Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்க.

Question 1.
வாய்மை எனப்படுவது ………………
அ) அன்பாகப்பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்
Answer:
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

Question 2.
……………. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
Answer:
இ) பொறாமை உள்ளவன்

Question 3.
‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………
அ) பொரு + செல்வம்
ஆ) பொருட் + செல்வம்
இ) பொருள் + செல்வம்
ஈ) பொரும் + செல்வம்
Answer:
இ) பொருள் + செல்வம்

Question 4.
‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………….
அ) யா + எனின்
ஆ) யாது + தெனின்
இ) யா + தெனின்
ஈ) யாது + எனின்
Answer:
ஈ) யாது + எனின்

Question 5.
யாது + எனின் என்ற சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………….
அ) தன்நெஞ்சு
ஆ) தன்னெஞ்சு
இ) தானெஞ்சு
ஈ) தனெஞ்சு
Answer:
ஆ) தன்னெஞ்சு

Question 6.
தீது + உண்டோ என்ற சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………..
அ) தீதுண்டோ
ஆ) தீது உண்டேத்
இ) தீதிண்டோ
ஈ) தீயுண்டோ
Answer:
அ) தீதுண்டோ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 7.
சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்துக.
விடை
அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
Answer:
1. ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
2. ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
3. இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.

குறு வினா

Question 1.
எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?
Answer:
ஒருவர் தன் மனம் அறிய பொய்சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் மனமே அவரைச் சுடும்.

Question 2.
வாழும் நெறி யாது?
Answer:
ஒருவர் தன் மனத்தில் பொறாமை இல்லாது ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும்.

Question 3.
உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
Answer:
உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர்.

கீழ்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 1
Answer:
1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகை சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார்.

இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்
Answer:
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
முப்பால், பொய்யா மொழி, தெய்வ நூல் போன்ற பிறபெயர்களில் அழைக்கப்படும் நூல்
அ) திருக்குறள்
ஆ) ஏலாதி
இ) திரிகடுகம்
ஈ) ஆசாரக்கோவை
Answer:
அ) திருக்குறள்

Question 2.
திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள்
அ) 133
ஆ) 1330
இ) 70
ஈ) 38
Answer:
ஆ) 1330

Question 3.
திருக்குறள் பகுப்பு
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஒன்பது
ஈ) 133
Answer:
அ) மூன்று

Question 4.
பொருத்துக
1. அழுக்காறு – அ) செல்வம்
2. ஆக்கம் – ஆ) பொறாமை
3. கேடு – இ) பிறர்
4. ஏதிலார் – ஈ) வறுமை

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ

Question 5.
பொருத்துக
1. பூரியார் – அ) இழிந்தவர்
2. வாய்மை – ஆ) சான்றோர்
3. செவ்வியான் – இ) உண்மை
4. தீது – ஈ) குற்றம்
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 6.
தீங்கு தராத சொற்களைச் சொல்லுதல் …………………..
அ) வாய்மை
ஆ) அருள்
இ) அழுக்காறாமை
ஈ) இறைமாட்சி
Answer:
அ) வாய்மை

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒருவர் ……………. பொய் சொல்லக் கூடாது.
2. அவ்விய நெஞ்சத்தான் ………………. செவ்வியான்.
3. தன் குற்றம் காண்பவருடைய வாழ்வில் …………….. இல்லை.
4. சிறந்த செல்வம் ………………
5. தன்னெஞ்சு அறிவது ……………….
Answer:
1. நெஞ்சறிய
2. ஆக்கமும்
3. துன்பம்
4. அருட்செல்வம்
5. பொய்யற்க

குறு வினா:

Question 1.
செவ்வியான் கேடு நினைக்கப்படும் எப்போது?
Answer:
பொறாமை கொண்டவருடைய செல்வம், பொறாமை இல்லாதவருடைய வறுமை சான்றோரால் ஆராயப்படும்.

Question 2.
எப்போது வாழ்வில் துன்பம் இல்லை?
Answer:
பிறருடைய குற்றத்தைக் காண்பது போல தன் குற்றத்தைக் காண்பவருக்குவாழ்வில் துன்பம் இல்லை .

Question 3.
எப்போது புறங் கூறுதல் கூடாது?
Answer:
நேருக்கு நேர் நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாத போது புறங்கூறல் கூடாது.

Question 4.
அருட்செல்வம் , பொருட்செல்வம் குறித்து வள்ளுவர் கூறுவது?
Answer:
1. செல்வங்களுள் சிறந்தது அருட்செல்வம்
2. பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.

சிறு வினா

Question 1.
சிறந்த அரசின் செயல்கள் யாவை?
Answer:
1. பொருள் வரும் வழிகளை அறிதல்.
2. பொருள்களைச் சேர்த்தல்.
3. சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
– ஆகியன சிறந்த அரசின் செயல்கள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சொல்லும் பொருளும்

1. அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை
2. அழுக்காறு – பொறாமை
3. ஆக்கம் – செல்வம்
4. கேடு – வறுமை
5. ஏதிலார் – பிறர்
6. பூரியார் – இழிந்தவர்
7. வாய்மை – உண்மை
8. செவ்வியான் – சான்றோர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

கற்பறை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 1.
ஐகார, ஔகார, மகர, ஆய்தக்குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்தெழுதுக.
Answer:
எடுத்துக்காட்டு :
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …………………
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஆ) ஒன்று

Question 2.
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ………………
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது
Answer:
ஈ) பணம் கிடைத்தது

Question 3.
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………….
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

குறு வினா

Question 1.
ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?
Answer:
ஔ, வௌ என ஔவைகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தன்னுடைய இரண்டு மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும்.

Question 2.
சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Answer:
ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை
முதல் – 1 1/2 மாத்திரை
இடை – 1 மாத்திரை
கடை – 1 மாத்திரை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 3.
மகரக்குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
1. வலம் வந்தான்
2. போன்ம்

மொழியை ஆழ்வோம்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
காட்டு வளமே நாட்டு வளம்!
Answer:
அனைவருக்கும் வணக்கம். காட்டு வளமே நாட்டு வளம்! என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஒரு நாட்டு வளம் எப்படி முடிவு செய்யப்படுகின்றது என்றால், அந்த நாட்டில் உள்ள நீர் வளம், நில வளம், தொழில் வளம் ஆகியவை கொண்டு தான் கணக்கிடப்படுகின்றது. நீர் வளத்திற்குக் காரணம் மழை. மழையினால் மட்டுமே நீர் வளத்தைப் பெருக்க முடியும்.

அந்த மழைக்கு அடிப்படைக் கராணம் காடுகள்தான். காடுகள் இல்லையென்றால் நீர் வளம் நாட்டில் இல்லை. காடுகளும் காட்டுயிரிகளும் நிலவளமாகிய மண்வளத்தை மேம்படுத்துகின்றது.நிலமும் நீரும் பெருகவில்லை என்றால் நாட்டின் தொழில் வளம் கிடையாது. எனவே காட்டு வளமே நாட்டு வளம் என்று கூறி நிறைவு செய்கின்றேன். நன்றி.

Question 2.
காட்டின் பயன்கள்
Answer:
அனைவருக்கும் வணக்கம். காட்டின் பயன்கள் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். காட்டின் பயன்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.அவை பலவாகும்.விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள், ஊர்வன ஆகிய எண்ணற்ற உயிரிகளுக்கு உணவையும் உறைவிடத்தையும் தருவது காடே. உயிர்வளியை அதிகமாக உற்பத்தி செய்து கொடுக்கின்றது.

மழை வளத்தைப் பெருக்குகின்றது. மண்ணைப் பண்படுத்துகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும். உணவுப்பெருக்கம் ஏற்படும். பருவநிலை சீரடையும். மண்ணரிப்பு தடுக்கப்படும். நிலத்தடி நீர் மட்டத்தைப் பெருக்கும். புவி வெப்பமயமாதலைத் தடுக்கும். எனவே காட்டின் பயன் அறிந்து காடுகள் வளர்ப்போம் என்று கூறி நிறைவு செய்கின்றேன்.நன்றி.

அறிந்து பயன்படுத்துவோம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 2

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.

1. மகளிர் × ஆடவர்
2. அரசன் × அரசி
3. பெண் × ஆண்
4. மாணவன் × மாணவி
5. சிறுவன் × சிறுமி
6. தோழி × தோழன்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 3
ஒன்றன் பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 4
ஆண்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 5
ஒன்றன் பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 6
பெண்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 7
பலர்பால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 8
பலவின் பால்

பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.

(எ.கா) : கண்ண கி சிலம்பு அணிந்தான்.
Answer:
கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 9

கடிதம் எழுதுக.

Question 1.
நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
Answer:
நண்பனுக்குக் கடிதம்

23, பெரியார் வீதி,
சேலம் – 3.
10.6.2019.

ஆருயிர் நண்பா !
உன் அன்பு நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த நலத்துடன் இருக்கின்றோம். நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?எங்கள் பள்ளியில் கடந்த வாரம் மதுரைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்.

அங்குச் சென்ற அனுபவத்தை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மதுரை என்றால் இனிமை என்பதைப் பாடநூலில் தான் படித்திருக்கின்றேன். அங்குச் சென்றபோது தான் அந்த இனிமையை உணர்ந்தேன்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு எவ்வளவு நுணுக்கமான கலைநுட்பம் தெரியுமா? காணக் கண் கோடி வேண்டும் நண்பா! குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டுகளில் அங்குச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.பின்னர் நாயக்கர் மகாலுக்குச் சென்றோம். அங்குள்ள ஒவ்வொரு தூ ணும் கதைகள் பல சொல்லும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

அங்குள்ள நாட்டிய அரங்கு மிகவும் பொலிவுடன் உள்ளது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் சென்றோம்.அங்குள்ள நூலகத்தைக் கண்டு வியந்து தமிழ்ச்சங்கமே! இதுவோ? என்று நினைத்தேன். அடுத்த வாரம் நேரில் வரும் போது இன்னும் விளக்கமாகக் கூறுகின்றேன். அன்புடன் முடிக்கின்றேன்.வாழ்க வளமுடன்.

இப்படிக்கு
உயிர் நண்பன்,
ப. இளங்கதிர்

உறைமேல் முகவரி
பெறுநர்
ச.கதிரவன்,
34,புதுக் காலனி,

மொழியோடு விளையாடு

வட்டத்திலுள்ள எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 10/>

1. புதையல்
2. இயல்
3. கயல்
4. புயல்
5. கடல்
6. தையல்
7. புல்
8. கல்
9. இல்லை
10. இயல்பு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் 11
(எ.கா) : வாழை + காய் – வாழைக்காய்

1. குருவி + கூடு – குருவிக்கூடு
2. விளையாட்டு + திடல் – விளையாட்டுத் திடல்
3. தயிர் + சோறு – தயிர்ச் சோறு
4. கொய்யா + பழம் – கொய்யாப் பழம்
5. விளையாட்டு + போட்டி – விளையாட்டுப்போட்டி
6. அவரை + காய் – அவரைக்காய்

விடுகதைக்கு விடை எழுதுக.

Question 1.
மரம் விட்டு மரம் தரவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு; புலி அல்ல கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?……………..
Answer:
அணில்

Question 2.
என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது.
முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன்.
இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன்.
மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்? ……………..
Answer:
குதிரை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 3.
வெள்ளையாய் இருப்பேன். பால் அல்ல.
மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல
தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?……………..
Answer:
கொக்கு

கலைச்சொல் அறிவோம்

1. தீவு – Island
2. இயற்கை வளம் – Nature Resource
3. வன விலங்குகள் – Wild Animals
4. வனப் பாதுகாவலர் – Forest Conservator
5. உவமை – Parable
6. காடு – Jungle
7. வனவியல் – Forestry
8. பல்லுயிர்மண்ட லம் – Bio Diversity

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம் …………………
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாகரக்குறுக்கம்

Question 2.
சொல்லுக்கு முதலில் மட்டுமே குறுகும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Question 3.
வையம், சமையல், பறவை ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாகரக்குறுக்கம்

Question 4.
ஔவையார், வௌவால் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 5.
சொல்லின் இடையிலும் கடையிலும் வராத குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்

Question 6.
மகரக்குறுக்கத்தின் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஈ) கால்

Question 7.
ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஈ) கால்

Question 8.
மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
அ) அரை

Question 9.
உயிர்க்குறில் பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஆ) ஒன்று

Question 10.
உயிர்க்நெடில் பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஈ) இரண்டு

Question 11.
வலம் வந்தான், போன்ம், மருண்ம் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
இ) மகரக்குறுக்கம்

Question 12.
முஃடீது, கஃறீது ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஔகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஈ) ஆய்தக்குறுக்கம்

Question 13.
பொருத்துக.
1. ஐகாரக்குறுக்கம் – அ) ஔவையார்,வௌவால்
2. ஔகாரக்குறுக்கம் – ஆ) வலம் வந்தான்
3. மகரக்குறுக்கம் – இ) முஃடீது , கஃறீது
4. ஆய்தக்குறுக்கம் – ஈ) சமையல் , பறவை

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 14.
ஆய்தக்குறுக்கம் இடம் பெறாத சொல்
அ) அஃது
ஆ) முஃடீது
இ) கஃறீது
ஈ) பஃறுளி
Answer:
அ) அஃது

Question 15.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
1. ஐகாரக்குறுக்கம் – ஒன்றரை மற்றும் ஒரு மாத்திரை
2. ஔகாரக்குறுக்கம் – இரண்டு மாத்திரை
3. மகரக்குறுக்கம் – கால் மாத்திரை
4. ஆய்தக்குறுக்கம் – கால் மாத்திரை
Answer:
2. ஔகாரக்குறுக்கம் – இரண்டு மாத்திரை

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. சில இடங்களில் தன்னுடைய மாத்திரையளவு குறைந்து ஒலிப்பவை ………………..
2. ‘ஐ’ என்ற எழுத்து பெறும் மாத்திரையளவு …………………
3. அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு……………….
4. ………………. சொல்லின் இடையிலும் இறுதியிலும் வாராது.
5. ஆய்தம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது …………………
Answer:
1. குறுக்கங்கள்
2. இரண்டு
3. அரை
4. ஔகாரம்
5. ஆய்தக்குறுக்கம்.

குறுவினா

Question 1.
ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஒளகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சான்று: ஔவையார் , வௌவால்

Question 2.
ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஐகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதல் , இடை , கடை ஆகிய இடங்களில் குறுகும்.
சான்று: சைவம் , சமையல்

Question 3.
மகரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
மகரம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.
சான்று: வலம் வந்தான்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 4.
ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
சான்று: கற்றீது.

 

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.4 இந்திய வனமகன் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.4 இந்திய வனமகன்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

Question 1.
ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
Answer:
முன்னுரை
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜாதவ்பயேங். ‘இந்திய வனமகன்’ என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார். அதனை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

ரம் வளர்க்கும் எண்ணம்
1979ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் பாம்புகள் கரை ஒதுங்கின.சில பாம்புகள் இறந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இக்காட்சி ஜாதவ்பயேங்கை மிகவும் பாதித்தது. ஊர்ப் பெரியவர்கள் ‘தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம்’ என்றனர். அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. ஊர் மக்களிடம் தீவில் மரம் வளர்க்கலாம் என்று அவர் கூறிய போது, அதனை யாரும் ஏற்கவில்லை.

விடா முயற்சி
ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைக்கத் தொடங்கினார். நன்கு பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை. வனத்துறை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை நன்கு வளர ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் இத்தீவில் வளரவில்லை .

அசாம் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படி மண்புழுவுடன் சிவப்புக் கட்டெறும்பை அத்தீவு மண்ணில் விட்டார். சிறிது சிறிதாக மண்ணின் தன்மை மாறி பசும்புல்லும் மரங்களும் வளரத் தொடங்கின.

புதிய காடு உருவானது
மரங்களில் விளைந்த பழங்களை உண்டு, அதன் கொட்டைகளை விதையாகச் சேமித்து வைத்து விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். மழை பெய்யாத காலங்களில் பானை பெரிய மூங்கில் துணை கொண்டு சொட்டு சொட்டாக நீரினை மரங்களுக்குவிட்டார். மரங்கள் பெருகி வளர்ந்து, அத் தீவு 7 பெருங்காடானது.யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலிகள் முதலிய காட்டு விலங்குகள் வரத்தொடங்கின.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 இந்திய வனமகன்

முடிவுரை
ஜாதவ்பயேங் போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை காக்க வேண்டும். இந்திய வனமகன் வழியில் நாமும் செல்வோம்.

மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம்!காட்டினை உருவாக்குவோம்!

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.3 விலங்குகள் உலகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.3 விலங்குகள் உலகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 1.
விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.
Answer:
1. பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி
(எ.கா.) : புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
2. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
3. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
4. நொண்டிக் கழுதைக்குச் சருக்கினது சாக்காம்.
5. வீட்டில் எலி, வெளியில் புலி.
6. நாயப் பொறந்தாலும் நல்லாப் பொறக்கனும்.
7. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசைன.
8. ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராசா.
9. தூங்கணாங் குருவிக்குக் குரங்கு புத்தி சொல்லுச்சாம்.

Question 2.
காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது
அ) காது
ஆ) தந்தம்
இ) கண்
ஈ) கால்நகம்
Answer:
ஆ) தந்தம்

Question 2.
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியகரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தக் குளம்
Answer:
இ) முண்டந்துறை

Question 3.
‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) காடு + ஆற
ஆ) காட்டு + ஆற
இ) காட் + ஆறு
ஈ) காட் + டாறு
Answer:
அ) காடு + ஆறு

Question 4.
‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) அனைத்து + துண்ணி
ஆ) அனை + உண்ணி
இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி
Answer:
ஈ) அனைத்து + உண்ணி

Question 5.
‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………….
அ) நேரமாகி
ஆ) நேராகி
இ) நேரம் ஆகி
ஈ) நேர் ஆகி
Answer:
அ) நேரமாகி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 6.
‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………
அ) வேட்டை ஆடிய
ஆ) வேட்டையாடிய
இ) வேட்டாடி
ஈ) வேடாடி
Answer:
ஆ) வேட்டையாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு …………………
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ………………. யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ……………..
Answer:
1. புலி
2. பெண்
3. அடர்ந்த முடிகள்

குறு வினா

Question 1.
காடு – வரையறு.
Answer:
(i) மனிதர்களின் முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடி, கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல உயிர்களின் வாழ்விடம் காடாகும்.
(ii) இடையிடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.
(iii) மனிதனின் முதல் இருப்பிடம் காடு.

Question 2.
யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகிறது ஏன்?
Answer:

  1. யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை.
  2. யானைகள் செல்லும் வழிப்பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடும்போது, அவர்களைத் தாக்குகின்றன.
  3. மேலும் யானைக்குக் கண்பார்வைக் குறைவு, கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ளது.

Question 3.
கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகின்றது.

Question 4.
மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:

  1. புள்ளிமான்
  2. சருகுமான்
  3. மிளாமான்
  4. வெளிமான்

சிறு வினா

Question 1.
புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையன.

(ii) ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குச் செல்லாது.

(iii) கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் வரைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும்.

(iv) அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து அனுப்பிவிடும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

சிந்தனை வினா

Question 1.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.
Answer:
1. மழை வளம் குறையும்.
2. மண் தரிசு நிலமாக மாறிவிடும்.
3. காட்டுயிரிகள் வாழ்விடம் அழியும்.
4. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.
5. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
6. மண் வளம் சேர்க்கும் நுண்ணுயிரிகள் அழியும்.
7. மண்ண ரிப்பு ஏற்படும்.
8. நோய் தீர்க்கும் மூலிகைகள் அழியும்.
9. பருவநிலைமாறும்.
10. புவி வெப்பமயமாகும்.
11. நிலத்தடி நீர்க்குறையும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்த இடம் …………………
அ) மேட்டுப்பாளையம்
ஆ) குன்னூர்
இ) ஊட்டி
ஈ) கோத்தகிரி
Answer:
அ) மேட்டுப்பாளையம்

Question 2.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ………………..
அ) ஈரோடு
ஆ) கோவை
இ) நாமக்கல்
ஈ) சேலம்
Answer:
ஆ) கோவை

Question 3.
தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் அமைந்துள்ள இடம் ………………..
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியகரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தக் குளம்
Answer:
இ) முண்டந்துறை

Question 4.
உலகில் உள்ள யானை வகைகள்
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer:
ஆ) இரண்டு

Question 5.
ஆண் , பெண் ஆகிய இரண்டுக்கும் தந்தம் கொண்ட யானை வகை ………………..
அ) ஆப்ரிக்க யானை
ஆ) ஆசிய யானை
இ) அமெரிக்க யானை
ஈ) தாய்லாந்து யானை
Answer:
அ) ஆப்ரிக்க யானை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 6.
நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல் , இலை தழைகளை உணவாகக் கொள்ளும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
ஈ) யானை

Question 7.
கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ள விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
ஈ) யானை

Question 8.
நன்கு வளர்ந்த கரடியின் எடை
அ) 160 கி
ஆ) 100 கி
இ) 106 கி
ஈ) 601 கி
Answer:
அ) 160 கி

Question 9.
தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த உணவையும் வேட்டையாடாத விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி

Question 10.
பண்புள்ள விலங்கு என்றழைக்கப்படும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி

Question 11.
இரவில் மட்டும் வேட்டையாடும் தன்மை கொண்ட விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி

Question 12.
அழகில் சிறந்த மான் வகை
அ) புள்ளிமான்
ஆ) சருகுமான்
இ) மிளாமான்
ஈ) வெளிமான்
Answer:
அ) புள்ளிமான்

Question 13.
இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசனாகக் குறிப்பிடும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) சிங்கம்
Answer:
இ) புலி

Question 14.
‘நினைவாற்றல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………………….
அ) நினை + ஆற்றல்
ஆ) நினை + வாற்றல்
இ) நினைவு + ஆற்றல்
ஈ) நினைவு + வாற்றல்
Answer:
இ) நினைவு + ஆற்றல்

‘கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்திய வனக்கல்லூரி அமைந்த மாவட்டம் …………………
2. காட்டுவிலங்குகளின் உறைவிடம் ……………….
3. மனிதனின் முதல் இருப்பிடம் …………………
4. முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு …………………….
5. கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வனவியல் சார்ந்த படிப்புகள் ……………………, ……………
6. மிகுந்த நினைவாற்றலைக் கொண்ட விலங்கு ………………….
7. பாசம் நிறைந்த விலங்கு ………………….
8. யானைக்குக் கடிப்பதற்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு …………………..
9. …………… ஒரு அனைத்துண்ணி.
10. காட்டு அரசன் ……………….
11. விஞ்ஞானிகள் என்ற பிறமொழிச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் …………………….
Answer:
1. கோவை
2. முண்டந்துறை புலிகள் காப்பகம்
3. காடு
4. 895 சதுரமீட்டர்
5. இளநிலை வனவியல், முதுநிலை வனவியல் –
6. யானை
7. யானை
8. 65 லிட்டர்
9. கரடி
10. சிங்கம்
11. அறிவியலறிஞர் (அல்லது) அறிவியலாளர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

குறுவினா

Question 1.
ஆதினி எங்குச் சென்றாள்? எதற்காகச் சென்றாள்?
Answer:
(i) ஆதினி தன் அம்மாவுடன் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குச் சென்றாள்.

(ii) காட்டு விலங்குகள் பற்றிய புகைப்படத்தொகுப்பிற்குத் தேவையான புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றாள்.

Question 2.
முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்து வன அலுவலர் கூறியது யாது?
Answer:

  1. தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் : முண்டந்துறை புலிகள் காப்பகம்.
  2. 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
  3. யானை, புலி, சிறுத்தை , மான் , கரடி , காட்டுமாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.
    – என்று முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்து வன அலுவலர் கூறினார்.

Question 3.
முண்டந்துறை புலிகள் காப்பகத்தல் வாழும் அரிய விலங்குகள் யாவை?
Answer:
1. யானை
2. புலி
3. சிறுத்தை
4. மான்
5. கரடி
6. காட்டுமாடு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 4.
உலகில் உள்ள யானை வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. அவையாவன:

  1. ஆசிய யானை
  2. ஆப்பிரிக்க யானை

Question 5.
ஆசிய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
1. ஆசிய யானை
ஆண்யானைக்குத் தந்தம் உண்டு, பெண் யானைக்குத் தந்தம் இல்லை.

2. ஆப்பிரிக்க யானை
ஆண், பெண் யானைகள் இரண்டுக்குமே தந்தம் உண்டு.

Question 6.
ஒரு காட்டு வளத்தைக் குறிக்கும் குறியீடு எது?
Answer:
புலியே ஒரு காட்டு வளத்தைக் குறிக்கும் குறியீடாகும்.

Question 7.
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
Answer:
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது.

Question 8.
வனவியல் சார்ந்த படிப்புகள் யாவை? அவை எங்குள்ளன?
Answer:
(i) வனவியல் சார்ந்த படிப்புகள் இளநிலை வனவியல் , முதுநிலை வனவியல் ஆகும்.
(ii) கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அவை கற்பிக்கப்படுகின்றன.

Question 9.
புலியைப் பண்புள்ள விலங்கு எனக் கூறக் காரணம் யாது?
Answer:
தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த உணவையும் வேட்டையாடாத விலங்கு. எனவே புலியைப் பண்புள்ள விலங்கு என் கூறுகின்றனர்.

Question 10.
புலியைக் காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறக் காரணம் யாது?
Answer:
(i) நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத் திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தைவிட புலியே உயர்ந்தது.
(ii) எனவே, புலியைக் காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Question 11.
அழகில் சிறந்த மான் வகை எது?
Answer:
நம் நாட்டில் உள்ள புள்ளி மானே அழகில் சிறந்ததாகும்.

Question 12.
சிங்கங்களின் வகைகளைக் குறிப்பிடுக.
Answer:

  1. ஆசியச் சிங்கம்
  2. ஆப்பிரிகச் சிங்கம்

Question 13.
யானைகள் அடிக்கடி இடம்பெயரக் காரணம் யாது?
Answer:
யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 14.
சிங்கம் குறித்து நீவிர் அறிந்த செய்திகள் யாவை?
Answer:
(i) ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கம் உள்ளன.
(ii) இந்தியாவில் குஜராத்தில் ‘கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

சிறு வினா

Question 1.
யானைகள் குறித்து நீவிர் அறிந்ததை எழுதுக.
Answer:
(i) யானைகள் எப்போதும் கூட்டமாகவே வாழும்.
(ii) கூட்டத்திற்குப் பெண் யானை தலைமை தாங்கும்.
(iii) தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.
(iv) நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவும், 60 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும்.
(v) மிகுந்த நினைவாற்றலும் பாசமும் கொண்ட விலங்கு.
(vi) கண்பார்வைக் குறைவு, மோப்ப ஆற்றல் மிகுதி.

Question 2.
கரடி குறித்து நீவிர் அறிந்த செய்திகள் யாவை?
Answer:
(i) நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்
(ii) பழங்கள் மற்றும் தேன் உண்பதற்காக கரடி மரம் ஏறும்.

(iii) பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகின்றது.

(iv) தன் அடர்ந்த முடிகள் மூலம் எதிரிகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 1.
உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:
பலாமரம்

  1. நெடுநெடுனு வளர்ந்த மரம், நேர்த்தியான பலாமரம்
  2. முக்கனியில் இராண்டாம் கனி தரு மரம்
  3. பெரும்பழம் சுமந்ததால் உன்மேனி இளைத்ததோ?
  4. பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும்
  5. கொடுக்க குறையாத அமுதசுரபி மரம் பலாமரம்

Question 2.
உங்கள் பகுதியிலுள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
வேப்ப மரம், புளிய மரம், அரசமரம், ஆல மரம், வாழை மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம், பலா மரம், தேக்கு மரம், சந்தன மரம், அத்தி மரம், வாகை மரம், புங்க மரம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது …………………
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
Answer:
ஆ) கோலிக்குண்டு

Question 2.
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………….
அ) ஒட்டிய பழங்கள் .
ஆ) சூடான பழங்கள்
இ) வேகவைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
Answer:
அ) ஒட்டிய பழங்கள்

Question 3.
‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………..
அ) பெயர் + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர் + அறியா
Answer:
இ) பெயர் + அறியா

Question 4.
‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………….
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
Answer:
ஈ) மனம் + இல்லை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 5.
‘நேற்று + இரவு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………..
அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
Answer:
ஆ) நேற்றிரவு

குறுவினா

Question 1.
நாவல் மரம் எத்தனை தலைமுறையாக அங்கு நின்றிருந்தது?
Answer:
நாவல் மரம் இரண்டு தலைமுறையாக அங்கு நின்றிருந்தது.

Question 2.
சிறுவர்களுக்கு நாவல் பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
Answer:

  1. காக்கை
  2. குருவி
  3. மைனா
  4. பெயரறியாப் பவைகள்
  5. அணில்
  6. காற்று

சிறுவினா

Question 1.
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
1. ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.

2. அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

3. பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.

4. காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.

5. தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.

6. இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.

7. அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில்தான்.

சிந்தனை வினா

Question 1.
பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
Answer:
1. பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.

2. குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.

3. அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்த கவிஞர்.
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

Question 2.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர்
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

Question 3.
‘பெருவாழ்வு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………..
அ) பெரு + வாழ்வு
ஆ) பெ + ருவாழ்வு
இ) பெருமை + வாழ்வு
ஈ) பேர் + வாழ்வு
Answer:
இ) பெருமை + வாழ்வு

Question 4.
ஊரின் வடகோடியில் இருந்த மரம் ………………..
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 5.
தாத்தா நட்டு வைத்த மரம்
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 6.
பொருத்துக.
1. பரவசம் – அ) துக்கம் விசாரித்ததல்
2. துஷ்டி கேட்டல் – ஆ) விரவி
3. பரவி – இ) எல்லை
4. கோடி – ஈ) மகிழ்ச்சிப்பெருக்கு

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ

Question 7.
‘செங்காய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………………….
அ) செம்மை + காய்
ஆ) செம் + காய்
இ) செங் + காய்
ஈ) செ + காய்
Answer:
அ) செம்மை + காய்

Question 8.
இரவில் படையெடுத்து வரும் பழந்தின்னி …………………
அ) வௌவால் கூட்டம்
ஆ) காக்கைக் கூட்டம்
இ) குருவிக் கூட்டம்
ஈ) மைனாக் கூட்டம்
Answer:
அ) வௌவால் கூட்டம்

Question 9.
நாவற்பழங்களை உதிர்த்துவிடுவனவற்றுள் பறவைகள் அல்லாத ஒன்று ……………….
அ) காக்கை
ஆ) குருவி
இ) அணில்
ஈ) மைனா
Answer:
இ) அணில்

Question 10.
பெருவாழ்வு வாழ்ந்த மரம் ……………
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 11.
நேற்று இரவுப் பேய்க்காற்றில் வேறோடு சாய்ந்தது …………….
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Ans;
இ) நாவல் மரம்

Question 12.
குன்றுகளின் நடுவே மாமலை போன்றது ……………..
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 13.
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே ……………………..
2. …………….. பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன.
3. ………………. – பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
4. தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் …………………… பொறுக்குகின்றனர்
5. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் – என்ற நூலை இயற்றியவர் ………………….
6. குன்றுகளின் நடுவே மாமலை போல நின்றது. …………………

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Answer:
1. மரங்கள்
2. மரங்கள்
3. நாவல்
4. நாவல்பழம்
5. ராஜமார்த்தாண்டன்
6. மாமரம்

குறு வினா

Question 1.
நாவல் மரம் தோற்றம் குறித்துக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.

Question 2.
சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கக் காரணம் யாது?
Answer:
நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

Question 3.
எப்போது நாவில் நீர் ஊறும்?
Answer:
பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.

Question 4.
சிறுவர் கூட்டம் அலைமோதக் காரணம் யாது?
Answer:
காக்கை, குருவி,மைனா , பெயரறியாப் பவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.

Question 5.
தங்கைகள் யாருக்காக நாவல் பழம் பொறுக்குகின்றனர்?
Answer:
தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 6.
இரவு நேரத்தில் நாவல்மரத்தை நோக்கிப் படைஎடுத்தது எது? ஏன்?
Answer:
இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.

Question 7.
ஊர்மக்கள் எதனைப் பார்க்கச் சென்றனர்?
Answer:
பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.

Question 8.
கவிஞர் மனதில் என்றும் நிற்பது எது?
Answer:
குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் என்றும் நிற்கிறது.

சிறு வினா:

Question 1.
கவிஞர் ராஜமார்த்தாண்டன் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : இராசமார்த்தாண்டன்
திறன்கள் : இதழாளர், கவிதைத் திறனாய்வாளர்.
பரிசு : ராஜமார்த்தாண்டன் கவிதைகள் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர்.
படைப்புகள் : ராஜமார்த்தாண்டன் கவிதைகள், அப்படியே நிற்கட்டும் அந்த மரம், சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்துள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

சொல்லும் பொருளும்

1. பரவசம் – மகிழ்ச்சிப்பெருக்கு
2. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்ததல்
3. தாண்டி – கடந்து
4. பழந்தின்னி – பழம் உண்ணும்
5. பரவி – விரவி
6. வடகோடி – வட எல்லை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.1 காடு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.1 காடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 1.
காடு என்னும் தலைப்பில் அமைந்த கிளிக்கண்ணி’ பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
பின்வரும் கிளிக்கண்ணிப் பாடலைப் பாடி மகிழ்க.
Answer:
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பித்தலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ ! – கிளியே
நாளில் மறப்பாரடீ. ……….- பாரதியார்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாழை, கன்றை ………………….
அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது
Answer:
அ) ஈன்றது

Question 2.
‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்
Answer:
ஆ) காடு + எல்லாம்

Question 3.
‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………
அ) கிழங்கு எடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
Answer:
ஆ) கிழங்கெடுக்கும்

நயம் அறிக

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு 1

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு 2

குறு வினா

Question 1.
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
Answer:
காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக்கவிஞர் சுரதாகுறிப்பிடுகிறார்.

Question 2.
காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
Answer:

  1. காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும்.
  2. காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
  3. எல்லோரும் சேர்ந்துமகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
  4. காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

சிறு வினா

Question 1.
‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  1. பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
  2. நரிக் கூட்டம் ஊளையிடும்.
  3. மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
  4. இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

சிந்தனை வினா

Question 1.
காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறக் காரணம் என்ன?
Answer:
(i) பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன.

(ii) மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் மற்றும் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால், காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Question 2.
உவமைக்கவிஞர் என்றழைக்கப்படக் கூடிய கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Question 3.
தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் முதலிய நூல்களைப் படைத்த கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 4.
கார்த்திகை விளக்குகள் போன்று இருந்தவை
அ) காடு
ஆ) மலர்கள்
இ) காய்கனி
ஈ) மயில்
Answer:
ஆ) மலர்கள்

Question 5.
பொருத்துக.
1. அதிமதுரம் – அ) மகிழ்ந்திட
2. களித்திட – ஆ) மிகுந்த சுவை
3. கொம்பு – இ) பெற்று
4. ஈன்று – ஈ) கிளை

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 6.
பொருத்துக.
1. மயில்கள் – அ) கிழங்குகளைத் தோண்டி உண்ணும்
2. பன்றிகள் – ஆ) கலக்கமடையும்
3. பாம்புகள் – இ) புதிய நடை போடும்
4. யானைகள் – ஈ) நடனமாடும்

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ

Question 7.
…………………. குயில் கூவுமடி! பாடலடியில் இடம்பெறும் தகுந்த சொல்லால் நிரப்புக.
அ) கருங்
ஆ) பூங்
இ) மணிக்
ஈ) சிறு
Answer:
ஆ) பூங்

Question 8.
புதுநடை போட்டது எது?
அ) பாம்பு
ஆ) பன்றி
இ) குரங்கு
ஈ) யானை
Answer:
ஈ) யானை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ………………, ………………… நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை.
2. உவமைகளைப் பயன்படுத்தி கவிதை எழுதுவதில் வல்லவர் …………………
3. காடு என்னும் கவிதை அமைந்த நூல் …………………
4. சுரதாவின் கவிதைகள் என்ற நூலில் காடு என்னும் கவிதை அமைந்த பகுதி ……………..
5. காடு என்ற கவிதை அமைந்த பாவகை ……………………
6. நரிக்கூட்டம் ……………..
Answer:
1. காடும் கடலும் .
2. சுரதா
3. சுரதாவின் கவிதைகள்
4. இயற்கை எழில்
5. கிளிக்கண்ணி
6. ஊளையிடும்

குறு வினா

Question 1.
சுரதா என்பதன் பெயர்க்காரணம் யாது?
Answer:
இராசகோபாலன் பாரதிதாசன் மீது பற்றுக்கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் எனமாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

Question 2.
கவிஞர் சுரதாவை ‘உவமைக்கவிஞர்’ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
உவமைகளைப் பயன்படுத்தி கவிதை எழுதுவதில் வல்லவர் என்பதால் சுரதா ‘உவமைக்கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 3.
சுரதாவின் படைப்புகள் யாவை?
Answer:

  1. தேன்மழை
  2. துறைமுகம்
  3. அமுதும் தேனும்

Question 4.
கிளிக்கண்ணி என்னும் பாவகை குறித்து எழுதுக.
Answer:
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் கிளிக்கண்ணி ஆகும்.

Question 5.
‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ எனக் அறிஞர் கூறக் காரணம் யாது?
Answer:
ஒரு நாட்டின் வளம் , அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகின்றது. அதனால் தான் ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என அறிஞர் கூறுகின்றனர்.

Question 6.
‘காடு’ பாடலில் பறவைகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  1. பச்சை நிறமுடைய மயில்கள் நடனமாடும்.
  2. பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும்.

Question 7.
இயற்கைத் தங்குமிடம் எது?
Answer:
இயற்கைத் தங்குமிடம் : காடு

Question 8.
எங்கும் திரியுமடீ! – இதில் ‘திரிந்தவை’ எவை?
Answer:
சிங்கம், புலி, கரடி, சிறுத்தை .

சிறு வினா

Question 1.
சுரதா – குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : இராசகோபாலன்
பிறப்பு : 23.11.1921
சிறப்புப்பெயர் : உவமைக்கவிஞர்
சுரதா – பெயர்க் காரணம் : பாரதிதாசன் மீது பற்றுக்கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே ‘சுரதா’ என்பதாகும்.
படைப்புகள் : 1. தேன்மழை 2. துறைமுகம் 3.அமுதும் தேனும் முதலியன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 2.
‘காடு’ என்னும் கவிதையில் இடம் பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
1. குரங்கு
2. கிளி
3. மயில்
4. பன்றி
5. பாம்பு
6. நரி
7. யானை
8. குயில்
9. சிங்கம்
10. புலி
11.கரடி
12. சிறுத்தை

Question 3.
காட்டைக் குறிக்கும் வேறுபெயர்கள் யாவை?
Answer:
கா, கால், கான், கானகம், அடவி, அரண், புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை , விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.

Question 4.
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
Answer:
தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

சொல்லும் பொருளும்

ஈன்று – பெற்று
கொம்பு – கிளை
அதிமதுரம் – மிகுந்த சுவை
களித்திட – மகிழ்ந்திட
நச்சரவம் – விடமுள்ள பாம்பு
விடுதி – தங்கும் இடம்
தீபம் – ஒளி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 1.
ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள், அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்தெழுதுங்கள்.
Answer:
எண்ணுப்பெயர்கள் :
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து.

குற்றியலுகரச் சொற்கள் :
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து.

Question 2.
குற்றியலுகர எண்ணுப்பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
Answer:
வன்தொடர் குற்றியலுகரம் – மூன்று, எட்டு, பத்து
மென் தொடர் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது
உயிர்த் தொடர் குற்றியலுகரம் – ஆறு

Question 3.
குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.
(எ.கா) ஒன்று – 1 + 1/2 + 1/2 = 2
Answer:
இரண்டு – 1 + 1 + 1/2 + 1/2 = 3
மூன்று – 2 + 1/2 + 1/2 = 3
நான்கு – 2 + 1/2 + 1/2 = 3
ஐந்து – 2 + 1/2 + 1/2 = 3
ஆறு – 2 + 1/2 = 2 1/2
ஏழு – 2 + 1 = 3
எட்டு – 1 + 1/2 + 1/2 = 2
ஒன்ப து – 1 + 1/2 + 1 + 1/2 = 3
பத்து – 1 + 1/2 + 1/2 = 2

Question 4.
கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.
Answer:
பாகு, வாகு,
பாடு, சாடு, ஓடு, விடு,
காசு, வீசு, பேசு,
வாது, கேது, சாது, மாது,
வறு, சேறு, செறு,
வது,வடு, பொது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 1

பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

1 பசு, விடு, ஆறு, கரு
2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
3. ஆறு , மாசு, பாகு, அது
4. அரசு, எய்து, மூழ்கு,மார்பு
5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு
Answer:
1. கரு
2. பஞ்சு
3. அது
4. அரசு
5. எஃகு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

குறு வினா

Question 1.
‘குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
Answer:
குற்றியலுகரம் – குறுமை + இயல் + உகரம்
தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

Question 2.
குற்றியலிகரம் என்றால் என்ன?
Answer:
முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.

மொழியை ஆழ்வோம்

கேட்க

Question 1.
தமிழின் சிறப்பைப் பற்றிய அறிஞர்களின் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்க.
Answer:
பாரதியாரின் சொற்பொழிவுச் செய்தி
தமிழின் சிறப்பை விளக்கும் வண்ணம் காந்தியடிகளிடம் பாரதி நடத்திய கடித உரையாடல் ஒன்றைத் தனது சொற்பொழிவில் எடுத்துரைத்தார்.

காந்தியடிகளின் சொற்பொழிவை நான் கேட்க நேர்ந்தது. வெள்ளையனே வெளியேறு என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். அவருடைய சொற்பொழிவைப் பற்றி நான் ஒரு மடல் எழுதினேன். அதில் மகாத்மாவே நேற்றைய சொற்பொழிவில், வெள்ளையனே வெளியேறு என்ற பேச்சு அருமை.

ஆனால் ஒரு வருத்தம்.வெள்ளையனை வெளியேறச் சொல்லி , தங்கள் சொற்பொழிவு இந்தியிலோ குஜராத்தியிலோ அமையாமல் ஆங்கிலத்தில் இருந்தது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது என்று எழுதியிருந்தேன்.

அதற்கு காந்தியார் மறுமடலில், நான் ஆங்கிலத்தில் பேசியதை நீங்கள் மடலில் குறிப்பிடும் போது ஏன் நீங்களும் ஆங்கிலத்தில் எனக்கு மடல் எழுதினீர் என்றார்.அதற்கு நான், யாருடைய மனமும் புண்படும் படியான செய்தியைப் பேசுவதாக இருந்தாலும், எழுதுவதாக இருந்தாலும் என்னுடைய தாய்மொழியாகிய தமிழைப் பயன்படுத்த மாட்டேன் என்று மடல் எழுதினேன் என்றார்.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
நான் அறிந்த பழமொழிகள்
Answer:
தமிழன்னையின் தாழ்பணிந்து வணக்கங்கள் பலசொல்லி என்னுரையை ஆரம்பம் செய்கின்றேன். நான் அறிந்தபழமொழிகள் பற்றிச் சில நிமிடங்கள் பேசுகின்றேன். பழமொழி என்பது என்ன? நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகள் பழமொழி ஆகும். அவை அனுபவ மொழிகள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

வாழ்க்கையை வளப்படுத்துவன. அவற்றின் வழிநம் எண்ணங்களையும் வாழக்கைப் பாதையையும் முடிவு செய்யலாம. யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே, இக்கதைக்கு அக்கரை பச்சை, ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும், ஆலும் வேலும் பல்லுக்குறுதிநாளும் இரண்டும் சொல்லுக்குறுதி, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள், அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் ஆகியன நான் அறிந்த பழமொழிகள் ஆகும்.

இவை போல பல்லாயிரக்கணக்கான பழமொழிகள் நம் நாட்டில் உள்ளன. அதனை அறிந்து பயன்படுத்துவோம்.நன்றி. வணக்கம்.

கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.

கோதை கவிதையைப் படித்தாள்.
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 2

படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 3
உயர்திணை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 4
அஃறிணை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 5
உயர்திணை

கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.

வயல் , முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 6

கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

தாய்மொழிப் பற்று
(முன்னுரை – மொழி பற்றிய விளக்கம் – தாய்மொழி – தாய்மொழிப் பற்று – தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன் வரலாறு – நமது கடமை – முடிவுரை)

முன்னுரை
‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை’ என்பது சான்றோர் பெருமக்கள் பலரின் வாக்காகும். நம்மைப் பெற்ற தாயைவிட சிறந்ததொரு தெய்வம் கிடையாது என்பதால் தான் தாய்மொழி’ என்று அழைத்தனர்.தாய்மொழியின் மீது பற்றுதலோடு இருக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.

மொழி பற்றிய விளக்கம்
நமது எண்ணங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளவும், நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுவது மொழியாகும். மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் நாகரிக உயர்வுக்கும் அடிப்படையாக அமைவது மொழியாகும்.

தாய்மொழிப் பற்று
குழந்தைக்குத் தாய் முதன் முதலில் சொல்லித் தரும் மொழியே தாய்மொழி. குழந்தைகளுக்குத் தாய்மொழி இயல்பாகவே வரும்.கனவிலும் நனவிலும் தாய்மொழியே இயல்பாக அமையும்.அவரவர் தாய்மொழி மீது தணியாத பற்று கொள்ள வேண்டும்.

தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர்
இன்றைய காலத்தில் தாய்மொழியில் பேசவும் படிக்கவும் பலர் தயங்குகின்றனர். இது பெற்ற தாயைப் புறந்தள்ளி வைப்பது போன்றதாகும். எண்ணற்ற உலகம் போற்றும் சான்றோர்கள் தத்தம் தாய்மொழியிலேயே செயல்களைச் செய்து உயர்ந்துள்ளனர்.

பாரதியார் , காந்தியடிகள் , இரவீந்திர நாத் தாகூர் எனப் பலரும் பன்மொழி அறிந்திருந்த போதும், சிறந்த உலகம் போற்றும் படைப்புகளைத் தம் தாய்மொழியிலேயே தந்தனர்.சந்திரபோஸ் தன் மகன் ஜெகதீஸ் சந்திரபோஸைத் தாய்மொழி கற்பிக்கும் பள்ளியிலேயே படிக்க வைத்தார். அவர் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த அறிவியல் அறிஞரானர்.

சாதுவன் வரலாறு
ஆதிரையின் கணவன் சாதுவன் வணிகம் செய்ய கப்பற் பயணம் செய்கின்றான் பெருங்காற்றால் கப்பல் கவிழ்ந்து விடுகின்றது. சாதுவன் பிழைத்து நாகர்கள் வாழும் தீவை அடைகின்றான். அவர்கள் மனித மாமிசம் உண்பவர்கள். சாதுவனைத் தின்ன நினைக்கின்றனர். ஆனால் சாதுவன், நாகர்கள் பேசும் மொழியைப் பேசுகின்றான். நாகர்கள் சாதுவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். தாய்மொழியே எதையும் மாற்றும்.

நமது கடமை
(i) அந்நிய மொழி மோகம் கொண்டு அலையாமல் தாய்மொழியின் மீது அளவற்ற பற்றுதல் வைக்கவேண்டும்.

(ii) தாய்மொழி வழிக் கல்வி பெறுதலே சிறப்பு என்பதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

(iii) கல்லூரிக் கல்வி வரைத் தாய்மொழியிலேயே பயில வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

முடிவுரை
ஆங்கில வழிக்கல்வி மூலம் நாம் நம்மை இழந்து கொண்டு இருக்கின்றோம். நமது பண்பாடு, கலாச்சாரத்தை மீட்டுக் கொண்டுவரத் தாய்மொழிப் பற்றுடன் தாய்மொழில் பயில்வது இன்றைய காலத்தில் அவசியமாகும்.

மொழியோடு விளையாடு

தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

இருதிணை – உயர்திணை, அஃறிணை.
முக்கனி – மா, பலா, வாழை,
முத்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்,
நாற்றிசை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,
ஐவகைநிலம் – குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை,
அறுசுவை – இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு,

கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 7
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 8

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 9
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் 10

இருபொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

1. அரசுக்கு தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.

2. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது.

3. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை.

4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.

5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் சென்றனர்.
குழந்தை மெதுவாக நட என்போம்.

6. நீதி மன்றத்தில் கொடுப்பது வழக்கு.
‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு வழக்கு.

கலைச்சொல் அறிவோம்

1. மரபு – Tradition
2. மொழியியல் – Linguistics
3. ஒலியியல் – Phonology
4. இதழியல் – Journalism
5. ஊடகம் – Media
6. பொம்மலாட்டம் – Puppetry
7. எழுத்திலக்க ணம் – Orthography
8. உரையாடல் – Dialogue

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
பொருத்துக.
1. நெடில் தொடர் – அ) எஃகு, அஃது
2. ஆய்தத் தொடர் – ஆ) அரசு, ஒன்பது, கயிறு
3. உயிர்த் தொடர் – இ) பாகு, மாசு, பாடு, காது
4. வன்தொடர் – ஈ) பாக்கு, பேச்சு, பாட்டு

அ) 1-அ, 2- ஈ, 3-இ, 4-ஆ
ஆ) 1-ஈ, 2-ஆ, 3-இ, 4-அ
இ) 1- இ, 2-அ, 3-ஆ, 4-ஈ
ஈ) 1- அ, 2-இ, 3-ஆ, 4-ஈ
Answer:
இ) 1- இ, 2-அ, 3-ஆ, 4-ஈ

Question 2.
குற்றியலுகரத்தின் வகைகள்
அ) ஆறு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) இரண்டு
Answer:
அ) ஆறு

Question 3.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) உயிரெழுத்து – 12
ஆ) மெய்யெழுத்து – 18
இ) சார்பெழுத்து – 10
ஈ) தமிழ் எழுத்து – 5
Answer:
ஈ) தமிழ் எழுத்து – 5

Question 4.
குற்றியலுகரம் பெறும் மாத்திரை அளவு
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) அரை
ஈ) கால்
Answer:
இ) அரை

Question 5.
குற்றியலிகரம் பெறும் மாத்திரை அளவு
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) அரை
ஈ) கால்
Answer:
இ) அரை

Question 6.
குற்றியலிகரம் பயின்று வந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க.
அ) எஃகு
ஆ) கயிறு
இ) பற்று
ஈ) கொக்கியாது
Answer:
ஈ) கொக்கியாது

Question 7.
பின்வரும் சான்றுகளில் முற்றியலுகரம் அல்லாததைத் தேர்ந்தெடுக்க.
அ) புகு
ஆ) பசு
இ) பந்து
ஈ) ஏழு
Answer:
இ) பந்து

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 8.
மென் தொடர்க் குற்றியலுகரச் சான்றினைத் தேர்வு செய்க.
அ) எஃகு
ஆ) காது
இ) எய்து
ஈ) மஞ்சு
Answer:
ஈ) மஞ்சு

Question 9.
இடைத் தொடர்க் குற்றியலுகரச் சான்றினைத் தேர்வு செய்க.
அ) எஃகு
ஆ) காது
இ) எய்து
ஈ) மஞ்சு
Answer:
இ) எய்து

Question 10.
தோப்பியாது, கேண்மியா- ஆகிய சொற்கள் …………….. க்குச் சான்று.
அ) குற்றியலிகரம்
ஆ) நெடில் தொடர் குற்றியலுகரம்
இ) முற்றியலுகரம்
ஈ) குற்றியலுகரம்
Answer:
அ) குற்றியலிகரம்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் …………………… உகரம்_
2. முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் …………………….. எனப்படும்.
3. தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ………………. என்பர்.
4. குறில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அசைச் சொல் …………….
5. நெடில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அசைச்சொல் ……………………
6. குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அசைச் சொல் …………………..
7. ஆய்த எழுத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் அசைச் சொல் …………………..
8. சார்பெழுத்து, ……………….. வகைப்படும்.
9. குற்றிலுகரத்தின் வகைகள் …………………….
10. …………………. என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச்சொற்கள் இல்லை.
11. ………….., ………………., …………… ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

Answer:
1. குற்றியலுகரம்
2. குற்றியலிகரம்
3. முற்றியலுகரம்
4. கரம்
5. கான்
6. காரம்
7. கேனம்
8. பத்து
9. ஆறு
10. ‘வ்’
11. சு, டு, று

குறுவினா

Question 1.
குற்றியலுகரத்திற்குச் சான்று தருக.
Answer:
காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு.

Question 2.
முற்றியலுகரத்திற்குச் சான்று தருக.
Answer:
புகு, பசு, விடு, அது, விடு, வறு.

Question 3.
குற்றியலிகரத்திற்குச் சான்று தருக.
Answer:
கொக்கியாது, தோப்பியாது, நாடியாது, கேண்மியா, சென்மியா.

Question 4.
முற்றியலுகரம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
எ.கா. புகு, பசு, விடு, அது, விடு, வறு.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 5.
முதலெழுத்துகள் யாவை?
Answer:
உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்.

Question 6.
சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சார்பெழுத்து பத்து வகைப்படும்.
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. ஐகாரக்குறுக்கம்
6. ஔகாரக்குறுக்கம்
7. மகரக்குறுக்கம்
8. குற்றியலிகரம்
9. குற்றியலுகரம்
10. ஆய்தக்குறுக்கம்

சிறுவினா

Question 1.
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?அவை யாவை?
Answer:
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
1. நெடில் தொடர் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
3. உயிர்த் தொடர் குற்றியலுகரம்
4. வன் தொடர் குற்றியலுகரம்
5. மென் தொடர் குற்றியலுகரம்
6. இடைத் தொடர் குற்றியலுகரம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.4 சொலவடைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.4 சொலவடைகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.4 சொலவடைகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.4 சொலவடைகள்

Question 1.
உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
Answer:
1. வீட்டுக்கு வீடு வாசற் படி.
2. வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்.
3. அடிச்சு வளக்காத புள்ளயும் ஒடிச்சு வளக்காத முருங்கையும் உருப்படாது.
4. எறச்ச கிணறு ஊறும்.
5. நாய் வித்த காசு கொலக்கவா செய்யும்.
6. ஊராரு புள்ளய ஊட்டி வளத்தா தன்புள்ள தன்னால வளரும்.
7. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
8. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
9. காணி சோம்பல் , கோடி கேடு.
10. மானேண்ணா புள்ளி கொறயுமா? மயிலேண்ணா எறகு உதிறுமா?

Question 2.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக
(எ.கா) குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான்.
Answer:
1. எறும்பு ஊரக் கல்லும் தேயும் :
மாணவர்களிடம் ஆசிரியர் எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல தீய பழக்கங்களின் கொடுமையினைக் கூறி மனமாற்றம் அடையச் செய்வார்.

2. சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
கற்பனையில் மிதந்து இருப்பவர்கள் சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா? என்பதை உணர வேண்டும்.

3. அதிர அடிச்சா உதிர விளையும் :
அதிர அடிச்சா உதிர விளையும் என்பது போல வாழ்வில் முன்னேற தொடர் முயற்சி செய்தால் போதும்.

4. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தான் தெரியும் :
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தான் தெரியும் என்பது போல உழைப்பவருக்குத் தான் பணத்தின் அருமை தெரியும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.4 சொலவடைகள்

5. பாடிப்பாடி குத்தினாலும் பதறு அரிசி ஆகுமா?
தீயவன் கோடி ரூபாயைக் கோவில் உண்டியலில் போடுவது பாடிப்பாடி குத்தினாலும் பதறு அரிசி ஆகுமா? என்பது போலப் புண்ணியம் கிடைக்குமா?

பாடநூல் மதிப்பீட்டு வினா

பாடப்பகுதி பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.

‘ஆளுக்கு ஒரு வேலை’

முன்னுரை
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் ‘ஆளுக்கு ஒரு வேலை’ என்னும் பொம்மலாட்டக் கதை நிகழ்வைச் சிறுகதை வடிவில் காண்போம்.

பையனின் பிடிவாதமும் பெற்றோர் அறிவுரையும்
அம்மா, அப்பா, பையன் என சிறுகுடும்பம் ஒன்றுள்ளது. அக்குடும்பத்தில் உள்ள பையன் ஒழுங்காகப் பள்ளிக் கூடம் செல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டே இருப்பான். யார் அறிவுரை கூறினாலும் கேட்காத பிடிவாத குணம் கொண்டவன். அவனது பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியாது. ஒருநாள் அப்பா அந்தப்பையனிடம், இப்பொழுது நீ படிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது, பள்ளிக்கூடம் போய் படி’ என்றார். அம்மாவும், படிக்கவில்லையென்றால் யாரும்
மதிக்கமாட்டார்கள்’ என்றார். அவன் வேண்டா வெறுப்பாகப் பள்ளிக்கூடம் சென்றான்.
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.4 சொலவடைகள் 1

விளையாட அழைத்தல்
வழக்கம் போலவே பள்ளிக் கூடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கின்றான். விளையாட யாராவது வருவார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எறும்பு ஒன்று வந்தது. அதனை விளையாடக் கூப்பிட்டான். ஆனால் அது தன் குழந்தைகளுக்குத் தீனி கொடுக்க வேண்டும். அரிசி, தவிடு சேகரிக்க வேண்டும். உனக்குத் தான் வேலை இல்லை என்றது. பிறகு தேனீ , பொதிமாடு, ஆமை, முயல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாடக் கூப்பிட்டான்.அவனுக்குப் புத்தி புகட்டும் வண்ணம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவை விளையாட மறுத்து விட்டன.
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.4 சொலவடைகள் 2

மனமாற்றம்
ஈரமான குட்டிச் சுவர் மீது அவன் அமர்ந்தான். சுவர் இடிந்து, அதிலிருந்த பூச்சி, எறும்பு, வண்டு ஆகியன ‘உனக்குத் தான் வேலை இல்லை, நாங்கள் சேர்த்த பொருளை எல்லாம் உடைத்து விட்டாயே!’ என்றுச் சொல்லி அவனைக் கடித்தன. மனம் மாறிய பையன் தன் அம்மாவிடம், ‘உலகத்தில் ஈ, எறும்பு கூட சும்மா இல்லாமல் வேலை செய்கின்றன. படிப்பது தான் என் வேலை என்பதைப் புரிந்து கொண்டேன். இனி ஒழுங்காகப் பள்ளிக்குச்
செல்கின்றேன்’ என்றான்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.4 சொலவடைகள்

முடிவுரை
‘ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை உண்டு. மாணக்கர்களுக்குப் படிப்பது மட்டும் தான் நம் வேலை’ என்பதை இக்கதையின் மூலம் நாம் அறியமுடிகின்றது.
கதை உணர்த்தும் நீதி : படி ! முதற்படி! அதுவே வாழ்க்கைப் படி!

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Question 1.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடர்களை எழுதி வருக.
Answer:
(எ.கா.) பேச்சுமொழி – அம்மா பசிக்கிது எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி – அம்மா பசிக்கின்றது. எனக்குச் சோறு வேண்டும்.

1. பேச்சுமொழி – வூட்டுக்கு போகனும்.
எழுத்துமொழி – வீட்டிற்குப் போக வேண்டும்.

2. பேச்சுமொழி – வவுறு நிறையா சாப்புடு
எழுத்துமொழி – வயிறு நிறைய சாப்பிடு.

3. பேச்சுமொழி – இன்னிக்கு காத்தால வாங்கிட்டு வந்தே
எழுத்துமொழி – இன்றைக்குக் காலையில் வாங்கி வந்தேன்.

4. பேச்சுமொழி – தண்ணி கொண்டா
எழுத்துமொழி – தண்ணீர் கொண்டு வா.

Question 2.
பேசும் போது சிலநேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவது உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்த வழக்குச் சொற்களையும் எழுதுக.
Answer:
(எ.கா) சொல்லு – சொல், நில்லு – நில், வந்தியா – வந்தாயா?, சாப்டியா – சாப்பிட்டாயா?
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மொழியின் முதல்நிலை பேசுதல் …………………. ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
Answer:
ஆ) கேட்டல்

Question 2.
ஒலியின் வரிவடிவம் …………… ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
Answer:
ஆ) எழுத்து

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Question 3.
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று …………………
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
Answer:
இ) தெலுங்கு

Question 4.
பேச்சுமொழியை …………………… என்றும் கூறுவர்
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
Answer:
ஆ) உலக

சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கேற்ப மாறுகிறது.
2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
4. எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத் தாழ்வு அவசியம்.
Answer:
1. சரி
2. சரி
3. சரி
4. தவறு
5. சரி

ஊடகங்களை வகைப்படுத்துக.

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் 4

குறு வினா

Question 1.
மொழின் இருவடிவங்கள் யாவை?
Answer:

  1. பேச்சுமொழி
  2. எழுத்துமொழி

Question 2.
பேச்சுமொழி என்றால் என்ன?
Answer:
வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும்.

Question 3.
வட்டாரமொழி எனப்படுவது யாது?
Answer:
இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

சிறு வினா

Question 1.
பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் 3

Question 2.
கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
Answer:
(i) ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.

(ii) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.

(iii) அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே ‘கிளைமொழி’ என்பர்.

(iv) கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழி ஆகும்.

சிந்தனை வினா

Question 1.
இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
Answer:
(i) இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். இலக்கியங்கள் தாம் தோன்றிய காலச் சூழலைக் காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

(ii) வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுவதாலும் நீதிநெறிகளை முன்வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பேசுவதும் கேட்பதும் மொழியின் ……………….. நிலை
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
அ) முதல்

Question 2.
வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது ………………. ஆகும்.
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
ஆ) பேச்சுமொழி

Question 3.
கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது ………………..
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்துமொழி

Question 4.
எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் …………… நிலை
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

Question 5.
நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க உதவுவது
அ) எழுத்து மொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்து மொழி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Question 6.
மனிதனின் சிந்தனை காலம் கடந்தும் வாழ்வதற்குக் காரணம்
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்துமொழி

Question 7.
மொழியின் உயிர் நாடியாக விளங்குவது
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
ஆ) பேச்சுமொழி

Question 8.
பேச்சுமொழியில் ‘குழந்தையை நல்லாக் கவனிங்க என்று கூறும்போது ‘கவனி என்னும் சொல்தரும் பொருள்
அ) பேணுதல்
ஆ) கவனித்துச்செல்
இ) பாதுகாப்புப் பொருள்
ஈ) பாருங்கள்
Answer:
அ) பேணுதல்

Question 9.
‘நான் பறவையைப் பார்த்தேன் – இத்தொடர் ‘பறவையைப் பார்த்தது யார்?’ என்ற வினாவாக அமையும் போது அழுத்தம் கொடுக்கவேண்டிய சொல் எது?
அ) பறவை
ஆ) நான்
இ) பார்த்தது
ஈ) யார்
Answer:
ஆ) நான்

Question 10.
மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள்……….. என்பர்.
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) வட்டார மொழி
Answer:
ஈ) வட்டார மொழி

Question 11.
பொருந்தாதவற்றைத் தேர்ந்தேடுக்க.
அ) தமிழ் – கிளை மொழி
ஆ) கன்னடம் – கிளை மொழி
இ) மலையாளம் – கிளை மொழி
ஈ) தெலுங்கு – கிளை மொழி
Answer:
அ) தமிழ் – கிளை மொழி

Question 12.
பொருத்துக
1. தமிழ் – அ) இரட்டை வழக்கு
2. கன்னடம் – ஆ) நல்லாச் சாப்ட்டான்
3. வட்டார மொழி – இ) கீது
4. பேச்சு வழக்கு – ஈ) கிளை மொழி

அ) 1- அ, 2 – ஈ, 3-இ, 4-ஆ
ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4- அ
இ) 1- ஈ, 2 – இ, 3-அ, 4-ஆ
ஈ) 1- அ, 2-இ, 3-ஆ. 4-ஈ
Answer:
அ) 1- அ, 2 – ஈ, 3-இ, 4-ஆ

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. உலக வழக்கு , செய்யுள் வழக்கு பற்றிக் குறிப்பிடுபவர் ………………..
2. இரட்டை வழக்கு மொழி ………………..
3. எழுத்துமொழியில் பெரும்பாலும் ………………. பேணப்படுகின்றது.
4. ஒருமொழி உயிர்ப்போடு வாழ …………………….. யும், காலம் கடந்து வாழ்வதற்கு ……………….. யும் தேவைப்படுகின்றன.
5. ‘எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்’ என்று பாடியவர் ………………….
Answer:
1. தொல்காப்பியர்
2. தமிழ்
3. மொழித்தூய்மை
4. பேச்சுமொழி, எழுத்துமொழி
5. பாவேந்தர் பாரதிதாசன்.

குறுவினா

Question 1.
இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி ஆகும்.
சான்று : தமிழ் மொழி

Question 2.
குழந்தைகளுக்குத் தாய்மொழியும் பிறமொழியும் எவ்வாறு அறிமுகமாகின்றன?
Answer:
(i) கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.

(ii) படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் குழந்தைகளுக்குப் பிறமொழிகள் அறிமுகமாகிறது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Question 3.
பேச்சுமொழி, எழுத்துமொழி என்பத்ை தொல்காப்பியர் எச்சொற்களால் குறிப்பிடுகிறார்?
Answer:

  1. பேச்சுமொழி – உலக வழக்கு,
  2. எழுத்துமொழி – செய்யுள் வழக்கு

Question 4.
தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் யாவை?
Answer:

  1. கன்னடம்,
  2. தெலுங்கு,
  3. மலையாளம்

Question 5.
பேச்சுமொழி, எழுத்து மொழி என்னும் இரு கூறுகளையும் கொண்ட மொழி எது?
Answer:
தமிழ் மொழி.

Question 6.
பழமையும் புதுமையும் நிறைந்து சிறந்த மொழி எது?
Answer:
தமிழ் மொழி.

Question 7.
மொழி என்பது யாது?
Answer:
தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி என்பர்.

Question 8.
பேச்சுமொழியின் சிறப்புக்கூறுகள் யாவை?
Answer:
பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.

Question 9.
ஊடகங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:

  1. வானொலி
  2. தொலைக்காட்சி
  3. நாளேடுகள்

Question 10.
திருத்தமான தமிழை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும்?
Answer:
திருத்தமான தமிழையே ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டும்

சிறு வினா

Question 1.
பேச்சு மொழி, எழுத்துமொழி, வட்டார வழக்கு ஆகியவற்றை விளக்கி சான்று தருக.
Answer:
பேச்சு மொழி : வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும். உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக்
கூறுகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

சான்று : குழந்தையை நல்லாக் கவனிங்க.

எழுத்துமொழி : பேச்சு மொழிக்கு நாம் தந்த வடிவமே எழுத்துமொழி – கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழி. ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெற எழுத்து மொழியே காரணம்.

சான்று : நன்றாகச் சாப்பிட்டான்.

வட்டார வழக்கு : இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே
மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டாரமொழி என்பர்.

சான்று : ‘இருக்கிறது’ என்ற சொல்லை இருக்கு’, ‘கீது’ என வழங்குவது.

நெடு வினா

Question 1.
பேச்சுமொழியில் சொற்பொருள் வேறுபாடுகள் குறித்து எழுதுக.
Answer:
(i) பேசப்படும் சூழலைப் பொறுத்து பேச்சுமொழியில் பொருள் வேறுபடும்.

(ii) எடுத்துக்காட்டாகக் ‘குழந்தையை நல்லாக் கவனிங்க’ என்று கூறும்போது ‘கவனி’ என்னும் சொல் பேணுதல் என்னும் பொருளைத் தருகின்றது. ‘நில்’, ‘செல்’, கவனி’ என்பதில் கவனி’ என்னும் சொல் கவனித்துச் செல் என்னும் பாதுகாப்புப் பொருளைத் தருகின்றது.

(iii) ஒலிப்பதன் ஏற்ற இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும்.

(iv) எடுத்துக்காட்டாக என்னால் போக முடியாது’ என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும் போது மறுப்பையும், மென்மையாக ஒலிக்கும் போது இயலாமையை உணர்த்துகின்றது.

(v) தொடரில் எச்சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்ப பேச்சுமொழியின் சொல் வேறுபடுகின்றது.

(vi) எடுத்துக்காட்டாக ‘நான் பறவையைப் பார்த்தேன்’ என்னும் தொடரில் ‘நான்’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், பறவையைப் பார்த்தது யார்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.

(vii) ‘பறவையை’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நீ எதைப் பார்த்தாய்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.

(viii) ‘பார்த்தேன்’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நீ பறவையை என்ன செய்தாய்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 1.
தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றி எழுதுக.
Answer:
தமிழ் இலக்கியங்கள் தோன்ற உதவிய வள்ளல்களைத் தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் எனலாம்.
(i) அதியன் (ஔவைக்கு உதவியவன்)
(ii) யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (ஐங்குறு நூறுதொகுப்பித்தவன்)
(iii) பூரிக்கோ (குநற்தொகையைத் தொகுப்பித்தவன்)
(iv) பன்னாடு தந்த மாறன் வழுதி (நற்றிணையைத் தொகுப்பித்தவன்)
(v) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி (அகநானூறு தொகுப்பித்தவன்)
(vi) சடையப்ப வள்ளல் (கம்பராமாயணம் எழுத உதவியவர்)
(vii) சீதக்காதி, அபுல் காசிம் (சீறாப்புராணம் எழுத உதவியவர்)
(viii) சந்திரன் சுவர்க்கி (நளவெண்பா எழுத உதவியவர்)

Question 2.
தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
1. கீழ்க்க ணக்கு
2. மேல்கணக்கு
3. அறஇலக்கியம்
4. பெருங்காப்பியம்
5. சிறு காப்பியம்
6. சிறுகதை
7. மரபுக்கவிதை
8. புதுக்கவிதை
9. புதினம்
10. நாட்டுப்புற இலக்கியம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ……………
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி
Answer:
இ) பரணி

Question 2.
வானில் ……………….._கூட்டம் திரண்டால் மழை பொழியும்
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
Answer:
ஆ) முகில்

Question 3.
‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பார்த்து எழுதக்கிடைப்பது ………………
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
Answer:
ஈ) இரண்டு + அல்ல

Question 4.
‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பார்த்து எழுதக்கிடைப்பது ……………..
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
Answer:
அ) தந்து + உதவும்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 5.
ஒப்புமை+ இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்புஇல்லாத
Answer:
இ) ஒப்புமையில்லாத

குறுவினா

Question 1.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:

  1. தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.
  2. சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.
  3. தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

Question 2.
‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
Answer:
(i) முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
(ii) புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

சிறுவினா

Question 1.
தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
(i) பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
(ii) பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகக் காரணம் யாது?
Answer:

  1. சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.
  2. கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின.
  3.  தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.
  4. குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.
  5. எனவே, தமிழில் அறஇலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
ஆ) பரணி

Question 2.
பொருத்துக.
1. பகைவரை வென்றதைப் பாடுவது – அ) பரிபாடல்
2. இசைப்பாடல் – ஆ) பரணி
3. வான்புகழ் கொண்டது – இ) சங்க இலக்கியங்கள்
4. அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்டது – ஈ) திருக்குறள்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 3.
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 4.
தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 5.
தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்ற கவிஞர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 6.
முல்லைக்குத் தேர் தந்து புகழ்பெற்றவன் ………………
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
Answer:
அ) வேள்பாரி

Question 7.
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ……………..
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
Answer:
ஆ) குமணன்

Question 8.
இசைப்பாடல் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
அ) பரிபாடல்

Question 9.
அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்ட இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
இ) சங்க இலக்கியங்கள்

Question 10.
வான்புகழ் கொண்ட இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 11.
தானியக் கதிருக்குக் கூறப்பட்ட உவமை
அ) கனி
ஆ) தென்றல்
இ) பொன்
ஈ) தேன்
Answer:
இ) பொன்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒன்றல்ல இரண்டல்ல பாடலின் ஆசிரியர் …………………….
2. தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமின்றி …………………… வளமும் …………………… வளமும் நிரம்பியது.
3. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ………………….. மிக்கவர்களாக விளங்கினர்.
4. ‘கவிச்சொல்லுக்கு’ என்ற சொல்லில் ‘கவி’ என்பதன் பொருள் ……………………..
5. முல்லைக்குத் தேர் கொடுத்தான் ……………………..
Answer:
1. உடுமலை நாராயண கவி
2. பொருள், அருள்
3. கொடைத்திறன்
4. புலவன்
5. வேள்பாரி

குறு வினா

Question 1.
”வான்முகிலினும் புகழ்படைத்த உபகாரி” என்ற பாடலடியில் இடம் பெறும் ‘முகில்’ ‘உபகாரி’ ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:
1. முகில் – மேகம்
2. உபகாரி – வள்ளல்

Question 2.
தமிழ்நாட்டிலுள்ள வளங்கள் யாவை?
Answer:

  1. நில வளம்
  2. நீர் வளம்
  3. பொருள் வளம்
  4. அருள் வளம்

Question 3.
தமிழ்மொழியிலுள்ள வளங்கள் யாவை?
Answer:

  1. இலக்கிய வளம்
  2. இலக்கண வளம்

Question 4.
தமிழகத்தில் கொடைத்திறன் மிக்கவர்களாகத் திகழ்ந்தவர்கள் யாவர்?
Answer:

  1. மன்னர்கள்
  2. வள்ளல்கள் மழை

Question 5.
மேகத்தை விடப் புகழ்பெற்றவன் யார்? அவன் செயல் யாது?
Answer:
(i) மழை மேகத்தை விடப் புகழ்பெற்றவன் : வள்ளல் வேள்பாரி.
(ii) அவன் செயல் : முல்லைக் கொடி படர்வதற்குத்தன் விலை உயர்ந்த தேரைக் கொடுத்தல்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 6.
எங்குத் தேன் மணம் கமழும்?
Answer:
தமிழகத்தில் வீசும் தென்றல் காற்றில் தேன் மணம் கமழும்.

Question 7.
நன்செய் நிலம் என்றால் என்ன?
Answer:
ஆற்றுநீர், குளத்துநீர், கிணற்றுநீர் ஆகிய நீர்வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத்தொகுதி நன்செய் நிலம் எனப்படுகின்றது.

Question 8.
நன்செய் நிலப்பயிர்கள் யாவை?
Answer:
நெல், வாழை, கரும்பு.

சிறு வினா:

Question 1.
உடுமலை நாராயண கவி – குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : நாராயணசாமி
காலம் : 25.9.1899 – 23.5.1981
சிறப்புப்பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
பணி : தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
சிறப்புகள் : கலைமாமணி பட்டம், 31.12.2008ல் இந்திய அஞ்சல் துறை இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. உடுமலைப் பேட்டையில் சிலை மற்றும் மணிமண்டபத்தைத் தமிழக அரசு நிறுவியுள்ளது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

சொல்லும் பொருளும்

1. ஒப்புமை – இணை
2. அற்புதம் – விந்தை
3. முகில் – மேகம்
4. உபகாரி – வள்ளல்
5. சொல்ல – கூற
6. தென்றல் – தெற்கிலிருந்து வீசும் காற்று
7. கவி – கவிஞன் (அல்லது) புலவன்
8. அருள் – இரக்கம்