Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Students can Download 9th Tamil Chapter 6.5 புணர்ச்சி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 1.
எழுத்து வகை அறிந்து பொருத்துக.
1. இயல் – அ) உயிர் முதல் உயிரீறு
2. புதிது – ஆ) உயிர் முதல் மெய்யீறு
3. ஆணி – இ) மெய்ம்முதல் மெய்யீறு
4. வரம் – ஈ) மெய்ம் முதல் உயிரீறு
Answer:
1) ஆ, 2) ஈ, 3) அ, 4) இ

Question 2.
புணர்ச்சிகளை “முதல், ஈற்றுச்” சொல் வகையால் பொருத்துக.
1. செல்வி + ஆடினாள் – அ) மெய்யீறு + மெய்ம்முதல்
2. பாலை + திணை – ஆ) மெய்யீறு + உயிர் முதல்
3. கோல் + ஆட்டம் – இ) உயீரிறு + உயிர் முதல்
4. மண் + சரிந்தது – ஈ) உயிரீறு + மெய்ம் முதல்
Answer:
1) இ, 2) ஈ, 3) ஆ, 4) அ

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 3.
சேர்த்து எழுதுக:
அ) தமிழ் + பேசு = ………………….
ஆ) தமிழ் + பேச்சு = ………………….
இ) கை + கள் = ………………….
ஈ) பூ + கள் = ………………….
Answer:
அ) தமிழ் + பேசு – தமிழ் பேசு
ஆ) தமிழ் + பேச்சு – தமிழ்ப்பேச்சு
இ) கை + கள் = கைகள்
ஈ) பூ + கள் = பூக்கள்

Question 4.
பொருத்தமான உடம்படு மெய்யுடன் இணைக்க.
அ) பூ + இனம் = ………………….
ஆ) இசை + இனிக்கிறது = ………………….
இ) திரு + அருட்பா = ………………….
ஈ) சே + அடி = ………………….
Asnwer:
அ) பூ + இனம் – பூவினம் (வகர உடம்படு மெய்)
ஆ) இசை + இனிக்கிறது – இசையினிக்கிறது (யகர உடம்படுமெய்)
இ) திரு + அருட்பா – திருவருட்பா (வகர உடம்படு மெய்)
ஈ) சே + அடி – சேவடி(வகர உடம்படுமெய்)

சிந்தனை கிளர் வினாக்கள்:

அ) குற்றியலுகரம், முற்றியலுகரம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.
Answer:

  • குற்றியலுகரத்தில் வரும் “உ” கரமானது தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும்.
  • முற்றியலுகரத்தில் வரும் “உ” கரமானது தன் ஒரு மாத்திரை அளவில் குறையாது ஒலிக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

ஆ) புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதுவதற்கு உதவும் – இக்கூற்றை ஆய்க.
Answer:
ஒரு சொல்லைப் பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி – எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான் உரைநடை எழுதும் போது ஏற்படும் ஒலி நிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும். வல்லினம், மிகும் மற்றும் மிகாவிடங்கள், சொற்சேர்க்கை ஆகியன உரைநடைக்கு இன்றியமையாதாகும். அவற்றைத் தெறிவாகத் தருவது புணர்ச்சி இலக்கணம் எனவே புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத உதவும்.

இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக.
தமிழின் ‘தொன்மை + ஆன’ இலக்கண ‘நூல் + ஆகிய’ ‘தொல்காப்பியம் + இல்’ ‘சிற்பம் + கலை’ பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். ‘அ + கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். ‘தமிழக + சிற்பம் + கலை’ யின் தோற்றத்திற்கான சான்றாக ‘இதனை + கொள்ளலாம்’. சிலப்பதிகாரத்தில் ‘கண்ணகிக்கு + சிலை’ வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல ‘சுதை + சிற்பங்கள்’ இருந்ததை மணிமேகலை மூலம் அறிய + முடிகிறது’.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

1. தொன்மை +ஆன = தொன்மையான
2. நூல் + ஆகிய = நூலாகிய
3. தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
4. சிற்பம் + கலை = சிற்பக்கலை
5. அ + கல்லில் = அக்கல்லில்
6. தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை
7. இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்
8. கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை
9. சுதை + சிற்பங்கள் = சுதை சிற்பங்கள்
10. அறிய + முடிகிறது = அறிய முடிகிறது

ஈ) படக்காட்சியிலிருந்து இரு சொல் தொடர்களை அமைத்து, அவற்றின் புணர்ச்சி வகையினைக் கண்டறிக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி - 1

(எ.கா) மரக்கிளை = மரம் + கிளை
மரக்கிளை – திரிதல் விகாரப்புணர்ச்சி,
மூன்று பெண்கள் = மூன்று + பெண்கள்
மூன்றுபெண்கள் – இயல்புப் புணர்ச்சி
Answer:
அ) நிறைகுடம் = நிறை + குடம்
நிறைகுடம் – இயல்புப் புணர்ச்சி
ஆ) உழவுத் தொழில் = உழவு + தொழில்
உழவுத் தொழில் – தோன்றல் விகாரப் புணர்ச்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

மொழியை ஆள்வோம்.

படித்துச் சுவைக்க.

வான் தந்த பாடம்
எத்தனை பெரிய வானம்!
எண்ணிப்பார் உனையும் நீயே;
இத்தரை, கொய்யாப் பிஞ்சு,
நீ அதில் சிற்றெறும்பே,
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித்தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள் தாம் பேசல் என்னே !
-பாவேந்தர் பாரதிதாசன்
Answer:
The Lesson the sky Teaches
How Vast is the sky!
Think you of yourself;
The earth is a tiny
Guava fruit; you. like all
Others are a tiny ant
In it? is that not so?
Why talk madly of
The high and the low?
Pavendar Bharatidasan
(translated by P. Parameswaran)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

மொழி பெயர்க்க:

1. Strengthen the body. :
2. Love your food :
3. Thinking is great :
4. Walk like a bull. :
5. Union is strength :
6. Practice what you have learnt :
Asnwer:
1. Strengthen the body. : உடலினை உறுதி செய்
2. Love your food : ஊண் மிக விரும்பு
3. Thinking is great : எண்ணுவது உயர்வு
4. Walk like a bull. : ஏறு போல் நட
5. Union is strength : ஒற்றுமை வலிமையாம்
6. Practice what you have learnt : கற்றது ஒழுகு
இவை அனைத்தும் “பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி”

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க:

எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.

எ.கா: எட்டாக்கனி :
முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.
Asnwer:
உடும்புப்பிடி : என் தம்பிக்கு பிடிவாத குணமாததால் பிடித்தால் உடும்புப்பிடிதான்.

கிணற்றுத் தவளை : கிணற்றுத் தவளை போல் உன் வாழ்வை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாதே! (அல்லது) கிணற்றுத் தவளை போல் எதுவும் தெரியாமல் இருக்காதே.

ஆகாயத்தாமரை :
ஆகாயத் தாமரையைப் பறிக்க விரும்புவது போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே.

எடுப்பார் கைப்பிள்ளை : என் நண்பன் எடுப்பார் கைப்பிள்ளை போல் யார் எதனைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வான்; நம்பி விடுவான்.

மேளதாளத்துடன் :
எம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சரை மேளதாளத்துடன் வரவேற்றோம்.

பத்தியில் இடம் பெற்றுள்ள இயல்புப் புணர்ச்சிகளையும், விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்து எழுதுக:

காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்த பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
Asnwer:
இயல்புப் புணர்ச்சி சொற்கள்:
நுழைவு வாயிலின் – நுழைவு + வாயிலின்
நிற்பது போன்று – நிற்பது + போன்று

விகாரப்புணர்ச்சிச் சொற்கள்

1. தோன்றல் விகாரப் புணர்ச்சி
சுற்று + சுவர் → சுற்றுச்சுவர்
கலை + கூடம் → கலைக்கூடம்
தெய்வம் + சிற்பங்கள் → தெய்வச்சிற்பங்கள்
குடைவரை + கோயில் → குடைவரைக்கோயில்

2. கெடுதல் விகாரப் புணர்ச்சி
வைகுந்தம் + பெருமாள் → வைகுந்த பெருமாள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

3. திரிதல் விகாரப் புணர்ச்சி
பல்லவர் காலம் + குடைவரைக் கோவில் → பல்லவர் காலக் குடைவரைக் கோவில்

மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

Question 1.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
Answer:
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

Question 2.
கயல்பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.
Answer:
கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.

Question 3.
நேற்று தென்றல் காற்று அடித்தது.
Answer:
நேற்று தென்றல் வீசியது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 4.
தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
Answer:
தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்)

Question 5.
அணில் பழம் சாப்பிட்டது
Answer:
அணில் பழம் தின்றது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 6.
கொடியிலுள்ள மலரை எடுத்து வா.
Answer:
கொடியில் உள்ள மலரைக் கொய்து வா. (அல்லது) கொடியில் உள்ள பூக்களைப் பறித்து வா?

கவிதை படைக்க.

மூடநம்பிக்கை, புவியைப் போற்று, அன்பினவழி
எ.கா:
மூட நம்பிக்கை
பூனை குறுக்கே போனதற்குக்
கவலைப்படுகிறாயே!
அந்தப் பூனைக்கு என்ன ஆனதோ?
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

மொழியோடு விளையாடு

விடையைத் தமிழ் எண்களில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி - 3
கண்டுபிடிக்க.

1. எண்ணும் எழுத்தும் கண் – இத்தொடரை ஒருவர் 1, 2, 3, 4, 1, 5, 6, 7, 4, 8, 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றி கீழ்க்காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்.
அ) எழுது – ……………………
ஆ) கண்ணும் – ……………………
இ) கழுத்து – ……………………
ஈ) கத்து – ……………………
Answer:
அ) எழுது – 1, 5, 7
ஆ) கண்ணும் – 8, 2, 3, 4
இ) கழுத்து – 8, 5, 6, 7
ஈ) கத்து – 8, 6, 7

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 2.
என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் – இக் கூற்று.
அ) உண்மை
ஆ) பொய்
இ) உறுதியாகக் கூறமுடியாது
Answer:
இ) உறுதியாகக் கூறமுடியாது
காரணம் : அனைவரும் என்று கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூட இருக்கலாம்.

அகராதியில் காண்க.
ஏங்கல், கிடுகு, தாமம், பான்மை, பொறி
Answer:
அ) ஏங்கல் – ஓசை, மயிற்குரல், அழுதல், குழந்தைகளுக்கு வரும் ஒருவகை நோய்
ஆ) கிடுகு – கேடகம், முடைந்த ஓலைக் கீற்று, சட்டப்பலகை
இ) தாமம் – பூமாலை, வடம், புகழ், ஒளி, பரமபதம்
ஈ) பான்மை – குணம், தகுதி, முறைமை, சிறப்பு
உ) பொறி – புள்ளி, தழும்பு, எந்திரம், ஒளி, ஐம்பொறி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

1. மலர்விழி வீணை வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
Asnwer:
மலர்விழி வீணை வாசித்தாள். கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்.

2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
Asnwer:
குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில் இருந்து நீங்கினர்.

3. தேன் போன்ற மொழியைப் பவள வாய் திறந்து படித்தாள்
Asnwer:
பவளவாய் திறந்து மொழித்தேனைப் படித்தாள்.

4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
Asnwer:
முத்துநகை தன் புருவவில்லில் மை தீட்டினாள்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி - 4
Asnwer:
என்னை நானே
செதுக்கும் சிற்பியாவேன் – ஆம்
கல்வி எனும் உளி கொண்டு
உயரிய சிந்தனை செயல் எனும்
நுட்பங்களுடன் என்னை நானே
வடித்து கொள்கிறேன் சிற்பமாக

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

செயல்திட்டம்

உங்கள் மாவட்டத்தின் கலைநயம் மிக்க இடங்களின் சிறப்புகளைப் படங்களுடன் திரட்டிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Asnwer:
அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகளைக் குறிக்கும் தொகுப்பேட்டை, மாணவர்களே உருவாக்குங்கள்.

நிற்க அதற்குத்தக….

என்னை மகிழச் செய்த பணிகள்
(எ.கா)
1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.
2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.
3. ……………………………………………………………………………………………………………………………………………………….
Asnwer:
1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.
2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.
3. வயதான என் பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களைப் பாதுகாப்பாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். அம்மா பாராட்டினாள் – மகிழ்ந்தேன்.
4. செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து மாணவப் பருவத்திலே சேவை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றேன்; மகிழ்ச்சியடைந்தேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

கலைச்சொல் அறிவோம்

குடைவரைக்கோயில் – (Cave temple)
கருவூலம் – (Treasury)
மதிப்புறு முனைவர் – (Honorary Doctorate)
மெல்லிசை – (melody)
ஆவணக் குறும்படம் – (Document short film)
புணர்ச்சி – (combination
Answer:
குடைவரைக்கோயில் – (Cave temple)
பெரிய மலை (வரை) களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்களைக் குறிப்பது

கருவூலம் – (Treasury)
அரசின் செல்வம் மற்றும் நிதி சார்ந்த அனைத்தும் பாதுகாக்கப்படும் இடம்.

மதிப்புறு முனைவர் – (Honorary Doctorate)
தொழில்துறை, கலை, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றி வாழ்நாள் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் கௌரவ பட்டம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

மெல்லிசை – (melody)
இனிமையான இசையை மென்மையாக வெளிப்படுத்துதல்

ஆவணக் குறும்படம் – (Document short film)
ஒரு சமூகப் பிரச்சனை, அதன் தீவிரம் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை குறைந்த நேரத்தில் மக்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் படம்.

புணர்ச்சி – (combination)
தமிழ் இலக்கணத்தில் இடம் பெறுவது. ஒரு சொல்லைப் பிரித்து நிலைமொழியும் வருமொழியும் எவ்வாறு இணைகின்றன என்பதைக் கூறும் இலக்கணம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மரவேர் என்பது ……………. புணர்ச்சி
அ) இயல்பு
ஆ) திரிதல்
இ) தோன்றல்
ஈ) கெடுதல்
Answer:
ஈ) கெடுதல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

சிறுவினா

Question 1.
கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.
Answer:
“கை பிடி” – கையைப் பிடித்துக் கொள் என்று பொருள்.
“கைப்பிடி” – கைப்பிடி அளவைக் குறிப்பது. (ஒரு கைப்பிடி பருப்பு கொடு)
கை + பிடி → கைபிடி – இயல்புப் புணர்ச்சி ஆகும்.
கை + பிடி → கைப்பிடி (தோன்றல்) – விகாரப்புணர்ச்சி ஆகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எழுத்து வகையால் சொற்கள் ………… வகைப்படும்.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
Answer:
இ) 4

Question 2.
நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும் உடம்படுமெய் …………..
அ) யகர உடம்படுமெய்
ஆ)வகர உடம்படுமெய்
இ) இரண்டும் வரும்
ஈ) இரண்டும் வராது
Answer:
யகர உடம்படுமெய்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 3.
வட்டு + ஆடினான் = எவ்வகை புணர்ச்சியில் வரும்?
அ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி
ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி
இ) இயல்பு புணர்ச்சி
ஈ) திசைப்பெயர் புணர்ச்சி
Answer:
ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி

Question 4.
விகாரப் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களில் இடம்பெறுபவை
அ) தோன்றல்
ஆ) திரிதல்
இ) கெடுதல்
ஈ) விரிதல்
i) முதல் மூன்றும் சரி
ii) முதல் இரண்டும் சரி
iii) இறுதி மூன்றும் சரி
iv) அனைத்தும் சரி
Answer:
i) முதல் மூன்றும் சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 5.
காது, பேசு – இது எவ்வகைக் குற்றியலுகரம்.
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
இ) வன்தொடர்க் குற்றியலுகரம்
ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்
Answer:
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

Question 6.
பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு – வன்தொடர்க் குற்றியலுகரம்
அ) 4, 3, 2, 1
ஆ) 4, 2, 3, 1
இ ) 3, 2, 1, 4
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

குறுவினா

Question 1.
உடம்படு மெய் என்றால் என்ன? அவை யாவை?
Answer:

  • உயிர் எழுத்தை இறுதியில் கொண்ட சொல்லும், உயிர்எழுத்தை முதலாக உடைய சொற்களும் வரும்போது, அவற்றை ஒன்று சேர்க்க ஒரு மெய் தோன்றும் அதுவே உடம்படுமெய் ஆகும்.
  • அவை: யகர உடம்படுமெய், வகர உடம்படுமெய் ஆகும்.

சிறுவினா

Question 1.
இயல்புப் புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி – விளக்குக.
Answer:
இயல்புப் புணர்ச்சி

  • புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்புப்புணர்ச்சி எனப்படும்.
  • சான்று : மண் + மலை = மண்மலை

விகாரப் புணர்ச்சி

  • புணர்ச்சியின் போது மாற்றங்கள் நிகழ்ந்தால் அது விகாரப்புணர்ச்சி எனப்படும். மாற்றம் மூன்று நிலைகளில் வரும். [தோன்றல், திரிதல், கெடுதல்)
  • சான்று : கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 2.
குற்றியலுகரப் புணர்ச்சியைச் சான்று தந்து விளக்குக.
Answer:

  • வட்டு + ஆடினான் = வட்(ட்+உ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்
    நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள்வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.
  • குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரத்துக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும். உறவு + அழகு = உற(வ்+உ) + அழகு = உறவ் + அழகு = உறவழகு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Students can Download 9th Tamil Chapter 6.4 செய்தி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.4 செய்தி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Question 1.
உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறெதுவும் இல்லை – இத்தொடர் குறித்துச் சொற்போர் நிகழ்த்துக.
Answer:

சொற்போர்

“நாளெல்லாம் நன்றொலிக்கும். பாட்டினிலே, நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி.

“இசையால் வசமாகா இதயம் எது” என்றார் மற்றொரு கவிஞர். இசை வாடிய பயிரை வளரச் செய்யும்; மழையைப் பொழியச்செய்யும்; எல்லா வல்ல இறைவனையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் பேராற்றல் வாய்ந்த இசை, உலகில் அமைதியையும் ஏற்படுத்தும் எனில் மிகையாகாது.

“அழகான இசை அது மனித குலத்தின்

உண்மையான நம்பிக்கை”. அன்பையும், அமைதியையும், மன உருக்கத்தையும் இசையால் ஏற்படுத்த முடியும்

உலக அமைதிக்காக ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இசை விழா நடத்தப்படுகிறது. ஆம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இவ்விழா நடைபெற்று வருகிறது.

நம் நாட்டிலும் சிதம்பரம் போன்ற கோவில்களில் உலக அமைதிக்காக, பல மணி நேரங்கள் தொடர் இசை (சான்றாக 12 மணி நேரம், 28 மணி நேரம்) நடத்தப்படுகிறது. அவ்விழாவில் பல மொழி பேசுபவர்கள், பல நாட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். அங்கு, இசை மட்டுமே ஆளுகை செய்கிறது. நாடோ, மொழியோ, பணமோ, பதவியோ, உயர்வோ, தாழ்வோ அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

இசை என்றால் “ஒழுங்கு” என்றும் “இசையவைப்பது” என்றும் பொருள் உண்டு. இயற்கையைத் தன் வசப்படுத்தி, இறைவனையே தன் வசப்படுத்தி, இறைவனையே ஆட்கொள்ளும் இசை மனித மனங்களில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் இசைந்து போகச்செய்யும் ஆற்றல் உடையது. எனவே உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறொன்றும் இல்லை.

Question 2.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள உங்களுக்குப் பிடித்த செய்யுள் பகுதிகளை வகுப்பில் இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் “செய்தி” கதையின் மூலமாக விளக்குக.
Answer:
முன்னுரை:
இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின் செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி என்னும் கதை உணர்த்துகிறது.

வித்வானின் வருகையும், அறிமுகமும்:
நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான்.

வக்கீல் வீட்டில் “பிலிப் போல்ஸ்கா ” என்பவர் தலைமையில் மேற்கத்திய சங்கீதகுழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல் வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

கீர்த்தனம் தொடங்கினார்:
வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது.

போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச் சென்றது.
இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

சாமாராகம் :
தஸரிமா……. மா” என்று ஆரம்பித்த ராகம் கொஞ்சம் – கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு ….. மொழி தெரியாத போல்ஸ்காவைத் திரும்பிப் பார்த்தார் வக்கீல் ……

அவன்உடல்ராகத்தோடு இசைந்து அசைந்துகொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து விட்டான். மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். மேடைக்கருகில் வந்து முழந்தாளிட்டு உட்கார்ந்து கையை மேடையோரத்தில் வைத்து முகத்தைப் புதைத்து தவத்தில் ஆழ்ந்தவன் போல் ஆனான்.

சாமா ராகத்தை …….. அனுபவிக்க அவனுக்கு மொழியோ, இனமோ இடையூறு செய்யவில்லை. சாந்தமுலேகா……..

சாந்தமுலேகா …… :

குழந்தையைக் கொஞ்சுவது போல், அந்த அடி கொஞ்சியது. போல்ஸ்காவின் மெய்சிலிர்த்தது. அவனது தலையும், உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக் கொண்டிருந்தன………………

அந்த இசை எனக்காக அனுப்பிய செய்தி …… உலகத்துக்கே ஒரு செய்தி ……. உங்கள் சங்கீதத்தின் செய்தி உணர்வை வெளிப்படுத்த, நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் போல்ஸ்கா தடுமாறினான் …………..
என்ன என்றார் வித்வான் ……..

வக்கீல் மொழி பெயர்த்தல்:
தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான். இரைச்சல், கூச்சல், அடிதடி, புயல், அலை, இடி என ….. ஒரே இரைச்சல்……. அத்தகு போர்க்களத்தினுள் நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்; காண்கிறேன். இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது …. இந்த அமைதி எனக்குப் போதும் என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார் வக்கீல்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

வித்வானின் திகைப்பு:
அமைதியா …… அப்படியா தோணித்து அவருக்கு …… நான் வார்த்தையைக் கூடச் சொல்லவில்லையே ……
மிஸ்டர் போல்ஸ்கா நீங்கள் உணர்ந்தது போல், புயல், இடி என்று சொல்லாவிட்டாலும், இப்பாடல் அமைதி அமைதி என்று அமைதியையே கடைசி இலட்சியமாக இறைஞ்சுகிறது ………. என்று திகைத்துக் கூறினார்.

போல்ஸ்கோ …… பாராட்டல்:
இசையை வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன் என்று வித்வானின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா ………..

முடிவுரை:
நாடு, மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும் இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும்.
இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
செய்தி கதையின் தலைமை மாந்தர் யார்?
அ) தங்கவேலு
ஆ) மணி
இ) பிலிப் போலஸ்கா
ஈ) ஜானகிராமன்
Answer:
இ) பிலிப் போல்ஸ்கா

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Question 2.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?
அ) சக்தி வைத்தியம்
ஆ) கருங்கடலும் கலைக்கடலும்
இ) நடந்தாய் வாழி காவேரி
ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்
Answer:
அ) சக்தி வைத்தியம்

Question 3.
அப்பாவின் சிநேகிதர் நூலின் ஆசிரியர்
அ) அகிலன்
ஆ) அசோகமித்திரன்
இ) ஆதவன்
ஈ) நாஞ்சில் நாடன்
Answer:
ஆ) அசோகமித்திரன்

Question 4.
தி.ஜானகிராமன் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆண்டு
அ) 1969)
ஆ) 1979
இ) 1989
ஈ) 1999
Answer:
ஆ) 1979

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Question 5.
செய்தி என்னும் சிறுகதை இடம் பெற்ற நூல் எது
அ) சிவப்பு ரிக்ஷா
ஆ) மின்சாரப்பூ
இ) ஒரு சிறு இசை
ஈ) முதலில் இரவு வரும்
Answer:
அ) சிவப்புரிஷா

குறுவினா

Question 1.
தி. ஜானகிராமன் – குறிப்பு வரைக.
Answer:

  • தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்
  • உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக இருந்தவர்.

Question 2.
செய்தி என்னும் சிறுகதை உணர்த்தும் பொருள் யாது?
Answer:
செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும் போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Question 3.
தஞ்சாவூர் தமிழக்கு அளித்த கொடையாக விளங்குபவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:

  • உ.வே.சாமிநாதர்
  • மௌனி
  • தி.ஜானகிராமன்
  • தஞ்சை பிரகாஷ்
  • தஞ்சை இராமையா தாஸ்
  • தஞ்சாவூர்க் கவிராயர்

சிறுவினா

Question 1.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச்சிறுகதையாளர்கள் ஐந்துபேரைக் குறிப்பிடுக.
Answer:

  • கு. அழகிரிசாமி
  • தி. ஜானகிராமன்
  • அசோகமித்திரன்
  • நாஞ்சில்
  • நாடன் வண்ணதாசன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Question 2.
இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாகக் காட்டுவது நாகசுரம். ஆய்ந்தறிக!
Answer:
இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாதசுரமும் ஒன்று. மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை . 13 ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை. ஆகவே இந்தக் கருவி 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது.

நாகசுரம் என்ற பெயரே சரியானது. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Students can Download 9th Tamil Chapter 6.3 நாச்சியார் திருமொழி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.3 நாச்சியார் திருமொழி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 1.
திருப்பாவையில் இடம் பெற்றுள்ள தொடை நயம் மிக்க பாடல்களுள் எவையேனும், இரண்டினை இணையத்திலோ நூலகத்திலோ திரட்டி வகுப்பறையில் பாடுக.
Answer:

திருப்பாவைப்பாடல் (24)

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்ப் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

பாடல் – 15 (திருப்பாவை)

எல்லே இளங்கிளியே இன்னம் உறக்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கை மீர்போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 2.
கண்ணனைப் பல்வேறு உறவு நிலைகளில் வைத்துப் பாடிய பாரதியார் பாடல்களும் உங்களைக் கவர்ந்த பாடல்களைக் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களே, ஆண்டாள் கண்ணனைத் தன் நாயகனாக எண்ணியது போல்.
பாரதியாரும் கண்ணனை தோழனாக (கண்ணன் என் தோழன்)
தாயாக (கண்ணன் என் தாய்) தந்தையாக (கண்ணன் என் தந்தை)
சேவகனாக (கண்ணன் என் சேவகன்), விளையாட்டுப் பிள்ளை
(கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை), காதலனாக (கண்ணன் என் காதலன்)
என்று பல நிலைகளில் வைத்துப் பாடியுள்ளார்.

சான்று :

விளையாட்டுப்பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை தீராத………………
புல்லாங்குழல் கொண்டு வருவான் – அமுது
பொங்கித் ததும்பும் நற் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போல – அதைக்
கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போமே……..
இப்பாடலில் குழலிசைத்து அனைவரையும் மயக்கும் குழந்தையாக எண்ணிப்பாடியுள்ளார் அல்லவா ……..

மாணவர் :

ஐயா ……. தோழனாக என்று சொன்னீர்கள் அதற்கு ஒரு சான்று சொல்லுங்கள் ஐயா!
“ பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென்றால்” ஒரு
பேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும்வழிவினை ஆளும் வழி – பயன்
உண்ணும் வழியுரைப் பான்
அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக்குள் வருவான்
மழைக்குக் குடை பசி நேரத்துணவு என்றன்
வாழ்வினுக் கெங்கள் கண்ணன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

தோழனாக கண்ணன் வாழ வழி சொல்வானாம். கூப்பிடும் போது அரை நொடிக்குள் வருவானாம். மழைக்குக் குடையாவான்; பசிக்கு உணவாவான்; என்றன் வாழ்வே என் கண்ணன் என்கிறார்.

மாணவர்களே இதன் மூலம் பாரதி கண்ணனைத் தோழனாய்க் கொண்டார் என்பதையும், நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

நல்ல நண்பன்வாழவழிகாட்டவேண்டும், துன்பம் வரும் போது நம்மைத்தாங்குகிறவனாகவும்
இருக்க வேண்டும் என்கிறார்.

மாணவர்கள் : நன்றி ஐயா! …….

Question 3.
சங்க காலத்திலிருந்து தற்காலம் வரையுள்ள பெண்புலவர்களின் சில கவிதைகளைக் கொண்டு ஒரு கவிதைத் தொகுப்பு உருவாக்குக.
Asnwer:

ஔவையார் பாடல்

முட்டு வேன்கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்ற மேலிட்டு
ஆஅஓல் எனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவலி அலைப்பஎன்
உயவு நோய் அறியது துஞ்சும் ஊர்க்கே (குறுந்தொகை – 28)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

ஒக்கூர் மாசாத்தியார்

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் – மகளிர் ஆதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந் தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழு நன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீகிப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே (புறநானூறு)
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி - 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
Answer:
அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
Answer:
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

குறுவினா

Question 1.
கண்ண ன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
Answer:

  • கண்ணன் புகுந்த பந்தலானது முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டதாக இருந்தது.
  • மத்தளம் முழங்கியதாகவும், வரிகளை உடைய சங்குகளைஊதுபவர்கள் நின்றுகொண்டிருந்தனர் என்று, கண்ணன் புகுந்த பந்தல் இருந்த நிலையை ஆண்டாள் கூறுகிறாள்.
    “மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
    முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற்”

சிறுவினா

Question 1.
ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
Answer:

  • சதிராடும் இளம்பெண்கள், தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
  • மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
  • மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத, முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அடுப்பிடு சாந்த மோடு அகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் ……………. இவ் அடிகளில் உள்ள நயங்கள்.
அ) அடியெதுகை, அடிஇயைபு
ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிமோனை, அடிஇயைபு
ஈ) சீர்மோனை, சீர்இயைபு
Answer:
அ) அடியெதுகை, அடிஇயைபு

Question 2.
திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்தியவர்கள் ……………..
அ) நாயன்மார்கள்
ஆ) ஆழ்வார்கள்
இ) சமணர்கள்
ஈ) தேவர்கள்
Answer:
ஆ) ஆழ்வார்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 3.
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?
அ) நம்மாழ்வார்
ஆ) பேயாழ்வார்
இ) பெரியாழ்வார்
ஈ) பூதத்தாழ்வார்
Answer:
இ) பெரியாழ்வார்

Question 4.
நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள்
அ) 110
ஆ) 140
இ) 120
ஈ) 150
Answer:
ஆ) 140

Question 5.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு …………….. ஆகும்.
அ) பெரிய புராணம்
ஆ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்
இ) நளவெண்பா
ஈ) பூதத்தாழ்வார்
Answer:
ஆ) நாலாயிர திவ்ய பிரபந்தம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 6.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியவை யாவை?
அ) திருப்பாவை
ஆ) நாச்சியார் திருமொழி

i) அ – சரி
ii) ஆ – சரி
iii) இரண்டும் சரி
iv) இரண்டும் தவறு
Answer:
iii) இரண்டும் சரி

Question 7.
“மதுரையார் மன்னன் அடிநிலை” – மதுரையார் மன்னன் யார்?
அ) கண்ணன்
ஆ) கன்னன்
இ) கோவலன்
ஈ) நெடுஞ்செழியன்
Answer:
அ) கண்ண ன்.

Question 8.
கைத்தலம் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உவமைத்தொகை
Answer:
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 9.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி - 2
Answer:
அ) (iv)
ஆ) (i)
இ) (ii)
ஈ) (iii)

குறுவினா

Question 1.
ஆண்டாள் – குறிப்பு வரைக.
Answer:

  • திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 2.
ஆண்டாள் பாடியதாகக் குறிப்பிடப்படும் இரு தொகுதிகள் யாவை?
Answer:

  • திருப்பாவை
  • நாச்சியார் திருமொழி

நெடுவினா

Question 1.
]கண்ணனைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுவனவற்றை விளக்குக.
Answer:
முன்னுரை:
பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது. இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது. திருமாலை நாயகனாக எண்ணி ஆண்டாள் பாடுவதாக அமைந்தது நாச்சியார் திருமொழி ஆகும்.

ஆண்டாளின் கனவும், கண்ணனும்
ஆடும் இளம் பெண்கள், கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள். வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்’. இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

‘மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர். அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ், என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்’ எனக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

முடிவுரை :
கண்ணன் மீது ஆண்டாள் கொண்ட காதலின் வெளிப்பாடே கனவாக மலர்ந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

பாடலின் பொருள்

நடனம் ஆடும் இளம்பெண்கள், கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.

வடமதுரையை (மதுராபுரி) ஆளும், மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்து கொண்டு, புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
இவ்வாறு கண்ணன் வரும் காட்சியைத் தன் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

மத்தளம் முதலான இசைக் கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.

அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான். இக்காட்சியைத் தன் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Students can Download 9th Tamil Chapter 6.2 இராவண காவியம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.2 இராவண காவியம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 1.
ஐவகை நிலங்களில் உங்கள் மாவட்டம்/ஊர் அமைந்த நிலவகை பற்றியும் அதன் கவின்மிகு காட்சியையும் படக் கட்டுரையாக்குக.
Answer:
என்னுடைய மாவட்டம் கன்னியாகுமரி. ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த நிலமாக இருப்பது என் மாவட்டத்தின் பெருமை.

கன்னியாகுமரியின் கவின்மிகு காட்சிகள்

தமிழகத்திற்குத் தென் எல்லையாகத் திகழும் எம் மாவட்டம் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 1
அரபிக்கடல், வங்காளவிரிகுடா. இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடம் இது.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 2
இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத் திருவிழாவாகவும், வானத்தில் பல வர்ணஜாலம் வாரியிறைக்கும் நிகழ்வுகளாகவும் அமைகின்றன. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்
தமிழினம் செழிக்க இரண்டடி தந்த வள்ளுவரைப் பெருமைப்படுத்தும் மாவட்டம்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 4
‘எழுமின் விழுமின்” என்று இளைய மனங்களில் எழுச்சித்தீபம் ஏற்றிய விவேகானந்தரைப் பெருமைப்படுத்தியுள்ளதும் எம் மாவட்டமே.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 5
காமராசர் நினைவாலயம், காந்தி மண்டபமும் இங்கு உண்டு.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 6
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம் போல் அமையப் பெற்றிருக்கும் குமரியம்மன் கோயில். பழமை வாய்ந்த தேவாலயங்களும் இங்கு இறையாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 7
இங்கு புலியை முறத்தால் கொன்ற வீரப் பெண்ணுக்கும், முல்லைக்குத் தேர் தந்த பாரி மன்னனுக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 8
திற்பரப்பில் இருந்து, திருவட்டார் வந்த பின் மாத்தூர் என்ற சிற்றூருக்குச் செல்லும் சாலையில் தொட்டிப் பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல் அமைந்துள்ள இப்பாலத்தில் விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

செல்லும் வழியெங்கும் பசி தீர்க்க பழவகைகள் பலவும் கிடைக்கும். கன்னியாகுமரியை இப்படிச் சொல்லி, சொல்லி வர்ணனை செய்து கொண்டே போகலாம்.
எம் மாவட்டத்திற்கு நீங்களும் ஒருமுறை வாருங்கள். இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள்.

Question 2.
இப்பாடப் பகுதியில் உங்களை ஈர்த்த கவிதைக் காட்சியினை ஓவியமாகத் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 9
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
வைக்கோற் போர், நெற்கதிர், போரடிக்கும் களம் போன்ற உழவுத் தொழிலோடு தொடர்புடையவற்றின் விளக்கங்களைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களே! இராவண காவியத்தில் ஐவகை நில வளங்களைப் பற்றிக் கற்கும் போது, வைக்கோற் போர், நெற்கதிர் போரடிக்கும் களம் போன்ற வார்த்தைகளைக் கற்றீர்கள் அல்லவா! அதன் விளக்கங்கள் தெரிந்து கொள்ள ஒரு கலந்துரையாடல்

கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், புகழேந்தி, சுதா.

ஐயா : நெற்குதிர் பற்றிச் சொல்லுங்கள் ஐயா!
ஆசிரியர் : கூறுகிறேன் புகழேந்தி.
நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு. பெரிய அளவில் இருக்கும் குதிரில் தானியத்தைச் சேமிப்பர். சிறிய அளவில் உள்ளவை விதை தானியங்களைச் சேகரித்து வைக்கவும் உதவும்.
புகழேந்தி : ஐயா! குதிர் பற்றி என் தாத்தா ஏதோ பழமொழி சொல்வாரே
ஆசிரியர் : ஆமாடா ………” எங்கப்பன் குதிருக்குள் இல்லை ”. “ஐயா!” கதிர் போல அம்மா குதிர் போல ” போன்ற பழமொழிகள் உள்ளன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சுதா :ஐயா போர் அடித்தல் என்றால் என்ன ஐயா!
ஆசிரியர் : அறுவடை செய்த நெல்லையும், வைக்கோலையும் பிரிக்கும் செயல். அகன்ற களத்திற்கு கொண்டு வந்து அடிப்பர். முதலில் அடிப்பதை தலையடி என்பர். பின் வைக்கோலைப் பரப்பி, மாட்டைச் சுற்றி வரச் செய்தும் நெல்லையும்,
வைக்கோலையும் தனித்தனியே பிரித்தெடுத்தலே போரடித்தல் ஆகும்.

சுதா : ஐயா வைக்கோற்போர் பற்றிச் சொல்லுங்களேன்.
ஆசிரியர் : நெல்லைப் பிரித்து எடுத்த பின் அதன் தாளை உலர்த்தி சேகரிப்பது வைக்கோல். அது கால்நடைகளுக்குக் குறிப்பாக மாடுகளுக்கு உணவாகும். வைக்கோலை ஈரம்படாமல் உலரவைத்து. அதனை அழகாக அடுக்கி குவித்து, காற்றில் பறக்காமல் இருக்க, வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியைக் கொண்டு சுற்றி வைத்துப் பாதுகாப்பதே வைக்கோற் போர் ஆகும்.
புகழேந்தி

சுதா : நன்றி ஐயா எங்கள் தலைமுறைக்குத் தெரியாத செய்திகள் இவை. விளக்கமாக புரிய வைத்து விட்டீர்கள் ஐயா!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……………….
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல்
இ) முல்லை
ஈ) கெடுதல்
Answer:
இ) முல்லை

குறுவினா

Question 1.
இடிகுரல், பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
இடிகுரல் – உவமைத் தொகை
பெருங்கடல் – பண்புத் தொகை

Question 2.
பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
Answer:
மராமலர்களை மாலையாக அணிந்த சிறுவர்கள், எருதின் கொம்புகளைப் போல் இருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின.
“வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால் அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு உவமைகளை எடுத்துக் காட்டுக.
Answer:
குன்று போல:
முல்லை நிலத்தவர்கள், முதிரை. சாமை, கேழ்வரகு மணி போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.

மதியம் தொடரும் மேகம் போல:
கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது, தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும். அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின் காட்சி போல் உள்ளது என்று உவமைப்படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.

Question 2.
குறிஞ்சி மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
Answer:
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின் மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

நெடுவினா

Question 1.
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
Answer:
முன்னுரை:
பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை, அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள் நீர் நிறைந்த நதி, குளக்கரைகள், மயில்கள், குயில்கள், கிளிகள் எனப் பறந்து திரியும் பறவைகள் இத்தகு அழகு சூழலை இராவண காவியத்தில் ஐவகை நிலங்கள் பற்றிக் குறிப்பிடும் பாடல்களில் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

பொன் மயில் ஆடும்:
அருவிகள் பறையைப் போல் ஆரவாரமாய் ஒலித்து விழும். பைங்கிளிகள் தாம் அறிந்த இசையினைப் பாடும். பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான அகன்ற சிறகினை விரித்து ஆடும். பூக்கள் நிறைந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குரங்கினமோ இவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்.

“………….. பொன் மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்”.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

குயிலும், வண்டும் இசைக்கும்:
அழகிய நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும் அழகுமிக்க சிறகினையுடைய வண்டு இனங்களும், பாவிசைத்துப் பாடின. புகழ்பெற்ற முல்லை நில ஆயர்கள் கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன முக்குழலை இசைத்து, மேயும் பசுக்கூட்டங்களை அருகருகே ஒன்றிணைக்கும் காட்சியும் இன்பம் தருவன.

“தேஇசை பெறும் கடறு இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகு அணைக்குமால்”

பூத்துக்குலுங்கும் காஞ்சி, வஞ்சி:
மலையிடைத் தோன்றும் ஆறும், கரையை மோதித் ததும்பி நிற்கும் குளமும் மனதைக் கொள்ளை கொள்ளும். முல்லை நிலத்தின் காட்டாற்று வெள்ளம் மருத நிலத்தில் பாய்ந்தோடும். நெற் பயிரினைக் காக்கும் பொருட்டு கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் கால்வாய் வழி ஓடி வயலில் தேங்கி வளம் சேர்க்கும். இத்தகு வளம் நிறைந்த நிலத்திலே காஞ்சி மலர்களும் வஞ்சி மலர்களும் பூத்துக் குலுங்கி மனதைப் பரவசப்படுத்தும்.

“மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

இளைப்பாற்றும் தாய் :
வெப்பத்தைத் தாங்க இயலாத தன் குட்டியின் களைப்பை இளைப்பாற்ற எண்ணிய தாய், எங்கும் நிழல் இன்றி தன் நிழலையே அதற்குத் தந்து குட்டியை இளைப்பாற்றும் தாயின் அன்பையும் இயற்கை மூலம் அறியலாம்.

“தன்னிழல் தங்கவே தாய்மை மீதுர ”

முடிவுரை:
மேற்கூறிய தன்மையில், இராவண காவியம் என்னும் இலக்கியமானது, எழிலோவியங்களை, தன் சொல் ஓவியங்களால் தீட்டி வைத்திருக்கிறது. இவற்றைக் கற்க கற்க இன்பமேயன்றி வேறில்ைைல யன்றோ!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ் பெருங்காப்பியம்.
அ) கம்பராமாயணம்
ஆ) இராவணகாவியம்
இ) தண்ணீர்த்தேசம்
ஈ) பொன்னியின் செல்வன்
Answer:
ஆ) இராவணகாவியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 2.
இராவண காவியத்தின் பாடல்கள்
அ) 2100
ஆ) 2500
இ) 3100
ஈ) 3500
Answer:
ஈ) 3100

Question 3.
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
அ) புலவர் குழந்தை
ஆ) மு. வரதராசனார்
இ) சாலமன் பாப்பையா
ஈ) பரிமேலழகர்
Answer:
அ) புலவர் குழந்தை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 4.
யாப்பதிகாரம், தொடையதிகாரம் எழுதியவர்
அ) பெருந்தேவனார்
ஆ) வாணிதாசன்
இ) வரந்தருவார்
ஈ) புலவர் குழந்தை
Answer:
ஈ) புலவர் குழந்தை

Question 5.
“மன்னிய” – என்பதன் இலக்கணக்குறிப்பு.
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) தொழிற்பெயர்
ஈ) வியங்கோள் வினைமுற்று
Answer:
பெயரெச்சம்

Question 6.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 10
Answer:
அ. ii) ஆ. i) இ. iv) ஈ. ili)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 7.
“பூவை” – என்பது எப்பறவையைக் குறிக்கும்.
அ) காகம்
ஆ) ஆறுமணிக்குருவி
இ) நாகணவாய்ப்பறவை
ஈ) நாரை
Answer:
இ) நாகணவாய்ப்பறவை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 8.
எருதின் கொம்பினைப்போல் இருந்த காய் எது?
அ) பாலைக்காய்
ஆ) பாகற்காய்
இ) ஏலக்காய்
ஈ) வாழைக்காய்
Answer:
அ) பாலைக்காய்

Question 9.
காஞ்சியும், வஞ்சியும் பூக்கும் நிலம்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
Answer:
இ) மருதம்

Question 10.
கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆனது ……………..
அ) முக்கூடை
ஆ) முக்குழல்
இ) முத்தளிர்
ஈ) முக்கொம்பு
Answer:
ஆ) முக்குழல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 11.
இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்டவன்
அ) இராமன்
ஆ) அனுமன்
இ) இராவணன்
ஈ) குகன்
Answer:
இ) இராவணன்

Question 12.
“மரை முகம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) உருவகம்
ஈ) உரிச்சொற்றொடர்
Answer:
அ) உவமைத்தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 13.
புரைதபப் பறித்துக் காஞ்சிப் புனை நிழல் அருந்துவாரே – இதில் அமைந்துள்ள நயம்
அ) அடிமோனை
ஆ) சீர்மோனை
இ) அடிஎதுகை
ஈ) சீர்எதுகை
Answer:
அ) அடிமோனை

Question 14.
“வருமலை அளவி” – வருமலை என புலவர் எதனைக் குறிப்பிடுகிறார்.
அ) கடற்காகம்
ஆ) கடற்காளான்
இ) கடலாமை
ஈ) கடல் அலை
Answer:
ஈ) கடல் அலை

Question 15.
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
அ) சேவற்கொண்டை
ஆ) யானைத்தந்தம்
இ) மான்கொம்பு
ஈ) மயிற்தோகை
Answer:
ஆ) யானைத்தந்தம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 16.
‘போர்’ அடிக்கும் குரலைக் கேட்டு அஞ்சி ஓடுவது எது?
அ) உழைமான்
ஆ) கவரிமான்
இ) கலைமான்
ஈ) செந்நாய்
Answer:
அ) உழைமான்

Question 17.
குருளைக்குத் தன் நிழல் தந்த விலங்கு எது?
அ) உழைமான்
ஆ) செந்நாய்
இ) மந்தி
ஈ) வானரம்
Answer:
ஆ) செந்நாய்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

குறுவினா

Question 1.
இராவண காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது?
Answer:

  • இராவண காவியம் காலத்தின் விளைவு
  • ஆராய்ச்சியின் அறிகுறி
  •  புரட்சிப் பொறி

உண்மையை உணரவைக்கும் உன்னத நூல் என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்தாகும்.

Question 2.
புலவர் குழந்தை – குறிப்பு வரைக.
Answer:

  • இராவணக் காவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை ஆவார்.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
புலவர் குழந்தையின் படைப்புகளில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
Answer:

  • யாப்பதிகாரம்
  • தொடையதிகாரம்

Question 4.
குரக்கினம் மருண்டு நோக்குமால் – ஏன்?
Answer:

  • பறையின் ஒசையைப் போல் ஆரவாரமாய் விழும் அருவியோசை .
    பாடுகின்ற பைங்கிளிகள்
  • பொன் போன்ற அழகிய சிறகினை விரித்து ஆடும் மயில் இவற்றைக் கண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் குரங்கு மிரட்சியுடன் நோக்கியது என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

Question 5.
குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் யாவை? எந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்தது?
Answer:

  • முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவை குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
  • முல்லை நிலத்தில்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 6.
கோர்வை / கோவை பற்றிய சொற்பொருள் விளக்கம் தருக.
Answer:
கோ என்பது வேர்ச்சொல்.

  • கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
  • எ.கா : ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

Question 7.
மைவனம், முருகியம் – என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் யாவை?
Answer:
மலைநெல், குறிஞ்சிப்பறை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தின் காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
இராவண காவியத்தில் ஐந்து காண்டங்கள் உள்ளன. அவையாவன.

  • தமிழகக் காண்டம்,
  • இலங்கைக் காண்டம்
  • விந்தக் காண்டம்
  • பழிபுரிகாண்டம்
  • போர்க்காண்டம் என்பவையாகும்.

Question 2.
மருதநில சிறுவர்களின் மனமகிழ் செயல்பாடுகளை எடுத்தியம்புக.
Answer:
தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து, அதன் வடிவழகு கண்டு மகிழந்தனர். சிறுகழல் அணிந்த சிறார்கள் வைக்கோற்போர் குலுங்கிடும்படி ஏறி, தென்னை இளநீர்க் காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
நெய்தல் நில வண்டுகள் பற்றி எழுதுக.
Answer:
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Students can Download 9th Tamil Chapter 6.1 சிற்பக்கலை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.1 சிற்பக்கலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 1.
உங்கள் பகுதியில் உள்ள பழமையான சிற்பம் ஒன்றைப் பற்றிய செய்திக்குறிப்பை உருவாக்குக.
Answer:
திருநெல்வேலியில் இருந்து 12 கி.மீ தொலைவில், திருச்செந்தூர் சாலையில் 16 ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் தனிச்சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இரு மண்டபங்களிலும் ஆறு அடிக்கு குறையாமல், 30க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில்தான் உள்ளன. இங்குள்ள பீமன், வியாக்ரபாலகன் சிற்பம் பற்றிய ஒரு செய்தி உண்டு.

பீமனும், வியாக்ரபாலகனும் சண்டையிடுகின்றனர். தர்மராஜா நடுநிலை வகிப்பதாகவும், நடுவராக இருந்த தர்மராஜா வியாக்ரபாலகன் வென்றதாகவும் தீர்ப்பளித்தாராம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

இந்தச் செய்தியைக் குறிக்கும் வகையில், அதிசயச் சிற்பத் தொகுப்பாக அமைந்துள்ளது. பீமனும், வியாக்ரபாலகனும், தர்மராஜாவும் இருக்கும் சிற்பம் உள்ளது.

இச்சிற்பத்தில், பீமன் வீரமும், திமிரும் வெளிப்படுத்தும் முகபாவத்துடனும், வியாக்ரபாலகன் பராக்கிரமத்துடனும், தர்மராஜா அமைதியான முகபாவத்துடனும் இருப்பதாக சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் தலைசிறந்த கலைப்படைப்புகளாகவும், உணர்ச்சி ததும்பும் உயிரோவியங்களாகவும் காட்சியளிக்கின்றன.

இக்கோயிலின், இராஜகோபுரமும் கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும், 16-ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலைப் பணிக்குச் சான்றாக உள்ளது.

Question 2.
ஓவியர்/சிற்பி/இசைக் கலைஞர் ஒருவரைச் சந்தித்து அவர் கூறும் கலை நுட்பங்களையும், அனுபவங்களையும் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:

சிற்பியின் கலை நுட்பங்களும், அனுபவங்களும்

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிற்பி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சிற்பங்களை (செதுக்குதல், வடித்தல், உருவாக்கல்] ஒவ்வொரு பொருளைக் கொண்டு செய்யும் போது மேற்கூறிய மூன்று பெயர்களாலும் அழைக்கப்படுமாம். உருவாக்கும் நுட்பங்களைக் கூறமுடியுமா என்று வினவிய போது, பல வியப்புக்குரிய செய்திகளைக் கூறினார். இதோ அவர் கூறிய கருத்துகள்.
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப்பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருள்களில் இருந்து உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

கற்கள், உலோகம் (செம்பு) மரம், மண், தந்தம் போன்ற பொருட்கள் சிற்பங்கள் உருவாக்கப் பயன்படுபவையாம்.

கல், மரம் போன்றவற்றில் சிற்பம் உருவாக்கும் போது, சிற்பமாக உருவாக்க வேண்டியவற்றைச் செதுக்குவார்களாம்.

உலோகம் போன்ற பொருள்களைக் கொண்டு செய்யும் போது உருக்கி வார்ப்பார்களாம்,

ஒட்டுதல் :

அச்சுகளில் அழுத்துதல் போன்ற உத்திகளையும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவோம் என்றார். மண்ணால் செய்யும் போது உருவத்தைச் செய்தபின் சூளையில் சுடுவதாகக் குறிப்பிட்டார்.

சிற்பங்கள் மனித நாகரிகத்தையும், அதன் வளர்ச்சிக் கூறுகளையும் வெளிப்படுத்தும் சான்றுகள் என்று பெருமிதப்பட்டார்.

மேலும், கல், உலோகம், செங்கல், மரம், சுதை (சுண்ணாம்பு) மெழுகு, தந்தம் வண்ணம். கண்ட சருக்கரையும் சிற்பம் வடிக்க ஏற்றவையாம்.

ஒரு உருவத்தின் முன்புறம், பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும். ஒரு புறத்தை மட்டும் காட்டும் சிற்பங்களைப் புடைப்புச் சிற்பம் என்றும் கூறுவார்கள் என்று தெளிவுபடுத்தினார். சிற்பங்கள் சமய வெளிப்பாடாகவும் அரசாட்சி பற்றிய வெளிப்பாடாகவுமே இருந்தன என்றார்.

முன்பெல்லாம் சிற்பங்களை உருவாக்கிய மேதைகள் சிற்பக்கலை மூலம் உருவங்களுக்கு உயிரூட்டினர். இன்றோ பண்டைய மரபு முறைகள் முற்றிலும் மாறுபட்டு வருவதோடு உடலமைப்பை வெளிப்படுத்துவதாக மாறி விட்டதே என்று வருந்தினார்.
நானும் விடை பெற்றுக்கொண்டு வந்தேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ……………………..
அ) மாமல்லபுரம்
ஆ) பிள்ளையார் பட்டி
இ) திரிபுவனவீரேசுவரம்
ஈ) தாடிக்கொம்பு
Answer:
அ) மாமல்லபுரம்

Question 2.
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ………..
அ) விலங்கு உருவங்கள்
ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
இ) தெய்வ உருவங்கள்
ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
Answer:
ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

குறுவினா

Question 1.
செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • செப்புத் திருமேனிகள் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகும்.
  • சோழர் காலத்தில்தான் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவமைக்கப்பட்டன.
  • கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப் பட்டன.
  • சோழர் காலம் “செப்புத் திருமேனிகளின் பொற்காலம்” என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை அழகுற அமைந்துள்ளன.

Question 2.
நடுகல் என்றால் என்ன?
Answer:

  • நடுகல் பற்றியக் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
  • போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
  • அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப் பெறும். அவரது வீரத்தின் சிறப்பும் கூறப்பெறும்.
  • தமிழரின் தொடக்ககாலச் சிற்பக் கலைக்குச் சான்றாக இதனைக் குறிப்பிடுவர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 3.
இசைத்தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
Answer:
பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

சிறுவினா

Question 1.
முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
முழு உருவச் சிற்பம்:
உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்து இருக்கும்.

புடைப்புச் சிற்பம்:
புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 2.
நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
Answer:

  • நாயக்கர் காலச் சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படும்.
  • நாயக்கர் காலச் சிற்பங்களை, கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என்று கூறலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலை நயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.

நெடுவினா

Question 1.
தமிழ்நாட்டு சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.
Answer:
முன்னுரை:
கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன்; சிற்பம் என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். உணர்வுகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின் வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

சிற்பங்களின் கலை நயம்:
“கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கவையாய் மிளிர்கின்றன.
சிற்பங்களை கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம் மிளிர செதுக்கினர்.

புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலையில் உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள் சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது.

கோவில் கோபுரங்களில் சுதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம் வாய்ந்தவை. உருவங்கள் விழியோட்டம், புருவ நெளிவு. நக அமைப்பு என மிக மிக நுட்பமாக கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை.

சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகள்:

சிற்பக் கலையைப் பற்றிக் கூற முற்படுகின்ற பொழுது,

  • பல்லவர் காலச் சிற்பங்கள்
  • பாண்டியர் காலச் சிற்பங்கள்
  • சோழர் காலச் சிற்பங்கள்
  • விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள்
  • நாயக்கர் காலச் சிற்பங்கள்

என்றே வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கிறது என்பதை மறுக்க இயலாது.

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மூ லம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம்.

திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம், தஞ்சை பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன், குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப் பாங்கினையும் அறியலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

விஜயநகர மன்னர்கள் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தது, அவற்றில் சுதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர்.

சோழர் காலத்தை செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று சிறப்பிக்கின்றனர்.
நாயக்க மன்னர்களின் காலத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிவிக்கிறது இக்கலை.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர், சந்திரமதி, அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.

முடிவுரை:
சிற்பங்கள் என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும், ஏனைய உருவங்களைக் கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல, அவை கலைநயத்தின் சான்றாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும், அறிவின் முதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம் கடமையாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது எது …………
அ) மைல்கல்
ஆ) சுடுகல்
இ) நடுகல்
ஈ) கருங்கல்
Answer:
இ) நடுகல்

Question 2.
சிற்பிகள் …………. என சிறப்பிக்கப்பட்டனர்.
அ) கல்லோவியர்கள்
ஆ) கற்கவிஞர்கள்
இ) கற்சொல்லோவியர்கள்
ஈ) சுவரோவியர்கள்
Answer:
ஆ) கற்கவிஞர்கள்

Question 3.
கழுகுமலை கோவில் சிற்பங்கள் ………. காலத்தவையாகும்.
அ) நாயக்கர்
ஆ) பல்ல வர்
இ) பாண்டியர்
ஈ) சோழர்
Answer:
இ) பாண்டியர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 4.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூல்…………
அ) சிற்பக்கலை
ஆ) தமிழக சிற்பங்கள்
இ) சிற்பமும் சிந்தனையும்
ஈ) சிற்பச்செந்நூல்
Answer:
ஈ) சிற்பச்செந்நூல்

Question 5.
உலோகப்படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்
அ) சுவாமிமலை
ஆ) கும்பகோணம்
இ) மதுரை
i) அ-சரி, ஆ, இ – தவறு
ii) முதல் இரண்டு சரி
iii) மூன்றும் சரி
iv) மூன்றும் தவறு
Answer:
iii) மூன்றும் சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 6.
தமிழகச் சிற்பக்கலையில் இடம் பெறும் கலைக் கூறுகள்
அ) யோகக்கலை
ஆ) நாட்டியக்கலை
இ) இசைக்கலை
ஈ) பேச்சுக்கலை
i) அ, ஆ-சரி
ii) அ,ஆ – தவறு
iii) நான்கும் சரி
iv) நான்கும் தவறு
Answer:
யோகக்கலை, நாட்டியக்கலை

Question 7.
கொடும்பாளுர் மூவர் கோவில் கட்டிய மன்னன்
அ) முதலாம் பராந்தகச் சோழன்
ஆ) இரண்டாம் பராந்தகச் சோழன்
இ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
ஈ) இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
Answer:
ஆ) இரண்டாம் பராந்தகச் சோழன்.

Question 8.
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) புறப்பொருள் வெண்பாமாலை
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
அ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 9.
மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததைக் குறிப்பிடும் காப்பியம் எது?
அ) சீவகசிந்தாமணி
ஆ) மணிமேகலை
இ) நளவெண்பா
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) மணிமேகலை

Question 10.
நாயக்கர்கால சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகும் கோவில் எது?
அ) மூதூர் பெருமாள் கோவில்
ஆ) பேரூர் சிவன் கோவில்
இ) காஞ்சி கயிலாயநாதர் கோவில்
ஈ) சீனிவாசநல்லூர் இரங்கநாதர் கோவில்
Answer:
ஆ) பேரூர் சிவன்கோவில்

Question 11.
திருவரங்கக்கோவில் யாருடைய காலத்துக் கட்டடக் கலைக்குச் சான்றாகிறது.
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
ஆ) சோழர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

குறுவினா

Question 1.
சிற்பங்களை உருவாக்க எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.
Answer:
கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை (சுண்ணாம்பு) தந்தம், கண்ட சருகக்கரை, மெழுகு போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.

Question 2.
சிற்பங்கள் அமைக்கப்படும் நான்கு நிலைகள் யாவை?
Answer:

  • தெய்வ உருவங்கள்
  • இயற்கை உருவங்கள்
  • கற்பனை உருவங்கள்
  • முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் கல்லினாலும், உலோகத்தினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன.

Question 3.
பாண்டியர் கால சிற்பவேலைப்பாடுகளுக்கு சான்றாகும் இடங்கள் யாவை?
Answer:
பாண்டியர் காலத்தில் குகைக் கோயில்களில் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அவற்றுக்கு சான்றாக. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களைக் கூறலாம்.

Question 4.
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
Answer:

  • இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
  • முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என்பனவாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 5.
புடைப்புச் சிற்பங்களை எங்கு காணலாம்?
Answer:
அரண்மனைகள், கோவில்கள்.

Question 6.
கற்கவிஞர்கள் – குறிப்பு வரைக.
Answer:
சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றிக் கலை நயத்துடனும் மிகுந்த தேர்ச்சியுடனும் சிற்பிகள் சிற்பங்களைவடிவமைக்கின்றனர். அதனால், அவர்களைக் “கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கின்றனர்.

Question 7.
சோழர் காலச் சிற்பங்களின் கருவூலங்களாகத் திகழ்பைவை யாவை?
Answer:

  • முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோவில்
  • முதலாம் இராசேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம்
    இரண்டாம் இராசராசன் எழுப்பிய தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
  • இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அமைத்த திரிபுவன வீரேசுவரம் கோவில்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 8.
சோழர் காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குபவை?
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படுகின்ற பதினான்கு அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் வியப்பூட்டும் வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சோழர்காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.

Question 9.
நாயக்கர் காலச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுக்குச் சான்று தருக.
Answer:

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
  • இராமேசுவரம் பெருங்கோவில்
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

Question 10.
நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று குறிப்பிடப்படுவது எது?
Answer:
கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

சிறுவினா

Question 1.
பௌத்த – சமண சிற்பங்கள் – குறிப்பு வரைக.
Answer:
பௌத்த சமயத்தினர் புத்தரின் உருவத்தை அமர்ந்த, நின்ற, படுத்த நிலைகளில் சிற்பங்களாக படைத்து வழிபட்டனர்.

சமண மதத்தினர் அருகக் கடவுளின் உருவத்தையும், இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களையும் சிற்பங்களாக்கியுள்ளனர். இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

Question 2.
இன்றைய சிற்பக்கலை குறித்து எழுதுக?
Answer:

  • இன்று சுதை சிற்பங்களும், கல்சிற்பங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • செங்கல், பைஞ்சுதை (சிமெண்ட்) ஆகியவற்றைக் கொண்டும் கலைநயமிக்க சிற்பங்களை வடிக்கின்றனர்.
  • வெண்கலம் மற்றும் செயற்கை இழைகள் மூலமாகவும் உருவங்கள் உருவாக்கப் படுகின்றன.
  • இன்றைய சிற்பக்கலை கோவில்களைக் கடந்து, பலதுறைகளில் தன் இடத்தை நிறைவு செய்கிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

Question 3.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் பற்றி எழுதுக.
Answer:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன் குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் ஆடை, ஆபரணங்கள் கலைநயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் அமைந்துள்ளது.

Question 4.
சிற்பக்கலை வளர்ச்சியில் தமிழக அரசின் பங்கினை எடுத்தியம்புக.
Answer:
தமிழக அரசு, சிற்பக் கலைஞர்களைப் பரிசளித்துப் பாராட்டிச் சிற்பக்கலையை வளர்த்து

வருகிறது. மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது. அக்கல்லூரியில் இருந்து ஆண்டுதோறும் சிற்பக் கலைஞர்கள் பலர் உருவாகின்றனர்.

சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னயிைலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பக்கலையைப் பயிலலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 சிற்பக்கலை

இக்கலைத்துறையில் மிகுதியான வேலைவாய்ப்புகள் உள்ளன. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் “சிற்பச்செந்நூல்” என்ற நூலை வெளியிட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 7 State and Society in Medieval India Text Book Back Questions and Answers, Important Questions, Notes.

Tamilnadu Samacheer Kalvi 9th Social Science Solutions History Chapter 7 State and Society in Medieval India

Samacheer Kalvi 9th Social Science State and Society in Medieval India Text Book Back Questions and Answers

I. Choose the correct answer:

Question 1.
_______ was the second stronghold of Ala-ud-din Khalji’s expanding Kingdom.
(a) Dauladabad
(b) Delhi
(c) Madurai
(d) Bidar
Answer:
(a)Dauladabad

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 2.
The Deccan Sultanates were conquered by _______
(a) Ala-ud-din Khilji
(b) Ala-ud-in Bhaman- shah
(c) Aurangzeb
(d) Malik Kafur
Answer:
(c) Aurangzeb

Question 3.
The establishment of ______ empire changed the administrative and institutional structure of south India.
(a) Bahmani
(b) Vijayanagar
(c) Mughal
(d) Nayak
Answer:
(b) Vijayanagar

Question 4.
Krishnadeva Raya was a contemporary of ____________
(a) Babur
(b) Humayun
(c) Akbar
(d) Shershah
Answer:
(a) Babur

II. Fill in the blanks:

  1. ______ were European who arrived on the west coast of India.
  2. The combined forces of the five Deccan Sultanates defeated Vijayanagar army in 1565 A.D (C.E) at the battle of ______.
  3. Vijayanagara evolved as a _______
  4. The tempo of urbanization incresed during ______ period.
  5. _______ was the enterprising period in the history of Tamilnadu

Answer:

  1. Portugues
  2. Talikota
  3. Militaristic state
  4. Vijayanagar
  5. The Chola period

III. Find out the correct statement

Question 1.
(i) The establishment of the Vijayanagar Kingdom witnessed the most momentous development in the history of South India.
(ii) The Saluva dynasty ruled for a longer period.
(iii) The rulers of Vijayanagar a had smooth relations with the Bahmani Sultanate.
(iv) Rajput kingdoms attracted migrants from Persia and Arabia.
Answer:
(i) is correct

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 2.
(i) The Nayak Kingdom came up in Senji.
(ii) The appointment of Telugu Nayaks resulted in the migration of Telugu-speaking people from Madurai.
(iii) Mughal Empire started declining from the time of Jahangir.
(iv) The Europeans came to India in search of slaves.
Answer:
(i) is correct

Question 3.
(i) Mythical geneologies were collected by Col. Mackenzie.
(ii) Indigo was the most important beverage crop in India.
(iii) Mahmud Gawan was the minister in Alauddin Khalji’s kingdom.
(iv) The Portuguese built their first fort in Goa.
Answer:
(i) is correct

Question 4.
Assertion (A): India was an integral part of maritime trade, extending from China in the east to Africa in the west.
Reason (R): Geographical location of India in the middle of Indian Ocean.
(a) (i) A is correct; R explains about A
(b) (ii) A is wrong; R is correct .
(c) (iii) A and R are wrong
(d) (iv) A is correct; R does not explains about A.
Answer:
(a) (i) A is correct; R explains about A

Question 5.
(i) Gold images of great beauty and artistry were made by Cholas.
(ii) The best example for Chola architecture is Siva as Nataraja performing the cosmic dance.
(a) (i) is correct (ii) is wrong
(b) Both (i) and (ii) is correct
(c) Both (i) and (ii) are wrong
(d) (i) is wrong, (ii) is correct
Answer:
(d) (i) is wrong, (ii) is correct

IV. Match the following;

  1. Portuguese – (i) Bengal
  2. Tansen – (ii) Kottam
  3. Sericulture – (iii) Court of Akbar
  4. Angkorwat – (iv) Goa
  5. District – (v) Cambodia

Answer:

  1. – (iv)
  2. – (iii)
  3. – (i)
  4. – (v)
  5. – (ii)

V. Answer the following briefly:

Question 1.
Write about the military expeditions of Malik Kafur.
Answer:
Alauddin Khalji’s slave and commander, Malik Kafur, was sent on military expeditions further south in the first decade of the 1300s A.D. (C.E.).

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 2.
Who founded the Vijayanagar Kingdom? Mention the dynasties that ruled over the kingdom.
Answer:

  1. Vijayanagar kingdom was established by Harihara and Bukka, two brothers.
  2. They were the first rulers of the Sangama dynasty.
  3. Sangama dynasty was followed by the Saluva dynasty.
  4. The Tuluva dynasty ruled under Krishnadeva Raya.

Question 3.
Mention the two natural advantages that India had in cotton weaving.
Answer:
India had two natural advantages in cotton weaving. The first was that cotton grew in almost all parts of India, so that the basic raw material was easily available. Second, the technology of producing a permanent colour on cotton using vegetable dyes was known from very early times in India.

Question 4.
What were the factors which facilitated urbanization?
Answer:

  1. The cities and towns fulfilled diverse and overlapping roles in the economy.
  2. The large cities were centres of manufacturing and marketing, banking and financial services.
  3. They were usually located at the intersection of an extensive network of roads.
  4. The roads connected them to other parts of the country.
  5. Smaller towns were marketing centres in local trade connecting the immediate rural hinterland.
  6. Cities also served as political and administrative centres.
  7. Major pilgrimage centres like Varanasi also grew into cities, because of the regular inflow of pilgrims.
  8. All these factors together contributed to urbanization.

Question 5.
What is sericulture?
Answer:

  1. Silk production by breeding the mulberry silkworm is Sericulture.
  2. Sericulture was introduced in the 14th and 15th centuries.
  3. Bengal had become one of the largest silk-producing regions in the world.

VI. Answer all the questions given under each caption.

Question 1.
The arrival of the Europeans
(a) Who controlled the spice trade from India?
What enabled the Portuguese to have control over maritime trade over the entire region?
(c) How were the trading activities of the Europeans carried on in India?
(d) Mention the enclaves of the Dutch, the English, the French and the Danes in India.
Answer:
(a) The spice trade from India was controlled by Muslims up to Alexandria.
(b) Because of their naval superiority, the Portuguese were able to conquer many ports from east Africa up to Malacca, and could effectively control the maritime trade.
(c) The trade activity of the Emperor were carried on through respective East India
Companies.
(d) The Dutch were in Pulicat (apd later Nagapatnam), the English in Madras, the French in Pondicherry and the Danes in Tarangampadi.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

VII. Answer the following in detail:

Question 1.
Discuss the political changes during 1526-1707 A.D. (C.E.),
Answer:

  1. The Mughal empire was founded by Babur in 1526 A.D. (C.E.) after he defeated Ibrahim Lodi at Panipat.
  2. The first six Mughal emperors are referred to as the ‘Great Mughals’
  3. Aurangzeb was the last of the great Mughals.
  4. Akbar consolidated the Mughal empire through conquests and through a policy of conciliation with the Religious based kingdoms of Rajasthan.
  5. The Mughal empire though began to disintegrate after Aurangzeb, continued to exist nominally till 1857 A.D. (C.E.)
  6. A new power centre rose in Maharashtra in the seventeenth century, and the Marathas under the leadership of Shivaji seriously undermined the authority of the Mughals in western India.
  7. At its height, the empire stretched over most of the Indian sub-continent.
  8. Only the south-western region of Kerala and southern Tamilnadu were not directly under the Mughal rule.

Question 2.
Explain the commercial developments in Medieval India
Answer:

  • The large manufacturing sector essentially produced goods for exchange.
  • India had an extensive network of trade for marketing the goods.
  • At the next level, the producer was de-linked from marketing, the trade was undertaken by merchant intermediaries.
  • Big cities were usually major commercial centres with bazzars and shops.
  • Major parts were the nodal points in international, maritime trade.
  • Maritime trade across the Indian ocean, extending from China in the East to Africa in the West had flourished for many centuries.
  • Merchants operated at different levels.
  • Trade on a large scale could function only with the availability of financial and banking services.
  • The European trading companies realized that they could not function in India without the services of the rich and influential merchants. They entered into contracts.
  • The Indian merchants were under contract to the Europeans to supply textiles and other goods.
  • Political disturbances disrupted economic activity.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 3.
“Chola Period was an enterprising period In the history of Tamil Nadu” – Elucidate.
Answer:

  1. The Chola dynasty was one of the largest ruling dynasties in the history of South India,
  2. The heartland of the Cholas was the fertile valley of the Kaveri river.
  3. Under Rajaraja Chola I and his successor Rajendra Chola I, Rajadhi Raja Chola, Veera Rajendra Chola, and Kulottunga Chola I the dynasty became a military, economic, and cultural power in South Asia and Southeast Asia.
  4. According to Tamil tradition, the Chola country comprised the region that includes the modem day namely Tiruchirapalli, Thiruvarur, Nagapattinam, Ariyalur, Perembalour, Pudukottai, and Thanjavur in Tamil Nadu.
  5. After Rajendra Chola capital got shifted to Gangai Konda Chola Puram.
  6. In the age of the Cholas, the whole of south India was for the first time brought under a single government.
  7. The Chola dynasty had a professional military.
  8. Land revenue and trade tax were the main sources of income.
  9. In the society of the Cholas, the guild was one of the most significant institutions in South India.
  10. They excelled in foreign trade and maritime activity, extending their influence overseas to China and South East Asia.
  11. Most of the canals of Kaveri belong to this period.
  12. Under the Cholas, the Tamil country reached new heights of excellence in art, religion, and literature.
  13. Architectural Historian James Fergusson says that the Chola artists conceived like giants and finished like jewellers. Therefore, we can say that the Chola period was an enterprising period in the history of Tamilnadu.

Activities:

Question 1.
On the outline map of India mark the important places of medieval India.
Answer:

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Assignment:

Question 2.
Arrange a debate in the class on the advantages and disadvantages of urbanization.
Answer:
Advantages:

  1. Economic Improvement – The production in various industrial sectors like cement, iron and steel, textile, fertilizers computing etc. is helping in the economic growth of the country. Export increases and in turn Foreign Exchange increases.
  2. Educational facilities – More schools, colleges, and universities are established in cities to train and develop human resources. Varieties of educational choices are available offering students a wide choice for their future careers.
  3. Development in tourist industries: People from foreign countries are towns having better transport facilities. Tourism is a good source of foreign currency for a country
  4. Social integration – People of many castes, groups, and religions live and work together in cities, which creates better understanding and harmony and helps breakdown social and cultural barriers.
  5. Improvement in Science, Culture etc. Urban places are the meeting point of all good cultures of various localities. Science and technology developments take place in urban places improving society SS a whole.
  6. Living conditions – Cities are often more efficient than in rural areas. Less effort is needed to supply basic amenities such as fresh water and electricity. Research and recycling programs are possible only in cities. In most cities, flats are prevalent In flats many people can be accommodated within a small land area.

Disadvantages of Urbanization:

  1. Destruction of Natural Habitats of Flora and Fauna- In the making of an urban area, a lot of forest areas are destroyed which otherwise would have been natural habitats to many birds and animals.
  2. Crime: Due to urbanization many people benefit but not all get the opportunities which result in those people doing illegal things like robbery, kidnapping, murder, and so on and thus one can say that urbanization is the party behind the increasing crime rates in big cities.
  3. Slums: The rapid inflows of rural population to urban places give rise to the housing problem and thus slums are developed in these places.
  4. Poor living conditions – Crowding and lack of sanitation. This often contributes to the outbreak of diseases. Utilities such as water, electricity, and sewage disposal are also lacking in such areas.
  5. Unemployment-Since the number of people aspiring for jobs is more than jobs available, unemployment is a natural outcome of the situation. Unemployment and poverty force people to engage in anti-social activities.
  6. Air pollution-Factories and automobiles are the most visible symbols of urbanization. Due to emissions of harmful gases and smoke from factories and vehicles, air pollution results. The high amount of suspended particles in air, particularly in cities, contribute to allergies and respiratory problems. It will create a health hazard.
  7. Shortage of workers: The decrease in rural population affects agricultural production due to the shortage of workers in rural areas.

Samacheer Kalvi 9th Social Science State and Society in Medieval India Additional Important Questions and Answers

I. Choose the correct answer:

Question 1.
Vascodagama reached the west-coast of India in ____________
(a) 1490
(b) 1560
(c) 1498
(d) 1500
Answer:
(c) 1498

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 2.
Arab Muslim merchants had been trading in the ports of the west coast, especially ____________
(a) Tamil Nadu
(b) Karnataka
(c) Kerala
(d) Goal
Answer:

Question 3.
In the south, a Sultanate was established in ____________
(a) Tuticorin
(b) Nagapattinam
(c) Madurai
(d) Palani
Answer:
(c) Madurai

Question 4.
Sailendra Kingdom existed in ____________
(a) Ceylon
(b) Kedah
(c) Indonesia
(d) China
Answer:
(c) Indonesia

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 5.
The Kakatiyas ruled from ____________
(a) Devagiri
(b) Belur
(c) Warangal
(d) Bijapur
Answer:
(c) Warangal

Question 6.
Vijayanagara was founded on the banks of the river ____________
(a) Kaveri
(b) Krishna
(c) Tungabhadra
(d) Narmada
Answer:
(c) Tungabhadra

Question 7.
Nayakas were _________ officers
(a) 1560
(b) 1512
(c) 1565
(d) 1525
Answer:
(c) 1565

Question 8.
The Mughal empire was founded by _______
(a) Shahjahan
(b) Humayun
(C) Babur
(d) Aurangzeb
Answer:
(c)Babur

Question 9.
‘Navakas’ were officers ____________
(a) Administritive
(b) Special
(C) Military
(d) Police
Answer:
(c)Military

Question 10.
When the Portuguese arrived in Kerala took roots.
(a) Buddhism
(b) Islam
(C) Christianity
(d) Jainism
Answer:
(C) Christianity

II. Find out the correct statement

Question 1.
(i) Darasuram Temple was built by the Pandya rulers.
(ii) Under the Mughals, a large volume of literature was produced, especially in Persian and Urdu.
(iii) Tansen lived in the court of Krishnadeva Raya.
(iv) Telugu literature flourished under royal support.
Answer:
(ii) and (iv) are correct

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 2.
(i) The state was indifferent to water resources.
(ii) Lift irrigation was unknown to Indians.
(iii) Cholas built a network of canals.
(iv) Muhammad bin Tughlaq built the biggest network of canals in the Delhi area.
Answer:
(iii) is correct

Question 3.
(i) Sugarcane was an important food crop.
(ii) The two new crops introduced by the Europeans in India were Wheat and Rice.
(iii) Rural population were known to abandon a settlement and move to a new location.
(iv) The peasants lived only at a very basic level of subsistence.
Answer:
(iii) and (iv) are correct

Question 4.
Assertion (A): Specialized production by skilled craftsmen was required for an external market.
Reason (R): Craftsmen worked in larger manufacturing units called Karkhanas.
(a) A is correct; R explains about A
(b) A is wrong; R is correct
(c) A and R are wrong
(d) A is correct; R does not explain about A
Answer:
(a) A is correct; A explains about A

Question 5.
Statement (i): Non-agricultural production refers to both processed agricultural products and craft production.
Statement (ii): Processed agricultural products are maize, tobacco, Papaya, pineapple,
(a) (i) is correct (ii) is wrong
(b) (i) and (ii) are wrong
(c) (i) and (ii) are correct
(d) (i) is wrong, (ii) is correct
Answer:
(a) (i) is correct (ii) wrong

III. Fill in the blanks:

  1. Military campaigns to the South were undertaken by ___________
  2. The great statesman and loyal minister under the Bahmani Kingdom was ___________
  3. Rajendra’s grandson was ___________
  4. Magnificent Hindu temples are found at in ___________ Combodia
  5. The Hoysala kingdom shifted its capital to ___________
  6. The dynasty ruled Vijayanagar ___________ for nearly one and a half centuries.
  7. The Mughal empire started to disintegrate after ___________
  8. The spice trade from India was controlled by Muslims up to ___________
  9. The Portuguese were able to conquer many ports from east Africa up to ___________
  10. The Cholas introduced innovations-in ___________ administration.
  11. Al beruni, Ibn Batuta, and Ferishta are among the best known of the Muslim ___________
  12. Under Vijayanagar Empire ___________ supplied the manpower for the army.
  13. The appointment of ___________ resulted in the migration of Telugu-speaking people from the north. rulers.
    system.
  14. After Aurangabad, the viceroys of many Mughal provinces became ___________ ruler.
  15. Valanki and Idankai were the division of the ___________ System
  16. Robert de nobil was a ___________
  17. The Mughal ___________ were single Works to be kept in albums.
  18. The intricately carved lofty towers or gopurams at the entrances to temples were contributed by the _____
  19. Venkatamakhi codified the ___________
  20. Textile is a products ___________

Answer:

  1. Alauddin Khalji
  2. Mahmud Gawan
  3. Kulottunga I
  4. Angkor Wat
  5. Halebidu
  6. Sangama
  7. Aurangzeb
  8. Alexandria
  9. Malacca
  10. Revenue
  11. Historians
  12. Palayakkarar
  13. Telugu Nayakas
  14. Independent
  15. Caste
  16. Jesuit/Scholar
  17. miniatures
  18. Vijayanagar rulers
  19. Ragas of Carnatic music
  20. Processed agricultural

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

IV. Match the following

(a) Govindha Dikshidar – (i) Guild
(b) Gujarati merchants – (ii) Muslin
(c) Manigramam – (iii) Major Port
(d) Masulipatnam – (iv) Venkatamakhi
(e) Indian Cloth – (v) the Persian Gulf
Answer:
(a) – iv
(b) – v
(c) – i
(d) – iii
(e) – ii

V. Answer all questions given under each heading

Question 1.
North India – The Advent of Islam
(a) Who established Muslim rule in Delhi?
Answer:
Muslim rule was established in Delhi at the end of the 12th century by Muhammad Ghori.

(b) When was the impact of Muslim rule felt?
Answer:
The impact of Muslim rule was felt during the reign of Alauddin Khalji.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

(c) Who was Alauddin Khalji’s commander?
Answer:
Alauddin Khalji’s slave and the commander were Malik Kafur.

(d) Where was a Sultanate established in the South?
Answer:
A Sultanate was established in Madurai.

Question 2.
Bahmani Kingdom
(a) Who set up the Bahmani Sultanate?
Answer:
Ala-ud-din Bahman Shah set up the Bahmani Sultanate in 1347 A.D.

(b) Who was Mahmud Gawan?
Answer:
Mahmud Gawan was a great statesman and loyal minister of the Bahmani kingdom

(c) Name the five Sultanates in the Deccan.
Answer:
Bijapur, Golkonda, Ahmednagar, Berar, and Bidar were the five Sultanates in the Deccan.

(d) Who conquered them?
Answer:
The Deccan Sultanates were conquered by Aurangzeb in the 1660s and the entire region, as far south as Madras (Chennai) became a part of the Mughal empire.

Question 3.
The Chola Empire in the South
(a) By whom was territorial expansion done under Cholas?
Answer:
The territorial expansion of the Chola empire began under Rajaraja I.

(b) Where did Rajendra I send naval expeditions?
Answer:
Rajendra I sent naval expeditions against the Sailendra Kingdom of Sri Vijaya (in Indonesia), Kadaram (Kedah), and Ceylon.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

(c) With whom did the Cholas have maritime trade?
Answer:
Maritime trade with south-east Asia and China expanded greatly during the Chola period.

(d) How was the empire further consolidated?
Answer:
The empire was further consolidated through marriage with the eastern Chalukyas under Rajendra’s grandson Kulottunga I, and extended up to the border of Orissa.

Question 4.
Vijayanagar Kingdom

(a) Who established the Vijayanagar Kingdom?
Answer:
The Vijayanagar kingdom was established by Harihara and Bukka, two brothers.

(b) Where did they have their capital?
Answer:
They founded a new capital city on the southern banks of Tungabhadra which they named Vijayanagara (city of victory).

(c) Which dynasty followed the Sangama dynasty?
Answer:
Saluva dynasty followed the Sangama dynasty.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

(d) Mention the ablest ruler of the Tuluva dynasty?
Answer:
The ablest ruler of the Tuluva dynasty was Krishnadeva Raya.

Question 5.
The Mughals
(a) Name the Great Mughals.
Answer:
The Great Mughals were Babur, Humayun, Akbar, Jahangir, Shah Jahan, and Aurangzeb.

(b) Who consolidated the Mughal’s empire?
Answer:
Akbar consolidated the Mughal empire through conquests and through a policy of conciliation with the religious-based kingdoms of Rajasthan.

(c) Mention the new power which rose in Maharashtra at this time.
Answer:
A new power centre rose in Maharashtra in the seventeenth century, and the Marathas under the leadership of Shivaji fought against the Mughals.

(d) Which places were not directly under the Mughal rule in the south?
Answer:
Only the south-western region of Kerala and southern Tamilnadu were not directly under the Mughal rule.

Question 6.
Impact on Policy
(a) What was the basic unit of local administration under the Cholas?
Answer:
The basic unit of local administration was the village (ur), followed by the sub-region (Nadu) and district (kottam) under the Cholas.

(b) who did the Muslim kingdoms in Delhi attract?
Answer:
Muslim kingdoms in Delhi, as well as in the Deccan, also attracted migrants from Persia and Arabia who moved to India.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

(c) Mention the three major Nayaka Kingdoms?
Answer:
The three major Nayaka kingdoms were in Madurai, Thanjavur and Gingee existed between 1500 AD and 1550 A.D.

(d) What was culminated by the arrival of the Europeans in India?
Answer:
The arrival of the Europeans in India ultimately culminated in the establishment of colonial rule in India under the British.

Question 7.
Impact on Culture
(a) Give one example of the monumental architecture of the Cholas.
Answer:
The monumental architecture of the Cholas is visible in the great temple of Thanjavur, Gangai- Konda-Chola Puram, and Darasuram, to name only a few.

(b) Mention a few monuments left behind by the Mughals?
Answer:
The MughalsTeft behind numerous monuments, in addition to constructing entire cities like Shahjahanabad (Delhi) and Fatehpur Sikri, gardens, mosques, and forts.

(c) What was added by the Vijayanagar kingdom in temple construction?
Answer:
The intricately carved lofty towers or gopurams at the entrance to temples were all added during the Vijayanagar period.

(d) Mention the new style of Tamil literature which emerged during the Vijayanagar Kingdom.
Answer:
A new style of Tamil literature called Prabandham emerged during this period.

Question 8.
Agriculture
(a) What was the source of water for agriculture?
Answer:
Both in the north and the south, agriculture depended heavily on irrigation. Canals and wells added to the water sources in addition to rainfall and rivers.

(b) Who created the biggest network of canals in the 14th century?
Answer:
Firuzshah Tughluq created the biggest network of canals in the fourteenth century in the Delhi area.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

(c) What was used in the north to lift water from wells?
Answer:
Persian wheel was used for lifting water from wells in the north

(d) Who created a network of canals in the south of India?
Answer:
The Cholas had created a network of canals for irrigation connecting the tributaries of Kaveri.

Question 9.
Crops in India
(a) What were the food grains produced in India?
Answer:
A variety of food grains like wheat, rice, and millets were produced apart from lentils and oilseeds.

(b) Name the commercial crops.
Answer:
The commercial crops grown were sugarcane, cotton, and indigo.

(c) Mention the two new crops introduced by the Europeans in India.
Answer:
Maize and tobacco were introduced by the Europeans.

(d) What is Sericulture?
Answer
Sericulture means silk production by breeding the mulberry silkworm.

Question 10.
Commerce
(a) Mention the Major ports in the Asiatic trade in the seventeenth century.
Answer:
In the seventeenth century, Surat in Gujarat, Masulipatnam in the Golkonda kingdom, Chittagong in Bengal, Pulicat (Pazhaverkadu) and Nagapatnam on the Coromandel Coast, and Calicut in Kerala were all major ports in Asiatic trade.

(b) What were the major export of India?
Answer:
The major exports of India were textiles, pepper, precious and semi-precious gems – especially diamonds.

(c) What was imported from China?
Answer:
Silk, Chinese ceramics, gold, spices, aromatic woods and camphor were major imports from China to India.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

(d) What were used to transfer money from one city to another?
Answer:
Bankers and money changers operated in all the big cities, and bills of exchange or hundis (similar to cheques or bank drafts) were used to transfer money from one city to another.

VI. Answer the following briefly:

Question 1.
When was the Mughal rule consolidated in India?
Answer:

  1. The consolidation of Muslim rule under the Mughals in the north, beginning in 1526 A.D. (C.E.) with the defeat of the Ibrahim Lodi by Babur.
  2. At its height, the Mughal empire stretched from Kabul to Gujarat to Bengal, from Kashmir to south India.

Question 2.
Write a note on Alauddin Khalji.
Answer:

  1. The impact of Muslim rule was felt during the reign of Alauddin Khalji.
  2. He sent military campaigns to the south under his commander Malik Kafur.
  3. The primary objective was to plunder the wealth, rather than to expand his territory.
  4. Devagiri (near Aurangabad) was captured by Alauddin Khalji. He renamed it Daulatabad.
  5. It was the second stronghold of his growing kingdom.

Question 3.
“Gangaiyum Kadaramum konda Chelan”. Who was he?
Answer:

  1. Rajendra I earned the title “the Chola who had conquered the Ganga and Kadaram”.
  2. He sent naval expeditions against the Sailendra Kingdom of Sri Vijaya (in Indonesia), Kadaram (Kedah) and Ceylon.
  3. So he was given the title Gangaiyum Kadaramum konda Cholan.

Question 4.
Mention the several power centres which came up after the full of the Chola empire.
Answer:

  1. Further to the South, the Pandya kings again sought to regain the glory they had lost under the Cholas.
  2. Many brilliant Pandya kings like Jatavarman Sundara Pandyan ruled at the end of the 13th, century.
  3. Further to the north was the Hoysala kingdom, with its capital at Belur.
  4. The Kakatiyas ruled from Warangal (Telangana) while the Yadavas ruled in Devagiri.
  5. These states did not exist in peaceful cooperation, and the region was beset by many internal wars and conflicts.

Question 5.
Explain the battle of Talikota.
Answer:

  1. The rulers of Vijayanagar were almost continuously at war with the Bahmani sultanate as well as with the Religous based kingdoms of Kondavidu and Orissa.
  2. Finally, the combined forces of the five Deccani Sultanates defeated Vijayanagar in 1565 A.D. at the Battle of Talikota.
  3. The empire finally withered away in the middle of the seventeenth century.

Question 6.
Write about the Muslim historians.
Answer:

  1. A notable development was the profusion of contemporary historical accounts of the Muslim Sultanates by Arab and Persian historians.
  2. Al-beruni, Ibn Batuta, and Ferishta are among the best known Muslim historians.
  3. These historians provide valuable information about the rulers and events of the medieval period.
  4. They also provide an alternate historical point of view of Islamic rule in India as seen through the eyes of Muslim writers.

Question 7.
How did Vijayanagar manage to get resources for its militaristic state?
Answer:

  1. This empire needed two kinds of resources to feed its military establishment – revenue and men.
  2. This was achieved through re-organizing the administration of the conquered territories, especially in the Tamil region.
  3. Military officers, known as ‘nayakas’, were appointed as chiefs of various localities in Tamilnadu.
  4. It received land grants from the emperor.
  5. There were also lesser military leaders known as palayakkarar who essentially supplied the manpower for the army.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 8.
How did Akbar consolidate the Mughal empire?
Answer:

  1. He reversed the policy of discriminatory measures against the Hindus.
  2. He employed Hindu administrators like Todar Mai in key positions of authority.
  3. These initiatives earned the emperor the loyalty and trust of the majority community.
  4. The entire region was brought under a uniform administrative structure.
  5. Political stability increased the economy and trade.

Question 9.
What led to a significant expansion of textile production in India?
Answer:

  1. The Europeans came to India primarily in search of spices.
  2. But soon there was an explosion in the demand for Indian textiles in the European markets, often referred to as the ‘Indian craze’.
  3. This led to a significant expansion of textile production in India.

Question 10.
Explain the terms Valankai and Idankai?
Answer:

  1. In South India, groups of castes were vertically divided into the right (valankai) and left hand (idankai) castes.
  2. Each group included castes at different levels in the caste hierarchy, like merchants, land-owning castes and professional castes.
  3. This division was found throughout south India, but we have more comprehensive information on the right and left-hand castes in the Tamil region.

Question 11.
Who were Jesuit missionaries?
Answer:

  1. Jesuit missionaries were active especially among the fishing communities on the Pandyan coast.
  2. The best known among the Jesuit missionaries was St Francis Xavier who was instrumental in making the fishing community take to Christianity in the Tuticorin region.
  3. Another notable Jesuit was Roberto de Nobili, a scholar, who was based in Madurai.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 12.
How was the economic condition of the peasantry during the Medieval period of India?
Answer:

  1. The economic condition of the bulk of the peasantry was poor.
  2. They generally lived only at a very basic level of subsistence.
  3. Poor peasants sold themselves and their families into slavery.
  4. The shipping lists of the Dutch East India Company regularly mention men and women slaves who were transported to the spice-producing islands of Indonesia to work on the plantations.

Question 13.
What was Karkhanas?
Answer:

  1. Larger manufacturing units, employing many craftsmen, are called Karkhanas.
  2. Karkhanas were up under Mughal State.

Question 14.
Why did the European trading companies enter into contracts with the Indian merchant?
Answer:

  1. The European trading companies realized that they could not function in India without the services of the rich and influential merchants.
  2. So they entered into contracts with them to supply the goods that they wanted and also to lift the imports which they brought in from Europe.

Question 15.
In South India, especially the Tamil regions, urbanization went hand in hand with temples how?
Answer:

  1. Temples were large economic enterprises requiring a variety of goods and services to function.
  2. They needed and employed a large number of people to man the religious services, the kitchens and for other work.
  3. As a result, temple towns became marketing centres.
  4. The pace of urbanization increased during the Vijayanagar period when there was a great increase in the construction of temples across Tamilnadu.

Question 16.
Mention the Holy Roman Empire.
Answer:

  1. The newly established Holy Roman Empire represented Christianity and Christendom and, hence, it was designated holy.
  2. The emperor was supposed to be a representative of God on earth like the Pope. The emperor dealt with political matters, while the Pope dealt with the spiritual.
  3. Charlemagne, the king of Franks was the first Holy Roman Emperor.
  4. He was a contemporary of Pallava king Nandivarman II and Pratihara ruler Nagabatta

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

Question 17.
Why was the Great Magna Carta signed by King John?
Answer:

  1. The nobles in England forced King John II to sign a Charter of Liberty in 1215 A.D. It is Magna Carta or the Great Charter.
  2. This Charter contained a promise that the king would respect certain liberties of the nobles and the people of England.
  3. The theory of the supremacy of the ruler which prevailed in the Holy Roman Empire was not accepted in England.
  4. King John of England was a contemporary of Sultan Iltutmish in India.

VII. Answer the following in detail:

Question 1.
Write a note on the following:
(a) Persian wheel
(b) Fatehpur Sikri
(c) Darasuram Temple
(d) Hampi
Answer:
(a) Persian wheel:

  1. The Persian wheel is a mechanical water lifting device.
  2. It is usually operated by draught animals like bullocks, buffaloes or camels.
  3. It is used to lift water from water sources typically open wells.
  4. Since it was used in Persia got the name Persian wheel.

(b) Fatehpur Sikri:

  1. Fatehpur Sikri is a town in the Agra District in Uttar Pradesh.
  2. The city was founded as the Capital of Mughal empire in 1571 by Emperor Akbar.
  3. Fatehpur Sikri means the city of victory.
  4. The Buland Darwaza was built in honour of his success
  5. The city was built massively and preferably with red sandstone.
  6. The city’s architecture reflects both the Hindu and Muslim form of domestic architecture popular in India at that time. Buland Darwaza, Jama masjid, Tomb of Salim Chirti, Panch Mahal, Naubat-khana, Birbal’s House, Hiran Minar and other buildings are seen here.

(c) Darasuram Temple:

  1. Darasuram is a panchayat town, located 3 kilometers from Kumbakonam in Thanjavur District, Tamilnadu.
  2. The town is known for the Airavateswara temple constructed by Raja Raja Chola II in the 12th century A.D.
  3. The temple is recognised UNESCO World Heritage Monument.
  4. Darasuram temple is a storehouse of art and architecture.
  5. The vimana is 85 feet high.
  6. With heavily ornamented pillars accurate in detail and richly sculpted walls, the Airavateswara at Darasuram is a classic example of Chola art and architecture.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 State and Society in Medieval India

(d) Hampi:

  1. There are group of monuments in Hampi.
  2. It is a UNESCO World Heritage site located in east-central Karnataka
  3. It became the centre of the Hindu Vijayanagara Empire capital in the 14th century.
  4. Located in Karnataka near the modem – era city of Hosapete, Hampi’s rains are spread over 4,100 hectares.
  5. Hampi continues to be an important religious centre, housing the Virupaksha temple, an active Adhi Sankara linked monastery and various monuments belonging to the old city.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல்

Students can Download 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 1.
பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
அ) பெண்ணடிமை போகவேண்டும்; பெண், கல்வி பெற வேண்டும். பெண்கள் படித்தால் தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.

ஆ) நமது முன்சந்ததியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
Answer:
இடைச்சொற்கள் :

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 1

Question 2.
உம், ஓ, ஏ, தான் மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச் சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர்களை உருவாக்குக.
Answer:
1. உம் : வீரர்களும் போற்றும் வீரன்.
2. ஓ : பூங்கொடியோ மலர்க்கொடியோ இப்படத்தை வரையுங்கள்.
3. ஏ : தேவி நடந்தே வீட்டுக்கு வந்தாள்.
தான் : இனியா நான்தான் ஆடுவேன் என்றாள்
5. மட்டும் : உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்.
ஆவது : இன்றாவது மழை வருமா?
7. கூட : தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை .
8. ஆ : புகழேந்தி பாடினானா?
9. ஆம் : தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்.
10. ஆகிய : “ஆகிய” என்னும் இடைச்சொல் தற்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 3.
பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.
அ) மணற்கேணி………… போல் விளங்கும். நூல்………… உறுதுணை………… இருக்கிறது.
ஆ) பெண்க………… படிக்க வைக்காத காலத்தில்………… பெண் இனத்…………  பெருமை சேர்க்கும் படி…………  நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர…………  வந்தார்கள்.
இ) மக்க…………  மனங்க…………  உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
Asnwer:
அ) மணற்கேணியைப் போல் விளங்கும். நூல்கள் உறுதுணையாக இருக்கிறது.
ஆ) பெண்களைப் படிக்க வைக்காத காலத்தில்தான் பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள்.
இ) மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.

Question 4.
இணைத்து எழுதிப் பாருங்கள் :
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 2
Asnwer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 3
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 4

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 5.
பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.
அ) ………………….. பெரும் பொதுக்கூட்டம் [கடி / மா]
ஆ) ………………….. விடுதும் [உறு/ கடி)
இ) ………………….. நுதல் [வாள் / தவ]
ஈ) ………………….. சிறந்தது [சால் / மழ]
உ) …………………..  மனை [கடி / தட]
Answer:
அ) மா பெரும் பொதுக்கூட்டம் [கடி / மா]
ஆ) கடி விடுதும் [உறு/ கடி)
இ) வாள் நுதல் [வாள் / தவ]
ஈ) சால சிறந்தது [சால் / மழ] உ]
கடி மனை [கடி / தட]

சிந்தனை வினா

Question 1.
தான் என்னும் இடைச் சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
Answer:

  • தான் என்னும் இடைச்சொல்லை அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம்.
  • எந்தச் சொல்லுடன் வருகின்றதோ, அச்சொல்லை முதன்மைப்படுத்தும் வகையில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம்.
  • சான்று: நிர்மலாதான் பாடினாள்.

Question 2.
அவர்களுக்குப் பரிசு தருவேன் – இத்தொடரில் ‘ஆ’ என்னும் இடைச் சொல்லைச் சேர்த்து வினாக்களை
அமைக்க.
Answer:

  • அவர்களுக்கா பரிசு தருவேன்?
  • அவர்களுக்குப் பரிசு தருவேனா?

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 3.
செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருள்களில் இடம் பெறுகின்றன?
Answer:

  • உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்றும் அவை,
  • ஒரு சொல் பல பொருளுக்கு உரியது.
  • பல சொல் ஒரு பொருளுக்கு உரியது என இடம் பெறும்.

Question 4.
தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச் சொற்களை எழுதுக.
Answer:

  • மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி – முதலியவை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச் சொற்கள்.
  • மேலும் மழ, குழ, விழுமுதல், என்பனவும் பயன்பாட்டில் உள்ளன.

Question 5.
‘ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதை எழுதுக.
Answer:

  • ‘ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் “ஐயம்” தோன்ற வரும்.
  • சான்று : அவனா பேசினான்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 6.
இடைச்சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.
அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
Answer:
வீட்டிற்குச் செல்வதற்குத்தான் இவ்வளவு பீடிகையாம்.

ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.
Answer:
இந்தச் சூழ்நிலையை மாற்றித்தான் ஆக வேண்டும்.

இ) வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
Answer:
வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் ஆகிய செயல்கள் கூட ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாம்.

ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
Answer:
சமைப்பது மட்டும் தாழ்வென எண்ணலாமா?

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

உ) பூக்காமலே சில மரங்களில் காய்ப்பதுண்டு.
Answer:
பூக்காமலும் சில மரங்கள் காய்க்கும்.

ஊ) வாளால் வெட்டினான்.
Answer:
வாளால்தான் வெட்டினான்.

மொழியை ஆள்வோம்

ஒப்பிட்டுச் சுவைப்போம் :
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 5

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

மொழிபெயர்க்க.

Akbar said, “How many crows are there in this city?”
Without even a moment’s thought, Birbal replied “There are fifty thousand five hundred and eighty nine crows, my lord”.
“How can you be so sure?” asked Akbar.
Birbal said, “Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere”.
Akbar was placed very much by Birbal’s wit.
Answer:

பீர்பாலின் நகைச்சுவையுணர்வு

இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.

எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.

உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்.

பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

பிழை நீக்கி எழுதுக :

Question 1.
மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்
Answer:
மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும்

Question 2.
நல்ல தமிழுக்கு எழுதுவோம்
Answer:
நல்ல தமிழில் எழுதுவோம்

Question 3.
பவள விழிதான் பரிசு உரியவள்.
Answer:
பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.

Question 4.
துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்
Answer:
துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.

Question 5.
குழலியும் பாடத் தெரியும்
Answer:
குழலிக்கும் பாடத் தெரியும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

(எ.கா) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

Question 1.
அலுவலர் வந்தார் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
Answer:
அலுவலர் வந்தவுடன் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
(அல்லது)
அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 2.
சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.
Answer:
சுடர்க்கொடியும் மாலனும் பாடினார்கள்.

Question 3.
பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.
Answer:
பழனிமலையைவிட இமயமலைதான் மிகவும் பெரியது.

Question 4.
கவலையற்ற எதிர்காலம்; கல்வியே நிகழ்காலம்.
Answer:
கவலையற்ற எதிர்காலம் அமைய வேண்டுமெனில் கல்வியே நிகழ்காலமாக வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றியமைக்க :
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 6
Answer:

செய்தி

புத்தகத் திருவிழா

செப் – 18. தஞ்சாவூர்.

தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவினை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

6. நிகழ்வினைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
அண்ணாவின் வாழ்க்கையில்….
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்ற அறியாமலே திறந்துகாட்டச் செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, “தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம்.

“இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே, அண்ணா , “நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 1.
மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
Answer:
மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள் வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என வருவாய் அலுவலர்
அறிந்து கொண்டார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 2.
அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
Answer:
முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தை திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

Question 3.
அண்ணா வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
Answer:
சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில்தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்களே உயர்பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.

Question 4.
பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக?
Answer:
தான் : பதவி உயர்வு வழங்கத்தான் உம் பெயரைக் கேட்டேன். இன் : சட்டத்தைக் காக்கும் பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது கள் : பொறுப்புணர்வுடன் செயல்படும் அலுவலர்கள் நாட்டிற்குத் தேவை.

Question 5.
நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பிடுக:
Answer:
” பொறுப்புணர்வு” (அல்லது) “கடமையுணர்வு”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

மொழியோடு விளையாடு

சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை உருவாக்குக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 7

எ.கா. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
Answer:
1. மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்.
2. மாணவர்களே! எழுதுகோலும் அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்.
3. பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
4. மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.
5. வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
6. ஆசிரியர் அறையிலிருந்து புத்தகம் எடுத்து வா.
7. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை.
8. சீருடை அணிந்தே வழிபாட்டுக்கூட்டத்திற்கு வரவேண்டும்.
9. கரும்பலகையை அழிப்பானால் சுத்தம் செய்தான்.
10. சீருடையும், மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.

அகராதியில் காண்க.
(அரங்கு, ஒட்பம், கான், நசை, பொருநர்)
Answer:
அரங்கு – அரங்கம், உள்வீடு
ஒட்பம் – அறிவு, அழகு, நன்மை, மேன்மை
கான் – காடு, மணம், வாய்க்கால், இசை
நசை – ஆசை, குற்றம், எள்ளல், ஈரம்
பொருநர் – படைவீரன், தலைவன், போர்க்களத்து சென்று பாடும் கூத்தன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீ ர் தண்ணீ ர்)
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 15
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 16
Answer:

1. நா. காமராசனின் கவிதை நூல்:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 8

2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல்:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 9

3. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட ஹெமிங்வேவின் குறு நாவல்:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 10

4. சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற சிற்பியின் கவிதை நூல்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 11

5. எஸ்இராமகிருஷ்ணனின் சிறார் நாவல்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 12

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 10.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 17
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 13
‘வாழ்க்கையின் கீழ்படியில் நின்றேன்
அண்ணாந்து பார்த்தேன்
உயரச் செல்ல ஏங்கினேன்
பள்ளியின் படியில் கால் வைத்தேன்
கசடற கற்றேன் உயர்ந்தேன்
பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன ன
கல்வியே நம்மை உயர்த்தும்
படிக்கட்டு என உணர்ந்தேன்……..

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 11.
கடிதம் எழுதுக:
உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
Answer:

அனுப்புநர்
மா.இனியன்,
அரசு ஆண்கள் மேல்நிைைலப்பள்ளி,
நாவலூர்.

பெறுநர்
மேலாளர் அவர்கள்,
நெய்தல் பதிப்பகம்,
மதுரை – 16.

ஐயா,

பொருள் : நூலகத்திற்கு அகராதி அனுப்புதல் தொடர்பாக

வணக்கம். எங்கள் பள்ளி நாவலூரில் அமைந்துள்ளது. சுமார் 500 மாணவர்கள் பயில்கின்றோம். எங்கள் பள்ளி நூலகத்திற்கு, தங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள, தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பின்வரும் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பும்படி வேண்டிக்கொள்கிறேன்.

நாள் : 06.08.18
இடம் : நாவலூர்

இப்படிக்கு,
மா. இனியன்.

அகராதிகள் அனுப்ப வேண்டிய முகவரி
மா. இனியன்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
நாவலூர், வேலூர் மாவட்டம்.
நன்றி!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

செயல்திட்டம்

பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றிய செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.
Answer:
மாணவர்களே!
பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள்
மகாத்மா காந்தி, ஈ.வெ.ரா. பெரியார், பாரதியார், பாரதிதாசன், கைலாஷ் சத்யார்த்தி
இவர்களின் புகைப்படங்களைச் சேகரித்து ஒரு படத் தொகுப்பினை உருவாக்குங்கள். இவர்கள் மட்டுமல்ல. இன்னும் கல்விக்காக தொண்டு புரிந்த, உனக்குத் தெரிந்த தலைவர்களின் படங்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.

நிற்க அதற்குத்தக…

எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்

1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.
எவரையும் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதும், குறை கூறாமல் பேசுவதும் என் பொறுப்பு

2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.
பள்ளிச்சுவர், வீட்டுச்சுவர், பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல் இருப்பதோடு பிறரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல் - 14
இகழாது இருப்பது என் பொறுப்பு இவ்வாறு, நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்கின்ற பொழுது, எந்நிலையிலும் பிறரைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாது இருப்பது நம் பொறுப்பாகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

கலைச்சொல் அறிவோம்

சமூக சீர்திருத்தவாதி : (Social reformer)
தன்னார்வலர்(volunteer)
களர் நிலம் (Saline soil)
சொற்றொடர் (Sentence)
Answer:
சமூக சீர்திருத்தவாதி : (Social reformer)
தன் கொள்கைகளாலும், செயல்களாலும் சமூக நிலையை மாற்ற முயற்சிப்பவர்.

தன்னார்வலர்(volunteer)
தானாகவே முன் வந்து சக மனிதர்க்கும், சமூகத்துக்கும் நற்செயல் செய்பவர்.

களர் நிலம் (Saline soil)
நற்பயிர்கள் வளர இயலாத பண்படாத உவர் நிலம்

சொற்றொடர் (Sentence)
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைந்து பொருள் தரும் வகையில் அமைவது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
அ) கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
ஆ) கடி, உறு, கூர், கழி
இ) வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
ஈ) இன், கூட, கிறு, அம்பு
Answer:
ஈ) இன், கூட, கிறு, அம்பு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.
அ) உரிச்சொற்கள்
ஆ) பெயர்ச்சொற்கள்
இ) வினைச்சொற்கள்
ஈ) இடைச்சொற்கள்
Answer:
ஈ) இடைச்சொற்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 2.
சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவுப் பொருளில் வரும் இடைச்சொல் ……..
அ) இல்லை
ஆ) அம்இ
இ) ஆம்
ஈ) இல்
Answer:
இ) ஆம்

Question 3.
உரிச்சொல் எப்பொருள்களுக்கு உரியதாய் வரும்.
1) குறிப்பு
அ) 1 சரி
ஆ) 2 சரி
2) பண்பு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 4.
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
அ) நன்னூலார்
ஆ) தொல்காப்பியர்
இ) இறையனார்
ஈ) வீரமா முனிவர்
Answer:
அ) நன்னூலார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 5.
ஒழியிசை முதலா அசைநிலை ஈறாக எட்டுப்பொருளில் வரும் இடைச்சொல் எது?
அ) ஆ
ஆ) ஏ
இ) ஓ
ஈ) இ
Answer:
இ) ஓ

Question 6.
சரியான கூற்றினைத் தேர்க.
1. அன்று என்பது ஒருமைக்கு உரியது.
2. அல்ல என்பது பன்மைக்கு உரியது
3. அன்று என்பது பன்மைக்கு உரியது
4. அல்ல என்பது ஒருமைக்கு உரியது
அ) 1, 2 – சரி, 3, 4 – தவறு
ஆ) 1, 2 – தவறு 3, 4 – சரி
இ) 1, 3 – சரி, 2, 4 – தவறு
ஈ) 1, 3 – தவறு, 2, 4 – சரி
Answer:
அ) 1, 2 – சரி, 3, 4 – தவறு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 7.
‘கடிநகர்’ என்னும் சொல்லில் ‘கடி’ என்பதன் பொருள் …………………
அ) மணம்
ஆ) காவல்
இ) விரைவு
ஈ) கூர்மை
Answer:
ஆ) காவல்

Question 8.
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் ……………. என்னும் பொருளில் வருகின்றன.
அ) மிகுதி
ஆ) குறைவு
இ) விரைவு
ஈ) கூர்மை
Answer:
அ) மிகுதி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 9.
தொழிற்பெயர் விகுதிகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) தல்
ஆ) அம்
இ) மை
ஈ) இய
Answer:
ஈ) இய

Question 10.
எதிர்மறை இடைநிலைகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) தல்
ஆ) அல்
இ) இல்
ஈ) ஆ
Answer:
அ) தல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

குறுவினா

Question 1.
இடைச்சொற்களின் இயல்புகள் யாவை?
Answer:
இடைச்சொற்கள் பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன. தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல.

Question 2.
பகுபதம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:

  • பிரிக்கக் கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ‘பகுபதம்’ எனப்படும்.
  • பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 3.
‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருள்களில் வரும்? சான்று தருக.
Answer:

  • ‘உம்’ என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.
  • எ.கா : மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை . (எதிர்மறை உம்மை )
    பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)

Question 4.
ஏகார இடைச்சொல் எத்தனை பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது?
Answer:
பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் ஏகார இடைச்சொல் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 5.
தற்காலத்தில் ஏகாரம் எப்பொருளில் மட்டுமே வருகிறது? சான்று தருக.
Answer:

  • தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் (அழுத்தம்) மட்டுமே வருகிறது.
  • எ.கா : அண்ணல் காந்தி அன்றே சொன்னார். நடந்தே வந்தான்.

Question 6.
மட்டும் என்னும் இடைச்சொல் எப்பொருளில் வருகிறது?
Answer:

  • மட்டும் என்னும் இடைச்சொல் ‘வரையறைப்பொருள்’ தருகிறது.
  • முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.
  • எ.கா : படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்)

Question 7.
எழுத்துப்பேறு என்பது யாது?
Answer:
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும். சாரியை இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.5 இடைச்சொல் - உரிச்சொல்

Question 8.
சொல்லின் இறுதியில் வரும் விகுதி எவற்றைக் காட்டும்?
Answer:
சொல்லின் இறுதிநிலையாக வரும் விகுதியானது, பால், எண், இடம் காட்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Students can Download 9th Tamil Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 1.
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! – கதே
இவை போன்ற பொன்மொழிகள் எழுதி வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
புத்தகம் பற்றிய பொன் மொழிகள்

  • தொட்டுப் பார்த்தால் காகிதம்
    படித்துப் பார்த்தால் ஆயுதம்
  • புத்தகமே நம்மைச் சீர்திருத்தும் நண்பன்.
  • உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம்
    போக விரும்பினால் ஒரு நூலகத்துக்குச் செல் – டெஸ்கார்ட்ஸ்
  • கைத்துப்பாக்கிகளை விடப் பெரிய ஆயுதம் புத்தகமே – லெனின்
  • உடலுக்கு உடற்பயிற்சி போல் மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் ஃபிராய்ட்
  • புது வாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்
  • நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன். – ஆபிரகாம் லிங்கன்
  • எந்தப் புத்தகத்தையும் படிக்காத புத்தகம் என்று சொல்லாதீர்கள்; படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லுங்கள் – விவேகானந்தர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 2.
சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ஆம் நாள் தேசிய நூலக நாளாகக் கொண்டாடப்படுவதன் காரணத்தை அறிக.
Answer:
தேசிய நூலக நாள் – காரணங்கள்

  • இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளருமான சீர்காழி இராமாமிர்தம் ரங்கநாதன் (சீர்காழி. இரா.அரங்கநாதன்] 09.08.1892 – ல் பிறந்தார். இவரது பிறந்த தினம் “தேசிய நூலக நாள்” ஆகும்.
  • இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர், நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் என்னும் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்.
  • நூலகவியலின் சிந்தனைகளுக்காக உலக அளவில் பல பரிசுகளைப் பெற்ற பெருந்தகையாளர். இந்திய அரசு இவருக்குப் பத்ம ஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
  • இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நூலகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
  • நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட “இந்திய
    லகவியல் பள்ளியில்” பணியாற்றினார்.
  • வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்தர நூலகங்களில் உறுப்பினராகவும், உயர்பதவிகளையும் பெற்றிருந்தார்.
  • ஐதராபாத்தில் உள்ள “நகர நடுவ நூலகத்தில்” இவரது உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
  • 27.09.1972ல் பெங்களுரில் இறுதிநிலை அடைந்த, சீர்காழி இரா. அரங்கநாதனின் மேற்கூறிய பெருமைகளே, அவரது பிறந்தநாளை “தேசிய நூலக தினமாக” கொண்டாடு வதற்கான காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
நூலகத்தில் கவிதை, கதை முதலிய நூல்களை நூலாசிரியர் வரிசையிலும் நூலின் அடையாளக் குறியீட்டு எண் அடிப்படையிலும் எவ்வாறு தேடுவது என்பதைத் தெரிந்துகொள்க.
Answer:

  • அகரவரிசையில் நூலாசிரியர் பெயர் அறிந்து கொள்ள வேண்டும்.
  • நூல்களின் அடையாளக் குறியீட்டு எண்களையும் தெரிந்து கொண்டு தேடுதல் வேண்டும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
1. ஆ, இ சரி; அ தவறு
2. அ, இ, சரி; ஆதவறு
3. மூன்றும் சரி
4. மூன்றும் தவறு
Answer:
3) மூன்றும் சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

குறுவினா

Question 1.
நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?
Answer:

  • உலக அறிவைத் தரக்கூடிய பொது அறிவு நூல்கள்.
  • அறநூலாம் திருக்குறள்.
  • விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கூறும் அறிவியல் நூல்கள்.
  • வீரர்கள், தியாகிகள், கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்.

நெடுவினா

Question 1.
நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
Answer:
முன்னுரை:
மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலை” என்னும் அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து பார்ப்போம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

நூலகம்:
ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே .

“வீட்டிற்கோர் புத்தகசாலை” என்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்.

வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.

நூல்கள் :
நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூ ல்களையாவது கற்க முனையுங்கள்.

பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்” கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.

  • நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்
  • மக்களின் மனமாசு துடைத்தவர்கள்
  • தொலைதேசங்களைக் கண்டவர்கள்
  • வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை

ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .

முடிவுரை :
கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை அமைப்போம்.

“புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றவர்……………..
அ) அறிஞர் அண்ணா
ஆ) காந்தியடிகள்
இ) ஆபிரகாம் லிங்கன்
ஈ)வின்சென்ட் சர்ச்சில்
Answer:
இ) ஆபிரகாம் லிங்கன்

Question 2.
அண்ணா நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு உருவாக்கியது …………
அ) நூலகம்
ஆ) அருங்காட்சியகம்
இ) நினைவில்லம்
ஈ) பூங்கா
Answer:
அ) நூலகம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
வீட்டிற்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ………… ஆகும்.
அ) தொலைக்காட்சி உரை
ஆ) இலக்கியச் சொற்பொழிவு
இ) வானொலி உரை
ஈ) அரசியல் மேடைப் பேச்சு
Answer:
இ) வானொலி உரை

Question 4.
தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்டவர் ………..
அ) காமராஜர்
ஆ) தந்தை பெரியார்
இ) அறிஞர் அண்ணா
ஈ) திரு.வி.க
Answer:
இ) அறிஞர் அண்ணா

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 5.
அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 2010
ஆ) 2012
இ) 2014
ஈ) 2013
Answer:
அ) 2010

Question 6.
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு
அ) 2006
ஆ) 2008
இ) 2009
ஈ) 2010
Answer:
இ) 2009

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 7.
இருமொழிச்சட்டத்தை உருவாக்கியவர் யார்?
அ) காமராஜர்
ஆ) மு.கருணாநிதி
இ) அறிஞர் அண்ணா
ஈ) எம்.ஜி.ஆர்
Answer:
இ) அறிஞர் அண்ணா

Question 8.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) உலகின் மிகப் பெரிய நூலகம் – 1. சரசுவதி மகால் நூலகம்
ஆ) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் – 2. கன்னிமரா நூலகம்
இ) தமிழ் நூல்கள் அதிகமாக உள்ள நூலகம் – 3. தேசிய நூலகம், கொல்கத்தா
ஈ) ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகம்- 4. லைப்ரரி ஆப் காங்கிரஸ், அமெரிக்கா
அ) 1, 4, 3, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3,1
ஈ) 3, 2, 4, 1
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 9.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்………………..
அ) சரசுவதி மகால்.
ஆ) கன்னிமரா.
இ) தேசிய நூலகம், கொல்கத்தா.
ஈ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்.
Answer:
ஈ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்

குறுவினா

Question 1.
அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் இரண்டினைக் கூறுக.
Answer:

  • சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
  • இன்ப ஒளி

Question 2.
அறிஞர் அண்ணா இதழாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயரினைக் குறிப்பிடுக.
Answer:

  • ஹோம்ரூல்
  • திராவிட நாடு
  • ஹோம்லேண்ட்
  • மாலை மணி
  • நம்நாடு
  • காஞ்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
அறிஞர் அண்ணா துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயரினைக் குறிப்பிடுக.
Answer:

  • குடியரசு
  • விடுதலை

சிறுவினா

Question 1.
அண்ணாவின் புகழ்பெற்ற மொழிகள் சிலவற்றைக் குறிப்பிடுக?
Answer:

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு .
  • கத்தியைத் தீட்டாதே, உன்றன் புத்தியைத் தீட்டு
  • இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்
  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  • சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
  • பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Students can Download 9th Tamil Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 1.
இன்றைய சாதனைப் பெண்மணிகள் என்னும் தலைப்பில் தொகுப்பேடு உருவாக்குக.
Answer:
சாதனைப் பெண்மணிகள்:
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகள், பலசோதனைகளைக் கடந்து சாதனை செய்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர்கள்.

இந்திரா காந்தி:
இந்திரா பிரியதர்ஷினி, இந்தியாவின் இரும்புப் பெண்மணி. நாட்டின் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது பல விமர்சனங்கள், பல தடைகள் வந்தாலும், தயங்காது துணிச்சலான பல முடிவுகளை எடுத்து பாரத நாட்டை உயரச் செய்தவர்.

அன்னை தெரசா:
கருணையின் மறு உருவம் இவர். அமைதிக்கான “நோபல்” பரிசினையும், இந்திய நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதையும் பெற்றவர். அநாதைகள், ஆதரவற்றவர்கள், நோயாளிகள் என அனைவருக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்த அன்பின் திரு உருவம். அகிலமே “அன்னை ” எனக் கொண்டாடிய பெருமைக்குரியவர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

எம். எஸ். சுப்புலெட்சுமி:
இசைத் துறையில் உலகப்புகழ் பெற்றவர். ஐ.நா மன்றத்தில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியப் பெண்மணி. பக்திப் பாடல்கள், கீர்த்தனைகள், திரை இசைப் பாடல்கள் என அனைத்து இசைவடிவிலும் முத்திரைபதித்த கலைமாமணி இவர்.

இந்திரா நூயி:
உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான, “பெப்சிகோ”வின் தலைமைச் செயல் அதிகாரி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உருவாக்கியுள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளி சார்ந்த தமிழ்ப் பெண்.

ப்ரித்தி பட்டேல்:
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 44 வயதான இவர் இங்கிலாந்து அமைச்சரவையில் சர்வதேச வளர்ச்சித் துறை மந்திரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

கியாரா நர்கின்:
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி. 16 வயதே ஆனவர். ஆரஞ்சுப் பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவது மூலம் நிலத்தில் நீரைத் தக்க வைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெறலாம் எனக் கண்டறிந்தார். இவர் சமர்ப்பித்த “தண்ணீர் இல்லாப் பயிர்கள் இனி இல்லை ” என்ற ஆய்வுக்கு 50,000 டாலர் பரிசாகப் பெற்றார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

ஸ்டெஃபி கிராஃப்:
டென்னிஸ் வீராங்கனை, உலகெங்கும் உள்ள பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர், 22 கிராண்ட்ஸ்லாம், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம், கிராண்ட் பிரீ பட்டங்கள் பல பெற்றவர். தற்போது போர்களால் பாதிக்கப்படும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து காத்து வருகிறார்.

செரீனா வில்லியம்ஸ் :
அதிரடியாக ஆடும் டென்னிஸ் வீராங்கனை. நான்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஸ்டெஃபிகிராஃபின் சாதனையை முறியடித்தவர்.

ஜே. கே. ரவுலிங் :
வறுமைச்சூழல், சமூகத்தின் நிராகரிப்புகள் இவைகளையெல்லாம் தாண்டி, “ஹாரி பாட்டர்” கதை எழுதி வெற்றி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பெண்மணி.

மாணவர்களே, இச்சாதனைப் பெண்மணிகளின் புகைப் படங்களையும் திரட்டி, இத்தகவல்களுடன் தொகுப்பேடு தயாரித்துக் கொள்ளுங்கள்.

மேலும், கல்பனா சாவ்லா, மேரிகோம், சானியா மிர்சா, ஸ்குவாஷ் தீபிகா, டாக்டர் சாந்தா என பல சாதனையாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Question 2.
கல்வி குறித்த சிறப்புத் தொடர்கள், பொன் மொழிகளைத் திரட்டிக் கட்டுரை வரைக.
Answer:
தொடர்கள்

  • கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  • கைப்பொருள் தன்னின் மெய்பொருள் கல்வி
  • கல்வி கரையில கற்பவர் நாள் சில
  • கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
  • கல்வியழகே அழகு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

பொன்மொழிகள்

  • கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் கடைசி மூச்சு வரை பிறருக்குக் கொடுக்கத்தான்.
  • எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.
  • கல்வி ஓர் அணிகலன், அணிந்தால் அழகு தரும், அணிவித்தால் சிறப்பினைத் தரும்.

கல்வியின் சிறப்பு

முன்னுரை:
“வெள்ளத்தல் அழியாது வெந்தழலால் வேகாது”
எதனாலும் அழிக்க முடியாத விழுச்செல்வமாம் கல்வியின் சிறப்புகளாவன.

சென்ற இடமெல்லாம் சிறப்பு:
கல்வியெனும் கேடில்லாத செல்வத்தைப் பெற்றவன் எங்கு, எவ்விடம் சென்றாலும் சமூ கத்தால் மதிக்கப்படுகிறான். கற்றவனுக்கு எல்லா ஊரும் சொந்த ஊரே, எல்லா நாடும் சொந்த நாடேயாகும். இதனையே பொய்யாப் புலவனும்,

“யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” என்றார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

மெய்ப்பொருள் கல்வி:
உலகப் பொருள்களாகிய வீடு, செல்வம், பொன், நிலம் இவையாவும் பருப்பொருள்கள். கள்வனால் களவாடப்படும், வெள்ளத்தால் நெருப்பால் அழியும். ஆனால் கல்வி நுண் பொருளாம் மெய்ப்பொருள் ஆகும். கள்வனால், பகைவனால் கொள்ளப்படாது. கொடுக்க கொடுக்க வளருமேயன்றி குறைவுபடாது. எனவே கல்வி மெய்ப் பொருளாகும்.

நிற்க அதற்குத் தக:
ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனைச் செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் கற்ற கல்வியின் பயன் கிடைக்கும். கற்ற கல்வியின் வழி நடக்கவில்லையெனில் பயன் இல்லை என்பதை.

“கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவன் வழி விளங்கிக் கொள்ளலாம்.

கண்ணுடையோர் கற்றோர்:
முகத்தின் கண்ணானது கற்றவருக்குரிய அடையாளமாகக் கூறப்படுகிறது. கல்வியறிவைப் பெற்றவனே கண்ணுடையவன். அதனைப் பெறாதவனின் கண்கள் கண் எனப்படுவதில்லை. அவை முகத்தின் புண்களே ஆகும்.

“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

கற்பவனே வாழ்பவன்:
மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். “கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகிறான்”. கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதிலலை. அதாவது கற்பவர் நாள் சிலவாக இருந்து அவர்கள் உடல் அழியலாம். ஆனால் அவர் கற்ற, கற்றுக் கொடுத்த கல்வி உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும். எனவே கற்பவன், கல்விக்காக உயிர் கொடுப்பவன் என்றும் வாழ்கிறான்.

முடிவுரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழேழு பிறவிக்கும் உடன் இருந்து வாழ வைக்கும்.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவர்க்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து”.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
Answer:

  • பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம்.
  • அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

சிறுவினா

Question 1.
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
Answer:
பெண்பாற் புலவர்கள் :

  • ஔவையார்
  • நக்கண்ணையார்
  • ஒக்கூர் மாசாத்தியார்
  • காக்கைப்பாடினியார் ஆதிமந்தியார்
  • வெள்ளிவீதியார் வெண்ணிக்குயத்தியார்
  • நப்பசலையார் பொன்முடியார்
  • காவற்பெண்டு
  • அள்ளூர் நன்முல்லையார் ஆகியோர் ஆவார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 2.
இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக?
Answer:

இன்றைய பெண்கல்வி

குழுத்தலைவர் ! ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே
நீ எழுதுகோலை எடுக்கவேணும், கையிலே….
மற்றோர் : ஆமா கையிலே….
குழுத்தலைவர் ! ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே , ஏடெடுத்து நீ போகணும்….
மற்றோர் : ஆமா … போகணும்.
குழுத்தலைவர் – சிந்திக்கும் மூளை உனக்கு வேண்டும்.
அம்மா…. நீ நிந்தையைப் பொறுத்துக்கோ
அம்மா… நீ உன் திறமையைக் காட்டு அம்மா…
மற்றோர் ! ஆமா… திறமையைக் காட்டு அம்மா…
குழுத்தலைவர் – முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து முடித்துக் காட்டு
அம்மா நீ … முடித்துக் காட்டு அம்மா ….
மற்றோர் ! ஆமா… முடித்துக் காட்டு…

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

குழுத்தலைவர் – செல்லம்மா நீ செல் அம்மா பள்ளிக்கு… பட்டம் பெறு அம்மா சட்டம் செய்.
அம்மா… நாடே உன்னை வணங்கட்டும் அம்மா…
மற்றோர் : ஆமா… நாடே உன்னை வணங்கட்டும் அம்மா…

Question 3.
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
Answer:
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகள்:

  • 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை
  • மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
  • அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 4.
நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.
Answer:
தமிழ்ப்பணியின் சிறப்பு:

  • நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.
  • இவரது தனித்தமிழ் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தடிகள் பாராட்டிய மூவர் ஆகிய நூல்களை எழுதி தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.
  • மேலும், இவருடைய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

நெடுவினா

Question 1.
நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
Answer:
முன்னுரை:
நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

பண்டித ரமாபாய்:
1858 -ஆம் ஆண்டு முதல் 1922 – ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், “பெண்மை என்றால் உயர்வு” என்பதற்குச் சான்றாவார்.

ஐடாஸ் சோபியா:
1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.

மூவலூர் இராமாமிர்தம் :
1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.

சாவித்திரிபாய் பூலே :
1831 முதல் 1897 வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

மலாலா :
பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.

முடிவுரை :
இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

“புவி வளம் பெறவே புதிய உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே”

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு ……… நிறுவியவர் …….
அ) 1982, ரமாபாய்
ஆ) 1952, முத்துலெட்சுமி
இ) 1960, ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
ஈ) 1970, சிவகாமி
Answer:
ஆ) 1952, முத்துலெட்சுமி

Question 2.
“முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ………
அ) அறிஞர் அண்ணா
ஆ) அம்பேத்கர்
இ) தந்தை பெரியார்
ஈ) காமராஜர்
Answer:
இ) தந்தைபெரியார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 3.
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) நாமக்கல் கவிஞர்
Answer:
ஆ) பாரதிதாசன்

Question 4.
ஹண்டர்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………..
அ) 1972
ஆ) 1952
இ ) 1872
ஈ) 1882
Answer:
ஈ) 1882

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 5.
80 ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியாய் இருந்தவர்
அ) ரமாபாய்
ஆ) முத்துலெட்சுமி
இ) சாவித்திரிபாய் பூலே ஈ)கைலாஷ் சத்யார்த்தி
Answer:
ஈ) கைலாஷ் சத்யார்த்தி

Question 6.
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
அ) இராஜேஸ்வரி அம்மையார்
ஆ) காரைக்கால் அம்மையார்
இ) நீலாம்பிகை அம்மையார்
ஈ) சிவகாமி அம்மையார்
Answer:
இ) நீலாம்பிகை அம்மையார்

Question 7.
ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம் ………. உரியது.
அ) பட்டமேற்படிப்பிற்கு
ஆ) பட்டய மேற்படிப்பிற்கு
இ) பொறியியல் படிப்பிற்கு
ஈ) மருத்துவ படிப்பிற்கு
Answer:
அ) பட்டமேற்படிப்பிற்கு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 8.
கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………. ஆகும்.
அ) 1972
ஆ) 1951
இ) 1964
ஈ) 1965
Answer:
இ) 1964

குறுவினா

Question 1.
தமிழின் பொற்காலம் எனப் புகழப்படும் காலம் எது?
Answer:

  • பாட்டாகிய பத்துப்பாட்டும், தொகையாகிய எட்டுத் தொகையும் உருவான காலம்.
  • தமிழுணர்வு வளர்ந்து, உயர்ந்திருந்த காலமாகிய சங்க காலமே பொற்காலம் எனப் புகழப்படும் காலம் ஆகும்.
    “பாட்டும் தொகையும் உருவான காலம்
    ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம்”

Question 2.
பெண்கல்வி மேம்பாட்டிற்கு ஆங்கில அரசு செய்தது என்ன?
Answer:
பெண் கல்வி மேம்பாட்டிற்காக ஆங்கில அரசு, 1882 ல் ஹண்டர் குழுவை அமைத்து, முதன்முதலில் பெண் கல்விக்குப் பரிந்துரை செய்து சட்டம் இயற்றியது. அறிக்கையும் வெளியிட்டது.

அந்த அறிக்கையின் படி, மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ்பூலே, சாவித்ரிபாய் பூலே இணையர் முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 3.
எவற்றையெல்லாம் தாயாகக் கருதுகிறோம்?
Answer:
நாடு, நதி, மொழி, புவி முதலியவற்றைத் தாயாகக் கருதுகிறோம்.

Question 4.
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் சிறப்பினை எடுத்தியம்புக.
Answer:

  • பெண்ணுணர்வினைப் பாடலில் தந்தனர்.
  • தூது சென்றனர்.
  • துயரைத் தீர்த்தனர்
  • ஓதும் தமிழால் உயர்வைப் பெற்றனர்.

Question 5.
பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப் பாமாலை சூட்டியவர்கள் யார்?
Answer:

  • காரைக்கால் அம்மையார்
  • ஆண்டாள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 6.
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் – குறிப்பு வரைக.
Answer:
பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்தான் ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் ஆவார்.

Question 7.
மராட்டிய மாநிலத்தில் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கியவர்கள் யார்?
Answer:

  • ஜோதிராவ் பூலே
  • சாவித்திரிபாய் பூலே

சிறுவினா

Question 1.
முற்காலத்தில் பெருமை பெற்ற பெண்கள் பற்றிக் குறிப்பிடுக.
Answer:

  • சமண மதம், புத்தமதம் வளர்ந்த காலத்தில் மணிமேகலை கற்றறிந்த பெண்ணாகவே இருந்தாள்.
  • பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் காரைக்காலம்மையார், ஆண்டாள் முதலிய பெண்கள் இறைவனுக்குப் பாமாலை சூடும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 2.
ஈ.த இராஜேஸ்வரி அம்மையார் குறிப்பு வரைக?
Answer:

  • இராஜேஸ்வரி அம்மையார் 1906 முதல் 1955 வரை வாழ்ந்தவர்.
  • தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.
  • திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களில் உள்ள அறிவியல் உண்மைகள்
  • குறித்துப் பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.
  • சூரியன், பரமாணுப்புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Students can Download 9th Tamil Chapter 5.2 குடும்ப விளக்கு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.2 குடும்ப விளக்கு

கற்பவை கற்றபின்

கற்பவை கற்றபின்

Question 1.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பாரதி
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா…. – கவிமணி
பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது – பாவேந்தர்

இவை போன்ற பெண்மையைப் போற்றும் கவிதை அடிகளைத் திரட்டுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு - 1
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு - 2
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 2.
ஆணுக்கும் சமையல் செய்யத் தெரிந்திருப்பதன் பயன் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடி அதன் கருத்துகளைத் தொகுக்க.
Answer:
மாணவர்களே!
நம் பாடப்பகுதியான குடும்ப விளக்கில், தலைவி பேசும் பொழுது, ஆண்களும் சமையல் பணியை ஏற்றுக் கொள்ளும் நாள் நன்னாள் என்றாள் அல்லவா…

அதன் அடிப்படையில் ஆண்களுக்குச் சமையல் செய்யத் தெரிந்தால் என்னென்ன பயன் என்பது குறித்துக் கலந்துரையாடுங்கள். நாங்கள் கேட்டு மகிழ்கிறோம்.

கலந்துரையாடுபவர்கள்
(நாதன், அமுதா, இனியா, முகிலன்)

அமுதா : நாதா; இப்போது தான் பள்ளிக்கு வருகிறாயா? ஏன் தாமதம்…

நாதன் : அவசர வேலையின் நிமித்தமாக என் அம்மா ஊருக்குச் சென்று விட்டார்கள். கடையில் உணவு வாங்கி வரத் தாமதமாகி விட்டது.

இனியா : என்ன? உன் அம்மா ஊருக்குச் சென்று விட்டார்களா? கடையிலா உணவு வாங்கினாய்.

நாதன் : ஆமாம் இனியா! நான், என் தந்தை, என் அண்ணன் மூவருமே ஆண்கள் அல்லவா! அதனால் வீட்டில் சமையல் இல்லை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

முகிலன் : என்னடா இது! மூவருக்கும் ஒன்றுமே தெரியாதா?

நாதன் : தெரியாது முகிலா; தேநீர் முதல் உணவு வரை கடையில் தான்!

முகிலன் : இதோ! பார் என் அம்மாவுக்கும் இன்று உடல் நிலை சரியில்லை. காலையிலே மருத்துவமனை சென்று விட்டார். நானும் என் தந்தையும் தான் சமையல் செய்தோம்.

இனியா : அப்படியா! முகிலா

முகிலன் : ஆமாம் இனியா! வேலை செய்தே என் அம்மா மிகவும் சோர்ந்து உடல் நலம் குன்றிவிட்டார்கள். அதனால் என் தந்தை, முகிலா! நீயும் நானும் அம்மாவுக்கு சற்று ஓய்வு கொடுப்போம். அவர்கள் நிதானமாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வரட்டும் என்றார்.

அமுதா : எப்படி சமைத்தீர்கள்?

முகிலன் : காலையிலே அப்பா கடைக்குச் சென்று கீரை வாங்கி வந்தார். அவர் சோறு சமைக்கும் முன் நான் கீரையைச் சுத்தம் செய்து, அதனைச் சமைப்பதற்குத் தேவையான வெங்காயம் போன்றவற்றை உரித்துக் கொடுத்து நான் பள்ளிக்குப் புறப்படச் சென்றேன். அப்பா அம்மாவைவிட வேகமாகச் சமைத்து விட்டார். சத்துள்ள உணவும் கிடைத்தது. கடைக்குச் செல்லும் அலைச்சல், பணம், நேரம் எல்லாம் மிச்சம்.

நாதன் : நானும் ஒரு காணொளியில் பார்த்தேன். சமையல் தெரியும் ஆண்களுக்குக்கலையுணர்வும், தன்னம்பிக்கையும் அதிகம் என்றும்; ஆண்கள் சமையல் கற்றுக் கொள்வதால் வீட்டில் சமத்துவம் வளரும்; எல்லோருக்கும் ஒருவர் மேல் ஒருவர்க்கு அக்கறை கூடும்; வீணான செலவுகள் தவிர்க்கப்படும்; கடையில் உணவை வாங்கி உண்பதால் ஏற்படும் உடல் நலக் கேடுகளைத் தவிர்க்கலாம் என்றும் அந்தக் காணொளி விளக்கியது. முகிலா…..

முகிலன் : நாதன் ; இனி நம் வீட்டில் நம் அன்னை உடல் நலக் குறைவுற்றாலோ, ஊருக்குச் சென்றாலோ நம் தேவைக்கு நம் தந்தை, நம் சகோதரர்கள் இணைந்து சமைக்க முயற்சிப்போம்…..

அமுதா, : நல்ல முடிவு நண்பர்களே வீடும், நாடும் நலம் பெற சமையல் உட்பட எல்லாப்

இனியா… பணிகளையும் இரு பாலரும் இணைந்தே செய்வோம்…

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
க) அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
உ) அ – 2, ஆ – 3, இ – 1, ஈ – 4
ங) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
ச) அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3
Answer:
க) அ- 3, ஆ – 4, இ – 1, ஈ – 2

குறுவினா

Question 1.
தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?
Answer:

  • குடும்ப விளக்கின் தலைவியின் பேச்சில்,
  • பெண்ணுக்கு விடுதலை வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
  • பெண் ஒளிர வேண்டுமெனில் கல்வி வேண்டும்;

நாட்டின்வழக்கத்தை மாற்ற வேண்டுமெனில் கல்விவேண்டும் என்று “பெண்கல்விவேண்டும்” என்பதையே பாடுபொருளாகக் கொண்டு தலைவி பேசி, தன் கருத்தை வெளிப்படுத்துகிறாள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

சிறுவினா

Question 1.
சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ) இன்பம் சமைப்பவர் யார்?
ஆ) பாவேந்தர் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
Answer:
அ) இன்பம் சமைப்பவர்
உணவைச் சமைப்பவரே, அதனை அன்புடன் படைப்பது மூலம் (பரிமாறுவது மூலம்)
இன்பத்தையும் சமைப்பவர் ஆவார்.

ஆ) சமைப்பது தாழ்வா : உணவைச் சமைத்துத் தருவது உயிரை உருவாக்குவது போன்றதாகும். எனவே பாவேந்தர் கூற்றுப்படி சமையல் தாழ்வாகாது.

நெடுவினா

Question 1.
குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
Answer:
முன்னுரை:
பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை வெளிப்படுத்தும் போது, பெண்கல்வி குறித்த கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும், இன்றைய சூழலையும் பார்ப்போம்.

தலைவியின் பேச்சு:
கல்வி இல்லாத பெண்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள்; அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த புதல்வர்கள் உருவாவதில்லை. கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட நன்செய் நிலம் போன்றவர்கள். அவர்கள் மூலமே சிறந்த அறிவார்ந்த மக்கள் உருவாகின்றனர்.

பெண்கல்வி இல்லாததினால், இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது.

கல்வியறிவு இல்லாத பெண், மின்னல் போல் ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவள் வாழ்வு ஒளிர்வதில்லை .

“கல்வி இல்லா மின்னாள்
வாழ்வில் என்றும் மின்னாள்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

இன்றைய சூழல் :
கல்வி கற்ற பெண் குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கட்பேறு இல்லந்தோறும் காணப்படுகிறது.

துறைதோறும்:
வானூர்தியைச் செலுத்துதல் விண்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறன் உடையவளாய் இருக்கிறாள் என்பதை மறுக்க இயலாது.

“வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுது மளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே” ஆகிவிட்டது.

சமையல்பணி :
சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற நிலை மாறிவருகிறது. ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும் காலம் வந்து கொண்டிருக்கிறது எனில் மிகையாகாது.

குடும்ப விளக்கு தலைவிபேசும், கால கட்டத்தை விட ‘பெண்கல்வி’ இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது.

முடிவுரை:

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
என்ற பாரதியின் கனவு வரிகள் நனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
உணவினை ஆக்கல் மக்கட்கு ……….. அன்றோ
அ) உயிர் ஆக்கல்
ஆ) உயிர் அழித்தல்
இ) உணவாக்கல்
ஈ) உணவழித்தல்
Answer:
அ) உயிர் ஆக்கல்

Question 2.
கல்வியை உடைய பெண்கள் …………… ஆவார்.
அ) உவர் நிலம்
ஆ) பண்படாத நிலம்
இ) திருந்திய கழனி
ஈ) கிணற்றுத் தவளை
Answer:
இ) திருந்திய கழனி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 3.
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உருவகம்
ஈ) உவமைத்தொகை
Answer:
ஈ) உவமைத்தொகை

Question 4.
உணவினை ஆக்கல் மக்கட்கு உயிர் ஆக்கல் அன்றோ – இவ்வடியில் உள்ள நயம் யாது?
அ) அடி மோனை
1) அ – சரி
ஆ) அடி எதுகை
2) இ, ஈ – சரி
இ) சீர் இயைபு
3) நான்கும் சரி
ஈ) அடி இயைபு
4) நான்கும் தவறு
Answer:
1) அ – சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 5.
பொருத்துக:
அ) தணல் – 1 சமைக்கும் கலன்
ஆ) தாழி – 2 செய்க
இ) இயற்றுக – 3 சொல்லல்
ஈ) நவிலல் – 4. நெருப்பு
Answer:
அ4 ஆ1, இ2, ஈ3

Question 6.
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
அ) வில்வாள்
ஆ) பணமும் படையும்
இ) மலரும்
ஈ) ஆண்க ளும்
Answer:
வில்வாள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 7.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
அ) குடும்ப விளக்கு
ஆ) இருண்ட வீடு
இ) அழகின் சிரிப்பு
ஈ) பிசிராந்தையார் நாடகம்
Answer:
ஈ) பிசிராந்தையார் நாடகம்

Question 8.
குடும்ப உறவுகள் ………… என்னும் நூலால் பிணைந்துள்ளது.
அ) கோபம்
ஆ) அன்பு
இ) அடக்கம்
ஈ) கவலை
Answer:
ஆ) அன்பு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 9.
குடும்ப விளக்கு ………….. பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) 4
ஆ) 6
இ) 5
ஈ) 7
Answer:
இ) 5

Question 10.
பாரதிதாசன் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) பாண்டியன் பரிசு
ஆ) பொன்னியின் செல்வன்
இ) அழகின் சிரிப்பு
ஈ) இருண்ட வீடு
Answer:
ஆ) பொன்னியின் செல்வன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

குறுவினா

Question 1.
குடும்ப விளக்கின் பாடுபொருளாக அமைவன யாவை?
Answer:

  • குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது.
  • கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது.

Question 2.
பாரதிதாசனின் படைப்புகள் யாவை?
Answer:

  • பாண்டியன் பரிசு
  • அழகின் சிரிப்பு
  • இருண்ட வீடு
  • குடும்ப விளக்கு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 3.
எச்செயல்கள் இருபாலர்க்கும் பொதுவானது என்கிறது குடும்ப விளக்கு.
Answer:
வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்கிறது குடும்ப விளக்கு.

Question 4.
தலைவி எவற்றைப் பொருத்தமற்றவை என்கிறாள்?
Answer:
சமைப்பது, வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வது போன்றவை பெண்களுக்கே உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது என்கிறாள் தலைவி.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

சிறுவினா

Question 1.
பாரதிதாசன் குறிப்பு வரைக.
Answer:

  • பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
  • இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழயக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
  • இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 2.
குடும்ப விளக்கு நூலின் ஐந்து பகுதிகள் யாவை?
Answer:

  • ஒருநாள் நிகழ்ச்சி
  • விருந்தோம்பல்
  • திருமணம்
  • மக்கட்பேறு
  • முதியோர் காதல்

முதலிய ஐந்து பகுதிகளைக் கொண்டது குடும்ப விளக்கு.