Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 1.
நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக்கொண்டு அதிலுள்ள நால் வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக.
Answer:
நாளிதழ் செய்தி : “இறைத்து ஊரும் கேணி போல கல்வி அறிவில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். இதழ் விரிந்து மணம் பரப்பும் புஷ்பம் போல மேன்மை பெற வேண்டும் என்று மாணவர்களைத் தலைவர்கள் வாழ்த்தினர்”.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் …………………
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
அ) இயற்சொல்

Question 2.
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது …………….
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
ஆ) திரிசொல்

Question 3.
வடமொழி என்று அழைக்கப்படும் மொழி …………….
அ) மலையாளம்
ஆ) கன்னடம்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
Answer:
இ) சமஸ்கிருதம்

பொருத்துக.

1) இயற்சொல் – பெற்றம்
2) திரிசொல் – இரத்தம்
3) திசைச்சொல் – அழுவம்
4) வடசொல் – சோறு
Answer:
1) இயற்சொல் – சோறு
2) திரிசொல் – அழுவம்
3) திசைச்சொல் – பெற்றம்
4) வடசொல் – இரத்தம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

குறு வினா

Question 1.
மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
Answer:
மண், பொன் என்பன பெயர்இயற்சொல்வகைச் சொற்கள் ஆகும்.

Question 2.
இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
Answer:

  1. பெயர்இயற்சொல்
  2. வினை இயற்சொல்
  3. இடைஇயற்சொல்
  4. உரி இயற்சொல்

Question 3.
குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
Answer:
குங்குமம், கமலம் என்பன தற்சமம் வகை வடசொற்கள் ஆகும்.

சிறுவினா

Question 1.
இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும். அவை யாவன:

  1. இயற்சொல்
  2. திரிசொல்
  3. திசைச்சொல்
  4. வடசொல்

Question 2.
திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
Answer:
திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு நிலையில் வரும். ஒரு பொருள் குறித்த பல திரிசொல், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 3.
பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
Answer:
பண்டிகை, கேணி என்பன திசைச்சொற்கள் ஆகும்.
விளக்கம் :
பண்டிகை, கேணி ஆகிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அன்று. வடமொழி தவிர பிறமொழிகளிலிருந்து வந்த சொற்கள் திசைச்சொற்கள் ஆகும்.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
கடற்பயணம் தொடர்பான கதைகளைப் பெரியோரிடம் கேட்டு மகிழ்க.
Answer:
கப்பல் ஒன்றில் சுற்றுலா செல்ல இருபது பேர் ஆயத்தமானார்கள்.துறைமுகத்தை நோக்கி மகிழ்வுடன் அனைவரும் சென்றனர். கப்பல் வந்தவுடன் நான்கு குடும்பத்தாரும் கப்பலில் அமர்ந்தனர். கப்பல் சிறிது தூரம் செல்லுகையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திருவிழா போல இருந்தது. கபிலனின் குடும்பமும் தங்கள் ஐந்து வயது மகனிடம் கடலின் அழகைக் கூறி மகிழ்ந்து வந்தனர்.

கப்பல் ஒரு தீவை அடைந்தது. அங்கு அனைவரும் உணவு உண்டு விட்டு, ஓய்வெடுத்தனர். மாலை நேரம் ஆனவுடன் மீண்டும் கப்பல் பயணம் தொடங்கியது. இரவு வேகமாகச் சென்றது. காலையில் புத்துணர்வுடன் கப்பலில் இருந்து கடல் நீரைத் தொட்டு மகிழ்ந்தனர். கபிலனின் ஐந்து வயது மகன் கடல் நீரைத் தொட ஆசைப்பட்டான். கபிலன் தூக்க, மகன் தண்ணீரைத் தொட்டு மகிழ்ந்தான்.

திடீரென கப்பல் குலுங்கியது. ஏதோ ஒரு சத்தம் கப்பல் பயங்கரமாக ஆடத்தொடங்கியது. கபிலனின் மகன் கையை முதலை ஒன்று கவ்வி இழுத்தது. காப்பற்ற கதறி அழுது முயற்சித்தனர். மாலுமிகுழந்தையை விடவில்லை என்றால் இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகி மற்ற 19 பேரும் இறக்க நேரிடும் என்றார். கபிலன் தன் மகனுக்காக 19 பேர் சாக வேண்டுமா எனச் சொல்லி தன் மகனை முதலையிடம் காவு கொடுத்து 19 பேர் உயிரைக் காப்பாற்றி கதறி அழுதான்.

பின்வரும் தலைப்புகளில் இரண்டு நிமிடங்கள் பேசுக.

Question 1.
கப்பல்களின் வகைகளும் பயன்களும்
Answer:
தாயே! தமிழே! வணக்கம். கப்பல்களின் வகைகளும் பயன்களும் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். வர்த்தகக் கப்பல்கள், கடற்படை கப்பல்கள் என பல வகைக் கப்பல்கள் உள்ளன. வர்த்தகக் கப்பல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல், சிறப்பு தேவைக் கப்பல் ஆகியனவாகும். சரக்குக் கப்பல்கள் உலர் மற்றும் திரவ சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றது. பயணிகளுக்குப் பயன்படும் கப்பல் பயணிகள் கப்பல். கடல் பகுதி எல்லையைப் பாதுகாக்கும் கப்பல் கப்பற்படைக்கப்பல் ஆகும். நன்றி.

அறிந்து பயன்படுத்துவோம்

காலம் மூன்று வகைப்படும் :
1. இறந்தகாலம்
2. நிகழ்காலம்
3. எதிர்காலம்

1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம்.
சான்று : பார்த்தான், ஆடினாள்.

2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம்.
சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள்.

3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
சான்று : காண்பான், ஆடுவாள்.

கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் 2

பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.

Question 1.
அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
Answer:
அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.

Question 2.
கண்மணி நாளை பாடம் படித்தாள்.
Answer:
கண்மணி நாளை பாடம் படிப்பாள்.

Question 3.
மாடுகள் இப்பொழுது புல் மேயும்.
Answer:
மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது.

Question 4.
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
Answer:
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.

Question 5.
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
Answer:
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

பயணங்களின் பலவகை

Question 1.
முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப்பயணம் – வான்வழிவழிப் பயணம் – முடிவுரை
Answer:
முன்னுரை :
பயணம் என்பது சங்ககாலம் முதல் நிகழ்ந்து வருகின்றது. நடைபயணமாகத் தொடங்கிய பயணத் தோற்றம் அறிவியல் வளர்ச்சியால் இன்று பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. பயண நேரம் இன்று மிகவும் சுருங்கிவிட்டது.

பயணத்தின் தேவை :
மனிதன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காவும், பண்டமாற்று முறைக்காகவும், பொருட்களைவாங்கவும் விற்கவும் சந்தைப்படுத்தவும். தம் உறவினர் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்வதற்கும், மருத்துவத் தேவைக்காகவும் பயணத்தின் தேவை ஏற்பட்டது. பயணத்தின் தன்மைக் கேற்ப தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிவழிப் பயணம் என வகைப்படுத்தப்பட்டது.

தரை வழிப்பயணம் :
பழங்காலம் முதல் தரைவழிப்பயணமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நடைபயணமாகவே ஆரம்ப கால கட்டத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டது.மாட்டு வண்டி, குதிரை வண்டியின் மூலம் நடைபெற்ற தரைவழிப் பயணம். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மிதிவண்டி, மகிழ்வுந்து, பேருந்து, சரக்குந்து, தொடர்வண்டி ஆகியவை மூலம் தரைவழிப்பயணம் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.

கடல்வழிப்பயணம் :
கப்பல் போன்றவற்றில் கடல்வழியாகச் செல்லும் பயணம் கடல்வழிப்பயணம் ஆகும். கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. தீவுகள் மற்றும் வெகு தொலைவு நாடுகளுக்குப் பொருட்களை அனுப்பவும் , அயல் நாடுகளுக்கு வணிகம் செய்யவும் கடல்வழிப்பயணம் பயன்பட்டது.

வான் வழிப்பயணம் :
விமானம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வான்வழியில் பயணம் மேற்கொள்வது வான்வழிப்பயணம் ஆகும். தரை மற்றும் கப்பல் வழி பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒருசில மணி நேரங்களிலேயே செல்லலாம். அதிவிரைவுக்கு ஏற்றது வான்வழிப் பயணம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

முடிவுரை :
பயணம் செய்வதில் பாதுகாப்பான முறைகளை அறிந்து பயன்படுவது பயணிகளாகிய நம் கடமையாகும். பயணத்தில் வீண் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.
(“பயணத்தில் தேவை கவனம்”)

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் 3

இடமிருந்து வலம்
1. அச்சான் – தந்தை
2. விஞ்ஞானம் – அறிவியல்
4. பரீட்சை – தேர்வு
10. லட்சியம் – இலக்கு

வலமிருந்து இடம்
6. அபாயம் – இடர்
8. தேகம் – உடல்
13. சரித்திரம் – வரலாறு
14. சத்தம் – ஒலி

மேலிருந்து கீழ்
1. அதிபர் – தலைவர்
3. ஆச்சரியம் – வியப்பு
7. ஆரம்பம் – தொடக்கம்
12. சதம் – நூறு

கீழிருந்து மேல்
5. ஆதி – முதல்
9. உத்தரவு – கட்டளை
11. தினம் -நாள்
15. சந்தோசம் – மகிழ்ச்சி

குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் 4

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

நிற்க அதற்குத் தக..

கலைச்சொல் அறிவோம்

1. கலங்கரை விளக்கம் – Light house
2. பெருங்கடல் – Ocean
3. கப்பல் தொழில் நுட்பம் – Marine technology
4. கடல்வாழ் உயிரினம் – Marine creature
5. நீர் மூழ்கிக் கப்பல் – Submarine
6. துறைமுகம் – Harbour
7. புயல் – Storm
8. மாலுமி – Sailor
9. நங்கூரம் – Anchor
10. கப்பல் தளம் – Shipyard

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
கடல், கப்பல் என்பன ………………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
அ) இயற்சொல்

Question 2.
வங்கூழ், அழுவம் என்பன ………………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
ஆ) திரிசொல்

Question 3.
சாவி, சன்னல், பண்டிகை, இரயில் என்பன ………………….
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
இ) திசைச்சொல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 4.
வருடம், மாதம், கமலம் என்பன ……………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
ஈ) வடசொல்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நடந்தான், வந்தான் என்பது ……………….. இயற்சொல்.
2. அவனை, அவனால் என்பது ………………. இயற்சொல்.
3. மாநகர் என்பது ………………… இயற்சொல்.
4. இயம்பினான், பயின்றான் என்பது …………….. திரிசொல்.
5. அன்ன, மார் என்பது ……………. திரிசொல்.
6. இரயில், பெற்றம் என்பன ……………. சொற்கள்.
7. வடசொற்களை ……………, ……………….. என இரு வகையாகப் பிரிப்பர்.
Answer:
1. வினை
2. இடை
3. உரி
4. வினைத்
5. இடைத்
6. திசைச்
7. தற்சமம், தற்பவம்

குறுவினா

Question 1.
சொல் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஓர் எழுத்த தனித்தும் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது சொல் எனப்படும்.
சான்று : பூ, அறம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 2.
சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் யாவை?
Answer:

  1. மொழி
  2. பதம்
  3. கிளவி

Question 3.
திரிசொல் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
கற்றோர்க்கு மட்டும் விளங்குவதாகவும், இலக்கியங்களில் மட்டும் பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொல் ஆகும்.
சான்று : வங்கூழ் (காற்று), அழுவம்(கடல்)

Question 4.
திசைச்சொல் என்றால் என்ன?
Answer:
வடமொழி தவிர பிறமொழிகளிலிருந்து வந்த சொற்கள் திசைச்சொல் ஆகும்.

Question 5.
வடசொல் என்றால் என்ன?
Answer:
வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம் பெறும் சொற்கள் வடசொற்கள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

சிறு வினா

Question 1.
இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கண முறைப்படி சொற்கள் நான்கு வகைப்படும். அவையாவன:

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 4.4 ஆழ்கடலின் அடியில் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

Question 1.
ஆழ்கடல் காட்சியொன்றைக் கற்பனையாகப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில் 1

Question 2.
நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் முறைபற்றிய செய்திகளைத் திரட்டி தொகுத்து எழுதுக.
Answer:

  1. தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுள்ள நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் மிதக்கும் என்பது ஆர்க்கிமிடிஸ் தத்துவம்.
  2. அதன் அடிப்டையில் தான் நீர் மூழ்கிக்கப்பல்கள் இயங்குகின்றன.
  3. சரளைத் தொட்டிகள் நீர் மூழ்கிக் கப்பல்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
  4. இது காற்றால் நிரப்பப்பட்டு இருக்கும். சுற்றிக் காற்று இருப்பதால், நீரில் இருக்கும் காற்றை வெளியேற்றினால் இந்த இடத்தில் நீரானது நிரம்பும்.
  5. இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும் கப்பல் நீரில் மூழ்கும்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

‘ஆழ்கடலின் அடியில்’ கதையைச் சுருக்கி வரைக.

கதைமாந்தர் அறிமுகம்:
பியரி – விலங்கியல் பேராசிரியர்
ஃபராகட் – அமெரிக்கா நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட போர்க் கப்பலின் தலைவர்.
நெட் – ஈட்டி எறிந்து திமிங்கிலங்களை வேட்டையாடுவதில் வல்லவர்.
கான்சீல் – பியரியின் உதவியாளர்.

முன்னுரை
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில்’ என்ற புதினத்தின் கதையினைச் சுருக்கிக் காண்போம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

விலங்கைத் தேடிய பயணம்
கடலில் உலோகத்தால் ஆன உடம்பு கொண்ட ஒரு விலங்கு கடலில் செல்வோரைத் தாக்கியது. அதனைக் கண்டுபிடித்து அழிக்க பியரி, ஃபராகட்,நெட்,கான்சீல் ஆகியோர் கொண்ட குழு நியூயார்க் நகரில் இருந்து ஒரு போர்க்கப்பலில் செல்கின்றது.

அமெரிக்கா முதல் ஜப்பான் வரை மூன்று மாதங்களாகத் தேடியும் அந்த விலங்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்த விலங்கு இவர்களின் கப்பலைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகளும், நெட்டின் ஈட்டியும் அந்த விலங்குகளை எதுவும் செய்ய முடியவில்லை. அது இவர்களைத் தூக்கி வீசியது.

நீர்மூழ்கிக் கப்பல்
அது விலங்கன்று. நீர் மூழ்கிக் கப்பல் என்பதை அவர்கள் அறிந்தனர். அவர்களை நீர் மூழ்கிக் கப்பல் வீரர்கள் சிறைபிடித்தனர். அந்த நீர் மூழ்கிக் கப்பல் பெயர் நாட்டிலஸ் என்றும், அதன் தலைவர் நெமோ என்பதையும், இக்கப்பலை விந்தையான விலங்கு என்று நம்ப வைத்ததையும் நேமோ கூறிவிட்டு, இச்செய்தி அறிந்த உங்களை வெளியில் அனுப்ப முடியாது. எனக்கான இந்தத் தனி உலகத்தில் தான் நீங்களும் இருக்க வேண்டும் என்றார். அனைவரும் அச்சப்பட்டனர்.

கப்பலின் இயக்கம்
கப்பலுக்குத் தேவையானவை எப்படி உங்களுக்குக் கிடைக்கின்று என்று பியரி, நெமோவிடம் கேட்டார். அதற்கு அவர் மின்சாரம் தயாரிக்க தவையான கருவிகள் உள்ளன, கப்பலில் மிகப்பெரிய நீர்த்தொட்டி உள்ளது. அதனை நிரப்பும் போது கப்பல் கடல் அடியிலும் நீர் வெளியேறும் போது மேல் செல்கின்றது. சில நாட்களுக்கு ஒரு முறை கப்பல் மேலே வரும் பொழுது சுவாசிக்கத் தேவையான காற்றைப் புதுப்பித்துக்கொள்ளும், காற்றுச் சேகரிக்கும் நிறைய பைகளும் உள்ளன என்றார்.

மணல் திட்டில் சிக்கிய கப்பல்
ஒரு நாள் மணல் திட்டில் கப்பல் சிக்கிவிட்டது. தூரத்தில் தெரிந்த தீவில் காய்கறி வாங்கி வர அவர்களை, நெமோ இசைவளித்தார். அவர்கள் காய்கறிகள் வாங்கிக் கொண்டு திரும்பும் போது அத்தீவில் உள்ளவர்கள் துரத்தினார்கள். அவர்கிளிடம் மாட்டாமல் கப்பல் வந்து சேர்ந்தனர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

அக்கப்பலை அவர்கள் முற்றுகையிட்டனர். கடலின் நீர்மட்டம் உயர கப்பல் மேலே வந்தது. ஆறு நாள் போராட்டத்திற்குப் பிறகு கப்பல் பயணம் தொடர்ந்தது. கடலுக்கடியில் அவர்கள் செல்லும் போது, முத்துக்குளித்துக் கொண்டிருந்த இந்தியர் ஒருவரை சுறாவிடம் இருந்து காப்பாற்றினர்.கடலடியின் உன்னத காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்தனர்.

முடிவுரை
பெரும் கடல் சுழலில் கப்பல் மாட்டிக் கொண்டது. மூவரும் தூக்கிவீசப்பட்டனர். மயக்கநிலையில் நார்வே நாட்டு மீனவர் குடிசையில் இருந்ததை விழித்துப் பார்த்தனர். நெமோவும் கப்பலும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 1.
பல்வகையான கப்பல்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை 1

Question 2.
தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிப்பயணம் ஆகியவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் :
மாணாக்கர்களே! தரைவழிப்பயணம் , கடல்வழிப்பயணம் , வான்வழிப்பயணம் ஆகியவை குறித்து இன்று கலந்துரையாடல் செய்யுங்கள்.

யாழினி :
இன்றைய நிலையில் தரைவழிப்பயணம் மட்டுமே சிறந்தது. ஏனென்றால், செல்லவேண்டிய இடத்திற்கு ஊர்திகள் மூலம் விரைவாகச் செல்லலாம். எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செல்லலாம்.

அமுதன் :
கடலின் அழகைக் கண்டு மகிழவும் , கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. எனவே, நான் கடல்வழிப் பயணத்தை விரும்புகின்றேன்.

காவ்யா :
தரை மற்றும் கப்பல் வழி பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம் ஆகும். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒரு சில மணி நேரங்களிலேயே செல்லலாம். அதிவிரைவுக்கு ஏற்றது.

ஆசிரியர் :
நன்று மாணவர்களே!

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழரின் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது …………………
அ) கலம்
ஆ) வங்கம்
இ) நாவாய்
ஈ) ஓடம்
Answer:
ஈ) ஓடம்

Question 2.
தொல்காப்பியம் கடற்பயணத்தை ………………… வழக்கம் என்று கூறுகின்றது.
அ) நன்னீர்
ஆ) தண்ணீ ர்
இ) முந்நீர்
ஈ) கண்ணீ ர்
Answer:
இ) முந்நீர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 3.
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி
அ) சுக்கான்
ஆ) நங்கூரம்
இ) கண்டை
ஈ) சமுக்கு
Answer:
அ) சுக்கான்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ……………… என அழைக்கப்படும்.
2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ……………………
3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ……………….. எனக்குறிக்கப்படும்.
Answer:
1. தொகுதி
2. நங்கூரம்
3. கண்ணடை

பொருத்துக.

1. எரா – திசைகாட்டும் கருவி
2. பருமல் – அடிமரம்
3. மீகாமன் – குறுக்கு மரம்
4. காந்த ஊசி – கப்பலைச் செலுத்துபவர்
Answer:
1. எரா – அடிமரம்
2. பருமல் – குறுக்கு மரம்
3. மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர்
4. காந்த ஊசி – திசைகாட்டும் கருவி

தொடர்களில் அமைத்து எழுது.

1. நீரோட்டம் – ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர்.
2. காற்றின் திசை – கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர்.
3. வானியல் அறிவு – தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்.
4. ஏற்றுமதி – பண்டைய காலத்தில் கடல்வணிகம் மூலம் ஏற்றுமதி நடைபெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

குறு வினா

Question 1.
தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
Answer:
எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து தோண்டப்பட்டவை ‘தோணி’ எனப்பட்டன.

Question 2.
கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ)பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?
Answer:
மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்.

Question 3.
கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை க் கூறுக.
Answer:

  1. எரா
  2. பருமல்
  3. வங்கு
  4. கூம்பு
  5. பாய்மரம்
  6. சுக்கான்
  7. நங்கூரம் – போன்றவை கப்பல் உறுப்புகள் ஆகும்.

சிறு வினா

Question 1.
சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.
Answer:
சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் :

  1. தோணி
  2. ஓடம்
  3. படகு
  4. பணை
  5. மிதவை
  6. தெப்பம்

கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் :

  1. கலம்
  2. வங்கம்
  3. நாவாய்

Question 2.
பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றிக் கூறுக.
Answer:
(i) காற்றின் திசை அறிந்து கப்பல்கள் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

(ii) கடலில் காற்று வீசும் திசை, நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்து, உரிய காலத்தில் உரிய திசையில் கப்பலைச் செலுத்தினர்.

(iii) திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்து திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.

(iv) சிறந்த வானியல் அறிவை மாலுமிகள் பெற்றிருந்தனர்.

(v) கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து சரியான காலத்தில் கப்பலைச் செலுத்தினர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 3.
கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?
Answer:
(i) கப்பல் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர்.

(ii) நீர்மட்டவைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்குத் தேக்கு, வெண் தேக்கு மரங்களைப் பயன்படுத்தினர்.

(iii) சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர்.

(iv) மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்.

(v) சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்டகாலம் உழைத்தன.

(vi) இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மரஆணிகளைப் பயன்படுத்தினர்.

சிந்தனை வினா

Question 1.
இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.
Answer:

  1. கப்பலில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் நீண்டநாட்கள் பயணம் செய்யவேண்டும். அதனால் கால விரையம் ஏற்படும்.
  2. அதிவிரைவுக்குக் கடற்பயணம் பயன்படுவதில்லை .
  3. கடல் உயிரினங்கள் மற்றும் புயல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தும்.
  4. அதிகபொருட்செலவை ஏற்படுத்தும்.
    – போன்ற காரணங்களால் இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளவில்லை.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டதைக் கூறும் நூல்
அ) திருக்குறள்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) சேந்தன் திவாகரம்
Answer:
ஆ) பட்டினப்பாலை

Question 2.
பலவகையான கப்பல்களின் பெயரைக்குறிப்பிடும் நூல்
அ) திருக்குறள்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) சேந்தன் திவாகரம்
Answer:
ஈ) சேந்தன் திவாகரம்

Question 3.
மரத்தினால் ஆன ஆணி
அ) தச்சுமுழம்
ஆ) தொகுதி
இ) கண்ண டை
ஈ) கம்மியர்
Answer:
ஆ) தொகுதி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 4.
பழந்தமிழர் …………………. வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி கடல்பயணம் செய்திருக்கலாம்.
அ) ஆமைகள்
ஆ) குதிரைகள்
இ) யானைகள்
ஈ) மரங்கள்
Answer:
அ) ஆமைகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் ………………… நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
2. கப்பல் கட்டும் கலைஞர்கள் ……………….. என்று அழைக்கப்பட்டனர்.
3. ……………… என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்.
4. மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ………………… என்பர்.
5. இத்தாலி நாட்டு கடற்பயணி ……………….
6. காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் …………………. எனப்பட்டன.
Answer:
1. கட்டும் கலையை
2. கம்மியர்
3. கண்ணடை
4. வெட்டுவாய்
5. மார்க்கோபோலா
6. பாய்மரக்கப்பல்கள்

குறுவினா

Question 1.
தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்து பட்ட அறிவு பெற்றிருந்தனர் என்பதை விளக்கும் நூல்கள் எவை?
Answer:

  1. திருக்குறள் பட்டினப்பாலை
  2. அகநானூறு
  3. பதிற்றுப்பத்து
  4. சேந்தன் திவாகரம்

Question 2.
தமிழர்கள் அயல்நாடுகளுக்குக் கப்பலில் சென்றனர் என்பதற்குச் சான்று ஒன்று தருக.
Answer:
நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுவே, தமிழர்கள் அயல்நாடுகளுக்குக் கப்பலில் சென்றனர் என்பதற்குச் சான்று ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 3.
பெரிய கப்பற்படை கொண்டு பலநாடுகள் வென்ற சோழர்கள் யாவர்?
Answer:

  1. இராசராச சோழன்
  2. இராசேந்திர சோழன்

Question 4.
கரிமுக அம்பி , பரிமுக அம்பி என்றால் என்ன?
Answer:
கரிமுக அம்பி :
பெரிய படகுகளில் முன்பக்கத்தில் யானையின் தலை போன்று வடிவமைப்பது.

பரிமுக அம்பி :
பெரிய படகுகளில் முன்பக்கத்தில் குதிரையின் தலை போன்று வடிவமைப்பது.

Question 5.
தமிழர்கள் பயன்படுத்திய பாய்மரங்கள் யாவை?
Answer:

  1. பெரிய பாய்மரம்
  2. திருக்கைத்திப் பாய்மரம்
  3. காணப்பாய் மரம்
  4. கோசுப்பாய்மரம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 6.
கப்பல் செலுத்துபவர்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:

  1. மாலுமி
  2. மீகாமன்
  3. நீகான்
  4. கப்பலோட்டி

சிறு வினா

Question 1.
பாய்மரங்களைக் கட்டும் கயிற்றின் வகைகள் யாவை?
Answer:

  1. ஆஞ்சான் கயிறு
  2. தாம்பாங்கயிறு
  3. வேடாங்கயிறு
  4. பளிங்கைக்கயிறு
  5. மூட்டாங்கயிறு
  6. இளங்கயிறு
  7. கோடிப்பாய்க்கயிறு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 2.
கலங்கரை விளக்கம் – பொருள் விளக்கம் தருக.
Answer:

  1. கலம் என்றால் கப்பல்.
  2. கரைதல் என்றால் அழைத்தல்.
  3. கப்பலை அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் ‘கலங்கரை விளக்கம்’ எனப்பட்டது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 4.2 கவின்மிகு கப்பல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 4.2 கவின்மிகு கப்பல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

Question 1.
கடலில் கிடைக்கும் பொருட்களின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
முத்து, உலோகத் தாதுக்கள், எண்ணெய், இயற்கை வாயு, வளிம நீரேறிகள், பவளம், சுண்ணாம்பு கற்கள், சிப்பிகள், சங்குகள், உப்பு.

Question 2.
கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
கடல் – எஸ்.கண்ண ன்
அவன் ஒரு இளைஞன். அவனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். கள்ளச்சாரயம் குடித்து அவன் அப்பா இறந்துவிட்டார். அம்மா மற்றும் திருமண வயதில் தங்கை அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேலையில் குடும்பத்தை நடத்தவே பணம் போதவில்லை. தங்கையின் திருமணத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலையே அவனுக்குப் பெரிதாக இருந்தது.

மனதின் நிம்மதிக்காக அனைவரும் கடற்கரை நோக்கிச் செல்வர். அவனும் அப்படியும் சில நாட்கள் சென்றான். கை நிறைய எப்போது சம்பாதிப்பது? எப்போது தங்கைக்குத் திருமணம் செய்வது? இவை அவன் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் தற்கொலை செய்யலாம் என்ற எண்ணத்துடன் கரையோரம் அமர்ந்து இருந்தான். அது இரவு நேரம் கடற்கரையில் யாருமில்லை.

கடல் நீர் அவன் வேதனை போல் உப்பாகவே இருந்தது. தூரத்தில் யாரோ கடலை நோக்கி ஒடுவது போல் இருந்தது. இவன் அவளைக் காப்பாற்றினான். அவளது அப்பா, அம்மா ஓடோடி வந்தனர். திருமணம் ஆன மூன்று மாதத்தில் கணவன் இறந்ததால் அவள் இத்தகைய முடிவுக்கு வந்ததை அறிந்தான்.

அந்தப் பெண்ணின் அப்பா, பெரிய கார் நிறுவனத்தின் முதலாளி. இவன் நிலையை அறிந்து, அவனுக்கு வேலையும் கொடுத்து, அவனது தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தார். அவனது நன்னடத்தையால் நிறுவனத்தின் எம்.டி. ஆக உயர்ந்தான். முதலாளி அவரது பெண்ணையும் திருமணம் செய்து வைக்கின்றார். மீண்டும் தனக்கு வாழ்வு தந்த கடற்கரைக்குச் செல்கின்றான். அலை ஆனந்தத்துடன் ஆர்ப்பரித்து, அவன் மீது விழுந்தது. இன்பத்தில் கடல் நீர் இனிமையானது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் …………………
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) நெருப்பு
Answer:
இ) காற்று

Question 2.
மக்கள் ……………. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அ) கடலில்
ஆ) காற்றில்
இ) கழனியில்
ஈ) வங்கத்தில்
Answer:
ஈ) வங்கத்தில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

Question 3.
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்
Answer:
இ) கடல்

Question 4.
‘பெருங்கடல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெரு + கடல்
ஆ) பெருமை + கடல்
இ) பெரிய + கடல்
ஈ) பெருங் + கடல்
Answer:
ஆ) பெருமை + கடல்

Question 5.
இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது.
அ) இன்று ஆகி
ஆ) இன்றி ஆகி
இ) இன்றாகி
ஈ) இன்றாஆகி
Answer:
இ) இன்றாகி

Question 6.
எதுகை இடம்பெறாத இணை ……………..
அ) இரவு – இயற்கை
ஆ) வங்கம்-சங்கம்
இ) உலகு -புலவு
ஈ) அசைவு – இசைவு
Answer:
அ) இரவு – இயற்கை

பொருத்துக

1. வங்கம் – பகல்
2. நீகான் – கப்பல்
3. எல் – கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி – நாவாய் ஓட்டுபவன்
Answer:
1. வங்கம் – கப்பல்
2. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
3. எல் – பகல்
4. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

குறுவினா

Question 1.
நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
Answer:
நாவாயின் தோற்றம் உலகம் இடம்பெயர்ந்தது போன்று இருந்ததாக அகநானூறு கூறுகிறது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

Question 2.
நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?
Answer:
இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி நாவாய் ஓட்டிகளுக்குத் துணை செய்கின்றது..

சிறுவினா

Question 1.
கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
Answer:

  1. உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது நாவாய்.
  2. அது புலால் நாற்றம் உடைய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
  3. இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.
  4. உயர்ந்த தரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
    – என்று கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது.

சிந்தனை வினா

Question 1.
தரைவழிப்பயணம் , கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?
Answer:
தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நான் விரும்புவது : கடல்வழிப் பயணம்.

காரணம் :
கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. எனவே, நான் கடல்வழிப் பயணத்தை விரும்புகின்றேன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல்..
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பரிபாடல்
ஈ) அகநானூறு
Answer:
ஈ) அகநானூறு

Question 2.
கலித்தொகையில் மருதத்திணைப் பாடல்களைப் பாடிய புலவர்
அ) மருதன் இளநாகனார்
ஆ) கபிலர்
இ) பேயனார்
ஈ) நல்லந்துவனார்
Answer:
அ) மருதன் இளநாகனார்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

Question 3.
கவின் மிகு கப்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல் இடம் பெறும் நூல்
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பரிபாடல்
ஈ) அகநானூறு
Answer:
ஈ) அகநானூறு

Question 4.
‘எல்’ என்ற சொல்லின் பொருள்
அ) அழகு
ஆ) பகல்
இ) பிளக்க
ஈ) கரை
Answer:
ஆ) பகல்

Question 5.
பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்வது…
அ) நாவாய்
ஆ) கலங்கரை விளக்கம்
இ) காற்று
ஈ) நீகான்
Answer:
அ) நாவாய்

Question 6.
கலங்கரை விளக்கம் என்னும் பொருள் தரும் சொல்…
அ) மாட ஒள்ளெரி
ஆ) நீகான்
இ) எல்
ஈ) கோடு உயர்
Answer:
அ) மாட ஒள்ளெரி

பொருத்துக

1. உரு – பிளக்க
2. போழ – அழகு
3. வங்கூழ் – கரை உயர்ந்த
4. கோடு உயர் – காற்று.
Answer:
1. உரு – அழகு
2. போழ – பிளக்க
3. வங்கூழ் – காற்று
4. கோடு உயர் – கரை உயர்ந்த

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

குறு வினா

Question 1.
புலால் நாற்றமுடையது எது?
Answer:
அலை வீசும் பெரிய கடல் நீர் புலால் நாற்றமுடையது.

Question 2.
உள்ளம் உவகையில் துள்ளும் எப்போது?
Answer:
அலைவீசும் கடலில் அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காண உள்ளம் உவகையில் துள்ளும்.

Question 3.
கப்பல் என்பதற்குப் பாடலில் இடம் பெறும் வேறு சொல் எது?
Answer:
கப்பல் என்பதற்குப் பாடலில் இடம் பெறும் வேறு சொல் : வங்கம்

Question 4.
அகநானூறு குறிப்பு வரைக.
Answer:

  1. அகநானூறு எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று.
  2. புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.
  3. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் இதுவே.

Question 5.
மருதன் இளநாகனார் குறிப்பு வரைக.
Answer:

  1. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  2. லித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களைப்பாடியவர்.
  3. மருதத்திணைபாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

சிறு வினா:

Question 1.
எட்டுத்தொகை நூல்கள் யாவை?
Answer:

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. பரிபாடல்
  4. அகநானூறு
  5. ஐங்குறுநூறு
  6. புறநானூறு
  7. பதிற்றுப்பத்து
  8. கலித்தொகை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

மருதன் இளநாகனார்

  1. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  2. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களைப்பாடியவர்.
  3. மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

சொல்லும் பொருளும்

1. உரு – அழகு
2. வங்கூழ் – காற்று
3. வங்கம் – கப்பல்
4. கோடு உயர் – கரை உயர்ந்த
5. போழ – பிளக்க
6. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
7. எல் – பகல்
8. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 4.1 கலங்கரை விளக்கம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 4.1 கலங்கரை விளக்கம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

Question 1.
கடற்கரைக்குச் சென்று அங்குள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்க.
Answer:
கடற்கரை காட்சிகள் (மெரினா)

  1. உலகிலேய இரண்டாவது பெரிய கடற்கரை மெரினாக் கடற்கரை.
  2. சென்னைத் துறைமுகத்தை உள்நாட்டு, வெளிநாட்டுக் கப்பல்கள் அணிவகுத்து வருகின்றன.
  3. அவை நங்கூரம் பாய்ச்சி நிற்கும் அழகு அருமை.
  4. மீன்பிடிக்கச் சென்று மீண்டு வரும் மீனவர்கள் படகுகள் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.
  5. காலை நோக்கி வரும் கடல் அலைகள் பிடிக்கமுடியாத மாயமான்கள்.
  6. கடலைக் கண்டு மகிழ மக்கள் கூட்டம் ஏராளம்.
  7. சங்குகளும், சிப்பிகளும் கடற்கரையில் கொட்டிக்கிடக்கின்றது.

Question 2.
‘கலங்கரை விளக்கம்’ – மாதிரி ஒன்று செய்து வருக.
Answer:
மாணவர் செயல்பாடு

Question 3.
கடலும், கலங்கரை விளக்கமும் – ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வேயா மாடம் எனப்படுவது ………………..
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது
Answer:
ஆ) சாந்தினால் பூசப்படுவது

Question 2.
உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை
Answer:
இ) கடல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

Question 3.
கடலில் துறை அறியாமல் கலங்குவன ………………..
அ) மீன்கள்
ஆ) மரக்கலங்கள்
இ) தூண்கள்
ஈ) மாடங்கள்
Answer:
ஆ) மரக்கலங்கள்

Question 4.
தூண் என்னும் பொருள் தரும் சொல் ……………….
அ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை
Answer:
ஈ) மதலை

குறு வினா

Question 1.
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
Answer:
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது : கலங்கரை விளக்கின் ஒளி.

Question 2.
கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
Answer:
கலங்கரை விளக்கில் இரவுநேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.

சிறு வினா

Question 1.
கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகள் யாவை?
Answer:
(i) கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண் போலத் தோற்றம் அளிக்கின்றது.

(ii) அது ஏணி கொண்டு ஏறமுடியாத அளவுக்கு உயரத்தைக் கொண்டு இருக்கின்றது.

(iii) வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.

(iv) அம் மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைக்கின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

சிந்தனை வினா

Question 1.
கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:

  1. கடல் ஆய்வு செய்பவர்கள்
  2. மீனவர்கள்
  3. கப்பற் படை வீரர்கள்
  4. கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்

கூடுதல் வினா

Question 1.
பெசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர்
அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ஆ) தொண்டைமான் இளந்திரையன்
இ) முடதாமக்கண்ணியார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

Question 2.
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்
அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ஆ) தொண்டைமான் இளந்திரையன்
இ) முடதாமக்கண்ணியார்
ஈ) நக்கீரர்
Answer:
ஆ) தொண்டைமான் இளந்திரையன்

Question 3.
உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர்
அ) கடியலூர்
ஆ) மதுரை
இ) புகார்
ஈ) கலங்கரைவிளக்கம்
Answer:
அ) கடியலூர்

Question 4.
கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைப்பது
அ) கடற்கரை
ஆ) கப்பல்
இ) கலங்கரை விளக்கம்
ஈ) மாடம்
Answer:
இ) கலங்கரை விளக்கம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

Question 5.
கடலில் துறை அறியாமல் கலங்குவது
அ) கடற்கரை
ஆ) மரக்கலங்கள்
இ) கலங்கரைவிளக்கம்
ஈ) மாடம்
Answer:
ஆ) மரக்கலங்கள்

Question 6.
கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம்
அ) கடற்கரை
ஆ) கப்பல்
இ) கலங்கரைவிளக்கம்
ஈ) மாடம்
Answer:
இ) கலங்கரைவிளக்கம்

Question 7.
வானம் ஊன்றிய மதலை போன்றது
அ) கடற்கரை
ஆ) கப்பல்
இ) கலங்கரைவிளக்கம்
ஈ) மாடம்
Answer:
இ) கலங்கரைவிளக்கம்

குறு வினா

Question 1.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பற்றி நீவிர் அறிவன் யாவை?
Answer:

  1. சங்ககாலப் புலவர்
  2. கடியலூரில் வாழ்ந்தவர்.
  3. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

Question 2.
பெரும்பாணாற்றுப்படை பற்றி நீவிர் அறிவன் யாவை?
Answer:

  1. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று : பெரும்பாணாற்றுப்படை
  2. இயற்றியவர் : கடியலூர் உருத்திரங்கண்ண னார்.
  3. இந்நூல் ஆற்றுப்படை இலக்கியம் சார்ந்தது.
  4. பாட்டுடைத்தலைவன் : தொண்டைமான் இளந்திரையன்

Question 3.
ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன?
Answer:
வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுசது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

Question 4.
‘வேயா மாடம்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
வேயா மாடம் : வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாக (வலிமையாக) சாந்து பூசப்பட்ட மாடம்.

Question 5.
ஞெகிழி , அழுவம் ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:
ஞெகிழி – தீச்சுடர், அழுவம் – கடல்

சிறு வினா

Question 1.
பத்துப்பாட்டு நூல்கள் யாவை?
Answer:

  1. திருமுருகாற்றுப்படை
  2. மதுரைக்காஞ்சி
  3. பொருநராற்றுப்படை
  4. நெடுநல்வாடை
  5. பெரும்பாணாற்றுப்படை
  6. குறிஞ்சிப்பாட்டு
  7. சிறுபாணாற்றுப்படை
  8. பட்டினப்பாலை
  9. முல்லைப்பாட்டு
  10. மலைபடுகடாம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்:

  1. சங்ககாலப் புலவர்
  2. கடியலூரில் வாழ்ந்தவர்.
  3. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

சொல்லும் பொருளும்

1. மதலை – தூண்
2. நெகிழி – தீச்சுடர்
3. அழுவம் – கடல்
4. சென்னி – உச்சி
5. உரவுநீர் – பெரு நீர்ப்பரப்பு
6. கரையும் – அழைக்கும்
7. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாக (வலிமையாக) சாந்து பூசப்பட்ட மாடம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.5 வழக்கு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.5 வழக்கு

கற்பறை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 1.
மூவகைப் போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன என்பதை அறிந்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

பொருத்துக.
1.பந்தர் – முதற்போலி
2. மைஞ்சு – முற்றுப்போலி
3.அஞ்சு – இடைப்போலி
4.அரையர் – கடைப்போலி
Answer:
1. பந்தர் – கடைப்போலி
2. மைஞ்சு – முதற்போலி
3. அஞ்சு – முற்றுப்போலி
4. அரையர் – இடைப்போலி

குறு வினா

Question 1.
வழக்கு என்றால் என்ன?
Answer:
முன்னோர்கள் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

Question 2.
தகுதி வழக்கு வகைகள் யாவை?
Answer:
தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
(i) இடக்கரடக்கல்
(ii) மங்கலம்
(iii) குழூஉக்குறி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 3.
வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.
Answer:
இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல் : நஞ்சு, சரியான சொல் : நைந்து.
வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது.
வாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது.

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுக.

Question 1.
தேசியம் காத்த செம்மல் : முத்துராமலிங்கத்தேவர்
Answer:
வணக்கம். தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்கத்தேவர் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். கேளுங்கள். முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். இதனால் ,அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது. மேலும், வாய்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது. முத்துராமலிங்கத்தேவர் தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.

சிலம்பம் , குதிரை ஏற்றம் , துப்பாக்கிச் சுடுதல், சோதிடம் , மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார். நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார், அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939ல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.

விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்.

அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டணை பெற்றார். உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார். தேசியம் காத்த செம்மல் : முத்துராமலிங்கத்தேவர் போல உழைப்போம். உயர்வோம். நன்றி.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 2.
கப்பலோட்டிய தமிழர் : வ.உ.சிதம்பரனாார்.
Answer:
வணக்கம். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாார். பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். கேளுங்கள். கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார்.ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார். தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்து வாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர்.கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர், கப்பல்களில் ஆங்கிலக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர்.இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது. சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத்தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரத நண்பர்களையும் பயமுறுத்தினர்.

அதற்கெல்லாம் கவலைப்படாமல் வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர்.ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது. வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது, உள்ளம் தளரவில்லை . சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவுரை கூற ‘உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன் என்றார்.சிறையில் செக்கிழுத்தார்.

சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார்.செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.அவரைப்போல நாட்டுக்காக உழைப்போம் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.

அறிந்து பயன்படுத்துவோம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 2
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 3

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
2. பொதுமக்கள் அந்நியத் துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக் கொடி பறந்தது.
4. திருக்குறளை எழுதியவர் யார்?
5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 4

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

1. கண்ண ன் பாடம் படித்தான்.
2. மேரி ஓவியம் வரைந்தாள்.
3. நான் கவிதை எழுதினேன்.
4. விதை விருட்சமாக வளர்ந்தது.
5. ஆசிரியர் செய்யுளைக் கற்பித்தார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

நான் விரும்பும் தலைவர் – பெரியார்

முன்னுரை :
ஏன், எப்படி, எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி? அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும். அதன் தந்தை பெரியார். வெண்தாடி வேந்தர்? பகுத்தறிவு பகலவன்? வைக்கம் வீரர்? ஈரோட்டுச் சிங்கம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பெரியாரை நான் விரும்பும் தலைவர் ஆவார்.

இளமை :
ஈரோடு நகரில் 1879ல் பெரியார் பிறந்தார். தொடக்கக் கல்வியுடன் தம் படிப்பை நிறுத்திக் கொண்டு தம் தந்தையின் வணிகத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

வைக்கம் வீரர் :
கேரளத்தில் வைக்கம் என்னும் ஊரில் தலை விரித்தாடிய தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதனால் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம் :
பெரியார் காங்கிரசிலிருந்து விலகி 1925ல் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். இந்த இயக்கத்தின் வாயிலாக சாதி ஏற்றத்தாழ்வு போக்குதல்? தீண்டாமை ஒழித்தல்? மூ டநம்பிக்கை ஒழித்தல்? பெண்ணுரிமை நிலைநாட்டுதல் ஆகும்.

பெரியார் சீரமைத்த எழுத்துகள் :
‘ஐ’ என்பதை ‘அய்’ எனவும்? ‘ஔ’ என்பதை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.

பெண்ணுரிமை போற்றியவர் :
பெண்ணுரிமை, பெண்கல்வி, சொத்துரிமை, அரசுப்பணி, மறுமணம் ஆகியவற்றிற்காகப் பெரியார் போராடினார். பெண்கள் மாநாடுகள் பல நடத்தி பெண்களை விழிப்படையச் செய்தார். 13.11.1938 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ராவுக்குப் பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

கவரக் காரணம் :
(i) சிக்கனம் மற்றும் எளிமையான வாழ்கை.
(ii) சுயமரியாதை போற்றல்.
(iii) பெண்ணுரிமை பேசுதல்.
(iv) சாதி, மத ஏற்றத்தாழ்வுகளைக் களைதல்.
(v) கல்வியில் புரட்சி
– ஆகிய காரணங்களால் பெரியாரை விரும்புகின்றேன்.

முடிவுரை :
தொண்டு செய்து பழுத்த பழமான பெரியாரைப் போற்றுவோம். அவரின் வழி நடப்போம்.

மொழியோடு விளையாடு

இடைச்சொல் ‘கு’ சேர்த்து எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 7

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 5

அகம் என முடியும் சொற்களை எழுதுக.

1. நூலகம்
2. குறளகம்
3. நகலகம்
4. அச்சகம்
5. துறைமுகம்
6. தமிழகம்

கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.

1. திருக்குறள் பால்களைக் கொண்டது.
2. எனது வயது கக
3. நான் படிக்கும் வகுப்பு
4. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும்.
5. திருக்குறளில் கநங அதிகாரங்கள் உள்ளன.
6. இந்தியா க்கூசஎ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு 6

1. மூதறிஞர் – இராஜாஜி
2. வீரமங்கை – வேலுநாச்சியார்
3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் – கட்டபொம்மன்
4. வெள்ளையரை எதிர்த்வன் – சின்னமலை
5. கொடிகாத்தவர் – திருப்பூர் குமரன்
6. எளிமையின் இலக்கணம் – கக்கன்
7. தில்லையடியின் பெருமை – வள்ளியம்மை
8. கப்பலோட்டிய தமிழர் – சிதம்பரனார்
9. பாட்டுக்கொரு புலவன் – பாரதியார்
10. விருதுப்பட்டி வீரர் – காமராசர்
11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி – நாகம்மை
12. மணியாட்சியின் தியாகி – வாஞ்சி நாதன்

கலைச்சொல் அறிவோம்

1. கதைப்பாடல் – Ballad
2. துணிவு – courage
3. தியாகம் – sacrifice
4. அரசியல் மேதை – Political Genius
5. பேச்சாற்றல் – Elocution
6. ஒற்றுமை – Unity
7. முழக்கம் – Slogan
8. சமத்துவம் – Equality

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
வழக்கு ………………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்னு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 2.
இயல்பு வழக்கு ………………. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்னு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 3.
தகுதி வழக்கு ………………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்னு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 4.
முன்பின் தொக்கப் போலி எனக்குறிப்பிடப்படுவது
அ) இலக்கணமுடையது
ஆ) இலக்கணப்போலி
இ) மரூஉ
ஈ) முதற்போலி
Answer:
ஆ) இலக்கணப்போலி

Question 5.
புறநகர், கால்வாய், தசை, கடைக்கண் ஆகிய சான்றுகள் …………………._க்குச் சான்றாகும்.
அ) இலக்கணமுடையது
ஆ) இலக்கணப்போலி
இ) மரூஉ
ஈ) முதற்போலி
Answer:
ஆ) இலக்கணப்போலி

Question 6.
இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் ………………….
அ) இலக்கணமுடையது
ஆ) இலக்கணப்போலி
இ) மரூஉ
ஈ) முதற்போலி
Answer:
இ) மரூஉ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 7.
தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது
அ) இயல்பு வழக்கு
ஆ) தகுதி வழக்கு
இ) மரூஉ
ஈ) இலக்கணப்போலி
Answer:
ஆ) தகுதி வழக்கு

Question 8.
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள்
அ) குழூஉக்குறி
ஆ) மங்கலம்
இ) இடக்கரடக்கல்
ஈ) இலக்கணப்போலி
Answer:
அ) குழூஉக்குறி

Question 9.
பொன்னைப் பறி என்பர் – இது எவ்வகைத் தகுதி வழக்கிற்குச் சான்று?
அ) குழூஉக்குறி
ஆ) மங்கலம்
இ) இடக்கரடக்கல்
ஈ) இலக்கணப்போலி
Answer:
அ) குழூஉக்குறி

Question 10.
கால் கழுவி வந்தான், குழந்தை வெளியே போய்விட்டது – இவை எவ்வகைத் தகுதி வழக்கிற்குச் சான்றுகள்?
அ) குழூஉக்குறி
ஆ) மங்கலம்
இ) இடக்கரடக்கல்
ஈ) இலக்கணப்போலி
Answer:
இ) இடக்கரடக்கல்

Question 12.
சுடுகாட்டை நன்காடு என்பது
அ) குழூஉக்குறி
ஆ) மங்கலம்
இ) இடக்கரடக்கல்
ஈ) இலக்கணப்போலி
Answer:
ஆ) மங்கலம்

Question 13.
போலி ………………. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்னு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 14.
இடக்கரடக்கல் அல்லாதது. ……………………
அ) கால் கழுவி வந்தான்
ஆ) குழந்தை வெளியே போய்விட்டது
இ) ஒன்றுக்குப் போய் வந்தேன்
ஈ) சுடுகாட்டை நன்காடு
Answer:
ஈ) சுடுகாட்டை நன்காடு

Question 15.
பொருத்துக.
1. ஒன்றுக்குப் போய் வந்தேன் – அ) மங்கலம்
2. கறுப்பு ஆடு என்பதை வெள்ளாடு என்பது – ஆ) இடக்கரடக்கல்
3. பொன்னைப் பறி என்பது – இ) மரூஉ
4. தஞ்சாவூரைத் தங்சை என்பது – ஈ) குழூஉக்குறி

அ) 1-ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1-ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 16.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) கால்வாய் – இலக்கணப்போலி
ஆ) மைஞ்சு – முதற்போலி
இ) இலஞ்சி – இடைப்போலி
ஈ) முகன் – முற்றுப்போலி
Answer:
ஈ) முகன் – முற்றுப்போலி

Question 17.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) குழந்தை வெளியே போய்விட்டது – இடக்கரடக்கல்
ஆ) செத்தாரைத் துஞ்சினார் எனல் -மங்கலம்
இ) ஆடையைக் காரை எனல் – மரூஉ
ஈ) தசை – இலக்கணப்போலி
Answer:
இ) ஆடையைக் காரை எனல் – மரூஉ

குறுவினா

Question 1.
வழக்கு எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
Answer:
வழக்கு இரண்டு வகைப்படும். அவையாவன:

  1. இயல்பு வழக்கு
  2. தகுதி வழக்கு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 2.
இயல்பு வழக்கு என்றால் என்ன?
Answer:
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

Question 3.
இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?அவை யாவை?
Answer:
இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். அவையாவன:

  1. இலக்கணமுடையது
  2. இலக்கணப்போலி
  3. மரூஉ

Question 4.
இலக்கணப்போலி என்றால் என்ன?
Answer:
இலக்கண முறைப்படி அமையாவிட்டாலும் ,இலக்கணமுடையதைப் போல ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

Question 5.
இலக்கணப்போலிக்குச் சான்றுகள் தருக.
Answer:

  1. புறநகர்
  2. கால்வாய்
  3. தசை
  4. கடைக்கண்

Question 6.
தஞ்சை , நெல்லை ஆகிய சொற்கள் எவ்வகை வழக்குச் சொற்கள் என்பதைக் குறிப்பிட்டு விளக்குக.
Answer:
தஞ்சை, நெல்லை ஆகிய சொற்கள் இயல்பு வழக்குச் சொற்களில் மரூஉச் சொல்லாகும்.

இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும். தஞ்சாவூரைத் ‘தஞ்சை’ என்றும், திருநெல்வேலியை ‘நெல்லை’ என்பதும் மரூஉச் சொற்களாகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 7.
தகுதி வழக்கு என்றால் என்ன?
Answer:
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.

Question 8.
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும் ? அவையாவை?
Answer:
தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவையாவன:

  1. இடக்கரடக்கல்
  2. மங்கலம்
  3. குழூஉக் குறி

Question 9.
இடக்கரடக்கல் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொல்லால் குறிப்பிடுவது இடக்கரடக்கல் ஆகும்.
சான்று : கால் கழுவி வந்தான்.
குழந்தை வெளியே போய்விட்டது.

Question 10.
மங்கலம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
மங்கலம் இல்லாத சொற்களை மங்கலமான வேறு சொல்லால் குறிப்பிடுவது மங்கலம் ஆகும்.
சான்று : ஓலை – திருமுகம்
கறுப்பு ஆடு – வெள்ளாடு
சுடுகாடு – நன்காடு

Question 11.
குழூஉக்குறி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சாற்கள் குழூஉக்குறி எனப்படும்.
சான்று : பொன்னைப் பறி என்பர் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
ஆடையைக் காரை என்பர் (யானைப்பாகர் பயன்படுத்தவது)

Question 12.
போலி என்றால் என்ன?
Answer:
ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவது போலி எனப்படும்.

Question 13.
போலி எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
Answer:
போலி மூன்று வகைப்படும். அவையாவன :

  1. முதற்போலி
  2. இடைப்போலி
  3. கடைப்போலி

Question 14.
முதற்போலி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
சொல்லின் முதலில் ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவதுமுதற்போலி எனப்படும்.
சான்று : பசல் – பைசல் , மஞ்சு – மைஞ்சு, மயல் – மையல்

Question 15.
இடைப்போலி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
சொல்லின் இடையில் ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவது இடைப்போலி எனப்படும்.
சான்று : அமச்சு – அமைச்சு, இலஞ்சி – இலைஞ்சி, அரசர் – அரைசர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 வழக்கு

Question 16.
கடைப்போலி (இறுதிப்போலி) என்றால் என்ன? சான்று தருக.
Answer:
சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவது கடைப்போலி(இறுதிப்போலி) எனப்படும்.
சான்று : அகம் – அகன், முகம் – முகன், பந்தல் – பந்தர்

Question 17.
முற்றுப்போலி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி ஆகும்.
சான்று : ஐந்து – அஞ்சு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

கற்பறை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

Question 1.
பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பறையில் உரையாற்றுக.
Answer:
பாரதியார்
வணக்கம். நான் தான் உங்கள் முறுக்கு மீசை பாரதி பேசுகின்றேன். மாணவர்களே நலமா? ஒருமுறை எனக்குப் பிடித்த பலகாரம் பற்றி ஒருவர் கேட்டார். நான் சற்றும் தயங்காமல் முறுக்கு என்றேன். அது குறித்த காரணம் இவர் கேட்டார்.முறுக்கு என்றுச் சொல்லும் போது நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி வெள்ளையர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற உணர்ச்சி பெருக்கேற்படுகின்றது.

அதனால் நான் முறுக்கை வீரப்பலகாரம் என்றே அழைக்கின்றேன். இப்போதும் முறுக்கேறி இலஞ்சம், ஊழல் செய்பவரை அடக்க முறுக்கு மீசை துடிக்கின்றது .சரி ! நேரம் ஆகிவிட்டது இற்றொரு நாள் வருகின்றென்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
வ.உ.சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார். அவரின் உரை வழி , அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

சுதேசக் கப்பல்
தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்து வாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர். கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர், கப்பல்களில் ஆங்கிலக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர்.இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது.

ஆங்கிலேயரின் அடக்குமுறை
சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத் தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரத நண்பர்களையும் பயமுறுத்தினர். அதற்கெல்லாம் கவலைப்படாமல் ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர். ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

வ.உ.சிதம்பரனாரின் தியாகம்
வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது, உள்ளம் தளரவில்லை . சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவுரை கூற “உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன்” என்றார். சிறையில் செக்கிழுத்தார். சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார். செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.

தமிழ்ப்பற்றும் ஏக்கமும்
வ.உ.சிதம்பரனார் தொல்காப்பியம், இன்னிலை கற்றுத் தன் துன்பங்களை மறந்தார். ஆங்கிலத்தில் ஆலன் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை ‘மனம் போல் வாழ்வு’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் முதலிய சிறு நூ ல்களைப் படைத்தார். சிறைவாழ்வு முடிந்து வ.உ.சிதம்பரனார் வெளியில் வந்த போது தன் குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்தார். ஆனால் கடற்கரையில் தன் ஆசைக்குழந்தை சுதேசக் கப்பலைக் காணாமல் வருத்தம் அடைந்தார் என்று நற்காலம் வருமோ என்று ஏங்கினார்.

முடிவுரை
“பயக் காண்பது சுதந்திர வெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்”
என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?
என்று உருக்கமாகப் பேசி கடற்கரையை விட்டு அகன்றார் வ.உ.சிதம்பரனார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சொல்லின் செல்வர் என்று போற்றப்படுபவர்
அ) அண்ணா
ஆ) இரா.பி. சேது
இ) வ.உ.சி
ஈ) பாண்டித்துரையார்
Answer:
ஆ) இரா.பி. சேது

Question 2.
தமிழின்பம் என்னும் நூலை எழுதியவர்
அ) அண்ணா
ஆ) இரா.பி. சேது
இ) வ.உ.சி
ஈ) பாண்டித்துரையார்
Answer:
ஆ) இரா.பி. சேது

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

Question 3.
இரா.பி. சேதுவின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்
அ) தமிழின்பம்
ஆ) ஆற்றங்கரையினிலே
இ) கடற்கரையினிலே
ஈ) தமிழ் விருந்து
Answer:
அ) தமிழின்பம்

Question 4.
வ.உ.சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி இரா.பி. சேதுவின் நூல்
அ) தமிழின்பம்
ஆ) ஆற்றங்கரையினிலே
இ) கடற்கரையினிலே
ஈ) தமிழ் விருந்து
Answer:
இ) கடற்கரையினிலே

Question 5.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் நூல்
அ) தமிழின்பம்
ஆ) ஆற்றங்கரையினிலே
இ) கடற்கரையினிலே
ஈ) தமிழ் விருந்து
Answer:
அ) தமிழின்பம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 1.
நாட்டுக்கு உழைத்த சிறந்த பிற தலைவர்கள் பற்றிய பிற செய்திகளைத் திரட்டி எழுதுக.
Answer:
காந்தியடிகள்:
(i) அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்குப்பாடுபட்டவர்.
(ii) வெள்ளையனே வெளியேறு இயக்கம் , உப்புச் சத்தியாகிரகம் ,ஒத்துழையாமை இயக்கம் , தீண்டாமை ஒழிப்பு ,மதுவிலக்கு முதலியன

நேதாஜி :
இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்.

வ.உ.சிதம்பரனார்
நம் நாட்டிற்காகச் சுதேசக்கப்பல் வாங்கியவர். நாட்டுமக்களுக்காக சிறையில் செக்கிழுத்தவர்.

ஜவஹர்லால் நேரு
காந்தியடிகளுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர்.

பூலித்தேவன்
ஆங்கிலேயரை எதிர்த்து தன்பகுதியை வென்றவர்.விடுதலைப் போரின் முதல் முழக்கமிட்டவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்கமாட்டோம் என்று ஆங்கிலேயரை எதிர்த்தவர்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் …………………..
அ) தூத்துக்குடி
ஆ) காரைக்குடி
இ) சாயல்குடி
ஈ) மன்னார்குடி
Answer:
இ) சாயல்குடி

Question 2.
முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர் ……………….
அ) இராஜாஜி
ஆ) நேதாஜி
இ) காந்திஜி
ஈ) நேருஜி
Answer:
ஆ) நேதாஜி

Question 3.
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் ………………..
அ) இராஜாஜி
ஆ) பெரியார்
இ) திரு.வி.க
ஈ) நேதாஜி
Answer:
அ) இராஜாஜி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு …………………
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ………………….. யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் …………………………
Answer:
1. புலி
2. பெண்
3. அடர்ந்த முடிகள்

குறு வினா

Question 1.
முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
Answer:
1. வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர்.

2. உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி. – என்று முத்துராமலிங்கத்தேவரைப் பெரியார் பாராட்டியுள்ளார்.

Question 2.
முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது?
Answer:
1. முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார்.

2. அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர்.

3. இதனால், அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது.

4. மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது.

Question 3.
முத்துராமலிங்கர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
Answer:
1. முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.

2. சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

சிறு வினா

Question 1.
நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.
Answer:
(i) நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார்.
(ii) அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
(iii) முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939ல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
(iv) நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.
(v) விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்

Question 2.
தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?
Answer:
(i) 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.

(ii) மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

(iii) உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.

(iv) பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.

சிந்தனை வினா

Question 1.
சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
1. உரிமைக்காகப் போராடுதல்
2. மக்கள் நலம் காத்தல்
3.பொதுநல வாழ்வு
4. பேச்சாற்றல்
5. சாதி, மத, இன,மொழி ஆகியன பாராமை
6. ஒழுக்கம் காத்தல்
7. பிறர்நிலையில் தன்னை வைத்துப்பார்த்தல்
8. மனிதநேயம்
9. நாட்டுப்பற்று
10. தியாக உணர்வு
ஆகியன சிறந்த தலைவருக்குரிய பண்புகளாக நாங்கள் கருதுகின்றோம்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தந்தைப் பெரியாரால் ‘சுத்தத் தியாகி’ என்று பாராட்டப்பட்டவர் ………………….
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 2.
முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் ……………._
அ) பசும்பொன்
ஆ) மதுரை
இ) கோவை
ஈ) சென்னை
Answer:
அ) பசும்பொன்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 3.
முத்துராமலிங்கத் தேவர் தொடக்கக் கல்வி பயின்ற இடம் ………………….
அ) பசும்பொன்
ஆ) மதுரை
இ) இராமநாதபுரம்
ஈ) கமுதி
Answer:
ஈ) கமுதி

Question 4.
முத்துராமலிங்கத் தேவர் படித்துக்கொண்டிருந்த போது பரவிய நோய் ……………
அ) காலரா
ஆ) பிளேக்
இ) மலேரியா
ஈ) மஞ்சள் காமாலை
Answer:
ஆ) பிளேக்

Question 5.
வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட தலைவர் ……………….
அ) பாலகங்காதர திலகர்
ஆ) காந்திஜி
இ) நேதாஜி
ஈ) திரு.வி.க
Answer:
அ) பாலகங்காதர திலகர்

Question 6.
வங்கச் சிங்கம் என்று போற்றப்படுபவர்
அ) பாலகங்காதர திலகர்
ஆ) காந்திஜி
இ) நேதாஜி
ஈ) திரு.வி.க
Answer:
ஆ) காந்திஜி

Question 7.
நேதாஜி என்னும் வார இதழை நடத்தியவர் ………………….
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 8.
முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் ……………..
அ) சாயல்குடி
ஆ) பசும்பொன்
இ) இராமநாதபுரம்
ஈ) வங்கம்
Answer:
அ) சாயல்குடி

Question 9.
முத்துராமலிங்கத் தேவரின் பேச்சு விடுதலைப்போருக்கு உதவும் என்று கூறியவர் ……………….
அ) பாலகங்காதர திலகர்
ஆ) காமராசர்
இ) நேதாஜி
ஈ) திரு.வி.க
Answer:
ஆ) காமராசர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 10.
தென்னாட்டுச் சிங்கம் என்றழைக்கப்படக் கூடியவர் ……………….
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 11.
முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் சட்ட மன்றத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு ……………….
அ) 1947
ஆ) 1937
இ) 1957
ஈ) 1973
Answer:
ஆ) 1937

Question 12.
முத்துராமலிங்கத் தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்திய இடம் ……………
அ) கமுதி
ஆ) பசும்பொன்
இ) சாயல் குடி
ஈ) இராமநாதபுரம்
Answer:
அ) கமுதி

Question 13.
குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு
அ) 1948
ஆ) 1984
இ) 1949
ஈ) 1943
Answer:
அ) 1948

Question 14.
பாரதமாதா கூட்டுறவுப் பண்டக சாலை ஏற்படுத்தப்பட்ட இடம்
அ) கமுதி
ஆ) பசும்பொன்
இ) சாயல் குடி
ஈ) இராமநாதபுரம்
Answer:
அ) கமுதி

Question 15.
பாரதமாதா கூட்டுறவுப் பண்டக சாலை ஏற்படுத்தியவர் ………………
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 16.
ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தியவர் ……………….
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 17.
உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தியவர் ………………..
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர

Question 18.
பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் …………………..
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இளமையில் அன்னையை இழந்து இஸ்லாமியத்தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டவர் ………………
2. முத்துராமலிங்கத் தேவர் உயர்நிலைக் கல்வியைப் படித்த இடங்கள் ……………, ……………..
3. முத்துராமலிங்கத் தேவர் இளமையிலேயே ………………… ஆர்வம் மிகுதி.
4. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு …………………
5. நேதாஜி பெயரில் வார இதழ் ஒன்றை நடத்தியவர் ………………..
6. முதன் முதலில் முத்துராமலிங்கத் தேவர் பேசிய தலைப்பு ………………….
7. இந்திய அரசால் முத்துராமலிங்கத் தேவர் தபால்தலை வெளியிடப்பட்ட ஆண்டு ………………….
8. ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகப் கொண்டு வரப்பட்ட சட்டம் ……………………
9. முத்துராமலிங்கத் தேவர் ………………….. கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார்.
Answer:
1. முத்துராமலிங்கத் தேவர்
2. மதுரை, இராமநாதபுரம்
3. அரசியல்
4. கி.பி.1939
5. முத்துராமலிங்கத் தேவர்
6. விவேகானந்தர் பெருமை
7. கி.பி.1995
8. குற்றப்பரம்பரைச் சட்டம்.
9. மதுரை வைத்தியநாத ஐயர்

குறுவினா

Question 1.
முத்துராமலிங்கத் தேவர் எங்கு எப்போது பிறந்தார்?
Answer:
முத்துராமலிங்கத் தேவர் 30.10.1908 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்ற ஊரில் பிறந்தார்.

Question 2.
முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் யாவர்?
Answer:
தந்தை : உக்கிர பாண்டியத்தேவர், தாய் : இந்திராணி அம்மையார்.

Question 3.
முத்துராமலிங்கத் தேவரின் படிப்பு பாதியில் நின்ற காரணம் யாது?
Answer:
இராமநாதபுரத்தில் படித்துக்கொண்டிருந்த போது , அவ்வூரில் பிளேக்’ நோய் பரவியதால் அவரின் படிப்பு பாதியில் நின்றது.

Question 4.
முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு யார்?
Answer:
நேதாஜி சுபாஷ் சந்திர போசு.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 5.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து மூதறிஞர் இராஜாஜி கூறியது யாது?
Answer:
முத்துராமலிங்கத் தேவர் பேச்ச உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது உதடுகளில் இருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது, அவர் வழக்கம் என்று முத்துராமலிங்கத் தேவர் குறித்து மூதறிஞர் இராஜாஜி பாராட்டுகிறார்.

Question 6.
முத்துராமலிங்கத் தேவர் பேச்சு குறித்து வட இந்திய இதழ்கள் பாராட்டிய செய்தி யாது?
Answer:
பாராளுமன்றத்தில் அவர் பேசிய ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர்காலத்தில் விட்டல் பாய், வல்லபபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.

Question 7.
முத்துராமலிங்கத் தேவரின் சிறப்புப்பெயர்கள் யாவை?
Answer:

  1. தேசியம் காத்த செம்மல்
  2. வித்யா பாஸ்கர்
  3. பிரவசன கேசரி
  4. சன்மார்க்க சண்ட மாருதம்
  5. இந்து புத்தசமய மேதை

Question 8.
விவசாயிகளின் தோழன் முத்துராமலிங்கத் தேவர் என்பதற்கான நிகழ்வினைக்குறிப்பிடுக.
Answer:
1. முத்துராமலிங்கத் தேவர் ‘ஜமீன் விவசாயிகள் சங்கம்’ ஏற்படுத்தி விவசாயிகள் துன்பம் போக்கப் பாடுபட்டார்.

2. தமக்குச் சொந்தமான 321/2 சிற்றூர்களில் இருந்த விளை நிலங்களைக் குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டுக் கொடுத்தார்.

Question 9.
முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டிருந்த இடங்கள் யாவை?
Answer:

  1. அலிப்பூர்
  2. அமராவதி
  3. தாமோ
  4. கல்கத்தா
  5. சென்னை
  6. வேலூர்

Question 10.
முத்துராமலிங்கத் தேவர் எப்போது மறைந்தார்?
Answer:
30.10.1963ல் முத்துராமலிங்கத் தேவர் மறைந்தார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

சிறு வினா

Question 1.
முத்துராமலிங்கத் தேவரின் இளமைக்காலம் குறித்து எழுதுக.
Answer:
பிறப்பு :
முத்துராமலிங்கத் தேவர் 30.10.1908இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்ற ஊரில் பிறந்தார்.

முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் :
தந்தை : உக்கிர பாண்டியத்தேவர் தாய் : இந்திராணி அம்மையார். இளமையில் அன்னையை இழந்து இஸ்லாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.

படிப்பு பாதியில் நின்ற காரணம் :
இராமநாதபுரத்தில் படித்துக்கொண்டிருந்த போது , அவ்வூரில் ‘பிளேக்’ நோய் பரவியதால் அவரின் படிப்பு பாதியில் நின்றது.

Question 2.
முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு செய்த சிறப்புகள் யாவை?
Answer:
அரசு விழா
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் 30 ஆம் நாள் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகின்றது.

படம் மற்றும் சிலை
(i) தமிழகச் சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
(ii) சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
(iii) நாடாளுமன்ற வளாகத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தபால்தலை
இந்திய அரசால் 1995ல் இவரின் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

Question 3.
பாரத மாதா கூட்டுறவு பண்டக சாலையை நிறுவியவர் யார்?எதற்காக நிறுவப்பட்டது?
Answer:
நிறுவியவர் :
பாரத மாதா கூட்டுறவு பண்டக சாலையை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

நிறுவியவர் : முத்துராமலிங்கத் தேவர் நிறுவக்காரணம் கமுதியில் வியாபரிகள் விவசாய உற்பத்திப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைப்பதற்காக பாரத மாதா கூட்டுறவு பண்டக சாலையை நிறுவினார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.2 பாஞ்சை வளம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.2 பாஞ்சை வளம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 1.
உங்கள் வீட்டிலுள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக் கதைப்பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
முடுகு
எட்டுத் திசையும் பதினாறு கோணமும்
கட்டியே காத்தவன் கட்டபொம்மன்
ஆத்துரு வாழும் அண்ணா சாய்பு
அண்ணனும் தம்பியும் வல்லவனாம்
குளத்தூர் வாழும் சுப்பையா
கொள்ளை யடிப்பதில் வல்லவனாம்
கிழக்கே எல்லையாம் கீழக்கரை
மேக்க எல்லையாம் சூலக்கரை
ஆயிரம் கண்ணுள்ள மாரியம்மா
ஆதரிக்க வேணும் இந்த நேரம்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஊர்வலத்தின் முன்னால் ………….. அசைந்து வந்தது.
அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்
Answer:
இ) வாரணம்

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியில் ……………… நாயை விரட்டிடும்.
அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி
Answer:
அ) முயல்

Question 3.
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடிவீடு
Answer:
ஈ) மாடிவீடு

Question 4.
‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்
Answer:
ஆ) பூட்டும் + கதவுகள்

Question 5.
‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஒடை
ஈ) தோரணம் + ஓடை
Answer:
அ) தோரணம் + மேடை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 6.
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) வாசல் அவங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்
Answer:
ஆ) வாசலங்காரம்

பொருத்துக.

பொக்கிஷம் – அழகு
சாஸ்தி – செல்வம்
விஸ்தாரம் – மிகுதி
சிங்காரம் – பெரும்பரப்ப
Answer:
பொக்கிஷம் – செல்வம்
சாஸ்தி – மிகுதி
விஸ்தாரம் – பெரும்பரப்பு
சிங்காரம் – அழகு

குறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.
Answer:

  1. பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.
  2. அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

சிறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
Answer:

  1. பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
  2. வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.
  3. வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
Answer:
(i) வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.

(ii) பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

(iii) மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

சிந்தனை வினா

Question 1.
நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் யாது?
Answer:
1. மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர்.
2. அஞ்சா நெஞ்சினர்.
3. ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராகவே தன் நாட்டு உரிமைக்காக எதிர்த்தவர். ஆகிய காரணத்தினாலும், மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும் நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலைத் தொகுத்து நூலாக வெளியிட்டவர் …………………..
அ) நா.வானமாமலை
ஆ) சு.சண்முகசுந்தரம்
இ) அன்னகாமு
ஈ) சண்முக சுந்தரம்
Answer:
அ) நா.வானமாமலை

Question 2.
குறையில்லாத வீரன் ………………
அ) கட்டபொம்மன்
ஆ) ஆங்கிலேயன்
இ) மருது
ஈ) நா.வானமாமலை
Answer:
அ) கட்டபொம்மன்

Question 3.
கட்டபொம்மனின் நாடு ……………..
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை
Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 4.
பாஞ்சாலங்குறிச்சியில் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும் இடம்
அ) கடைகள்
ஆ) வீதிகள்
இ) வீடுகள்
ஈ) சோலைகள்
Answer:
இ) வீடுகள்

Question 5.
நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிப்பவை ……………..
அ) குயில், மயில்
ஆ) யானை, பசு
இ) பசு, புலி
ஈ) முயல், நாய்
Answer:
இ) பசு, புலி

Question 6.
பாஞ்சாலங்குறிச்சியின் தண்ணீருக்குக் கூறப்பட்ட உவமை …………………
அ) பால்
ஆ) மணி
இ) அமுதம்
ஈ) சந்தனம்
Answer:
அ) பால்

Question 7.
கறந்து வைத்த பாலைக் குடிக்காதது ……………
அ) காகம்
ஆ) குயில்
இ) மயில்
ஈ) பசு
Answer:
அ) காகம்

Question 8.
வீரம் மிகுந்த நாடு ………………
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை
Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Question 9.
பாஞ்சாலங்குறிச்சியில் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடியது ……………….
அ) காகம்
ஆ) குயில்
இ) மயில்
ஈ) பசு
Answer:
இ) மயில்

Question 10.
அன்பு வளரும் நாடு …………………
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை
Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 11.
பொருத்துக.
1. வாரணம் – அ) பாக்கு
2. பரி – ஆ) அழகு
3. சிங்காரம் – இ) குதிரை
4. கமுகு – ஈ) யானை

அ) 1-ஈ 2-இ 3-ஆ 4- அ
ஆ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ
இ) 1-ஆ 2-இ 3-அ 4-ஈ
ஈ) 1-அ 2- ஈ 3-ஆ 4-இ
Answer:
அ) 1-ஈ 2-இ 3-ஆ 4- அ

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ‘பாஞ்சை’ என்ற அழைக்கப்படும் நாடு ……………….
2. தமிழ்நாட்டில் பல வகையான ………………….. இலக்கியங்கள் வழங்கி வருகின்றன.
3. கதைப்பாடல் என்பது ……………… தழுவிய பாடல்.
4. ‘பரி வளரும் சாலை’ – இதில் ‘பரி’ என்பதன் பொருள் ……………..
5. ‘கமுகு’ என்பதன் பொருள் ……………..
6. ……………… யில் மாங்குயில் கூப்பிடுமாம்.
7. முயலும் ………………. விரட்டும்.
8. வரந்தருபவள். ……………….
Answer:
1. பாஞ்சாலங்குறிச்சி
2. நாட்டுப்புற
3. கதை
4. குதிரை
5. பாக்கு
6. சோலை
7. நாயை
8. சக்கமாதேவி

குறு வினா

Question 1.
குயில்கள் எங்கு கூவும் ? மயில்கள் எப்படி விளையாடும்?
Answer:
குயில்கள் சோலைகளில் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்

Question 2.
பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்ப்பன எது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

Question 3.
கரந்த பாலைக் காகம் குடிக்காததற்குக் காரணம் யாது?
Answer:
மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

Question 4.
பசு மற்றும் புலியின் செயல் யாது?
Answer:
பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 5.
எவ்வெற்றுக் கெல்லாம் பாஞ்சாலங்குறிச்சியில் இடங்கள் இருந்தன?
Answer:

  1. யானைக் கூடம்
  2. குதிரைக் கொட்டில்
  3. தோரணங்கள் கட்டப்பட்ட மேடை
  4. தாயம் ஆடுவதற்கான இடம்.

Question 6.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரம் நிறைந்த விலங்குகள் எவை?
Answer:

  1. முயல்
  2. பசு

Question 7.
வீரபாண்டியகட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
1. யானை
2. குதிரை
3. குயில்கள்
4. மயில்கள்
5. முயல்
6. வேட்டை நாய்
7. பசு
8. புலி
9. காகம்.

Question 8.
வீரபாண்டியகட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள விலங்குகள் யாவை?
Answer:

  1. யானை
  2. குதிரை
  3. முயல்
  4. வேட்டை நாய்
  5. பசு
  6. புலி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 9.
வீரபாண்டியக ட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பறவைகள் யாவை?
Answer:

  1. குயில்கள்
  2. மயில்கள்
  3. காகம்

சிறு வினா:

Question 1.
“சில அதிசயங்கள் சொல்கின்றேன் கேளுமையா” – பாஞ்சாலங்குறிச்சி அதிசயங்கள் யாவை?
Answer:
1. வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.

2. பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

3. மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

சொல்லும் பொருளும்

சூரன் – வீரன்
பொக்கிஷம் – செல்வம்
சாஸ்தி – மிகுதி
விஸ்தாரம் – பெரும்பரப்பு
வாரணம் – யானை
பரி – குதிரை
சிங்காரம் – அழகு
கமுகு – பாக்கு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.1 புலி தங்கிய குகை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.1 புலி தங்கிய குகை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

Question 1.
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை 1
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை 2

Question 2.
பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றின் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை 3

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘யாண்டு’ என்ற சொல்லின் பொருள் ………………..
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது
Answer:
ஆ) எங்கு

Question 2.
‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ ?
இ) யா + உளனோ ?
ஈ) யாண்டு + உனோ?
Answer:
அ) யாண்டு + உளனோ?

Question 3.
‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது. ………………….
அ) கல்லளை
ஆ) கல்அளை
இ) கலலளை
ஈ) கல்லுளை
Answer:
அ) கல்லளை

குறு வினா

Question 1.
தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
Answer:
தம் வயிற்றுக்குத் தாய் ‘புலி தங்கிய குகை’யை உவமையாகக் கூறுகிறார்.

சிறு வினா

Question 1.
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) சிறிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்றிக் கொண்டு , எதுவும் தெரியாதவள் போல நீ’உன் மகன் எங்கே?’ என்று என்னைக் கேட்கின்றாய்.

(ii) அவன் எங்கு இருக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ‘புலி தங்கிய குகை’ போன்று அவனைப் பெற்ற வயிறு என்னிடம் உள்ளது.

(iii) அவன் இங்கு இல்லை ஆனால் போர்க்களத்தில் இருக்கலாம். போய்க் காண்பாயாக! – என்று தன் மகன் குறித்துத் தாய் கூறினாள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

சிந்தனை வினா

Question 1.
தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
Answer:
(i) புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது.

(ii) அதைப் போல வீரம் மிக்கவன் மகன்.

(iii) இருள் நிறைந்த குகையில் புலி இருப்பது போல், இருள் நிறைந்த வீரம் மிக்க கருவறையில் தன் மகன் உறங்கி வளர்ந்தான்.

(iv) புலி குகையை விட்டு வேட்டைக்குச் செல்வது போல பகைவர்களை வேட்டையாடுவதற்கு மகன் போர்க்களம் சென்று இருக்கின்றான்.

(v) அதனால் தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவா …………………
அ) ஔவையார்
ஆ) ஒக்கூர் மாசாத்தியார்
இ) காவற்பெண்டு
ஈ) வெண்ணிக்குயத்தியார்
Answer:
இ) காவற்பெண்டு

Question 2.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று …………………
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) திருக்குறள்
ஈ) திருமுருகாற்றுப்படை
Answer:
அ) புறநானூறு

Question 3.
தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பதிற்றுப்பத்து
ஈ) குறுந்தொகை
Answer:
அ) புறநானூறு

Question 4.
கோப்பெரு நற்கிள்ளி ……………….. மன்னன்.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
ஆ) சோழ

Question 5.
காவற்பெண்டு பாடிய பாடல் அமைந்த நூல் …………………
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பதிற்றுப்பத்து
ஈ) குறுந்தொகை
Answer:
அ) புறநானூறு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

Question 6.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) காவற்பெண்டு – பெண்பாற் புலவர்
ஆ) காவற்பெண்டு – சங்ககாலப் புலவர்
இ) காவற்பெண்டு – புறநானூற்றில் பாடல் பாடினார்
ஈ) காவற்பெண்டு – கோப்பெரு நற்கிள்ளியின் தாய்
Answer:
ஈ) காவற்பெண்டு – கோப்பெரு நற்கிள்ளியின் தாய்

Question 7.
பொருத்துக.
1. சிற்றில் – அ. கற்குகை
2. கல் அளை – ஆ. சிறு வீடு
3. யாண்டு – இ. பெற்றெடுத்த
4. ஈன்ற வயிறு – ஈ. எங்கே

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 8.
‘புலிசேர்ந்து போகிய கல்அளை போல’ – இதில் ‘குகை’ என்னும் பொருள்
அ) சேர்ந்து
ஆ) போகிய
இ) அளை
ஈ) போல
Answer:
இ) அளை

Question 9.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) இல் – வீடு
ஆ) அளை – குகை
இ) ஈன்ற – பெற்ற
ஈ) யாண்டு – இங்கே
Answer:
ஈ) யாண்டு – இங்கே

Question 10.
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
அ) அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?
ஆ) உன் மகன் எங்கு உள்ளான்? அன்னையே!
இ) எங்கு அன்னையே உன் மகன் உள்ளான்?
ஈ) உன் மகன் எங்கு அன்னையே உள்ளான்?
Answer:
அ) அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ‘புலி தங்கிய குகை’ என்னும் தலைப்பில் அமைந்தப் பாடலை எழுதியவர் ………………..
2. தமிழர்கள் பழங்காலம் தொட்டே ……, ………….. சிறந்து விளங்கினர்.
3. நாட்டைக்காக்க ………….. செல்வது முதற்கடமை.
4. கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க புலவர் …………….
5. ‘புலி தங்கிய குகை’ என்னும் தலைப்பில் அமைந்தப் பாடல் புறநானூற்றில் …………. பாடல்.
Answer:
1. காவற்பெண்டு
2. கல்வியிலும், வீரத்திலும்
3. போர்க்களம்
4. காவற்பெண்டு
5. 86

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

குறு வினா

Question 1.
காவற்பெண்டு – குறிப்பு வரைக.
Answer:

  1. சங்ககாலப் பெண்பாற் புலவர்.
  2. கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்.
  3. படைப்பு : புறநானூற்றில் ஒரு பாடல்.
  4. கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க புலவர் இவர்.

Question 2.
புறநானூறு குறிப்பு வரைக.
Answer:

  1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று : புறநானூறு
  2. இது பண்டைத் தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம். முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்

Question 3.
புலவரிடம் பெண் வினவியது யாது?
Answer:
அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்? என்று புலவரிடம் பெண் வினவினாள்.

Question 4.
‘புலிசேர்ந்து போகிய கல்அளை போல’ தொடர் பொருள் யாது?
Answer:
பொருள் : புலி தங்கிச் சென்ற குகை போல்

Question 5.
தன் மகன் எங்கு இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகின்றார்?
Answer:
தன் மகன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகின்றார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 புலி தங்கிய குகை

காவற்பெண்டு :

  1. சங்ககாலப் பெண்பாற் புலவர்
  2. கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்
  3. படைப்பு : புறநானூற்றில் ஒரு பாடல்

சொல்லும் பொருளும்

1. சிற்றில் – சிறு வீடு
2. கல் அளை – கற்குகை
3. யாண்டு – எங்கே வயிறு.
4. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த
5. குடில் – வீடு