Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.4 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Question 1.
8 × 4 = ______
Answer:
8 × 4 =   32 

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Question 2.
8 × 6 = ______
Answer:
8 × 6 =   48  

Question 3.
8 ×10 = ______
Answer:
8 × 10 =   80  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Question 4.
One packet contains 8 pencils, how many pencils are there in 9 such packets?
Answer:
Number of pencils in a packet = 8
Number of pencils in 9 packets = 8 × 9
= 72 pencils

Question 5.
The price of one ball is 10. Find the cost of 8 such balls?
Answer:
Cost of 1 ball = ₹ 10
∴ Cost of 8 balls = 10 × 8
= ₹ 80

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Complete the 9th tablre:
9 = 9 × 1 =
9 + 9 = 9 × 2 = 18
9 + 9 + 9 = 9 × 3 = 27
9 + 9 + 9 + 9 = 9 × 4 = 36
9 + 9 + 9 + 9 + 9 = 9 × 5 = 45
9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 6 = ______
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 7 = ______
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 8 = ______
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 9 = 81
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 10 = ______
Answer:
9 = 9 × 1 =
9 + 9 = 9 × 2 = 18
9 + 9 + 9 = 9 × 3 = 27
9 + 9 + 9 + 9 = 9 × 4 = 36
9 + 9 + 9 + 9 + 9 = 9 × 5 = 45
9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 6 = 54
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 7 = 63
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 8 = 72
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 9 = 81
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 10 = 90

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.4 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.4 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.3

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.3

Question 1.
3 × 7 = ______
Answer:
3 × 7 =   21  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.3

Question 2.
6 × 7 = ______
Answer:
6 × 7 =   46  

Question 3.
9 × 7 = ______
Answer:
9 × 7 =   63  

Question 4.
A box contains 7 pens. How many pens are 1here in 5 boxes?
Ans.
Number of pen in a box = 7
Number of pens in 5 boxes = 7 × 5
= 35 Pens

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.3

Question 5.
One week has 7 days. Calculate the number of days in 10 weeks?
Answer:
Number of days in a week 7
Number of days in 10 weeks = 7 × 10
= 70 days

Complete the 8th table: Number of legs in spider
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.3 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.3 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Question 1.
4 × 6 = _____
Answer:
4 × 6 =  24  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Question 2.
7 × 2 = ______
Answer:
7 × 2 =  14  

Question 3.
8 × 2 = ______
Answer:
8 × 2 =   16  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Question 4.
In a shirt there are 6 buttons, how many buttons will there be in 8 shirts?
Answer:
No. of button in a shirt = 6
No. of button in 8 shirts = 6 × 8
= 48 button

Question 5.
In a carton, there are 9 rows with 6 eggs in each row. How many eggs are there in all?
Answer:
No. of eggs in a row = 6
No. of egg in a 9 rows = 6 × 9
= 54 eggs

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Complete the 7th table: (using maths kit box). 7 Piece tan gram
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.2 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.2 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 1.
Multiply the following numbers by using lattice method.
(i) 52 × 49
(ii) 347 × 5
(iii) 127 × 7
(iv) 65 × 37
(v) 789 × 4
(vii) 37 × 29
Answer:
(i) 52 × 49
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.1
52 × 49 = 2548

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(ii) 347 × 5
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.2
347 × 5 = 1735

(iii) 127 × 7
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.3
127 × 7 =889

(iv) 65 × 37
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.4
65 × 37 = 2405

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(v) 789 × 4
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.5
789 × 4 = 3156

(vii) 37 × 29
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.6
37 × 29 = 1073

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 2.
Multiply the following numbers by using standard method
(i) 72 × 29
(ii) 31 × 27
(iii) 93 × 42
(iv) 124 × 6
(y) 206 × 8
(vi) 479 × 3
Answer:
(i) 72 × 29
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7
72 × 29 = 2088

(ii) 31 × 27
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.8
31 × 27 = 837

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(iii) 93 × 42
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.9
93 × 42 = 3096

(iv) 124 × 6
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.10
124 × 6 = 744

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(v) 206 × 8
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.11
206 × 8 = 1648

(vi) 479 × 3
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.12
479 × 3 = 1437

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 3.
One box contains 25 apples. How many apples are there in 36 such boxes?
Answer:
No. of apples in a box = 25
No. of apples in 36 boxes = 25 × 36
= 900 apples
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.13

i. There are 28 pages in a daily newspaper. If Ajay buys newspapers for 45 days. how many pages will it contain?
Answer:
No. of pages in a daily newspaper = 28
No. of pages in 45 days = 28 × 45
= 1260 Pages
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.14

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

ii. A truck carries 125 bags of rice. [f each bag has 9 kg of rice0 how much kg of rice will there be in the truck,
Answer:
Weight of a Rice bag = 9 kg
Weight of 125 Rice bags = 125 × 9
= 1125 Kgs
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.15

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

iii. If the cost of one chair is ₹ 857. What will be the cost of 6 chairs?
Answer:
Cost of a chair = ₹ 857
Cost of 6 chair = 857 × 6
= ₹ 5142
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.16

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questions

Students can download 4th Maths Term 2 Chapter 1 Geometry InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 1 Geometry InText Questions

Activity (Text Book Page No.2)

Draw the mirror symmetry using the other half.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 1

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 2
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questions

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 4
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 6
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 7

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 8
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 9

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questions

Activity (Text Book Page No.3)

Find out the symmetry figure and colour it:

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 10

Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 11
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 12

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 13
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 14

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questions

Question 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 15
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 16

Question 4.

Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questiond 18

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 1 Geometry InText Questions

Activity (Text Book Page No.5)

To observe from the surroundings and from day to day life situations and identify symmetrical objects.

Answer:
Above pictures all are symmetrical

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.1 புலி தங்கிய குகை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.1 புலி தங்கிய குகை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

Question 1.
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை 1
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை 2

Question 2.
பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றின் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை 3

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘யாண்டு’ என்ற சொல்லின் பொருள் ………………..
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது
Answer:
ஆ) எங்கு

Question 2.
‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ ?
இ) யா + உளனோ ?
ஈ) யாண்டு + உனோ?
Answer:
அ) யாண்டு + உளனோ?

Question 3.
‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது. ………………….
அ) கல்லளை
ஆ) கல்அளை
இ) கலலளை
ஈ) கல்லுளை
Answer:
அ) கல்லளை

குறு வினா

Question 1.
தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
Answer:
தம் வயிற்றுக்குத் தாய் ‘புலி தங்கிய குகை’யை உவமையாகக் கூறுகிறார்.

சிறு வினா

Question 1.
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) சிறிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்றிக் கொண்டு , எதுவும் தெரியாதவள் போல நீ’உன் மகன் எங்கே?’ என்று என்னைக் கேட்கின்றாய்.

(ii) அவன் எங்கு இருக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ‘புலி தங்கிய குகை’ போன்று அவனைப் பெற்ற வயிறு என்னிடம் உள்ளது.

(iii) அவன் இங்கு இல்லை ஆனால் போர்க்களத்தில் இருக்கலாம். போய்க் காண்பாயாக! – என்று தன் மகன் குறித்துத் தாய் கூறினாள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

சிந்தனை வினா

Question 1.
தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
Answer:
(i) புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது.

(ii) அதைப் போல வீரம் மிக்கவன் மகன்.

(iii) இருள் நிறைந்த குகையில் புலி இருப்பது போல், இருள் நிறைந்த வீரம் மிக்க கருவறையில் தன் மகன் உறங்கி வளர்ந்தான்.

(iv) புலி குகையை விட்டு வேட்டைக்குச் செல்வது போல பகைவர்களை வேட்டையாடுவதற்கு மகன் போர்க்களம் சென்று இருக்கின்றான்.

(v) அதனால் தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவா …………………
அ) ஔவையார்
ஆ) ஒக்கூர் மாசாத்தியார்
இ) காவற்பெண்டு
ஈ) வெண்ணிக்குயத்தியார்
Answer:
இ) காவற்பெண்டு

Question 2.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று …………………
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) திருக்குறள்
ஈ) திருமுருகாற்றுப்படை
Answer:
அ) புறநானூறு

Question 3.
தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பதிற்றுப்பத்து
ஈ) குறுந்தொகை
Answer:
அ) புறநானூறு

Question 4.
கோப்பெரு நற்கிள்ளி ……………….. மன்னன்.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
ஆ) சோழ

Question 5.
காவற்பெண்டு பாடிய பாடல் அமைந்த நூல் …………………
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பதிற்றுப்பத்து
ஈ) குறுந்தொகை
Answer:
அ) புறநானூறு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

Question 6.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) காவற்பெண்டு – பெண்பாற் புலவர்
ஆ) காவற்பெண்டு – சங்ககாலப் புலவர்
இ) காவற்பெண்டு – புறநானூற்றில் பாடல் பாடினார்
ஈ) காவற்பெண்டு – கோப்பெரு நற்கிள்ளியின் தாய்
Answer:
ஈ) காவற்பெண்டு – கோப்பெரு நற்கிள்ளியின் தாய்

Question 7.
பொருத்துக.
1. சிற்றில் – அ. கற்குகை
2. கல் அளை – ஆ. சிறு வீடு
3. யாண்டு – இ. பெற்றெடுத்த
4. ஈன்ற வயிறு – ஈ. எங்கே

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 8.
‘புலிசேர்ந்து போகிய கல்அளை போல’ – இதில் ‘குகை’ என்னும் பொருள்
அ) சேர்ந்து
ஆ) போகிய
இ) அளை
ஈ) போல
Answer:
இ) அளை

Question 9.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) இல் – வீடு
ஆ) அளை – குகை
இ) ஈன்ற – பெற்ற
ஈ) யாண்டு – இங்கே
Answer:
ஈ) யாண்டு – இங்கே

Question 10.
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
அ) அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?
ஆ) உன் மகன் எங்கு உள்ளான்? அன்னையே!
இ) எங்கு அன்னையே உன் மகன் உள்ளான்?
ஈ) உன் மகன் எங்கு அன்னையே உள்ளான்?
Answer:
அ) அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ‘புலி தங்கிய குகை’ என்னும் தலைப்பில் அமைந்தப் பாடலை எழுதியவர் ………………..
2. தமிழர்கள் பழங்காலம் தொட்டே ……, ………….. சிறந்து விளங்கினர்.
3. நாட்டைக்காக்க ………….. செல்வது முதற்கடமை.
4. கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க புலவர் …………….
5. ‘புலி தங்கிய குகை’ என்னும் தலைப்பில் அமைந்தப் பாடல் புறநானூற்றில் …………. பாடல்.
Answer:
1. காவற்பெண்டு
2. கல்வியிலும், வீரத்திலும்
3. போர்க்களம்
4. காவற்பெண்டு
5. 86

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

குறு வினா

Question 1.
காவற்பெண்டு – குறிப்பு வரைக.
Answer:

  1. சங்ககாலப் பெண்பாற் புலவர்.
  2. கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்.
  3. படைப்பு : புறநானூற்றில் ஒரு பாடல்.
  4. கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க புலவர் இவர்.

Question 2.
புறநானூறு குறிப்பு வரைக.
Answer:

  1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று : புறநானூறு
  2. இது பண்டைத் தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம். முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்

Question 3.
புலவரிடம் பெண் வினவியது யாது?
Answer:
அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்? என்று புலவரிடம் பெண் வினவினாள்.

Question 4.
‘புலிசேர்ந்து போகிய கல்அளை போல’ தொடர் பொருள் யாது?
Answer:
பொருள் : புலி தங்கிச் சென்ற குகை போல்

Question 5.
தன் மகன் எங்கு இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகின்றார்?
Answer:
தன் மகன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகின்றார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

காவற்பெண்டு :

  1. சங்ககாலப் பெண்பாற் புலவர்
  2. கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்
  3. படைப்பு : புறநானூற்றில் ஒரு பாடல்

சொல்லும் பொருளும்

1. சிற்றில் – சிறு வீடு
2. கல் அளை – கற்குகை
3. யாண்டு – எங்கே வயிறு.
4. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த
5. குடில் – வீடு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்க.

Question 1.
வாய்மை எனப்படுவது ………………
அ) அன்பாகப்பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்
Answer:
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

Question 2.
……………. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
Answer:
இ) பொறாமை உள்ளவன்

Question 3.
‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………
அ) பொரு + செல்வம்
ஆ) பொருட் + செல்வம்
இ) பொருள் + செல்வம்
ஈ) பொரும் + செல்வம்
Answer:
இ) பொருள் + செல்வம்

Question 4.
‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………….
அ) யா + எனின்
ஆ) யாது + தெனின்
இ) யா + தெனின்
ஈ) யாது + எனின்
Answer:
ஈ) யாது + எனின்

Question 5.
யாது + எனின் என்ற சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………….
அ) தன்நெஞ்சு
ஆ) தன்னெஞ்சு
இ) தானெஞ்சு
ஈ) தனெஞ்சு
Answer:
ஆ) தன்னெஞ்சு

Question 6.
தீது + உண்டோ என்ற சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………..
அ) தீதுண்டோ
ஆ) தீது உண்டேத்
இ) தீதிண்டோ
ஈ) தீயுண்டோ
Answer:
அ) தீதுண்டோ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 7.
சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்துக.
விடை
அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
Answer:
1. ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
2. ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
3. இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.

குறு வினா

Question 1.
எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?
Answer:
ஒருவர் தன் மனம் அறிய பொய்சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் மனமே அவரைச் சுடும்.

Question 2.
வாழும் நெறி யாது?
Answer:
ஒருவர் தன் மனத்தில் பொறாமை இல்லாது ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும்.

Question 3.
உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
Answer:
உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர்.

கீழ்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 1
Answer:
1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகை சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார்.

இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்
Answer:
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
முப்பால், பொய்யா மொழி, தெய்வ நூல் போன்ற பிறபெயர்களில் அழைக்கப்படும் நூல்
அ) திருக்குறள்
ஆ) ஏலாதி
இ) திரிகடுகம்
ஈ) ஆசாரக்கோவை
Answer:
அ) திருக்குறள்

Question 2.
திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள்
அ) 133
ஆ) 1330
இ) 70
ஈ) 38
Answer:
ஆ) 1330

Question 3.
திருக்குறள் பகுப்பு
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஒன்பது
ஈ) 133
Answer:
அ) மூன்று

Question 4.
பொருத்துக
1. அழுக்காறு – அ) செல்வம்
2. ஆக்கம் – ஆ) பொறாமை
3. கேடு – இ) பிறர்
4. ஏதிலார் – ஈ) வறுமை

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ

Question 5.
பொருத்துக
1. பூரியார் – அ) இழிந்தவர்
2. வாய்மை – ஆ) சான்றோர்
3. செவ்வியான் – இ) உண்மை
4. தீது – ஈ) குற்றம்
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 6.
தீங்கு தராத சொற்களைச் சொல்லுதல் …………………..
அ) வாய்மை
ஆ) அருள்
இ) அழுக்காறாமை
ஈ) இறைமாட்சி
Answer:
அ) வாய்மை

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒருவர் ……………. பொய் சொல்லக் கூடாது.
2. அவ்விய நெஞ்சத்தான் ………………. செவ்வியான்.
3. தன் குற்றம் காண்பவருடைய வாழ்வில் …………….. இல்லை.
4. சிறந்த செல்வம் ………………
5. தன்னெஞ்சு அறிவது ……………….
Answer:
1. நெஞ்சறிய
2. ஆக்கமும்
3. துன்பம்
4. அருட்செல்வம்
5. பொய்யற்க

குறு வினா:

Question 1.
செவ்வியான் கேடு நினைக்கப்படும் எப்போது?
Answer:
பொறாமை கொண்டவருடைய செல்வம், பொறாமை இல்லாதவருடைய வறுமை சான்றோரால் ஆராயப்படும்.

Question 2.
எப்போது வாழ்வில் துன்பம் இல்லை?
Answer:
பிறருடைய குற்றத்தைக் காண்பது போல தன் குற்றத்தைக் காண்பவருக்குவாழ்வில் துன்பம் இல்லை .

Question 3.
எப்போது புறங் கூறுதல் கூடாது?
Answer:
நேருக்கு நேர் நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாத போது புறங்கூறல் கூடாது.

Question 4.
அருட்செல்வம் , பொருட்செல்வம் குறித்து வள்ளுவர் கூறுவது?
Answer:
1. செல்வங்களுள் சிறந்தது அருட்செல்வம்
2. பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.

சிறு வினா

Question 1.
சிறந்த அரசின் செயல்கள் யாவை?
Answer:
1. பொருள் வரும் வழிகளை அறிதல்.
2. பொருள்களைச் சேர்த்தல்.
3. சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
– ஆகியன சிறந்த அரசின் செயல்கள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சொல்லும் பொருளும்

1. அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை
2. அழுக்காறு – பொறாமை
3. ஆக்கம் – செல்வம்
4. கேடு – வறுமை
5. ஏதிலார் – பிறர்
6. பூரியார் – இழிந்தவர்
7. வாய்மை – உண்மை
8. செவ்வியான் – சான்றோர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

கற்பறை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 1.
ஐகார, ஔகார, மகர, ஆய்தக்குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்தெழுதுக.
Answer:
எடுத்துக்காட்டு :
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …………………
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஆ) ஒன்று

Question 2.
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ………………
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது
Answer:
ஈ) பணம் கிடைத்தது

Question 3.
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………….
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

குறு வினா

Question 1.
ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?
Answer:
ஔ, வௌ என ஔவைகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தன்னுடைய இரண்டு மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும்.

Question 2.
சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Answer:
ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை
முதல் – 1 1/2 மாத்திரை
இடை – 1 மாத்திரை
கடை – 1 மாத்திரை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 3.
மகரக்குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
1. வலம் வந்தான்
2. போன்ம்

மொழியை ஆழ்வோம்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
காட்டு வளமே நாட்டு வளம்!
Answer:
அனைவருக்கும் வணக்கம். காட்டு வளமே நாட்டு வளம்! என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஒரு நாட்டு வளம் எப்படி முடிவு செய்யப்படுகின்றது என்றால், அந்த நாட்டில் உள்ள நீர் வளம், நில வளம், தொழில் வளம் ஆகியவை கொண்டு தான் கணக்கிடப்படுகின்றது. நீர் வளத்திற்குக் காரணம் மழை. மழையினால் மட்டுமே நீர் வளத்தைப் பெருக்க முடியும்.

அந்த மழைக்கு அடிப்படைக் கராணம் காடுகள்தான். காடுகள் இல்லையென்றால் நீர் வளம் நாட்டில் இல்லை. காடுகளும் காட்டுயிரிகளும் நிலவளமாகிய மண்வளத்தை மேம்படுத்துகின்றது.நிலமும் நீரும் பெருகவில்லை என்றால் நாட்டின் தொழில் வளம் கிடையாது. எனவே காட்டு வளமே நாட்டு வளம் என்று கூறி நிறைவு செய்கின்றேன். நன்றி.

Question 2.
காட்டின் பயன்கள்
Answer:
அனைவருக்கும் வணக்கம். காட்டின் பயன்கள் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். காட்டின் பயன்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.அவை பலவாகும்.விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள், ஊர்வன ஆகிய எண்ணற்ற உயிரிகளுக்கு உணவையும் உறைவிடத்தையும் தருவது காடே. உயிர்வளியை அதிகமாக உற்பத்தி செய்து கொடுக்கின்றது.

மழை வளத்தைப் பெருக்குகின்றது. மண்ணைப் பண்படுத்துகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும். உணவுப்பெருக்கம் ஏற்படும். பருவநிலை சீரடையும். மண்ணரிப்பு தடுக்கப்படும். நிலத்தடி நீர் மட்டத்தைப் பெருக்கும். புவி வெப்பமயமாதலைத் தடுக்கும். எனவே காட்டின் பயன் அறிந்து காடுகள் வளர்ப்போம் என்று கூறி நிறைவு செய்கின்றேன்.நன்றி.

அறிந்து பயன்படுத்துவோம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 2

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.

1. மகளிர் × ஆடவர்
2. அரசன் × அரசி
3. பெண் × ஆண்
4. மாணவன் × மாணவி
5. சிறுவன் × சிறுமி
6. தோழி × தோழன்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 3
ஒன்றன் பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 4
ஆண்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 5
ஒன்றன் பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 6
பெண்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 7
பலர்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 8
பலவின் பால்

பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.

(எ.கா) : கண்ண கி சிலம்பு அணிந்தான்.
Answer:
கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 9

கடிதம் எழுதுக.

Question 1.
நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
Answer:
நண்பனுக்குக் கடிதம்

23, பெரியார் வீதி,
சேலம் – 3.
10.6.2019.

ஆருயிர் நண்பா !
உன் அன்பு நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த நலத்துடன் இருக்கின்றோம். நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?எங்கள் பள்ளியில் கடந்த வாரம் மதுரைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்.

அங்குச் சென்ற அனுபவத்தை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மதுரை என்றால் இனிமை என்பதைப் பாடநூலில் தான் படித்திருக்கின்றேன். அங்குச் சென்றபோது தான் அந்த இனிமையை உணர்ந்தேன்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு எவ்வளவு நுணுக்கமான கலைநுட்பம் தெரியுமா? காணக் கண் கோடி வேண்டும் நண்பா! குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டுகளில் அங்குச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.பின்னர் நாயக்கர் மகாலுக்குச் சென்றோம். அங்குள்ள ஒவ்வொரு தூ ணும் கதைகள் பல சொல்லும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

அங்குள்ள நாட்டிய அரங்கு மிகவும் பொலிவுடன் உள்ளது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் சென்றோம்.அங்குள்ள நூலகத்தைக் கண்டு வியந்து தமிழ்ச்சங்கமே! இதுவோ? என்று நினைத்தேன். அடுத்த வாரம் நேரில் வரும் போது இன்னும் விளக்கமாகக் கூறுகின்றேன். அன்புடன் முடிக்கின்றேன்.வாழ்க வளமுடன்.

இப்படிக்கு
உயிர் நண்பன்,
ப. இளங்கதிர்

உறைமேல் முகவரி
பெறுநர்
ச.கதிரவன்,
34,புதுக் காலனி,

மொழியோடு விளையாடு

வட்டத்திலுள்ள எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 10/>

1. புதையல்
2. இயல்
3. கயல்
4. புயல்
5. கடல்
6. தையல்
7. புல்
8. கல்
9. இல்லை
10. இயல்பு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 11
(எ.கா) : வாழை + காய் – வாழைக்காய்

1. குருவி + கூடு – குருவிக்கூடு
2. விளையாட்டு + திடல் – விளையாட்டுத் திடல்
3. தயிர் + சோறு – தயிர்ச் சோறு
4. கொய்யா + பழம் – கொய்யாப் பழம்
5. விளையாட்டு + போட்டி – விளையாட்டுப்போட்டி
6. அவரை + காய் – அவரைக்காய்

விடுகதைக்கு விடை எழுதுக.

Question 1.
மரம் விட்டு மரம் தரவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு; புலி அல்ல கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?……………..
Answer:
அணில்

Question 2.
என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது.
முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன்.
இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன்.
மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்? ……………..
Answer:
குதிரை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 3.
வெள்ளையாய் இருப்பேன். பால் அல்ல.
மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல
தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?……………..
Answer:
கொக்கு

கலைச்சொல் அறிவோம்

1. தீவு – Island
2. இயற்கை வளம் – Nature Resource
3. வன விலங்குகள் – Wild Animals
4. வனப் பாதுகாவலர் – Forest Conservator
5. உவமை – Parable
6. காடு – Jungle
7. வனவியல் – Forestry
8. பல்லுயிர்மண்ட லம் – Bio Diversity

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம் …………………
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாகரக்குறுக்கம்

Question 2.
சொல்லுக்கு முதலில் மட்டுமே குறுகும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Question 3.
வையம், சமையல், பறவை ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாகரக்குறுக்கம்

Question 4.
ஔவையார், வௌவால் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 5.
சொல்லின் இடையிலும் கடையிலும் வராத குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Question 6.
மகரக்குறுக்கத்தின் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஈ) கால்

Question 7.
ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஈ) கால்

Question 8.
மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
அ) அரை

Question 9.
உயிர்க்குறில் பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஆ) ஒன்று

Question 10.
உயிர்க்நெடில் பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஈ) இரண்டு

Question 11.
வலம் வந்தான், போன்ம், மருண்ம் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
இ) மகரக்குறுக்கம்

Question 12.
முஃடீது, கஃறீது ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஔகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஈ) ஆய்தக்குறுக்கம்

Question 13.
பொருத்துக.
1. ஐகாரக்குறுக்கம் – அ) ஔவையார்,வௌவால்
2. ஔகாரக்குறுக்கம் – ஆ) வலம் வந்தான்
3. மகரக்குறுக்கம் – இ) முஃடீது , கஃறீது
4. ஆய்தக்குறுக்கம் – ஈ) சமையல் , பறவை

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 14.
ஆய்தக்குறுக்கம் இடம் பெறாத சொல்
அ) அஃது
ஆ) முஃடீது
இ) கஃறீது
ஈ) பஃறுளி
Answer:
அ) அஃது

Question 15.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
1. ஐகாரக்குறுக்கம் – ஒன்றரை மற்றும் ஒரு மாத்திரை
2. ஔகாரக்குறுக்கம் – இரண்டு மாத்திரை
3. மகரக்குறுக்கம் – கால் மாத்திரை
4. ஆய்தக்குறுக்கம் – கால் மாத்திரை
Answer:
2. ஔகாரக்குறுக்கம் – இரண்டு மாத்திரை

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. சில இடங்களில் தன்னுடைய மாத்திரையளவு குறைந்து ஒலிப்பவை ………………..
2. ‘ஐ’ என்ற எழுத்து பெறும் மாத்திரையளவு …………………
3. அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு……………….
4. ………………. சொல்லின் இடையிலும் இறுதியிலும் வாராது.
5. ஆய்தம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது …………………
Answer:
1. குறுக்கங்கள்
2. இரண்டு
3. அரை
4. ஔகாரம்
5. ஆய்தக்குறுக்கம்.

குறுவினா

Question 1.
ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஒளகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சான்று: ஔவையார் , வௌவால்

Question 2.
ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஐகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதல் , இடை , கடை ஆகிய இடங்களில் குறுகும்.
சான்று: சைவம் , சமையல்

Question 3.
மகரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
மகரம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.
சான்று: வலம் வந்தான்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 4.
ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
சான்று: கற்றீது.

 

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Students can Download 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.3 தேம்பாவணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

கற்பவை கற்றபின்

Question 1.
வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கிப் பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் நூலகத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டுக.
Answer:

  • வீரமாமுனிவர் 1710 முதல் 1747 வரை தமிழகத்தில் இருந்து தமிழ்ப்ப ணி ஆற்றினார்.
  • சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார்.
  • இலக்கியச் சுவடிகளைத் தேடி எடுத்ததால் “சுவடி தேடும் சாமியார்’ எனப்பட்டார்.
  • திருக்குறள், தேவாரம், திருப்புகழ் போன்ற நூல்களைப் பிற ஐரோப்பிய மொழிகளில்
  • மொழிபெயர்த்தார்.
  • தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீனில் விளக்கம் அளித்து உள்ளார்.
  • திருக்குறள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்தார்.
  • 1728இல் புதுவையில் இவரின் பரமார்த்தக் குருவின் கதை நூல் முதல் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.
  • வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி இலக்கணம், உரைநடை என பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைக்கவில்லை.
  • இத்தமிழ்ப் பணிகளை இவர் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ஆற்காடு வேலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பல்வேறு இடங்களில் தங்கிப் பணியாற்றினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 2.
கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மலைப் பொழிவுப் பகுதியைப் படித்து அதில் வரும் அறக் கருத்துகளை எழுதுக.
Answer:
மலைப் பொழிவின் அறக்கருத்துகள்:

  • எளிய மனத்தோர் பேறு பெற்றோர்.
  • வஞ்சமில்லாத நெஞ்சத்துடன், பிறரைப் பழி சொல்லாது வாழ்பவர் விண்ணரசு எய்துவார்.
  • துயரம் அடைவோர் பேறு பெற்றோர் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
  • சாந்தம் உடையவர் பேறு பெற்றவர்கள்; தரணி (உலகம்) முழுவதும் அவர்களுக்கு உரியது.
  • நீதியின்மேல் பற்றுக்கொண்டு வாழ்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
  • இரக்க சிந்தை உடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்களுக்கே இரக்கம் கிடைக்கும்.
  • தூய மனதையுடையவர்கள் சிறப்புப் பெற்றவர்கள்; தோன்றும் கடவுளை அவர்கள் நேரில் காண்பர்.
  • பிறர் வேதனை தீர்க்க, தம்மை வருத்தும் ஞானிகள் எவரோ, அவர்கள் விண்ணக அரசை அடைந்தே தீர்வர்.
  • மனிதர்கள் பால் பகை கொண்டு, மடி நிறைய காணிக்கையை இறைவனுக்கு மட்டும் செலுத்துவதால் பயன் என்ன?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

“ஊருக்குத் தீமைகள் செய்து – உன்
உள்ளம் மகிழ்வது பாவம்
யாருக்கும் தீமையில்லாமல் – நீ
அழிந்து விடுவதே லாபம்”

இவைபோன்ற இன்னும் பல அறக்கருத்துகள் “மலைப்பொழிவில்” இடம்பெற்று உள்ளன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று…………………….. , …………………………. வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக
ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக
ஈ) எலிசபெத், பூமிக்காக
Answer:
அ) கருணையன், எலிசபெத்துக்காக

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

குறுவினா

Question 1.
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன்
– உவமை உணர்த்தும் கருத்து யாது?
Answer:
உவமை:
இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்

உவமை உணர்த்தும் கருத்து:
கருணையனாகிய நான் என் தாயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகின்றேன்.

சிறுவினா

Question 1.
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
Answer:

  • கருணையனாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
  • அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.

“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

நெடுவினா

Question 1.
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரி.
Answer:
குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி
  • முடிவுரை

முன்னுரை:
தாயின் அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்லில் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.

வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி :

1) மலர்ப்படுக்கை :
கருணையனின் தாய் மறைந்துவிட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்ப்படுக்கையை பரப்பினான். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

2) இளம்பயிர் வாட்டம்:
என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது. இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்போல் வாடுகிறது.

3) அம்பு துளைத்த வேதனை:
தீயையும் நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்ததால் ஏற்படும் புண்ணின் வரியைப் போல என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது வாடுகிறேன்.

4) தவிப்பு :
சரிந்த வழுக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழிதெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.

5) உயிர்கள் அழுதல்:
புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போல கூச்சலிட்டன.

முடிவுரை:
வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

இலக்கணக் குறிப்பு.

காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய் மணி – வினைத்தொகை
உய்முறை – வினைத்தொகை
செய்முறை – வினைத்தொகை
மெய்முறை – வேற்றுமைத்தொகை
கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஒலித்து – வினையெச்சம்
வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
பரப்பி – வினையெச்சம்
வீ – ஓரெழுத்தொருமொழி
தடவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லறம் – பண்புத்தொகை
இளங்கூழ் – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………
அ) பேதுரு
ஆ) ஆபிரகாம்
இ) திருமுழுக்கு யோவான்
ஈ) சூசை
Answer:
இ) திருமுழுக்கு யோவான்

Question 2.
திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………
அ) கருணாகரன்
ஆ) கருணையன்
இ) கருணாமூர்த்தி
ஈ) வலின்
Answer:
ஆ) கருணையன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 3.
கருணையனின் தாயார் யார்?
அ) எலிசபெத்
ஆ) மரியாள்
இ) சாரா
ஈ) அண்ணாள்
Answer:
அ) எலிசபெத்

Question 4.
சொல்லையும் பொருளையும் பொருத்துக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி - 2
அ) 3, 2, 1, 4
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 3, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
ஆ) 4, 1, 2, 3

Question 5.
தேம்பா + அணி என்பதன் பொருள் …………………
அ) வாடாத மாலை
ஆ) சூடாத மாலை
இ) பாடாத மாலை
ஈ) தேன்மாலை
Answer:
அ) வாடாத மாலை

Question 6.
கிறித்துவின் வளர்ப்புத் தந்தை …………………………….
அ) கருணையன்
ஆ) சூசையப்பர்
இ) தாவீது
ஈ) ஈசாக்கு
Answer:
ஆ) சூசையப்பர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 7.
தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் ………………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) மூன்று

Question 8.
தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………………………..
அ) 7ஆம் நூற்றாண்டு
ஆ) 12ஆம் நூற்றாண்டு
இ) 17ஆம் நூற்றாண்டு
ஈ) 19ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 17ஆம் நூற்றாண்டு

Question 9.
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………………..
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Answer:
ஈ) 3615

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 10.
தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ………………………..
அ) 33
ஆ) 35
இ) 36
ஈ)
Answer:
இ) 36

Question 11.
தேம்பாவணி ஒரு ……………………….. நூல் ஆகும்.
அ) பெருங்காப்பிய
ஆ) புதின
இ) நாடக நூல்
ஈ) வரலாற்று
Answer:
அ) பெருங்காப்பிய

Question 12.
தேம்பாவணியை இயற்றியவர் யார்?
அ) கபிலர்
ஆ) கால்டு வெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) வீரமாமுனிவர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 13.
தமிழ் முதல் அகராதி எது?
அ) சதுரகராதி
ஆ) தமிழ் அகராதி
இ) தொன்மை அகராதி
ஈ) பழைய அகராதி
Answer:
அ) சதுரகராதி

Question 14.
வீரமாமுனிவரின் இயற்பெயர்………………………..ஆகும்.
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
ஆ) தாமஸ் பெஸ்கி
இ) இஸ்மத்
ஈ) கால்டுவெல்
Answer:
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

Question 15.
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
அ) சாகிப்
ஆ) இஸ்மத்
இ) இஸ்மத் சன்னியாசி
ஈ) சன்னியாசி
Answer:
இ) இஸ்மத் சன்னியாசி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 16.
இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ………………
அ) தூயவன்
ஆ) புனிதன்
இ) பெரியோன்
ஈ) தூயதுறவி
Answer:
ஈ) தூயதுறவி

Question 17.
இஸ்மத் சன்னியாசி என்பது ……………… மொழிச் சொல்.
அ) பாரசீக
ஆ) இலத்தீன்
இ) எபிரேய
ஈ) உருது
Answer:
அ) பாரசீக

Question 18.
கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?
அ) எலிசபெத் கூற்று
ஆ) கருணையன் கூற்று
இ) சூசையப்பர் கூற்று
ஈ) தாவீது கூற்று
Answer:
ஆ) கருணையன் கூற்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 19.
பொருத்துக.
1. கூழ் – அ) கிளை
2. கொம்பு – ஆ) பயிர்
3. புழை – இ) காடு
4. கான் – ஈ) துளை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 20.
பொருத்துக.
1. கடிந்து – அ) விலக்கி
2. உவமணி – ஆ) மாலை
3. படலை – இ) மணமலர்
4. துணர் – ஈ) மலர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Question 21.
பொருத்துக.
1. காக்கென்று – அ) இடைக்குறை
2. கணீர் – ஆ) தொகுத்தல் விகாரம்
3. காய்மணி – இ) வேற்றுமைத்தொகை
4. மெய்முறை – ஈ) வினைத்தொகை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 22.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) திருமுழுக்கு யோவான்
ஆ) அருளப்பன்
இ) கருணையன்
ஈ) எலிசபெத்
Answer:
ஈ) எலிசபெத்

Question 23.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஈ) இயேசு

Question 24.
‘சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள் ………………
அ) வானம்
ஆ) நிலம்
இ) காடு
ஈ) கிளை
Answer:
ஆ) நிலம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 25.
நவமணி என்பதில் ‘நவம்’ என்ற சொல் குறிப்பது ………………
அ) ஆறு
ஆ) ஒன்பது
இ) பத்து
ஈ) ஐந்து
Answer:
ஆ) ஒன்பது

Question 26.
‘நல்லறப் படலைப் பூட்டும்’ இவ்வடிகளில் ‘படலை’ என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) மாலை
ஆ) மணமலர்
இ) மலர்கள்
ஈ) நிலம்
Answer:
அ) மாலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 27.
கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ………………
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஆ) யோவான்

Question 28.
கருணையன் என்பவர் ………………
அ) வீரமாமுனிவர்
ஆ) யோசேப்பு
இ) அருளப்பன்
ஈ) சாந்தாசாகிப்
Answer:
இ) அருளப்பன்

குறுவினா

Question 1.
தேம்பாவணி பிரித்துப் பொருள் கூறுக.
Answer:

  • தேம்பாவணி – தேம்பா + அணி என்றும் தேன் + பா + அணி என்றும் பிரிக்கலாம்.
  • தேம்பா + அணி என்பதற்கு வாடாத மாலை என்று பொருள்.
  • தேன் + பா + அணி என்பதற்கு தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்று பொருள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 2.
வீரமாமுனிவர் படைத்த இலக்கியங்கள் யாவை?
Answer:

  • சதுரகராதி
  • தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)
  • சிற்றிலக்கியங்கள்
  • உரைநடை நூல்கள்
  • பரமார்த்தக் குரு கதைகள்
  • மொழிபெயர்ப்பு நூல்கள்

ஆகியவற்றைப் படைத்துள்ளார்.

Question 3.
எதனை மட்டும் தான் அறிந்ததாகக் கருணையன் கூறுகிறார்?
Answer:
தன் தாயாகிய எலிசபெத் தன் கையால் காட்டிய முறைகளை மட்டும் அறிவேன். வேறொன்றும் அறியேன் என்று கூறுகிறார்.

Question 4.
தேம்பாவணி குறிப்பு வரைக.
Answer:

  • தேம்பாவணி பெருங்காப்பிய வகை நூல்.
  • இந்நூல் மூன்று காண்டங்களை உடையது.
  • 36 படலங்களையும் 3615 பாடல்களையும் உடையது.
  • இந்நூல் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூலாகும்.
  • இந்நூலின் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 5.
கருணையன் உள்ளம் வாடியது எதற்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது?
Answer:
கருணையன் உள்ளம் ,மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்வாடுதலுக்கு ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது.

Question 6.
கருணையன், ‘இரும்புழைப் புண்போல்’ நோகக் காரணம் யாது?
Answer:
கருணையனின் தாய் இறந்து விட்டார். தாயை இழந்து வாடும் அவர், தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்று வருந்துகின்றார்.

Question 7.
‘நவமணி வடக்க யில்போல்’ – இவ்வடிகள் சுட்டும் நவமணிகள் யாவை?
Answer:

  • கோமேதகம்
  • முத்து
  • நீலம்
  • புருடராகம் (புஷ்பராகம்)
  • பவளம்
  • வைடூரியம்
  • மரகதம்
  • வைரம்
  • மாணிக்கம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 8.
திருமுழுக்கு யோவான் என்பவர் யார்?
Answer:

  • கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
  • இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
  • இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
  • தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் காட்டினில் வாழ்ந்தார்.
  • வீரமாமுனிவர் கருணையன் என்று இவரை அழைக்கின்றார்.

Question 9.
‘அழுங்கணீர் பொழிந்தான்’ யார்? ஏன்?
Answer:

  • அழுங்கணீர் பொழிந்தவர் : திருமுழுக்கு யோவான்(கருணையன்)
  • கருணையன் தன் அன்னையின் உடலை மண்ணுள் அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும் கண்ணீரையும் ஒன்றாகப் பொழிந்தான்.

Question 10.
கருணையன் புலம்பியதைக் கேட்டு, அழுவன போன்று கூச்சலிட்டன எவை?
Answer:
கருணையன் புலம்பியதைக் கேட்டு, தேன்மலர்கள் பூத்த மணம் வீசும் மலர்களும், சிறுகுட்டைகள் தோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டில் அழுவன போன்று கூச்சலிட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

சிறுவினா

Question 1.
கருணையனிடம் இயற்கை கொண்ட பரிவு யாது?
Answer:
நல் அறங்களையெல்லாம் ஒரு கோவையாக இணைத்த அறமாலையை அணிந்த மார்பனாகிய கருணையன் கொண்ட துயரைக் கண்டு இயற்கையும் பரிவு கொண்டது.

பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும், சுனை தோறும் தங்கியுள்ள பறவைகளும் வண்டுகளும் கருணையன் உடன் இணைந்து அழுவன போல கூச்சலிட்டன.

Question 2.
இஸ்மத் சன்னியாசி – விளக்குக.
Answer:

  • வீரமாமுனிவரின் எளிமையையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.
  • இஸ்மத் சன்னியாசி என்பதற்குத் தூயதுறவி என்று பொருள்.
  • இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 3.
வீரமாமுனிவர் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : வீரமாமுனிவர்
இயற்பெயர் : கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி
புனைபெயர் : தைரிய நாத சுவாமி இலக்கியப் பணி : இலக்கண நூல், மொழிபெயர்ப்பு,
சிற்றிலக்கியம், உரைநடை.
இயற்றிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், பரமார்த்தக் குருகதைகள், வேதியர் ஒழுக்கம்,
செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம்.
காலம் : கி.பி. 1680-1747.
பிறமொழிப் புலமை : இலத்தீன், கிரீக்கு, எபிரேயம், ஆங்கிலம், தெலுங்கு.
மறைந்த ஊர் : அம்பலக்காடு

Question 4.
‘தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடி’ என்ற உவமையை விளக்கிப் பொருளொடு பொருத்துக.
Answer:
உவமை :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

பொருள் :
கருணையன் தாயை இழந்து வாடுதல்.

பொருத்தம் :
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல் போன்று கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றார்.

Question 5.
கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) யாவை?
Answer:

  • இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னர் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்தல்
  • மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்
  • தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருத்தம்.
  • துணையைப் பிரிந்த பறவை
  • சரிந்த வழுக்கு நிலத்தில் தனியே விடப்பட்டு வழி தெரியாமல் தவிப்பவன்.
    – ஆகியன கருணையனின் துயருக்குக் கூறப்பட்ட ஒப்புமைகள் (உவமைகள்) ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Question 6.
‘தாயும் கடிந்தெனைத் தனித்துப் போனாள்’ என்று கருணையன் வருந்தக் காரணம் யாது?
Answer:

  • நான் உயிர்ப்பிழைக்கும் வழி அறியேன்.
  • நினைத்ததைக் கண்ட அறிவுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளையும் அறியாதவன்.
  • என் தாய் கையால் காட்டிய அறிவுரையை மட்டுமே நான் அறிவேன்.
  • இப்படி என்னைத் தவிக்க விட்டுவிட்டு என் தாய் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!
    – என்னையும் என் தாய் கூட்டிச் சென்று இருக்கலாம், எதுவும் தெரியாத நான் எப்படி வாழ்வேனோ?

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.4 இந்திய வனமகன் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.4 இந்திய வனமகன்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

Question 1.
ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
Answer:
முன்னுரை
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜாதவ்பயேங். ‘இந்திய வனமகன்’ என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார். அதனை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

ரம் வளர்க்கும் எண்ணம்
1979ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் பாம்புகள் கரை ஒதுங்கின.சில பாம்புகள் இறந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இக்காட்சி ஜாதவ்பயேங்கை மிகவும் பாதித்தது. ஊர்ப் பெரியவர்கள் ‘தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம்’ என்றனர். அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. ஊர் மக்களிடம் தீவில் மரம் வளர்க்கலாம் என்று அவர் கூறிய போது, அதனை யாரும் ஏற்கவில்லை.

விடா முயற்சி
ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைக்கத் தொடங்கினார். நன்கு பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை. வனத்துறை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை நன்கு வளர ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் இத்தீவில் வளரவில்லை .

அசாம் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படி மண்புழுவுடன் சிவப்புக் கட்டெறும்பை அத்தீவு மண்ணில் விட்டார். சிறிது சிறிதாக மண்ணின் தன்மை மாறி பசும்புல்லும் மரங்களும் வளரத் தொடங்கின.

புதிய காடு உருவானது
மரங்களில் விளைந்த பழங்களை உண்டு, அதன் கொட்டைகளை விதையாகச் சேமித்து வைத்து விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். மழை பெய்யாத காலங்களில் பானை பெரிய மூங்கில் துணை கொண்டு சொட்டு சொட்டாக நீரினை மரங்களுக்குவிட்டார். மரங்கள் பெருகி வளர்ந்து, அத் தீவு 7 பெருங்காடானது.யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலிகள் முதலிய காட்டு விலங்குகள் வரத்தொடங்கின.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

முடிவுரை
ஜாதவ்பயேங் போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை காக்க வேண்டும். இந்திய வனமகன் வழியில் நாமும் செல்வோம்.

மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம்!காட்டினை உருவாக்குவோம்!