Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

Students can Download 8th Tamil Chapter 3.1 நோயும் மருந்தும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.1 நோயும் மருந்தும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
ஐம்பெருங்காப்பியங்கள் :
(i) சிலப்பதிகாரம்
(ii) மணிமேகலை
(iii) வளையாபதி
(iv) குண்ட லகேசி
(v) சீவகசிந்தாமணி

ஐஞ்சிறுகாப்பியங்கள் :
(i) உதயண குமார காவியம்
(ii) நாக குமார காவியம்
(iii) யாசோதர காவியம்
(iv) சூளாமணி
(v) நீலகேசி.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உடல்நலம் என்பது …………….. இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
Answer:
இ) பிணி

Question 2.
நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……….
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நன்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 3.
‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) இ + யுண்டார்
ஆ) இவ் + உண்டார்
இ) இவை + உண்டார்
ஈ) இவை + யுண்டார்
Answer:
இ) இவை + உண்டார்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

Question 4.
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) தாம் இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
Answer:
இ) தாமினி

குறுவினா

Question 1.
நோயின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நோயின் மூன்று வகைகள் :
(i) மருந்தினால் நீங்கும் நோய்கள்.
(ii) எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
(iii) வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பனபோல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

Question 2.
நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
Answer:
பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகள் :
(i) நல்லறிவு
(ii) நற்காட்சி
(iii) நல்லொழுக்கம்.

சிறுவினா

Question 1.
நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
Answer:
நோயின் மூன்று வகைகள் :
(i) மருந்தினால் நீங்கும் நோய்கள்
(ii) எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
(iii) வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பனபோல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

நோயைத் தீர்க்கும் வழிகள் : அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. அவை நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையாகும். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

சிந்தனை வினா

Question 1.
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
Answer:
(i) கருணையுடன் வாழ்தல்.
(ii) இரக்கத்துடன் இருத்தல்.
(iii) துணிச்சலுடன் செயல்படுதல்.
(iv) நல்ல செயல்களைச் செய்தல்.
(v) கோபத்தை தவிர்த்தல்.
(vi) பிறர் துயர் களைதல்.
(vii) பிறர் துயர் பேணுதல்.
(viii) அறச் செயல்களை செய்தல்.
(ix) பிறர் குற்றத்தை மன்னித்தல்
(x) இனிமையாகப் பேசுதல்
(xi) உண்மையை மட்டும் பேசுதல்.
(xii) விழிப்புணர்வுடன் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. தீர்வன – நீங்குபவை
2. உவசமம் – அடங்கி இருத்தல்
3. நிழல் இகழும் – ஒளிபொருந்திய
4. பேர்தற்கு – அகற்றுவதற்கு
5. திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
6. தெளிவு – நற்காட்சி
7. திறத்தன – தன்மையுடையன
8. கூற்றவா – பிரிவுகளாக
9. பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
10. பிணி – துன்பம்
11. ஓர்தல் – நல்லறிவு
12. பிறவார் – பிறக்கமாட்டார்

நிரப்புக :

1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன ……………………
2. உள்ளத்தில் தோன்றும் ………………….. ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்று நம் முன்னோர் கூறினர்.
3. உள்ள நோயை நீக்குபவை ……………………..
4. ‘தீர்வனவும் தீராத் திறத்தனவும்’ என்ற பாடலடி இடம்பெறும் நூல் ………………. சருக்கம் …………………..
5. நீலகேசி …………………….. ஒன்று.
6. சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் …………….
7. நீலகேசியில் உள்ள சருக்கங்கள் …………………..
Answer:
1. நோய்கள்
2. தீய எண்ணங்களால்
3. அறக்கருத்துகள்
4. நீலகேசி, தருவுரைச் சருக்கம்
5. ஐஞ்சிறுகாப்பியங்களுள்
6. நீலகேசி
7. பத்து

விடையளி :

Question 1.
நீலகேசி – குறிப்பு எழுதுக.
Answer:
(i) நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
(ii) இந்நூல் சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
(iii) கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
(iv) சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை .

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

நூல் வெளி
நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. இந்நூல் சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . நீலகேசிக் காப்பியத்தின் தருவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒரு வகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Students can Download 8th Tamil Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

மதிப்பீடு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது …………………
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை
Answer:
இ) நடுவுநிலைமை

Question 2.
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் …………….
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
Answer:
ஆ) கல்லாதவர்

Question 3.
‘வல்லுருவம்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) வல் + உருவம்
ஆ) வன்மை + உருவம்
இ) வல்ல + உருவம்
ஈ) வல்லு + உருவம்
Answer:
ஆ) வன்மை + உருவம்

Question 4.
நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) நெடுநேர்
ஆ) நெடுத்தேர்
இ) நெடுந்தேர்
ஈ) நெடுமைதேர்
Answer:
இ) நெடுந்தேர்

Question 5.
‘வருமுன்னர்’ – எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ……………….
அ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
இ) உவமை அணி

குறுவினா

Question 1.
சான்றோர்க்கு அழகாவது எது?
Answer:
தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

Question 2.
பழியின்றி வாழும் வழியாக திருக்குறள் கூறுவது யாது?
Answer:
தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 3.
‘புலித் தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?
Answer:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக

Question 1.
தக்கார் தகவிலரெ என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
Answer:
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

Question 2.
தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.
Answer:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க
இடங்கண்ட பின்அல் லது.

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ……………
புலியின்தோல் ……… மேய்ந் தற்று.

2. விலங்கொடு …………. அனையர் ……………….
கற்றாரோடு ஏனை யவர்.
Answer:
1. பெற்றம், போர்த்து
2. மக்கள், இலங்குநூல்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.
Answer:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 1
1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 2
2. கடல்ஓடா கால்வல் நெடுந்நேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. திருவள்ளுவர் …………………. ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
2. திருக்குறளில் உள்ள முப்பால் ………………….
3. அறத்துப்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
4. பொருட்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
5. இன்பத்துப்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
6. நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே ………………… அழகாகும்.
7. புலித்தோல் போர்த்திய பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது மனத்தை அடக்க இயலாதவரின் வலிய ………………….
8. வளைவுடன் இருப்பினும் ………………. கொம்பு இனிமையைத் தரும்.
9. நேராக இருந்தாலும் ……………… கொடியதாக இருக்கும்.
10. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே ……………….. செயல்பட முடியும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்
Answer:
1. இரண்டாயிரம்
2. அறம், பொருள், இன்பம்
3. நான்கு
4. மூன்று
5. இரண்டு
6. சான்றோர்க்கு
7. தவக்கோலம்
8. யாழின்
9. அம்பு
10. சிறப்பாகச்

விடையளி

Question 1.
புகழாலும் பழியாலும் அறியப்படுவதாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Question 2.
பசுத்தோல் போர்த்திய புலி – விளக்குக.
Answer:
மனத்தை அடக்கி ஆளும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலமானது, புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்தது போன்றது.

Question 3.
அம்பு, யாழின் கொம்பு – இவற்றால் அறியப்படுவது யாது?
Answer:
(i) அம்பு நேராக இருந்தாலும் கொடியதாக இருக்கும். யாழின் கொம்பு வளைவுடன் இருந்தாலும் இனிமையைத் தரும்.
(ii) அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 4.
கல்லாதவர் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை .

Question 5.
விலங்கொடு மக்கள் அனையர் – விளக்குக.
Answer:
கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

Question 6.
யாருடைய வாழ்க்கை , நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழியும்?
Answer:
பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.

Question 7.
செயலைத் தொடங்குதல் பற்றிக் குறள் கூறுவது யாது?
Answer:
பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; 30 இகழவும் கூடாது.

Question 8.
தேர், கப்பல் மூலம் வள்ளுவர் கூறும் கருத்து யாது?
Answer:
(i) வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேரினால் கடலில் ஓட இயலாது.
(ii) கடலில் ஓடும் கப்பலினால் தரையில் ஓட இயலாது.
(iii) அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 3
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல்; ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

நடுவுநிலைமை

1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.*

தெளிவுரை : நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.

2. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

தெளிவுரை : தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவு நிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.
அணி : உவமை அணி.

கூடா ஒழுக்கம்

3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

தெளிவுரை : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
அணி : இல்பொருள் உவமை அணி.

4. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.*

தெளிவுரை : நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கல்லாமை

5. உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.

தெளிவுரை : கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை .

6. விலங்கொடு மக்களை அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.*

தெளிவுரை : கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

குற்றங்கடிதல்

7. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

தெளிவுரை : பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்து விடும்.
அணி : உவமை அணி.

8. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.*

தெளிவுரை : தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

இடனறிதல்

9. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

தெளிவுரை : பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

10. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.

தெளிவுரை : வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர்
தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.
அணி : பிறிது மொழிதல் அணி.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Students can Download 8th Tamil Chapter 2.5 வினைமுற்று Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 1.
‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.
Answer:
(எ.கா) அவன் வாழ்க. (ஆண்பால்)
(i) அவள் வாழ்க. (பெண்பால்)
(ii) மக்கள் வாழ்க. (பலர்பால்)
(iii) அது வாழ்க. (ஒன்றன்பால்)
(iv) ‘அவை வாழ்க. (பலவின்பால்)

(எ.கா) நாம் வாழ்க. (தன்மை )
(i) நீங்கள் வாழ்க. (முன்னிலை)
(ii) அவர்கள் வாழ்க. (படர்க்கை)

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று ………………..
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்
ஈ) மேய்ந்த து
Answer:
ஈ) மேய்ந்தது

Question 2.
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ………………….
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
ஈ) ஓடாது
Answer:
அ) படித்தான்

Question 3.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் …………
அ) செல்க
ஆ) ஓடு
இ) வாழ்க
ஈ) வாழிய
Answer:
அ) செல்க

சிறுவினா

Question 1.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும். (எ.கா.) மலர்விழி எழுதினாள்.

Question 2.
தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
Answer:
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறனையும் தெரிநிலை வினைமுற்று காட்டும்.
(எ.கா.) எழுதினாள்
செய்பவர் – மாணவி
காலம் – இறந்தகாலம்
கருவி – தாளும் எழுதுகோலும்
செய்பொருள் – கட்டுரை
நிலம் – பள்ளி
செயல் – எழுதுதல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 3.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
Answer:
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் : க, இய, இயர், அல்.

Question 4.
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 4

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
இயற்கையைப் பாதுகாப்போம்
Answer:
இயற்கை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நம்மைச் சுற்றியுள்ள மலை, காடு, ஆறு, நிலம் என்பனவாகும். ஆதிகால மனிதன் மலை, காடுகளில் வாழ்ந்து வந்தான். அங்கு விளைந்த காய்கறி, பழங்களை உண்டு வந்தான். அங்கிருந்த விலங்கினங்களைத் தங்கள் பணிகளுக்குப் பயன்படுத்தினான். அங்கு வாழ்ந்த மக்கள் அவற்றைத் தங்கள் வீட்டுச் செல்லக்குழந்தைகளாக வளர்த்தனர். இயற்கையைக் கண்டு வியந்தனர். அதனால் இயற்கையைத் தெய்வமாக எண்ணி வணங்கினர். இந்நிலை படிப்படியாய் வளர்ந்து காடு, மலை என்பது மாறி வயல், நாடு நகரம் என உருவாயின.

“நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர்; ஆடவர்
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!”

என்ற ஔவையின் பாடல் மூலம் நாம் அறிவது நிலமானது நாடு, காடு, மேடு, பள்ளம் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அம்மண்ணைப் பண்படுத்தி பயன்படுத்திக் கொள்ளும் ஆண்மகன் இருந்தால் அம்மண் வளம் பெறும்; நாடும் நலம் பெறும் என்பதாகும்.

நாம் நாகரிகம் என்ற பெயரில் புதிய புதிய அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தியும், பல தொழிற்சாலைகளை உருவாக்கியும் இயற்கையைப் பல வழிகளில் சீரழிக்கிறோம். நாம் இயற்கையை மறந்து போனதால்தான் வாழ வழியின்றி அழிந்து வருகின்றோம். இயற்கையை நேசிக்க மறந்துவிட்டோம். அதனால் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன.

கடல்கள் குப்பைகளின் கூடாரமாகிவிட்டன. அதனால் நீர்வாழ் அரிய உயிரினங்களும் அழிந்து வருகின்றன. கடல் உணவுகள் நஞ்சாகின்றன. சூரியன், சக்தியை மட்டுமே கொடுக்காமல் பல நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. நாம் அன்றாடம் உடுத்தும் உடைகள், பயன்படுத்தும் பொருள்களான பாய், போர்வை, தலையணைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வெயிலில் காய வைப்பதன் மூலம் பல ஆபத்தான நோய்க்கிருமிகளை இயற்கையான முறையிலேயே அழித்துவிட முடியும். நாம் விண்வெளியையும் மாசுபடுத்தத் தயங்கவில்லை. அதி நவீன கண்டுபிடிப்புகளால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

இயற்கை ‘தங்களை அழிக்காதீர்கள்’ என்று கூறுவது போலவும், தங்களுடைய அழிவில் ஏற்படும் விளைவுகள் யாவை என்பதை நமக்கு அறிவுறுத்தும் வகையிலும் அவ்வப்போது நிலநடுக்கம், கனமழை, நிலையற்ற தட்பவெப்பம், புயல்காற்று, கடல் சீற்றம் போன்றவற்றை உருவாக்கி நம்மை நல்வழிப்படுத்த எண்ணுகிறது.

இவற்றையெல்லாம் பார்த்தாவது நாம் சிந்திக்க வேண்டும். நல்லமுறையில் செயலாற்ற வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மைப்படுத்திக் கொள்ள இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை வெட்டிச் சாய்க்கும் நாம், புதியதாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். உடல், உள, சமூக ஆன்மிக நன்னிலையைக் காத்து நிற்கும் மரம் என்ற மருத்துவச் சுடரைத் தாய்நாடெங்கும் ஏற்றி வைப்போம். அச்சுடர்களின் ஒளியில் மிளிர்ந்து ஆரோக்கிய வாழ்வை நாம் வாழ வேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியவை, இயற்கையை நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். எங்கும் தூய்மையைப் போற்ற வேண்டும். காடுகளை அழிக்கக்கூடாது. மலைகளைத் தகர்க்கக் கூடாது. மண்வளத்தைச் சுரண்டக்கூடாது. நெகிழிப்பொருள்களைத் தவிர்க்க வேண்டும். இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமன்று; பொறுப்பும் என்பதை உணர்வோம்.

இயற்கையைக் காப்போம். எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்.
‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்’ என்ற வள்ளுவரின் வாய்மொழியைப் போற்றி வரும் முன் காப்போம். நோயற்ற மக்கள் சமுதாயத்தை உருவாக்குவோம்.

சொல்லக்கேட்டு எழுதுக

இயற்கையை விரும்புவது மட்டுமன்றி, அதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது. அது நமது கடமை மட்டுமன்று; பொறுப்பும் ஆகும். நாம் விரும்பிக் கண்டு களித்த இயற்கைச் செல்வங்களை, வரும் தலைமுறையினருக்காகச் சேர்த்தும் பாதுகாத்தும் வைக்க வேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ் எண்கள் அறிவோம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 2

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக

1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2.
2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16.
3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3.
4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6.
5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5.
Answer:
1. உ
2. கசு
3. ங
4. சு
5. ரு

அறிந்து பயன்படுத்துவோம்

தொடர் வகைகள்

தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.
செய்தித் தொடர் :
ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத் தொடர் :
ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.
(எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத் தொடர் :
ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.) இளமையில் கல்.      (ஏவல்)
உன் திருக்குறள் நூலைத் தருக      (வேண்டுதல்)
உழவுத்தொழில் வாழ்க.        (வாழ்த்துதல்)
கல்லாமை ஒழிக.    (வைதல்)

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

உணர்ச்சித் தொடர் :
உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்!     (உவகை)
ஆ! புலி வருகிறது!   (அச்சம்)
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே!    (அவலம்)
ஆ! மலையின் உயரம்தான் என்னே!     (வியப்பு)

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ……………………..
2. கடமையைச் செய் ………………………….
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! ………………………
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? …………………..
Answer:
1. செய்தித் தொடர்
2. ஏவல் தொடர்/விழைவுத்தொடர்
3. உணர்ச்சித் தொடர்
4. வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக.

(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

Question 1.
காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
Answer:
ஆ! காட்டின் அழகுதான் என்னே !

Question 2.
ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித் தொடராக மாற்றுக.)
Answer:
பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 3.
அதிகாலையில் துயில் எழுதுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
Answer:
அதிகாலையில் துயில் எழு.

Question 4.
முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித் தொடராக மாற்றுக.)
Answer:
முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

Question 5.
காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
Answer:
காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

கடிதம் எழுதுக

Question 1.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
Answer:

25, கம்பர் தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி – 2.
19-5-2019.

அன்புள்ள நண்பனுக்கு,
உன் அன்புத் தோழன் ராம் எழுதுவது. நலம். நலமறிய ஆவல். உன் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தம்பியை விசாரித்ததாகக் கூறவும்.

சென்ற வாரம் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாகவும் அடுத்து மாநில அளவில் நடக்கப் போகும் விளையாட்டுப் போட்டிகளுக்கு நீ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்தாளில் படித்தேன். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்தனர்.

உனக்கு விளையாடுவதில் ஆர்வம் மிகுதி என நானறிவேன். அதன் பயனாய் நீ உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளாய். இவ்வெற்றி உன் படிப்பிற்கான முழு செலவையும் அரசாங்கத்தை ஏற்க வைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.

உன்னுடைய இப்பயணம் மேலும் மேலும் வெற்றிப் பயணமாய்த் தொடர வேண்டும். முயற்சியைக் கைவிடாதே! வாழ்த்துகள்.

இப்படிக்கு
உன் அன்புத் தோழன்
ராம். அ.

உறைமேல் முகவரி
பெறுநர் அஞ்சல் தலை
ம.மாதேஷ்,
த/பெ. மணி,
எண் – 30, பாரி தெரு,
சென்னை – 20.

மொழியோடு விளையாடு

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று 3

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக

1. நடக்கிறது – நட
2. போனான் – போ
3. சென்றனர் – செல்
4. உறங்கினாள் – உறங்கு
5. வாழிய – வாழ்
6. பேசினாள் – பேசு
7. வருக – வா
8. தருகின்றனர் – தா
9. பயின்றாள் – பயில்
10. கேட்டார் – கேள்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.
2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

கலைச்சொல் அறிவோம்

1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain
3. பள்ளத்தாக்கு – Valley
4. புதர் – Thicket
5. மலைமுகடு – Ridge
6. வெட்டுக்கிளி – Locust
7. சிறுத்தை – Leopard
8. மொட்டு – Bud

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ………………….
2. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொல் ………………….. என்றும் கூறுவர்.
3. முற்றுவினையை …………………….. என்றும் கூறுவர்.
4. வினைமுற்று ……………….. வினைமுற்று, ………………. வினைமுற்று என இருவகைப்படும்.
5. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று ………………… எனப்படும்.
6. ஏவல் வினைமுற்று …………………… ஆகிய இருவகைகளில் வரும்.
7. வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் …………………..
8. பாடினான் என்பது ………………….. வினைமுற்று.
9. வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று ………………..
Answer:
1. வினைச்சொல்
2. முற்றுவினை
3. வினைமுற்று
4. தெரிநிலை, குறிப்பு
5. ஏவல் வினைமுற்று
6. ஒருமை, பன்மை
7. க, இய, இயர், அல்
8. தெரிநிலை
9. வியங்கோள் வினைமுற்று

விடையளி:

Question 1.
வினைசொல் என்றால் என்ன?
Answer:
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) படித்தான், ஆடுகிறான்.

Question 2.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) எழுதினாள், பாடுகிறாள்.

Question 3.
வினைமுற்று எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பனவாம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 4.
தெரிநிலை வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையான செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

(எ.கா.) எழுதினாள்
செய்பவர் – மாணவி
கருவி – தாளும் எழுதுகோலும்
நிலம் – பள்ளி
காலம் – இறந்தகாலம்
செய்பொருள் – கட்டுரை
செயல் – எழுதுதல்

Question 5.
குறிப்பு வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு, காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.

(எ.கா.) பொருள் – பொன்னன்
இடம் – தென்னாட்டார்
காலம் – ஆதிரையான்
சினை – கண்ண ன்
பண்பு(குணம்) – கரியன்
தொழில் – எழுத்தன்

Question 6.
தமிழில் உள்ள வினைமுற்றுகள் யாவை?
Answer:
தமிழில் உள்ள வினைமுற்றுகள் :
(i) தெரிநிலை வினைமுற்று
(ii) குறிப்பு வினைமுற்று
(iii) ஏவல் வினைமுற்று
(iv) வியங்கோள் வினைமுற்று

Question 7.
ஏவல் வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
(எ.கா) எழுது – ஒருமை
எழுதுமின் – பன்மை

Question 8.
வியங்கோள் வினைமுற்று சான்றுடன் விளக்குக.
Answer:
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
(எ.கா) வாழ்க, ஒழிக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 வினைமுற்று

Question 9.
வியங்கோள் வினைமுற்று எவ்வெவற்றைக் காட்டும்?
Answer:
வியங்கோள் வினைமுற்று இருதிணைகளையும் ஐந்து பால்களையும் மூன்று இடங்களையும் காட்டும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Students can Download 8th Tamil Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
இடம் : குறிஞ்சி புதர்
கதாபாத்திரங்கள் : வெட்டுக்கிளி, சருகுமான்
(குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அங்கு வந்த கூரன் என்ற சருகுமானிடம் வெட்டுக்கிளி பேசியது…)

காட்சி – 1
வெட்டுக்கிளி :
“என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாக ஓடுகிறாய்?”

சருகுமான் :
காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும். எனக்குச் சோர்வாக வேறு இருக்கிறது. பல மணி நேரமாக ஓடி ஓடிக் களைத்துப் போய்விட்டேன்.
(சிறுத்தை துரத்திக் கொண்டு வருவதால் கூரன் மரக்கிளைக்கு அடியில் ஒளிந்து கொண்டு வெட்டுக்கிளியை எச்சரித்தது.)

சருகுமான் : வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசக்கூடிய ஆள். பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே. அது என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்.

காட்சி – 2
(பித்தக்கண்ணு சத்தமில்லாமல் மரக்கிளைக்கு அருகில் வந்து சேர்ந்தது.)

பித்தக்கண்ணு : கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?

(வெட்டுக்கிளி பதில் கூறவில்லை . ஆனால் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. பித்தக்கண்ணு வெட்டுக்கிளியின் செய்கையால் கூரன் ஒளிந்திருந்த மரத்தடிப் பக்கம் சென்று மோப்பமிட்டது. மோப்பம் பிடித்தபடி சுற்றி வந்தது. அதற்குக் கூரனின் உடல்வாடை தெரியவில்லை . முதல் நாள் இரவு அந்த மரத்தடியில் தங்கியிருந்த புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. எனவே அது அந்த இடத்தைவிட்டு வேறு பக்கம் சென்றது. கூரன் : (தன்னைக் காட்டிக் கொடுக்க எண்ணிய வெட்டுக்கிளியை மிரட்ட வேண்டும் என்று எண்ணியபடி வெளியே வந்தது.)

கூரன் :
முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான். இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

(சொல்லிக் கொண்டே கூரன் தன் கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. குறிஞ்சிப்புதர் ஆடியதில் வெட்டுக்கிளி கீழே விழப்போனது. கூரன் காட்டுக்குள் ஓடியது. அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது.)

மதிப்பீடு

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமது முன்னோர்களின் வாழ்வை வருங்காலத் தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்று எண்ணினர். எனவே காடுகள், செடிகொடிகள், விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கு சொல்லிய கதைகளுள் ஒன்றைப் பற்றிப் பார்ப்போம்.

குறிஞ்சிப்புதர் :
நடுக்காட்டில் ஓடும் ஓடையையுடைய பள்ளத்தாக்கில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அதன்மீது பச்சைப்பாசி படர்ந்திருந்தது. பூச்சி புழுக்கள், நத்தைகள் அந்த மரத்தை மொய்த்துக் கொண்டிருக்கும். காட்டு விலங்குகள் நீர் அருந்த அந்த ஓடைக்கு வரும். தாகம் தணிந்ததும் சிறு விலங்குகள் பக்கத்திலுள்ள அடர்ந்த குறிஞ்சிப் புதரில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

வெட்டுக்கிளியும் சருகுமானும் (கூரனும்) :
குறிஞ்சிப் புதரில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு வாயாடி வெட்டுக்கிளி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும். கூரன் என்ற சருகுமான் சிறிய பிராணி, கூச்சப்படும் விலங்கு. அதனால் வெட்டுக்கிளி பயப்படவில்லை. கூரன் குறிஞ்சிப் புதர் அருகே இளைப்பாற வந்தது.

கூடி ஒளிந்த கூரன் :
கூரனைப் பார்த்த வெட்டுக்கிளி, “இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாய் ஓடுகிறாய்?” என்று கேட்டது. கூரன், “காட்டின் அந்தக்கோடியில் இருந்தேன். உன்னிடம் பேச நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்துகிறது” என்று கூறிவிட்டு அம்மரத்தடியில் ஒளிந்து கொண்டது. வெட்டுக்கிளியிடம் நீ “பித்தக்கண்ணுவிடம் நான் இங்கு இருப்பதைச் சொல்லிவிடாதே. என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்…” என்றது. பித்தக்கண்ணு என்பது பெரிய, மஞ்சள் நிற கண்களை உடைய சிறுத்தையாகும்.

வெட்டுக்கிளியின் செயல் :
பித்தக்கண்ணுவைப் பக்கத்தில் பார்ப்பது வெட்டுக்கிளிக்கு இதுதான் முதல்முறை. உற்சாக மிகுதியால் பதில் சொல்ல எண்ணிய பொழுது கூரனுக்கு அளித்திருந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தால் வாயை மூடிக் கொண்டது. ஆனால் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.

பித்தக்கண்ணுவின் ஏமாற்றம் :
வெட்டுக்கிளியின் ஆட்டத்திற்கான பொருளை உணர்ந்த பித்தக்கண்ணு, கூரன் , பதுங்கிக் கிடந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. நல்ல வேளையாக முதல்நாள் இரவுதான் அந்த மரத்தடியில் புனுகுப் பூனை ஒன்று தங்கியிருந்தது. அது தங்கிய இடம் மிகவும் நாறும். அதனால் கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணுவின் மூக்குக்கு எட்டவில்லை. மாறாக புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. பித்தக்கண்ணு சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிடைக்காததால் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

கூரனின் மிரட்டல் :
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்த வெட்டுக்கிளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணியது. “முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான்” என்று கத்தியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்” என்று வெட்டுக்கிளியைக் கூரன் மிரட்டிக் கொண்டே தனது கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. தன் கோபப் பார்வையை வீசிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

முடிவுரை :
அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது. இதனால்தான் இன்றும்கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. ஆனாலும் அவை எந்தத் திசையை நோக்கியும் குதிப்பதில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Students can Download 8th Tamil Chapter 2.3 நீல ம் பொது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 1.
நில வளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகள் :
(i) நம்மைச் சுற்றியுள்ள இடங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
(ii) காடுகள், மலைகள் அழிக்கப்படக்கூடாது.
(iii) வனவிலங்குகள், பறவைகளைப் பாதுகாத்தல்.
(iv) உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளதால் அவை அனைத்தையும் பாதுகாத்தல்.
(v) நீர்நிலைகளை கோடைக்காலத்தில் தூரெடுத்து வைத்து மழைக் காலத்தில் நீரைத் தேக்கி வைத்தல். அதன் மூலம் நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்த்தல்.
(vi) நம் தேவைக்கு மரங்களை வெட்டினாலும் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல்.
(vii) நதிப்படுகைகளில் மரங்களை நடுதல்.
(viii) இயற்கை முறை வேளாண்மையை மேற்கொள்ளுதல்.

Question 2.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது 2
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது 3

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
செவ்விந்தியர்கள் நிலத்தைத் ………………….. மதிக்கின்ற னர்.
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
Answer:
அ) தாயாக

Question 2.
‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) இன் + ஓசை
ஆ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
Answer:
இ) இனிமை + ஓசை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 3.
பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) பால் ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
Answer:
ஆ) பாலூறும்

தொடரில் அமைத்து எழுதுக

1. வேடிக்கை – விபத்து நேரிட்டால் வேடிக்கை பார்க்காமல் உதவி செய்ய வேண்டும்.

2. உடன்பிறந்தார் – உற்றார், உறவினர், உடன்பிறந்தார், நண்பர் என அனைவருடனும் பாகுபாடின்றி அன்புடன் பழக வேண்டும்.

குறுவினா

Question 1.
விலை கொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?
Answer:
விலைகொடுத்து வாங்க இயலாதவை : காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானவை அல்ல. எனவே இவற்றை விலை கொடுத்து வாங்க இயலாது.

Question 2.
நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
Answer:
நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு : செவ்விந்தியர்கள் நிலத்தைத் தாயாகக் கருதுகிறார்கள். தாய் சேய் உறவு.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 3.
எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
Answer:
(i) எருமைகள் கொல்லப்படுவது,
(ii) எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தல்,
(iii) தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருதல் ஆகியனவற்றைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
Answer:
(i) “ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை.

(ii) இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள்.
(iii) இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள்.

(iv) இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.

(v) இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீ ரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்” இவ்வாறு சியாட்டல் கூறுகிறார்.

Question 2.
எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?
Answer:
சியாட்டல் கூறும் ஒரே குடும்பம் :
(i) “இந்தப் பூமி எமது மக்களுக்குத் தாயாகும். அதனால் இப்பூமியை எமது மக்கள் எப்பொழுது மறப்பதேயில்லை.

(ii) நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியது.

(iii) இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.

(iv) மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்” என்று சியாட்டல் கூறுகிறார்.

நெடுவினா

Question 1.
தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
தாய்மொழி, தாய்நாடு மீது அனைவருக்கும் பற்று இருக்கும். அதன்படி செவ்விந்தியர்கள் தாய்மண் மீது வைத்துள்ள பற்றினைப் பற்றிய சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவரான சியாட்டல் கூறுவதைப் பார்ப்போம்.

ஒரே குடும்பம் :
காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் அனைவருக்கும் பொதுவானவை. இப்பூமியில் உள்ள ஒவ்வொரு ஊசியிலையும் அனைத்துக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பும் பூச்சி வகைகளும் இவர்களுக்குப் புனிதமானவை. இந்தப் பூமி. எமது மக்களுக்குத் தாயாகும். இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள், மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். மலைமுகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்.

நீர்நிலைகள் :
“ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள். இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீ ரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்.”

தாய் தந்தை :
இந்தப் பூமியை விலை கொடுத்து வாங்குபவர்கள் அயலவர்கள். இப்பூமி அவர்களின் உடன்பிறந்தார் அன்று. பகைவரே. இதனை வாங்குபவர்கள் வாங்கிய பின் இந்நிலத்தைவிட்டுச் சென்றுவிடுவார்கள். மண்ணை மறந்துவிடுவார்கள். இப்பூமியைப் பாலைவனமாக்கிவிடுவார்கள். ஆனால் செவ்விந்தியர்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதுவார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

சிந்தனை வினா

Question 1.
நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நான் கருதுவன :
(i) நிலங்களை மண் அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக நிறைய மரங்களை வளர்த்தல்.

(ii) ஏரி, குளம், போன்ற நீராதாரங்களைத் தூர்வாரச் செய்து மழைக் காலங்களில் நீரைச் சேமித்தல் மற்றும் அதிகளவில் அணைகளைக் கட்டுதல்.

(iii) ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்த் தொட்டித் திட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றச் செய்வேன்.

(iv) நம் நாட்டின் மண்வளத்திற்கேற்ற புதிய வேளாண்மையைப் பரிந்துரை செய்தல். இயற்கை வேளாண் திட்டத்தை கட்டாயப்படுத்துதல்.

(v) நெகிழியைப் பயன்படுத்தாமல் தவிர்த்தல்.

(vi) வீட்டு விலங்குகள், வனவிலங்குகள் அழியாமல் பாதுகாத்தல்.

(vii) செல்பேசி கோபுரங்கள் இல்லாமல் செல்பேசியை இயங்கச் செய்தல்.

(viii) சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அமெக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் ………………………. பழங்குடியினர்.
2. பூஜேசவுண்ட்/சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ……………………
3. சியாட்டல் ……………………….. காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
4. சியாட்டல் அமெரிக்கக் ……………………… கடிதம் எழுதினார்.
5. விலை கொடுத்து வாங்க முடியாதவை என சியாட்டல் கூறியவை ……………………….
6. சுகுவாமிஷ் பழங்குடியினர் ………………… தாயாகவும் …………………… தந்தையாகவும் கருதக் கூடியவர்கள்.
Answer:
1. சுகுவாமிஷ்
2. சியாட்டல்
3. இயற்கை வளங்கள்
4. குடியரசுத் தலைவருக்குக்
5. காற்றின் தூய்மை, நீரின் உயர்வு
6. பூமியைத், வானத்தைத்

குறுவினாக்கள் :

Question 1.
சுகுவாமிஷ் பழங்குடியினருக்கு எவையெல்லாம் புனிதமானவை?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினருக்கு பூமியின் ஒவ்வொரு துகளும் புனிதமானது. கூடவே, மின்னும் ஒளியுடைய ஒவ்வொரு ஊசியிலையும் எல்லாக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பித் திரியும் பூச்சி வகைகளும் நினைவிலும் வாழ்விலும் மிகவும் புனிதமானவை.

Question 2.
சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றையெல்லாம் சகோதர சகோதரிகள் என்று கருதுகினற்னர்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர், அவர்களுடைய பூமியில் உள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் தமது சகோதரிகள் என்றும் மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் தமது சகோதரர்கள் என்றும் கருதுகின்றனர்.

Question 3.
சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியையும் வானத்தையும் எவ்வாறு கருதுகின்றனர்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதுகின்றனர்.

Question 4.
சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றையெல்லாம் விரும்புவார்கள்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும் நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும் மண்வாசனையையும் தேவதாரு மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள் என்று சியாட்டல் கூறுகிறார்.

Question 5.
சியாட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவது, எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பது, தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவது ஆகியவற்றைத் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சியாட்டல் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 6.
சியாட்டல் குடியரசுத் தலைவருக்கு வைத்த வேண்டுகோள் யாது?
Answer:
“நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல நிலத்தை நேசியுங்கள்” என்று சியாட்டல் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Question 7.
குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியவையாக சியாட்டல் கூறியது யாது?
Answer:
“எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். இந்நிலமே எங்கள் தாயாகும். எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.”

சிறுவினாக்கள்:

Question 1.
அமெரிக்கர்கள், பழங்குடியினரின் நிலத்தை எவ்வாறு மாற்றி விடுவார்கள் என்று சியாட்டல் கூறுகின்றார்?
Answer:
சியாட்டல் கூறுவன :
“இப்பூமியானது உங்களின் உடன்பிறந்தார் அன்று; பகைவரே. இதனை வென்று கையகப்படுத்தியபின் நீங்கள் வேறு இடத்திற்கு நகர்ந்து விடுங்கள். நீங்கள் உங்கள் தந்தையர்களின் இடுகாடுகளைக்கூட மறந்துவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவீர்கள். பிறப்புரிமைக்குரிய சொந்த மண்ணையுங்கூட நீங்கள் மறந்துவிடுவீர்கள். நிலத்தை வாங்குவதும் விற்பதும் உங்களுக்கு ஆடுகள் அல்லது மணிகள் விற்பது போன்றவை. உங்களுடைய கோரப் பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் பாலைவனம் ஆக்கிவிடும். ஆனால் நாங்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.”

Question 2.
அமெரிக்க நகரங்களின் காட்சிகளெல்லாம் செவ்விந்தியர்களின் கண்களை எவ்வாறு உறுத்துகின்றன?
Answer:
அந்நகரங்களில் அமைதியான இடம் என்று எதுவும் இல்லை . அவர்கள் வாழும் எந்த ஓர் இடத்திலும் அசைந்தாடும் இலைகளின் ஓசைகளையோ பூச்சி இனங்களின் ரீங்காரங்களையோ கேட்க முடிவதில்லை.

மாறாக, சடசடவொலிகள் காதைப் பிளக்கின்றன. மகிழ்வூட்டும் இராக்கூவற் பறவைகளின் ஒலிகளையோ, குளத்தைச் சுற்றிக் கேட்கும் தவளைகளின் கூச்சல்களையோ கேட்க இயலாது.

Question 3.
காற்றின் இன்றியமையாமை குறித்து சியாட்டல் கூறுவன யாவை? (அல்லது) காற்றைப் பற்றி செவ்விந்தியர்களின் கருத்து யாது?
Answer:
காற்று மிகவும் மதித்துப் போற்றக்கூடியது. விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒரு காற்றையே இவை யாவும் சுவாசிக்கின்றன. இந்தக் காற்றானது அனைத்து உயிர்களையும் காக்கிறது. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் காற்று இன்றியமையாத ஒன்றாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீல ம் பொது

Question 4.
‘நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்று’ – விளக்குக.
Answer:
நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த கடவுளை அவமதிக்கும் செயலாகும். நாம் படுத்துறங்கும் இடத்தை நாமே அசுத்தப்படுத்தினால் ஒருநாள் இரவு நாம் தூக்கியெறிந்த குப்பைகளுக்குள்ளேயே நாம் மூச்சுமுட்டி இறக்க நேரிடும். எனவே நிலத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

Students can Download 8th Tamil Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

Question 1.
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
Answer:
சூறாவளி :
சூறாவளி என்பது கடலில் ஏற்படுகின்ற குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது குறைந்த அழுத்த மண்டலமாகும். புயலின் மத்தியில் குறைந்த அழுத்தமும் அதனைச் சுற்றி அதிக அழுத்தமும் உருவாகியிருந்தாலோ, புயலின் மத்தியில் அதிக 15 அழுத்தமும் அதனைச் சுற்றிலும் குறைந்த அழுத்தமும் உருவாகியிருந்தாலோ சூறாவளி உண்டாகும். இது கடற்பகுதியிலிருந்து நிலப்பகுதியைக் கடக்கும்.

சுனாமி :
கடலுக்கு அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல்நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்தும். இதனைக் கடற்கோள் என்றும் ஆழிப் பேரலை என்றும் கூறுவர்.

பூகம்பம் : –
இதனைப் பூமி அதிர்ச்சி அல்லது நிலநடுக்கம் என்று கூறுவர். நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்.

Question 2.
இயற்கைச் சீற்றங்கள் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு 2

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வானில் கரு ………… தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
ஈ) கயல்
Answer:
அ) முகில்

Question 2.
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ………………..யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
ஈ) நலத்தை
Answer:
ஆ) காலனை

Question 3.
‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
Answer:
ஈ) விழுந்தது + ஆங்கே

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

Question 4.
‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்த + இறந்த
Answer:
ஈ) செத்த + இறந்த

Question 5.
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………
அ) பருத்தி எல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
Answer:
ஆ) பருத்தியெல்லாம்

குறுவினா

Question 1.
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
Answer:
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது : கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்த து.

Question 2.
புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
Answer:
புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு : தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 3.
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
Answer:
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி : சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

சிறுவினா

Question 1.
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
Answer:
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள்:
(i) வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

(ii) அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

(iii) தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 2.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Answer:
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் : திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

சிந்தனை வினா

Question 1.
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

புயல், மழை :
ஏரிக்கரை மற்றும் ஆற்றோரச் சாலைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்; மரங்களின் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும். சாக்கடை நீர் வடிகால்கள், வாய்க்கால்கள் போன்றவற்றை அடைப்பில்லாமல் சீர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள் எப்போதும் மூடிய நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.

சாலையில் மின்கம்பிகள் விழுந்திருந்தால் அவற்றைத் தொடக்கூடாது. மின்சாதனங்கள், எரிவாயுப் பொருள்கள் பழுதுபட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தற்போது மின்சார வாரியமே புயல், மழை என்றால் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர். புயலின்போது வெளியில் செல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாகனங்களில் செல்லலாம்.

வெள்ளப் பெருக்கென்றால் வேடிக்கை பார்க்கச் செல்வதைத் தவிர்க்கலாம். இடி மின்னலின்போது மரத்தின்கீழ் நிற்கக் கூடாது. செல்பேசி, வீட்டுச்சாவி, தீப்பெட்டி மெழுகுவர்த்தி, தண்ணீர்ப் புட்டிகள் முதலிய அவசியமான பொருள்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் இருப்பது அவசியம். அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை அனைவரும் அறிந்திருத்தல் அவசியம்.

நிலநடுக்கம் :
நிலநடுக்கத்தின் போது அடுக்ககங்களில் இருப்பவர்கள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து வெட்ட வெளியில் நிற்கலாம். மரங்கள், மின்கம்பங்கள் இல்லாத இடமாகப் பார்த்து நிற்க வேண்டும். பாலங்களைக் கடக்கக்கூடாது.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :
1. முகில் – மேகம்
2. வின்னம் – சேதம்
3. கெடிகலங்கி – மிக வருந்தி
4. வாகு – சரியாக
5. சம்பிரமுடன் – முறையாக
6. காலன் – எமன்
7. சேகரம் – கூட்டம்
8. மெத்த – மிகவும்
9. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று.

நிரப்புக :

1. இயற்கை மிகவும் ……………………
2. தமிழ்நாடு அடிக்கடி ………………. தாக்கப்படும் பகுதியாகும்.
3. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் …………………….. என்று அழைக்கப்பட்டன.
4. பஞ்சக்கும்மிகள் என்னும் நூல் …………………….. என்பவரால் தொகுக்கப்பட்டது.
5. காத்து நொண்டிச்சிந்து’ இயற்றியவர் ……………………
Answer:
1. அழகானது, அமைதியானது
2. புயலால்
3. பஞ்சக்கும்மிகள்
4. புலவர் செ. இராசு
5. வெங்கம்பூர் சாமிநாதன்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

நூல் வெளி
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு 1
அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன. ஆடவர்கள் மனைவி, பிள்ளைகளுடன் கூகூ’ என்று அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்த து.

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு, மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக!

 

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Students can Download 8th Tamil Chapter 2.1 ஓடை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Question 1.
மலை, அருவி, ஓடை, மரங்கள். வயல்கள் இடம் பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பள்ளிக்குச் சென்று கல்வி ……………… சிறப்பு
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
Answer:
அ) பயிலுதல்

Question 2.
செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
Answer:
ஆ) ஓடை

Question 3.
‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
Answer:
இ) நன்மை + செய்

Question 4.
‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + உழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
Answer:
ஈ) நீள் + உழைப்பு

Question 5.
சீருக்கு +ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) சீருக்கு ஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
Answer:
ஆ) சீருக்கேற்ப

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Question 6.
ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) ஓடைஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
Answer:
ஆ) ஓடையாட

குறுவினா

Question 1.
ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.

Question 2.
ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை எழுப்பும் ஒலிக்கு சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழங்கும் முழவையொலியை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Answer:
(i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
(ii) அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
(iii) கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
(iv) குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
(v) நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது

சிந்தனை வினா

Question 1.
வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
Answer:
(i) ஏற்றப்பாடல் – ஏற்றத்தின் மூலம் நீர் இறைக்கும்போது பாடப்படும்.
(ii) ஏர்ப்பாடல் – வயலில் மாடுகளைப் பூட்டி ஏர் உழும்போது பாடப்படும்.
(iii) நடவுப் பாடல் – வயலில் நாற்று நடும்போது பாடப்படும்.
(iv) களை எடுப்புப் பாடல் – பயிர்களின் இடையே உள்ள வேண்டாத புல் பூண்டுகளைக் களைந்து எடுக்கும்போது பாடப்படும்.

(v) அறுவடைப் பாடல் – நெல் முற்றியவுடன் அறுவடை செய்யும் போது பாடப்படும்.

(vi) போராடிப் பாடல் – நெற்கதிர்களை உதிர்த்து எடுப்பதற்கு போரடிப்பார்கள். அப்போது பாடப்படும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

இவையனைத்தும் உழவர்கள் பாடும் பாடல்கள் ஆகும். இதேபோல் மீனவர் பாடல், வண்டிக்காரன் பாடல், சுண்ணாம்பு இடிப்போர் பாடல், படகுக்காரன் பாடல், உப்பளத் தொழிலாளர் பாடல் எனப் பல வகையான தொழில் பாடல்கள் உள்ளன.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
2. ஈரம் – இரக்கம்
3. முழவு – இசைக்கருவி
4. நன்செய் – நிறைந்த நீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
5. புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
6. வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
7. பயிலுதல் – படித்தல்
8. நாணம் – வெட்கம்
9. செஞ்சொல் – திருந்திய சொல்

நிரப்புக

1. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் ………………………………..
2. வாணிதாசனின் இயற்பெயர் ……………………….
3. வாணிதாசனின் சிறப்புப் பெயர்கள் ………………………………..
4. வாணிதாசனுக்குப் பிரெஞ்சு அரசு ……………………… விருது வழங்கியுள்ளது.
5. பாடப்பகுதியில் உள்ள ‘ஓடை’ என்னும் பாடல் ……………………. என்னும் நூலில் உள்ளது.
6. ஓடையில் ஆட …………………. தூண்டும்.
7. கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாய்வது ……………………
8. ஓடை நன்செய், புன்செய் நிலங்களுக்கு …………………………. தந்து பயிர்களைச் செழிக்க செய்கிறது.
9. ஓடை இடையறாது ஓடித் தன் ……………………. கொடையாகத் தருகிறது.
10. ஓடை நாட்டு மக்களின் ………………….. போக்குகிறது.
Answer:
1. கவிஞர் வாணிதாசன்.
2. அரங்கசாமி என்கிற எத்திராசலு
3. கவிஞரேறு, பாவலர்மணி.
4. செவாலியர்
5. தொடுவானம்
6. உள்ளம்
7. ஓடை
8. நீர்வளம்
9. உழைப்பைக்
10. வறுமையைப்

குறுவினாக்கள்:

Question 1.
வாணிதாசன் அறிந்த மொழிகள் யாவை?
Answer:
வாணிதாசன் அறிந்த மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு.

Question 2.
வாணிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

Question 3.
ஓடையின் அழகைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது?
Answer:
சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்? என்று வாணிதாசன் ஓடையின் அழகைப் பற்றிக் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Question 4.
ஓடையைப் பார்த்ததும் தன் மனநிலை எவ்வாறு உள்ளது என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
நீரோடையைப் பார்த்ததும் நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது. கற்களில் உருண்டும் தவழ்ந்ததும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது என்று கவிஞர் கூறுகிறார்.

Question 5.
ஓடையின் பயன்கள் யாவை?
Answer:
நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

Question 6.
ஓடையின் கொடையைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது?
Answer:
நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

சிறுவினா

Question 1.
கவிஞர் வாணிதாசன் குறிப்பு எழுதுக.
Answer:
ஆசிரியர் பெயர் : வாணிதாசன்
இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு
இவர் பாரதிதாசனின் மாணவர் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்.
அறிந்த மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு
சிறப்புப்பெயர் : கவிஞரேறு, பாவலர்மணி
பெற்று விருது : பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியது
இயற்றிய நூல்கள் : தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

ஆசிரியர் குறிப்பு
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

பாடலின் பொருள்
நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்?

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை 1

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

Students can Download 8th Tamil Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

Question 1.
‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

Question 1.
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ……………….
அ) இ, ஈ
ஆ) உ, ஊ
இ) எ, ஏ
ஈ) அ, ஆ
Answer:
ஆ) உ, ஊ

Question 2.
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………..
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) தலை
ஈ) மூக்கு
Answer:
இ) தலை

Question 3.
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ……………
அ) தலை
ஆ) மார்பு
இ) மூக்கு
ஈ) கழுத்து
Answer:
ஆ) மார்பு

Question 4.
நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள். ………………..
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) ப், ம்
Answer:
இ) ட், ண்

Question 5.
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து …………
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
Answer:
ஈ) வ்

பொருத்துக

1. க், ங் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
2. ச், ஞ் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
3. ட், ண் – நாவின் முதல், அண்ண த்தின் அடி
4. த், ந் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
Answer:
1. க், ங் – நாவின் முதல், அண்ண த்தின் அடி
2. ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
3. ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
4. த்,ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

சிறுவினா

Question 1.
எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
Answer:
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.

Question 2.
மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
Answer:
மெய் எழுத்துகளின் இடப்பிறப்பு :
(i) வல்லின மெய்கள் க் ச்ட்த்ப்ற் ) – மார்பு
(ii) மெல்லின மெய்கள் (ங் ஞ் ண் ந்ம்ன் ) – மூக்கு
(iii) இடையின மெய்கள் (யார் ல் வ் ழ் ள்) – கழுத்து

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

Question 3.
ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு முயற்சி பற்றி எழுதுக.
Answer:
(i) ழகரம் – மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும்.
(ii) லகரம் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும்.
(iii) ளகரம் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும்.

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தமிழ்மொழியை வாழ்த்தி பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களை கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
நாம் செந்தமிழில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறோம். இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்த எழுத்துகள் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதனைப் பார்ப்போம்.

மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான். மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை உருவாக்கினான். மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். காலப்போக்கில் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். பிறகு அவை பண்பட்டு பேச்சுமொழி உருவானது.

மனிதன் வருங்காலத் தலைமுறையினருக்குக் கருத்துகளைத் தெரிவிக்க பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். அங்குத் தோன்றியது எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை. பின்பு ‘ஓவிய எழுத்து’ என்றும் ‘ஒலி எழுத்து நிலை’ என்றும் பெயர் பெற்றது.

காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகு எழுத்துகள் நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன. பழைய வரிவடிவங்களான வட்டெழுத்து, தமிழெழுத்துகளைக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணலாம்.

சேர, பாண்டிய மண்டலங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே காணப்படுகின்றன. பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்றழைக்கப்பட்டன.

எழுத்துகள் காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.

ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளுக்கு மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவை நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.

எழுத்துகளை வேறுபடுத்திக்காட்ட எழுத்துகளின் மேலும் எழுத்துகளுக்கு பக்கத்திலும் புள்ளிகளைப் பயன்படுத்தினர். நெடிலைக் குறிக்க துணைக்கால், ஐகார உயிர்மெய்யைக் குறிக்க இணைக்கொம்பு, ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க கொம்புக்கால் ஆகியவை புள்ளிகளுக்குப் பதிலாக தற்காலப் பயன்பாட்டில் உள்ளன.

ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். இதனால் எழுத்துகளை அறிவதில் சிக்கல் இருந்தது. இவ்விடர்பாட்டைக் குறைக்க எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தார். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு, இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

இவரைத்தொடர்ந்து ஈ.வெ.ரா. பெரியார் அவர்களால்ணா , றா, னா ஆகிய எழுத்துகளும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளும் உருவாயின. அச்சுக் கோப்பதில் இருந்த இடர்களைக் களைந்தார்.

காலந்தோறும் ஏற்பட்ட இவ்வாறான வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் உருவாகியுள்ளது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

இன்னும் பல மாற்றங்களைப் பெற்று தமிழ்மொழி. நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும் எனக் கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி!

சொல்லக்கேட்டு எழுதுக

உலக மொழிகளின் எழுத்து வரலாற்றை உற்று நோக்கினால் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அறியலாம். அவை ஒரு வரிவடிவத்தை விட்டு மற்றொரு வரிவடிவத்தை ஏற்றுக் கொள்ளுதல்; இருக்கின்ற வரிவடிவத்தில் திருத்தம் செய்து கொள்ளுதல்; எழுத்து எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுதல் ஆகியனவாகும். வரிவடிவ மாற்றம், வரிவடிவத் திருத்தம், எழுத்துகளின் எண்ணிக்கை மாற்றம் ஆகியவற்றை எழுத்துச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகிறோம்.

அகரவரிசைப்படுத்துக

எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.
1. அழகுணர்ச்சி
2. ஆரம்நீ
3. இரண்டல்ல
4. ஈசன்
5. உரைநடை
6. ஊழி
7. எழுத்து
8. ஏழ்கடல்
9. ஐயம்
10. ஒலிவடிவம்
11. ஓலைச்சுவடிகள்
12. ஔகாரம்

அறிந்து பயன்படுத்துவோம்

மரபுத் தொடர்கள்

தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.

பறவைகளின் ஒலிமரபு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 2

தொகை மரபு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 3

வினை மரபு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 4

சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கோழி கொக்கரிக்கும். (கூவும்/கொக்கரிக்கும்)
2. பால் பருகு. (குடி/பருகு)
3. சோறு உண். (தின்/உண்)
4. பூ கொய். (கொய்/பறி)
5. ஆ நிரை. (நிரை/மந்தை )

மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்தவுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

கட்டுரை எழுதுக

Question 1.
நான் விரும்பும் கவிஞர் – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Answer:
முன்னுரை :
நம் தமிழகத்தில் புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்கள் மறைந்தும், நம்முடன் அவர்களின் கவிதைகள் மூலமாக வாழ்கிறார்கள். அவ்வரிசையில் ‘கவிமணி’ என்ற பட்டப் பெயருக்குச் சொந்தக்காரரான தேசிக விநாயகம் பிள்ளை அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இவர் பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், தேசியப் பாடல்கள் எனப் பல வகையான பாடல்களால் அறியப்படுகிறார்.

பிறப்பும் பெற்றோரும் :
தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூரில் 1876ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவதாணுப் பிள்ளை, ஆதிலட்சுமி அம்மாள் ஆவர். இவருடைய துணைவியாரின் பெயர் உமையம்மை.

கல்வி :
கவிமணி எம்.ஏ. படித்துவிட்டு ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்று தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இலக்கியப் பணி :
இவர் இயற்றிய முதல் நூல் அழகம்மை ஆசிரிய விருத்தம். காந்தளூர்ச் சாலை எனும் . வரலாற்று நூலும் இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும். குழந்தைகளுக்கு ஏற்ற தமிழ்ப் பாவியற்றும் திறமிக்கவர். வெண்பா இயற்றுவதில் வல்லவர். இவர் இயற்றிய “மலரும் மாலையும்” என்னும் நூல் எளிய தமிழில் அரிய கருத்துக்களைக் கொண்ட அருமையான கவிதை இலக்கியமாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி.”
என்ற இப்பாடலைப் பாடி மகிழாத குழந்தைகள் இருக்கமாட்டார்கள்.

மொழிபெயர்ப்புப் பணி :
ஆங்கில அறிஞர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய ‘ஆசிய ஜோதி’ (Light of Asia) என்ற கு நூலை தேசிக விநாயகம் பிள்ளை இனிய நடையில் தமிழில் எழுதியுள்ளார். பிறமொழித் தாக்கம் சிறிதும் இல்லாமல் அவருடைய சொந்தப் படைப்புப் போலவே புதுமையும் சுவையும் கலந்து விளங்குகின்றன.

பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்று புத்தர் ஓர் ஏழைச் சிறுவனுக்கு எடுத்தியம்பும் திறன் இனிமை பயக்கின்றது.
“ஓடும் உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீ ரில்
தேடிப் பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ அப்பா ?
எவர் உடம்பினிலும் – சிவப்பே
இயற்கைக் குணமப்பா!
பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா.”

பிற பாடல்கள் :
மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் மூலம் நாஞ்சில் நாட்டு மக்கள் சமுதாயத்தை எள்ளி நகையாடுகிறார். இந்நூல் ஒரு நகைச்சுவை இலக்கியம்
.
“ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம்
போளிக்காக புத்தகம் பணயம்”
என மருமகள் பள்ளியில் படிக்கும் அழகைச் சுட்டுகிறார்.

முடிவுரை :
“தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம், ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகச் செண்டு” என்று ரசிகமணி டி.கே.சி. அவர்கள் கவிமணியைப் பாராட்டியுள்ளார். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல கவிமணியின் பாடல்களில் இருந்த சில பாடல்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவற்றால் எனக்கு மிகவும் பிடித்த கவிஞராக கவிமணி விளங்குகிறார்.

மொழியோடு விளையாடு

பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.

கல், பூ, மரம், புல், வாழ்த்து , சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 5

ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக

(எ.கா.) அணி – பல அணிகளை அணிந்த வீரர்கள், அணி அணியாய்ச் சென்றனர்.

1. படி – கண்ணன் மாடிப்படியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

2. திங்கள் – சித்திரைத் திங்களில் முழுதிங்கள் தோன்றும் நாள் திங்கட்கிழமை மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது.

3. ஆறு – ஆறுபேர் கொண்ட குழு ஏரி, ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளைப் பற்றி ஆய்வு செய்து.

சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக

Question 1.
வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.
Answer:
வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்.

Question 2.
உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
Answer:
உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.

Question 3.
வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
Answer:
பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

Question 4.
கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
Answer:
உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

Question 5.
ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
Answer:
அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. எழுத்துகளைச் சரியான வரிவடிவத்தில் எழுதுவேன்.
2. அறிவிப்புப் பலகைகளில் உள்ள பிழைகளை உரியவரிடம் கூறித் திருத்தச் செய்வேன்.

கலைச்சொல் அறிவோம்
1. ஒலிப்பிறப்பியல் – Articulatory Phonetics
2. மெய்யொலி – Consonant
3. மூக்கொலி – Nasal consonant sound
4. கல்வெட்டு – Epigraph
5. உயிரொலி – Vowel
6. அகராதியியல் – Lexicography
7. ஒலியன் – Phoneme
8. சித்திர எழுத்து – Pictograph

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
4. இடையின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
5. ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
6. நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் க், ங்
7. நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ட், ண்.
8. மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் த், ந்.
9. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ப், ம்.
10. நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ய்.
11. மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் எழுத்துகள் ர், ழ்.
12. மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் நெருங்குவதால் பிறக்கும் எழுத்து ல்.
13. மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும் எழுத்து ள்.
14. மேல் வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து வ்.
15. மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ற், ன்.
16. வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கும் எழுத்து ஆய்த எழுத்து.
17. ஆய்த எழுத்து சார்பெழுத்து வகையைச் சார்ந்தது.
18. மொழியைப் பிழையில்லாமல் பேசுவதற்கும் எழுதுவதற்கும் துணை செய்வது இலக்கணம்.
19. தமிழ் எழுத்துகள் மொத்தம் 247.
20. தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.
21. உயிர் எழுத்துகள் மொத்தம் பன்னிரண்டு.
22. மெய் எழுத்துகள் மொத்தம் பதினெட்டு.
23. ஆய்த எழுத்து ஒன்று.
24. உயிர்க்குறில்  இ, உ, எ, ஒ.
25. உயிர்நெடில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ.

விடையளி :

Question 1.
எழுத்துகளின் பிறப்பு பற்றி எழுதுக.
Answer:
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருத்தி, இதழ், நாக்கு, பல், மேல் வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

Question 2.
எழுத்துகளின் பிறப்பின் வகைகள் யாவை?
Answer:
எழுத்துகளின் பிறப்பு இருவகையாகப் பிரிக்கப்பட்டது. அவை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

Question 3.
சார்ப்பெழுத்தின் பிறப்பு பற்றி எழுதுக.
Answer:
ஆய்த எழுத்து வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியில் பிறக்கிறது. பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.

Question 4.
உயிர் எழுத்துகளின் முயற்சிப் பிறப்பினை எழுது. எழுத்துகள்
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 6

Question 5.
இடையின மெய்களின் முயற்சிப் பிறப்பினை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 7

Question 6.
எழுத்துகளின் இடப்பிறப்பினை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 8

Question 7.
க், ங், ச், ஞ், ட், ண் ஆகிய எழுத்துகளின் முயற்சிப் பிறப்பினை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 9

Question 8.
த், ந், ப், ம், ற், ன் ஆகிய எழுத்துகளின் முயற்சிப் பிறப்பினை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 10

 

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.4 சொற்பூங்கா

Students can Download 8th Tamil Chapter 1.4 சொற்பூங்கா Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.4 சொற்பூங்க

Question 1.
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:
(i) பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். (ஆ- பசு)
(ii) “கனமான பொருளைத் தூக்காதே, வை” என்று தாய் மகனிடம் கூறினார்.
(iii) கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்.
(iv) தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.
(v) “நீ எங்கே சென்றாய்?” என்று சீதா ராணியிடம் கேட்டாள்.

மதிப்பீடு

Question 1.
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
தமிழ்மொழி பழங்காலம் தொட்டு இயங்கி வருதல் அதன் பெருஞ்சிறப்பு. தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருகிறது. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கத்தை இக்கட்டுரையில் காண்போம்.

தொல்காப்பியம் :
சொல் என்பதற்கு நெல் என்பது பொருள். நெல்லில் பதர் உண்டு. சொல்லில் பதர் இருந்தலாகாது. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது தொல்காப்பியர்மொழி. மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியானது ஓர் எழுத்துமொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூவகைப்படும். ‘நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி’ என்றும் ‘குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே’ என்றும் தொல்காப்பியர் கூறுகிறார்.

ஓரெழுத்து ஒரு மொழிகள் :
உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நம் என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

பூ’ மற்றும் ‘யா’ :
‘பூ’ என்பதும் ‘கா’ என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் உருவாயிற்று. ‘யா’ என்பது வினா. யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் ‘யா’ என்ற எழுத்து முதலில் நிற்கிறது.

‘ஆ’ மற்றும் ‘மா’ :
ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவை ஓரெழுத்து ஒரு மொழிகள். ஆ, மா என்பவை இணைந்து ஆமா எனக் கலைச்சொல் வடிவம் பெற்றுள்ளது. காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர். மா என்பது மாநாடு, மாநிலம், மாஞாலம் என்ற சொற்களில் பெரிய’ என்னும் பொருளில் அமைந்துள்ளது. ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழி இயல்பு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் திகழ்கின்றது. மாந்தளிர் நிறத்தை மாநிறம் என்றனர். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்று வந்து விலங்கினப் பெயராகிறது.

பிற எழுத்துகள் :
ஈ என்னும் எழுத்து ஒலிக்குறிப்பைக் காட்டுகிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்தும் வழங்கப்படும். ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை ஆகும். ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை இன்று அனைவராலும் வழங்கப்படுகின்றன. நன்னூலார் கூறிய ஓரெழுத்து ஒரு மொழிகளில் சில இன்று வழக்கில் இல்லை. இன்று வழக்கில் உள்ளவை நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லை என்று தெளியலாம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.4 சொற்பூங்க

மாற்றம் பெற்றவை :
ஆன் என்பது ஆ என்றும், மான் என்பது மா என்றும் கோன் என்பது கோ என்றும், தேன் என்பது தே என்றும், பேய் என்பது பே என்றும் மாறி காலவெள்ளத்தில் கரைந்தன. எட்டத்தில் போகிறவனை ஏய் என்றனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏவுதல் என்பது அம்புவிடுதல், ஏவும் அம்பு ‘ஏ’ என்றாகியது. அம்பு போல விரைந்து கடமை செய்பவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை, அதில் வல்லவன் ஏகலைவன் எனப் பாராட்டப்பட்டான்.

ஏவு – ஏ – எய் என ஆயிற்று, ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம் பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி, அம்பை எய்பவர் எயினர். அவர்தம் மகளிர் எயினியர். சங்கப் புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர்.

முடிவுரை :
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பவனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Students can Download 8th Tamil Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதுக.
Answer:
சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்னைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே வருகிறது.

‘மனிதன் ஏழ்மையிலே இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான்; பலவீனனாக இருப்பவன் போருக்கு அஞ்சுகிறான்; செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான அசுத்தத்திற்கு அஞ்சுகிறான்’ என்றெல்லாம் திருமதி இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவுகூரத் தக்கது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………… காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
Answer:
இ) அச்சுக்கலை

Question 2.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ………………….. என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
Answer:
ஆ) வட்டெழுத்து

Question 3.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ………………….
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ.சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) தந்தை பெரியார்

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் …………… என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் …………..
Answer:
1. கண்ணெழுத்துகள்)
2. வீரமாமுனிவர்)

குறுவினா

Question 1.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
Answer:
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவம் ஓவிய எழுத்து எனப்படும்.

Question 2.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
Answer:
(i) ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக : மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் கி குறிப்பதாயிற்று.

(ii) இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை, ஒலி எழுத்து நிலை எனப்பட்டது.

Question 3.
ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
Answer:
(i) ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளைப் பயன்படுத்தினர்.
(ii) புள்ளிகளைப் பயன்படுத்தினால் ஓலைகள் சிதைந்து விடும் என்பதால் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 4.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 2

சிறுவினா

Question 1.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
Answer:
(i) ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

(ii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

(iii) புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

(iv) இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

Question 2.
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
Answer:
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றம் :
(i) தமிழ் எழுத்துகளில் நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் ரு பயன்படுகின்றது.

(ii) ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக் கொம்புடை பயன்படுகின்றது.

(iii) ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால்ள பயன்படுகின்றது.

(iv) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.

நெடுவினா

Question 1.
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
Answer:
முன்னுரை :
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். பிறகு ஒலிகள் மூலம் வெளிப்படுத்தினான். அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக் கொண்டான். காலப் போக்கில் அவை பேச்சு மொழியாக உருவானது.

வரிவடிவத்தின் தொடக்க நிலை :
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையாகும்.

ஓவிய எழுத்து :
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

ஒலி எழுத்து நிலை :
அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்துநிலை என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழ் எழுத்துகள் :
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

முடிவுரை :
பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். பிறகு அச்சில் ஏற்றப்பட்டது. காலந்தோறும் வளர்ந்து வரிவடிவத்தில் பல மாற்றங்களை ஏற்று, தற்காலத்தில் கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாக வளர்ந்துள்ளது தமிழ் எழுத்துகள்.

சிந்தனை வினா

Question 1.
தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:
(i) பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும். பிறமொழிகளையும் அறிந்து கொள்ளுதல் நன்மை பயக்கும் என்பதால் அவற்றைக் கூடுதலாக கற்க
வழிவகை செய்யலாம்.

(ii) தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

(iii) கன்னித் தமிழைக் கணினித் தமிழில் ஏற்றி உலகெங்கும் பரப்ப வேண்டும்.

(iv) புதியதாகக் கண்டறியப்பட்ட அறிவியல் சாதனங்களுக்கும், பிற துறையில் கண்டறியப்படும் சொற்களுக்கும் கலைச்சொற்களைக் கண்டறிய வேண்டும்.

(v) பிறமொழியில் உள்ள நூல்களைத் தமிழில் எளிமையான முறையில் மொழிபெயர்க்க வேண்டும்.

(vi) சிறந்த தமிழ் நூல்கள் நிறைந்த, இலவச நூலகங்களை நாடெங்கிலும் அமைக்க வேண்டும்.

(vii) ஒவ்வொரு துறைக்கும் எளிமையான தமிழில் நூல்கள் வெளியிடப்பட வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 2.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.
Answer:
மாணவன் 1 : தமிழ்மொழியை உரோமன் எழுத்துருவில் எழுதுவது எவ்வளவு எளிமையாக உள்ளது பார்த்தாயா?

மாணவன் 2 : அவ்வாறு எழுதுவதே தவறான செயல். இதை எளிமை என்று மகிழ்கிறாயா?

மாணவன் 1 : தவறு என்று ஏன் கூறுகிறாய்? தவறொன்றும் இல்லை. ஏனெனில் தொண்ணூறு சதவீத மாணவர்கள் ஆங்கில வழியில் பயில்கின்றனர். அவர்களுக்குத் தமிழ் படிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பேச்சுமொழியில் படிப்பதில் மாணவர்கள் இன்னலுறுகின்றனர்.

மாணவன் 2 : நீ கூறுவது முற்றிலும் தவறானது. வரிவடிவம்தான் ஒரு மொழியின் அடையாளம். அவ்வாறு இருக்கும் நிலையில் தமிழ்மொழியை உரோமன் எழுத்துருவில் படித்தால் எந்த மொழியில் படிக்கிறோம் என்பதை அறிய முடியுமா? படிப்பவருக்கே குழப்பம்தான் விளையும்.

மாணவன் 1 : படிப்பவருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்குத் தமிழ் படிப்பதில் தகராறு. உரோமன் எழுத்துருவில் படிப்பது எளிமை என அவர் எண்ணுகிறார்.

மாணவன் 2 : இக்கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘தீ’ என்ற தமிழ்ச் சொல்லை உரோமன் எழுத்துருவில் ‘the’ என்றுதான் எழுதவேண்டும். இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளில்தான் புரிந்து கொள்வார்கள். தமிழ் எழுத்துகளில் ஒலி வேறுபாடறிந்து படிக்க இயலும். அதனை உரோமன் எழுத்துருவில் எழுதும்போது தமிழை அழிப்பதைப் போன்று உணர்வு ஏற்படுகிறது.

மாணவன் 1 : எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ்மொழி ஆரம்பக் காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அதிலிருந்து வட்டெழுத்துகள் உருவாயிற்று. அதன்பிறகு இன்றைய எழுத்துருக்கள் உருவாயின. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வரிவடிவத்தைப் பெற்றுள்ளன. அதுபோல தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதும் ஒரு மாற்றம் தானே?

மாணவன் 2 : “எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்” என்பார் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அவர் வழியில் நாம் உடலாகிய எழுத்துரு அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

மாணவன் 1 : மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான். பயிற்சியின் மூலம்தான் நாம் ஒரு மொழியைக் கற்கிறோம். உரோமன்
எழுத்துருவில எழுத்துகளை உச்சரிப்பது எளிமையானது.

மாணவன் 2 : நீ கூறுவது, உன்னுடைய மாயை. ஒரு வரிவடிவில் மற்றொரு மொழியைப் படிப்பதால் அம்மொழியை அறிந்தவர் ஆவோம் என்பது அறியாமை ஆகும். தமிழில் எழுத்து வடிவத்திற்கும் உச்சரிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை அப்படியே சரியான உச்சரிப்புடன் வாசிக்க இயலும். உரோமன் எழுத்து முறையே வேறு. அதில் தமிழ்மொழியில் உள்ளது போல் வரிவடிவத்திற்கும் உச்சரிப்பிற்கும் தொடர்பு இருக்காது. உச்சரிப்பைத் தனியே கற்றுக் கொள்வதற்கென்று உச்சரிப்பு அகராதி தேவைப்படுகிறது.

மாணவன் 1 : நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தெளிவான அமைப்பு முறை அடிப்படைத் தமிழில் இருக்கும்போது நாம் ஏன் உரோமன் எழுத்தில் தமிழை எழுத வேண்டும்.

மாணவன் 2 : நமக்கு நம் தாய்மொழியான தமிழ்தான் பண்பாட்டு, இன அடையாளம். எழுத்து வடிவம் அழிந்தால் மொழி அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும் என்ற வரலாற்று உண்மையை மறக்கக்கூடாது.

மாணவன் 1 : சரியாகச் சொன்னாய். இனிமேல் நானும் என்னை மாற்றிக் கொள்கிறேன். முகநூல், புலனம், கீச்சகம் போன்றவற்றில் இனிமேல் தமிழிலேயே செய்தியைப் பரிமாறுவோம் என உறுதிகொள்வோம். பிறரையும் மாற்றுவோம்.

மாணவன் 2 : நான் கூறியதைக் கேட்டு உன் கருத்தை மாற்றிக் கொண்டதற்கு நன்றி. நாம் அனைவரும் தமிழ்மொழியின் நிலையான தன்மையை உணர்ந்து பிறருக்கும் உணர்த்துவோம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன.
2. பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
3. பொருளின் ஓவிய வடிவமாக இருந்த வரிவடிவம் ஓவிய எழுத்து.
4. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து நிலை.
5. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் காணப்படும் இடங்கள் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்கள்.
6. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து வட்டெழுத்து.
7. கல்வெட்டுகள் மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
8. செப்பேடு, கல்வெட்டில் காணப்படும் வரிவடிவங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகைப்படும்.
9. அரச்சலூர் கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
10. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்ற எழுத்துகள் வட்டெழுத்துகள்.
11. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.
12. ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம்.
13. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.
14. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் இருந்ததற்குச் சான்றாக அமைந்த கல்வெட்டு அரச்சலூர் கல்வெட்டு.
15. பாறைகளில் செதுக்கும்போது பயன்படுத்த முடியாதது வளைகோடுகள்.
16. பாறைகளில் செதுக்கும்போது பயன்படுத்தப்பட்டவை நேர் கோடுகள்.
17. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
18. ஒற்றைப்புள்ளி, இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக பயன்படுத்தப்படுபவை துணைக்கால்(π), இணைக்கொம்பு(), கொம்புக்கால்(ள).
19. இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் தந்தை பெரியார்.
20. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.

குறுவினாக்கள் :

Question 1.
எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை யாது?
Answer:
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது – கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை ஆகும்.

Question 2.
தமிழ் எழுத்துகள் எப்போது நிலையான வடிவத்தைப் பெற்றன?
Answer:
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 3.
கண்ணெழுத்து – குறித்து எழுதுக.
Answer:
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும், ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடரால் அறியலாம்.

Question 4.
எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட காரணங்களாக அமைந்தவை யாவை?
Answer:
எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைந்தன.

Question 5.
தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சியின் இன்றைய நிலை யாது?
Answer:
காலந்தோறும் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழிகணினிப்பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

சிறுவினாக்கள் :

Question 1.
பேச்சுமொழி எவ்வாறு உருவானது?
Answer:
(i) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.

(ii) காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.

(iii) அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். அவை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டுக் காலப்போக்கில் அவை
பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது.

Question 2.
தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் பற்றி எழுதுக.
Answer:
(i) தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களை கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.

(ii) கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

(iii) கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

Question 3.
பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் நான்கனை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 3

Question 4.
இரு வகையான எழுத்துகள் பற்றி எழுதுக.
Answer:
(i) வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்து மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழ் எழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்.

(ii) சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம் பெற்றுள்ளன.

(iii) முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 5.
தமிழ் எழுத்துகளில் புள்ளிகளின் நிலை பற்றி எழுதுக.
Answer:
(i) எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.

(ii) எடுத்துக்காட்டாக எது என எழுதப்பட்டால் எது என்றும் எது என எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.

(iii) அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் (க. = கா, த. = தா) கருதப்பட்டன.

(iv) ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (.க =கை)

(v) எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இருபுள்ளிகள் இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ..= தெள).

(vi) மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்.

(vii) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

நெடுவினா :

Question 1.
எழுத்துச் சீர்திருத்தத்தில் வீரமாமுனிவர், பெரியார் மேற்கொண்டவை எவை?
Answer:
வீரமாமுனிவர் :
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.

அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து போ) புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் :
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 4

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் :
இருபதாம் நூற்றாண்டு வரை ணா, றா, னா ஆகிய எழுத்துகளை ணா, றா, னா என எழுதினார். அதே போல ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளை ணை, லை, ளை, னை என எழுதினார். இவற்றை அச்சுக்கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 5