Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.7 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.7

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.7 Text Book Back Questions and Answers

Question 1.
Differentiate the following with respect to x.
(i) xsin x
(ii) (sin x)x
(iii) (sin x)tan x
(iv) \(\sqrt{\frac{(x-1)(x-2)}{(x-3)\left(x^{2}+x+1\right)}}\)
Solution:
(i) Let y = xsin x
Taking logarithm on both sides we get,
log y = log(xsin x)
log y = sin x log x
Differentiating with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7 Q1

(ii) Let y = (sin x)x
Taking logarithm on both sides we get,
log y = x log(sin x)
Differentiating with respect to x,
\(\frac{1}{y} \cdot \frac{d y}{d x}\) = x \(\frac{d}{d x}\) log(sin x) + log(sin x) \(\frac{d}{d x}\) (x)
\(\frac{1}{y} \cdot \frac{d y}{d x}\) = x \(\frac{1}{\sin x}\) (cos x) + log(sin x) (1)
\(\frac{1}{y} \cdot \frac{d y}{d x}\) = x cot x + log(sin x)
\(\frac{d y}{d x}\) = y[x cot x + log(sin x)]
\(\frac{d y}{d x}\) = (sin x)x [x cot x + log(sin x)]

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7

(iii) Let y = (sin x)tan x
Taking logarithm on both sides we get,
log y = tan x log(sin x)
Differentiating with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7 Q1.1

(iv) Let y = \(\sqrt{\frac{(x-1)(x-2)}{(x-3)\left(x^{2}+x+1\right)}}\)
y = \(\left(\frac{(x-1)(x-2)}{(x-3)\left(x^{2}+x+1\right)}\right)^{\frac{1}{2}}\)
Taking logarithm on both sides we get,
log y = \(\frac{1}{2}\) {[log(x – 1) + log(x – 2)] – [(log(x – 3) + log(x2 + x + 1)]}
log y = \(\frac{1}{2}\) [log(x – 1) + log(x – 2) – log(x – 3) – log(x2 + x + 1)]
Differentiating with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7 Q1.2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7

Question 2.
If xm . yn = (x + y)m+n, then show that \(\frac{d y}{d x}=\frac{y}{x}\)
Solution:
xm . yn = (x + y)m+n
Taking logarithm on both sides we get,
m log x + n log y = (m + n) log(x + y)
Differentiating with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7 Q2
Hence proved.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

Students can Download 8th Tamil Chapter 9.5 அணி இலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

Question 1.
திருக்குறளில் அணிகள் இடம்பெற்றுள்ள குறட்பாக்களுள் ஐந்தனைக் கண்டறிந்து
Answer:
அவற்றில் இடம்பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக.
(i) பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
அணி : எடுத்துக்காட்டு உவமையணி

(ii) தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்
அணி : வஞ்சப்புகழ்ச்சி அணி

(iii) இன்மையின் இன்னாத தியாதெனின்
இன்மையின் இன்மையே இன்னா தது.
அணி : சொற்பொருள் பின்வருநிலை அணி

(iv) பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமை யால்திரிந்து அற்று.
அணி : உவமையணி.

(v) கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
அணி : பிறிதுமொழிதல் அணி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.
அ) உவமை
ஆ) உவமேயம்
இ) தொடை
ஈ) சந்தம்
Answer:
அ) உவமை

Question 2.
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ………………… அணி.
அ) ஒற்றுமை
ஆ) வேற்றுமை
இ) சிலேடை
ஈ) இரட்டுற மொழிதல்
Answer:
ஆ) வேற்றுமை

Question 3.
ஒரே செய்யுளை இருபொருள் படும்படி பாடுவது ………….. அணி.
அ) பிறிதுமொழிதல்
ஆ) இரட்டுறமொழிதல்
இ) இயல்பு நவிற்சி
ஈ) உயர்வு நவிற்சி
Answer:
ஆ) இரட்டுறமொழிதல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

Question 4.
இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.
அ) பிறிதுமொழிதல்
ஆ) வேற்றுமை
இ) உவமை
ஈ) சிலேடை
Answer:
ஈ) சிலேடை

சிறுவினா

Question 1.
பிறிதுமொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
அணி விளக்கம் :
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூற வந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
எ.கா. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

இத்திருக்குறள், “நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது என்று உவமையை மட்டும் கூறுகிறது.

இதன் மூலம் ‘ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெற முடியும். தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றி பெறுதல் இயலாது’ என்னும் கருத்து விளக்கப்படுகிறது. எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம் பெற்றுள்ளது.

Question 2.
வேற்றுமை அணி என்றால் என்ன?
Answer:
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

Question 3.
இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?
Answer:
இரட்டுறமொழிதல் அணியில் ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமையும்.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகளைப் பெரியவர்களிடம் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
நம்பிக்கையே உயர்வு
Answer:
அவையோர்க்கு வணக்கம்! இன்று நான் நம்பிக்கையே உயர்வு’ என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.

நம்மைப் பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியம் அல்ல. நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் மிகவும் அவசியம். நாம் அச்சமின்றி நம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்யும் போது கிடைப்பதே வெற்றி.

“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

இப்பாடல் வரிகள் ஒவ்வொருவர் காதிலும் இசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது வெற்றிப் பாதையை நமக்குக் காட்டும்.

மண்ணில் விதையை விதைத்தால் அது கட்டாயமாக பூமியைப் பிளந்து கொண்டு வானத்தைப் பார்த்து வளர்ந்து “நான் இருக்கிறேன்” என்று காட்டுகிறது. அதேபோல்தான் நாமும் இவ்வுலகில் பிறந்து விட்டோம். நம்மால் எல்லாச் செயல்களையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரையும் ஒரு லட்சிய மனிதனாகவும் சாதனை மனிதனாகவும் காட்டுகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

நம் வெற்றிக்கு முதலில் நாம் நம்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் முன் வைக்கின்ற ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். நம்மால் முடியும்’ என்று தினசரி மனதிற்குச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

நான் எண்ணிய காரியம் எளிதில் முடியும் என்றும் என்னை சுற்றியுள்ளவர்கள் என்னைப் பாராட்டுவார்கள் என்றும் நம் கண்முன் இவை நடப்பது போன்ற ஒரு காட்சியை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை நம்மை வெற்றியடையச் செய்யும்.

ஒவ்வொரு வெற்றிக்குப் பின் நம் நம்பிக்கையும் விடாமுயற்சியும் நமக்குப் பக்கபலமாய் இருக்கும். சிலந்தி வலைப் பின்னும் நிகழ்வை கண்ட ராபர்ட் புரூஸ் மீண்டும் போர் செய்து ‘ வெற்றியாளனாகிய கதையையும் நாம் யாரும் மறந்து விடக்கூடாது.

மனிதன் தன்மீதும் தன்னுடைய செயல் மீதும் நம்பிக்கை வைக்காதிருந்தால் அவனால் எதுவும் செய்து முடிக்க முடியாது. முயற்சி திருவினை ஆக்கும்’, முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்’ என்னும் தொடர்கள் எல்லாம் நம்பிக்கையின் அடித்தளமாகும். முயன்றால் முடியும் என்ற நம்பிக்கையே ஒருவனை வெற்றியானாக்குகிறது.

நாம் எதைப் பற்றி எந்த வகையில் சிந்திக்கிறோமோ அதை அதே வகையில் அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறோம். ‘நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்’ ‘நம்பிக்கையே இனிமையான எதிர்காலங்களை அமைக்கும்’ இவற்றை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவோம்.

Question 2.
நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள்
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
நான் இப்போது நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள் பற்றிப் பேச வந்துள்ளேன்.

நற்பண்புகளுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கம். ஒழுக்கப் பண்புகளால் தொகுக்கப்பட்ட நூலான ஆசாரக்கோவை நல்லொழுக்கங்கட்கு வித்தாக, காரணமாக விளங்குவன எவை. என்று வரையறை செய்து எட்டு நற்குணங்களைக் கூறுகிறது. அவை நன்றியறிதல், பொறுமை, இன்சொல், எவருக்கும் இன்னாதன செய்யாமை, கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு சேர்தல் என்ற இந்த எட்டு வகைப் பண்புகளும் நல்லோரால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களுக்குக் காரணம் ஆகும் என்கிறது ஆசாரக்கோவை.

நம்மை விடப் பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுவதே உயர்ந்த பண்பு. சிறுவயதிலிருந்த அதைப் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு உதவி செய்தல், நேர்மையாக நடந்து கொள்ளுதல், ஐம்புலன்களை அடக்குதல், நம்மைவிடச் சிறியவர் என்றாலும் அவர்களுடைய கருத்துகளையும் ஏற்றுக் கொள்ளுதல். வறுமை நம்மைச் சூழ்ந்தாலும் தீய செயல்களைச் செய்யாதிருத்தல் இவற்றை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தல் வேண்டும்.

நற்பண்புகளின் ஒட்டுமொத்த உருவமே ஒழுக்கம்தான். அதில் முதலிடம் பெறுவது வாய்மை. நாம் பொய் பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு பொய் பேசினால் அதனை மறைக்க மீண்டும் மீண்டும் பல பொய்களைப் பேச வேண்டியிருக்கும். அவ்வாறு பொய் பேசும்போது பல அவமானங்களைச் சந்திக்க நேரும். பொய்பேசி வெல்வதைவிட மெய்பேசி தோற்பது சிறந்தது.

அடுத்தது, காலமறிதல்’ காலத்தை அறிந்து செயல்பட வேண்டும். காலந்தவறாமல் நேரத்திற்குச் செயல்களைச் செய்ய வேண்டும். பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. காலம் நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் காலத்திற்காகக் காத்திருந்து செயல்பட வேண்டும். மழையில் உப்பு விற்பதும், காற்றில் மாவு விற்பதும் முட்டாள்தனம். அதனால், வள்ளுவர், காலம் அறிதல் பற்றிக் கூறியதை நாம் பின்பற்ற வேண்டும்.

அடுத்தது சேவை மனப்பான்மை. நாம் இருக்கும் இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், நம் வீடு, நம் வீட்டு வாசல், நம் தெரு இவற்றை சுத்தம் செய்தல். இதனை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் வீடும் நாடும் சுத்தமாகும்.

மருத்துவ உதவி பெறுவதற்கு வழிகாட்டுதல், விழாக்காலங்களில் பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அங்குள்ள கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவைக் கற்றுக் கொடுத்தல், செய்தித்தாள்களை வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் இவற்றையெல்லாம் நாம் நம் வாழ்வில் செயல்படுத்தினால் நாமே நற்பண்புகளில் சிறந்தவர் என்ற பெயர் பெற்று அனைவராலும் பாராட்டப்படுவோம்.

சொல்லக் கேட்டு எழுதுக

அம்பேத்கர் தமது வாழ்க்கையில் புதிய திருப்பம் காண வழி ஒன்றைக் கண்டறிந்தார். அது ‘படிப்பு, படிப்பு, படிப்பே’ ஆகும். அதை அடையும் முயற்சியில் அயராது உழைக்கத் தொடங்கினார். எப்போதும் புத்தகமும் கையுமாகவே திகழ்ந்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்டும் கடன் வாங்கியும் புத்தகங்களை வாங்கித் தந்தார்.

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை அம்பேத்கர் கடைசிவரை கடைப்பிடித்தார். வட்டமேசை மாநாட்டிற்காக அம்பேத்கர் இங்கிலாந்து சென்றார். மாநாடு முடிந்த பிறகு அமெரிக்கா சென்ற அவர் தம் பழைய நண்பர்களையும் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தார். தாய்நாடு திரும்பிய போது பதினான்கு பெட்டிகள் நிறையப் புத்தகங்களைக் கொண்டு வந்தார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

அறிந்து பயன்படுத்துவோம்

தான், தாம் என்னும் சொற்கள்
தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும். இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தான், தன்னை , தன்னால், தனக்கு , தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.
மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.
(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்.) (எ.கா.) மாடுகள் தமது தலையை ஆட்டின.
கன்று தனது தலையை ஆட்டியது.

இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.

1. சிறுமி ……………… (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ……………… (தனது தமது) உழைப்பை நல்கினார்.
3. உயர்ந்தோர் …………… (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.
4. இவை ………………. (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.
5. குழந்தைகள்……………. (தன்னால் தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.
Answer:
1. தனது
2. தமது
3. தம்மைத்தாமே
4. தாம்
5. தம்மால்

தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
Answer:
முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

கட்டுரை எழுதுக

உழைப்பே உயர்வு

முன்னுரை:
உழைப்பு என்பது தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சீரும் சிறப்புடன் செய்வதாகும். நாம் மேற்கொண்ட செயலில் வெற்றி பெறுவதற்கு உழைப்பதைத் தவிர வேறுவழியில்லை. அத்தகைய உழைப்பைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மாணவர்களின் உழைப்பு :
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது சான்றோர் வாக்கு. இது அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். ஒரு தேர்வில் மட்டும் முதல் மாணவனாக இருந்தால் போதாது. எல்லாத் தேர்வுகளிலும் முதல் மாணவனாகத் திகழ முயற்சியும் பயிற்சியும் தேவை. இம்முயற்சியும் பயிற்சியுமே உழைப்பு. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓர் உயர்ந்த குறிக்கோளை மனதில் நிறுத்தி அக்குறிக்கோளில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.

ஊக்கமில்லா உழைப்பு :
சோம்பல், விரைந்து செய்ய வேண்டியவற்றை தாமதித்துச் செய்யும் இயல்பு, மறதி, தூக்கம் ஆகியன ஊக்கத்தை அறவே ஒழிக்கும் திறமுடையன. ஊக்கமில்லாதவர் மக்களாகார்; மரங்களாவர்’ என்பது வள்ளுவர் மொழி. காட்டில் நிற்கும் மரங்கள் காய்கனிகளைத் தரும். இறைவன் உறையும் திருக்கோயில், இல்லம், தேர், மரக்கலம் ஆகியன செய்வதற்கு மரம் பயன்படுகிறது. ஆனால், ஊக்கமற்ற மக்களாகிய மரங்களோ எதற்கும் பயன்படுவதில்லை. ஊக்கமில்லா உழைப்பு வீணானது.

உழைப்பின் பயன் :
நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவது பெரிதல்ல. அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும். அவ்வாறு ஓயாமல் உழைப்பவர்கள் விதியைக்கூட தூர விரட்டிவிடுவார்கள். கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமேயில்லை. பொறுமையாகவும் இடைவிடாமலும் உழைத்தால் வெற்றி நிச்சயம். வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப்பெரிய மூலதனம். கடின உழைப்பு ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

முடிவுரை :
‘கையும் காலும் தான் உதவி – கொண்ட கடமைதான் நமக்குப் பதவி’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல் வரிகளை நினைவில் வைத்து உழைப்போம்; உயர்வோம்.

மொழியோடு விளையாடு

பின்வரும் வினாக்களைப் படித்து இருவினாக்களுக்கு ஒரு விடை தருக.
(எ.கா.) குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்?
குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்? பெருங்காயத்தால்

1. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?
2. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?
3. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?
4. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?
Answer:
1. நாலால்
2. போரில்
3. மாலை
4. திங்கள்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…

1. வாழ்வுக்கு வெற்றிதரும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வேன்.
2. சமுதாய விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. குறிக்கோள் – Objective
2. நம்பிக்கை – Confidence
3. முனைவர் பட்டம் – Doctorate
4. வட்ட மேசை மாநாடு – Round Table Conference
5. இரட்டை வாக்குரிமை – Double voting
6. பல்கலைக்கழகம் – University
7. ஒப்பந்தம் – Agreement
8. அரசியலமைப்பு – Constitution

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது …………………. அணி.
2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது …………………
3. ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது …………………….
4. இரட்டுறமொழிதல் அணியைச் ……………… என்றும் கூறுவர்.
Answer:
1. பிறிதுமொழிதல்
2. வேற்றுமையணி
3. இரட்டுற மொழிதல் அணி
4. சிலேடை

விடையளி

Question 1.
இரட்டுறமொழிதல் அணி சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.

எ.கா. ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு.

விளக்கம் :
இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்; தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

நாய் சில சமயம் ஓடிக் கொண்டிருக்கும்; சில சிமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்; குரைப்பதற்கு வெட்கப்படாது

இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால் இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம்

Students can Download 8th Tamil Chapter 9.4 பால் மனம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.4 பால் மனம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம்

Question 1.
குழந்தைகளின் நற்பண்புகளாகப் ‘பால் மனம்’ கதையின் வழி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
(i) குழந்தைக்கு வீட்டு நாய், தெருநாய் வேறுபாடு தெரியாது. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கும்.

(ii) கீரை விற்கும் கிழவியைக் கூட தன் வீட்டில் ஒருவராகப் பார்க்கும் பரந்த குணம்.

(iii) கூலித்தொழிலாளி வெயிலில் காலில் செருப்பில்லாமல் சுமை நிறைந்த வண்டியை இழுப்பதைப் பார்க்கும் போது அத்தொழிலாளியின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம்.

(iv) ஆட்டுக்குட்டியின் பசியைப் போக்க, குழந்தைக்கு வைத்திருந்த புட்டிப்பாலைக் கொடுக்கும் கருணைப் பரிவு. இவையே பால் மனம் கதையின் வழி நான் அறிந்த குழந்தைகளின் நற்பண்புகள்.

மதிப்பீடு

Question 1.
குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்ளைப் பற்றித் தொகுத்து எழுதுக.
Answer:
மனிதனின் படைப்பு விசித்திரமானது. அதிலும் குழந்தை பிராயம் மிகவும் அழகானது. குழந்தை கிருஷ்ணாவின் உள்ள அழகு பற்றி இக்கதையின் மூலம் பார்க்கலாம்.

குழந்தை கிருஷ்ணா பிஞ்சுவிரல், வெள்ளரிப் பிஞ்சாக முகம், சிறகு போன்ற இமைகள், கண்ணாடி போன்ற விழிகள், பூ போல் உதடுகள், ஒளியரும்புகளான பற்கள், நுங்கு நீரின் குளிர்ச்சியான குரல், தெய்வ வடிவான அழகு, முகம் உலகைப் புரிந்து கொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான சிந்தனைச் சாயல். இந்த ஒட்டு மொத்த இணைப்புதான் கிருஷ்ணா.

சன்னலைப் பிடித்தவாறு தெருவில் பார்த்த கிருஷ்ணா தன் அம்மாவிடம் குப்பைத் தொட்டியோரம் இருந்த சொறிநாயைக் காட்டினாள். அம்மா அது அசிங்கம் என்றும் தன் வீட்டில் இருக்கும் டாமி அழகானது, சுத்தமானது’ என்றும் கூறினாள். மேலும் ‘அதனைத் தொடக்கூடாது, அப்பா திட்டுவார்’ என்றும் கூறினாள். கிருஷ்ணா , “திட்டவில்லையென்றால் தொடலாமா?” என்று கேட்டாள். கிருஷ்ணாவிற்குத் தெரு நாயும், வீட்டு நாயும் வேறில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம்

வீட்டுவாசலில் கீரைவிற்கும் கிழவியைப் பார்த்ததும் உற்சாகமாக சென்ற கிருஷ்ணாவை அம்மா “அவளைத் தொடாதே உடம்பு சரியில்லாதவள்” என்று கூவினாள். அக்கண்டிப்பில் 3 திகைத்த கிருஷ்ணா “அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடவில்லையா சித்தப்பா?” என்று கேட்டாள்.

கிருஷ்ணா சித்தப்பாவுடன் காந்தி மண்டபத்துக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும் 5 போது ஒருவர் காலில் செருப்பில்லாமல் நிறைந்த பாரத்துடன் கைவண்டியை இழுத்துச் செல்வதைப் பார்த்தாள். அவருக்குக் கல்குத்தும், வெயில் சுடும் எனக் கவலைப்பட்டாள். தன் சித்தப்பாவிடம் “உன் செருப்பைக் கொடுத்து விடு, நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே” என்றாள்.

அடுத்த நாள் காலையில் தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் தாங்காமல் இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நிற்பதைக் கண்டாள். உடனே கிருஷ்ணா, கைக்குழந்தையின் அருகில் வைத்திருந்த பால் புட்டியை எடுத்து வந்து ஒரு குட்டியின் வாயில் வைத்து அதற்குப் பால் ஊட்டினாள். அதைக் கண்ட அம்மாவும், அப்பாவும், சித்தப்பாவும் வியப்புடன் நின்ற னர்.

தெருநாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கம், கீரை விற்கும் பாட்டியிடம் காட்டிய பாசம், வண்டி இழுக்கும் மனிதரின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம், ஆட்டுக்குட்டியிடம் காட்டிய கருணைப் பரிவு இவையெல்லாம் குழந்தை கிருஷ்ணாவின் சிறப்பு பண்புநலன்கள்.

ஆனால் அவள் எட்டு வயதில் தன் தம்பி தெருநாய்க்குப் பால் சாதம் பேடுவதைத் தவறு எனக் கூறுகிறாள். கல்லடிப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறாள். கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்டால், “எப்பவும் இங்கேதான் வருவாயா? நான் தரமாட்டேன்” என்று கூறுகிறாள். இதையெல்லாம் கிருஷ்ணாவின் அம்மா ஏற்றுக் கொள்கிறார்.
உலகச்சூழல் ஒவ்வொரு குழந்தையையும் மாற்றிவிடுகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம்

ஆசிரியர் குறிப்பு

கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி; சிறுகதைகள், புதினங்கள், குறும் புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார். இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார். உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள்,
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம் 1

அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பால் மனம் எனும் இக்கதை அ.வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.6 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.6

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.6 Text Book Back Questions and Answers

Question 1.
Find \(\frac{d y}{d x}\) for the following functions:
(i) xy – tan(xy)
(ii) x2 – xy + y2 = 1
(iii) x3 + y3 + 3axy = 1
Solution:
(i) Given xy = tan(xy)
Differentiating both sides with respect to x, we get
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q1.1

(ii) x2 – xy + y2 = 7
Differentiating both side with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q1.2

(iii) x3 + y3 + 3axy = 1
Differentiating both sides with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q1.3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q1.4

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6

Question 2.
If \(x \sqrt{1+y}+y \sqrt{1+x}=0\) and x ≠ y, then prove that \(\frac{d y}{d x}=-\frac{1}{(x+1)^{2}}\).
Solution:
Given \(x \sqrt{1+y}+y \sqrt{1+x}=0\)
\(x \sqrt{1+y}=-y \sqrt{1+x}\)
Squaring both sides we get
⇒ x2 (1 + y) = y2 (1 + x)
⇒ x2 + x2y = y2 + y2x
⇒ x2 – y2 + x2y – y2x = 0
⇒ (x + y) (x – y) + xy(x – y) = 0
⇒ (x – y) [(x + y) + xy] = 0
∴ x – y = 0 (or) x + y + xy = 0
x = y (or) x + y + xy = 0
Given that x ≠ y
x + y + xy = 0
⇒ y + xy = -x
⇒ y(1 + x) = -x
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q2
Hence proved.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6

Question 3.
If 4x + 3y = log(4x – 3y), then find \(\frac{d y}{d x}\)
Solution:
Given 4x + 3y = log(4x – 3y)
Differentiating both sides with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q3.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.6 Q3.2

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

Students can Download 8th Tamil Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

Question 1.
சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக
Answer:
சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்கள் :
1. பெரியார்
2. காந்தியடிகள்
3. நெல்சன் மண்டேலா
4. அம்பேத்கர்
5. முத்துலெட்சுமி ரெட்டி
6. மூவலூர் இராமாமிர்தம்
7. பாரதியார்
8. பாரதிதாசன்
9. அயோத்திதாசர்

Question 2.
அம்பேத்கரின் பண்புகளாக நீங்கள் உணர்ந்தவற்றை எழுதுக.
Answer:
இளமையில், இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்தில் பல அவமதிப்புகளுக்கு ஆளானவர். அதனால் அவர் பள்ளியையோ கல்வியையோ வெறுக்காமல் தொடர்ந்து படித்து இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், பாரிஸ்டர் பட்டம் என்று முன்னேறி மிகச்சிறந்த சான்றோனாக உயர்ந்தார்.

இதில் அவருடைய கடுமையான உழைப்பு தெரிகிறது. ‘நூலகத்திற்கு முதல் ஆளாய்ச் சென்று இறுதி ஆளாய் வருவார்’ என்று கூறும்போது அவருடைய உயர்வுக்கு இந்த நூலகமே தூணாக இருந்துள்ளது. தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார்.

அம்பேத்கர் “நான்வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெயவம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என்று கூறியுள்ளார். அதன்படியே அவர் நல்லறிவு பெற்றும், சுயமரியாதையுடனும் நன்னடத்தையுடனும் வாழ்ந்து காட்டினார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார். அப்போராட்டத்தோடு அவர் நிற்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகவும் பாடுபட்டார்.

அம்பேத்கரின் கருத்துகள் :
(i) கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து. அது உனக்கு பயன் தரும்.
(ii) கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்.
(iii) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.
அம்பேத்கர் கல்வியாளராக பொருளாதார நிபுணராக, தத்துவவாதியாக, வரலாற்றாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, சட்ட அமைச்சராக இருந்து தன் பன்முக ஆற்றலால் மக்களுக்குத் தொண்டாற்றியவர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

தெரிந்து தெளிவோம் :
(i) இரட்டைமலை சீனிவாசன் : இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

(ii) அரசியல் அமைப்புச்சட்டம் : உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியாவிளங்குகிறது. இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்க, ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது.

இச்சட்டத்தினையே அரசியலமைப்புச் சட்டம் என்பர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன. அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….
அ) இராதாகிருட்டிணன்
ஆ) அம்பேத்கர்
இ) நௌரோஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
Answer:
ஆ) அம்பேத்கர்

Question 2.
பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
அ) சொத்துரிமையை
ஆ) பேச்சுரிமையை
இ) எழுத்துரிமையை
ஈ) இரட்டை வாக்குரிமையை
Answer:
ஈ) இரட்டை வாக்குரிமையை

Question 3.
சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் …………….
அ) சமாஜ் சமாத சங்கம்
ஆ) சமாத சமாஜ பேரவை
இ) தீண்டாமை ஒழிப்புப் பேரவை
ஈ) மக்கள் நல இயக்கம்
Answer:
அ) சமாஜ் சமாத சங்கம்

Question 4.
அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ……….. விருது வழங்கியது.
அ) பத்மஸ்ரீ
ஆ) பாரத ரத்னா
இ) பத்மவிபூசண்
ஈ) பத்மபூசன்
Answer:
ஆ) பாரத ரத்னா

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் …………………..
2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ………………….
3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ……………… சென்றார்.
Answer:
1. புத்தரும் அவரின் தம்மமும்.
2. சுதந்திரத் தொழிலாளர் கட்சி
3. இலண்டன்

குறுவினா

Question 1.
அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?
Answer:
அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார். இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார். மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.

Question 2.
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.
Answer:
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கண்ட பணிகள் :
(i) அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.

(ii) ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927ஆம் ஆண்டு துவங்கினார். சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

(iii) 1930ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

Question 3.
வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?
Answer:
வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது: ‘என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்’ என்று அம்பேத்கர் கூறினார்.

சிறுவினா

Question 1.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?
Answer:
இந்திய அரசியல் அமைபச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் :
(i) 15-08-1947 அன்று இந்தியா விடுதலை பெற்றது. ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

(ii) 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.

(iii) இக்குழுவில் கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது.

(iv) அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு, அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக்கூறுகளை. இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.

(v) அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தது. இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.

Question 2.
அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.
Answer:
அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி :
(i) 1935ஆம் ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

(ii) ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைக் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்.

(iii) சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டார்.

(iv) அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றி பெற்றனர்.

நெடுவினா

Question 1.
பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.
Answer:
பூனா ஒப்பந்தம் :
(i) ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

(ii) இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

(iii) இதன் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

(iv) அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

சிந்தனை வினா

Question 1.
பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
பாகுபாடில்லாத க கள் சமூகம் உருவாக நமது கடமைகள் :
நாம் வாழும் சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்குண்டு. நாம் பேசும் சொற்கள், செய்யும் செயல்கள் மற்றவரைப் பாதிக்காமலும், துன்புறுத்தாமலும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு பெயர்களுடனும் வெவ்வேறு கடமைகளுடன்தான் வாழ்கிறோம். வீட்டில் மகன் அல்லது மகள், பள்ளியில் மாணவன், அலுவலகத்தில் தொழிலாளி அல்லது முதலாளி, சமுதாயத்தில் குடிமகன் எனப் பல்வேறு வேடங்களைத் த தரித்துக் கொண்டுள்ளோம். தரித்துள்ள வேடத்தில் தவறின்றி நடந்துகொள்ள வேண்டும்.

தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், தன்னோடு வாழ்பவர்களுக்கும் உண்டான உரிமைகளைப் பேணி வாழ்வதற்கு அவன் முன் வர வேண்டும். அவ்வாறு வாழும்போது சமுதாயத்தில் மனித நேயம் தழைத்துவிடும். மனித நேயம் பேணப்பட்டால் உரிமைகள் பேணப்படும். சமூகச் சீர்குலைவு இருக்காது. ஒழுக்கக்கேடு, அச்சம் நிறைந்த சூழ்நிலை இவையெல்லாம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

ஆண், பெண் வேறுபாடுகளும், உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்று பாகுபாடின்றி இருக்க வேண்டும். இரு பாலரும் சம உரிமை பெற்று வாழ்ந்தால், பாகுபாடில்லாத மக்கள் சமூகம் நீ உருவாகும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் ……………………..
2. அம்பேத்கர் பிறந்த நாள் …………………….
3. அம்பேத்கர் பிறந்த ஊர் ………………. மாநிலத்தில் ……………………. மாவட்டத்தைச் சேர்ந்த ………………. என்பதாகும்.
4. அம்பேத்கரின் பெற்றோர் …………………. ஆவர்.
5. அம்பேத்கரின் தந்தை …………………… ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
6. அம்பேத்கர் மும்பையில் உள்ள …………………… உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
7. அம்பேத்கரின் படிப்பிற்கு உதவிய மன்னர் ………………. மன்னர்.
8. அம்பேத்கர் சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் ………………….. பணியாற்றினார்.
9. அம்பேத்கர் 1915 இல் பண்டைக்கால ………………………… என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.
10. அம்பேத்கருக்குக் ……………….. பல்கலைக்கழகம் இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்’ என்ற ஆய்வுக்காக ………………….. பட்டம் வழங்கியது.
11. அம்பேத்கர் 1920 ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக ……………………. சென்றார்.
12. அம்பேத்கர் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற ஆண்டு ………………
13. ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக அம்பேத்கர் 1923ஆம் ஆண்டு ………………….. பட்டம் பெற்றார்.
14. அம்பேத்கர் 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற ………………….. மாநாட்டில் கலந்து கொண்டார்.
15. அம்பேத்கர் தொடங்கிய கட்சி …………………………
16. அம்பேத்கர் துவங்கிய இதழ் ………………….. ஆண்டு 1927.
17. அம்பேத்கர் உருவாக்கிய அமைப்பு ……………………..
18. அம்பேத்கர் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்திய இடம் ……………. ஆண்டு 1930.
19. அம்பேத்கர் ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் ………………………..
20. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு …………………………
21. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டம் வரலாற்று ஆசிரியர்களால் …………………….. எனப் போற்றப்படுகிறது.
22. அம்பேத்கரின் மறைவுக்குப் பின் வெளியான …………………….. ஆண்டு ……………….
23. அம்பேத்கர் இயற்கை எய்திய நாள் ஆண்டு ………………..
Answer:
1. பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
2. 14-04-1891
3. மகாராட்டிர, இரத்தினகிரி, அம்பவாதே
4. ராம்ஜி சக்பால்- பீமாபாய்
5. இராணுவப் பள்ளியில்
6. எல்பின்ஸ்டன்
7. பரோடா
8. உயர் அலுவலராகப்
9. இந்திய வணிகம்
10. கொலம்பியா, முனைவர்
11. இலண்டன்
12. 1921
13. முனைவர்
14. வட்டமேசை
15. சுதந்திரத் தொழிலாளர் கட்சி
16. ஒடுக்கப்பட்ட பாரதம்
17. சமாஜ் சமாத சங்கம்
18. நாசிக்
19. சட்ட அமைச்சராகவும் அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார்
20. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு
21. மிகச் சிறந்த சமூக ஆவணம்
22. புத்தகம் புத்தரும் அவரின் தம்மமும், 1957
23. 06-12-1956

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

விடையளி :

Question 1.
அம்பேத்கரின் பிறப்பு பற்றி எழுதுக.
Answer:
அம்பேத்கர் பிறந்த நாள் – 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள் (14-4-1891)
பெற்றோர் – ராம்ஜி சக்பால் – பீமாபாய்.
ஊர் – மகாராட்டிர மாநிலம் – இரத்தினகிரி மாவட்டம் – அம்பவாதே – ஊர்.

Question 2.
அம்பேத்கரின் பொன்மொழியை எழுதுக.
Answer:
அம்பேத்கரின் பொன்மொழி :
“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று
முதல் தெய்வம் – அறிவு
இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை
மூன்றாவது தெய்வம் – நன்னடத்தை.

Question 3.
அம்பேத்கர் புத்த சமயம் மீது கொண்ட பற்றினை எழுதுக.
Answer:
அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார். இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், உலகப் பெளத்த சமய மாநாடுகளிலும் கலந்து கொண்டார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Question 4.
அம்பேத்கருடன் இரட்டைமலை சீனிவாசன் எங்கு, எதற்காகச் சென்றார்?
Answer:
இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்.

Question 5.
அரசியல் அமைப்புச் சட்டம் – குறிப்பு எழுதுக.
Answer:
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்க ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது. இச்சட்டத்தினையே அரசியல் அமைப்புச் சட்டம் என்பர்.

உலகின் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன. அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.

Question 6.
அம்பேத்கரின் கல்வி பற்றி எழுதுக.
Answer:
அம்பேத்கர் மும்பையில் எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் 1904 ஆம் ஆண்டு சேர்ந்தார். 1907 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்தார். மும்பைப் பல்கலைக்கழத்தில் 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

1915இல் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்.

இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

1920 ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார். 1921ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும் 1923 ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டமும் பெற்றார். அதே ஆண்டில் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.5 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.5

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.5 Text Book Back Questions and Answers

Question 1.
Differentiate the following with respect to x.
(i) 3x4 – 2x3 + x + 8
(ii) \(\frac{5}{x^{4}}-\frac{2}{x^{3}}+\frac{5}{x}\)
(iii) \(\sqrt{x}+\frac{1}{\sqrt[3]{x}}+e^{x}\)
(iv) \(\frac{3+2 x-x^{2}}{x}\)
(v) x3 ex
(vi) (x2 – 3x + 2) (x + 1)
(vii) x4 – 3 sin x + cos x
(viii) \(\left(\sqrt{x}+\frac{1}{\sqrt{x}}\right)^{2}\)
Solution:
(i) Let y = 3x4 – 2x3 + x + 8
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q1

(ii) Let y = \(\frac{5}{x^{4}}-\frac{2}{x^{3}}+\frac{5}{x}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q1.1

(iii) Let y = \(\sqrt{x}+\frac{1}{\sqrt[3]{x}}+e^{x}\)
\(y=x^{\frac{1}{2}}+x^{\frac{1}{3}}+e^{x}\)
[∵ \(\frac{1}{\sqrt[3]{x}}=\frac{1}{(x)^{\frac{1}{3}}}=x^{\frac{1}{3}}\)]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q1.2

(iv) Let y = \(\frac{3+2 x-x^{2}}{x}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q1.3

(v) Let y = x3 ex
[∵ We have product of two functions, so use product rule]
= x3 ex + ex (3x2)
= ex (x3 + 3x2)
= x2 ex (x + 3)

(vi) Let y = (x2 – 3x + 2) (x + 1)
y = x3 – 3x2 + 2x + x2 – 3x + 2
y = x3 – 2x2 – x + 2
\(\frac{dy}{dx}\) = 3x2 – 4x – 1

(vii) Let y = x4 – 3 sin x + cos x
\(\frac{dy}{dx}\) = \(\frac{d}{d x}\) (x4) – 3 \(\frac{d}{d x}\) (sin x) + \(\frac{d}{d x}\) (cos x)
= 4x3 – 3 cos x – sin x

(viii) \(\left(\sqrt{x}+\frac{1}{\sqrt{x}}\right)^{2}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q1.4

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5

Question 2.
Differentiate the following with respect to x.
(i) \(\frac{e^{x}}{1+x}\)
(ii) \(\frac{x^{2}+x+1}{x^{2}-x+1}\)
(iii) \(\frac{e^{x}}{1+e^{x}}\)
Solution:
(i) Let y = \(\frac{e^{x}}{1+x}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q2

(ii) Let y = \(\frac{x^{2}+x+1}{x^{2}-x+1}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q2.1

(iii) Let y = \(\frac{e^{x}}{1+e^{x}}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q2.2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5

Question 3.
Differentiate the following with respect to x.
(i) x sin x
(ii) ex sin x
(iii) ex (x + log x)
(iv) sin x cos x
(v) x3 ex
Solution:
(i) Let y = x sin x
\(\frac{d y}{d x}\) = x \(\frac{d}{d x}\) (sin x) + sin x \(\frac{d}{d x}\) (x)
= x cos x + sin x . 1
= x cos x + sin x

(ii) Let y = ex sin x
\(\frac{d y}{d x}\) = ex \(\frac{d}{d x}\) (sin x) + sin x \(\frac{d}{d x}\) (ex)
= ex cos x + sin x ex
= ex (cos x + sin x)

(iii) Let y = ex (x + log x)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q3

(iv) Let y = sin x cos x
\(\frac{d y}{d x}\) = sin x \(\frac{d}{d x}\) (cos x) + cos x \(\frac{d}{d x}\) (sin x)
= sin x (-sin x) + cos x cos x
= -sin2 x + cos2 x
= cos2 x – sin2 x
= cos 2x [∵ cos 2x = cos2 x – sin2 x]
(or) y = sin x cos x
y = \(\frac{1}{2}\) (2 sin x cos x)
y = \(\frac{1}{2}\) sin 2x
\(\frac{d y}{d x}\) = \(\frac{1}{2}\) cos 2x . 2 = cos 2x

(v) Let y = x3 ex
\(\frac{d y}{d x}\) = x3 \(\frac{d}{d x}\) (ex) + ex \(\frac{d}{d x}\) (x3)
= x3 (ex) + ex (3x2)
= x2 ex (x + 3)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5

Question 4.
Differentiate the following with respect to x.
(i) sin2 x
(ii) cos2 x
(iii) cos3 x
(iv) \(\sqrt{1+x^{2}}\)
(v) (ax2 + bx + c)n
(vi) sin(x2)
(vii) \(\frac{1}{\sqrt{1+x^{2}}}\)
Solution:
For the following problems chain rule to be used:
\(\frac{d}{d x}\) f(g(x)) = f'(g(x)) . g'(x)
\(\frac{d}{d x}\) [f(x)]n = n[f(x)]n-1 × \(\frac{d}{d x}\) f(x)
(i) Let y = sin2 x = (sin x)2
\(\frac{d y}{d x}\) = 2(sin x)2-1 \(\frac{d}{d x}\) (sin x)
= 2 sin x (cos x)
= sin 2x

(ii) y = cos2 x = (cos x)2
\(\frac{d y}{d x}\) = 2(cos x)2-1 \(\frac{d}{d x}\) (cos x)
= 2 cos x (-sin x)
= -2 sin x cos x
= -sin 2x

(iii) y = cos3 x
y = (cos x)3
\(\frac{d y}{d x}\) = 3(cos x)3-1 \(\frac{d}{d x}\) (cos x)
= 3 cos2 x (-sin x)
= -3 cos2 x sin x
= -3 cos x (sin x cos x) [Multiply and divide by 2]
= \(\frac{-3}{2}\) cos x (2 sin x cos x)
= \(\frac{-3}{2}\) cos x sin 2x

(iv) Let y = \(\sqrt{1+x^{2}}\)
y = \(\left(1+x^{2}\right)^{\frac{1}{2}}\)
Here f(x) = 1 + x2; n = \(\frac{1}{2}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q4

(v) Let y = (ax2 + bx + c)n
\(\frac{d y}{d x}\) = n(ax2 + bx + c)n-1 \(\frac{d}{d x}\) (ax2 + bx + c)
= n(ax2 + bx + c)n-1 (2ax + b)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5

(vi) Let y = sin(x2)
\(\frac{d}{d x}\) f(g(x)) = f'(g(x)) . g'(x)
Here f = sin x, g = x2
\(\frac{d y}{d x}\) = cos(x2) \(\frac{d}{d x}\) (x2)
= cos(x2) (2x)
= 2x cos(x2)

(vii) Let y = \(\frac{1}{\sqrt{1+x^{2}}}\)
y = \(\left(1+x^{2}\right)^{-\frac{1}{2}}\)
Here n = \(-\frac{1}{2}\); f(x) = 1 + x2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.5 Q4.1

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு

Students can Download 8th Tamil Chapter 9.2 இளைய தோழனுக்கு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.2 இளைய தோழனுக்கு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு

Question 1.
‘தன்னம்பிக்கை’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி வகுப்பில் பகிர்க.
Answer:
தன்னம்பிக்கை :
மனிதனின் வெற்றிக்கு
மூலதனம் தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை இல்லையேல்
தடம்புரள்வான் மனிதனே!
மூடனையும் அறிவாளியாக்கி
முன்னேறச் செய்யும்.
கோழையையும் வீரனாக்கி
கோபுரத்தில் அமர்த்தும்.

Question 2.
‘நம்பிக்கையே வெற்றி’ – என்பதை உணர்த்தும் கதை ஒன்றனைத் தேடி எழுதி வருக.
Answer:
ஓர் ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். வயதான கழுதை ஒன்று இருந்தது. அக்கழுதை ஒருநாள் தோட்டத்தில் இருந்த கிணற்றில் தெரியாமல் விழுந்துவிட்டது. விவசாயிக்கு எப்படி கழுதையை வெளியே கொண்டு வருவது எனத் தெரியவில்லை.

அக்கழுதையை வெளியே கொண்டு வருவதற்குச் செலவு அதிகமாகும் என்றனர் ஊர் மக்கள். அக்கழுதைக்கோ வயதாகிவிட்டது. அதனை விற்றால் கூட சிறுதொகைதான் கிடைக்கும். அதனால் பணத்தை வீணாகச் செலவு செய்ய வேண்டாம் என எண்ணினான். ஊர் மக்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தான். அது என்னவெனில் ‘ஆளுக்குக் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கிணற்றில் போட வேண்டும். அப்போது கிணற்றில் விழுந்த கழுதை மண் மூடி இறந்துவிடும்’ என்பதுதான் அவன் எடுத்த முடிவு.

எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை எடுத்துப் போட்டனர். கொஞ்ச நேரம் கழுதையின் அலறல் சத்தம் கேட்டது. அதற்குப் பின் அலறல் சத்தம் கேட்கவில்லை . விவசாயி எட்டிப் பார்த்தான். கழுதை ஊரார் கொட்டிய மண்ணைத் தனக்குச் சாதகமாய் மாற்றிக் கொண்டது. ஒவ்வொருமுறை மண் அதன்மேல் விழும் போதும் அதனை உதறி விட்டுவிட்டு மேலே வந்தது. இதனைக் கண்ட விவசாயி மீண்டும் மீண்டும் மண்ணைக் கொட்டி கழுதையை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.

கழுதை எப்படியும் உயிர் பிழைப்போம் என்று நம்பிக்கையுடன் முயற்சி செய்ததால் காப்பாற்றப்பட்டது. இக்கதை மூலம் நாம் உணர்வது கழுதையின் நம்பிக்கை நிறைந்த செயல் ஆகும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உன்னுடன் நீயே ………………… கொள்.
அ) சேர்ந்து
ஆ) பகை
இ) கைகுலுக்கிக்
ஈ) நட்பு
Answer:
இ) கைகுலுக்கிக்

Question 2.
கவலைகள் …………………. அல்ல.
அ) சுமைகள்
ஆ) சுவைகள்
இ) துன்பங்கள்
ஈ) கைக்குழந்தைகள்
Answer:
ஈ) கைக்குழந்தைகள்!

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு

Question 3.
‘விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) விழி + எழும்
ஆ) விழித்து + எழும்
இ) விழி + தெழும்
ஈ) விழித் + தெழும்
Answer:
ஆ) விழித்து + எழும்

Question 4.
போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) போவது + இல்லை
ஆ) போ + இல்லை
இ) போவது + தில்லை
ஈ) போவது + தில்லை
Answer:
அ) போவது + இல்லை

Question 5.
‘படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) படுக்கை + யாகிறது
ஆ) படுக்கையா + ஆகிறது
இ) படுக்கையா + கிறது
ஈ) படுக்கை + ஆகிறது
Answer:
ஈ) படுக்கை + ஆகிறது

Question 6.
தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) தூக்கிகொண்டு
ஆ) தூக்குக்கொண்டு
இ) தூக்கிக்கொண்டு
ஈ) தூக்குகொண்டு
Answer:
இ) தூக்கிக்கொண்டு

Question 7.
விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) விழியெழும்
ஆ) விழித்தெழும்
இ) விழித்தழும்
ஈ) விழித்து எழும்
Answer:
ஆ) விழித்தெழும்

குறுவினா

Question 1.
கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
Answer:
கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளோடு உருவகப் படுத்துகிறார்.

Question 2.
தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?
Answer:
உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் நம்மையே மாற்றினால் தோல்வி நம் உயர்விற்குத் தூண்டுகோலாகும்.

சிறுவினா

Question 1.
பூமி எப்போது பாதையாகும்?
Answer:
(i) நாளை மட்டுமல்ல; இன்றும் நமது நாள்தான். அதனால் உடனே செயல்படத் தொடங்க வேண்டும். நாம் செல்லும் பாதைகள் நம்மை எதிர்க்கப்போவதில்லை.

(ii) உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் நம்மையே நாம் மாற்றினால் தோல்வியும் நம் உயர்விற்குத் தூண்டுகோலாகும். வெற்றி நம் அங்கமாகி வாழ்வில் ஒளியேற்றும்.

(iii) கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். நம்மைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தக்கூடாது. நம்மைவிட ஒருவரும் நம்மைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு

(iv) நாம் சோர்ந்து தளர்ந்தால் பூமி நம் நோய்ப்படுக்கையாகிவிடும். நாம் கிளர்ந்து எழவேண்டும். அப்போது நமக்குப் பூமி பாதையாகும்.

சிந்தனை வினா

Question 1.
வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு பண்புகள் :
1. இடைவிடா முயற்சி
2. திட்டமிட்ட உழைப்பு
3. காலமறிந்து செயல்படுதல்
4. கடின உழைப்பு
5. சோர்வில்லாப் பண்பு
6. தோல்வியைக் கண்டு மனம் தளராமை
7. பதற்றமின்றி செயல்களைச் செய்தல்
8. மிகுதியான தன்னம்பிக்கை
9. பிறரை எதிர்பார்க்காமல் செயல்களை மேற்கொள்ளுதல்
10. விட்டுக்கொடுத்து வாழும் பண்பு
11. சினமின்மை

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மனிதனின் உள்ளத்தில் இருக்கவேண்டிய கை’ …………………..
2. நாம் நடக்கத் தயாராய் இருந்தால் பாதைகள் ……………. சொல்லாது.
3. தூக்கிக் கொண்டு திரியக்கூடாதது …………………….
4. தூங்கும் போது பூமி …………………. விழித்து நடக்கும்போது …………………
5. மு.மேத்தா …………….. இயக்க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
6. மு.மேத்தாவின் படைப்புகளுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் …………………..
Answer:
1. நம்பிக்கை
2. மறுப்புச்
3. கவலையை
4. படுக்கையாகும், பாதையாகும்
5. வானம்பாடி
6. ஆகாயத்துக்கு அடுத்தவீடு

விடையளி :

Question 1.
மு.மேத்தா இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
மு.மேத்தா இயற்றிய நூல்கள் :
கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுட நிலா, ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூல் உள்ளிட்ட பல நூல்கள்.

Question 2.
எப்போது நம் விரல்களில் கதிரவன் ஒளிவீசும்?
Answer:
நாம் செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு . கதிரவன் நம் விரல்களில் விளக்காக ஒளிவீசும்.

Question 3.
எப்போது பாதைகள் எதிர்க்காது?
Answer:
நமது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால் நாம் செல்லும் பாதைகள் நம்மை எதிர்க்கப் போவதில்லை .

Question 4.
மு.மேத்தா பற்றி எழுதுக.
Answer:
(i) மு.மேத்தா வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

(ii) புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.

(iii) கண்ணீ ர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

(iv) இவர் எழுதிய ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு

பாடல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு 1
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு 2

பாடலின் பொருள்
செயல்படத் தொடங்கு நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான். உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை.

உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும்! வெற்றி உன் அங்கமாகி, வாழ்வில் ஒளியேற்றும்.

கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே! உன்னைவிட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது.

நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்குப் பாதையாகும்.

நீ செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு. கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும். செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான்.

ஆசிரியர் குறிப்பு
வானம்பாடி இயக்க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்; கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்; கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு 3
இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மு.மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Students can Download 10th Tamil Chapter 8.2 ஞானம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.2 ஞானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

கற்பவை கற்றபின்

Question 1.
“துளிப்பா” ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினைப் பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக.
Answer:
ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி ஆகிவிட்டன.

நீதி தவறாத செங்கோல் வளையாத மரபாக இருந்தது சோழ மரபு. அச்சோழ மரபிலே வந்தவன் மனுநீதிச் சோழன்.
அரண்மனை வாயிலின் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயரைத் துடைக்கத் தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைத் தானும் அனுபவித்து “வாயில்லா ஜீவனுக்கும் அறம்” உணர்த்திய மாண்பு நம் தமிழ் மண்.
ஆனால் சீர்கேடு அடைந்து உள்ள இன்றைய சமூகச் சூழலில் நீதி கேட்டுப் போராடுபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்; அழிக்கப்படுகிறார்கள்.
இச்சமூக அவலத்தையே இக்கவிதை தோலுரித்துக் காட்டியுள்ளது. அன்று ஆராய்ச்சி மணி அடித்த போது பசுவுக்கு நீதி கிடைத்தது. இன்றோ ! நீதி கேட்கும் மாடுகள் அழிக்கப்பட்டு விடும் என்பதைக் குறிப்பாக இக்கவிதை உணர்த்துகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் தலைப்பினை எழுதி, அகரவரிசைப்படுத்தி அதன் பொருளினை எழுதுக.
Answer:
அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன. அவை:

  1. அடக்கமுடைமை – அடக்கத்தின் மேன்மை
  2. அருளுடைமை – கருணை உடையவராய் இருத்தல் வேண்டும்.
  3. அவாவறுத்தல் – பேராசையை விலக்கு
  4. அழுக்காறாமை – பொறாமை நீக்க வேண்டும்.
  5. அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை எடுத்துக் கூறுதல்
  6. அன்புடைமை – அன்பின் மகத்துவம்
  7. இல்வாழ்க்கை – குடும்ப வாழ்வின் சிறப்பு, பெருமை
  8. இன்னாசெய்யாமை – துன்பம் செய்யாதிருத்தல்
  9. இனியவைகூறல் – இனிய சொற்களின் சிறப்பு
  10. ஈகை – கொடுத்து மகிழ்தலின் சிறப்பு
  11. ஊழ் – விதி வலிமை
  12. ஒப்புரவறிதல் – கொடுத்தல்
  13. ஒழுக்கமுடைமை – ஒழுக்கமே உயர் செல்வம்
  14. கடவுள் வாழ்த்து – இறைவனை வாழ்த்துதல்
  15. கள்ளாமை – மது அருந்துதல் கூடாது
  16. கூடாவொழுக்கம் – பொய் ஒழுக்கம்
  17. கொல்லாமை – உயிர்க்கொலைக் கூடாது.
  18. செய்ந்நன்றியறிதல் – ஒருவர் செய்த நன்மையை நினைத்தல்
  19. தவம் – துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்குத் துன்பம் செய்யாமை
  20. தீவினையச்சம் – தீச் செயல் செய்ய அஞ்சுதல்
  21. துறவு – உலகப் பற்றை நீக்குதல்
  22. நடுவு நிலைமை – பாரபட்சம் பாராதிருத்தல்
  23. நிலையாமை – எதுவும் நிலையன்று
  24. நீத்தார் பெருமை – துறவு மேற்கொள்பவர் சிறப்பு
  25. பயனில சொல்லாமை – பயனற்ற சொற்களைத் தவிர்த்தல்
  26. பிறனில் விழையாமை – பிறர் மனைவி, பொருளை விரும்பாமை
  27. புகழ் – சிறப்பு
  28. புலால் மறுத்தல் – ஊன் உண்ணாதிருத்தல்
  29. புறங்கூறாமை – ஒருவர் இலாதிடத்து அவரைப் பற்றிப் பேசாமை
  30. பொறையுடைமை – பொறுமை
  31. மக்கட்பேறு – பிள்ளைச் செல்வம்
  32. மெய்யுணர்தல் – பொய் மயக்கத்திலிருந்து விடுபடுதல்
  33. வாழ்க்கைத் துணை நலம் – நன்மனையாள் பெருமை
  34. வாய்மை – உண்மையின் மேன்மை
  35. வான்சிறப்பு – மழையின் சிறப்பு
  36. விருந்தோம்பல் – விருந்தினரை உபசரித்தல்
  37. வெகுளாமை – சினம் கொள்ளாமை
  38. வெஃகாமை – பிறர் பொருளை விரும்பாமை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது……………………
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை
ஈ) வண்ண ம் பூசுவதை
Answer:
இ) இடையறாது அறப்பணி செய்தலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

குறுவினா

Question 1.
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
Answer:

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறுவினா

Question 1.
‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில்’, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
Answer:
உரைக்குறிப்புகள்:

  • அறம் என்பதன் விளக்கம் தரல்.
  • சுற்றுச்சூழல் என்றால் என்ன?
  • சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
  • அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று, வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
Answer:
வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு கந்தைத் துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். மூன்றாவதாக, சாயக் குவளையில் உள்ள சாயத்தைக் கட்டைத் தூரிகைக் கொண்டு சாயம் பூசி புதுப்பிக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

காலக்கழுதை – உருவகம்
கந்தைத்துணி – இருபெயரொட்டுப்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம் - 1

பலவுள் தெரிக

Question 1.
‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..
அ) அப்துல் ரகுமான்
ஆ) வேணுகோபாலன்
இ) இராஜகோபாலன்
ஈ) இராமகோபாலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?
அ) மறம்
ஆ) அறம்
இ) ஞானம்
ஈ) கல்வி
Answer:
ஆ) அறம்

Question 3.
‘ஞானம்’ கவிதை இடம்பெற்ற தொகுப்பு……………………..
அ) தீக்குச்சி
ஆ) மீட்சி விண்ணப்பம் இ) கோடை வயல்
ஈ) கோடைமழை
Answer:
இ) கோடை வயல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 4.
தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ……………………..
அ) தஞ்சாவூர்
ஆ) திருவாதவூர்
இ) திருவாரூர்
ஈ) திருவையாறு
Answer:
ஈ) திருவையாறு

Question 5.
தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?
அ) மணிக்கொடி
ஆ) எழுத்து
இ) வானம்பாடி
ஈ) கவிக்குயில்கள்
Answer:
ஆ) எழுத்து

Question 6.
வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது……………………..
அ) கோவை மருத்துவக் கல்லூரியில்
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்
இ) சென்னை கிண்டி கல்லூரியில்
ஈ) வேளாண்மைக் கல்லூரியில்
Answer:
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 7.
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்……………………..
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

Question 8.
‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள்
அ) சமூக அறப்பணி
ஆ) வீட்டைப் புதுப்பித்தல்
இ) இடைவிடாத சமூக அறப்பணியை
ஈ) உலகப் பணிகள்
Answer:
இ) இடைவிடாத சமூக அறப்பணியை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 9.
அறப்பணி ஓய்ந்தால்……………………..இல்லை .
அ) மனிதன்
ஆ) இயற்கை
இ) உலகம்
ஈ) கடல்
Answer:
இ) உலகம்

Question 10.
“புதுக்கொக்கி பொருத்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது………………………
அ) சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்
இ) பொய்களை நீக்குதல் ஈ) வீட்டைப் புதுப்பித்தல்
Answer:
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 11.
பொருத்துக.
1. கரையான் – அ) கட்டெறும்பு
2. காலக்கழுதை – ஆ) வந்தொட்டும்
3. தெருப்புழுதி – இ) காற்றுடைக்கும்
4. சட்ட ம் – ஈ) மண்வீடு கட்டும்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 12.
‘அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !’ – இவ்வடிகளில் அமைந்த நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஈ) இயைபு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 13.
பொருத்துக.
1. வாளி – அ) குவளை
2. சாயம் – ஆ) தண்ணீர்
3. கந்தை – இ) தூரிகை
4. கட்டை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

குறுவினா

Question 1.
வேணுகோபாலனின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
Answer:
கோடை வெயில், மீட்சி விண்ணப்பம் ஆகியவை ஆகும்.

Question 2.
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
கரையான், கழுதை, கட்டெறும்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 3.
‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே’ – என இவ்வடிகளுக்கு இணையான தமிழ்ப்பழமொழி எழுதுக.
Answer:
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

சிறுவினா

Question 1.
தி.சொ. வேணுகோபாலன் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : தி.சொ.வேணுகோபாலன்
பிறப்பு : 7.11.1929)
ஊர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு.
கல்வி : சென்னை லயோலா கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம், ராஜஸ்தான் பிலானியில் இயந்திரவியல் (mechanical) பொறியியல் பட்டம்.
பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
நூல்கள் : கோடைவயல், மீட்சி விண்ணப்பம்.
1959 முதல் “எழுத்து” இதழில் கவிதை எழுதத் தொடங்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Question 2.
‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள் யாது? (அல்லது) “அறப்பணி ஓய்வதில்லை, ஓய்ந்திடில் உலகமில்லை ” – எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?
Answer:

  • ‘ஞானம்’ கவிதை இடையுறாது செய்யும் அறப்பணியாம் சமூகப் பணியை உணர்த்துகிறது.
  • வீட்டின் சாளரத்தில் எத்தனை முறை புழுதி ஒட்டினாலும், கரையான் மண் வீடு கட்டினாலும் துடைக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம்.
  • சுத்தப்படுத்தும் இப்பணியை முதிர் வயதாகும் வரை செய்து கொண்டேதான் இருக்கிறோம்.
  • சமுதாயத்திலும் சீர்கேடுகள் தொடர்ந்து ஏற்படும்.
  • அவலங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.
  • எனினும் அவற்றைத் தடுத்து சமூகத்தைச் சீர்படுத்தும் பணியான அறப்பணியை தொடர்ந்து நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Question 3.
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !.

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
Answer:
கோடைவயல்.

ஆ) இவ்வடிகள் இடம்பெற்ற கவிதை எது?
Answer:
ஞானம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

இ) எது ஓய்வதில்லை ?
Answer:
அறப்பணிகள் ஓய்வதில்லை .

ஈ) இவ்வடியில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
Answer:
ஓய்வதில்லை       –      உலகமில்லை

Question 4.
‘காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே வாளித்தண்ணீ ர்……..’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
தி.சொ.வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் ‘ஞானம்’ என்னும் தலைப்புக் கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

பொருள்:
காலமாகிய கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்துபோன இன்று வரை கையில் வாளித் தண்ணீர் மட்டுமே வைத்துள்ளோம்.

விளக்கம் :

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை,துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Students can Download 8th Tamil Chapter 9.1 உயிர்க்குணங்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.1 உயிர்க்குணங்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Question 1.
பின்வரும் திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க.
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்;
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்.
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். பாடல் – 14
Answer:
தெரிந்து தெளிவோம்
(i) பாவை நூல்கள் : மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை.

இதேபோலச் சிவபெருமானை வழிபடச்செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.
அ) உவகை
ஆ) நிறை
இ) அழுக்காறு
ஈ) இன்பம்
Answer:
இ) அழுக்காறு

Question 2.
நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று ……………..
அ) பொச்சாப்பு
ஆ) துணிவு
இ) மானம்
ஈ) எளிமை
Answer:
அ) பொச்சாப்பு

Question 3.
‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) இன் துன்பு
ஆ) இன்பம் + துன்பம்
இ) இன்ப + அன்பம்
ஈ) இன்ப + அன்பு
Answer:
ஆ) இன்பம் + துன்பம்

Question 4.
குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) குணங்கள் எல்லாம்
ஆ) குணமெல்லாம்
இ) குணங்களில்லாம்
ஈ) குணங்களெல்லாம்
Answer:
ஈ) குணங்களெல்லாம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

பொருத்துக

1. நிறை – பொறுமை
2. பொறை – விருப்பம்
3. மதம் – மேன்மை
4. மையல் – கொள்கை
Answer:
1. நிறை – மேன்மை
2. பொறை – பொறுமை
3. மதம் – கொள்கை
4. மையல் – விருப்பம்

குறுவினா

Question 1.
மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?
Answer:
மனிதரின் பொது இயல்புகள் :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல்.

Question 2.
மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?
Answer:
நற்பண்புகள் :
அறிவு, கருணை, அன்பு, இரக்கம், நாணம், மேன்மை , எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், மானம், அறம், மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, இளமை, ஆராய்ந்து தெளிதல்.

சிறுவினா

Question 1.
மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?
Answer:
மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

சிந்தனை வினா

Question 1.
மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள் 1

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மனிதன் …………………. விலக்கி ………………….. வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2. இறையரசனின் இயற்பெயர் …………………….
3. இறையரசன் ஆற்றிய பணி …………………..
4. இறையரசன் ……………………….. தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.
5. ஆண்டாள் பாடிய நூல் …………………
6. மாணிக்கவாசகர் இயற்றியது …………………….
7. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பாடியது …………………..
8. சிவபெருமானை வழிபடச்செல்லும் பெண்கள் பாடியது ………………………
9. கன்னிப்பாவை மனிதனுக்குள் நிறைந்திருக்கும் …………………… கூறுகிறது.
Answer:
1. தீயனவற்றை, நல்லனவற்றை
2. சே.சேசுராசா
3. தமிழ்ப்பேராசிரியர்
4. திருப்பாவையைத்
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருப்பாவை
8. திருவெம்பாவை
9. பண்புகளைக்

விடையளி :

Question 1.
மனிதனின் கடமை யாது?
Answer:
ஒவ்வொரு மனிதனிடமும் நற்பண்புகளும் உண்டு, தீய பண்புகளும் உண்டு. தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும்.

Question 2.
பாவை நோன்பு என்றால் என்ன?
Answer:
மார்கழித்திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர்.

Question 3.
திருப்பாவை, திருவெம்பாவை விளக்குக.
Answer:
பாவை நோன்பு மேற்கொண்டு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை. பாவை நோன்பு மேற்கொண்டு சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக மாணிக்கவாசகரால் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை.

Question 4.
இறையரசன் குறிப்பு எழுதுக.
Answer:
(i) இறையரசனின் இயற்பெயர் சே.சேசுராசா என்பதாகும்.
(ii) கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
(iii) ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

பாடல்

அறிவுஅருள் ஆசைஅச்சம்
அன்பு இரக்கம் வெகுளிநாணம்
நிறை அழுக்காறு எளிமை
நினைவுதுணிவு இன்பதுன்பம்
பொறைமதம் கடைப்பிடிகள்
பொச்சாப்பு மானம்அறம்
வெறுப்பு உவப்பு ஊக்கம்மையல்
வென்றி இகல் இளமைமூப்பு
மறவிஓர்ப்பு இன்னபிற
மன்னும் உயிர்க் குணங்கள்எல்லாம்
குறைவறப் பெற்றவள்நீ
குலமாதே பெண்ணரசி
இறைமகன் வந்திருக்க
இன்னும் நீ உறங்குதியோ
புறப்படு புன்னகைநீ
பூத்தேலோ ரெம்பாவாய்! – இறையரசன்

சொல்லும் பொருளும்

1. நிறை – மேன்மை
2. பொறை – பொறுமை
3. பொச்சாப்பு – சோர்வு
4. மையல் – விருப்பம்
5. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்
6. அழுக்காறு – பொறாமை
7. மதம் – கொள்கை
8. இகல் – பகை
9. மன்னும் – நிலைபெற்ற

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

பாடலின் பொருள்

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில் நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும். இவற்றையுடைய மனிதகுலத்தில் பிறந்த பெண்ணே ! நற்பண்புகள் எவையென அறிவுறுத்த இறைவனின் திருக்குமாரன் வந்தபின்னும் நீ உறங்கலாமா? உண்மையை உணர, புன்னகை பூத்து நீ புறப்படுவாயாக!

ஆசிரியர் குறிப்பு
இறையரசனின் இயற்பெயர் சே.சேசுராசா என்பதாகும். கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியுள்ளார். அந்நூலில் இருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Students can Download 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

கற்பவை கற்றபின்

Question 1.
‘பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறக் கருத்துக்களை வலியுறுத்தும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஐந்தினைத் தொகுத்து அவை கூறும் அறச் செய்திகளை எழுதுக.
Answer:
சங்க இலக்கியப்பாடலடிகள் கீழ்க்காணும் ஐந்தின் அடிப்படையில் அறச்செய்திகளைவலியுறுத்துகிறது.

  • வறுமை
  • நிலையான செல்வம்
  • நேரிய ஆட்சி
  • வாய்மை
  • ஈகை

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்…… – புறநானூறு

இப்பிறப்பில் அறம் செய்தால், அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை.

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

மன்னருடைய செங்கோலும் வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசின் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்.

‘செல்வத்துப் பயனே ஈதல்’ – புறநானூறு

வீரத்தைப் போலவே ஈகையையும் தமிழ் நூல் போற்றியது. ஈகையும் ஓர் அறச்செயலே. செல்வத்தின் பயன் கொடுத்து மகிழ்வதே என்று வாழ்ந்தனர்.

‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’ – நற்றிணை

பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவுதலே பண்பு. பிறர் துன்பம் தீர்ப்பதே உண்மையான
செல்வம் ஆகும்.

‘பிழையா நன்மொழி’ – நற்றிணை

மெய் பேசுவது நன்மொழியாகும் வாய்மை எனப்படுவது தவறியும் பொய் பேசாதிருத்தல். நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது.

Question 2.
கொன்றை வேந்தன் முதலான பிற்கால அறநூல்களின் பெயர்களை அறிந்து, அவற்றுள் ஏதேனும் ஒரு நூலின் அறக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவை இன்றும் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடுபவர்கள் : சோமு, கலா, மாலா,

சோமு : நானும் நலம்தான் சரி நாம் இன்றைக்கு வகுப்பில் அறக் கருத்துக்கள் பற்றிப் படித்தோம் அல்லவா, அதைப் போலவே எளிமையான அறக்கருத்துக்களை நாம் புரிந்து கொள்ளும் வகையில் சில நூல்கள் கூறுகிறது. அதனைப் பற்றிப் பேசுவோமா.
கலா : எனக்கு கொன்றை வேந்தன் மிகவும் பிடிக்கும்
மாலா : எனக்கும்தான்….
சோமு : அதைப்பற்றிப் பேசுவோம். இந்நூல் அகரநிரல் அமைப்புப்படி 91 ஒற்றை வரிப் பாக்களால் ஆனது
கலா : அதை எழுதினது ஒளவைதானே.
மாலா : சரியாகச் சொல்லி விட்டாயே!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

சோமு : அந்த நூலில் ஈகை என்னும் அறத்தைப் பற்றி ஒரு வரி உணர்த்துகிறது. அது என்ன தெரியுமா?
கலா : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்’
சோமு : சரியாகச் சொன்னாய்.
மாலா : ஆமாடா நாம் ஒருவருக்கும் கொடுக்காமல், யாருக்கும் நன்மை செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் யாருக்கும் பயன்படாது, அதனை திருடரோ மற்றவரோ கொள்வர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

கலா : எங்கள் பக்கத்து ஊரில் மிகப் பெருஞ்செல்வந்தர். வேலை பார்ப்பவருக்குக் கூட கூலி ஒழுங்காத் தர மாட்டார். இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துவிடுவார். ஒரு நாள் வந்த திருடன் பெட்டியை உடைத்து அத்தனையும் கொள்ளையடித்து விட்டான்.
சோமு : புரிந்து கொண்டீர்களா தோழிகளே! எக்காலத்திலும் அறக்கருத்துகள் எப்போதும், முக்காலத்துக்கும் பொருந்துவனவாகவே உள்ளது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மேன்மை தரும் அறம் என்பது………………
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது.
இ) புகழ் கருதி அறம் செய்வது.
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.
Answer:
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.

Question 2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………………….
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
Answer:
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

குறுவினா

Question 1.
குறிப்பு வரைக: அவையம்.
Answer:

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு.
  • உறையூரிலிருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது.

சிறுவினா

Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 1
நீர் நிலையைப் பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதும் அரசனின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 2
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது. நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:
தமிழர்போர்செய்வதிலும் அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது, வீரமற்றோர், சிறார், முதியோர் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதில் அறம்:

  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது, தன்னைத் தாண்டி பிறரைப் பற்றிச் சிந்திக்கும் நிலை.
  • ‘பிழையா நன்மொழி’ என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய்பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.

இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

நெடுவினா

Question 1.
பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
Answer:

உறவினருக்கு மடல்

திருச்சி,
18.03.2020

அன்புள்ள சித்தப்பாவிற்கு இரகு எழுதுவது,

நலம். நலம் அறிய ஆவல்.

நான் இன்று மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஏன் தெரியுமா? நேற்று வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் பயம்! ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே. பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டுவிட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

‘பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று, மறுநாளே காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையைப் பாராட்டி, சன்மானத் தொகையைப் பரிசாகவும் வழங்கினார்.

அது மட்டுமில்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு இரகுவே’ சான்று என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடனும், சித்தி, தங்கையுடனும் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
இரகு.ம.

உறைமேல் முகவரி:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..
அ) அறநெறிக் காலம்
ஆ) மன்னர் காலம்
இ) பக்திக் காலம்
ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்
Answer:
அ) அறநெறிக் காலம்

Question 2.
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் ………………….
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Answer:
ஆ) ஆர்னால்டு

Question 3.
சங்கப் பாடலில் அறம் பற்றிய கருத்துகள் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்படுகிறது?
அ) வீரர்களை
ஆ) மக்களை
இ) அமைச்சர்களை
ஈ) அரசர்களை
Answer:
ஈ) அரசர்களை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 4.
மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) பரிபாடல்
ஈ) மதுரை மும்மணிக்கோவை
Answer:
ஆ) மதுரைக்காஞ்சி

Question 5.
உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்………………………
அ) ஈழத்துப் பூதன் தேவனார்
ஆ) நக்கீரர்
இ) திருமுடிக்காரி
ஈ) கபிலர்
Answer:
அ) ஈழத்துப் பூதன் தேவனார்

Question 6.
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) கலித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 7.
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………………………
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Answer:
ஈ) பரணர்

Question 8.
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) பெரும்பதுமனார்

Question 9.
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………………….
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Answer:
ஆ) தாவோவியம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 10.
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ………………….
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Answer:
இ) நற்றிணை

Question 11.
நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?
அ) மூளை
ஆ) நாக்கு
இ) கண்
ஈ) கை
Answer:
ஆ) நாக்கு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 12.
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) பதிற்றுப்பத்து

Question 13.
தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்
அ) கம்ப ர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
ஆ) கபிலர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 14.
பின்வரும் புலவர்களையும், மன்னர்களையும் சரியான இணையாகப் பொருத்துக.
அ) நக்கீரர் – 1. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ) ஔவையார் – 2. பெருஞ்சாத்தன்
இ) கபிலர் – 3. அதியன்
ஈ) நச்செள்ளையார் – 4. திருமுடிக்காரி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 3, 4, 1
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 4, 1

Question 15.
இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 16.
காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.
அ) தர்மர்
ஆ) கன்பூசியஸ்
இ) போதி தர்மர்
ஈ) புத்தர்
Answer:
இ) போதி தர்மர்

Question 17.
போதி தர்மருக்குக் கோயில் கட்டியவர்கள் ………………….
அ) சீனர்கள்
ஆ) ஜப்பானியர்
இ) கிரேக்கர்
ஈ) புத்தர்
Answer:
அ) சீனர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 18.
சமூகக் கடலின் ஒரு துளி ………………….
அ) பறவைகள்
ஆ) விலங்குகள்
இ) மரங்கள்
ஈ) மனிதன்
Answer:
ஈ) மனிதன்

Question 19.
சொற்றொடர்களை முறைப்படுத்துக.
i) செய்ய வெறுத்தனர்
ii) பழிதரும் செயல்களை
iii) பரிசாகக் கிடைத்தாலும்
iv) உலகே
அ) (iv)-(iii)-(ii)-(i)
ஆ) (iii)-(iv)-(i)-(ii)
இ) (ii)-(i)-(iv)-(iii)
ஈ) (i)-(iv)-(iii)-(ii)
Answer:
அ) (iv)-(iii)-(i)-(i)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 20.
பொருத்துக.
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ) பேகன்
3. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ) மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ) அதியன்
அ) 1.அ 2.ஆ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ)1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 21.
பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
தவறான சொற்றொடரைக் கண்டறிக.
அ) நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல்.
ஆ) நாக்கு இன்பத்தின் கதவைத் திறப்பது.
இ) நாக்கு துன்பத்தின் கதவைத் திறப்பது.
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
Answer:
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

Question 23.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Answer:
அ) அமைச்சர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 24.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) மாங்குடி மருதனார்

Question 25.
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) ஆவூர் மூலங்கிழார்

Question 26.
குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்
Answer:
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 27.
‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல் – ………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
Answer:
அ) புறநானூறு

Question 28.
தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Answer:
அ) உறையூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 29.
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) நல்வேட்டனார்

Question 30.
சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ………………….
அ) உதவி
ஆ) கொடை
இ) வாய்மை
ஈ) பொருள்
Answer:
இ) வாய்மை

Question 31.
ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) நற்றிணை
Answer:
அ) கலித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 32.
செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறநானூறு

குறுவினா

Question 1.
அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?
Answer:
மன்னர்களுடைய செங்கோலும், வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 2.
அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?
Answer:

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது.

Question 3.
தனிச்சிறப்புப் பெற்ற அவையம் எவை?
Answer:

  • உறையூரில் இருந்த அறஅவையம் தனிச் சிறப்புப் பெற்றிருந்தது.
  • மதுரையில் இருந்த அவையமும் சிறப்புப் பெற்று இருந்தது.
  • இவ் அவையங்கள் துலாக் கோல் போல் நடுநிலைமையுடன் இருந்தன.

Question 4.
மகிழ்ச்சி என்பதை விளக்குக.
Answer:

  • ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து, மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி .
  • அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

Question 5.
வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் கூறுக.
Answer:

  • ‘பொய்யாச் செந்நா’
  • ‘பொய்படு பறியா வயங்கு செந்நா’
  • ‘பிழையா நன்மொழி – நற்றிணை’
  • ‘பொய்மொழிக் கொடுஞ்சொல்’

என்று பொய் கூறக்கூடாது, வாய்மையே கூறவேண்டும் என்பதை இலக்கியங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 6.
சங்க இலக்கியம் முதல் தரமான அறம் என்பதை விளக்குக.
Answer:

  • இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது.
  • சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமான அறம்.
  • தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாந்தரமான அறம்.
  • எனவே, சங்க இலக்கிய அறங்கள் இயல்பான முதல் தரமான அறம் என்பது சாலப் பொருந்தும்.

Question 7.
அற இலக்கியங்களில் ஈதல் பற்றிக் கூறப்பட்டுள்ளதை விளக்குக.
Answer:

  • புற இலக்கியங்களில் மட்டுமல்ல, அற இலக்கியங்களிலும் ஈகை பற்றிய செய்திகள் உள்ளன.
  • ஈயாமை இழிவு என அற இலக்கியம் கூறுகிறது.
  • இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கலித்தொகை கூறுகிறது.

Question 8.
கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.
Answer:

  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அதியன்
  • மறுமை நோக்கி கொடுக்காதவன் – பேகன்
  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்துக் கொடுப்பவன் – ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் – திருமுடிக்காரி.
  • இவ்வாறு மன்னர்கள் கொடையால் சிறந்திருந்தனர்.

Question 9.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் செம்மை சான்ற அமைச்சர் கடமையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 10.
‘அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’ என்ற புறநானூற்று வரிகளின் உட்கருத்தைப் புலப்படுத்துக.
Answer:
இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. அத்தகைய நோக்கம் இல்லாதவன் வள்ளல் ஆய்.

Question 11.
அறங்கூறவையம் இருந்த இடங்கள் யாவை?
Answer:

  1. உறையூர்
  2. மதுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 12.
வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?
Answer:
இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன் என்றெல்லாம் வள்ளல்கள் போற்றப்பட்டனர்.

Question 13.
உதவியாண்மை என்ற சொல்லின் பொருள் மற்றும் அதனைக் குறிப்பிட்டவர் யார் என்பதைக் குறிப்பிடவும்?
Answer:
உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். ”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 14.
உண்மையான செல்வம் எது என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்?
Answer:
பிறர் துன்பம் தீர்ப்பது தான் உண்மையான செல்வம் என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்.

Question 15.
‘ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாக உள்ளன’ – இக்கூற்றில் சுட்டப்படும் ஆற்றுப்படை இலக்கியங்கள் யாவை?
Answer:

  • திருமுருகாற்றுப் படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • பொருநாராற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை

Question 16.
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பைப் புலப்படுத்துவன எவை?
Answer:
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பை சிறுபாணாற்றுப்படையும், பெருஞ்சித்திரனார் பாடல்களும் புலப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 17.
குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் என்று குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.

Question 18.
“இல்லோர் ஒக்கல் தலைவன்’ யார் என்பதை விளக்குக.
Answer:
பொருள் இல்லாத ஏழைச் சுற்றத்திற்குத் தலைவன் வள்ளல்கள் ஆவர்.

Question 19.
கொடை என்பதும் ஓர் அறம் என்பதனை ஔவையார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer:
‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’ என்கின்ற ஒளவையின் கூற்று கொடை என்பதும் ஓர் அறம் என்பதனைத் தெளிவாக்குகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

சிறுவினா

Question 1.
உண்மையான செல்வம் எது?
Answer:
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்.
‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்’
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’
என்று நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.

Question 2.
சங்ககாலப் போர் அறம் குறித்து எழுதுக.
Answer:

  • தமிழர் போரிலும் அறத்தைப் பின்பற்றினர்.
  • போர் அறம் என்பது வீரமற்றோர் புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கும்.
  • பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போரிடுவதும் போர் அறமாகக் கருதப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 3.
நோக்கம் கருதி அறம் செய்தல் கூடாது விளக்குக.
Answer:

  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது.
  • இப்பிறப்பில் அறம் செய்தால் மறுபிறப்பில் பயன் பெறலாம் என்று கருதியும் செய்தல் கூடாது.
  • நோக்கமின்றித் தரும் அறமே சிறந்த அறமாகும்.

Question 4.
கொடையின் சிறப்பை இலக்கியங்கள் போற்றுவது பற்றி எழுதுக.
Answer:

  • கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பு, சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் போற்றப்பட்டுள்ளது.
  • ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாகவே உள்ளன.
  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகும்.
  • புறநானூற்றிலும் குறிப்பிட்ட மன்னர்களின் கொடைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 5.
மகிழ்ச்சி பெருக என்ன செய்ய வேண்டும்?
Answer:

  • மனிதன் சமூகக் கடலின் ஒரு துளி.
  • மனிதன் எல்லோரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கு எவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவு மகிழ்ச்சி பெருகும்.
  • இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்றால் மகிழ்ச்சி பெருகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 6.
கொடை என்னும் பகுதியில் அமைந்த வள்ளல்கள் பெயரினைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • அதியன்
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • பேகன்
  • குமணன்
  • திருமுடிக்காரி