாழ்க, ஒழிக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 9.
வியங்கோள் வினைமுற்று எவ்வெவற்றைக் காட்டும்?
Answer:
வியங்கோள் வினைமுற்று இருதிணைகளையும் ஐந்து பால்களையும் மூன்று இடங்களையும் காட்டும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Students can Download 9th Tamil Chapter 9.2 அக்கறை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.2 அக்கறை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 1.
நிலா, மழை, காற்று, தண்ணீர் போன்றவை குறித்து புதுக்கவிதைகளைத் திரட்டி இலக்கிய மன்றத்தில் படித்துக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 1
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
அ) ஒரு சிறு இசை
ஆ) முன்பின்
இ) அந்நியமற்ற நதி
ஈ) உயரப் பறத்தல்
Answer:
அ) ஒரு சிறு இசை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

சிறுவினா

Question 1.
“பழங்களை விடவும் நசுங்கிப் போனது” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம்:
இக்கூற்று (இவ் அடி) கல்யாண்ஜி எழுதியுள்ள “அக்கறை” என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்:
மிதிவண்டி ஓட்டி வந்த தக்காளி வியாபாரி மிதிவண்டியில் இருந்து சாய்ந்து விழ. கூடையில் இருந்த தக்காளிப் பழங்கள் சிதறி விழுந்தன. தலைக்கு மேல் வேலை இருப்பதாய், அனைவரும் கடந்தும், நடந்தும் சென்றனர். எல்லாம் நசுங்கி வீணானது. பழங்களை விடவும் சக மனிதர்கள் மீது உள்ள நேயமும், அக்கறையும் நசுங்கிப் போனது.

Question 2.
மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோர் எந்த நாட்டு தத்துவஞானிகள்?
அ) எகிப்து
ஆ) கிரேக்கம்
இ) இத்தாலி
ஈ) இஸ்ரேல்
Answer:
ஆ) கிரேக்கம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 2.
கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் யாது?
அ) கல்யாணராமன்
ஆ) கல்யாணசுந்தரம்
இ) கலியுகராமன்
ஈ) கலியபெருமாள்
Answer:
ஆ) கல்யாணசுந்தரம்

Question 3.
கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?
அ) வாணிதாசன்
ஆ) வண்ண தாசன்
இ) தமிழ்தாசன்
ஈ) பிச்சை
Answer:
ஆ) வண்ண தாசன்

Question 4.
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
அ) 2014
ஆ) 2015
இ) 2016
ஈ) 2017
Answer:
இ) 2016

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 5.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?
அ) புலரி
ஆ) ஆதி
இ) உயரப்பறத்தல்
ஈ) ஒரு சிறு இசை
Answer:
ஈ) ஒரு சிறு இசை

Question 6.
பொருத்திக்காட்டுக:
அ) ஒளியிலே – கடிதத்தொகுப்பு
ஆ) சில சிறகுகள் சில பறவைகள் – கட்டுரைத் தொகுப்ப
இ) அந்நியமற்ற நதி – சிறுகதைத் தொகுப்பு
ஈ) அகமும் புறமும் – கவிதைத் தொகுப்பு
அ) 3, 1, 4, 2
ஆ) 1, 2, 4, 3
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2

குறுவினா

Question 1.
வண்ணதாசன் என்னும் புனை பெயரில் எழுதுபவர் யார்? அப்பெயரில் எவ்விலக்கியத்தில் பங்களித்து வருகிறார்?
Answer:

  • கல்யாண்ஜி
  • கதை இலக்கியத்தில் ‘வண்ணதாசன்’ என்னும் பெயரில் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

சிறுவினா

Question 1.
கல்யாண்ஜியின் கவிதை நூல்களை எழுதுக.
Answer:

  • புலரி
  • முன்பின்
  • ஆதி ஆகியவையாகும்.
  • மணல் உள்ள ஆறு
  • அந்நியமற்ற நதி

Question 2.
கல்யாண்ஜியின் சிறுகதை நூல்களை எழுதுக.
Answer:

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்.
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்.
  • உயரப் பறத்தல்.
  • ஒளியிலே தெரிவது போன்றவையாகும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing Ex 7.1

Students can download 5th Maths Term 3 Chapter 7 Information processing Ex 7.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 7 Information processing Ex 7.1

Question 1.
Find the product of the following numbers:
(i) 234 × 765
(ii) 908 × 512
(ii) 481 × 503
Answer:
(ii) 234 × 765
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing Ex 7.1

(ii) 908 × 512
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 2

(iii) 481 × 503
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Students can download 5th Maths Term 3 Chapter 7 Information processing InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 7 Information processing InText Questions

Situation 2 (Text Book Page No. 63)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 1
Mugilan is the secretory of the Math club in his school. The principal of the school has announced for a quiz competition and Mugilon is given the incharge of arranging for the competition. Write the tasks to be done by Mugilon.
Answer:

  • Fixing number of participants in each team.
  • Allowed number of teams from a class.
  • Informing students about competition.
  • Who is the quiz master.
  • Number of rounds.
  • Prises and distribution.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Situation 2 (Text Book Page No. 64)

Consider the situation
Vizhyans birthday is on Wednesday. His father asked his sister Poovizhi to arrange for the party. She is happy to do it but does not know how to arrange for the party. Her father suggested her to first break the event into smaller tasks and complete those tasks one by one. Poovizhi thought that this way she could easily arrange for the party. If you are Poovizhi what would be tasks you will plan for. Write the smaller tasks which you will arrange.
Answer:

  • Set a budget
  • Write up a guest list
  • Shopping for gifts for birthday boy
  • Order invitations
  • Prepare food plan

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Activity (Text Book Page No. 64)

Sort the factors of 40,72 and 75 from the number board given below.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 2
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 3

○ – factor of 40
 – factor of 72
△ – factor of 72

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Students can Download 9th Tamil Chapter 9.1 விரிவாகும் ஆளுமை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 1.
உங்களுக்குப் பிடித்த தமிழ் ஆளுமைகள் குறித்துக் கலந்துரையாடிக் குறிப்புகளை எழுதுக.
Answer:

  • பூமிப்பந்து எங்கும் புகழ் பெற்றுத்திகழும் தமிழ் ஆளுமை காமராசர் ஆவார்.
  • ஆளுமை என்பது என்னவென்றால் ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள், ஆகியவை உள்ளிருந்து உருவாகி வாழ்க்கைக்காலம் முழுவதும் அவை சீராக அமைவதே ஆளுமை ஆகும்.
  • இவ் உரைநடையில் கற்றது போல் பிறர்நலம் பேணுதல், தியாகமும் நேர்மையும் ஆளுமை என்றால் காமராசர் சிறந்த ஆளுமை பண்பு உடையவரே.
  • தனது கஷ்டங்களைப் பொருட்படுத்தாது, சதாகாலமும் நாட்டின் நலனில் ஈடுபட்ட உள்ளத்தைப் பெற்றவர். தர்ம சிந்தனையும், நீதியும் உடையவர்.
  • மக்களுக்குத் தொண்டு செய்ய நீண்டகாலம் வாழவேண்டும் என்று வாழ்த்தப்பட்டவர்.
  • காமராசர் மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு தீர்ப்பதில் வல்லவர், நாட்டம் உடையவர் என்று இந்தியாவிலேயே பெருமையாகப் பேசப்பட்டவர்.
  • மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் கூட நிகழாத அற்புதத்தைத் தமிழகத்தில் நடத்தியவர் என்று பெரியாரே புகழ்ந்துள்ளார்.
  • கல்விப் புரட்சியும், சமூக நீதிக்கான புரட்சியும் நடத்திக் காட்டியவர்.
  • இவரது பொதுவாழ்க்கை நேர்மை, எளிமை, தூய்மை என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. கறைபடியாத கரங்களை உடையவராகத் திகழ்ந்தார்.

தோழர்களே நம் நாடு உருப்பட வேண்டுமானால் குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரைப் படித்துக் கொள்ளுங்கள்; விட்டுவிடாதீர்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். “காமராசரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளு சிக்காது” என்று 82 வயதான தந்தை பெரியாரால் பாராட்டபட்டார். எனில் காமராசரை விட சிறந்த ஆளுமை உண்டோ !

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 2.
உலகத் தமிழ் மாநாட்டு மலர், பொங்கல் மலர், தீபாவளி மலர், போன்றவற்றில் வெளிவந்துள்ள உலகப் பொதுவியல் சிந்தனைகள் குறித்து 5 மணித்துளிகள் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்.
பொங்கல் மலர் ஒன்றில் புதிய சிந்தனைகள் நிறைந்த கருத்தடங்கிய கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.
இளமை நிலையற்றது, வாழ்வு நிலையற்றது. இளமை என்பது அழகு இல்லை அது ஒரு பருவம், அப்பருவத்தில் நன்மை செய்பவர்களாய் நாம் வாழவேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தியது.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

என்று உலகுக்கு உணர்த்தியவன் தமிழன். பண்டைய தமிழன் சிறந்த உலகப்பொதுமை சிந்தனை உடையவனாக இருந்தான்.
நரையும் மூப்பும் வரும் என்பதை முன்னரே உணர்ந்து காமம், வெகுளி, மயக்கம் என்று கிடைக்காமல் நன்மை செய்யுங்கள் நன்மையே உங்களை நன்னெறிக்கு இட்டுச்செல்லும். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணுங்கள்.
“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்” நாகரிகம் எனப்படா. அனைத்து உயிர்களிடத்தும் உயிர்நேயம் உடையவனே நாகரிகம் உடையவன்.

குளிர்ச்சியான சோலையில் காய்த்திருக்கும் காய்கள் கனிந்தவுடன் உதிர்ந்து விடுவது போல், வாழ்வும் உதிர்ந்துவிடும் தன்மையது. எனவே வாழும்போதே, “மற்று அறிவோம் நல்வினை” என்பதை உணர்வோமாக.

அறிவுடையோர் இவ்வுண்மையை உணர்ந்து கொள்க! இந்த உண்மையை உணராதவரை அறிவில்லாதவர் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

“தோறார் விழியிலா மாந்தர்” என்கிறார்.

இளமை கழிந்து போகுமுன் அருமையான அறச்செயல்களைச் செய்து விட வேண்டும். முதுமையில் எண்ணினாலும், அருஞ்செயலை செய்வதற்குரிய ஆற்றல் இல்லாது போய்விடும், எண்ணும் உலகளாவிய பொதுவியல் சிந்தனையைக் கூறும் இக்கட்டுரை, என் மனதை மாற்றியது. இச்சொற்பொழிவைக் கேட்ட நீவிரும் அறம் செய்ய முயல்க.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
அ) கொம்பு
ஆ) மலையுச்சி
இ) சங்கு
ஈ) மேடு
Answer:
ஆ) மலையுச்சி

Question 2.
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..
அ) நிலையற்ற வாழ்க்கை
ஆ) பிறருக்காக வாழ்தல்
இ) இம்மை மறுமை
ஈ) ஒன்றே உலகம்
Answer:
ஈ) ஒன்றே உலகம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

குறுவினா

Question 1.
தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையரின் சான்றோருக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
உரோம நாட்டவர் : உரோமையரின் சான்றோர் எழுதும்போது நாம் நம்மவர் என்ற செருக்குடன் உரோமரை கருதியே எழுதுகின்றனர்.

தமிழ்ச் சான்றோர் : எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய கொள்கையை தம் நூல்களில் யாத்துள்ளனர் என்பதே இரு சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

சிறுவினா

Question 1.
உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளாக ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?
Answer:
ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர், திருக்குறளைப் பற்றிக் கூறும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலக இலக்கியத்தில் காண்பது அரிது என்பார்.”

அவர் குறிப்பிட்ட அரிய கருத்துகள்:

  • மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.
  • பிறப்போ சாதியோ சமயமோ மக்களை உயர்த்தவோ, தாழ்த்தவோ, முடியாது.
  • இத்தகைய கொள்கைகள் வள்ளுவர் காலத்திற்கு முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன என்று வியக்கிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 2.
கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.
Answer:
கோர்டன் ஆல்போர்ட் ஓர் உளநூல் வல்லுநர். அவர் கூறும் மூன்று இலக்கணங்களாவன.

  • மனிதன் தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய
  • நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.
  • பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்க வேண்டும்.
  • ஒருவன் அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கண்டுபிடித்து நடத்தல் வேண்டும்.

நெடுவினா

Question 1.
தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துகளைத் தனிநாயக அடிகள் வழி நிறுவுக.
Answer:
முன்னுரை:
உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் சான்றாண்மைத்தன்மை. இச்சான்றாண்மைப் பண்பு பண்டைத் தமிழ்ப் புலவர்களால் பாராட்டி பாடப்பட்டுள்ளது. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைப் பண்புகளை அறியலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

யாதும் ஊரே யாவரும் நம்மவரே:
கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் சான்றாண்மைக் கொள்கையை இக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கூறியுள்ளார்.

‘யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவர்’ என்று திருக்குறளும் நம் காலத்திற்கும் பொருந்தி வரும் அறிவுரையைக் கூறியுள்ளது. ஊர், நாடு, கேளிர் என்னும் இச்சொற்கள் பரந்த மனப்பான்மை மனித நலக் கோட்பாடு என்னும் சான்றாண்மையை வலியுறுத்துகிறது

இலட்சியங்களைக் கடைப்பிடித்தல்:
இலட்சியங்களைக் கடைப்பிடிக்கும் சமுதாயம் உயரும். குறிக்கோள் இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும். குறிக்கோள் இல்லாத மனிதன் வெறும் சதைப்பிண்டம் என்பதை, “பூட்கையில் லோன் யாக்கை” போல என்று புலவர் ஒருவர் புறநானூற்றில் கூறுகிறார். குறிக்கோள் வேண்டும் என்பதை வள்ளுவம் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று குறிப்பிடுகிறார்.

பிறர் நலவியலும் ஒற்றுமை உணர்ச்சியும்:
பிறர் நலத்துக்காகப் பணி செய்வதில் தான் ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கை ஆகிறது. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையைப் பின்பற்றினர் தமிழர். இச்செய்தி தமிழ்ச் சான்றோர் தன்னலம் தேடுவதில் இருந்து விடுவித்துப் பிறர் நலம் பேணுவதில் தான் சிறந்தனர் என்பதை உணர்த்துகின்றது. மக்கள் அனைவரும் தன் இனத்தவர் எல்லா உயிர்க்கும் அன்பு காட்டுதல் வேண்டும் என்ற உயரிய சான்றாண்மைப் பண்பை பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

ஒற்றுமை உணர்வு:
பாணர்களும் பாடினிகளும் தமிழ்ப் புலவர்களையும் அரசர்களையும் மக்களையும் நாட்டையும் வேறுபாடு இன்றி பாடியதால் தமிழகம் என்ற ஒற்றுமை உணர்வை உருவாக்கினர். பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலை ஒருவருக்கு ஒருவர் உதவுதல் ஆகிய அவர் தம் அன்பையும் ஒற்றுமை உணர்வையும் பறைசாற்றுகின்றன.

நன்மை செய்தல்:
தமிழ்ச் சான்றோர்களின் இன்றியமையாப் பண்பு, நன்மையை நன்மைக்காக செய்வதுதான் பிறர் போற்றுவார்கள் என்றோ, வேறு நலன்களைப் பெறலாம் என்றோ தமிழர் நன்மைகளைச் செய்யவில்லை என்பதற்குக் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான “ஆய்” சான்றாவான்.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவினை வணிகன் ஆய்அலன்”, என்று புறநானூறு பாராட்டுகிறது.

பிறர்க்காக நன்மை செய்து வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும் “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற புறப்பாட்டு இப்பண்பையே எடுத்துக்காட்டுகிறது.

முடிவுரை:
இவ்வாறு நம் இலக்கியங்கள் நம் தமிழ்ச் சான்றோர்களின் பண்புகளையும் மக்கட் தன்மையை வளர்க்க முனைந்ததையும் உலகமெல்லாம் தழுவுவதற்கும் உரிய பண்புகளை வளர்த்தனர் என்று தனி நாயக அடிகள் தம் கட்டுரை வாயிலாக நிறுவுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) வள்ளுவர்
இ) கணியன் பூங்குன்றனார்
ஈ) ஔவையார்
Answer:
இ) கணியன் பூங்குன்றனார்

Question 2.
நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று – என்ற கூற்றை கூறியவர்
அ) ஹாக்கின்ஸ்
ஆ) ரஷல்லி
இ) வேட்ஸ்வொர்த்
ஈ) தெறென்ஸ்
விடை:
ஈ) தெறென்ஸ்

Question 3.
புலவர் தெறென்ஸ் எம்மொழிப் புலவர்?
அ) ஆங்கிலம்
ஆ) பிரெஞ்சு
இ) இலத்தீன்
ஈ) அரபு
Answer:
இ) இலத்தீன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 4.
முதிர்ந்த ஆளுமைக்கான இலக்கணம் கூறியவர் யார்?
அ) ஹாக்கின்ஸ்
ஆ) கோர்டன் ஆல்போர்ட்
இ) தெறென்ஸ்
ஈ) ஷெல்லி
Answer:
ஆ) கோர்டன் ஆல்போர்ட்

Question 5.
“பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
அ) எல்லை
ஆ) வாழ்க்கை
இ) நட்பு
ஈ) குறிக்கோள்
Answer:
ஈ) குறிக்கோள்

Question 6.
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் என்று கூறிய புலவர் யார்?
அ) கூடலூர் கிழார்
ஆ) ஆலந்தூர் கிழார்
இ) ஆலந்தூர் மோகனரங்கன்
ஈ) கபிலர்
Answer:
ஆ) ஆலந்தூர் கிழார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 7.
ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை யார்?
அ) ஆல்பர்ட் சுவைட்சர்
ஆ)கோர்டன் ஆல்போர்ட்
இ) தெறென்ஸ்
ஈ) ஹாக்கின்ஸ்
Answer:
அ) ஆல்பர்ட் சுவைட்சர்

Question 8.
கங்கையையும், இமயத்தில் பெய்யும் மழையையும் உவமைகளாக எடுத்துக் கூறும் நூல் எது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) புறநானூறு

Question 9.
“Sapens” என்பதன் பொருள் யாது?
அ) அறிவற்றவன்
ஆ) புத்தியில்லாதவன்
இ) முட்டாள்
ஈ) அறிவுடையோன்
Answer:
ஈ) அறிவுடையோன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 10.
தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் எது?
அ) தென்றல்
ஆ) குயில்
இ) தமிழ்ப்பண்பாடு
ஈ) தமிழ்க்கலச்சாரம்
Answer:
இ) தமிழ்ப்பண்பாடு

Question 11.
உலகத்தமிழாய்வு மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?
அ) அமுதன் அடிகள்
ஆ) குன்றக்குடிகள் அடிகள்
இ) தனிநாயக அடிகள்
ஈ) ஞானியாரடிகள்
Answer:
தனிநாயக அடிகள்

Question 12.
‘விரிவாகும் ஆளுமை’ – என்னும் உரைநடைப் பகுதி தனிநாயகம் அடிகளால் எங்கு நிகழ்த்தப்பட்ட உரை?
அ) யாழ் பல்கலைக்கழகம்
ஆ) சிக்காகோ
இ) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஈ) தில்லி பல்கலைக்கழகம்
Answer:
அ) யாழ் பல்கலைக்கழகம் (இலங்கை)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 13.
மார்க்ஸ் அரேலியஸ் என்பவர் ……………….
அ) தத்துவஞானி
ஆ) பேரரசர்
இ) விஞ்ஞானி
ஈ) கவிஞர்
Answer:
ஆ) பேரரசர்

Question 14.
செனக்கா என்பவர் ……………….
அ) தத்துவஞானி
ஆ) பேரரசர்
இ) விஞ்ஞானி
ஈ) கவிஞர்
Answer:
அ) தத்துவஞானி

Question 15.
நாம், நம்மவர் என்ற செருக்கோடு எழுதுபவர்கள் ……………….
அ) உரோமர்
ஆ) தமிழர்
இ) கிரேக்கர்
ஈ) இந்தியர்
Answer:
அ) உரோமர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 16.
‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்று கூறும் நூல் ……………….
அ) நாலடியார்
ஆ) திருக்குறள்
இ) பழமொழி நானூறு
ஈ) புறநானூறு
Answer:
ஆ) திருக்குறள்

குறுவினா

Question 1.
பண்டைக்கால தரும சாத்திர நூல்கள் பிறரைக் கவனத்தில் கொள்ளாமைக்கான காரணம் யாது?
Answer:
விந்திய மலைத்தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பே கருமபூமி, வீடுபேறு அடைவதற்கு அப்பூமியிலே பிறந்திருக்க வேண்டும் என்னும் கருத்தால் பண்டைக்கால தருமசாத்திர நூல்கள் பிறரைக் கவனத்தில் கொள்ளவில்லை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 2.
ஸ்டாயிக் விதிகளின் நம்பிக்கை யாது?
Answer:

  • மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.
  • பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 3.
பிறர் நலக்கொள்கையைப் பரப்புவதற்குக் காரணமாயிருந்தவர்கள் யாவர்?
Answer:

  • தமிழ்நாட்டுப் பாணர்
  • புலவர்

Question 4.
புலவர்கள் நீண்ட வாழ்க்கைக்கும் பன்மைக்கும் உவமையாகக் கூறும் இடங்கள் யாவை?
Answer:
குமரி ஆறு, காவிரி ஆறு போன்ற மணல் நிறைந்த இடங்களை நீண்ட வாழ்க்கைக்கும் பன்மைக்கும் உவமையாகப் புலவர்கள் கூறுகிறார்கள்,

Question 5.
திருக்குறளில் பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகளாகக் கூறப்படுவன யாவை?
Answer:

  • பிறர்பால் அன்புடைமை எனும் கருத்து மற்றும்
  • இல்லற வாழ்க்கையின் நோக்கம் ஈகை, விருந்தோம்பல் போன்ற பண்புகளில் ஆளுமையை வளர்த்தல் ஆகும்.

Question 6.
செனக்கா என்னும் தத்துவ ஞானியின் கருத்தினை எடுத்தியம்புக.
Answer:

  • எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு
  • நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய்நாடு என்று கருதுவதே செனக்கா என்னும் தத்துவ ஞானியின் கருத்தாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 7.
தான் உலகிற்கு உரியவன் என்பதை மார்க்ஸ் அரேலியஸ் எங்ஙனம் கூறுகிறார்?
Answer:

  •  நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்.
  • நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்.
  • நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன் என்று மார்க்ஸ் அரேலியஸ் கூறியுள்ளார்.

Question 8.
குறிக்கோளை அடைவதற்கு திருவள்ளுவர் கூறும் இரண்டு அறிவுரைகளை எழுதுக.
Answer:

  • உள்ளற்க உள்ளம் சிறுகுவ (798).
  • உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் (596).

சிறுவினா

Question 1.
சீன நாட்டின் தத்துவ ஞானிகளைக் குறிப்பிடு.
Asnwer:

  • சீனநாட்டில் கி.மு. 604ம் ஆண்டில் பிறந்த லாவோட்சும்
  • கி.மு. 551-479 காலத்தில் வாழ்ந்த கன்பூசியசும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 2.
முதிர்ந்த ஆளுமைக்குரிய மூன்று இலக்கணங்கள் யாவை?
Answer:

  • தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.
  • பிறருடைய நலத்திற்கும், இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் ஆளுமையில் விரிவு பெற்றிருக்க வேண்டும்.
  • தன் வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.

Question 3.
திருக்குறளைப் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் கூறுவது யாது?
Answer:
“உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலே காண்பது அரிது” என்று கூறுகிறார்.

Question 4.
‘பண்புடைமைக்குப் பரிப்பொருமாள் கூறும் இலக்கணம் யாது?
Answer:
பண்புடைமையாவது: யாவர் மாட்டும் அவரோடு, அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும், பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்களை உடைமையே பண்புடைமை ஆகும் என்று கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.1 விரிவாகும் ஆளுமை

Question 5.
திருக்குறளுக்கும், ஸ்டாயிக்வாதிகளுக்கும் உள்ள பொதுவான தன்மை யாது?
Answer:
மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று கருதுவதோடு, உயிர்கள் அனைத்தையும், மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று, கருதும் பண்பு திருக்குறளுக்கும், ஸ்டாயிக்வாதிகளுக்கும் உள்ள பொதுவான தன்மையாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Students can Download 8th Tamil Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
இடம் : குறிஞ்சி புதர்
கதாபாத்திரங்கள் : வெட்டுக்கிளி, சருகுமான்
(குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அங்கு வந்த கூரன் என்ற சருகுமானிடம் வெட்டுக்கிளி பேசியது…)

காட்சி – 1
வெட்டுக்கிளி :
“என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாக ஓடுகிறாய்?”

சருகுமான் :
காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும். எனக்குச் சோர்வாக வேறு இருக்கிறது. பல மணி நேரமாக ஓடி ஓடிக் களைத்துப் போய்விட்டேன்.
(சிறுத்தை துரத்திக் கொண்டு வருவதால் கூரன் மரக்கிளைக்கு அடியில் ஒளிந்து கொண்டு வெட்டுக்கிளியை எச்சரித்தது.)

சருகுமான் : வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசக்கூடிய ஆள். பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே. அது என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்.

காட்சி – 2
(பித்தக்கண்ணு சத்தமில்லாமல் மரக்கிளைக்கு அருகில் வந்து சேர்ந்தது.)

பித்தக்கண்ணு : கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?

(வெட்டுக்கிளி பதில் கூறவில்லை . ஆனால் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. பித்தக்கண்ணு வெட்டுக்கிளியின் செய்கையால் கூரன் ஒளிந்திருந்த மரத்தடிப் பக்கம் சென்று மோப்பமிட்டது. மோப்பம் பிடித்தபடி சுற்றி வந்தது. அதற்குக் கூரனின் உடல்வாடை தெரியவில்லை . முதல் நாள் இரவு அந்த மரத்தடியில் தங்கியிருந்த புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. எனவே அது அந்த இடத்தைவிட்டு வேறு பக்கம் சென்றது. கூரன் : (தன்னைக் காட்டிக் கொடுக்க எண்ணிய வெட்டுக்கிளியை மிரட்ட வேண்டும் என்று எண்ணியபடி வெளியே வந்தது.)

கூரன் :
முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான். இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

(சொல்லிக் கொண்டே கூரன் தன் கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. குறிஞ்சிப்புதர் ஆடியதில் வெட்டுக்கிளி கீழே விழப்போனது. கூரன் காட்டுக்குள் ஓடியது. அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது.)

மதிப்பீடு

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமது முன்னோர்களின் வாழ்வை வருங்காலத் தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்று எண்ணினர். எனவே காடுகள், செடிகொடிகள், விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கு சொல்லிய கதைகளுள் ஒன்றைப் பற்றிப் பார்ப்போம்.

குறிஞ்சிப்புதர் :
நடுக்காட்டில் ஓடும் ஓடையையுடைய பள்ளத்தாக்கில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அதன்மீது பச்சைப்பாசி படர்ந்திருந்தது. பூச்சி புழுக்கள், நத்தைகள் அந்த மரத்தை மொய்த்துக் கொண்டிருக்கும். காட்டு விலங்குகள் நீர் அருந்த அந்த ஓடைக்கு வரும். தாகம் தணிந்ததும் சிறு விலங்குகள் பக்கத்திலுள்ள அடர்ந்த குறிஞ்சிப் புதரில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

வெட்டுக்கிளியும் சருகுமானும் (கூரனும்) :
குறிஞ்சிப் புதரில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு வாயாடி வெட்டுக்கிளி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும். கூரன் என்ற சருகுமான் சிறிய பிராணி, கூச்சப்படும் விலங்கு. அதனால் வெட்டுக்கிளி பயப்படவில்லை. கூரன் குறிஞ்சிப் புதர் அருகே இளைப்பாற வந்தது.

கூடி ஒளிந்த கூரன் :
கூரனைப் பார்த்த வெட்டுக்கிளி, “இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாய் ஓடுகிறாய்?” என்று கேட்டது. கூரன், “காட்டின் அந்தக்கோடியில் இருந்தேன். உன்னிடம் பேச நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்துகிறது” என்று கூறிவிட்டு அம்மரத்தடியில் ஒளிந்து கொண்டது. வெட்டுக்கிளியிடம் நீ “பித்தக்கண்ணுவிடம் நான் இங்கு இருப்பதைச் சொல்லிவிடாதே. என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்…” என்றது. பித்தக்கண்ணு என்பது பெரிய, மஞ்சள் நிற கண்களை உடைய சிறுத்தையாகும்.

வெட்டுக்கிளியின் செயல் :
பித்தக்கண்ணுவைப் பக்கத்தில் பார்ப்பது வெட்டுக்கிளிக்கு இதுதான் முதல்முறை. உற்சாக மிகுதியால் பதில் சொல்ல எண்ணிய பொழுது கூரனுக்கு அளித்திருந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தால் வாயை மூடிக் கொண்டது. ஆனால் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.

பித்தக்கண்ணுவின் ஏமாற்றம் :
வெட்டுக்கிளியின் ஆட்டத்திற்கான பொருளை உணர்ந்த பித்தக்கண்ணு, கூரன் , பதுங்கிக் கிடந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. நல்ல வேளையாக முதல்நாள் இரவுதான் அந்த மரத்தடியில் புனுகுப் பூனை ஒன்று தங்கியிருந்தது. அது தங்கிய இடம் மிகவும் நாறும். அதனால் கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணுவின் மூக்குக்கு எட்டவில்லை. மாறாக புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. பித்தக்கண்ணு சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிடைக்காததால் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

கூரனின் மிரட்டல் :
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்த வெட்டுக்கிளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணியது. “முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான்” என்று கத்தியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்” என்று வெட்டுக்கிளியைக் கூரன் மிரட்டிக் கொண்டே தனது கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. தன் கோபப் பார்வையை வீசிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

முடிவுரை :
அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது. இதனால்தான் இன்றும்கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. ஆனாலும் அவை எந்தத் திசையை நோக்கியும் குதிப்பதில்லை.