Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry InText Questions

Activity (Text Book Page No. 8)

Measure the radius and diameter of the following circles.

Answer:

Radius = 1 cm
Diameter = 2 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions


Radius = 1.7 cm
Diameter = 3.4 cm


Radius = 0.7 cm
Diameter = 1.4 cm

Activity (Text Book Page No. 9)

Measure the sides arid identify the names of different objects and find the differences among them and fill the table given below.
(a) Chessboard
(b) Postcard
(c) Window
(d) Paper
(e) Newspaper
(f) Maths Kit box.
(g) Kite

Answer:

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

Activity (Text Book Page No. 12)

Arrange the tangram pieces to from pictures.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 8

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

Activity (Text Book Page No. 14)

Which tile will you choose to fill the space given below and find how many tiles are needed to fill the given space.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 9
(a)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 10
(b)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 11
(c)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 12
Answer:
(a)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 10
Perimeter = 2 + 3 + 2 + 3 = 10 cm
No of tiles needed = 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

Activity (Text Book Page No. 14 & 15)

Fill the table given below by fixing the appropriate tile in the space given below
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 13
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 15
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 14

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

Activity (Text Book Page No. 16)

a. Form the cube by folding the nets given below.
Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 16
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 17

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 18
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 19

Question 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 20
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 21

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

b. Use these nets to form cuboids.

Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 22
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 23

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 24
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 25

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

c. Make a cone with semicircle.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 26
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 27

d. Make a cylinder using rectangle sheet.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 28
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 29

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions

Find out 2D and 3D objects from the given pictures. (Text Book Page No. 18)

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 30
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry InText Questions 31

 

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.7

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.7 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.7

A. Choose the correct answer :

(i) A cuboid has ________ edges.
(a) 6
(b) 8
(c) 12
Answer:
12

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.7

(ii) The shape of a dice is like a ________.
(a) cuboid
(b) cube
(c) sphere
Answer:
(b) cube

(iii) A ________ has a curved surface and two plane faces.
(a) cylinder
(b) cone
(c) sphere
Answer:
(a) cylinder

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.7

(iv) I have one vertex and one plane face. I am a ________.
(a) cone
(b) cylinder
(c) sphere
Answer:
(a) cone

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.7

(v) A cube has ________ vertices.
(a) 8
(b) 12
(c) 6
Answer:
(a) 8

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.6

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.6 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.6

A. Fill the following diagrams with appropriate tiles :
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.6 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.6 2
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.6 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.6

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.6 4
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.6 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.5 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.5

A. Find the perimeter of the following figures

i.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5 1
Answer:
Perimeter = 8 + 3 + 5 + 6
= 22 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5

ii.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5 2
Answer:
Perimeter = 10 + 5 + 2 + 7
= 24 cm

iii.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5 3
Answer:
Perimeter = 7 + 4 + 7 + 4
= 22 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5

iv.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5 4
Answer:
Perimeter = 11 + 11 + 11 + 11
= 44 cm

v.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5 5
Answer:
Perimeter = 10 + 5 + 10 + 5
= 30 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5

B. Solve the following

Question 1.
A side of a square-shaped sandbox in Gandhi Park measures 30 cm. Determine the perimeter of the sand box.
Answer:
Side of a sand box = 30cm
Perimeter = 30 + 30 + 30 + 30
= 120 cm

Question 2.
Find the perimeter of a rectangle, whose sides are 12 cm and 8 cm.
Answer:
Side of a rectangle are 12 cm and 8 cm.
Perimeter = 12 + 8 + 12 + 8
= 40cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5

Question 3.
Find the perimeter of the triangle, whose sides are 13 cm, 5 cm and 14 cm.
Answer:
Length of sides are 13cm, 5cm and 14cm
Perimeter = 13 + 5 + 14
= 32cm

Question 4.
The adjacent sides of a parallelogram are 6 cm and 7 cm. What is the perimeter of the parallelogram?
Answer:
Adjacent sides of a parallelogram are 6cm and 7cm.
Perimeter = 6 + 7 + 6 + 7
= 26cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.5

Question 5.
The sides of a trapezoid measures 8 cm, 7 cm, 4 cm and 5 cm respectively. What is the perimeter of the trapezoid?
Answer:
Side of a trapezium are 8cm, 7cm, 4cm and 5cm.
Perimeter = 8 + 7 + 4 + 5
= 24cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.4

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.4 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.4

A. Fill in the blanks.

(i) All the radii of a circle are ________ .
Answer:
equal

(ii) The ________ is the longest chord of a circle.
Answer:
diameter

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.4

(iii) A line segment joining any point on the circle to its center is called ________ the of the circle.
Answer:
radius

(iv) A line segment with its end points on the circle is called a ________.
Answer:
chord

(v) Twice the radius is ________.
Answer:
diameter

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.4

B. Find the diameter of the circle

(i) Radius = 10 cm
(ii) Radius = 8 cm
(iii) Radius = 6 cm
Answer:
(i) Radius = 10 cm
Diameter = 2 × radius = 2 × 10
Diameter = 20 cm

(ii) Radius = 8 cm
Diameter = 2 × radius = 2 × 8
Diameter = 16 cm

(iii) Radius = 6 cm
Diameter = 2 × radius = 2 × 6
Diameter = 12 cm

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.4

C. Find the radius of the circle.

(i) Diameter = 24 cm
(ii) Diameter = 30 cm
(iii) Diameter = 76 cm
Answer:
(i) Diameter = 24 cm
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.4 1

(ii) Diameter = 30 cm
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.4 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.4

(iii) Diameter = 76 cm
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.4 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.3

Draw circles for the following measurements.
a. 6 cm
b. 5.5 cm
c. 8 cm
d. 6.8 cm
e. 8.6 cm
Answer:
a. Draw a circle of radus 6 cm using a compass.
Steps:
1. Take a compass and fix the pencil in it.
2. Measure 6 cm on the compass using ruler.
3. Place the needle of the compass and keep it fixed on the paper.
4. Move the pencil around it in any direction till your return to the starting point.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3 1

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

b. Draw a circle of radus 5.5 cm using a compass.
Steps:
1. Take a compass and fix the pencil in it.
2. Measure 5.5 cm on the compass using ruler.
3. Place the needle of the compass and keep it fixed on the paper.
4. Move the pencil around it in any direction till your return to the starting point.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

c. Draw a circle of radus 8 cm using a compass.
Steps:
1. Take a compass and fix the pencil in it.
2. Measure 8 cm on the compass using ruler.
3. Place the needle of the compass and keep it fixed on the paper.
4. Move the pencil around it in any direction till your return to the starting point.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

d. Draw a circle of radus 6.8 cm using a compass.
Steps:
1. Take a compass and fix the pencil in it.
2. Measure 6.8 cm on the compass using ruler.
3. Place the needle of the compass and keep it fixed on the paper.
4. Move the pencil around it in any direction till your return to the starting point.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3 4

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3

e. Draw a circle of radus 8.6 cm using a compass.
Steps:
1. Take a compass and fix the pencil in it.
2. Measure 8.6 cm on the compass using ruler.
3. Place the needle of the compass and keep it fixed on the paper.
4. Move the pencil around it in any direction till your return to the starting point.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.3 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.2

A. Fill in the blanks.

(i) All closed four sided figures are called _______.
Answer:
quadrilateral

(ii) A _______ has four equal sides and equal diagonals.
Answer:
square

(iii) The opposite sides of a _______ are equal.
Answer:
rectangle.

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2

(iv) A _______ has no sides.
Answer:
circle

(v) Diagonals are equal in _______ and _______.
Answer:
square, rhombus

B. Write the name of the sides and digonals.

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 2
Sides = AB, BC, CD, AD
Diagonals = AC, BD

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 3
Sides = WX, XY, YZ, ZW
Diagonals = WY, XZ

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 5
Sides = PQ, QR, RS, SP
Diagonals = PR, QS

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.2 4
Sides = EF, FG, GH, EH
Diagonals = EG, FH

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1

Students can download 4th Maths Term 1 Chapter 1 Geometry Ex 1.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 1 Geometry Ex 1.1

A. Write down the names of shape in the following pictures.

(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 1
Answer:
Circle, square, rectangle, triangle

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 2
Answer:
Square, circle, triangle, rectangle

B.
(i) Write the number of squares and triangles in the given picture.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 3
Square _______
Triangle _______
Answer:
Square     5    
Triangle    12    

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1

(ii) Write the number of rectangles and triangles in the given picture
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 4
Rectangle _______
Triangle ______
Answer:
Rectangle    3    
Triangle    1   

(iii) Identify the cut shapes and write the names in the boxes given below.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 Geometry Ex 1.1 8

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Students can Download 8th Tamil Chapter 3.5 எச்சம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.5 எச்சம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 1.
‘வந்த’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வந்த மாணவன்.
வந்த மாடு.
Answer:
(i) வந்த குழந்தை
(ii) வந்த சிறுவன்
(iii) வந்த தாத்தா
(iv) வந்த மாணவர்கள்
(v) வந்த மழை
(vi) வந்த திரைப்படம்
(vii) வந்த அம்மா .

Question 2.
‘வரைந்து’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வரைந்து வந்தான்.
வரைந்து முடித்தான்.
Answer:
(i) வரைந்து பார்த்தான்.
(ii) வரைந்து வைத்தான்.
(iii) வரைந்து கொடுத்தான்.
(iv) வரைந்து வியந்தான்.
(v) வரைந்து மகிழ்ந்தான்.
(vi) வரைந்து கற்றான்.
(vii) வரைந்து தெளிந்தான்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………… எனப்படும்.
அ) முற்று
ஆ) எச்சம்
இ) முற்றெச்சம்
ஈ) வினையெச்சம்
Answer:
ஆ) எச்சம்

Question 2.
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் …………………
அ) படித்து
ஆ) எழுதி
இ) வந்து
ஈ) பார்த்த
Answer:
ஈ) பார்த்த

Question 3.
குறிப்பு வினையெச்சம் ……………….. வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை
ஆ) வினையை
இ) பண்பினை
ஈ) பெயரை
Answer:
அ) காலத்தை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

பொருத்துக

1. நடந்து – முற்றெச்சம்
2. பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
4. பெரிய – வினையெச்சம்
Answer:
1. நடந்து – வினையெச்சம்
2. பேசிய – பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
4. பெரிய – குறிப்புப்

பெயரெச்சம் கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம் வினையெச்சம் என வகைப்படுத்துக

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய , பிடித்து, அழைத்த, பார்த்து.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 4

சிறுவினா

Question 1.
எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:
(i) பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
(ii) இது பெயரெச்சம் , வினையெச்சம் என்று இருவகைப்படும்.
(எ.கா.) படித்த மாணவன்.
படித்த பள்ளி.

Question 2.
அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
Answer:
(i) அழகிய மரம் – பெயரெச்சம்.
(ii) பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ஆகும்.
(iii) இத்தொடரில் ‘அழகிய’ என்ற மரம் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்ததால் பெயரெச்சமாயிற்று.

Question 3.
முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

(எ.கா.) வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் படித்தனள் என்னும் வினைமுற்றுச் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. எனவே இது முற்றெச்சம் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 4.
வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
Answer:
வினையெச்சத்தின் வகைகள் : வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரு வகைப்படும்.

(i) தெரிநிலை வினையெச்சம் :
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) எழுதி வந்தான். இத்தொடரில் எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

(ii) குறிப்பு வினையெச்சம் :
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) மெல்ல வந்தான். இத்தொடரில் மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உரைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

உணவே மருந்து
அனைவருக்கும் வணக்கம்!

மக்கள் அனைவரும் நெடுநாள் வாழவே விரும்புவர். நெடுநாள் வாழ நல்ல உடல் வேண்டும். எனவேதான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்று பாடியுள்ளார். உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு, உடலைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.

உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. தேய்ந்து போகும் திசுக்களைப் புதுப்பிக்கின்றது. மூளை, இதயம், நுரையீரல் முதலான உடல் உறுப்புகள் தத்தம் தொழிலைத் தவறாது செய்து வர நமக்குப் பல்வேறு சத்துகள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் நாம் உணவின் வழியாகத்தான் பெற வேண்டும்.

எல்லாச் சத்துகளும் கிடைக்கும்படியாக நம் உணவுப் பழக்கம் அமைய வேண்டும். ஆனால் நாம் நாகரிகம் என்னும் பெயரால் பின்பற்றும் மேற்கத்திய உணவு முறைகள் பெருமளவு கொழுப்புச் சத்தையே கொண்டவையாகும். மேற்கத்திய உணவு வகைகளில் நமக்குத் தேவையான நார்ச்சத்துகளும் நீர்ச்சத்துகளும் கிடைக்காது.

மேற்கத்திய உணவுகளை உண்ணுவதால் நோய்கள் நம்மிடம் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும். விரைவு உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது, பொட்டலப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொறிப்பது, புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது தவறு. இவற்றில் உள்ள கொழுப்புச் சத்தும் சுவையூட்டச் சேர்க்கப்படும் வேதிப் பொருள்களும் உடலுக்கு ஊறு செய்பவையாகும். இவற்றை உண்பது காசைக் கொடுத்து நோயை வாங்குவதற்கு இணையாகும்.

நம் ஊரில் கிடைக்கும் எல்லாக் காய்கறிகளையும் பழ வகைகளையும் வாங்கிக் சாப்பிடுவதுதான் சிறந்தது. நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச்சத்துகள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற நமக்குத் தேவையான சத்துகளைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும்.

நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்குதல் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.

உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்து விடும். உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணுதல் வேண்டும்.

தண்ணீ ரும் மருந்தே. ‘நீரின்றியமையாது உலகு’ என்பது வள்ளுவம். இயற்கை உணவுப் பொருள்களில் நீரில்லாத உணவுப் பொருள்களே இல்லை. எல்லா வகையான உணவுப் பொருள்களும் விளைவதற்கு நீர் காரணமாக அமைகிறது.

வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய், பப்பாளிப் பழம், முலாப்பழம் முதலானவற்றைச் சாப்பிடலாம். இளநீர் பருகலாம். நீர்மோர் அருந்தலாம். இவை கோடைக்காலத்தில் நம் உடலை வெப்புநோய் முதலானவை அணுகாமல் காப்பாற்றும். கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மருத்துவக் குணமும் இருப்பதால் உணவே மருந்து என்று கூறுவது பொருத்தமாகிறதல்லவா?

‘பசித்துப் புசி’ என்பதனை மனதில் வைத்து பசித்தப் பின் உண்ணுவதனையும் அளவோடு உண்ணுதலையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம்.

சொல்லக்கேட்டு எழுதுக

நலமான உடலுக்கு இரண்டுவேளை சிற்றுண்டியும் ஒருவேளை பேருண்டியும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல்நலம் பேணும் வழிமுறைகளாகும்.

அறிந்து பயன்படுத்துவோம்

உவமைத் தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

(எ.கா.) 1. மடை திறந்த வெள்ளம் போல – தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

பொருத்துக:

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
Answer:
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல ‘ – தற்செயல் நிகழ்வு
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – எதிர்பாரா நிகழ்வு
3. பசு மரத்து ஆணி போல – எளிதில் மனத்தில் பதிதல்
4. விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – ஒற்றுமையின்மை

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

Question 1.
குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
Answer:
காந்தியடிகளின் புகழ், குன்றின் மேலிட்ட விளக்குப் போல் உலகெங்கும் ஒளிவீசுகின்றது.

Question 2.
வேலியே பயிரை மேய்ந்தது போல
Answer:
வேலியே பயிரை மேய்ந்தது போல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே தவறு செய்கிறார்கள்.

Question 3.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
Answer:
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.

Question 4.
உடலும் உயிரும் போல
Answer:
கந்தனும் குமரனும் உடலும் உயிரும் போல எப்போதும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இணைந்தே இருப்பார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 5.
கிணற்றுத் தவளை போல
Answer:
கந்தன் கிணற்றுத் தவளை போல நாட்டு நடப்புகளை அறியாமல் இருந்தான்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை

முன்னுரை :
நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நோய் வரக் காரணங்கள் :
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு. உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம்.

மாசு நிறைந்த சுற்றுச்சூழலும் நோய்க்குக் காரணமாகின்றது. இயற்கை வேளாண்மையை மறந்து, நல்ல விளைச்சல் வேண்டி நவீன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தையும் மாசுபடுத்திவிட்டோம். இவ்வகை உணவினால் நோய்கள் அணுகுவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.

நோய் தீர்க்கும் வழிமுறைகள் :
நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி – மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் திட்டமிட்டுச் செயல்களைச் செய்வது, நோயின் நிலை அறிந்து அதற்கேற்ற உணவையும் மருந்துகளையும் உட்கொள்ளுதல் போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் நோய்கள் நம்மை அணுகாது. வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுத்தத்தைப் பேண வேண்டும். ஈ, கொசு போன்றவை நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காத்தல் :
பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைக்காலத்தில் பழச்சாறுகளை அருந்துதல், மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும், காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.

சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவுகளை அறிந்து அவற்றை கொடுக்க வேண்டும். “நோய்நாடி நோய்முதல் நாடி” என்ற வள்ளுவரின் வாக்கின்படி நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மைத் துன்பப்படுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இவையே வருமுன் காத்தல் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

உணவும் மருந்தும் :
உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. உணவைத் தகுந்த நேரத்தில் ஏற்ற அளவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது.

மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.

உடற்பயிற்சியின் தேவை :
நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார், உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடனும், மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உணவாகும். இதனைக் கவிமணி,

“காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவனே!
என்கிறார்.

முடிவுரை :
நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் அவசியம். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்ற ஔவையின் வாக்குப்படி நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 2
1. பட்டை
2. வசம்பு
3. இலவங்கம்
4. அன்னாசிப்பூ
5. மிளகு
6. ஓமம்
7. சீரகம்
8. கருஞ்சீரகம்
9. சோம்பு
10. பெருங்காயம்
11. சித்தரத்தை

வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 3
1. முயற்சி திருவினை ஆக்கும்.
2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
3. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
4. சுத்தம் சோறு போடும்.
5. வருமுன் காப்போம்.
6. அறிவே ஆற்றல்
7. பருவத்தே பயிர்செய்.
8. பசித்துப் புசி.
9. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
10. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. காலை மாலை உடற்பயிற்சி செய்வேன்.
2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நோய் – Disease
2. மூலிகை – Herbs
3. சிறுதானியங்கள் – Millets
4. பட்டயக் கணக்கர் – Auditor
5. பக்கவிளைவு – Side Effect
6. நுண்ணுயிர் முறி – Antibiotic
7. மரபணு – Gene
8. ஒவ்வாமை – Allergy

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………….. எனப்படும்.
2. எச்சம் ……………… வகைப்படும்.
3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ………………..
4. பெயரெச்சம் ……………….. காலத்திலும் வரும்.
5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ………………… பெயரெச்சம்.
6. பெயரெச்சம் ………………. வகைப்படும்.
7. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ……………….. பெயரெச்சம்.
8. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ………………….
9. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ……………….. வினையெச்சம்.
10. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் …………………..
Answer:
1. எச்சம்
2. இரண்டு
3. பெயரெச்சம்
4. மூன்று
5. தெரிநிலை
6. இரண்டு
7. குறிப்புப்
8. வினையெச்சம்
9. தெரிநிலை
10. குறிப்பு வினையெச்சம்

விடையளி :

Question 1.
எச்சம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாம்.

Question 2.
பெயரெச்சம் சான்றுடன் விளக்குக.
Answer:
பொருளைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்

Question 3.
தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதிய கடிதம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 4.
குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) சிறிய கடிதம்.

Question 5.
வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) படித்து முடித்தான்.

Question 6.
தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன?
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதி வந்தான்.

Question 7.
குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) மெல்ல வந்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Students can Download 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.1 சிற்றகல் ஒளி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

கற்பவை கற்றபின்

Question 1.
எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.
Answer:
பேரறிஞர் அண்ணா வாழ்வில் நிகழ்ந்ததைக் கூறுதல்.

அண்ணாவாகிய நான்,

என்னைப் பொறுத்தவரை, சிந்திப்பதும், படிப்பதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும்.
கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது, நான் ஆங்கில கட்டுரை ஒன்று எழுதினேன். அதனைப் படித்துப் பார்த்த என் பேராசிரியர், ‘பொருட் செறிவுடனும், நயமுடனும் இருக்கிறது. இதை எங்கிருந்து எடுத்தாய்’ என்றார்.

‘நான் இங்கிருந்து எடுத்தேன்’ என்று என் நெஞ்சைத் தொட்டுக் காட்டினேன். பேராசிரியர் வியப்புடனும், மகிழ்வுடனும் என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.

பெரியாருடன் நான் இணைந்து பணியாற்றினேன். அப்போது இருவரும் ஒன்றாக பல ஊர்களுக்குச் செல்வோம். வடநாட்டுப் பயணங்களில் பெரியாரின் தமிழ்ப்பேச்சை நானே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

என் அழகான ஆங்கிலத்தால் கவரப்பட்ட மக்கள் அனைவரும் என்னையே பேசும்படி வற்புறுத்துவர். ஆனால் நான் நயமாக அவ்வலியுறுத்தலை மறுத்துவிடுவேன்.

எவ்வளவுதான் புலமை திறமை இருந்தாலும், ஒருவருடைய பேச்சை மொழிபெயர்க்க வந்ததை விட்டு தனியுரை நிகழ்த்த முற்படுவது, கண்ணியமற்ற செயல் அல்லவா! அதனை நான் செய்யலாமா? கண்ணியம் தவறக் கூடாதன்றோ

Question 2.
நீங்கள் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதைகள் பற்றி வகுப்பறையில் உரை நிகழ்த்துக.
Answer:
மாணவர்களே! சமீபத்தில் நான் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதை ‘சிவகாமியின் சபதம்’ ஆகும். இது ஒரு வரலாற்றுப் புதினம். இதனை எழுதியவர் அமரர் கல்கி ஆவார்.

12 வருடங்களாக வாரந்தோறும் ‘கல்கி’ வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பின்பே நூல் வடிவம் பெற்றது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்தி, எழுதப்பட்ட புதினம் ஆகும். முதலாம் நரசிம்ம பல்லவன் இப்புதினத்தில் முக்கிய இடம் பெறுகிறார். பரஞ்சோதியாத்திரை, காஞ்சி முற்றுகை, பட்சுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது.

வாதாபியின் மீது பல்லவர் போர் தொடுத்தது, காஞ்சியின் போர்ச் சூழல், சாளுக்கிய நாட்டின் வரலாறு ஆகியவை சுவைபட எடுத்தியம்பப்பட்டுள்ளது. சமணர்களால் காஞ்சியால் ஏற்பட்ட மதமாற்றம் குறித்தும் கூறுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

பேரழகியான சிவகாமியையும், அவள் தந்தை ஆயனாரும் மதம் கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட செய்தியும் நயம்பட நவிலப்பட்டுள்ளது. மூலிகை ஓவியங்கள், அஜந்தா குகைகளில் உள்ள வண்ண ஓவியங்கள் குறித்தும் இப்புதினத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு ‘தன் காதலர் நரசிம்மவர்மர் பல்லவர் வாதாபி நகரை தீக்கிரையாக்கி தன்னை மீட்டுச் செல்லும் வரை, அந்நகரை விட்டு, வெளியேறுவதில்லை என்ற சூளுரைப் பகுதியையும் கல்கி நம் கண்முன் விரித்துக் காட்டுகிறார்.

மேலும் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், கடல்புறா என பல வரலாற்றுக் கதைகள் நம் சிந்தையைக் கொள்ளை கொள்ளும் வண்ணமாக மட்டுமின்றி, நற்றமிழை நாம் அறியும் வகையிலும் உள்ளது. மாணவர்களே நேரம் கிடைக்கும் போது, நூலகம் செல்லுங்கள். கற்று இன்புறுங்கள்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே ……………..
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
Asnwer:
அ) திருப்பதியும் திருத்தணியும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 2.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஈ) சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
Answer:

  • ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்குப் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
  • இவர் விருப்பமான புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்.
  • இவர் பல வேளைகளில் பட்டினி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்.
  • செவி வழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 2.
பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
Answer:
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

சிறுவினா

Question 1.
‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
Answer:
இடம்:
‘ம.பொ.சி’யின் தன் வரலாற்றுப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

பொருள்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத் தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

விளக்கம்:
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அப்பொழுது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் சென்னை’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.முன்மொழிந்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று ம.பொ.சி முழங்கினார். 25.03.1953இல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை, நாடாளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

நெடுவினா

Question 1.
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப்பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
Answer:

‘மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’

அறிமுகவுரை:

அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

மாணவப்பருவமும் நாட்டுபற்றும்:

  • ‘நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்படுகிறது’ என்றார் நேரு. எனவே கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
  • சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்டு விழாக்களைக்கொண்டாடும்போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்படவேண்டும்.
  • அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விற்பனை, வெள்ளையனே வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை நாம் மறத்தல் கூடாது.
  • செக்கடியிலும், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
  • மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர்படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப்பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்துக் கொண்டால் நாளை நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்.
  • கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே.
  • நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தல் வேண்டும்.
  • சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

நிறைவுரை:

  • நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்கள் செய்வோம் எனக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
அ) சிவஞானம்
ஆ) ஞானப்பிரகாசம்
இ) பிரகாசம்
ஈ) பொன்னுசாமி
Answer:
ஆ) ஞானப்பிரகாசம்

Question 2.
சிவஞானி என்ற பெயரே……………..
என நிலைத்தது.
அ) சிவஞானம்
ஆ) சிவப்பிரகாசம்
இ) ஞானப்பிரகாசம்
ஈ) பிரகாசம்
Answer:
அ) சிவஞானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..
அ) பொன்னுசாமி
ஆ) சரவணன்
இ) சரபையர்
ஈ) சிவஞானி
Answer:
இ) சரபையர்

Question 4.
காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1919
Answer:
ஆ) 1906

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 5.
ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் ……………..
அ) கல்வி, கேள்வி
ஆ) கல்வி, ஓவியம்
இ) கலை, பண்பாடு
ஈ) கலை, மேடைப்பேச்சு
Answer:
இ) கலை, பண்பாடு

Question 6.
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
அ) 1942 ஜனவரி 8
ஆ) 1939 ஆகஸ்டு 8
இ) 1942 ஆகஸ்டு 8
ஈ) 1947 ஆகஸ்டு 18
Answer:
இ) 1942 ஆகஸ்டு 8

Question 7.
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..
அ) 1955 அக்டோபர் 10
ஆ) 1957 ஆகஸ்டு 10
இ) 1957 ஆகஸ்டு 10
ஈ) 1949 அக்டோபர் 15
Answer:
அ) 1955 அக்டோபர் 10

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 8.
ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..
அ) இலண்ட ன்
ஆ) டெல்அவிவ்
இ) வியன்னா
ஈ) சிட்னி
Answer:
இ) வியன்னா

Question 9.
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..
அ) எனது போராட்டம்
ஆ) என் பயணம்
இ) என் விருப்பம்
ஈ) என் பாதை
Answer:
அ) எனது போராட்டம்

Question 10.
ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..
அ) சொல்லின் செல்வர்
ஆ) நாவலர்
இ) சிலம்புச் செல்வர்
ஈ) சிலம்பு அறிஞர்
Answer:
இ) சிலம்புச் செல்வர்

Question 11.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ஆ) மனுமுறை கண்ட வாசகம்
இ) எனது போராட்டம்
ஈ) வானம் வசப்படும்
Answer:
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 12.
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1986
Answer:
ஆ) 1966

Question 13.
மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..
அ) கன்னியாகுமரி
ஆ) தூத்துக்குடி
இ) நெல்லை
ஈ) நாகர்கோவில்
Answer:
ஈ) நாகர்கோவில்

Question 14.
ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..
அ) 1906-1955
ஆ) 1906-1995
இ) 1906 -1966
ஈ) 1906-1998
Answer:
ஆ) 1906-1995

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 15.
ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..
அ) திருத்தணி, தியாகராயநகர்
ஆ) திருத்தணி, திருநெல்வேலி
இ) திருத்தணி, கன்னியாகுமரி
ஈ) திருத்தணி, திருப்பதி
Answer:
அ) திருத்தணி, தியாகராயநகர்

Question 16.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..
அ) 1906
ஆ) 1908
இ) 1947
ஈ) 1946
Answer:
அ) 1906

Question 17.
மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
அ) ஆயிரம் விளக்கு

Question 18.
மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
ஆ) சால்வன் குப்பம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 19.
மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..
அ) தாமதமாக வந்தது
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை
இ) படிக்காமை
ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை
Answer:
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

Question 20.
மா.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – ……………..
அ) ஐந்தாம் வகுப்பு
ஆ) மூன்றாம் வகுப்பு
இ) ஆறாம் வகுப்பு
ஈ) இரண்டாம் வகுப்பு
Answer:
ஆ) மூன்றாம் வகுப்பு

Question 21.
மா.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ. நேசமணி
Answer:
அ) அன்னை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 22.
மா.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..
அ) கல்வி
ஆ) கேள்வி
இ) கட்டுரை
ஈ) சிறுகதை
Answer:
ஆ) கேள்வி

Question 23.
மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

Question 24.
வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
இ) மங்கலங்கிழார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 25.
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ. நேசமணி

Question 26.
நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி

Question 27.
குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 28.
‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ .சி

Question 29.
சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி

Question 30.
மா.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு ……………..
அ) தன்வரலாறு
ஆ) கவிதை
இ) சிறுகதை
ஈ) புதினம்
Answer:
அ) தன்வரலாறு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 31.
தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி

Question 32.
பொருத்துக.
1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) மா.பொ.சிவஞானம்
4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 33.
பொருத்துக.
1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்
4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 34.
பொருத்துக.
1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை
2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி
3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை
4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

குறுவினா

Question 1.
1906 ஆம் ஆண்டின் சிறப்புகள் யாவை?
Answer:

  • ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906இல் பிறந்தார்.
  • காந்தியடிகள் சத்தியாகிரக’ அறப்போர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் வ.உ.சி.

Question 2.
ம.பொ.சிக்கு அவரது அன்னையார் பயிற்றுவித்த பாக்கள் யாவை?
Answer:
அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்களைப் பயிற்றுவித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
விடுதலைப் போரில் ஈடுபட தமிழர்க்கு ம.பொ.சி எவ்வாறு அழைப்பு விடுத்தார்?
Answer:

  • 30.09.1932ல் ‘தமிழா துள்ளி எழு’ என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை மக்களிடையே வழங்கினார்.
  • பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம்நாடு, ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்தார்.

Question 4.
ம.பொ.சி. சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியக் காரணம் என்ன?
Answer:
சிலப்பதிகாரம் தமிழினத்தின் பொதுச்சொத்து. இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும், தமிழ் இனத்தை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு உண்டான செய்திகள் அனைத்தும் சிலப்பதிகாரத்தில் காணப்பட்டதால் மக்களிடையே சிலப்பதிகாரத்தைக் கொண்டு சென்றார்.

Question 5.
ம.பொ.சி வகித்த பதவிகளைக் குறிப்பிடுக.
Answer:

  • 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர்.
  • 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர் – போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 6.
ம.பொ.சி வாழ்நாள் மகிழ்ச்சியாக எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:

  • புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வட எல்லை வேங்கட மலையாகவும், தென் எல்லை குமரிமுனையாகவும் உள்ளது.
  • இதனைப் படித்தபோது ம.பொ.சி மகிழ்ந்து, ‘மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவது தவப்பயன். இத்தெய்வீக எல்லையை, தமிழகம் திரும்பப் பெற்றதே தன் வாழ்நாள் மகிழ்ச்சி’ என்று குறிப்பிடுகிறார்.

Question 7.
விடுதலைப் போரில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களாக மா.பொ.சி. குறிப்பிடுவோர் யாவர்?
Answer:
காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்.

Question 8.
ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் யார்? அவரின் பெற்றோர் யாவர்?
Answer:

  • ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் பெற்ற தமிழறிஞர் மா.பொ.சிவஞானம்.
  • அவரின் பெற்றோர் : பொன்னுசாமி – சிவகாமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 9.
மா.பொ.சிக்குச் சிவஞானம் என்னும் பெயர் அமையக் காரணம் யாது?
Answer:

  • மா.பொ.சிக்குப் பெற்றோர் இட்டபெயர் : ஞானப்பிரகாசம்
  • சரபையர் என்ற முதியவர் ஒருவர் ‘ஞானப்பிரகாசம்’ என்ற இயற்பெயரை மாற்றி சிவஞானி’ என்று அழைத்தார்.
  • சிவஞானி என்ற பெயர் திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.

Question 10.
அறிவு விளக்கம் பெற மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி யாது?
Answer:

  • அறிவு விளக்கம் பெறுவதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று கல்வி, மற்றொன்று கேள்வி.
  • ஏட்டுக் கல்வி நின்று போனதால் மா.பொ.சிவஞானம் தேர்ந்தெடுத்த வழி கேள்வியாகும்.

Question 11.
பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்க புனித நாள் எது, ஏன்?
Answer:

  • 1942 ஆகஸ்டு 8.
  • இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றிய நாள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 12.
சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம் எது?
Answer:
சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம்: மலபார்

Question 13.
கேரளாவிலிருந்து சென்னை மாநிலத்திற்கு இணைந்த பகுதிகள் யாவை?
Answer:
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை.

சிறுவினா

Question 1.
‘சென்னையை மீட்போம்’ – என்று ம.பொ.சி. குறிப்பிடுவது பற்றி எழுதுக.
Answer:

  • ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னை அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று சில ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
  • தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் இராஜாஜி முன்வந்தார்.
  • மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு சென்னை பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டது.
  • தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கிய தன்விளைவாக 25.08.1953 அன்று சென்னை தமிழருக்கே என்பது உறுதியானது என்று சென்னையை மீட்போம்’ என்று சென்னையை மீட்டது குறித்து ம.பொ.சி குறிப்பிடுகிறார்.

Question 2.
மார்ஷல் ஏ. நேசமணி – குறிப்பு வரைக.
Answer:

  • இளம் வயதில் சமூக விடுதலைக்காகப் போராடியவர்.
  • நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
  • குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதால் ‘மார்ஷல்’ என்று அழைக்கப்பட்டார்.
  • 1956 நவம்பர் 1-இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து தமிழக தென் எல்லையாக மாறக் காரணமானவர்.
  •  தமிழக அரசு இவர் நினைவாக நாகர்கோவிலில் சிலையோடு மணி மண்டபமும் அமைத்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 3.
பண்டைய ‘கடல் கடந்த தமிழ் வணிகம்’ குறித்து எழுதுக.
Answer:

  • ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ‘பேபிரஸ்தாளில்’ எழுதப்பட்ட கையெழுத்து சுவடி கண்டு பிடிக்கப்பட்டது.
  • அச்சுவடியில் சேரர் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும், எகிப்தின் ‘அலெக்ஸாண்டிரியா’ துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • இது கி.பி. 2ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகும்.
  • இதிலிருந்து பண்டைத் தமிழர் கடல் கடந்த வணிகத்தில் சிறந்திருந்தனர் என்பதை அறியலாம்.

Question 4.
மா.பொ.சிவஞானம் குறிப்பு வரைக
Answer:
பெயர் : மா.பொ.சிவஞானம் பெற்றோர்
இட்ட பெயர் : ஞானப்பிரகாசம்
பெற்றோர் : பொன்னுச்சாமி – சிவகாமி
பெயர் மாற்றம் : சரபையர் என்ற முதியவர் இவரைச் ‘சிவஞானி’ என்றே அழைத்தார். அதுவே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்றானது.
சிறப்பு : சிலப்பதிகாரத்தின் பெருமையை உலகறியச் செய்ததால் ‘சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படுகின்றார்.
படைப்புகள் : எனது போராட்டம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு முதலியன.
பணி : சிறந்த விடுதலைப்போராட்ட வீரர், 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர், 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர்.
விருது – 1966ல் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது
அரசு : தமிழக அரசு திருத்தணி மற்றும் சென்னை தியாகராயநகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

Question 5.
சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறுவது யாது?
Answer:

  • நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியதற்குக் காரணம் உண்டு.
  • திருக்குறளையோ , கம்பராமாயணத்தையோ விரும்பாதவன் அல்லன்.
  • ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டு என்றால் , அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்.
  • இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.

என்று சிலப்பதிகாரம் குறித்து சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் கூறினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 6.
சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் ‘புத்தகப்பித்தன்’ என்பதை நிறுவுக.
Answer:

  • நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையைப் போக்க பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று, விருப்பமான புத்தகங்களை, மிகக்குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் மா.பொ.சிவஞானம் .
  • உணவுக்காக வைத்திருந்த பணத்தில் புத்தகம் வாங்கி, பல வேளைகளில் பட்டினிகிடந்தார்.
  • குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்தால் பேரானந்தம் அடைவார்.
  • இவர் தன்னுடைய வாழ்நாளில் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் பல்லாயிரக் கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்கிறார்.

இதன் மூலம் சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம், புத்தகப்பித்தன்’ என்பதை அறியலாம்.