Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.5 தொழிற்பெயர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.5 தொழிற்பெயர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

Question 1.
பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள தொழில் பெயர்களைக் கண்டறிந்து தொகுக்க.
Answer:
பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொழில் பெயர்கள்: வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற் பெயர் எது?
அ) எழுது
ஆ) பாடு
இ) படித்தல்
ஈ) நடி
Answer:
இ) படித்தல்

Question 2.
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற் பெயர் எது?
அ) ஊறு
ஆ) நடு
இ) விழு
ஈ) எழுதல்
Answer:
ஆ) நடு

பொருத்துக.

1. ஒட்டகம் – முதனிலைத் தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
3. சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
Answer:
1. ஒட்டகம் – விகுதி பெற்ற தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் தொழிற்பெயர்
3. சூடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

சிறு வினா

Question 1.
வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.
Answer:
வளர்தல், பேசுதல் – இவை விகுதி பெற்ற தொழிற் பெயர்கள். ‘தல்’ என்ற தொழிற்பெயர் விகுதி பெற்று வருவதால் இஃது விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் ஆயிற்று.

Question 2.
முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
முதனிலைத் திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
சான்று : விடு – வீடு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

மொழியை ஆள்வோம்

பேசுக.

Question 1.
நீங்கள் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றி வகுப்பறையில் பேசுக.
Answer:
வணக்கம். நான் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றிப் பேசுகின்றேன். சித்தன்னவாசல் ஓவியங்களையும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சித்தன்னவாசல் ஓவியங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவையாக, உண்மையான காட்சிகள் போல காட்சி அளிக்கின்றன.

ஓவியங்களா உயிருள்ள பொருளா என்று வியக்கும் வகையில் உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கல்சிற்பங்கள் அருமையானது. பஞ்சபாண்டவர் ரதம், நந்தி ஆகியன கலை நயத்துடனும் நவீன வேலைப்பாடுகள் அமைந்து காணப்படுகின்றது. நம் கலையறிவுக்குச் சான்றாக இது உள்ளது. அனைவரும் அதனைக் கண்டு களிப்போம். நன்றி.

கவிதையை நிறைவு செய்க.

வானும் நிலவும் அழகு
வயலும் பயிரும் அழகு
கடலும் அலையும் அழகு
காற்றும் குளிரும் அழகு.

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர் 1

ஒன்று கூடுவோம் நாம் ஒன்று கூடுவோம்
பச்சை மரங்களைக் காப்போம்
பசுமையை நேசிப்போம்! சுவாசிப்போம்!
இனியொரு விதி செய்வோம்
இயற்கையைப் போற்றவே!

கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக.

(ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள்)
(எ.கா.) : ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.

1. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை .
எங்கும் தமிழ் இசை

2. கட்டடக்கலையில் தமிழர் சிறந்திருந்தனர்.
சிறந்த கலை கட்டடக்கலை.

3. வண்ணங்கள் தீட்டி ஓவியம் வரைவோம்.
மயில் தோகையில் எண்ணற்ற வண்ணங்கள்.

இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர் 2

கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

தலைப்பு : எங்கள் ஊர்
முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை

முன்னுரை :
அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் ஈரோடு ஆகும். எண்ணற்ற வளங்கள் பொங்கும் இடம் ஈரோடு. மனிதநேயம் தவழும் நகர் எங்கள் ஈரோடு. அச்சிறப்புமிகு நகர் பற்றிக் காண்போம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

அமைவிடம் :
கரூர், சேலம், கோவை ஆகியற்றுக் கிடையே ஈரோடு நகர் அமைந்துள்ளது. காடுகளும் வயல்களும் சூழ்ந்து நடுவினில் இயற்கை அழகு தவழும் வண்ணம் ஈரோடு அமைந்துள்ளது. காவிரி ஆறு பாயும் புண்ணிய பூமி ஈரோடு ஆகும்.

பெயர்க்காரணம் :
இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை எனப்பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி ஈரோடு என்று ஆனது. பிரம்மா ஐந்தாவது தலையைத் துண்டித்த போது அந்த மண்டையோடு சிவபெருமானோடு ஒட்டிக்கொண்டு பிரம்ம தோசம் பிடித்தது. அவர் தோசம் போக இந்தியா முழுவதும் நீராடினார். ஈரோட்டில் வந்து நீராடிய போது மண்டை ஓடு மூன்றாகப் பிரிந்து மூன்று இடத்தில் விழுந்தது. ஈர் (இறுதி) ஓடு விழுந்த இடம் ஈரோடு ஆயிற்று என்பர்.

தொழில்கள் :
வேளாண்மை, கைத்தறி, ஜமக்காளம், ஆடை ஆயத்தம் ஆகிய தொழில்கள் ஈரோட்டில் சிறந்து விளங்கிவருகின்றது.

சிறப்புமிகு இடங்கள் :
பெரியார் – அண்ணா நினைவகம், திண்டல் முருகன் கோயில், பிரப் தேவாலயம், பள்ளிபாளையம் தர்கா, பண்ணாரி அம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆகியன ஈரேட்டில் சிறப்புமிகு இடங்கள் ஆகும்.

திருவிழாக்கள் :
மாரியம்மன், பண்ணாரி அம்மன், பாரியூர் அம்மன், அறச்சாலை அம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் இதில் – கலந்து கொள்வர்.

மக்கள் ஒற்றுமை :
இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே இருந்துவருகின்றோம். ஒரே பகுதியில் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய மூன்றும் அமைந்து எங்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

முடிவுரை :
நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் புதிரைப்படித்து விடையைக் கண்டறிக.

Question 1.
நான் இனிமை தரும் இசைக் கருவி.
எனது பெயர் ஆறு எழுத்துகளை உடையது.
அதில் இறுதி நான்கு எழுத்துகள் விலை உயர்ந்த ஒரு உலோகத்தைக் குறிக்கும்.
முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் விலங்கின் வேறு
பெயர் கிடைக்கும்.
நான் யார்?
Answer:
மிருதங்கம்

Question 2.
நான் ஒரு காற்றுக் கருவி.
நான் புல் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து உருவாக்கப்படுகிறேன்.
எனது பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டது.
முதல் இரண்டு எழுத்துகள் ஒரு தாவர வகையைக் குறிக்கும்.
நான் யார்?
Answer:
புல்லாங்குழல்

பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.

சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலைவிதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது.

ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

வினாக்கள்:
Question 1.
சாலையின் எந்தப்பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?
Answer:
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும்.

Question 2.
விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக்குறிக்கும்?
Answer:
இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.

Question 3.
எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?
Answer:
இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.

Question 4.
ஒருவழிப் பாதை எனப்படுவது யாது?
Answer:
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரே சாலையில் இரு கூறாகப் பிரிக்காமல், வாகனங்கள் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மைக்கப்பட்டுள்ளவை ஒருவழிப்பாதை ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.5 தொழிற்பெயர்

Question 5.
வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக்கூறு.
Answer:
வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.

நிற்க அதற்குத் தக…..

கலைச்சொல் அறிவோம்

1. படைப்பாளர் – creator
2. சிற்பம் – sculpture
3. கலைஞர் – artist
4. கல்வெட்டு – inscriptions
5. கையெழுத்துப்படி – manuscripts
6. அழகியல் – aesthetics
7. தூரிகை – brush
8. கருத்துப்படம் – cartoon
9. குகை ஓவியங்கள் – cave paintings
10. நவீன ஓவியம் – modern art

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Question 1.
உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.
Answer:
எங்கள் ஈரோட்டில் பெரியார் – அண்ணா நினைவகம், தொல்லாய்வுக் கூடம், பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஆகியவை உள்ளன. தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய அனைத்துப்பொருட்களும் நூல்களும் புகைப்படங்களும் நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழமையைப் பறைசாற்றும் கல்வெட்டுகள், தொல்பொருட்கள் பாதுகாப்பிடமாக வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள தொல்லாய்வுக் கூடத்தில் உள்ளன. பழமைமிக்க நீர்த்தேக்கம் பவானிசாகர்.

Question 2.
நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
Answer:
நான் கண்டுகளித்த இடம் குற்றாலம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் வீசும் காற்று, மூலிகைகளின் அருங்குணங்களை இழுத்து வரும் காட்டாற்று நீர் அருவியாக மூலிகை நீராகப் பொழியும். தீராத நோய் கூட குற்றால அருவியில் குளித்தால் நீங்குமாம்.

மதிப்பீட்டு

Question 1.
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால். சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
Answer:
சரசுவதி மகால் நூலகம்
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இது தான். இந்தியாவில் உள்ள பழமையான நூலகம் இது. கி.பி.1122 ஆம் ஆண்டு முதல் இந்த நூலகம் இயங்கி வருகின்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஓலைச் சவடிகள் கையெழுத்துப் படிகள் இங்கு உள்ளன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம் இது. 1981ல் தமிழுக்காகத் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகம். வானத்தில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாடு என்ற பெயர் தெரியும் படி கட்டடங்கள் இருக்கின்றன. 5 புலங்களும் 25 துறைகளும் இங்கு உள்ளன.

உ.வே.சா. நூலகம்
இது உ.வே.சா. நூலகம். இங்கு 2128 ஓலைச் சுவடிகள் மற்றும் 2041 தமிழ்நூல்களும் உள்ளன.அடுத்தது கன்னிமாரா நூலகம் 1896 ல் இது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மைய நூலகம் இது. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

வள்ளுவர் கோட்டம்
இது தான் சென்னை வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை
இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உரத்தில் உள்ளது. சிலையின் எடை ஏழாயிரம் டன் எடை கொண்டது. தமிழரின் அடையாளம் இது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்
இது அதான் பூம்புகார் சிற்பக் கலைக்கூடம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலை நகரம். இக் கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இடமபெற்றுள்ளது. இப்படி பல சிறப்புகள் கொண்ட இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.3 பேசும் ஓவியங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ……………….
அ) மண்துகள்
ஆ) நீர் வண்ண ம்
இ) எண்ணெய் வண்ணம்
ஈ) கரிக்கோல்
Answer:
அ) மண்துகள்

Question 2.
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ………….
அ) குகை ஓவியம்
ஆ) சுவர் ஓவியம்
இ) கண்ணாடி ஓவியம்
ஈ) கேலிச்சித்திரம்
Answer:
ஈ) கேலிச்சித்திரம்

Question 3.
‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) கோடு + ஓவியம்
ஆ) கோட்டு + ஓவியம்
இ) கோட் + டோவியம்
ஈ) கோடி + ஓவியம்
Answer:
ஆ) கோட்டு + ஓவியம்

Question 4.
‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) செப்பு + ஈடு
ஆ) செப்பு + ஓடு
இ) செப்பு + ஏடு
ஈ) செப்பு + யேடு
Answer:
இ) செப்பு + ஏடு

Question 5.
எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) எழுத்து ஆணி
ஆ) எழுத்தாணி
இ) எழுத்துதாணி
ஈ) எழுதாணி
Answer:
ஆ) எழுத்தாணி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ………………..
2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது …………………..
3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ………………….. மீது பொறித்துப் பாதுகாத்தனர்.
Answer:
1. பாரதியார்
2. துணி ஓவியம்
3. செப்பேடுகளில்

குறு வினா

Question 1.
ஓவியங்களின் வகைகள் யாவை?
Answer:
1. குகை ஓவியம்
2. சுவர் ஓவியம்
3. துணி ஓவியம்
4. ஓலைச்சுவடி ஓவியம்
5. செப்பேட்டு ஓவியம்
6. தந்த ஓவியம்
7. கண்ணாடி ஓவியம்
8. தாள் ஓவியம்
9. கருத்துப்பட ஓவியம்
10. நவீன ஓவியம்

Question 2.
குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
Answer:
குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழர் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 3.
தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?
Answer:
கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டு தாள் ஓவியங்களை வரைவர்.

Question 4.
சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.
Answer:
அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களாகும்.

Question 5.
செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
Answer:
நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்.

சிறு வினா

Question 1.
கேலிச்சித்திரம் என்றால் என்ன?
Answer:
மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவதைக் கேலிச்சித்திரம் என்பர்.

Question 2.
ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
Answer:

  1. ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்.
  2. இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளைக் கொண்டு இருக்கும்.
  3. இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.

சிந்தனை வினா

Question 1.
தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?
Answer:
யானையின் தந்தங்கள் மீது வரையப்படும் ஓவியங்கள் தந்த ஓவியங்கள் ஆகும். இவ்வகை ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் யானைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது. எனவே, தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆய கலைகள் மொத்தம் ……………….
அ) 62
ஆ) 96
இ) 64
ஈ) 63
Answer:
இ) 64

Question 2.
பழந்தமிழரின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் ஓவியம் ……………
அ) குகை ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) குகை ஓவியம்

Question 3.
தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஓவியம் ………………..
அ) சுவர் ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) சுவர் ஓவியம்

Question 4.
தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வரும் ஓவியம் ………………..
அ) சுவர் ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
ஆ) துணி ஓவியம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 5.
கேரளாவில் அதிகம் காணப்படும் ஓவியம் ……………..
அ) தந்த ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) தந்த ஓவியம்

Question 6.
கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் காணப்படும் இடம் ……………….
அ) கோவை
ஆ) கேரளா
இ) தஞ்சாவூர்
ஈ) ஆந்திரா
Answer:
இ) தஞ்சாவூர்

Question 7.
கருத்துப்பட ஓவியம் முதன் முதலில் வெளிவந்த இதழ் ……………….
அ) எழுத்து
ஆ) இந்தியா
இ) விடுதலை
ஈ) கணையாழி
Answer:
ஆ) இந்தியா

குறுவினா

Question 1.
ஓவியம் வரையப் பயன்படும் துணியின் வேறுபெயர்கள் யாவை?
Answer:

  1. எழினி
  2. திரைச்சீலை
  3. கிழி
  4. படாம்

Question 2.
பசார் பெயிண்டிங் என்றால் என்ன?
Answer:
நாட்காட்டி ஓவியங்களை பசார் பெயிண்டிங் என்பர். இதன் முன்னோடி கொண்டையராஜு.

Question 3.
ஓவியத்தின் வேறுபெயர்கள் யாவை?
Answer:

  1. ஓவு
  2. ஓவம்
  3. சித்திரம்
  4. படம்
  5. படாம்
  6. வட்டிகைச் செய்தி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 4.
ஓவியம் வரைபவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:

  1. கண்ணுள்வினைஞர்
  2. ஓவியப் புலவர்
  3. கிளவி வல்லோன்
  4. சித்திரக்காரர்

Question 5.
புனையா ஓவியங்கள் பற்றிக் குறிப்பிடும் இலக்கியங்கள் யாவை?
Answer:

  1. நெடுநல்வாடை
  2. மணிமேகலை
  3. ஓவமாக்கள்
  4. வித்தகர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Question 1.
இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.
(எ.கா) மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது.
Answer:
ஆறு – எண் , நதி
அன்னம் – சோறு, பறவை
மதி – அறிவு, நிலவு
நகை – புன்னகை, அணிகலன்
மெய் – உடல், உண்மை
திங்கள் – மாதம், நிலவு
மாடு – விலங்கு, செல்வம்
தை – மாதம், தைத்தல்
பார் – உலகம், பார்த்ல்
திரை – கடல் அலை, திரைச்சீலை
படி – படித்தல், படிக்கட்டு
இசை – புகழ், சங்கீதம்
வேங்கை – மரம், விலங்கு
கிளை – மரக்கிளை, உறவு
மா – மாமரம், பெரிய
மறை – மறைத்தல், வேதம்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் ‘பரி’ என்பதன் பொருள் …………………
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
Answer:
ஆ) குதிரை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Question 2.
பொருந்தாத ஓசை உடைய சொல் ………………
அ) பாய்கையால்
ஆ) மேன்மையால்
இ) திரும்புகையில்
ஈ) அடிக்கையால்
Answer:
இ) திரும்புகையில்

Question 3.
‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) வண் + கீரை
ஆ) வண்ண ம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
Answer:
ஈ) வண்மை + கீரை

Question 4.
கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) கட்டியிடித்தல்
ஆ) கட்டியடித்தல்
இ) கட்டி அடித்தல்
ஈ) கட்டு அடித்தல்
Answer:
ஆ) கட்டியடித்தல்

சிறுவினா

Question 1.
கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும் 1
– இத்தகைய காரணங்களால் கீரைப்பாத்தியும் குதிரையும் ஒத்திருக்கின்றன.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?
Answer:
நான் குதிரையையும் ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும். தாக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காளமேகப்புலவரின் இயற்பெயர்
அ) வரதன்
ஆ) சுப்புரத்தினம்
இ) எத்திராசுலு
ஈ) சுப்ரமணியம்
Answer:
அ) வரதன்

Question 2.
தடுத்தல் என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) வண்கீரை
ஆ) பரி
இ) மறித்தல்
ஈ) முட்டப்போய்
Answer:
இ) மறித்தல்

குறுவினா

Question 1.
காளமேகப்புலவர் – பெயர்க்காரணம் யாது?
Answer:
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.

Question 2.
காளமேகப்புலவர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  1. திருவானைக்கா உலா
  2. சரசுவதி மாலை
  3. பரபிரம்ம விளக்கம்
  4. சித்திர மடல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Question 3.
காளமேகப் புலவர் கூறும் குதிரையில் இயல்புகள் யாவை?
Answer:

  1. வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
  2. கால் மாறி மாறிப் பாய்ந்து செல்லும்.
  3. எதிரிகளை மறித்துத் தாக்கும்.
  4. போக வேண்டிய இடம் முழுதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

Question 4.
இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
Answer:
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடுதல் இரட்டுற மொழிதல் ஆகும். இதனை சிலேடை என்றும் கூறுவர்.

சிறு வினா:

Question 1.
காளமேகப்புலவர் குறிப்பு வரைக.
Answer:

  1. காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
  2. மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
  3. திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  4. இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நுலில் இடம் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

காளமேகப்புலவர்
காளமேகப்புலவரின் இயற்பெயர்வரதன்.மேகம் மழைபொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நுலில் இடம் பெற்றுள்ளன. அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

1. வண்கீரை – வளமான கீரை
2. பரி – குதிரை
3. முட்டப்போய் – முழுதாகச் சென்று
4. கால் – வாய்க்கால், குதிரையின் கால்.
5. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப்பாத்தி கட்டுதல்). எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.1 ஒரு வேண்டுகோள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 1.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
Answer:
எனக்குப் பிடித்த கலை சிலம்பாட்டக் கலை. இது தமிழரின் தற்காப்புக் கலை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்பர். இது தடியைக் கையாளும் முறை. கால அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக்கொண்டது. சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடவில் சிலம்புக் கம்பியினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

Question 2.
உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  1. “நீங்கள் சேற்றில் கால் வைத்ததல் தான் நாங்கள் சோற்றில் கைவைக்கமுடியும்”
  2. “உழைப்பாளியின் வியர்வையே அமுதம்”
  3. ”உழைப்பாளிகளே பூமியின் கதிரவன்கள்”

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மயிலும் மானும் வனத்திற்கு ………………. தருகின்றன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
Answer:
ஆ) வனப்பு

Question 2.
மிளகாய் வற்றலின் ……………… தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
Answer:
அ) நெடி

Question 3.
அன்னை தான் பெற்ற ………………… சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
Answer:
இ) மழலையின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 4.
‘வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ……………….
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
Answer:
ஆ) வனப்பு + இல்லை

Question 5.
‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………….
அ) வார்ப் எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்பு எனில்
Answer:
இ) வார்ப்பெனில்

நயம் அறிக.

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச்சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.

1. பிரும்மாக்களே – சேர்ப்பவர்களே
2. உடைப்பவனின் – உழவனின்
3. சிகரங்களா – அலைகளா – காடுகளா – பள்ளத்தாக்குகளா – தோட்டங்களா
4. வனப்பில்லை – உயிர்ப்பில்லை

குறு வினா

Question 1.
தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை?
Answer:
அன்பும் பாசமும் தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை ஆகும்.

Question 2.
ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
Answer:
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை .

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

சிறு வினா

Question 1.
சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
(i) நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.

(ii) உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

(iii) தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்து இருக்க வேண்டும்.

(iv) சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.

(v) ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை .

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?
Answer:
நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனித நேயச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒரு வேண்டு கோள் என்னும் கவிதையை எழுதியவர் …………………
அ) தேனரசன்
ஆ) காளமேகப் புலவர்
இ) சுரதா
ஈ) முடியரசன்
Answer:
அ) தேனரசன்

Question 2.
நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் ……………… நாற்றம் வீசவேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு
ஈ) பால் மணம்
Answer:
ஆ) வியர்வை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 3.
உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், …………….. அதில் மணம் வீச வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு
ஈ) பால் மணம்
Answer:
அ) ஈரமண்

Question 4.
தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் …………….. நிறைந்திருக்க வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு பாசம்
ஈ) பால் மணம்
Answer:
இ) அன்பு பாசம்

Question 5.
சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் ………………. கமழ வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு பாசம்
ஈ) பால் மணம்
Answer:
ஈ) பால் மணம்

பொருத்துக.

1. பிரும்மாக்கள் – அழகு
2. நெடி – மகிழ்ச்சி
3. வனப்பு – படைப்பாளர்கள்
4. பூரிப்பு – நாற்றம்
Answer:
1. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
2. நெடி – நாற்றம்
3. வனப்பு – அழகு
4. பூரிப்பு – மகிழ்ச்சி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

குறு வினா

Question 1.
தேனரசன் கவிதைகள் எழுதிய இதழ்கள் யாவை?
Answer:

  1. வானம்பாடி
  2. குயில்
  3. தென்றல்

Question 2.
தேனரசன் எழுதிய கவிதை நூல்கள் யாவை?
Answer:

  1. மண்வாசல்
  2. வெள்ளை ரோஜா
  3. பெய்து பழகிய மேகம்

Question 3.
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் என்று கவிஞர் தேனரசன் குறிப்பிடுவன எவை?
Answer:
ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத் தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் ஆகியன இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் என்று கவிஞர் தேனரசன் குறிப்பிடுகின்றார்.

Question 4.
உழவரின் உருவ வார்ப்பில் நிறைந்து இருக்க வேண்டியவை யாவை?
Answer:
உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

Question 5.
சிறு குழந்தையின் சித்திரத்தில் நிறைந்து இருக்க வேண்டியவை யாவை?
Answer:
சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 6.
ஒரு வேண்டுகோள் கவிதை இடம்பெறும் நூல் எது? அதனை எழுதியவர் யார்?
Answer:
ஒரு வேண்டுகோள் கவிதை இடம் பெறும் நூல் : பெய்து பழகிய மேகம். அதனை எழுதியவர் : கவிஞர் தேனரசன்.

சிறு வினா

Question 1.
கவிஞர் தேனரசன் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  1. கவிஞர் தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
  2. வானம்பாடி, தென்றல், குயில் ஆகிய இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.
  3. இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
  4. படைப்புகள் : மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் முதலிய கவிதை நூல்கள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

தேனரசன்
தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
வானம்பாடி, தென்றல், குயில் ஆகிய இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.
இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
படைப்புகள் : மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் முதலிய கவிதை நூல்கள்.

சொல்லும் பொருளும்

1. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
2. நெடி – நாற்றம்
3. மழலை – குழந்தை
4. வனப்பு – அழகு
5. பூரிப்பு – மகிழ்ச்சி
6. மேனி – உடல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Question 1.
பாடப்பகுதியில் இடம் பெற்ற சொற்களில் பகுபதம் பகாப்பதம் ஆகியவற்றைத் தனித்தனியே தொகுக்க.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 1
Question 2.
உங்கள் வகுப்பு மாணவ – மாணவிகளின் பெயர்களைப் பகுபதம் , பகாப்பதம் என வகைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 2

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ………………
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
Answer:
ஆ) 42

Question 2.
‘எழுதினான்’ என்பது ………………….
அ) பெயர்ப் பகுபதம்
ஆ) வினைப்பகுபதம்
இ) பெயர்ப் பகாப்பதம்
ஈ) வினைப் பகாப்பதம்
Answer:
ஆ) வினைப்பகுபதம்

Question 3.
பெயர்ப் பகுபதம் ………………… வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer:
இ) ஆறு

Question 4.
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு. ……………..
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சந்தி
Answer:
இ) இடைநிலை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

பொருத்துக. 

1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்
2. வினைப்பகுபதம் – மன்
3. பெயர்ப் பகாப்பதம் – நனி
4. வினைப் பகாப்பதம் – பெரியார்

1. பெயர்ப் பகுபதம் – பெரியார்
2. வினைப்பகுபதம் – வாழ்ந்தான்
3. இடைப் பகாப்பதம் – மன்
4. உரிப் பகாப்பதம் – நனி

சரியான பகுபத உறுப்பை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 3
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 4

குறு வினா

Question 1.
ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
Answer:
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும். எ.கா. பூ

Question 2.
பதத்தின் இருவகைகள் யாவை?
Answer:
பகுபதம், பகாப்பதம் என பதம் இருவகைப்படும்.

Question 3.
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
Answer:
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவையாவன : பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

சிறு வினா

Question 1.
விகுதி எவற்றைக் காட்டும்?
Answer:

  1. திணை
  2. பால்
  3. முற்று
  4. எச்சம்

Question 2.
விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா.) வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் +அன் +அன்
வா – பகுதி, இது ‘வ’ எனக் குறுகி இருப்பது விகாரம்.
த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்.
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Question 3.
பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும். அவையாவன:
1. பெயர்பெயர்ப்பகுபதம்
2. இடப்பெயர்ப்பகுபதம்
3. காலப்பெயர்ப்பகுபதம்
4. சினைப்பெயர்ப்பகுபதம்
5. பண்புப்பெயர்ப்பகுபதம்
6. தொழில் பெயர்ப்பகுபதம்

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடங்கள் பேசுக.

கல்வியின் சிறப்பு

வணக்கம். கல்வியின் சிறப்பு பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். இளமையில் கல், கேடில் விழுச்செல்வம் கல்வி, கல்விக் கரையில், கற்பவர் நாள் சில, கற்க கசடற, ஓதுவது ஒழியேல் ஆகியன கல்வியின் அவசியத்தைக் கூறும் பாடல் வரிகளாகும். மனிதனை வேறுபடுத்துவது அவன் கற்ற கல்வியால் தான். பொருளை இழந்தால் சம்பாதிக்கலாம். ஆனால் கல்வியை இழந்தால் மீண்டும் கற்க இயலாது.

அதனால் தான் பருவத்தே பயிர் செய் என்றனர். கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள்?

வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும் .நன்றி.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு

வணக்கம். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றி என்னுடைய கருத்துகளை சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் வேலைக்குச் செல்வதைக் கண்டால் மனம் வேதனை அடைகின்றது. இளமையில் கல் என்ற ஒளவையின் வாக்கு என்னவானது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகளுக்குச் சிறுவயதில் இரத்தசோகை, இளைப்பு, காச நோய் ஆகியன ஏற்படும். படிக்கும் வயதில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம். எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்பது வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடை முறையில் செயல்படுத்த நாம் போராட வேண்டும். நன்றி.

சொல்லக் கேட்டு எழுதுக.

1. இளமைப் பருவத்திலேயே கல்வி கற்க வேண்டும்.
2. கல்வியே அழியாத செல்வம்.
3. கல்வி இல்லாத நாடு விளக்கு இல்லாத வீடு.
4. பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்.
5. நூல்களை ஆராய்ந்து ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களை வகைப்படுத்துக.

நல்லூர், வடை, கேட்டல், முகம், அன்னம், செம்மை, காலை, வருதல், தோகை , பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, சோலை, ஐந்து மணி, விளையாட்டு, புதன்
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 5

அறிந்து பயன்படுத்துவோம்

மூவிடம்
இடம் 3 வகைப்படும். அவை.
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை

Question 1.
தன்னைக் குறிப்பது தன்மை.
Answer:
சான்று : நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.

Question 2.
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
Answer:
சான்று : நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Question 3.
தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.
Answer:
சான்று : அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், அவள், இவை.

சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)

1. உன் பெயர் என்ன?
2. நாம் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.
3. அவை எப்படி ஓடும்.
4. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.
5. அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பின்வரும் தொடர்களில் மூவிடப்பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.

1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
2. இவர்தான் உங்கள் ஆசிரியர்.
3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை .
4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை . நீயே கூறு.
5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 8

கடிதம் எழுதுக.

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையாளருக்குக் கடிதம் எழுதுக.

நூலகம் அமைத்துத் தர வேண்டி மடல்

அனுப்புநர்
ச.முகிலன்,
பாரதிநகர்,
ஈரோடு.

பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்.

வணக்கம். எங்கள் பாரதி நகர் ஈரோட்டின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க எங்கள் பகுதியில் நூலகம் இல்லை . அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறியவும் எங்களால் இயலவில்லை .எனவே எங்கள் அறிவுக் கண்களைத் திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம். நன்றி பல.

இப்படிக்குத் தங்கள் உண்மையுள்ள,
ச.முகிலன்.

நாள் : 03.5.2019
இடம் : ஈரோடு.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

உறைமேல் முகவரி
பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.

மொழியோடு விளையாடு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் 7

1. காலையில் பள்ளி மணி ……………..
2. திரைப்படங்களில் விலங்குகள் ……………….. காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
3. கதிரவன் காலையில் கிழக்கே …………………
4. நாள்தோறும் செய்தித்தாள் ……………… வழக்கம் இருக்க வேண்டும்.
Answer:
1. ஒலிக்கும்
2. நடிக்கும்
3. உதிக்கும்
4. வாசிக்கும்

ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.

1. ……………. புல் மேயும்.
2. …………..சுடும்.
3. ……………பேசும்.
4. …………. பறக்கும்.
5. …………. மணம் வீசும்.
Answer:
1. ஆ
2. தீ
3. கை
4. ஈ
5. பூ

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.

(எ.கா) தா – கொடு
1. தீ ……………….
2. பா …………..
3. கை ……………..
4. வை ……………
5. மை ……………
Answer:
1. நெருப்பு
2. பாடல்
3. தைத்தல்
4. புல்
5. அஞ்சனம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.

ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
(எ.கா.)ஆறு – ஈ ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.

1. விளக்கு – பாடலின் பொருள் விளங்கியது.
அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர்.

2. படி – வாயிற் படியில் அமராதே!
இளமையிலேயே படிக்க வேண்டும்.

3. சொல் – மூத்தோர் சொல் அமுதம்.
தஞ்சை சொல் (நெல்) வளம் மிகுந்தது.

4. கல் – காய்த்த மரம் கல் அடிபடும்.
இளமையில் கல்.

5. மாலை – மாலைநேரத்தில் விளையாட வேண்டும்.
பூமாலை தொடுத்தாள்.

6. இடி – இடி மின்னலுடன் மழை பெய்தது.
மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது.

நிற்க அதற்குத் தக……

கலைச்சொல் அறிவோம்

1. கோடை விடுமுறை – Summer vacation
2. குழந்தைத் தொழிலாளர் – Child Labour
3. பட்டம் – Degree
4. கல்வியறிவு – Literacy
5. நீதி – Morall
6. சீருடை – Uniform
7. வழிகாட்டுதல் – Guidence
8. ஒழுக்க ம் – Dicipline

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer:
ஆ) இரண்டு

Question 2.
பசு என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
அ) ஆ

Question 3.
கொடு என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
ஆ) ஈ

Question 4.
இறைச்சி என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
இ) ஊ

Question 5.
அம்பு என்னும் பொருள் தரும் சொல் …………..
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
ஈ) ஏ

Question 6.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள நெடில்சொற்களின் எண்ணிக்கை
அ) 42
ஆ) 40
இ) 43
ஈ) 2
Answer:
ஆ) 40

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Question 7.
நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர் ………………..
அ) பவணந்தி முனிவர்
ஆ) ஆறுமுக நாவலர்
இ) தொல்காப்பியர்
ஈ) அகத்தியர்
Answer:
அ) பவணந்தி முனிவர்

Question 8.
பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ………………
அ) 6
ஆ) 2
இ) 5
ஈ) 42
Answer:
அ) 6

Question 9.
பகாப் பதத்தின் வகை ……………..
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) ஐந்து
Answer:
ஆ) நான்கு

பொருத்துக.

1. ஐ – சோலை
2.கா – இகழ்ச்சி
3. கூ – பூமி
4. சீ – தலைவன்
Answer:
1. ஐ – தலைவன்
2. கா – சோலை
3. கூ – பூமி
4. சீ – இகழ்ச்சி

குறுவினா

Question 1.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை யாது? அவை உணர்த்தும் பொருள் யாது?
Answer:
நொ, து ஆகிய இரண்டும் ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்கள் ஆகும்.
உணர்த்தும் பொருள் :

  1. நொ – நோய்
  2. து – உண்

Question 2.
பகுபதங்கள் என்றால் என்ன?
Answer:
சிறு சிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் பகுபதங்கள் ஆகும்.

Question 3.
வினைப்பகுபதம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
சான்று : உண்கின்றான் – உண் + கின்று + ஆன்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Question 4.
சந்தி என்பது யாது?
Answer:
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி ஆகும்.

Question 5.
சாரியை என்பது யாது?
Answer:
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை ஆகும்.

சிறு வினா

Question 1.
இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கண முறைப்படி சொற்கள் நான்கு வகைப்படும். அவையாவன:

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

Question 1.
1. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
2. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:

  1. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கச் சொல்லித் தருவேன்.
  2. எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணத்திற்காக, தன்மானம் இழந்த நிலை போக்க அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தருவேன்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
‘பள்ளி மறுதிறப்பு’ சிறுகதையினைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை
சுப்ரபாரதிமணியன் இயற்றிய ‘பள்ளி மறுதிறப்பு’ சிறுகதையில் மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கமாகக் காண்போம். மதிவாணனும் கவினும்

மதிவாணனும் கவினும்
ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கோடைவிடுமுறையில் ஒன்றரை மாதம் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றனர். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. வேலைக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர். கவின் தான் மீண்டும் பள்ளிக்குப் போவதில்லை. வாராவாரம் சம்பளம், திரைப்படம் பார்க்க காசு, பரோட்டா, போண்டா, வீட்டில் யாரும் திட்டுவதில்லை. இந்த மகிழ்ச்சி போதும் என்றான். மதிவாணனும் சற்றே குழம்பினான்.

மதிவாணனின் சிந்தனை
படிக்கின்ற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று மதிவாணன் உள்ளும் கனவுகள் இருந்தன. தொழிலாளியாகவே கடைசி வரைக்கும் இருக்க வேண்டுமா என்பதை நன்கு சிந்தித்தான். எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவரைப் போல உயர வேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தான்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

படிக்காதவரின் நிலை
பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர். அங்கிருந்த சிறுவர்களிடம், இந்தப் பேருந்து நல்லூர் செல்லுமா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் கேட்டார். சிறுவர்கள் எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர். இது கூடப் படிக்கத் தெரியாதா என்றார் பெரியவர்.

அதற்கு ஒருவன் ஏன் உங்களுக்குப் படிக்கத் தெரியாத என்று கேட்டு, அனைவரும் சிரித்தனர். மதிவாணன் அவரிடம் நல்லூர் இது போகாது. போகும் பேருந்து வரும் போது சொல்கின்றேன் என்றான். இதையெல்லாம் பார்த்து கல்வி தான் தலைநிமிரச் செய்யும் என்பதை உணர்ந்து, பள்ளியை நோக்கி நடந்தான் மதிவாணன்.

முடிவுரை
“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதைப் புரிந்து கொண்டு இளமையில் மதிவாணன் கல்வி கற்க விருப்பம் கொண்டான். இன்று கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புக்காக இன்றே கல்வி கற்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

சுப்ரபாரதிமணியன்
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகிய கருத்துகளை மையமாக வைத்து தம் படைப்புகளைப் படைப்பவர். கனவு என்னும் இதழை நடத்தி வருபவர்.

படைப்புகள் : பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை முதலியன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 1.
கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக.
(எ.கா.) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
Answer:

  1. இளமையில் கல்.
  2. கேடில் விழுச்செல்வம் கல்வி.
  3. கற்க கசடற.
  4. ஓதுவது ஒழியேல்!
  5. கல்விக்கு அழகு கசடற மொழிதல்
  6. உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக்
  7. கடலின் பெருமை கடவார்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ………………
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
Answer:
ஆ) காலம் அறிதல்

Question 2.
கல்வியில்லாத ………………….. நாடு
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
Answer:
அ) விளக்கில்லாத

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 3.
‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ………………
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
Answer:
இ) பாரதியார்

Question 4.
‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
Answer:
ஈ) உயர்வு + அடைவோம்

Question 5.
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………..
அ) இவை எல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
Answer:
ஆ) இவையெல்லாம்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. செல்வம் – கல்விச்செல்வம் என்றும் அழியாதது.
2. இளமைப்பருவம் – இளமைப்பருவம் கல்விக்கு உரிய பருவம் ஆகும்.
3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

குறு வினா

Question 1.
மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
எதிர்காலத்தில் பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச்சொல்ல முடியும். ஆனால், மனிதப் பிறவியின் எதிர்காலத்தைக் கூறவே முடியாது. இதுவே மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

Question 2.
கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

Question 3.
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
Answer:
படிக்க வேண்டிய நூல்களை நன்கு ஆழ்ந்து ,ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

சிறு வினா

Question 1.
கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
Answer:

  1. உலகில் எல்லாச் செல்வங்களும் அழிந்துவிடும்.
  2. இருபது இருபத்தைந்தாண்டுக்கு முன் இங்கு இருந்த ஆலமரம் எங்கே என்றால் புயலில் விழுந்துவிட்டது என்போம்.
  3. இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால், மழையால் இடிந்து விட்டது என்பர்.
  4. 10 ஆண்டுக்கு முன் 2 இலட்சம் ரூபாய் வைத்திருந்தவர். இன்று இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்போம்.

எல்லாம் அழியும். ஆனால் கல்வி அப்படியன்று. 10 ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்றவர் இன்று 10ம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கல்வி அழியாதது. வள்ளுவரும் ”கேடில் விழுச்செல்வம் கல்வி …..” என்கின்றார்.

Question 2.
கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
Answer:
கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாதவீடு. விளக்கில்லாதவீட்டில் யார்குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

சிந்தனை வினா

Question 1.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:

  1. உண்மைப் பொருளை விளக்க வேண்டும்.
  2. நன்னெறிப் பாதை காட்ட வேண்டும்.
  3. அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இருக்க வேண்டும்.
  4. எளிமை, தெளிவு ஆகியவை கொண்ட நடையில் இருத்தல் வேண்டும். –
    ஆகியன நல்ல நூலின் இயல்புகளாக நான் கருதுவன ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திருக்குறளனார் என்று அழைக்கப்படுபவர் ……………….
அ) வீ.முனிசாமி
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
அ) வீ.முனிசாமி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூ ல்களை எழுதியவர் …………….
அ) வீ.முனிசாமி
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
அ) வீ.முனிசாமி

Question 3.
உலகில் மிகவும் அருமையானது ……………..
அ) காலம்
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) செல்வம்
Answer:
அ) காலம்

Question 4.
………………… ஓர் ஒளி விளக்கு.
அ) காலம்
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) செல்வம்
Answer:
அ) காலம்

Question 5.
நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்று கூறியவர் ………….
அ) வீ.முனிசாமி
ஆ) திருவள்ளுவர்
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
ஆ) திருவள்ளுவர்

குறுவினா

Question 1.
திருக்குறளார் வீ.முனிசாமி இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  1. வள்ளுவர் உள்ளம்
  2. வள்ளுவர் காட்டிய வழி
  3. திருக்குறளில் நகைச்சுவை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள் விளங்கும் என்பதற்கு திருக்குறளனார் கூறும் ஒப்புமை யாது?
Answer:
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள்விளங்கும் என்பதற்குதிருக்குறளனார் கூறும் ஒப்புமை கத்தரிக்காய், வாழைக்காய், கீரை இவை எல்லாம் பூமிக்கு மேல் விளையும். சில மண்ணுக்குள்ளே இருக்கும் அதை நாம் தான் தோண்டி எடுக்க வேண்டும் என்பதாகும்.

Question 3.
திருக்குறளனாரின் புகழ்பெற்ற நூல் எது?
Answer:
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

Question 4.
பள்ளி பற்றி பாரதியாரின் கருத்து யாது?
Answer:
நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். அதனால் தான் ”பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்றார்.

Question 5.
விளக்கில்லாத வீடு எது?
Answer:
கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு ஆகும்.

Question 6.
கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் யார்?
Answer:
திருவள்ளுவரே கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் ஆவார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 7.
எவை அழியும் என்பதற்குத் திருக்குறளனார் கூறும் உவமைகள் எவை?
Answer:

  1. ஆலமரம்
  2. பெரிய கட்டடம்
  3. இரண்டு இலட்ச ரூபாய் பணம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.2 அழியாச் செல்வம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.2 அழியாச் செல்வம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 1.
கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
Answer:

  1. ஓதுவது ஒழியேல்! – ஔவையார்
  2. கல்விக்கு அழகு கசடற மொழிதல் – அதிவீரராம பாண்டியன்
  3. உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக் கடலின் பெருமை கடவார். – நன்னெறி
  4. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. – திருக்குறள்

Question 2.
கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றினை அறிந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான். வெற்றி பெற்ற மன்னர் உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன? என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.

அதைக் குடிக்காமல் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும் இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது என்றார். இந்த நீரைக்குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றார். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் …………………..
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
Answer:
ஆ) கல்வி

Question 2.
கல்வியைப் போல் ……………… செல்லாத செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
Answer:
அ) விலையில்லாத

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 3.
‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………….
அ) வாய்த்து + ஈயின்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து + தீயின்
ஈ) வாய் + ஈயீன்
Answer:
அ) வாய்த்து + ஈயின்

Question 4.
‘கேடில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) கேடி + இல்லை
ஆ) கே + இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
Answer:
ஈ) கேடு + இல்லை

Question 5.
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) எவன் ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
Answer:
இ) எவனொருவன்

குறுவினா

Question 1.
கல்விச் செல்வத்தின் இயல்புகளாகி நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் பிறரால் கொள்ளப்படாது. கொடுத்தாலும் குறையாது, அரசரால் கவர முடியாது.

சிறுவினா

Question 1.
கல்விச்செல்வம் குறித்த நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

சிந்தனை வினா

Question 1.
கல்விச்செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்? – சிந்தித்து எழுதுக.
Answer:

  1. நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
  2. திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது.
  3. கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.
    – எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ………………
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Question 2.
நாலடியார் …………….. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேல்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 3.
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் ……………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 4.
திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல் …………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Question 5.
விச்சை என்பதன் பொருள் ……………
அ) கல்வி
ஆ) பொருள்
இ) களவு
ஈ) அரசர்
Answer:
அ) கல்வி

சிறுவினா

Question 1.
நாலடியார் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  1. சமண முனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார்.
  2. நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  3. 400 வெண்பாக்களால் ஆனது.
  4. அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்பு கொண்டது.
  5. இது நாலடி நானூறு, வேளாண் வேதம் என்றும் அழைக்கப்படும் நூல்.
  6. திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

சொல்லும் பொருளும்

1. வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்
2. கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
3. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
4. விச்சை – கல்வி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 1.
இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.
Answer:
“பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே!
நீலக் கடலாய் அலங்கரித்தவளே!
கதிரவன் காட்சியில் …. பொன் தகடானவளே!
உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!”

Question 2.
‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது’ என்பதை வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
ஆங்கல வழிக்கல்வி படித்தால் மட்டுமே உயர முடியும் என்றெண்ணிக் கொண்டிருப்போரே! கவனியுங்கள். வாழ வந்த ஆங்கிலேயரைக்கூட விரட்டினோம். ஆனால், ஆங்கில மொழியை விரட்டாமல் அதன் மீது மோகம் கொண்டு அதன் வழியில் கற்க அலைகின்றோம். இது எப்படி இருக்கின்றது தெரியுமா?

தன் தாயைப் புறந்தள்ளிவிட்டு, அயலாம் தாயைப் போற்றுவது போலத்தான். எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு.ஔவையாரும் கம்பரும் சேக்ஸ்பியரும் காந்தியடிகளும் தாகூரும் எப்படிச் சிறந்தனர் தெரியுமா? அனைவரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……………..
அ) மயில்
ஆ) குயில்
இ) கிளி
ஈ) அன்னம்
Answer:
அ) மயில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 2.
பின்வருவனவற்றுள் ‘மலை’யைக் குறிக்கும் சொல
அ) வெற்பு
ஆ) காடு
இ) கழனி
ஈ) புவி
Answer:
அ) வெற்பு

Question 3.
‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது, ……………….
அ) ஏடே + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்
Answer:
இ) ஏடு + எடுத்தேன்

Question 4.
‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்
Answer:
அ) துயின்று + இருந்தார்

Question 5.
என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது …………….
அ) என்று உரைக்கும்
ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும்
ஈ) என்றுரைக்கும்
Answer:
ஈ) என்றுரைக்கும்

பொருத்துக.

1. கழனி – கதிரவன்
2. நிகர் – மேகம்
3. பரிதி – சமம்
4. முகில் – வயல்
Answer:
1. கழனி – வயல்
2. நிகர் – சமம்
3. பரிதி – கதிரவன்
4. முகில் – மேகம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

குறு வினா

Question 1.
பாரதிதாசனின் மனதைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
Answer:

  1. வானம்
  2. நீரோடை
  3. தாமரை
  4. காடு
  5. வயல்
  6. மேகம்
  7. தென்றல்
  8. மயில்
  9. அன்னம்
  10. கதிரவன்

Question 2.
தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்?
Answer:

  1. தமிழ்நாட்டு மக்களின் அறியாமை தூக்கம் களையும்,
  2. வாழ்வில் துன்பங்கள் நீங்கும்,
  3. நஞ்சில் தூய்மை உண்டாகும், வீரம் வரும்.
    – ஆகியவற்றைத் தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகளாகப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்.

சிறு வினா

Question 1.
‘இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை நும் சொந்த நடையில் எழுதுக.
Answer:
பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது. நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர். தென்றல், மயில், அன்னம், கதிரவன். வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை நீங்க இன்பத்தமிழ்க் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும். மனதில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:

  1. எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும்.
  2. பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.
  3. தொன்மையையும் வரலாற்றையும் நன்கு உணரலாம்.
  4. விழுமிய தமிழ்ச்சிந்தனைகளை அறியலாம்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்
அ) பாண்டியன் பரிசு
ஆ) அழகின் சிரிப்பு
இ) பிசிராந்தையார்
ஈ) குடும்பவிளக்கு
Answer:
இ) பிசிராந்தையார்

Question 2.
பின்வருவனவற்றுள் கதிரவனை’க் குறிக்கும் சொல்
அ) நிகர்
ஆ) பரிதி
இ) முகில்
ஈ) கழனி
Answer:
ஆ) பரிதி

Question 3.
பின்வருவனவற்றுள்‘மேகம்’ என்பதைக் குறிக்கும் சொல்
அ) நிகர்
ஆ) பரிதி
இ) முகில்
ஈ) கழனி
Answer:
இ) முகில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 4.
வீரர்களின் தோள்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது
அ) மயில்
ஆ) மேகம்
இ) தாமரை
ஈ) மலை
Answer:
ஈ) மலை

Question 5.
பசுமையான தோகைளை உடையது …………….
அ) தாமரை
ஆ) பெண்கள்
இ) மயில்
ஈ) சோலை
Answer:
இ) மயில்

குறு வினா

Question 1.
என்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது எது?
Answer:
வானம், தன்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது.

Question 2.
பாரதிதாசனிடம் கவி ஓவியமாகத் தங்களைத் தீட்டுமாறு கூறியவை எவை?
Answer:

  1. நீரோடை
  2. தாமரை மலர்கள்

Question 3.
பெண்கள் எதனைக் கவிதையாக எழுதச் சொன்னனர்?
Answer:
பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதச் சொன்னனர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 4.
பாரதிதாசனிடம் வேல் ஏந்திய வீரர்கள் எதனை எழுதுமாறு வேண்டினர்?
Answer:
பாரதிதாசனிடம் வேல் ஏந்திய வீரர்கள் மலை போன்ற தங்களின் தோள்களின் அழகை எழுதுமாறு வேண்டினர்.

Question 5.
பாரதிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு.

சிறு வினா

Question 1.
பாரதிதாசன் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் – சுப்புரத்தினம்
பெற்றோர் – தந்தை – கனகசபை, தாய் – இலக்குமி
பிறப்பு – 1891 ஏப்பிரல் 29ம் நாள், புதுவை
சிறப்புப் பெயர் – பாரதிதாசன், பாவேந்தர், புரட்சிக்கவி.
படைப்புகள் – குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன.
பணி – புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

சொல்லும் பொருளும்

1. எத்தனிக்கும் – முயலும்
2. வெற்பு – மலை
3. கழனி – வயல்
4. நிகர் – சமம்
5. பரிதி – கதிரவன்
6. அன்னதோர் – அப்படி ஒரு
7. கார்முகில் – மழைமேகம்
8. துயின்றிருந்தார்- உறங்கியிருந்தார்
9. கவி – கவிதை, பாடல்
10. சித்திரம் – ஓவியம்
11. நிகர் – சமம், போல
12.இன்னல் – துன்பம்
13. ஆவி – உயிர்