Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.6 குறியீடு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.6 குறியீடு

இலக்கணத் தேர்ச்சி கொள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 1.
குறியீடுகளைப் பொருத்துக.
அ) பெண் – 1. சமாதானம்
ஆ) புறா – 2. வீரம்
இ) தராசு – 3. விளக்கு
ஈ) சிங்கம் – 4. நீதி

அ) 2, 4, 1, 3
ஆ) 2, 4, 3, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 3, 1, 2, 4
Answer:
இ) 3, 1, 4, 2

Question 2.
கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
காரணம் : பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தவர்கள்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி

Question 3.
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
அ) உவமை
ஆ) உவமேயம்
இ) உத்தி
ஈ) உள்ளுறை உவமை
Answer:
ஈ) உள்ளுறை உவமை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 4.
‘திட்டம்’ என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்’ எதற்குக் குறியீடாகிறது?
அ) அமுதசுரபி
ஆ) ஆதிரைப் பருக்கை
இ) திட்ட ம்
ஈ) பயனற்ற விளைவு
Answer:
இ) திட்ட ம்

Question 5.
மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
அ) குறியீடு
ஆ) படிமம்
இ) அங்கதம்
ஈ) தொன்மம்
Answer:
அ) குறியீடு

குறுவினா

Question 1.
குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக.
Answer:
எதிரே
தலைமயிர் தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல் (பிரமிள்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 2.
வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பீடுக.
Answer:

  • வியர்வைக்கு – ஆதிரைப் பருக்கை
  • செழிப்புக்கு – அமுத சுரபி

Question 3.
குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.
Answer:

  • குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் குறியீட்டு உத்தி என்பர்.
  • சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.
  • சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
  • இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்த வேண்டும். எ.கா. தராசு – நீதி.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
Symbol (சிம்பல்) என்பதன் பொருள்
அ) ஒன்றுசேர்
ஆ) பிரித்தல்
இ) காட்டல்
ஈ) விட்டு விலகு
Answer:
அ) ஒன்றுசேர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 2.
தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர்
அ) ஜார்ஜ்
ஆ) ஹார்ட்
இ) பிரவுன்லீ
ஈ) வில்லியம்
Answer:
ஆ) ஹார்ட்

Question 3.
‘உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையை’ – என்ற கபிலரின் கலித்தொகை பாடலில் வெளிப்படும் குறியீடு.
i) தலைவியுடனான திருமணத்தைத் தோழி வலியுறுத்தியதை விரும்பாத தலைவன் அக்கூற்றை மறுத்தற்கு, யானை வேங்கை மரத்தைக் குத்தியது குறியீடாகிறது.
ii) அவள் கூற்றை வேண்டாததாகக் கருதித் தலைவன் வருந்துதலுக்கு, தந்தத்தை எடுக்க இயலாது யானை தவிப்பது குறியீடாகிறது.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 4.
“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை” – என்னும் கபிலரின் அகநானூற்றுப் பாடலில் வெளிப்படும் குறியீடு
i) ஆண் குரங்கின் செயல் தலைவனின் செயலுக்குக் குறியீடாகிறது.
ii) சுனைநீர்த் தேறல் தலைவன் கொண்டுள்ள இன்பந்தரும் மயக்கத்திற்குக் குறியீடாகிறது.
iii) சந்தன மரத்தில் ஏறுவதற்கு முடியாமல் பூக்களாகிய படுக்கையில் குரங்கு விழுந்து கிடக்கும் செயல், திருமணம் செய்து கொள்ளாமல் இன்பத்தை மட்டும் நகர நினைக்கும் தலைவனது செயலுக்குக் குறியீடாகிறது.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 5.
‘வியர்வை’ என்னும் தலைப்பில் ‘இந்த ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி’ என்று அப்துல்ரகுமான் எழுதியுள்ள கவிதையில் வியர்வைத்துளிக்குக் குறியீடாவது ……………………… செழிப்புக்குக் குறியீடாவது ……………..

அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி
ஆ) திட்டம், பயனற்ற விளைவு
இ) அமுதசுரபி, ஆதிரைப்பருக்கை
ஈ) பயனற்ற விளைவு திட்டம்
Answer:
அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி

Question 6.
சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இக்காலத்தில் இலக்கிய உத்தியை ………………………’ எனலாம்.
அ) தொன்மம்
ஆ) படிமம்
இ) குறியீடு
ஈ) புதுக்கவிதை
Answer:
இ) குறியீடு

குறுவினா

Question 1.
குறியீடு, குறியீட்டியம் சான்றுடன் விளக்குக.
Answer:

  • இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.
  • உருவ ஒற்றுமை இருக்கலாம்.
  • அருவமான பண்பு ஒற்றுமை இருக்கலாம்.

சான்று
பெண்ணை – விளக்கு என்பர். குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் என்பர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 2.
குறியீட்டியம் கோட்பாட்டை வளர்த்தவர்கள் யாவர்?
Answer:
பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே

Question 3.
கபிலரின் கலித்தொகை பாடல்வழி குறியீட்டு உத்தியை விளக்குக.
Answer:

  • வேங்கை மரம் பூத்திருக்கிறது.
  • அது புலிபோல் தோற்றமளிக்கிறது.
  • சினம் கொண்ட மதயானை அடிமரத்தைத் தந்தத்தால் குத்தியது.
  • ஆழப்பதிந்த தந்தம் எடுக்க முடியாமல் முழங்கியது.
  • இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன். இப்பாடலில் யானை தலைவனுக்குக் குறியீடாக இடம் பெறுகிறது.

Question 4.
குறியீடு என்பது ஒரு புதிய வடிவம் அன்று – விளக்குக.
Answer:
(i) சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்றும் இலக்கிய உத்திதான் குறியீடு.

(ii) உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாத, மறைக்க வேண்டுபவை. அதனால் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது.

(iii) குறியீடு என்பது அகம், புறம் என எல்லா வகைக் கவிதையிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

Question 5.
‘வியர்வை’ கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டு செய்தி யாது?
Answer:

  • ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபி பாத்திரத்தில் உணவு வளர்வது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது.
  • வியர்வைக்கு – பருக்கை
  • செழிப்புக்கு – அமுதசுரபி குறியீடாக அமைகிறது.

Question 6.
‘திட்டம்’ கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டுச் செய்தி யாது?
Answer:

  • திட்டங்கள் தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல் எதிராகப் போய்விடுகிறது.
  • வரம் – திட்டத்திற்கும்.
  • சாபம் – பயனற்ற விளைவுக்கும் குறியீடாக அமைகிறது.
  • வரங்கள், சாபங்கள், ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்கே?

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ளவொரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால். ‘முதலாளி இல்லை’ என்று சொல்லுமாறு வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, “நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? சொல்ல மாட்டேன்” என்று பிடிவாதமாகக் கூறினார். அவர், வ.சு.ப. மாணிக்கம்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 1
தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினாார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றிய போது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார். திருவந்தபுரத்தின் திராவிடமொழியில் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர். தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும், உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர். ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

அவருடைய தமிழ்த்திறத்துக்கும் ஒரு பதம்.
“ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்”.

வினாக்கள் :
1. தமிழின் இதயம் என அறிஞர்களால் போற்றப்பட்டவர் யார்?
2. வ.சு.ப. மாணிக்கத்தின் பணிகள் பற்றிக் கூறுக.
3. வ.சு.ப. மாணிக்கத்திற்கு என்ன விருது வழங்கப்பட்டது?
4. பிரித்து எழுதுக: பேராய்வாளர்
5. புணர்ச்சி விதி தருக: தமிழாய்வு
Answer:
1. தமிழின் இதயம் – வ.சு.ப. மாணிக்கம்.
2.

  • அண்ணாமலைப் பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர்.
  • அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் முதல்வர்.
  • மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.

3. திருவள்ளுவர் விருது
4. பேராய்வாளர் – பெருமை + ஆய்வாளர்
5. தமிழாய்வு – தமிழ் + ஆய்வு
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே – தமிழாய்வு.

தமிழாக்கம் தருக.

I make sure I have the basic good habits which respecting my elders, greeting people when I meet them, wishing them well when departing etc. Other than this, observing the law, serving the poor and downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless, assisting someone with a physically challenged etc. are also other good habits of mine. To lead on a peaceful life. I develop other good habits, writing, listening to music, dancing, singing etc. are other such habits which fulfill the needs of my soul.

நான் பெரியவர்களை மதிப்பது, பிறரைச் சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது, அவர்கள் புறப்படும் சமயத்தில் நன்றி செலுத்துவது போன்ற நல்ல பழக்கங்கள் என்னிடம் இருப்பதை உறுதியாகச் சொல்வேன். இது தவிர, சட்டத்தைக் கவனித்தல், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை புரிதல், நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்,

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் அமைத்துத் தருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்தல் போன்ற மற்ற சில நல்ல பழக்கங்களும் என்னிடம் உள்ளது. ஒரு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள நான் மேலும் சில நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறேன், பாடல் கேட்கிறேன், நடனம் ஆடுகிறேன், எழுதுகிறேன், இசையை ரசிக்கிறேன். இதுபோன்ற பழக்கங்களால் என் ஆன்மாவின் தேவைகள் பூர்த்தியாகின்றன.

கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றுக.

“எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள் காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக் கொண்டும் யோசனை செய்தாள்.

அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ‘ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருஷம் இந்தியதேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் ‘படப்போட்டி’யை ஆரம்பித்து விட்டார்கள்.

– ராஜா வந்திருக்கிறார்’, கு. அழகிரிசாமி

உரையாடல்

ராமசாமி : என்னிடம் சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா?
செல்லையா : …. விழித்தான்.
ராமசாமி : உன்னிடம் இருக்கா?
தம்பையா : …….. ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்.
ராமசாமி : உனக்கு இருக்கா?
மங்கம்மாள் : …. மூக்கின் மேல் விரல் வைத்தாள். கண்ணை லேசாக மூடிக்கொண்டாள்.
ராமசாமி : ஏன் மூன்று பேரும் பதில் சொல்லவில்லை என் கேள்விக்கு?

மூவரும் : ….. பதில் இல்லை .
(மற்ற பிள்ளைகள் ராமசாமியின் கேள்விக்கு மூவரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தனர். அன்று பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே 112
ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் ஒரு போட்டி வந்தது.)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

ராமசாமி : என்னிடம் இந்திய தேசிய சரித்திரப் புத்தகம் உள்ளது, உன்னிடம் உள்ளதா?

செல்லையா : என்னிடம் சிவிக்ஸ் புத்தகம் உள்ளது.

ராமசாமி : சரி பரவாயில்லை , போட்டியை ஆரம்பிக்கலாமா?

செல்லையா : சரி
(இருவரும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டுகிறார்கள். இடையிடையே வரைபடம் உள்ளதா, படம் உள்ளதா என்ற போட்டி விரைவாக நடந்தது. ஆளுக்கு ஒரு பக்கம்
பக்கமாகப் புரட்ட போட்டித் தொடர்ந்தது)

ராமசாமி : கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்து உன்னிடம் இன்னும் எத்தனைப் பக்கம் இருக்கிறது என்றான்.

செல்லையா : இன்னும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. உன்னிடம் எத்தனைப் பக்கம் உள்ளது?

ராமசாமி : இதுதான் எனது கடைசிப் பக்கம்.

செல்லையா : ஓ… அப்ப நான்தான் ஜெயிச்சேன்….

உரை எழுதுவோம்

உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை ஒன்றை எழுதுக.

வரவேற்புரை

நமது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை இருகரம்கூப்பி மனமகிழ்வோடு வரவேற்கிறேன்.

முயற்சி செய்து வெற்றி கிடைத்தால் விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள். முயற்சி செய்து வெற்றிகிடைக்காவிட்டால் வீண்முயற்சி என்பார்கள். இதுதான் உலகம். ஆனால், நமது அழைப்பிற்கு இசைவு தந்து நம் முன்னே ஒரு வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அமர்ந்திருக்கும் ஆட்சியாளர் ஒரு அறிவாளர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகில் சவாரி செய்வது போலாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

ஒவ்வொருமாணவரும் ஏதேனும் ஒன்றைச்சாதித்தேதீரவேண்டும் என்ற குறிக்கோளோடுதான் படிக்க வேண்டும். நமது மாவட்ட ஆட்சியரும் பள்ளியிலே பயிலுகின்றபோது தான் எதிர்காலத்தில் ஆட்சியராக ஆக வேண்டும் என்று உறுதியோடிருந்தவர்.

‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கிணங்க அவருடைய முயற்சி பலித்துவிட்டது. இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றும் என்பார்கள். லட்சியத்தை அலட்சியப்படுத்தக்கூடாது. நேற்று செய்தித்தாளிலே நமது மாவட்ட ஆட்சியர் பேட்டிக் கொடுத்திருந்தார். அதிலே தான் படித்த பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் போவதாகக் கூறியிருந்தார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயென நமது பள்ளியே மகிழந்து போனது.

வெற்றிபெறுவதற்குமுன் உலகை நீ அறிவாய், வெற்றிபெற்றபிறகு உலகம் உன்னை அறியும் என்பது போல, நமது ஆட்சியரும் உலகம் அறிந்த உயர்ந்த மனிதராகக் காணப்படுகிறார். தான் படித்த பள்ளிக்கு வருகை புரிந்தும், பள்ளியால் தனக்குப் பெருமை என்று கூறும் ஆட்சியருடைய பேச்சும் : நம்மையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிடச் செய்கிறது.

‘ஞாலம் கருதினும் கைகூடும்’ என்னும் வள்ளுவனின் வாக்கிற்கு இலக்கணமான நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை மீண்டும் மீண்டும் வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.

விடைக்கேற்ற வினா அமைத்தல்

விடை : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் இடம் பெற்றுள்ளது.
வினா : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

1. விடை : நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
வினா : நடுவண் அரசு எந்த ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது?

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

2. விடை : சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன.
வினா : சாலைகளில் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுவது எது?

3. விடை : 1865ல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.
வினா : தென்னிந்தியாவில் முதல் தொடர்வண்டி நிலையம் எங்கு எப்போது அமைக்கப்பட்டது.

4. விடை : “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுட் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார் கிரியோர் சன்
வினா : ஆவணப்படம் என்று எதைச் சிரியோர்சன் குறிப்பிடுகிறார்?

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 2
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…….
வான் மிதக்கும்…… கண்க ளுக்கு……
மயில் இறகால் மையிடவா
மார் உதைக்கும்….. கால்களுக்கு……
மணி கொலுசு நான் இடவா…….

இலக்கிய நயம் பாராட்டுதல்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்.
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே. – திரிகூட ராசப்பக் கவிராயர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

திரண்டக் கருத்து :
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து பெண் குரங்குகளுக்குக் 1 கொடுக்கின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களை தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைக் கண்களால் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரையும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகள் உடையது என்று குறத்தி தன் மலையை விளக்குகிறாள்.

தொடை நயம் :
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு போன்ற நயங்கள் அமைந்துள்ளன.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
சான்று :
கானவர்கள்
மன சித்தர்
கூனலிளம்
குற்றாலம்

எதுகை நயம் :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
சான்று :
வாரங்கள்
காவர்கள்
தேருவித்
கூலிளம்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
கொஞ்சும்
யொழுகும்
வழுகும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

அணி நயம் :
அணி என்பதற்கு அழகு என்பது பொருள் செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, : பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி என்பர்.

இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது. பாடலின் பொருளை மிகவும் உயர்த்திக் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
சான்று :
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கற்பனை நயம் :
கற்பனை கவிஞனுக்கு கை வந்த கலை
என்பதற்கு ஏற்ப கவிஞர் தன் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
சான்று :
தேனருவித் திரையெழும்பி வானின் வழியொழுகும்.

குறுக்கெழுத்துப் புதிர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 3
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 4
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 6
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 7

நிற்க அதற்குத் தக

நீவீர் செல்லும் வழியில் விபத்தினைக் காண்கிறீர்கள். விபத்திற்கான காரணங்கள் என்ன? பட்டியலிடுக. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எவ்விதம் உதவலாம்?
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.6 குறியீடு 8

படிப்போம் பயன்படுத்துவோம் (அலுவலகப் பொருள்கள்)

1. Stamp pad – மை பொதி
2. Stapler – கம்பிதைப்புக் கருவி
3. Folder – மடிப்புத்தாள்
4. File – கோப்பு
5. Rubber Stamp – இழுவை முத்திரை
6. Eraser – அழிப்பான்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.5 கோடை மழை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.5 கோடை மழை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

Question 1.
பொது இடங்களில் நீவிர் பார்த்த மனிதநேய நிகழ்வை வகுப்பறைச் சூழலில் பகிர்ந்து கொள்க.
Answer:
எங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் நின்று கொண்டிருந்தேன். அவ்விடம் அதிகமாக மக்கள் கூடுவார்கள். பேருந்து நிறுத்தத்தின் அருகில், 50 வயதுள்ள ஒருவர் கரித்துண்டால் கோவில், திருச்சபை பள்ளிவாசல் என வரைந்து கொண்டிருந்தார். ஓவியம் அற்புதம். முழுமையாக அவரைப் பார்த்தேன். கால்கள் இரண்டும் இல்லை. இறைவா இது என்ன சோதனை என்று நினைத்துக் கொண்டேன்.

அப்போது பத்து வயது சிறுவன் அவருக்குச் சிற்றுண்டி வாங்கி வந்து ஊட்டுவதைப் பார்த்தேன். விசாரித்ததில் அவர் நல்ல ஓவியர். விபத்தில் கால்கள் இழந்ததால் மனைவியும், உறவினரும் இவரைக் கைவிட்டுவிட்டதாகவும் கொன்னார்கள். இந்தப் பையனும் ஒரு அனாதை. ஆனால், இவருக்குக் கிடைக்கும் பணத்தில் அந்தப் பையன் தானும் சாப்பிட்டுக் கொண்டு இவரையும் கவனித்துக் கொள்கிறான் என்றார்கள். இதுதான் மனித நேயம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

ஒரு வாரம் கழித்து நானும் இவர்களை ஓர் அனாதை ஆசிரமத்தில் சேர்த்தேன். அவர்கள் சென்றுவர அரசிடம் பரிந்துரை செய்து மூன்று சக்கர வாகனம் பெற்றுக் கொடுத்தேன். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரையும் பார்த்தேன். எவ்வளவோ மாற்றம்! நன்றி உணர்ச்சியில் அவர்கள் இருவரின் கண்களில் கண்ணீர்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
கோடை மழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப்பண்புகளை விளக்குக.
Answer:
கதைமாந்தர்கள் : ஆறுமுகம் (முதியவர்), குழந்தை , பாபு (மருந்தக ஊழியர்), டாக்டர், நர்ஸ்.

முன்னுரை :
சாந்தாதத்தின் ‘கோடைமழை’ எனும் சிறுகதையில் மனைவி இறந்த துக்கம் தாளாது கணவனும் விஷமருந்தி போனதால் பச்சிளம் குழந்தையை முதியவர் ஆறுமுகம் வளர்க்கிறார். தள்ளாத வயதில் தனக்குப் பின் இக்குழந்தையின் நிலை என்ன ஆகுமோ என்று எண்ணி தத்துக் கொடுக்க முடிவு செய்கிறார். அவ்வாறு தத்துக் கொடுக்கும்போது ஏற்படுகின்ற மனித நேயப்பண்புகளை இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.

மருத்துவமனையில் குழந்தை அழுதல்:
விழிகளை அகலவிரித்து எந்தவித இலக்கும் இல்லாமல் அப்படியும் இப்படியும் பார்த்து கண்ணைச் சுழற்றி குழந்தை அழ ஆரம்பித்தது. இது போலவே அரை மணி நேரமாக அவஸ்திப்படும் குழந்தைக்குப் பசியா, காய்ச்சலா, அசதியா தெரியவில்லை என்று ஏங்குகிறார் முதியவர் ஆறுமுகம்.

முதியவரின் புலம்பல் :
குழந்தைக்கு ரெண்டு சொட்டு டீத்தண்ணீர் கொடுக்கனும் தானும் குடித்தால் தொண்டைக்கு இதமா இருக்கும். டீ விற்கும் பையனையும் உள்ளே விடமாட்டார்கள் வெளியே போய்விட்டு வந்தால் இடம் போய்விடும் என்ன செய்றது. பரபரத்து ஓடி வந்தும் பலன் இல்லை என்று தமக்குத் தாமே எண்ணிக் குழந்தையைத் தோளில் சரிசெய்து கொண்டு சமாதானம் ஆனார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

முதியவரின் பொறுமை :
ஆஸ்பிட்டலில் வரிசை ஆமை வேகத்தில் சென்றதால் முதியவருக்கு அலுப்பு கூடியது. வீட்டுக்குப் போலாமா என்ற எரிச்சல் இரண்டு நாளா குழந்தைக்குக் கை வைத்தியம் பார்த்தும் பிடிபடல, தனியார் ஆஸ்பத்திரிக்கு போக வசதியும் இல்ல, மனுச ஆதரவும் இல்ல இன்னும் என்ன நடக்கப் போகுதோ பொறுமையாய் இருப்போம் காசா பணமா.

முதியவரின் நிலைப்பாடு :
அடப்பாவமே ஆண்டவன் கொடுத்த உசுரு தன்னையும் பார்த்துக் கொள்ள யாரும் இல்ல, தன்னையே தானும் பார்த்துக் கொள்ளவும் முடியல ஆயுசு பூராவும் இந்தக் குழந்தையோடு இந்தக் கிழடு அல்லாட வேண்டியது தான். உனக்கு நான் எனக்கு நீ என்றாகிவிட்ட நாதியற்ற அவஸ்தை, தகப்பனையும் பிள்ளையையும் பாதுகாக்க வேண்டிய வாரிசு நட்டாத்துல விட்டுட்டுப் போய்விட்டான். நாலு நாள் நல்ல காய்ச்சல் கட்டியவள் கண் மூடிய பின் தானும் குழந்தையை அனாதை ஆக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.

முதியவரின் தனிமை :
அனாதை ஆகிவிட்ட குழந்தையை எண்ணி முதியவரின் ஓயாத புலம்பல். ஆனால் தன் பிள்ளையைப் பிரிந்த துயரம் துளியும் இல்லை. அந்த அளவுக்கு வெறுப்பு. என்னையும் குழந்தையும் : தனியாக்கிட்டு போயிட்டானே என்ற கோபம். பாசம் பாசிபோல் மூடிவிட்டது. பிஞ்சுப் பிள்ளைக்கூட நினைக்காமல் பொண்டாட்டி மேல பாசம். எத்தனையோ ஆண்கள் மனைவியை இழந்து வாழல. இவனெல்லாம் ஒரு கோழை.

மருத்துவரிடம் செல்லுதல் :
மீண்டும் குழந்தை சினுங்க ஆரம்பித்துவிட்டது அப்போது உள்ளேயிருந்து ஒரு தாய் உள்ளேயிருந்து தன் தோளில் கோழிக்குஞ்சு போல் தூக்கிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்க்கவும் நினைக்கவும் முடியாமல் மூச்சு விடுவதை தவிர ஏதும் தெரியாமல் உள்ளே சென்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

மருத்துவரின் அறிவுரை :
பெரியவரே! நெஞ்சில் சளி கட்டி இருக்கு அதான் காய்ச்சல் பயப்பட வேண்டாம் பக்குவமாய் பார்த்துக் கொண்டால் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார்.

நர்ஸ் நலம் விசாரித்தல் :
ஏன் பெரியவரே உங்க கை இப்படி நடுங்குது. வீட்ல வேற யாரும் இல்லையா? என்று கேட்க பதில் கூற முடியாமல் ஊசி போட்ட குழந்தை வலியால் அழுவதை அணைத்துக் கொண்டு சிரிப்பை மட்டும் பதிலாக்கி விட்டு வெளியேறினார்.

மருந்தகம் செல்லுதல் :
வாங்கய்யா உட்காருங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லையா! ஆமாம் பாபு மூணு நாளா ரொம்ப கஷ்டப்படுது டாக்டர் ஊசி போட்டிருக்கார். மருந்து கொடுத்தா சரியாயிடும்னு சொன்னார். பாபு….. நான் மருந்து மட்டும் வாங்க வரல ரொம்ப நாளா சொல்லணும் நினைச்சேன். இப்பத்தான் நேரம் வந்தது. பாபு நான் ரொம்ப நாள் உசிரோட இருக்கணும்னு தான் ஆசை நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கனுமே? சாவோட மல்லுக்கு நிற்கிற வயசா இது முடியலப்பா. நாளைக்கு நீ அவங்கள கூட்டிட்டு வா.

தாய் பாசம் :
அம்மா என்கிற பாசம் தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது. பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் பாபு புரியுது. என் சுயநலத்துக்காக குழந்தையை அனாதையாக விட்டுட்டு போறது பெரிய பாவம். சரி பாபு கொஞ்சம் தாமதித்தாலும் மனசு மாறிடும் மருந்தும் குழந்தையுமாய் விடவிடுவென நடந்தார்.

முதியவரின் குமுறல்கள் :
பாபுவுடன் வந்தவர்களைப் பார்த்த போது பிள்ளை பாக்கியம், ஏக்கம், தவிப்பு, அத்தனையும் உணர்ந்த போது குழந்தையின் பாதுகாப்பு உறுதியானது. நெடுநாள் தயக்கத்துக்குப் பின் தன் முடிவுக்கு இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்பதுதான் பெரியவருக்கு உறுத்தல்.

பாபுவின் மனித நேயம் :
ஐயா! இனிமேல் உங்களுக்குக் கவலை வேண்டாம். உங்களுடைய வேதனை எங்களால் தாங்க முடியல. நீங்க எங்க வாழ்க்கைக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிங்க. நன்றி சொல்றதுக்கு பதிலா நான் உங்கிட்ட உதவி கேட்கிறேன் நீங்களும் குழந்தையைப் பிரிந்து இருக்காம எங்களோட வந்திருங்க தயங்காதீங்க.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

முதியவரின் தடுமாற்றம் :
இறைஞ்சும் பாபுவைக் கண்டு தடுமாறினார். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம் பாபு இப்போதைக்கு எனக்கு சாவு வராது பாபு கூறினார்.

முடிவுரை:
இக்காலக்கட்டத்தில் தன்னைப் பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் ஆண்களைப் போல் இல்லாமல் தாய் தந்தையை இழந்த பச்சிளம் குழந்தையையும், முதியவரையும் அரவணைத்துத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பாபுவின் மனிதநேயப் பண்பு, கோடை மழை – கதை வாயிலாக அறிய முடிகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சாந்தா தத் …………… சேர்ந்த பெண் படைப்பாளர்.
அ) சென்னையைச்
ஆ) சிதம்பரத்தைச்
இ) காஞ்சிபுரத்தைச்
ஈ) வடலூரைச்
Answer:
இ) காஞ்சிபுரத்தைச்

Question 2.
‘கோடை மழை’ என்னும் சிறுகதை வெளியான இதழ்
அ) கோகுலம்
ஆ) அமுதசுரபி
இ) கணையாழி
ஈ) குங்குமம்
Answer:
ஆ) அமுதசுரபி

Question 3.
‘கோடை மழை’ என்னும் சிறுகதைக்குச் சிறந்த சிறுகதைக்கான விருதையளித்த அமைப்பு
அ) இலக்கியச் சிந்தனை
ஆ) பாரதி மன்றம்
இ) முத்தமிழ் மன்றம்
ஈ) தமிழ் இலக்கியப் பேரவை
Answer:
அ) இலக்கியச் சிந்தனை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

Question 4.
சாந்தா தத் தற்போது வசிக்குமிடம்
அ) காஞ்சிபும்
ஆ) ஹைதரபாத்
இ) மைசூர்
ஈ) பெங்களூர்
Answer:
ஆ) ஹைதரபாத்

Question 5.
சாந்தா தத்தின் ‘நிறை’ மாத இதழ் வெளியாகும் இடம்
அ) சென்னை
ஆ) மைசூர்
இ) ஹைதரபாத்
ஈ) மும்பை
Answer:
இ) ஹைதரபாத்

Question 6.
சாந்தா தத் …………… என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
அ) திசை எட்டும்
ஆ) நிறை
இ) நானிலம்
ஈ) வானம்
Answer:
அ) திசை எட்டும்

Question 7.
சாந்தா தாத்தின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது
அ) சாகித்திய அகாதெமி
ஆ) நியூ புக் செஞ்சுரி
இ) கிழக்கு பதிப்பகம்
ஈ) மணிவாசகம் பதிப்பகம்
Answer:
அ) சாகித்திய அகாதெமி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.5 கோடை மழை

Question 8.
சாந்தா தத்தின் கதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பு
அ) பெண்ணியம்
ஆ) கல்வி
இ) மனிதநேயம்
ஈ) அரசியல்
Answer:
இ) மனிதநேயம்

Question 9.
‘கோடை மழை’ கதையின் உட்பொருள்
அ) முதியோர்களை அரவணைப்பது
ஆ) இளைஞர்களின் காதல்
இ) வறண்ட நிலத்தின் நிலை
ஈ) ஏழைகளின் கண்ணீ ர்
Answer:
அ) முதியோர்களை அரவணைப்பது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.5 செவ்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.5 செவ்வி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காணும் திருத்தற்குறியீடுகளைப் பொருத்திச் சரியான விடை காண்க.
1. நிறுத்தற்குறிகள்
2. இடைவெளி தரவேண்டியவை
3. இணைக்க வேண்டியவை
4. எழுத்து வடிவம்
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 1
1. 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
2. 1 – அ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ
3. 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
4. 1 – இ, 2 – ஆ, 3 – அ, 4 – ஈ
Answer:
1.1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக?
Answer:
நூல்களோ, இதழ்களோ பிரைகோடு வெளிவந்தால், படிப்பவர் கருத்துகளைத் தவறாக உணர்வர். எனவே, எழுத்துப்பிழை, தொடர்பிலை மயங்கொலிப்பிழை, ஒருமை பன்மைப்பிழை இல்லாமல் திருத்தமாக அச்சிட வேண்டும். அச்சுப்படி மெய்ப்பு) திருத்துபவர், இப்பணியைச் செய்வதற்குரிய நெறிமுறைகளை திருத்தக் குறியீடுகளைத் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.

அச்சுப்படி திருத்துபவர் அறிந்திருக்க வேண்டிய குறியீடுகளை ஐந்து வகைகளாகப் பிரிப்பர்.
i. பொதுவானரை (General)
ii. நிறுத்த குறியீடுகள் தொடர்பானவை (Punctuations)
iii. இன்வெளி தரவேண்டியவை (Spacing)
iv இணைக்க வேண்டியவை (Alignment)
எழுத்து வடிவம் (Type / Font) என்பனவாகும்.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 2
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 3
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 4

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

Question 2.
ஏற்ற இடங்களில் அச்சுத் திருத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறையைக் கீழ்க்காணும் பத்தியின் மூலம் அறிக.

அறிஞர் வாழ்வில் நகைச்சுவை

கவிஞர் கண்ணதாசன் கல்லூரி ஒன்றில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு

கவிதை யை வாசிக்க ஆரம்பித்தார்ர். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடித்தது) கரவொலி)
அடங்க வெகு நேரம் பிடித்தது கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார் ,”இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதைய எழுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார் அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதியுஅ கவிதையை அவரை வாசிக்கசொ சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என்கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு. ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய சொல்லும் பொருளைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது”.
Answer:
கவிஞர் கண்ணதாசன், கல்லூரி ஒன்றில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது, ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடித்ததும், கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது. கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், “இன்று நான் வாசித்த கவிதை, நான் எழுதியது அன்று. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர், நேற்று ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு வந்து, என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது. எனவே, நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்கச் சொல்லிவிட்டு, அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது, எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது, பலத்த வரவேற்பு. ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழியச் சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

Question 3.
அச்சுப்படி திருத்துபவரின் பணிகள் யாவை?
Answer:

  • அச்சுப்படியில் ஒவ்வொரு வரியையும் படித்து, மூலப்படியில் உள்ளபடியே செய்திகள் அச்சாகி உள்ளனவா எனக் கவனிக்க வேண்டும்.
  • செய்தியின் உள்ளடக்கம், புள்ளி விவரங்கள், எண்கள், அட்டவணைகள் முதலியன விடுபட்டுள்ளனவா என்பதை, மூலப்படியுடன் ஒப்பிட்டுக் கவனிக்க வேண்டும்.
  • அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ, உள்ளடக்கத்தையோ மாறுதல் கூடாது.
  • பிழை ஏற்பட்ட சொல்லின் மீது திருத்தத்தை எழுதக்கூடாது. வலமாகவே இடமாகவோ ஓரத்தில் எழுதவேண்டும்.
  • ஒரு வரியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிழைகள் இருந்தால், பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாகக் காட்டல் வேண்டும்.
  • பிழைகள் பல இருந்தால், அதை நீக்கித் தெளிவாக எழுதி வேண்டும்.
  • அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ண மையால் திருத்த வேண்டும்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
திரு. வி. கலியான கந்தரனார் (1883-1953)

“பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயாருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன பாரிக்கின்றன; இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்தும் வவவொளி வீசி எழுங்கள்; எழுங்கள்” என்று, இளமை விருந்து நூலில் தமிழினைக் கட்டுக்குள் அக்காமல் செழுமையுறச் செய்ய இளைஞர்களை அழைத்தவர் திரு.வி.க.

திரு.வி.க. தம் கந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார். வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா. கதிரைவேல் என்பவரிடய தமிழ்ப் படித்தார். பிறகு மயிலை தணிகாசலம் என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார்.

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படும் திரு.வி.க… பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு , மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்தினவ, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய நூல்களை எழுதினார். சிறந்த மேடைப்பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய இவர், தேசபக்தன், நவசக்தி இதயக்களுக்கு ஆசிரியராக விளங்கினார். தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி:

1. பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து, உலகை
நோக்குங்கள் – ஒரே தொடராக மாற்றுக.
பொறுமையைப் பூண்டு, அதன் ஆற்றலை உணர்ந்து உலகை நோக்குங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

2. எவையேனும் இரண்டு முன்னிலைப் பன்மை வினைமுற்றுச் சொற்களைப் பத்தியிலிருந்து எடுத்து எழுதுக.
நோக்குங்கள், உணருங்கள்.

3. தமிழ்த்தென்றல் என்று திரு.வி.க. அழைக்கப்படுகிறார். – இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக.
திரு.வி.க.வைத் தமிழ்த்தென்றல் என அழைக்கின்றனர்.

4. ஞாயிற்றொளி – புணர்ச்சிவிதி கூறுக.
ஞாயிற்றொளி – ஞாயிறு + ஒளி
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் டறஒற்று இரட்டும்” (ஞாயிற்று + ஒளி)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (ஞாயிற்ற் + ஒளி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஞாயிற்றொளி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

5. எண்ணும்மைத் தொடர்கள் இரண்டனை எடுத்து எழுதுக.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இந்தியாவும் விடுதலையும்.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. தமிழினைக் கட்டுக்குள் அடக்காமல், செழுமையுறச் செய்ய இளைஞர்களை ‘இளமைவிருந்து’ நூலில் அழைத்தவர் திரு.வி.க.
வினா : ‘இளமைவிருந்து’ நூலில் இளைஞர்களைத் திரு.வி.க. எதற்காக அழைத்தார்?

2. திரு. வி. க. தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
வினா : திரு.வி.க., எதைத் தோற்றுவித்து, எதற்காகப் பாடுபட்டார்?

3. சிறந்த மேடைப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய திரு.வி.க. தேசபக்தன், நவசக்தி
இதழ்களுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.
வினா : திரு.வி.க. எவ்வெவற்றில் சிறந்து விளங்கினார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

தமிழக்கம் தருக.

1. An eye for an eye only end up making the whole world blind.
கண்ணுக்குக் கண் எனப் பழிவாங்கும் செயல், முடிவில் உலகம் முழுவதையுமே குருடாக்கிவிடும்.

2. You must be the change you wish to see in the world.
இந்த உலகத்தில் மாற்ற தைக் காண விரும்பினால், நீ முதலில் மாறவேண்டும்.

3. The week can never forgive. Forgiveness is the attribute of the strong.
வலிமை இல்லாதவன் மறக்கமாட்டான். மறப்பது என்பது வலிமையானவனின் உயர்பண்பு.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

4. Nobody can hurt me without my permission.
என் அனுமத் இல்லாமல் என்னை எவரும் வேதனைப்படுத்த முடியாது.

5. You must not lost faith in humanity. Humanity is an ocean, if a few drops of the
S are dirty, the ocean does not become dirty. – Mahatma Gandhi மனித இனத்திடம் நீ நம்பிக்கையை இழக்கக்கூடாது. மனித இனம் என்பது பெருங்கடல். அதில்
சில துளிகள் அழுக்காக இருந்தால், கடலே அழுக்கடைந்து விடாது.

கதையைப் படித்துப் பொருளுணர்ந்து, நிகழ்வை உரையாடலாக மாற்றுக. கதையில் காணலாகும் எவையேனும் ஐந்து பிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களை எழுதுக. நிகழ்வை உரையாடலாக மாற்றுதல்.

(அலுவலகத் தொலைபேசி ஒலிக்கிறது)

அம்மா : வணக்கம்.
செந்தில் : உடனே நீ அலுவலகத்திற்கு விடுப்புச் சொல்லிவிட்டு, என் அலுவலகம் வா. இன்று ஆயுள்காப்பு விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடவேண்டும். உன் நிழற்படத்தையும், சஞ்சுவின் நிழற்படத்தையும் எடுத்து வா (தொலைபேசி துண்டிப்பு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

அம்மா : (தனக்குள்) அலுவலகத்தில் கணக்குத் தணிக்கை நடக்கிறது. என்ன செய்வது? (மீண்டும் தொலைப்பேசி ஒலிக்கிறது) (தனக்குள்) இது, சஞ்சுவின் பள்ளி அழைப்புப்போல் உள்ளதே! என்னவோ?

சஞ்சு : அம்மா, நான் சஞ்சு பேசுகிறேன்.
அம்மா : என்னடா, உடம்புக்கு ஏதாவதா? (பதற்றத்தை மறைத்தபடி)
சஞ்சு : அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா. வகுப்பு ஆசிரியரிடம் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் பேசுகிறேன். மன்னித்துக்கொள்
அம்மா. அம்மா : சஞ்சு, எதற்கு மன்னிப்பு?
சஞ்சு : இன்று உங்கள் பிறந்தநாள் ஆயிற்றே! மறந்துவிட்டீர்களா?

அம்மா : அடடே. ஆமாம், ஜூலை பத்து இல்லே. எப்படி மறப்பேன்? உன் அப்பாகூட நினைவில் வைத்து வாழ்த்துச் சொல்லவில்லையே!
சஞ்சு : (கொஞ்சும் குரலில்) ம்மா….இரவுகூட நினைவு இருந்தது. காலையில் திடீரென மறந்து போனது. மன்னித்துக்கொள்ளுங்கள்

அம்மா. உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள்!
(மகிழ்ச்சியில் திக்கித் திணறியபோது) அம்மா, நான் உங்களுக்காக ஒரு கரியகாந்திப்பூ வரைந்து வைத்துள்ளேன். மாலை வீடு வந்ததும் தருகிறேன். சரியா?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

அம்மா : ரொம்ப நன்றி செல்லம். ரொம்ப நன்றி! (மனச்சுமை குறைந்து, மகனுடன் நடப்பதுபோல் உணர்தல்)

ஏழு பிறமொழிச் சொற்கள் – உரிய தமிழ்ச்சொற்கள்

1. போன் – தொலைபேசி
2. லீவ் – விடுப்பு
3. இன்ஷூரன்ஸ் பேப்பர் – ஆயுள்காப்பீட்டுப் படிவம்
4. ஸ்பெஷல் பர்மிஷன் – சிறப்பு அனுமதி
5. பர்த்டே – பிறந்தநாள்
6. ஈவ்னிங் – மாலை
7. தாங்க்ஸ் – நன்றி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

உரை எழுதுவோம்

உன் பள்ளியில் திரு. அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படுகிறது. பள்ளிக்கு அருகில் உள்ள கல்லூரியின் மாணவர்கள் திரட்டிய நிதியைக் கொண்டு, பள்ளியின் உயர்வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் கையடக்கட பிரதி ஒன்றும், நில வரைபடப் புத்தகம் ஒன்றும் பரிசளிக்கிறார்கள். அவர்களுக்குப் பள்ளியின் சார்பாக நன்றி கூற, ஒருபக்க அளவில் நன்றியுரை ஒன்றை எழுதுக.

விழா நாயகர் அவர்களே
விழா நடத்தும் கல்லூரி மாணவச் சகோதரர்களே!
கூடி இருக்கும் மாணவ நண்பர்களே!
இந்த விமாவின் நோக்கம் இன்னது என்பதை நாம் அறிவோம். சாதனை பல படைத்து, சாதாரண குடிமகனும் அருஞ்செயல்களால் இந்திய நாட்டின் தலைமகனாகச் செயல்பட முடியும் என்பதை நிலைநாட்யெவா, மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

அவர் இன்று நம்மோடு இல்லை. எனினும், அவர் குறிப்பாக மாணவச் சமுதாயத்துடன் கொண்ட தொடர்பையோ, நம்மிடம் செலுத்திய அன்பையோ, நம் முன்னேற்றத்திற்கு அவர் கூறிய அறிவுரைகளையோ நாம் மறந்துவிட முடியாது.

அதற்கு வாழும் சான்றாக, நம் அருகிலுள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள், அண்ணன்மார்கள், நமக்கு வழிகாட்டவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல் ஒன்றையும், நில வரைபடப் புத்தகம் ஒன்றையும் வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மட்டுமல்ல, நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்பித்ததற்காகவும் என் சார்பாகவும், எங்கள் பள்ளியின் சார்பாகவும், நெறிகாட்டும் தலைமை மற்றும், ஆசிரியர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம்.
– மகாத்மா காந்தி

இலக்கிய நயம் பாராட்டுக

சங்கத் தமிழ் அனைத்தும் தா

இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற
மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை
ஒருகாலத்தில் தன் தாகம் தணித்த
மண்பானையைத்தேடி அல்லலுற்றது.
பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன
கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை
ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி
அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக…….
நீலவண்ண க் கடற்பரப்பில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது.
அதன் குஞ்சு பொரிப்பில்
ஆயுதமும் புல்லாங்குழல் மறுகையுமாய்
அணங்கொருத்தி உதித்தெழுந்தாள்.
வயல்வெளியெங்கும் சலசலத்துத் திரிந்த
மருதயாழின் ஓசை வழிந்தோட
கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின்முன்
பிரபஞ்சமே தன்னைப் புனைந்து கொண்டது
பாணனின் கோப்பை
இப்போது காலியாயிருந்தது
தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்து பூவைக்
குழந்தைக்குத் தந்து வலியில் வாழ்கிய

பச்சைத்தாவரத்தின் கண்களில்
ஒருதுளி ரத்தம் தேங்கியருந்தது
சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத்திறந்து
காக்கைப்பாடியை வெளியேவந்தாள்.
ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென
அருகே வந்தவள் முத்தம் தருகையில் பறவைகள் தொலைந்துபோன பூமியில்
குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து
கணிப்பொறித்திரையில்
என் சின்னமகள்
ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள்.
– ஹெச். ஜி. ரசூல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

சங்கத் தமிழ் அனைத்தும் தா

ஆசிரியர் குறிப்பு : இந்தப் புதுக்கவிதையைப் பாடியுள்ளவர் ஹெச். ஜி. ரசூல் ஆவார். இவர் இயற்கை, மொழி, இலக்கியம், தமிழ்ப் பண்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி இதனைப் படைத்துள்ளார்.

பாடல் பொருள் : இரண்டாயிரம் ஆண்டுக்கால வாழ்வுடைய நீண்ட நெடிய கவிதையைப் பெற்றெடுத்த முதுமையான தாயைத் தேடிக் களைத்தேன். அது, ஒரு காலத்தில் தன் தாகத்தைத் தணிக்கத் தண்ணீரைத் தேடி அலைந்த காக்கை, மண் பானையைக் கண்டு நீர் பருக அல்லல் உற்றதுபோல் உள்ளது. பாடப் புத்தகத்தில் படங்களைப் பார்த்துச் சொல்லிக் கொடுத்த கதைக்கு உள்ளிருந்து எந்த நீரூற்றும் பீறிட்டு எழவில்லை. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்துவகையான நிலங்களையும் பெயர்த்தெடுத்து, வேறு இடத்தில் வைத்துப் பாதுகாக்க வழி இல்லை.

நீலவண்ணக் கடலை ஒட்டிய நிலப்பரப்பில் அந்தப் பறவை முட்டை ஒன்றை இட்டது. அது குஞ்சு பொரித்தபோது, பெண் ஒருத்தி, ஒருகையில் படைக்கருவியும் இன்னொரு கையில் புல்லாங்குழலுமாகத் தோன்றினாள்! வயல்வெளி எங்கும் மருதயாழின் ஓசை சலசலத்து வழிந்து ஓடியது! கால்களைச் சுழற்றி ஆடிய நாட்டிய நங்கை (விறலி)யின் கூத்தின்முன், இந்தப் பிரபஞ்சமே தன்னை அலங்கரித்துக் கொண்டது.

பாடலிசைப்பவனின் (பாணனின்) கைக்கோப்பை கள்ளின்றி இப்போது காலியாக உள்ளது. அதோ, தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்து எடுத்த பூவைக் குழந்தைக்குக் கொடுத்துவிட்டு, வலியில் மூழ்கித் துன்புறும் பசுமையான தாவரத்தின் கண்களில் இரத்தம் ஒரு துளியாகத் தேங்கி இருப்பதைப் பார்த்தாயா? சங்க இலக்கியக் கவிதையிலிருந்து எழுத்து ஒன்றைத் திறந்துகொண்டு, காக்கைப்பாடினி அம்மை வெளிவந்தாள். என்னைக் கண்டு, “ஆறாம் திணையில் துளிர்த்தெழுந்த அறிவியல் தமிழ், நீ” எனக் கூறியபடி அருகில் வந்து முத்தம் கொடுத்தாள். அப்போது பூமியில் பறவைகள் தொலைந்துபோய் இருந்தன. குளிர் ஊட்டப்பட்ட அறை ஒன்றுக்குள் உட்கார்ந்துகொண்டு, என் சிறிய மகள் கணிப்பொறித் திரையில் ஒரு காக்கையின் படத்தை வரைந்து கொண்டிருந்தாள்.

மையக்கருத்து : இயற்கைவழி வாழ்ந்ததை மறந்து, இன்று மக்கள் அறிவியல் சாதனங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வெளியில் சிட்டுக் குருவிகளையும் காக்கைகளையும் காண முடியவில்லை. வசிக்கும் அறை குளிரூட்டப்பட்டிருக்கிறது. வாழ்வுமுறைகள் அனைத்தும் மாறி இருக்கின்றன. பண்டைய இயற்கை வாழ்வை இலக்கியங்களில் இருந்துதான் காணமுடிகிறது. அவர்றையாவது காப்போம். தாகம் தீர்க்க முயல்வோம் என்பதே மையப்பொருளாகும்.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 5
Answer:
ஆறறிவு படைத்த மனித இனம் நீ
ஐயறிவு படைத்த விலங்தனம் நான்
நான் தோன்றிய காலம் முதல் இப்படியே வாழ்கிறேன்
நீ குளிரில் சம்பரிக் கோட்டும் குல்லாயும் அணிந்துள்ளாய்
உன் அறிவும் செயலும் இயற்கையை மாற்றிவிட்டது
நான் இன்றும் இயற்கையோடு பொருந்தியே வாழ்கிறேன்.
என்ன அறிவு இருந்து என்ன பயன்?
இயற்கைவழி வாழ்வே நல்வாழ்வு என்று தெளிவுகொள்!
நாயதானே சொன்னது என்று நக்கல் செய்யாதே !
மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்றார் ஐயன் வள்ளுவர்!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

missing content

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 6

இடமிருந்து வலம் :

1. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளைக் கூறும் துறை (9) – பொருண்மொழிக் காஞ்சி
7. தேன் – மற்றொரு சொல் (4) – பிரசம்
15. புல்லின் இதழ்கள் – நூலாசிரியர் (4) – விட்மன்
16. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடம் (4) – மன்றம்
17. சி.சு.செல்லப்பா நடத்திய இதழ் (4) – எழுத்து
19. ஜி.யு.போப், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பக்தி இலக்கியம் (6) – திருவாசகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

வலமிருந்து இடம் :
6. யானை – வேறொரு சொல் (5) – அஞ்சனம்
9. வந்தவாசிக்கு அருகில் சமணப்பள்ளி இருந்த ஊர் (3) – வேடல்
12. உமறுப்புலவரை ஆதரித்தவர் (5) – சீதக்காதி
20. கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் (4) – அன்னம்

மேலிந்து கீழ் :
2. புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை (4) – காங்கனை
3. பாரதி நடத்த விரும்பிய கருத்துப்பட இதழ் (6) – சித்திரவளி
4. இளையராஜா உருவாக்கிய இராகம் (5) – பஞ்சமுகி
5. நற்றிணை 153ஆவது பாடலை இயற்றியவர் (6) – தனிமகனார்
6. அணுவைப்போலச் சிறுத்து நிற்கும் ஆற்றல் (3) – அணிமா
12. இந்தச் சொல்லின் திரிபே சீறா (3) – சீறத்
13. மகாபாரதத்தில் கொடைவீரன் (4) – கர்ணன் (கன்னன்)
14. பாரதிதாசன் நடத்திய இதழ் (3) – குயில்

கீழிருந்து மேல் :
7. தவறு – வேறொரு சொல் (2) – பிழை
8. தருமு சிவராம் என்னும் புனைபெயரிலும் வாதியவர் (4) – பிரமிள்
9. மூங்கில் – மற்றொரு சொல் (2) – வேய்
10. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் (6), – திருவாதவூர்
11. ஐங்குறுநூறு பாடும் மலர்களில் ஒன்று (2) – சாயா
18. மலை என்றும் சொல்லலாம் (2) – வரை (கிரி)
19. பத்தாம் திருமுறை (7) – திருமந்திரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

நிற்க அதற்குத் தக

மனித இனம் கூடிவாழும் இயல்புடையது. நாம் அன்றாடம் பலருடன் பழகக்கூடிய இன்றைய சூழலில் ஏற்படக்கூடிய சிறிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - 7

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

கலைச்சொல் அறிவோம்

நாங்கூழ்ப் புழு – Earthworm
உலகமயமாக்கல் – Globalisation
முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D)
விழிப்புணர்வு – Awareness
கடவுச்சீட்டு – Passport
பொருள்முதல் வாதம் – Materialism

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 1.
எதையும் எதிர்பாராமல் நீங்கள் பிறருக்கு உதவி செய்த நிகழ்வை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
மாணவச் செல்வங்களே!
வணக்கம்.
எதையும் எதிர்பார்க்காமல் செய்த உதவி மண்ணையும் விண்ணையும்விட உயர்வானது. அது பற்றிய ஒரு நிகழ்வைக் கூறுகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் நமது பள்ளி வாயிலைக் கடக்கும் போது என்னை சார் என்ற குரல் அழைத்துத் திரும்பினேன். ஒரு ஐம்பது வயதுள்ள ஒரு அம்மாவும், பத்து வயது இருக்கும் ஒரு பையனும் நின்றிருந்தார்கள். என்னம்மா வேண்டும் என்றேன். சார் இவன் என் மகளுடைய பேரன். இவனுடைய அப்பா, அம்மா சுனாமி ஏற்பட்ட போது கடல் அன்னையால்

உள்வாங்கப்பட்டார்கள். இவன் தமிழ்வழிப் படித்தவன் உங்கள் பள்ளி ஆங்கில வழியாம் இவனால் படிக்க முடியாதாம். கட்டணமும் அதிகமாம். வேறிடம் போகச் சொல்லி விட்டார்கள் என்றாள் அந்த அம்மா .

உடனே, முதல்வர் அறைக்குச் சென்று என் செல்வாக்கைப் பயன்படுத்தி, நான் இவன் மீது கவனம் செலுத்துகிறேன் என்று உத்தரவாதம் கூறிப் பள்ளியில் சேர்த்தேன். இவ்வசமாக படிக்க பள்ளியில் அனுமதி பெற்றேன். இன்று அவன் காவல்துறை அதிகாரி. சில நாட்களுக்கு முன் :அவனுடைய பாட்டி என்னைப் பார்க்க தன் பேரனோடு வந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் பாட்டி. அவனும் என்னைப் பார்த்து நன்றி கூறினான். எதிர்பாராமல் செய்த உதவி என்னை மகிழ்ச்சியில் உறைய வைத்தது. ஆமாம், மாணவர்களே எதையும் எதிர்பாராமல் செய்யுங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 2.
தமிழர்கள் கொடைத் தன்மையில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் திரட்டி ஒப்படைவு.
Answer:
உலகம் உவப்பவலன் ஏர்பு திரிதரு பலர் புகழ்ஞாயிறு போன்று பண்டையத்தமிழரின் வரலாறு, வாழ்வியல், அறம், ஈதல் போன்றவற்றை அறிய புறநானூறு ஒன்றைச் சான்றாகக் காட்டலாம்.

பாடல் உனக்கு பரிசில் எனக்கு :
தன்னை எதிர்த்துப் போரிட்ட பகைவனின் காவல் மிக்க அரண்களை அழித்துப் போர் புரிந்த வீரத்தைப் புகழ்ந்து பாடிய பாடினிக்கு பல கழஞ்சால் செய்யப்பட்ட பொன் அணிகலன்களையும், அவளோடு வந்து இணைந்து பாடிய பாணனுக்கு வெள்ளி நாறால் கோக்கப் பெற்ற தாமரைப் பூ மாலையும் பரிசாக வழங்கினான்.

மறம் பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழை பெற்றி சினே

பொற்றாமரையும் யானையும் வழங்குதல்:
“பாணாட தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர்……
பாணர்களுக்குப் பொற்றாமரை ஈதலும், புலவர்களுக்கு யானையை வழங்குதலும் கொடையாகத் தமிழர்கள் கொண்டு வாழ்ந்தனர்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி
அ) உதகமண்ட லம்
ஆ) விழுப்புரம்
இ) திண்டிவனம்
ஈ) தருமபுரி
Answer:
இ) திண்டிவனம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 2.
கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்
அ) ஆய் அண்டிரனும் அதிகனும்
ஆ) நல்லியக் கோடனும் குமணனும்
இ) நள்ளியும் ஓரியும்
ஈ) பாரியும் காரியும்
Answer:
ஆ) நல்லியக் கோடனும் குமணனும்

சிறுவினா

Question 1.
கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப் படுத்துக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 2

Question 2.
கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.
Answer:

  • கொடை என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும்.
  • மடம் என்பது அறியாமை என்ற பொருள்.
  • இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல் கிடைத்ததை நினைத்த போது கொடுப்பதுதான் கொடை.
  • இது சரியா தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல் உள்ளத்துக்குக் கொடுக்கும்போது தோன்றுவது கொடை மடம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

இதைத்தான் வள்ளுவர்
வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர் உடைத்து – என்கிறார். இதன்படியே நாமும் கொடை வழங்குவதைப் பின்பற்றலாம்.

இலக்கணக் குறிப்பு

வாய்த்த, உவப்பு, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
கவாஅன் – செய்யுளிசையளபெடை
தடக்கை – உரிச்சொல் தொடர்
நீலம் – ஆகுபெயர்
அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நன்மொழி,நெடுவேல், நன்னாடு – பண்புத் தொகைகள்
கடல்தானை – உவமைத்தொகை
அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
மலைதல் – தொழிற்பெயர்
விரிகடல் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 3
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 4

புணர்ச்சி விதி

1. நன்மொழி = நன்மை + மொழி
ஈறுபோதல் என்ற விதிப்படி மை கெட்டு நன் + மொழி = நன்மொழி என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

2. உரனுடை = உரன் + உடை
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி (ன் + உ = னு) ‘உரனுடை’ எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்துக
i) பேகன் – மலையமான் நாடு
ii) பாரி – பறம்பு மலை
iii) காரி – பொதிய மலை
iv) ஆய் – பொதினி மலை

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
ஆ) 4, 2, 1, 3

Question 2.
பொருந்தாத இணையைத் தேர்க.
அ) அதிகன் – கதடூர்
ஆ) நள்ளி – நளி மலை
இ) ஓரி – கொல்லி மலை
ஈ) காரி – பொதிய மலை
Answer:
ஈ) காரி – பொதிய மலை

Question 3.
பொருத்துக.
i) கலிங்கம் – வண்டு
ii) சுரும்பு – சுரபுன்னை
iii) நாகம் – பாரம்
iv) நுகம் – ஆடை

அ) 4, 1, 2, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 1, 2, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 4.
பொருத்துக.
i) போது – கூத்தர்
ii) உறழ் – வில்
iii) கோடியர் – மலர்
iv) சாவம் – செறிவு

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

Question 5.
பொருத்துக.
i) ஆலமர் செல்வன் – போரிடல்
ii) நாகு – மலைப்பக்கம்
iii) மலைதல் – சிவபெருமான்
iv) கவாஅன் – இளமை

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 3, 4, 1
ஈ.) 3, 2, 4, 1
Answer:
அ) 3, 4, 1, 2

Question 6.
பொருத்துக.
i) மயிலுக்குப் போர்வை – பாரி
ii) முல்லைக்குத் தேர் – பேகன்
iii) ஔவைக்கு நெல்லிக்கனி – ஆய்
iv) கூத்தர்க்கு மலைநாடு – அதிகன்
v) சிவனுக்கு நீலமணி – ஓரி

அ) 2, 1, 4, 5, 3
ஆ ) 4, 5, 3, 2, 1
இ) 3, 2, 1, 4, 5
ஈ) 1, 4, 5, 3, 2
Answer:
அ) 2, 1, 4, 5, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 7.
ஆவியர் குலத்தில் தோன்றியவன்
அ) பாரி
ஆ) ஓரி
இ) காரி
ஈ) பேகன்
Answer:
ஈ) பேகன்

Question 8.
பொருத்துக
i) வீரக்கழலை உடையவன் – ஆய்
ii) வில் ஏந்தியவன் – காரி
iii) வேலினை உடையவன் – நள்ளி
iv) போர்த் தொழிலில் வல்லமையுடையவன் – அதிகன்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 9.
தனியொருவனாக இருந்து ஈகையின் பாரத்தைத் தாங்கி செல்பவன்
அ) அதிகன்
ஆ) பேகன்
இ) நள்ளி
ஈ) நல்லியக்கோடன்
Answer:
ஈ) நல்லியக்கோடன்

Question 10.
பொருத்துக.
i) வாய்த்த – செய்யுளிசையளபெடை
ii) காவ அன் – பெயரெச்சம்
iii) தடக்கை – ஆகுபெயர்
iv) நீலம் – உரிச்சொல் தொடர்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 1, 3, 4, 2
Answer:
அ) 2, 1, 4, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 11.
பொருத்துக.
i) நெடுவேல் – வினைத்தொகை
ii) கடல்தானை – தொழிற்பெயர்
iii) விரிகடல் – உவமைத்தொகை
iv) மலைதல் – பண்புத்தொகை

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 1, 2

Question 12.
சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம் ……………. முடித்த இடம் ………………..
அ) நல்லூர், திண்டிவனம்
ஆ) மரக்காணம், வேலூர்
இ) வேலூர், ஆமூர்
ஈ) எயிற்பட்டினம், நல்லாமூர்
Answer:
அ) நல்லூர், திண்டிவனம்

Question 13.
சிறுபாணனின் பயணம் குறித்த தகவல்களைப் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் குறிப்பிட்டுள்வர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) மா. இராசமாணிக்கனார்
ஈ) மறைமலையடிகள்
Answer:
இ) மா. இராசமாணிக்கனார்

Question 14.
ஆவினன்குடி ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு தற்போது …………….. எனப்படுகிறது.
அ) பழனி
ஆ) பிரான் மலை
இ) திருக்கோவிலூர்
ஈ) தர்மபுரி
Answer:
அ) பழனி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 15.
பொருத்துக.
i) பறம்பு மலை – உதகமண்டலம் (ஊட்டி)
ii) மலையமான் நாடு – தர்மபுரி
iii) பொதிய மலை – பிரான்மலை
iv) தகடூர் – குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகள்
v) நளிமலை – திருக்கோவிலூர்

அ) 3, 5, 4, 2, 1
ஆ) 4, 2, 1, 5, 3
இ) 1, 5, 3, 4, 2
ஈ ) 4, 2, 5, 3, 1
Answer:
அ) 3, 5, 4, 2, 1

Question 16.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள மலை
அ) பொதிய மலை
ஆ) பிரான் மலை
இ) நளி மலை
ஈ) கொல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை

Question 17.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அமைந்துள்ள ஆற்றங்கரை
அ) காவிரி
ஆ) தென்பண்ணை
இ) பாலாறு
ஈ) வெட்டாறு
Answer:
ஆ) தென்பண்ணை

Question 18.
தற்போது அகத்தியர் மலை எனப்படுவது
அ) பொதினி மலை
ஆ) பொதிய மலை
இ) பறம்பு மலை
ஈ) நளி மலை
Answer:
ஆ) பொதிய மலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 19.
கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) விழுப்புரம்
இ) திருநெல்வேலி
ஈ) சிவகங்கை
Answer:
அ) நாமக்கல்

Question 20.
திண்டிவனத்தைச் சார்ந்தது ……………. நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி.
அ) மலையமான்
ஆ) ஓய்மா
இ) தகடூர்
ஈ) பறம்பு
Answer:
ஆ) ஓய்மா

Question 21.
‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறும் பழமொழி நானூற்றுப் பாடலுக்குச் சான்றாக அமைபவர்கள்
அ) பாரி, பேகன்
ஆ) ஓரி, காரி
இ) ஆய், அதிகன்
ஈ) நல்லியக்கோடன், நள்ளி
Answer:
அ) பாரி, பேகன்

Question 22.
வள்ளல் குமணனைப் பற்றிக் குறிப்பிடும் நூல்
அ) பதிற்றுப்பத்து
ஆ) புறநானூறு
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 23.
குறுநில மன்னன் குமணனால் ஆளப்பட்ட மலை
அ) பொதினி மலை
ஆ) முதிரமலை
இ) நளிமலை
ஈ) கொல்லிமலை
Answer:
ஆ) முதிரமலை

Question 24.
‘தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு’ குமணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட புலவர்
அ) பிராந்தையார்
ஆ) கபிலர்
இ) பெருந்தலைச் சாந்தனார்
ஈ) பரணர்
Answer:
இ) பெருந்தலைச் சாந்தனார்

Question 25.
சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர்
அ) மாங்குடி மருதனார்
ஆ) நல்லூர் நத்தத்தனார்
இ) வெள்ளைக்குடி நாகனார்
ஈ) பூதஞ்சேந்தனார்
Answer:
ஆ) நல்லூர் நத்தத்தனார்

Question 26.
சிறுபாணாற்றுப்படை ………….. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாடல்
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
ஆ) பத்துப்பாடல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 27.
சிறுபாணாற்றுப்படையின் பாடலடிகள்
அ) 263
ஆ) 269
இ) 220
ஈ) 210
Answer:
ஆ) 269

Question 28.
ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) திருமுருகாற்றுப்படை
ஈ) பொருநாற்றுப்படை
Answer:
அ) சிறுபாணாற்றுப்படை

குறுவினா

Question 1.
மனித இனத்தின் அடையாளம் எவை?
Answer:

  • ஈகைப் பண்பு
  • கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது.

Question 2.
சிறுபாணாற்றுப்படை பாடலை பாடியவர் பாடப்பட்டோர் யார்?
Answer:

  • பாடியவர்: இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
  • பாடப்பட்டோன்: ஒய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 3.
ஆற்றுப்படை என்பது யாது?
Answer:

  • ஆறு + படை = ஆற்றுப்படை வழிப்படுத்தல் என்பதன் பொருளாகும்.
  • பரிசில் பெற்ற பாணன் பரிசில் பெற போகும் பாணனைக் கண்டு வழிப்படுத்தல்.

Question 4.
இளங்குமணன் விட்ட அறிக்கை யாது?
Answer:
காட்டில் மறைந்து வாழும் தன் அண்ணன் குமணனின் தலையை கொண்து வருவோருக்கு பரிசில் தருவதாக செய்தி அறிவித்தான்.

Question 5.
குமணனின் கொடைத் தன்மையை விளக்குக.
Answer:
தன்னை நாடி பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவருக்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால் தன் இடை வாளைத் தந்து ‘தன் தலையை அறிந்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்றுச் செல்லுமாறு’ கேட்டுக்கொண்டான். இதுவே குமணனின் கொடைத் தன்மையாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

Question 6.
கடையெழு வள்ளல்கள் ஆண்டப் பகுதியை தற்காலப் பெயர்களோடு பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை 5

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 1.
பொறுத்தாரை இவ்வுலகம் பொன்போல் போற்றும் – என்னும் தலைப்பில் கலந்துரையாடுக.
Answer:
பங்கு பெறுவோர் : ராமு, கோபு மற்றும் தமிழ் ஆசிரியர்.

இருவரும் : ஐயா வணக்கம்.

தமிழ் ஐயா : வணக்கம் வாருங்கள் என்ன வேண்டும்?

ராமு : ஐயா, பொறுத்தார் என்பவரைப் பற்றிக் கூறுங்கள்

ஐயா : பிறர் நமக்கும் செய்யும் தவறுகளை, குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவர் பொறுத்தார் ஏனென்றால் அவர் அறியாமையால் கூட தவறு செய்திருக்கலாம்.

கோபு : பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து – இந்தத் தொடருக்கு விளக்கம் வேண்டும் ஐயா!

சோமு : இதற்குச் சான்றான நடந்த நிகழ்வைக் கூறுங்கள் ஐயா.

ஐயா : விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் காந்திக்கு எவ்வளவோ துன்பங்கள் எதிர்கொண்டன. இங்கிலாந்தில் ஒரு முறை சர்ச்சில் அரையாடைப் பண்டிதர் என்ற கேலி செய்தாராம். சபர்மதி ஆசிரமத்தில் ஹரிஜன மக்கள் உறுப்பினராவதை எதிர்த்து உயர்சாதி உறுப்பினர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

காந்தி இதனையும் பொறுத்தார். அண்ணல் அம்பேத்காரைச் சட்ட அமைச்சராக்கி, அரசியல் நிருணய சபையின் தலைவராக்கியதால் அதில் இருந்த உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை. இதை அம்பேத்கர் பொறுத்துக் கொண்டார் போதுமா
மாணவர்களே!

இருவரும் : நன்றி ஐயா! ‘பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து’ என்பதன் விளக்கம். அற்புதமாக இருக்கிறது ஐயா.

யாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
Answer:

  • இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
  • வானம் இடிந்து விழவில்லையே!
  • கடல் நீர் வற்றவிவ்லையே!
  • உலகம் அழியவில்லையே எனப் புலம்பினர்.

சிறுவினா

Question 1.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் குமாரப் பருவத்தில் சரிதப்படலத்தில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
யூதர்களின் கொடுஞ்செயலில் இருந்து விடுபட முடியாமல் ஓர் ஏழைப்போல அமைதியாய் இருந்தார் என்பது பொருள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

விளக்கம் :
யூதர்கள் இறைமகனை கயிற்றால் கட்டும் போது அவர் உடன்பட்டு இருந்தார். தம் மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்கின்ற போது அவர்கள் வாழுகின்ற காலத்தில் துன்பப்படாமல் வாழ வேண்டும் என்று இரக்கப்பட்டார். அன்பு என்ற கட்டிலிருந்து விடுபடாமல், எந்த உதவியும் இல்லாமல் ஏழையாய் அமைதியாய் நின்றார்.

நெடுவினா

Question 1.
எச்.ஏ. கிருட்டிணனார் “கிறித்துவக் கம்பரே’ என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:
தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய ஐரோப்பியக் கிறுத்துவ தொண்டர்களைப் போல் தமிழ் சிறுத்துவ தொண்டாகளும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ.கிருட்டிணனார். இவருடைய பெற்றோரும் ஆழ்ந்த தமிழ்ப்புலமை கொண்டவர்.

தன் தந்தையின் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவுகள் தான் கிருட்டிணனாரைக் கம்பராமாயணம் போல் தாமும் காப்பியம் எழுத வேண்டும் என்று தூண்டியது. இக்காப்பியத்தின் இடையே தேவாரம் போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

(i) இறைமகனாரை (இயேசுவை) யூதர்கள் கயிற்றால் கட்டப்பட்டுத் துன்புறுத்தினர். அவர்களிடம் இருந்து விடுபட முடியாமலும், எந்த உதவியும் பெற இயலாது ஏழையாய் நின்றார். அவர்கள் தமக்கு இழிவான செயல்கள் செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் வாழுகின்ற காலத்தில் துன்பப்படுவார் என்று அவர்களுக்காக இரங்கினார்.

(ii) கொடியோர்கள் கூறிய இகழ்ச்சி மொழியானது தீக்கொள்ளியை தம் இதயத்தில் அழுத்தியது போல் இருந்தது. தம்மை துன்புறுத்தியவரை சினந்து கொள்ளாமல் மறுச்சொல்லும் கூறாமல் அமைதி காத்தார். இறைமகனாரைக் கொல்ல வேண்டும் என்று எண்ணம் கொண்ட போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர். அவருக்குத் தண்டனை பெற்றுத்தரவும் உறுதியாக இருந்தனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

(iii) இறைமகனார் அணிந்திருந்த வெள்ளாடையைக் கழற்றினர். முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர். கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட முடியை அவருடைய தலையில் இரத்தம் பீறிட செய்தனர். கையிலிருந்த கோலினைப் பிடுங்கி தலையில் வன்மையாக அடித்தனர். திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர். இதைக் கண்ட மக்கள்

இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
வானம் இடிந்து விழவில்லையே!
கடல் நீர் வற்றவில்லையே!
இன்னும் உலகம் அழியாமல் காலம் தாழ்த்தியதைக் கண்டு மக்கள் கொதித்தனர்.
பொல்லாத யூதர்கள் இறைமகனை இகழ்ந்து பேசிய சொல்லத்தகாத பழிமொழிகளைக் கேட்டு பொறுத் – திருந்தார்.

இலக்கணக் குறிப்பு

கருத்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
வெந்து, சினந்து, போந்து – வினையெச்சம்
உன்னலிர் – முன்னிலைப்பன்மை வினைமுற்று
ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று
சொற்ற, திருந்திய – பெயரெச்சம்
பாதகர் – வினையாலணையும் பெயர்
ஊன்ற ஊன்ற – அடுக்குத்தொடர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

உறுப்பிலக்கணம்

பகைத்த = பகை + த் + த் + அ
பகை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பழித்தனர் = பழ + த் + த் + அன் + அர்
பழடி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

களைந்து = களை + த்(ந்) + த் + உ
களை – பகுதி
த் – சந்தி (ந் ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

இடிந்து = இடி + த்(ந்) + த் + உ
இடி – பகுதி
த் – சந்தி (ந் ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. முன்னுடை = முன் + உடை

  • தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் எனும் விதிப்படி, முன்ன் + உடை என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பு எனும் விதிப்படி, (ன் + உ = னு) முன்னுடை என்று புணர்ந்தது.

2. ஏழையென = ஏழை + என

  • ‘இ, ஈ, ஐ வழி யவ்வும் = எனும் விதிப்படி (ஐக்குய் தோன்றி) = ஏழை + ய் + என = என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி (ய் + எ = யெ) ஏழையென என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் ஆங்கில நூலின் தழுவலாக அமைந்த படைப்பு
அ) இரட்சணிய யாத்திரிகம்
ஆ) இரட்சணிய மனோகரம்
இ) மனோன்மணியம்
ஈ) போற்றித் திருஅகவல்
Answer:
அ) இரட்சணிய யாத்திரிகம்

Question 2.
இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர்
ஆ) வேநாயகம்
இ) எச்.ஏ.கிருட்டிணனார்
ஈ) ஜி.யு. போப்
Answer:
இ) எச்.ஏ.கிருட்டிணனார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 3.
இரட்சணிய யாத்திரிகம் என்பது
அ) ஒரு பெரும் உருவகக் காப்பியம்
ஆ) சிற்றிலக்கியம்
இ) சிறு காப்பியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) ஒரு பெரும் உருவகக் காப்பியம்

Question 4.
இரட்சணிய யாத்திரிகத்தின் பாடல்கள்
அ) 3566
ஆ) 3677
இ) 3766
ஈ) 3244
Answer:
இ) 3766

Question 5.
இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள்
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
இ) ஐந்து

Question 6.
இரட்சணிய யாத்திரிகத்தின் இரட்சணிய சரித படத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் அமைந்துள்ள பருவம்
அ) ஆதிபருவம்
ஆ) குமார பருவம்
இ) நிதான பருவம்
ஈ) ஆரணிய பருவம்
Answer:
ஆ) குமார பருவம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 7.
கிறித்துவக் கம்பர் என்று போற்றப்பட்டவர்
அ) வீரமாமுனிவர்
ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்
இ) ஜி.யு. போப்
ஈ) ஈராசு பாதிரியார்
Answer:
ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்

Question 8.
திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ என்னும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் தொடராக வெளிவந்த ஆண்டுகள்
அ) 10
ஆ) 12
இ) 13
ஈ) 15
Answer:
இ) 13

Question 9.
இளமைத்தமிழே இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக வெளி வந்த நாள்
அ) 1894 – மே
ஆ) 1896 – ஏப்ரல்
இ) 1896 – மே
ஈ) 1892 – ஏப்ரல்
Answer:
அ) 1894 – மே

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 10.
பொருத்துக.
i) பாதகர் – கூறவில்லை
ii) மாற்றம் – குற்றமில்லாத
iii) ஏதமில் – சொல்
iv) நுவன்றிவர் – கொடியவர்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 11.
பொருத்துக.
i) ஆக்கினை – உறுதி
ii) கூவல் – கடல்
iii) உததி – கிணறு
iv) நிண்ண யம் – தண்டனை

Question 12.
பொருத்துக.
i) மேதினி – கெடுதல்
ii) வாரிதி – பழி
iii) நிந்தை – கடல்
iv) பொல்லாங்கு – உலகம்

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
இறைமகன் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் …………….. ஆளுநரின் முன் கொண்டுபோய் நிறுத்தினர்.

அ) போந்தியுராயன்
ஆ) போந்தியு பிலாத்து
இ) ஏரோது
ஈ) அகஸ்டஸ் சீசர்
Answer:
ஆ) போந்தியு பிலாத்து

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 14.
பொருத்துக.
i) கருந்தடம் – வினையெச்சம்
ii) ஓர்மின் – பெயரெச்சம்
iii) வெந்து – பண்புத்தொகை
iv) திருந்திய – ஏவல் பன்மை வினைமுற்று

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 3, 2, 1, 4
ஈ) 4, 1, 3, 2
Answer:
அ) 3, 4, 1, 2

Question 15.
பொருத்துக.
i) உன்ன லிர் – வினையெச்சம்
ii) பாதகர் – அடுக்குத்தொடர்
iii) ஊன்ற ஊன்ற – வினையாலனையும் பெயர்
iv) போந்து – முன்னிலைப் பன்மை வினைமுற்று

அ) 4, 3, 2, 1
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Question 16.
இறைமகன் இயேசுவை இகழ்ந்து பேசியவர்கள்
i) பொல்லாத யூதர்கள்
ii) போர்ச் சேவகர்
iii) போந்தியு பிலாந்து

அ) i, ii – சரி
ஆ) iii – மட்டும் தவறு
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
Answer:
ஆ) iii – மட்டும் தவறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 17.
இறைமகன் இயேசுவுக்கு வெள்ளாடையைக் கழற்றிவிட்டு, …………. மலர் போன்ற ஓர் சிவந்த அங்கியை அவருக்குப் போர்த்தினர்.
அ) காந்தன்
ஆ) முல்லை
இ) முளரி
ஈ) முருக
Answer:
ஈ) முருக

Question 18.
பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற – இவ்வடிகளில் அமைந்துள்ள இலக்கிய நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) அந்தாரி
ஈ) இயைபு
Answer:
ஆ) எதுகை

குறுவினா

Question 1.
இரட்சணிய யாத்திரிகம் குறிப்பு வரைக.
Answer:

  • ஜான்பனியன் எழுதிய பில்கிரிமஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூல்.
  • எச். ஏ. கிருட்டிணனார் தமிழில் எழுதினார்.
  • 3766 பாடல்கள்.
  • ஐந்து பருவம் : ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 2.
யூதர்களின் கொடுஞ்செயலுக்கு இறைமகனார் இரங்கிய தன்மை யாது?
Answer:
இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்பட்டார்.

Question 3.
எச். ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் எந்த இதழில் எத்தனை ஆண்டுகள் வெளியானது?
Answer:

  • ‘நற்போதம்’ எனும் ஆன்மிக மாத இதழ்.
  • பதின்மூன்று ஆண்டுகள்.
  • முதல் பதிப்பு – 1894 மே திங்கள்.

Question 4.
நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரட்சணிய யாத்திரிகம் எந்தப்பகுதியில் இடம் பெற்றுள்ளது?
Answer:
குமார பருவத்தில் இரட்சணிய சரித படலத்தில் இடம் பெற்றுள்ளது.

Question 5.
‘எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்தேனும் இறை முன்’ இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

பொருள் :
இயேசு பெருமானுக்குத் தண்டனை பெற அழைத்துச் செல்லுதல்.

விளக்கம்:
இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் நிறுத்தினர். தண்டனை பெற்று தரவும் உறுதியாகவும் இருந்தனர்.

Question 6.
எச்.ஏ. கிருஷ்ணனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
போற்றித்திருவகல், இரட்சணிய மனோகரம், இரட்சணிய சமய நிர்ணயம்.

Question 7.
கிறித்துவக் கம்பர் எனப் போற்றப்படுபவர் யார்?
Answer:
எச்.ஏ. கிருட்டிணனார்.

Question 8.
பாரி, பேகன் செயல் குறித்துப் பழமொழி நானூறு கூறுவன யாவை?
Answer:

  • முல்லைக்கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவை அல்ல.
  • ஈகையால் செய்யப்பட்டவையே இது. இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பது. இதையே பழமொழி நானூறு.
  • ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறுகிறது.

Question 9.
என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார்
என்கொல் வானம் இடிந்து விழுந்திவது என்பார். இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
பொருள் :
இறைமகனாரை யூதர்கள் துன்புறுத்தும் போது மக்களின் புலம்பல்.

விளக்கம் :
அணிந்திருந்த ஆடையைக் கழற்றி விட்டு முருக்க மலர் போன்ற ஆடையை அணிந்தனர். தலையில் கூர்மையான முள் முடியை அழுத்தினர். இரத்தம் பீறிட்டதைக் கண்டு உலகம் வெடிக்கவில்லையே! வானம் விழவில்லையே! கடல் வற்றவில்லையே! உலகம் இன்னும் ஏன் அழியவில்லை என்று ஜெருசலேம் மக்கள் புலம்பினர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 10.
சிறுபாணாற்றுப்படை – குறிப்பு வரைக.
Answer:
இயற்றியவர் : நல்லூர் ரத்தத்தனார்
நூல் அமைப்பு : பத்துப்பாட்டுகளுள் ஒன்று
பாட்டுடைத்தலைவன் : ஒய்மாநாட்டு நல்லியக் கோடன்
மொத்த அடிகள் : 269
ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று.
பரிசு பெற்ற பாணன் வழியில் கண்ட மற்றொரு பாணைனை ஆற்றுப்படுத்தல்.

சிறுவினா

Question 1.
எச். ஏ. கிருட்டிணனார் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
பெற்றோர் : சங்கர நாராயணன் – தெய்வநாயகி
காலம் : ஏப்ரல், 23, 1827 (23.04.1827)
ஊர் : திருநெல்வேலி – கரையிருப்பு
பணி : 32 ஆண்டு தமிழாசிரியர்
நூல்கள் : இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய நவநீதம், இரட்சணிய சமய நிர்ணயம்.
பெருமை : கிறித்துவக் கம்பர் இவருடைய நூல் நற்போதகம்’ எனும் இதழில் வெளிவந்தது.

Question 2.
இறைமகனாருக்கு யூதர்கள் செய்த கொடுஞ்செயல்கள் யாவை?
Answer:

  • யூதர்கள் இறைமகனாரைக் கயிற்றால் கட்டினர். ஒன்று கூடி இகழ்ந்தனர்.
  • கொல்வதற்காக ஆளுநர் போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர்.
  • அணிந்திருந்த ஆடையைக் கழற்றி முழுக்க மலர் போன்ற சிவந்த ஆடையைப் போர்த்தினர்.
  • கூர்மையான முள் செடியால் ஆன முடியை தலையில் வைத்து அழுத்தி, இரத்தம் பீறிடச் செய்தனர்.
  • கையில் இருந்த கோலைப் பிடுங்கி தலையில் அடித்தனர்.
  • திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

Question 3.
தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல் குறிப்பு வரைக.
Answer:

  • புறநானூறு குறிப்பிடப்படும் வள்ளள் குமணன்.
  • முதிர மலையை ஆட்சி செய்தவன் (பழனி மலை)
  • தன் தம்பியிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு காட்டில் மறைந்து வாழ்ந்தான்.
  • இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொண்டு வருபவருக்கு பரிசு என்று அறிவித்தான்.
  • அவ்வேளையில் குமணனை நாடி வந்த சாத்தனாருக்கு பொருள் இல்லாமையால் இடைவாளைத் தந்து தன் தலையை அரிந்து சென்று இளங்குமணனிடம் பரிசு பெறுமாறு வேண்டினான்.
  • இச்செய்தியைப் புறம் 158 – 164 – 165 பாடல் மூலம் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.5 செவ்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.5 செவ்வி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

நெடுவினா

நர்த்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க.
Answer:
வேதனையில் சாதனை :
திருநங்கையர்க்கு இருக்கும் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிக் காட்டியவர் நர்த்தகி நடராஜ். அமெரிக்காவில் இரண்டு வார நிகழ்ச்சியை எதிர்ப்பார்த்துச் சென்றவர். ஒருநால் கெழ்ச்சியாக மாற்றப்பட்டதை அறிந்து வேதனையுற்றார். எனினும், தம் கால் சதங்கை ஒலியை அரங்கில் நிறைத்து, காண்பவரை வியக்கவைத்து, இரு மாதங்கள் தொடர்ந்து தம் ஆற்றலை வெளிப்படுத்திய நிகழ்வே, அவர்தம் ஆற்றலை விளக்கப் போதுமான சான்று.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

நாட்டியத்தில் ஈடுபாடு :
பெண்மையை உணரத் தொடங்கிய குழந்தைப் பருவத்தில் திரைப்பட நடனங்கள் தன்னை ஈர்த்ததையும், ஆடத் தொடங்கியபின் நாட்டியத்தின் உட்கூறுகளை அறிய முயற்சி செய்தது, ராக தாளத்துடன் நாட்டியத்திற்கான கருத்தை அறிமுகம் செய்து கொண்டது ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

நடனத்திற்குக் கரு தேர்வு :
எதிர்கொள்ளும் பிரச்சனைக்காக மட்டுமன்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ் மரபில் தோன்றிய தான் பரதத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும், தமிழ் இலக்கியங்களால் அதன் இடத்தைத் தெரிந்து, நம் கலையை தம் நடனத்தில் கருவாக எடுத்துக்கொண்டு விழிப்புக ளர்வை ஆயுதமாகக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

உலகைக் கவரும் பரதம் :
ஜப்பானின் ஒசாகா நகரில் திருவாசக, தேவாரப் பண்களுக்குத் தாம் நிகழ்த்திய பரத அபிநயங்களைக் கண்டு கண்கலங்கி மௌனத்தோடு கரஒலி எழுப்பியுள்ளதைக் கூறி, பரதத்தை உலகின் எப்பகுதியினரும் முழுமையாக உள்வாங்கிப் புரிந்துகொள்வர் என்பதை விவரித்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

நம் பண்பாட்டைத் தேடவைத்தல்
நம் பண்பாடு, வாழ்வாங்கு வாழ்ந்த மரபு சார்ந்தது. அதை எப்பண்பாட்டாலும் புறக்கணிக்க முடியாது. நார்வேயில் திருக்குறளை மையப்படுத்தி நிகழ்த்திய நிகழ்ச்சி, அம்மக்களைத் திருக்குறளைத் தேடிக் கற்கத் தூண்டியது, நம் பண்பாட்டுப் புலமை என விளக்கியுள்ளார்.
தமிழ்வழிக் தலவ பயின்று, வழக்கறிஞராக எண்ணியவர், இன்று மேடையேறிப் பல்வேறு இலக்கிய
பணியாகக் கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்தினார்.

சோதனை வென்று சாதனை : பகை கலைக்கூடம் வாயிலாகப் பலர் தம்மை அம்மா என அழைப்பதை எண்ணிக் கருணையில் நொழுவதை உணர்வதாகக் கூறியுள்ளார். நர்த்தகி நடராஜ், இன்றைய உலகில் பல உயரங்களைத் தொட்டுச் சாதனை படைத்து வருகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

திருநங்கையாகப் பிறந்து சாதித்தவர்கள்

காவல்துறை
சேலத்தில் பிறந்த பிரித்திகா யாஷினி, மிகுந்த சிரமங்களுக்கு இடையே 2011ஆம் ஆண்டு ‘கணினி’ பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர்க் காவல்துறையில் பயிற்சி பெற்றுத் தற்போது சென்னையில் காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்’ என்னும் பெருமை கிடைத்துள்ளது.

நீதித்துறை :
ஜோயிதா மோண்டல் மாஹி என்பவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருநங்கை. இவர் திருநங்கையரின் முன்னேற்றத்திற்காகப் பல பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர், வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் ‘லோக் அதாலத்’ நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். லோக் அதாலத் நீதிபதி பதவிக்குத் திருநங்கை ஒருவரை நியமித்தது, இந்திய நாட்டில் இதுவே முதன்முறையாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.5 செவ்வி

சித்த மருத்துவம் :
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவரான தாரிகாபானு, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், அறிவியல் பாடப்பிரிவில் பயின்றார். 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். சாதனை புரிவதற்குப் பாலினம் தடையில்லை என்பதை இவர்கள் திறமையின் செயல்களால் தெளிவுபெற வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.4 மனோன்மணீயம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.4 மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

குறுவினா

Question 1.
“ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள” – இவ்வடி, எதனைக் குறிப்பிடுகிறது?
Answer:
எம்மண்ணையும் நன்மண்ணாக்கும் நாங்கூழ்ப் புழுவின் செயல்பாடுகளை, இவ்வடி குறிப்பிடுகிறது.

சிறுவினா

Question 2.
இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்து வரிகளில் எழுதுக.
Answer:
எத்தனை வகை விலங்குகள்! எத்தனை வகை பறவைகள்! எத்தனை வகை பூச்சிகள்! அனைத்தையும் சமமாகவே கவனித்து ஆதரவு தருகிறது! ஓரறிவு உயிர்வகையுள் சேர்த்திருந்தாலும், பல்வேறு உயிரினங்களுக்கும் அன்போடு நிழல் தருகிறது !

உணவாக இலைகளையும் காய்களையும் பழங்களையும் தருகிறது; தாவர வகைகள் பூக்கும் காலத்தில் தேனையும், இனிய மணத்தையும் தருகின்றது! தாவரங்கள் காய்த்துக் கனிந்தபின், பறவைகளும் விலங்கினங்களும் பசித்தபோது உண்ண உதவுகின்றன! தேடி வருபவர் பசி போக்குகின்றன.

உலகில் அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதிப் போற்றும் இயற்கையே! உன் பயன் கருதாக் கொடைப்பண்பை யார் பெறுவார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 2.
வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
சிறு வாய்க்கால், நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது; அலை கடலை மலையாகவும், மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும், தன் வலிமைக்குள் அடங்கிய புல், புழு அனைத்தையும் கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.)

மலையில் பொழிந்த மழையானபின், அருவியாய் இறங்கி, குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, ஊற்றாய்ப் பரந்து ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட களைக் கூறி, மேலும் இயன்றதைக் கொண்டுவருவதாக உறுதி கூறுகிறது.

நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும் உறுதியும் கொண்டு அனுதினமும் அழைக்கிறது என்று, வாய்க்காலின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 3.
“நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு என்னை?”- யார், யாரிடம், எப்போது கூறியது?
Answer:
வாய்க்காலின் விசித்திரச் செயலை வியந்து பார்த்துக் கொண்டிருந்த நடராசன், இறுதியாக அந்த வாய்க்காலையும் அதன் செயலையும் பாராட்டும்வகையில் உன்னைப்போல் தினமும் உழைப்பவர்
யார்?

நீக்க முடியாத அன்பு, ஊக்கம், உழைப்பில் உறுதி எக்கு இருப்பதுபோல் பெற்றால், அதற்குமேல் பெறவேண்டிய பேறு வேறு உளதோ?” எனக் கூறினான்.

Question 4.
‘மனோன்மணீயம்’ – குறிப்பெழுதுக.
Answer:

  • தமிழின் முதல் செய்யுள் வடிவ நாடக நூல் மனோன்மணீயம்.
  • தமிழ்மொழியில் நாடக நூல் இல்லாக் குறைபோக்கப் பெ. சுந்தரனார், ஆங்கிலத்தில் ‘லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Senret Way) என்னும் நூலைத் தழுவித் தமிழில் இயற்றினார்.
  • தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு கதைக்களம் அமைத்து எழுதப்பட்ட இந்த நாடக நூலில், ஐந்து அங்கங்களும் இருபது கலங்களும் உள்ளன.
  • நூலின் தொடக்கத்தி இறை வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ‘சிவகாமியின் சாரம்’ என்னும் கிளைக்கதையும் உள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 5.
பேராசிரியர் சுந்தரனார் குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • திருவிதாங்கூரின் ஆலப்புழையில், ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் 1855இல் பிறந்தார்.
  • திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
  • சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு, ராவ்பகதூர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு, திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை, இவர் பெயரில் நிறுவிப் பெருமை சேர்த்துள்ளது.

Question 6.
மனோன்மணீயத்தின் சிறப்புகளை எழுதுக?
Answer:
மனோன்மணீயம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. மொழிப்பற்று, நாட்டுப்பற்று, வீர உணர்வுகளை ஊட்டக்கூடியது.

தமிழன்னையின் நல்லணிகளுள் நாடகத்துறை சார்ந்த நூல்கள் இல்லை என்னும் குறைதீர்க்க உருவானது. நாடக நூலாயினும், காப்பிய இலக்கணத்தை முழுமையாகப் பெற்றுள்ளது.

இயற்கையோடு இயைந்து, தோய்ந்து, இணையற்ற இன்ப வாழ்வு நடத்தியவர் தமிழர் என்பதைத் தெளிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவை மனோன்மணீயத்தின் தனிச் சிறப்புகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நெடுவினா

Question 1.
நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.
Answer:
இலக்கே தூண்டுகோல் :
தான் ஏற்ற செயலை முடிக்க, அதிகாலையில் ஊர்ப்புறத்தில் தனித்திருக்கும்போது, எச்செயலையும் முடிப்பதற்கு ஓர் இலக்குத் தேவை என்பதை, நடராசன் உணர்கிறான். அது, உயிர்க்குத் தூண்டுகோலாக உள்ளதையும் உணர்த்துகிறான்.

புல்லின் செயல்பாடு :
சிறுபுல்லும், பூங்கொத்தை உயர்த்தித் தேனை உணவாக அளித்து, தன் மலரைக் காயாக்குவதனையும், தன் இனம் தழைத்து வளர வேறிடம் செல்லும்வகையில் முள் துரட்டியைக் கொடுத்து, ‘நாம் அனைவரும் ஒரே இடத்தில் தழைத்து வாழ முடியாது. ஆகவே வேறிடம் செல்க’ என அறிவுரை கூறுபதுபோல் செயல்படுவதையும் சிந்திக்கிறான்.

அத்துடன், அப்புல்லின் ஆற்றல், அன்பு, முயற்சி முதலானவற்றைப் பார்த்துப் பார்த்தும் கண்களில் நீர் கசிய நிற்கிறான். நடராசன் அப்போது கூறும் மொழிகளைக் கேட்கும்போது, நாமும் சிந்திக்க முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நடராசன் கண்ட வாய்க்கால் :
நாம் நீரோடும் வாய்க்காலைச் சாதாரணமாகக் கண்டிருப்போம். நடராசன் காணும் காட்சி வேறாக உள்ளது. வாய்க்கால், மலையைக் கடலாகவும், கடலை மலையாகவும் மாறிய நடப்பதாகக் கூறுகிறான். வாய்க்கால், தான் பட்டபாட்டை எல்லாம் காலத்தச்சனிடம் கூறுவதுபோல் காண்கிறான். அப்போதுதான் நமக்கும் அத்தகைய எண்ண ஓட்டம் உருவாகிறது.

வாய்க்கால் ஓடிஓடி நிரந்தரமாக உழைப்பதைக் கண்டு, அதற்கு ஓய்வு கொடுக்கத் தடுப்பதும், சலசலத்தபோது, அழாது செல்லுமாறு கூறி விடுத்து, “உன்னைப்போல் அனுதினமும் உழைப்பவர் யார்? உன்னைப்போல் நீக்க முடியாத அன்பும் ஊக்கமும் உறுதியும் இருக்குமானால், வேறு என்ன பெருமை உண்டாக முடியும்?” எனக் கூறுகிறபோது, நமக்கும் உள்ளத்தில் அந்த உணர்வு தைக்கிறது.

புழு உணர்த்தும் செய்தி :
புல்லின் செயலையும், வாய்க்காலின் பெரும் நாட்டையும் கொண்டு அறிவூட்டிய நடராசன், அடுத்து நாங்கூழ்ப் புழுவைக் காண்கிறான். அற்பப்புழு எனக் கருதக்கூடாது என்பதை, அவன் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது.

உலகில் உயர்தொழில் செய்யும் வாவர்களின் நண்பனாக நாங்கூழ்ப் புழு செயல்படுவதை விவரிக்கிறான். எம் மண்ணையும் நன் மண்ணரத்து எறும்பு, புழு, பூச்சிகள் தரும் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல், தன் செயலில் கண்ணுங்கருத்துமா உள்ள நிலையைத் தெளிவுபட விரித்து உரைக்கிறான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

நடராசன் தனிமொழி தரும் விளக்கம் :
தான் செய்யும் பணிக்குப் பாராட்டை எதிர்பார்க்காமல் நாங்கூழ்ப் புழு ஒளிந்து கொள்வதாகக் கூறுவது பாராட்டுக்குரிய சொல், ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய அரிய பாடங்கள் இயற்கையில் பொதிந்து கிடப்பதை, நடரசன் தனிமொழி விளக்குகிறது.

வாழ்நரளில் வரையும், எதனையும் மதித்து வாழ வேண்டும் என்பதை, இயற்கையின் செயல்பாடுகள் கற்பிப்பதைத் தெளிவாக அறிய, நடராசன் தனிமொழி துணைபுரிகிறது.

இலக்கணக்குறிப்பு

கடிநகர், சாலத்தகும் – உரிச்சொற்றொடர்கள்
உருட்டி, கடந்து, சிக்கி, கலந்து – வினையெச்சங்கள்
பின்னிய, முனைந்த, சென்ற – பெயரெச்சங்கள்
இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
தேன்துளி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஆசிலா, ஓவா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

பார்த்துப்பார்த்து, நில்நில், உழுதுழுது – அடுக்குத்தொடர்கள்
வாய்க்கால் (கால்வாய்) – (முன்பின் தொக்க) இலக்கணப்போலி
செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
நெறுநெறு – இரட்டைக்கிளவி
மண்கல், புல்புழு, இராப்பகல், மலையலை, குகைமுகம் – உம்மைத்தொகைகள்
காலத்தச்சன் – உருவகம்
ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
தங்குதல் – தொழிற்பெயர்
விடுத்தனை – முன்னிலை ஒருமை வினைமுற்று
ஏகுவன் – தன்மை ஒருமை வினைமுற்று

உறுப்பிலக்கணம்

1. முளைத்த – முளை + த் + த் + அ
முளை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. ஏகுமின் – ஏகு + மின்
ஏகு – பகுதி, மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

3. விடுத்தனை – விடு + த் + த் + அன் + ஐ
விடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அன் – சாரியை, ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

4. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

5. ஏகுவான் – ஏகு + வ் + ஆன்
ஏகு – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

6. உயர்த்தி – உயர் + த் + த் + இ
உயர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்த கால இடைநிலை, இ – வினையெச்ச விகுதி.

7. அழைத்து – அழை + த் + த் + உ
அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

8. காண்போர் – காண் + ப் ஒர்
காண் – பகுதி, ப் – எதி தல இடைநிலை, ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

9. பார்த்து – பார் + த் + உ
பார் – பகுதி, த் சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

10. திளைப்பர் – திளை + ப் + ப் + அர்
திளை – பகுத், ப் – சந்தி, ப் – இறந்தகால இடைநிலை, அர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

11. உருட்டி உருட்டு + இ
உருட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

12. அடைந்து – அடை + த் (ந்) + த் + உ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

13. உழைப்போர் – உழை + ப் + ப் + ஓர்
உழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

14. ஈர்த்து – ஈர் + த் + த் + உ
ஈர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

15. எடுத்த – எடு + த் + த் + அ
எடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. காலத்தச்சன் – காலம் + தச்சன்
“மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” (கால + தச்சன்)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (காலத்தச்சன்)

2. உழுதுழுது – உழுது + உழுது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உழுத் + உழுது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உழுதுழுது)

3. பேரழகு – பெருமை + அழகு
“ஈறுபோதல்” (பெரு + அழகு), “ஆதிநீடல்” (பேரு + அழகு)
“முற்றும் அற்று” (பேர் + அழகு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பேரழகு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

4. நல்லூண் – நன்மை + ஊண்
“ஈறுபோதல்” (நன் + ஊண்), “முன்நின்ற மெய் திரிதல்” (நல் + ஊண்)
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஊண்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லூண்)

5. அடியொன்று – அடி + ஒன்று
“இ ஈ ஐ வழி யவ்வும்” (அடி + ய் + ஒன்று)
“உயிர்வரின்….. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அடியொன்று )

6. குதித்தெழுந்து – குதித்து + எழுந்து
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (குதித்த் – எழுத்து)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (குதிதமதழுந்து )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

7. மண்ணாயினும் – மண் + ஆயினும்
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் பண + ண் + ஆயினும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்” (பண்ணாயினும்)

8. தூசிடை – தூசு + இடை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ (தூச் + இடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தூசிடை)

9. மலையலை – மலை + அலை
“இ ஈ ஐ வழி யவ்வும்” மலை+ ய் + அலை)
“உடல்மேல் உயிர்வந்து ஏறுவது இயல்பே” (மலையலை )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

பலவுள் தெரிக

Question 1.
“யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்” – இது எவர் மொழி?
அ) வாய்க்கால்
ஆ) நாங்கூழ்
இ) நடராசன்
ஈ) புல்
Answer:
இ) நடராசன்

Question 2.
தமிழில் முதல் பா வடிவ நாடகநூல் ………………….
அ) து பரகசிய வழி
ஆ) மனோன்மணீயம்
இ) நூல்தொகை விளக்கம்
ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
Answer:
ஆ) மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
காப்பிய இலக்கணம் முழுவதுமாய் நிரம்பிய நாடக நூல்………………….
அ) இரணியன்
ஆ) நளதமயந்தி
இ) மணிமேகலை
ஈ) மனோன்மணீயம்
Answer:
ஈ) மனோன்மணீயம்

Question 4.
மனோன்மணீயத்திற்கு மூல நூலாக அமைந்தது………………….
அ) இரகசியவழி
ஆ) மணிமேகலை
இ) இருண்டவீடு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) இரகசியவழி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 5.
பேராசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர் ………………….
அ) திருநெல்வேலி
ஆ) மார்த்தாண்டம்
இ) ஆலப்புழை
ஈ) கன்னியாகுமரி
Answer:
இ) ஆலப்புழை

Question 6.
தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்………………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) மனோன்மணீயம்
இ) மணிமேகலை
ஈ) பாண்டியன் பரிசு
Answer:
ஆ) மனோன்மணீயம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 7.
சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் சுந்தரனாருக்கு வழங்கிய பட்டம்………………….
அ) ராவ்பகதூர்
ஆ) திவான் பகதூர்
இ) கலைமாமணி
ஈ) நாடகச்செம்மல்
Answer:
அ) ராவ்பகதூர்

Question 8.
சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்………………….
அ) திருச்சி
ஆ) மதுரை
இ) புதுக்கோட்டை
ஈ) திருநெல்வேலி
Answer:
ஈ) திருநெல்வேலி

Question 9.
“சிறார் நீர் பிழைப்பதற்கு ஏகுமின்’ – யார் கூறியது?
அ) சிறுபுல்
ஆ) வாய்க்கால்
இ) நடராசன்
ஈ) நாங்கூழப் புழு
Answer:
அ) சிறுபுல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 10.
“விழுப்புகழ் வேண்டலை உன்தொழில் நடத்துதி” – யாரிடம் கூறப்பட்டது.
அ) புல்லிடம்
ஆ) வாய்க்காலிடம்
இ) நாங்கூழ்ப் புழுவிடம்
ஈ) மேகத்திடம்
Answer:
இ) நாங்கூழ்ப் புழுவிடம்

Question 11.
என்பெலாம் கரைக்கும் நல் இன்பம் திளைப்பதற்குக் காரணம் ………………….
அ) வாய்க்காலின் செயல்
ஆ) புல்லின் பரிவான செயல்
இ) நடராசனின் செயல்
ஈ) காங்கூழ்ப்புழுவின் செயல்
Answer:
ஆ) புல்லின் பரிவான செயல்

Question 12.
விசித்திரமான தொழில் செய்வது………………….
அ) அலைகடல்
ஆ) மலை
இ) வாய்க்கால்
ஈ) புல்
Answer:
இ) வாய்க்கால்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 13.
“யாரே உன்னைப்போல் அனுதினம் உழைப்போர்” – அனுதினம் உழைப்பதாகக் குறிப்பிடப்பட்டது………………….
அ) வாய்க்கால்
ஆ) நாங்கூழ்ப்புழு
இ) புல்
ஈ) நடராசன்
Answer:
அ) வாய்க்கால்

Question 14.
மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை………………….
அ) புல்லின் பரிவு
ஆ) வாய்க்காலின் விசித்திரம்
இ) சிவகாமியின் சரிதம்
ஈ) நாங்கூழ்ப் புழு செயல்
Answer:
இ) சிவகாமியின் சரிதம்

Question 15.
தூசிடைச் சங்கும் தோட்டியும் கொடுத்தே” – இத்தொடரில் துறட்டி’ என்னும் பொருளுடைய சொல்………………….
அ) தூசு
ஆ) சிக்கும்
இ) தோட்டி
ஈ) கொடுத்து
Answer:
இ) தோட்டி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.4 மனோன்மணீயம்

Question 16.
சரியான விடையைப் பொருத்துக.
அ. வீழருவி – 1. உவமைத்தொகை
ஆ. குகைமுகம் – 2. பண்புத்தொகை
இ. பேரழகு – 3. வினைத்தொகை
ஈ) புல்புழு – 4. எண்ணும்மை
– 5. உம்மைத்தொகை
1. அ – 2, ஆ – 4, இ – 5, ஈ – 3
2. அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
3. அ – 5, ஆ – 2, இ – 1, ஈ – 4
4. அ – 3, ஆ – 1, இ – 2, ஈ – 5
Answer:
4. அ – 3, ஆ – 1, இ – 2, ஈ – 5

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.2 முகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.2 முகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 1.
உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் வலிமையென்று நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?
Answer:
எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் அதை என்னால் சாதிக்க முடியும்’ என்ற மன உறுதியோடு அச்செயலைச் செய்து முடிக்க வேண்டும். முதலில் என்னுடைய வலியை என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல்பாடு முழுமை பெற வெற்றியடைய உடல் வலிமை மட்டுமல்ல மனத்தின் வலிமையுந்தான்.

அரிய பெரிய சாதனைகள் மனத்தின் வலிமையினாலேயே சாதிக்கப்படுகின்றன என்ற உண்மையினை மறந்து விடக்கூடாது. மனத்தை பல வழிகளில் செலவழித்து விடாமல் ஒரே நோக்கில் ஒரே குறிக்கோளில் பயன்படுத்தும் போது மனம் பொலிவு பெறும்.

மனத்தின் எண்ணங்கள் ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எந்தச் செயலையும் எளிதாகச் செய்ய முடியும். நல்ல எண்ணங்கள் குவியும் போது உள்ளத்திற்கு அமைதி கிடைக்கும். இதன் மூலம் சிறந்த வலிமைப் பெற்று எதையும் சாதிக்க முடியும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் – என்கிறார் வள்ளுவர்.
நம் வலிமையைக் கொஞ்சம் கூட உணராதவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தோற்றுப் போகிறார்கள்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நான் வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது.
அ) தமது வீட்டு முகவரியை
ஆ) தமது குடும்பத்தை
இ) தமது அடையாளத்தை
ஈ) தமது படைப்புகை
Answer:
இ) தமது அடையாளத்தை

குறுவினா

Question 1.
முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
என்குள்ளே என்னைத் தொலைத்தக் காரணத்தால் என் முகவரியற்று போனது என்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘முகம்’ என்னும் கவிதை இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) புதையுண்ட வாழ்க்கை
ஆ) மீண்டெழுதலின் ரகசியம்
இ) சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்

Question 2.
சுகந்தி சுப்பிரமணியத்தின் ஊர்
அ) கோவை புறநகரின் ஆலாந்துறை
ஆ) ஈரோட்டு புறநகரின் சிவகிரி
இ) தஞ்சை புறநகரின் வல்லம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கோவை புறநகரின் ஆலாந்துறை

Question 3.
சுகந்தி சுப்பிரமணியனின் கல்வித்தகுதி
அ) தொடக்கக் கல்வியை முழுமை செய்யாதவர்
ஆ) உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்
இ) இளங்கலை பட்டம்
ஈ) முனைவர் பட்டம்
Answer:
ஆ) உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 4.
சுகந்தி, எழுத்தாளராக நம்பிக்கை தந்தவர்
அ) அவரது தாயார்
ஆ) அவரது தந்தையார்
இ) அவரது கணவர்
ஈ) அவரது மாமியார்
Answer:
இ) அவரது கணவர்

Question 5.
சுகந்தி சுப்பிரமணியத்தின் படைப்புகளில் பாடுபொருள்
அ) தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்கள்
ஆ) கூட்டுக் குடும்பத்தில் பெண்களின் சவால்கள்
இ) மணமாகாத பெண்களின் அவலம்
ஈ) அறிவியல் உலகில் பெண்கள்
Answer:
அ) தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்கள்

Question 6.
நான் வெற்று வெளியில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
என் முகத்தைத் தேடியபடி – என்று பாடியவர்

அ) சுகந்தி சுப்பிரமணியன்
ஆ) இரா. மீனாட்சி
இ) உமா மகேஷ்வரி
ஈ) சாந்தி சுப்பிரமணியன்
Answer:
அ) சுகந்தி சுப்பிரமணியன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 7.
சாந்தி சுப்பிரமணியன் என்பார் தமிழின் ………….. பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.
அ) மரபு
ஆ) புதுக்கவிதை
இ) நவீன
ஈ) பின்நவீன
Answer:
இ) நவீன

குறுவினா

Question 1.
சுகந்தி சுப்பிரமணியன் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : சுகந்தி
ஊர் : கோவை – ஆலாந்துறை
படிப்பு : உயர்நிலைக் கல்வி
சிறப்பு : தமிழின் நவீன பெண் கவிஞர்
நூல்கள் : புதையுண்ட வாழ்க்கை , மீண்டெழுதலின் இரகசியம்.

Question 2.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அடையாளம் காணும் போது உருவாவது எது?
Answer:
எழுச்சியும், ஊக்கமும் உருவாகிறது.

Question 3.
அடையாளம் இழந்த ஒருவர் எதைக் தொலைக்கிறார்?
Answer:
அடையாளம் இழந்த ஒருவர் தன் முகத்தை தொலைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.2 முகம்

Question 4.
சுகந்தி சுப்பிரமணியனின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் குறிப்பிடுக.
Answer:
புதையுண்ட வாழ்க்கை, மீண்டெடுதலின் ரகசியம்.

சிறுவினா

Question 1.
முகம் என்ற கவிதை வாயிலாக சுகந்தி சுப்பிரமணியன் கூறுவன யாவை?
Answer:

  • ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. அவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்.
  • அடையாளம் காணும்போது எழுச்சியும் ஊக்கமும் கிடைக்கிறது.
  • அடையாளம் இழந்த ஒரு பெண் தன் அடையாளத்தைத் தேடுகிறாள்.
  • அவள் முகமும் காணவில்லை. தேடும்போது தன்னையும் தொலைத்து விடுகிறாள்.
  • முகவரியும் தொலைந்ததால் உடலைக் கவனிக்கப் பிறரை நாடுகிறாள்.
  • மனதில் ஆசையை வளர்த்து தன்னுள்ளே வைத்துக் கொண்டு வெளியே சுற்றுகிறாள்.
  • இப்படியே மனம் இறுகி தன்னைத் தேடி ஆண்டுகள் பல ஆயின.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 1.
உங்கள் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவரின் பணிகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
குறிப்பு :
தமிழறிஞர் சிலம்பு நா.செல்வராசு அவர்கள் புதுச்சேரி மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருபத்து ஓர் ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த ஆய்வாளர், ‘தமிழறிஞர்’, நெறியாளர் என்ற வரிசையில் அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும் இவர் ஆய்வரங்கம், பதிப்புப் பணி போன்ற துறைகளிலும் பணியாற்றி வரும் இவர் கலைமாமணி, தமிழ் செம்மல் விருது தமிழறிஞர் விருதுகள் பல பெற்று ஆய்வு மாணவர்களோடு தாமும் ஆய்வாளராக வாழ்ந்து வருகிறார்.

கலந்துரையாடல்

சூர்யா : வள்ளி, நேற்று நம் ஆசிரியர் சிலம்பு நா. செல்வராசு அவர்களைப் பற்றி வகுப்பில் பேசினார் அல்லவா! அதில் சிலம்பு என்று ஏன் பெயர் வந்தது.

வள்ளி : அதுவா! தமிழ்நாட்ல சில பேருக்குதான் பொருந்தும் அவர்களில் ஒருவர் நா.செல்வராசு.

சூர்யா : எனக்கு கொஞ்சம் விபரமா சொல்லு. வள்ளி : நா. செல்வராசு ஐயாசிலப்பதிகாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அது மட்டுமல்லாமல் தம்மை முழுமையாக சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டவர். சிலம்பு என்ற பெயரை அவரின் குருநாதர் வைத்த பெயராம்.

சூர்யா : மகிழ்ச்சி! ஐயா, எப்பொழுது இருந்து ஆய்வுப் பணி செய்கிறார்.

வள்ளி : 1984 முதல் இன்று வரை சங்க இலக்கியத்தில் நிறைய ஆய்வு செய்துள்ளார்.

சூர்யா : அவர் செய்த ஆய்வுகள் எனக்குச் சில சொல்ல முடியுமா.

வள்ளி : ஓ சொல்றேன். பண்டைய தமிழரின் திருமண வாழ்க்கை, கண்ணகி தொன்மம், வள்ளி முருகன் வழிபாடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

சூர்யா : தொன்மம் என்றால் என்ன?

வள்ளி : பழங்காலத்துக் கதை, உண்மைச் சம்பவம் அல்லது வரலாற்று நிகழ்வு.

சூர்யா : இவரைப் பற்றி ஏதாவது சிறப்பு இருக்கா?

வள்ளி : நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இவர் பதினெட்டு முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் முப்பத்தெட்டு ஆய்வியல் நிறைஞர்களையும் உருவாக்கியவர்
ஆவார். இவர் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் தம் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்
ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் – 2. மயிலை. சீனி. வேங்கடசாமி
இ) தமிழ் தென்றல் – 3. திரு.வி.க.
ஈ) மொழி ஞாயிறு – 4. தேவநேயப்பாவாணர்
Answer:
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்

Question 2.
ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்.
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறுத்தவமும் தமிழும்
Answer:
ஈ) கிறுத்தவமும் தமிழும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

குறுவினா

Question 1.
‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதுவதாக அமையும் நூல்.
  • தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்ற நூல்.

Question 2.
‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டேன்’ யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றிக் கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப்பணியை உயிர்ப் பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
Answer:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் எழுதிய புத்தகங்கள் தமிழரின் : புதையல்களாக விளங்குகின்றன.
  • சமயம், மானுடவியல், தொல்பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமை பெற்றவர்.
  • தமிழில் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

நெடுவினா

Question 1.
மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
(i) மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் மொழிக்கு முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளன.

(ii) இவரது ஆய்வுகள் அறிஞர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்கும் அறிவு விருந்தாகிறது.

(iii) பல ஆய்வுகள் கிளைவிட இவரது ஆய்வுகள் அடி மரமாக அமைந்தது.

(iv)  இவரது ஆய்வுகள் அனைத்தும் வேண்டியது, வேண்டாதது என்றோ, ஒதுக்க முடியாத வகையில் : இவரது எழுத்தாளுமை திகழ்கிறது.

(v) தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து மொழிக்குத் தொண்டாற்றியமைக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும், மதுரைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் : பேரவைச் செம்மல் விருதும் வழங்கியது.

(vi) ஓயாத தேடலினாலும், கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வுகள் வெளிக்கொணர்ந்த : மாமனிதருக்கு சென்னை கோகலே அரங்கில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

(vii) தமிழ்த் தேனீ என்றால் நம் மயிலை சீனியைத்தான் குறிக்கும்.

(viii) எப்போதும் அவரது கால்கள் அறிவை நோக்கியே நகர்ந்தன.

(ix) இவர் நூலகத்தைத் தன் தாயகமாகக் கொண்டு அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கினார்.

(x) இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டி தவறுகளை மறுத்து எடுத்துரைக்கும் ஆய்வு அணுகுமுறைக் கொண்டவர்.

(xi) சமயம், கலை, இலக்கியம், கிறுத்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற ஆய்வு நூல்களை எழுதியும், வட்டெழுத்து கோலெழுத்து தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமைப் பெற்று பன்முகங்கள் கொண்டு விளங்கினார்.

(xii) இத்தகு காரணங்களைக் கொண்டு நாம் மயிலையாரை ஆய்வு செய்கின்ற போது அவர் ஓர் சிறந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற கூற்று சாலப் பொருந்தும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த நாள் ………….. பிறப்பிடம்
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்
ஆ) 14.12.1905, சென்னை வடபழனி
இ) 13.10.1902, மதுரை மாட்டுத்தாவனி
ஈ) 10.12.1901
Answer:
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்

Question 2.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை ……………… ஆவார்.
அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) வெங்கடசுப்பு
Answer:
அ) சீனிவாசன்

Question 3.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் ………….. ஆவார்.
அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) ராசராசன்
Answer:
ஆ) கோவிந்தராசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 4.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தையார் பணி ……………. தமையனார் பணி ……………
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்
ஆ) தமிழாசிரியர், சித்த மருத்துவர்
இ) வழக்கறிஞர், கட்டிட வரைவாளர்
ஈ) கட்டிட வரைவாளர், வழக்கறிஞர்
Answer:
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்

Question 5.
மயிலை சீனி. வேங்கடசாமி ஆசிரியப் பயிற்சி பெற்று, தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள்
அ) 20
ஆ) 25
இ) 28
ஈ) 30
Answer:
ஆ) 25

Question 6.
1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிபேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘கிறித்தவமும் தமிழும்’ என்ற பொருள் குறித்து உரையாற்றியவர்
அ) கா. சுப்பிரமணியர்
ஆ) விபுலானந்த அடிகள்
இ) ச.த. சற்குணர்
ஈ) திரு.வி.க
Answer:
இ) ச.த. சற்குணர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 7.
மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல்
அ) கிறித்துவமும் தமிழும்
ஆ) பௌத்தமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கிறித்துவமும் தமிழும்

Question 8.
மயிலை சீனி. வேங்கடசாமி புலமை பெற்றிருந்த எழுத்துகள்
i) வட்டெழுத்து
ii) கோலெழுத்து
iii) தமிழ் பிராம்மி

அ) i, ii – சரி
ஆ) ii, iil – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

Question 9.
மயிலை சீனி. வேங்கடசாமி எந்தெந்த பல்லவ மன்னர்களைப் பற்றி நூல்களை எழுதினார்?
i) மகேந்திரவர்மன்
ii) நரசிம்மவர்மன்
iii) மூன்றாம் நந்திவர்மன்

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 10.
1905களில், ……………… நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
அ) கி.பி.3 – கி.பி.9
ஆ) கி.பி.6 – கி.பி.12
இ) கி.பி.7 – கி.பி.12
ஈ) கி.பி.8 – கி.பி.13
Answer:
அ) கி.பி.3 – கி.பி.9

Question 11.
கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் …………….. ஆசிரியர் ………………..
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நுண்கலைகள், கா. சுப்பிரமணியர்
இ) இசைவாணர் கதைகள், விபுலானந்த அடிகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி

Question 12.
தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்
அ) நுண்கலைகள்
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
இ) இசைவாணர் கதைகள்
ஈ) பௌத்தமும் தமிழும்
Answer:
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

Question 13.
மயிலை சீனி. வேங்கடசாமி நூல்களின் படங்களை வரைந்து வெளியிட்டவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) திரு.வி.க
ஈ) ச.த.சற்குணர்
Answer:
அ) மயிலை சீனி. வேங்கடசாமி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 14.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்திய ஆண்டு
அ) 1960
ஆ) 1962
இ) 1956
ஈ) 1954
Answer:
ஆ) 1962

Question 15.
தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தற்சான சான்றாக விளங்கும் வேங்கடசாமியின் நூல்
அ) பழங்காலத் தமிழர் வணிகம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) கொங்கு நாட்டு வரலாறு
ஈ) களப்பிரர் ஆட்சியில் தமிழாம்
Answer:
ஆ) தமிழ்நாட்டு வரலாறு

Question 16.
தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூலின் சிறப்பு
i) சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு இந்நூல் : எழுதப்பட்டுள்ளது.
ii) அத்துடன் துளுமொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.
iii) குறைந்த ஆதாரங்களைக் கொண்டு ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிய பெருமை மயிலை சீனி.வேங்கடசாமியையே சாரும்.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) iii மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 17.
ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடியாக விளங்கும் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்
அ) தமிழ்நாட்டு வரலாறு
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்
இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஈ) பழங்காலத் தமிழர் வணிகம்
Answer:
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்

Question 18.
‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் வேங்கடசாமி மறைந்து போன …………….. நூல்கள் தொடர்பான குறிப்புகளைக் கூறியுள்ளவர்.
அ) 321
ஆ) 333
இ) 345
ஈ) 247
Answer:
ஆ) 333

Question 19.
தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன் – என்று கூறியவர்

அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) திரு.வி.க.
ஈ) ம.பொ.சி.
Answer:
அ) பாரதிதாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 20.
வேங்கடசாமி, ………… என்னும் இதழில் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
அ) குடியரசு
ஆ) ஊழியன்
இ) செந்தமிழ்ச்செல்வி
ஈ) ஆரம்பாசிரியன்
Answer:
இ) செந்தமிழ்ச்செல்வி

Question 21.
மத்தவிலாசம் என்ற நாடக நூலை இயற்றியவர் ………………. அதனை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியவர்.
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நரசிம்மவர்மன், தெ.பொ.மீ
இ) மூன்றாம் நந்திவர்மன், விபுவானந்த அடிகள்
ஈ) இராசராசசோழன், கவிமணி
Answer:
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி

Question 22.
மயிலை சீனி. வேங்கடசாமி பெற்றுள்ள சிறப்புகளை பொருத்திக் காட்டுக.
i) தமிழ்ப் பேரவைச் செம்மல் – தமிழ் எழுத்தாளர் சங்கம்
ii) ஆராய்ச்சிப் பேரறிஞர் – சென்னை கோகலே மண்டபம்
iii) கேடயம் (1962) வழங்கல் – மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்

அ) 3, 2, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 2, 3, 1
Answer:
அ) 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 23.
சங்கக்காலப் பசும்பூன் பாண்டியன் தன் கொடியில் ……………. சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் வேங்கடசாமி.
அ) புலி
ஆ) யானை
இ) கழுதை
ஈ) சேவல்
Answer:
ஆ) யானை

குறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பு வரைக.
Answer:
பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி
பிறப்பு : 16.12.1900
ஊர் : மயிலாப்பூர்
பெற்றோர் : சீனுவாசன் – கோவிந்தம்மாள்
பணி : பள்ளி ஆசிரியர், இதழ் ஆசிரியர், ஆராய்ச்சியாளர்.

Question 2.
மயிலை சீனி. வேங்கடசாமிக்கு கிடைத்த சீதனங்கள் யாவை?
Answer:
மகாபாரதம், இராமாயணம்.

Question 3.
மயிலையார் எதன் அடிப்படையில் இன வரலாற்றை எழுதினார்?
Answer:
இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 4.
மயிலையாரின் ஆய்வுக்கட்டுரைகள் வெளியான இதழ்களைக் குறிப்பிடுக.
Answer:
குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச் செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி.

Question 5.
மயிலையார் கிறுத்துவமும் தமிழும் எனும் நூல் எங்கு யார் உரையைக் கேட்டு எழுதினார்?
Answer:

  • 1934 – தெ.பொ. மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளி.
  • தமிழ் ஆராய்ச்சி மாநாடு.
  • ச.த. சற்குணர் ஆற்றிய உரை.

Question 6.
மயிலையார் ஆய்வு செய்த துறைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:
சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழி ஆய்வு.

Question 7.
மயிலையாரின் பன்முக அறிவினைக் குறிப்பிடுக.
Answer:

  • சமயம், மானுடவியல், தொல் பொருள் ஆய்வு, தமிழக வரலாறு கலை வரலாறு போன்ற துறையிலும்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி கல்வெட்டுப் போன்ற துறைகளில் பன்முக அறிவினைப் பெற்று விளங்கினார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 8.
மயிலையாரின் எம்மொழிகளில் புலமையுடையவர்?
Answer:
மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம்

Question 9.
மயிலையாரின் மொழிபெயர்ப்பு பணியினைக் கூறுக.
Answer:
மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்தார்.

Question 10.
மயிலையாரின் சொல்லாய்வுப் பணியினை விளக்குக.
Answer:
மயிலையார் செய்த சொல்லாய்வினை செந்தமிழ்ச் செல்வி’ என்ற இதழில் எழுதி அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 11.
மயிலையாரைப் பற்றி விபுலானந்தவின் கருத்து யாது?
Answer:

  • மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர்.
  • நல்லொழுக்கம் வாய்ந்தவர்.
  • நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேப்போல் போற்றுபவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சிறுவினா

Question 1.
மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பினை விளக்குக
Answer:

  • ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்.
  • அகன்ற நெற்றி, வட்டமுகம், எடுப்பான மூக்கு, பேசத்துடிக்கும் உதடு, நான்கு முழ வேட்டி, காலர் இல்லா முழுக்கைச் சட்டை.
  • சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி பவுண்டன் பேனா, மேல் துண்டு, இடது கரத்தில் தொங்கும் புத்தகப்பை.
  • இத்தோற்றத்தோடு கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வருவார்.

Question 2.
மயிலையார் எதற்காக தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலை எழுதினார்?
Answer:

  • தற்காலத்துத் தமிழ்ச்சமூகம் தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்தன.
  • தன்பெருமையை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது.
  • கலை என்று கூறப்படுவதெல்லாம் சினிமாக் கலை இசைக்கலை பற்றியே.
  • இலக்கியக் கலை கூட அதிகமாகப் பேசப்படுவதில்லை .
  • ஏனைய அழகுக்கலைகள் மறந்து விட்டன.
  • இதன் காரணமாக இந்நூலை எழுதினார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 3.
மயிலையாரின் மீட்டுருவாக்க முயற்சியைச் சான்றுடன் விளக்குக.
Answer:

  • தமிழக வரலாற்றை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • ‘தமிழ் நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சான்று.
  • இந்நூல் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற தரவுகளைக் கொண்டு எழுதினார்.
  • துளுமொழி – தமிழ்மொழி ஒப்பீட்டு ஆராய்ந்துள்ளார்.

Question 4.
மயிலையாரின் ஆவணப் பணியினை விளக்குக.
Answer:
(i) தமிழியலுக்கு தேவையான பல்வேறு ஆவணங்களைத் தொகுத்து தம் பணியை மேற்கொண்டார்.

(ii) இதன் விளைவாக சாசனச் செய்யுள் மஞ்சரி மறைந்து போன தமிழ் நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் விளக்கம் அளிப்பதாக அமைந்தது.

(iii) இலக்கண, இலக்கிய பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்து போன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை முன் வைத்தார்.

Question 5.
மயிலையாரின் வாழ்க்கையைப் பற்றிச் சில தகவல்கள் திரட்டுக.
Answer:

  • திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தவர்.
  • தம் வாழ்வை முழுமையாகத் தமிழின் ஆய்வுக்கு ஒதுக்கியவர்.
  • நாம் தாழாமல் இருக்கத் தம்மைத் தாழ்த்திக் கொண்டவர்.
  • பெருமைகளை ஆய்வு நோக்கில் விரித்துரைத்தவர்.
  • சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 6.
மயிலை சீனி. வேங்கடசாமியின் தொடக்கக்கால ஆய்வுகள் பற்றி விளக்குக.
Answer:

  • 1934 தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் நிகழ்த்திய உரையைக் கேட்டு கிறித்துவமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் ஈடுபட்டு “பௌத்தமும் தமிழும்’, சமணமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல் பொருள் ஆய்வு, கலை வரலாறு முதலியன பல துறைகளில் கவனம் செலுத்தினார்.
  • கல்வெட்டு ஆய்வில் ஆர்வமும் பயிற்சியும் அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி புலமை பெற்றதால் சாசனங்கள் அவரால் எளிதில் வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் போன்ற துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளார்.

Question 7.
மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்கம் தருக.
Answer:

  • கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றி ஆய்வு செய்தார்.
  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் போன்றோர் நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளார். மூவேந்தர்கள், கொங்கு நாட்டு மன்னர்கள் களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதியுள்ளார்.
  • வரலாற்றை மட்டுமல்லாமல், அரசியல், பண்பாடு, கலை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
  • களப்பிரர் பற்றி ஆய்வு செய்து “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை வெளியிட்டார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 8.
மயிலை.சீனி. வேங்கடசாமியின் கலையியல் ஆய்வுகள் பற்றி விவரி.
Answer:
(i) கலையியல் சார்ந்த ஆய்வுகள், நூல்கள் வெளிவர வழிகாட்டியாக விளங்கியவர் மயிலையார்.

(ii) இதற்கு இளமைப் பருவத்தில் ஓவியக் கல்லூரியில் பயின்றது உதவியாக இருந்தன.

(iii) கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்திற்கு புதிய வரவாக இருந்தன.

(iv) தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் ஆகும்.

(v) தமிழக அரசின் முதல் பரிசுப் பெற்ற நூல் ஆகும். இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள் இசைவாணர் கதைகள் என்பன இவருடைய நூல்கள்.

(vi) தம் நூலில் தாமே படங்களை வரைவார். இது அவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

Question 9.
மயிலையாரின் இலக்கிய பணியினை விளக்குக.
Answer:

  • 1962இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
  • இதன் மூலம் ஆய்வுப்பயணம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டுகள் நோக்கி நகர்ந்தது.
  • இதன் விளைவாக பழந்தமிழர் வணிகர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு போன்ற நூல்களை எழுதினார்.
  • தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • “தமிழ்நாட்டு வரலாறு” எனும் நூல் மீட்டுருவாக்க முயற்சிக்கு சான்று.
  • துளுமொழி – தமிழ்மொழி ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார்.
  • சாசனச் செய்யுள் மஞ்சரி மறைந்து போன தமிழ் நூல்கள் எழுதினார்.
  • “மறைந்துப் போன தமிழ் நூல்கள்” மயிலையாரின் ஆவணப்பணிகளில் ஒன்றாகும்.
  • 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை முன் வைத்தார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

Question 10.
மயிலை சீனி. வேங்கடசாமி பன்மொழிப் புலமையை விளக்குக.
Answer:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை.
  • மயிலையாரும் சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வு கட்டுரைகள் “அஞ்சிறைத்தும்பி” நூலாக வெளி வந்தது.
  • மகேந்திரவர்மன் எழுதிய ‘மத்த விலாசம் எனும் நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தார்.
  • மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம் பாலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமைக் கொண்டவர்.
  • நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன் என்று கூறியவர்.
  • வரலாற்று ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி நூல்களை எழுகிறவன் என்று குறிப்பிட்டவர்.
  • மயிலை சீனி. வேங்கடசாமி இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சியில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர் என்று சுவாமி விபுலானந்த அடிகளார் புகழ்கிறார்.
  • இக்காரணங்களைக் கொண்டு மயிலையார் பன்மொழிப் புலமை வாய்ந்தவர் என்று கூறலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.6 தொன்மம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.6 தொன்மம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 1.
தொன்மம் என்னும் உத்தியைப் பயன்படுத்திப் புதுக்கவிதையொன்றை எழுதுக.
Answer:
தாண்டிக் கெட்டாள் சீதை
தாண்டாமல் கெட்டாள் கண்ணகி.

இரண்டு அடியாவது வாங்கினால்தான்
திருந்துவாய்….
வள்ளுவர் வாக்கு

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்க.
அ) கர்ணன் தோற்றான் போ.
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி
இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
ஈ) இந்தா போறான் தருமன்
Answer:
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி

Question 2.
தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.
அ) உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட வடிவங்கள்
ஆ) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.
இ) நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்.
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
Answer:
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
‘சாபவிமோசனம்’ ‘அகலிகை’ கவிதைகளில் தொன்மங்களாய் பயன்படுத்தியவர்
அ) கு. அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயமோகன்
ஈ) எஸ்.இராமகிருஷ்ண ன்
Answer:
ஆ) புதுமைப்பித்தன்

Question 4.
பண்புக்குறியீடுகளைக் கதை மாந்தர்களோடு பொருத்துக.
அ) அறம் – 1. கர்ண ன்
ஆ) வலிமை – 2. மனுநீதிச்சோழன்
இ) நீதி – 3. பீமன்
ஈ) வள்ள ல் – 4. தருமன்

அ) 3, 2, 1, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

குறுவினா

Question 5.
தொன்மம் விளக்குக.
Answer:

  • சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன.
  • உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
  • அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாது.
  • சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாக அவற்றினால் ஏற்படும் கட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 6.
பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக.
Answer:
(i) நம் அன்றாடப் பேச்சில் மரபுத்தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.

(ii)  “கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான்’ – என்பது இராமாயணத்தில் பர்ணசாலையை விட்டு சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத்தொடர்.

(iii) ‘மனுநீதிச் சோழன்’ – தன் தேர்ச்சக்கரத்தில் இறந்த கன்றுக்காக தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற சோழன் நீதி தவறாத ஆட்சி.

Question 7.
உள்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா? – இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?
Answer:

  • தொன்மங்கள் முரண்பட்டவை.
  • ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
  • இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகிய தொன்மங்கள் வெளிப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்திக் காட்டுக.
i) பழங்கதை
ii) புராணம்
iii) புதுக்கதை

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) i, ii – சரி
Answer:
ஈ) i, ii – சரி

Question 2.
கவிதையில் பழங்கதையைத் துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவது
அ) படிமம்
ஆ) தொன்மம்
இ) குறியீடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) தொன்மம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
புதுமைப்பித்தன், சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதத் தொன்மாகப் பயன்பட்ட நூல்
அ) இராமாயணம்
ஆ) மகாபாரதம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) இராமாயணம்

Question 4.
திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு ‘விட்டகுறை’, ‘வெந்தழலால் வேகாது’ என்னும் சிறுகதைகளைப் படைத்தவர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) அழகிரிசாமி
இ) எஸ். ராமகிருஷ்ண ன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) அழகிரிசாமி

Question 5.
தொன்மங்களைக் கொண்டு படைக்கப்பட்டவைகளையும், படைப்பாளிகளையும் பொருத்திக் காட்டுக.
i) புதுமைப்பித்தன் – அரவாணன்
ii) அழகிரிசாமி – பத்மவியூகம்
iii) ஜெயமோகன் – விட்ட குறை
iv) எஸ். இராமகிருஷ்ண ன் – அகலிகை

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 6.
தொன்மைக்குச் சான்றாக இளம்பூரணர் உரையில் இடம் பெறுவன
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
இ) பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
ஈ) இராம சரிதம், பெருந்தேவனார் பாரதம்
Answer:
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்

Question 7.
தொன்மைக்குச் சான்றாகப் பேராசிரியர் உரையில் இடம் பெறுவன
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
இ) பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
ஈ) இராம சரிதம், பெருந்தேவனார் பாரதம்
Answer:
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை

Question 8.
‘வெல்வேல் கவுரியர் தொன்முதுகோடி’ என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள தொன்மம் உணர்த்துவது
அ) காதல் வெற்றி
ஆ) காதல் தோல்வி
இ) தலைவன் மரணம்
ஈ) தலைவி வருத்தம்
Answer:
அ) காதல் வெற்றி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 9.
“முருகு உறழ் முன்பொரு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை”
என்ற நற்றிணை பாடல்களில் வெளிப்படும் தொன்மம் உணர்த்தும் செய்தி

அ) காதல் வெற்றி
ஆ) யானையின் போர் – முருகனின் வீரம்
இ) பெண்ணியம் போற்றுவது
ஈ) கொடையாற்றலின் சிறப்பு
Answer:
ஆ) யானையின் போர் – முருகனின் வீரம்

Question 10.
மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்
எப்பவும் எரிதழல் மடிசுமப்பது இனி
எங்கள் வேலையல்ல – என்னும் கவிதையில் அமைந்துள்ள தொன்மம்
i) இக்காலப் பெண்ணியத்திற்கான தொன்மமாகக் கண்ணகி
ii) பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மமாக மதுரை

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 11.
கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக் காட்டுக.
i) இந்திரன் – சோல்
ii) வருணன் – மார்ஸ்
iii) பலராமன் – டயானிசிஸ்
iv) கார்த்திகேயன் – ஊரனாஸ்
v) சூரியன் – சீயஸ்பிடர்

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 3, 5, 1, 2
இ) 5, 1, 2, 3, 4
ஈ) 2, 1, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 12.
கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக் காட்டுக.
i) சந்திரன் – இராஸ்
ii) விஸ்வகர்மன் – மினர்வா
iii) கணேசன் – ஜீனோ
iv) துர்க்கை – ஜோனஸ்
v) சரஸ்வதி – வன்கண்
vi) காமன் – லூனஸ்

அ) 6, 5, 4, 3, 2, 1
ஆ) 5, 6, 4, 3, 2, 1
இ) 4, 3, 2, 1, 5, 6
ஈ) 3, 2, 4, 5, 6
Answer:
அ) 6, 5, 4, 3, 2, 1

குறுவினா

Question 1.
தொன்மத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்?
Answer:

  • தொன்மத்தை வெளிபடுத்தும் முதன்மையான கருவி கவிதை.
  • உலகில் பெரும்பாலான தொன்மங்கள் கவிதை மூலமே வெளிப்படுகின்றன.

Question 2.
திரைப்படங்கள், நாடகங்கள், கதைகளில் தொன்மங்கள் கையாண்டுள்ளவற்றைச் சில சான்றுகள் தருக.
Answer:

  • இராமாயணத்தின் அகலிகை’ கதையை வைத்துப் புதுமைப்பித்தனின் சாப விமோசனம்.
  • திருவிளையாடற் புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு அழகிரிசாமி, ‘விட்டகுறை’ வெந்தழலால் வேகாது என்னும் சிறுகதை.
  • ஜெயமோகனின் – பத்மவியூகம், எஸ். ராமகிருஷ்ணனின் – அரவாணன் போன்ற புதினங்களில் தொன்மங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
தொன்மம் பற்றி தொல்காப்பியனார் கூறுவன யாவை?
Answer:

  • தொன்மை தானே சொல்லுங்காலை.
  • உரையோடு புணர்ந்த பழமை மேற்றே (தொல் செய்யுளியல் – 228).
  • உரையோடு சேர்ந்த பழமையே தொன்மம் என்கிறார் தொல்காப்பியர்.

Question 4.
தொன்மம் பற்றி இளம்பூரணரர் கூறுவன யாவை?
Answer:
தொன்மையாவது உரையோடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவசரிதமும் மேல்வருஞ் செய்யுள் என்கிறார் இளம்பூரணர்.

Question 5.
தொன்மம் பற்றி பேராசிரியர் கூறுவன யாது?
Answer:
தொன்மை என்பது உரை விராஅய்ப் பழமையனவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது. அவை:
“பெருந்தேவனார் பாரதம்
தகடூர் யாத்திரை” போன்றன என்று உரையாசிரியர் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

சிறுவினா

Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் முருகனின் தொன்மத்திணை நற்றிணை வாயிலாக விளக்குக.
Answer:

  • சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய கதைப்பகுதிகள் உள்ளன.
  • முருகனுக்கு வெறியாடும் சடங்கு முறைகளும் தொன்மங்களாக ஆளப்பட்டுள்ளன.
  • முருகனை அழகுக்கும், ஆற்றலுக்கும், வீரத்துக்கும் உவமையாக்கி உள்ளனர்.
  • யானைசினங்கொண்டு போர் செய்த சிறப்பினை முருகன் வீரத்தோடு இணைத்துக் கூறியுள்ளனர்.

“முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை” (நற்றிணை 225-1-2)

Question 2.
தொன்மங்கள் பற்றி அப்துல் ரகுமானின் கருத்து யாது?
Answer:

  • தொன்மங்கள் முரண்பட்டவை.
  • ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
    “உன்மனம் ஒரு பாற்கடல்
    அதைக் கடைந்தால்
    அமுதம் மட்டுமல்ல
    ஆலகாலமும் வெளிப்படும்” – என்பதை நீ அறிவாய் அல்லவா!
  • இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்களாக வெளிப்படுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 3.
பெண்ணியம் பற்றித் தொன்மம் கூறுவன யாவை?
Answer:
கண்ணகி கதை தொன்மை நோக்கிய வளர்ச்சியைப் பெற்றது. “பெண்ணியத்திற்கான தொன்மம் – கண்ணகியும், பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மம் – மதுரையும்” பின்வரும் கவிதைகளில் பெண்கள் வாழ்க்கை முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
“மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்”.

Question 4.
தொன்மம் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  • தொன்மம் எங்கும் எப்போதும் எல்லா இடத்திலும் வழக்கில் உள்ளது.
  • காலத்தைக் கடந்து நிற்பது.
  • இக்காலத்தோடு கடந்த காலத்தை இணைப்பது.
  • சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை.
  • விளக்க தொன்மம் பயன்படுகிறது.
  • கருத்தினை ஆழமாக விளக்கும் உத்தியாகவே உள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

இவரின் தந்தை அரசுப் பணியாளர் என்பதால் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதை அடைந்த நிலையில் ‘இனி இவன் எங்கே படிக்கப் போகிறான்?’

என்று முடிவெடுத்து ஒரு மையல் கடையில் அவரது தமையனாரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். ‘நான் பதினைந்து நாட்கள் வேலை கற்றுக்கொண்டேன்; காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 1

கொடுப்பார்’ என்று பின்னாளில் பதிவு செய்த அவரால் அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை .

தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த் தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்பு ழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார். அவர்தான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா.இராமாணிக்கனார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

ஆய்வு நெறி முறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்ககாலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ -தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே.

சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரிய புராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூ ல்களை இயற்றிய பெருமைக்கழியவராகத் திகழ்ந்தார். 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூ ல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய சொல்லாற்றலுக்கொரு சான்று:
“அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கம் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும்.” (மா.இராசமாணிக்கனார் எழுதிய புதிய தமிழகம் நூலில் இருந்து)

வினாக்கள்
1. இராசமாணிக்கனாரின் பன்முகத்தன்மை பற்றிக் கூறுக.
2. இவருடைய நூல்கள் எந்த ஆண்டு தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன?
3. பிரித்தறிக: பேருதவி
4. உறுப்பிலக்கணம் தருக : இழந்து
5. இலக்கணக் குறிப்பு வரைக: காய்தல்
Answer:
1. இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்றவை.
2. 2006 – 2007 ஆம் ஆண்டு .
3. பேருதவி – பெருமை + உதவி.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 2
5. காய்தல் – தொழிற்பெயர்

தமிழாக்கம் தருக.

A White woman, about 50 years old, was seated next to a black man. Obviously disturbed by this, she called the airhostess. “Madam, what is the matter?” the hostess asked. “You placed me next to a black man. Give me an alternative seat”. The hostess replied. “Almost all the places on this flight are taken. I will go to see if another place is available. The hostess went away and came back a few minutes later. “Madam, just as I thought, there are no other available seats in the economy class. We still have one place in the first class”.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Before the woman could say anything, the hostess continued. “It would be scandalous to make someone sit next to someone so disgusting”. She turned to the black guy and said, ” Sir, a seat awaits you in the first class”. At the moment, the other passengers who were shocked by what they had just witnessed stood up and applauded. Take a lesson from the sun who shines his light on everyone. Or the rain that falls on every single shore. No distinction of our race or the colour of our face. Nature’s gifts are there for all men rich or poor. (Courtesy: S.S.S. Bal Vikas)

தமிழாக்கம்:
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு நிற (நீக்ரோ) மனிதன் அருகே அமர்ந்திருந்தாள். இதனால் வெறுப்புற்ற அவள், விமான பணிப்பெண்ணை அழைத்து, தமக்கு வேறு இருக்கை வேண்டும் என முறையிட்டாள். ஏறக்குறைய எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வேறு ஏதேனும் உள்ளனவா என பார்க்கிறேன் என்று பணிப்பெண் பதிலளித்தாள். சற்று தூரம் சென்ற பணிப்பெண் ஒருசில வினாடிகளில் திரும்பி வந்து இரண்டாம் வகுப்பில் இருக்கைகள் இல்லை. ஆனால் முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது என்றாள். அந்தப் பெண் வாய் திறக்குமுன், விமான பணிப்பெண் தொடர்ந்தாள்.

“பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது வெறுப்பாக உள்ளது என்பதை நானும் வெறுக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்தக் கருப்பின இளைஞனை நோக்கி, “ஐயா, உங்களுக்கு முதல் வகுப்பில் ஒரு இருக்கை காத்திருக்கிறது” என்று அவனை அழைத்தாள். இதனைக் கண்ட மற்ற பயணிகள் எழுந்து நின்று அவளின் செயலைக் கண்டு கைதட்டி பாராட்டினார்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், சூரியன், பேதமின்றி அனைவழக்கும் ஒளி வீசுகிறது. மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது. இயற்கையே இவ்வாறு பேதமின்றி தனது கொடைகளைவழங்கும் போது, இனத்தையும், நிறத்தையும் மற்றும் முகத்தையும் பார்த்து சக மனிதனை நாம் வெறுக்கலாமா?

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச் செய்தியாக மாற்றுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 3

புத்தகக் கண்காட்சி
– நமது சிறப்பு நிருபர் –

42வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 2019 ஜனவரி 4 முதல் நடைபெற உள்ளது. அனைத்து வயதினரும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. 800 அரங்குகள், 20,00,000. வாசகர்கள். 30,00,000, பார்வையாளர்கள் பங்குபெறும் அறிவித்திழவிழா. நுழைவுக் கட்டணம் ரூபாய் 10/- மட்டுமே. நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு 10% கழிவு உண்டு. வாருங்கள் புத்தகங்களை வாசிப்போம்! வாழ்க்கையை நேசிப்போம்…!!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

விழா ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் | மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்.

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

ஆற அமர : ஒரு பிரச்சினையில் தெளிவான நல்ல முடிவெடுக்க வேண்டுமென்றால் முதலில் உணர்ச்சிவசப்படாமல் ஆர அமர’ யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

ஆணி அடித்தாற் போல : எங்கள் தமிழாசிரியை நடத்திய குறியீட்டு இலக்கணம் என் மனதில் ‘ஆணி அடித்தாற் போல் பதிந்தது.

அகலக்கால் : பின்வரும் விளைவுகளை யோசிக்காமல் அகலக்கால்’ வைத்தால் துன்பம் நேரிடும்.

வழிவழியாக : சோழமன்னர்களின் ஆட்சி வழிவழியாக அவருடைய வாரிசுகளே ஆண்டு வந்துள்ளனர்.

கண் துடைப்பு : எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும்போதெல்லாம் தம்பியை அரவணைத்தும், என்னை அடித்தும் ஒரு கண்துடைப்பு நடத்துவார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

உங்கள் கனவு ஆசிரியர் குறித்துக் கட்டுரை எழுதுக.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”
இறைவனுக்கு வணங்காத தலையும், ஆசிரியரை வணங்காத கையும் இருந்ததென்ன பயன். அதுபோல உலக மக்கள் உய்ய வள்ளுவன் போல ஆசிரியராக விளங்கிட வேண்டும்.

“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”,
என்று பாப்பா பாட்டின் மூலம் படிப்பினைப் பதிப்பித்த பாரதி போல் ஆசானாக வேண்டும்.

“இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே’,
என்று சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டிய புரட்சிக் கவி போல ஆசானாக மிளிர வேண்டும்.

“பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வேண்டும் கற்பு”
என்று அறிவுறுத்திய பெரியரைப் போல சமூக நீதி கற்பிக்கும் ஆசானாக வேண்டும்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும்”
என்று முழங்கிய பேரறிஞர் போல் ஆசானாக வேண்டும்.

“மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வம் வேறு இடத்தினில் சேர்வதினால் வரும் தொல்லையடி”
என்று பாமர மக்களுக்குப் பாடம் புகட்டிய பட்டுக்கோட்டையார் போல் ஆசானாக வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

“உங்கள் வாழ்க்கையின் கடைசித் தருணம் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டதற்கு நான் மாணவர் மத்தியில் பாடம் நடத்திக் கொண்டிக்கும் போது அத்தருணம் வாய்க்க வேண்டும்” என்றாராம் கலாம்.
அவர்க்கு மட்டுமே அத்தருணம் வாய்த்தது. அத்தகைய ஆசான் போல் ஆக வேண்டும். மானுடன் வாழ நல்ல போதனைகளைத் தந்திட்ட இச்சான்றோர்களே என் கன(வு)வின் ஆசிரிய பிரம்மாக்கள் ஆவர்.

இலக்கிய நயம் பாராட்டுக.

பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் காசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை – ஏழை விறகெரிக்க வீசுவேன் – நா. காமராசன்

ஆசிரியர் குறிப்பு :
பெயர் : நா. காமராசன்.
பிறப்பு : 1942 – தேனி மாவட்டம், போ. மீனாட்சிபுரம்.
இறப்பு : மே 24. 2017, சென்னை .
பணி : கவிஞர், பாடலாசிரியர்.
சிறப்பு : புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவர், பேராசிரியர், மொழிபெயர்ப்புத் துறை.

திரண்டக் கருத்து :
பாலைவனம் போல் காட்சியளிக்கும் பூமியை முத்து பூத்த கடல் போல் ஆக்குவேன். புயலைக் கூறுபடுத்தி தென்றல் ஆக்குவேன். இரவில் விண்மீனைப் பயன்படுத்தி இல்லாதவரோடு பேசுவேன். சுட்டெரிக்கும் சூரியனை வீட்டுக்கு விறகெரிக்கப் பயன்படுத்துவேன்.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
சான்று:
பூமிச்சருகாம்
புயலை
புதிய
ரவில்
ரவலரோடு
ரவெரிக்கும்

எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று:
வில்
வலரோடு
வெரிக்கும்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
சான்று:
கடல்களாக்குவேன்
தென்றலாக்குவேன்
பேசுவேன்
வீசுவேன்

கற்பனை நயம் :
கற்பனை விற்பனை அல்ல. கவிஞர் தம் கற்பனையை விற்பனை செய்யாமல் தம் : கவிதையிலேயே பயன்படுத்தியுள்ளார்.
புயலைக் கூறுபடுத்தியே – கோடி
புதிய தென்றலாக்கு வேன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

அணி நயம் :
குளத்துக்குத் தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு
அணி என்பதன் பொருள் அழகு ஆகும். இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.

தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

Question 1.
வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
Answer:
வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

Question 2.
முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
Answer:
முருகன் சோறு உண்டு பால் பருகினான்.

Question 3.
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.
Answer:
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான்.

Question 4.
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
Answer:
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

Question 5.
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
Answer:
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.

Question 6.
பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
Answer:
பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தற்குறிகளை இட்டு எழுதுக.

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

“இளங்கோ அடிகள் சாத்தனாரிடம்” முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

கீழ்க்காணும் விண்ணப்பத்தை நிரப்புக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 4
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

குறிப்பு:
விண்ணப்பப் படிவத்துடன் கீழ்க்காணும் சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட படிகள் இணைக்கப்பெற வேண்டும்.
1. மதிப்பெண் பட்டியல் (10ஆம் வகுப்பு/10+2/10+3/11+1+3/இளநிலை வரிசையில்),
2. மாற்றுச் சான்றிதழ்
3. தற்காலிகச் சான்றிதழ் (Provisional certificate)அல்ல து பட்டச் சான்றிதழ் (Degree certificate)

மொழியோடு விளையாடு

படித்துப் பார்த்துப் படைக்க

மென்பறவைக் கூடு மின்றி
தின்பதற்குத் தீனியின்றி
தன் சிறிய குஞ்சுகளை
பொன் சிறகில் மூடி நின்று
நிற்கதியாம் நிலைதனிலே
நிற்க ஒரு நிழல் தேடி
பற்பலவாய் எண்ணமிட்டு
பக்கம் ஒரு மரம் கண்டு
தருவின் நிழல் கண்டு
தானியத்தின் மணி கண்டு
அருகில் தன் குஞ்சுகளை
அணைத்தங்கு சென்றதுவே
நெருங்கி வந்து பார்க்கையிலே
நிழலில்லை மணியில்லை
நெருஞ்சி முள்ளை நெல்மணியாய்
நினைத்து விட்ட பரிதாபம்
பச்சையற்ற மரத்தருகே
படர்வதுண்டோ நிழலதுவும்
பசையற்ற நெஞ்சினுள்ளே
பாசமெனும் நிழலுண்டோ ? – பூரணி

படித்துப் பார்த்துப் படைத்தது

உடலைக் கூடாக்கி
உள்ளத்தைக் கல்லாக்கி
உண்பதற்கு உணவின்றி
தன் சந்ததியை
தானே இறகில் சுமந்து
அமர இடமில்லாமல் அலைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

தான் நொந்து
தன் பிள்ளையைக் கண்டு
மனம் நொந்து
மரம்தரும் கனியைத்
தேடி அலைகிறது.

மரங்கண்டு மனமகிழ்ந்து
சென்றால் மரம்
கானல் நீர்போல்
காட்சியளிக்கிறது.
நெருஞ்சி முட்கள்
பச்சையற்ற மரத்தினருகே
இச்சையற்று இனிமேல்
உயிர்வாழ்வேன் என மாய்ந்தது.

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 6
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள்
வீட்டினில் அடைத்து வைக்கும் கிளிகளல்ல நாங்கள்
பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல நாங்கள்
விண்ணில் பயணம் செய்திடுவோம்
விந்தைகள் பல புரிந்திடுவோம்
ஆடல் மட்டும் ஆடும் பெண்களல்ல
விளையாட்டுக்களில் விவேகம் காட்டும் வீராங்கனைகள்
கணிதம் அறியா மக்குகளல்ல நாங்கள்
கணினியிலும் விற்பன்னர்கள் நாங்கள்
நிதியிலும் நீதியிலும் மேலாண்மை பெறுவோம் – நாங்கள்
வீராங்கனைகளாகப் பாதுகாப்புக்கும் வலம் வரும்
காவல் தெய்வங்கள் நாங்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

விமானிகளாகி விண்ணகத்தில் உலா வருவோம்
ஆட்சியராகி அகிலத்தில் நல்லாட்சி தருவோம்
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அல்ல
தீமைகள் அழிவதும் பெண்ணாலே என திருத்துவோம்
மாதராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்
என்று பாடிய கவிமணியை வணங்கி முடிக்கிறோம்.

செய்து கற்போம்

உங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்க.

மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா

இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா

நிற்க அதற்குத் தக

பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவம் நீவிர் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம்

(நம்முடைய வீட்டின் மீது நமக்கு இருக்கும் பொறுப்பினைப் போலவே பொதுச்சொத்துக்களின் மீதும் நமக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு. எவையெல்லாம் பொதுச்சொத்துகள் எனப் பட்டியலிட்டு அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறுக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 7
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.6 தொன்மம் 8
படிப்போம் பயன்படுத்துவோம் (வங்கி)

1. Debit Card – பற்று அட்டை
2. Demand Draft – கேட்பு வரைவோலை
3. Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
4. Teller – விரைவுக் காசாளர்
5. Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
6. Internet Banking – இணையவங்கி முறை